A Story about Senseless Scholars! (Post No. 2406)

lion water

Compiled by London swaminathan

Date: 19 December 2015

 

Post No. 2406

 

Time uploaded in London: 11-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

In a certain town there were four Brahmins who lived in friendship.  Three of them had reached the far shore of all scholarship, but lacked sense. The other found the scholarship distasteful. He had nothing but sense.

 

One day they met for consultation. “What is the use of attainments, said they, if one does not travel, win the favour of kings, and acquire money? Whatever we do, let us travel”.

 

 

But when they had gone a little way, the eldest of them said, “one of us, the fourth is a dullard, having nothing but sense .Now nobody gains the favourable attention of kings by simple sense without scholarship. Therefore we will not share our earnings with him. Let him turn back and go home”.

 

 

Then the second said, “My intelligent friend you lacked scholarship. Please go home”.

 

But the third said, “No, no, this is no way to behave for we have played together since we were little boys. Come along, my noble friend. You shall have the share of the money we earn.”

 

 

With this agreement they continued their journey, and in a forest they found the bones of a dead lion. There upon one of them said, “A good opportunity to test the ripeness of our scholarship. Here lies some kind of creature, dead. Let’s bring it to life by means of scholarship we have honestly won”.

 

 

Then the first said, “l know how to assemble the skeleton.”

The second said, “l can supply skin, flesh and blood”.

The third said, “I can give it life”.

 

 

So the first assembled the skeleton, the second provided the skin, flesh and blood. But while the third was intent on giving life, the man of sense advised against it remarking, “This is a lion. If you bring him to life, he will kill every one of us”.

 

“You simpleton, said the other, it is not I who will reduce scholarship to nullity. In that case, came the reply, wait a moment, while I climb this convenient tree”.

 

When this had been done, the lion was brought to life, rose up killed all the three. But the man of sense, after the lion had gone elsewhere, climbed down and went home.

 

And that is why I say,

 

“Scholarship is less than sense

Therefore seek intelligence

Senseless scholars in their pride

Made a lion, and they died”.

 

Xxxx

ganga boat

There is a similar story in the Tales and Parables of Sri Ramakrishna:

THE PANDIT WHO COULD NOT SWIM!

Once several men were crossing the Ganges in a boat. One of them, a pandit, was making a great display of his erudition, saying that he had studied various books – the Vedas, the Vedanta, and the six systems of philosophy. He asked a fellow passenger,

“Do you know the Vedanta?”

“No, revered sir.”

“The Sankhya and the Patanjala?”

“No, revered sir.”

“Have you read no philosophy whatsoever?”

“No, revered sir.”

 

The pandit was talking in this vain way and the passenger sitting in silence, when a great storm arose and the boat was about to sink.

The passenger said to the pandit,

“Sir, can you swim?”

“No”, replied the pandit.

The passenger said, “I don’t know Sankhya or the Patanjala, but I can swim”

 

What will a man gain by knowing many scriptures? The one thing needful is to know how to cross the river of the world. God alone is real, and all else is illusory.

–Subham–

 

 

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

chin1

Compiled by London swaminathan

Date: 19 December 2015

 

Post No. 2405

 

Time uploaded in London: காலை 10-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.

வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.

 

பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.

உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.

 

இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-

சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.

 

சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:

china-chin-large

“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?

அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.

மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.

 

அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?

மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?

அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.

 

இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.

மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.

 

மன்னன் நடுநடுங்கிப் போனார்.

 

மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.

 

மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!

–சுபம்–

தமிழுக்கு அரசர்! நாவுக்கரசர்!! ( Post No. 2404)

நால்வர் சிலைகள்

படம்: சம்பந்தர், அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர்

Written by S NAGARAJAN

Date: 19 December 2015

 

Post No. 2404

 

Time uploaded in London :– காலை 6-38

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

பிறவி வேண்டும் பேரருளாளர்!

ச.நாகராஜன்

 

 

புரட்சிக்கரசர்

 

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

 

 

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில்  மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

 

 

சிதம்பர தரிசனம்

 

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே

 

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

 

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

 

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

 

 நால்வர், கலர்

இன்னம் பாலிக்குமோ

 

இதையே இன்னொரு பாடலிலும் வற்புறுத்துகிறார்:-

 

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

 

தில்லைச் சிற்றம்பலத்தைக் கண்டு களிக்க இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!

