Rare Pictures of Thanjavur Plates and Pots from 1887 French Book (Post No. 3324)

Compiled  by London Swaminathan

 

Date: 6  November 2016

 

Time uploaded in London: 15-23

 

Post No.3324

 

 

Pictures are taken from various sources.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

 

 

 

–SUBHAM–

 

பந்தரைத் தந்த மஹாராஜா (Post No.3323)

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6  November 2016

 

Time uploaded in London: 6-14 AM

 

Post No.3323

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.

Contact: swami_48@yahoo.com

 

.பாக்யா 4-11-2016 தீபாவளி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

பந்தரைத் தந்த மஹாராஜா

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த உண்மையான சம்பவம் இது!

பிரிட்டிஷாரின் சூழ்ச்சியைப் புரிந்து  கொண்ட் சில மஹாராஜாக்கள் இங்கிலாந்து மேலிடத்தை ஏளனம் செய்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.அவற்றில் இதுவும் ஒன்று.

 

குஜராத்தில் ஜுனாகத் போர்ட் ஆஃப் பந்தர் ஒரு முக்கியமான துறைமுகம். ஜுனாகத்தை எப்படியாவது பிரிட்டிஷாரின் வசம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய இங்கிலாந்து அதன் அரசியல் பிரதிநிதியாக் இந்தியாவில் இருந்த ரெஸிடெண்டிற்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

 

 

“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் போர்ட் ஆஃப் பந்த்ரை ஜுனாகத் நவாபிடமிருந்து பெறுங்கள்” என்ற உத்தரவைக் கண்ட ரெஸிடெண்ட் தீவிரமாகச் சிந்தித்தார்.

 

 

நவாபை ராஜ்கோட்டிற்கு வரவழைத்த ரெஸிடெண்ட் அந்தக் காலத்தில் பிரிட்டிஷாரின் உயரிய விருதான க்னைட் க்ராண்ட் கமாண்டர் எனப்படும் G.C.I.E  என்ற விருதை அவருக்கு அளித்தார்.

பிரம்மாண்டமான விழாவில் மஹாராஜாவிடம் எப்படிப்பட்ட உயரிய விருதை விக்டோரியா மஹாராணியார் அளித்துள்ளார் என்பதை நன்கு விளக்கினார்.

 

 

நவாபிற்கு ஆங்கிலம் தெரியாது; மிகவும் அப்பாவி என்று எடை போட்ட ரெஸிடெண்ட் மொழி பெயர்ப்பாளர் மூலம் நவாப் இங்கிலாந்து ராணியாருக்கு தம் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“என்ன செய்ய வேண்டும்?”  அப்பாவியாக நவாப் கேட்டார்.

“ஒன்றுமில்லை. பந்தரைக் கொடுத்து விட்டால் போதும்:

நவாப் அப்பாவியாக, “பந்தரையா கேட்கிறீர்கள்?” என்றார்.

 

 

மிகவும் மனம் மகிழ்ந்த ரெஸிடெண்ட் தன் வேலை சுலபமாக முடிந்தது என்று எண்ணியவாறே, “ப்ந்தரைக் கொடுத்தால் போதும்” என்றார்.

 

 

அதை ஆமோதித்த நவாப் ஊர் திரும்பினார்.

ரெஸிடெண்ட் இங்கிலாந்திற்குத் தனது வெற்றியைப் பற்றிப் பெரிய தந்தி ஒன்றை அடித்தார்.பாராட்டும் வந்து சேர்ந்தது.

ஊருக்குத் திரும்பிய நவாப் பெரிய தங்கத்திலான கூண்டு ஒன்றையும் வெள்ளியிலான கூண்டு ஒன்றையும் செய்யச் சொன்னார். அவற்றில் நன்கு வளர்ந்த நான்கு குரங்குகளை அடைத்தார்.

 

 

பெரிய மேள தாளத்துடன் அவற்றை ராஜ்கோட்டிற்கு ரெஸிடெண்டிடம் அனுப்பி வைத்தார்.

 

“நீங்கள் கேட்ட பந்தரை அனுப்பி வைத்துள்ளேன். இவ்வளவு சின்ன கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடிந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்ற நவாபின் கடிதத்தைப் பார்த்த ரெஸிடெண்ட் கூடவே வந்த கூண்டுகளையும் உள்ளே இருந்த குரங்குகளையும் பார்த்தார்.

 

பந்த்ர் என்றால் குரங்கு என்று தானே ஹிந்தியில் அர்த்தம்.

மஹாராஜாவுக்குத் தான் ஆங்கிலம் தெரியாதே!அப்பாவி ஆயிற்றே!!

 

ரெஸிடெண்ட் முழித்தார்.

 

அவரை உடனே ஊர் திரும்புமாறு இங்கிலாந்து மேலிடம் தந்தியை அனுப்பியது. அங்கு சென்றவுடன் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

 

இங்கோ  நவாப் சிரித்தார். ஆங்கிலேயரின் சூழ்ச்சியையும் தங்கள் நவாப் போர்ட் பந்தருக்கு பதில் நிஜ ‘பந்தரைக்’ கொடுத்து  அதை முறியடித்த விதத்தையும் அறிந்த மக்களும் சிரித்தனர்!

 

 

ஆங்கிலேயரை இப்படி ஏளனம் செய்திருக்கும் – நமக்குத் தெரியாத, பிரபலமாகாத – சம்பவங்கள் நமது சரித்திரத்தில் ஏராளம் உண்டு!

**********

 

Sarvam Satye Pratishtitam ! Everything Rests on Truth (Post No.3322)

 

Written  by London Swaminathan

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 19-48

 

Post No.3322

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

India cannot be defeated by any one at any time. India cannot be wiped out from the map of the word; the reason being its motto is Satyameva Jayate (Truth alone Triumphs). It is a Upansishadic quotation. Every one of us has a name and most of the Hindus have horoscopes. These birth charts and our names are indicators of our virtues as well as our future. India knowingly or unknowingly chose the famous Vedic quote on Truth as its motto and the greatest Hero Bharat as its name. If India is defeated truth is defeated. As a natural law, truth can never be defeated.

