பிராமணப் பிறவி ஏன் மேலானது? (Post No.2994)

VEDA BRAHMINS

Compiled by London swaminathan

Date:22 July 2016

Post No. 2994

Time uploaded in London :– 8-08 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

brahmins, fb 1

புத்தர் சொன்னது

ஒரு பிராமணனும் முனிவனும், கடந்தகால பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள்; அவன் தாய் தந்தையைக் கொன்றிருந்தாலும், இரண்டு மன்னர்களைத் தீர்த்துக்கட்டியிருந்தாலும், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே அழித்திருந்தாலும் அவர்களப் பாபம் பிந்தொடராது

–புத்தர் சொன்னது, தம்ம பதம் 294

 

எவனும் பிராமணனுக்குத் தீங்கு செய்யக்கூடாது; பிராமணர்களும் யாருக்கும் பதிலடி தரக்கூடாது.

–புத்தர் சொன்னது, தம்ம பதம் 389

 

தீமையை ஒதுக்கிவைத்ததால் அவனை பிராமணன் என்று அழைக்கிறோம்; அவன் சாந்தமாக இருப்பதால் அவனை சமனன்  என்று அழைக்கிறோம்; அவன் எல்லா பாபங்களையும் விட்டுவிட்டதால் அவனை பாபத்தை வென்றவன் (பாப ஜித) என்று அழைக்கிறோம்— –புத்தர் சொன்னது, தம்ம பதம் 388

 

 

பழங்காலத்தில் பிராமணன் என்பவன் ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்ததால் அவனை மேலானவன் என்று மக்கள் கருதினர். புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களிலும், திருக்குறளிலும் “அறுதொழிலோர்” என்று பார்ப்பனர்கள் புகழப்படுவர்.

 

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி (யாகம்) செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், கொடுத்தல் ஆகிய 6  தொழில்களைச் செய்துகொண்டு பிரம்மத்தை நாடுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டதால் பிராமணன் என்றும், அந்தத்தை (உள்ளுறையும் பிரம்மத்தை) அணவியதால் அந்தணர் என்றும் சொன்னார்கள்.

brahmin veda 2

மனு கூறும் காரணம்:–

பூதானாம் ப்ராணின: ச்ரேஷ்டா: ப்ராணினாம் புத்திஜீவின:

புத்திமத்ஸு நரா: ச்ரேஷ்டான்  நரேஷு ப்ராஹ்மணா: ஸ்ம்ருதா:

மனு 1-96

 

உயிரினங்களில் (வெளிப்படையாக) மூச்சுவிடக்கூடியவை உயர்ந்தவை;

அவ்வாறு மூச்சுவிடுபவைகளில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவை உயர்ந்தவை;

அவ்வாறு சிந்தனைத் திறன் பெற்றவைகளில் மனிதன் மேலானவன்;

அத்தகையோரில் பிராமணனே உயர்ந்தவன் என்று பாரம்பர்யமாகக் கருதப்படுகிறது– மனு 1-96

 

ஏனென்றால்:-

 

உத்பத்திரேவ விப்ரஸ்ய மூர்த்தி த்ர்மஸ்ய சாஸ்வதீ

ச ஹி தர்மார்த்தமுத்பன்னோ ப்ரஹ்ம பூயாய கல்பதே -மனு 1-98

 

 

பிராமணந் தர்மத்தின்  உரு; அவன் பிறவியே தர்மத்துக்காகவே;

அவன் பிரம்மத்துடன் ஐக்கியமாகவே பிறந்துள்ளான் (ப்ரஹ்ம பூயாய கல்பதே)

 

definition of brahmin

(Read Nobale as Noble)

பிரம்ம ஞானி யார்?

 

ப்ராஹ்மணேஷு ச வித்வாம்சோ வித்வத் சுஹ்ருத் புத்தய:

க்ருதபுத்திஷு கர்தார: கர்த்ருஷு ப்ரஹ்மவேதின:

மனு 1-97

பிராமணர்களில் வேதம் ஓதி,  அதன் அர்த்தத்தை உணர்ந்து, அதில்

நல்ல எண்ணம்படைத்து, அவைகளை அனுஷ்டித்து வைராகிகளானவர்களே பிரம்ம ஞானிகள்.

 

இப்போது புரிகிறதா?

இன்றைய பிராமணர்கள் (பெரும்பாலோர்) இந்த இலக்கண வரையரைக்குள் வரமாட்டார்கள். ஆகையால் இதை உணர்ந்தால்  அவர்களும் பிராமணர் என்று உரிமை கொண்டாடமாட்டார்கள்.

 

சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம் அல்லது ராமானுஜர் செய்தது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம்.

 

 

ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபத: பும்ச்த்வம் ததா விப்ரதா

தஸ்மாத் வைதிக தர்ம மார்க பரதா வித்வத்வமாஸ்த்பரம்

–ஆதிசங்கரரின் விவேக சூடாமணி- பாடல் 2

 

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;

அதிலும் ஆண்களாய்ப் பிறப்பது அரிது;

அதிலும் அரிது பிராமணனாகப் பிறப்பது,

அதிலும் அரிது வேத தர்மத்தைப் பின்பற்றுவது.