 

 

உன்னை மறவாமை வேண்டும்

 

காரைக்கால் அம்மையாரை சிவ்பிரான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க”

என்று இப்படிக் கூறியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

 

 

புழுவானாலும் உன்னடி நினைப்பேனாகுக

 

அப்பரும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

 

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

 

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்; ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்; அதிலும் பிறந்து பிறந்து அவனை நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும் என்பது தான்!

 

தேவார சுகம்

 

உள்ளுவார் உள்ளத்தில் உளன் என்பது ஒரு புறம் இருக்க அவனைத் தில்லையிலே கண்ணாரக் காணும் சுகம் தனி தானே!

இந்த சுகத்தைத் தரும் அப்பரின் தேவார சுகமே சுகம்!

 

*********

 

 

 

King and Scholar: Who is Powerful? Post No. 2403

chin1

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2403

 

Time uploaded in London: 19-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Anecdote from China:

 

china-chin-large

The famous First Emperor of the Chin Dynasty (221-206 BC) was snubbed by the scholarly envoy of a very small state. It happened in this way.

 

Chin having arbitrarily proposed to the small state to exchange a piece of territory, the latter being unwilling, commissioned an envoy to Chin to explain matters to the emperor who was at the height of his power.  At the audience, which seemed to be a tête-à-tête conference, the following incident took place:–

 

 

The emperor, suddenly losing his temper said, “Have you ever heard of anger of an emperor?”

 

“No, Your Majesty”, replied the envoy.

 

“When an emperor is in anger, said the emperor, there will be a million corpses lying about with blood flowing a thousand miles”.

 

“Has Your Majesty, asked the envoy, ever heard of the anger of a plain scholar?”

 

“The anger of the scholar, answered the emperor, can mean no more than taking off his hat and shoes, and knocking his head against the ground.”

 

“No Your Majesty, said the envoy, This is the anger only of a fool, not that of a scholar”.

 

After saying this, in highly poetical diction, he recited graphically three well known but not far distant historical instances where unworthy reigning princes were openly slain by scholars. At the end of the citation he calmly exclaimed,

chin2

“Now I am going to add my name as the fourth to the list. When a scholar is in anger, there will be only two corpses lying about with blood flowing within five steps. Today is the day when the whole Empire shall be in mourning”. Thereupon he rose with his sword in hand. The Emperor, visibly affected, forthwith knelt before his interlocutor saying,

 

“Please sit down, Master. Why should things be like this? I understand now. The fact that (larger states like) Haan and Wei have perished, while (a small state like) yours survives is merely because it has (men like) you, Master”.

 

dynasty-05-Qin

—–SUBHAM—–

xxxxx

 

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்! (Post No. 2402)

rama_guha

Written by S NAGARAJAN

Date: 18 December 2015

 

Post No. 2402

 

Time uploaded in London :– காலை 8-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

 

ச.நாகராஜன்

 RAMAYAN STATUES2,FB

கவிஞர்களின் பார்வையில் பட்ட எதுவுமே கவிதையாகும்! அதுவும் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களிலும் புராணங்களிலும் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் மீது அவர்கள் பார்வை பட்டதென்றால் நமக்கு சுவையான கவிதைகள் தானே, கிடைக்கும்! கவிதைகள், தானே கிடைக்கும்!

 

1872ஆம் ஆண்டு பம்பாயில் வெளியிடப்பட்ட சுபாஷித ரத்னாகர(ம்) என்ற நூலில் இடம் பெறும் சம்ஸ்கிருதப் பாடல் இது.

 

சீதை ராமர் ஆக, ராமர் சீதை ஆவார்

 

கீடோயம் ப்ரமரி பவேத்விரதத்யானாத்தயா சேதஹம்                

ராம: ஸ்யாம் த்ரிஜடே ஹதாஸ்மி புரதோ தாம்பத்ய சௌக்யச்யுதா  I                   

 

 

ஏவம் சேத் க்ருதக்ருத்யதைவ பவிதா ராமஸ்தவ தியானம்                          

சீதா த்வம் ச நிஹத்ய ராவணரிபும் கந்தாஸி ராமாந்திகம் II

 

கீடம் – புழு ; ப்ரமர் – வண்டு ; ரிபு — எதிரி

 

 

சுவாரசியமான கருத்தைத் தெரிவிக்கிறார் கவிஞர் இதில். இதன் பொருளைப் பார்ப்போம்.

 

சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்

 

 

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!

RAMA,SITTINNG,FB

 

நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)

எப்படிப்பட்ட அபாரமான கற்பனை!

 

 

இது அமைந்துள்ள விருத்தம் சார்த்தூலவிக்ரிதிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள அருமையான செய்யுள்!

