அஃகமும் காசும் சிக்கெனத் தேடு! (Post No.2807)

MONEY_LAUND_1337399f

Written by london swaminathan

 

Date: 13 May 2016

 

Post No. 2807

 

Time uploaded in London :–  10-43 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அஃகமும்= நிலபுலன்களையும் அதில் விளையும் தானியங்களையும்

காசும்= பணத்தையும்

சிக்கென = உறுதியாக

தேடு = முயற்சி செய்து பெறு

-என்று கொன்றைவேந்தனில் அவ்வையார் அழகாகச்சொல்லிவிட்டார்.

இது போதாதோ என்று எண்ணி, மேலும் சொல்லுவார்:-

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

சொக்கர் = பொருளுடையவர் (சொக்கத் தங்கம் வைத்திருப்பவர்)

அத்தம் = செல்வம் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ=அறம், பொருள், இன்பம், வீடு என்பதிலுள்ள அர்த்தம் =அத்தம்)

பெறுவர் = அடைவர்.

அதாவது ஏற்கனவே செல்வம் வைத்திருப்பவர், புத்திசாலியாக இருந்தால், அதை நல்ல விதத்தில் முதலீடு செய்து மேலும் மேலும் செல்வதராவர் என்பது அவ்வையரின் கணிப்பு.

 

அட, இவ்வளவு சொல்லியும் புரியாதோருக்கு இன்னும் ஒரு வக்கியத்தையும் சொல்லி விடுவோம் என்று கருதி,

திரைகடலோடியும் திரவியம் தேடு – என்றார் கொன்றைவேந்தனில்.

black-money-generic_ndtv

அதாவது, உள்நாட்டில் செல்வம் சம்பாதிக்க முடியவில்லையா, அல்லது போட்டி தைகமாக இருக்கிறதா, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதி என்றார்.

இவை அத்தனையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றவர்கள் செட்டியார்களும், படேல் சமூகத்தினரும்.

வெற்றிவேர்க்கை எழுதிய அதிவீர ராம பாண்டியனும் “வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்: என்று கூறி அதை உறுதி செய்கிறார்.

 

இந்து மதம் ஒரு திட்டமிடப்பட்ட மதம்; கட்டுக்கோப்பன மதம்; காமா சோமா என்றோ கன்னா பின்னா என்றோ அமைக்கப்பட்ட மதமல்ல. பழைய சம்ஸ்கிருத நூல்களில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்று வாழ்க்கையின் தத்துவங்களை நாலே சொற்களில் சொல்லிவிட்டனர். இதை அப்படியே தொல்காப்பியரும், சம்ஸ்கிருதப் பேரறிஞன் வள்ளுவனும், புறநானூற்றுப் புலவர்களும் அப்படியே அதே வரிசையில் தொல்காப்பியத்திலும், புற நானூற்றிலும், திருக்குறளிலும் பல இடங்களில் சொல்லிவிட்டனர். (குறள் எண், தொல்காப்பிய வரி எண், புறநானூற்றுப் பாடலெண் வேண்டுவோர் என் பழைய கட்டுரைகளைப் பார்க்கவும்).

 

அறம்:- வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடி

பொருள்:- சும்மா, பொழுதைக் கழிக்காதே! எப்படி பொருள் சேர்ப்பது; முதலில் சொன்ன அறப்படி (தர்மப்படி).

இன்பம்:– நல்ல மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து; அனுபவி ராஜா, அனுபவி.

 

மோக்ஷம்:- மேற்கூறிய மூன்றும் சிற்றின்பம்தான் தரும்; மேற்கூறிய மூன்றும் ஒரு நிலையில் அலுத்துப் போகும். பேரின்பம் பெற, நிலையான இன்பம் பெற, வீடு பேறு பெறத்தான் இவையனைத்தும் பயன்பட வேண்டும்.

