பாரதி போற்றி ஆயிரம் – 37 (Post No.4666)

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4666

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

 

  பாடல்கள் 214 முதல் 217

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

         நா.சீ.வரதராஜன் பாடல்கள்        

பாரதியின் பராசக்தி

ஆதார சக்தியினை, அணுவில், காற்றில்,

       அனைத்திலுமே கலந்தவளை, அமுதை, ஞான

மாதாவை, பிணி தீர்க்கும் மருந்தை, வாழ்வில்

       மலர்ச்சியினை, உயிர்ச்சுடரை, உணர்வை, பண்டை

வேதாகமம் சொல்லும் பொருளை, மூன்று

        விதம்கிளைத்து வினைபுரியும் மூலத்தைத்தான்

நாதாந்த வடிவான சக்தி என்றே

        நாவினிக்கப் பாரதியார் பாடக் கண்டோம்!

 

விண்டுரைக்க அரியவளாய், கோள்கள் சுற்ற

       விரிந்திருக்கும் வான்வெளியாய், வானில் காற்று

மண்டலமாய், உயிர்ப்பு தரும் மழையாய், பின்னர்

       வாழ்வழித்துப் பாழ்விளைக்கும் வெள்ளக் காடாய்,

பண்டுமுதல் இன்றுவரை பகலைச் செய்யும்

       பரிதியெனும் ஒளியருளாய், உழைக்கும் போதில்

மண்டுகின்ற பலதொழிற்கும் ஆற்றல் கூட்டும்

       மாமாயப் பெருவலியாய் அவளைக் கண்டோம்!

 

காலமெனும் பெருவனத்தில் அண்டக்கோளக்

       கவின்மரத்தில் முரல்வண்டாய் அவளைக் காட்டும்

கோலமுறும் அவள்வடிவம் அன்பே என்னும்

       கூடுகின்ற இன்பமவள் படிமம் என்னும்.

ஞாலமிதும், விண்ணகமும், திசைகள் யாவும்,

       நல்லவற்றில், அல்லவற்றில், அவளைக் காணும்!

மூலமவள், முடிவுமவள் என்றே பாடும்!

       மூண்டுவிட்ட பக்திச்சொல் நடனம் ஆடும்!

 

ஊழிக்கூத்துப் பாடலில் அன்னை

        உருவம் பொலிவாய் அசைகிறது -கவி

        ஓசையில் நெஞ்சே கசிகிறது!

உறுமிக் கொண்டே ஞானச் சுடராய்

       உயரும் ஒளியே தெரிகிறது – பின்

       ஊர்த்துவ நடனம் புரிகிறது!

பாழும் பதறித் திசைகள் சிதறிப்

       பரவும் கூத்தும் விரிகிறது – தமிழ்ப்

       பாடல் விந்தை புரிகிறது!

பண்ணில், சொல்லில், உமையைச் சிவனைப்

       பற்றிக் கொண்டே படர்கிறது – உயர்

       பரவச நிலையை அடைகிறது!

 

கவிஞர் நா.சீ.வரதராஜன் : அமரர் நா.சீ.வரதராஜன் பெருங் கவிஞர்.பல நூல்களை இயற்றியவர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர். இவரது புனைப்பெயர்:பீஷ்மன்; பிறப்பு : 20-5-1930

தொகுப்பாளர் குறிப்பு : கல்கி வார இதழில் வெளியாகியுள்ள பாடல் இது. வெளியான ஆண்டு 1978.

நன்றி: கல்கி வார இதழ்; நன்றி: அமரர் நா.சீ.வரதராஜன்

***

 

TAMIL VALLUVAN AND WORLD PHILOSOPHERS on NUMBER EIGHT! (Post No.4665)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 16-24

 

Post No. 4665

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

TAMIL VALLUVAN AND WORLD PHILOSOPHERS on NUMBER EIGHT! (Post No.4665)

Number Eight stands for Stability

Tiru Valluvar (Valuvan in short) says in his monumental didactic work TIRUKKURAL ,

 

“The head that does not bow before the Lord of Eight Attributes,

In prayer, is like a body with all its senses defunct”

–Kural 9

Lord of Eight Attributes is used both in Saivism and Jainism. Buddhists and followers of Confucius also use it for eight fundamental virtues.

