இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

Written by London Swaminathan 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-37

 

 

Post No. 4387

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.

 

ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர்  பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.

அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–

 

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

பதவுரை:

 

உள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;

உணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய    அருளை உடையவன்;

உள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;

எள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;

இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;

எறும்பு= உள்ளத்துக்கு உவமை.

 

மாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.

–நீத்தல் விண்ணப்பம்

 

சுபம், சுபம்–

 

TWO WIVES OF BRAHMA FOUGHT AND BRAHMA LOST! (Post No.4386)

Written by London Swaminathan 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 8-08 am

 

 

Post No. 4386

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Brahma, in addition to his learned wife Sarasvati, had a second wife by name Gayatri. An interesting story is told in the Skanda Purana of their rivalry between the two women and subsequent reconciliation.

 

Siva told this story to his wife Parvati

“Listen, O Devi! I will tell you how Sarasvati forsook Brahma  and he in consequence espoused Gayatri. The Vedas have declared the great advantages that are derived from sacrifice, by which the Gods are delighted and bestow rain upon the earth.

For this purpose Brahma, Sarasvati, the gods and the holy sages repaired to Pushkara; but when all preparations were made, with all our rites and ceremonies for performing the sacrifices, Sarasvati detained by some household affairs was  not in attendance. A priest went to call her, but she replied, “I have not yet completed my dress, nor arranged several affairs. Lakshmi, Gowri, Gangadevi, Indrani and the wives of other gods and holy sages have not yet arrived, how therefore can I enter the assembly alone?”

 

The priest returned and addressed Brahma,

“Sarasvati is busy with other things and so she would not come. A man can’t do any religious rites without his other half (wife). Immediately Brahma got angry and commanded Indra, “Hurry up, get me another wife wherever you can find one”  Indra ran out and saw a beautiful milkmaid with a smiling face. He brought her to the assembly of Brahma. With the consent of the gods and sages in the assembly he married the milkmaid named Gayatri.

At this time Sarasvati accompanied by the wives of Rudra, Vishnu and other gods came to the place of the sacrifice. Seeing the milkmaid in her seat and the priests performing sacrifice, she cried out,

“O Brahma! have you decided to leave me who is your lawful wife? Have you no sense of shame and influenced by love, you did a shameful act. You are called the great father of gods and yet you publicly acted in a manner as to excite the derision of the three worlds”.

 

Brahma replied, “O my darling! The priests informed me that the time for the sacrifice was fast passing by and I cannot perform the sacrifice without my wife. Indra brought Gayatri and Rudra and Vishnu gave her in marriage to me”.

 

On hearing these words Sarasvati got and angry and cursed,

“By the powers which I have obtained by the performance of sacrifice, may Brahma never be worshipped in a temple or sacred place except one day in a year. And Indra!  since you have brought this woman you shall be bound in chains and confined in a strange country. Turning to Vishnu she said, since you gave that milkmaid in marriage you shall be born amongst men and wander for a long time with the cattle. To the priests she said you shall perform the sacrifices with the sole aim of receiving gifts.”

 

Having pronounced these curses, Sarasvati left the assembly; but at Brahma’s request, Vishnu and Lakshmi followed Sarasvati  and begged her to return to the assembly. In the meantime, Gayatri modified the curses and promised all kinds of benefits and blessings for the worshippers of Brahma

When Sarasvati returned to the assembly, Brahma asked Sarasvati  what she wished him to do with Gayatri. Before she replied, Gayatri threw herself at the feet of Sarasvati. She raised her up and said,

“A wife must obey the orders of her husband; for that wife who reproaches her husband and who is complaining and quarrelsome shall most assuredly, when she dies, go to hell. Therefore, let us both be attached to Brahma”.

Picture posted by Lalgudi Veda

 

‘So let it be’, said Gayatri

“I will obey your orders; I esteem you friendship, precious as my life. I am like your daughter. Please protect me.”

The reconciliation was complete. But Sarasvati’s curse was so strong even now Brahma is not worshipped in temples as a main deity.

 

(There are a few other reasons given for the non- worship of Brahma  in South India.)

 

My Comments:

What are the messages this story gives us:

1.A Hindu cannot do any ritual without his wife

  1. A wife though angry always obeys her husband

3.No one can escape from the curses or the evil acts they do.

4.Brahma lost his pride and prominence because of marrying second time when his wife was alive.

5.When there is obedience and humility, two women can live amicably

  1. Sacrifices don’t wait for anyone; they must be done on time. Even gods follow the rules laid out in the Vedas.

Brahma from Cleveland Museum

7.Skandam (Kanda Purana) is the largest of the 18 major Puranas (mythology) and it has lot of interesting stories like this.

8.Gayatri and Sarasvati, Savitri and Sandhya are all one and the same goddess with different aspects. They are created by the sages to give some messages.

9.Symbolism must be understood and explained at the end of each story; otherwise it would confuse children and illiterates.