 

Truth is in Indian’s blood. In the olden days, people of  the three castes left their children at the house of the Guru for 12 to 24 years for learning the scriptures, science and weapony. The first lesson they were taught was ‘Satyam Vada’ (Speak Truth) and then Dharmam chara (Do charitable work). So they have learnt it from the very first day in school at the age of 5 or 7 or 9.

 

No religion or no culture or no country in the world emphasizes TRUTH to this extent. Here are some of the beautiful quotations on truth from Bhagavata and Mahabharata:–

Satyavratam satyaparam trisatyam satyasya yonim nihitam ca satye

Satyasya satyamruta satyanetram satyaatmakam tvaam saranam prapannaah

Vishnu Bagavata 10-2-26

O ,True of promise, True of purpose, triply True, the Fount of Truth and dwelling in the true, the Truth of Truth, the Eye of Right and Truth, Spirit of Truth , refuge we seek in Thee.

 

xxx

 

Satyamruta ca samaras caiva damascaiva na samsayah

Amaatsaryam kshmaa caiva hriistitikshaa anasuuyataa

 

Tiago dhyaanamathaaryatvam dhrutisca satay am dayaa

Ahimsa caiva Rajendra satyaakaaraa trayodasa

 

Truthfulness, equability, self control, absence of self display, forgiveness, modesty, endurance, absence of envy, charity , a  noble well wishing towards others, self possession, compassion, and harmlessness — surely these are the thirteen forms of Truth.

Truth is that which is ………….

As Bhisma says

Satyam brahma sanaatanam

Sarvam satye pratishtitam

Truth is the eternal Brahman……..

Everything rests on Truth

 

Truthfulness was in ancient days, the leading characteristic of the Hindu, and is constantly alluded to as a constituent in the heroic character. Thus, when about to revive the dead child of Abhimanyu, Shri Krishna says

 

“O , Uttara! I speak not falsely, and this shall truly come about . Even now do I revive this child ; let all beings behold it.

 

“As I have never uttered an untruth, even in play, as I have never turned back from battle, so may this infant  live.

 

“As I have never known dispute with Arjuna, so by that truth may this dead babe revive.

 

“As truth and Dharma ever dwell in Me, so may the dead child of Abhimanyu live.

 

Other heroes repeatedly make the same statement

 

“My lips have never uttered an untruth”

 

Shri Rama goes into exile for fourteen years in order that his father’s promise may remain unbroken.

Yudhishtira refuses to struggle for his kingdom before due time, because he has promised to remain in exile.

 

Truth is emphasized in all the literatures of India. Tamil Veda Tirukkural written by Tiruvalluvar has a chapter on Truthfulness. He says

Speech which causes no harm whatsoever to anyone is called Truth (Kural 291)

It it will produce pure, unmixed good even falsehood may be considered Truth (292)

If a man could conduct himself true to his own self he would be in the heart of all in the world (294)

 

All lamps are of no avail. The light of truth is the only lamp which the wise cherish (299)

 

Tiruvalluvar says if one practises truth (297) then he does not need to follow any other virtue. Truth alone will save him.

 

Satyameva Jayate!

 

–Subham–

 

 

வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)

Written  by London Swaminathan

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 17-45

 

Post No.3321

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை.”

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

 

1957 ஆம் ஆண்டு மலேசிய தமிழ் முரசு பத்திரிக்கை மலரில் வெளியான ஒரு கட்டுரையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் கலாசாரம் பற்றி தனது கருத்துகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிட்ட பத்திரிகையே இது எங்கள் பத்திரிக்கையின் கருத்து அல்ல என்று ஈ.வெ.ரா.வை கை கழுவிவிட்டது!

 

கட்டுரை நகலை இணத்துள்ளேன் அதை பெரிதாக்கி படிக்க இயலாதவர்களின் நலன் கருதி சில அம்சங்களை மட்டும் இங்கே மீண்டும் எழுதுகிறேன் (அவர் சொன்னபடியே)

 

இவர் தமிழ் துரோகியா? தமிழ் அன்பனா என்று வாசகர்களே  முடிவு செய்யலாம்.

தினமணியில் வந்த ஒரு பழைய செய்தி

 

திருச்சியில் பகுத்தறிவுப் பகலவர்களைப் பெற்றெடுத்த, “தாலி அறுத்த மாதர்” மகாநாட்டில் பேசிய  ஈ.வெ.ரா. திருவள்ளுவரைச் சாடியதை நாங்கள் தினமணியில் பெட்டிச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டோ . (40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தினமணி சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்தபோது).

 

எங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கரஸ்பாண்டன்ட் கோபால ஐயர், ஈ.வெ.ராவுக்கு மிகவும் பிடித்த ஐயர்களில் ஒருவர். திருச்சியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு விஷயங்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பவர்.

 

அவர் அனுப்பிய செய்தியைத்தான் நாங்கள் முதல்பக்கத்தில் பாக்ஸ் ஐயிட்டமாக BOX ITEM வெளியிட்டோம்.