 

சம்ஸ்கிருத பண்டிதர்களும் அழகாகச் சொல்லுகிறார்கள்:–

“ஸ்ரேயாம்சி சகலான்யனலசானாம் ஹஸ்தே நித்யசான்னிதயானி”

யார் சோம்பேறித்தனம் இல்லாமல், எப்பொழுதும், உழைக்கிறார்களோ, அவர்களிடத்திலே எப்போதும் வளமும் நலமும் தங்கும்.

 

Shreyaamsi cha sakalaanyanalasaanaam haste nityasaannidhyaani

 

All prosperity and welfare is always in the hands of those who are always active, who do not

know laziness  

 

lakshmi in kshetras

உத்தரராமசரிதம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தில், பவபூதி கூறுவார்:-

 

“சாஹசே ஸ்ரீ ப்ரதிவசதி”

பொருள்:- துணிவான செயல்களைச் செய்வோரிடத்திலே லெட்சுமி வசிக்கிறாள் (செல்வம் நிலையாகத் தங்கும்)
साहसे श्री प्रतिवसति

 

Saahase shree prativasati

 

In adventure resides Goddess Lakshmi (Only those who are adventurous can amass wealth)
Uttararaamacharitam (Bhavabhuti)

 

–சுபம்–

 

 

 

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806)

4_pyramids

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2806

 

 

Time uploaded in London :–  6-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”

 

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே

 

 

 

என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

 

 
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன்  தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

 

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

 

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

 

“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”

“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”

“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”

“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”

“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

 

“சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

 

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”

 

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

 

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.

 

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

 

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.
 
அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

 

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”

 

To be continued……………………………

 

 

 

 

Quick Thinking Anecdotes! (Post No.2805)

Go to hell

Compiled by london swaminathan

 

Date: 12 May 2016

 

Post No. 2804

 

Time uploaded in London :–  19-06

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

As Mark Hanna was walking through his office one day he overheard one of his employee’s remark that he wished that he had Hanna’s money and Hanna was in the poor house.

 

Immediately upon his reaching office Hanna sent for the young man.

He told him he overheard his statement, and then added, “Supposing you had your wish. And you had my money and I was in the poor house, then what would you do?”

Quickly he boy replied, “Well, I guess the first thing I would do would be to get you out of that poor house.”

The boy got a raise in salary.

Xxx

Jackass or Animal?

When Champ Clark was Speaker of the House, Congressman Johnson of Indiana interrupted the speech of an Ohio representative, calling him a jackass. The expression was ruled to be un parliamentary and Johnson apologised.

“I withdraw the unfortunate word, Mr.Speaker, but I insist that the gentleman from Ohio is out of order.”

“How am I out of order?”, angrily shouted the other.

“Probably a veterinary could tell you”, answered Johnson. And this was allowed to enter the record.

3jackasses-149666.jpg

Xxx

You don’t need to ‘Go to Hell’!

Two Massachusetts State Senators got into an angry debate and one told the other he could “go to hell.” The man thus consigned called on Governor Coolidge and asked him to do something about it.

 

Mr Coolidge replied

“I have looked up the law, Senator, and you don’t have to go there.”

—Subham–

 

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!! (Post No.2804)

themiser600w-238x300

Written by london swaminathan

 

Date: 12 May 2016

 

Post No. 2804

 

Time uploaded in London :–  17-57

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி

ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி

 

“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”

இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!

 

தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்

palmyrah avenue

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

 

பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

Arecanut-Cultivation

முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள்

தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் அனதப் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

 

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்

இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்

–நீதிநெறிவெண்பா

 

தென்னை மரத்தின் தியாகம்!

 

பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.

 

தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

–வாக்குண்டாம்

coconut in sun light

–சுபம்–

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803)

search in egypt1

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2803

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

 

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்

எழுதியவர்- ச.நாகராஜன்

 

 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
ஸ்பிங்ஸ்
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

 

அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

 

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

search in egypt2

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

 

 

To be continued…………………………………..

