பூவாதே காய்க்கும் மரமும் உள!

Jackfruit

பலா மரம்

Written by London swaminathan

Research Article no. 1708; dated 11 March 2015

Up loaded at 08-20 London time

 

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே – தூவா

விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி

பொருள்: பூக்காது காய்க்கும் அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல மக்கள் நடுவில் இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோர் உண்டு. வேறு சிலரோ விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றவர்கள். அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரை இப்படிப் பயனற்றதே—அதாவது விதைத்தாலும் முளைக்காது.

banyan-tree-aerial-root

ஆல மரம்

தாவரவியல் அறிவு மிக்கவர்கள் இந்தியர்கள் — உயரிய கருத்துக்களைச் சொல்ல இது போன்ற அரிய உவமைகளைப் பயன்படுத்துவர்.

நல்வழி இயற்றிய அவ்வையார், சங்க கால அவ்வையார் அல்ல. சங்க காலம் முதல் தமிழகத்தில் வாழ்ந்த ஆறு அவ்வையார்களில் இவரும் ஒருவர். பிற்காலத்திய அவ்வையார். வயதான, அறிவுமிகுந்த, கணவர் இல்லாத, முது பெரும் அறிவாளிப் பெண்களை தமிழ் கூறு நல்லுலகம் “அவ்வை” என்ற அன்புப் பெயரிட்டு அழைக்கும்.

அரச மரம்

அரச மரம்

இந்தப் பாடலில் உள்ள பூவாத மரங்கள் விஷயம்  2300 ஆண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதியிலும் உள்ளது (1-47)

பூவாது காய்க்கும் மரங்கள் ‘வனஸ்பதி’ எனப்படும். புஷ்பங்கள், பழங்களுடனுள்ள மற்றவை “மரங்கள்” எனப்படும் என்பார் மனு.

Apushpaa: falavanto ye te vanaspataya smruthaa:

Pushpina: falinas cha eva vrukshaam tu ubayata smruta:  (1-47 Manu)

அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய ஸ்ம்ருதா:

புஷ்பின: பலினஸ் ச ஏவ வ்ருக்ஷாம் து உபயத ஸ்ம்ருதா:

தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளிலும் வருகிறது. குரங்குக்கு புத்திமதி சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது. இதன் மூலம் விஷ்ணுசர்மன் – “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” — என்கிறார்.

இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-

“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”.

 குருவி

தூக்கணங்குருவி — கூடு

எவ்வளவு அற்புதமான கருத்துக்களை நல்வழியும், விவேக சிந்தாமணியும் எளிய தமிழில் நமக்குத் தருகின்றன!! அதே கருத்துக்கள் வடமொழியிலும் உள்ளன. இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்துடைய இவ்வளவு பெரிய பூகோள நிலப்பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் வேறு எங்கும் இருந்தது இல்லை. ஒரே சிந்தனை, ஒரே பார்வை, ஒரே குறிக்கோள்!

அத்தி

அத்தி மரம்

வாழ்க தமிழ்!! வளர்க சம்ஸ்கிருதம்!! பொலிக பாரதம்!!!

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

free panchang

Written by Santanam Nagarajan

Research Article no. 1707; dated 11 March 2015
by ச.நாகராஜன்
தமிழக அரசு தை மாதத்தை புத்தாண்டு துவக்கமாக அறிவித்தவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது; பலரும் தவறைச் சுட்டிக் காட்டிய பின் இந்த அறிவிப்பு காலாவதியாகி தற்போது தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே வழக்கம் போலத் துவக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
– ச.நாகராஜன்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?

புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

tamil years

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.

இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

new-year-tamil-cards

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!

இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை ‘பிறக்க இருக்கும் புத்தாண்டு’ ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!

southindiacitiesbig

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.

ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!

வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.

270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!

இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.

இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

swami_48@yahoo.com

Snakes and Snake Bites in Mahabharata!

indian-snake

Written by London swaminathan

Research Article no. 1706; dated 10 March 2015

Up loaded at 19-30 London time

Strange Animal Stories in Mahabharata! – Part 1

The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came to the rescue of the devotees. In other cases God is not dragged into the scene. Even Parikshit was killed by a “snake”!

(I have interpreted this Parikshit story elsewhere in my blogs, as a Naga Tribes Vs Pandava family clash due to Khandava Vana Dhahana. As a result of which Maya Danava went to South America to establish Mayan Civilization.He led the exodus after Khandava forest burning by Arjuna and Krishna. Khandava Vana is now called Gondwana land. Not many people knew Khandava Vana = is Gond Vana)

There are lot of animal stories in the longest Hindu epic Mahabharata. Many of the stories are very strange and mysterious. People becoming animals or animals becoming humans, semen devoured by an animal giving birth to human beings are some of the themes repeated frequently. I have collected some sample anecdotes and these are not exhaustive. Probably there existed some novel way of saying something symbolically. Someone has to do deeper research into it. Several animal symbols were used as totem symbols by the tribes. So they were called by the animal names. Later writers took it for real animals and called them bears (Jambavan in Ramayana) and Eagle ( Jatayu in Ramayana). In real life bears and eagles were just human beings but with some animal tattoos or animal masks. I am using “Who is Who in the Mahabharata by Subash Mazumdar” for the references. Numbers at the end of each anecdote are the book numbers of Mahabharata. The epic consists of 18 books or parvas.  Here are a few snake stories:

magnificence-cobra-snake-qwficx

Snake

(1).Astika ,son of Jaratkaru, stopped Naga Yajna (throwing snakes into fire)- 1-48

(2).Agastya cursed king Nahusa to become a python. He was saved by Yudhistra after sometime 5-17

(3).Snake poison/bite disfigured Nala. Under the assumed name Bahuka, he worked as a charioteer of King Rituparna of Ayodhya.3-67

(4).Gautami was a learned Brahmana woman. Her son was bitten by a snake and he died. A passer-by hunter caught the snake and was about to kill it. But she told him to spare the life of the snake saying that her dead son would not come to life by killing the snake 13-1