 

தெய்வம் தொழாள் (குறள் 55) —– என்னும் திருக்குறளைச் சொல்லி முதல் வரிசையில் அமர்ந்த பெண்களைப் பார்த்து நிங்கள் எல்லாம் பத்தினிப் பெண்கள்தானே? என்று ஈ.வெ.ரா. கேட்டார். அதுகளும் மாடு மாதிரி தலை அசைத்து ஆமாம் சாமி போட்டன. எங்கே பார்ப்போம்; வள்ளுவன் சொல்றான்— பத்தினிப் பெண்கள் எல்லாம் பெய் என்றால் மழை பெய்யுமாம்; நீங்கள் எல்லோரும் “பெய்” என்று சொல்லுங்கள் என்றவுடன் அதுகளும் “பெய்” என்றன. மழை பெய்யவில்லை. பார்த்தீர்களா வள்ளுவனின் மூடநம்பிக்கை என்று சொல்லி ஈ.வெ.ர. உரையை முடிக்க அந்தப் பெண்கள் மூஞ்சியில் ஈ ஆடவிலை. இப்பொழுது வள்ளுவன் சொன்னது தப்பா? அல்லது அதுகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா– என்ற ஒரு தரும சங்கடமான நிலையில் மகளிரைத் தள்ளிவிட்டார் பெரியார்.

 

கீழே உள்ளதைப் படியுங்கள் இன்னும் வேடிக்கை பார்க்கலாம்:—

 

xxxxx

 

“மொழி என்பது மனிதனுக்கு அவ்வளவு ஒரு முக்கிய சாதனம் அல்ல. இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவை இல்லை”.

xxxxx

 

நமக்கு சொந்த மொழி என்பது பிறந்த ஜாதியின் காரணமாக. எனக்குக் கன்னடம். மற்றும் சிலருக்குத் தெலுங்கு. மற்ற தமிழ்நாட்டுப் பெரு ம்பாலான மக்களுக்குத் தமிழ்.

 

xxxxx

 

தமிழ்நாடு நம் சொந்த நாடு. ஆனாலும் அட்சி தமிழர்கள் அல்லாத அந்நியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அந்நியர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம்முடைய நாட்டை அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் — இந்தி மொழிதான் அட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும்……………… இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவமுமாகும்.

xxxx

காலம்சென்ற ஐக்கோர்ட் ஜட்ஜ் சதாசிவ ஐய்யர் குமாரர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையில் மொழி என்னும் தலைப்பில்   (1939 ஆம் ஆண்டில் என்று ஞாபகம்) பேசியிருக்கிறேன். ஆங்கில எழுத்துக்களையே தமிழ் நெடுங்கணக்காக, தமிழ் அகரவரிசையாக எடுத்துக்கொள்ளலாமென்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும்,

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாகும் காலம் ஏற்பட்டால்தான் மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

 

xxx

“இங்கிலீஷ் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நீங்கள் பேசியவுடன் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலாட்ட செய்திருப்பார்கள் என்று 6,7 வருடங்களுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு மகாநாட்டிற்குப் பிறகு சி.என். அண்ணாதுரை என்னிடம் கூறினார்.

xxx

 

நான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று சொன்னவுடம், மொழி வெறியர் சிலர், நீ யாருக்குப் பிறந்தாய்? என்று கேட்டனர்.

 

அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்லுவது நாம் ஆங்கிலேயனுக்குப் பிறந்ததாகும் என்றால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாய விமானம், ரேடியோ, டெலிபோன் , மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையது என்று தெரிந்து அனுபவிக்கிறோம். இதனால் எத்தனை முறை ஆங்கிலேயனுக்குப் பிறந்தோம் என்பதை சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொல்லுவேன்.

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம்  உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங் கணக்காவது அவசியம்.

ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்பயத்தக்கது

 

என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிகவும் அருமையாகதான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்துக்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பயனைக் கொடுத்திருக்கிறது. விஞ்ஞாநதிற்கு சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை.

 

தமிழனின் பேச்சு மொழி”, “தாய் மொழி தமிழ்” — என்பதைத் தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்கால நிலச் சின்னங்களாகவே காணப்படுகின்றனர்.”

 

–SUBHAM–

 

 

 

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 2 (Post No.3320)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 6-00 AM

 

Post No.3320

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 5

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 15,26,166 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

 

     ச.நாகராஜன்

    

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு பெரும் மன்னனைப் பற்றிய சுவையான பல செய்திகளைத் தரும் பாடல் புறநானூறில் உள்ள 15ஆம் பாடல்.

பாடியவர் நெட்டிமையார்

பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ  மாமன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

பெயரே இம்மன்னனின் பெயரே புகழுக்கான காரணத்தை விளக்குகிறது.

பல யாகங்கள் செய்த அரும் புகழைப் பெற்ற பெரு வீரன் இவன். பாடலில் வரும் வரிகள் இவை:-

 

 

புரையில்
நற்பனுவ னால்வேதத் 
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை 
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல் ?  (வரிகள் 16 முதல் 21 வரை)

 

புரையில் நற் பனுவல் நால் வேதம் என்பதன் மூலம் ஒப்புயர்வில்லாத நல்ல அற நூலாகிய நான்கு வேதங்களாகிய ரிக். யஜுர், சாமம், அத்ர்வணம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டு  புகழப்படுகிறது

 

.

அருஞ்சீர்த்தி என்று  மீண்டும் சொல்லப்படுவதால் அருமை வாய்ந்த புகழுக்குரிய யாகங்கள் என்பது சொல்லப்படுகிறது.

யாகங்களின் பெருமையானது அடுத்து, “பெருங்கண்ணுறை நெய்ம்மலை ஆஹுதி பொங்க” என்பதால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி,கருங்காலி ஆகிய ஒன்பது வகை சுள்ளிகள் சமித் என்பப்படும். இவை நெய்யுடன் கூடி ஹோம குண்டத்தில் இடப்படும்.

பல மாண் என்பதால் பல மாட்சிமை உடைய என்பதும் வீயாச் சிறப்பு என்பதால்  குறைவில்லாத அழியாச் சிறப்புடன் கூடியது என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

 

வேள்வியில் யாக யூபங்கள் நடப்படுவது வழக்கம். அப்படிப்பட பல யாகங்களை நடத்திய யாகசாலைகள் பலவோ என புலவர் வியக்கிறார்.

