ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

Written by S NAGARAJAN

Post No.2216

Date: 5   October 2015

Time uploaded in London: 16-21

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

தமிழாகரனின் அருட்செயல்கள்!

.நாகராஜன்

தமிழாகரன்

தமிழக வரலாற்றில் பொன்னேட்டினால் பொறிக்க வேண்டிய ஏடுகள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாழ்ந்த காலம்!

அறம் தலை நிறுத்த, மறத்தை நீக்க அவதாரங்கள் தோன்றுவது இந்து மத கொள்கையின் படி இடைவிடாத சுழற்சி கொண்ட ஒரு தத்துவமாகும்.

இப்படிப்பட்ட அவதாரங்களுள் முருகனே தோன்றியது போல வந்த இளம் பாலகன் திருஞானசம்பந்தர்.

முருகனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் ‘எண்ணி’ மாளா. எண்ணி, நினைக்கவும் அதிசயம், எண்ணிக்கையிலும் அதிசயம். (இரண்டு ‘எண்ணி’ போட்டுக் கொள்ளலாம். எண்ணி எண்ணி மாளா!)

இளமை, தேவியிடம் பால் அருந்தியது, துடிப்பு, ஆற்றல், எதிலும் வெற்றி, சூர சம்ஹாரம் (சமண சம்ஹாரம் என அர்த்தம் கொள்க), பக்தர்களுக்கு அருள் பாலிப்பு, இப்படிப் பல ஒற்றுமைகளுள் தலையாய ஒன்று தமிழை உடலாகத் தரித்தது.

பல சந்த வகைகளையும், புதுப் பாணிகளையும், உவமான உவமேயங்களையும், பல்வேறு தோஷ நிவர்த்திக்கான பதிகங்களையும், இறைவனின் பெருமையைச் சொல்லும் பாடல்களையும் தம் பாக்களில் தந்தவர் ஞான சம்பந்தர். பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள் + பதிக பலனைச் சொல்லும் பாடல் ஒன்று, ஆக மொத்தம் பதினொன்று) என்பதைக் கணக்கிட்டால் வருவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் பாடல்கள். அடேயப்பா என்று சொல்ல வைக்கும் பெரிய தொகை. அந்தப் பாடல்களை மூன்றாம் வயது தொடங்கி பதினாறாம் வயதுக்குள் பாடி இருக்கிறார். அதாவது 4748 நாட்களுக்குள் (365 x 13 + லீப் வருட நாட்கள் 3 = 4748) அப்படியென்றால் ஒரு நாளைக்கு 37.06 பாடல்கள், அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு பாடல்; ஒரு நாழிகை = 20 நிமிடம் ) இப்படிப் பொருள் பொதிந்த இறைவன் துதிகளை இவ்வளவு சிறப்புடனும் வனப்புடனும் உலக சரித்திரத்தில் பாடியதாக கற்பனைபயாகக் கூட கதை ஒன்று இல்லை!

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

 

அவரது அருட்செயல்களோ ஏராளம். அவற்றுள் முக்கியமான பத்தை மனதிற்குள் என்றும் நிறுத்தும் அளவு ஒரு சிறிய பாட்டில் அடக்கினார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்ய வந்த தேவனார் என்னும் பக்தர்.

ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்                                              

பாடல், பனை, தாளம், பாலை நெய்தல், – ஏடு எதிர், வெப்பு,                                  

என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்                           

தென்புகலி வேந்தன் செயல்

 

 

என்ன அருமையான பாடல்! இன்று நமக்குக் கிடைத்துள்ள திருஞானசம்பந்தரின் பாடல்கள் சுமார் 4287இல் 1256 பாடல்களில் அவரது வரலாறு (அவர் மூலமாகவே) விளக்கப்படுவதால் அகச்சான்று நிலை பெறுகிறது. இது பொய், புனைகதை என்ற வாதம் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது! இது நாம் செய்த தவப்பயனே!

 

 

அருள் செயல்கள்

அருட்செயல்களின் பதிகங்களாவன:-

ஓடம் திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (‘கொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம்)

சிவிகைநெல்வாயில் அரத்துறைப் பதிகம் (‘எந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம்)

உலவாக் கிழிதிருவாவடுதுறைப் பதிகம் (‘இடரினும் தளரினும்என்று தொடங்கும் பதிகம்)

அடைக்கப் பாடல்மறைக்காட்டுச்சதுரம் மறைப் பதிகம்

பனைதிரு ஓத்தூர்ப் பதிகம் (‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகம்)

தாளம்திருக்கோலக்காப் பதிகம் (‘மடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகம்)

பாலை நெய்தல்திருநனிபள்ளிப் பதிகம் (‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகம்)

ஏடு எதிர்திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம்)

வெப்புதிருநீற்றுப் பதிகம் (மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகம்)

என்புக்கு உயிர் கொடுத்தல்திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் பதிகம்)

ஆக பத்துப் பதிகங்கள் இந்தப் பாடல் கூறும் முக்கியப் பதிகங்கள்!

 

 

அருள் செயல்களின் வரலாறுகள்

 

இந்த அருள் செயல்களின் விவரங்கள் சுருக்கமாக இதோ:-

ஓடம்பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாடு சென்று பல தலங்களைத் தரிசித்த தமிழாகரர் காவிரியை அடைந்து ஓடமேறிகொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம் பாட ஓடம், படகோட்டி இன்றி தானாகவே திருக்கொள்ளம்புதூரை அடைந்தது!

 

சிவிகை: திருவடி நோக ஒவ்வொரு தலமாகத் தரிசித்து வந்த ஞானசம்பந்தர் மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார். அவரது துன்பம் கண்ட சிவபிரான் அரத்துறை என்ற தலத்தில் வாழும் அந்தணர் கனவில் தோன்றி, ‘ஞானசம்பந்தன் எம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்தில் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியவற்றை வைத்துள்ளோம். அதைக் கொடுத்து அழைத்து வருக என ஆணையிட்டான். அதே போல சம்பந்தர் கனவிலும் தோன்றி, ‘யாம் தரும் பொருள்களை ஏற்று வருகஎனக் கட்டளையிட்டான்.

அரத்துறை வாழ் அந்தணர்கள் வியந்து எழுந்து அனைத்தையும் ஞானசம்பந்தருக்குத் தந்து சிவிகையில் அமர்ந்து வர வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் சிவிகையை மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தை ஓதி அதில் ஆரோகணித்தார். அப்போதுஎந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார்.

 

 

உலவாக் கிழி:- திருப்பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறையை அடைந்த சம்பந்தர் தனது தந்தையாரான சிவபாத இருதயரைச் சந்தித்த போது அவர், தான் வேள்வி செய்வதற்குப் பொருள் வேண்டுமெனக் கேட்டார். தன்னிடம் பொருள் இல்லாததைக் கண்டு சம்பந்தர் வருந்தினார். உடனேஇடரினும் தளரினும்என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விண்ணப்பித்தார். உடன் சிவ கணங்களுள் ஒன்று பொற்கிழி ஒன்றை மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து, ‘இது எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி. இறைவன் உம்மிடம் அளிக்கப் பணித்துள்ளார்என்று கூறி மறைந்தது. அந்தப் பொன்னை சம்பந்தர் தந்தையிடம் கொடுக்க யாகம் நடந்தேறியது.