 

–Subham–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

Written by S.NAGARAJAN

 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

 

Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை  எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாகசெட்டில் ஆகி விட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத்தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம் செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர்அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால்செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.

                                –தொடரும்

****

எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே! (Post No.4384)

Written by London Swaminathan 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-56

 

 

Post No. 4384

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”

ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?

 

மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில் இருக்கிறதா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

கந்த புராணத்தை இயற்றியவர் யார்?

கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்

 

கந்த புராணத்திலே எத்தனை செய்யுட்கள் உள்ளன?

10346

 

இதன் முதல் பாட்டு எப்படி துவங்குகிறது?

‘திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்’

 

இது பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது?

காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.

எந்தப் பொருளும் இந்தப் புராணத்தில் உளதா?

ஆம்; எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூலம் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும்.அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.

 

கந்த புராணத்தின் பெருமை என்ன?

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவ பரமானவை; அவைகளில் கந்த புராணம் சிறந்தது; ஏனெனில் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் எளிதில் தரவல்லது.மங்கலத்தைச் செய்விப்பது; வலிமிக்க கலித் துன்பத்தை நீக்குவது.

கச்சியப்பர் இது பற்றி செப்பியது யாது?

“காந்தம் என்னும் பெருங்கடல்”  — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார்.

 

இதைச் சுருக்க முடியுமா?

சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பார், கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை ‘சுருக்கித் தொகுத்தல்’ என்னும் யாப்பால் 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

 

வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார்; அதில் சூரன் முதலியோரின் முன்னை வரலாறும் உருத்திராக்க மஹிமையும்,  விபூதி மஹிமையும், சிவ நாம மஹிமையும் உளது.

கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் யாவை?

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்

இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு,  சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.

 

 

கச்சியப்பரின் கந்த புராணத்தில் என்ன உளது?

 

கனிச்சுவை மிக்கது; நவில்தொறும் நவில்தொறும் நா நயம் பயப்பது;

பயில்தொறும் பயில்தொறும்  அறுமுகக் கடவுள் மேல் பக்தி ஞானம் விளைப்பது.

இதில் சொல்லபடாத கிளைக் கதைகள் இல; இதை ‘புதுமயிலூர்பரன் புராணத்துற்றிடாக் கதையிலை’ என்னும் செய்யுட் பகுதியால் அறியலாம்.

 

அது கிரந்தத் தொகை, கதைப் பரப்பு, அரும்பொருட்கிடக்கை, பொருள் ஆழம் என்பவைகளால் மற்றவற்றைச் விடச் சிறந்து விளங்குவதால்

கந்த புராணத்தை தமிழில் வெளியிட்டவர் யார்?

கந்த புராணத்தின் மூல பாடம் முழுவதையும் முதலில் யாழ்ப் பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்தார். அவரே கந்தபுராணத்தை வசன நடையிலும் எழுதி  வெளியிட்டார்.

கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள்  இருக்கின்றனவா?

ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர  காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.

 

கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை  ஆறு ஸ்தலங்களில்  பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.

TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்

 

–சுபம், சுபம் –

 

STORY ABOUT A.BRAHMANA (Post No.4383)


Written by London Swaminathan
 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-35

 

 

Post No. 4383

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

This is a story about the origin of Aitareya Brahmana.

The Brahmanas are the prose works in the Vedic literature. They deal with the fire sacrifices of the Vedic Hindus. Each Veda has separate Brahmanas. In fact each ‘Shaka’ of the Veda has one Brahmana. One of the oldest Brahmanas is Aitareya Brahmana of Rig Veda.

 

There is a curious story about the origin of this book. Sayana, the Vedic commentator said this story. There was a sage who had many wives, and one of them was called Itara. She had a son whose name was Mahidasa. The father neglected him and loved the other sons more than Mahidasa, and at a certain sacrifice, he allowed all the other sons to sit on his lap, but refused the honour to Mahidasa.

Thereupon Itara prayed to Goddess of Earth who appeared at once and offered a divine thrown to Mahidasa and seated him on it. The goddess then made him a great scholar. To Mahidasa Aitareya, enlightened by the boon of Earth,there appeared or was revealed. One Brahmana of the Rig  Veda  (of Sakala Saka was called after his name. Itara——-A/Itareya. The aranyaka is also called Aitareya Aranyaka.

 

(The legend says that Aitareya was the son of Itara; itara means the other woman, probably the woman was not the legal wife of the King and so her son was neglected.)

Aitareya Brahmana is divided into eitght Panchikas (pentads), each of which has five adhyayas and so it contains forty chapters; it deals with the duties of the priests, explanations of Soma, Uktya, Shodasa, Atiratra and other sacrifices including 12 minor sacrifices

 

How many Brahmana Books are there?

 

There is one more Brahmana of Rig Veda: Kaushitaki Brahmana.

