ராமாயண வினா—விடை (க்விஸ்)

Ramayana Quiz in Tamil

இந்துக்களின் இரண்டு இதிஹாசங்கள் ராமயணமும் மஹா பாரதமும் ஆகும். ராமாயணத்தை ஆதிகாவியம் என்பர். வடமொழியில் இதை வால்மீகி எழுதினார். தமிழில் கம்பர் எழுதினார். உலகில் சுமார் 300 வெவ்வேறு ராமாயணங்கள் இருக்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளில் ராமனின் செல்வாக்கு அபாரமானது.

“ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ” என்று வள்ளுவர் கூறுவது ராம பிரானை மனதில் வைத்துத்தான் என்றே நான் கருதுகிறேன். மனிதர்களில் ‘சூப்பர்மேன்’ ராமன். கெட்டுப்போகவும் வழிதவறிப் போகவும் வாய்ப்பு கிடைத்தும்,அவன் கெட்ட வழியில் செல்லவில்லை. மாபெரும் பேரரசனின் மகனாகப் பிறந்தும் பாமர மனிதன் படும் துன்பம் எல்லாம் பட்டதோடு தன் மனைவியையும் படவைத்தான். அவனது இரண்டு தம்பிகளான பரதனும் லெட்சுமணனும் ராமனைவிட குணத்தில் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டனர் உங்களுக்கு எந்த அளவுக்கு ராமாயண விஷயங்கள் நினைவில் நின்றன என்பதைச் சோதித்துப் பாருங்களேன்:

30 க்கு 30=நீங்கள் ராமாயணப் புலி; 30 க்கு 20= ராமாயணப் பசு! 30க்கு 10= நீங்கள் ராமாயணப் பூனை! 30க்கு 5 மதிப்பெண்கள்= நீங்கள் ராமாயணப் “புளி”!!—இடித்த புளி!

1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?

2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?

3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?

4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?

5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?

6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?

7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?

8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?

9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?

10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?

11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?

13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?

14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?

15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?

16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?

17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?

தமிழ்பிராமின்.காம் திரு. சமரபுங்கவன் தொகுத்த மேலும் சில கேள்விகள் இதோ:-

18.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?

19.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?

20.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

Paruthiyur Sri Rama Lakshmana Idols

21.அனுமனின் தந்தை யார்?

22.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?

23. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?

24.கைகேயியின் தந்தை யார்?

25.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?

26.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?

27.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?

28.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?

29.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?

30.வாலியின் மகன் பெயர் என்ன?

விடைகள்:

1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் 18. சாந்தி 19.சுதர்சனன் 20.சம்பாதி 21.கேசரி 22.புலஸ்த்ய ரிஷி 23.மதங்க முனிவர் 24. அஸ்வபதி 25.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர் 26.சுயஜ்னன் 27.நந்திக்ராமம் 28.சூடாமணி 29.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன் 30.அங்கதன்

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).Lord Sri Rama- World’s Best PR Man (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

Pictures are taken from Facebook and other websites. Thanks.

காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு

 

Picture: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள காளிதாசன் சிலை

 

மகா கவி காளிதாசன் 1250 உவமைகளையும் உருவகங்களையும் வேறு பல உத்திகளையும் கையாளுகிறான். இவைகளை சங்கத் தமிழ் புலவர்களும் பின்பற்றுவதால் அவர்களுக்கு முன் காளிதாசன் வாழ்ந்தான் என்பது என் துணிபு. குறிப்பாக மிகவும் கற்றறிந்த மக்களிடையே மட்டுமே பயன் படுத்தக்கூடிய சில உத்திகளைக் காளிதாசன் பயன்படுத்துவது போலவே தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இலக்கணம் போன்ற விஷயங்களை உவமையாகவோ சொல் அணிகளாகவோ பயன்படுத்த வேண்டுமென்றால் அதைக் கேட்டு ரசிப்போரின் அறிவும் அதிகமாக இருக்கவேண்டும். இதைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் காணும் போது களிபேருவகை ஏற்படுகிறது. இந்திய மக்கள் மேதாவிலாசம், அதே கால ஏனைய நாகரீகங்களை விட மிகவும் அதிகம். வேறு எந்த பழங்கால இலக்கியத்திலும் சிலேடைகள், புதிர்கள், விடுகதைகள், பழமொழிகளை உவமைகளாகப் பயன்படுத்துவதில்லை! முன்னரே ஒரு கட்டுரையில் ‘கொம்பு சீவுதல்’ என்பதை காளிதாசன் எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கண்டோம்.

 

நான்கூறும் தமிழ் உதாரணங்கள் சங்க கால பிராமணப் புலவர்கள் கையாண்ட உத்திகள். அவர்கள் வடமொழியில் வல்லவர்கள். காளிதாசனைக் கரைத்துக் குடித்த மேதாவிகள். தமிழைக் கிண்டல் செய்த பிரமத்ததன் என்ற வட இந்திய மன்னனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் (சம்ஸ்கிருதம் மூலம்) தமிழைக் கற்பித்து அவனைப் பாட்டும் எட்டுக்கட்டச் செய்து அதை சங்க இலக்கியத்திலும் சேர்த்து விட்டார்!

சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவன் காளிதாசன். வண்டு என்பதற்கு ‘ப்ரமர’ என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதைக் கவிதையில் பயன் படுத்துகையில் 2 “ர” க்களை உடைய பூச்சி என்று விடுகதை போடுவான் (குமார.3-36).

 

இதோ மற்ற இடங்களும் தமிழ் ஒப்பீடுகளும்:

1.வண்டு அல்லது தேனீயை அறுகாலி (6 கால்) என்று அழைப்பது (குமார.5-9) தமிழிலும் உண்டு:- புறம் 70 ,கோவூர் கிழார்:

2. ரத அங்க நாம்னா: ரகு.3-24, 13-31: (சக்ரவாகம்): தேரின் ஒரு உறுப்பு (அங்கம்) சக்கரம். அதைப் பெயரில் உடைய பறவை ‘சக்ரவாகம்’. இதைத் தமிழில் அன்றில் பறவை என்பர்.