 

 

அடைக்கப் பாடல்:- அப்பரும் ஞானசம்பந்தரும் திருமறைக்காடு அடைந்த போது ஆலய வாயிலை அணுகினர். வேதங்களால் பூஜிக்கப்பட்ட கோவிலின் திருக் கதவுகள் திறக்கவே இல்லை. மக்களோ இன்னொரு வாயில் அமைத்து உள்ளே சென்று வழிபட்டு வருதலையும் அவர்கள் கண்டனர். அப்பர்பண்ணினேர் மொழியாள்என்ற பதிகத்தைப் பாடினார். பாடலின் சுவையால் மகிழ்ந்த சிவபெருமான் கதவுகள் திறக்கும்படி அருளினார். இருவரும் உள்ளே சென்று வணங்கினர். அப்பர் சம்பந்தரை நோக்கி, இனி இக்கதவுகள் திறக்கவும் அடைக்கவும் இருக்கும்படி இருத்தல் வேண்டும். நீங்கள் இப்போது இக்கதவுகள் மூடுவதற்கு பாடல் பாடி அருளுகஎன்றார். அது கேட்டு சம்பந்தரும், ‘சதுரம் மறைஎனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். கதவுகள் மூடின.

 

 

பனை:- ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக் கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என வேண்டினர். சம்பந்தர் உடனேபூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள் பெண்பனைகளாயின!

 

 

தாளம் :- சம்பந்தர் திருக்கோலக்கா இறைவனைத் துதிக்கும் போதுமடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகத்தைத் தம் கைகளால் தாளம் இட்டுப் பாடினார். அவர் கைகள் சிவந்தன. இதைக் கண்ட இறைவன் அவருக்கு திரு ஐந்தெழுத்து எழுதப்பட்ட பொன்னாலாகிய பொற்றாளத்தை அருளிக் கொடுத்தார். அத்தாளத்தைப் பெற்ற சம்பந்தர் பதிகத்தைப் பொற்றாளமிட்டுப் பாடினார்.

 

 

பாலை நெய்தல் :- சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதரித்த திருத்தலம் திரு நனிபள்ளி. அங்கு அவர் செல்லும் போது அவர் பாதம் நோவதைக் காணச் சகியாத அவரது தந்தையார் அவரைத் தம் தோள் மீது அமர்த்தி நடக்க ஆரம்பித்தார். நனி பள்ளி அடைந்த ஞானசம்பந்தர், ‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகத்தை அருளினார். அதுவரை வளம் குன்றி பாலையாக இருந்த நனிபள்ளி, சம்பந்தரின் வரவால் நெய்தலாக மாறிப் பின்னர் மருதமாயிற்று.

 

 

ஏடு எதிர் :- அனல் வாதத்தில் தோற்ற சமணர் சம்பந்தரை புனல் வாதத்திற்கு அழைத்தனர். தம் தம் கொள்கைகளை எழுதி ஆற்றில் விட எது ஆற்றினை எதிர்த்துச் செல்கிறதோ அந்தக் கொள்கை வென்றதாகக் கொள்ளப்படும் என்ற அவர்களது வாதத்தை ஏற்றுவாழ்க அந்தணர்என்ற பதிகத்தை எழுதி ஆற்றில் விடவே அது எதிர்த்துச் சென்றது. சமணர் தம் ஏடு ஆற்றோடு சென்றது. பின்னர்வன்னியும் மத்தமும்என்ற பதிகத்தை அருள அது வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோவிலின் அருகில் சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் திரு ஏடகம் என வழங்கப்படலாயிற்று.

வெப்பு :- பாண்டிய மன்னன் வெப்பு நோயால் துன்பப் பட சம்பந்தர், ‘மந்திரமாவது நீறுஎன்ற திருநீற்றுப் பதிகத்தை அருளினார். அவர், திருநீற்றைத் தடவிய அளவில் பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தணிந்தது.

 

என்புக்கு உயிர் கொடுத்தல் :- திரு மயிலையில் சிவ நேசச் செல்வரின் மகளான பூம்பாவை பாம்பு கடித்து இறக்கவே, அந்த பூம்பாவையின் எலும்பினை வைத்து. [மட்டிட்ட புன்னைஎன்ற பதிகம் பாடி அவளைச் சம்பந்தர் உயிர்ப்பித்தார்.

இவை தவிர இன்னும் பல அருட்செயல்கள் அவர் வாழ்வில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளன.

தமிழ்நேசர்கள் அவற்றையெல்லாம் படிக்கப் படிக்கத் தமிழாகரனின் தமிழ் எப்படிப்பட்ட தெய்வத் தமிழ் என்பதை உணரலாம்.

 

தெய்வத் தமிழால் அனைத்தும் முடியும் என்பதைச் சொல்லத் தான் அவர் தன்னைத் தமிழ் ஆகரன் (தமிழை உடலாகக் கொண்டவன்) என்று கூறிக் கொண்டாரோ!

திருநெறிய தமிழ் வாழ்க! திருஞானசம்பந்தர் நாமம் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 

*********

Saints do not Toil for Food!

woodcutter_cutting_wood

Compiled by London swaminathan

Post No.2215

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 15-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

There was a Sadhu (ascetic) in Malabar, a tall and stout person. He was in the police service before becoming a sadhu. He used to wear only a small towel round his waist. Once when he was going for his Biksha ( asking for alms/food), a householder, seeing his good physique, asked him why he should not work and earn his bread, instead of begging for it. The sadhu was told that he would be given a meal if he was prepared to cut a few logs of firewood that were lying in the householder’s court yard.

The Sadhu without uttering a word, started splitting the firewood with an axe given to him and, within a short time, cut the whole lot and stacked the pieces in the proper place. Then, leaving the axe near the stack, the Sadhu simply walked away.

The householder saw the Sadhu going without taking food. He called him back and asked him why he was going before getting his meal. The Sadhu then replied, “I do not take my food where I work, and I do not work where I take my food!”. This means Sadhus subsist only upon alms offered to them with love.

–Story told by Swami Ramdas of Anandashram, Kerala.

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

பாரதியார் கவிநயம்

bharathi9-150x150

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 9

Compiled by ச.நாகராஜன்

Post No.2213

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 11-47

Don’t use pictures. Don’t reblog for at least a week.

ச.நாகராஜன்

பாரதியார் கவிநயம்

ரா.அ.பத்மநாபன் தொகுத்துள்ள அருமையான இந்த நூல் பாரதி நூற்றாண்டு வெளியீடாக 1982 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 248 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ12.50

 

ரா..பத்மநாபன் பற்றிய அறிமுகம் பாரதி அன்பர்களுக்குத் தேவையில்லை. பாரதி பணியில் தன் வாழ்நாளை ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து ஏராளமான பாரதியார் படைப்புகளைக் கண்டெடுத்து தமிழுலகிற்கு நல்கியவர்.