BRAHMINS VEDA

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள் -30

 

எல்லா உயிர்களிடத்திலும்  அருள் பாராட்டுவதால் முனிவர்கள், அந்தணர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

–Subahm–

 

சுகமான கல்யாணி- ராகங்களின் ராணி (Post No.2993)

IMG_4431

Article Written S NAGARAJAN

Date: 22 July 2016

Post No. 2993

Time uploaded in London :– 5-58 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

சுகமான கல்யாணி ராகங்களின் ராணி!
ச.நாகராஜன்
மனம் எரிச்சலாக இருக்கிறது. அனைவரின் மீதும் இனம் தெரியாத ஒரு கோபம். இது ஒரு வகை.
மனம் மிகவும் அல்பமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையான கம்பீர மனோபாவம் இல்லை. இது இன்னொரு ரகம்.
உற்சாகமே இல்லை; ஏனோ தானோவென்று எதையும் செய்யும் ஒரு மனோபாவமான நிலை! இப்படி ஒரு ரகம்.

IMG_4434
ஆன்ந்த நிலையையே அறிய முடியவில்லை. மனம் இனம் தெரியாத ஒரு சோகமான மனநிலையில் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருக்கும் இயற்கை அனுபவத்தை அனுபவிக்க்க் கொடுத்து வைக்கவில்லை. இப்படி இன்னொரு ரகம்.
இந்த அனைத்து ரக மனிதர்களும் அதிகம் செலவில்லாமல் குணமடையக் கூடிய ஒரு வழி உண்டு.
கல்யாணி ராகத்தில் உள்ள பாடல்களைக் கேட்க வேண்டியது தான்!
யூ டியூபில் சென்றால் இசை ராணி எம்.எஸ். சுப்புலெட்சுமி, மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா என்று எத்தனை அருமையான பாட்கர்களின் கல்யாணி ராகப் பாடல்களைக் கேட்க முடியும்!
கௌசிகி சக்ரவ்ர்த்தியின் கல்யாணி ராக பஜனைப் பாடல் வேறு இருக்கிறதே!!
இரவில் எதைக் கேட்டாலும் மறு நாள் காலை எழுந்திருக்கும் போது உலகமே ஒரே ஆனந்தம்.
பழைய மோசமான மனம் எங்கே போயிற்று. பெருந்தனமை, கம்பீரம், உற்சாகம், பக்தி, அன்பு அனைத்தையும் மனம் எப்படி ஒரே சமயத்தில் கொண்டது?
கல்யாணி ராகத்தின் மஹிமையே மஹிமை!
சுகமான கல்யாணி, ராகங்களின் ராணி!
65வது மேளகர்த்தா ராகம் இது.
ஏழு ஸ்வரங்களும் முறைப்படி கொண்ட ராகம். ஆகவே இது ஒரு சம்பூர்ண ராகம்!
காதல், பக்தி போன்ற நுட்பமான உணர்வுகளை முழு வீச்சில் காண்பிக்க வல்ல அற்புதமான ராகம் இது.
தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் இந்த ராகத்தில் பல அமைந்துள்ளன.

 
நிதி சால சுகமா? – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
அம்மா ராவம்மா! – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
ஹிமாத்ரி சுதே – ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள்
கமலாம்பா பஜரே – ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
உன்னை அல்லால் – பாபநாசம் சிவன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீளும்.
தமிழ் திரைப்படப் பாடல்களில் இதை எடுத்து இசையமைக்காத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம்.

 

IMG_4437
சில பாடல்கள் :
ஜனனீ ஜனனீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா
சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
மன்னவன் வந்தானடி தோழி – திருவருட்செலவர்
வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
இப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதன் இந்தி வடிவத்தில் அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளன.
இவற்றை நெட்டிலும் பிடிக்கலாம்; இசை வடிவங்களிலும் வாங்கலாம்.
செலவு சிறிது; பயனோ பெரிது!
ராகங்களின் ராணிக்கு இன்னும் ஏராளமான பெருமைகள் உண்டு.
பல புத்தகங்களே வந்து விட்டன!
கல்யாணி என்றால் அனைத்து நலன்களையும் அளிப்பவள் என்று பொருள்!
உண்மை தான்!!
***********

 

Pessimism Anecdote (Post No.2992)

debt images

Compiled by London swaminathan

Date:21 July 2016

Post No. 2992

Time uploaded in London :– 18-04

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

More Credit and Debt Anecdotes

 

 

Gentleman or Not?

 

The Vicar of Sheffield, the Rev.Dr.Sutton, once said to the late Dr Peech, “I never ask a gentleman for money”.

 

Indeed, said the vicar, then how do you get it if he doesn’t pay?

 

“Why, replied Dr Peech , after a certain time I conclude he is not a gentleman, and then I ask him”.