3. தமிழில் மதுரை. வரி 87, 88 (நெல்லின் பெயரை உடைய ஊர்=சாலியூர்): மதுரைக்காஞ்சி எழுதிய மாங்குடி மருதன் இந்த ‘ரத அங்க நாம்னா’ உத்தியைப் பின்பற்றி சாலியூர் என்பதை நெல்லின் பெயரை உடைய ஊர் என்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? நேராக சாலியூர் என்று சொல்லிவிடலாமே என்று வாசகர்கள் நினைக்கலாம். சில நேரங்களில் கவிதையின் எதுகை மோனைக்காகவும் ,சில நேரங்களில் தன் புலமையைக் காட்டவும் கவிஞர்கள் இந்த உத்தியைக் கடைப் பிடிப்பர். இது போல பல இடங்களில் செய்வதும் இப்படி சுற்றி வளைத்து ஒரு விஷயத்தைச் சொல்லும்போது கவிதையின் அழகு கெடாமல் காப்பதும் கவிஞனின் திறமையைக் காட்டுகிறது.

4. பெரும்பாணாற்றுப்படை வரிகள் 297-310 (இராச அன்னம்): சங்க கால பிராமணப் புலவர்களில் ஒருவர் பெயர் ருத்ராக்ஷன். இதைத் தமிழில் உருத்திரங்கண்ணன் என்று சொல்லுவர். இவர் பிராமணர் வீடுகளில் என்ன என்ன ‘வெஜிடேரியன்’ உணவு கிடைக்கும் என்பதை மிக அழகாகச் சொல்லுகிறார். கோழியும் நாயும் அசுத்தம் செய்யாத இடம் அக்ரஹாரம் என்றும் புகழ்கிறார். அப்படிச் சொல்லும்போது, விறலியரே, பாணர்களே, புலவர்களே, அதோ அந்த ஐயர் வீட்டுக்குச் சாப்பிடப் போங்கள். அந்த வீட்டு அம்மாமி, அருந்ததி போன்று கற்புடையவள். உங்களுக்கு வெண்ணெயும், மாதுளைப் பொறியலும், மிளகுபொடியோடு “ பறவைப் பெயர்  கொண்ட சோற்றையும்” பரிமாறுவாள். இதுதான் காளிதாசன் ‘டெக்னிக்’. இராச அன்னம் என்னும் அரிசி வகை= பறவைப் பெயர்  கொண்ட சோறு.

 

5.நெடு. நக்கீரர் பாடியது, வரிகள் 82, 114 (உத்தரம், கர்பக் கிரகம்):- நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில், ‘‘நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை நெடு நிலை’’ என்பது உத்தர நட்சத்திரத்தைக் குறிக்கும். ஆனால் புலவர் சொல்ல வருவது வீட்டின் பகுதியான உத்தரம். இன்னொரு இடத்தில் கர்ப்பக்கிரஹம் என்பதை ‘’கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்’ என்றும் கூறுவர்.

6. கலி.25:1 வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்=திருதராஷ்டிரன்: ஆதித்த/சூரிய மண்டலத்துக்கு மற்றொரு பெயர் பகன்.அவனுக்குக் கண் கிடையாது. மகாபாரத திருதராஷ்டிரனுக்கும் கண் தெரியாது. ஆக திருதராஷ்டிரன் என்று சொல்வதற்காக பாலைக் கலி பாடிய பெருங் கடுங்கோ இப்படி’ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்’ என்கிறார். தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் எந்த அளவுக்குப் புராண இதிஹாசங்களையும், வடமொழியையும் கரைத்துக் குடித்திருந்தனர் என்பதற்கு கலித்தொகையில் நூற்றுக் கணக்காண சான்றுகள் உள.

இதே வரிக்கு வேறு உரைகளும் உள. வயக்குறு மண்டிலம் என்பது கண்ணாடி என்றும் அது பிறர் முகத்தைக் காட்டுமேயன்றி அதனால் காணமுடியாது என்றும் ஆகவே இது தர்ப்பண (கண்ணாடி) ஆனனன் (முகத்துடையோன்) என்பதே என்பர்.

7.வாடா வஞ்சி (மாறோக்கத்து நப்பசலையார், புறம்.39): இவரும் பிராமணப் பெண் புலவர். வாடா வஞ்சி என்பது வாடிப்போகாத வஞ்சி, அதாவது, கருவூர்.

 

8.கலி. 99-1,2 -அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவர் (சுக்ரன், பிருஹஸ்பதி) : தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இரண்டு பிராமணர்கள் குருவாக இருந்தனர். அதை சுக்ரன், பிருகஸ்பதி என்று பெயர் சொல்லாமல் அந்தணர் இருவர் என்கிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

9. பரி.3-31 கூந்தல் என்னும் பெயர் உடைய அசுரன்= கேசாசுரன். தலைமயிர்/ கூந்தல் பெயரை உடைய அசுரன் கேசாசுரன். கேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு தலை முடி என்று பொருள்.

10.திருமுறுகு.18 (நக்கீரர்): “நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை (ஜம்பூத்வீபம்) சேன் இகழ்ந்து விளங்கும் செயிர் தீர் மேனி” இந்தியாவின் பழம்பெரும் பெயர் நாவலந்தீவு. நாவல்பழ மரங்கள் நிறைந்த பூமி. எந்த வகை மரம் செடி கொடிகள் ஓரிடத்தில் செழிப்பாக இருகிறதோ அதை வைத்து அந்த நாட்டுக்குப் பெயர் சூட்டுவது புராண மரபு. இதையே பின்பற்றி தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலப் பாகுபாடு செய்தனர். நக்கீரர் என்ற பிராமணப் புலவர் இதே உத்தியை தங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். பலவகை தங்கங்களில் ஒன்று சம்பூநதம் (ஜம்பூத்வீப தங்கம்)= நாவலொடு பெயரிய பொலம்புனை.

 

காளிதாசன் உலகம் புகழும் மகா கவி. அவனுடைய ரகுவம்சம் உவமைக் கருவூலம்! ரத்தினக் களஞ்சியம்! அவனுடைய உவமைகளில் முக்கால்வாசியை அதில் கொட்டிவிட்டான். எடுத்தஎடுப்பிலேயே

‘வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’

என்று துவங்குகிறான். பொருள்: பார்வதியும் பரமசிவனும் உலகத்துகே தாய் தந்தையர். அவர்கள் சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல இணைந்து இருப்பவர்கள். அவர்களை வணங்குகிறேன். இந்த உவமைக்கு ஈடு இணை இல்லை. இந்திய மக்களின் மொழி அறிவுக்குச் சான்று பகரும் மாபெரும் உவமை இது!