பாரதியார் கவிநயம் என்ற இந்த நூலில் 34 அரிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்

 

பழைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பத்இல், தற்சமயம் ஜீவியர்களாக இராதவர்களது கட்டுரைகளைத் தேர்ந்து பாதுகாத்தல் எனது முதல் நோக்கமாக இருந்ததுஎன்கிறார் அவர் தனது முகவுரையில்

 

 

அறிஞர்களின் கட்டுரைகள்

சுவாமி விபுலானந்தா,நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார், பரலி சு.நெல்லையப்பர், .ரா., சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பி.ஶ்ரீ., பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, கு..ராஜகோபாலன், டாக்டர் மு.வரதராசன், மா.அனந்த நாராயணன், திருலோக சீதாராம், பெ.நா.அப்புஸ்வாமி, .ஜீவானந்தம், டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் .சீனிவாசராகவன், கி.சந்திரசேகரன், ‘குகப்ரியை’, ரா.ஶ்ரீ. தேசிகன், அமுதன், டாக்டர் தி.சௌ.ராஜன், சங்கு சுப்ரஹ்மண்யன், ரா.நாராயணன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை, .சிதம்பர சுப்ரமண்யன், வை.மு.கோதைநாயகி அம்மாள், .சுப்பு ரெட்டியார், ..மகரபூஷணம், பேராசிரியர் கே.ஸ்வாமி நாதன், ‘மாரார்’, மணிக்கொடி கு.ஶ்ரீநிவாஸன் ஆகிய 31 அறிஞர்களின் கட்டுரைகள் என்றால் அதன் சுவை பற்றிச் சொல்லவா வேண்டும்.

 

 

அறிஞர்களின் கருத்துக்கள்

சுவாமி விபுலானந்தர்:- கண்ணனின் குழலிசையை அநேக கவிகள் வருணித்திருக்கிறார்கள். ஆனால் பாரதியாரைப் போல் ஒருவரும் இவ்வளவு அழகாக, “மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்என்று பாடினதில்லை.

 

 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்:- 1906ஆம் வருஷம். நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அவரை முதல் முதல் சந்தித்தேன். சென்னையில் தம்புச் செட்டித் தெரு அல்லது லிங்கிச் செட்டித் தெரு இரண்டில் ஒன்று. அங்கே, ஒரு வீட்டுத் திண்ணையில் கல்கத்தா காங்கிரஸுக்குப் போக அவரும் ஆயத்தமாக இருந்தார். என்னுடைய வக்கீல் தொழில் தோழர், இப்போது, ‘நரசிம்ம ஸ்வாமிஎன்று சொல்லப்படும் சேலத்து நரசிம்மய்யரும், நானும், பாரதியாரோடு சேர்ந்து, மூவருமாக கல்கத்த்ஆ போக ஏற்பாடு செய்து கொண்டு சந்தித்தோம். தேஜஸ் பொருந்திய முகம், உருமாலையுமில்லை; கையில் தடியுமில்லை; அழகும் ஒளியும் சிரிப்பும் வீசிய முகம். பளிச்சென்று இப்போதும் கண் முன் வந்து நிற்கிறது.பிறகு புதுச்சேரியிலும் அந்த முகத்தைக் கண்டேன். இரு தடவை கண்டேன். குதித்துக் குதித்துப் பாடுவதையும் கேட்டேன். நல்ல சாப்பாடும் போட்டார். எனக்கும் ஆர்.வி.கிருஷ்ணய்யர் (அவரும் அப்போது சேலத்தில் வக்கீல்) இருவருக்கும் சாப்பாடு போட்டு, பாடவும் பாடினார். பிறகு சென்னையில் பல முறை சந்தித்திருக்கிறோம்; ஒரு முறை மகாத்மா காந்தி முன்னிலையில்.

(தினமணி சுடர் , சென்னை பாரதி அநுபந்தம், 5-9-1954 இதழில் எழுதியது)

 

 bharathi

கு..ராஜகோபாலன்: ‘ஞாயிறு வையமாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது’   – இத்தகைய அகண்டமான கற்பனையைகவிக்குக் கவிஎன்று சொல்லப்படும் ஷெல்லி முதலியவர்களின் வாக்குக்கு வெளியே காண்பது கடினம்.

 

கி.சந்திரசேகரன்:- பாரதியின்ஞாயிறுஎன்ற வசன காவியத் துணுக்குகளை வாசித்தால் வேதபாஷை நடையையும் வேத இலக்கியத்தின் சுடர்ப் பொறிகளையும் அவன் தனதாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகும்.

அமுதன்:- பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகிய போது, பாரதி ஆயிற்று.

 

சங்கு சுப்ரஹ்மண்யன்:- அவரது வாழ்க்கையின்று என்னைப் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.’எத்தகைய துன்பங்களுற்றாலும், பட்டினி கிடந்தாலும் தேசப் பணியையும், தாய்மொழித் தொண்டையும் மறக்கலாகாதுஎன்பதே அந்தப் படிப்பினை. (‘சுதந்திரச் சங்குசென்னை 9-9-1931 இதழில் எழுதியது)

 

அருமையான கண்ணோட்டங்கள்

பாரதியார் கவிநயம். பாரதியார் பாநலம், பாரதியும் வேதாந்தப் பேழையும், பாரதியாரின் வாழ்க்கைத் தத்துவம், பாரதியார் கவிதை, கவிதை ரஸாயனம், பாரதியும் விஞ்ஞானமும், பாரதி நடந்த பாதை, பாரதியின் மந்திரக் கவிகள் என்பன போன்ற தலைப்புகளைப் பார்த்தாலேயே பாரதியாரை அறிஞர்கள் எத்தனை விதமாகப்பார்த்துள்ளார்கள் என்பதை உணரலாம். ராஜாஜி முதல் தென்னாப்பிரிக்கா டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை வரை பாரதியாரை நன்கு அறிந்தவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளனர் என்பது ஒரு தனிச் சிறப்பு.

 

பாரதி ஆர்வலர்கள் ஒவ்வொரு கட்டுரையாக பல்வேறு பழைய இதழ்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது.

அற்புதமான இந்த கட்டுரைக் கோவையை ரா..பத்மநாபன் போன்ற பாரதி பக்தர் ஒருவராலேயெ தொகுக்க முடியும். அவருக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப் பட்டுள்ளது.

 

பாரதி ஆர்வலர்களுக்கான இன்றியமையாத ஒரு நூல்: ”பாரதியார் கவிநயம்

*******

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–

சர்க்கஸுக்குப் போன பரமஹம்ஸர்!

GandonFrance1239CircusSeurat11869YT1588A

Compiled by S NAGARAJAN

Post No.2210

Date: 3rd   October 2015

Time uploaded in London: 8-27 am

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

 

மஹேந்திரநாத் குப்தா

இன்று உலகமெல்லாம் போற்றும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச மொழிகளை நமக்குக் கிடைக்கச் செய்தவர் ஒரு அருமையான பரமஹம்ஸ பக்தர். எம் (M) என்று குறிப்பிடப்படும் அவரது பெயர் மஹேந்திரநாத் குப்தா. (தோற்றம் 14-7-1854 மறைவு 4-6-1932)

இடைவிடாது குருதேவரைப் பற்றிய சிந்தனையில் இறுதி மூச்சு வரை மூழ்கி இருந்தவர் அவர். அவரது அற்புதமான கதாம்ருதம் உண்மையிலேயே பாற்கடலில் இருக்கும் அமிர்தத்திற்கு நிகர் தான்!

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை அவரிடம் அவரது கதாம்ருதம் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:-“ நீங்கள் பரமஹம்ஸரை சரியான இடத்தில் தான் பிடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! இந்தச் செயல் ஒரிஜினலாக அமைந்துள்ளது. இந்தப் பணி உங்களுக்காகவே ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது.”(You have hit Ramakrishna to the right point.. It is indeed wonderful.. The move is quite original. It has been reserved for you, this great work!”)

