பஹ்ரைன் அதிசயங்கள்

Picture: Middle East Pasupati Seal

 

பஹ்ரைன் நாட்டின் பழங்காலப் பெயர் தில்முன். இதற்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததன. சிந்துவெளி முத்திரைகள் பஹ்ரைன் பகுதியிலும் அவர்களுடைய முத்திரைகள் சிந்துவெளியிலும் கிடைத்துள்ளன. இன்று வளை குடா நாடுகளில் நமது இந்திய ஊழியர்கள் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இந்தத் தொடர்பு 4000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்பதை அறிகையில் வியப்பு மேலிடுகிறது. முற்கால பஹ்ரைன் நாடு பல மர்மங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது.

 

இந்த தில்முன் நிலப்பரப்பை புனித பூமி என்றும் தூய நிலப் பரப்பு என்றும் பழங்கால நூல்கள் வருணிக்கின்றன. இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இங்கு ஏராளமான புதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இன்றும் ஆர்வத்தோடு மேலும் மேலும் ஆராய்ந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இதுவரை சிந்துவெளி முத்திரைகளை யாராலும் படிக்கமுடியவில்லை. ஒவ்வொருவரும் அந்த முத்திரைகளுக்கு மனம் போனபோக்கில் வியாக்கியானம் செய்து வருகின்றனர். ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அங்குள்ள படங்களுக்கும் பஹ்ரைன் படங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

 

உலக மஹா இடுகாடு

பஹரைனில் மிகவும் வியப்பான விஷயம் அங்குள்ள கல்லறைகள்தான். சுமார் 350,000 கல்லறைகள் இருகின்றன. உலகில் இவ்வளவு அதிகமான கல்லறைகள் வேறு எங்கும் இல்லை. இதில் பெரும்பாலானவற்றைத் தோண்டி உள்ளேயிருந்த பொருள்களைக் கொள்ளை அடித்துவிட்டனர். இருந்தபோதிலும் இன்னும் பல, யார் கையும் படாமல் இருப்பதால் 5000 ஆண்டுகளுக்கு முன் அங்கே வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை அறிய முடிகிறது

கல்லறைகள் சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. பெரியவை 4×9 மீட்டர் பரப்புடையவை

பார்பர் என்னும் இடத்தில் ஒரு பழைய கோவில் இருக்கிறது. இது சுமேரிய நீர்க் கடவுள் எங்கை (கங்கை) மற்றும் அவருடைய மனைவியுடையது.

 

குழந்தை சமாதிகள்

கல்லறைகளின் எண்ணிக்கையோடு வேறு ஒரு விஷயமும் ஆராய்ச்சியாளரை வியப்புக்கு உள்ளாக்கிவருகிறது. அது குழந்தை சமாதிகளின் எண்ணிக்கை ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும்1.6. குழந்தை என்னும் விகிதத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு குழந்தைகள் இறந்தது எப்படி? என்பதே கேள்வி. மத்தியக் கிழக்கில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததை யூத மத நூல்களும் பைபிளும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பினீசியர்கள் மலிக் என்னும் தெய்வத்துக்கு நரபலி கொடுத்ததும் தெரியும் இந்தக் கல்லறைகள் நரபலியைக் குறிக்கின்றனவா?

Pictures: Bull Men, Monkey Gods, Sri Chakra like flowers?

 

பாம்பு புதையல் கல்லறை

மற்றொரு மர்மம் பாம்புக் கல்லறை ஆகும். பாம்புகளை அழகாகப் பதப் படுத்தி புதைத்துள்ளனர். இது தெய்வப் பாம்பா? எதற்காக இப்படிப் புதைத்தனர் என்பதும் தெரியவில்லை. தேள் பற்றிய விஷயங்களும் மர்மமாக உள்ளது. பல முத்திரைகளில் தேள் காணப் படுகிறது. இதே போல எகிப்திலும் சிந்து வெளியிலும் தேள் முத்திரைகள் கிடைத்தன. தேளுக்கும் பெண் தெய்வத்துக்கும் செக்ஸுக்கும் (பாலியல்) தொடர்பு உண்டு. இதுவும் ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஈர்த்தது.

குரங்கு மர்மம்

மத்தியக் கிழக்கு முழுதும் வாலுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு குரங்கு உருவம் நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும். சில காட்சிகள் ராமயணத்தில் வரும் அனுமன் போல இருக்கிறது. ரிக்வேதத்திலும், மகாபாரதத்திலும் வ்ருஷகபி என்னும் குரங்குத் தெய்வம் வருகிறது. இந்தக் குரங்கு வ்ருஷகபியா? ராமாயண ஹனுமனா? ஆராயப்பட வேண்டிய விஷயம்.

 

வேறு பெயர்கள்

பஹ்ரைன் நாட்டின் வேறு பெயர்கள்: தைலோஸ்=இது கிரேக்கர்கள் சூட்டிய பெயர்;ஆர்ட்வஸ்=மயான பூமி, சாம்பல் பூமி; அவால்/அவல்= மாட்டுத் தலை உடைய ஒரு தெய்வத்தின் பெயர். ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றும் வரை இதுவே பஹ்ரைனின் பெயர்; தற்காலப் பெயர் பஹ்ரைன்=இரு கடல்கள்

எனது கருத்து: தைலம், திலம் என்பதெல்லாம் எள், எண்ணெய் என்பதன் சம்ஸ்கிருதப் பெயர். இறந்தவர்களை எரித்துப் புதைத்து எள்ளும் நீரும் இரைத்த பூமி என்னும் பொருளில் இப்படி தில முனை என்று அழைத்தனரோ?

