வலியைப் போக்க சங்கீதம் உதவும்!

India1985-Handel_Bach

மன வலியைப் போக்கவும் உடல் வலியை நீக்கவும் இசை உதவும் என்பது அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திதான். எத்தனை வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்பவர்களுக்கு லாய்ட்ஸ் பார்மசி நடத்திய ஆராய்ச்சி ஊக்கமூட்டும் தகவலைத் தருகிறது.

‘பாக்’ Bach என்பவர் வடிவமைத்த மேல்நாட்டு சங்கீதம் பலருடைய நோய்களைப் போக்கியுள்ளது.. பத்து பேரைக் கேள்வி கேட்டால் அதில் நாலு பேராவது, தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனதுக்கு நிம்மதி தருவதாகவும் பதட்டத்தைத் தணிப்பதாகவும் கூறுகின்றனர்.
J bach

(ஜொஹன் செபஸ்டியான் பாக் என்பவர் கெர்மன் நாட்டு இசைக் கலைஞர். வயலின், ஆர்கன் முதலிய வாத்தியங்களை வாசித்த கலைஞர், பல பாடல்களை இயற்றியவர். வாழ்ந்த காலம் 1685—1750)
பாப் இசை, கர்நாடக இசை, மற்றும் சில பாடல்களை வாயாலேயே முனகுவது ஆகியன வலிக்கு நிவாரணம் தரும்.

1500 பேரிடம் கேள்வி கேட்ட லாயிட்ஸ் பார்மசி என்னும் மருந்துக் கடை நிறுவனம் 16 வயது முதல் 24 வயதுடையோர் தான் சங்கீதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது.
ஒருவர் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிட்டால் என்ன கவலை இருந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும் என்று உடா பல்கலைக்கழகத்தில் வலி நிவாரணப் பகுதி தலைவர் பேராசிரியர் டாவிட் பிராட்ஷா கூறுகிறார்.

ராக், பாப், கர்நாடக சங்கீதம் போன்ற வகைப் பாடல்கள் மக்களுக்கு உடல் வலியைக் குறைக்கும் பட்டியலில் மேலிடத்தில் நிற்கின்றன.

எந்தப் பாடல் பிடிக்கிறதோ அதைக்கேட்பதும் வாயால் முனகுவதும் பாடுவதும் மனதை உடல் வலியிலிருந்து திசை திருப்பவாவது உதவும் என்றும் அவர்கூறினார்.

Johann_Sebastian_Bach

ஆதாரம்: லண்டன் மெட்ரோ 23-10-2013;மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்

ஏற்கனவே வெளியான எனது சங்கீதம் தொடர்பான கட்டுரைகள்:
1.இசைத் தமிழ் அதிசயங்கள், 2.சங்கீத ரகசியம், 3.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி, 4.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

தொடர்பு முகவரி: swami_48@yahoo.com
belgium

Look 15 years Younger through Face Yoga!

face yoga2

Face yoga is becoming popular in the western world. It will remove the wrinkles in our face.
Our face has 57 muscles. If you exercise properly, you will look 15 years younger, say Yoga specialists.
First Prime Minister of India Jawaharlal Nehru woke up at 4 AM every day and did Siras Asanam (standing upside down). He looked very young even when he was 70 years old.

How to do Face Yoga?

In simple words, it is pulling funny faces!

British Yoga instructor Danielle Collins has mastered it. Whoever exercises regularly will get a glow in their faces and look younger, she says.

These are exercise for neck and face muscles. It will remove toxins, puffiness and dark circles from face and neck.

Blowing loud kisses looking at the ceiling, massaging, making Owl with fingers and eyes, pressing certain points, pulling cheek muscles etc are part of the exercise. Famous stars have joined this face yoga course. A DVD is also sold for home use in Britain.
****
New Face Yoga

In Tamil

இளமை, இளமை, இதோ! முகத்தில் முகம் பார்க்கலாம்!

மேலை நாடுகளில் முக வசீகர யோகா பிரபலமாகிவருகிறது. இதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றன. 15 வருஷம் இளமையாகத் தோன்றலாம்!! நமது முகத்தில் 57 தசைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் கழுத்துக்கும் முறையான பயிற்சி கொடுத்தால் இளமை திரும்பிவிடும்.
பாரத நாட்டின் முதல் பிரமர் ஜவஹர்லால் நேரு தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து சிரசாசனம் செய்ததை நாம் எல்லோரும் அறிவோம். இது அவருக்கு 70 வயதிலும் இளமைப் பொலிவைக் கொடுத்தது.

முகத்தால், கேலி செய்ய வலிப்பது போல, பல வேடிக்கைகளைச் செய்யவேண்டும் .ஆனால் அதை முறையாகச் செய்யவேண்டும். இதற்கு டேனியல் காலின்ஸ் என்ற பிரிட்டிஷ் யோகா ஆசிரியை ஒரு முறையை வகுத்துள்ளார். முகத்தை மசாஜ் செய்தல், கன்னத்தின் சதைகளை இழுத்தல், அனுமார் மாதிரி வாயை வைத்துக் கொள்ளல், வானத்தை நோக்கி முத்தம் கொடுத்தல், ஆந்தை போல கண்களை வைத்துக் கொண்டு கை விரல்களால் கண் காட்டுதல், முகத்தில் சில இடங்களை அமுக்குதல்—இப்படிப் பல ‘போஸ்’கள் உண்டு.
face yoga3

பிரிட்டனில் உள்ள பிரபல நடிகர், நடிகைகள், முக்கியப் புள்ளீகளீன் மனைவிமார்கள் ஆகியோர் இந்த முக யோகா செய்து இளமையை மீண்டும் பெறும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நாமும் நலம் தரும் ஆசனங்களைச் செய்யலாமே.