 

 

Misers are the Best Philanthropists! (Post No 2802)

themiser600w-238x300

 

Written by london swaminathan

 

Date: 11 May 2016

 

Post No. 2802

 

Time uploaded in London :–  18-54

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

There is a satirical couplet in Sanskrit, mocking at the misers:

Krupana iva daataa na bhuuto na bhavishayati

Na buncanneva sarvasvam parasmai sah pradaasyati

 

There was neither a philanthropist in the past nor there will be one in in the future like the misers. They don’t even eat and leave all theirs to others.

 

It is true indeed that they don’t spend anything for themselves and after their death, all their wealth go to others.

Arecanut-Cultivation

Picture of Areca nut tree

People are of Three Tree Types!

 

He gives twice who gives quickly – is a proverb.

A Tamil poem also says that there is nothing wrong to say ‘No’ if one doesn’t have money to donate; but it is the habit of low lives to dodge and refuse to give at the end (Naladiyar poem)

 

Another Tamil verse compares people who prevent other people from giving to a fruit tree surrounded by thorny bush. Here the fruit tree stands for the philanthropists and the thorny bush to the bad people who prevent the good people from donating. (Neethineri Venba)

The same poet divides people into three categories:

Palmyra Tree people:

The first category is like the Palmyra tree; they give like Palmyra trees; i.e the Palmyra trees give fruits even without we watering it.

The second category of people is like the Coconut trees. You have to water the coconut trees now and then to get good yields.

The third category of people is like areca nut trees. Unless you water it constantly the trees wont yield you any fruits. People at the lowest level will help you only when you help them.

 

–Subham–

 

நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801)

IMG_1652 (2)

Written by london swaminathan

 

Date: 11 May 2016

 

Post No. 2801

 

Time uploaded in London :–  17-11

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:

 

महीयांसः प्रकृत्या मितभषिणः

 

Maheeyamsah prakrityaa mitabhaashinah

 

Great men, by nature, do not talk much (they limit their speech to the essentials only)

மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:

பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.

வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.

 

இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.

 

ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

விரைந்துரையார்

மேன்மேலுரையார்

பொய்யாய் புனைந்துரையார்

பாரித்துரையார்

 

பொருள்:

விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்

பின்னர் எப்படிச் சொல்லுவார்?

சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.

 

இதோ பாடல் முழுதும்:

விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய

பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்

சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்

சொல்லுக செவ்வியறிந்து.

—ஆசாரக்கோவை

 

திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.

 

இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:

satyam bruyat priyam bruyat na bruyat satyam apriyam
priyam ca nanrutam bruyat esha dharmah sanatanah

                 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

–மனு ஸ்மிருதி 4-138

உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;

கசப்பான உண்மையைச் சொல்லாதே;

இனிமையான பொய்களைப் பேசாதே;

இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).

 

எனது பழைய கட்டுரை:

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !(
Post No.837            Date. 13-02-2014

–subham–

 

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5 (Post No.2800)

HUGE BUDDHA

Written  BY S NAGARAJAN

Date: 11 May 2016

 

Post No. 2800

 

 

Time uploaded in London :–  6-30 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 58. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.

 

 

தன் தாயை ஒரு முறை கூட அவர் பார்த்ததில்லை. அவர் பிறக்கும் போதே தாய் இறந்து விட்டாரே! ஒரே ஒரு முறை தன் தாயைக் காண அவர் விரும்பினார்.

 

 

தன் தாய்க்கு  முக்தி அளிக்க ஒரு கடுமையான சபதத்தை அவர் மேற் கொண்டார். அது தான் விரலை எரிக்கும் விரதம்.

இதை அசோகா மடாலயத்தில் நிறைவேற்றுவது என்று அவர் நிச்சயித்தார்.

 

 

அங்கு புத்தரின் எச்சங்கள் இருந்தன. அசோகா மடால்யம் சென்று புத்தரின் எச்சங்களுக்கு தன் மரியாதையுடன் கூடிய நமஸ்காரத்தை அவர் செய்தார்.