இன்னும் தொடரும்………………… (காளிதாசன்– சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் என்பதைக் காட்ட அவ்வரிசையில் வரும் ஏழாவது கட்டுரை இது. பழைய கட்டுரைகளையும் படித்துப் பயன்பெறுக.)

Old Posts: 1.Indra Festival in the Vedas and Tamil Epics2. Sea in Kalidasa and Tamil Literature 3. Ganges in Kalidasa and Sangam Tamil Works 4.Gem Stones in Kalidasa and Tamil Literature 5. Bird Migration in Kalidasa and Tamil Literature 6. Kalidasa’s Age: Tamil Works confirm 1st Century BC + Same Articles in Tamil

For further information contact author at   swami_48@yahoo.com

 

ஒரு வேளை உண்பான் யோகி

Greatest ascetic of this century, Kanchi Shankaracharya, who lived 100 years.

 

ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்

ஒரு மனிதனோ பிராணியோ நீண்ட காலம் வாழும் ரகசியம் என்ன? அது சாப்பிடும் உணவு காரணமா? மூச்சு விடும் வேகம் (அளவு) காரணமா? காம (செக்ஸ்) உணர்வுகள் காரணமா? சுத்தமான காற்று காரணமா? அதன் எடை காரணமா? மரபணுக்கள் காரணமா? இந்த ஆராய்ச்சிக்கு நேரடியான விடை கிடையாது. ஆயினும் உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

 

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

 

இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கும் விஷயம் என்ன? ஒருவன் அதிகம் உண்டால் ஆயுள் குறையும். அதுவும் ஆரோக்கியக் குறைவான உணவு உண்டால் இன்னும் ஆயுள் குறையும். இப்போது மருந்துகள் மூலம் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது உண்மதான். ஆனால் அவர்களுடைய வாழ்வோ நரக வாழ்வு. இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம். சுருங்கச் சொன்னால் நடைப் பிணம்.

ஆமைகளை ஆயுளுடன் தொடர்பு படுத்தியும் யோகிகளுடன் தொடர்பு படுத்தியும் வரும் கீதை, குறள் பாடல்களை ஆங்கிலக் கட்டுரையில் கண்டோம் (காண்க: The Tortoise Mystery: Can we live for 300 years?)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

 

வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.

“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:

இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)

பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.

இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.

திருமூலர் இவர்களுக்கு எல்லாம் ஒருபடி கூடுதலாகப் போய் ஆமையைவிட இன்னும் ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழலாம் என்கிறார் (2264 & 2304)

 

A simple Yogi, Sri Ramana maharishi, who lived over 70 years

 

மனிதனும் செக்ஸும்

ஒரு மனிதன் பாலுறவில் ஈடுபடும்போது அவன் சுவாசம் இருமடங்காகிறது. அதாவது நிமிடத்துக்கு 30 முறை. ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 5000 முறை உடலுறவு கொள்கிறான் அல்லது விந்துவை வெளிவிடுகிறான். . ஆனால் யோகிகள் 48 ஆண்டு வரை பிரம்மசர்யம் காக்கிறார்கள். இது வடமொழி நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் (திருமுருகாற்றுப்படை) வரும் செய்தி.

கடவுள் (பிரம்ம தேவன்) ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கோடி மூச்சு என்ற ‘பாங்க் பாலன்ஸுடன்’ (மூச்சு வங்கிக் கணக்குடன்) நம்மை பூமிக்கு அனுப்புகிறான். வேகமாகச் செலவிடுவோர் விரைவில் பரலோகம் சேருவர். மெதுவாக முச்சுக் காற்றை விடுவோர் நீண்ட காலம் வாழ்வார்கள். இதை முறையாகக் கற்றுக் கொடுப்பதுதான் தியானமும் பிராணாயாமமும். ஆனால் விஷயம் தெரிந்தவர்களிடம் இதைக் கற்கவேண்டும்.

ஒரு சுவையான கணக்குப் போட்டுப் பார்ப்போம்: வேதங்கள் மனிதனுடைய ஆயுள் 100 என்று சொல்லுகின்றன. பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று.

 

நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் 100 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் 83 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் 750 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு ஒரு முறை சுவாசித்தால் 1500 ஆண்டு வாழலாம்.

ரிஷி, முனிவர்கள் இப்படிச் செய்ததாகவும் காட்டில் அவர்கள் மீது பாம்புப் புற்றுகள் வளர்ந்ததாகவும் படிக்கிறோம். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாகவும் படிக்கிறோம். இப்போது லண்டன் பத்திரிகைகளில் மனிதனை 1000 ஆண்டு வாழச் செய்யும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக மரபணு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்!

 

Sri Shanthananda who lived like a Rishi.

 

பிராணிகள் மூச்சு விடும் அளவு

ஒரு நிமிடத்துக்கு………

மனிதன் 15 முறை சுவாசிக்கிறான் –சராசரி ஆயுள் 100 வயது

ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை

பாம்பு 8 முறை சுவாசிக்கிறது– 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்)

யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு

குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50

பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு

நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு

புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு

முயல் 39 முறை சுவாசிக்கிறது–8 ஆண்டு

திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு

யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு

குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு

சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு

குரங்கு—32- முறை சுவாசிக்கிறது –18-23 ஆண்டு

மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது — 1 ஆண்டு

வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு

 

பிராணிகளின் ஆயுட்காலம்

ஆப்பிரிக்க சாம்பல் கிளி— 50 ஆண்டு, அமேசான் கிளி—80 ஆண்டு,இந்திய கிளி—80 ஆண்டு, முதலை— 45 ஆண்டு, நீரில் மட்டும் வாழும் முதலை—68

அமெரிக்க பெட்டி ஆமை- 125, தவளை, தேரை -15

ராணி எறும்பு –3, வேலைக்கார எறும்பு- அரை ஆண்டு, வௌவால்—25, காண்டாமிருகம்—40, கரடி—40, ராணி தேனீ—5, வேலைக்கார தேனி—1, பாம்பு வகைகள்—20 முதல் 30, பசு மாடு—22, மான் –35, கழுதை—45, கழுகு—55, விலாங்கு மீன் –55, கேட் பிஷ் (மீன்) –60,ஆடு—15, ஆந்தை—68, கொரில்லா—20

சிம்பன்சி—40, குதிரை—40, குள்ள நரி—14, சிறுத்தை—17.சிங்கம்-35, கீரி—12

புறா-11, அணில்—16, புலி—22, அன்னம்—102, கங்காரு—9, கோவாலா—8

கலாபகாஸ் ஆமை–200

இந்தப் பட்டியலில் இருந்து ஒரு உண்மை புலப்படும். ராணித் தேனீயை விட வேலைக்காரத் தேனீயின் ஆயுள் மிக மிகக் குறைவு. ராணி எறும்பை விட வேலைக்காரத் எறும்பின் ஆயுள் மிக மிகக் குறைவு. வேகமாகச் செயல்படுவதால் இந்த இழப்பு. இதேபோலத்தான் வேகமாகப் பாயும் சிங்கம், புலி, சிறுத்தைகளின் ஆயுளும் குறைவு.

