கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பன் கவி இன்பம்-4 (Post No.4239)

Written by S.NAGARAJAN

 

Date: 24 September 2017

 

Time uploaded in London- 5-29 am

 

Post No. 4239

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை

4082 – 15-7-17; 4088 – 17-7-17; 4103 – 22-7-17 – இந்த மூன்று கட்டுரைகளின் தொடர்ச்சியாக வெளியாகும் நான்காவது கட்டுரை இது.

 

பண்ணின் சுவை, பாவையரைக் கண்ட களிப்பு, ஞானியர் பெற்ற  இன்பம்- இவற்றைப் பொலிவிழக்கச்  செய்யும் கம்பன் கவிதை!

 

ச.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் அற்புதக் கவி உள்ளம் கம்பனின் பாக்களில் களித்ததோடு நம்மையும் களிக்க வைக்கிறது அழகிய் இனிய பாக்களால்.அவர் தரும் கவிதை வரிசையைத் தொடர்வோம்.

 

 

பாடல் 6

 

வேரி மாமணம் வீசும் தமிழணங்

காரும் ஆரமோ? ஆய்முத்தின் ஆரமோ?

பாரில் வானில் பயில்அழ கும்எழில்

சேரப் பூணும் செழுமணிப் பேழையோ?

 

உரை: (அன்றி இக்கம்பராமாயணத்தைத்) தேனையும் பெருமை பொருந்திய மணத்தையும் வீசுவதும் தமிழன்னை (தன் குழலில்) முடிப்பதுமாய ஒரு பூவாரத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி  அம்மாதா ஆய்ந்தெடுத்துத் தன் மார்பில் அணியும் ஒரு முத்து வடத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி, உலகத்தினிடத்திலும், வானத்தினிடத்திலும் நிரம்பிய அழகெல்லாம் (திரண்டு ஓர் உருவாய பாவை) தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பூணும் இரத்நாபரணங்களைச் சேமித்து வைக்கும் ஒரு பெட்டியோடு ஒப்பிடுவேனோ?

 

 

பாடல் 7

ஓசை இன்பம் ஓர் ஊற்றெடுத் தேமனம்

மாச யின்றிடா வாறு வருதலால்

பூசை இன்பப் புனிதர்க்கும் மேற்புலன்

ஆசை இன்ப அமுதினை ஊட்டுமால்

 

உரை: (இக் கம்பராமாயணக் கவியில் அமைந்த அழகிய) ஓசையினால் வரும் இன்பம் ஒரு ஊற்றெடுத்துப் பாய்ந்து (மனிதர்களுடைய) மனதில் அழுக்கே படியாத வண்ணம் (அதனைப் புனிதமாக்கிச்) செல்லுவதால் சரீர இன்பங்களைப் புல்லியவெனத் தள்ளி தெய்வ வணக்கமே தமக்கு இன்பமாகக் கருதும் பரிசுத்த மஹான்களுக்கும் கூட கண் காது என்னும் இரண்டு உயரிய கலைப்புலன் வழி பருகும் இன்னமுதப் பாய்வில் அஃது ஆசையை உண்டு பண்ணா நிற்கும்.

 

பாடல் 8

 

கூறில் அண்டரும் கொண்ட அமுதினால்

ஈறில் வாழ்க்கையை எய்தினரே னும்கைம்

மாறில் லாமகிழ் மீறுகம் பன்கவிப்

பேறிலா தின்றும் பேதுற் றழுங்கினார்

 

உரை: (இவ்வுலகத்தாரையும் வானுலகத்தாரையும் ஒப்பிட்டுச்) சொல்லுமிடத்து தேவர்கள் தாம் பெற்றுக் கொண்ட அமிர்தத்தினால் மரணமில்லாப் பெரு வாழ்க்கையை அடைந்தனரேயாயினும், இவ்வுலகத்தார் பெற்றுக் கொண்டது போல அவ்வாழ்க்கையை மகிழ்ச்சியாற் சிறப்புறும்படி செய்யக் கம்பனுடைய காவியம் என்னும் பெருஞ்செல்வத்தைத் தாமும்  பெற்றுக் கொள்ளவில்லையே என்று இன்றும் மனம் குழைந்து அலக்கண் உறுகின்றனர்.

பாடல் 9

 

பூவின் மென்மை பொலிவற் றிழிவது

காவின் தண்மை கனன்று தெறுவது

கோவின் தேசெதிர் கூசிக் குலைவது

பாவிற் பாவெனும் கம்பன்மெய்ப் பாட்டினால்

 

உரை: உண்மையான கவியினிமை ஒழுகிக் கவிக்கும் கவியாய் விளங்கும் கம்பன் கவித்தொகையின்  முன்னிலையில் பூவின் மெல்லிய குணமும் அழகிழந்து கீழடைகின்றது; செறிமரக்காவின் குளிர்ச்சியும் கொதித்துச் சூடா நிற்கின்றது; விலையுயர்ந்த ரத்தினங்களின் ஒளியும் ஒளியிழந்து மழுக்கம் அடைகின்றது.

குறிப்பு:- ‘மெய்ப்பாட்டினால்’ என்னும் தொடருக்கு உத்தம கவிஞனாம் கம்பன் தன்னுள்ளக் கருத்தை அல்லாது மனதிற் கற்பிதம் செய் பொருளைத் தன் கவியை வாசிப்போருக்கு அதில் நிரப்பும் சொற்களினால் கண்கூடாதல் செய்யும் வல்லமையும் பெற்று விளங்கினன் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

பாடல் 10

 

 

பண்ணில் வந்த சுவையையும் பாவைமார்

கண்ணில் வந்த களிப்பையும் ஞானியர்

எண்ணில் வந்தநல் லின்பையும் கம்பன்பா

நண்ணி வந்த நலம்நனி தீய்க்குமால்

 

உரை:- கம்பனுடைய கவியோடு பொருந்தி விளங்கும் அழகு, இராகங்களில் நின்றெழும் ஒலியின்பத்தையும், வனப்பு வாய்ந்த மாதர்களைக் கண்ணுறுவதாற் பொறிவழிப் புகுந்து பெருகும் இன்பத்தையும் தத்துவ ஞானிகள் தமது அந்தக்கரண வாயிலாய் அடைந்து அனுபவிக்கும் உயரிய இன்பத்தையும் அழகு கெட்டு இன்பிழக்கச் செய்கின்றது.