 

 

ஒரு நாள் இரவு திடீரென்று மிக நீளமான  கோல்டன் ட்ராகன் (தங்க கடல்நாகம்) மிக பிரகாசமாக அவர் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு அறைக்கு முன்னால் இருந்த குளத்தில் அது இறங்கியது. அதன் முதுகின்  மீது  ஸு யுன்  ஏறி அமர்ந்தார். அது வானத்தில் பறந்தது.

அடடா, மலைகள், நீரோடைகள், மரங்கள், மலர்கள் என அழகுக்கு அழகு தரும் அனைத்தையும் அவர் பார்த்தார். மிக கம்பீரமான அதி அழகான அரண்மனைகள், மாளிகைகளை எல்லாம் அது கடந்தது. ஒரு அறையை அடைந்தது.

ஸு யுன்  அந்த அறையில் தன் அன்னையைக் கண்டார். “அம்மா! தயவு செய்து இந்த ட்ராகனின் மீது ஏறி மேற்கு சுவர்க்கத்தில் உள்ள அமிதாப புத்தரை அடையுங்கள்’ என்று கூறினார்.

ட்ராகன் மீண்டும் கீழிறங்க  ஸு யுன்  கண்ணை விழித்தார். மனமும் உடலும் குளிர்ந்திருக்க பார்வையோ முழுவதும் அறியத்தக்க விதத்தில் தீர்க்கமாக இருந்தது.

 

 

அந்த ஒரே ஒரு தடவை தான் அவர் தன் அன்னையைப் பார்த்தார்!

 

 

தினமும் நமஸ்காரம் செய்வது தொடர்ந்தது. ஒரு நாள் திடீரென்று உடல் நலம் சீரில்லாமல் போனது.

உட்காரக் கூட முடியவில்லை. எல்லோரும் ஸு யுன்னின் இறுதி நாள் நெருங்கி விட்டது என்றே நினைத்தனர்.

தன் விரதத்தை முடிக்காமல் சாகக் கூடாது என்று நினைத்தார் அவர்.

 

 

ஆனால் இந்த உடல் நிலையில் விரலை எரிப்பதாவது! அனைவரும் அதை எதிர்த்தனர்.

 

ஸு யுன்  கண்ணீர் ததும்ப மடாலய நிர்வாகியாக இருந்த துறவியை நோக்கி, “எனக்கு உடலும் உயிரும் தந்த அன்னைக்கு நான் செய்ய வேண்டிய க்டனைச் செய்ய விரும்புகிறேன். அதில் என் உயிர் போனால் தான் என்ன?” என்றார்.

 

 

அந்த துறவிக்கோ வயது 21 தான்.  அவர் பெயர் ஸான் லியாங். அவர் கண்ணீர் ததும்ப, “ அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நாளை தான் நிச்சயிக்கப்பட்ட நாள். அனைவருக்கும் ஆகும் உணவுக்கான செலவு என்னுடையது” என்றார்.

மறு நாள் வந்தது.அனைவரும் கூடினர். ஒருமனப்பட்ட மனதோடு புத்தரை துதித்து வணங்கி ஸு யுன் விரலை எரிக்கும் சடங்கைத் தொடங்கினார். விரல் கொஞ்சம் கொஞ்சமாக தீபத்தில் காட்டப்பட்டது!

 

 

அசோகா மடாலயத்தில் புத்தரின் எச்சங்கள் ஏராளம் இருந்தன. புத்தரின் 84000 எச்சங்களை அசோகர் வெவ்வேறு ஸ்தூபங்களில் நிறுவி அந்த எச்சங்களை பூமிக்கடியில் புதைக்குமாறு  கடவுளருக்கு ஆணையிட்டார். கிழக்கில் சீனாவில் இது 19 இடங்களில் உள்ளன. இவற்றில் இரண்டு இடங்களீல் ஒன்று மவுண்ட் வு –டாய் இன்னொன்று அசோகா மடாலயம்.