 

Xxx

 

Sheridan

 

A friend once observed to Sheridan, “Being of an illustrious Irish family, it is strange that your name has not an “O” prefixed to it.

 

“True, replied Sheridan, no family has a better right to it. We owe everybody”.

 

Xxx

 

opti-pessi

Pessimism Anecdote

 

On the subject of calamity howlers, the story is told of the gala crowd that had assembled for the test run of Robert Fultons outlandish steamboat contraption ‘The Clermont’. For some hours, in the presence of a mass of spectators, the strange craft belched smoke and sparks from its tall, thin stack as his engineers attempted to get up the necessary head of steam. When the time to cast off had come and the engines were being limbered up, the boat quivered and vibrated violently and made a loud racket.

 

A group of doubting Thomasses in the crowd had been shouting loudly and scornfully, “She will never start! She will never start!”  But notwithstanding this, the boat pulled itself together and actually started to move up the river.

 

After a moment of astonished silence, the voices of the scoffers resumed their shouts; this time crying with all the scorn they could muster, “She will never stop! She will never stop!”

 

–Subham–

 

பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991)

new currency Re1

Written by London swaminathan

Date:21 July 2016

Post No. 2991

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பவிஷ்ய புராணம் என்றவுடன் , எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அதில் கூறப்பட்ட செய்திகளே நம் மனக்கண்ணுக்கு முன் வரும். ஆனால்ல் அதில் வேறு பல சுவையான விஷயங்களும் உள.

 

அதில் ஒன்று பணம் பற்றிய ஸ்லோகம்:-

 

அர்த்தானாமார்ஜனே துக்கம் ஆர்ஜிதானாம் து ரக்ஷணே

நாஸேதுக்கம் வ்யயே துக்கம் கிமர்த்தம் துக்கபாஜனம்

 

பணத்தினால் எல்லா வகையிலும், எப்போதும் துக்கம்தான்;

பணத்தைச் சம்பாதிக்கும்போதும் துக்கம்;

காப்பாற்றுவதிலும் துக்கம்:

அதைச் செலவழித்தாலும் துக்கம்:

 

துக்கத்துக்கெல்லாம் உறைவிடம் பணம்தான்

 

(அர்த்த= செல்வம், பணம்)

 

எவ்வளவு அருமையான பாடல்; மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; நகை, ஷேர் (பங்கு மார்க்கெட்), ரொக்கம் — எது இருந்தாலும் அதை ரக்ஷிப்பது அதைவிட துன்பம்;

 

லாக்கரில் நகைகளை வைத்தால் வைக்கப்போகும்போதும் எடுக்கப்போகும்போதும் திருடர் பயம்;

லாக்கர் வைத்திருப்பவனே ஓடிவிடுவானோ என்றபயம் (வெளிநாட்டில் பிரைவேட் லாக்கர்கள் உண்டு); சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அரசாங்கம் மாறும் போது எல்லாம் பயம்; பங்கு மார்க்கெட்டில் போட்டவர்களுக்கு பங்கு மார்க்கெட் சரியும் போது பயம்; இவை அனைத்தும் துக்கத்தில் முடிகிறது. வெளி நாடுகளில் அண்மைக்கலத்தில் இரண்டு மூன்று வங்கிகள் திவால் ஆனபோது, பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பலர் சேமிப்பை இழந்தனர். துக்கம் அடைந்தனர்.

 

செலவழித்தால், பிற்காலத்தைப் பற்றி பயம்; அதிகம் செலவழிதால் கடன் வாங்கும் துன்பம்; ஆக பணமே துன்பத்தின் உறைவிடம்!

 

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்)

 

இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்)

 

உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

 

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

 

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

KATTU KATTU CURRENCY

கவிஞர் ஹேமாத்ரி சொன்னது:–

ந்யாயார்ஜிதஸ்ய வித்தஸ்ய த்வ வனார்த்தௌ ப்ரகீர்த்திதௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரேர்தாபதிபாதனம்

 

பணம் என்பது தகுதியற்றவர்களுக்கே கிடைக்கும்; தகுதியுடையோருக்கு கிடைப்பதில்லை

 

பணமிருந்தால் குணமிருக்காது

குணம் இருந்தால் பணம் இருக்காது – என்ற தமிழ் வசனமும்

 

லெட்சுமி இருக்குமிடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள் என்ற பழமொழியும் இதனுடன் ஒட்டிவருவதைக் காண்க.