Satapata Brahmana

Of all the Brahmana books, Satapata Brahmana is the most important one. It belongs to Sukla Yajur Veda. It deals with important fire sacrifices in addition to etymology, grammar and meanings of several other things. The name itself shows that it has hundred (sata) chapters. The Krishna Yajur Veda has Taittiriya Brahmana.  Atharva Veda has Gopata Brahmana.

 

The Brahmanas shows the oldest stage in the development of Sanskrit prose. It is a most interesting phase in the history of Indian thought. Some of the things are said in a symbolic language and so they appear as silly stories. The seers themselves often say the gods love mysterious language. The astronomical remarks in the Brahmanas show they belong to a period between 2000 BCE and 3000 BCE. Foreigners date them around 1000 BCE. This is wrong because Max Muler gave a rough date believing that a anguage changes every 200 years. This theory is not applied to any other language and proved More over, apart from language, there is huge difference between the Upanishadic stage and Brahmana stage.

 

–subham —

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை! (Post No4382)

Written by S.NAGARAJAN

 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4382

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

10-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில்  வெளியாகியுள்ள  கட்டுரை

 

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

 

 ச.நாகராஜன்

 

 

“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்றால், அதைச் செய்து விடுவது தான்! -அமிலியா எர்ஹார்ட்

Amelia Earhart

 

   உலகில் முதன் முதலாக ஒரு விமானத்தை ஓட்டிப் பல சாகஸங்களைச் செய்த துணிச்சல்காரப் பெண்மணியை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது. அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது உட்பட ஏராளமான சாகஸங்களை நிகழ்த்திய அமெரிக்கப் பெண்மயான அமிலியா எர்ஹார்ட் (பிறப்பு 24, ஜூலை 1897 மர்ம மறைவு 2, ஜூலை, 1937 – Amelia Earhart) மங்கையர் சரித்திரத்தில் மகோன்னதமான இடத்தைப் பிடிப்பவராவார்

 

 

அமிலியா மேரி எர்ஹார்ட் அமெரிக்காவில் கான்சாஸில் பிறந்தவர். இளமையிலிருந்தே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இளமையில் பேஸ்கட் பால் விளையாடுவார். ஆட்டோ ரிப்பேர் வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் கல்லூரியிலும் படித்தார்.

முதல் உலகப்போரில் ரெட் கிரஸில் இணைந்து நர்ஸாகப் பணி புரிந்தார். கனடாவில் டோரொண்டோவில் ராயல் ஃப்ளையிங் கிளப்பில் விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

முதல் உலகப் போர் முடிந்தவுடன் அமரிக்கா திரும்பி நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ ஆரம்பப் படிப்பில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவில் 1920இல் டிசம்பர் மாதம் புகழ் பெற்ற பைலட்டான ஃபிராங்க் ஹாக்ஸ் என்பவருடன் கூடச் சேர்ந்து அவர் விமானத்தில் பறந்தார்.

 

 

1921, ஜனவரி மாதம் நேதா ஸ்னூக் என்ற பெண் பயிற்சியாளரிடம் விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டார்.

இதற்காகப் பணம் கட்ட லாஸ் ஏஞ்சலஸில் டெலிபோன் கம்பெனியில் குமாஸ்தாவாக அவர் பணி புரிந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் தனக்கென சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு ‘கேனரிஎன்று செல்லப் பெயரையும் சூட்டினார்.

 

 

டிசம்பர் 1921இல் பறப்பதற்கான லைசென்ஸை பெற்றவுடன் தைரியமாக வானில் பறக்க ஆரம்பித்தார்.

1922இல் 14000 அடி உயரத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினார். 1932இல் அட்லாண்டிக்கில் தனியாகப் பறந்து அதைக் கடந்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தியவுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் அவருக்கு  ‘ஃபிளையிங் கிராஸ் என்ற அரிய விருதைக் கொடுத்து கௌரவித்தது.

 

 

அதே ஆண்டில் தொடர்ந்து 19 மணி நேரம் இடைவிடாது பறந்து, லாஸ் ஏஞ்சலஸில் கிளம்பியவர் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கி புது சாதனையைப் படைத்தார்.

1935இல் ஹவாயிலிருந்து தனியாகக் கிளம்பி அமெரிக்காவை அடைந்து அதிலும் முதலாவது பெண்மணியாகத் திகழ்ந்து புகழ் பெற்றார்.

 

இதனாலெல்லாம் உலகெங்கும் வாழும் மங்கையர் மனதில் ஒரு உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டது. ‘நைண்டி நைன்ஸ் (Ninety Nines)  என்ற விமான ரேஸை நடத்தும் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார்.

 

தொடர்ந்த சாகஸமே அவரின் இறுதிக்குக் காரணமாக அமைந்தது.

 

1937ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திலிருந்து உலகத்தைச் சுற்றுவது என்ற முடிவில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

 

 

அவருக்கு வழி காட்ட ப்ரெட் நூனன் என்பவர் உடன் சென்றார். மியாமி வழியாக தென் அமெரிக்கா சென்று பின்னர் அட்லாண்டிக்கிலிருந்து ஆப்பிரிக்கா சென்று இந்தியா வழியே தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார் அமிலியா.