*

சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஓசையின்பத்தையும் தரும் ஐந்து பாடல்களில் கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜபிள்ளை

கம்பனது கவி தமிழன்னையில் கூந்தலில் முடிக்கப்பட்டிருக்கும் பூவாரமா என வியக்கிறார்.

அவனது கவிதையில் எழும் ஓசை தரும் இன்பம்  ஐம்புலனை வென்ற மஹான்களுக்கும் கூட கண் மற்றும் செவியின் மீது ஆசையை உருவாக்கும், என அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

 

மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற தேவர்களும் கூட இவ்வுலகில் பிறந்து கம்பனுடைய காவியத்தை ரஸிக்க முடியவில்லையே என்று ஏங்குவர் என்று கூறுகிறார்.

 

பூவின் மென்மை பொலிவை இழக்கும்;  காட்டின் குளிர்ச்சி போய் விடும்; ரத்தினங்கள் ஒளி இழக்கும் – கம்பன் பாட்டின் முன்னே என்று வியந்து கூறுகிறார்.

 

பண்ணில் வந்த சுவை, அழகிய மகளிர் கண்ணில் பட அதனால் ஒருவன் பெறும் இன்பம்,  ஞானியர் அந்தக்கரணத்தில் அனுபவிக்கும் இன்பம் ஆகிய அனைத்தும் கூடக் கம்பன் கவிக்கு முன்னர் அழகு கெட்டு இன்பத்தை இழக்கும் என்று கம்பனை ரஸித்துக் கூறுகிறார்.

 

 

சும்மா சொல்லி விடவில்லை கவிஞர் கே.என்,சிவராஜ பிள்ளை; அனுபவம் பேசுகிறது; அதில் கம்பனின் மஹத்தான தமிழ் தாண்டவம் ஆடுகிறது!

ரஸியுங்கள். அமரரும அடைய முடியா இன்பம் பெறுங்கள்.

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

31 quotations of Friendship (Post No.4238)

OCTOBER 2017 GOOD THOUGHTS CALENDAR
Compiled by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  14-17

 

Post No. 4238

 

Pictures are taken from various sources; thanks.

 

Festival Days: Oct.1-MUHARAM, 2 GANDHI JAYANTHI, 5- VALMIKI JAYANTHI, 18/19- DEEPAVALI, 25- SKANDHA SASHTI.

EKADASI -1, 15, FULL MOON- 5, NEW MOON- 19

AUSPICIOUS DAYS- 27, 30

OCTOBER 1 SUNDAY

Friendship with those whose minds are not open-hearted sours to enmity – Kalidasa’s Sakuntala 5-24

 

OCTOBER 2 MONDAY

Imbibe only the merits of a companion and never the demerits- KR 186

 

OCTOBER 3 TUESDAY

Befriending a cruel serpent tantamount to extinction of the frog community– Panchatantra

 

OCTOBER 4 WEDNESDAY

Abusive language spells the death knell of friendship – Panchatantra 5-72

OCTOBER 5 THURSDAY

Live up to the words of a friend –Satopadupadesa prabandha

OCTOBER 6 FRIDAY

Do not disrespect a friend’s words – Sakunatalam ,first act

 

OCTOBER 7 SATURDAY

A friend indeed is a friend in need -Panchatantra 2-115

 

OCTOBER 8 SUNDAY

Better cordiality with a helpful foe than with a faithless friend – Hitopadesam 4-16

 

OCTOBER 9 MONDAY

Friendship begets help, and an enemy is known by disservice – Valmiki Ramayana 4-8-21

 

OCTOBER 10 TUESDAY

The pure hearted strike friendship at first sight –Yogavasistha 3-78-35

OCTOBER 11 WEDNESDAY

When sad or glad, a friend alone is a sanctuary – – Valmiki Ramayana

 

OCTOBER 12 THURSDAY

Ever avoid a foolish friend – Sushasitavali

 

OCTOBER 13 FRIDAY

The one with a companion achieves his objects-  Panchatantra 2-26

 

OCTOBER 14 SATURDAY

A traitor of a friend is the worst of men – Mahabharata

 

OCTOBER 15 SUNDAY

A friend who is angry without justification does create anxiety -– Valmiki Ramayana 15-32-6

OCTOBER 16 MONDAY

Elephants do not ever befriend foxes – Kiratarjuniya 14-2

 

OCTOBER 17 TUESDAY

Betraying friends never yields prosperity – Jataka mala

 

OCTOBER 18 WEDNESDAY

Friends alone do not make for joy nor enemies alone for sorrow- Mahabharata

 

OCTOBER 19 THURSDAY

 

The sin of betraying a friend is erased not even in a hundred births- BKM

 

OCTOBER 20 FRIDAY

It is declared that comradeship of the noble commences with seven steps walked together – Panchatantra 2-47, Rig Veda, Sangam Tamil Literature

OCTOBER 21 SATURDAY

Friends and foes originate only in transactions – Hitopadesam 1-72

 

OCTOBER 22 SUNDAY

Friendship- easy to build, difficult to sustain – Valmiki Ramayana 4-32-7

 

OCTOBER 23 MONDAY

Friendship blooms between those of the same loom and gloom – Panchatantra 1-285

 

OCTOBER 24 TUESDAY

Bond with those of the same melancholy – Satopadesaprabandha

 

OCTOBER 25 WEDNESDAY

Proximity, though it be to the inanimate, leads to companionship- Valmiki Ramayana 2-8-28

OCTOBER 26 THURSDAY

Enemies scorch when they meet and friends too when they depart -SRB 3-110

 

OCTOBER 27 FRIDAY

Attachment to friends makes prosperity, not so with women! Katha sarit Sagara

 

OCTOBER 28 SATURDAY

Comradeship occurs in communion – Valmiki Ramayana 4-127-47

 

OCTOBER 29 SUNDAY

In prosperity, all are one’s friends -Kahavatratnakar

 

OCTOBER 30 MONDAY

Share your grief with your buddies – Satopadesaprabhandha

OCTOBER 31 TUESDAY

He is friend who sees you through woe – Panchatantra 1-341

xxx

Source – Suktisudha, Chinmaya International Foundation, Ernakulam, Kerala, 2010

For original Sanskrit sentences, please see the book.