அவனது வீரச் செயல்களை அடுக்கிய புலவர் தருமச் செயல்களை அடுக்கிக் கூறும் வகையில் இப்படிப் பொழிந்து தள்ளுகிறார்.

மிகுந்த புகழை உடைய நால் வகை வேதங்கள் கூறும் வேள்விகள் பலவற்றை நடத்தி முடித்து விட்டாயோ என புலவர் வியந்து பாடுகிறார். இந்த மன்னனின் புக்ழ எழுதி  மாள முடியாது.

 

 

யாகசாலைகள் பற்றிய விரிவான கட்டுரைகளை திரு ச.சுவாமிநாதன் எழுதியுள்ளார். அவற்றை மீண்டும் இங்கு விளக்கத் தேவை இல்லை. அதை இக்கட்டுரையின் தொடர்ச்சி விளக்கமாகப் படித்துணர்க.

 

 

இன்னொரு பாடல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனைப் போற்றி புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் இது.

பாடல் எண் 26.

 

அதில் வரும் வரிகள் இவை:
போர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.”                                                             (வரிகள் 11 முதல் 18  முடிய)

 

 

போர்ச் செழிய என்று மன்னனை விளிக்கும் புலவர் அவர் கடும் போரில் பகைவனை வாட்டுபவன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவனுக்குச் சுற்றம் யார்?

 

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையோர் தான் சுற்றம். மிகச் சிறப்பான வேதத்தில் உள்ள “அடங்கிய” – அனைத்தையும் கொண்டுள்ளவர்களை அவன் சுற்றமாகக் கொண்டவன்.

நான்மறை முதல்வர் என்பதால் நான்கு வேதங்களிலும் வ்ல்ல அந்தணர்கள் என்பது பெறப்படுகிறது.

 

மன்னர் ஏவல் செய்ய என்பதால் நெடுஞ்செழியனுக்கு ஏவலாளர்கள் பல  மன்னர்களே என்பது தெரிய வருகிறது.

வேள்வி முற்றியவன் அவன். பல யாகங்களைச் செய்து முடிந்த முடிபைக் கண்டவன் அவன்.

 

வாய் வாள் என்பதால் அவனது வாள் ஒரு நாளும் தோல்வியைக் காணாத வாள் என்பது சுட்டிக்  காட்டப்படுகிறது.

அப்படிப்பட்ட மன்னவனை எதிர்த்துத் தோற்ற பகைவரும் கூட, ‘உன்னிடம் பொருதி நிற்கும் பெருமை பெற்றதால் அவர்களும் நீடு வாழ்வர்’ என்று கூறி அற்புதமாகப் பாடலை முடிக்கிறார் புலவர்.

இன்னும் ஒரு அருமையான பாடல் 166ஆம் பாடல். இதைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார். பாட்டுடைத் தலைவன்  சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இந்தப் பாடலின் துறை: பார்ப்பன வாகை..

 

பார்ப்பன வாகையில் புறநானூற்றில் இரு பாடல்கள் உள்ளன. பாடல் 166-உடன் இதே வாகையில் உள்ள இன்னொரு பாடல் புறம் 305 ஆகும்.

 

இதில் பாடப்பட்டவன் பூணூலை அணிந்தவன்.

பார்ப்பான்.

வேதங்களைக் கற்றுணர்ந்தவன்.

நான்கு மறைக்ள ஆறு அங்கங்களைக் கொண்டது. ஷட் அங்கமே மருவி இங்கு நாம் தமிழ் நாட்டில் இன்றும் தினமும் கூறும் சடங்கு ஆக நிற்கிறது.

 

 

நன்று ஆராய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞான் மிசைப் பொலிய

                                                                                  ( 1 முதல் 12 வரிகள்)

 

மேற்கூறிய வரிகள் காழ்ப்புணர்ச்சி அற்ற ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய வரிகள்

 

பாடல் சுட்டிக் காட்டும் முது முதல்வன் யார்?சிவ் பிரான் என்பர் உரையாசிரியர்கள்.

 

ஆறுணர்ந்த என்பதால் ஆறு அங்கம் பெறப் படுகிறது. சிக்ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், கல்பம். ஜோதிடம் ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்களாகும்.

முது நூல் என்பது வேதம்.

 

பொய்களை அகற்றி மெய்யையே கொள்வார் பெரியோர்.

உரை சால் சிறப்பின் உரவோர் என்பதால் சொல்லற்கு அரிய புகழுடைய சிறந்த கற்றோர் என்பது சொல்லப்படுகிறது.

பாடலுக்குரிய தலைவன் ஆண் மானின் தோலை அணிந்தவன். (புலப் புல்வாய்க் க்லைப் பச்சை)

 

தோளில் பூணூலை அணிந்தவன்.(கவல் பூண் ஞான்)

இப்படி வேதமும் அதன் அங்கங்களும் அந்தண்ர் அணியும் பூணூல் உட்பட அனைத்தும் இந்தப் பாடலில் போற்றிப் புகழப்படுகிறது.

அடுத்து இடம் பெறும் வரிகள் (20,21) இவை:

 

ஈர் ஏழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்  

 

என்ற வரிகள் ஈரேழு அதாவது பதிநான்கு இடங்களில் நீரே வெட்கப்படும் வகையில் அதிக நெய்யைச் சொரிபவன் என்ற குறிப்பு பெறப்படுகிறது.

 

தண்ணீர் பட்ட பாடு என்று சொல்கிறோமே, அது அந்தத் தலைவனைப் பொருத்த ம்ட்டில் நெய் பட்ட பாடு.

எத்துணை வேள்விகளை, எத்துணை இடங்களில் நட்த்தி இருக்க வேண்டும்.

 

மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே.

 

என்று இந்தப் பாடல் முடிகிறது.மேக்ம் உயர்ந்து பார்க்கும் நீண்ட நெடும் மலையான இமயம் போல நீ நீடூழி வாழ்வாயாக என்று பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப் பாடல் முடிகிறது.