ஜூன் 29ஆம் தேதி அவர்கள் நியூ கினியாவில் லீ என்ற இடத்தை அடைந்த போது 22000 மைல்கள் பறந்திருந்தனர். புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 7000 மைல்கள் தான் பாக்கி. லீயிலிருந்து ஜூலை இரண்டாம் தேதி அமிலியாவும் நூனனும் கிளம்பினர். பிறகு அந்த இருவரையும் காணோம்.

உலகமே பரபரப்படைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பிரம்மாண்டமான ஒரு தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு வார காலம் இந்தத் தேடுதல் பணி நடந்தது. ஆனால் பயனில்லை.

 

 

1937, ஜூலை 19ஆம் தேதி அவர்களைக் கடலில் மறைந்தவர்களாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அமிலியாவின் மர்மமான மறைவுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டன.

 

1937லிருந்து 2017 முடிய இந்த எண்பது ஆண்டுகளில் பல திடுக்கிடும் தகவல்களை அவரது மர்ம மறைவு பற்றி ஆராய்வோர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

‘விழுந்து மூழ்கிய கொள்கை என்பதை வலியுறுத்துவோர் அமிலியாவின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய்விட்டதால் ஹௌலேண்ட் ஐலேண்ட் அருகே அவர்கள் விமானம் கீழே விழுந்து மூழ்கியிருக்கலாம் என்கிறனர். கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்கள் பயணித்த விமானத்தின் சிதிலமடைந்த பாகம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆராய்ச்சிக்காக ஹை டெக் சோனார் தொழில்நுட்பமும் ஆழ்கடல் ரொபாட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பயணித்த ‘எலெக்ட்ரா விமானத்தின் எந்த ஒரு பகுதியும் பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை.

     

 

 

     பன்னாட்டு விமான மீட்பு வரலாற்றுக் குழு தனது ஆய்வில் அவர்கள் ஒருவேளை ஹௌலேண்ட் ஐலேண்டிலிருந்து சுமார் 350 மைல் தள்ளில் உள்ள கார்ட்னர் ஐலேண்டில் இறங்கி இருக்கலாம் என்ற கொள்கையை முன் வைக்கின்றனர். யாருமே குடியிருக்காத அந்தப் பகுதியிலும் விமானங்கள் பறந்து ஆய்வை நடத்தின. ஆனால் பலனில்லை. ஒருவேளை அவர்கள் அந்தத் தீவில் தங்கி பசியால் வாடி இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

1988ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தத் தீவிற்குப் பலரும் சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தனர்.

ஜூன், 2017இல், அங்கு தொடங்கி நடத்தப்படும் ஆய்வில் ஏதேனும் மனித எலும்புக் கூடுகள் கிடைக்குமா என்று பார்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

 

ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் பெண்கள் அணிந்து வந்த மாடல் செருப்பு போல ஒரு செருப்பு அந்த ஆய்வில் கிடைத்தது. பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன குடுவை ஒன்றும் கிடைத்தது. மனித  விரல் ஒன்றும் கிடைத்தது.

 

இது தவிர இந்த மர்மம் பற்றி, வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன.

 

 

சிலர் அவர்களை ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டனர் என்கின்றனர். இன்னும் சிலரோ அமிலியா ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் உளவாளியாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் இறந்தது போல ஒரு நாடகம் நடத்தப்பட்டு ‘இறந்து போன இருவருக்கும் புதுப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்கள் எங்கோ வாழ்கின்றனர் என்கின்றனர்.

   

 

  ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தன் ஆய்வில் சேர்த்துள்ள லெஸ் கின்னி என்பவர், கப்பல் ஒன்று உடைந்த விமானத்தை ‘டோ செய்து இழுத்துக் கொண்டு செல்வது ஒரு போட்டோவில் காணப்படுகிறது என்றும் அந்தக்  கப்பலில் காணப்படும் இருவர் அமிலியா மற்றும் நூனன் போல இருக்கிறது என்றும் கூறுகிறார்.

 

 

இந்த போட்டோ உண்மையான ஒன்று தானா என்பதை ஆய்வு செய்த ஃபோரன்ஸிக் நிபுணரான டக் கார்னர், “சந்தேகமே இல்லை; இது உண்மையான போட்டோ தான் என்கிறார்.

‘சரி, கப்பல் யாருடையது என்பதை ஆராய்ந்த அவர்கள் அது கோஷு மாரு என்ற ஜப்பானியக் கப்பல் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 

அமிலியாவும் நூனனும் ஜப்பானுக்குக் கடத்தப்பட்டனரா? அவர்கள் ஜப்பானில் என்ன ஆனார்கள்?

மர்மத்தைத் துலங்கிக் கொள்ள ஆய்வு தொடர்கிறது.

இதில் ஆர்வம் உள்ள உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உலக சாதனை படைத்த மங்கையை அப்படியே விட்டு விடலாமா என்ன?என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேணடாமா?