 

–SUBHAM–

 

ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை! (Post No.4237)

Written by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  7-12 am

 

Post No. 4237

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சரஸ்வதி நதி  கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக்வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு.1400ல்  கண்டுபிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு.1400லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகிவிட்டது.

 

சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆக ரிக் வேதத்தின் எந்தப் பகுதியையும் எவரும் .கி.மு2000க்குக் குறைத்து மதிப்பிட முடியாது. அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு முந்தையது வேத கால நாகரீகம் (இதற்கு ஆட்சேபம் எழுப்பியோர் குதிரை, இரும்பு பற்றிக் கூறியவற்றுக்கு எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பதில்கள் உள்ளன. கண்டு மகிழ்க).

 

இது பழைய மாக்ஸ்முல்லர் கொள்கையையும், மார்கஸீயவா(ந்)திகளின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

 

 

மாபெரும் வெடிப்பு BIG BANG!

 

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பதற்கு அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்– 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்தப் பிரபஞ்சம் இன்னும் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது – என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

 

இதில் ஒரு பெரிய விந்தை என்னவென்றால் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக இந்து சமய நூல்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் (Cyclical, not linear) பயணம் செய்யும் ; ஆகையால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் இந்து சமய நூல்கள் விரித்துரைக்கின்றன. இனி நாசதீய சூக்தத்தில் உள்ள  அதிசய விஷயத்தைக் காண்போம்.

 

இப்பேற்பட்ட ரிக் வேதத்தில் கடைசி பாடலில் உலக சமாதானம் , உலக மக்கள் நலம் பற்றிய பாடல் இருப்பது – 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே — வேத கால ரிஷிகள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி இருப்பது உலகையே வியக்க வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னரே இப்படி ஒரு சிந்தனை எழுந்தது வேத கால நாகரீகம் ஒன்றே முதன்மையானது என்பதைக் காட்டிவிட்டது.

 

இப்படி பசு மாடு, குதிரை, டெஸிமல் சிஸ்டம் , உலக மக்கள் நலம் என்பதில் எல்லாம் முன்னொட்டியில் நிற்கும் விஞ்ஞானத்திலும் முன்னனியில் இருப்பது  எல்லோர் மூக்கிலும் விரலை வைக்கவைத்து விட்டது.

 

இதைப்படித்த வெளிநாட்டு “அறிஞர்கள்” வேதம் பற்றிய எல்லாப் புத்தகத்திலும் இதைச் சேர்த்துவெளியிட்டனர். நூற்றுக்கும் மேலான “அறிஞர்கள்” இது பற்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கில, லத்தீன் மொழிகளில் உரை- வியாக்கியானம்- கருத்துக்களை மொழிந்துள்ளனர்.

 

இந்த துதியின் பெயர் நாஸதீஅய சூக்தம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-129)

 

சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சூக்தம் என்னும் துதி.

 

ஒரு விஞ்ஞானியோ நாஸ்தீக வாதியோ, மாபெரும் வெடிப்புக்கு (Before The Big Bang) முன்னர் என்ன இருந்தது? அதை யார் தோற்றுவித்தார்? அவர் எப்படி வந்தார் அல்லது அது எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால் விடையே கிடைக்காது. ஒரு நேரத்தில் இப்படி யோசிப்பதை நிறுத்தாவிடில் வேட்டி சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைவார்.

 

ஆனால் ரிக் வேத ரிஷியோ மாபெரும் வெடிப்பை வர்ணித்துவிட்டு இது கடவுளின் இச்சையால் ஏற்பட்டது என்று மொழிகிறார். விஞ்ஞானிகள் காரணமே தெரியாது என்று சொன்ன இடத்தில் கடவுள் என்பவரையும் அவரது விருப்பத்தையும் பகர்ந்தவுடன் விடை கிடைத்துவிடுகிறது.

 

அதெல்லாம் சரிதான், ஐயா? 7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேத கால இந்துவுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வ, அதிசய, அற்புத சிந்தனை பிறந்தது? அப்படியானால் அவர்கள் நாகரீகத்தின் சிகரத்தில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்? மார்கஸீய வா(ந்)திகளும் வெள்ளைத் தோல் :அறிஞர்களும்” செப்பியது தவறு அன்றோ! கைபர் கணவாய் வழியாக மாடு மேய்த்து வந்த நாகரீகமற்ற நாடோடிகள் ஆரியர்கள் என்று கற்பனையை எழுதிய கயவர்களைக் கண்டு நாம் இன்று கைகொட்டிச் சிரிக்கலாமே!

 

இதோ அற்புதமான நாசதீய சூக்தம்:–

 

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதுனும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

 

2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

 

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

 

5.அந்தக் கயிறு– இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

 

யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

 

  1. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த உயர்ந்த சுவர்கத்துக்கே அது தெரியும்; தெரியாமலும் இருக்கலாம்.

 

இதை இந்துக்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளுவர். நாஸ்தீகவாதிகள் இங்கு சந்தேக த்வனி இருப்பதாவும் எடுத்துக் கொள்ளுவர். இவ்விருவர் கோணத்தில் பார்த்தாலும் இப்படி ஒரு ரிஷி முனிவருக்கு ஒரு சிந்தனை 6000, 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும், அதை வாய்மொழியாக 7000 ஆண்டுகளாக இந்துக்கள் பாடிப் பாதுகாத்து வைத்திருப்பதும் உலக மஹா அதிசயம். ஏனெனில் வேதங்க ளை எழுதக்கூடாது. வாய்மொழியாக மட்டுமே மூன்று ஜாதியினர் கற்காலாம். சங்கத் தமிழ் நூல்கள் வேதங்களை எழுதாக் கிளவி, எழுதா மறை, எழுதாக் கற்பு என்று போற்றுகின்றன.

 

மாபெரும் எடிப்பு என்பதை இறைவனின் தவ வலிமையில் பிறந்த இச்சை- காமம்- விருப்பம் -ஆசை என்று அற்புதமாக வருணிக்கிறார் வேத காலப் புலவர். கவிஞருக்கே உரித்தான பாணியில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி—அதாவது தடை எழுப்பி விடை காண்கிறார்.