 

 

 

ராகவேந்திரரும் வானரேந்திரரும்

 

ராகவேந்திரருக்கும் (ராமர்) வானரேந்திரருக்கும் (சுக்ரீவர்) ஒரே பிரச்சினை தான்! அதனால் என்ன நடந்தது? இருவரும் நண்பராக ஆகி விட்டார்கள். கவிஞ÷ ´ÕÅரின் கவிதையைப் பார்ப்போம்:

 

 

ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: I          

ஏவம் தயோரத்வனி தைவயோகாத் சமானஷ்கிலவ்யசேஷு சக்யம் II

 

ரகுவம்சத் தலைவனான ராமன் தன் மனைவியை அபகரித்த நிலையில் இருந்தான். வானரத் தலைவனான சுக்ரீவனும் அதே போல தன் மனைவி அபகரிக்கப்பட்டவனாக இருந்தான்! விதியின் விளைவாக இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் ஒரே பிரச்சினை இருந்ததால் நண்பர்களாக ஆகி விட்டனர்!

தாரம் இழந்த ராகவேந்திரன், தாரம் இழந்த வானரேந்திரனைச் சந்திக்கவே சக்யம் (நட்பு) ஏற்பட்டது – இருவருக்கும் பிரச்சினை ஒன்றே என்பதால்!

 

 

நல்ல கற்பனையில் நமக்குக் கிடைத்தது அற்புதமான ஒரு செய்யுள்!

 

 

இது போன்ற தனிப்பாடல்கள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. தமிழிலும் உள்ளன.

சுவைக்க நேரமும், மனமும் வேண்டும்!

 

சம்ஸ்கிருதம், தமிழில் உள்ளவற்றை மனமூன்றிப் படிப்போம்; உயர்வோம்!!

***********

 

 

 

மதப் பிரசாரம் கூடாது: இங்கிலாந்து ராஜாவுக்கு சீன ராஜா கடிதம்( Post No. 2401)

chien2

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2401

 

Time uploaded in London :– காலை 6-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

சீனாவை ஆண்ட சியான் லங் என்பவர் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு அழகான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதோ அந்தக் கடிதம்:_

“ பல கடல்களைத் தாண்டி தொலைவில் வசிக்கும் ஓ, மன்னவா! எங்கள் நாகரீக நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவரே! மரியாதைக்குரிய உமது கடிதத்துடன் உங்கள் நாட்டு தூதர் இங்கே வந்தார். நீங்கள் மரியாதையுடன் அனுப்பிய உங்கள் நாட்டுப் பரிசுப்பொருள்கள் கிடைக்கப் பெற்றோம்.

george3

எங்கள் சாம்ராஜ்யத்தின் மணம் இந்த சொர்கத்தின் கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது. இந்தப் பூவுலகில் எல்லா மன்னர்களும் எங்களுக்கு கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் கப்பம் செலுத்தி வருகின்றனர். எங்களிடம் எல்லாப் பொருட்களும் உளது. விநோதமான, விலையுயர்ந்த உங்கள் நாட்டுச் சரக்குகளில் எங்களுக்கு நாட்டம் இல்லை. தொலை தூரத்திலிருந்து மரியாதையுடன் அனுப்பியதாலேயே அவைகளை நாம் ஏற்றோம்.

 

உங்கள் கடிதத்தை நான் படித்தேன். உங்கள் பணிவும் அடக்கமும் அதில் பிரதிபலித்தது. உங்கள் நாட்டுத் தூதருக்கு நான் பல சலுகைகளை அளித்தேன். அவரைக் கௌரவித்துப் பல பரிசுப் பொருட்களையும் தந்தேன். மன்னவா, உமக்கும் நான் விலையுயந்த பரிசுப் பொருட்களை அனுப்புகிறேன். அவைகளின் பட்டியலையும் அனுப்புகிறேன். அவைகளை அன்புடன் ஏற்கவும். உன்பால் எனக்குள்ள பரிவும் பாசமும் அதில் புலப்படும்.

 

ch-ien-lung-

சொர்கம் போன்ற எனது அரசவையில் உமது நாட்டு தூதர் இருக்க விருப்பம் தெரிவித்தீர். அதை நாம் ஏற்பதற்கில்லை. பீகிங் மாநாகரில் வசிக்கும் எந்த ஐரோப்பியனும், வெளியே போக முடியாது; கடிதமும் எழுத முடியாது. ஆகையால் இங்கு உன்னாட்டு தூதரை அனுப்புவதில் யாதொரும் நன்மையும் விளையாது. மேலும் ஐரோப்பாவில் உம் நாட்டைப் போல பல நாடுகள் உள. அவ்வளவு ஆட்களும் எமது அரசவையில் அமர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தால் நாம் ஏற்பது எங்கனம்? நீங்கள் கேட்பதற்காக இந்த சாம்ராஜ்யம், அதனுடைய  பழக்க வழக்கங்களை (சம்ப்ரதாயங்களை)  மாற்றிக்கொள்ள முடியுமா?

