துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

banu karnan

துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1224; தேதி: 10 ஆகஸ்ட் 2014.

சூதாட்டம் பற்றி இரண்டு சுவையான கதைகள் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் உள்ளன.

துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் ஒரு நாள் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். பாதி ஆட்டத்தில் திடீரென்று பானுமதி எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் பயந்து ஓடப் பார்க்கிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சி செய்தான். கைதவறி பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையில் கர்ணன் கை சிக்கவே மேகலையில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. பானுமதி திடீரென எழுந்ததற்குக் காரணம் அவளது கணவன் துரியோதனன் உள்ளே நுழைந்ததாகும். துரியோதணன் கண் முன்னால், முத்து மேகலை சிதறவே இருவரும் தலை குனிந்து நின்றனர்.

அடுத்தது என்ன நிகழுமோ என்று பானுமதியும் கர்ணனும் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், துரியோதனன் “ எடுக்கவோ கோக்கவோ என்றான். இந்த முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா? என்று அன்போடு வினவுகிறான்.

banu karnan 2

கர்ணனின் நட்பைக் கடவுளுடன் கொண்ட நட்பாகக் கருதுபவன் துரியோதனன். கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது அவனுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. கர்ணனே வியப்படையும் அளவுக்கு அவன் நடந்து கொண்டான. அதனால் அல்லவோ, அந்தப்புரத்தில் தன் மனைவியுடன் மாற்றான் ஒருவனை சொக்கட்டான் ஆட அனுமதித்தான். கர்ணனோ துரியோதணனுக்கும் மேலே ஒரு படி சென்று நட்புக்கு இலக்கணம் வகுத்தவன்.

கர்ணன் தனது மூத்த மகன் என்று கூறி குந்தி சொன்ன போதும் கட்சி மாற மறுத்தான் கர்ணன். அப்போது அவன் கூறிய சம்பவம் தான் மேலே கூறப்பட்ட முத்து மேகலை சம்பவம். இதைச் சொல்லி அம்மா! இப்படிப் பட்ட துரியோதணனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே என் வாழ்வின் லட்சியம் என்று சொல்லிவிடுகிறான்.

வில்லிபாரதத்தில் வரும் இந்தக் காட்சியைப் படம்பிடித்துக் காட்டும் பாடல் இதோ:–

sokkattan

மடந்தை பொன் திருமேகலை மணிஉகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடந்தனில் புரிந்தே நானயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவோ என்றான்;
திடம்படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனை சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்குகு இனிப் புகழும், கருமமும் தர்மமும்.
—வில்லி பாரதம்

புறநானூற்றில் பிராமணன் – க்ஷத்ரியன் மோதல்

புறநானூற்றில் பிராமணப் புலவனும் – க்ஷத்ரியனனான சோழ மன்னனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். ஒரு காய் உருண்டோடியதால் சோழ மன்னன் கோபம் கொண்டான். உடனே சோழ மன்னன், சொக்கட்டான் காய்களைப் பிராமணப் புலவன் மீது வீசி எறிந்தான். உடனே புலவர் உன்னுடைய குலத்தில் “பார்ப்பனர் நோவன செய்யலர்” என்று நயமாகக் கூறினார். உடனே அவன் வெட்கித் தலை குனிந்தான்.

புறநானூற்றுப் பாடல் 43 இந்த சம்பவத்தை விளக்குகிறது. சோழன் நலங்கிள்ளி யின் தம்பி மாவளத்தானும் பார்ப்பனப் புலவர் தாமப் பல் கண்ணனாரும் வட்டு விளயாடுகையில் இது நடந்தது.
((வட்டு ஆடுதல் பற்றி அதிக தகல் இல்லை. இதை ஒரு வகை சொக்காட்டான் ஆட்டம் என்றே நான் கருதுகிறேன்)).
mahabharata-game-of-dice

புலவர் தாமப்பல் கண்ணனார் கூறுகிறார்:
கதிரவனைச் சுற்றி வரும் முனிவர்களும் வியப்படையும் வண்ணம் புறாவுக்காக உயிர்தர முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த தேர்வண் கிள்ளியின் தம்பியே! உன் பிறப்பில் ஐயம் கொள்கிறேன். ஆத்திமாலை சூடிய சோழ மன்னன் எவரும் பிராமணர் வெறுக்கும் செயலைச் செய்யத் துணியார். நீ எப்படிச் செய்தாய்? என்று நான் வெகுண்டேன். இப்படி நான் சொன்னவுடனே உடனே என் மீது கோபிக்காமல் வெட்கப்பட்டாய். சோழர்குடியின் பெருமையை நிலை நாட்டிவிட்டாய். இப்போது நானே தவ்று செய்தேன் என்று தோன்றுகிறது. காவிரி ஆற்றின் மணலை விட நீ நீண்ட காலம் வாழ்வாயாக என்று தாமப்பல் கண்ணனார் வாழ்த்துகிறார்:

ஆர்புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் (புறம் 43)

மேற்கண்ட இரண்டு கதைகளும் விளக்கும் கருத்துகள் அற்புதமானவை.
–சுபம்–

தமிழ் என்னும் விந்தை!

love-poems-do-they-still-exist-14

சதுரங்க பந்தம் -1
ச.நாகராஜன்
Post No 1223; Dated 9th August 2014.

சதுரங்க துரக கதி பந்தம்
உலகில் உள்ள சில மொழிகளில் மட்டுமே சித்திர கவிகளை அமைக்க முடியும். தமிழில் அற்புதமான சித்திர கவிகள் ஏராளம் உண்டு. இவற்றில் ஒன்று சதுரங்க பந்தம். இந்த சதுரங்க பந்தங்களிலும் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று சதுரங்க துரக கதி பந்தம். சதுரங்க விளையாட்டில் ஒரு குதிரை எப்படித் தாவி தாவி கட்டம் விட்டுக் கட்டம் மாறுமோ அது போல அந்தந்த கட்டங்களில் சொற்கள் வருமாறு அமைக்க வேண்டும். அதே சமயம் கவிதையின் இலக்கணமும் மீறக் கூடாது; நல்ல பொருளும் அமைந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான விதிகளுக்கு உட்பட்டு கவிதை இயற்றுவது மிகவும் கடினம். பெரும் தமிழ்ப் புலவரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இப்படிப்பட்ட பந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர் இவர்.
சித்திர கவி விளக்கம் என்ற அரிய தமிழ் நூலைப் படைத்து அதில் 22 வகை சித்திர கவிகளை விளக்கியுள்ளார். அதில் இந்த பந்தமும் ஒன்று.