மவுண்ட் வு-டாயில் ஸ்தூபத்திற்கு அடியில் எச்சம் உள்ளது. அதைக் காண முடியாது.ஆனால் அசோகா மடாலயத்திலோ அது டாய்- காங் என்ற அரசன் அரசாண்ட போது பூமிக்குள்ளிருந்து வெளியே வந்து விட்டது. அங்கே ஒரு ம்டாலயம் ஸ்தாபிக்கப்பட்டு புத்தரின் எச்சம் ஒரு தூணில் வைக்கப்பட்டது.

வரிசையாக நின்று ஒவ்வொருவரும் ஸ்தூபத்திற்கு அருகில் சென்று வணக்கம் செலுத்த வேண்டும்.

 

 

அங்கு தரிசிப்பவரின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப எச்சம் சிறிதாகவோ பெரிதாகவோ அவர்களுக்குத் தோன்றும். சில்ர் ஒன்றைக் காண்பர். சிலரோ பலவற்றைக் காண்பர். வண்ணமும் மாறும் – பார்ப்ப்வர்களின் நிலைக்குத் தக்கபடி.

 

ஸு யுன் எச்சத்தை தரிசித்த பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து தன் அறைக்கு மீண்டார்.

அவர் மனம் திருப்தி அடைந்திருந்தது.

தாயை தரிசித்ததோடு  மட்டுமின்றி அவ்ரது முக்திக்கும் அவர் வழி வகுத்து விட்டார்!

-தொடரும்

Secret Box of a Shepherd! Persian Story!! (Post No.2799)

sheep, sun

Written by london swaminathan

 

Date: 10 May 2016

 

Post No. 2799

 

Time uploaded in London :–  18-33

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

There was a shepherd in a remote corner of Iran. In those days the country was called Persia. He was very simple and spent all his time happily in shepherding. He just wore a tattered sheep skin. But he was extraordinarily brilliant. He was a great scholar who looked like a beautiful lotus in a muddy pond or like shiny a gem stone in the middle of barren rocks. He can be compared to Emperor Vikramaditya, the great wise king of India. Like Vikramaditya he knew the language of the birds and animals. He gave advice to anyone who came to him.

 

Slowly he was made the leader of the people living in that area. When his name and fame spread to the capital, the king also came to know about him. He was wondering whether the people simply exaggerate or there is some truth in the story. So he decided to meet in but in disguise. One day he set out to the cave in the far corner of his country dressed like a poor man in rags. He rode an old horse. His ministers also followed him disguised as travellers.

 

As soon as they came near the cave, they were received with all the hospitality. The shepherd gave them milk and cheese. Slowly they got involved in discussion on various topics. The king asked him who his master was. He told the king that he learnt all himself. Answering a question of the disguised king, he suddenly addressed him Oh! King!.

 

The king was surprised and asked him how come he knew that he was the king of Persia. He told him that his behaviour, voice, stance, look and the knowledge showed him that he must be a great king. Now the king was really impressed told him his knowledge shouldn’t be wasted and gave him the post of state governor. The shepherd accepted his offer.

sheep cycle field

Years rolled on. The governor turned shepherd was going to all the places with locked box. People were wondering what it contained and why he was holding it all the times. Slowly rumours were spread by jealous people. They said that he was stealing the money of the king or he may be pocketing the taxes or he may be accepting bribes and keeping them in the locked box. The rumour reached the ears of the king who rushed to his place.

 

As and when the king saw the locked box with him he became very angry and shouted at him and ordered him to open the box. He maintained his composure and quietly opened the box. All were eagerly waiting for that moment. People were imagining all the worst that could happen to the poor shepherd governor. But to their disappointment there was only his old sheep skin. Before any one asked him the reason for keeping it in a tightly locked box, he explained: “I don’t want to become arrogant and forget my humble past. I was happy being a shepherd, dressed with this simple sheep skin. I always wanted to remember my past.”

 

The king was more impressed now and offered him a bigger role of ruling a big region. Did he accept it?

 

There are two ends for the story:

1.He said ‘No’. He told the king that he was happy going back to his previous shepherding which kept him happy for ever.