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் இருந்தால்தான் இப்படி ஒரு சிந்தனை பிற க்கும் அல்லது பாபிலோனியாவில் உள்ளது போல ஒரு லட்சம் கல்வெட்டுகளிலும் உப்பு, புளி, மிளகாய், எண்ணை வாங்கிய பழங்கால கணக்குகளை  எழுதி இருப்பார்கள். அல்லது ஜில்காமேஷ் “காவியம்” போல ஏதாவது பிதற்றி இருப்பர்!

 

சில வெளிநாட்டு அரை வேக்காடுகள் – ‘கடவுளரே படைப்புக்குப் பின்னர் தோன்றியதாக’ வரும் வரியை எடுத்துக் கொண்டு – படைப்புக்குக் கடவுள் காரணம் அல்ல – என்று பகர்ந்து தன் அறியாமையை வெளிப்படுத்துவர். ஏனெனில் இதே துதியில் “அந்த ஒன்று” உயிர்த்துடிப்புடன் இருந்தது; அது தவத்தினால் ( தவம்= வெப்பம்), இச்சையினால் இதைத் தோற்றுவித்தது — என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கவிகளுக்கே உரித்தான பாணியில் எழுதும் போது இப்படிக் கேள்விகளை எழுப்பி – உளதோ இலதோ — என்று புகல்வர். மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும்.

 

உருவம், அருவம் அருஉருவம் எல்லாம் உடையவன் அவன்!

 

TAGS: -மாபெரும் வெடிப்பு, நாசதீய சூக்தம், வேதத்தில் விஞ்ஞானம்

–சுபம்–

 

விதுரர் கூறும் விதுர நீதி – 3 (Post No.4236)

Written by S.NAGARAJAN

 

Date: 23 September 2017

 

Time uploaded in London- 4-24 am

 

Post No. 4236

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

by ச.நாகராஜன்

 

3

அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

 

4

வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

 

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

 

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

 

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

 

PICTURE FROM WIKIPEDIA

5

எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

 

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

 

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

 

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

விதுர நீதி தொடரும்

***

 

 

 

 

Big Bang in the Rig Veda! (Post No.4235)

Written by London Swaminathan

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 16-28

 

Post No. 4235

 

Pictures are taken from various sources; thanks.

 

 

What is the Big Bang?

Big Bang in astronomy, is the hypothetical explosive event that marked the origin of the universe as we know it. At the time of the Big  Bang, the entire universe was squeezed into a hot , super dense state. The Big Bang event threw this composite material outwards producing the expanding universe. The cause of the Big Bang is unknown; observations of the current rate of expansion of the universe suggests it took place about 10-20 billion years ago —Hutchinson Encyclopaedia

 

According to Hindu Yuga calculation, it happened about 15 billion years ago.

The Big Bang is described in the Rig Veda 6000 or 7000 years ago. Cosmologists wonder that such a thought occurred to one or two seers on the banks of River Sarasvati in India. Hindus are great cosmologists that the same creation is described in several Brahmanas, Puranas and Manau Smrti as well.

Creation Hymn: Nasadiya Sukta

The following remarkable passage from the Rig Veda (10-129) describes the creation of the universe.

 

“There was then (in the beginning) neither non-entity nor entity; there was no atmosphere, nor sky above. What enveloped all? Where in the receptacle of what (was it contained)? Was it water, the profound abyss? Death was not there, nor immortality; there was distinction of day or night. That one breathed calmly, self-supported; there was nothing different from, or above it.

 

In the beginning darkness existed, enveloped in darkness. All this was undistinguishable water. That one which lay void, and wrapped in nothingness, was developed by the power of fervour. Desire first arose in it. which was the primal germ of mind; and which sages, searching with their intellect, have discovered it in their heart to be the bond which connects entity with non-entity.

 

The ray (cord) which stretched across these worlds, was it below or above? There were there impregnating powers and mighty forces, a self-supporting principle beneath and energy above. Who knows, who here can declare, whence has sprung this creation?”

 

A beautiful description of the Big bang and the later water enveloped earth. So I see two stages here; one is the Big Bang. Scientists say that they don’t know the cause of the Big Bang. But Hindu seers say that the DESIRE in the god made it happen. The second stage is water every where , of course billions of years after he Big bang. Now we all know that there was only sea and then land emerged and the life first appeared in water.

 

The Hindu scriptures clearly say that the water had the life seeds, impregnated ny the rain god.

 

How did the Hindu seers get such a thought about cosmology (Big bang) 6000 years before the Western cosmologists/astronomers? Did they find it by intuition? They also knew that TIME is cyclical. It happens again and again. Western scientists still do not know it.

 

Manu also says in the first chapter of Manava Dharma Shastra:

“This universe was enveloped in darkness, uperceived, undistinguishable, undiscoverable, unknowable, as it were entirely sunk in sleep. Then the irresistible , self-existent Lord, undiscerned, causing this universe with the five elements and all other things to become discernible, was manifested, dispelling the gloom. He who is beyond the cognisance of the senses, subtle, undiscernible and eternal, who in the essence of all beings, and inconceivable, himself shone forth. He, DESIRING, seeking to produce various creatures from his own body, first created the waters, and deposited in them the sed. This became a golden egg, resplendent as the sun, in which he himself was born as Brahma, the progenitor of all the world. That Lord having continued one year ( not our year Brahma’s year), divided it into two parts by his mere thought. With these two shells, he formed the heaven and earth, and in the middle placed the sky (atmosphere), the eight regions and the eternal abode of waters.”

Wherever science said unknown, there Hindus introduced God. The Five elements (Pancha Bhuta) concept, The Floods (Pralaya) concept, Life from the water concept,  Heaven and earth concept—all these things spread to Babylonia and Greece from India. Vedas were the earliest literature to describe anything in the universe is globular. Now we know that the earth and other planets are globular or round and the universe itself is expanding as a round balloon! So this is also a Hindu discovery. How did they know it? That is the greatest mystery. And they say that there will be a Big Shrink and then it starts again with another Brahma.