 

In the commentary for this Kural 9 (couplet) Eight Miraculous powers (Ashta Ma Siddhis in Sanskrit) are also attributed to God; normally they are attributed to the devotees of gods who have attained eight miraculous powers.

1.Anima :power of becoming the size of an atom and entering into smaalest life.

2.Mahima : power of becoming mighty and co-extensive with the universe.

3.Laghima : capacity to be light, though big in size

4.Garima : capacity to be heavy though seeming small in size

5.Prapthi : capacity to enter all the worlds from Brahmaloka to Pathalam

6.Prakasyam : power of disembodying and entering into other bodies and going to heaven and enjoying whatever one wants from one place

7.Isithvam :  having the creative power of God and control over the sun, the moon and the elements

8.Vasithvam : power of control over kings and Gods.

 

Chinese Philosopher Confucius

 

According to Saivite philosophy the eight qualities are 1.Self dependence 2.Immaculate body, 3.Natural Understanding, 4.omniscience, 5.nfinite Detachment, 6.Infinite mercy, 7.Omnipotence and 8.Limitless bliss

 

According to the Jains, the eight fold qualities are 1.Infinite knowledge, 2. Infinite vision, 3. Infinite energy, 4. Infinite joy, 5.Indescribability, 6.Beginninglessness, 7.Agelessness and 8.Deathlesness

Picture:Eight qualities in Confucianism

Lord Krishna’s Eight

In the Bhagavad Gita Lord Krishna says (7-4)

“Earth, water, fire, air, ether, mind and understanding and self sense- this is the eight fold division of my nature”

 

‘There is no end to My Divine Attributes’ (10-40)

 

Dutch philosopher Spinoza described God as ‘consisting of infinite and eternal attributes’.

Spinoza’s metaphysics of God is neatly summed up in a phrase that occurs in the Latin (but not the original Dutch) edition of the Ethics: “God, or Nature”, Deus, sive Natura: “That eternal and infinite being we call God, or Nature, acts from the same necessity from which he exists” (Part IV, Preface)

 

It is interesting to see Number Eight is used in all the oriental religions. Though Buddha did not talk about God, he insisted eight qualities for human beings. They are Right view,  Right resolve,  Right speech, Right conduct, Right livelihood, Right effort, Right mindfulness, and  Right concentration.

 

The Eight Confucian virtues are 1. Benevolence, 2.Righteousness, 3.Courtesy, 4.Wisdom, 5.Fidelity, 6.Loyalty, 7.Filial Piety and 8.Service to elders.

 

The Samurai warriors of Japan has a Bushido (way of warriors) code with eight virtues:

1.Rectitude or Justice, 2. Courage, 3.Benevolence or Mercy, 4.Politeness, 5.Honesty and sincerity, 6.Honour, 7.Loyalty and 8.Character, Self-Control. These 8 virtues are influenced by Buddhism, Confucianism and Taoism.

 

xxx Subham xxx

பத்து செட்டியார்கள், மூன்று திருடர்கள் கதை (Post No 4664)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 11-05 AM

 

Post No. 4664

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்

 

ஒரு ஊரில் பத்து செட்டியார்கள் துணி வியாபாரம் செய்து வந்தனர். அந்த ஊரிலுள்ள நெசவாளர்களிடம் புடவை, தாவணி, வேஷ்டி, துண்டு முதலியவைகளை வாங்கி பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்கள். ஒரு முறை அவர்கள் பக்கத்திலுள்ள பட்டணத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காட்டுப் பாதை வழியே கிராமத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று திருடர்கள் கத்தி கம்புகளுடன் தோன்றி அவர்களை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.