சதுரங்க துரக கதி பந்தப் பாடல் இது தான்:-

தேரினெந் நெஞ்ச நீ திரித லென்கொலோ

நாரொடும் வியன்றமி ணயந்து தூவிய

காரெனும் பரிதிமால் கணங்கொள் பூவரா

ரீரடி யேழைசூட் டியையப் போற்றுவாம்

இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்களைக் குதிரை பாயும் போக்கில் அமைக்க ஆரம்பித்தால் அது கீழ்க்கண்ட விதமாக சதுரங்கத்தின் 64 கட்டங்களில் அமையும்.

bandham chathur

சதுரங்க விளையாட்டில் குதிரை எப்படிப் பாயும் என்பதை அறியாதவர்கள் கீழ்க்கண்ட கட்டங்களில் வரிசையாகப் பாடலின் எழுத்துக்கள் அமைவதைக் கண்டு மகிழலாம்:-

1, 11, 28, 34, 17, 2, 19, 4
21, 15, 5, 20, 10, 25, 35, 29
39, 56, 62, 52, 42, 57, 51, 41
58, 43, 49, 59, 53, 38, 32, 47,
64, 54, 37, 31, 48, 63, 46, 61
44, 50, 60, 45, 55, 40, 30, 36
26, 9, 3, 13, 23, 8, 14, 24
7, 22, 16, 6, 12, 27, 33, 18

மிகவும் கஷ்டமான இந்தப் பாடல் அமைப்பில் பரிதிமால் கலைஞர் இன்னும் இரண்டு அரிய விஷயங்களை அமைத்துள்ளார். கட்டங்களின் வலது கோடியிலிருந்து குறுக்காக இடது கோடி வரை உள்ள எட்டு கட்டங்களில் (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது) தனது பெயரான சூரிய நாராயணன் என்பதை அமைத்துள்ளார். அத்தோடு பாடலில் தனது தமிழாக்கப் பெயரான ‘பரிதிமால்’ என்பதை மூன்றாம் வரியில் அமைத்துள்ளார்!
பாடலின் பொருளை அவரே தனது சித்திர கவி விளக்கம் என்ற நூலில் கொடுத்துள்ளார். 1939ஆம் ஆண்டு இந்த நூல் வெளியானது.

BasicShapepoetry

அவர் விளக்கும் பொருளைப் பார்ப்போம்:-
தேரின் – ஆராயுமிடத்து
எம் நெஞ்சம் – எம் நெஞ்சமே!
நீ திரிதல் என் கொலோ – நீ கண்ட இடங்கள்தோறும் சென்று திரிதல் யாது கருதியோ?
நாரொடும் – அன்போடு
வியன் தமிழ் நயந்து தூவிய – (மாணாக்கர்க்கு) பெருமை வாய்ந்த தமிழினை விரும்பிச் சொரியும் (போதிக்கும்)
கார் எனும் பரிதி மால் – மேகத்தினை ஒத்த சூரியநாராயணப் பெயர் கொண்ட ஆசிரியனது
கணம் கொள் பூவர் ஆர் இரண்டு அடி – கூட்டமாகப் பொருந்திய உபய பாதங்களும்
ஏழை சூட்டு இயைய போற்றுவாம் – எளியேமாகிய எமது உச்சியிற் பொருந்துமாறு அவற்றை வணங்குவோம்

“பலவேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியிற் கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலில், நெஞ்சமே! நீ பல விஷயங்களிலும் போய்ப் பயனின்றித் திரிவதை விட்டு எம்மோடு கூட வணங்க வருவாய்” என்று நெஞ்சை விளித்துக் கூறியதாம் இச்செய்யுள்.
என் கொல் ஓ! – கொல், ஓ இரண்டும் அசை. தமிழ் நயந்து என்பது தமிணயந்து என்று ஆனது. வீரசோழியம் சந்திப்படலத்து “ஐம்மூன்றதாம்” என்ற கட்டளைக் கலித்துறையில், “மெய்ம்மாண்ப தாநவ்வரின் முன்னழிந்து பினிக்கணவ்வாம்” என்ற விதியால் அமைந்தது. அன்றி மரூஉ மொழியுமாம். பூவர் – மொழி இறுதிப் போலி

இப்படி விளக்கவுரையையும் அவரே தந்துள்ளார்.
அத்தோடு வல்லி பரிணய நாடகத்தில் இது ஆசிரிய வணக்கச் செய்யுள் என்ற குறிப்பையும் தருகிறார்.

அற்புதமான கவிதையைப் படைத்த தமிழ்ப் புலவரைப் போற்றுவோம்; சதுரங்க பந்தம் கண்டு வியப்போம்!

***********

Quotations on Gambling: From Rig Veda to Tirukkural

dice

Compiled by London Swaminathan
Post No.1224; Dated 9th August 2014.

Do not Gamble:
“Do not play with dice; cultivate your corn fields,
Delight in the gain, thinking highly of it.
There are your cattle, gambler, there is your wife”
So has the noble Savitri told me
———–Rig Veda 10-34-13, Rishi Kavasha, son of Elusha.

BHAGAVAD GITA
I am gambling among the deceiting –Bhagavad Gita 10-36
Dyuutam chalayataam asmi (Lord Krishna in BG 10-36)

dice2

TIRUKKURAL by Tiruvalluvar
Gambling ruins a man’s fortune, and corrupts the innate honesty,
It also hardens the heart and brings on endless misery (Tirukkural 938)

Do not take to gambling even if you can win. What can the fish gain by swallowing the baited hook? (Tirukkural 931)

Wealth, including food and dress, as well as the glory, resulting from learning,
Will desert the man, who seeks gain only from gambling? (Tirukkural 939)

Is there a future for the gambler to thrive, when he loses hundreds,
To gain only one in the bargain? (Tirukkural 932)

chaturan

SANSKRIT SAYINGS
Gambling, to a man, is a kingdom without a throne —-Mrcchakatika
Dyuutam naanma purusasya asimhasanam raajyam

Gambling is the root of all evils Bharata Manjari 2-11-340
Dyuutam sarva apadaam mulam

What will not a defeated fraudulent gambler hesitate to do? –Katha Sarit Sagara
Dyuutanaatasya kim naama kitavasya hi duskaram

Gambling is the destruction of wealth— Bharat Manjari 2-11-308
Dyuutamunmuulanam sriyah

Gamblers do not neglect a chance of profit, even to their very end Rajatarangini 3-393
Na paryante pyupeksante kitavaah svaarthasaadhanam

Don’t ridicule the defeated gambler Satopadesa prabandha
nopahasennirjitam dyuute

Players of dice become the abode of craftiness Brhat Katha Manjari
Bhavanti dyuutakaaraa padam dhiyah

By all means a gambler is despicable Vikrama Carita 3-98
Haa dyuutakaaram satadaah dhigastu

Source: Rig Veda, Bhagavad Gita, Tirukkural, Suktisudha by Chinmaya International Foundation

Who coined the word Motherland?

india on globe map

Research paper written by London Swaminathan
Post No. 1222; Dated 8th August 2014.