 

–Subham–

 

 

அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 8 (Post No.2990)

 

buddha in SL

Article Written S NAGARAJAN

Date: 21 July 2016

Post No. 2990

Time uploaded in London :– 5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 8
ச.நாகராஜன்

 
ஸு யுன்னுக்கு இப்போது வயது 64.
யிங் ஜியாங் ஆலயத்தில் சேவல் ஒன்றை ஒருவர் காணிக்கையாக அளித்திருந்தார். துறவி ஒருவர் ஸு யுன்னிடம் வந்து அந்த சேவல் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
வளர்ப்புப் பறவை ஒன்றை அது தாக்கி காயப்படுத்துகிறதாம்.
ஸு யுன் நேராக் ஆலயத்திற்குச் சென்றார். அந்த சேவலிடம் அகதிகளுக்கான விதியைக் கற்பித்தார். புத்தரின் நாமத்தை உச்சரிக்குமாறு அதற்கு போதித்தார்.
என்ன ஆச்சரியம், சீக்கிரமே சேவல் தன் பழக்கத்தை மாற்றிக் கொண்டது. அது எந்தப் பறவைக்கும் தீங்கு இழைக்கவில்லை.
ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு கிளையில் அமர்ந்தது.
எந்த பூச்சிகளையும் கூட அது உண்ணவில்லை. அதற்குத் தந்த தானிய வகைகளை மட்டுமே அது உட்கொண்டது!

 
சில நாட்கள் கழிந்தன. ஆலயத்தில் மணி ஒலிப்பதைக் கேட்டவுடன் அது வரிசையாகச் செல்லும் துறவிகளின் வரிசையில் தானும் சேர்ந்து கொண்டது!
பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் நிகழும் ஒவ்வொரு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கும் அது சென்றது; அதில் கலந்து கொண்டது!
பிரார்த்தனை முடிந்தவுடன் அமைதியாக மீண்டும் தன் மரக்கிளைக்குத் திரும்பி அதில் அமர்ந்தது!

 

buddha gold
அதற்கு மீண்டும் புத்தரின் நாமத்தை உச்சரிக்கக் கற்பிக்கப்பட்டது. இப்போது அது புத்தரின் நாமத்தைச் சொல்லக் கற்றுக் கொண்டது.
‘ஃபோ! ஃபோ! ஃபோ!’ அது அழகாகக் கூவியது. சீன மொழியில் ஃபோ என்பது புத்தரின் ஒரு நாமம்!
இரண்டு வருடங்கள் கழிந்து ஒரு நாள் பிரார்த்தனை மண்டபத்திற்கு வழக்கம் போல பிரார்த்தனை சமயத்தில் அது வந்தது. ஹாலில் நின்றது.
அழகாக நிமிர்ந்து தன் இறகுகளை அகல விரித்தது.
புத்தரின் நாமத்தைக்க் கூறும் விதமாக மூன்று முறை இறகுகளை அழகாக அசைத்தது!

 
அப்படியே நின்றவாறே இறந்தது!
அதனுடைய தோற்றம் பல நாள் மாறவே இல்லை. அதை ஒரு பேழையில் வைத்தனர். பின்னர் அது புதைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் போது ஸு யுன் கீழ்க்கண்ட பாடலை இயற்றிப் பாடினார்:
“சண்டையிடும் குணம் கொண்ட இந்தச் சேவல்
வளர்ப்புப் பறவையைத் தாக்கி இரத்த காயத்தை ஏற்படுத்தியது
அதன் மனம் நின்ற நிலையில் வந்த போது
அதற்கு புனித நாமங்கள் போதித்த போது
அது தானியங்களை உண்டு தனியே நின்றது.
பூச்சிகளைக் கொல்லவில்லை
தங்கமயமான சிலைகளை உற்று நோக்கியவாறே
எவ்வளவு அருமையாக அது புத்தரின் நாமத்தைக் கூவி உச்சரித்தது!
மூன்று முறை அழகுற அசைந்த அது
திடீரென்று இறந்து விட்டதே!
இந்த உயிர் புத்தரை விட எந்த நிலையில் மாறுபட்டது?”

அனைவரும் உருகினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
\
*********

 

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–

Hindu and Muslim Wedding (Post No.2988)

IMG_3805

Compiled by London swaminathan

Date:20 July 2016

Post No. 2988

Time uploaded in London :–5-44 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Following piece is an interesting excerpt from a 100-year-old book written by a Muslim scholar: –

 

Source: Life and Labour of the People of India by Abdullah Yusuf Ali, Barrister at Law, London, 1907

IMG_3807

What is the marriage ceremony?

There are many picturesque and pretty rites, and feasting for days on end is the order of the day. But the chief incident of better class Hindu marriage ceremony consists in what is called the Bhaunri — the seven steps taken in unison.  All this is symbolical. The seven steps are the seven grades of life. Compare this with the seven ages of life in your own immortal bard, or the seven sacraments of the Roman Catholic Church, or the seven planets of ancient astronomy, after which the names of the week were named.

 

Among the Muhammadeans these picturesque ceremonies are not recognised. In the first place, the parties are little older. In the second  place, the Mohammadan marriage is a civil contract in which neither party merges its identity in the other.

 

The Hindu is bound to invite his whole caste or community, within a reasonable distance, to his wedding festivities; The Mohammadan only his select friends. The Mohammadan ecclesiastical ceremony is of the simplest description, as simple as that among the Society of Friends.