காய்கறி உணவையே மட்டும் சாப்பிடும் யானை, கிளி போன்றவை நீண்ட காலம் வாழ்கின்றன என்பதும் வியப்பான விஷயம். ஆனால் மூச்சு வேகம் மட்டுமோ, உணவு மட்டுமோ காரணம் என்று கருதிவிடக் கூடாது.

5000 ஆண்டுகள் உயிருடன் இருக்கும் மரம் பற்றியும் 450 ஆண்டுகள் கடலில் வாழும் கடல் மட்டி பற்றியும் நான் எழுதிய கட்டுரையையும் காண்க: Do Hindus believe in E.T.s and Alien Worlds? and Why Do Hindus Practise Homeopathy?

 

Contact swami_48@yahoo.com

*********

ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

(This article is part of Astrological Greats of Ancient India written by S Nagarajan. Please read his previous posts in this series) 

ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

by ச.நாகராஜன்

 

ப்ருஹத் கதா எழுதிய பேரறிஞர்

 

ஜோதிடக் கலை வளர்ச்சியில் சமணர்களின் பங்கு ஏராளம் உண்டு.நீதி நெறி நூல்களோடு ஜோதிட நூல்களையும் சமண அறிஞர்கள் நிறையவே எழுதி உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களைப் பற்றிய உண்மைகளை இன்றைய உலகம் அறியவில்லை. மிக பிரம்மாண்டமான அறிவுக் கதைக் களஞ்சியத்தின் ஆரம்பகர்த்தா ஒரு சமணரே என்பது வியப்பாக இல்லை?

 

குணாகரர் அல்லது குணாத்யர் என்ற பெயருள்ள இந்தப் பேரறிஞர் ப்ருஹத் கதா மற்றும் ஜோதிட நூலான ஹோரா மகரந்தம் ஆகிய நூல்களை இயற்றியவர். குந்தள அரசனான சதகர்ணியின் மந்திரியாக இவர் இருந்தார். இவரது வரலாறு மிக மிக சுவாரசியமானது.

 

ஹோரா மகரந்தம்

 

குணாகரர் தொன்று தொட்டு இருந்த அனைத்து ரிஷிகளின் நூல்களையும் இதர ஜோதிட மேதைகளின் நூல்களையும் ஒன்று விடாமல் கரைத்துக் குடித்தார். தேனீ எப்படி பல்வேறு மலர்களை நாடி மலர்களின் மதுவை அருந்தி தேனைத் தருகிறதோ அதே போல பத்ராயணர்,வசிஷ்டர், பராசரர் உள்ளிட்ட அனைத்து ரிஷிகளின் நூல்களிலும் உள்ள நல்ல நல்ல அம்சங்களையும் தொகுத்து ஒரு நூலைத் தயாரித்தார். அதற்கு மகரந்தம் என்ற  பொருத்தமான பெயரையும் தந்தார். இந்த ரிஷிகளின் ஸ்லோகங்களை சரளமாக அவர் ஆங்காங்கே எடுத்துக் காட்டி அவர் காலம் வரை இருந்த கருத்துக்களை அற்புதமாகத் தொகுத்து ஹோரா மகரந்தத்தை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கினார். ஜோதிடத்தில் வரும் கலைச் சொற்களின் விளக்கம், கிரஹங்களின் வலிமை, மனிதப் பிறவியல்லாதவற்றின் பிறப்புகள், மனிதப் பிறவியில் பிறக்கும் போது உள்ள நிலைகள், ஆயுள் பாவம், யோகங்கள், கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்கள், தசா புக்தி காலங்களும் அவற்றின் பலன்களும், கிரக சேர்க்கைகளும் அதனால் ஏற்படும் பலன்களும், கிரகங்களின் கிரணங்களால் ஏற்படும் பலன்கள் என இப்படி அபூர்வமான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து விடுகிறார் குணாகரர் தனது நூலில்.இந்த நூல் இவர் அமைச்சராக இருந்த போதே எழுதப்பட்டது.

 

பைசாச மொழியில் ஏழு லட்சம் கதைகள்!

 

சம்ஸ்கிருதத்தையே தனது மொழியாகக் கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் திடீரென்று ஒரு சம்பவம் நேரிட்டது. ஒரு நாள் அரசவையில் பெரும் வாதப் போர் ஒன்று நிகழ்ந்தது. அதில் பங்கேற்ற குணாகரர் அதில் தோற்று விட்டார். இதனால் மனம் உடைந்த அவர் பதவியைத் துறந்து விட்டுத் தவம் செய்வதற்காக காடு சென்றார். வாதத்தில் தோற்றதை அடுத்து இவர் சம்ஸ்கிருத மொழியை விட்டு விட்டார். பைசாச பாஷை எனப்படும் ப்ராக்ருத பைசாச பாஷையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு நாள் காட்டில் கணபூதி என்னும் கணம் ஒன்று கதைகளைச் சொல்ல ஆரம்பித்தது. பைசாச பாஷையைக் கேட்கும் திறன் கொண்டிருந்த குணாகரர் அதிசயமான அபூர்வமான அந்தக் கதைகளில் லயித்துப் போனார். ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு லட்சம் கதைகளை கணபூதி சொல்ல அவற்றை குணாகரர் கேட்டார். இந்தக் கதைகளினால் உத்வேகம் அடைந்த அவர் ஏழு லட்சம் கதைகளையும் தன் இரத்தத்தினால் பைசாஷ பாஷையில் எழுதி முடித்தார்! தான் எழுதியவற்றை அரசனுக்குச் சமர்ப்பிக்க எண்ணினார். ஆனால் அரசனோ சம்ஸ்கிருத பாஷையின் மீது அடங்காத காதல் கொண்டவன். அவன் பைசாஷ பாஷையில் இருந்த நூலை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். இதனால் வருத்தமுற்ற குணாகரர் தான் எழுதிய நூலின் ஓலைச் சுவடிகளை ஒரு பெரிய தீயை வளர்த்து அதில் ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தார். ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையான சமயத்தில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டும் கண்ணால் கண்டும் அவரது சீடர்கள் மனம் கலங்கி அழுதனர். இந்த சீடர்களில் தாவரங்களும் பைசாசங்களும்(பிசாசு அல்லது பேய் என்று வழக்கில் கூறப்படுவது) இருந்தன.  மனிதர்களும் இருந்தனர்.  ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையாகி விட்ட செய்தி\யைக் கேட்ட மன்னன் மனம் கலங்கிப் பதறிப் போனான். குணாகரரை அணுகி அவரைத் தடுத்து நிறுத்தி ஒரு லட்சம் கதைகளைக் காப்பாற்றினான். இந்த ஒரு லட்சம் கதைகளே ப்ருஹத் கதா (பெரிய கதை நூல்) என்ற பெயரைப் பெற்று பெரும் புகழை அடைந்தது.

