புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

HELL in Rig Veda and Tamil Veda!(Post No.4405)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 20-33

 

 

Post No. 4405

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Hell and Heaven figure prominently in Hindu mythology. We read about in the oldest book in the world Rig Veda! There is not a single religious scripture without a reference to the hell. References to Hell are found in the Sangam Tamil literature and post Sangam Tamil book Tirukkural, the Tamil Veda.

 

Though later Hindu scriptures refer to various hells, Rig Veda only one hell is mentioned. It is a dark place; but no mention of torture or suffering is there. We read, “knowing he beholds all creatures; he hurls the hated and the irreligious into abyss” (RV 9-73)

 

In Manu Smrti, the Hindu Law Book, 21 hells are enumerated. Some of the name of the hells are: Darkness, Frightful, Burning, Place of Spikes, Frying Pan, Thorny Tree, Sword Leaved Forest and Place of Iron Fetters.

A liar would go to Raurava (dreadful) hell. He who kills a cow would go to the Rodha hell (hell of obstruction).

A horse stealer falls into the red hot iron hell. The wicked person who eats food before offering it to gods or ancestors or guests falls into where, instead of food, saliva is given to him. ( My comments: If people followed this rule and shared their food there woudn’t be any poverty, any beggar or communism in the world!).

TREE CUTTING – A SIN!

He who cuts down trees goes to the Hell of Sword Leaved Trees. So much environmental awareness was there during Manu’s days! Manu has listed the hells to fit each crime perfectly. He is a great law maker.

 

I have already the Bhavishya Purana story” about tortures in the heaven:–

“Yama was exceedingly pleased with a girl named Vijaya, a Brahmin’s daughter. When she first saw him she was greatly alarmed, alike at his appearance and on learning who he was. At length he allayed her fears and he consented to marry him.

 

On her arrival at Yama’s city, her husband cautioned her and assured her all would be well if she never visited the southern portion of kingdom. After a while curiosity overpowered her, and thinking that a rival wife may live in the Southern region and that is why Yama asked her never to visit that area, she visited the forbidden region.

 

There she saw the torments of the wicked, and alas! amongst these she recognised her own mother. Greatly distressed she appealed to Yama to release her mother but Yama told her that was impossible unless someone living on earth perform a certain sacrifice, and transfer the act of the merit of the act to this poor woman then suffering. After some difficulty, a woman was found willing to perform the sacrifice, and Vijaya obtained her release.”

 

Siva Purana gives a list of 28 types of hell. Each one has five levels!

 

A Scene from Heaven

 

HELL in Tamil Literature

Tamils have pure Tamil words for the hell, not Tamilized Sanskrit words. This shows that the belief was very old and independent of any Puranic influence. Alaru and Nirayam are found in Tirukkural (Tamil Veda) and Pura Nanuru (Sangam Tamil Book).

NIRAYAM (hell) – Aka Nanuru-67, Pura Nanuru -5

There are more references to Heaven in Tamil. They looked more at the positive side of the life.

From the Tamil Veda Tirukkural

ALARU (hell):- Kural 255, 835 and 919

“Abstinence from meat-eating contributes to this maintenance of life. Therefore if  a man has once committed the sin of eating meat the HELL which swallowed him will not open its mouth again to release him _ Kural 255

In one brief birth a fool can gain

Enough HELL for seven births pain- Kural 835

The delicate shoulders of harlots with fine jewels are a HELL into which are plunged the ignorant vile- 919

 

Jeevaka Chintamani, one of the Five Tamil Epics, also has reference to hell in several places (E.g.1235)

 

Tamil and Sanskrit inscriptions curse those who defile or harm the inscriptions or the things mentioned in it to go to hell.

 

Scriptures like Bhagavad Gita have lot of references and one of them is as follows:

The gateway of this HELL leading to the ruin of the soul is three fold, lust, anger and greed Therefore these three, one should abandon. The man who is released from these, the three gates to darkness, Arjuna, does what is good for his soul and then reaches the highest gate.