“The land is my mother and I am the son of earth” – Atharva Veda

The concept of motherland can’t be a Semitic term. For the Christians, Jews and Moslems, God is a ‘HE’. For the Hindus, God is He or She or neuter. From the Vedic days god in Hinduism is Eswaran/Eswari, Bhava/Bhavani, Shiva/shivani or Ardhanaree (half woman and half man) or Brahman (neuter).

Anything of great quality or virtue such as mercy (karuna), peace(shanty) wealth (Sri), treasure (Nidhi), Kshama (patience) is also feminine in Sanskrit. All Indian rivers are feminine because they nurture us like mothers. Bhumi is also worshipped in feminine form as Bhumadevi. Later Greeks called her Gaia (Greek Goddess of mother earth). Atharva Veda and Ramayana are older than the Greek myth.

bharatma

When Lakshmana was wonderstruck with the enormous wealth of the Golden Lanka, Rama said to him:

Api swarnamayi lanka na me laksmana rocate
Janani janmabhumis ca svargad api gariyasi (Valmiki Ramayana)

“O my brother Lakshmana! Even if Lanka is made of gold, I do not like it because Mother and Motherland are far more superior to heaven”.

Rama used the word Janmabhumi (Birth place) and held it on par with Janani (mother) meaning mother and motherland are superior. But the Athrva Veda which existed well before Rama makes it clear Earth is mother and we are all her children:-

Mother Earth - EarthFirstNewswire -

O Prithivī, thy centre and thy navel, all forces that have issued
from thy body
Set us amid those forces; breathe upon us. I am the son of
Earth, Earth is my Mother. Parjanya is my Sire; may he
promote me.
—–(Atharva Veda Book 12, Hymn 1, Prithivi Sukta)

A Hindu worships Bhumi (earth) before stepping on her every morning. While s/he gets up from the bed, s/he begs for her pardon by reciting the following verse:

Samudra vasane Devi Parvatha Sthana mandale
Vishnu Patni Nmasthubyam Padasparsam kshmasvame

“O Mother Earth who has the oceans as clothes and mountains and forests on her body, who is the wife of Vishnu, I bow to you. Please forgive me for touching you with my feet”.
Here in this ‘Prathasmarana’ (Morning Prayer) verse, Hindus make it clear that Bhuma Devi is the wife of Vishnu. So the concept of earth as mother as a benign woman emerged in India well before other ancient cultures.
mother_earth

Contact swami_48@yahoo.com

ஓஷோ கூறிய பக்கா திருடன் கதை!

bigstock-Burglar-8487742

ச.நாகராஜன்
Post No 1221; Dated 8th August 2014

ஜென் கதைகளில் ஒன்று!

வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது? ஜென் குருமார்கள் இதற்கு கதை மூலம் பதில் கூறியுள்ளனர். ஜென் பிரிவில் வழங்கி வரும் இதை ஓஷோ கூறியுள்ளார். கதை இது தான்:

ஜப்பானில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். அவன் திருடுவதில் நிபுணன் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை.நாடு முழுவதும் அவன் பெயர் பிரசித்தமாகி விட்டது. ராஜாவின் பொக்கிஷத்திலிருந்தே அவன் திருடி விட்டான். தான் வந்ததற்கு அடையாளத்தையும் அவன் விட்டுச் செல்வதால் அவனது திருட்டுகள் பிரபலமாயின. மக்கள் அவனை வியந்து பாராட்டி நேசிக்கவே தொடங்கி விட்டனர் எந்த திருட்டு நடந்தாலும் என் வீட்டிற்கு பக்காத் திருடன் நேற்று வந்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் நிலையை அவன் உருவாக்கி விட்டான்.

ஆனால் காலம் சென்றது. அவனுக்கும் வயதாகி விட்டது. அவனது மகன் ஒரு நாள் அவனிடம்,’ தந்தையே! உங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது. உங்கள் கலையை எனக்குச் சற்று கற்பியுங்களேன்” என்று வேண்டிக் கொண்டான்.

பக்காத் திருடன் தன் மகனை அன்புடன் பார்த்து,” சரி, மகனே, இன்று இரவு என்னுடன் வா! ஏனென்றால் இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானே வர வேண்டியது! நீயே என்னைப் பார்த்தால் கலையை பிடித்துக் கொள்ளலாம். கற்பிக்க முடியாத ஒன்று இது.” என்றான்.

மகனுக்கோ ஒரே பயம்! அவனது முதல் திருட்டு இது. ஒரு வீட்டின் சுவரில் கன்னம் வைத்து அதை உடைத்தான் பக்கா திருடன். நேர்த்தியாக அவன் கைகள் வேலையைத் திறம்படச் செய்தன.அவனிட்த்தில் பயம் இல்லை; பரபரப்பும் இல்லை. நிதானமாக வேலையை முடித்தான்.ஏதோ, தன் வீட்டின் சுவரை உடைப்பது போல உடைத்து உள்ளே நுழைந்தான். மகனுக்கோ உடல் எங்கும் நடுக்கம். கால்கள் தள்ளாடின. யாராவது பிடித்து விட்டால் என்ன செய்வது?

Jewelry-Thief-Walkthrough

கும்மிருட்டில் சர்வ சாதாரணமாக பக்கா திருடன் வீட்டில் நுழைய மகனும் பின் தொடர்ந்தான். வீட்டின் உள்ளே நகைகள் இருக்கும் அறைக்குள் சென்று ஆள் நுழையக் கூடிய அளவில் இருந்த பெரிய பீரோவைத் திறந்தான். மகனை நோக்கி,” விலை மதிப்புள்ள எதை வேண்டுமானாலும் எடு” என்று கூறினான். பீரோவினுள் மகன் நுழைந்தான். உடனே பக்கா திருடன் பீரோவின் கதவுகளை நன்கு மூடி விட்டு, “திருடன் திருடன், வாருங்கள், எல்லோரும் வாருங்கள்’ என்று கத்தி விட்டு தான் கன்னமிட்ட துவாரத்தின் வழியாகத் தப்பிச் சென்று விட்டான்!

மகனுக்கு வேர்த்து விறுவிறுத்தது. தனது தந்தை இப்படிச் செய்வார் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை இப்படி மாட்டி விட்டு விட்டாரே, மஹா பாவி! அப்பனா இவன்! பீரோ கதவை வேறு பூட்டி விட்டான்! பிடிபட்டால் மரணம் தான் பரிசு. அடித்தே கொன்று விடுவார்கள். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

ஒரு மணி நேரம் கழிந்து வீட்டிற்கு வந்த மகனை அன்புடன் பக்காத் திருடன் வரவேற்றான். மகனோ தனது மேலிருந்த போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு,” என்ன அநியாயம் இது! இப்படியா செய்வது?” என்று கோபத்துடன் கூவினான்.