சின்னச் சின்ன சம்பவங்கள்! அதில் கேட்கப்படும் சிறு சிறு வார்த்தைகள். ஆனால் அவை உணர்த்துபவையோ பெரும் இறை அனுபவத்தை!

SlaniaSweden1656Womanonhorse101087Facit1469

சர்க்கஸ் பார்க்கப் போனார் பரமஹம்ஸர்

ஒரு முறை கல்கத்தாவிற்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருந்தது. பரமஹம்ஸர் அந்த சர்க்கஸைப் பார்க்கச் சென்றார். கூடவே ‘எம்’ உள்ளிட்ட அனைவரும் சென்றனர். எட்டணா டிக்கட்! காலமோ குளிர் காலம். காலரியில் உட்கார்ந்த பரமஹம்ஸர், ‘ஆஹா! இங்கிருந்து பார்க்க எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!’ என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னார்.

அவரால் சந்தோஷத்தை எப்பொழுதுமே மறைக்க முடியாது. அவர் ஒரு முழுமையான குழந்தை!

ரிங்கில் ஒரு குதிரை மிக மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவ்வப்பொழுது ரிங்கிற்குள் நுழைந்து ஓடி வரும் குதிரையின் மீது அது ஒரு கணம் ஒரு காலில் நிற்கும் போது மின்னல் போலத் தாவி ஏறுவாள். இதையெல்லாம் பார்த்தார் பரமஹம்ஸர்.

சர்க்கஸ் முடிந்து வெளியே வந்து வண்டியில் ஏறும் போது, “பாரேன்! அந்தக் குதிரையின் மீது ஏறுவதற்கும் அதில் அமர்வதற்கும் அவள் எவ்வளவு பெரிய பயிற்சியைச் செய்திருக்க வேண்டும்! இதே போலத் தான் இந்த உலகமும் சுழல்கிறது. எவர் ஒருவர் சவாரி செய்வதில் நிபுணராக இருக்கிறாரோ அவரால் தான் நன்கு சவாரி செய்ய முடியும். இல்லையேல் கீழே விழ வேண்டியது தான். அதுவே முடிவாகி விடும். இந்த உலகம் அப்படிப்பட்ட பயங்கரமான ஒன்று!

சிறிய சர்க்கஸ் நிகழ்ச்சியை வைத்து உலகைப் பற்றிய மாபெரும் உண்மையைச் சொன்னார் பரமஹம்ஸர்.

பக்தர்களுக்கு அபயமளித்துப் பயிற்சி தந்தவர்

தனது பக்தர்களை உலக வாழ்க்கை நடத்துவதில் நிபுணத்வம் அடையப் பயிற்சியும் பல இரகசியங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அவர்களுக்கு சங்கடங்கள் நேரும் போது அவர் அவர்களைக் காப்பாற்றினார். கெடுதி பயக்கும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

ஸ்வாமி விவேகானந்தரை உலகப் போக்கிலிருந்து எதிர் நீச்சல் போட வைத்து பிரம்மாண்டமான செயலுக்குத் தகுதி ஆக்கினார்.

பரமஹம்ஸர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை அனைத்தையும் துல்லியமாக – சர்க்கஸ் பார்க்கப் போய் அங்கு சொன்னது உட்பட அனைத்தையும் – அறிய வழி வகை செய்தவர் ‘எம்.’

அவரது புகழ்பெற்ற டயரிக் குறிப்பு ஒரு தங்கச் சுரங்கமாக இன்றளவும் திகழ்கிறது; நாளைக்கும் திகழும்!

அதிலிருந்து படிப்பினைகள் பலவற்றைக் கற்றால் நமது உலக சவாரியும் நிபுணத்வத்துடன் சரியானபடி நடக்கும். அஞ்சாமல் செல்லலாம்!

************

Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!

Compiled by London swaminathan

Post No.2209

Date: 2nd  October 2015

Time uploaded in London: 14-01

Excerpt from the book “South Indian Hours” by Oswald J.Couldrey, Year  of Publication 1924

The book is available at SOAS library, University of London.

Mr Adivi Bapirazu has written it in a letter to Oswald.

A unique account of a Niyogi wedding, as it was celebrated in an agraharam or Brahmin village of Krishna delta (Andhra Pradesh) in the year 1903

Picture  of a Tamil Bride

“My eldest sister’s wedding took place when I was a boy of six years. My cousin Subbamma, the daughter of my uncle, was married at the same time. My family was then in the legal state, so much praised by the lovers of the past, of the joint family. It was the first time for my father and uncle to perform any such important ceremony. My father was a good earning member, and our prosperity was then in the ascending stage. The brothers, therefore, had very grand ideas of celebrating the occasion.

Both my sister and my cousin assumed very grave demeanours. Only two days previously they had been solemnly “promoted brides”. All the ladies of the village were invited, and the brides to be were seated on a kind of low seat called “peetam”, and were presented with “harati”, or the ‘flame of prosperity’ – an honour which is accorded to the gods, as well as to the principal mortal persons concerned, at the end of every joyful ceremony. They were also given betel, and some gram. The distribution of gram by ladies among ladies is considered an auspicious and honourable formality. After this function my sisters (you have noticed that we often call our first cousins also brothers and sisters) were allowed to wear on their brows the “Kalyanam Bottu”, or scred marriage mark, a figure of Shiva’s trident made in vermilion. The “dot of modesty” was also applied to their left cheeks. My sister smiled whenever anyone addressed her as “bride” (kalyana Ponnu).

Once I went up to her and cried suddenly, “Sister, here is brother in law!” (Mappillai). My sister hastily rose and stood there, as the Hindu woman is taught to do in the presence of her husband. We all had a laugh at her expense.

bengali bride

Picture of a Bengali Bride

FIRST DAY

I rose early on the great day, hearing that the parties of the bridegrooms would be coming in an hour. I waited and waited but no party came, nor did I hear the sound of the bridegroom’s trumpet. Many relations had arrived with their families, and the front wing or “mansion” of the house was packed full of people. A big pandal or timber portico had been erected between this mansion and the back one.  All round the main building also pandals had been erected. The front was pleasantly decorated with canopies of painted cloth and festoons of ever green and other leaves. Even in the street also a big pandal had been erected.

It was five in the evening when the far off note of the crooked trumpet announced the arrival of the expected parties. “Behold, the bridegroom cometh!” Immediately there was a great commotion. Our big fort of a house was the scene of children’s cries, the laughter of maidens, woman’s explanations and odd women’s admonitions. Everyone flocked into the courtyard at the sound of a pipe, for word had been brought that the two parties had come to the other side of the canal. The country music of the band sounded nearer and nearer, and the trumpet blared forth its summons to the parties of the brides.

‘We started out with a few musicians, carrying sweet drinks for the visitors. We found them at the hospice. The two bridegrooms were sitting like two crowned young prices on two pials, one on each. My brother-in-law had a big turban, and looked imposing enough.

‘We welcomed them heartily, and requested them to come to their prepared lodging. The bands struck up and off we started, the bridegrooms in their respective palanquins. There were two parties of dancing girls. One of these parties was rather a good one.