Picture: Monkey figures, Gods on Vahanas

 

பஹ்ரைன் நாட்டின் மனாமா தேசிய மியூசியத்தில் நிறைய தொல்பொருட் சின்னங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தீவிரவாத முஸ்லீம்கள் இதை எதிர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்லாம் தோன்றுவதற்கு முன் இருந்த கலாசாரத்தைப் பாதுகாத்து வைப்பது பிடிக்காது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையை, 2200 ஆண்டு பழமையான சிலைகளை தீவிரவாதிகள் அழித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நல்ல வேளையாக பஹ்ரைனில் இதுவரை நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது.

தில்முன் (பஹ்ரைன்) பற்றி 4000 ஆண்டுப் பழமையான க்யுனிபார்ம் கல்வெட்டில் அந்த நாட்டின் புகழ் பாடப்பட்டிருக்கிறது: “ இது புண்ய பூமி. இது தூய பூமி. இங்கே அண்டங் காக்கைகள் கத்தாது. சகுனம் காட்டும் பரவைகள் தீய நிமித்தங்களைக் காட்டாது. சிங்கங்கள் கொல்லாது. அண்டங்காக்கைகள் ஆட்டுக் குட்டிகளைக் கொத்திக் கொண்டு போகா. குழந்தைகளைக் கிழித்துப் போடும் காட்டு நாய்களும் இல்லை. புறாக்கள் தலையை மறைக்காது. எனக்கு கண் வலி, தலை வலி என்று யாரும் சொல்லுவதில்லை. நான் ஒரு கிழவன், நான் ஒரு கிழவி என்று யாரும் சொல்லுவதில்லை. கன்னிப் பெண்கள் பாதுகாப்பாக நடந்து போகின்றனர். இறுதிச் சடங்கு செய்யும் புரோகிதர்கள் இல்லை. இந்த்ச் சுவர்கள் அழு குரலைக் கேட்பதில்லை”.

 

ஒரு அதிசயமான ஒற்றுமை என்ன என்றால் பாரத நாட்டைப் பற்றி வடமொழி இலக்கியங்களிலும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் எழுதிய குறிப்புகளிலும் இதே வாசகங்கள் இருக்கின்றன. கம்பன் கூட அயோத்தி நகரையும் கோசல நாட்டையும் இப்படிதான் வருணிக்கின்றான். ஒரு வேளை தில்முன் என்பது இந்தியாதானோ என்று நான் அடிக்கடி சந்தேகப்படுவதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்களோவெனில் தில்முன் என்பது பஹ்ரைன் என்றும், பைலக்கா என்பது குவையத் என்றும் மெலுஹா என்பது சிந்துவெளி என்றும் அடித்துச் சொல்லுகின்றனர்.

Picture: Graves in the desert

 

பஹ்ரைனில் கிடைத்த முத்திரைகளின் பட்டியல்:

தேள்—36, ஆடு—27,குரங்கு—20,மாடு—90,ஆமை—6,மீன்-6,பாம்பு—15,

கால்சுவடு—36,சந்திரப் பிறை—126,சூரியன்+விண்மீன்—42,கடவுள்+கொடிமரம்—22

காளை மனிதன்—8,நண்டு—6, கழுதை—2, மயில்—1,நிலம்—5

ஒட்டகம், குதிரை, புலி, யானை, காண்டாமிருகம் ஆகிய முத்திரைகள் கிடைக்கவில்லை. அடையாளம் காணமுடியாத பறவைகள் முத்திரைகளில் இருக்கின்றன. நின்ற வடிவிலுள்ள குரங்கு, தேள், பாதச் சுவடு ஆகியன புரியாத புதிராக உள்ளன. சிந்து சமவெளி போல ‘செக்ஸ்’ காட்சிகளும் இருக்கின்றன.

சிந்துவெளி போல கடவுளைச் சுற்றி மிருகங்கள் (பசுபதி) இருப்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்

 

தமிழ் முனிவர் அகஸ்தியர்

Agastya Rishi Statue from Indonesia;location-London V&A Museum.

 

By ச.நாகராஜன்

தமிழ் இலக்கணம் வகுத்த மஹரிஷி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.

ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.

 

அகத்தியரின் நாடி ஜோதிடம்

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர். அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சாற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட. குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

 

பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பலன்களை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது.

 

நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும் பெண் என்றால் இடது கைப் பெருவிரலும் காட்டப்படவேண்டும். அகத்தியரின் நாடி ஜோதிட சுவடிகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல!)முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும் (தர்மம் 9 கர்மம் 1- நல்ல ஜாதகர்) இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாகச் சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.

ஆங்கிலேயர் ஒருவரின் பெயரைப் பற்றிச் சுவடி குறிப்பிடும் போது முழத்தில் பாதி இவர் பெயர் என வர அவர் ஜான் (முழத்தில் பாதி சாண்) என்று சொல்லப்பட்ட நேர்த்தியும் நாடி ஜோதிடத்தில் தான் உண்டு!

இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிக்கும் போது பிரமிப்பின் உச்சியைத் தான் எட்ட வேண்டியிருக்கும்!

 

அகத்தியரின் பிறப்பு

அகத்தியரைப் பற்றிய பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். காஸ்யபருக்கு தக்ஷப்ராஜாபதியின் புத்திரியாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு ஊர்வசியின் காரணமாக விந்து வெளியேற அதைக் கும்பத்தில் ஏந்தினார்.அதிலிருந்து அகஸ்தியர் உண்டானார். இந்தக் காரணத்தினால் அவருக்கு கும்ப சம்பவர் என்றும் பெயருண்டு.