 

 

தாய்க்குலம் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பல்வேறு ஆய்வுகளைக் கவனித்து வருகின்றனர். மர்மம் தொடர்வது போல ஆய்வுகளும் தொடர்கின்றன!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மறைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. என்றாலும் கூட அவர் அன்றாட செய்திகளில் அவ்வப்பொழுது முதலிடம் வகிக்கிறார். சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அது கிராவிடேஷனல் அலைகளைப் பற்றி அவர் முன்னமேயே கூறி இருந்ததை மெய் என்று நிரூபித்தது.

 

 

   இப்போது அவர் தன் கைப்பட, ‘வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எழுதிய அறிவுரைகளை ஏலம் போட்டதில் அது 18 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகி இருக்கிறது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூபாய் 65)

 

ஜப்பானில் 1922இல் அவர் ஒரு சொற்பொழிவை ஆற்றச் சென்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற அவரது சொற்பொழிவு நான்கு  மணி நேரம் நடந்தது. 2500 பேர் அதைக் கேட்டனர். அங்கு தங்கி இருந்த போது ஒரு டெலிவரி பாய் அவரிடம் ஒரு செய்தியைக் கொடுக்கச் சென்ற போது அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவர் விரும்பினார். ஆனால் போதுமான சில்லறை இல்லை. ஆகவே தன் கைப்பட அவர் குறிப்புகளை எழுதினார். அது தான் இன்று உலக பிரசித்தி பெற்ற ‘சந்தோஷக் குறிப்புகள் ஆகி விட்டன. ஒரு குறிப்பு ஹோட்டல் பேப்பரிலும் இன்னொரு குறிப்பு ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதப்பட்டன.

 ‘இதற்கு என்றேனும் ஒரு நாள் கொஞ்சம் மதிப்பு கிடைக்கும் என்று கூறியவாறே அவற்றை டெலிவரி பாயிடம் அவர் கொடுத்தார்.

 

அதில் ஒரு குறிப்பு இது: எப்போதும் அமைதியற்று வெற்றியை அடைய விழைவதை விட அமைதியான எளிய வாழ்க்கை சந்தோஷத்தைத் தரும் ( “A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness.”)

இன்னொரு குறிப்பு இது : மனம் இருந்தால் மார்க்கம் உண்டு   ( “Where there is a will, there is a way.”)

 

ஐன்ஸ்டீன் ஆரூடம் கூறியது போலவே அவற்றின் மதிப்பு இன்று பதினோருகோடியே எழுபது லட்சம் ரூபாய் ஆகி விட்டிருக்கிறது.

பெரியோர் வாக்கு பொய்க்காது!

***

 

பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்! (Post No.4381)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-25

 

 

Post No. 4381

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப்  படிப்போர் அறிவர்.

உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.

 

இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:

வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)

 

பொருள்

இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்

குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

கண்களில் தீ

இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.

 

அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?

 

அவன் சொன்னான்,

“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”

 

அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

xxxx

 

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.

ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று  — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

 

இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்

அவர் சொன்னார்,  “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.

 

அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே  சிலை போல நின்றுவிட்டாள்.

 

பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

 

xxxx

 

ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!

அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:

ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!

-என்று

xxxx

 

ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!

 

ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.

 

ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.

 

 

இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது  மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.

 

லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:

அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!

 

பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

 

xxxx

 

டேய்! போண்டா மூக்கு!

ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.

 

அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.

“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!

நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.

பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!

 

TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்

—சுபம், சுபம்–

 

Beauty Anecdotes (Post No.4380)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-55 am

 

 

Post No. 4380

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Fontanelle ,at the age of 97, after saying many amiable and gallant things to a beautiful young lady, passed before her without seeing her, to place himself at table.

 

See, said the lady, how I ought to value your gallantries, you pass without looking at me ”

Madam, replied the old man, if I had looked at you I could not have passed.

 

Xxx

 

Dustman’s Heart

As the beautiful Duchess of Devonshire was one day stepping out of her carriage, a dustman who was accidentally standing by and was about to regale himself with his accustomed whiff of tobacco, caught a glance of her countenance, and instantly exclaimed,

Love and bless you, my lady, let me light my pipe in your eye!

 

It is said that the Duchess was so delighted with his compliment, that she frequently afterward s checked the strain of adulation which was constantly offered to her charms, by saying,

OH! After the dustman s compliment, all others are insipid ”

 

Xxxx

 

Chesterfield and Voltaire

  

Lord Chesterfield and Voltaire were attending a reception in Paris. Noticing that the English man was being assailed by some of the ladies, the French wit said to him,

My Lord,it is said that you possess keen discrimination; tell me now, who are the more handsome, the French women or the women of your own country?

 

As to that , replied chesterfield, I must admit that I cannot say,as I am no connoisseur in the art of painting.

 

Xxxxx

 

 

Curran, speaking of Madame de Stael who was by no means handsome, but a splendid conversationalist, said she ” the power of talking herself into a beauty.