“When the visitors had been comfortably settled in their allotted quarters, they were invited to dinner. It is a point of courtesy for each member to be separately invited, but if the head of the party is willing they may be invited in a body, and this concession was now granted. Chaffing them for not having yet acquired the tyrannous airs of the true “bridegroom’s party” (it is part of the game that the bridegroom’s party should be very much on its dignity) we brought them to the dinner.

“It was after midnight when we finished, and then almost everyone went to bed to snatch some sleep before the auspicious nuptial hour, which was at half-past four in the morning. My father, uncle, mother and aunt, with some important persons like my father’s sister, did not sleep at all.

rajasthani bride

Picture of a Rajasthani Bride

SECOND DAY

“At three O’clock the wry necked fife” awakened us from our slumbers. Again there was hubbub. The grooms were conducted in to the inner apartments, presented with the flame of prosperity (harati), and given an oil bath. They put on silken cloths and sat on the “vedikas” or marriage pials, which are only four inches high. Ancient canticles and spells (mantras) were spoken, calling a forgotten world to witness:”Anga, vanga, Kalinga, Kamboja, Kashmira, Sindhu, Barbara Yavana” ran the family catalogue of immemorial realms. The genealogies of the brides and bridegrooms were recited by their respective family chaplains (Purohit). There was a goodly throng of Brahmins present, and the hymns rose high in rich voices like a single voice.

The fathers performed the Kanyadanam, the ceremony of giving away the daughters, while the mothers poured water over their husbands’ hands, which were held just above the right hands of the bridegrooms. Then amid the din of trumpets, drums, pipes, the bridegrooms tied the knots around the necks of the brides, and put the sacred vermilion on the knots.

The wedding was performed, but the ceremony was not yet complete. The brides and the bridegrooms poured the sacred rice over each other’s heads. Then the pairs were conducted to the room of Agni, the Sacred Fire. Before Agni, the marriage vows were sealed.

“The whole village for the five days’ feast or morning and evening meals. Just before the dinnertime there must be a second call, and everyone has to wait for everyone who has promised to come, and all these together have to wait for the bridegroom’s party. So did we. After each meal betel was distributed. There was singing of songs and poems on divine subjects, and all chanted in chorus the dinner time cry, ‘Narayana’, or ‘Govindda’ or ‘Harahara’. There were many kinds of prepared foods, and the “big bellied Brahmins” were in their own element. Ghee (clarified butter) was extravagantly expended. The bridegroom’ parties always came with pipe and drum, and went in the same way. When anybody of either party went to the others’ lodging he was given betel and sprinkled with rose water, and his scarf smeared with attars.

kashmiri bride

Picture of a Kashmiri Bride

THIRD DAY

“The third day was than on which presents were given to the Brahmins according to their merit. Lists were prepared, and the Brahmins went bustling to the visitors’ chaplains (Purohit/priest) with recommendations from our own chaplain. All the first class people, those that had the Veda by heart, or had read Vyakaranam (Grammar) and so on, were presented with cloths and fruits. All the others were given money according to their degree, two rupees or one, or a half or a quarter. Five hundred people or more were honoured in this way. Little boys claimed full wages. Some of the Brahmins began to quarrel and claimed that their merit should have been allowed to weigh more. All these were put into a closed hall with a single door, where stood the donors, with some auxiliaries.

“Here, sirs, is Brahma Sri Venkata Shastri Garu of Viravasaram!” cries our self-important chaplain. “He is a very great Pundit, honoured in Urlam”. The visitors’ chaplains merely nod their heads. “Very well; Give him one”. A bright silver coin is thrust into the Shastri’s hand, and he is whisked away out of the gate, protesting all the while, “No, no, I won’t take one; it is an insult; you may have it back!” – but at the same time thrusting the rupee into his waist with a peculiar movement. All the people here who wear no shirt have a special method of trusting money into their waistcloth, where it is very secure.

“That night the dancing girls performed some dramas in the old-fashioned way. Their ordinary dances were given every day.

779_Bharatanatyam

Picture of a Bharatanatyam dancer

FOURTH DAY: Grand Procession

On the evening of the fourth day, there was a big assembly (sabha) at which there was presented what is called a Hari-katha, a recital of the story of some sacred personage, illustrated with songs, poems and dancing. There was a great lamp in one corner, and the two dancing parties. It was a very grand assembly in our house. Camphor pills and the incense sticks were distributed among the guests, after the usual sprinkling with rose water and smearing of attar.

Everyday there had been processions, but the procession on the fourth night was the grandest of all.so many torches of castor oil, so many torches of dried coconut and so many torches of kerosene oil; rows on rows, clusters upon clusters. There were strings of paper lamps, twinkling red, blue, yellow, green and orange; there were big toy trees made of pith, and great fans of Palmyra; there was a blaze of fireworks, the roar of the drums, the squeal of the fifes.at each and every house the procession stopped, so that people might see the bride and the bridegroom seated in the palanquin together whenever the procession stopped in front of a house, there the dancing girls danced and sang their:

“Give me one kiss, O my lord, only one kiss, if you please.

I know the cause of my lord’s anger.

For he has fallen into the clutches of the vile Chitra…..”

dancers

Picture of Indian Dances

FIFTH DAY

“At four o’ clock on the morning of the fifth day the last sacrifice was offered to Agni and the couples put off the state of sanctitude, or ‘diksha’. While they are in ‘diksha’ they must remain in the same clothes, they may not bathe, nor eat betel, nor may their heads be touched with razors or scissors; and so on.

The last ceremonies of the wedding were done on this day. Each pair was made to sit on a cot, and they were made to carry on a mock conversation, couched as though they were already well advanced in life and had children.

“Here, dear, take this child, for I have to fetch water from the well.”

“yes, but do you now take this crying boy, for I have to look after my fields, or my business.”

“Now I have to cook the meals, who will take this child?”

“Here am I, sister-in-law”, cried the sisters of the bridegrooms, and they had the sandalwood dolls for themselves.

“Then the two brides were lifted by two stout Brahmins and the bridegrooms were by two others. The dancing girls stood in rows with plates full of coloured flour. The strain of the music was changed to a dancing measure, and the brides took handful of the flour and threw it on the faces of the bridegrooms, who did likewise.  One mischievous bridegroom threw some flour at one of the dancing girls. Meanwhile the Brahmins who carried the brides and bridegrooms were dancing in a fantastic way, and when the young couples were throwing the coloured floor at each other a general melee of flour throwing began among us for sport. Then was there running, hiding, and all sorts of fun, and even the women were not spared. There was a general atmosphere of heart easing laughter.

“Later in the fifth day, however, everything is gloomy. The joy of the festival vanishes. The mother was crying in a corner, because her daughter was to be taken away. After the business of the flour throwing the parting ceremony took place, which was rather pathetic. We exchanged parting gifts, which mostly consisted of cloths, and the visitors took leave of us.  I followed the party as far as the big canal. When I found that they would not take me with them, do you know what I did? I fell to a crying and rolled on the ground there, and continued to do so till I was found by a banyan friend of my father and taken home.”

–Subham–

மஹரிஷியும் மகாத்மாவும்!

ramana2

Research article written by S NAGARAJAN

Post No.2208

Date: 2nd  October 2015

Time uploaded in London: 7-52 am

 

 

வாழ்விக்க வந்த மஹான்

அக்டோபர் இரண்டாம் நாள். காந்தி ஜெயந்தி. அண்ணலை நினைவு கூர வேண்டிய நன்னாள்!