Statue of Agastya from Prambanan, Indonesia (Wikipedia picture)

 

அகத்தியரின் மனைவி

அவரது மனைவி லோபாமுத்ரை பற்றிய கதையும் ஒன்று உண்டு. ஒரு சமயம் இவரது முன்னோர்கள் குழியில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர் யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்விக்கும்படி விதர்ப்ப ராஜனைக் கேட்க அவனும் சம்மதித்தான்.அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதா

ஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார்.இப்படி ஒரு சத்புத்திரன் பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி உயர்ந்து தென்கோடி தாழ்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.

ஆக இப்படி அகஸ்தியரைப் பற்றிய ஏராளமான தகவல்களை நமது புராணங்களிலும் ஜோதிட நூல்களிலும் சித்த மருத்துவ நூல்களிலும் நாம் படித்து அகத்தியரின் பெருமையை உணரலாம்.

************

My brother S NAGARAJAN is writing a series about all the Great Seers (Rishis) of India. He has already written about the 27 stars and other topics in Astrology. It is all based on science or Hindu scriptures.Next article is about Varahamihira in two parts. All his articles are in Tamil. If you need English translation, please let us know.

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London

பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வளவு அழகாக ஒரு புலவர் செய்ய முடியுமா, அப்படியே செய்தாலும் அதை வள்ளுவனை ஏற்றார் போல உலகம் ஏற்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கும். இப்படி வான் புகழ் பெற்று தேன் தமிழில், தென் தமிழில், தெள்ளு தமிழில் குறள் செய்த வள்ளுவன் தமிழில் ஒரு அமைதிப் புரட்சியையும் செய்தான். தமிழில் முதல் தடவையாகத் துணிந்து சம்ஸ்கிருதத்தைப் புகுத்தினான். அதனால் தமிழ் அழகு பெற்றதே அன்றி சோபை குன்றவில்லை. மொழியைக் கெடுக்காமல், அளவோடு செய்தான். நம் காலத்தில் பாரதியார் செய்ததைப் போல.

 

வள்ளுவப் பெருமான், பகவத் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பாற் போலத் தோன்றுகிறது. ஏனெனில் தானம்,தவம் என்ற சொற்றொடரும் குணம் என்ற சொல்லும் சமன் என்ற சொல்லும் பகவத் கீதையில் ஏராளமான ஸ்லோகங்களில் வரும். தமிழில் தைரியமாக இப்படி சம்ஸ்கிருதச் சொற்களுடன் வேறு யாரும் கவிதையையோ பாடலையோ துவக்கியதில்லை.

 

கீதையில் தானம்,தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் (கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம். ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது. அதே சொல்லுடன் தவங்கும் ஸ்லோகமும் உண்டு. சமம் என்ற சொல்லுடன் கீதையில் குறைந்தது ஆறு ஸ்லோகங்களாவது துவங்குகின்றன. இதை எல்லாம் பார்க்கையில் அவர் குறளை எட்டுக்கட்டும்போது அவரை அறியாமலே இந்தச் சொற்கள் பீறிட்டெழுந்திருக்க வேண்டும்.

வள்ளுவன் கையாண்ட பல கருத்துக்கள் வடமொழி நூல்களான பர்த்ருஹரியின் சதகங்கள், மனுதர்ம சாஸ்திரம், கீதை, தம்மபதம் ஆகியவற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிறைய கட்டுரைகள் வந்துவிட்டதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை.

 

‘தானம் தவம் இரண்டும்’ (குறள் 19, 295) என்றும், ‘குணம் என்னும் குன்று ஏறி’ என்றும் ‘சமன்’ செய்து என்றும் துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார். முதல் குறளிலேயே அ’கரம்’, ‘ஆதி பகவன்’ என்றும் அடித்து நொறுக்குகிறார். இந்தத் துணிவு இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்தான் வந்தது. மனம், கருமம், காமம்,தெய்வம், முகம் போன்ற சம்ஸ்கிருதச் சொற்களுடன் இன்னும் நிறைய குறள்களைத் துவக்குகிறார். இவருக்குப் பின் வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஏராளமான வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த வள்ளுவனே வழி வகுத்தான் போலும்.

 

வள்ளுவன் உள்ளத்தால் பொய்யாதொழுகிய உத்தமன். அதனால்தான் அவன் உலகத்தாற் உள்ளத்துள் எல்லாம் உளன். அவனுக்கு வட மொழி தென் மொழி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லை. இரு மொழியும் இரு கண்கள் என்பதை உணர்ந்த பெரியோன் அவன். யாராவது திருக்குறளில் இருந்து வடமொழிச் சொற்களை எடுத்தால் அது செல்லரித்துப் போன ஏடு போல, வைரஸ் பாதிப்புக்குள்ளான ‘சாFட்வேர்’ போல ஆகிவிடும்.

 

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வட மொழிச் சொற்கள் இல்லாமல் இல்லை. நக்கீரர் கூட ‘உலகம்’ (லோக) என்ற வடமொழிச் சொல்லோடு திருமுருகாற்றுப் படையைத் துவக்குகிறார். சிறுபாணாற்றுப் படை, ‘மணி’மலை என்று துவங்குகிறது. ஆனால் இவ்விரு நூல்களும் பிற்காலத்தில்  எழுந்தவை என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து. சிறுபாணாற்றுப்படை,  கடை எழு வள்ளல்களை வரிசைப்படுத்தி உரைப்பதால், இப்படி ஏற்பட கபிலர் பரணர் காலத்திலிருந்து 200, 300 ஆண்டுகளாவது ஆயிருக்கும். ஆனால் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால்தான் “அதிகாரம்” என்ற சொல்லை மூவரும் தங்கள் நூல்களில் பயன்படுத்தினர். (காண்க என் கட்டுரை: தொல்காப்பியர் காலம் தவறு)

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.