 

செட்டியார்கள் எப்போதும் இடுப்பில் பணம் முடித்து வைத்திருப்பார்கள் ஆகையால் வேட்டி சட்டையையும் அவிழ்க்கச் சொல்லி விட்டனர். அப்போது அவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதைப் பார்த்து நாட்டியம் ஆடுங்கள் என்று திருடர்கள் உத்தரவிட்டனர். செட்டியார்கள் தங்களுக்கு நடனம் எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், ஏதேனும் ஆடாவிட்டால் கத்தியால் வெட்டுவேன் என்று மிரட்டியவுடன் ஒரு செட்டியார் மெதுவாக முன் வந்தார். உடனே மற்ற 9 செட்டியார்களும் அவருடன் சேர்ந்து மெதுவாக ஆடினர்.

செட்டியார்கள் வணிக பரிபாஷையில் பேசிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள்; வாடிக்கையாளருக்குத் தெ ரியக் கூடாது என்பதற்காக விலைகள் தொடர்பான பரிபாஷை (ரகசிய/ சங்கேத மொழி) இது. அப்போது ஒரு செட்டியாருக்கு ஒரு யோஜனை தோன்றியது உடனே அதை ரஹசிய சங்கேத மொழியில் சொன்னார்.

 

 

தோம்தோம் ததிங்கிணதோம்

அண்ணமார்கள் திருபேர்

தம்பிமார்கள் புலிபேர்

ததிங்கிண ததிங்கிண ததிங்கிண தோம்

சவணம் சவணம் பேர்களைத்

திருவர் திருவர் தழுவிக்கிட்டா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

 

சவணம் தானே மீதிடா

கைகட்டி சவணம் கையைக்கட்டி

தோம் தோம் ததிங்கிண தோம்

நில்லடா, வாங்கடா, போங்கடா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

என்று ஒருவர் பாடினார்.

 

வர்த்தகர்களின் பரிபாஷையில் இருந்த கருத்து இதுதான்:-

செட்டியார் பரிமாறிக்கொண்ட கருத்து: “நாமோ பத்துப் பேர்; அவர்களோ மூன்று பேர்தான். நாம் ஆளுக்கு முன்று பேர் என்று சுற்றி வளைத்து திருடர்களைப் பிடிப்போம்”.

 

வர்த்தகர்கள் ஒன்று, மூன்று,  பத்து என்ற எண்களை முறையே சவணம், திரு, புலி என்று குறிப்பார்கள்.

 

முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம் என்ற பல்லவியை மட்டும் பாடி மகிழ்ந்தார்கள்.

 

 

திருடர்களோ தனது கடுமையை எல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும்  குடித்துவிட்டு, கும்மாளம் போட்டனர். இதுதான் தருணம் என்று மூன்று மூன்று பேராகச் சேர்ந்து பாடிக்கொண்டே திருடர்களைப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்; ஒருவர் ஓடிச் சென்று பட்டணத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பத்து திருடர்களையும் பிடித்தனர்.

இதுதான் “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை!

–சுபம்—

 

பாரதி போற்றி ஆயிரம் – 35 (Post No.4663)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4663

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

((SECOND PART WAS POSTED YESTERDAY))

 

  பாடல்கள் 198 முதல் 205

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்

பாரதியார் பா மணம்

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு

 

  1. பூ மணக்குது புகழ் மணக்குது

புண்ணியர் பாடலிலே

பா மணக்குது பயன் மணக்குது

பாரதி பாட்டுள்ளே

 

  1. இனிமை மொழி யினிசையிலங்குது

இன்பப் பாடலிலே

பனி மொழிச்சியர் கலைமணக்குது

பாரதி பாட்டுளே

 

  1. காவியக்கனி கனிந்திருக்குது

காமர்ப் பாடலிலே

பாவியலணி பரந்திருக்குது

பாரதி பாட்டுளே

 

  1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

புதுமைப் பாடலிலே

பண்ணியல்களின் நடைநடக்குது

பாரதி பாட்டுளே

 

  1. தகைமைதத்துவந் தவழ்ந்திருக்குது

தண்ணார் பாடலிலே

பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

பாரதி பாட்டுளே

 

  1. தேஞ்சாரம் பசுந் தேறலிருக்குது

தேசப் பாடலிலே

பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

பாரதி பாட்டுளே

 

  1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

திவ்யப் பாடலிலே

பயந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

பாரதி பாட்டுளே

 

  1. சாதிக்கொடுமைகள் தகர்ந்தழியுது

சங்குப் பாடலிலே

பாதகர் செயும் மோசமோடுது

பாரதி பாட்டுளே

(கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வரும்)

 

– “பாரதி”     – மாதப் பத்திரிகை

உத்தம பாளையம்  1933 ஆகஸ்டு

 

 

கவிஞர் குறிப்பு : தெரியவில்லை

 

தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.

நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்

***

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை! (4662)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4662

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

பாக்யா 26-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 49வது) கட்டுரை!

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

 

 

ச.நாகராஜன்

 

 

 

 

“மரபணு பற்றிய விதிகள் அவற்றை நீங்கள் அறிய மறுத்தாலும் கூட உங்களுக்கும் அது பொருந்தும்!” – ஆலிஸன் ப்லோடென்

 

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல விஞ்ஞானிகளில் பெரிதும் போற்றப்பட்டு வருபவர் மரபணு சம்பந்தமான பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெரும் விஞ்ஞானி சர் பால் நர்ஸ்! (Sir Paul Nurse).

 

முக்கியமாக கான்ஸர் வியாதி குணமாகக் கூடியதே என்பதை அவர் சொல்லும் போது உலகமே ஆறுதல் அடைகிறது. மருத்துவத்திற்கான 2001ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவர் மற்ற இரு விஞ்னானிகளுடன் கூடச் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த நர்ஸ் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 69.

உலகிற்கே மரபணு பற்றிய ஏராளமான உண்மைகளைத் தெரிவித்த இந்த விஞ்ஞானியின் சொந்த வாழ்க்கையில் அவரது மரபணு பற்றிய விஷயம் பெரிய ரகசியமாக அமைந்தது தான் விசித்திரம்.

 

பெரிய மர்ம நாவல் போல அவரது வாழ்க்கை வரலாறு இருக்கிறது.

 

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். டிக்கன்ஸ் நாவலையும் தோற்கடிக்கும் அளவு அவரது வாழ்க்கை மிக்க சுவையான மர்மம் நிறைந்த ஒன்று.

 

அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திற்கு அவர் தலைவர் ஆனார். சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டை வாங்க ஒரு விண்ண்பத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிடி பிரிவால் நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது.

 

திகைத்துப் போன அவர் ஏன் என்று கேட்டார்.

அந்தப் பிரிவோ அவரது பிறப்புச் சான்றிதழில்  தந்தை பெயரும் தாயின் பெயரும் இல்லை என்று பதில் கூறியது.

இவ்வளவு தானே என்று நினைத்த நர்ஸ், ஒரு முழு பெர்த் சர்டிபிகேட்டை அனுப்புமாறு பிரிட்டன் ஜெனரல் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிம்மதியாக இரு வார விடுமுறை எடுத்துச் சென்று விட்டார்.

திரும்பி வந்தவர் தன் செயலாளரிடம், ‘இப்போது எல்லாம் சரியாக ஆகி விட்டதல்லவா’ என்று கேட்டார்.

“ஊஹூம்” என்று சொன்ன அவர் பிரிட்டனிலிருந்து வந்த பெர்த் சர்டிபிகேட்டை அவரிடம் நீட்டினார். அதில் தாயார் என்பதற்கு நேராக அவரது சகோதரியின் பெயர் இருந்தது. தகப்பனார் என்பதற்கு நேராக ஒரு கோடு -டேஷ் – மட்டும் இருந்தது.

தகப்பனார் இல்லாத ஆளா நான் என்று வியப்புற்றார் நர்ஸ்.

உலகிற்கே மரபணு பற்றி விளக்கம் அளிப்பவர் தன்  மரபணு பற்றித் தெரியாமல் திகைத்தார்.

 

அவரது மனைவி என்ன திகைப்பு என்று கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆராய ஆரம்பித்தார்.