பக்காத் திருடன் கூறினான்:” ஓ! நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். தூங்கப் போ. உனக்கு நமது கலை புரிந்து விட்டது! அதைப் பற்றிப் பேச வேண்டாம்”

மகனோ,”இல்லை இல்லை, என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்” என்றான்.

“உனக்குச் சொல்ல வேண்டுமென்றால் சொல். எனக்குக் கேட்க வேண்டுமென்பது இல்லை. நாளை முதல் நீ தனியாகவே திருடச் செல்லலாம். உனக்குத் திறமை இருக்கிறது. அதைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றான் பக்கா திருடன்.

மகனோ,” தந்தையே! நடந்ததைச் சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது. நீ என்னைக் கொன்றே விட்டாய்! அதிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். நடந்ததைக் கேள்!” என்றான்,
“அப்படியா! ஒரு நிபுணன் என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பித்துத் தான் வரவேண்டும். இது சகஜமப்பா. சரி என்ன நடந்தது அதைச் சொல்” என்றான் தந்தை.
Jewel_Thief_poster

“எப்படியோ அது நடந்தது. தப்பி விட்டேன். எனது மனமோ, புத்தியோ எதுவும் அதற்குக் காரணமில்லை. ஆனால் நடந்து விட்டது” என்றான் மகன்.

தந்தை கூறினான் ” இது தான் வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். திருடுவதோ, ஓவியம் வரைவதோ, கவிதை இயற்றுவதோ எந்த துறையாக இருந்தாலும் சரி தான்! திருடனாக இருந்தாலும் சரி, யோகியாக இருந்தாலும் சரி. தலையிலிருந்து எதுவும் உதிப்பதில்லை வேறு எங்கோ கீழே இருந்து தான் அனைத்தும் உதிக்கிறது. அதற்கு உள்ளுணர்வு என்று பெயர் கொடு, தியானம் என்று சொல். பல பெயர்களைச் சொன்னாலும் விஷயம் ஒன்று தான். உன் முகத்தில் ஒரு தேஜஸ் ஜொலிக்கிறது நீ ஒரு மாஸ்டர் திருடனாக பக்கா திருடனாக ஆகி விடுவாய் பக்கா திருடனாக நான் ஆனதால் எனக்கு தியான ஒருமைப்பாடு சித்தியாகி இருக்கிறது. ஆகவே உனக்கு தியானம் சித்திக்க வேண்டுமென்றால் இது தான் வழி!”

நடந்ததை மகன் கூறலானான்:” நான் பீரோவின் உள்ளே நடுநடுங்கியவாறு ஒளிந்திருக்கையில் நீங்கள் போட்ட கூச்சல் சத்தத்தைக் கேட்டு ஒரு வேலைக்காரி மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு வந்தாள். அதை சாவி துவாரம் வழியே பார்த்தேன். திடீரென எனக்கு ஒன்று தோன்றியது. பூனை போல மியாவ் மியாவ் என்று கூவினேன்.இதுவரை நான் பூனை போல சத்தமிட்டதே இல்லை. பூனை தான் இருக்கிறதென்று பீரோ கதவை வேலைக்காரி திறந்த போது பூவென்று ஊதி மெழுகுவர்த்தியை அணைத்து அவளைத் தள்ளி விட்டு வெளியே ஓடினேன்.

எல்லோரும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள் திடீரென அங்கு ஒரு கிணறு வழியில் இருந்ததைப் பார்த்தேன். அதன் அருகே ஒரு பெரிய பாறை இருந்தது. அசைக்க கூட முடியாத அளவு பெரிய பாறை அது. கஷ்டப்பட்டு அதைத் தூக்கி கிணற்றில் வீசினேன். பின்னர் ஓட ஆரம்பித்தேன். எல்லோரும் கிணறு அருகே வந்து நின்றனர். நான் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். ஒரு வழியாகத் தப்பி வீட்டுக்கு ஓடி வந்தேன்.”

பக்கா திருடன் கூறினான்:”மகனே நீ தூங்கப் போ! என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நீயாகவே உனது வேலையைத் தொடங்கலாம்!”

ஓஷோ கூறுகிறார்: சும்மா இரு; அனைத்தையும் அறி!

******************

சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 29-6-2014 அன்று வெளியான கட்டுரை

Pictures are used from different sites, not related to this story;thanks.

Two Seers Saved by Asvins: Stories from Rig Veda

ascetics

Written by London Swaminathan
Post No.1220; Dated 7th August 2014.

Noble men dread vulgar company;
Mean men treat the vulgar as kinsmen (Tirukkural 451)

Rig Veda is the oldest religious scripture in the world. The Veda is full of anecdotes which can be interpreted at different levels. The hymns are partly mythical, partly didactic, partly allegorical and partly symbolical. But there are factual stories as well. Some of the names still remain a mystery. We don’t know where they lived and when they lived. The Vedas themselves are very old – the oldest available documents of the Hindus. And those Vedas talk about OLD stories!! That is why the great Tamil poet of modern age Subramanya Bharati sang about Bharat Mata ‘that not even the greatest of the scholars knew how old she (Mother India) was!’

Whatever said in Vedas and other scriptures are summarised in Tirukkural, which is considered Tamil Veda. Tamil poet Tiruvalluvar who composed The Tirukkural says:

No greater help than good companionship
No greater sorrow than bad friendship (Kural 460)

Purity of mind ushers in spiritual growth and personal prosperity
While good associations lead to glory (Kural 457)

Men’s perceptions are of their own mind
But their nature is known by their kind (Kural 453)

o-YOGA-ART-OF-TRANSFORMATION-

Here are two stories from the Rig Veda

It is like watching Indian films. The baddies pushed two good people into wells. One suffered there for 3 days and another was in the dark for ten days. And then the hero of the film (Here, it is Asvins) comes to their rescue!!

Asvins are also known as the Nasatyas or Dasras. They save everyone in trouble. They are Twins.
In the following verses in the Rig Veda we hear about the stories of Vandana and Rheba. Both of them were seers.

“Worthy of praise and worth the winning, Heroes, is that your favouring succour O Nasatyas
What time you, knowing well his case, delivered Vandana from the pit like hidden treasure– RV 1-116-11

One day Rishi (seer) Vandana was returning from another village. As the night fell when he was half way though, he took shelter in one of the nearby hut. Unfortunately it belonged to a demon. On the third day while he was drawing water from the well, the servant came and pushed him into the well, apparently at the instruction of his Master (demon). The well was deep and he could not come out. He prayed to Asvini devas who came and escorted him to a safer place.