 

 

கதாசரித் சாகரமும், பஞ்சதந்திரமும்

 

பின்னால் பதினொன்றாம் நூற்றாண்டில் காஷ்மீரில் பிறந்த சோமதேவர் என்னும் பண்டிதர் 124 அத்தியாயங்கள் கொண்ட 22000 செய்யுள்கள் அடங்கிய  கதா சரித் சாகரம் என்ற நூலை ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டே எழுதினார். பின்னர் பஞ்சதந்திரம் (ஹிதோபதேசம் உள்ளடங்கியது) இதே நூலை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது. இந்த கதைகளின் அற்புதத் தொகுப்பைக் கண்டு வியந்த சி.ஹெச்.டானி என்பவர் இதை ஆங்கிலத்தில் 1880-1884 ஆண்டுகளில் மொழிபெயர்த்தார். மேலை உலகம் இதைக் கண்டு வியந்தது.பின்னர் 1927ல் இவற்றைப் படித்து உத்வேகம் பெற்ற என்,எம்பென்ஜர் என்பவர் ஓஷியன் ஆப் ஸ்டோரீஸ் என்ற பெயரில் கதைக் கடலை மீண்டும் மொழி பெயர்த்தார்.பஞ்ச தந்திரம் முதலிய கதைகளோ கி,பி. 750ல் பெர்சிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் ஹீப்ரு,லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம்,பிரெஞ்சு, ஸ்பெயின் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவியது.

 

ஆக உலகிற்கே கதைச் செல்வத்தை வழங்கியவர் பாரதத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடரே என்பதையும் அவர் மகரந்தம் வழங்கிய மாமேதை என்பதையும் அறிந்து நாம் பெருமைப் படலாம்!

*****************

Vahanas on Coins and in Sculptures

(Please  read other articles on Vahanas  posted already: swami)

Picture: Gupta gold coin with goddess on lion.

Art Historian Sri Sivaramamurthi and others have done lot of research into Vahanas and sculptures. We have got Vahanas on coins from 3rd or 2nd century BC and beautiful sculptures from Gupta period. Gupta gold coins depict Vahanas. Following coins are well known specimens with Vahanas:

1.Shiva and Bull on coins issued by Wima Khadpises (95 AD)

2.Vasudeva also issued coins with Bull and Shiva (190 AD)

3.Samudra Gupta issued coins with Makara at the Goddess Ganga’s feet (335 AD)

4. Goddess seated on lion on coins issued by Chandra Gupta II and Kumara Gupta (380 and 455 AD)

Picture: Kushana gold coin with Kartikeya

 

5.Kartikeya is shown seated on peacock on a coin which is exclusive to Kumara Gupta (455 AD)

6. Mother or Earth Goddess seated on (Nana/ Nanna/ Nanasao) a lion on coins issued by Kanishka (127 AD).

7. Hamsa and Goddess on a coin issued by Samachara Deva (early 6th Century AD)

(The above information was furnished by Biswajeet  Rath in his publication Deities on Indian coins).

8. Yaudheya  Coins with Kartikeya on Peacock (2nd Century BC)

Yaudheya dynasty in North West India issued coins of Kartikeya with peacock vahans.

Gupta gold coin with Kartikeya and peacock

 

On sculptures:

Gupta period sculptures in the caves of Deogarh show several Gods on Vahanas. So Kalidasa must have lived well before this time. Anything that comes in literature takes the shape of coins or sculptures on a later date. This is finding of art historians and archaeologists. References in literature comes first, sculptures come next.

Following Vahanas are on stone scultures:

1.Shiva and Parvati on Bull: Dashavatara Temple, Deogarh, 5rh century AD

Picture: Agni on ram, Paris Museum

2.Agni on the Ram: Bhoganandiswara Temple, Nandi, 9th century AD

3.Figure on Fish  (Ascetic or Varuna?): Jalakandeswara Temple,16th Century

4.Rati on Parrot: Gwalior Museum, 9th Century AD

 

Yaudheya coin details with Skanda and peacock

5.Varuna on Makara: Delhi National Museum, 13th Century AD

6.Indra on Elephant: Nandi, 9th Century AD

7. Rati on swan: Meenakshi Temple,Madurai, 16th Century AD

8. Agni on Ram, 9th Century AD, Calcutta Archaeological gallery

The above only re examples of Vahana sculptures spanning over 1000 years. It is not a comprehensive list. Indra on elephant Airavata is found in many of the world including South East Asian countries. Vishnu on Garuda Vahana is also found from Gupta or earlier times.

 Rati on Anna Vahana

If we consider figures on coins and sculptures together, the Vahanas cover a period of 2200 years without a break! We see coins with Hindu gods on vahanas up to East India Company period. It disappeared completely from those things only after the “Secular Indian Government” started ruling India from 1947!

Next post will cover the mythological stories about Vahanas: swami.

 

*********************

தீபாவளி ரகசியங்கள்

 

(The Englsih version of this article is already posted under Science Behind Deepavali in two parts. This is just a summary in Tamil: swami)

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? பலரும் கீழ்கண்ட காரணங்களைக் காட்டுவர். முதலில் அதைப் படித்துவிட்டு நான் கூறும் புதிய விஷயங்களையும் படியுங்கள்:

1.கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளை நினைவுபடுத்தி தீபாவளையைக் கொண்டாடுகிறோம்.