 

இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து மன்னர்களையும் – அதாவது 56 தேச மன்னர்களையும் – புலவர் பெருமக்கள் வாழ்த்தும் போது இமயம் போல வாழ்க என வாழ்த்துவது ஒன்றே ஒரே நாடு பாரதம் என்பதை உணர்த்துகிறது.

 

பொதுவான பண்பாடு, பொதுவான தொன்மம், பொதுவான நம்பிக்கை, பொதுவான பழக்க வழக்கங்கள், பொதுவான வாழ்க்கை மதிப்புகள், ஒரு  குறிப்பிட்ட பரந்து பட்ட எல்லைக்குள் இருக்கும் மக்களால் கடைப்பிடிக்கப்படும் போது அது தேசம் எனச் சொல்லப்படுகிறது. இதை ராஷ்ட்ரம் என்று அன்றே வேதம் வ்ரையறுத்துக் கூறி விட்டது!

 

இந்த வரையறைக்குள் பாரதத்தின் எந்த இலக்கியத்தையும் வைத்து உரசிப் பாருங்கள்.

ஒரே விதமான தங்கம் தான் தெரியும்.

அது பத்தரை மாத்துத் தங்கமே!

 

**************   தொடரும்

 

குறிப்பு: இந்த ஐந்தாம் கட்டுரை படிப்பவர்கள்  முதல் நான்கு கட்டுரைகளையும் தவறாமல் படித்தால் தொடர்பு நன்கு விளங்கும்..

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்; உலகத்தை உண்மை தாங்குகிறது! (Post No.3319)

Written  by London Swaminathan

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 13-24

 

Post No.3319

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

உலகத்தில் இந்தியாவை யாரும் அழிக்க முடியாது; ஏனெனில் அதன் கொள்கை “வாய்மையே வெல்லும்” (சத்யமேவ ஜயதே) என்னும் வேத வாக்கியம் ஆகும். ஒவ்வொரு நாடும் உலகில் ஒரு சின்னத்தையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியா உபநிஷத வாக்கியமான “சத்யமேவ ஜயதே” என்ற அருமையான வாக்கியத்தைத் தெரிவு செய்துள்ளது. சத்தியம் என்பது எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. வாழ்க்கையில் எல்லோரும் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் உலகமே தலை கீழாகிவிடும்; அதாவது யுக முடிவு நெருங்கிவிட்டது என்று பொருள்.

 

உலகில் பாரத நாட்டில் இந்த உண்மையை வலியுறுத்தும் அளவுக்கு வேறு யாரும் வலியுறுத்தவும் இல்லை. பின்பற்றவும் இல்லை.

 

குருவினுடைய வீட்டில் ஐந்து வயது பாலகனைக் கொண்டுபோய் விட்டவுடன் அவர் சொல்லித்தரும் முதல் வாசகம் “சத்யம் வத” (உண்மை பேசு); இரண்டாவது வாசகம் “தர்மம் சர” (அறம் செய்ய விரும்பு). உலகில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் அற்புத வேத வாக்கியம் இவை. முதல் மூன்று வருணத்தாரும் இதை குருவினிடத்தில் கற்றனர். நான்காவது வருணத்தினர் தாய் தந்தையிடம் கற்றனர்.

 

மஹாபாரதத்திலும் பாகவதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சில பாடல்களைக் காண்போம்:–

 

 

பாகவதத்தில்,

சத்யவ்ரதம் சத்யபரம் த்ரிசத்யம் சத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச சத்யே

சத்யஸ்ய சத்யம்ருத சத்ய நேத்ரம் சத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:

–விஷ்ணு பாகவதம் 10-2-26

 

கிருஷ்ணனைப் பார்த்து தேவர்கள் சொன்ன பாடல் இது. இதன் பொருள் என்ன?

உண்மையே உனது உயிர்மூச்சு, உண்மைப் பொருளே, மும்முறை சத்யம்! நீயே உண்மையின் ஊற்று; உண்மையை உண்மையாக்குபவன் நீ; உண்மை எனும் கண்ணே, உண்மை வடிவானவனே, உன்னைச் சரண் அடைகிறோம்.

 

சுருக்கமாகச் சொன்னால் உண்மையே கடவுள்; கடவுளே உண்மை.

 

மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் 13 நற்குணங்களை பீஷ்மர்  போதிக்கிறார். அதில் ஒன்று சத்யம்.

 

சத்யம் ச சமதா சைவ தமஸ்சைவ ந சம்சய:

அமாத்சர்யம் க்ஷமா சைவ ஹ்ரீஸ்திக்ஷா அனசூயதா

 

த்யாகோ த்யானமதார்யத்வம் த்ருதிஸ்ச சததம் தயா

அஹிம்சா சைவ ராஜேந்த்ர சத்யாகாரார் த்ரயோதச:

 

உண்மை, சமத் தன்மை, புலனடக்கம், தற்பெருமை பாராட்டாமை, மன்னிக்கும் குணம், அடக்கம், பொறுமை, பொறாமையின்மை(அழுக் காறாமை) அமைதியாயிருத்தல், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது, இரக்கம், பிறருக்குத் தீங்கு செய்யாமை (அஹிம்சை),  கொடை —

ஆகிய 13 குணங்களும் உண்மையின் வேறு வடிவங்களாகும்.

இன்னோரிடத்தில்

சத்யம் பிரம்ம சநாதனம் (உண்மைதான் கடவுள்)

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் (எல்லாம் உண்மையில் நிலைபெற்றிருக்கிறது)

 

என்றும் பீஷ்மர் புகல்வார்.

 

இறந்து போன அபிமன்யுவின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க கிருஷ்ணன் சொல்லும் வாசகங்கள் உண்மையின் மகத்துவத்தை விளக்கும்:-

 

ஓ உத்தரா! நான் பொய் பேசுவதில்லை ஆகையால் நான் சொல்வது நிச்சயம் நிகழும்; இதோ இந்த தருணத்தில் இக்குழந்தையை உயிர்த்தெழ வைப்பேன்.