(5).A snake called Karkotaka was cursed by sage Narada to remain stationary in one place until Nala picked him up. When Nala picked him he was bitten by Karkotaka. This changed the colour and shape of Nala. Karkotaka told him that it would benefit him because no one could recognise him as a king. But he gave him a divine garment which would help him to get back to his original form 3-66

When Nala was ready to join his wife Damayanti he wore the divine nNga garment and regained his original appearance 3-73

snake and frog

My Comments: It is strange that Naga tribe (Snake people) is always associated with wonderful garments. Sangam Tamil Work Sirupan Atrppadai (lines 96-97) also described the divine garment given by Neelanagan to chieftain Ay. He gave it to Lord Shiva under the banyan tree. Naga tribe people are described as Oviyar (Painters) in Tamil literature. Probably they painted their body with snake pictures and worshipped snakes! Snake figures are found in every temple in India.

(6).Nagas were the descendants of Kasyapa and Kadru. They were famous and notorious for their skills and cunningness 1-16

My comments: Sri Lanka was called Nagadwipa (Nagar island). The Naga Kanyas were described as cunning women who would entice ship wrecked people to their homes and ‘devour’ them> This means they will strip them of their money etc.

(7).Ruru , grandson of Chyavana rishi, was about to marry a beautiful girl by name Pramadvara. But she died of a snake bite just a few days before the marriage. When he offered half of his life span to the snake bitten girl she was revived. When he wanted to kill all the snakes as an act of revenge, Dundubha prevented him by saying that not all snakes are not poisonous. Dundubha pointed out that snakes are essential part of food chain and it would help the orderly development of different forms of life 1-8

My comments: In all these stories we see some environmental concern. When the kings try to kill all the snakes and all the frogs someone gives them good advice about environmental protection. Even if we take them as human beings with totem symbols, peace is restored by stopping the killings.

Green-tree-frog-2-copy

Snake toy

(8).A Brahmana rishi called Sahasrapata frightened his friend Khagama by throwing upon him a snake toy made up of straw. He did it for fun. But Kaghama cursed his friend to become a snake.  In his non-poisonous snake form he was called Dundhuba. He regained his original form when Ruru visited him. 1-10

(9).Parikshit story

Parikshit ,son of Abimanyu, went for hunting, 36 years after the Mahabharata war. Shamika rishi was doing meditation. When Parikshi asked for water he did not respond and he thought the seer was pretending. Immediately Parikshit threw a dead snake on the rishi (seer). When the seer’s son came and saw this he cursed Parikshit that he would die within seven days by a “snake bite”. Takshaka Naga ‘bit’ him by hiding in a fruit basket

(My comments:–Actually the seer used Naga tribe leader Takshaka to revenge upon Parikshit. He hid himself in a fruit basket like Veera Shivaji hid himself in the fruit basket to escape from Delhi prison of Aurangzeb. On the seventh day Parikshit was killed and then Janamaejaya stared killing the snakes (naga tribes). Seer Astika made a compromise. Even today Brahmins recall this episode thrice a day in their Sandhyavandana water ritual by reciting the mantra Narmadayai nama:……It happened on the banks of River Narmada.)

Leopard Frog

Frog

(10).Ayu was king of frogs. When King Parikshit hunted down the frogs thinking that the queen was eaten by frogs, Ayu revealed that the queen Shobana was his own daughter. Through his powers Shobana re appeared  (3-192)

The story goes like this:

Parikshit was a king of Ikshwaku dynasty (This Parikshit was different from snake bitten Parikshit). Once when the queen and the king were in the forest Parikshit was very thirsty. He asked his wife to go down the well to fetch some water. She went into the water but never came out. He saw only frogs there. He thought that the frogs ate his queen and started massacring him. At that time Ayu, king of frogs appeared and asked him to stop the killing. He told that Shusobana, the queen was his own daughter and she was alive.

My comments: Frog was a totem symbol of a particular tribe and Ayu was the king of that Frog tribe. Actually they are human beings, not frogs. We have poets and seers with the names such as Manduka Maharishi (frog), Therai (Toad) in Sanskrit and Tamil.  Mandukyopanishad is one of the major Upanishads. So what we read here is the story of tribal people. Since thousands of years passed before Vyasa collected all these stories and incorporated them into the epic for the benefit of posterity, the original meaning was lost. Now we have to read the story between the lines.

Tomorrow I will give more animal stories from the Mahabharata.

swami_48@yahoo.com

இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள்!

D-128

Written by London swaminathan

Research Article no. 1705; dated 10 March 2015

uploaded at  காலை 11-10  London time லண்டன் நேரம்

கர தூஷணர்கள் என்னும் ஏழு கோடி அவுணர்களை ஸ்ரீ ராமர் அம்புகளின் மூலம் எளிதில் கொன்றார். ஆனால் ஏன் ராவணனை அப்படிக் கொல்ல முடியவில்லை?

 

அர்ஜுனன், துரியோதனன் போன்றோருக்கு ரஹசிய ஆயுதக் கலையைச் சொல்லிக் கொடுத்த துரோணர், அதை ஏன் ஏகலைவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்தார்?

 

பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்களை ஏன் “ஒரே ஒரு முறை” மட்டும் பிரயோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான்.

பழங்கால இந்துக்களிடம் ஒலி (சப்த) ஆயுதங்கள் இருந்தன. அவை அதிர்வு அலைகளைப் பரப்பி, பிரம்மாண்டமான அழிவுகளை உண்டாக்கும். இதை இன்னும் மேலை நாடுகள் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும். நம்  நாட்டில் அந்தக் கலை அறவே மறைந்துவிட்டது. இவைகளை மிக, மிக அரிதாகவே பயன்படுத்துவர்.

தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.