It is very interesting to see the belief of sinners going to hell is found from the Rig Veda to latest poems in Tamil.

 

(Mr Rajendra Gupta has commented that NIRAYA for hell is a Sanskrit word. Thanks)

–Subham–

 

 

பெண் சிரித்தாள்! படை எடுத்தான் பாண்டியன்!! (Post No.4404)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 17-43

 

 

Post No. 4404

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!

மயன் கட்டிய மாளிகையில்,  சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை  நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.

 

 

இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன்,  அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி,  கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.

 

அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.

 

அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ  கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.

 

அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.

இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன்  , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.

அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.

–Subham—

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403)

Written by S.NAGARAJAN

 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-00 am

 

 

Post No. 4403

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

 

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.

 

 

எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.

 

 

அதன் தொகுப்பு இதோ:-

 

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?

 

அங்காரபூர்வே கமனே ச லாப:

    சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

   ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II

 

 

உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-

செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.

திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.

புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.

 

அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I

ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II

 

1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I

புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II

 

  • சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I

தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II

 

  • விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I

விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II

 

  • நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I

வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II

 

  • யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I

பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II

 

  • பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I

ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II

 

  • துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது  பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.

கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்

***

 

 

 

 

 

 

 

KILL ANYONE, NO SIN IF YOU ARE A BRAHMIN: MANU AND BUDDHA SAY! (Post No.4402)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-09

 

 

Post No. 4402

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

KILL ANYONE, NO SIN IF YOU ARE A BRAHMIN: MANU AND BUDDHA SAY! (Post No.4402)

Manu said that if anyone can recite the Rig Veda, even if he destroys the three worlds, he incurs no sin!

Buddha said that even if a Brahmin killed a king, his father and mother, he incurs no sin! It may look strange. But one must read between the lines.

 

What is the message they want to give us?

A true Brahmin who has mastered Rig veda can’t think of anything like hurting anyone; leave alone destroying the three worlds.

A true Brahmin, according to Buddha, is equal to a saint, i.e. one with saintly virtues. So, he can’t think of hurting anyone.

 

Tamil poet Tiru Valluvar also said that “A Brahmin is kind to all creatures” (Kural 30)

 

MANU ON RV

“A Brahmin by retaining Rig Veda (RV) in his memory incurs no guilt, though he should destroy the three worlds”– 11-261

Manu on the Veda

“The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Veda are impossible to master and impossible to measure; this is an established fact”–Manu 12-94

The same verse is translated by Monier Williams as follows:-

“The Veda is of patriarchs and men

And even of gods, a very eye eternal

Giving unerring light; it is beyond

All finite faculties, nor can be proved

By force of human argument—this is

A positive conclusion”–  Manu 12-94

 

 

Buddha Says:–

 

“And a saint, a Brahmin, is pure from past sins; even if he had killed his father and mother, had murdered two noble kings, and had ravaged a whole kingdom and its people”

–Buddha in Dhammapada, Sloka 294

 

Because he has put away evil, he is called a Brahmin; because he lives in peace, he is called a ‘samana’; because he leaves all sins behind, he is called a ‘Pabbajita’, a pilgrim.

–Buddha in Dhammapada, Sloka 388

Ons should never hurt a Brahmin; and a Brahmin should never return evil for evil

–Buddha in Dhammapada, Sloka 389

 

It is important that we should never quote anything out of context; more important is that we should understand the meaning behind the words.

Foreigners who quoted Vedic hymns always used them out of context and took literary meaning. So we must be careful when we read anything written by foreign and non-Hindu hands.

–Subham, Subham-

ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன! (Post No.4401)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-29

 

 

Post No. 4401

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக  பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய  பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.

 

ரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்கை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.

இதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.

 

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர்  3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

சுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.

 

இது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.