பின்னர் கூறினார்,”நீங்கள் தந்தை தாய் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் உங்கள் தாத்தாவும் பாட்டியுமே. நீங்கள் உங்கள் சகோதரி என்று நினைத்துக் கொண்டிருபபவர் தான் நிஜத்தில் உங்கள் தாயார்!”

திகைத்துப் போன நர்ஸால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அவரது தந்தையும் தாயும் உயிருடன் இல்லை.

சகோதரியும் உயிருடன் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு பெரிய அத்தையின் வீடு. அந்தப் பெரிய அத்தையும் உயிருடன் இல்லை.

என்ன செய்வது?

பெரிய அத்தையின் பெண் உயிருடன் வாழ்கிறார். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டார்.

“உனது வாழ்வில் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கூறிய அவர் “நீ பிறந்த போது எனக்கு 11 வயது. உனது தாயார் 17 வயதிலேயே கர்ப்பமானாள். கர்ப்பமானவுடன் அவரை இங்கு கொண்டு வந்து விட்டனர். நீ பிறந்தாய். உன்னை உன் தாத்தாவும் பாட்டியும் கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தனர். உன் அம்மாவை உனது சகோதரி என்று சொல்லி விட்டனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசிய பிரமாணமும் செய்ய வைத்தனர்.

 

உன் தாயார் பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இது தான் நடந்த கதை” என்றார் அவர்.

 

இப்போது உலகப் பெரும் விஞ்ஞானியின் தலை சுழன்றது.

அப்போது தனது தந்தை யார்?

உறவுகள் எல்லாம் இப்போது அவருக்கு மாறிப் போனது.

அப்பா என்று கூப்பிட்டு வந்தவர் தாத்தா ஆனார். அம்மா என்று அழைத்தவர் பாட்டி ஆனார். சகோதரி மிரியம் இப்போது அம்மா ஆகி விட்டார்.

 

சகோதரர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது மாமன்மார் ஆகி விட்டனர். ஒரே குளறுபடி உறவுமுறையில்!

“நான் என்ன செய்வது? நான் ஒரு மோசமான மரபணு விஞ்ஞானி இல்லை. எனது குடும்பத்தினர் தான் என் மரபணு பற்றிய விஷயத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக வைத்து விட்டனர்!” என்கிறார் நர்ஸ்!

 

அவரது சகோதரி மிரியம் – இப்போது ரகசியம் தெரிந்து விட்ட நிலையில் அவரது அம்மாவாகி விட்ட மிரியம் – திருமணம் செய்து கொண்ட போது அவரது கணவரை ஒரு கையிலும் குழந்தை நர்ஸை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ நர்ஸின் நினைவுக்கு வந்தது.

தன் சொந்த அம்மா பிரியப் போகிறார் என்பதைத் தாங்க முடியாமல் தானோ என்னவோ அன்று நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னார் நர்ஸ். திருமண ஸ்பெஷல் கேக் வைத்திருந்த குட்டி மேஜையின் அடியில் புகுந்த நர்ஸ் அதன் காலை வாரி விட வெடிங் கேக் கீழே விழுந்து உடைந்து போனது. இது ஒரு சகுனமோ என்னவோ என்கிறார் நர்ஸ்.

 

தனது டி என் ஏ சாம்பிளையும் குடும்ப உறுப்பினர்களின் டி என் ஏ சாம்பிள்களையும் சோதனைக்கு அனுப்பியும் நர்ஸால் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசைப் பெற்றவர்; உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தந்த அறுபதுக்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள்  பெற்றவர்; ஏராளமான விருதுகளைப் பெற்றவர். – அதைத் தனியே எழுதினால் ஒரு புத்தகமாகவே ஆகி விடும்!-  அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானிக்கு – மரபணு ஞானிக்குத் – தன் சொந்த வாழ்க்கை பற்றிய மர்மம் ஒரு விசித்திரமான விஷயமாக ஆகி விட்டதை விதியின் கொடுமை என்று சொல்வதா?

 

தன் தந்தை ஒரு சர்வீஸ்மேனாக இருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

 

அவரது வாயால் வந்த உண்மைகளை உலகின் தலை சிறந்த பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன.