Asvins, you raised, like Soma in a ladle, Rheba who for ten days and ten nights, fettered.
Had lain in cruel bonds, immersed and wounded, suffering sore affliction, in the waters” – RV 1-116-24

Rheba was another saint who underwent a similar ordeal. One day when Rheba went to the nearby forest to fetch fuel and grass for the daily ritual, the demons tied him with ropes and then pushed him into a well. His friends and relatives were looking for him for several days. Though he was crying loudly for ten days, no one could hear him who was deep inside the well that was deep inside the jungle. Thus ten days and ten nights passed. When he prayed to the Asvins, they came and brought Rebha out of the well. His body was sore and painful. The Asvins touched him and his pain and fatigue disappeared at once.
Long live the Vedas! Long live the Vedic Seers!!
rishi3

Source: Rig Veda, Tirukkural and The Effulgence of the Veda by Swami Gangeshwaranandaji Maharaj

Contact swami_48@yahoo.com

தமிழ்ப் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி?

yaha1

ஆராய்ச்சிக் கட்டுரை : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1219; தேதி 7 ஆகஸ்ட் 2014

சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்தில் ஒரு அதிசய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் இரண்டு இடங்களில் சொல்லிச் சொல்லி வியப்படைகிறார்.

யவனர்களைப் பிடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, (மொட்டை அடித்து) தலையில் நெய்யை ஊற்றி அவமானப் படுத்தியவன் இமயம் வரை சென்று விற்கொடி நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுடைய தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன். இவன் மீது கவிபாடியவர் பாலைக் கௌதமனார். அவன் 25 ஆண்டுகள் அரசாட்சி செய்தான்.

பல்யானை செல்கெழுகுட்டுவன் பற்றிப் பதிற்றுப் பத்து சொல்கிறது:

ati rudra
Sri Sathya Sai Baba performing Ati Rudra Maha Yajna

அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை வரிசையாக யானைகளை நிறுத்தி வைத்து இரு கடல் நீரையும் ஒரு பகலில் நீராடியவன். அகப்பா என்னும் கோட்டையைப் பிடித்து ஒரே பகலில் தீயிட்டுக் கொளுத்தியவன். அயிரை மலையில் உள்ள துர்க்கையை அனுதினமும் வழிபட்டவன். அவனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர் வானப் ப்ரஸ்தம் செய்யக் காட்டுக்குச் சென்றார். உடனே இவனும் அரச பதவியை விட்டு காட்டுக்குத் தவம் செய்யப் போய்விட்டான்.

இதை எல்லாம் விடப் பெரிய அதிசயம்!!! பாலைக் கவுதமனார் என்ற பிராமணப் புலவன், அவர் மீது கவி பாடினான் —(காண்க பதிற்றுப்பத்து—மூன்றாம் பத்து). —–புலவரே! உமக்கு என்ன வேண்டும், கேளும், கொடுக்கிறேன் ——– (நீர் வேண்டியது கொண்மின்) ——– என்றான் மன்னர் மன்னன்.

பிராமணப் புலவன் பாலைக் கௌதமன் சொன்னான்: “யானும்என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்”

மன்னன் அசந்தே போனான். உடனே பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவெள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர் ——- என்று பதிற்றுப் பத்து பதிகம் பகரும்.
elijahchariot
Elijah going by Fire Chariot

அதாவது பெரிய பிராமண அறிஞர்களைக் கலந்தாலோசித்து பத்து யாக யக்ஞங்களுக்கு மன்னன் ஏற்பாடு செய்தான். ஒன்பது வேள்வி முடிந்தது. பத்தாவது வேள்வியில் பார்ப்பனப் புலவன் கௌத்தமன், அவனுடைய மனைவியுடன் மாயமாய் மறைந்து விட்டான். 2000 ஆண்டுக்கு முன் எழுந்த சங்க இலக்கியம் தரும் தகவல் இது.

( ஒரே பகலில் நான்கு கடல்களின் நீரைக் கொண்டு குளிப்பது தமிழ் மன்னர்களுக்குப் பிடித்த விளையாட்டு —- இது சாத்தியமா?——– இது பற்றி முன்னரே நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். மாயா இன மக்கள் எப்படி ஓடி, ஓடி செய்தி பரப்பினர், மாரத்தன் வீரன் எப்படி 26 மைல் ஓடிவந்து செய்தி சொன்னான், வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி திருச்செந்துரில் தீவாரதனை ஆனவுடன் சாப்பிட்டான் என்பனவற்றை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். வானப் பிரஸ்தம் என்பது இந்துக்களின் மூன்றாவது கட்ட வாழ்க்கை என்பதையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். கண்டு மகிழ்க!)

பாலை கௌதமனார் பாடிய மூன்றாம் பத்து:

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டை தன்கோல் நிறீ இ
அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீ இக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்துக்
கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி
அயிரை பரை இ ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும் பாரதாயனார் முந்துறக் காடு போந்த
–பதிற்றுப் பத்து பதிகம்

சிலப்பதிகாரச் செய்தி

பிற்காலத்தில் யாரும் இதை பொய் என்றோ இடைச் செருகல் என்றோ சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இளங்கோவும் இதை கட்டுரைக் காதையிலும் நடுகற் காதையிலும் பாடிவைத்தார்:

நான்மறையாளன் செய்யுட்கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
(—வரிகள் 137-137, நடுகற் காதை)

வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு
(—வரிகள் 63-64, கட்டுரைக் காதை)

elijah
Elijah fed by Ravens!

கோவலனும் கண்ணகியும் விசேஷ விண்கலத்தில் சுவர்க்கம் சென்றதையும் சிலப்பதிகாரம் கூறும். ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில் இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் செய்தி ஆதாரத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அதே போல விமானி இல்லாத விமானம், பெரியோர்களை அழைத்துச் செல்ல, சுவர்க்கத்தில் இருந்து வரும் செய்தியை புற நானூற்றுப் புலவன் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாட்டில் இருந்து நாம் அறிகிறோம் (புற. 27).

இதே போல பைபிளிலும் ஒரு கதை உண்டு.

பைபிளில் விமானம்
பைபிளில் வரும் ஒரு கதை: எலிஜா என்பார் ஒரு தீர்க்கதரிசி. அவர் விக்கிரக ஆராதனையை எதிர்த்தும் ஜெஹோவாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தவர். அவருக்கு வறட்சிக் காலத்தில், அண்டங் காக்கைகள் உணவு கொண்டு வந்தன. திரவுபதி வைத்திருந்த அட்சய பாத்திரம் போல, ஒரு விதவைப் பெண்ணிடம் இருந்த பாத்திரத்தில் இருந்து ரொட்டிக்கான பொருட்களை வரவழைத்தார். அவளுடைய இறந்துபட்ட குழந்தையை அப்பர், பெருமான, திருஞான சம்பந்தர் ஆகியோர் குழந்தைகளை உயிர்ப்பித்துத் தந்தது போல உயிர்ப்பிக்கிறார். அவருக்கு சொர்கத்துக்குப் போவதற்கு தீ கக்கும் ஒரு ரதம் வருகிறது. அதை இழுக்கும் குதிரைகளும் ஜோதி ரூபத்தில் இருந்தன. அவர் ஒரு சூறாவளியால் தூக்கப்பட்டு அந்த ரதத்தில் சென்று மறைந்தார்.

elijah ascent to heaven
Place where Elijah ascended in Jordan

ஆக, யாகத் தீயில் மாயமாய் மறைந்த பார்ப்பனன், பார்ப்பனி, ஜோதி ரதத்தில் மறைந்த எலிஜா ஆகியோர் கதைகள் சுவையான பல விஷயங்களைத் தருகின்றன. இன்றுவரை அவைகளை உண்மையே என்று நம்புவோர் இருப்பதையும் காண்கிறோம்.