இது பற்றி உரையாற்றிய  டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-

 

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும்  காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

 

மேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.

 

ஆப்ரி துதிகள்

 

ஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.

சாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி

ரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

ஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.

 

புதியது, பழையது பற்றி  துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

 

7-18-1

த்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்

 

7-22-9

யே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:

7-29-1

உதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்

7-53-1

தே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:

7-76-4

த இத் தேவானாம் சதமாத  ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:

7-91-4

புரா தேவா அனவத்யாச ஆசன்

இவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.

இலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

 

சொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.

 

மாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை! இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.

 

யாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

அதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.

 

இன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.

தான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

சமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்

புரூருவஸ் — ஊர்வசி உரையாடல்

யமா- யமீ உரையாடல்

அகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்

முதலியன.

எனது கருத்து:

 

இவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை புதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.

 

ஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.

 

இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர்,  அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.

 

சுபம்–

வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது! (Post No.4400)

Written by S.NAGARAJAN

 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-27 am

 

 

Post No. 4400

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

தமிழ் இன்பம்

25-10-2017 அன்று வெளியான கட்டுரை எண் 4333 – ‘பயறு மிளகான கதை’- கொங்கு மண்டலப் பெருமையைக் கூறும் ஒன்று.

 

வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலம் பல விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட தங்க மண்டலம்.

அந்த வியத்தகு சம்பவங்களில் வெண்மைப் பெண்மணி சம்பவமும் ஒன்று.

அதைப் போற்றி கொங்கு மண்டலப் பெருமைகளில் ஒன்றாக அதையும் தன் கொங்குமண்டல சதகத்தில் சேர்த்துப் பாடியுள்ளார் கார்மேகக் கவிஞர்.

அந்தப் பாடல் வருமாறு:

 

காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து

மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல் வேப்பமலர்த்

தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்துபெற்று

மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே

(கொங்கு மண்டல சதகம் – பாடல் எண் 75)

 

பாடலின் பொருள் :- சேடர் குலத் தலைவனின் மகள், நட்ட கழுவிற் சத்தயம் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகம் அணிந்த, இளமையனான காங்கேயனைப் பெற்று பெரும் புகழ் பெற்றாள். அவள் இருந்ததும் கொங்கு மண்டலத்திலேயே என்பதாம்.

 

இந்தப் பாடல் சுட்டிக் காட்டும் வரலாறு சுவையான ஒன்று.

காங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில் சேட குலத் தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண் குழந்தை பிறவியிலேயே வெண்மையாக இருந்தது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனாள்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திலிருந்து வந்திருந்த பொருளந்தை குலத்து வாலிபன் ஒருவனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.

விவாக கால ஒப்பந்தப்படி  காடையூரில் காணி முதலிய உரிமைகளை அந்த வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.

 

சபை கூடியது. அந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படி, நட்ட கழுவில் அந்த வெண்மைப் பெண்மனி  கையறைந்து சத்தியம் செய்தாள். தன் உரிமைகளை அடைந்தாள்.

அந்தப் பெண்மணியின் குழந்தைக்குக் கல்லி கற்பிப்பதற்காக, சில தேர்ந்த தமிழ்ப் புலவர்களைக் கூட்டி அந்தப் பெண்மணி ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாள்.

 

அந்தப் புலவர்களிடம் தமிழ் கற்ற சிறுவன் பாண்டிய வீரனின் படையில் சேர்ந்தான்.

போருக்குச் சென்ற அவன், பாண்டியன் படைக்கு வெற்றி பெற்றுத் தந்தான்.

 

அதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவனுக்குக் காங்கேய்ன் என்ற பட்டத்தைத் தந்ததோடு அரச சின்னங்களான மாலை, கொடி ஆகியவற்றைக் கொடுத்துக் கௌரவித்தான்.