டானியல் வெளியிட்ட ‘டிவிடி’-யும் விற்பனை ஆகிறது. இந்தியாவில் கற்ற யோகா, ஆசனங்களை அவர்கள் புதிய முறையில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த முறையான பயிற்சியினால் கழுத்தில் உள்ள வலையங்கள் மறையும், முகத்திலுள்ள சுருக்கங்கள் பறந்துவிடும்,. தொய்ந்து போன சதைகள் பொலிவு பெறும் ,முகத்தில் தேஜஸ் பெருகும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது!!

Compiled from London Newsppaers by London Swaminathan; contact swami_48@yahoo.com

face yoga1

11. ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று உண்மைகள்!

sun buddha

ச.நாகராஜன்

கடைசி கடைசியாக டைடோகுஜி மடாலயத்தின் உள்ளே அடியெடுத்து வைத்தார் சோகோ.அவர் நுழைந்த அறையில் ஒரே ஒரு சுவர் தான் இருந்தது. மூன்று பக்கங்களிலும் தள்ளு கதவுகள். நான்காவது புறம் ஒரு சுவர்.தனது புங்கோ மூட்டையைக் கீழே வைத்து விட்டு சுவரை நோக்கி தியான நிலையில் (ஜஜென்) அமர்ந்தார் சோகோ.

மூன்று பக்கங்களிலிருந்தும் கதவுகளுக்கு அப்பாலிலிருந்து யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் ஒரு விநாடி கூட சோகோவால் இயல்பான நிலையில் இருக்க முடியவில்லை. மூன்று வேளையும் எளிய உணவு வழங்கப்பட்டது. தூங்க அனுமதி தரப்பட்டதோடு பாய் ஒன்றும் தூங்குவதற்காகத் தரப்பட்டது. இப்படியே ஐந்து நாட்கள் கழிந்தன. ஆக காத்திருந்ததையும் சேர்த்து மொத்தம் எட்டு நாட்கள் கழிந்தன. எதற்காக நாம் இங்கே வந்தோம், என்ன செய்வதற்காக வந்தோம் என்று எண்ணியவாறே சோகோ நேரத்தைக் கழித்தார். ஆனால் தன் மாஸ்டரிடம் அளித்த உறுதி மொழியையும் தான் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தையும் சோகோ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.

இறுதியாக சோகோ துறவிப் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டார்!
பதினைந்து வருடங்கள் உருண்டோடின. சோகோவுக்கு அவர் குருவிடமிருந்து இங்கா கிடைத்தது. (சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர்)

இத்தனை வருடங்களிலும் அனுபவம் ஒன்று மட்டுமே தான் பயிற்சி. வெறும் பேச்சோ அல்லது தத்துவச் சொற்பொழிவுகளோ எதுவுமில்லை. டைடோகுஜி மடாலயத்தில் நம்பிக்கை என்றால் என்ன என்பதை சோகோ கற்றுக் கொண்டார். எந்த கஷ்டம் வந்த போதிலும் அதை அசைக்க யாராலும் முடியவில்லை.

ஜென் மாஸ்டரான ஹகுயின் ஜென் பயிற்சியில் மூன்று முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.இது ஜென் பயிற்சிக்கு மட்டுமல்ல எங்கும் உதவக் கூடியவை! ஆழமான நம்பிக்கை, அதிக சந்தேகம், குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி.

ஆழமான நம்பிக்கை என்றால் குருவிடம் அசாத்திய பக்தியும் அவர் கடைப்பிடிக்கும் பாரம்பரிய வழிகளில் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருப்பதாகும்.அத்தோடு ஒருவரிடம் அடங்கியுள்ள எல்லையற்ற ஆற்றலையும் அது குறிக்கும். அதிகமான சந்தேகம் என்பது ஆழமான நம்பிக்கைக்கு நேர் எதிரடியாக இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது தன்னிடம் உள்ளுணர்வு இல்லாமை பற்றி சந்தேகப்படுவதாகும். தன்னைப் பற்றிக் கவலைப்பட்டு “நான்” என்பதில் அவநம்பிக்கை கொள்வது தான் ‘அதிகமான சந்தேகம்’ என்பதாகும். குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி என்பது என்னதான் தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி எடுத்த பயிற்சியைத் தொடர்வதும், வெற்றிகரமாக அதை முடிப்பதும் தான்!