வாழ்க வண்டமிழ் மறையோர் = தமிழ் பிராமணர்கள்!!

–சுபம்–

How did Tamil Poet and Biblical Prophet Elijah go to Heaven?

yaha1

Research paper written by London Swaminathan
Post No. 1218; Dated 6th August 2014.

Sangam Tamil poet Palai Kautamanar went to heaven with human body. Chera king Palyanai Selkezukuttuvan helped the poet in this venture. The king was the younger brother of Imayavarampan Neduncheralathan. The Third Ten section of the Patitrpattu (Ten Ten Book) gives the interesting story.
Kautamanar is the Tamilized form of Sanskrit name Gauthama.

The legend goes that Palai Kautamanar, a Brahmana poet, performed ten Fire sacrifices (Yagas, Yajnas, Havans) and in the course of the tenth, the Brahmana and his wife disappeared by going to heaven. In its accomplishment Chera king Selkezukuttuvan helped him.

Tamil epic Silappadikaram referred to this episode in two places (Katturai Katai, Natunar Katai).

Sangam book Pathitru Pattu says Selkezukuttuvan ruled for 25 years. He made a bridge of elephants between the east and west coast of peninsular India just to get water from both the seas for bathing. Ancient kings did such things to show that the entire country was under their rule. The second purpose was to appreciate the holiness of both the seas.

ati rudra
Image of Atirudra Mahayajna conducted by Sathya Sai Baba.

He was a great devotee of Goddess Durga of Ayirai Hills. When he heard that his priest Nedum Bharathan went to forest for ‘Vanaprastha’, he also followed him. The third stage of a Hindu’s life is Vanaprastha, going to forest to spend life in meditation and prayer.

When he asked his royal poet Kautamanar (Gauthama) what he wanted after he sang the decad in his praise, he told that he wanted to go to heaven with his wife in human form. Then the king consulted the learned in the scriptures and did proper fire sacrifice for this purpose. After the ninth round of the Yagas, the tenth and final round came. Suddenly the poet and his wife disappeared!!

We have several references to people going to heaven in special air planes that were sent from the heaven. In the Tamil epic Silappadikaram, the dead husband Kovalan came to take her beloved Kannaki to heaven in a heavenly vehicle. Rama of Valmiki Ramayana also flew in a pilotless plane (Please read my scientific explanation in How did Rama fly his Pushpaka Vimana/ Air Plane?)

Sangam Tamil book Purananuru (verse 27 by Mudukannan Sathanar) says that there were pilotless planes for great people praised by the poets. Such air planes will take them straight to heaven. We know how the great Rishi Viswamitra tried to send Trishanku straight to heaven with human body. Viswamitra’s fire sacrifice helped him to ascend to heaven, but he was denied entry. When he came back Viswamitra took it as a personal defeat and stopped him halfway through in the sky. He was hanging in the heaven and he was made the constellation Crux or Sothern Cross.

elijahchariot
Elijah’s Fire Chariot

Jewish Prophet Elijah

Jewish Prophet Elijah (900 BC) fought against idol (Bal) worship. His story is in the Jewish and Christian Bibles. Nothing much about his origin is known. But he is attributed with several miracles in the Bible:

Elijah was fed by ravens during a big drought.

Elijah went to a widow and made her cup an Akshaya Patra (inexhaustible vessel).

Elijah brought the dead son of the widow alive (It is similar to the stories of Saivite Saints Appar and Sambandhar who brought alive the dead children of a few Devotees/bhaktas)
Elijah had a competition with the worshippers of idol. His bull was burnt completely, but the enemies could not produce fire (It is similar to the clash between the Jains and Saivites during Sambandhar period)
Elijah brought rains like Rishyasrnga Rishi of Valmiki Ramayana

elijah

One day God sent a Chariot of Fire with Horses of Fire. Elijah went to the heaven in that chariot by whirlwind (This is similar to several stories in Hindu mythology and the Palai Gauthama in Sangam Tamil literature).

Source for Elijah’s story: Bible ( 1Kings 17-19; 2 Kings 2)
Source for Tamil poet Gauthama : Pathitru Pattu (3rd Ten and Silappadikaram)

But we must remember a big difference between Palai Gauthaman and Elijah, the former was a believer of idol worship and the latter was an opponent of idol worship.

elijah ascent to heaven
Elijah’s ascent to heaven in Jordan.

Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.

கவிதையை ரஸிப்போமா?

tamil poets

By ச.நாகராஜன்

Post No.1217; Dated 6th August 2014.

காவியத்தின் பயன்

பாரத தேசம் வலியுறுத்தும் புருஷார்த்தங்கள் நான்கு: தர்ம, அர்த்த, காம மோக்ஷம். இலக்கியமோ, இசையோ, நடனமோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைவனை அடைய வழி வகை செய்ய வேண்டும்; செய்யும் என்பது அறநூல்கள் நமக்குத் தரும் அறிவுரை, அன்புரை! அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையின் படி வாழ்ந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தால் வீட்டுப் பேறு தானே வந்து எய்தும் என்ற அடிப்படையிலேயே திருவள்ளுவர் முப்பாலை வகுத்தார் போலும்!

இறைவனுடன் ஒன்றச் செய்யும் கவிதைகள்
முதல் காவியமான வால்மீகி ராமாயணத்தில் அதைப் படித்தவர் தீர்க்க ஆயுள், செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் பெற்று முக்தியையும் அடைவர் என்று காவியத்தின் பயனாக இறுதியில் சொல்லப்படுகிறது.

ஒரு லக்ஷம் ஸ்லோகம் அடங்கிய வியாஸர் வகுத்த மஹாபாரதத் தைப் படிக்க முடியாதவர்கள் அதன் இறுதியில் வரும் பாரத ஸாவித்திரியில் உள்ள நான்கு ஸ்லோகங்களைச் சொன்னாலேயே பெரும் பேறு பெற்று பரப்ரஹ்மத்தை அடைவர் என்று வியாஸர் அருளியிருக்கிறார். அப்பர் ஞானசம்பந்தர் உள்ளிட்ட மகான்களின் பாடல்களிலும் கடைசியில் அதைக் கூறுவதால் ஏற்படும் பயன்கள் தெள்ளத் தெளிவாக் கூறப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத அதிசய வேறுபாடு இப்படி பலனைச் சொல்லி நம்மை ஊக்குவிப்பது தான்!– முக்கியமாக இறைவனை இப்படி இலக்கியம் மூலம் அடைய முடிவதை வலியுறுத்துவது தான்!