 

மஹரிஷியும் மகாத்மாவும்!

.நாகராஜன்

 

 

மஹரிஷியும் மகாத்மாவும்

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசயங்கள் இரண்டு. மஹரிஷியும் மகாத்மாவும்!

சமகாலத்தில் வாழ்ந்த இந்த இருவரைப் பெற பாரதம் என்ன தவம் செய்ததோ!

ஒருவர் தேசத்திற்கு விடுதலையை வாங்கித் தர முயற்சி செய்து, வெற்றி பெற்றார்.

இன்னொருவரோ அனைத்து ஆன்மாக்களுக்கும் பிறவியிலிருந்து விடுதலை பெறும் பெரு நெறியைக் காட்டினார்.

 

இருவரும் வாழ்க்கையும் சொல்வதும் ஒரே செய்தியைத் தான்!

MY LIFE IS MY MESSAGE (என் வாழ்க்கையே நான் தரும் செய்தி) என்பது தான்!

மஹாத்மா மஹரிஷியைப் பற்றி எப்போதுமே உயர்வாகப் பேசுவார். மஹரிஷியும் மஹாத்மாவைப் பற்றி உயர்வாகப் பேசுவார்.

இருவரையும் இணைத்து பெரும் நூலையே எழுதி விடலாம்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இரு சம்பவங்களை நினைவு கூர்ந்து நமது வாழ்க்கையைப் புனிதமாக்குவோம்.

 ramana

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

 

1938ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஜம்னாலால் பஜாஜுடன் பாபு ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் எதிர்கால முதல் ஜனாதிபதி; 1938இல் காங்கிரஸில் தலைவர்; காந்திஜியின் தொண்டர்) ரமணாஸ்ரமத்திற்கு வந்தார்.

ஜம்னாலால் பஜாஜ் ஏராளமான கேள்விகளைக் கேட்டு மஹரிஷியிடம் பதில் பெற்றார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் சமயம். ரமண மஹரிஷியிடம் பிரியா விடை பெறும் நேரம்.

 

 

ராஜேந்திர பிரசாத் கேட்டார்:”-மஹாத்மா காந்திஜியின் அனுமதியுடன் நான் இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும். அவருக்கு பகவான் ஏதாவது செய்தி தர முடியுமா?”

பகவான்:- “அத்யாத்ம சக்தி அவருள்ளிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அது போதும். அதை விட வேறென்ன வேண்டும்?”

தன்னை வழி நடத்தும் சக்தியையே காந்திஜியிடம் கண்டார் மஹரிஷி! பகவானைப் பணிந்து ராஜேந்திர பிரசாத்தும் ஜம்னாலால் பஜாஜும் விடை பெற்றனர்.

 

யாரேனும் சக்தி குறைந்திருப்பது போலக் காணப்பட்டால் அவரை ரமணாஸ்ரமம் போ என்று அனுப்பி விடுவார் மகாத்மா!

மஹாத்மாவின் ஒவ்வொரு செயலும் மஹரிஷிக்குத் தெரியும்!

 

 rajendra

கடவுள் காட்டும் வழிப்படி நடப்பவர் காந்திஜி!

1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி. 11ஆம் தேதி ஹரிஜன் இதழில் காந்திஜி எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டினார் மஹரிஷி.

காந்திஜி அதில் எழுதி இருந்தார்:- “How mysterious are the ways of God! This journey to Rajkot is a wonder even to me. Why am I going, whither I am going? What for? I have thought nothing about these things. And if God guides me, what should I think, why should I think? Even thought may be an obstacle in the way of His guidance.

 

The fact is, it takes no effort to stop thinking. The thoughts do not come. Indeed there is no vacuum – but I mean to say that there is no thought about the mission.”

 

இதைப் படித்த மஹரிஷி இது எவ்வளவு உண்மை என்று கூறி ஒவ்வொரு வரியையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

பின்னர் இந்த எண்ணமற்ற நிலையைத் தாயுமானவர் பாடி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

சும்மாவிருக்கச் சுகம் சுகமென்று சுருதி எல்லாம்                               

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டு அறிவின்றியே                                 

பெம்மான் மௌனி மொழியையும் தப்பி என் பேதைமையால்                        

வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

 

வரிசையாக இப்படி மூன்று பாடல்களை பகவான் சுட்டிக் காட்டி காந்திஜி கூறிய நிலை மெய் தான் என்பதை விளக்கி அருளினார்.

மறுநாள் பக்தர் ஒருவர், காந்திஜி எண்ணங்களே அந்நியமாக இருக்கிறது என்ற நிலையையா சுட்டிக் காட்டி உள்ளார் என்று கேட்டார்.

மஹரிஷி: “ஆம்! நான் என்ற எண்ணத்திற்குப் பின்னரே அனைத்து எண்ணங்களும் எழும்.”

 

 gandhi3 gandhi  gandhi2

தொடர்ந்து பக்தர் காந்திஜி கடவுளின் வழிகாட்டலுக்கு நம் எண்ணமே ஒரு தடை என்று சொல்கிறாரே என்று விளக்கம் கேட்டார்.

அதற்கு மஹரிஷி,” சாதனை என்பது தடைகளை நீக்கவே! ஆனால் ஒரு நிலையில் அந்த சாதனைக்குப் பிறகும் ஒருவன் தனது இயலாமையை உணர்கிறான். அப்போது தான் கடவுளின் சக்தி உணரப்படுகிறதுஎன்று அருளினார்.

 

 

ஒரு உயரிய நிலையை இன்னொரு உயரிய நிலையை அடைந்த அனுபவஸ்தரே அறிய முடியும்; விளக்க முடியும், இல்லையா!

குழுமி இருந்த பக்தர்கள் அனைவரும் இருவரின் நிலையையும்மகாத்மா, மஹரிஷி இருவரின் நிலையையும் உணர்ந்து பிரமித்தனர்!

இப்படி ஏராளமான உரையாடல்கள் காந்திஜி பற்றி அவ்வப்பொழுது மஹரிஷி ஆஸ்ரமத்தில் நிகழ்த்துவதுண்டு!

ஒரே சக்தி, இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாக வேலை செய்தது. ஒன்றி இயக்கமாககாந்திஜி வடிவில்.

இன்னொன்று மௌனமாகமஹரிஷி வடிவில்!

 

 stamp_einstein1

ஐன்ஸ்டீனின் புகழாரம் இருவருக்கும் பொருந்துகிறது!

 

அற்புதமான மஹாத்மாவைப் பற்றி அவரது 70ஆவது பிறந்த நாளன்று பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், “Generations to come, it may well be, will scarce believe that sucha man as this one ever in flesh and blood walked upon this earth” (வரும் தலைமுறையினர், இப்படிப்பட்ட ஒருவர் ரத்தமும் சதையும் பொருந்தி இந்த பூமியில் நடந்தார் என்பதை அரிதாகவே நம்புவர்) என்று கூறி பிரமித்தார்.

 

ஐன்ஸ்டீனின் இதே மொழியை மஹரிஷிக்கும் பொருத்திப் பார்த்தால் அப்படியே பொருந்துகிறது.

வருகின்ற தலைமுறையினர் மகாத்மாவையும் மஹரிஷியையும் பற்றி எண்ணி எண்ணி பிரமிப்பர்.

அவர்கள் நடந்த இந்த புனித பூமியில் நடக்கும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்ந்து அவர்களை கை கூப்பித் தொழுவோம்!

