விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’! (Post No.2336)

Schoeller_Elberfeld

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 2015, நவம்பர் 13ஆம் தேதி இதழில் வெளியான கட்டுரை

 

Compiled by S NAGARAJAN
Date: 17 November 2015
POST No. 2336
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

விஞ்ஞான உலகத்தையே திகைக்க வைத்த குதிரை ஒன்றை ‘மிருக உலகின் கணித விந்தை’ என்று விஞ்ஞானிகள் புகழ்ந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்று,

 

எல்பர்ஃபெல்ட் குதிரை)கள் (Elberfeld horses) என்று புகழ்பெற்ற அந்த குதிரைகளைப் பற்றி ‘உளவியல் உலகில் மிகவும் பரபரப்பூட்டிய சம்பவம்’ என்று டாக்டர் இ. க்ளாராபிட் (Dr E.Clarapide) வர்ணித்தார்.

1891ஆம் ஆண்டு நடந்த விஷயம் இது!

இந்தக் குதிரைகளின் அபார புத்திசாலித்தனத்தை முதலில் கண்டு பிடித்தவர் வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர். அவர் ஒரு பள்ளி வாத்தியார். அவர் குதிரைகளை ஒரு விசேஷமான முறையில் பயிற்றுவித்தார். விளைவோ அபாரமாக இருந்தது.

க்ளூஜ் ஹான்ஸ் என்ற குதிரை கணக்குப் போடும் திறனைக் கொண்டிருந்தது.

ஒரு மேஜை மீது கொட்டைகளை வைத்தால் அதில் எத்தனை இருக்கிறது என்பதை தனது குளம்புகளைத் தட்டிக் காட்டி அது சொல்லும்! வான் ஆஸ்டன் முதலில் நம்பர்களை உரக்கச் சொல்வார். பின்னர் ஒரு கரும்பலகையில் அந்த எண்ணை எழுதிக் காண்பிப்பார். அதைப் பார்க்கும் குதிரை அப்படியே அந்த எண்ணை உட்கிரகித்துக் கொண்டு தன் குளம்புகளால் அந்த எண்ணைத் தட்டிக் காண்பிக்கும்! ஆனால் இதை மோசடி என்று பல பேர் சொல்ல ஆரம்பித்தார்கள். தனது அபாரமான குதிரையின் கணிதத் திறமையைப் பாராட்டாவிட்டாலும் சரி, மோசடி என்கிறார்களே என்று மனமுடைந்த வான் ஆஸ்டன் அந்த விரக்தியிலேயே இறந்து போனார். ஆனால் பல விஞ்ஞானிகள் அந்தக் குதிரையை ஆராய்ந்த பின்னர் மோசடி ஒன்றும் இல்லை என்று கூறினர். என்றாலும் அவர் இறந்தது இறந்தது தானே!

1909இல் அவர் இறந்த பின்னர் அவரது பயிற்சி உத்தியால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி அந்தப் பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் பெயர் ஹெர் க்ரால் (Herr Krall). க்ரால் பொறுமையாக தன்னுடைய சொந்தக் குதிரைகளுக்குப் பயிற்சியை அளிக்க ஆரம்பித்தார்.

குதிரைகள் அடிப்படை கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைக் கற்றுக் கொண்டன.

முஹம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் ஆகிய பெயர்களை உடைய தனது நான்கு குதிரைகளுக்கு இந்தக் கணித வித்தையை அவர் கற்றுக் கொடுத்தார். நான்கு மாதங்களில் ஒரு அபாரமான முன்னேற்றம் ஏற்பட்டது. குதிரைகள் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டையும் போட ஆரம்பித்தன (Square and cube roots). அத்துடன் ஆங்கில ஸ்பெல்லிங்கையும் கூடக் கற்றுக் கொண்டன.

34 என்ற எண்ணை உரக்கக் கூவினால் நான்கு குதிரைகளும் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் தட்டும்! க்ரால் ‘Denkende Tiere’ என்ற ஒரு நூலை இது குறித்து எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஞ்ஞானிகள் இந்த விந்தையால் பெரிதும் கவரப்பட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக விஞ்ஞானிகளின் குழு குதிரைகளின் மீது ஆய்வு நடத்த வர ஆரம்பித்தது. ஏராளமான கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. பல விஞ்ஞானிகள் திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர் – இது உண்மை தான் என்று!

நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (Maurice Materlink) (பிறப்பு 28/8/1862 மரணம் 6/5/1949) நேரடியாக எல்பர்பெல்ட் நகருக்கு வந்தார். முஹம்மதைப் பார்த்தார். அந்தக் குதிரைக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். உடனடியாக குதிரை அவரது பெயரை குளம்புகளினால் தட்டிக் கூறியது. மேடர்லிங்க் பல கணக்குகளைப் போடச் சொன்னார். அத்தனை கணக்குகளையும் முஹம்மது மிகச் சரியாகப் போட்டது. ஒரு நம்பரின் ஸ்குயர் ரூட்டை கேட்ட போது குதிரை அதைப் போட மறுத்தது. பின்னால் தான் அது ஸ்குயர் ரூட் போடுவதற்கான  சரியான எண் இல்லை  என்பதை மேடர்லிங்க் புரிந்து கொண்டார்.

சோதனைகள் மிக்க கவனமுடன் நடத்தப்பட்டன. யாரேனும் சிக்னல் தருகிறார்களா என்ற சந்தேகத்தை சில விஞ்ஞானிகள் கிளப்பினர். உடனே டெலிபோன் மூலம் எண்கள் குதிரைகளுக்குத் தரப்பட்டன. ஹெட் போனை குதிரைகளின் காதில் மாட்டி விட்டனர். எண்கள் உரக்கச் சொல்லப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. சில சமயம் ப்ளாக்போர்டில் எண்கள் எழுதப்பட்டு கணக்குகள் எழுதப்பட்டன. சில சமயம் எண்களை குதிரைகளின் முதுகில் எழுதிக் காட்டினர்.

அத்தனை சோதனைகளிலும் குதிரைகள் தேறின!

ஆனால் ஆறு மாதங்கள் கற்ற பின்னர் அதற்கு மேல் ஒரு முன்னேற்றமும் அவைகளுக்கு ஏற்படவில்லை.

டாக்டர் எடிங்கர், ஃப்ராங்க்பர்ட் நகரைச் சேர்ந்த பிரபல நியுராலஜிஸ்டான டாக்டர் ஹெச் க்ராமர் மற்றும் ஸ்டட்கார்ட் நகரைச் சேர்ந்த டாக்டர் ஹெச். ஈ. ஜைக்லர் மற்றும் பேசெலி நகரைச் சேர்ந்த டாக்டர் பால் சாராஸிஸ் ஆகியோர் இந்த சோதனைகளை நிகழ்த்தி ‘கணக்குப் போடும் குதிரைகள் ஒரு மாபெரும் அற்புதம்’ என்று நற்சான்றிதழைத் தந்தனர்!

க்ரால் ஒரு குட்டி யானையையும் பயிற்றுவிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சோம்பேறி யானை எதையும் கற்க மறுத்து விட்டது.

இன்று வரை விஞ்ஞான உலகம் எல்பர்ஃபெல்ட் குதிரைகள் எப்படிக் கற்றுக் கொண்டன என்ற புதிரை விடுவிக்கவில்லை!

விஞ்ஞானம் விளக்க முடியாத ஏராளமான புதிர்களுள் கணக்குப் போடும் குதிரைகளும் ஒன்று!

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

பிரபல இரசாயன இயல் விஞ்ஞானியான ஹெர்மன் ஃபிஷர் (1852-1959) தூக்க வியாதிக்கு வெரோனல் என்ற மருந்தைக் கண்டு பிடித்து 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

ஒரு முறை அவர் பிரபல நாவலாசிரியரான ஹெர்மன் சுடர்மானைச் (Hermanna sudarmann) சந்தித்தார்.

சுடர்மான் ஃபிஷரைக் கிண்டல் செய்யும் விதமாக, உங்கள் வெரோனலைச் சாப்பிடக் கூட வேண்டாம். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு தூக்கம் வந்து விடுகிறது” என்றார்.