 

If a scientist or an atheist begin to think what was there before the Big Bang? How did or where did it come from? he will become mad and stop thinking at one stage. Because if you something came from something then one would question how did that something came? and where from did it come? So it is a never ending enquiry. Hindus said that its God’s will or desire. So, they recognised the existence of God before the Big bang or the creation. And they told the world that God is eternal. So, no more questions arose!

 

Nasadiya Suktam in the Rig Veda shows that the Vedic Hindus were well advanced in Astronomy and cosmology. They were great mathematicians and used decimal system in almost all the hymns 6000 0r 7000 years ago! Now if anyone says that the Vedic Hindus were nomads and pastoral people we can have a good laugh. The foreign “scholars” look like pukka idiots in front of this Vedic seer who gave us the Nasadiya (creation) sukta.

 

The Nasadiya Hymns (RV 10-129) traces the creation of the existent to the non-existent. One must read much between the lines to fit it in a true metaphysical pattern. But from the text itself it is obvious that the poet succeeded in stretching his imagination to a point of time when creation had not yet come into being ( before the Big Bang!). He can visualize the primal darkness of non-existence and the complete void in Time and Space. He has a dim misty vision – but a powerful and gripping one all the same – of being slowly emerging of non being. The power of the hymn lies in this vision.

 

In another essay, we will see what the great scholars say about this creation hymn.

Long Live the Vedas! Long Live the Vedic seers!!

 

–Subham–

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவதா? அப்பர் கேள்வி (Post No.4234)

Written by London Swaminathan

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 10-43 am

 

Post No. 4234

 

Pictures are taken from various sources; thanks.

 

 

தேவாரத்தில் (நாலாம் திருமுறை) அப்பர் என்னும் திருநாவுக்கரசர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். குருடனுக்கு ஊமை வழிகாட்ட முடியுமா? என்ன அருமையான கற்பனை.

நான் அமணருடன் (சமணர்) சேர்ந்தேனே! என்ன தவறு? இது குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது போலல்லவா இருக்கிறது- என்று அங்கலாய்க்கிறார்.

 

இதோ தேவாரப்பாடல்:

 

எத்தைக் கொண்டு எத்தகை யேழை

அமணொடு இசைவித்து எனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு

வித்துஎன்னக் கோகு செய்தாய்

முத்தின் திரளும் பளிங்கினிற்

சோதியும் மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும்படியாய்

பொழிற்கச்சி யேகம்பனே

பொருள்:

முத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் காஞ்சீபுரத்தில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே! எக்காரணத்தைக் கொண்டு அமணரொடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னை இழியுமாறு செய்தீர்?

 

கொத்தை= குருடு, மூங்கர் = ஊமை

கோகு = துன்புறும் பொருட்டுச் செல்லுவித்தல்.

அமணருக்கு மூங்கர் உவமை.

இரட்டைப் புலவரும் அந்தக் கவிராயரும்

 

இளஞ்சூரியர், முது சூரியர் என்னும் பெயர்கொண்ட இரண்டு கவிஞர்களை இரட்டையர் என்று அழைப்பர். இவர்களில் ஒருவர் காலில்லாத முடம் என்றும் மற்றொருவர் கண்பார்வையற்றவர் என்றும் சொல்லுவர். முடமானவரை, குருடர் தூக்கிக் கொண்டு போவார் என்றும் முடமானவர் மேலேயிருந்து வழி சொல்லுவார் என்றும் சொல்லுவர். இவர்கள் சோழ நாட்டில் ஆமிலந்துறையில் பிறந்தவர்கள். இருவரும் ஆளுக்குப் பாதிப்பாதி கவி பாடி பூர்த்தி செய்வராம். இது நம்பக்கூடியதே. இவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால், “கலம்பகத்திற்கிரட்டையர்கள்” என்று ஒரு பழம்பாடலும் சொல்லும். தில்லைக் கலம்பகம், திருவமாத்தூர் கலம்பகம் ,திருக்கச்சி தெய்வீக உலாக்கள் என்பன இவர்கள் இயற்றியவை, இது தவிர பல தனிப்பாடல்களுமிவர்களின் பெயரில் உள்ளன.

 

இது போல அந்தகக் கவிராயர் என்றொரு கண்பார்வையற்ற புலவரின் பாடல்களும் உள்ளன.

 

ஆனால்     அப்பர் பெருமான் சொல்லும் உவமை குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது என்பதாகும். அதாவது நடக்க முடியாத செயல். அப்பர் தான் வழிதவறிப்போனதால் தன்னை குருடாகவும் அமணர்களை ஊமையர்களாகவும் உவமிக்கிறார்.

நல்ல உவமை; அருமையான கற்பனை!

 

–சுபம்–

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3 (Post No.4233)

Written by S.NAGARAJAN

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 6-27 am

 

Post No. 4233

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

22-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 31வது) கட்டுரை

 

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3

 ச.நாகராஜன்

 

 

“மின்னுவதெல்லாம் பொன் அல்ல – தமிழ்ப் பழமொழி

 

பண்டைய ரோமானிய நாகரிகம் தொடங்கி இன்றைய நாள் வரை இரஸவாதக் கலையில் நிபுணர்களாக விளங்கியோர் எண்ணிலடங்காத பேர்கள். ஆரம்ப காலத்தில் இந்தக் கலையை மாஜிக் என்றும் மாயாஜாலக் கலை என்றும் கூறி வந்தனர்.

இரசாயனத்துறை அறிவியல் ரீதியில் வளர ஆரம்பித்த போது இரஸவாதத்திற்குத் தனி ஒரு அங்கீகாரம் ஏற்பட்டது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

 

இதன் பக்க விளைவுகளாக பல நல்ல கண்டுபிடிப்புகளும் அரங்கேறின.

 

நூற்றுக்கணக்கானோர் இந்தக் கலையில் புகழ் பெற்றிருந்தாலும் கூட குறிப்பிடத்தகுந்த இருவரை மட்டும் இங்கு பார்ப்போம்.