************* 

On the occasion of Mahatma Gandhi’s 70th birthday. “Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”

கனவில் கண்ட உலக சரித்திரம்!

toynbee book

Research article written by S NAGARAJAN

Post No.2207

Date: 2nd  October 2015

Time uploaded in London: 5-52 am

 

 

(My elder brother S NAGARAJAN is a regular contributor to Bhagya, Jnanalayam, Nilacharal, Ezine and several other magazines and blogs: swaminathan)

தற்பொழுது விற்பனையாகி வரும் ஞானஆலயம்அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை.

பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று இளைஞர்களை ஊக்குவித்தார். கனவு காண எப்படி வேண்டுதல் புரிய வேண்டும் என்ற மந்திரத்தோடு அபூர்வமான விஷயங்களைப் போதிக்கிறது நம் அக்னிபுராணம்!

கனவில் கண்ட உலக சரித்திரம்!

அக்னி புராணமும் ஆர்னால்ட் டாய்ன்பியும்!!

.நாகராஜன்

 

toynbee

துஸ்ஸ்வப்ன நாசன:

நல்ல கனவுகளைக் காணுங்கள் என்பதே ஹிந்து சாஸ்திரங்கள் தரும் உபதேசம்! துஸ்ஸ்வப்ன நாசன: (தீய கனவுகளை நாசம் செய்பவன் நாமம் 926) என்றே விஷ்ணுசஹஸ்ரநாமம் விஷ்ணுவைத் துதிக்கிறது. அசோகவனத்தில் திரிஜடா, சீதையிடம் தான் கண்ட நல்ல கனவைத் தெரிவிக்க, அதன் பின்னர் அனுமன் சீதையை தரிசிக்க அதுவே ராமாயணத்தின் முக்கிய திருப்புமுனைக் கட்டமாக அமைகிறது!

 

அக்னிபுராணம் தரும் அறிவுரை

கனவுகளைப் பற்றி அக்னி புராணம் பிரமிக்கத் தக்க விஷயங்களை அள்ளித் தருகிறது. பல்வேறு கனவின் பலன்கள், எந்த ஜாமத்தில் கண்டவை பலிக்கும் என்பன போன்றவை அதில் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல கனவை முதலில் கண்டு விட்டுப் பின்னர் கெட்ட கனவைக் கண்டால் கெட்ட கனவே பலிக்கும். ஆகவே நல்ல கனவைக் கண்ட பின்னர் உறங்காதே என்ற ஆலோசனையையும் அது அன்புடன் வழங்குகிறது. ஆகவே தான் நம் முன்னோர்கள் நல்ல கனவைக் கண்டவுடன் மகிழ்ச்சியுடன் எழுந்து அனைவரிடமும் அது பற்றிக் கூறி மகிழ்வர்; நல்லதை எதிர்நோக்கிக் காத்திருப்பர்.

ஹஸ்டன் ஸ்மித் என்ற அறிஞர் இந்து மதத்தில் மதமே கலை; கலையே மதம் என்று பொருத்தமுறக் கூறுகிறார்.

நமது கோவில் சிற்பங்கள், அங்குள்ள நாட்டியங்கள், இசை, அலங்காரம் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தால் நமது மதமே நமது கலை; நமது கலையே நமது வாழ்க்கை முறை என்பது விளங்கும்.

ஆனந்த குமாரஸ்வாமி (1877-1947) ஒரு பெரும் கலைஞர். இந்து மதச் சிறப்புகளை கலைஞனுக்கே உரித்த வகையில் நுணுக்கமாக உலகினருக்கு விவரித்தவர். அவர் அக்னி புராணத்திலிருந்து ஒரு அழகிய மந்திரத்தை எடுத்துக் காட்டி ஒரு கலைஞன் பெரிய காரியத்தைத் தொடங்கும் முன்னர் முதல் நாள் இரவில் கனவில் அதை நிறைவேற்றுவதற்கான வழிகளைக் காண்பிக்குமாறு வேண்டுதல் புரியும் மந்திரத்தைக் கூற வேண்டும் என்கிறார். கலை என்பது ஒரு யோகம் என்கிறார் அவர். கனவுக்கும் பெரிய திட்டத்தை நனவாக்கும் செயலுக்கும் உள்ள நெருக்கத்தை நல்ல முறையில் அடைய அக்னி புராணம் கூறும் முறையில் பிரார்த்தித்துச் செய்தால் அது பிரம்மாண்டமான வெற்றியைப் பெறும் என்கிறார் அவர். Visualization என்னும் காட்சிப்படுத்தல் பற்றி ஆதிசங்கரரும் அற்புதமாக விளக்கியுள்ளார்.

கனவுப் படைப்பாளிகளுக்கு நவீன வரலாற்றில் பஞ்சமே இல்லை. நூற்றுக்கணக்கான பேர்களில் மாதிரிக்கு 14 பேரை அட்டவணையில் தனியே காணலாம்!

gra0168sh_einstein

ஐன்ஸ்டீனின் மனச்சித்திரம்

உலகின் அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் விசுவலைசேஷன் என்ற காட்சிகள் மூலமாகவே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐன்ஸ்டீனும் விதி விலக்கல்ல. ஒளியின் வேகத்தின் மீதேறிச் செல்வது போன்ற காட்சியே உலகின் பிரம்மாண்டமான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் ரிலேடிவிடியயைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. அதனால் தான் அடிக்கடி அவர் மனச்சித்திரத்தை வற்புறுத்தி வந்தார் வாழ்நாள் முழுவதும்.

ஆர்னால்ட் டாய்ன்பியின் உலக சரித்திரம்

உலகின் சரித்திரத்தை எழுதிய ஆர்னால்ட் டாய்ன்பி (1889-1975) ஒரு அற்புதப் படைப்பாளி. ‘A STUDAY OF HISTORY’’ என்ற அவரது படைப்பு 30 லட்சம் சொற்கள் அடங்கியது. 26 நாகரிகங்களைப் பற்றி 12 தொகுதிகளில் அவர் விளக்கியுள்ளார். ஒரு மனிதனால் இப்படி துல்லியமாக சரித்திரக் காட்சிகளை எழுதி விட முடியுமா என்ன/

இதை எப்படி எழுத முடிந்தது என்பதை அவரே விளக்கியுள்ளார். படுத்தவுடன் கனவில் பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. அக்னி புராணம் கூறும் கனவுக் காட்சிகளுக்கு அவரே சரியான சான்று. கனவின் மூலமாக உத்வேகம் பெற்ற அறிஞர் அவர்.

toynbee book3

பற்றிக் கொள்; காத்திரு

கடவுளைப் பற்றியும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் விளக்கப் புகுந்த அவர் இதற்கு விடையாகத் தனது கனவு ஒன்றையே விவரிக்கிறார்!

இந்தக் கனவில் சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். யார்க்‌ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்‌ஷன் பீடத்தின் மேல் உள்ள சிலுவையையே அவர் கண்டார்.

பிறகு தெளிவான லத்தீனில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது!

“ஆம்ப்ளெக்ஸஸ் எக்ஸ்பெக்டா”

இதன் பொருள்? “பற்றிக் கொள்; காத்திரு” (CLING AND WAIT என்பதாகும்.