உடனே ஃபிஷர் பதிலடி கொடுத்தார் இப்படி:” அடடா! என்ன ஒற்றுமை பாருங்கள்! உங்கள் நாவல்கள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தாலேயே போதும், நல்ல தூக்கம் வந்து விடுகிறது!’

இருவரும் நகைத்தனர்! எழுத்தாளருக்கு விஞ்ஞானி சோடையா, என்ன?

******

 

What can a Cock teach you? (Post 2335)

cock1

Compiled by London swaminathan
Date: 16 November 2015
POST No. 2335
Time uploaded in London :– 21-45
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Sanskrit is a beautiful language. It has at least some couplets on every subject in the world. Here are two couplets about Cocks and Books.

Lessons from Cocks (Kukkutat Jnatavyaani )

Yuddham = Fighting

Praatarutthanam = Early rising

Bhojanam = Sharing food with relatives

Striiraksanam = Protecting females

Yuddham cha praatarutthaanam bhojanam Saha bandhubih
Striya maapadgathaam rakseschatuh sikseta kukkutaath

Subasita ratna bhandaagaaram 162.403

 

Books 2

Protection of Books (Pustaka Rasksanam)

The following four things will damage a book. So those who want to protect books.

Taila = oil
Jala = water

Sithila bandhah = improper binding
Murkhahastadaana = giving to an ignorant person

Tailaadrakshet jalaadrakshed sithila bandhanaat
Muurkahaste na daatavyamidam vadati pustakam

–Subham–

சமாதி என்றால் என்ன? சிவனிடம் பார்வதி கேட்ட கேள்வி! (கட்டுரை எண்: 2334)

samadhi

Compiled  by London swaminathan

Date: 16 November 2015

POST No. 2334

Time uploaded in London :– 9-49 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல்:-

பார்வதி: நாதா! அடிக்கடி என்னை கயிலாயத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறீர்கள். சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலைப் பூசியும் ஆனந்தமாக இருக்கிறீர்கள். எனக்குப் பிரிவு துயர் தாங்கவில்லை. என் மனதை சாந்தப்படுத்த எனக்கும் தியானம், சமாதி நிலை முதலியவற்றை கற்றுத் தரக்கூடாதா?

சிவன்: அன்பே! ஆருயிரே! நீ இல்லாமல் இவ்வுலகம் இயங்கமுடியாதே. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. வா, உனக்குக் கற்றுத் தருகிறேன். இதோ இப்படி பத்மாசனத்தில் அமர். கண்களை மூடு. தியானத்தைத் துவங்கு. மனதை உள்முகமாகத் திருப்பு.

என்ன தெரிகிறது?

பார்வதி: உங்கள் உருவம்தான் தெரிகிறது.

சிவன்: அதையும் தாண்டிச் செல். இப்போது என்ன தெரிகிறது?

பார்: மிகப் பெரிய ஜோதி (ஒளி) தெரிகிறது.

சிவன்: நல்லது.இன்னும் மேலே செல். என்ன காண்கிறாய்?

பார்: ஓம்கார நாதம் என் காதில் ஒலிக்கிறது.

சிவன்: அந்த நாதத்தையும் தாண்டிச் செல்வாயாக! இப்போது என்ன அனுபவம் ஏற்படுகிறது?

பார்: ! ! ! ! !

சிவனுடைய கடைசி கேள்விகு பார்வதி பதிலே சொல்லவில்லை. அவள் பிரம்மத்தில் (கடவுளிடம்) ஐக்கியமாகிவிட்டாள். அங்கே கேட்பவரும் இல்லை, கேள்வியும் இல்லை. காண்பவருமில்லை, காணப்படும் பொருளுமில்லை.எல்லாம் பிரம்மாண்டசக்தியில், மூலமுதற் பொருளில் கரைந்து விட்டது. மாறுதலற்ற, உருவமற்ற ஒரே பொருள்தான் அங்கே உண்டு.

திடீரென பார்வதியின் சன்னமான, ஆனந்தமயமான குரல் ஒலித்தது.

அஹம் பிரம்மாஸ்மி

நானே பிரம்மம் (இறைவன்)!