 

அதிகாரம் என்ற சொல்லைக் கருத்திற் கொண்டால் வள்ளுவன் சம்ஸ்கிருத் சொற்களைப் பயன்படுத்தாத அதிகாரமே இல்லை! ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் குறள்களிலும் காண்கிறோம். நான் ‘ஹைலைட்டரை’க் கொண்டு வடமொழிச் சொற்களை ‘ஹைலைட்’ செய்தபோது எல்லா பக்கங்களிலும் வடமொழிச் சொற்கள்  இருப்பதைக் கண்டேன்.

வள்ளுவனுக்கு பகவத் கீதை அத்துபடி என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் இருக்கிறது. கீதையில்:

“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)

 

என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. இதே போல உபநிஷதத்தில்

 

“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –

என்று ஒரு மந்திரம் வருகிறது. இதே ‘ஸ்டைலில்’—பாணியில்– வள்ளுவனும்

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை —-(குறள் 12)

என்று பாடுகிறான். முன் எவரும் இப்படிச் செய்ததில்லை.

 

வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர்  பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது.வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:

 

அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்

 

பொய்யாமொழியைச் சுற்றி ஒரே பொய் மூட்டைகள்!!!

வள்ளுவன் காலம் அவன் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களாலும், புதிய சொற்றொடர்களாலும், பிற்கால இலக்கணத்தாலும் நன்கு தெரிந்த பின்னரும், இதை வையாபுரியார் முதற்கொண்டு பல அறிஞர் பெருமக்கள் எடுத்துக்காட்டிய பின்னரும், சிலர் ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் வள்ளுவனை கி.மு.31 என்று முத்திரை குத்தியது பொய்யாமொழிப் புலவனையே அவமானப் படுத்துவதாகும். இது தொடர்பான பழைய மகாநாட்டில் காரசார விவாதங்கள் நடந்து வெளிநடப்பு நடந்தபின்னர் ஒரு கோஷ்டி இப்படி வள்ளுவருக்குப் பொய்க் காலம் போட்டுக் கொடுத்தது. இதை வள்ளுவனே மன்னிக்கமாட்டான்.

வள்ளுவன் பெருமை அவன் வாழ்ந்த காலத்தால் அல்ல. அவன் எழுதிய நூலால்தான். இன்று வள்ளுவன் இப்படி ஒரு நூல் எழுதியிருந்தாலும் இந்தியாவிலேயே அவன் ஒருவன் தான் இப்படிப்பட்ட சாதனையைச் செய்தவனாக இருந்திருப்பான். ஏற்கனவே நேர்மையற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அவன் குறளை மேடை தோறும் முழக்கி அவனை மஹாத்மா காந்தியைப் போல மதிப்பு இல்லாமல் நகைப்புக்குரியவராகச் செய்துவிட்டார்கள். அவன் வாழ்ந்த காலம் பற்றிய மோசடியையாவது மாற்றி உண்மையைச் சொன்னால் அவனுக்கு ஆத்ம சாந்தியாவது ஏற்படுமே.

 

மொழியியல் ரீதியில் வள்ளுவனை கி.மு.வில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் சங்க இலக்கியம் முழுவதையும் கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ள வேண்டியிருக்கும். அதுவும் முடியாது. கடல் வணிகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகளும் ரோமானிய ,கிரேக்க எழுத்தர் குறிப்புகளும் சங்க இலக்கியத்தை முதல் மூன்று (கி.பி) நூற்றாண்டுகள் தான் என ஐயம் திரிபு அற முடிவு செய்துவிட்டன (காண்க கனக சபைப் பிள்ளை, டாக்டர் இரா.நாகசாமி, கமில் சுவலெபில் நூல்கள்)

 

வள்ளுவன் வடமொழி வாசகத்துடன் பாடலைத் துவக்கியதோடு நிற்காமல் ஆங்காங்கே சில சம்ஸ்கிருதச் சொற்றொடர்களுக்கு அருமையான மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறான். சினம் பற்றிய அதிகாரத்தில் ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘என்ற சொல் ‘ஆஸ்ரயாச:’ என்பதன் தமிழாக்கம். தாமரைக் கண்ணன் என்பது கமலநயன, அரவிந்தாக்ஷன் என்பதன் தமிழாக்கம். தர்ம,அர்த்த,காம (அறம், பொருள், இன்பம்) என்ற இந்து மதக் கோட்பாடுகளுடன் இந்திரன் முதலாக பல்வேறு இந்துக் கடவுளரையும் குறிப்பிடுகிறார்.

 

வள்ளுவனின் வேறு சில அழகான மொழிபெயர்ப்பு:சம்சார சாகரம்=பிறவிப் பெருங்கடல்,அஹங்காரம்,மமகாரம்=யான்,எனது என்னும் செருக்கு, ரிக்வேதத்தில் வரும் கவீம் கவீனாம்=நூலாருல் நூல் வல்லான், கீதை ஸ்லோகம் உத்தரேத் ஆத்மநாத்மானம்= உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், தர்மோ ரக்ஷதி ரக்ஷித:= அல்லவை தேய அறம் பெருகும்.

 

வள்ளுவர் “இந் நான்கும்”, “இம்முன்றும்” என்று சொல்லுவதும் வட மொழி அணுகுமுறை. பழந்தமிழ் நூல்களில் காணப்படா.

கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து பாக்களில் ஏழு குறள்களில் இறைவனுக்கு பாத நமஸ்காரம் செய்கிறார் (அடி போற்றுதல், தாள் வணங்குதல்). இது சம்ஸ்கிருத நூல்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கக்கூடியது. (Please read my post WHY DO HINDUS WORSHIP SHOES?).