 

 

 

ஜோஹன் ஃப்ரெடெரிக் பாட்கர் (Johann Friderich Bottger)

 

                18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்கர் ஒரு மந்திரவாதி என்றும் சுத்தமான பிராடுப் பேர்வழி என்றும் தூற்றப்பட்டவர். அவருக்கு பத்தொன்பது வயது ஆகியிருக்கும் போதே அவரை போலந்து மன்னனான ஃப்ரெடெரிக் அகஸ்டல் தனது அரசவைக்கு உடனே வருமாறு ஆணையிட்டான்.  மூல உலோகங்களை உடனே தங்கமாக மாற்றித் தருமாறு அவன் பாட்கருக்கு ஆணையிட்டான். ஆனால் அப்போது நாட்டில் நடந்த கலவரத்தால் பாட்கர் நாட்டை விட்டே தப்பி ஓடலாமா என்று நினைத்தார். ஆனால் அப்படி தப்பி ஓடும் போது அவரைக் கைது செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். மீண்டும் உடனடியாக அனைத்துப் பொருள்களையும் தங்கமாக மாற்றித் தருமாறும் இல்லையேல் அவரது தலை துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

ஆனால் மன்னன் சற்று தாராள மனம் உடையவன் என்பதால் அவர் கேட்ட படி கால அவகாசம் தந்தான். இந்தக் கால அவகாசம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

 1709 ஆம் ஆண்டு வந்தது. தங்கத்தை அவர் உருவாக்கவில்லை என்றாலும்வெள்ளைத் தங்கத்தை (White Gold) உருவாக்கிக் காட்டினார்.

 

வெள்ளைத் தங்கம் என்பது சீனாவில் போர்செலெயின் Porcelain) எனப்படும் பீங்கான் ஆகும்.

 

     இதை எப்படித் தயாரிப்பது என்பதை சீனர்கள் மிக மிக இரகசியமாகப் பாதுகாத்து வந்தனர். ஆயிரத்தி முன்னூறுகளில் பீங்கான் ஐரோப்பாவை எட்டிப் பார்த்தது. அது அங்கு தங்கத்தை விட மிக அதிக விலை மதிப்புடையதாக கருதப்பட்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே அது கிடைக்கும் என்ற நிலை இருந்ததால் அது கிடைப்பதும் கூட அரிதானது. ஆகவே அதன் மதிப்பு இன்னும் உயர்ந்தது. இதன் காரணமாக அதை மக்கள் வெள்ளைத் தங்கம் என்று கூறலாயினர்

 

 

இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டுமென்று பல நூற்றாண்டுகளாகப் பலரும் ஐரோப்பாவில் முயற்சி செய்து வந்த நிலையில் தான் இதை பாட்கர் உருவாக்கிக் காட்டினார். அவருடன் விஞ்ஞானியான எஹ்ரென்ப்ரைடு வால்தெர் (Ehrenfried Walther Von Tschirnhaus) இணைந்து முதலில் சிவப்பான கனமான ஒரு பொருளை உருவாக்கிக் காட்டினார். பின்னர் சீனாவில் இருப்பது போலவே பீங்கானை உருவாக்கிக் காட்டவே மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தங்கத்திற்கு அடுத்தபடியான ஒரு பொருளை உருவாக்கியதால் பாட்கர்  உயிர் பிழைத்தார்.

 

 

ஹென்னிக் ப்ராண்ட் (Hennig Brand)

 

    ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்னிக் ப்ராண்ட் தங்கத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் கண்டு பிடித்ததோ பாஸ்பரஸை. 1630 ஆண்டு பிறந்த ப்ராண்ட் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஜெர்மனி ராணுவத்தில் சிறிது காலம் பணி புரிந்த அவர் ஒரு பணக்காரப் பெண்மனியை மணந்தார். இரஸவாதக் கலையில் ஈடுபட்ட அவர் முதலில் கண்ணாடி தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார்.

 

 

      முதல் மனைவி இறக்கவே, இன்னொரு பணக்காரப் பெண்மணியை மணந்து அவரது மகனை லாபரட்டரியில் தனக்கு உதவி புரிய அழைத்தார். அவரது ஒரே முக்கியக் கொள்கை நீர் தான் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதே. நீரில் பல அபூர்வமான மர்மமான குணாதிசயங்கள் அடங்கி இருப்பதாக அவர் கருதினார். ஆகவே அந்த நீரை மனிதன் அருந்தி அது மனித உடலில் சேரும் போது இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக ஆகும் என்று அவர் நம்பினார்.

ஆகவே தனது ஆராய்ச்சியில் அவர் சுமார் 1500 காலன் (5600 லிட்டர்) சிறுநீரைச் சேகரித்தார்.

 

 

எப்படி இவ்வளவு பெரிய அளவில் அதைச் சேகரித்தார் என்பது இன்று வரை ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது!

பீரை அதிகமாகக் குடிக்கும் நபர்களாகப் பார்த்து அவர்களின் சிறு நீரை அவர் சேகரித்தார் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பீர் குடித்தவர்களின் சிறு நீர் சற்று பொன்னிறத்தில் இருக்கும் என்ற காரணமும் கூறப்படுகிறது.

 

 

ஆனால் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

 

ஒன்று, சோதனைகளில் அதைக் காய்ச்சி இருக்க வேண்டும் அல்லது சூரிய வெப்பத்தில் அதை ஆவியாக்கி இருக்க வேண்டும். இப்படி சிறுநீரைச் சுத்தப்படுத்தியபோது மிஞ்சி

இருந்தது வெள்ளை நிறப் பொடி. அதை காற்றில் காண்பித்த போது அது பற்றி எரிந்தது. தான் தங்கமாக ஆக்கும் சிந்தாமணிக் கல்லைக் கண்டுபிடித்து விட்டதாகவே ப்ராண்ட்  எண்ணினார்.

 

 

அதற்கு வெளிச்சம் தரும் பொருள் என்ற அர்த்தத்தில் பாஸ்பரஸ் என்று பெயரிட்டார்.

இன்றும் கூட தீப்பெட்டியில் திக்குச்சியை எடுத்து உரசி தீயை உருவாக்கும் அனைவரும் அதற்குக் காரணகர்த்தர் அவரே என்று அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்லவேளையாக பாஸ்பரஸை உருவாக்க அவர் பாணியில் இன்று சிறுநீர் தேவைப்படாமல் மாற்றுப் பொருள்களை வைத்து பாஸ்பரஸை உருவாக்குகிறோம்.

இப்படி இரஸவாதக் கலையில் ஈடுபட்டோரால் பல நல்ல புதிய கண்டுபிடிப்புகளும் ஏற்பட்டன.