 

ஒருக்காலத்திலும் நான் பொய் பேசாதது உண்மையானால், விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லாதது உண்மை என்றால் இந்தக் குழந்தை உயிர் பிழைக்கட்டும்.

 

எந்தக் காலத்திலும் நான் அர்ஜுனனுடம் சண்டை இடாதது உண்மையானால். அந்த வாய்மையே இக்குழந்தையைக் காப்பாற்றட்டும்.

என்னிடத்தில் உண்மையும் அறமும் எப்போதும் இருக்குமானால் அபிமன்யுவின் இந்த இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்பெறட்டும்

(மஹாபரதம் அஸ்வமேத பர்வம்)

The above sloka is from Manu Smrti

இறந்து போன குழந்தையையும் உயிர்த்தெழச் செய்யும் சக்தி வாய்மைக்கு உண்டு!!

 

இதே கருத்தை ராமாயணத்திலும் காணலாம். ராமன் 14 ஆண்டுக் காலத்துக்கு கானகம் சென்றதன் காரணம் தந்தையின் வாக்குறுதி சத்தியமாகட்டும் என்பதற்ககத்தான். அவன் கானகம் செல்ல மறுத்திருந்தால் தசரதனின் இரண்டு வரங்களும் பொய்யாகப் போகும்.

தர்மன் 12+1 ஆண்டு கானகத்தில் விதிப்படி உலவியதும் சத்தியத்தைக் காப்பதற்கே. துரியோயதணனைப் போல அறமற்ற வழிகளைப் பின் பற்றியிருந்தால் மஹாபரதமே இருந்திருக்காது.

 

இந்துக்களின் இரு பெரும் இதிஹாசங்களும் சத்தியத்தை நிலைநாட்ட வந்தவை!

இதிஹாசத்தில் பல இடங்களில் “என் உதடுகள் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்ற வாசகம் அடிக்கடி வருகிறது.

 

சமுதயத்திலோ, குடும்பத்திலோ ஒருவர்  மற்றவருக்கு உண்மையாக நடப்பதால்தான் அமைதி (சாந்தி) நிலவுகிறது. என்று கணவன் மனைவி இடையே சத்தியம் நீங்குகிறதோ, என்று பெற்றோர்- புதல்வர் இடையே சத்தியம் நீங்குகிறதோ அன்று அமைதி மறைகிறது.

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்!

–Subahm—

Bull Fighting by Kallans (Post No.3318)

Compiled  by London Swaminathan

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 6-59 AM

 

Post No.3318

 

 

Pictures are taken from various sources; they are only representational.

Contact: swami_48@yahoo.com

 
Source: THE LAND OF LINGAM by Arthur Miles, Year 1933

 

“The Kallan girl often chooses her husband for valour. The horns of the fiercest bull are festooned with flowers, and the animal is turned loose amidst the frightful din of wild music and tom- toms. Excited by the noise and the onlookers, the bull charges about wildly, snorting and bellowing. The would-be bridegroom must recover the flowers from the bull’s horns, and it is considered a very great disgrace to be injured in so doing.

 

In former days all weddings were preceded by bull-fights. The girls who were to be married stood on a balcony over looking the enclosure, and watched their sweethearts give an account of themselves. The men were dressed in garlands of red and purple flowers, and before the contest prayed to the gods whose images were placed under the trees. The drums were beaten until the animals were infuriated, when at a given signal the men leaped into the enclosure and tried to seize the bulls, each youth selecting the bull whose colours belonged to his sweetheart. Many an unfortunate youth would be gored, and others, although wounded and bleeding would essay again and again to spring on to beasts’ backs to  bring them to the ground. The men who acted as judges, when they gloated sufficiently over the ghastly spectacle, announced that the fight was over. The victors afterwards met their brides-elect in another enclosure, which had been prepared for dancing. Often girls had to attend several fights before their chosen ones (there were different men on each occasion) came out alive.

 

Cousin Marriage

 

In  the opinion of the Kallans the best alliance is between man and his first cousin on his father’s side. Disparity in ages is considered of no consequence. A boy of fifteen should marry such a cousin, if she happens to be thirty or forty and if he has no cousin he should marry his aunt. When a wedding has taken place, the bridegroom’s sister goes to the bride’s house and takes the bride home with her to a feast that has been prepared. For the celebration sheep will have been roasted and a goodly supply of toddy bought. When everyone is intoxicated, the bride and the bridegroom go to their own house.

 

During the first year of their marriage the bride’s mother is supposed to present the pair with rice and chickens, pots, cocoanuts, and cloth, as often as she can afford the gifts. It used to be the custom for the bride and bridegroom to stand side by side during the marriage ceremony, and to sell all the wedding presents to the assembled guests, the money brought by the sale becoming the bride’s wedding portion.

 

Infant marriage is permitted amongst the Kallans, but it is not popular because it entails a present which must be given by the parents of the bride to the contracting pair until after the first year of the conjugal state. In adult marriage the time is shortened, and consequently the expenditure is less. For the betrothal ceremony the consent of the maternal uncle is necessary.

 

A pregnant woman, during the seventh month of pregnancy stands before her sister-in-law with bent head, while the sister-in-law pours the milk of a cocoanut down her, the pregnant woman’s, back. Sometimes patterns are traced on her back with turmeric paste before the liquid is poured. On the same date the husband decorates a grindstone with paste tracings, a blessing on his wife, and prays that she may have a male child as strong as the stone. When a child is born the entire family is under pollution for thirty days, during which time entrance into a temple is forbidden.

Circumcision!

This caste performs circumcision. It is uncertain how this practice came into being.