இந்த மூன்றும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

buddha sandal

உபதேசங்களைக் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ ஹகுயின் மாஸ்டர் கூறிய உண்மைகளை சோகோ உணரவில்லை,மாறாக நேரடி அனுபவத்தின் மூலமாகவே அவர் உணர்ந்தார். டைடோகுஜி மடாலயத்தின் வாயிலில் காத்துக் கிடந்து கற்ற பாடங்களே சோகோவுக்கு உதவின. இளமையான இருபதுகளிலிருந்த ஒரு இளைஞனுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவன் உண்மையான ஜென் மாஸ்டராக பின்னால் ஆகி இருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்! சமுதாயம் எப்படித் தான் எவ்வளவு தான் மாறட்டுமே, ஹகுயின் மாஸ்டர் கூறிய மூன்று உண்மைகள் இன்றும் என்றும் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை. அவை காலத்தை வென்றவை.

இன்றோ நவீன யுகத்தில் மாணவர்களுக்கு கல்வி மீது நம்பிக்கையே போய் விட்டது. அன்றாட வாழ்க்கையின் மீதும் ஒரு பிடிப்பில்லை. தங்கள் தோல்விகளுக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்வதும் உதட்டைப் பிதுக்கி தனது பொறுப்பை உதறித் தள்ளுவதும் இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறை ஆகி விட்டது.பெரியவர்களுக்கோ இளைஞர்களை விமரிசிப்பதே வேலையாகி விட்டது. பெற்றோர்கள் ஒரு வழியில் போக ஆசிரியர்கள் இன்னொரு வழியில் போக எங்குமே ஒரே குழப்பம் தான்.ஒரு தோழமை உணர்வுடன் இருக்க வேண்டிய மனிதர்கள் ‘தான்’ என்ற குறுகிய வட்டத்திற்குள் அடங்கி விட்டனர்.அதனால் குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் போதே ஒரே குழப்பமாக இருக்கிறது. அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குத் தைரியத்தையும் தரவில்லை. தன்னை நம்பி வாழவும் சொல்லித் தரவில்லை.

சரி, இந்த ஸ்வர்ண லோகத்தை நீங்கள் ஏன் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சும்மா, ஒரு ஆர்வம் உந்த, அதனால் தான் என்றால் நீங்கள் சோகோ என்பவர் வாழும் இன்னொரு வாழ்க்கை முறையைப் பற்றிச் சிறிது அறிந்தவர்கள் மட்டுமே ஆவீர்கள். மாறாக ஆழ்ந்து இதன் உண்மையை ஆராயப் போனால் இதில் அர்த்தமுள்ள ஒரு புது வாழ்க்கை முறை அமைவதற்கான வாய்ப்பு இருப்பதை நீங்களும் உணரலாம். அன்றாட வாழ்க்கை மேம்படுவதற்கான வாய்ப்பு அது – திருப்தியுள்ள அர்த்தமுள்ள வாழ்வுக்கான வாய்ப்பு.

மரணமே எதிரில் வந்தாலும் கவலைப்படாத வாழ்க்கை! இது தான் முதலாவதும் ஒன்றே ஒன்று என்று சொல்லக் கூடியதுமான ஜென் தரும் இலட்சியம்.

சோகோ (1925-1995) புகழ் பெற்ற பெரிய ஜென் மாஸ்டர் ஆனதோடு ஏராளமான மேலை நாட்டினருக்கு ஜென் பயிற்சியை அளித்தார்.அவரது சுய சரிதம் 2002ஆம் ஆண்டில் Novice to Master:An Ongoing Lesson to the extent of My Own Stupidity என்ற தலைப்பில் வெளியானது.

ஜென் குருமார்களில் ஒரே ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிது பார்த்தோம். ஆனால் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோரை உருவாக்க வேண்டுமெனில் புத்த மதத்தின் அடிப்படை எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்!

sandalwood-buddha-

சின்ன உண்மை
போதிதர்மர் சீனா சென்றவுடன் சக்கரவர்த்தி வூ டி-யைச் சந்தித்தார். சக்கரவர்த்தி, “மிக உயரிய உண்மை எது?” என்று போதிதர்மரைக் கேட்டார். ”இருப்பது பெரும் சூன்யம் தான், உயரிய உண்மை என்று ஒன்றும் இல்லை” என்றார் போதி தர்மர்.

This part 11 of Swarnalokam (story of Zen Master) written by S Nagarajan -தொடரும்

‘Jantunam Narajanma Durlabatha:’

tree-o-life

Human Birth is difficult to obtain
by london swaminathan

Human birth is difficult to obtain is a famous saying from northern Himalayas to Southern Kanyakumari. It is in ancient Tamil and Sanskrit literature. The above quote is from Viveka Cudamani of Adi Shankara. Let us look at the full sloka:

“ For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmnahood; rarer still is the attachment to the path of Vedic religion; higher than is erudition in the scriptures; discrimination between the Self and not-Self, Realization, Identity with Brahman—these come next in order. Mukti/liberation is not to be attained except through the well earned merits of a hundred crores of births (1000 million births!)”.