 

Many of the Muhammadan families restrict themselves to the ecclesiastical ceremony, but the majority have adopted or inherited in addition the customs of the country. Some even use a modified form of the Bhaunri. Prolonged feasts and ceremonies, with music or noise (whichever you prefer to call it and martial-looking pro- cessions (a relic of marriage by capture), are quite common.

 

A wealthy family’s bridal party would be mounted on palanquins, horses, elephants, and chariots, such as Abhimanyu might have used in the Great War. Coins would be scattered on the march, to be scrambled for by boys and youths of the poorer classes.

 

FIREWORKS

Fireworks play a very important part in the rejoicings incident to an Indian marriage. Most of the firework makers drive a roaring trade in the marriage season, and earn the best of their profits during that time, hibernating during the rest of the year. Thus marriage is good for trade.

 

The marriage season is limited to two or three months of the year, generally in the spring: but the heavenly aspect varies in different years. When the stars are most propitious there is regular marriage boom, with a concomitant boom the trade in fireworks, cloths, and fancy articles. But the stars may also ruin trade if they frown to the astrologers and indicate a slump in the marriage market.

 

If we may trust to the fidelity of Hogarth, English popular marriage customs were not so English popular marriage customs were not so very different in the eighteenth century from what we may observe every day in India at the present time. Take the wedding scene in the series of pictures entitled “Industry and Idleness.” The industrious apprentice has at last won the band of his master’s daughter. At the festivities the proud bridegroom is seen offering the drummer — shall we call him tom tom boy? —  bakshish in time form of hard coin. The butchers are there with the marrow bones and cleavers, just as you would find the representatives of different trades following an Indian bridal party, each with the emblems of his trade — the sweeper with his broom, and the barber with his bag. You have further in Hogarth the beggar with his merry ballad but mournful face. An Indian Bhat might well have sat for a model. But what is this? – a poor woman with a child in one wallet and “the crumbs that do fall from the master’s table” in another. Evidently a Chamarin come to assert her claims on the lord of the feast.

IMG_3806

BRIDE’S DRESS

 

How is the bride dressed, and what does she look like? Dare I attempt a word-picture? It would be more satisfactory if a gifted artist’s brush were allowed to tell its own tale. I have the honour to possess a picture in oils, The Hindu bride,” painted by Mrs Barber, which won a medal at the Simla Fine Arts Exhibition some years ago. It is a symphony in colours, but most difficult to reproduce. Let us try to gain an idea of the bride’s appearance by means of a feeble description.

 

There is the girl, with the brightest of black eyes, and a face more round than oval. The white of those eyes is of dazzling purity, like the modest little soul that looks out of them, but you can scarcely see the eyes. The cloth which serves both for head gear and body garment is drawn closely over the face. It would be difficult to name the colour of this piece of drapery. It is semi-transparent, and lets you see the glory of the raven hair and the sparkle of the jewels worn on the person, but it adds its own contribution of colour to the general harmony. Perhaps we should not call it colour: Pas la couleur, rien que la nuance, as Paul Verlaine would say. It is a suggestion in light blue silk gossamer, with a border worked in gold and silver threads, which both stiffens and enriches the airy stuff.

 

 

The jewellery errs on the side of profusion, but jewellery there is no trace of vulgarity. The drapery, which, in concealing it, heightens its effect, gives it a subdued tone where it might otherwise “cry aloud”. A row of little pearls hooked into one of the plaits of hair covers the parting of the hair in the middle. From it hangs on the forehead a flat little pendant of pearls, rubies, and moon stones, set in gold. This pendant also fits into the scheme of the caste mark if the girl is Hindu otherwise it is artistically meaningless.

 

The hair is gathered into a knot behind, and a garland of the sweet-smelling bela flowers is intertwined with it snowy white on raven black, filtered through the blue of the drapery. From the nose hangs a pearl drop, and there are sapphire earrings to match. The neck is absolutely loaded with ornaments, but you only catch a glimpse of them through an indiscreet opening of the veil. The upper arms carry amulets and charms, and the lower arms bracelets and bangles of many shapes and styles of workmanship.

 

IMG_3809

There are rings, not only for the fingers, but also for the right thumb, and one of them has a miniature mirror with a receptacle underneath for a plug of cotton wool saturated with otto of roses. There are anklets and toe rings to complete the tale of ornaments. Such is the bride as she sits on her machia, a sort of low chair, made of wood turned on the lathe and lacquered.”

A portion of the jewellery is often borrowed for the occasion. The jewellery is rarely false except in circles affected by “modern civilization”.

 

I have devoted so much space to the marriage customs, because I find that they are of perennial interest to people of all temperaments among all nations. Did not Lady Augusts Hamilton write a book on the marriage rites, customs, and ceremonies of “all nations of the universe”? this was in 1822, but the world has not much changed since then – at least in this respect.”