2.தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடுவதால் தீபாவளி.

3.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது லெட்சுமி தேவி வெளிவந்த நாள் இது.

4.ராமபிரான், ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பிய நாள் இது.

5.பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தை முடித்த நாள் இது.

6.சமண தீர்த்தங்கரில் ஒருவரான வர்த்தமான மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். ஆகையால் சமணர்களுக்கும் புனித நாள் இது.

7.சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. அனைவரும் குருவின் ஆசிர்வாதம் பெற வருமாறு குரு அமர்தாஸ் அறைகூவல் விடுத்த நாள் இது. ஆகையால் சீக்கியர்களுக்கும் புனித நாள்.

8.ஆர்ய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதி எய்திய நாள் இது.

9. இந்து மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறிய நாள் இது.

10.குஜராத்திகளுக்கும் வணிக சமூகத்தினருக்கும் புத்தாண்டும் புதுக் கணக்கு துவங்கும் நாளும் இது.

11. லெட்சுமி பூஜை குபேர பூஜை நடக்கும் நாள் இது.

இவ்வாறு பல காரணங்கள் கூறுகின்றனர். இவை அனைத்திலும் ஒரு உண்மை புலப்படும். இந்த எல்லா காரியங்களும் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடின உழைப்பைச் செய்தனர். ராமர் 14 ஆண்டுகளும் பாண்டவர்கள் 12+1 ஆண்டுகளும் வனவாசம் செய்த பின்னரே வெற்றி கிட்டியது. கடின உழைப்பின் மூலமே இருள் அகன்று ஒளி தோன்றும் என்பதே தீபாவளியின் கருத்து.

மத்தாப்பு, வெடி, சொக்கப் பனையின் காரணம்

தீபாவளி என்றால் வெடி மத்தாப்பு கொளுத்துகிறோம். ஏன்? சமூகவியல் அறிஞர்கள் இதற்குக் கூறும் காரணம்: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் குகையில் வாழ்ந்தபோது உணவு சமைக்கவும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்டவும், குளிர்காயவும் தீயே உதவியது. அது இன்னும் நமது மரபு அணுவில் இருக்கிறது. ஆகையால் தீ வைப்பதில் சிறுவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். இதை ‘பைரோமேனியா’ என்று அழைப்பர். இதைக் கட்டுபடுத்தாவிடில் கடை அடைப்பு, ஹர்த்தால், பந்த் போன்றவற்றில் இளஞர்கள் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு தீவைப்பர். ஆகவே கட்டுக் கடங்காத இளைஞர்களின் அபார சக்தியை வழிப்படுத்தவே முறையாக சொக்கப் பனை கொளுத்தல், வெடி வெடித்தல் ஆகியவற்றை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

உலகம் முழுதும் நவம்பர் மாதத்தில் சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம் உண்டு. பிரிட்டனில் தீபாவளியை ஒட்டி ‘கை பாக்ஸ் டே’ என்று கொண்டாடுவார்கள். அப்போது சொக்கப்பனை, வாணவேடிக்கை உண்டு.

மேலும் நவம்பர் மாததில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகும். சொக்கப்பனை, லட்சக் கணக்கில் தீபம் ஏற்றுதல் ஆகியன இப்பூச்சிகளை அழிக்க உதவும். பூச்சிகள் தாமாகவே ஒளியை நாடி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்ளும். ஆக உலகம் முழுதும் சொக்கப்பனை உண்டு.

அக்கினியின் பெருமையை அறிந்தே உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதத்தை அக்னி (தீ) என்ற சொல்லில் துவங்கி அக்னி பகவான் பற்றிய பாடலுடன் முடிக்கின்றனர்.

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் முழு நிலவு நாளிலேயே வரும். தீபாவளி மட்டும், அமாவாசைக்கு முதல் நாள் துவங்கி 4 நாட்கள் நடப்பதால் விளக்கு ஏற்றுவதிலும் பொருள் இருக்கிறது. அதிலும் கூட மருத்துவ பயன் உடைய எண்ணெய்களையே பயன்படுத்துவர்.

கிறிஸ்துமஸ் மரம்

முன்காலத்தில் சாலைகளில் உள்ள மரங்களில் விளக்கு ஏற்றிவைத்து தீபாவளி கொண்டாடியதை கந்தபுராணம் விளக்குகிறது.. இதை மேல் நாட்டினர் இன்றும் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் காலத்தில் மரங்களை நட்டு அதில் விளக்கு ஏற்றுகின்றனர்.

பழைய கால தீபாவளி நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு கொடுக்கும் நாளாகவும், மஹாபலியை நினைவுபடுத்தும் நாளாகவும் எமதர்மராஜனைக் கொண்டாடும் நாளாகவும் நரக சதுர்த்தியாகவும் கொண்டாடப்பட்டது. இதுபற்றி காளிகாபுராணம், ஸ்கந்தபுராணம் முதலிய நூல்களில் காணலாம். இப்பொழுது கேரளத்தில் ஓணம் கொண்டாட என்ன காரணம் இருந்ததோ அது தீபாவளிக்குக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் தீபாவளி மாறிவிட்டது.

இனிப்புத் திருநாள்

உலகிலேயே அதிகமான, சுவையான உணவு வகைகளையும், திண்பண்டங்களையும் உடைய நாடு இந்தியா. ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு வகை உணவு. ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வகை பிரசாதம்! இப்படி வகை வகையான இனிப்புகளை உடைய மதமோ நாடோ உலகில் இல்லை. 150 வகையான இனிப்புகளும், 25 வகை பாயசங்களும் சமையல் புத்தகத்தில் இருக்கின்றன! உலகில் சர்க்கரை நோய் அதிகம் உடைய நாடும் இந்தியாவே. ஆகையால் இனிப்புத் திருநாளில் இனிப்புகளை அளவோடு உண்டு வளமாக வாழ வேண்டும் அளவுக்கு மிஞசினால் அமிர்தமும் விஷமன்றோ.

தீபாவளியின் பொருளாதரத்தைக் கணக்கிற்கொண்டால் பல கோடிக் கணக்கான மக்களின் தொழிலுக்கும் பிழைப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது. அவ்வகையிலும் தீபாவளி பலருடைய இல்லங்களில் ஒளி விளக்கை ஏற்றுகிறது. அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பிறக்கும் நன் னாள் இது. தீமை இருள் அகன்று நன்மை ஒளி பிறக்கும் நாள் இந்த இனிய தீபாவளி நாள். அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Pictures are taken from various websites and The Hindu. Thanks.