இதுமட்டுமல்லாமல் பின்பு இம்முடிக்காங்கேயன் – மன்றாடி என்ற பட்டத்தை இவன் சந்ததியினர் பெற்றனர்.

இப்படிப்பட்ட வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது கொங்கு மண்டலத்தில் தான் என்று வியந்து பாடுகிறார் கவிஞர்.

தமிழரின் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றிற்கும் கொங்கு மண்டலம் இது போன்ற ஏராளமான சம்பவங்களைச் சான்றாகத் தருகிறது.

***

 

 

 

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)


Written by London Swaminathan
 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4399

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)

 

குலசேகர ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் தனித்து நிற்கிறார். அவர் ஒரு விநோதமான பேர்வழிதான்; யாரும் விடுக்காத கோரிக்கைகளை விடுக்கிறார். ஒரு லட்சம் பவுன் தா, தங்கக் கட்டிகளாக மழை பொழி, உலக மஹா அழகிகள் எனக்கு சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆயினும் பெருமாள்– திருவேங்கடத்தான் ஏற்க முடியாத கோரிக்கைகளாக முன் வைக்கிறார். யாருக்கும் தோன்றாத அற்புத எண்ணங்கள் அவருக்குத் தோன்றுகின்றன. ஏன்?

 

 

திருப்பதி மலை மீது– திரு மலையில் – குடிகொண்டிருக்கும் திரு வேங்கடத்தானை — திருப்பதி பெருமாளை- வேங்கடமலையானை- வெங்கடாசலபதியை (வேங்கடம்+அசலம்+பதி)– தரிசிப்பது எவ்வளவு கடினமென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இலவச தரிசனத்துக்கு நின்றால் 14 மணி நேரம் க்யூ வரிசை; காசு கொடுத்து ஸ்பெஷல் வரிசையில் நின்றாலோ மந்திரி வருகிறார் என்று திடீர் தடை; இதற்கெல்லாம் மேலாக அற்புதமாக அவர் முன் விரைவில் போய் நின்று விட்டாலோ நம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் கோவில் சேவகர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் இதே நிலைதான் போலும்! ஏனெனில் விஜய நகரப் பேரரசன் கிருஷ்ணதேவ மஹா ராயர்

 

மட்டும் திருப்பதிக்கு 30 தடவைக்கு மேல் வந்துள்ளதாக வரலாறு பேசுகிறது; இது போல எத்தனையோ அரசர்கள் அந்தக் காலத்திலும் வந்திருப்பர். ஆகையால் குல சேகர ஆழழ்வார் ஒரு புது வழி– குறுக்கு வழி– கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அவரே சேர நாட்டு அரசர்.

 

அவருக்கே இந்த கதி என்றால் நமக்கெல்லாம்?

 

அவர் 10 அம்ச திட்டத்தை வெங்கடாசலபதியிடம் சமர்ப்பிக்கிறார்.

1.என்னை மீனாகப் பிறக்கச் செய்

2.என்னை நாரையாக ஆக்கிவிடு

3.என்னை காட்டாறு (wild stream) ஆக்கிவிடு

4.ஒரு மலைச் சிகரமாகவாவது ஆக்கிவிடு

5.பூவாக மாற்றிவிடு

6.புதாராக வளர்த்து விடு

7.எச்சில் (வெற்றிலைச் சக்கை) துப்பும் பொன்வட்டில் பிடிக்கும் சேவகனாய் மாற்று

8.பாதையாக மாற்று

  1. அல்லது படியாக மாற்று

10.ஐயா, இதெல்லாம் முடியாதா? ஏதாவது ஒரு

பொருளாக ஆக்கப்பா!

(எங்கே என்றால்?  திருப்பதி மலையானைத் தரிசிக்கச் செல்லும் ஏழு மலைப் பாதையில்)

 

இதையேல்லாம் விட்டு விட்டுவிட்டு எல்லா   அரம்பையர்களையும் (அப்ஸரஸ் பேரழகிகள்)  —  அதிலும் பெரிய பேரழகி ஊர்வசி– அவளையே அனுப்பி – அவள் என்னை வா, வா என்று அழைத்தாலும் எனக்கு வேண்டாம்; இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் (   அரங்கமா நகருள்ளானே) திருவேங்கடத்தானே—என்கிறார்.