 

Xxxx

 

Someone once noted to Samuel Goldwyn the beauty of his wife’s hands.

Yes, Goldwyn said, ” she has such beautiful hands, I am thinking of having a bust made of them. ”

 

Xxxx SUBHAM xxxx

 

 

மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்! (Post No.4379)

Written by S.NAGARAJAN

 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4379

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் தமிழ் மாத பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

வள்ளலார் காட்டும் ஆரோக்கிய நெறி

 

மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

 

ச.நாகராஜன்

1

இவ்வுல்கத்தில் ஆறறிவுள்ள உயிர் உடைத்தாகிய தேகத்தைப் பெற்ற வள்ளலார் தேகத்திற்கு இடையிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு அந்த் தேகத்தையே நித்திய தேகமாக்கத் திருவுள்ளம் கொண்டார்.

அனைவரும் வியக்கும் வண்ணம் தான் அறிவித்தபடியே ஒளி உடலாக மாறி, நித்திய தேகியாக இருக்கிறார்.

சரித்திரம் அறிவியல் பூர்வமாகக் கண்ட உண்மை இது.

அவர் மரணமில்லாப் பெருவாழ்வைச் சித்திக்கலாம் என்று சொல்லில் மட்டும் சொல்லாது அதைச் செய்து காட்டிய மாபெரும் மகான்.

பசிப் பிணி நீக்குதல் முதல் தர்மம் என்றார் அவர்.

இந்த தேகத்தைப் பிணியிலிருந்து விடுவித்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழப் பல அறிவுரைகளையும், குறிப்புகளையும் அவர் தந்துள்ளார்.

ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ் நாளையும் பெற விரும்புவோர் நாட வேண்டிய ஒரே சந்நிதானம் வள்ளலார் சந்நிதானம் தான்.

 

2

அவரது ஏராளமான சிறு சிறு குறிப்புகள் ஒவ்வொன்றும் நீண்ட வாழ்நாளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கான இரகசியங்கள்.

ஏராளமானோரை பல்வேறு வியாதிகளிலிருந்து அவர் குணப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ள இரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

கருங்குழியில் இருந்த பாலு ரெட்டியார் என்பவர் குஷ்ட நோயினால் துன்பமுற்றார். அவர் சுவாமிகளை அணுகவே வள்ளலார் திருநீறு கொடுத்து அதைத் தீர்த்தார்.

முத்து நாராயண ரெட்டியார் என்பவருக்கு கண் பார்வை பாதிக்கப்படவே அவரது கண் மறைவினையும் தீர்த்தருளினார்.

இது போல அவர் நோய் தீர்த்த சம்பவங்கள் ஏராளம்.

அனைவரும் அனுசரிக்க வேண்டிய எளிய குறிப்புகளை அவர் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.

 

சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்திருப்பதை அவர் வெகுவாக வலியுறுத்தினார்.

“புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் – பித்தொழியும்

தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி

காலை விழிப்பின் குணம்”

என்று பதார்த்த குண சிந்தாமணி காலை எழுந்திருப்பதன் பலன்களைக் கூறுகிறது.

புத்தி மனதுடன் பொருந்தும்.

தெளிவு உண்டாகும்.

நரம்புகள் எல்லாம் தூய்மை அடையும்.

பித்தம் ஒழியும். வாத பித்த சிலேத்துமங்கள் தம் தம் நிலையில் சேரும்.

இது அதிகாலை எழுந்திருப்பதன் பலன்.

பகல் உணவுக்குப் பின் சிறிது துயில் கொள்ள வேண்டும். இந்த உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கக் கூடாது. சற்றுப் படுத்து எழுந்திருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.

இரவு உணவுக்குப் பின்னர் சற்று உலாவ வேண்டும்.

சத பதம் என்று ஆயுர் வேதம் கூறும். உணவுக்குப் பின்னர் நூறு அடிகள் நட என்பது அறவுரை.

புலாலைப் புசிக்காதே – எந்நாளும்.

சன்மார்க்க உணவை எடுத்துக் கொள். (இதைப் பற்றி மிக விரிவாக அவர் எழுதியுள்ளார்)

இவையெல்லாம் அவரது அறிவுரைகள்.

 

3

சஞ்சீவி மூலிகைகளான கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகிய ஐந்து மூலிகைகளின் குணங்களை அவர் வரையறுத்துக் கூறியுள்ளார்.

முத்துப்பூண்டை பறவைகளின் காதில் சிறுகச் சிறுக விட்டால் அவை உயிர் பிழைக்கும் என்பது அவரது அருளுரை.

இருமல், தேகமெலிவு,நீர்க்கோவை, சரீர திடம் ஆகியவற்றிற்கான மருத்துவக் குறிப்புகளை அவர் மிகத் தெளிவாகத் தந்துள்ளார்.

 

4

வள்ளலாரின் மிக அற்புதமான் ஒரு சித்தி அவர் ஏராளமான மூலிகைகளை அறிந்திருந்ததோடு அவற்றின் பயனைப் பற்றி உலகத்திற்கு தீர்க்கமாக அறிவித்தது தான்.