 

காண்டன் நகரத்துக்கு வெளியேயும் உங்கள் நாட்டு சரக்குகளின் வியாபாரம் நடத்த அனுமதி வேண்டுமென்ற கோரிக்கையையும் உமது தூதர் தெரிவித்தார். வேறு எந்தத் துறைமுகத்திலும் வசதிகளுமில்லை; மொழிபெயர்ப்பாளர்களுமில்லை. ஆகையால் உன்னாட்டு வணிகர்கள் அங்கே வர்த்தகம் செய்ய இயலாது. கடந்தகாலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி உமது வேண்டுகோளை நிராகரிக்கிறேன். காண்டன் துறைமுகத்தில் மட்டும் நீவீர் வியாபாரம் நடத்தலாம்.

 

பீகிங் நகரில் வியாபாரம் செய்ய வேண்டும், சரக்குகளைச் சேமித்துவைக்க வசதிகள் வேண்டும் என்பது செயல்முறைக்கு ஏற்றதல்ல. எனது தலைநகரம் உலகிலுள்ள எல்லாம் வலம் வரும் அச்சுப் போன்றது. அதன் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. இதுவரை எந்த வெளிநாட்டானுக்கும் அங்கே அனுமதி தந்ததில்லை. ஆகையால் உமது வேண்டுகோளை அனுமதிக்க மாட்டேன்.

GeorgeIII

உமது மதத்தைப் போதனை செய்யவும் உமது தூதர் அனுமதி கோரினார். வரலாறு தோன்றிய காலம் முதற்கொண்டு சீனாவின் அறிவு சால் மன்னர்களும் சாது,சந்யாசிகளும் ஒரு மதத்தை எங்களுக்கு அளித்துள்ளனர். அதைக் கோடிக்கணக்கான எமது பிரஜைகள் பின்பற்றி வருகின்றனர்.எங்களுக்கு வெளி நாட்டான் கற்பிக்க வேண்டிய தேவை இல்லை. உமது மதப் பிரசார கோரிக்கை சாரமற்றது.

 

எங்கள் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்பும் பல கப்பம் செலுத்தும் நாடுகளிடம் நாங்கள் பேரன்பு காட்டிவருகிறோம். ஓ, தொலைதூரத்தில் வசிக்கும் மன்னவா! உம்மிடத்தில் வேறு எவரையும் விட கூடுதலாகவே அன்பு காட்டினோம். ஆனால் உமது கோரிக்கைகளோவெனில் எம் நாட்டு பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டுள்ளன. இதனால் எந்த நன்மையும் பயக்காது. ஆகையால்தான் நாம் சற்று விவரமாகவே பதில் தருகிறோம். எங்கள் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு மரியாதையுடன் அவைகளுக்கு எக்காலத்திலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும். உங்களுக்கு நல்ல அமைதி கிட்டுமாக!”

 

xxxx

 

 

 

 

 

 

 

Chinese Emperor’s “No” to Religious Propaganda! (Post No. 2400)

chien2

Compiled by London swaminathan
Date: 17 December 2015

Post No. 2400

Time uploaded in London :– 16-21
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Chien Lung’s letter to a King Geaorge III
“You, O King, live in a distant region, far beyond the borders of many oceans, but, desiring humbly to share the blessings of our civilisation, you have sent an embassy respectfully bearing your letter. To show your devotion you have also sent offerings of your country’s produce.

Our dynasty’s majestic virtue has reached every country under Heaven and kings of all nations have sent their tribute by land and sea. We possess all things, we are not interested in strange and costly objects and we have no use of your country s products. I have accepted your tribute offerings only because of the devotion which made you send them so far.

I have read your letter, it shows a respectful humility on your part. I have shown great favour to your ambassador. I have entertained him and given him many gifts. I am sending you, O King, valuable presents of which I enclose a list. Receive them reverently and notice my tender good will towards you.

 

george3

As to your request to send an ambassador to live at my Heavenly Court, this request cannot possibly be granted. Any European living in Peking is forbidden to leave China or write to his own country, so that you would gain nothing by having an ambassador here. Besides there are many other nations in Europe beside your own. If all of them asked to come to our court, how could we possibly consent? Can our dynasty change all its ways and habits in order to do what you ask?