Before any undertaking they place one red flower and one white flower in front of their idol, the white bloom signifying success. A child is asked to pick up one of the flowers, and if the red one is chosen, the undertaking is abandoned for the time.

 

Their local gods are carried through the streets on the sacred vehicle at the car festival, and their god Aalagarswami, exhibits the long ears characteristic of their caste.

 

It is said that if the men of this caste are successful in a marauding expedition, they put some of their ill-gotten gain before the god in the local shrine. The banks of the River Vaigai swarm with Kallans at their great annual festival, when the god Alagarswami is draggee through the steets. No blood is spilled as Alagarswami is a vegetarian, but ack of sanguine offering is due more to Brahmin influence than to Alagarswami’s vegetarian propensities.

 

 

Tree Devils

The Kallans believe that certain trees are occupied by devils, and under such trees they make offerings to the demon inhabitants. Rice and milk are left for the devils at night and a little fire is lighted in order that they can see the offerings. To-day, if such a tree grows in the jungle, and is consequently off the beaten path, a sheep or a goat is sacrificed and its blood spilled at the roots. When an animal offered, the devil will come out of the tree and enter the body of the worshipper, who becomes the devil’s mouthpiece and predicts what is going to happen in the near future. When the spirit of darkness has had his say, he returns to his tree and the worshipper recovers his senses.

 

Disputes and petty crimes occurring in the caste are usually settled by some member in authority. This dignitary frequently is one who, because he has acquired more money than any of the others, has won the respect of his people. Fines he inflicts are credited to the caste fund, and as this fund must be augmented the attentions of the police are not solicited.

 

 

Read my old article:-

BULL FIGHTING: Indus Valley to Spain via Tamil Nadu by London Swaminathan, 21 January 2012

 

 

–SUBHAM–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 15 (Post No.3317)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 5-51 AM

 

Post No.3317

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend ; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 15

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 71.

அரசாங்கம் மடாலயங்களின் சொத்துக்களுக்கு எந்த வரியையும் விதிக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததிலிருந்து யுனான் மாகாணத்தில் மிக்க அமைதி நிலவியது.

 

யுனானின் வைசிராய் லி ம்டாலயத்திற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி ஸு யுன்னின் நலம் பற்றி விசாரித்தார்.

ஏராளமான பரிசுகளையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

மடாலயங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகளை ஸு யுன் வகுத்ததோடு அதை அணுவளவும் பிசகாது பின்பற்றும்படியும்  செய்தார்.

 

 

கோடைகாலத்தில் திடீரென்று ஒருநாள் ஸு யுன்னின் வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஸு யுன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து இன்று வரை நடந்ததை எண்ணிப் பார்த்தார்.

மளமளவென்று கவிதைகளாக வர ஆரம்பித்தன.

அவற்றைப் படித்துப் பார்த்த மத்திய அரசின் தலைமைச் செயலர் உபாசகர் சென் யுங் சாங் அவற்றை கல்வெட்டுக்களாக கல்லில் பொறித்தார்.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 72. வருடத்தில் வ்சந்த காலத்திலும் கோடை காலத்திலும் தியான வகுப்புகள் நன்கு நடைபெற்றன. ஒன்பதாவது மாதத்தில் வூசாங் மாகாணத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது, பின்சுவான் நகர் முற்றுகையிடப்படுவது நிச்சயம் என்ற நிலை உருவானது.  உடனே ஸு யுன் களத்தில் இறங்கி  மத்யஸ்த பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார். ஒரு சின்னத் தவறினால் தவறுதலாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொணட கமாண்டர்  லி ஜென் யுயான் தன் படைகளோடு காக் ஃபுட் மவுண்டனைச் சுற்றி வளைத்து விட்டார்.

 

 

ஆனால் ஸு யுன்னின் சரியான விளக்கத்தைக் கேட்ட பின்னர் மிக்க திருப்தியுற்றுத் தன படைகளை அவர் விலக்கிக் கொண்டார்.

குளிர் காலம் தொடங்கியது. ஸு யுன்னுக்கு சீன புத்த சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. சீன புத்த் சங்கத்திற்கும் ஷாங்காயில் உள்ள யுனிவர்ஸல் புத்திஸ்ட் சொஸைடிக்கும் ஏற்பட்டுள்ள தகராறைச் சரி செய்ய உடனே வாருங்கள் என்ற அழைப்பு தந்தியில் இருந்தது. உடனே நான் ஜியாங் நகர் சென்ற ஸு யுன் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் புத்த சங்கத்தின் தலைமையகம் ஜிங்-ஆன் ஆலயத்தில் அமைக்கப்படுவதென்று ஒரு மனதாக  முடிவானது.

 

 

இதையடுத்து மாஸ்டர் ஜி-சானுடன் ஸு யுன்  பீகிங் சென்றார். அங்கு ஃபா யுவான் மடாலயத்தில் இருவரும் தங்கி இருந்தனர். ஒரு நாள் தியான நிலையில் அமர்ந்திருக்கும் போதே மாஸ்டர் ஜி சான் நிர்வாணம் எய்தினார்.

 

 

அவரது இறுதிச் சடங்கை நடத்திய ஸு யுன் அவரது சவப்பெட்டியை ஷாங்காய் எடுத்துச் சேன்றார். புத்த சங்கத்தின் த்லைமையகம் அங்கு துவங்கப்பட்டது.  மாஸ்டர் ஜி-சானுக்கும் ஒரு நினைவு விழா நடத்தப்பட்டது. அனைவரும்  மகிழ்ந்தனர்.

யுனானுக்கு ஸு யுன் திரும்பும் தருணத்தில் உபாசகர் லி ஜென் யுவான் கவர்னர் கெய்-ஓ விற்கு ஒரு அறிமுகக் கடித்ததைக் கொடுத்தார். அவர் மூலம் புத்த தர்மம் செழிக்க வேண்டும் என்ற அவா அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடித்தத்துடன் ஸு யுன் யுனானுக்குத் திரும்பினார். புத்த தர்மம் செழிப்பதற்கு அவர் செய்ய வேண்டிய ப்ணிகள் நிறைய இருந்தன!