In the next sloka he says three things are rare:Human birth, the longing for liberation and protective care of a greatman (mahapurusha).
Tamil literature explains the same thing in a beautiful way. One of the five Tamil epics is Jeevaka Chintamani which gives the story of Udayana and Vasavadatta. The author Thiruththakka devar says human birth is rare. It is like one yoke floating in southern sea coming next to another yoke floating in northern sea and a pole is inserted into it. Human birth is rarer than this.
evolution1

Avvai answers Lord Skanda’s question
Another famous episode in Tamil is about the grand old lady of Tamil literature Avvaiyar meeting Lord Skanda. Skanda asked her several thought provoking questions just to enjoy her beautiful Tamil. He asked her what is bigger, sweeter, crueler and rarer. When she answered his question about rarer things in the world she says human birth is rarer. Let us look at the beautiful Tamil poem in full:

“ Rare is human birth, Vadivel (Skanda/Subramanya)! Rarer is birth as a male with perfect limbs and with full use of all the senses. Rarer still is attainment of knowledge and wisdom. Rarer than this is the tendency to give and serve; and rarest of all is a life dedicated to spiritual enlightenment, for when one reaches the end the heavens will open to welcome that person—the perfect of all human beings”.

I consider this as an echo of Adi Shankara’s three slokas 2, 3 and 4 of Viveka Cudamani. It is not uncommon to see the same thoughts in all saints of India whether they speak Tamil or Sanskrit. Great men think alike. We see the same thought in all the hymns of Thevaram, Thiruvasagam and Divya Prabandham.
Seven types and Four Types of living beings

Even before Darwin gave the world the Theory of Evolution, even before the Linnaean classification of botanical species came in to practice, even before Aristotle gave his theory, Hindus divided the living beings in to four types and seven types in two different classifications:

evolutionary_tree_003
Type 1
1.Andajam: that which came from the eggs
2.Jarayutham: mammals
3.Udbhijam: that which comes out of seeds, roots
4.Swethajam: that which grows from sweat like liquids, i.e. germs etc

Type 2 Classification
1.Devas: supermen
2.Human beings
3.Animals
4.Birds
5.Reptiles
6.Fishes and other marine animals
7.Plant kingdom

evolution

Great Tamil saint Manikkavasagar gives a list of all the births one can get before realising God:

“Grass was I, shrub was I, worm, tree,
Full many a kind of beast, bird, snake,
Stone, man and demon. ’Midst Thy hosts I served.
The form of mighty Asuras, ascetics, Gods I bore.
Within this immobile and mobile forms of life,
In every species born, weary I have grown, great Lord!

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
–சிவ புராணம், திருவாசகம் (மாணிக்கவாசகர்)

tree of life colour
Avvaiyar’s poem in Tamil

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
****
Pictures are taken from various sites;thanks.
contact london swaminathan: swami_48@yahoo.com

மாநுடப் பிறவி அரிது! அரிது!!

Article written by london swaminathan

evolution

மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:

“பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)

வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்

இந்த உவமை நச்சினார்க்கினியர் உரையிலும் வருகிறது:
‘தென்கடலிட்டதோர் திருமணி வான்கழி வடகடனுகத்துளை வந்து பட்டாஅங்கு’ என்று சிந்தாமணியில் வேறு ஒரு இடத்திலும் ‘வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென்கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல’ எனவும் (இறை – சூ உ. உரை) ‘வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின், துளை வழி நேர்கழி கோத்தென’ ( திருச்சிற். 6 ) எனவும் பல இடங்களில் காண்கிறோம்.
இந்துக்கள் உயிர்வாழும் பிராணிகளை நான்கு வகையாக பிரித்தனர்.

1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை
2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை
3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை
4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை

evolutionary_tree_003

ஆறுமுக நாவலர் என்ற சைவப்பெரியார் இதற்கு கீழ்கண்ட விளக்கம் கொடுக்கிறார்:
“நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசரமென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.”

மேலை நாட்டினர் 400 ஆண்டுகளாகத்தான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையையும் லின்னேயஸின் தாவரஉலக்ப் பிரிவினையையும் பின்பற்றுகின்றனர். அதற்கு முன் அரிஸ்டாடில் என்ற கிரேக்க அறிஞர் சொன்னதைப் பின்பற்றினர். 2300 ஆண்டுகளுக்கு முன் அரிஸ்டாடில் கூறியதைவிட நம்மவர்கள் ந்ன்றாகப் பாகுபாடு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளாத சூப்பர்மேன் (தேவர்கள்) பற்றியும் நாம் கூரிவிட்டோம். இதை அறிவியல் உலகம் ஏற்க இன்னும் நீண்டகாலம் தேவை.
தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:

1.தேவர்
2.மனிதர்
3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன
4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன
5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன
6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன
7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன
இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர். இது இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றுக்கு நெருங்கிய எண் ஆகும்.

tree-o-life

“அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ
டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்
உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”

என்று சிவஞான சித்தியார் கூறுகிறார். அதாவது மாநுடப் பிறவி கிடைப்பது மிக மிக அரிது. 84 லட்சம் வகை உயிரினங்களில் உயர்ந்த மாநுடப் பிறவி கிடைப்பது கடலைக் கையால் நீந்திக் கடப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வவளவு அபூர்வம். சம்பந்தரும் தேவாரத்தில் 84000 நூறாயிரம் யோனிபேதங்கள் பற்றிப்பாடுகிறார்.