 

–SUBHAM—

 

 

உப்பு நீரில் ஓடும் கார் (Post No.2987)

salt powereeed

Article Written S NAGARAJAN

Date: 20 July 2016

Post No. 2987

Time uploaded in London :– 5-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

22-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உப்பு நீரால் ஓடும் கார்!
ச.நாகராஜன்

“படிம எரிபொருள் சீக்கிரமே அரிதாகி விடும் என்பதால் மாற்று எரிபொருள் இன்றியமையாதது.”
– காதத் பகத்

 

salt water car

Toy Salt Car Kit: You can do it

பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றின் விலையை நினைத்தாலேயே நடுத்தர மக்களுக்கு பகீர் என்கிறது. படிம எரிபொருளை விட்டு விட்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் கார், எலக்ட்ரிக் கார், ஆர்கானிக் எதனால் கார், சூரிய சக்தியால் இயங்கும் சோலார் கார் என பல்வேறு விதமாக மாற்று எரிபொருள் முயற்சிகளை உலகிலுள்ள பல நிறுவனங்களும் மேற்கொண்டு மாதிரி கார்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்று எரிபொருள் கார்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உருவாகவில்லை.
இந்த நிலையில் உப்பு நீரை வைத்து காரை ஓட்டலாம் என்ற செய்தி எவ்வளவு இனிப்பான செய்தி!
மரீனா கடற்கரையில் வரிசையில் நின்று ஆளுக்கு தினமும் ஒரு வாளி அல்லது பீப்பாய் கடல் நீரை இலவசமாக எடுத்துச் சென்று அதைக் காரில் போட்டுக் கொண்டு ஓட்டினால்?!!
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது இல்லையா!

ஜெர்மனியைச் சேர்ந்த நேனோ ஃப்ளோசெல் (Nano Flowcell) என்ற நிறுவனம் ஒரு மந்திரக் காரைக் கண்டுபிடித்துள்ளது. அது உப்பு நீரினால் ஓடுகிறது! இந்த உப்பு நீர் காரானது பெட்ரோல் டீஸல் கார்களை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஓடுகிறது!
ஹைட்ரஜனால் ஓடுகின்ற கார்களைப் போன்றே இந்த உப்பு நீர் காரும் ஓடுகிறது.
உப்பு நீரிலிருந்து மின்சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் காரில் உள்ளது போல சிக்கலான உயர் அழுத்த அமைப்புகள் (high pressure system) இதில் தேவையில்லை!
கொஞ்சம் ‘டெக்னிகலாக’ இதன் செயல்பாட்டை விளக்கவும் முடியும். இந்தக் காரில் இரண்டு எரிபொருள் டாங்குகள் இருக்கும். அது கரைக்கப்பட்ட உலோக உப்புகளினால் (dissolved metallic salts) நிரப்பப் பட்டிருக்கும். இந்த உப்பு எதிர்மறை அயோனிக் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும் அது ஒரு மென்படலத்தின் மூலம் பம்ப் செய்யப்படும். இரசாய்ன வினை மூலம் சக்தி உருவாகி நான்கு மின் மோட்டார்கள் இயக்கப்படும். இவை சூப்பர் கபாசிடர்களினால் காரின் சக்கரங்களை இயங்க வைக்கும்.
நேனோ ஃப்ளோசெல் இதுவரை மூன்று உப்பு நீர் கார்களை உருவாக்கி உள்ளது. ஒன்று ஸ்போர்ட்ஸ் கார். இன்னொன்று சாதாரணப் பயன்பாட்டிற்காக உள்ளது. அடுத்தது முதலாக அமைக்கப்பட்ட ப்ரோடோ கார்!
இந்தக் கார்கள் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான காரின் பெயர் க்வாண்டினோ (Quantino).
இதன் ஹார்ஸ்பவர் 108. ஐந்து வினாடிகளில் இது 100 கிலோமீட்டர் வேகத்தை எடுத்து விடும்! ரேஸ் கார்களோ 200 ஹார்ஸ் பவர் கொண்டது.
சரி, இதன் மைலேஜ் என்ன? எவ்வளவு மைல்கள் இது ஓடும்?
ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோமீட்டர் இது ஓடும்!

இதைத் தொடர்ந்து ஓட்டிய டிரைவர் 14 மணி மூன்று நிமிடங்களில் களைத்துப் போய் நிறுத்தினார். ஆனால் கார் தொட்ர்ந்து ஓடும் நிலையில் நல்ல கண்டிஷனில் இருந்தது.ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 300 மைல் வேகத்தில் ஓடும், 1090 ஹார்ஸ் பவரைக் கொண்டது