இதையே அருணகிரிநாதர் சும்ம இருப்பதே சுகமென்பார். சும்மா இரு! சொல்  அற! என்பார்.

இது வட கேரள காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ராமதாஸ் சொன்ன கதை! மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன். இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய நான்கு கதைகளை இதுவரை படித்திராவிடில் தொடருங்கள்………….

Deepak-Osho

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 , தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

RK

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:–

ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

ice1

கதை 2:

புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

கதை 3:-

ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

ice2

கதை 4:

நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

-சுபம்-

கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்! (POST No. 2333)

co metre

Radio Talk written by S NAGARAJAN

Date: 16 November 2015

POST No. 2333

Time uploaded in London :– 9- 31 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

carbon-monoxide-alarm-199357

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.;part 9 on 15th nov.

 

வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.

அபாயகரமான இந்த வாயு சுவாசத்தின் போது உள்ளே சென்றால் தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம்,மார்பு வலி, நினைவற்று கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

CarbonMonoxideDetectorBG_hero_image

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதாக இந்த வாயுவினால் வீட்டிலும் வெளியிலும் பாதிக்கப்படுவதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

சமையலுக்காக வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டவ்வுகள் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்தாத ஸ்டவ்வுகளாக இருப்பது அவசியம்.

வீட்டில் கார் காரேஜில் நின்ற நிலையிலேயே வெகு நேரம் கார் எஞ்சினை இயக்காமல் இருக்க வேண்டும். காரின் எஞ்சின்களை கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றாத தரக்கட்டுப்பாடு நிலையில் உருவாக்கப்பட்டதா என்று சோதித்து கார்களை தெரிவு செய்ய வேண்டும்.

சிகரட்டை புகைக்கும் ஒருவர் தனக்குக் கெடுதலைச் செய்து கொள்வதோடு அருகில் உள்ள மற்றவருக்கும் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கிறார். ஒரு பாக்கட் சிகரட்டை புகைக்கும் ஒருவருக்கு கார்பன் மானாக்ஸைடின் அளவு இருபது பார்ட்ஸ் பர் மில்லியன் (0 parts per million)என்ற அபாய அளவில் இருக்கிறது.கார்பன் மானாக்ஸைடு நுரையீரல் வழியே ரத்தத்தை அடைந்து ஹீமோகுளோபினுடன் கலக்கிறது. உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. கார்பன் மானாக்ஸைடின் அளவு ஒருவரின் ரத்தத்தில் அதிகமாகும் போது அவரது ரத்தம் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் திறனில் குறைவு படுகிறது. நாளாக நாளாக இதய வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது.

ஆகவே சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை வெளியேற்றத்தைத் தடுப்பதும், வீட்டிலும் வெளியிலும் புகை பிடிப்பதால் ஏற்படும் கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதும் வளி மண்டலத்தைச் சுத்தமாக்க உதவும் வழிகளாகும்.

கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவோம். புகை பிடிப்பவரிடம் கார்பன் மானாக்ஸைடு தீமைகளைக் கூறி அவரைக் காப்பாற்றும் செயலையும் செய்ய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் முயல வேண்டும். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுக்கும், இல்லச் சூழலுக்கும் எதிரியான கார்பன்மானாக்ஸைடு நச்சுப் புகையைத் தவிர்ப்போம்; வாழ்வை வளமாக்குவோம்!

To be continued……………………………..

DIWALI AT NO.10 DOWNING STREET, LONDON (Post 2332)

Compiled  by London swaminathan

Date: 15 November 2015

POST No. 2331

Time uploaded in London :– 19-29

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

David Cameron, Prime Minister of Great Britain, celebrated the Hindu festival Diwali in his house for the sixth year on 10th November 2015. He has invited about 100 prominent people from Hindu, Sikh and Jain communities for the Diwali/ Deepavali lunch. Here are some pictures released today by the PM’s office. 

swami and cameron

Blog writer and former BBC Producer London swaminathan with Mr Cameron. Swaminathan represented Hindu Forum of Britain along with a few other representatives at the lunch.

pritipatel

Ms Preeti Patel (extreme left in the picture), Minister of Commerce, with Cameron. Sari clad women are guests at the lunch.

dancer cameron

Some artistes at the Diwali Lunch

–Subham.