Your ambassador asks us to allow your ships to trade at other ports beside Canton. There are no hongs and no interpreters at any other port, so that your barbarian merchants could not carry on their business there. For the future, as well as the past, your request is refused. Trade may be carried on only at Canton.

The request that your merchants may store and trade their goods In Peking is also impracticable. My capital is the hub and centre around which all the quarters of the earth revolve. Its laws are very strict and no foreigner has ever been allowed to trade there. This request is also refused.

Your ambassador has asked permission to have your religion taught in China. Since the beginning of history, wise emperors and sages have given china a religion which has been followed by the millions of my subjects. We do not need any foreign teaching. The request is utterly unreasonable.

ch-ien-lung-
I have always shown the greatest kindness to tribute embassies from kingdoms which truly long for the blessings of civilisation. To you, O King, who live so far away, I have shown greater kindness than to any other nation. But your demands are contrary to the customs of our dynasty and would bring no good result. I have therefore answered them in detail, and it is your duty to understand my feelings and reverently obey to my instructions henceforth and for all time, so that you may enjoy the blessings of peace”.

 

GeorgeIII

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

xxxxx

லேடி இல்லாதவன் பேடி!! நாடகத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி!!! (Post No. 2399)

IMG_2814

Compiled by London swaminathan

Date: 17 December 2015

 

Post No. 2399

 

Time uploaded in London :– 8-20 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

garland making

விகடன்:மை டியர் சூத்ரதாரர்! தாசிகளால் சுகமில்லை என்ற தங்கள் கருத்தை நான் ஏற்கமுடியாது. ஏனெனில் உலகத்தில் தாய்மானவர், தந்தையுமானவர், தம்பியுமானவர் முதலிய மகான்களெல்லாம், தெரியாமல், அறியாமல், வெறும் பாடல்களை எழுதி நம்மை ஏமாற்றியிருகிறார்கள் என்பது என் சித்தாந்தம். உண்மையில் எட்டாத கொம்பிலுள்ள தேனுக்குக் கொட்டாவி விடுவதுபோல அவர்களுக்குக் கிடைக்காத தோஷம் அப்படி பாடியிருப்பதாகத் தெரிகிறது. ஒருவருக்கு ஆயிரம் தாரமிருப்பினும் ஒரு தாசிக்கு நிகராகார்கள். இதற்காகவே முன்னோர்கள், “லேடியில்லாதவன் பேடி” என்றும், “கிளிபோற் பெண்சாதி யிருந்தாலும் குரங்குபோலொரு கூத்தியாள் வேண்டும்” என்றுங் கூறியிருக்கிறார்கள். தவிரவும்,

 

 

 

நான் என் வாலிபத்தில், “மனோ உல்லாச, மரகத விசுவாச, பிரகாச, அதிநேச, கோலாகல, குஞ்சித ரஞ்சித பாலாமிர்த, நீலாமரகத பூஷணி!” என்ற தாசியை வைத்திருந்தேன்.ஒரு போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அவள்மீது திருஷ்டி ஏற்பட்டது.மெள்ள மெள்ள வருத்துப் போக்காயிருந்தார் அதனால் எங்களிருவருக்கும் லடாய் உண்டாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் போலீஸ்லயன் வழியே போய்க்கொண்டிருந்த நான் கீழே விழுந்துகிடந்த ஒரு பொன்னாபரணத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, என் பின்னாலென்னை யறியாமல்  ஒளிந்து வந்த போலீஸ் ஜெவான் திருட்டுச் சொத்தை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி க் கன்னத்தில் தவடை சுத்திசெய்து ஸ்டேஷனுக்கு இட்டுப் போய் என் விரோதியான போலீஸ் ஜவானிடம் நிறுத்தினான்.  அவன் என்னயேறவிறங்கப் பார்த்து, பின்பு, ‘பூஜை இன்னும் நடக்கட்டும்’ என்றான்.

 

 

வண்ணான் கூட அப்படி வெளுக்கமாட்டான். தகுந்தபடி எனக்குச் சாத்துபடி செய்தான். இது சங்கதி என் தாயார் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு ஓடிவந்து மாரடித்துக்கொண்டாள். என் மனைவி ஓர் மூலையிலிருந்து “காள் காள்” என்று சத்தம் போட்டுக்கொண்டி ருந்தாள். என் தகப்பனோ நாலுகை போட்ட பாரிஸ்டரைத் தருவித்துப் போடுகிறேன், என்ன கேள்விமுறையில்லையா என்று தடபுடல் பண்ணினார்.