 

கோடி என்ற வடமொழிச் சொல்லை இவர் பயன்படுத்திய அளவு வேறு எந்த பழந்தமிழ் கவிஞனும் பயன்படுத்தியிருக்க மாட்டான். சின்னக் குழந்தை சொல்லும் வடமொழி ஸ்லோகத்தில் கூட “சூர்யகோடி சமப்ரபா” என்ற வடமொழி வாசகம் வரும்.

வேறு யாரும் சொல்லாத இன்னொரு விஷயம். வள்ளுவர் பஞ்ச தந்திரக் கதைகளையும் நன்கு படித்தவர் என்பது குறள்கள் 273, 274, 277, 481, 495, 633 முதலியவை மூலம் தெரிகிறது.

 

வாழ்க வள்ளுவன் புகழ். வளர்க வாய்மை, பொலிக தூய்மை!

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

 

Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012

Good Evening,Namsthe,Vankkam,Namskaram

Wish You all a Very Happy Deepavali

First of all I want to THANK the organisers for arranging nice Desi Diwali events successfully year after year. Thanks for inviting me to give a talk for ten minutes On Science Behind Deepavali.

What is Deepavali:

‘Deepa’ means light or lamp, ‘aavali’ means a row. Deepavali means a ROW OF LIGHTS. It is Festival of Lights.

Diwali is the spoken form of the word Deepavali.

We celebrate the Victory of Good over Evil. Good is light and Evil is darkness. It is the most famous festivals of the Hindu festivals. In some parts of India, they celebrate it for four days.

A lot of things about Deepavali are available on websites and encyclopaedias. They give the reasons for celebrating Deepavali.

  1. Lord Krishna Killed a demon called Narakasura. So we call that day Naraka Chathurdasi, literally Naraka’s 14th day.
  2. Goddess Lakshmi came out of the Milky ocean when Devas and Asuras churned the ocean for Amrutha, i.e. ambrosia
  3. Rama returned to Ayodhya after defeating Ravana of Sri Lanka who abducted Rama’s wife Sita.
  4. Pandavas came out of the forest after their 12 year banishment. So to celebrate all these things they decorated the houses and streets with row of lamps. The reason being, it was Amavasya-new moon day where there was no light. Most of other Hindu festivals fall on Full Moon day, so there is natural moon light. We have to remember there was no electric light thousands of years ago.

 

The above four episodes give us a Big lesson. Victory of Good doesn’t come that easily. Rama suffered for 14 years, Pandavas suffered for 12+1 years. Goddess Lakshmi, that is wealth, doesn’t come easily. You will have to churn the ocean, that isthrough hard work. Krishna had to travel all the way from Dwaraka in Gujarat to Kamaroop in Assam to kill Narakasura. To achieve success in anything, you have to struggle hard, but final victory will be yours.

  1. Jains also celebrate Diwali, because one of the greatest Thirthankaras, Mahavira, a contemporary of Buddha, attained Niravana- equivalent to Hidnu Yogi’s Samadhi on a Diwali day.
  2. Sikhs also celebrate Diwali because the foundation for Golden Temple in Amritsar was laid on the day. Guru Amardas called all Sikhs to get Gurus’s blessings on that day, like Hindu’s Vyasa Purnima. One of the ten Sikh gurus Hari  Govinda Sing was released from imprisonment by Mughal emperor Jehangir on that day.
  3. Arya Samaj followers consider it a holy day because its founder Dayananda Sarswati attained Samadhi on that day.
  4. There are many more reasons. Greatest of the Hindu Kings Vikramaditya was crowned on a Diwali day.
  5. For Gujaratis and other business men it is a NEW YEAR DAY. They start their Financial year on that day.

Lakshmi Puja and Kubra Puja are conducted during the four day celebrations. Gujaratis heap food and sweets like mountains in a festival called Annakut festival.

But I am going to give you some new information on Diwali

 

10.A for astronomy:

Why do we celebrate Diwali on different dates every year? Diwali doesn’t  fall on the same day like New Years day or Makara sankaranti (Pongal). Why?

Most of the Hindu festivals are based on Lunar Calendar. That is, they are based on the movements of Moon. Diwali is one of them.

But other festivals are based on solar calendar. That is to say they are based on the movement of Sun. So they will fall on almost same date every year except in leap years.

Thithi & Nakshatra

Some people are very keen to do a festival on a particular Thithi like Amavasya, Paurnami, Ashtami Navami etc. Some Hindus are very keen to do it on Nakshatra, that is the star under which one born or one event happened. So even birthdays like Rama, Krishna, Adi Shankara differ slightly between Hindus.

11. Why do we light lamps?

The philosophical explanation for this is light symbolises all good things in the world. Darkness stands for evil, fear and death. So we always need light. But the scientific explanation for this is in winter months a lot of insects multiply and destroy crops. When you light lamps in millions they come and fall in it. You don’t kill them and so you don’t earn sin/demerits. It is the innate nature of the insects that they are attracted to light and die.

Bonfire nights are celebrated around the world. Even in England coinciding with Diwali comes Guy Fawkes Day on 5th November every year. This story was invented recently. Bonfires are lighted throughout Northern Hemisphere in November even before Guy Fawkes. It is in most of the cultures. We see it even in African and Australian aboriginal cultures.

Other than killing insects, it gives warmth during the cold winter. It gives them an opportunity to gather together, think together and act together. They sing and dance in groups. Music and dance originated around fire in the caves millions of years ago.

Even the oldest religious book Rig Veda begins with Fire/Agni and ends with Fire/Agni.

In South India, one month after Diwali on Karhtikai Pournami day (Full Moon Day), every town and village do the bonfires. Millions of lamps are lighted in Houses and Temples. They are made up of recyclable materials like clay. The oil used for those lamps is special oil called ILUPPA ENNEI with some medicinal properties.