 

இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி அவர் ஏராளமானோரைக் குணப்படுத்தியதை அவர் வாழ்க்கை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

485 மூலிகைகளின் பெயரைக் கூறி அதன் குணத்தை அவர் ஒரே வரியில் கூறி இருப்பது வியக்க வைக்கும் ஒரு மாபெரும் சாதனையாகும்.

எடுத்துக் காட்டாக ஒரு பத்து மூலிகைகளை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

மாகாளி – மயக்கம் போம்

நீர்விளா – பைத்தியம் போகும்

மாஞ்சரோணி – கண் புகைச்சல் தீரும்

தும்பை – ஜுரம் போகும். சில் விஷம் போகும்.

தாமரை – கண் குளிர்ச்சி

ஆலுக்கு – புழுக்கள் போகும்

அரசுக்கு – புத்தி வர்த்தினி

இச்சில் – குஷடம் போகும்

கீழாநெல்லி – காமாலை போகும்

திப்பிலி – தாது விருத்தி உண்டாகும்.

இப்படி 485 மூலிகைகளுக்கான குணத்தைப் படிக்கும் போது தன்வந்திரி நேரில் வந்து சொல்வது போல மருத்துவக் குறிப்புகளைக் கண்டு வியக்க முடிகிறது.

 

5

கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் ஆகிய ஐந்தும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. இவற்றை பஞ்ச கற்பம் என்கிறார் வள்ளலார். இவற்றைப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும் என்பது அவரது அறிவுரை.

நித்திய கரும விதி என்று 21 அறிவுரைகளை அவர் தருகிறார். எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்றெல்லாம் நுணுக்கமாகக் கூறுவது அவரது தனித்துவம் மிக்க சித்தர் பாணி.

“ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீ சம், பயம் பூஜ்யம் ஆகப் பெறுதல்”- ஆகிய இவை ஆரோக்கிய வாழ்வுக்கு அவர் காட்டும் வழி.

மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதலை மனிதனின் குறிக்கோளாகச் செய்வதற்கென அபூர்வமாக தமிழகத்தில் அவதரித்த சித்தர் வள்ளலார்.

அதன் முதற்படியாக நீடித்த ஆயுளை ஆரோக்கிய வாழ்வுடன் பெற அவரது அருளுடன் கூடிய அறிவுரைகளைப் பின்பற்றுதல் அன்பர்களின் கடமை.

 

6

வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை அவரது அணுக்க சீடரும் சென்னை பிரஸிதென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றியவருமான தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதியுள்ளார்.

 

இந்த நூலுடன் ஊரன் அடிகளார் எழுதியுள்ள திரு அருட்பா உரை நடைப் பகுதி நூலையும் இராமலிங்க அடிகள் திருவரலாறு நூலையும் வாங்கிப் படித்தால் அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 607303 தென்னார்க்காடு மாவட்டம் என்ற முகவரியில் நூலைப் பெறலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களும் முத்தான நூல்கள். ஆரோக்கிய அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதை நிச்சயம் நாடுவர்.

 

***

 

 

மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே! (Post No.4378)

Written by London Swaminathan 

 

Date: 8 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-23

 

 

Post No. 4378

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

மனு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்; இத்து தவறு; அவர் ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறார். இது கி.மு 2000ல் இருந்த நதி. பின்னர் மறைந்து போனது. மேலும் ரிக் வேதமும் மனு தர்ம சாஸ்திரமும் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது போன்ற பல விஷயங்களை  வைத்து கணக்கிட்டால் அவர், 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று நான் கருதுகிறேன். மேலும் மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள 2000-க்கும் அதிகமான  ஸ்லோகங்களைப் படித்தால் அவர் சொன்ன விஷயங்களுக்கு நேர் மாறாக பல விஷயங்கள் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது தெள்ளிதின் விளங்கும்.

 

கி.மு முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க வம்சத்தினர் தீவிர பிராமணர்கள். அவர்களுடைய காலத்தில் தீவிரவாத பிராமணர்கள் சில விஷயங்களை சூத்திரர்களுக்கு எதிராகச் சேர்த்து இருக்கலாம். இந்துக்களின் எல்லா நூல்களும் அவ்வப்போது Update அப்டேட் செய்யப்படும் — புதுப்பிக்கப்படும் — வழக்கம் உண்டு. இதனால் கடைசி விஷயத்தை மட்டும் வைத்துக் காலக் கணக்கீடு செய்வர் வெளிநாட்டினர். ஆகவே மனுவின் தற்போதைய காலம் தவறு. மேலும் அவர் எழுதிய சாத்திரம் த்ருஷத்வதி– சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட மக்களுக்கானதே தவிர எல்லோருக்குமானதல்ல (அவர் எழுதிய காலத்தில்).  நிற்க.