 

சிலரது வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல; மர்மமானதும் கூட என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் சர் பால் நர்ஸ்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி வீ ரர்களிலேயே மிகவும் துணிச்சல்காரர் என்ற பெயரெடுத்த ஜான் யங் தனது 87ஆம் வயதில் 5-1-2018 அன்று மரணமடைந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை நினைவு கூறும் விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் துக்கத்தை இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். 1972இல் ஏப்ரல் மாதம் சந்திரனில் இறங்கிய அபல்லோ 16 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் யங். சந்திரனின் ஆராயப்படாத புதிய பகுதியில் தனது ல்யூனார் ரோவரை இயக்கி சாதனை படைத்தார். சுமார் 200 பவுண்ட் எடையுள்ள சந்திரக் கற்களைக் குவித்தார்.

 

அவரைப் பற்றிய சுவையான சம்பவங்கள் பல உண்டு.

24-9-1930 இல் பிறந்த அவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் ‘சந்திரனுக்கு மனிதன் செல்ல வேண்டும்’ என்ற உரையைக் கேட்டு உத்வேகம் அடைந்தார். நாஸாவில் சேர்ந்தார். 42 ஆண்டுக் காலம் பணியாற்றினார். 6 முறை விண்வெளிக்கு ஏகினார்.

நாஸாவில் அவர் சேர்ந்தவுடன் உடா என்ற இடத்தில் உள்ள தியோகால் தொழிற்சாலையில் ராக்கட்டின் இயக்கத்தைச் சோதனை செய்யும் போது ராக்கட் பூஸ்டர் பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அனைவரையும் பயமுறுத்தியது. அவரது சகாவும் அவருடன் விண்வெளியில் பின்னர் கூடப் பறந்தவருமான கிப்பன் என்பவர் அவரை நோக்கி, “ என்ன யங், இந்த மாதிரி ராக்கட்டுகளில் ஒன்றில் பறக்க ஆசைப் படுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உடனே யங், “ஒன்றென்ன, இரண்டில் பறக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்தார். அப்படியே விண்வெளியில் பறந்தும் காண்பித்தார்.

 

சந்திரனுக்கு மட்டும் மனித்ன் போனால் போதாது, இதர கிரகங்களுக்கும் சென்று கால் ஊன்ற வேண்டும் என்பதே மனித குலத்திற்கு அவர் அளித்த செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாமும் இணைவோமாக!

***

 

 

 

TIT FOR TAT- CHANAKYA’S ADVICE (Post No.4661)

Written by London Swaminathan 

 

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London – 17-55

 

Post No. 4661

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

‘Cut a diamond with a diamond’, ‘take a thorn with another thorn’ are some of the proverbs in many Indian languages. We have many stories of ‘Tit for Tat’ in Indian folk tales. Chanakya also advocates this policy.

 

Every South Indian child has heard the story that elephant and pots are equal. If you have not heard that story, here it is in short : A person hired an elephant for a procession and unfortunately it died while it was in the procession. When the owner came and demanded the elephant the person was ready to give its price saying it was dead during the procession. But the owner harassed him saying that he wanted the elephant alive and not the money. The person who hired it was struggling to convince him. But he had a wise friend who whispered something into his ear. Then he asked the owner of the elephant to come to his house next day morning to get the elephant.

 

The stupid owner went to his house the next morning. When the door did not open, he broke it open and entered the house. Behind the door were several mud pots staked into several rows. All those pots were broken because of his gate crashing. And yet he demanded his elephant.

 

Now the person inside the house cried, “ Oh my god, my pots with big antique value were all crushed into pieces’. He demanded that the owner of the elephant should return all those pots intact. When he told that he would give the money for the pots he refused to accept it. He told him , “ you refused to accept my money for the elephant and wanted the dead elephant to come back alive. In the same way, I  want my pots with antique value to come back ‘alive’.

 

When the argument grew louder and louder they went to the court and the judge told that you lost your elephant and he lost the valuable mud pots. Both of you refused to accept money and the lost elephant and the lost antique pots were equal and so no one need to give anything to the other party. Case was settled.