தேள்— ஒரு மர்ம தெய்வம்!

 

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

 

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

 

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

 

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

 

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

 

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

The Great Scorpion Mystery in History

 

Picture: scorpion seal from Indus valley

Seals with Scorpion images are discovered in Indus Valley, Dilmun (Bahrain), Middle East (Iran, Iraq) and a few other places. Scorpion God was worshipped in Egypt. Even today Scorpion goddess is worshipped in two places in India. Scorpio is one of the twelve zodiac signs. Scorpion is a symbol for sex. Scorpion is used as people’s names in Sanskrit (Vrischikan) and heaven is called ‘scorpion world’ (puth Thel Ulaku) in Tamil. Of the Tamil dances one of them is a dance by goddess on stilts to escape from scorpion demons. In spite of all these references, still the mystery about scorpion seals continues.

Why did ancient cultures use scorpion on seals? What is the meaning of those seals? Is it like snake goddess? We have lots of references about snake gods and goddesses. All Hindu Gods and goddesses have snake with them. But scorpion is a rare creature in the scriptures.

Vrischika/Scorpion in the Vedas

Scorpion appears in Rig Veda and Atharva Veda. Its poison was feared like that of serpents. It is described as lying torpid in the earth during winter (RV I.191.16; AV xii.1-46)

Urvasi Island in Assam

Urvasi Island also known as Peacock Island is in the middle of Brahmaputra river in Guwahati.  In the Shiva temple known as Umananda Temple, Devi is represented by an emblem of scorpion. People worship the emblem.

Playing with scorpions

Kandakoor village near Gulbarga in Karnataka has a strange goddess. The villagers celebrate Nagapanchami as Chelina Jatre (festival of scorpion). The villages worship an idol of scorpion goddess Kondammai and play with live scorpions as well. Children put the scorpions all over their bodies and the scorpions never harm them. The villagers queue up to climb the nearby hill where scorpions are found in plenty. Even the university zoology department is surprised at the behaviour of scorpions. Though they won’t sting unless provoked, they don’t even sting anyone when they are playing with them.

 

Picture shows a beauty with scorpion on her thigh, Khajuraho, MP.

Khajuraho in Madya Pradesh has beautiful temples with lot of erotic sculptures. A voluptuous beauty is sculpted with a scorpion on her thigh. No one knows why.

Madhavi, famous danseuse in the Tamil epic Silappadikaram did 11 types of dances. One of them is Marakkal (wooden legs) where goddess danced with stilts to avoid snakes and scorpions sent by the demons.

(Please read my Article in this blog Matavi’s 11 Types of  Classical dances, மாதவியின் 11 வகை நடனங்கள்)

Scorpion goddess Ishara

In Babylonia , two seals representing ritual marriage that takes place during the new year time show scorpions. The scorpion may symbolise goddess Ishara, the goddess of love.

Scorpion men are found in many Akkadian language myths including the Enuma Elish and  the Babylonian version of Epic of Gilgamesh. They were known as Aqrabuamelu and Girtablilu. They stand as guards in the temple of Shamash.

Kudurru stones in Sumerian culture have divine symbols including scorpion. These are documents that record land donations to loyal servants by kings. Though we hear about them from 3000 BC, the Kudurrus we have now are from Kassite kings from 1500 BC. Hindus have lots of similarities with Kassite kings.

Scorpion king of Egypt

 

Picture: Scorpion seal from Rehman Dehri 3000 BC

In Egypt Selket is the name of the old scorpion goddess who was depicted as a woman wearing on her head a scorpion, the animal sacred to her. She was also at times a scorpion with a woman’s head. She was the guardian of Conjugal union.

A king of ancient Egypt, ruling before Menes united the country and formed the first dynasty , was named Scorpion/ Selek (3000 BC) and the feminine form of the word selket named the patroness of magical healers.

 

The Egyptian mother goddess Isis/ Eset fleeing from Seth/ Sutech, the slayer of Osiris , took seven scorpions with her.

The scorpion had a powerful appeal to the ivory carvers of Hierakonpolis. We see scorpion symbol on large number of ivory artefacts. Thousand years later it appeared in the design of the Gulf seals.

Kannada word in Egypt!

Kannada word Chelina and Egyptian word Selek are similar in sounds, both mean scorpions. Both saw scorpion in the goddess form.

One of the Yoga poses is called Vrischika Asana (scorpion posture).

 

Picture shows Kudurru stone for Sumeria 1200 BC with scorpion

******

The Great Scorpion Mystery in History-2

 

Picture shows boundary stone with scorpion god,Sumerian.

This is part 2 of Scorpion mystery: swami

Persian prayers

Persians had a curious custom of charming scorpions like we see in today’s Karnataka. They believed that by making use of a prayer, a person gifted with certain powers can deprive the scorpion of its sting. To do this the charmer turned his face towards Scorpio in the heavens, repeating a special prayer, and at the conclusion of each sentence clapped his hands. Then he and his followers handled scorpions without any fear. Greeks and Romans believed the gem stone agate can cure stings of scorpions.

In astrology the zodiacal sign Scorpio is associated with all that is red. It was ruled by the red planet Mars and red star Antares. In Hindu astrology the symbol for Star Anusham (Anuradha) is scorpion.

According to Greek mythology the scorpion was placed in the heaven by Juno the queen of Gods because it carried out her wishes by stinging Orion, who had offended goddess by boasting he could outrun  and subdue the wildest and fiercest of the beasts. Orion died from the effects of the sting and scorpion was transferred to the heavens. Goddess Artemis sent scorpions to kill Orion. Actually what they meant by this story was when Scorpio rises in the horizon, Orion disappears from the sky.

Picture: scorpion seal from the Middle East

 

Dilmun seals

In Dilmun (Bahrain), scorpion is found on 36 seals. Historians think that it is one of the animals that have significance in the rites of Dilmun. In one of the seals interlocked squares are visible. They are surrounded by four scorpions with one on each side. This maze like fort is ‘protected’ by the scorpions. Stamp seals representing erotic scenes are discovered in Bahrain. One of the erotic seals has a scorpion behind a woman. There is an antelope behind the man who is involved in sexual act with the woman. Going by this seal we may conclude that woman is represented by scorpion and man is represented by antelope.