என்ன மன உறுதி! திட சித்தம்!!

ஏன் இப்படிச் செய்தார்?

பக்தர்களின் பாத தூளிகளுக்கு அவ்வளவு மதிப்பு! இறைவனை விட பக்தர்களுக்கு மதிப்பு அதிகம்; பக்தர்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளும் கூடத் தலையிடமாட்டார். பக்தனிடமே சென்று மன்னிப்புக் கேள் என்று ஆண்டவனே சொல்லி விடுவான்; இதை அறிந்த குல சேகரர் பக்தர்களின் பாதத் தூசு படட்டும் அல்லது அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஏழுமலை வாசா என்றும் போடும் கோஷமாவது கேட்டுக்கொண்டே இருக்கட்டும் என்று இப்படி வேண்டுகிறார்.

 

இதோ அவரது அற்புத வரிகள் அடங்கிய பாசுரம்; இதை மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் பாடும் மோஹன ராகத்தில் பாடினால் , பாடிக்கேட்டால், புல்லரிக்கும்; மெய்சிலிர்க்கும்; ஆனந்தக் கண்ணீர்  துளிர்க்கும்.

 

திருவேங்கடமுடையான்

 

 

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*

கோனேரி வாழும்  குருகாய்ப் பிறப்பேனே.                            1

 

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.                          2

 

பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*

துன்னிட்டு புகலரிய வைகுந்த  நீள்வாசல்*

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*

பொன்வட்டில்  பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே.                  3

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே.                       4

 

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*

இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*

எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*

தம்பகமாய் நிற்கும்  தவமுடையே னாவேனே.                        5

 

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*

அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*

அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே.                 6

 

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே.                        7

 

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*

வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.                      8

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*

நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.                          9

 

உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*

செம்பவள வாயான்  திருவேங் கடமென்னும்*

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே.                  10

 

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே.                     11

 

வாழ்க குலசேகர ஆழ்வார்! வளர்க அவர்தம் அடியார்கள் !!

–Subham, Subham–

Bear Hunting Anecdotes (Post No.4398)

Compiled by London Swaminathan 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London-7-50 am

 

 

Post No. 4398

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Fresh Foot Prints!

A Californian went out to follow up a grizzly bear and was gone three days. Then he turned up without his game.

“Lost the trail, Bill, I suppose”, said one of his cronies.

“Naw, I kept on the trail alright “

“Then ,what is the matter?”

“Wall, the footprints was getting too fresh, so I quit.”

 

Xxx

 

Narrow Escape for Bears!

An old hunter was holding his usual court before a group of summer visitors in the small town.

“How many bears did you kill?” ,asked one of them.

“Oh, about a hundred “

“Say, you must have had plenty narrow escapes”.

“Young man”, replied the old timer ,”If there were any narrow escapes,it was the bears had them”

 

Xxx

 

Can’t find a Single Animal!

An eager sport man accosted one of the natives in the small Maine town where he was spending his vacation

 

“Is there much good hunting around here?”, he asked eagerly.

The native glanced around him for a minute and said,

“Well,sure,there is plenty hunting, but damned little finding”

 

Xxx

Eagle Hunting!

A cowboy from one of the many dude ranches in the Rockies was spending his day off doing a little hunting. Sighting an eagle, he took aim and brought the bird down. He scrambled down the crag and retrieved his game.

As he slung the bird over his shoulder he saw one of the customers from the dude ranch approaching him .

“I say”, said the Easterner in a patronising sort of tone,

“I was watching you. You should have saved that shot, Why the fall alone would have killed the eagle”.

Xxxx SUBHAM xxxx