 

IMG_3318

இங்கனமிது நிற்க இச்செய்தியறிந்த  என்

 

 

மனோன்மணி

மல்லிகையரும்பு

மதுரைக்கரும்பு

கற்பகத்தரு

களங்கமில்லாத கிளி

கோதிலாவொளி

அன்பின் குன்று

இன்பக்கடலாகிய என்னருமை வைப்பாட்டி! கேள்விப்பட்டு ஓடிவந்து போலீஸ் ஜவானை கண்வலையில் மாட்டி மயக்கம்பூட்டி என்னை விட்டு விடும்படி ஜாடை காட்டினாள்.

 

ஆகா இதல்லவோ ஆச்சரியம்! உடனே விடுதலையாகி வந்து விட்டேன்

 

தாயாரழுது பயனென்ன? மனைவியழுது மலையாய்க் குவித்தென்ன? தகப்பன் பாரிஸ்டரைக் கொண்டு வருகிறேனென்றதினாலானதென்ன? ஆகையால் தாசிகளால் சுகமில்லை  என்று தாம் சொல்வது ஒப்போதப்போ? தாங்களே அறிய வேண்டியது

 

சூத்ரதாரர்:- மித்ரா! உன் அனுபவம் விசித்திரமாகத்தானிருக்கிறது. இன்னும் மற்றுமுள்ள கதைகளைக் கூறுவாயாக.

 

விகடன்: – இதோ கூறுகின்றேன்.

To be continued…………………………………………………………….

ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்! Post No. 2398

 

Drood_300x300

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 December 2015

 

Post No. 2398

 

Time uploaded in London :– 6-08 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அறிவியல் துளிகள் தொடரில் 18, டிசம்பர் 2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

 

இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!

.நாகராஜன்

இறந்த பிறகு உலகம் உங்களை மறக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒன்று மற்றவர்கள் படிக்க உகந்த எதையேனும் எழுதுங்கள், அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுத உகந்த செயல்களைச் செய்யுங்கள் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

உலக பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸின் (பிறப்பு 7-2-1812; மறைவு 8-7-1870) நாவல்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே உயிர் சித்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற் போல மகோன்னதமான படைப்புகளைப் படைத்தவர் என்று உலகம் டிக்கன்ஸைக் கொண்டாடுகிறது.

 

220px-Drood_serial_cover

அதீத உளவியலில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அற்புதமான பேய்க் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார். To be taken with a Grain of Salt மற்றும் The Signalman ஆகிய அவரது இரு பேய்க் கதைகள் பிரபலமானவை.

The Mystery of Edwin Drood என்ற மர்ம நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்த போது இறந்து விட்டார். இதற்குச் சில காலம் கழித்து டி.பி.ஜேம்ஸ் என்ற ஒரு அமெரிக்கருக்கு சார்லஸ் டிக்கன்ஸ் மூலம் ‘ஆவி உலகச் செய்தி’ வந்தது.

 

ஜேம்ஸ் படிக்காத ஒரு மெக்கானிக். வெர்மாண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ என்ற ‘ஆவி ஒருவரின் மேல் ஆவிர்பித்து எழுதுகின்ற முறை’ மூலம், நாவல் டிக்கன்ஸ் மறைந்த போது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தது.

 

1872ஆம் ஆண்டு கிறிஸ்துமஸிலிருந்து தொடங்கி 1873ஆம் ஆண்டு ஜுலை முடிய தவறாமல் நாவலின் அத்தியாயங்கள் ஜேம்ஸுக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ முறை மூலம் வந்தது.

 

இறந்த பிறகு சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி எழுதிய அத்தியாயங்கள் அவர் உயிருடன் இருந்த போது எழுதியதை விட அதிகமானவை. அந்த அத்தியாயங்கள் அற்புதமான முறையில் தொடர்ச்சி, அவரது நடை, சிந்தனா முறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

 

இறப்பதற்கு முன்னர் மற்றும் இறப்பதற்குப் பின்னர் எழுதிய இரண்டு பகுதிகளும் இணைந்து ‘தி மிஸ்ட்ரி ஆஃப் எட்வின் ட்ரூட்’ என்ற தலைப்பில் நாவலாக வெளி வந்தது. எழுதியவர் – சார்லஸ் டிக்கன்ஸ் என்று வேறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

இதைப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் உலகெங்கிமுள்ள ரசிகர்கள் மற்றும் ஆவி உலக அபிமானிகள் அனைவரும் இதைப் பாராட்டினர். ஆவி உலகம் இருப்பதற்கு இந்த நாவல் ஒன்றே அத்தாட்சி என்று அவர்கள் உரக்கக் கூறினர்.