evolution1

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

tree of life colour

மாணிக்கவாசகர ஒரு மனிதனுக்குள்ள எல்லாப் பிறப்புகளையும் அழகாகப் பாடிவிட்டார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
–சிவ புராணம், திருவாசகம் (மாணிக்கவாசகர்)

Pictures are taken from various sites;thanks.
contact london swaminathan at swami@yahoo.com

‘My age is 3 years 5 months, 7 days, 16+hour’

baby ganapathy

A Hindu saint was on a pilgrimage. He was going from town to town. Whenever he entered a new town he used to ask the people, ‘who was the most honest person in the town?’ and go to his house for food.
He went to a town and his enquiries led him to a gentleman’s house. What he gathered was that the gentleman was the father of four children and a millionaire and never lied in his life. As soon as the saint entered the house the gentleman stood up in respect and fell at his feet. After all the formalities he requested the saint to have lunch with him.

But the saint wanted to verify the details he had collected about him before sitting for the lunch.
Saint asked him, ‘’How much wealth you have acquired?’’
He told him, “Rs 22,000 only”!
How many children do you have?
“I have only one son’’!

The saint became suspicious and asked him one more question to pass a judgement on him. So the saint asked the gentleman, ‘What is your age?’
He said to him, ‘My age is 3 years 5 months, 7 days, 16 and a half hour.
Now the saint became furious thinking that he was bluffing to him. He burst out in anger, “How dare you lie to me when you have one million rupees? I knew all about you”.

The gentleman quietly replied, ‘Oh, venerable saint. It is true I owe a million. Does it belong to me? I have spent only Rs 22,000 on charities. That is the only merit (punya) that is going to come with me after death’.
kuzanthai vazipaatu

The saint became very curious now. He has never heard anything from anyone else like this. He fired the second question. I heard that you had four children, but you told me you had only one.
The gentleman told him,’ Swamiji, I will show my son now? He called them one by one by name. First son said that he was too busy playing cards. Second son told him to shut his mouth. Third son told him to mind his own business without troubling him for trivial things. Fourth son came running towards him without wasting a single second and asked him what service he can offer. Now the saint realised he has got ‘’ONLY ONE SON’’.
“OK, now explain to me why did you say that you are only, “3 years 5 months, 7 days, 16 and a half hour” old?

‘Swamiji, I am actually sixty years old. But I have been spending one and a half hour in prayers every day since I was five years old. At this rate, I have “lived” only 3 years 5 months, 7 days, 16 and a half hour’ . The days I spent without thinking about god is not counted as living. I never take them into account. Even the great Tamil saint Appar says the days you spend without saying god’s name are equal to the days you were not born (meaning not worthy of living).

The gentleman summarised his philosophy in three sentences
1.Whatever I have spent for charity work was my money and the bank balance was not mine.( It would not help me in my next birth)
2. A son is a one who understands me and helps me in all my good deeds. Other three are not my ‘’sons’’.
3. The time I spent in prayers can only be counted worthy of living. That is why I told you I was 3 years 5 months, 7 days, 16 and a half hour’ old.

krishna with brown eyes

The saint was extremely happy to hear his illuminating explanation. He had lunch with him and blessed him.

(This story was told by Sri Kripananda Variar who was famous for his religious discourses in Tamil. He was a great scholar in Saivaite philosophy. His talks are available in Tamil—translated by london swaminathan).

Contact swami_48@yahoo. com
for 650 articles in Tamil and English.
Pictures are from Facebook;thanks

என் வயது 3 வருஷம் 5 மாதம் 7 நாள் 16 அரை மணி!

baby ganapathy

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன கதை:

முற்றும் துறந்த முனிவர் ஒருவர் திருத்தல யாத்திரை புரிந்துவந்தார். பற்றற்ற பரம ஞானியாகிய அவர் இன்றிருந்த ஊர் நாளை இரார். ஒருவேளையே உப்பில்லாத உணவை உண்பார். அவர் பொய்யை அதிமாக வெறுப்பவர்.

“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரில் தலை”

என்ற திருக்குறளை இடையறாது கூறுவார்.அவருடைய மறந்தும் பொய் புகலாது. பொய் புகல்வார் மனையில் புசியார்.

ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றார். “இந்த ஊரில் உண்மையாளர் யாவர்?” என்று உசாவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் செல்வமும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடைய வீட்டை முனிவர் அணுகினார்.

ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து ,”பெருமானே உணவு செய்ய எழுந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டு முகமலர்ந்து, உண்மையாளர்தானா என்று சோதித்த பின்னரே உணவு செய்ய வேண்டும் என்று எண்ணிணார்.

“ ஐயா, உமக்குச் செல்வம் எவ்வளவு உண்டு?”
“சுவாமி! இருபத்து இரண்டாயிரம் ரூபாய் உண்டு”
குழந்தைகள் எத்தனை பேர்?”
“சுவாமி! ஒரே புதல்வன் தான்”
“உமக்கு வயது என்ன?”
“சுவாமி! எனக்கு வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணி”

முனிவருக்கு பெரும் சினம் மூண்டது.
“ஐயா! நீர் சுத்தப் புளுகனாக இருகிறீர். நீர் பேசுவதெல்லாம் பெரும் புரட்டு. உம் வீட்டு அன்னம் என் தவத்தை அழிக்கும். நான் பொய்யர் வீட்டில் புசியேன்” என்று கூறிச் சீறி எழுந்தார்.