 

சொல்ல வந்த விஷயம் மனுவுக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது? என்பதே. மனு பேசாத பொருளல்ல; இதை சட்ட நூல் என்பதைவிட இந்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம். 2000 க்கும் மேலான ஸ்லோகங்களில் அவர் சொல்லாத, தொடாத விஷயமே இல்லை.

 

 

இப்பொழுது தாவரவியல் விஷயங்களை மட்டும் காண்போம்:

நாங்கள் எல்லாம் B.Sc. Botany பி. எ ஸ்சி. பாடனி (தாவரவியல் படித்தபோது லின்னேயஸ் என்பவர் வகுத்த தாவரப் பகுப்பைப் (Linnaeus Classification of Plants) படித்தோம். எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் வேறு Theory ‘தியரி’ படித்திருப்பார்கள். விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டே வரும். ஆக மனு சொன்னதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள  வேண்டியதல்ல. ஆனால் சில அடிப்படை விஷயங்கள் மாறாது.

காதலி மீது பூவை எறியாதீர்கள்!

ஜகதீஷ் சந்திர போஸின் முக்கிய பொன்மொழி: உங்கள் காதலி மீதுகூட ரோஜாப் பூவைப் போட்டு விளையாடாதீர்கள்; ஏனெனில் ரோஜாப் பூவுக்கு வலிக்கும்!

 

 

சர் ஜகதீஷ் போஸ் என்ற இந்திய  விஞ்ஞானிதான் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை விஞ்ஞான முறையில் கருவிகளைக் கொண்டு நிரூபித்தார். உண்மையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் அந்தக் காலத்தில் உள்ள இன வேற்று மையில் அவர் அமுங்கிப் போனார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாகவே மனு இது பற்றிப் பேசியுள்ளார்.

 

மனு, தாவரவியல் பகுப்பு பற்றிப் பேசுகிறார்; செடி, கொடி, மரங்கள், பூவாது காய்க்கும்  மரங்கள் பற்றிச் சொல்கிறார்.

தர்ப்பைப் புல் பாய், ஆசனம், மதச் சடங்குகளில் அதன் பயன்பாடு பற்றிப் பகர்கிறார்.

தாவரங்களின் உணர்ச்சி பற்றி அவர் சொல்லுவதாவது:-

அவைகள், சுபாவத்தின்படி செயல்படுகின்றன. அவைகளுக்கு உணர்ச்சி இருக்கிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன

 

வேதங்களிலேயே மூலிகைகள் பற்றியும் அதிசயக் குளிகைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது மனு இவ்வளவு சொல்லுவதில் வியப்பில்லை. மேலும் உபநிஷத காலத்திலேயே சிறிய ஆலம் விதையிலிருந்து பிரம்மாண்ட மரம் உருவாவதை உவமையாகச் சொல்லி பாடம் நடத்தினர். தலங்கள் தோறும் புனித மரங்கள் இருந்திருக்கின்றன. நம்மாழ்வாருக்கும் தான்சேன் என்ற கவிஞருக்கும் அருள்புரிந்த புளியமரம், கிருஷ்ணன் ஆலிலைக் கிருஷ்ணனாக மிதந்த ஆலமரம், சிவன் அடிமுடி காணும் விஷயத்தில் பொய் சொன்ன தாழம்பூ, புத்தருக்கு ஞானம் கொடுத்த அரச மரம், பிராமணர்களுக்கு ஸமித்து கொடுக்கும் அரச, பலாச மரங்கள், பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த வன்னி மரம் என்று நூற்றுக்கணக்கான மரங்கள் வில்வம், துளசி போன்ற புனித தாவரங்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே — முடிவு இல்லாமல் போகும்.

 

ஜகதீஷ் போசுக்கும் மனுவுக்கும் தாவரவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கொடுக்கலாம்.

மரங்களையோ செடி கொடிகளையோ பிராமணர்கள் வெட்டினால் ஆயிரம் வேத மந்திரம் சொல்ல வேண்டும் என்று மனு விதிக்கிறார்.

 

புனித மரங்கள் பற்றிப் பேசும் மனு, என்ன மரங்களைக் கொண்டு (staff) தடிகள் செய்ய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.

 

 

ஆங்கிலக் கட்டுரையில் ஸ்லோகங்களின் எண்களையும் கொடுத்து இருக்கிறேன்.

 

Manu, not only a Law Maker but also a Great Botanist! (Post No.4375 …

https://tamilandvedas.com/…/manu-not-only-a-law-maker-but-also-a-great-botanist-p…

21 hours ago – Manu Smrti, law book written by Manu, talks about lot of subjects which makes it a Hindu Encyclopaedia. Manu was not only a law maker but …

 

‘Save the Trees’ and ‘Save the Forests’ in Manu Smrti! – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/save-the-trees-and-save-the-forests-in-…

7 Aug 2016 – ‘Save the Trees‘ and ‘Save the Forests’ in Manu Smrti!( … 255 Indian trees, herbs and flowers mentioned in Brhat Samhita Part-1, posted 21 …

 

 

–Subham–