OUIJA

ஆனால் இதை கடுமையாக விமரிசனம் செய்த ஒருவரும் இருந்தார். அவர் பெயர் தியோடர் ஃப்லோராய். உளவியலாளரான அவர் இதற்கும் சார்லஸ் டிக்கன்ஸுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் ஜேம்ஸ் தனது ஆழ்மனதில் உதித்த கற்பனை மூலமாகவே இதை எழுதினார் என்றும் கூறினார்.

 

இரு பெண்மணிகள் சந்திக்கும் ஒரு சீன் மிக அற்புதமாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது போலவே இருக்கிறது என்று விமரிசித்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மேடம் கே. ஃபேர்பேங்க்ஸ் என்ற பெண்மணி இதர பல பகுதிகள் அவரது வழக்கமான நடை போல இல்லை என்றார்.

 

இதற்கிடையில் சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஃபோர்ஸ்டர் என்பவர் டிக்கன்ஸின் நோட்புத்தகங்கள், பேப்பர்களிலிருந்து இந்த நாவலில் பின்னால் வரப் போவதை அவர் முன் கூட்டியே ஒரு அத்தியாயமாக எழுதி வைத்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறினார். அத்தோடு மட்டுமின்றி ஆவி உலகத்திலிருந்து டிக்கன்ஸ் எழுதிய பகுதியில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களே சேர்க்கப்பட்டிருப்பதையும், இதை எழுதிய ஜேம்ஸ், தான் டிக்கன்ஸ் எழுதிய நாவலின் முற்பகுதியைப் படித்திருப்பதை ஒத்துக் கொண்டதையும், டிக்கன்ஸ் இறந்த பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்தே இதை எழுதியிருப்பதையும் ஃபோர்ஸ்டர் சுட்டிக் காட்டினார்.

 

ஆனால் எது எப்படி இருந்த போதிலும் இறந்த பின்னரும் சார்லஸ் டிக்கன்ஸ் ‘எழுதிய’ நாவல் நன்றாகத் தான் இருந்தது!

டிக்கன்ஸ் மெஸ்மரிஸத்தை நன்கு பயின்றவர். அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

இதே போல ஏராளமான மீடியம்கள் ஆவி உலகத் தொடர்பினால் பல புத்தக்கங்களை எழுதி உள்ளனர்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டு தொடங்கிய போது செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் இல்லத்தரசியாகத் திகழ்ந்த பேர்ல் குரண் என்பவர் தன்னிடம் பேஷன்ஸ் ஒர்த் என்பவரின் ஆவி தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார். ஆவி உலகத் தொடர்பினால் வரும் செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஊஜா போர்டை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் 5000 கவிதைகள், ஒரு நாடகம், பல நாவல்களை அவர் எழுதினார். நாளடைவில் ஊஜா போர்டைத் தூக்கிப் போட்டு விட்டு சாதாரண நிலையிலேயே அவர் ஆவியின் மூலம் எழுத ஆரம்பித்தார்.

 

ouija_board

இப்படி ஆவி மூலம் எழுதிய இன்னொரு பிரபல பெண்மணி ஹெலன் ஸ்மித் என்பவர். காதரீன் எலிஸ் முல்லர் என்ற புனைபெயரில் அவர் எழுதலானார். இந்த புனைப் பெயருக்கு உரியவர் 1863இல் ஜெனிவாவில் பிறந்த ஒரு   மீடியம். அவர் தனது முந்தைய ஜென்மத்தில் ஹிந்து குருக்களாக இருந்ததாகக் கூறினார். அராபிய மொழியில் அவர் எழுத ஆரம்பித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தனது மொழியானது செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகத்தின் மொழி என்றார் அவர்.

 

 

இதை ஆராய வந்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் தியோடர் ஃப்ளர்நாய் என்பவர் ஹெலன் ஸ்மித்தின் ஆழ்மனமே இவற்றைப் படைத்தது என்றார். கற்பனை வளம் வாய்ந்த ஒரு பெண்மணியின் மொழியே செவ்வாய் கிரக மொழி என்றார் அவர். ஆனால் ஹெலன் மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தார்.