தற்போது இந்தியா உள்பட உலகில் ஏழு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லா யுத்தங்களிலும் பிரயோகிப்பதில்லை. இதுவரை அமெரிக்கா மட்டும் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றது. இந்தியப் பிரதமர், அமெரிக்க- ரஷிய ஜனாதிபதிகள் ஆகியோரிடம் அணுகுண்டு உபயோகிக்கும் ரகசிய சங்கேதச் சொல் – கோட் – உள்ளது. இது போல துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்த ‘பாஸ்வோர்ட்’ – அர்ஜுனன், கர்ணன் போன்றோருக்கு மட்டுமே தெரியும். எப்படி இந்திய—அமெரிக்க—ரஷிய அதிபர்கள் இதை அரிதாகவே பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் அக்காலத்திலும் அஸ்திரங்களை அரிதாகப் பயன்படுத்தினர்.

தற்காலத்தில் புற்றுநோயைக் கொல்லும் அரிய அணுசக்தி ஐசடோப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். நல்ல செல்களை விட்டுவிடும். இதே போல இந்துக்களின் ஒலி ஆயுதங்கள், யார் மீது எய்யப்படுகிறதோ அவர்களை மட்டும் கொல்லும். ஆயினும் இவைகள் பேரழிவையும், பக்க விளைவு களையும் ஏற்படுத்தும் என்பதால் முதலிலேயே சத்தியம் வாங்கி விடுவார்கள்  — “ஒரே முறைதான் பிரயோகிப்பேன்” என்று.

அணுசக்திக்கு நல்ல, கெட்ட உபயோகம் இருப்பதைப் போலவே இவைகளுக்கும் நல்ல, கெட்ட பயன்பாடுகள் உண்டு. ஆகையால்தான் இவ்வளவு முன் எச்சரிக்கை.

pavithram

மரப்பாச்சி பொம்மை மர்மம்

பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? – என்ற ஆங்கிலக் கட்டுரையை லண்டனில் அச்சிட்ட சவுத் இந்தியன் சொசைட்டியின் 2005-ஆம் ஆண்டு மலரில் எழுதி இருந்தேன். அதே கட்டுரையை இந்த பிளாக்-கில் 2011ல் போட்டேன். இதுவரை தினமும் புதுப் புது நேயர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உத்திரையின் கருவைக் கூட பிரம்மாஸ்திரம் பாதிக்கும் என்பதை அறிந்து கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றிய விதத்தையும் எழுதி இருக்கிறேன். இக்காலத்திலும் அணுக்கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்க ஈயமும், செஞ்சந்தன மரங்களும் பயன்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு செஞ் சந்தன மரக் கட்டைகள் ஏராளமாக ஏற்றூமதியாகின்றன. இதனால்தான் அக்காலத்தில் மரப்பாச்சி என்னும் பொம்மைகளை செஞ் சந்தன மரக் கட்டைகளில் செய்து கொடுத்தார்கள்

அதர்வ வேதத்தில் நிறைய ரஹசியங்கள் இருக்கின்றன. அதில் தர்ப்பை பற்றிய மந்திரங்கள் அவற்றின் சக்தியை விளக்குகின்றன. ஆனால் தர்ப்பை என்பது “டெலிவரி வெஹிக்கிள்” போன்றவை —அதாவது ஆணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வாஹனங்கள் – உண்மையான அணுகுண்டு என்பவை  துரோணர், கிருபர் போன்றோர் மட்டும் அறிந்த அரிய மந்திரங்களாகும். எப்படி இன்று அணு ஆயுத ரஹசியங்களையும், அவற்றுக்கான சங்கேதக் குறியீடுகளையும் ஆட்சியில் உள்ள ஒரு சிலர் மட்டும் ரஹசியமாகப் பாதுகாக்கிறார்களோ அப்படி அக்காலத்தில் ராஜசபையில் உள்ள பெரியோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வள்ளுவருக்கும் கூட இவ்விஷயம் தெரியும்:

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல் – (குறள் 894)

பெரியவர்களுக்கு தீமை செய்வது, எமனை தானே கைதட்டி வா என்று கூப்பிடுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதற்குக் கீழே இன்னும் ஒரு குறளில் ஆட்சியைக் கூடக் கவிழ்க்கும் வல்லமை பெரியோருக்கு உண்டு என்கிறார். ஆனால் பெரியோர்கள் எல்லோரையும் ஆசீர்வாதிபார்களேயன்றி அழிக்க மாட்டார்கள்.

நாட்டில் தர்மம் முற்றிலும் அழியும் ஆபத்து வரும்போது மட்டும், வித்தியாரண்யர், சமர்த்த ராமதாசர் போன்றோர் மந்திர சக்தியுள்ள வாட்களை (பவானி வாள்) கம்பண்ண உடையார், வீர சிவாஜி போன்றோர் கையில் கொடுத்து காரியத்தை நிறைவேற்றுவர். அடுத்த கல்கி அவதாரத்தில் உலகம் வியக்கும் இந்து ஆயுதங்களைக் காணலாம்.

ராமன் கூட இதை ராவணன் விஷயத்தில் பயன்படுத்தவில்லை. ராவணன் வேதம் அறிந்தவன் – முறையான யுத்தம் செய்ய வல்லவன். ஆகையால் ராமனும் கூட அவன் போர்க்களத்தில் நிராயுத பாணியாக ராவணன் நின்றபோது, “இன்று போய் நாளை வா” என்று அனுப்பினன். கரதூஷணர்கள் தர்மயுத்தம் செய்பவர்கள் அல்ல.

ஏகலைவன் ஒரு சாமான்யன். அவனிடம் அணு ஆயுத ரஹசியங்களைச் சொல்ல முடியாது. ரஹசியமாக அறிந்த விஷயங்களையும் கூட அவன் பயன்படுத்த இயலாதவாறு அவனுடைய கட்டைவிரல் வெட்டப்பட்டது. அக்கால மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்!

pavitra

அதர்வண  வேத தர்ப்பை மந்திரங்கள்

யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷசு வர்ம தே

தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :

 

சதம் தே தர்ப வர்,மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே

தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:

—-அதர்வ.19-30

ஏ தர்ப்பையே! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங்கலையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்துவாயாக.

ஓ தர்ப்பையே! நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்த்தியை வெளியிடுக்றாய். நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–அதர்வம், 19-31

சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ரபர்ண உத்திர:

தர்போ ய உக்ர ஔஷதிஸ்தம் தே பந்தாம்யாயுஷே –19-31

ஓ, மனிதனே! நான் (மருத்துவன்) உன் கையில் குஷ புல்லைக் கட்டுகிறேன். இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய  மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.

தர்ப்பைப் புல்லுக்கு ‘குசம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது. இதை சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தியதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.

தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் . அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.

darbha02

பிராமணர்களின் ஆயுதம் !

(இங்கே குறிப்பிடப்படும் பிராமணர்கள் பிறப்பினால் அந்தஸ்து பெற்ற பிராமணர்கள் அல்ல. ஒழுக்கத்தாலும், தபோ சக்தியினாலும் பிராமணத்துவம் எய்தியவர்களே இங்கே பிராMஅனர்கள் எனப்படுவர்)

பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.

இதோ பிராமணர்களின் சக்தி பற்றி:–

வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச

சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:

இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு

பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே  ப்ரம்மராக்ஷசா:

விப்ராங்குலிகுசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:

பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+குசான்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்கதர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!

 

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:

 

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)

அபவித்ரகர: கஸ்சித் ப்ராம்மணே ய உபஸ்ப்ருசேத்

அபூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யாசமனம் ததா

சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.

அங்குஷ்டானாமனாமிகாப்யாம் து சின்னம் பைதாமஹம் சிர:

ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:

 

கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.

A23_M51_Pontoon_r13d

பாவனார்த்தம் ததோ ஹஸ்தேகச காஞ்சன தாரணம்

புஞ்சானஸ்து விஷேசேன நான்யதோதேன லிப்யதே

கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.

குசானோ உபவிஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:

தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.

ஆதாரம்–தர்ப்பைகளின் பிரசம்ஸை – கோபிலர்

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

fasilitasramayana7

Ramayana ballet is staged in largest Muslim country Indonesia everyday!

Compiled by Santanam Nagarajan

Article no. 1704; dated 10 March 2015

uploaded at 10-50 am london time

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10

ச.நாகராஜன்

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

 

ராமாயணம் பாராயணம்

ஆ ஸேது ஹிமாசலம் – அதாவது பாரதத்தின் தென் கோடியான சேதுவிலிருந்து (ராமேஸ்வரத்திலிருந்து), வட கோடியான ஹிமாசல மலை வரை உள்ள பிரதேசத்தில் வாழ்வோர் ராமாயணத்தைப் பாராயணம் செய்வதை வாழ்க்கைத் தவமாகவே செய்து வந்துள்ளனர்; செய்து கொண்டிருக்கின்றனர்; இனியும் செய்து வருவர். இந்தப் பாராயணம் தர்ம அர்த்த காம மோக்ஷம் – அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்களைத் தரும் என்பது மஹரிஷிகளின் வாக்கு. அந்த வாக்கை நம்பிச் செயல்படும் மக்களின் நம்பிக்கையை இந்த நித்ய பாராயணம் காட்டுகிறது.

ராம ராம ராம ராம ராம நாம தாரகம்

ராமசந்த்ர வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹரம் சர்வலோக நாயகம்

சங்கராதி சேவ்யமான புண்ய நாம கீர்த்தனம்

என அனைவரும் தாரக மந்திரமான ராம நாமத்தைப் போற்றித்  துதிக்கின்றனர்.

இதில் முக்கியமான விஷயமாக உள்ள, ஜானகியின் மனதைக் கவர்வது ராம நாமம் என்பதையும் அது புண்யநாம கீர்த்தனம் என்பதையும் திரைப்படப் பாடல் ஒன்றில் தர விரும்பினார் கவிஞர் கண்ணதாசன்.

அத்தோடு காலம் காலமாக நாம் செய்து வரும் ராமாயண பாராயணம் மங்களகரமானது என்பதோடு அது காதல் மங்களம் – மனம் ஒன்றிய இருவரைச் சேர்த்து வைக்கும் மந்திரமும் கூட என்பதையும் வலியுறுத்த விரும்பினார்.

அதைத் தன் முத்திரைப் பாடலாக இயற்றினார்.
படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது. தந்தையாக வரும் ரஜினிகாந்த் மோசமானவராக இருக்க மகனாக வரும் ரஜினிகாந்தோ நல்லவர்.

படத்திற்கு மிக அருமையாக இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர்களோ கே.ஜே. ஜேசுதாஸும் எஸ். ஜானகியும் ஆவர்.

100_0429

ராமனின் மோகனம்

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகவே உறவு

இடமும் வலமும் இரண்டு

உடலும் மனமும்

இணைந்தோங்கி நிற்கும்போது

இதையன்றி எண்ணம் ஏது

இளவேனிற்காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்

ஒரு வானில் தவழும் மேகம்

பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

இடையும் கொடியும் குலுங்கும்

நடையும் மொழியும்

எடை போட கம்பன் இல்லை

எனக்கந்த திறனும் இல்லை

இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு

மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

ramayana-ballet

மலர்களினூடே மோகனமும் மந்திரமும்

பூங்காவில் மலர்கள் சூழ ரஜினியும் மேனகாவும் பாடுவதாக அமைகிறது காட்சி. மரங்களினூடே காதலர் பவனியும், சிலையாக நான் நிற்பதே அற்புதம் என சிலை போல மேனகா அபிநயம் பிடிப்பதும் ஒரு  புறம் மனதைக் கவர்கிறது எனில் பாடல் வரிகள் சிந்தனையைக் காதல் ரஸத்திலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்த்தி விடுகிறது – காரணம் பாடல் வரிகள்.

ராமனைப் போற்றிப் பாடும் கம்பனும் பாடலில் இடம் பெற்று விடுகிறான்! கதாநாயகியை வர்ணிக்கத் தனக்கு கவித்துவம் இல்லை என்று கூறியபடியே அழகுற கதாநாயகன் வர்ணிப்பதும் ஒரு தனிச் சுவை தான்!

home3

காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

ராமனின் மோகனமே ஜானகியின் மந்திரமா, அல்லது ஜானகியின் மந்திரமே ராமனின் மோகனமா? மந்திரம் மோகனத்தால் உருவானதா அல்லது மோகனத்தால் மந்திரம் சக்தி பெற்றதா? இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடக்கம்; பிரிக்க முடியாதவை என்பதே பதில். இதை அழகுறச் சித்தரிக்கும் இந்தப் பாடல் காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

இளையஜாவின் இசையானது பாடலைத் தூக்கித் தர கண்ணதாசனின் கவிதை வரிகளோ இன்னும் உயரத்தில் ஏற்ற ராமரும் ஜானகியும் ஒரு தெய்வீகத்தைச் சேர்த்து விடுகின்றனர்.

காதல் பாடலில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் பாடல் இது என்று சொல்லி முடிக்கலாம்!

*****************

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

Hindus’ Ultra Modern Weapons!

Brahmos_imds

Written by London swaminathan

Research Article no. 1703; dated 9 March 2015

uploaded at 19-40 Monday London Time.

“Oh Dharba grass, you have the capacity to ward off death till long age. You are the best armour of all the armours in the world. Shielding the king with the self-same armour, kill the enemies with your strong powers.

“Oh Dharba! hundreds are your shields and thousands are the means of strength and power. All the learned scholars have given you to the king for protection till old age or for long life”– Atharva Veda Book 19, Hymn 30

“O Man, I (physician says) tie this Kuhsa grass, which is forceful, energising herb, with hundreds of reeds infallible, with thousands of leaves and far efficacious than other herbs, for lengthening your life span” – Hymn 31, Book 19

Brahmins believe in this efficacy of Kusha grass till this day. Their entire work is done with the Kusha/Dharba grass.

My opinion is that ancient Hindus channelized the energy through Dharba and Water. Great teachers like Drona and Kripa of Mahabharata knew about ultra-modern weapons which work with sound vibrations. Western Scientists are yet to invent such weapons. It is like cancer drugs with certain nuclear isotopes targeting only the bad cells, the Vibration weapons will target only the intended targets.

A23_M51_Pontoon_r13d

These mantra (Sound) weapons are taught only to Kings and selected people. Like nuclear bomb buttons have secret passwords which are known only to Prime Ministers and Presidents of countries these Ultra Modern Sound Weapons are taught only to the Kings. But like we use nuclear weapons very rarely, they also used it only when it was absolutely necessary. That is why commoner Ekalaiva was denied a place in the Royals class by Drona.

Dharba grass is like the modern delivery vehicles for nuclear war heads. Even when the Hindu kings were taught such most dangerous weapon techniques, they were forced to promise that they use it only once. That too if necessary. So far seven countries have made thousands of nuclear bombs, but only USA used it once in Hiroshima and Nagasaki in in Japan which killed millions of people.

Lord Rama also finished of seven million Kara Dushana demons like we kill the mosquitoes. Demons do not follow any code of conduct in wars. But the same Rama did not use it against Ravana who was ready for a decent fight. He was a great hero and he would not hit anyone below the belt. Ram was also great. When Ravana was disarmed in the battle field, Rama stopped fighting and asked Ravana to go home and come back the next day with full preparations (“Go Today and Come Tomorrow” — was the most famous quote in the Yuddha Kanda of Ramayana)

Like nuclear materials have good and bad uses, Dharba is also used in all the good ceremonies.

pavithram

Power of Dharba Grass!

I posted my article on “Power of Holy Durva Grass” here on 12th July 2013. Now I give below some hymns highlighting the power of sacred Dharba grass. A Brahmin priest won’t leave the house without the sacred Dharba grass. It is his essential tool. It is neatly cut and preserved in its dry form. Hindus believe that that Dharba grass (also known as Kusha) can purify one just by wearing it in the ring finger. Hindu saints do penance or meditation sitting on the Dharba mat. Though Yogis or saints do such meditation sitting on deer skin or tiger skin, Dharba mats are easily available, less expensive and environment friendly.

Botanically it falls under the Graminae ( Poaceae or grass family ) family and it is known as Eragrostis cynosoroides. It is mentioned in all the four (Rig Veda 1-191-3)Vedas. Atharva Veda mentions it as an amulet.

During eclipse period, they put the grass in all the food items to save it from the bad rays. The following hymns show how much they valued it. As a Brahmin, I always keep it here in my London home. I use it during the ceremonies. Usually they make a ring like figure and wear it in the ring finger. It is called Pavitram. That means the dharba as well as Pure and holy in Sanskrit. The ring finger itself is called Pavitra finger.

pavitra

Ghosts will run away!

Hanuman Chalisa of Goswami Tulsidas says that the ghosts will run away when the name of Hanuman is recited. In the same way

Bhuta Preta Pisasascha ye chanye Brahmarakshasaaha

Vipra anguli Kusaan drustwa duuram gachcha adhomukaaha

When the ghosts, ghouls, spirits and goblins see the Dharba worn in the Brahmins’ fingers, they go far away with their heads bowed down.

Another hymn says

Vajro Yathaa Surendrasya Suulam hastha Harasya cha

Chakraaydham Yathaa Vishno: evam vipra kare Kusha:

Like Vajra weapon for Indra, Sula weapon for Lord Shiva, Wheel weapon for Vishnu, Kusha grass weapon is for Brahmins. (Dharba grass is as powerful as Vajra, Sula and Chakra weapons)

If a Brahmin stands with a kusha and is without vain or not showy, he can destroy all the sins like dews driven away by the sun light. ( He can drive away the sins like the sunlight drives away the snow)

Another hymn praise “ even Shiva was cleared of sin by Kusha grass after killing a Brahmin” ( One of Brahma’s five heads was cut off by Shiva; actually  it is a symbolic story saying the four Vedas will be beneficial only when the ego is eliminated)

Anyone wearing gold or dharba in the fingers are considered pure even if their hands are not clean, says another couplet.

darbha02

Picture of Dharba Mat

Such is the greatness of Dharba (Kusha) grass in the Hindu scriptures. The use of water, sesame seeds, white rice in funeral ceremonies, yellow rice in auspicious ceremonies, Kusha grass, cow, its milk, daily bath and Abishek rituals, Asvamedha Yajna, Swayamvara, decimal system and the absence of all these things in the Western world explodes the Aryan –Dravidian Race theory. Actually all these put together with the six divisions of seasons, four divisions of armies, four values in life (Dharma Artha Kama Moksha)  in the oldest parts of Tamil literature, it bulldozes the Aryan Dravidian fake theory.

Long live Dharba Grass! Long Live Durva Grass!

Is Brahmastra a Nuclear Weapon? Written by me in South Indian Society Magazine in London in 2005 and posted here in this blog in 2011 is getting a lot of hits every day until today! Please read it if you have read it already.

D-128

Pictures are taken from various sites; thanks.

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு யார்?

Five-Men-with-Cap-Oil-Painting

Compiled by London swaminathan

Article no. 1702; dated 9 March 2015

லண்டன் மாநகர நேரம்  காலை 9-25

நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி செய்யுட்களை சிறு வயது முதலே போதித்து வந்தனர். சில செய்யுட்கள் பஞ்ச தந்திர, ஹிதோபதேசக் கதைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டன. இதனால் அவை சிறுவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும். அது மட்டுமல்ல. ஏதேனும் வழக்கு வாய்தாவில் தீர்ப்புச் சொல்லவும் இவை பயன்பட்டன. இதோ பழங்காலப் பொக்கிஷம்:

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

  • பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

5-el-teachers-for-suai-2009

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

இன்னொரு ஸ்லோகம் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது: எந்த வீட்டில் தாய் இல்லையோ, மனைவி இனிமையாகப் பேசுவதில்லையோ அவன் காட்டிற்கு ஏகுவதே மேல்; ஏனெனில் அவனுக்குக் காடுதான் வீடு!

மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா ச ப்ரியவாதினீ

அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம்

–பஞ்சதந்திரக் கதைகள்

Five-teachers-who-are-changing-lives

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

5 women

உண்மை அன்பு

அம்மா, அப்பா, நண்பர்கள் ஆகியோருடைய உள்ளத்தில் உண்மையிலேயே கருணை இருக்கும். ஆனால் மற்றவர்களோ வெனில் காரியம் நடக்க வேண்டுமானால் (பொய்) அன்பை வெளிப்படுத்துவர்.

மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவத் ஹ்ருதயம் ஹிதம்

கார்ய காரணத்தஸ்சான்யே பவந்தி ஹித புத்தயஹ

 

இவை எல்லாம் காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட பொன்மொழிகள். சில இக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் அக்காலச் சிந்தைப் போக்கையும் சமுதாய நடைமுறைகளையும் அறிய உதவும்.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க பொது அறிவு!

men-in-black-clip-art

-சுபம்-

முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

camel thorn

Compiled by Santanam Nagarajan

Article no. 1701; dated 9 March 2015

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

उष्ट्रकण्टकभक्षणन्यायः

ustrakantakabhaksana nyayah

உஷ்ட்ரகண்டகபக்ஷண நியாயம்

உஷ்ட்ரம்ஒட்டகம்; கண்டகம்முள்; பக்ஷணம்உணவு

ஒட்டகமும் முள்ளும் பற்றிய நியாயம் இது.

தாவரங்களுள் முள் என்றால் ஒட்டகத்திற்கு அதிகம் பிடிக்கும். ஆனால் அதைச் சாப்பிடும்போதோ அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகும். அதன் வாயில் முள் குத்தலினால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று! என்றாலும் கூட அது முள் சாப்பிடுவதை விடுவதில்லை!

என்ன கஷ்டம் வந்தாலும் சரி தான், தான் செய்வதை ஒருவன் விடுவதில்லை என்னும் சமயத்தில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். நியாயமாகப் பார்த்தால் அவன் செய்வது சரியில்லை என்றாலும் கூட தனக்குப் பிடித்ததை ஒருவன் செய்யும் போது அது ஒட்டகம் சாப்பிடும் முள் போல என்று சொல்லப்படும்.

Camels_Eating_Thorns

एकसम्बन्धिदर्शने अन्यसम्बन्धिस्मरणम्

ekasambandhidarsane anyasambandhismaranam

ஏகசம்பந்திதர்ஷனே அன்யசம்பந்தி ஸ்மரணம்

ஒன்றை இன்னொன்று தொடர்பு படுத்துவது பற்றிய நியாயம் இது!

ஒரு சம்பந்தியைப் பார்க்க்கும் போது இன்னொரு சம்பந்தியின் ஞாபகம் ஏற்படுகிறது.

ஒன்றை இன்னொன்று ஞாபகப்படுத்தும் போது அல்லது அதே போல இருக்கும் இன்னொன்றைச் சுட்டிக் காட்டும் போது தொடர்பைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சொல்லப்படும்.

titanic-1

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

துரும்பைப் பிடிப்பது அல்லது புல்லைப் பிடிப்பது பற்றிய நியாயம் இது.

கப்பல் ஒன்று நீரில் மூழ்குகிறது. பயணிகள் நீரில் மூழ்குகின்றனர். அப்போது எப்படியேனும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் கையில் கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்ப அனைவருமே நினைப்பர்கரை ஓரமாக வளர்ந்திருக்கும் நாணலாகவோ அல்லது தர்ப்பைப் புல்லாகவோ இருந்தாலும் சரி, அதைப் பிடித்து நதியின் வெள்ளத்திலிருந்து தப்ப நினைப்பதே மனித இயல்பு.

இந்த நியாயம் பட்டிமன்றம் அல்லது விவாத மேடையில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு விவாதத்தில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையில் சிறிய முக்கியமற்ற ஒரு விஷயம் கைக்குக் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு (தொங்குவது போல) விவாதத்தைத் தொடர முயலும் ஒருவரின் நிலையை இந்த நியாயம் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது! ஆனால் இப்படி (விதண்டா) வாதம் புரிவோர் அனைவரின் ஏளனத்திற்கும் இலக்காவர்.

donkeys

Birmingham Donkey Sanctuary, UK

गर्दभरोमगणनन्यायः

gardabharomaganana nyayah

கர்தப ரோம கணன நியாயம்

கர்தபம்கழுதை; ரோமம்மயிர் அல்லது ரோமம்

கழுதையின் ரோமம் பற்றிய நியாயம் இது.

கழுதையே பொதுவாக அசுத்தம் என்று அனைவரும் நினைக்கும் ஒரு பிராணி.

அதனுடைய ரோமமும் கூட யாருக்கும் பிடிக்காது. ஆக அதை வெட்ட நினைக்கும் ஒருவனை என்ன சொல்வது? அந்த ரோமத்தால் அவனுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை!

பயனற்ற ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும் போது இந்த நியாயம் சுட்டிக்காட்டப்படும்.

spinning wheel

चक्रभ्रमणन्यायः

cakrabhramana nyayah

சக்ர ப்ரமண நியாயம்

சுழற்றி விடப்படும் சக்கரம் பற்றிய நியாயம் இது.

ஒரு சக்கரத்தைச் சுழற்ற அதை இயக்கும் விசை வேண்டும். விசை இருக்கும் வரை அது ஓடிக் கொண்டிருக்கும். அந்த விசை நிறுத்தப்பட்டு விட்டால் அது அந்த விசையின் விளைவு இருக்கும் வரை ஓடும். பின்னர் நின்று விடும்.

ஒரு இயக்கமானது அதை ஆரம்பித்து அதை இயக்குபவர் இயக்கும் வரை நன்கு இயங்கும். அது நிறுத்தப்பட்டு விட்டால் இயக்கும் தளர்வடைந்து விடும்.

சமூக இயக்கமாக இருந்தாலும் சரி, ஒரு மத ரீதியிலான இயக்கமாக இருந்தாலும் சரி அதை ஊக்கப்படுத்தி செயல்படுத்துபவர் இருக்கும் வரை உற்சாகமாக இயங்கும். ஆனால் அந்த ஊக்கம் அதை இயக்குபவர் இல்லாத போதோ அல்லது அவர் செயல்படாத போதோ தானே நின்று விடும்.

இதைக் குறிக்கும் நியாயம் இது.இடைவிடாத ஊக்கமூட்டும் ஆற்றல் இருந்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் வெற்றியைக் கொண்டிருக்கும்!

*******************

Our Five Fathers, Five Mothers and Five Teachers!

Five-Men-with-Cap-Oil-Painting

Compiled by London swaminathan

Article no. 1700; dated 8 March 2015

Hindu scriptures say the following five men are equal to father and five women are equal to mother.

Janita cha upaniita cha yastu vidyaam prayacchati

Annadataa bhayatraataa panchaite pitarah smrutaaha

-Panchatantra, Subhasitaratnabhandakaram 165/542 and Chanakya Niti

Your own father, the person who takes you to a Guru (one who initiates), the one who gives you education (teacher), one who gives you food and one who saves you from danger are to respected as father.

5-el-teachers-for-suai-2009

Five Mothers

Following five women are considered equal to mothers:

Raaja patni Guroho patni bhraatru patni thadaiva cha

Patnimaathaa svamaathaa panchaitaa maatara smrutaahaa

–Chanakya Niti

Queen (King’s wife), Teacher’s wife, Brother’s wife, own mother and wife’s mother (Mother in law) are considered mother.

Five-teachers-who-are-changing-lives

Five Teachers

Panchaiva guravo brahman purushasya bubhushathah

Pithaa mathaa agnir aatmaa cha guruscha dvijasattama

-Mahabharata – Vana parva – 204-27

Father, Mother, Agni, Self and Teacher are Five Gurus or Preceptors

Guravah pancha sarveshaam vchaturnaam srtichoditaah

Maathaa pithaa thathaachaaryaa  maatulah svasurasthathaa

-Yogavasistha 1-60

Mother, Father, Teacher, Maternal Uncle and Father in Law are respected as Teachers.

men-in-black-clip-art

Where is home?

Mathaa yasya gruhe naasti  bharyaa cha priyavaadhinii

Aranyam tena ganthavyam yathaaranyam thathaa gruham

–Panchatantram

House that is without mother, house where the wife is not soft spoken (not home), then he has to go to a forest; because, for him, the house is where the forest is.

5 women

Who are kind?

 

Mathaa mithram pithaa cheti svabhaavaatrithayam hitham

Kaarya kaaranataschaanye bhavanti hita buddhaya:

–Hitopadesam

Mother, father and friend are kind at heart by nature; others are kind to you to get some favours; expecting some benefits from you, they are kind.

Ancient wisdom is worth memorising!

swami_48@yahoo.com

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

sita_devi_p

Written by S Nagarajan

Article No 1699; Dated 8th march 2015

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 9

by ச.நாகராஜன்

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

காதலர் எதிர்பார்ப்பு

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பி எதிர்பார்ப்பதைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் உலக மொழிகள் அனைத்திலுமே உண்டு. இதற்குத் தமிழ் திரைப்படங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல!

ராமர் விஷ்ணுவின் அவதாரம்; சீதையோ ராம பத்தினி. விஷ்ணுவின்  மார்பில் இடம் கொண்டவள். ஆகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை எப்படி எதிர்பார்த்தனர் என்பதைக் கம்பன் அழகுற மிதிலைக் காட்சிப் படலத்தில் சித்தரித்துள்ளான். இது போன்ற ஒரு கவிதையை உலக இலக்கியத்திலேயே அப்படிப்பட்ட  நயத்துடன் பார்க்க முடியாது (இதை அத்தியாயம் 3-இல் பார்த்தோம்)

 

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!”

இதை தற்காலத்திற்கு ஏற்றவாறு தர நினைத்தார் கவிஞர் கண்ணதாசன்; பிறந்தது பாட்டு.

1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாட்டிற்கு இசை அமைத்தவர் சுதர்ஸனம். பாடலைப் பாடியவர்கள் பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா.

பி.பி. ஶ்ரீனிவாஸின் குரலே மிகவும் அபூர்வமான மென்மையான குரல்; அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை என்பதை ரசிகர்கள் அவர் பாடலைக் கேட்க இன்றும் விரும்புகிறார்கள் என்பதிலிருந்தே அறிய முடியும்.

ஆக, அன்னை படத்தில் இடம் பெற்ற அழகிய இந்தப் பாடலையும் இன்றும் விரும்பிக் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள்!

கூடுதல் போனஸாக வீடியோ காட்சியில் பழைய சென்னையையும் கூட ஒரு ‘ரவுண்ட்’ அடித்து விடலாம்.

rama ramapriya

பாடலைப் பார்ப்போம்:-

மிதிலை நகரில் யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள் (அழகிய)

காவியக் கண்ணகி இதயத்திலே .. ஆ ஆ

காவியக் கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

கோவலன் என்பதை ஊரறியும்

கோவலன் என்பதை ஊரறியும்

சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் (அழகிய)

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் (ஆஹ்ஹா, ஓஹோ, ஓஹோ, ஆஹாஹா)

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்

இளையவரென்றால் ஆசை வரும்

இளையவரென்றால் ஆசை வரும்

முதியவரென்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

 

குமாரி சச்சுவும் புதுமுக ஹீரோ ஹரநாத்தும் (ஹரநாத்ராஜு – தெலுங்கு நடிகர்)) கார் ஓட்டிக் கொண்டே பாடும் கேள்வி- பதில் பாட்டான இதில் அழகான அம்சங்கள் ஏராளம் உள்ளன. இளையவர் என்றால் ஆசை வரும்; முதியவர் என்றால் பாசம் வரும் என்ற பதில் ‘இன்டெலிஜெண்ட் பதில்’, இல்லையா!

ஜனகனின் மகளான ஜானகி, ராமனை எதிர்பார்த்துக் காத்திருந்ததை காதலி காதலனின் கேள்விக்குப் பதிலாகத் தருவது, “கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!” (பழகிடும் ராமன் வரவை எண்ணி!)

என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

கடைசி சரணத்தில், இடம் பெறும்,

“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

என்ற வரிகளோ

“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்”  என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தந்ததை அல்லவா காட்டுகிறது.

ஜானகி, மிதிலை நகர் என பாரம்பரிய சொற்களைக் கையாண்டதால் அதன் பின்னணியில் வரும் கருத்துக்களையும் அல்லவா கவிஞர் பாடலில் கலந்து தருகிறார்!

ramar sayana kolam, 18 ft, vengadampettai, cuddalore Dt

Ramar Sayanam, Vengadampettai, Cuddalore District

கவிதை வண்ணம் கம்பன் வண்ணமே!

கம்பனில் மனதைப் பறி கொடுத்த கவிஞர் கண்ணதாசன் கம்பனின் கருத்துக்களை மட்டும் அவ்வப்பொழுது திரப்படங்களில் தரவில்லை; கம்பனின் ஓசை நயம் வார்த்தை நயத்தைக் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் தந்து விடுவார்;

கம்ப பக்தி! அதனால் கூடவே வரும் ராம பக்தி!!

எடுத்துக் காட்டாக கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவதுண்டோ

மைவண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”

 

(பாலகாண்டம்-அகலிகைப் படலம் பாடல் 24)

அற்புதமான கருத்து நயம்; ஓசை நயம், எழுத்து நயம், வார்த்தை நயம் உள்ள இதற்கு இணையான இன்னொரு பாடலை எந்த இலக்கியத்திலுமே காண முடியாது என்பது மட்டும்; உண்மை!

ராமனின் கை வண்ணத்தை அரக்கி தாடகை அழிவில் கண்ட மஹரிஷி விஸ்வாமித்திரர் அவன் கால் ஒரு கல்லில் பட அகலிகை சாப விமோசனம் பெற்று எழும் போது கால் வண்ணத்தையும் கண்டு கூறிய வார்த்தைகள் இவை!

இந்த கவிதையின் தாக்கத்தை கவிஞர் 1962ஆம் ஆண்டு ‘பாசம்’ படத்திற்காக எழுதிய பாடலில் காணலாம். இது எம்,ஜி.ஆரும் அன்றைய அழகிய கதாநாயகியான சரோஜாதேவியும் மலர் மஞ்சத்தைச் சுற்றி வந்து பாடும் அழகிய பாடல். பி.பி, ஶ்ரீனிவாஸும் பி.சுசீலாவும் எம்ஜிஆர்-சரோஜாதேவிக்காக பாடிய அரிய சில பாடல்களுள் இது முக்கியமான ஒன்று. இசை அமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி

 

rama abhishek

Rama Abishek

பாடல் இது தான்:

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா

மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!

ராமரின் தாக்கம் பெற்ற, கவிஞன் கம்பனின் தாக்கம் பெற்ற, கவிஞரின் தாக்கம் பெற்ற, பாடலின் சிறப்பை விவரிக்கத் தேவையே இல்லையே!

கம்பனின் பாடல்களை ஆழ்ந்து சிந்தித்து மகிழ கண்ணதாசன் பெரிதும் உதவுகிறார், இல்லையா!

***************

swami_48@yahoo.com