 

 

Ramdas Story: Transcend the Gunas (Post 2331)

gunas

Compiled  by London swaminathan

Date: 15 November 2015

POST No. 2331

Time uploaded in London :– 18-09

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

A traveller passing through a forest late in the evening, was captured by three robbers. All the three attacked him together One bound him with a rope and another took a knife to kill him .At this the third pleaded with his comrades not to kill the traveller. He prevailed over his comrades to set him free. On coming to know that he was to go to a nearby village, he escorted him up to the outskirts of the village and asked him to go further on himself. He regretted his inability to accompany him, saying that he could not go to the village as he would be arrested by the police, being a robber himself. So the robber returned.

3-gunasop

Now let us see who these robber s were. They were the three qualities of nature which caused the souls bondage and ignorance — Sattwa, Rajas and Tamas. Rajas tried to bind the soul to the desires of the flesh. Tamas sought to destroy the soul by overcoming it with sleep and torpor. The role of Satwa was to liberate it from the clutches of Rajas and Tamas. Though Satwa took him up to the boundary beyond which was the realm of the Atman, it could not accompany him there. Even Satwa Guna had no entry into the realm. All the three qualities must be transcended before you can enter into the infinity of divine existence in which you lose yourself. He who goes there never returns to tell the tale of his experience s because there he becomes one with the eternal reality — God.

–Subham–

பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம் (Post 2330)

coral stamps

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 November 2015

POST No. 2330

Time uploaded in London :– 17-47

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.

 

 

உலகில் பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பெரிதும் துணை செய்வது பவளப் பாறைகள் அல்லது பவளத் திட்டுகள் ஆகும். இவை வெகுவாக உலகெங்கும் அழிந்து வருகின்றன.சுமார் இருபத்தெட்டுலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பவளத் திட்டுகள் உலகெங்கும் உள்ளன.

இவை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உயிர் வாழ உதவுகின்றன. இவற்றை ‘கடலில் உள்ள மழைக்காடுகள்’ (“rainforests of the seas”) என்றே அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவை தரும் நன்மைகள் எண்ணிலடங்கா.

கடல் அலைகளாலும் சூறாவளிகளாலும் கடற்கரைகள் அழியாமல் பாதுகாக்க பவளத் திட்டுகளே உதவுகின்றன. உணவாகவும் மருந்தாகவும் இவை அமைகின்றன.

சுற்றுலாவை மேம்படுத்திஆங்காங்கே வாழும் உள்ளூர் மக்களுக்கும் சமூகத்திற்கும் இவை பொருளாதார ரீதியாக  உதவுகின்றன.

சுற்றுப்புறச் சூழல் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தோமானால் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் வண்ணம் கடல் அமைப்புகளோடு ஒரு அங்கமென இவைகள் திகழ்வதால் இவற்றின் மதிப்பு மிகவும் அதிகம். நிலத்தில் மழைக்காடுகள் என்று நாம் கூறுவது போல கடலுக்கடியில் அமைந்துள்ள மழைக்காடுகளாக இவை திகழ்கின்றன.

coral1

வெப்ப பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் ஊட்டச் சத்துகள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் வெப்பமான நீர் இப்படிப்பட்ட சத்துக்களை எல்லைக்குட்பட்டதாக குறைவாகவே இருக்கச் செய்கிறது. ஆகவே தான் இவற்றை ‘கடலில் உள்ள பாலைவனங்கள்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் பவளத் திட்டுகள் உணவுச் சங்கிலி ஒன்றை அமைத்து உணவை 25 சதவிகிதம் மீன்களுக்கு வழங்குகிறது.இந்த மீன்கள் தங்களது தங்குமிடமாக பவளத் திட்டுகளையே ஆக்கிக் கொள்கின்றன. கடலின் ஏராளமான உயிரினங்களுக்கு இளமைப் பருவத் தாலாட்டும் இடமாகவும் பவளத் திட்டுக்கள் அமைகின்றன. இந்த பவளத் திட்டுகளை அழிந்து பட்டால் இதை நம்பி உள்ள அனைத்து உயிரினங்களும் அழியும்; சுற்றுப்புறச் சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவை அழிக்கப்பட்டு வருவதாக இன் டர்நேஷனல் யூனியன் •பார் கன்ஸர்வேஷம் ஆ•ப் நேச்சர் (International Union for Conaservation of Nature- IUCN) எனப்படும் உலகின் இயற்கை பாதுகாப்பு பன்னாட்டு சங்கம் தனது ஆய்வின்  மூலமாகக் கண்டறிந்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.உலகின் இருபது சதவிகித பவளத் திட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறும் இந்த நிறுவனம் இதைப் பாதுகாக்க அனைத்து நாட்டு மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது. கடல்புறம் சார்ந்த மக்களும் சுற்றுலாப் பயணமாக பவளத் திட்டுகளைப் பார்க்கச் செல்லும்  மக்களும் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இவற்றைப் பேணிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்