12.Why do we do fireworks?

We, human beings, are pyromaniacs. What is pyromania?

According to Oxford Dictionary Pyromania is AN OBSESSIVE DESIRE TO SET FIRE TO THINGS. This is in our genes. If it is not properly controlled or channelized this becomes a mental disease. Since we all lived in caves millions of years ago, the only help we had from nature is FIRE. The Greek word for fire is Pyro.

In August 2010, Londoners saw big riots. Youths enraged by the police action set fire to buildings, houses and shops. Properties worth millions of pounds were lost. In India, during each Bandh or Hartal day we see such arson attacks. The reason for this, according to social scientists, is we have NOT channelized this pyromania. Youths have tremendous energy to spend. If you ask them to do controlled destruction like setting fire to bonfires or fireworks, they would not do it to buildings. Hinduism is based fully on science. Knowing this pyromania our forefathers allowed you to do controlled destruction and arson. You can burn old things without affecting your neighbourhood on Diwali day, Karthikai Day or Bogi Day. Bogi is celebrated a day before Makara Sankaranti called Pongal in Tamil Nadu.

Parents would have noticed their children messing around with fire or lamps. Smelling smoke, elders would rush to the place and chastise children shouting “ Stop it. You are going to burn down the house”. In fact most of us have done it when we were young!

Nowadays children and youths are not given that opportunity. So they misbehave during riots.

One may wonder why western countries are spending billions of dollars in doing fireworks during Olympics or Independence Days or Bonfire Nights. Laser lights can do the same magic without contributing to pollution at a minimum cost. The reason is as I mentioned earlier we are still pyromaniacs. The habit we had millions of years ago in the caves to protect ourselves from animals, to cook food for us and to get warmth is still in our genes.

This is the reason we encourage our children to do fireworks, bonfires and lighting lamps under the supervision of elders.

There are minor reasons as well. In certain cultures they believe the fireworks such as crackers will scare away evil spirits. In place like Sabarimalai Ayyappan temple, they even use it for scaring away the wild animals. In Tamil Nadu they do use explosives to announce the Gods procession. Hearing that, people from distant streets come to the streets where Gods chariot or procession in is on its way.

Chinese discovered the effect of some chemicals and started making fireworks. In Tamil Nadu the minor crackers are still called Chini Charam/chini vedi meaning China crackers.

Continued in Second Part…….

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!!

Picture from Wikipedia : Making Fire Crackers.

This is Second Part of my speech: swami

13.What do they use for making crackers and sparklers?

Some chemistry lesson can also be taught through Diwali.

Barium gives green colour for sparklers.

Magnesium gives a glow and silvery light.

Strontium gives red colour.

Potassium Nitrate, Sulphur and Carbon are used to make crackers.

So Diwali is based on science!

 

150 sweet Items+ 25 Payasam Items!!

14. Now let us look at medical science. The largest number of diabetics is in India. Why?

Like pyromania, Indians have another mania called SUGAR MANIA. We are sugar maniacs or “Sucromaniacs”. I counted the Indian sweets and it came to 150 different sweets and 25 types of Payasams (equivalent to puddings, desserts of western countries). If I read the long list of Indian sweets it will take another ten minutes.

The Indian wonder is we are excellent in mathematics, computers, chess, ayurveda, siddha, yoga, breathing techniques and………….……………and FOOD!

Go to any book shop or library and go to Food or Cookery Book section. India has the biggest volumes. We have invented the highest number of food items in the world. If you go to Annakut festival at Swaminarayan Temple, you can literally see a Mountain of Food/sweets.

We have a special food for every god and every festival. No religion in the world has got so many gods, so many festivals and so many different Prasadams. This is our strength and weakness. If you say to any Indian D for…………………… he or she will say D for Diabetes. This is the medical science behind Diwali. We have to be careful about our innovative foods. In those days our forefathers ate well, but they did their Yogasanas and Pranyamas as well!

 

15. Wherever you take bath on Diwali Day, that becomes a Ganga Shower. Goddess Ganges occupies every water source on the day. The traditional greeting on the day is Have you had Ganga Snanam?

16.Talking about Diwali, who can forget Gold and beautiful and colourful silk saris? India is a land of colours. Hinduism is a colourful religion. They see god in colours, Rangolis, Kolams Alpanas and Henna decorations. Tonnes of gold jewellery and millions of clothes were sold just before Diwali boosting our economy. This is the economics behind Diwali.

Let us keep our GLOWING tradition alive for generations to come.

 

17.Old and New Deepavali

In the olden days Deepavali was celebrated differently. The four day celebration started on Dhana Trayodasi and ended on Bali pratipada. Dhana Trayodasi day was allocated to the worship of Dhanvantri, the physician of Gods. On the day of Bali pratipada, they installed cow dung effigies of the demon king Bali. On Naraka Chaturdasi day they took ritual oil bath. Next day they worshipped Goddess Lakshmi.

 

Even before the festival another day was also observed to propitiate cows on Govatsa Dvadasi according to Skanda Purana.It was done under a banyan tree. Nine wick lamps were lighted.

 

18.Christmas Trees from Hinduism!!!

On the day of Lakshmi puja, they erected Deepa Vriksha (Trees of Light) on the main street of the town. Probably this was the origin of  Christmas trees in Western  Countries. Most of the customs of Christians are pagan (Non Christian rites). We have authenticated information from Skandam.

Other ancient customs included Tug of war competition between the Royalty and the general public, driving away the Alakshmi (poverty), worship of Audumbara trees (Ficus glomerata) and gambling with dice. Yama was also known as Audumbaraya.