 

ஈயத்தை அல்லது எந்த ஒரு உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்பதை உலகில் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் ஆராய்ந்து வருகின்றனர்.

இரஸவாதக் கலைக்கென நூற்றுக் கணக்கில் இணைய தளங்கள் உண்டு.

 

 

     குறிப்பிடத் தகுந்த ஒரு ஆராய்ச்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் மக்லீன் (Adam Mclean) திகழ்கிறார்.தங்கமாக மாற்றும் கலை சம்பந்தமான நூல்களின் 46 தொகுதிகளை வெளியிட்டிருப்பது இவரது தனிச் சிறப்பு. சுமார் 1083 அரிய நூல்களை – மிகப் பழங்காலத்திலிருந்து இன்று வரை உள்ள நூல்களை – இவர் சேர்த்து வைத்துள்ளார். இவர் தரும் விவரங்கள் மிக சுவாரசியமானவை. http://www.Alchemywebsite.com என்றே தனது இணையதளத்திற்கு இவர் பெயர் சூட்டியுள்ளார்.

 

    தங்கமான விஷயம் பற்றிப் பேச காலமும் போதாது; எழுதப் பக்கங்களும் போதாது. இந்தக் கட்டுரைத் தொடரில்  இரஸவாதக் கலை பற்றிய முக்கிய  குறிப்புகள் சிலவற்றைப் பார்த்த மகிழ்ச்சியுடன் இதில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் பல நூல்களைப் படித்து ஆய்வைத் தொடரலாம்.

  இத்துடன் இந்த அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 28-3-2014 மற்றும் 4-4-2014 இதழ்களில் வெளியான- அத்தியாயங்கள் 161,162 ஆகியவற்றில் மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும் என்ற கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களின் தங்க மோகம் மற்றும் தங்க வேட்டை பற்றிய சுவாரசிய தகவல்களை மீண்டும் படித்து மகிழலாம்

          தங்க ரகசியம் தொடர் நிறைவடைகிறது.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

பிரபல விஞ்ஞானியான ஆப்ரஹாம் ஃப்ளெக்ஸனர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வன்ஸ்ட் ஸ்டடியின் டைரக்டராக இருந்தார். அவரைப் பற்றியும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பற்றியும் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இது:

ஒரு முறை ஐன்ஸ்டீன் கையில் ஒரு தடியுடன் இன்ஸ்டிடியூட்டிற்கு வந்தார். முந்தைய நாள் இரவில் அவர் காலில் முன் பகுதியில் காயம் பட்டிருந்தது.

“இது போல ஐந்தாறு முறை ஆகி விட்டது. அறையில் இருட்டில் நடந்ததால் வந்த வினை இது என்று ஆதங்கத்துடன் ஐன்ஸ்டீன் ஃப்ளெக்ஸனரிடம் கூறினார்.

“இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் காலில் எலும்பு எதுவும் முறியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள எக்ஸ்ரே வேறு எடுக்க வேண்டியதாய் இருக்கிறது என்று அங்கலாய்த்தார் ஐன்ஸ்டீன்.

 

 

ஃப்ளெக்ஸனர் ஐன்ஸ்டீனை நோக்கி, “ ஆமாம், அறையில் விளக்கைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே என்று சாதாரணமாகக் கேட்டார்.

 

“அட, இது எனக்குத் தோன்றவில்லையே! என்று வியப்புடன் கூவினார் ஐன்ஸ்டீன்!

****

 

How Gods are Made? (Post No.4232)

Written by London Swaminathan

 

Date: 21 September 2017

 

Time uploaded in London- 21-10

 

Post No. 4232

 

Pictures are taken from various sources; thanks.

 

Greek philosopher Aristotle said, “men create the Gods after their own image, not only with regard to their form, but also with regard to their manner of life.

In Genesis 1-27 (Old Testament, Bible) we read,

Then God said, let us make man in our image, according to our likeness.

God created man in His own image, in the image of God he created him; male and female he created them.

 

In Hinduism, it is said

In the Vedic period man feared Gods

In the Brahmana period, man subdued Gods

In the Upansihad period he identified himself with God.

 

In the Tamil Veda Tirukkural, poet Tiruvalluvar says,

“A man who leads an ideal life in this world

will be ranked amongst the Gods in the heaven

–Tirukkural 50

 

Rama and Krishna fall under this category.

Dr S M Diaz comments on this Kural

Seneca on Mercy book 1 recognises virtue itself as  the most fitting reward for the virtuous but still asks, Have I of all mortals — been chosen to serve on earth as the vicar of the Gods? Similarly, in Book-1 on Providence, Seneca says, Between good men and the Gods there exists a friendship brought about by virtue. Seneca therefore goes half the Valluvar way.

 

Adi Shankara says, “Though all difference has ceased to exist, I am thine, O Lord, not Thou mine. The billow is of the sea, not the sea of the billow.”

There is interesting story about man becoming God:

The fortress of Sanoda in Bundelkhand was built by Raja Chatar Singh about 265 years ago. His son Raj Singh, soon after the fortress was completed, was killed in an attack upon a town near Chitrakot, a famous place of pilgrimage. He had a temple and tomb erected over his remains. Sometimes after someone suffering from a sickness went to the tomb one night and said that if Raj Singh would cure his illness  he would make offerings to him at his tomb for the rest of his life. After that he never had another attack and was very punctual in his offerings. Others followed his example, until now he is recognised by the people of that part of India as God.

 

We have such examples throughout India.

 

It is not restricted to one religion alone. In Catholic Christianity hundreds of saints are recognised as miracle performers. People visit their shrines and expect miraculous cures for their problems of diseases. In Sufism, we see Muslim saints who are worshipped. In Hinduism, also all the saints are worshipped and their birth days are celebrated with Puja and offerings.

 

Hero Stones in Tamil Nadu

In Tamil Nadu and adjacent places Hero stones are placed in the road junctions and they are worshipped. The hero stones were erected for those who sacrificed their lies for others, particularly killing a tiger, or saving a village from an attack.

In Karnataka and Rajasthan, Pattinis, women who sacrificed their lives were worshipped. Thus India has 1000s of God like men or people who are elevated to divine status.