  1. He said ‘Yes’. He became the ruler of a bigger are and became more famous.

 

–subham–

 

 

 

 

ஆட்டிடையன் ராஜாவான கதை! (Post No.2798)

sheep, sun

Written by london swaminathan

 

Date: 10 May 2016

 

Post No. 2798

 

Time uploaded in London :–  15-35

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஈரான் (பாரசீக) நாட்டில் ஒரு இடையன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒரு குகையில் வசித்தான். வெறும் ஆட்டு ரோமத்தை ஆடையாக அணிவான். காலை முதல் மாலை வரை “செய்யும் தொழிலே தெய்வம்” என்று வாழ்க்கை நடத்தி வந்தான். ஆடு மேய்க்கும் இடையன் ஆனாலும் அறிவில் மஹா மேதை. விக்ரமாதித்தன் போல விவேகமும் ஞானமும் பெற்றிருந்தான். அவனைப் போலவே பறவைகளின் மொழியும், பிராணிகளின் குணநலன்களையும்  அறிந்திருந்தான். ஆகையால் எந்த ஆலோசனைக்கும் மற்ற இடையர்கள் இவனையே அணுகினர். கொஞ்சம் கொஞ்சமாக அவன் புகழ் பரவியது.

 

ஆட்டிடையன் பெரிய அறிஞன் என்று அறிந்து அருகாமையிலுள்ள நகர மக்களும் அவனிடம் வந்து சண்டை சச்சரவுகளுக்குத் தீர்வு கண்டு திரும்பினர். சில ஆண்டுகளுக்குள் அவன் புகழ் பாரசீக மன்னனுக்கும் எட்டியது. அவனுக்கு ஒரே ஆச்சரியம். சிலருக்குக் காரணமில்லாமலேயே புகழ் சேரும். அது அவர்களுடைய ஜாதக விசேஷம். இவனும் அப்படிப்பட்ட ஒரு ஆளாகத்தான் இருக்கும். இருந்தபோதிலும் நாமே சென்று உண்மை அறிவாளியா? என்று பரீட்சித்து வருவோம் என்று எண்ணினான்.

 

ஒரு நாள் தனது அரச உடைகளைக் களைந்துவிட்டு, ஒரு ஏழை போலக் கந்தைகளை உடுத்திக்கொண்டு ஒரு கிழட்டு குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான். அவனது சில மந்திரிகளும் அரசனின் மாறு வேடத்திற்குத் தக மாற்று உடைகளை அணிந்து பின்பற்றி வந்தனர்.

 

குகை அருகே வந்தவுடன் அந்த ஆட்டிடையன் மன்னரின் பரிவாரத்தை அணுகி உபசார வார்த்தைகளைக்கூறி ஆட்டின் பால், பாலாடைக்கட்டி முதலியன கொடுத்து உபசரித்தான். பின்னர் இருவரும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். கொஞ்சம் நேரத்துக்குள் வந்திருப்பவன் பாரசீக மன்னன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டான். இடையன் அவ்வளவு பெரிய அறிவாளி. ஆளைப் பார்த்தமாத்திரத்திலேயே எடை போட்டு விடுவான்.

 

ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டும் நிலை வந்தது. நீங்கள் இவ்வளவு அறிவாளியாக இருக்கிறீர்களே. உங்களுக்குக் குரு யார் என்று மன்னன் கேட்டான். எனக்கு நானேதான் குரு, மன்னவா! என்று இடையன் பதிலளித்தான். கந்தை ஆடையில் வந்து, சாதாரண விஷயங்களைப் பேசியபோதே இவன் என்னை மன்னன் கண்டுபிடித்துவிட்டானே என்று வியந்து என்னை எப்படி மன்னன் என்று கண்டுபிடித்தாய்?என்று கேட்டான்.