Goddess Lakshmi, Dhanvantri, Yama and Bali were worshipped along with cow during the four day festive period. It is very interesting to note the historical changes in the celebration. Bali who was associated with Onam in Kerala figured in Deepavali in the olden days.

Thank you.

ஜோதிடக் கலை மஹரிஷி நாரதர்

by ச.நாகராஜன்

ராமாயணம் உருவாகக் காரணமான மஹரிஷி

 

ஹிந்து வாழ்க்கை முறையில் இதிஹாஸ, புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த இதிஹாஸ புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு.

 

மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!

 

வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமைப் பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

வால்மீகி தர்ம நாயகனும் பொய்பேசாதவரும் இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தியுள்ள நாயகன் யார் என்று நாரதரைக் கேட்ட போது அவர் ராமரைப் பற்றிக் கூற, ராமாயணம் எழுந்தது. நாரதர் பாண்டவர்களின் உற்ற நண்பரும் கூட! தேவைப்பட்ட போதெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் தந்ததை மஹாபாரதத்தில் வியாஸர் வெகுவாக விரித்துரைப்பதைக் காணலாம்.

வேத வியாஸர் மனம் கலங்கி இருந்த போது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவரின் கலக்கத்தைப் போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் நாரதரே!

 

 

திரிலோக சஞ்சாரி

நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர்.இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.

 

நாரதர் கலகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது அவரது பல்முக பரிமாணங்களில் ஒரு சிறிய பரிமாணம் தான். ஆனால் சென்ற நூற்றாண்டில் பிரபலமடைந்த நாடகங்களில் ஹாஸ்ய ரசம் தேவைப்பட்டதால் இரவு முழுவதும் நடந்த நாடகத்தில் அவ்வப்பொழுது நாரதர் தோன்றி சிரிக்க வைத்து மக்களை ‘விழிப்புடன்’ இருக்குமாறு செய்வது வழக்கமாகிப் போனது. அதனால் தேவரிஷியான மிகப் பெரிய மஹரிஷியின் ஒரு சிறிய அம்சத்தையே நாம் வெகுவாக ரசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டோம்!

 

நாரதரின் கலகம் நன்மையில் முடியும். ஒரே ஒரு பிரச்சினையை எழுப்பி அதன் மூலம் அவர் பல பெரிய விஷயங்களுக்குத் தீர்வு காண்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.

ஜோதிடத்தின் மூலகர்த்தா

 

தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!

 

பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!

 

த்ரி ஸ்கந்த ஜோதிஷம்

 

‘ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம்’ என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.

கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.

 

 

பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 

நாரதரின் இசை

 

நாரதரைப் பற்றிய சுவையான ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்: தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.

 

இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

 

நாரதரின் வழிபாட்டு நூல்

 

108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது! நாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பார்க்கும் நாரதர் வேறு; ஜோதிடம்,பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும்  மகத்தான ஞானமுடைய மஹரிஷி நாரதர் வேறு!

 

நல்ல பக்தராக வேண்டுமா, நல்ல ஜோதிடராக வேண்டுமா, நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா..?

நாட வேண்டிய மஹரிஷி நாரதரே!

 

*******************

சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி

English Version of this article is posted yesterday: London Swaminathan, swami_48@yahoo.com

உலகில் நரபலி இல்லாத நாகரீகம் இல்லை, நரபலி இல்லாத மத நூல்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரீகத்திலும் எகிப்திலும் ஒரு நரபலிக் காட்சி ஒரே மாதிரி வருணிக்கப்படுவது வியப்பூட்டுகிறது. ராமாயணத்தில் ராம பிரான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சரயு நதியில் குதிக்கிறார். அவருடன் ஆயிரக் கணக்கான மக்களும் குதிக்கின்றனர். புண்ய ஆத்மாவுடன் போனால் சொர்க்கத்துக்கு நேரடி ‘டிக்கட்’ வாங்கியதற்குச் சமம். இதே போல எகிப்திலும் மன்னர் இறந்தவுடன் அவருடைய நெருங்கிய அதிகாரிகள், சேவகர்கள், ராணிகள் ஆகியோரும் உயிருடன் புதைக்கப்பட்டனர். ஆயினும் இப்படிப் புதைக்கப்பட்ட சடலங்களின் முகத்தில் அமைதியே தவழ்கிறது. ஆகையால் முதலில் போதை மருந்தோ விஷமோ ஏற்றியபின்னரே அவர்கள் புதைக்கப் பட்டார்கள்.

 

வேதத்தில், பைபிளில், யூத மத நூல்களில் உயிர்ப்பலி குறிப்புகள் உள்ளன. பஹ்ரைன் நாட்டில் உலக மஹா இடுகாடு (கல்லறை) இருக்கிறது. அங்குள்ள பல்லாயிரக் கணக்கான சடலங்களில் ஏராளமான குழந்தைகள் சடலங்கள் இருப்பது பலருடைய புருவங்களை வியப்பால் உயர்த்துகிறது. இது மாபெரும் குழந்தை பலியோ என்று!

இப்போதெல்லாம் மாயா நாகரீகம் பற்றி எழுதுவோருக்கு நரபலியைக் குறிப்பிடுவது ஒரு ‘பாஷன்’ ஆகிவிட்டது. அதைவிட மோசமான கொடுமை எல்லாம் மறைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி முத்திரைகள்

சிந்து சமவெளியில் ஒருமுத்திரையில் ஒரு ஆள் ஒரு தெய்வத்தின் முன்னால் மண்டிபோட்டு உடகார்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் பூதாகரமான ஒரு ஆடு நிற்கிறது. அதன் முகம் கிட்டத்தட்ட ஒரு மனித முகம் போல இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் இருக்கிறது. அதன் மேல் ஒரு மனித தலை இருக்கிறது. அவருடைய தலை மயிர் இரட்டைக் கொண்டையாக முடியப் பட்டிருக்கிறது (டபுள் பன்). இதே போலத்தான் மத்திய கிழக்கு நரபலி சிலைகளிலும் கொண்டை இருக்கும். இது மொஹஞ்சதாரோ முத்திரை.