இது போன்ற கார்களை உருவாக்கிய கம்பெனிகள் சில உண்டு என்றாலும் அவை சந்தைக்கு உரிய வண்டிகளை இதுவரை தயாரிக்கவில்லை. ஜப்பானிய நிறுவனமான ஜெனிபகஸ் என்ற நிறுவனம் ஒரு ஹைட்ரஜன் காரைத் தயாரித்தது. ஆனால் நிறுவனமே திவாலாகி விட்டது.!
ஸ்டான்லி ஆலன் மேயர் என்பவர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஓடக் கூடிய காரைக் கண்டுபிடித்துத் தயாரித்தார். அது உற்பத்திக்கான நிலை வரும் போது அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. முதலீட்டாளர்களிடம் கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே விஷத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அத்தோடு அந்தக் கார் பற்றிய திட்டமும் நின்றது.
இப்போது உப்பு நீர் காரினால் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஓரம் வாழ்பவர்கள் இனி புதிதாக ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாற்று எரிபொருளான உப்பு நீரை வேண்டி நிற்கும் வாகனச் சொந்தக்காரர்கள் இனி கடலை நோக்கித் தானே திரண்டு வருவார்கள்! அல்லது அங்கு அமைந்திருக்கும் உப்பு தொழிற்சாலைகளை நோக்கி வரலாம்!
பெட்ரோலும் டீஸலும் போய் உப்பு நீர் எரி பொருளானால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது.

 

lauterber 2
அறிவியல் செய்யும் ஜாலங்களுக்கு ஒரு முடிவே இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான பால் சி.லாடர்பெர் (Paul C Lauterber : தோற்றம் 6-5-1929 மறைவு : 27-3-2007) 2003ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோப்ல பரிசைப் பெற்ற மேதை. எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோய் அறிகுறிக்கான சோதனையில் இன்று உலகெங்கும் வருடந்தோறும் 6 கோடி பேர்களால் எம் ஆர் ஐ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத பாதுகாப்பான நோய் அறிகுறிக்கான சோதனை இது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முதலில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி நேச்சர் பத்திரிகைக்கு இவர் எழுதி அனுப்பினார். ஆனால் பத்திரிகை இவரது கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டது.
மனம் நொந்து போன அவர்,” கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானத்தாலோ அல்லதுநேச்சரினாலோ நிராகரிக்கப்பட்டதை வைத்து விஞ்ஞானத்தின் முழுச் சரித்திரத்தையே எழுதலாம்” என்று நேச்சர் பத்திரிகைக்கு எழுதினார். பின்னர் இவரது கண்டுபிடிப்பின் அருமையையும் பயன்பாட்டையும் கண்ட உலகம் வியந்தது. இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முதலில் எள்ளி நகையாடப்பட்டன.

 

lauterber
அவர்களின் விடாமுயற்சியால் பின்னர் அறிவியல் உலகம அவர்களை அங்கீகரித்தது.. அவர்களுள் பலரும் நோப்ல பரிசை வென்றிருக்கின்றனர்..
எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பையும் உலகம் பொதுவாக திறந்த மனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆன் லைன் மூலமாக இன்று அன்றாடம் நடைபெறும் ஷாப்பிங்கை 1966ஆம் வருடம டைம் பத்திரிகை, “இதெல்லாம சரிப்பட்டு வராது. பெண்கள் கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்வதையே விரும்புவர்” என்று விமர்சித்தது.
1904ஆம் வருடம் பிரான்ஸை சேர்ந்த உத்திகளை வகுக்கும் பேராசிரியர் ஈகோல் டீ கர், “விமானங்கள் என்பது சுவையான பொம்மைகள் தான். அவை இராணுவ உபயோகத்திற்குச் சரிப்பட்டு வராது” என்றார். இரண்டாம் உலகப் போரில் விமானப் படைகளின் சேவை பற்றி அனைவரும் அறிவர்.
தாமஸ் எடிஸனே, “ஆல்டர்னேடிங் கரண்ட்” என்பதைப் பற்றிச் சிந்திப்பதே வேஸ்ட் ஆஃப் டைம்” என்றார். ஆனால் ஏசி- யே உலகை இன்று ஆள்கிறது.
இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அறிவுடன் விடாமுயற்சியும் இணைந்தாலேயே உலகம் அங்கீகரிக்கிறது என்பது உண்மை!
*********

அவன் யார் தெரியுமா? – பகுதி 2

ranganthananda

Article Written S NAGARAJAN
Date: 16 July 2016
Post No. 2975
Time uploaded in London :– 6-10 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அவன் யார்? – 2
ச.நாகராஜன்

மைசூர் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கோபால் மஹராஜிற்கு சங்கரன் தன் விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதினான். பதில் சாதகமாக வந்தது. ஆனால் திருச்சூரிலிருந்து மைசூருக்கு வர பணம் இருக்கிறதா என்ற கேள்வியும் கடிதத்தில் இருந்தது.

சங்கரனிட்ம் இருந்ததோ மூன்று ரூபாய்கள் தான். அவன் காதில் போட்டிருந்த கடுக்கனை விற்க முனைந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகைக் கடைகளுக்கு விடுமுறை. ஒருவர் அவனுக்கு அதற்காக இர்ண்டு ரூபாய் தர முன்வந்தார்.