-தொடரும்

 

Miracle Cure for Eczema! (Post No.3316)

Compiled  by London Swaminathan

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 18-38

 

Post No.3316

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

 

Arthur Miles narrated the following anecdote in his book The Land of the Lingam (year 1933):–

Another of my friends in south India had much happier experience with her bearer.  For thirty-five years her husband had been the victim of eczema, and had spent unavailingly a small fortune on doctors and cures.

One day, however, when she was having tea alone in the compound, her bearer said to her: “Memasahib, I can cure master”. With a smile, she told the man she was sure he could not succeed where all the doctors had failed. Nevertheless, the servant quietly insisted in his assertion, and produced a small phial containing some thickish red fluid. A crop of sores on her husband’s body the following morning reminded the memsahib of the phial the boy had given her, and more in desperation than in any belief in the of the remedy, she applied the contents of the bottle to the new eruption.

 

To her amazement the sores not only healed, but they left behind no scar on the skin. For some time my friend was unable to get the bearer to tell her how his medicine was prepared, and it was always he and the maali (gardner) who went off together to get fresh supplies. During the early stages of the treatment it seemed that supplies could be obtained within her own compound, but later the men had to go farther afield.

Picture of Agamidae lizard

Like a wise woman, however, since all was going well, she concealed her curiosity, and paid the bearer well for his trouble. Ultimately, it turned out to be blood from the throat of the Agamidae lizard which was providing the so magical cure. When I last heard from my friends they were making a leisurely trip around the world. Knowing my interest in the matter it was specially mentioned in a letter that no return of the eczema had occurred.

–Subham–

 

புத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)

பிரிட்டிஷ் அமைச்சர் ப்ரீதி படேல்(Just outside the hall)

 

Written  by London Swaminathan

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3315

 

 

Pictures are taken by London swaminathan.

 

 

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ராபர்ட்சனும் பிளாக்மேனும்

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 26 புதன்கிழமையன்று பிரிட்டிஷ் ஹிந்து மன்றம் (Hindu Forum of Britain) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது. அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் சுருக்கி வரைகிறேன்.

 

பாப் பிளாக்மேன் (Bob Black man)  என்ற எம். பி பேசுகையில் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஏழு கோவில்களுக்குச் சென்று வருவதாகவும் அடுத்த முறை எட்டு அல்லது ஒன்பது கோவில் போக திட்டமிட்டிருப்பதாகவும் கூறியவுடன் பலத்த கரஒலி எழுந்தது. காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு வாக்கில் புனித யாத்திரையை முடிக்கிறார் இந்த கிறிஸ்தவ இந்து!

 

அவரை அடுத்து ஸ்காட்லந்தில் மிகப் பெரிய கட்சியின் எம்.பி ஆங்கஸ் ராபர்ட்சன் பேசினார். “நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இங்கிலாந்தை விட ஸ்காட்லாந்தில் இந்தக் குளிர் காலத்தில் இருட்டு அதிகம். நீங்கள் இந்துக்கள்; தீபாவளி மூலம் பிரகாசத்தைக் கொண்டு வருகிறீர்கள். ஸ்காட்லாந்திலோ அதிகம் இந்துக்கள் இல்லை. நீங்கள் பெருமளவில் வந்து எங்கள் பிராந்தியத்தில் வெளிச்சம் உண்டாக்குங்கள் என்றார். உடனே கர ஒலி மண்டபத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்றது.

குஜராத்தி இனிப்புகள் (கூட்ட அறையில்)

 

காஷ்மீர் தினமும் இதே நாளன்று கொண்டாடப் பட்டதால் அதற்காக வந்திருந்த காஷ்மீர் மஹாராஜாவின் பேரன் தீபாவளித் திருநாளிலும் கலந்து கொண்டார். அவரது தாத்தா பெரிய தேசபக்தர் என்பதால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்தார். அவருக்கும் மாலை போட்டு கவுரவித்தோம் ( நான் ஹிந்து போரத்தின் தேசிய கமிட்டி உறுப்பினர்)

 

புதிதாக பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஹிதேஷ் காதியா பேசுகையில் முதல் தடவையாக மஹாரணிக்கு முன்னிலையில் ரிக் வேதத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்ததாகவும் உலகின் மிகப் பழைய நூல் என்பதோடு ரிக் வேதத்தில் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல்கள் உள்ளன என்றும் சொன்னவுடன் அனைவரும் கைதட்டி அதை ஆமோதித்தனர்.

 

பிரதம மந்திரி தெரெசா மே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை பிளாக் மேன் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

 

மேலும் பல எம்.பி.க்களும் பிரபுக்களும் நல்லுரை ஆற்றினர். இராமன் அயோத்தி திரும்பிய நல்ல நாள் இது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கும் அறியாமையிலுலிருந்து ஞானத்துக்கும் செல்லும் நாள் இந்த தீபத் திருநாள் என்று குறிப்பிட்டனர்.

 

பிரிட்டிஷ் அமைச்சர் பிரீதி படேல் பேசுகையில் பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதிலும் அனைவருக்கும் சேவை செய்வதிலும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

பார்லிமெண்டின் மேல் மாடியில் தேம்ஸ் நதியை நோக்கிய ஹாலில் இக்கூட்டம் 300 பேருடன் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியும் வயிற்றுக்குச் சிறிது உணவும் வழங்கப்பட்டது.

மன்றத்தின் தலைவி திருமதி திருப்தி படேலும் (President HFB), செயலர் செல்வி பன்னா வகாரியாவும் (Secretary General)  செம்மையான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பெய்தினர்.

சாயி பள்ளி மாணவிகள்

 

–சுபம்–