(ஷீர்டி சாயி அன்பர்களுக்கு அவர் கூறும் ச்ரத்தை; பொறுமை என்ற இதே அர்த்தம் தொனிக்கும் இரு வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா!)

சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான அவரது கனவு நமது உள்ளத்தில் சிலிர்ப்பூட்டும் இறை நினைப்பை ஊட்டுகிறதல்லவா?

ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தில் அபார பற்று உடையவராக அவர் இருந்தார். 1944ஆம் ஆண்டு அவர் மனைவி ரோஸலிண்ட் மர்ரேயை விவாகரத்து செய்ய வேண்டி இருந்தது. தன் மனைவி தன்னை விட்டுப் பிரிய கிறிஸ்தவ மதத்தின் வறண்ட ஒரு கொள்கையே காரணம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். கிறிஸ்தவ மதத்தின் மீதான பிடிப்பு தளரவே புத்த மதம் அவரை ஈர்த்தது.

சமரஸ மத நோக்கு கொண்ட மகாத்மா காந்திஜியை அவர் பெரிதும் போற்றினார். “சமுதாயத்தைக் காக்க வந்த நவீன மீட்பர்” (Modern savior of Society) என்று அவர் காந்திஜியைக் கொண்டாடினார்.

அவரது விரிந்த பார்வை ஹிந்து மதத்தின் பால் திரும்பியது. ஹிந்து மதம் காட்டும் உண்மைகளை உணர்ந்து பெரிதும் அதிசயித்தார் அவர்.

உலக சரித்திரத்தை எழுதியவர் உலகின் எதிர்காலமே இனி ஹிந்து மத நோக்கில் சென்றாலேயே செழிக்கும் என்று முத்தாய்ப்பாக இறுதியில் எழுதி தனது பத்தாவது பாகத்தை முடித்தார்.

கனவில் அவர் கண்ட காட்சி எதிர்காலத்தை ஆளும் ஹிந்து மதக் காட்சி என்றால் அது சரியான காட்சி தானே! தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் உரியவன் அல்லவா!

அவர் கூறுவதை அப்படியே காண்போம்: – “The indian religions are not exclusive minded. They are ready to allow that there may be alternative   approaches to the mystery. I feel sure that in this they are right and that this catholic minded Indian religions spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.”

guinea-bissau-science-stamp-2003

“இந்திய மதங்கள் மற்ற எதையும் ஒத்துக்கொள்ளாத மனப்பான்மை கொண்டவை அல்ல. இறைமர்மத்திற்கு விடை காண இன்னும் வேறு பல அணுகுமுறைகளும் உண்டு என்பதை அவர்கள் அனுமதிக்கத் தயார்! இதில் அவர்கள் கூறுவது சரியே என்பதில் நான் உறுதி கொள்கிறேன். நம்மை நாமே அழித்துக் கொள்ளாது, ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு யுகத்தில் வசிக்கும் எல்லா மதங்களையும் சார்ந்துள்ள மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையுள்ள இந்திய மதங்களின் உணர்வே உய்வதற்கான வழியாகும்.”

பெரிய மேதை தன் கனவில் கண்ட அகக்காட்சியில் உலகம் உய்வதற்கும் அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் அற்புதமான பரந்த மனப்பான்மை இந்து மதத்தில் உள்ளது, அதை ஏற்போம் என்று கூறுவது இன்றைய நிலையில் எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

********************

sleep

கனவுப் படைப்பாளிகள்

———————————————————————————————————————————————-

எண்           கண்டவர் பெயர்               படைப்பு

————————————————————————————————————————————————

01               ஐன்ஸ்டீன்                    தியரி ஆஃப் ரிலேடிவிடி

02               ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன்   1892இல் எழுதிய Across the Plains

03               ஆர்னால்ட் டாய்ன்பி          உலக சரித்திரம்

04             சாமுவேல் டெய்லர் கூல்ட்ரிட்ஜ்   குப்ளாகான் (கவிதை)

05             ராமானுஜன்                    கணிதக் கண்டுபிடிப்புகள்

06             கெக்குலே                 பென்ஸீனில் கார்பன் அணுக்கள் அமைப்பு

07        பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்            பல கணிதத் தீர்வுகள்

08        ஜேம்ஸ் காமரான்         ஹாலிவுட் படம் – தி டெர்மினேடர்

09        ரெனி டெஸ்கார்டெஸ்     அறிவியல் அணுகுமுறை மற்றும் கார்டீஸியன்

கோ ஆர்டினேட் சிஸ்டம்

10        மேரி ஷெல்லி           உலகின் முதல் அறிவியல் நாவலான

“ப்ராங்கென்ஸ்டீன்”

11        பால் மக்கார்ட்னி            பிரசித்தி பெற்ற இசைப்பாடல் “Yesterday”

12        நீல்ஸ் போர்                 அணுவின் அமைப்பு

13    ஃப்ரெடெரிக் பாண்டிங்     (நோபல் பரிசு பெற்றவர்) பெனிசிலின் இஞ்ஜெக்‌ஷன்

14    எலியாஸ் ஹோ            தையல் மெஷின்

sleep2

————————————————————————————————————————————————————

What is the Price of Gandhi Stamps?

IMG_6424

Research article written by London swaminathan

Post No.2206

Date: 1st October 2015

Time uploaded in London: 16-00

October 2 Gandhi Jayanthi

It is needless to say that the Gandhian values have down in India. But the surprising thing is that the value of Gandhi stamps are going up and up! Politicians use Gandhiji’s name as a popular brand name. Like corrupt Tamil politicians use the name of holy poet Tiruvalluvar, corrupt North Indian politicians use Gandhi’s name. Any way the new generation know neither Gandhi nor Tiruvalluvar. They read their names in text books for examination sake. As soon as they come out of the examination halls they forget both the names and their teachings.

IMG_6422 (2)

But as a stamp collector and possessor of Gandhi stamps issued by several countries, I am glad that the values of those stamps are going higher and higher. I very often pass by the Stanley Gibbon stamp shop at Strand in London. Their catalogue is the Veda for the stamp collectors and their headquarters is the Benares/Varanasi of stamp collectors. Today I looked at the latest Stanley Gibbon’s catalogue to compare the prices. I have given below the prices:

For mint stamps (Not used)

In 2006 the price of Rs10 Gandhi was 45 pounds (45×100=Rs.4500 in today’s currency rates)

In 2015 the price is 375 pounds (375×100= Rs 37,500)

For used Stamps

In 2006 it was 40 pounds (Rs.4000 in today’s currency rates)

In 2015 it was 130 pounds (Rs13,000)

IMG_6448 (2)

In 2011-12 Indian Stamp catalogue the price of Rs10 Gandhi stamp issued in 1948 was Rs.13,000 (mint) and Rs.6750 (used)

This is the price for the stamp in best condition.

For instance here the stamp dealers sell even Gandhi stamp for 60 pounds. But they have lost the gum in the back or browned due to weather. In India stamps change to brown very quickly because of the climatic conditions. But in temperate countries like Britain they are in good condition. All my old Indian stamps collected in Madurai are brownish. But after coming here, I bought Indian stamps from English dealers and they are in pristine condition.

If you have coins or stamps, please maintain them properly. Stamp dealers or the philatelic societies in all the Indian cities will advise you in this regard.

IMG_6432

( I am writing about Gandhi coins separately)

Long live Gandhi! Longer live Gandhi stamps!!!