 

உங்களுடைய நடை உடை பாவனை, குரல் வளம், கண் தீட்சண்யம் ஆகியன ஒரு மன்னருக்கே உரித்தானவை என்பதால் கண்டுபிடித்தேன் என்றான் ஆட்டு இடையன். மன்னன் உடனே, இவ்வளவு பெரிய அறிவாளி, இப்படி ஆடு மேய்த்து தன் அறிவை வீணடிக்கக்கூடாது. உன்னை இந்த மாகாண கவர்னராக நியமிக்கிறேன் என்று உடனடி உத்தரவு பிறப்பித்தான். இடையனுக்கும் பெரு மகிழ்ச்சி. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்தது போல இருக்கிறது என்று எண்ணினான்.

sheep cycle field

காலம் உருண்டோடியது. ஆட்டிடையன் எங்கு போனாலும் ஒரு பூட்டிய பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டே செல்வதை அனைவரும் கவனித்தனர். அவனைப் பிடிக்காதவர், சில வதந்திகளை உலவ விட்டனர். இவன் பார், மன்னரின் சொத்துக்களைச் சுருட்டத் துவங்கிவிட்டான் என்றனர். இன்னும் சிலர் இவன் சம்பளம் போதாது என்று கிம்பளம் (லஞ்சம்) வாங்கத் துவங்கிவிட்டான் என்றனர். நாக்கில் நரம்பில்லாமல் பேச மக்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா? மன்னன் காதுக்கும் ஆட்டிடையனின் பூட்டிய ரஹசியப் பெட்டி பற்றிய செய்தி எட்டியது.

 

உடனே மன்னன் குதிரையில் பறந்தோடி வந்தான். மக்கள் சொன்னமாதிரியே ஆட்டிடையன், பூட்டிய பெட்டியோடு செல்வதைக் கண்டு படபடத்தான். கோபக் கனலைக் கொட்டினான். பெட்டியைத் திற, உடனே! என்று கூச்சலிட்டான்.

 

இடையனோ மஹா அமைதியோடு பெட்டியின் சாவியை எடுத்தான். எல்லோர் கண்களும் தாமரை மலர்வது போல மலர்ந்தன; அகல விரிந்தன. பெட்டிக்குள், அவன் கவர்னராவதற்கு முன் கட்டிய கந்தலான ஆட்டு ரோமம் இருந்தது. மன்னன் கேட்பதற்கு முன்னரே அவன் சொன்னான்:–

என் பதவியால் எனக்கு அதிகார ஆணவம் தலைக்கு மேல் ஏறிவிடக்கூடாது என்பதற்காக நான் எனது எளிமையான, தூய்மையான வாழ்வின் சின்னமான ஆட்டு ரோம ஆடையை இதில் பாதுகாத்து வைத்துள்ளேன்” என்றான்.

மன்னன் வெட்கித் தலை குனிந்தான். எவ்வளவு நல்லவனை மக்களின் சொல் கேட்டுத் தவறாக எண்ணினோம் என்று வருந்தி, கண்ணீர் சிந்தினான். உன்னுடைய எளிமையையும் நேர்மையையும் மெச்சினேன். இன்று முதல் உன்னை இன்னும் பல மாகாணங்களைக் கொண்ட பெரிய பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கிறேன் என்றான்.

மன்னவா, நன்றி; ஆனால் எனக்கு பதவியே வேண்டாம். என்னுடைய எளிமையான ஆடு மேய்க்கும் வேலையே பேரின்பம் தந்தது. கல்லடியை விட மக்களின் காரணமில்லாத சொல்லடி பொறுக்கமுடியாதது; நான் போய் வருகிறேன் என்று கவர்னரின் சீருடையை கழற்றிவிட்டு ஆட்டுரோமத்துடன் மீண்டும் ஆடுமேய்க்கப் புறப்பட்டான்.

“செய்யும் தொழிலே தெய்வம்; திறமைதான் நமது செல்வம்” – என்று பாடிக்கொண்டே போனான்.

(இந்தக் கதையின் இன்னொருவித முடிவு: அவன் மன்னன் சொன்னபடி பெரிய பகுதிக்கு அரசன் ஆனான் என்று முடியும். எப்படியாகிலும் கதையின் நீதி ஒன்றுதான்: கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு;

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்று பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாடியது (புறம்.183) பாரசீகத்திலும் செல்லுபடியாகும் என்பது தெளிவு.

–சுபம்–