Date: 28 DECEMBER 2017
Time uploaded in London- 5-44 am
Compiled by S NAGARAJAN
Post No. 4554
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 114 முதல் 119
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்
அமரகவி (பாரதி)
(பாடல் தொடர்ச்சி)
‘பாப்பாப் பாட்டி’லே – நெஞ்சைப்
பறிகொ டுத்தேனடா!
சாப்பா டேதுக்கடா! – சீனி
சர்க்கரை ஏதுக்கடா!
அன்னை ‘பாஞ்சாலி -சபதம்’
அறைதல் கேட்டேனடா!
முன்னைக் கதையெல்லாம் – கண்ணின்
முன் நடந்ததடா!
‘வந்தே மாதரத்’தைப் – பாடவே
வாய்தி றந்தவுடன்
சந்தேக மில்லை – ஒருபுதுச்
சக்தி தோன்றுதடா!
‘எங்கள் நாடு தான் – பூங்கா
இசையி லேறிடுமேல்,
கங்கை யாறுபோல் – உள்ளத்தில்
களிப்பொ ழுகதடா!
‘சின்னஞ் சிறுகிளி’ – கனவில்
தினமும் காணுதடா!
கன்னங் குழியவே – முத்தமும்
கனிந்த ளிக்குதடா!
‘கண்ணன் காதலன்’ – எனக்கொரு
களிய முதமடா!
விண்ண முதமுமே – அதனை
வெல்ல மாட்டாதடா!
(நீண்ட பாடல் தொடரும்)
அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.
பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****