 

Mayan

In the religion of the Mayas the black god of war Ek-chuah was portrayed with the tail of a scorpion.

Tamil names

In Tamil ‘puththel ulaku’ (New Scorpion World) means Heaven or paradise.

Other names for scorpion in Tamil: Thel, alam, viruschikam, nalividam, therukkaal, thuttan, parappan, nail; also anusham or anuradha natachaththiram.

Please read my earlier posts:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God around the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

Picture: Sassanian scorpion seal

Following is taken from Spoken Sanskrit website:

वृश्चिक vRzcika m. scorpio edit
वस्कराटिका vaskarATikA f. scorpion edit
खर्जूर kharjUra m. scorpion edit
अलि ali m. scorpion edit
अलिन् alin m. scorpion edit
आलि Ali m. scorpion edit
आलिन् Alin m. scorpion edit
कण्डोष kaNDoSa m. scorpion edit
कालक kAlaka m. scorpion edit
खर्जूरक kharjUraka m. scorpion edit
द्रुण druNa m. scorpion edit
द्रुत druta m. scorpion edit
द्रूण drUNa m. scorpion edit
द्रोण droNa m. scorpion edit
पुच्छकण्टक pucchakaNTaka m. scorpion edit
बलीन balIna m. scorpion edit
वृश्चन vRzcana m. scorpion edit
वृश्चिक vRzcika m. scorpion edit
शीतक zItaka m. scorpion edit
जलवृश्चिक jalavRzcika m. water-scorpion edit
वृश्चिकी vRzcikI f. female scorpion edit
शतघ्नी zataghnI f. female scorpion edit
स्वरु svaru m. kind of scorpion edit
वृश्चिकाली vRzcikAlI f. line of scorpions edit
लूम lUma n. sting of a scorpion edit
अजकाव ajakAva adj. centipede or scorpion edit
कीट kITa m. scorpion in the zodiac edit
मल mala n. tip of a scorpion’s tail edit
अल ala n. sting in the tail of a scorpion edit
विश्वम्भर vizvambhara adj. kind of scorpion or similar animal edit
विश्वम्भरक vizvambharaka m. kind of scorpion or similar animal edit
सर्पवृश्चिकरोमवत् sarpavRzcikaromavat adj. having snake and scorpions forhair edit
अलायुध alAyudha m. whose weapon is the sting from thetail of a scorpion

 

Bahrain (Dilmun) Mysteries

Middle East seal with Lord of the Animals (Pasupati)

 

(Tamil version of this article is uploaded already: swami)

 Bahrain was called Dilmun 3000 years ago. It had wider contacts with Indus Valley Civilization. Indus valley seals have been recovered from Gulf countries. Dilmun seals were discovered in Indus Valley as well. Ancient cuneiform tablets praise this land as holy and pure. One of the tablets says, “ In Dilmun no cry the raven utters, Nor does the bird of ill-omen foretell calamity. The lion kills not, nor does the ravening wolf snatch away the defenceless lamb. Unknown is the wild dog who tears the kid. The dove does not conceal its head. No one here says, ”My eyes are sick,” No one here says, ”My head is sick,” No one here says, ”I am an old woman,” No one here says, ”I am an old man.” The maiden walks here in innocence. No lustrations need to be poured. The somber death priest walks not here, By Dilmun’s walls he has no cause for lamentations”. These words come from one of the world’s oldest poems. It was first written down some 4,000 years ago in the ancient Sumerian city of Nippur near the Euphrates, using cuneiform wedge script on a clay tablet.

 

There are lot of strange things about Dilmun. There is unusually large number of graves. This is known as a land of dead people (Necropolis). Another mystery is the discovery of number of children graves. There are 350,000  graves or burial chambers, big and small. The children graves are at the rate of 1.6 children per family. Some scholars wonder whether it was due to the sacrifice of children. Bible and Jewish books refer to child sacrifice in several places. Phoenicians and Hebrews sacrificed children for their gods Tanit and Molek/Moloch.

Though many of the graves were plundered, still there are some which were untouched. This helps us to understand the life of people who lived 5000 years ago in the Gulf area. The biggest burial chamber is 4X9 metres.

 

Picture of Dilmun seals: middle row: monkey figures, bottom row: Vahanas

Barabar in Bahrain has a temple of Sumerian Water god Enki. Most of  the artefacts recovered from Dilmun are displayed in the National Museum of Manama. Western scholars are showing great interest in studying them. Thousands of burial mounds have become a big tourist attraction.

 

Monkey Figures and Snake Burials

Throughout the Middle East and Gulf countries we see strange monkey figures on seals. No one could explain them correctly. Vedic scriptures speak about a monkey  god Vrshakapi. Hindu epic Ramayana talks about monkey god Hanuman. Strange snake burials are common feature in the Gulf. Why did they bury snakes? It is a big puzzle.

Greeks called Dilmun, Tylos. Another name for Dilmun is Awal, name of a god that was worshipped for thousands of years until Islam came to this country. Dilmun people worshipped a God with a bull head. Bahrain means Two Seas meaning both sweet water and salt water are available in the area. But I think the Sanskrit words Tyla, Til mean Sesame seeds, which Hindus use in the ceremonies for the departed souls. This must be the reason for Dilmun or Tylos. The country was also called land of ash and land of the dead. But why do we find lakhs of burial mounds only in Bahrain in the world? It remains a mystery.

 

Picture of Dilmun seals: top:Bull Man, Middle: Monkey man, Bottom: Sri Chakra like designs

Like snakes, scorpions are also seen on various seals. Indus Valley also has got scorpion seals. Scorpion gods were worshiped in Egypt and Babylonia. These seals along with the figure of footprints are puzzles to scholars. Following is the list of seals found until recently:

Monkey-20, Scorpion-36, goat-27, Bull-90, Tortoise-6, Fish-6, Snake-15, Footprint-36, Crescent moon- 126, sun and star- 42, Flag and God-22, Bullman-8, Crab-6, Donkey-2, Peacock-1, Land-5

Like Indus valley a seal with a god surrounded by animals (Pasupati) is also is also excavated. We see several similarities with the Indus valley seals. These may help us to decipher the Indus script. Erotic scenes on seals are also common.

When I read the description about Dilmun, I am reminded of Hindu scriptures where India is described as a land of the PURE and HOLY souls. When I see the monkey figures on seals I am reminded of Ramayana and Hanuman. But further research is required before jumping into any conclusion.

For further research Contact London Swaminathan  swami_48@yahoo.com

**********