 

 

பிரேஜில் நாட்டைச் சேர்ந்த மீடியமான பிரான்ஸிஸ்கோ சேவியர் 1910ஆம் ஆண்டில் பிறந்தவர். வரலாறிலேயே ஆட்டோமேடிக் ரைடிங்கிற்காக அதிகப் புகழ் பெற்றவர் இவர். ஒரு லட்சம் பக்கங்களை ஆவியின் மூலமாக இவர் எழுதித் தள்ளி விட்டார். அவர் பள்ளியில் படித்ததே இல்லை என்பது தான் பெரிய அதிசயம்! விஞ்ஞானம், இலக்கியம் என பல்துறை புத்தகங்களை அவர் எழுதியது அனைவரையும் வியக்க வைத்தது! ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் உலகெங்கும் நடத்திய டாக்-ஷோக்கள் மிகவும் பிரபலமாயின. தன் புத்தகங்களிலிருந்து வந்த வருமானத்தை அறக்கட்டளை நிறுவி தர்ம காரியங்களுக்காக அவர் செலவழித்தார்.

 

 

இப்படி சார்லஸ் டிக்கன்ஸ் போல இறந்தும் எழுதியோர் அநேகர் உண்டு. ஆவிகளாக எழுதினாலும் கூட அவர்களின் நூல்கள் சுவையாகத் தான் உள்ளன!

 

Baron-Alexander-Von-Humboldt-to-the-Americ

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

ஜெர்மானிய விஞ்ஞானியான பரோன் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Baron Alexander Von Humboldt) ஒரு முறை அமெரிக்கா வந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்ஸனை (Jefferson) அவரது அலுவலக அறையில் சந்தித்தார். அங்கு மேஜை மீது ஜனாதிபதி ஜெஃபர்ஸனைத் திட்டிக் கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதி இருந்த பத்திரிகை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டார்.

“இந்த பத்திரிகையை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவர், “இதன் ஆசிரியரை சிறையில் அடைத்தாயிற்றா? இவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

 

BARON CURRENCY

ஜெஃபர்ஸன் புன்முறுவல் பூத்தார்.

‘அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், பரோன்” என்ற ஜெஃபர்ஸன்,

“உங்களிடம் யாரேனும் அமெரிக்காவில் சுதந்திரம் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டாலோ அல்லது அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டாலோ, இந்தப் பத்திரிகையைக் காண்பியுங்கள். இதை எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி என்றால் அமெரிக்க ஜனாதிபதி தான்!

************

 

 

No Whiteman is nearby; it is a safe place!!

miinesota

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2397

 

Time uploaded in London :– 16-54

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

MURDER AND STEALING ANECDOTES

In France the Comte de Charolais shot a tiler on the roof of the house for the pleasure of seeing him fall off. Louis XV pardoned him saying, “Understand me well, I will likewise pardon anyone who shoots you.”

 

xxx

 

No white thief nearby!

Dr Whipple, long Bishop of Minnesota, was about to hold religious services at an Indian (American Indian) village in one of the Western states, and before going to the place of the meeting asked the chief, who was his host, whether it was safe for him to leave his effects in the lodge.

“There is no white man within a hundred miles of here”, answered the chief.

balzac

Rob the Customers!

A certain celebrated New York night club proprietor is known for his laxness in the disciplining of his waiters on the point of honesty. It is in effect an extension of the tipping principle. Said he, on one occasion, “Most of the stealing they do is from the customers, so what do I care?”

xxx

Tried and Trusted

A man was once attending a formal dinner party. Finding himself next to a banker with whom he had very little acquaintanceship, he attempted to establish a friendly footing by remarking:

“I used to Mr Jones, who was with your firm. I understand he is a tried and trusted employee.

The banker immediately assumed an air of cold unfriendliness.

“He was trusted, yes; and he will be tried, if we are fortunate enough to catch him.”

xxx

 

balzac2

Balzac robbed!

Balzac was once lying awake in bed when he saw a man enter his room cautiously and attempt to pick the lock of his writing desk. The rogue was not a little disconcerted at hearing a loud laugh from the occupant of the apartment whom he supposed asleep.

“Why do you laugh? asked the thief.

“I am laughing, my good fellow”, said Balzac, “to think what pains and risks you are taking in the hope of finding money by night in a desk where the lawful owner can never find any by day.”

 

The motto which was inserted under the arms of William, Price of Orange, on his accession to the English crown, was Non rapui sed recepi, (I did not steal but I received)

 

This being shown to Dean Swift, he said with a sarcastic smile, “The receiver’s as bad as the thief.”

xxx

 

brahms

Brahms’ Gold Watch!

 

Brahms’ gold watch was stolen one day from his rooms which he never locked. When the police came and urged him to take the matter officially, he simply said, “Leave me in peace! The watch was probably carried away by some poor devil who needs it more than I do.”

brahms2

–Subham–