முதலியார் அவர் காலில் விழுந்து, “அருள் நிறைந்த அண்ணலே! அடியேன் ஒருபோதும் பொய் புகலேன். சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்துபார்த்து உண்மை உணர்வீராக” என்று கூறித் தனது வரவு செலவு புத்தகத்தைக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“அடேய்! இதோ உனக்குச் சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று இருக்கிறதே. நீ 22,000 தான் என்று பொய் சொன்னாயே”, என்று கடிந்தார்ர் முனிவர்.

“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது. ஆனால் பெட்டியில் உள்ள பணம் எனக்குச் சொந்தமாகுமா? இதோ பாருங்கள், தருமக் கணக்கில் இதுகாறும் 22,000 ரூபாய்தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது. இப்போது நான் மாண்டால் பெட்டியில் உள்ள பணம் என்னுடன் வராதே. உடன் வருவது தருமம் ஒன்றுதானே” என்று கூறீனார்.
முனிவர் இதைக் கேட்டு வியப்புற்றார். “ ஆமாம், உனக்கு நான்கு புதல்வர்கள் உன்து என்று கேள்விப்பட்டேனே?” என்றார்.
kuzanthai vazipaatu

சுவாமி! எனக்குப் பிறந்த பிள்ளைகள் நால்வர்’ ஆனால் என் பிள்ளை ஒருவன் தான்.
“அப்பா! நீ சொல்வதன் கருத்து எனக்கு விளங்கவில்லையே?
“சுவாமி! விளங்கவைக்கின்றேன்”.

“மகனே! நடராஜா”, என்று அழைத்தார் முதலியார். சீட்டு விளையாடுகிறேன், வர முடியாது என்று பதில் வந்தது.
“மகனே! வேலுச்சாமி” என்று அழைத்தார் முதலியார். “ஏன் இப்படிக் கதறுகின்றாய்? வாயை மூடிக்கொண்டிரு” என்று பதில் வந்தது.

“மகனே! சிவசாமி”, என்று அழைத்தார் முதலியார். உனக்குப் புத்தி இருக்கிறதா? உன்னோடு பேச என்னால் ஆகாது. பூமிக்குச் சுமையாக ஏன் இன்னும் இருக்கிறாய்?” என்று பதில் வந்தது.
மகனே கந்தசாமி! என்று அழைத்தவுடன் கந்தசாமி ஓடிவந்து பிதாவையும் முனிவரையும் தொழுது, சுவாமி பால் கொண்டுவரட்டுமா, பழம் கொண்டுவரட்டுமா? என்று கேட்டு உபசரித்து, விசிறி எடுத்து வீசிக்கொண்டு பணிவுடன் நின்றான்.

முதலியார், “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பிற்பட கடன்காரர்கள், இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்றார்.
அப்பா! உன் கருத்து உவகையைத் தருகின்றது. வயது விஷயத்தில் நீ கூறியதன் உட்பொருள் யாது?
“ சுவாமி! அடியேன் நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம்தான் வழிபாடு செய்கின்றேன். மிகுதி நேரம் எல்லாம் வயிற்றுக்காகவும் குடும்பத்து க்காகவும் உழைக்கின்றேன். பேசாத நாள் எல்லாம், பிறவா நாள்தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்தவகையாகப் பார்த்தால், முப்பதாயிரத்து நூற்று பன்னிரண்டரை மணி நேரம் ஆகின்றது. ஆகவே அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், எனக்குச் சொந்த வயது திட்டமாக மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணிதான்”

1.தருமம் செய்த பணம் எனக்குச் சொந்தம்
2.என் கருத்தை அநுசரிக்கின்றவனே எனக்குச் சொந்தமகன்
3.பூசை செய்த நேரமே எனக்குச் சொந்தம்”, என்றார் முதலியார்.
இதனைக் கேட்ட முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் வீட்டில் உணவு உண்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.

krishna with brown eyes

(அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்,”வாரியார் வழங்கும் சிந்தனைச் செல்வம்”- திருமுருக கிருபானந்த வாரியார்)

Pictures are taken from Facebook;thanks.
contact london swaminathan for a list of 650+ articles at swami_48@yahoo.com

மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!

anuman 2 facebook

ராமாயண வழிகாட்டி அத்தியாயம் – 13
ச.நாகராஜன்

இலங்கையில் சீதையைத் தேடி அலைந்த அனுமன் பானபூமியில் பல பெண்கள் அலங்கோலமாக நிலை குலைந்து படுத்துக் கிடப்பதைக் காண்கிறான்.