–Subham–

 

 

விபூதியின் மகிமை பற்றி நீதி வெண்பா! (Post No.4231)

Written by London Swaminathan

 

Date: 21 September 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4231

 

Pictures are taken from various sources; thanks.

 

நீதி வெண்பாவை யார் எழுதினார் என்பது எவருக்கும் தெரியாது. ஆயினும் இதில் அருமையான பாட்டுகள் உள. பல கட்டுரைகளில் இவற்றைக் கொடுத்து வருகிறேன். திரு நீறு பற்றி ஒரு நல்ல பாட்டு உள்ளது. இதை சம்பந்தர் தேவாரம், திருமூலரின் திரு மந்திரத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்.

 

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல் — ஆரமிர்த

சஞ்சீ வியைவிடுத்தே சாகா திருப்பதற்கு

நஞ்சே புசித்ததுபோ நாடு

 

பொருள்:

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்து – சிறப்பான வெண்ணீற்றினால் நெற்றிக்குத் திருக்குறி இடுதலை விட்டுவிட்டு

பேரான முத்தி பெறவிரும்பல்- மேன்மையாகிய வீடு பேற்றை அடைய ஆசைப்படுதல்

ஆரமிர்தசஞ்சீ வியைவிடுத்து – அருமையான அமிர்தம் என்னும் சஞ்சீவி மூலிகை போன்றதை விட்டுவிட்டு,

சாகா திருப்பதற்கு நஞ்சே புசித்ததுபோக- சாகாமல் இருப்பதற்கு நஞ்சையே உண்டது போலாகும்

நாடு – நீ ஆராய்ந்து பார்

 

கருத்து- கடவுளை வழிபட்டு வீடு பேறடைவதற்குச் சைவமும் திருநீறுமே தக்கனவாம்.

 

திரிபுண்டரம்=உயிர்களுக்குற்ற மூன்று மலங்களும் எரிக்கப்பட்டமைக்கு அறிகுறியாக நெற்றியில் மூன்று கோடாக இடப்படும் நீற்றுக்குறி.

திருமந்திரம்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

–திருமந்திரம் 1666

 

 

பொருள்:

எலும்பு மாலையை அணிந்த  சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒளியானது கெடாமல் பூசி மகிழ்வீரானால் முன் வினைகளும் உங்களிடம் தங்கா.

 

சிவகதியும் உங்களை வந்தடையும்.  ஆனந்த மான திருவடியை அடையலாம்.

கங்காளன்= சிவன்; எலும்பு மாலையை அணிந்தவன்.

 

சம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை திரு ஆலவாய்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்  திருஆலவாயான் திருநீறே.

 

முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது  நீறு

சித்தி தருவது  நீறு திரு ஆலவாயான் திருநீறே

 

 

இந்தப் பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. இரண்டு மட்டும் மேலே உளது. எளிய தமிழில் இருப்பதால் பொருள் தேவை இல்லை.

 

-சுபம்–

 

அழகியின் மேனி: சம்ஸ்கிருத புதிர்க் கவிதைகள் (Post No.4230)

Written by S.NAGARAJAN

 

Date: 21 September 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4230

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! அழகியின் மேனியும், உதடுகள் அழுத்தும் போது கத்துவதும்!

 

ச.நாகராஜன்

 

 

அத்ரோத்யானே மயா த்ருஷ்டா வல்லரி பஞ்சபல்லவா I

பல்லவே பல்லவே தாம்ரக் யஸ்யாம் குஸும மஞ்சரி II

 

சம்ஸ்கிருததில் இதை சமானரூப புதிர் என்கின்றனர்.

இதன் பொருள்:

இந்த வனத்தில் (அழகியின் மேனி)

நான் ஒரு கொடியை (கை) ஐந்து கிளைகளுடன் (விரல்கள்) பார்த்தேன். ஒவ்வொரு கிளையிலும் சிவந்த அலங்காரப் பூவைப் பார்த்தேன் (சிவப்பு நகங்கள்)

தண்டியின் காவ்யாதர்சத்தில் இடம் பெறும் கவிதை இது.

இதை ஆங்கிலத்தில் பார்ப்போம்:
In this garden (female body) I have seen a creeper (arm) having five twigs (fingers), and in each of these twigs there are ruddy blossoms (red nails)

 

அழகியின் மேனியை வர்ணிக்க என்ன ஒரு அற்புதமான புதிர்க் கவிதை!

இன்னொரு அழகிய புதிர்க் கவிதை இது:

 

அந்த: சமேத்யாபி வஹி: ப்ரயாதி

        ஸ்ப்ருஷ்டா வித்யத்தே வஹூகனாதி I

தத்தவாதரம் ரோதிதி சுஷ்கமேவ

          சைவம் விலாஸைஸ்தபசாப்யலம்பா II

 

 

இதன் பொருள்:

உள்ளே இருவரும் இணைந்தாலும் அவள் வெளியே வருகிறாள்.

 

தொட்டால் தழுவுகிறாள். உதடுகளை அழுத்தும் போது கத்துவது போல் பாசாங்கு செய்கிறாள்.  இப்படி தனது விளையாட்டு லீலைகளால் தவத்தினால் கூட அடைய முடியாதபடி அவள் இருக்கிறாள்!

இந்தப் புதிருக்கு விடை என்ன என்று திகைக்கிறோம்.

விடை : புல்லாங்குழல்

 

இதன் ஆங்கில மொழியாக்கத்தைப் பார்ப்போம்

 

Though come together inside, she comes out, when touched, she gives embraces. When the lips are pressed she pretends, to cry out. Thus she is difficult to get even by penance on account of her palyful activities;

 

Answer : Flute

 

Translation by A.A.Ramanaathan (A.A.R.)

 

இந்த்ரவஜ்ர சந்தத்தில் அமைந்துள்ள இந்தக் கவிதை வேணிதத்தரின் பத்யவேணியில் காணப்படும் கவிதை.

சிருங்கார ரஸத்தில் சொக்கிப் போய் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கடையிசியில் புல்லாங்குழல் என்று சொல்லும் போது மனம் விட்டுச் சிரித்துக் குதூகலிக்கிறோம்.

 

ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகளில் மேலே ரசித்தவை இரண்டு!

***