To be continued………………………

What is Samadhi? Post No. 2329

samadhi

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2329

Time uploaded in London :– 20-31

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Once there was a talk between Shiva and Parvati. Shiva is one of the Hindu Trinity, who is always in a state of Samadhi. His place is often in the cremation ground. He used to freely roam about, never feeling separate from the universe. He would leave Parvati in Kailas, while on his itinerary. Parvati asked Shiva to teach her to meditate and enter samadhi so that she could always remain in that state without at any time feeling the separation. Shiva asked her to sit down in Asana, close her eyes and turn her gaze within and meditate. Then the following dialogue took place

Shiva :– What do you see now?

Parvati :–I see your form before my mental vision.

Shiva :– Go beyond that form. What do you see now?

Parvati :–I see a brilliant light

Shiva :– Still go beyond that light. What next?

Parvati :–I hear the sound Om

Shiva :– Transcend the sound. What is your experience now?

To this last question, there was no answer. Parvati had become one with the Cosmic Self. There was now no subject and object, no seer and seen, no hearer or heard, for her. All had dissolved into one really, one Existence. There was only one Changeless, nameless, formless, non-dual Brahman. Sometime later, when Parvati was gradually coming back to body consciousness, she was heard uttering softly

I am Brahman

This story of Shiva and Parvati may or may not be true but its value consists in teaching, by way of illustration, the process of meditation and ultimate realisation.

Deepak-Osho

Story told by Swami Ramdas of Anandashram, North Kerala

–Subham–

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2328

Time uploaded in London :– காலை 10-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.

நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.

அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!

coin valluvar

யார் அந்த எழுவர்?

பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.

அவ்வை

உப்பை

அதிகமான் (ஆண்)

உறுவை

கபிலர் (ஆண்)

வள்ளியம்மை

திருவள்ளுவர் (ஆண்)

பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படி, சுவாமி முடியும்?” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.

அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–

என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ”

 

இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.

இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.

 

“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்

சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே

கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?

அற்பனோ அன்னாய் அரன்?”

 

இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.

மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:

அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.

கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்

விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்

வாட்டமுனக்கேன்? மகிழ்!

ஔவையார்1

நான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.

சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்

அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  – மண்டி

அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை

நிலைகண்டு நீயறிந்து நில்.

இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.

நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்

உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்

நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்

தமக்குத் தொழிலென்னதான்?

ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:

அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்

இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை

யாடும் பெருமான் அவன்”

இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்

ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.

எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?

அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி

அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே

வருகுவதுதானே வரும்?

 

sundarambal2

இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.

எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!

உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.

வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!

–சுபம்–

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

Radio Talk written by S NAGARAJAN

Date: 14 November 2015

POST No. 2327

Time uploaded in London :– 10-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.

Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.

 

8.தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது.இந்த மாறுதலுக்குக் காரணம் மனிதனின் செயல்களே என்பது வருத்தமூட்டும் செய்தி!

புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன.

தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (global dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.

க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.

க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன்  மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இன்றைய உடனடிக் கடமை புவி வெப்பமடைவதைத் தடுப்பதே ஆகும்.

தொடரும்…………………………….