காளிபங்கன் என்ற இடத்தில் இன்னும் ஒரு முத்திரை கிடைத்தது. அதில் விநோதமான புலி உருவ தெய்வத்துக்கு முன்னால் இரண்டு வீரர்கள் ஈட்டிச் சண்டை போடுகின்றனர். ஒருவர் உடலை மற்றொருவர் ஈட்டி துளைக்கிறது. இதே காட்சி எகிப்தில் ஒரு தந்த சிற்பத்தில் இருக்கிறது அது டஜேர் (Pharoah Djer) என்ற மன்னனுடையது.

சுமேரியாவில் ஜில்காமேஷ் (2700 BC)  காலத்தில் இருந்து கல்லறையில் அதிகாரிகளும் புதைக்கப் பட்டனர்.

 

இந்தியாவில் பழங்காலத்தில் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. கணவன் இறந்த பின்னர் அவனுடன் மனையும் எரிக்கப்பட்டாள். ஆனால் இதில் கட்டாயம் ஏதும் இல்லை. பாண்டுவின் மனைவி குந்தி, கணவன் இறந்த பின்னரும் பஞ்ச பாண்டவர்களைப் போற்றி வளர்த்தாள். புறநானூற்றில் ஒரு பாடல் வருகிறது. பாண்டிய மன்னன் பூதப் பாண்டியன் இறந்தபின்னர் அவன் மனைவி தீயில் பாய முனைகிறாள். மந்திரிமார்கள் எவ்வளவோ தடுத்தும் அவள் தீயில் பாய்ந்து உயிர் நீத்ததைப் பார்க்கிறோம்.

மஹா பரதத்தில் கள பலி

மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்னால் அர்ஜுனன்–உலூபி மகன் அறவான் களபலி கொடுக்கிறான். அவனது தலை இன்றும் வட தமிழ் நாட்டில் பல கோவில்களில் வழிபடப்படுகிறது. ராஜஸ்தான், நேபாளம், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அவன் போற்றி வழிபடப் படுகிறான்.

தமிழ் நாட்டில் நவகண்டம்

போருக்கு முன்னால் வீரர்கள் காளியின் சிலைக்கு முன்னால் தலையை அறுத்து நவகண்டம் கொடுப்பது தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் நடந்தது. மக்களுக்கு தியாக உணர்வையும் தேசபக்த வீர உணர்வையும் ஏற்படுத்த இப்படிக் கள பலி கொடுத்தனர். உடலில் ஒன்பது இடங்களில் கத்தியால் வெட்டி உயிர் கொடுக்கும் நவகண்ட வீரர்களை மக்கள் சிலைவைத்து வழிபட்டனர். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட நவகண்ட சிலைகள் உள்ளன.

தொல்காப்பியம், மணிமேகலை, கலிங்கத்துப் பரணி ஆகிய நூல்களில் இந்தப் பழக்கம் வருணிக்கப்படுகிறது. ராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை ராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகீயோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.

இதுதவிர பலவிதமான உயிர்த் தியாகங்கள் இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணக் கிடக்கின்றன. முஸ்லீம் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படை எடுப்பு காலத்தில் அவர்களை அச்சுறுத்தவும் மக்களை வீறு கொண்டு எழச்செய்யவும் கோபுரத்திலிருந்து குதித்து உயிர் நீத்தனர். அலாவுதீன் கில்ஜியின் கையில் சிக்கி காமவெறிக்கு ஆளாக விரும்பாத ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான அழகிகளுடன் தீப்பாய்ந்தாள்.

 

குருகோவிந்த சிம்மன்

முஸ்லீம் படை எடுப்பாளர்களின் கொடுமையிலிருந்து சீக்கியர்களைக் காப்பாற்ற குருகோவிந்த சிம்மன் ஒரு தந்திரம் செய்தார். காளி தேவி உயிர்ப் பலி கேட்கிறாள் எனக்கு ஐந்து வீரர்கள் தேவை என்று அறிவித்தார். கூட்டத்தில் இருந்து ஒவ்வொரு வீரராக முன்வந்தனர். ஒவ்வொரு வரையும் ‘பலி கொடுத்த’ ரத்தம் சிந்தும் கத்தியைக் காட்டிய பின்னரும் மேலும் மேலும் வீரர்கள் உயிர்ப் பலி தர முனவந்தனர். ஆனால் அவர் வெட்டியது மனிதனை அல்ல. மிருகங்களை வெட்டி அதன் ரத்தத்தையே காட்டினார். உயிர்ப் பலி தர முன்வந்த ஐவரையும் சீக்கிய குருமார்களாக ஆக்கினார். பாரதியார் குருகோவிந்தர் என்ற தலைப்பில் பாடிய அருமையான கவிதை இந்த ‘உயிர்ப் பலி காட்சியை’ வருணிக்கிறது.

 

என்னுடைய பிற கட்டுரைகள்: Read my other posts on Indus and Egypt:

1.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2.Ghosts in Indus Seals and Indian Literature

3.Flags: Indus Valley- Egypt Similarity

4.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu

5.Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

6.Indra on Elephant Vahana in Indus Valley

7.Vishnu Seal in Indus Valley Civilization

8.Indus Script Deciphered

9.Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை

10.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்

11.கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை