துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465)

conan doyle

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 6 January 2016

 

Post No. 2465

 

Time uploaded in London :–  13-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஆங்கிலக் கதை படிக்கும் அனைவர்க்கும் தெரிந்த துப்பறியும் கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கற்பனைக் கதா பாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் கானன் டாய்ல். அப்பேற்பட்ட துப்பறியும் நிபுணரை ஒரு டாக்சி டிரைவர் பிரமிக்கவைத்த ஒரு சம்பவம்:-

 

நாவல் ஆசிரியர் ஆர்தர்,  பாரிஸில் வந்து இறங்கினார். ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வரிசையாக நிற்கும் ஒரு டாக்ஸியில் ஏறினார். ஹோட்டல் வாசல் வந்தவுடன் கட்டணத்தைக் கையில் கொடுத்தார் சர் ஆர்தர் கானன் டாயில்.

 

நன்றி, திரு.கானன் டாயில் – என்றார் டாக்சி ட்ரைவர்.

ஆர்தர்: ஏய், நில். என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?

டாக்ஸி டிரைவர்: அதுவா? இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அதில் நீங்கள் இன்று தென் பிரான்ஸ் பகுதியிலிருந்து பாரீஸ் மாநகரம் வரப்போவதை அறிந்தேன். நீங்கள் வந்தவுடன் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஆங்கிலேயன் என்று புரிந்துகொண்டேன். எங்களுக்கு உங்கள் நாட்டுக்காரர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் அத்துபடி. மேலும் உங்கள் தலையைப் பார்த்தேன். தென் பிரான்ஸ் பகுதி நாவிதர்கள் முடிவெட்டிய பாணி (ஸ்டைல்) அதில் தெரிந்தது. உடனே நீங்கள்தான் சர் ஆர்தர் கானன் டாயில் என்று நினைத்தேன்.

ஆர்தர்- பலே, பலே! இதைவைத்து மட்டும் கண்டுபிடித்த உன் மூளை அபார மூளை. சரி, அது எப்படி நான் தான் ஆர்தர் என்று உறுதி செய்தாய்?

 

டாக்ஸி டிரைவர்: ஓ, அதுவா? உங்கள் பெட்டியில் தொங்கும் அடையாள அட்டையில் உங்கள் பெயர் எழுதியிருக்கிறதே!!!!!!!

ஆர்தர்:- !!!!! ??? !!!!!! ???? !!!!!!!!!!!!!!

sherlock holms

Xxx

நிர்வாணப் பெண் ஓட்டம்!

 

நியூயார்க் நகர போலீஸ் “வாக்கி டாக்கி” அலறியது:

“அவசரம், அவசரம்! கார் நம்பர் 13 கவனிக்கவும். உடனே மூன்றாவது அவென்யூ 14ஆவது தெருவுக்கு விரைக. ஒரு பெண் ஆடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாள்”.

ஒரு சில வினாடிகளுக்கு ஒரே அமைதி!

இப்படி அறிவித்தவருக்கு சுரீர் என்று உரைத்தது! அடப் பாவி மகனே! நான் பெரிய தப்புச் செய்துவிட்டேனே! இப்போது எல்லா போலீஸ்  கார்களும் அங்கு போய்விடுமே என்ற எண்ணம் நிழலாட மீண்டும் மைக்ரோபோனை எடுத்தார்.

“கார் எண் 13 மட்டும் விரைக. மற்றவர் அனைவரும் அவர்தம் பணியில் ஆங்காங்கே நிற்க!

Xxx

-சுபம்-

 

 

 

 

Nude woman running down the street! Police and Detectives Anecdotes!!( Post No. 2464)

conan doyle

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 6 January 2016

 

Post No. 2464

 

Time uploaded in London :–  9-35 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Customer is always wrong!!

A policeman’s life is sometimes a happy one. This is indicated by the floor walker who threw up his job and entered the police force. When asked why, he said, “Well the pay and hours are alright, but the best thing is that the customer is always wrong.”

 

Xxx

Nude woman running down the street!

In New York City recently a police car cruising along the street received the following radio call.

“Calling car 13. Car 13. Go to Third Avenue and 14th Street, Nude woman running down the street. That is all.”

There was a pause. Then came the afterthought.

“All other cars stay on your beats. That is all.”

 

Xxx

sherlock holms

Sir Arthur Conan Doyle surprised!

The French are lovers of ratiocination (A reasoned train of thought). Accordingly there are to be found in that nation, many admirers of the works of Conan Doyle. Sir Arthur had once taxied from the station to his hotel in Paris, and as he left the cab, the driver said,

“Merci, Monsieur Conan Doyle.”

“How did you know who I am?” asked Doyle curiously.

The taxi man explained, “There was a notice in the paper that you were arriving in Paris from south of France. I knew from your general appearance that you were an Englishman.  It is evident that your hair was last cut by a barber of south of France. By these indications I knew you.”

“This is extraordinary. You have no other evidence to go upon? Asked Doyle.

“Nothing except”, said the driver, “the fact that your name is on your luggage.”

 

Xxx

I never buy empty bottles!

During Prohibition a malicious person directed the revenue officers to a man in whose cellar, they said, would be found a large cache of liquor. Swooping down upon the residence, they found nothing except the slightly incriminating presence of a hundred or more empty whisky bottles.

“How did these get here?” they demanded of the owner.

“I certainly don’t know”, replied the man innocently, “ I never bought an empty whiskey bottle in my life.”

Xxx

 

collie

Warning Dog!

Robert Burns had a collie (dog) named Thurlow. When he was a Revenue officer he used to encourage Thurlow, who was well known throughout the country side, to run a quarter of a mile or so ahead of him, that the moonshiners might be warned of his approach.

–Subham–

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும் (Post No. 2463)

Emperor-Akbar-Empress-Jodha

Akbar and his wife Jodha Akbar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 6 January 2016

 

Post No. 2463

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்திய சங்கீதம்

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும்

(Akbar and surya namaskar by Santanam Nagarajan)

ச.நாகராஜன்

 

 

கங்கை ஜலம் அருந்திய அக்பர்

 

அக்பர் ஒரு நல்ல ஹிந்துவுக்கு உரிய பல செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அவர் எங்கு சென்றாலும் கூடவே கங்கை ஜலம் கொண்டு செல்லப்படும். தன் வாழ்நாள் முழுவதும் கங்கை ஜலத்தைத் தவிர வேறெந்த நீரையும் அருந்தாதவர் அக்பர்.

 

Jodha-Akbar-Mugh

மரியாதையை எதிர்பார்க்காத மன்னர்

 

அவரது அரசவையில் இருந்த ந்வரத்னங்களின் வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அவர்களின் அழைப்பை அவர் எதிர்பார்ப்பதே இல்லை.

 

ஆனால் இதில் ஒரு சங்கடம் அவர்களுக்கு உண்டு. சாதாரணமாக மாமன்னரான அக்பர் ஒருவரது வீட்டிற்கோ மாளிகைக்கோ அரண்மனைக்கோ சென்றால் அவரை மரியாதை செய்ய வேண்டும், அவரது அந்தஸ்துக்குத் தக!

 

 

தங்கத் தட்டில் விருந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட குவளைகளில் நீர், ஒன்றே கால் கோடி ரூபாய் தக்ஷிணை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதைகள்.

ஆனால் ராஜா பீர்பல் இதற்கெல்லாம் எங்கே போவார்? அவர் தன் இல்லம் வந்தமைக்காக மன்னரை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடுவது வழக்கம்.

 

அக்பரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மகிழ்வார்.

தான்ஸேனும் இது போல தங்கத் தாம்பாளம், வைரக் கோப்பை, வெள்ளிக் குவளைகள், தங்க நாணய தக்ஷிணை ஆகியவற்றை ஒரு போதும் கொடுத்ததில்லை; ஏனெனில் அவரிடம் இவை இல்லை, அவ்வளவு தான்.

 

ஆனால் மன்னர் வந்தவுடன் பாட ஆரம்பிப்பார். அதில் அக்பர் உருகி விடுவார். அவர் தான் தான்ஸேனுக்கு எல்லாவற்றையும் தருவார்.

 

ஏராளமான ஹிந்து அறிஞர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் முழு அறிவையும் தன்னால் முடிந்த மட்டில் கிரகிக்கப்ப் பார்த்தார் அக்பர்.

surya namaskar by english

 

சூரிய உபாஸனை

 

தினமும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம். சூரிய உபாஸனையில் அவர் மனம் பக்தி சிரத்தையுடன் வெகுவாக ஈடுபட்டது.

 

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். அவரது ஆரோக்கிய ரகசியம் சூரிய நமஸ்காரத்தில் இருந்தது.

அக்பரின் இந்த சூரிய வழிபாடு தான்ஸேனை வெகுவாகக் கவர்ந்தது.

சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த தான்ஸேன், “ஒளிபொருந்தியவராக சிரஞ்சீவியாக அக்பர் ஆட்சி புரிய சூரிய பகவான் அநுக்ரஹம் புரிய வேண்டும்” என்று பாடலை யாத்துப் பாடினார்.

 

“அங்கே சூரியன், இங்கே அக்பர்!

இருவரையும் பாருங்கள்!

 

என்ன பவித்ரம், வந்து வரம் வாங்குங்கள், ஆனந்தம் பெறுங்கள்!

சஹஸ்ர கிரணங்களைக் கொண்டுள்ள சூரியன் போலவே அக்பரும் ஆயிரம் கிரணங்களைக் கொண்டுள்ளார். புத்தி ச்ரேஷ்டர். துக்கம் போக்குபவர் என தான்ஸேன் சொல்கிறேன்” என்ற பொருளமைந்த பாடலையும் யாத்துப் பாடினார்.

சூரிய உபாஸனையை இடைவிடாது அக்பர் செய்து வந்ததால் பவித்திரமான ஒருவராக அவர் இருப்பதாக நினைத்த தான்ஸேன் அக்பர் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வந்தார்.

 

surya deva painting

புனைகதைகளில் தான்ஸேன்

 

ஆனால் ராம தானுவாக இருந்தவர் தான்ஸேனாக மாறியதோடு இஸ்லாமை ஏன் தழுவினார் என்பதை வரலாறு சரியாக விளக்கவில்லை. பல புனைகதைகள் இருப்பதால் அது பற்றிய உண்மை தெரியவில்லை.

 

ஒரு கதையில் மன்னர் ராமச்சந்திரரிடமிருந்து வந்து விட்ட சோகத்தால் தான்ஸேன் பாடுவதையே நிறுத்தி விட்டதாகவும், இதனால் அக்பர் அவரிடம் தன் புத்திரியை அனுப்பிப் பாட்டுச் சொல்லித்தரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தரவே நாளடைவில் பழைய நிலைக்கு வந்து மீண்டும் பாட ஆரம்பித்ததாகக் கூறும் இந்தக் கதை வெறும் பொய்க்கதை என்பதை சுலபமாக உணரலாம்.

அரியணை ஏறி தான்ஸேனை அழைக்கும் போது அக்பருக்கு இருபதே வயது. அவர் எப்படி தன் மகளை 57 வயதான தான்ஸேனிடம் அனுப்பி இருக்க முடியும்?

 

ஆக தான்ஸேனின் வரலாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது.

 

ஆனால் ராகினிகளை  (ராக தேவதைகள்) அவர் உபாஸித்ததும் அந்த தேவதைகள் அவர் நாவில் நர்த்தனம் ஆடியதும் உண்மையே!

 

அக்பர் ஒரு வரலாற்று விசித்திரம் என்றால் அதில் அங்கம் வகிக்கும் தான்ஸேனைப் பற்றிய விவரங்களும் அப்படித்தான்!

*********

 

Tamil Genius! 100 tasks done simultaneously! (Post No. 2462)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2462

 

Time uploaded in London :–  8-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Western world is very familiar with blindfold chess games. German chess player Marc Lang played blindfold chess with 46 people at the same time and set a new record. But Tamils did 100 tasks simultaneously and earned a special place in the literary world. It is called Satavadanam. It is the art of responding to one hundred tasks performed simultaneously. One Tamil Muslim scholar Seykuthambi Pavalar is known for this feat. There was another gentleman born in Jaffna in Sri Lanka and attained the title ‘Satavadani’. His name is N.Kathiraver Pillay (1871-1907).

 

Born in West Puloli of Jaffna peninsula, he migrated to Chennai in Tamil Nadu hundred years ago. He was a great Tamil scholar who compiled a proper dictionary for Tamil like the English lexicographer Samuel Johnson. Mr Pillay lived just 36 years, but yet carved a special place for him in the field of literature. He composed poems in many genres such as Chitra Kavi (composing poems to fit them in the figures such as lotus, snake, chariot), Seettuk Kvai (Letter is the form of verses), Siledaik Kavi (poems in double entendre or paronomasia). He wrote commentaries for minor Tamil works and also published out of print Tamil works.

IMG_0280

When he was in Sri Lanka he did 18 tasks at the same time. But he practised more and got ready for 100 tasks. This was demonstrated in front of learned men in Chennai. If one is able to do eight tasks at the same time he is known as Ashtavadani and those who could do ten tasks simultaneously are known as Dasavadani. Like blindfold chess, more the number, more difficult it will be.

 

Ashtavadanam includes tasks such as answering eight people at one time. One will be asking him to compose a verse in Tamil , another will be asking him to do sums like addition, multiplication, subtraction, fifth person may ask him to play with him a board game. Other scholars will be asking him difficult questions in grammar. While he is doing all these things, he has to make an iron chain with difficult links. This is not the end. Someone will be throwing small stones or marbles on his back. When he stops he would ask him how many balls he threw. Another person will ask the meaning of a poem from Tamil Ramayana or Mahabharata.

 

If ashtavadanam is this complicated, one can imagine how difficult it would be to do 100 tasks simultaneously. N Kathirvel Pillay did 100 tasks in Lakshmi Vilas Theatre in Chennai. All this was done after announcing to the general public and inviting Tamil professors and other scholars. Simple questions such as the day, date, time on a particular point in the calendar will also be asked. Since N Kathirvel Pillay had tremendous memory power he did this without any difficulty.

Rev Clayton who was an officer in the British Government at that time wrote a review in ‘Mail’ newspaper after Kathirvelpillay’s Satavadanam. He mentioned that Mr Pillay did this with effortless ease.

blindfold chess

Blindfold Chess: similar task

The art of doing 8 or 10 or 100 tasks is unique to the Tamil speaking world. Tamil literary history mentioned several Ashtavadanis, Dasavadanis and a few Satavadanis. They symbolised tremendous memory power, focus and concentration.

 

–subham–

 

 

யாழ்ப்பாணத் தமிழறிஞர் செய்த “100 செயல்” அற்புதம்! (Post No. 2461)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2461

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தமிழறிஞர்கள் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) ஆவார். பல சீட்டுக் கவிகள், சிலேடைக் கவிதைகள், சித்திரக் கவிதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக முறையான தமிழ் அகராதி முதலியன இவர்தம் படைப்புகளாகும். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

 

ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்தால் அவரை அஷ்டாவதானி (அஷ்ட=எட்டு) என்பர். பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்தால் தசாவதானி (தச=பத்து) என்பர். நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி (சத = நூறு) எனபர். அஷ்ட, தச, சத என்பனவெல்லாம் வடமொழி எண்கள்.

 

தமிழ்கூறு நல்லுலகில் செய்குத் தம்பி பாவலர் என்பவற்கும் சதாவதானி என்ற அடைமொழி உண்டு. நா.கதிரைவேற்பிள்ளை செய்த அதிசயம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. அவர் என்ன செய்தார், எங்கே செய்தார்?

 

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் வசித்தது முழுதும் தமிழ்நாட்டில்தான். ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளின் பாதுகாவலனாக நின்றார்.

1908ஆம் ஆண்டில் பாலசுந்தர நாயகர் எழுதி வெளியிட்ட வாழ்க்கைச் சரித நூலில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று:–

 

பிள்ளை அவர்கள், முதலில் மேலைப்புலோலி கந்தசாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்வான் அ.குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார்.

 

பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பால சரஸ்வதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,

 

வேலும் மயிலும் துணையென நவிலல்

இலாட சங்கிலி கழற்றல்

சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன

6 இலக்கண விடை உபந்யாசம்

இரண்டறக் கலத்தல் உபந்யாசம்

பாரதச் செய்யுளுரை

இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை

எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை

 

இவை எல்லாவற்றையும் அன்பர்களது மனம் குதூகலமுறுமாறு காட்டி முடித்து சதாவதானியென்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

 

இதற்குப் பின் ரெவரெண்ட் கிளேட்டன் துரையவர்கள் நீலகிரி குண்ணூரில் உத்தியோகம் கொடுத்தார்.

 

IMG_0280

 

 

 

ரெவெரெண்ட் கிளேட்டன் துரையவர்களால் மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி:-

“தமிழ்ப் பாண்டித்யத்தின் அபிவிருத்தியி லூக்கமுடைய சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளைக்கு இம்மாதம் 25ஆம் தேதி குண்ணூரில் திடீரென்று நேர்ந்த மரணம் துக்கத்தையுண்டாக்கக்கூடியதே. அவரது வயது 36 ஆயினும் இச்சென்னையிலும், மதுரையிலும், தன் சுய நாடாகிய இலங்கையின் வடக்கிலும் தமிழ்க் கல்வியில் சிறந்தவர் என்ற கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். பூர்வீக பாஷையின் தத்துவ சாத்திரங்களில் பாண்டித்தியமும் மிக்க வைராக்கியமுடையவ ரென்றும் பிரசித்தியடைந்தவர். சின்னாளைக்கு முன் இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர். அவர் வைதீக சைவராயிருந்தும் அந்நாட்க்குரிய வேலைகளின் பேரில் மிக்க கவனமுடையவர். அவர் பிறப்பு மிகச் சிறந்ததே.”

 

கதிரைவேற்பிள்ளை 1907 ஆம் ஆண்டில் நீலகிரியில் இறந்ததால் இந்தச் செய்தி 1907 ஆம் ஆண்டு மெயில் பத்திரிக்கையில் வந்திருக்க வேண்டும்.

 

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

தமிழ்ப் பேரகராதி

அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை

பழநித் தல புராண விருத்தியுரை

சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம்

சிலேடை வெண்பா

யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா

கருவூர் மான்மியம் (மஹாத்மியம்)

சீட்டுக் கவிகள்:- ஏகாம்பரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா கா. மு.சுப்பராயமுதலியருக்கு,

பாலவனம் ஜமீந்தாரும் மதிரைத் தமிழ் சங்க அக்கிராசனருமான ஸ்ரீமாந் பாண்டித்துரைத்தேவர் பெயரில் வாகைப்பாட்டு

தருமை ஆதீன திருக்கயிலாய பரம்பரை அம்பலவாண தேசிகருக்கு

சாமிநாத பண்டிதருக்கு

தெல்லியபதி கதிரேசன் பிள்ளைக்கு,

இராஜரெத்தினம் பிள்ளைக்கு எழுதிய சீட்டுக் கவிகள்

காஞ்சி கோவிதராஜ முதலியார்க்கு எழுதிய சீட்டுக் கவி இதோ :–

 

 

வாழ்க்கைக் குறிப்பு:-

தந்தை பெயர்: நாகப்ப பிள்ளை

 

மனைவியின் பெயர் – வடிவாம்பிகை (கோவிந்த பிள்ளையின் குமாரத்தி)

புதல்வி பெயர்- சிவஞானாம்பிகை

 

 

வள்ளலார் அன்பர்களுடன் மோதல்

பிள்ளைவாழ் காலத்தில் சைவத் திருமுறைகள் மட்டுமே அருட்பா, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடியதை திரு அருட்பா என்று சொல்லலாகாது, அது மருட்பா என்று ஒரு வேண்டாத சர்ச்சை நிலவியது. நா. கதிரவேற்பிள்ளை ஆறுமுக நாவலர் கட்சியிலிருந்ததால், வள்ளலார் கோஷ்டி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டது. ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

அஷ்டாவதானம்:

ஒரே சமயத்தில் எட்டு காரியங்களில் கவனம் செலுத்துகை. இலாடச் சங்கிலி சேர்ப்பு,  ஒருவிருவர் வினாவிற்குத்திரம்  (உத்திரம்=பதில், விடை), சொக்கட்டான், முதுகிலிட்ட பரல் எண்ணல், சதுரங்கம், புதுக்கவிதை கூறல்,  கண்ட பத்திரிகை, கணிதம் கூறல், குதிரையடி கூறல் முதலியன ( பக்கம் 115, அபிதான சிந்தாமணி)

 

கண்ணை மூடிக்கொண்டு செஸ் விளையாடி சாதனை செய்வோரும் அபார நினைவாற்றல் உடையவரே..

blindfold chess

மார்க் லாங் சாதனை!

வெளிநாடுகளில் பார்க்காமலேயே (ப்ளைண்ட் Fபோல்ட்) செஸ் விளையாடுவார்கள். செஸ்/சதுரங்கப் பலகையைப் பார்க்காமலேயே, திரும்பி உட்கார்ந்துகொண்டு காயை நகர்த்தச் சொல்லி வெற்றி பெறுவார்கள். பலர் ஒரே நேரத்தில் பல சதுரங்கவீரர்களுடன் விளையாடுவதும் உண்டு. மார்க் லாங் என்ற ஜெர்மானியர் கண்ணை மூடிக்கொண்டு 46 பேருடன் செஸ் விளையாடி சாதனை படைத்தார். ஆனால் ஆட்டங்கள் முடிய சில நாட்கள் பிடிக்கும்.

 

–சுபம்–

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (Post No. 2460)

villi-bharatham

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 5 January 2016

 

Post No. 2460

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!

ச.நாகராஜன்

 

வில்லியின் பாணி

 

கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தங்களின் சிற்ப்புத் தன்மைகளை அவர்கள் காட்டிக் கொண்டே போவர்.அதைக் கண்டுபிடிப்பதில் தான் ரஸிகனுக்கு உற்சாகம்.

நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) அப்போது தானே சித்திக்கும்!

 

வில்லிப்புத்தூராரின் பாணியை ரஸிகனாக உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் ஏராளமான சிறப்பியல்புகளைக் கண்டு பிடித்து அநுபவிக்கலாம்.

 

ஒரு உவமையைச் சொல்லவே சில கவிஞர்கள் தவிப்பர். ஆனால் இரு அடிகளில் மூன்று உவமைகளை அடுக்கி நம்மை பிரமிக்க வைப்பார் வில்லிப்புத்தூரார்.

இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

villi 1

 

மின்னல், வேல், பொன் உவமைகள்

 

“மின்போல் நுடங்க விடைவேல் விழி நீர் ததும்பப்              பொன் போலுருவங் கருகும்படி பூமி போர்ப்ப              அன்போடு அவுணர் மடமாதர் அரற்றும் ஓதை என்போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்

 

(நிவாதகவசர் காலகேயர் வதை சருக்கம் பாடல் எண் 102)

அர்ஜுனன் ராட்சஸர்களை வதம் செய்து குவிக்கிறான்.

இறந்து போன ராட்சஸர்களின் மனைவிமார்கள் அழுது புலம்புகின்றனர்.

 

 

மின் போல் நுடங்க இடை: அவர்களின் இடைக்கு மின்னலை உவமையாக்குகிறார் கவிஞர். ஒளியும் மெல்லியதாக இருத்தலும் பற்றி இடை மின்னலாக கூறப்படுகிறது.

 

விழிக்கு வேல் உவமை :- கூர்மை கொண்டது. காம நோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால் விழிக்கு வேல் உவமை.

உருவத்துக்குப் பொன் உவமை: நிறம் பொன் போல ஜொலிக்கிறது. பொன் கிடைத்தற்கு அருமையானது. ஆகவே அருமை மற்றும் நிறத்திற்குப் பொன் உவமை ஆனது.

மட மாதர் என்பதால் அழகும் பேதைமையும் கொண்ட பெண்டிர் என்பது உணர்த்தப்பட்டது.

 

அவர்கள் அழும் ஒசை எது போல் இருந்தது என்றால் இடி இடிக்கும் ஓசையைப் போல இருந்தது.

உவமைகளின் குவியல் எப்படி அமைகிறது!

இன்னொரு பாடல்!

 

மின் தாரை, வெண்ணிலா, மேகம் உவமைகள்

 

“மின் தாரை பட வெண்ணிலா வீசு மேகம் கொல் என வந்து முன் நின்றானை முகநோக்கி நீதிக்கொர் வடிவாம் மன் இவை கூறுவான்

 

உன் தாதை தமியனோடு உயவாமல் ஒரு வாசமலர் கொண்டிடச் சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்

 

புட்பயாத்திரைச் சருக்கத்தில் 130வது பாடல் இது.

வீமனுக்கு இடிம்பியிடம் பிறந்த புதல்வன் கடோத்கஜன். வீமன் தன்னைக் கலந்து ஆலோசியாது ஒரு புஷ்பத்தைக் கொண்டுவரச் சென்றதை கடோத்கஜனிடம் தர்மர் கூறுவதாக அமைந்த பாடல் இது.

 

 

மின் தாரை பட என்பதால்  கடோத்கஜனின் செம்பட்ட மயிர் மின் தாரை போல இருந்தது என்பது பெறப்படுகிறது.

 

வெள் நிலா வீசும் என்பதால் வெண்மையான கோர தந்தங்களை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.

 

மேகம் கொல் என்பதால் கரிய பெரிய வடிவமான காளமேகமோ என்று கூறத் தகும் பெரிய வடிவை உடையவன்  அவன் என்பது பெறப்பட்டது.

 

கடோத்கஜனின் தோற்றம் ஒரு கணத்தில் நம் முன்னர் நிறுத்தப்படுகிறது, அடுக்கு உவமைகளால்!

 

அவனை நோக்கி, தர்மர், “உன் தந்தை என்னோடு ஆராயாமல் நறுமணம் கொண்ட மலர் ஒன்றைக் கொண்டு வருவதற்காகப் போய் விட்டான் என்று மனம் வருந்தி அன்புடன் கூறி விட்டு மீண்டும் கூறத் தொடங்குகிறான்” என்பதே பாடலின் பொருள்.

srimad_bhagavad_gita

 

கவிதை தரும் இன்பம்

 

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

 

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம்.

 

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

வில்லி பாரதத்தில் பல பாடல்களில் இப்படி உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதைக் கற்பதால் வரும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை!

 

வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு!

 

*******

 

 

 

What is Dance, Drama?-1 (Post No. 2459)

natyashastr2

COMPILED LONDON SWAMINATHAN

 

Date: 4 January 2016

 

Post No. 2459

 

Time uploaded in London :–  9-52 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

natyasastra

“In it (Natya) there is no exclusive representation of you or of the gods; for drama is a representation of the state (Bhaavaanikiirtana) of the three worlds.

 

In it sometimes there is a reference to duty, sometimes to game, sometimes to money, sometimes to peace, and sometimes laughter is found in it, sometimes fight, sometimes love making and sometimes killing of people.

 

This teaches duty to those bent on doing their duty, love to those eager for its fulfilment and it chastises those who are ill-bred or unruly, promotes self-restraint, in those who are disciplined, gives courage to cowards, energy to heroic persons, enlightens men of poor intellect and gives wisdom to the learned.

 

This gives diversions to kings, and firmness (of mind) to persons afflicted with sorrow, and (hints of acquiring) money to those who are for earning it, and it brings composure to persons agitated in mind.

 

The drama as I have devised it, is a mimicry of actions and conducts of people, which is rich in various emotions, and which depicts different situations. This will relate to actions of men good, bad and indifferent, and will give courage, amusement and happiness as well as counsel to them all.

 

The drama will thus be instructive to all, through actions and States (Bhaava) depicted in it, and through Sentiments arising out of it.

 

It will give relief to unlucky persons who are afflicted with sorrow and grief or over work, and will be conducive to observance of duty (dharma) as well as to fame, long life, intellect and general good, and will educate people.

 

There is no wise maxim, no learning, no rt or craft, no device, no action that is not found in the drama (natya)

 

Hence I have devised the drama in which meet all the departments of knowledge, different arts and various actions.so (O daityas) you should not have any anger towards the gods;for a mimicry of the world with its Seven Divisions (Sapta Dvipa) has been made a rule of, in the drama.

 

Stories taken out of Vedic works as well as semi historical tales (Itihasa) so embellished that they are, capable of giving pleasure, is called drama (natya).

 

A mimicry of the exploits of gods, Asuras, kings as well as house-holders in this world, is called drama.

 

An when human nature with its joys and sorrows, is depicted by means of Representation through Gestures, and the like (Words, Costume and Temperament) it is called Drama”.

 

—Bharata’s Natya Sastra (200 BCE)

abhinava darpana

What is Drama?-2

“Brahma explains to the Daanavaas:-

This play is not merely for your pleasure or the pleasure of the Devas, but exhibits mood (bhava) for all the Three Worlds. I made this play as following the movement f the world, whether in work or play, profit, peace, laughter, battle, lust or slaughter; yielding the fruit of righteousness to those who follow the moral law, pleasure to those who follow lust, a restraint for the unruly, a discipline for the followers of a rule, creating vigour in the impotent, zeal in warriors, wisdom in the ignorant, learning in scholars, sport to kings, endurance to the sorrow-smitten, profit to those who seek advantage, courage to the broken-willed; replete with diverse moods (Bhaavas), informed with the varying passions of the soul, linked to the deeds of all mankind, the best, the middling, and the low, affording excellent counsel, pastime, weal and all else.

This drama shall be the source of all counsel in matters of flavour (rasa), mood (Bhaava), and every rite; it shall serve as a timely resting-place for those who are grieved, weary, unhappy, or engaged in an arduous discipline; bestowing righteousness, renowned, long life, fortune, increase of reason; affording counsel to the world. That which is not found to be herein in not knowledge, nor craft, nor wisdom, nor any art, nor deeds, nor Union (yoga).

 

I made this drama according to the Seven Lands, and so you should not feel resentment towards the immortals. The drama is to be understood as witnessing the deeds of gods and Titans, kings of the sphere, and Brahma-prophets. Drama is that which accords with the nature (Svabhaava) of the world, with its weal and woe, and it consists in movements of the body and other arts of expressive gesture (Abhinaya). The theatre is such as to afford a means of entertainment in the world, and a place of audience for the Vedas, for philosophy, for history and other matters.

 

He adds that no performance should be begun without fulfilling the Office of the Stage (Ranga-Puja), and those that neglect this ritual will be ruined”.

Abhinaya Darpana

 

FROM THE BOOK ‘ASIA THROUGH ASIAN EYES’, YEAR 1959,SOAS,UNIVERSITY OF LONDON LIBRARY

 

–Subham–

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)

best bharat mata

Written by London swaminathan

Date: 4 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர், வாழ்க!” (பாரதியார்)

barati stat3

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைய நாடு பாரதம். இங்கு வாழ்ந்த சாது சந்யாசிகள், பெரியோர்கள், உத்தமர்கள், சத்யசந்தர்கள், உண்மை விளம்பிகள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், மஹநீயர்கள், ஞானிகள் — 3500 ஆண்டுகளாக ஒரே கருத்தை வலியுறுத்துவது, படித்துப் படித்து இன்புறத்தக்கது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –

என்ற புறநானூற்று வரிகளை (புறம் 192) அறியாதோர் யாருமில்லை; கனியன் பூங்குன்றன் இக்கருத்தைச் சொல்லுவது போலவே வடமொழி வாணவர்களும் செப்பி மகிழ்வர். வசுதைவ குடும்பகம்= உலகம் ஒரே குடும்பம் என்பது அவர்கள் கண்ட உண்மை.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம்

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

kanchi best anbe sivam

இந்தக் கருத்து பஞ்சதந்திரத்திலும், ஹிதோபதேசத்திலும் வலியுறுத்தப்படுவதால் இதன் முக்கியம் மேலும் தெளிவாகிறது.

 

பண்டிதா: சமதர்சின:

ஆனால் இதற்கெல்லாம் மூலக் கருத்து கண்ணபிரான் சொன்ன பகவத்கீதையில் இருக்கிறது. ஞான பண்டிதர்களுக்கு நாயும் பசுவும், யானையும் ஒன்றுதான்! அந்தணர்களும் புலையர்களும் ஒன்றுதான். காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகள் – அவர்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கிறது.

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:

வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின:

(பகவத் கீதை 5-18)

வித்யா விநய ஸம்பன்னே = கல்வியும் அடக்கமும் நிறைந்த

ப்ராஹ்மணே = பிராமணனிடத்தும்

கவி ஹஸ்தினி = பசுவினிடத்தும், யானையினிடத்தும்

சுனி ச = நாயினிடத்தும்

ஏவ ச்வபாகே = அவ்வாறே நாயை உண்ணும் புலையனிடத்தும்

பண்டிதாஹா = ஆத்ம ஞானிகள்

ஸமதர்சினஹ = சமநோக்கு உடையவர்கள்.

baba closwe up

இதையே தாயுமானவரும்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்  அவ்வுயிராய்

அங்கிருப்பது நீ யன்றோ பராபரமே – என்பார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்……..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

இது எவ்வளவு உண்மை; சிறு வயதில் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறோம்; ஒரு பெரிய பணக்காரனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது ஒரு ராஜாவுக்கு இரண்டு குமாரர்கள்; ஒருவர் உயர்ந்தார்; மற்றொருவர் தாழ்ந்தார் என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் விதவிதமாக கதைகள் உள்ளன. அவரவர் செய்தொழிலால்தான் இந்த வேற்றுமைகள். இந்தக் கருது வள்ளுவனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிருஹதாரண்யக உபநிஷத்திலுமுள்ளது (பிருஹத் = பெரிய, ஆரண்யக = காட்டு).

 

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை.

சிறுவயதில் ஒரு கதை கேட்டிருப்போம்; உடலின் ஒவ்வொரு உறுப்பும் தான் தான் முக்கியமான வேலையைச் செய்வதாகச் சொல்லி தனகே முதல் மரியாதை வேண்டும் என்னும் கதை அது. தான் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பாவிடில் உடலே இயங்காது என்று இதயம் சொல்கிறது. நுரையீரலோ தான் ஆக்சிஜனைக் கொடுத்து, கரியமிலவாயுவை வெளியேற்றாவிடில் உடலில் நீலம் பாய்ந்து இறக்க நேரிடும் என்கிறது. மூளையோ தந்து உத்தரவுப்படியே நரம்புகள் செயல்படுகின்றன; ஒருவனுடைய மூளை இறந்துவிட்டால் இதயம் என்ன செய்ய இயலும்? என்று சொல்கிறது. இதே போல கை, கால், கண், மூக்கு, வாய், செவி, தோல் எல்லாம் சண்டையிடுகின்றன. ஆனால் இக்காலத்தில் ஒரு சிறுவனுக்குக் கூடத் தெரியும் உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை; ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அவன் உடலூனமுடையவனே என்று.

 

இதை ரிக்வேதமும் புருஷசூக்தத்தில் (10-8-90) அழகாகச் சொல்லும்; பிராமணன் என்பவன் சிந்திப்பவன்; க்ஷத்ரியன் என்பவன் தோள்வலியால் நாட்டையும் மக்களையும் காப்பவன்; வைஸ்யன் என்பவன் தொடை வலிமையால் வணிகம் செய்து காப்பான்; சூத்திரன் என்பவன் கால் வலிமையால் உழைத்துக் காப்பான் என்று.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,

பாஹூ ராஜன்ய க்ருத:

ஊரு ததஸ்ய யத் வைச்ய:

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத

பொருள்: பிரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவருடைய முகம் பிராமணனாகவும், கைகள் க்ஷத்ரியனாகவும், தொடைகள் வைச்யனாகவும், பாதங்கள் சூத்ரனாகவும் ஆயின.

 

at_the_feet_of_god_medium

எப்படி ஒரு உறுப்பில்லாமல் உடல் நன்கு செயல்படாதோ அப்படியே இந்த நான்கு வர்கமும் எந்த நாட்டிலும், எப்போதுமிருக்கும்! ஆனால் பிறப்பின் அடிப்பையிலன்றி செய்தொழிலின் அடிப்படையில்.

பிற்காலத்தில் இது வேறுபட்டது. முன்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னன் மகன்கள் தான் ராஜாவாக இருக்கமுடியும். இன்றும் பிரிட்டனில் ராஜா அல்லது ராணி மகன் தான் அரசுகட்டிலில் ஏற முடியும். இன்றும்  நார்வே, சுவீடன், மொனாகோ என்று ஏராளமான நாடுகளில் இந்த வழக்கமுளது.பிரிட்டனில் பிரபுக்கள் மகன்தான் பிரபுவாகிறான். பரம்பரை மூலமே பிரபுக்கள் சபையில் இடம் பெறமுடியும். இந்திராகாந்தி, ராஜமான்யத்தை ஒழித்தபின்னர்தான் ஒவ்வொரு நாடாக அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு மக்கள் இன்றும் பிரிட்டிஷ் ராணியை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிறப்பே, பதவியை முடிவு செய்கிறது! அதில் யாரும் தவறு கானவில்லை. ஒவ்வொரு தடவைக் கருத்துக் கணிப்பு நடக்கையிலும் ராஜா ராணிக்குப் பெரும்பானமை மக்கள் அதாரவு இருக்கிறது!

எதுவுமே மக்கள் பார்க்கும் பார்வையிலும், ராஜ குடும்பத்தினரின் செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. ஆக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூட காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறு படும். ஆனால் இந்திய ஆன்ம ஞானிகளுக்கு எல்லாம் எப்போதும் ஒன்றே.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் (திருமூலர்)

 

894_Bhagwat_Gita_thumb[13]

–சுபம்–

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்! (Post No. 2457)

kambaar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 4 January 2016

 

Post No. 2457

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

kambar2

இராமாயண வழிகாட்டி

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி கம்பனின் திறமை

 

மஹாகவிகளின் மனம் ஒரு பெரும் சாகரம் போன்றது. அகன்றது. ஆழ்ந்தது. பல்வேறு நற்பொருள்களைக் கொண்டுள்ள பாற்கடல் போன்றது. அங்கு நாம் விரும்பித் தேடினால் கற்பக மரம் கிடைக்கும் காமதேனு கிடைக்கும்!

மஹாகவி கம்பனின் இராம காதை பாற்கடல் போல அமைந்த சுவை சாகரம்!

சுந்தர காண்டத்தில் ஒரு பாடல்.(நிந்தனைப் படலம் 50ஆம் பாடல்)

 

 

 

மனிசனால் அழிவா?

 

இராவணன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். இதனால் வெகுண்ட சீதை, “உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. அழியப் போகிறாய்” என்று கூறுகிறாள்.

 

கேவலமான ஒரு “மனிசனால்” தனக்குச் சாவு என்பதை நினைத்தாலே இராவணனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஆனால் இங்கு சீதை ‘இராவணஜித்’தைப் பற்றிச் சொல்கிறாள்.

இராவணஜித் என்றால் இராவணனை வென்றவன் என்பது பொருள்.

 

இராவணனை வெல்ல இருப்பவன் இராமன் ஆயிற்றே. அப்படியானால் இராவணஜித் யார்?

 

மானுயர் இவர் என மனங் கொண்டாயோ எனின்                

கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்                    

தானொரு மனிதனாற் தளார்ந்துளா எனில்                    

தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்

 

 

பாடலின் பொருள்: இந்த இராமனை மனிதன் என்று அலட்சியமாக நினைத்தாய் எனில் (ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்!)

 

காட்டில் உயர்ந்து தோன்றுகின்ற மலைகளை நிகர்த்த கார்த்த வீர்யாஜுனன் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வலிமை ஒருங்கினான். அல்லவா? அந்த பரசுராமனின் வலிமையையும் ஒடுக்கிய தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித்துப் பார்!

 

இங்கு கார்த்த வீர்யார்ஜுனனைப் பற்றியும் பலராமனைப்பற்றியும் சீதை குறிப்பிடுவதை கவிஞருக்கே உரிய தனித் தன்மை  மூலம் ஒரு இரகசியக் குறிப்பை அறிவிப்பதில் கம்பன் தன் திறமையைக் காட்டுகிறான்.

 

 

கார்த்தவீர்யார்ஜுனனே இராவணஜித்

 

முன்னொரு காலத்தில் நடந்த விஷயம்!

அனைவரையும் வெல்ல வேண்டும் என்ற வெறியில் திக்விஜயம் செய்த இராவணன் மாகிஷ்மதி நகருக்கு வந்தான். அதை ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்ட மாவீரன்.

அந்த நகரத்தில் உள்ளோர்,” எங்கள் மன்னர் தமக்குரிய பெண்களுடன் நீர் விளையாட நர்மதை நதிக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினர்.

உடனே இராவணன் நர்மதை நதிக்கு வந்தான். அதில் நீராடி மணலால் சிவலிங்கம் அமைத்துச் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

 

 

நர்மதியின் மேற்குக் கரையில் இருந்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு தனது நீர் விளையாடலுக்கு நர்மதை நதி போதுமானதாக இல்லை. ஆகவே ஐநூறு கைகளினால் ஓடுகின்ற நீரைத் தடுத்து அணை கட்டி மீதி இருக்கும் ஐநூறு கைகளைக் கொண்டு பல வித விளையாட்டுக்களைச் செய்து மகிழ ஆரம்பித்தான்.

எதிர்த்து ஓடி வரும் நீரானது இராவணன் பக்கம் வரவே தனது மணலால் ஆன சிவலிங்கம் அழிந்து விடுமே என்று ஆவேசப்பட்ட இராவணன் கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.

அவனோ இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே.

தன் இருபது கரங்களினால் இராவணனைப் பற்றித் தூக்கினான். இதர 980 கைகளினால் அவனைத் துன்புறுத்தியவாறே மாகிஷமதி நகர் சென்று அங்கு இராவணனைச் சிறையில் அடைத்தான்.

நடந்ததை அறிந்த விபீஷணன் ஓடோடிச் சென்று  பாட்டனாராகிய புலஸ்தியரிடம் நடந்ததைச் சொன்னான்.

உடனே புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்தார். மத்யஸ்த பேச்சு துவங்கியது.

 

 

உனக்கு “இராவணஜித்” என்ற பட்டப்பெயரைத் தருகிறேன். அவனை விட்டு விடு என்றார்.

திக்விஜயம் செய்ய வந்தவனையே வெல்லும் பட்டம் தனக்குக் கிடைக்க இராவணனை சிறையிலிருந்து விடுவித்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

 

yakshagana

இராவணஜித்தை வென்ற பரசுராமன்

 

அப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஒரு சமயம் ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் சென்று அங்கு விருந்துண்டு மகிழ்ந்தான். அங்கிருந்த பல வளங்களுக்கும் காரணம் அவரிடமிருந்த ஓமதேனு என்பதை அறிந்த அவன் அதைக் கவர்ந்து சென்றான்.

இதை அறிந்த ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் வெகுண்டெழுந்தார்.

 

 

அவனுடன் போர் செய்யப் புறப்பட்டார். கார்த்த வீர்யனின் பதினோரு அக்ஷௌகினி சேனையை அழித்தொழித்து அவனது ஆயிரம் தலைகளையும் தோள்களையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வெற்றி கொண்டார்.

சீதை இந்த வரலாறை இலேசாக ஞாபகப்படுத்தினாள் இராவணனுக்கு.

 

 

பரசுராமனை வென்ற இராமபிரான்

 

“உன்னை வென்றவனை- இராவணஜித்தை – கார்த்தவீரியனை வென்றானே பரசுராமன், அவனையும் வென்ற மாவிரன் இராமன்.

உன்னை வென்றவனை வென்றவனை வென்றவன் அவன்” – இது தான் சீதை சொன்ன சேதி!

 

 

அழகுற நான்கே அடிகளில் கம்பன் மாபெரும் வரலாற்றைச் சொல்லி தன் நயத்தையும் தான் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட நாயகன் நயத்தையும் காட்டுகிறான்.

கம்பன் போல் ஒரு கவிஞன் இனிப் பிறப்பானா!

*******

 

God forgives sins, otherwise heaven would be empty! (Post No. 2456)

diamond linga, ambani, rs50 crore,fb

Date: 3 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

2.One Hundred Quotations on God!—Part 2

(First Part was published yesterday)

 

cute krishna, fb

51.Divine grace was never slow.

(Lord Shiva is known as Asutosh, one who is easily pleased; that is why all the demons got boons from him quickly and easily)

52.God’s grace and piling moss are boundless (Piling Moss is a large stretch of land near Fleetwood.)

53.Well thrives he whom loves.

54.Who has god for his friend has the saints in his pocket.

55.Whom god loves, his bitch brings forth pigs.

56.When god loathes aught, men presently loathe it too(A reference to the dangers of losing god’s grace).

57.The grace of god is enough.

58.The grace of god is worth a fair.

59.God moves in a mysterious way (William Cowper 1731-1800)

60.Afflictions are sent to us by god for our good.

 

anjaneya near vijayawada

61.God heals, and the physician has the thanks.

62.God gives his wrath by weight, and without weight his mercy.

63.The most high god, sees, and bears; my neighbour sees nothing, and yet always finding fault.

64.God forgives sins, otherwise heaven would be empty.

65.He who forgives others, god forgives him (Arabic proverb).

66.Who errs and mends, to god himself commends (God forgives the repentant)

 

77.God comes with leaden feet, but strikes with iron hands (God is not quick  to punish, allowing time for repentance, but when he strikes, it is with force).

78.The feet of the avenging deities are shod with wool(A warning of the silent approach of divine retribution)

79.God is a sure pay master.

bairagi matam2

Devil and God (Deva and Asura)

80.The believers never get disappointed; this is the verdict of the Four (Hindu) Vedas.

81.The devil is god’s ape (Devil strives to counterfeit or parody the works of god)

82.Where god has his church, the devil will have his chapel.

83.Where God dwells, the devil also has his nest.

(atheists will always be there)

84.God sends the corn and the devil mars the sack

85.That which god will give, the devil cannot reave (reave means ‘take away’)

 

God and Man

86.God makes and man shapes

87.God made the country, and man made the town

88.Man does what he can, and God what he will.

89.Man proposes, God disposes.

90.God is Omnipotent, Omniscient and Omnipresent.

 

 

bangle meenakshi, madurai

Ramakrishna Paramahamsa on God:–

91.God is beyond all attributes.

92.God alone is true; his manifestations as living beings and the world are untrue (non-eternal)

93.Those who describe god has never seen Him; those who has seen him never described Him (he is beyond words)

94.God the absolute and god the personal are one and the same.

95.God is formless and god is possessed of form too. He is also that which transcends form and formlessness.

96.God with form is visible. Yes, we can touch him and talk to him face to face as with our own dearest friend.

97.Serving a poor man is serving god.

98.The more you advance towards god, the more you will find his attributive grandeur falling off.

99.God appears in various ways – sometimes in human form, sometimes as a spiritual expression.

100.God oft has a great share in a little house.

 

durga beauty

Tamil Poet Tiruvalluvar on God:-

101.As all alphabets have the letter ‘A’ for their first, so that the world God for its beginning.

102.No ills of life ever touch those that alone cling to the feet of God

103.God is beyond likes and dislikes.

104.God abides in the lotus shaped region of a devout heart.

105.God is incomparable Divine

106.God is Ocean of Virtue.

  1. God is love – Tamil Poet Tirumular

–subham-