கவிஞனாகத் தகுதிகள்
காவியம் இயற்றப் புகும் ஒரு கவிஞன் சகல கலைகளிலும் வல்லவனாக இருக்க வேண்டும். மனிதனை உன்னதமான உயரத்திற்கு ஏற்ற வல்லவனாக இருக்க வேண்டும், ஒவ்வொரு சொல்லின் முழு அர்த்தத்தையும் அது தரும் பயனையும் அறிந்திருக்க வேண்டும், என்று இப்படி ஏராளமான தகுதிகளை யாப்பு நூல்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட கவிஞன் இயற்றும் காவியங்களை ரஸிப்பதும் ஒரு சிறந்த விஷயமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.

barathiyar r creations
ரஸிகனாகத் தகுதி
ஒரு காவியத்தை அல்லது கவிதையை ரஸிக்க சஹ்ருதயனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. சஹ்ருதயன் என்றால் நல்ல இதயம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே ரஸிக்கவும், விமரிசிக்கவும் முடியும் என்பது அறிஞர்களின் துணிபு.

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “

என்று மகாகவி பாரதியார் கூறுவதில் எத்தனை பொருள் பொதிந்துள்ளது. கவிஞன் எதை வலியுறுத்திக் கூறியுள்ளான் என்று அந்தக் கவியுள்ளத்தை அறிவதே கவிதை அல்லது காவியத்தைப் படிப்பதன் முக்கிய நோக்கம். கவிஞன் எல்லாவற்றையும் வெளிப்படையாக்க் கூறி விட மாட்டான். பல விஷயங்களை உள்ளடக்கி சொல் சிக்கனத்தின் மூலம் பெரும் பொருளை உணரவைக்க முயல்வான். அணுவைத் துளைத்து ஏழ் கடலை அதற்குள் நுழைவிப்பான்!அதை அறிந்து ரஸிப்பதே தேர்ந்த ரஸிகனின் வேலை.

வார்த்தை ஜாலங்கள், சொல் அடுக்குகள், உவமைகள், அணி அலங்காரங்கள், ஓசை நயம் இவற்றை எல்லாம் ரஸித்து அதையும் தாண்டி உண்மைப் பொருளை அறிவது என்பது பெரிய காரியம் தானே!

கவிஞனும் ரஸிகனும்

கவி கரோதி காவ்யானி
ரஸம் ஞானானி பண்டித:
சுதாசுரத சாதுர்யம்
ஜாமாதா வெட்டி நோ பிதா;

என்ற ஸ்லோகம் அற்புதமாக கவிஞனையும் ரஸிகனையும் பற்றிக் கூறுகிறது.

இதன் பொருள் :- ஒரு கவிஞன் காவ்யத்தை இயற்றத் தான் முடியும். அதன் ரஸத்தை அறிந்தவனே அதை ரஸிக்க/விமரிசிக்க முடியும். எப்படி ஒரு தந்தை தன் பெண்ணின் சாதுர்யமான லீலைகளை அறிய முடியாதோ அவளது லீலைகளை எப்படி அவனது மருமகன் மட்டுமே அறிய முடியுமோ அது போலத் தான் கவிஞனும் அவன் ரஸிகனும்!

எப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை இந்த ஸ்லோகம் தருகிறது, பாருங்கள். படைப்பவன் கவிஞன். அந்தப் படைப்பை நன்கு அனுபவிப்பவன் ரஸிகன்!

Tiruvalluvar Tamil poet

இன்னொரு ஸ்லோகம் மூன்று மாநிலங்களின் பெண்களோடு கவிஞனின் வார்த்தைகள் மற்றும் பொருள் அமைப்பை ஒப்பிடுகிறது.
ஸ்லோகம் இதோ:-

அர்த்தோ கிராமபிதிதா: பிஹிதாஸ்ச கச்சித்
சௌபாக்யமேதி மாராஹட்டவதுகுசாபாஹா;
நோ கேரளிஸ்தன இவாதிதரம் பரகாசோ
நோ கூர்ஜரிஸ்தன இவத்தராம் நிகுதா:

ஒரு யுவதியின் அழகும் கவர்ச்சியும் அவள் மார்பகத்தில் வெளிப்படும், இல்லையா! அதை உவமையாகக் கொண்டு கவிஞனின் படைப்பு அமைய வேண்டிய விதத்தைக் கூற வருகிறார் ஒரு கவி!
ஒரு கவிஞன் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தத்தில் பாதியையே வெளிப்படுத்துவான். பாதியை மறைத்து வைத்திருப்பான்! அதுவே மிக அழகு! எப்படி மஹராஷ்டிரத்தில் உள்ள பெண்கள் மார்பகங்களை பாதி மறைத்து பாதி வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்கள் அது அல்லவா அழகு! கேரளத்துப் பெண்கள் மார்பகங்களை முழுவதுமாக மறைப்பதில்லை. அது அழகல்ல! அல்லது குஜராத் மங்கையர் முழுவதுமாக கச்சை இறுகக் கட்டி மறைக்கிறார்களே அதுவும் அழகல்ல!

சொல்ல வந்ததை சிருங்கார ரஸம் ததும்பச் சொல்லி விட்டார் இந்தத் தனிப்பாடல் கவிஞர்.

காவியங்களில் சஞ்சரிப்பவன் சரஸ்வதி
கவிகளின் தெய்வமான சரஸ்வதியை “புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம்” – புராணங்கள், நாடகங்கள் மற்றும் மஹா காவியங்களில் சஞ்சரிப்பவள் அதாவது உள்ளுறைந்திருப்பவள் என்று சரஸ்வதி தியான ஸ்லோகம் கூறுகிறது.

காவியத்தில், இந்த உள்ளுறை தெய்வத்தை ஒரு சஹ்ருதயனே அறிய முடியும் என்பதே கவிதையை ரஸிக்க வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை.

Manickavasagar Tamil Poet
Image of Tamil poet Manikkavasagar.

உலகம் போற்றும் ஒரே ஒரு கவிதை
இப்படி ஒரே ஒரு கவிதையை மட்டும் எடுத்து ரஸித்துப் பார்ப்போம் – உதாரணத்திற்காக!

மஹாகவி காளிதாஸன் இயற்றிய குமார சம்பவத்தில் ஐந்தாம் காண்ட த்தில் 24வது செய்யுளாக அமைந்திருப்பது இது!

ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேத சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:

இதன் பொருள் இது தான்:- மழையின் முதல் துளிகள் அவளது கண் இமைகளில் சிறிது தங்கின. பின்னர் அவள் மார்பகங்களில் சிதறின. பின்னர் இறங்கி அவள் வயிற்று சதை மடிப்பு வரிகளில் தங்கின. வெகு நேரத்திற்குப் பின்னர் அவள் நாபிச் சுழியில் கலந்தன!
இதை உலகெங்கும் உள்ள அறிஞர்கள் இன்று வரை புகழ்ந்து பாராட்டுகின்றனர். சம்ஸ்கிருத கவிதைகளைத் தொகுத்த டேனியல் ஹெச்.ஹெச். இங்கால்ஸ் இதன் புகழைச் சொல்லிச் சொல்லி உருகுகிறார்!

ஏராளமான கருத்துக்களை சிறு சிறு வார்த்தைகளின் சங்கமம் பிரவாகமாக்க் கொண்டு வந்து தள்ளி நம்மைப் பிரமிக்க வைத்துப் பரவசப்படுத்துகின்றன!

முதலில் ஒரு ராஜகுமாரி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.செல்வச் செழிப்பில் ஊறிய ஒரு அழகிய யுவதி தியானத்தில் இருப்பது மெல்லிய உணர்வுகளை நம்முள் எழுப்புகிறது.உலகிற்கெல்லாம் தேவி அவள்! அடடா! கீதை கூறும் யோக நிஷ்டையில் அல்லவா அவள் இருக்கிறாள்! நீர்த் திவலைகள் அவள் கண்களில் சிறிது தங்க வேண்டுமென்றால் அது நீண்டு அழகியதாய் வளைந்து இருக்க வேண்டும். துளிகள் மார்பகங்களில் சிதற வேண்டுமென்றால் அவை பெரிதாக இருக்க வேண்டும்.அவை இரண்டும் திரண்டு உருண்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்க வேண்டும். (உத்தம அழகிகளின் லட்சணப்படி!) இல்லையேல் மழைத் துளிகள் மார்பகங்களின் இடைவெளி வழியே உருண்டோடி அல்லவா இருக்கும்! திரட்சியான மார்பகங்கள் திடமாக இருப்பவை என்பதை மழைத் துளிகள் தெறித்துச் சிதறியதால் உணர்கிறோம். அவை பின்னர் வயிற்றில் உத்தம பெண்களுக்கே அமைந்திருக்கும் மூன்று வயிற்று மடிப்புகளின் வழியாக இடுப்பு என்னும் ஏணியின் வழியே இறங்கி நாபி கமலத்தை அடைந்து அந்தச் சுழியில் சங்கமிக்கின்றன!
என்ன அற்புதமான த்வனி அல்லது suggestion அல்லது ஏராளமான உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு செய்யுள் இது.
poetry

கவிகளுள் மஹாகவி காளிதாஸன் என்பதை எடுத்துக் காட்ட இந்த ஒரு செய்யுள் உலகளாவிய அளவில் எடுத்துக் காட்டப்பட்டு வருகிறது!

நல்ல கவிதைகளை நாடித் தேடி ரஸிப்போம்
ஒரு சஹ்ருதயனின் ரஸிகத் தன்மை வளர வேண்டுமெனில் இது போன்ற லட்சக் கணக்கான சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் கவிதைகளைத் தேடிப் பாடி ரஸிக்க வேண்டும்.
உன்னதமான உணர்வுகளை மேம்படுத்தி ரஸிகனை இது பிரபஞ்ச லயத்துடன் ஒன்று படுத்தி விடும், இல்லையா?!

*********************

நிலாச்சாரல் (www.nilacharal.com) 600வது இதழில் வெளியான சிறப்புக் கட்டுரை

MORE QUOTATIONS FROM RAMAYANA

ramagreen

Compiled by London Swaminathan
Post No.1216; Dated 5th August 2014.

(31 quotations from Valmiki Ramayana were given already in Good Thoughts Calendar for the month of August; blogged on 30-7-14)

TRIKALA JNANI
By the power of spiritual meditation and Yoga, the sage Valmiki saw the whole of the past as clearly as if it were a fruit placed on the palm of the hand
Balakanda, chapter 3

SATYA PARAKRAMA
King Dasaratha was learned in the interpretation of the Vedas, his chief wealth being pre – eminence in truth and virtue; He was one who never broke his word, who was ever prudent, sagacious and beloved of the subjects.
Balakanda, chapter 6

GUESTS ARE GODS
Those who resided in Ayodhya worshipped the gods and the uninvited guest; They were both magnanimous and charitable.
Balakanda, chapter 6

MINISTERS’ PURE HEART

Dasaratha’s ministers were pure of heart and of chaste conduct. None consorted with his neighbour’s wife, none were wicked and all lived together.
Balakanda, chapter 7

rama bronze
IMPERMANENCE
Who can pity whom with this bubble-like body? 4-21-3
Kasca kasyaanusocyosti dehesminbudbudopame

FORBEARANCE
Forbearance is the best ornament for men and women 1-33-7
Alankaaro hi naariinaam ksamaa tu purusasya vaa

PATIENCE

Patient is not present in all the valiant 7-58-5
Na sarvatra ksamaa viira pursues pradrsyate

ARROGANCE
The one inebriated with wealth thinks that he is everything 5-64-19
Aisvarya madamatto hi sarvohamiti manyate

The power intoxicated cannot be tamed by sowing seeds of dissention 5-41-3
Na bedasaadhyaa baladarpitaa naraah

UNSTEADINESS
I am of the confirmed conviction that human mnd is unsteady 2-4-27
Cittam manushyaanaam anityam ithi me matam

SUCCESS
Great people affirm that success entirely depends on counsel 6-6-5
Mantramuulam hi Vijayam pravadanti manasvinah

FACTUAL KNOWLEDGE
The fire can never have its fill of either wood or grass 5-54-28
Na agni trptyati kaasthaanaam trnaanaam ca

There is nobody in this world who would strike those armed with conciliatory words 4-59-16
Na hi saamopapannaanaam prahartaa vidyatee bhuvi

PENANCE
Penance is ever fraught with obstacles and assailed with difficulties 3-10-14
Baha vighnam tapo nityam duscaram caiva
atakkam, panivu

GIVING
Give and expect not, utter truth and not falsehood 5-33-25
Dadyaanna pratigrhniyaat satyam bruuyannaa caantram

Everything is accomplished by the interactions of givers and takers 1-73-12
Daatr pratgrahii trbhyaam sarvaarthaah sambhavanti hi

A gift is not enjoined in favour of those richly endowed with wealth 5-41-3
Na daanam arthopapaticitesu yujyate.

Contact swami_48@yahoo.com

Source: Suktisudha, Chinmaya International Foundation