“உறங்கிக்கொண்டிருக்கும் சத்ரு மன்னனின் மனைவிகள் சமூகத்தினை எனது இந்தக் கண்களால் பார்த்ததும் கொடிய பாவமாக ஆகுமே” என்று சிந்தித்த அனுமன் அதற்கான காரணத்தையும் அலசி ஆராய்ந்து தன் மேல் தவறு இல்லை என்பதை நிச்சயிக்கிறான். ஏனெனில் காமக் கண்களுடன் அவர்களைத் தேடி வந்து அவன் பார்க்கவில்லை. சீதையின் மீதுள்ள பக்தியினால், அன்னையைத் தேட வேண்டிய அவசியத்தால் அவர்களைப் பார்க்க நேரிட்டது.

சுந்தரகாண்டம் பதினோராம் ஸர்க்கம் 36,37,38ஆம் ஸ்லோகங்களைப் பாப்போம்:

பரதாரவரோதஸ்ய ப்ரஸூப்தஸ்ய நிரீக்ஷணம் I
இதம் கலு மமாத்யர்த்தம் தர்மலோபம் கரிஷ்யதி II

ந ஹி மே பரதாராணாம் த்ருஷ்டி விஷயவர்த்திநி:

அயம் சாத்ர மயா த்ருஷ்ட: பரதார பரிக்ரஹ:

(அத்யர்த்தம் தர்மலோபம் – கொடிய பாவம்; விஷயவர்த்திநி: ந- உலகியல் நோக்கப்படியானது இல்லை; பரதார பரிக்ரஹ: ச- உத்க்ருஷ்டரின் பத்னியிடத்தில் பக்தியால் உண்டானதே)

தனிமையில் தாமாய் ஆலோசனை செய்யும் (ஏகாந்த சிந்தஸ்ய) பெருந்தன்மையுள்ள அவருக்கு (மனஸ்விந: தஸ்ய) கார்யத்தின் முடிவை ஸுசிப்பிக்கும் (கார்ய நிஸ்சய தர்சிநீ) நிச்சயமான இதர எண்ணம் (நிஸ்சிதா அன்ய சிந்தா) புதிதாய் புலப்பட்டது (புன ப்ராதுரபூத்)

காமம் த்ருஷ்டா மயா ஸர்வா விஸ்வஸ்தா ராவண ஸ்த்ரிய: I
ந ஹி மே மநஸ; கிஞ்சித் வைக்ருத்ய முபபத்யதே II

அபாயத்திற்கிடமில்லை என்கிற நம்பிக்கையுடன் இருக்கும் ராவணனின் பத்னிகள் அனைவரும் என்னால் பார்க்கப்பட்டார்கள்;
அப்படியிருந்தும் எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.

“மே மனஸ: வைக்ருத்யம் கிஞ்சித் உபபத்யதே” (எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.) என்று அனுமன் சிந்திப்பதிலிருந்தே அவன் எப்படிப்பட்ட உத்தமன் என்பதும் காமத்தைக் கடந்தவன் என்பதும் தெரிகிறது.

அனுமன் அடுத்தாற் போல எண்ணுவதே உலகின் மிகப் பெரும் உண்மையை அறிவிக்கும் ஸ்லோகமாக அமைகிறது;

மநோ ஹி ஹேது: ஸர்வேஷா மிந்திரியாணாம் ப்ரவர்த்ததே I
ஸுபாஸுபா ஸ்வவஸ்தாஸு தச் ச மே ஸுவ்யவஸ்த்திதம் II
(சுந்தரகாண்டம் ஸ்லோகம் 42 11ஆம் ஸர்க்கம்)

ஸுபாஸுபாசு – நல்லவை தீயவை ஆகிய இரு வகையான
அவஸ்தாஸு – நிலைகளில்
ஸர்வேஷாம் – எல்லா
இந்திரியாணாம் – புலன்களின்
ப்ரவர்த்ததே –தூண்டுதலில்
மன: ஹி – மனம் தான்
ஹேது – ஹேது
தத் ச –அதுவோ
மே – எனக்கு
ஸுவ்யவஸ்த்திதம் – சிதறாமல் நன்கு ஸ்திரமாக இருக்கிறது.

anuman val

அந்தப்புரத்தில் ரூப லாவண்யமுள்ள அழகிய பெண்களைப் பார்த்த போதிலும் கூட அனுமனின் மனம் சிதறவில்லை; ஸ்திரமாக இருக்கிறது. புலன்களின் தூண்டுதலைச் செய்வது மனமே! அது நன்கு உறுதியாக இருந்தால் அவனே பேராண்மை படைத்தவன்.
வள்ளுவன் திருக்குறளில் ‘பிறனில் விழையாமை’ என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறான். 15ஆம் அதிகாரமாக அமையும் இதில் எட்டாவது குறள் இது:

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

பிறன் மனைவையை விரும்பிக் கண் எடுத்தும் பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல; பொருந்திய ஒழுக்கமும் கூட என்பதே இதன் பொருள்.

வள்ளுவனின் உரைகல்லில் அனுமன் சான்றோனாகவும், அறவோனாகவும்,பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான்.
மனமே அனைத்திற்கும் காரணம் என்பதை உபநிடதமும் (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்– அம்ருத பிந்து உபநிடதம்) அறிவியலும் வலியுறுத்துகின்றன.