திருச்சூருக்கு அலுவல் நிமித்தமாக வந்த கோபால் மஹராஜ் தன் சார்பாக மூன்று ரூபாய்  கொடுத்தார். ஆக மொத்தம் இப்போது ஏழு ரூபாய் சேர்ந்து விட்டது. ஆனால் இந்தத் தொகை மைசூருக்குச் செல்லப் போதவே போதாது.
சங்கரன் திருச்சூர் பள்ளியில் இருந்த ராமகிருஷ்ண சந்நிதியில் மனமுவந்து பிரார்த்தனை செய்தான். அதற்குப் பலன் இருந்தது.

அன்று இரவே கோபால்  மஹராஜுடன்  மைசூருக்குச் செல்லும் இரயிலில் அவனும் சென்றான்.

நீண்ட நெடும் தவ வாழ்க்கை தொடங்கியது.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி சங்கரனுக்கு மந்திர தீட்சை அளிக்கப்பட்டது.

அதை அளித்தவர் மஹாபுருஷ் மஹராஜ்.
அவர் கேட்டார்: “நீ ராமகிருஷ்ணரை வழிபடுகிறாயா?’
பதில் : “இல்லை. ஆனால் அவர் படம் என்னிடம் இருக்கிறது. அதற்கு நமஸ்காரம் செய்வேன்”
“அது போதும்.”

பின்னர் மந்திர தீட்சை அளித்த குரு, “குரு தட்சிணையாக ஏதாவது  கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஒன்றும் கொண்டு வரவில்லை”

ஒரு சட்டை, ஒரு வேஷ்டி, ஒரு துண்டு இவ்வளவு தான் வீட்டிலிருந்து சங்கரன் எடுத்து வந்தவை.
இப்போது குரு பக்கதிலிருந்த மூன்று மாம்பழங்களை எடுத்துச் சங்கரனிடம் தந்தார்.

“இதை எனக்குக் குரு தட்சிணையாகத் தா”
சங்கரன் அப்படியே செய்தான்.
“நீ போய் கோபாலுக்கு சேவை செய்”
இது தான் குரு கொடுத்த உத்தரவு.

கோபால் மஹராஜ் பின்னால் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரானந்தாஜி ஆகப் புகழ் பெற்றார். அவர் பிரான்ஸில் ஒரு புதிய கிளையைத் தொடங்க ஒன்பது வருடங்கள் கழித்து இந்தியாவை விட்டுப் பயணமானார்.
அது வரை அவருக்குச் சேவை செய்வதில் சங்கரனின் காலம் கழிந்தது.
1933ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பேலூர் மடத்தில் மஹாபுருஷ மஹராஜ சந்நியாச தீட்சை செய்து வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்தார்.
சங்கரனும் அதில் ஒருவர்.

அவருக்கு ரங்கநாதானந்தா என்ற பெயர் அளிக்கப்பட்டது.
அடுத்த பல ஆண்டுகளில் உலகெங்கும் ஸ்வாமி ரங்கநாதானந்தாவின் பேச்சைக் கேட்க உலகமே திரண்டது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி போர்டு டிரஸ்டிகளின் கூட்டம் நடந்தது. அதில் ஒரு மனதாக ஸ்வாமி ரங்கநாதானந்தாவை அடுத்த தலைவராக ராமகிருஷ்ண மடம் தேர்ந்தெடுத்தது.
அப்போது அவர் நர்ஸிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உபதலைவர்களில் ஒருவர் இந்தச் செய்தியை அவரிடம் தெரிவிக்க விரைந்தார்.

செய்தியைக் கேட்ட ரங்கநாதானந்தா, ‘என்ன  மைசூரில் சமையல்காரனாக இருந்தவன் மடத்தின் தலைவரா?: என்று கூறினார்.
எப்படிப்பட்ட எளிமை!

ராமகிருஷ்ண மடத்தின் 13வது தலைவராக அவர் ஆனார்.

உலக நாடுகள் பலவற்றின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் அவரைத் தரிசிக்க வந்திருக்கின்றனர். அவர் பேச்சைக் கேட்க உலகத் தலைவர்கள் காத்திருப்பது வழக்கம்!.

50க்கும் மேற்பட்ட அருமையான நூல்களை அவர் வழங்கியுள்ளார்.
600 ஆடியோ டேப்புகளும், 50 வீடியோ டேப்புகளும் அவரது கீதை, உபநிடதம் மற்றும் வேதாந்தக் கருத்துக்களை அள்ளித் தரும் பொக்கிஷங்களாக உள்ளன.

96 வருடம் 4 மாதம் 11 நாட்கள் வாழ்ந்த அவர் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் : “என்னைத் தூக்கு நான் உடகார விரும்புகிறேன். என்னைத் தூக்கி விடு” (Lift me up; I want to sit up; Lift me up)

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அவர் ராமகிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்.

மகத்தான வாழ்க்கை வாழ்ந்த அவரது சரித்திரம் அற்புதமானது.

ராமகிருஷ்ணரின் புகழை உலகெங்கும் பரப்பிய மகானுக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது உரைகளைப் படித்த்ப் புத்துணர்வு பெறுவோம்.

***********

.

 

 

 

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–