ஆக செம்மையான மனத்தைக் கொண்ட அனுமனைத் துதித்தால் நமக்கும் மனம் செம்மையாகும். அனுமனின் அற்புதமான மனத்தை விவரிக்கும் ஸ்லோகம் சுந்தர காண்டத்தில் உள்ள அருமையான ஸ்லோகங்களுள் ஒன்று!
************
Contact london swaminathan at swami_48@yahoo.com
Pictures are taken from facebook.

Yama’s Brother! (In Tamil and English)

Watch-Counts-Down-Remaining-Time-Til

Death Watch tells you your last date on earth!

Sage Vyasa said in Yaksha Prasna (of Maha Bharata) that the greatest wonder in the world is that everyone of us think that we are going to live for ever even after seeing people dying every day! Great Tamil poet said in his Tirukkural (336) “ the one, who was here yesterday, is no more today and that is a matter of great wonderment, in this world”.

What? It is called Death watch. It will tell you when you are going to die or how long you are going to live in this world.

Who? Swedish Inventor Fredrick Colting created this.
How? The cost of this watch is £36. But he needs £15.500 for commercial production next year.Your medical history and your habits like smoking, drinking, exercising etc. are fed into it through a questionnaire.
Where? In Sweden

Why? To look at life in a new way.
When? If money for investment is available commercial production will start in April 2014.
Can we call this watch Yama’s brother?

tikker-prototype1

மரணம் அறிவிக்கும் கடிகாரம்!!!

என்ன? நீங்கள் இறக்கப்போகும் நாளைச் சொல்லும் கடிகாரம்.
எங்கே? சுவீடன் நாட்டில் ருவாக்கப்பட்டுள்ளது.
யார்? சுவீடன் நாட்டு பிரடெரிக் கோல்டிங் இதைக் கண்டுபிடித்தார்.
எப்படி? ஒருவருடைய எடை, உடற் பயிற்சி, குடிபோதை, புகைபிடித்தல் போன்ற விஷயங்களை ஒரு கேள்வித்தாள் மூலம் கடிகாரத்துக்குள் போட்டுவிட்டால் நமது நாலைக் கணக்கிட்டுவிடும். எம தர்மனின் தம்பி!! சித்ரகுப்தனுக்கு பி.ஏ!!!

ஏன்? வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கவே இந்த மரண கடிகாரம். அட! நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும், முனிவர்களும் இப்படிப் பார்ர்க்கத்தானே பல்லாயிரம் பாடல்களைப் பாடிவைத்தனர்.
எப்பொழுது?கடிகாரத்தின் விலை 3200 ரூபாய்தான். ஆனால் நிறைய முதலீடு கிடைத்தால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் உற்பத்தி துவங்கி விடும்!!!

மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரச்னம் (பேயின் கேள்விகள்) என்ற பகுதியில் உலகிலேயே மிக அதிசயமான விஷயம் என்ன என்று பேய் கேட்டபோது தர்மன் சொன்ன பதில்: நாள்தோறும் மக்கள் இறந்து போவதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவரும் தான் தொடர்ந்து வாழப்போவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே இதுதான் உலகின் மாபெரும் அதிசயம் என்று கூறுகிறான். இதையே திருவள்ளுவரும் 336 ஆவது குறளில் “நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு” என்று கூறுகிறார்.

தகவல் தொகுப்பு: லண்டன் சுவாமிநாதன்
ஆதாரம்: டெய்லி மெயில், லண்டன்
contact swami_48@yahoo.com

Rainbow Cauliflowers ( In Tamil and English)

color cauli.jpg5

 

 

Where? 15,000 acres in Peterborough, Great Britain

What? Orange, Green, Purple cauliflowers

Who? A 48 year old farmer Andrew Burgess produced multi colour cauliflowers

How? By cross pollinating between ancient varieties. He used organic farming.

Why? To make the vegetables attractive and appealing; moreover they contain additional nutrients.

Orange cauliflower contains carotene (Vitamin A) and purple contains anti oxidants.

Source: Daily Mail, London compiled by London
swaminathan

 

 

color cauli.jpg3

பல வண்ண காலிபிளவர்

எங்கே? பிரிட்டனில் இருக்கும் பீட்டர்பரோவில்15,000 ஏக்கரில்.

என்ன? பச்சை, ஆரஞ்சு, கத்தரிக்காய் நிற காலிபிளவர்கள். அவைகளில் வைட்டமின் ஏ (கரோட்டின்),  உடலுக்கு வலிமை சேர்க்கும் ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் இயற்கையாகக் கிடைக்கின்றன.

யார்? 48 வயதான ஆண்ட்ரூ பர்கஸ் உருவாக்கினார்.

எப்படி? காலி பிளவரின் பழையவகைகளை அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் சேர்த்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பல வண்ண,காய்கறிகள் உருவாக்கப்பட்டன.

ஏன்? வழக்கமான காலிபிளவர் கறிகள் குழந்தைகளுக்கு ‘போர்’ அடிக்கின்றன. புதுவகை நிறம் ஊட்டினால் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவர் அன்றோ!!!

ஆதா ரம் டெய்லி மெயில்; தகவல் தொகுப்பு லண்டன் சாமிநாதன்

 

color cauli.jpg2

color cauli