 

This is what we call ‘Tit for Tat’.

Chanakya says,

“A good turn is to be repaid by good turn and the violence by counter-violence. There is nothing wrong in it. One should behave in a wicked manner with the wicked.”

-Chanakya Niti, Chapter 17, Sloka 2

krute pratikrutam kuryaad himsane pratihimsanam

tatra dosho na patati dushte dushtam samaacharet

 

xxx

At bad time, Mind goes astray!

He also added that one’s mind go astray when one’s end is near i.e Vinaasa Kale Vipareetha Buddhi

 

“The golden deer was not made by some one, nor was it seen earlier, nor it heard about. When adversity is round the corner, mind goes astray.”

-Chanakya Niti, Chapter 16, Sloka 5

na nirmitah kena na drushtapuuvah

na sruuyate hema mayah kurangah

tathaapi thrushnaa raghunandanasya

vinaasa kale vipareeta budhdhih

 

(This is a reference to the golden deer anecdote in the Ramayana)

 

–Subham–

 

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London – 8-10 AM

 

Post No. 4660

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

பிப்ரவரி 2018 ‘நற் சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- தை- மாசி மாதம்)

இந்த மாத காலண்டரில் மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து 28 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழா – பிப்ரவரி 13- மஹா சிவராத்திரி

அமாவாசை- 15  (சூரிய கிரஹணம்; இந்தியாவில் தெரியாது)

ஏகாதஸி விரதம்-11, 26

 

பிப்ரவரி மாத முகூர்த்த தினங்கள்—4, 5, 7, 11, 18, 19, 26

 

பிப்ரவரி 1 வியாழக்கிழமை

 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

 

சிவனவனென்  சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவன்றாள் வணங்கி

பிப்ரவரி 3 சனிக்கிழமை

 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கண ங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை

சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

 

 

பிப்ரவரி 7  புதன்கிழமை

தாயிற் சிறந்த தயாவாவன தத்துவனே

–சிவ புராணம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 8 வியாழக்கிழமை

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

 

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

மதுரைப் பெருநன் மாநகரிருந்து

குதிரைச் சேவகானாகிய கொள்கையும்

 

பிப்ரவரி 10 சனிக்கிழமை

தண்ணீர்பந்தர் சயம்பெறவைத்து

நன்னீர்ச் சேவகானாகிய நன்மையும்

–கீர்த்தித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

 

 

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

 

இன்னிசை வீணையில் இணைந்தோன் காண்க

 

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

பத்தி வலையிற் படுவோன் காண்க

 

 

பிப்ரவரி 14  புதன்கிழமை

 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்

–திருவண்டப்பகுதி (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 15 வியாழக்கிழமை

 

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

 

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

 

பிப்ரவரி 17 சனிக்கிழமை

 

ஆடக மதுரை அரசே போற்றி

கூடலிலங்கு குருமணி போற்றி

தென்றில்லை மன்றினுளாடி போற்றி

 

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

 

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

 

 

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

 

பிப்ரவரி 21  புதன்கிழமை

மூவா நான்மறை முதல்வா போற்றி

பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

–போற்றித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

நாடகத்தாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

 

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி யுயிராகி உண்மையுமாயின்மையுமாய்க்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே

 

பிப்ரவரி 24 சனிக்கிழமை

யானே பொய்யென் நெஞ்சும்

பொய்யென் அன்பும் பொய்

யானால் வினையே னழுதா

லுன்னைப் பெறலாமே

 

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

 

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடிரண்டும் மறியேனையே

 

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை

சடையுளே கங்கை வைத்த

சங்கரா போற்றி போற்றி

 

பிப்ரவரி 28  புதன்கிழமை

பிழைத்தவை பொறுக்கையெல்லாம்

பெரியவர் கடமை போற்றி

–திருச்சதகம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

–subham–

 

 

 

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்! (Post No.4659)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 6-06 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4659

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

மஹாபாரதம்

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

 

ச.நாகராஜன்

1

உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.

வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.

இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.

இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.

2

மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.

ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27  புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!

1915ஆம் ஆண்டு  மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.

 

3

விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:

நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |

ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|

ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||

இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.

சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!

அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.

துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.

பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;

பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!

“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”

ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!

இதில் என்ன அர்த்தம் இருக்க  முடியும்?

ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.

லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.

அரி சத்ரு  – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.

கேது – அவரைக் கொடியாக உடையவன்

நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்

நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்

என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!

பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.

4

 

சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”

மனஸா என்றால் 12;

தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.

ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)

5

மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!

இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!

படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 36 (Post No.4658)

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London- 5-48 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4658

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

  பாடல்கள் 206 முதல் 213

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்

பாரதியார் பா மணம் (தொடர்ச்சி)

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு

 

9) சேவை முறைகள் சேர்ந்திருக்குது

        தேசப் பாடலிலே

   பாவையர் சுதந் தரமிலங்குது

        பாரதி பாட்டுளே

 

10) விடுதலையெனும் வீ ணையொலிக்குது

வித்தகப் பாடலிலே

படுபவத் தொழில் பறந்திரியுது

பாரதி பாட்டுளே

 

  1. அச்சமென்ற சொலகன்றிருக்குது

அன்புப் பாடலிலே

பச்சமென்ற சொல்பரவி நிற்குது

பாரதி பாட்டுளே

 

12) கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது

குயிலின் பாடலிலே

பஞ்சமோடிட வழியிருக்குது

பாரதி பாட்டுளே

 

13) அடிமையென்ற சொலகன்றிருக்குது

அமுதப் பாடலிலே

படிதலென்ற சொற்பழுதுபட்டது

பாரதி பாட்டுளே

 

14) முத்தமிழெனும் வெற்றிமுழங்குது

முரசுப் பாடலிலே
பத்தழகுகள் பரவிநிற்குது

பாரதி பாட்டுளே

 

15) அண்டத்தை வெல்லும்

ஆண்மைதங்குது அழகுப்பாடலிலே

பண்டைத்தமிழர் வீ றிலங்குது

பாரதி பாட்டுளே

 

16) பாரதியென்றிட சக்திஜெனிக்குது

பாப்பாப் பாடலிலே

“பாரதி”மாளிகை  தன்னிலுலாவுது

பாரதி பாடல்களிலே

                               (கவிதை முற்றும்)

 

– “பாரதி”     – மாதப் பத்திரிகை

உத்தம பாளையம்  1933 ஆகஸ்டு

 

 

கவிஞர் குறிப்பு : தெரியவில்லை

 

தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.

நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்

***

 

 

WHY DO WE LIGHT LAMPS AT HOME? (Post No.4657)

Written by London Swaminathan 

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London – 17-53

 

Post No. 4657

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

There are two stories in Tamil Nadu about lighting a lamp in the house when the sun sets. Even today most of the Tamils follow it despite electric lights in every room of a house. We do follow it in London despite the fire hazards.

 

In the days before electricity came to Indian towns and villages it was a must. But even today people follow the ancient custom of lighting the traditional lamp in the prayer room or a corner of a house.

 

To illustrate the importance of it there are some folk tales. Mr Natesa Sastri was a scholar who collected them from old people and published them in 1886 in Tamil and English. But I give below my own translation.

 

There was a farmer in a village who had two daughters. One of them got married locally and another was married to a Sozian ( a man form Chola country) in a nearby town. The eldest one who was married locally lost her husband and father in course of time. She had no issue. She made her living by working in the paddy fields. She had an unusual habit of consuming a large quantity of food i.e two measures of rice every day. Actually, ten people can eat in two measures of rice. (A Tamil measure is bigger than one litre). She was very shy and so she did not tell anyone about it and never sought a reason for it.

One day the eldest one felt sick. Sozian’s wife visited her elder sister. It was getting darker and the sun had set. The eldest one started cooking by adding an extra half a measure  because of her younger sister’s visit.

 

Two things surprised her younger sister. Firstly, two and half measures of rice for two people! Secondly, cooking in a pitch dark place. She slowly spoke to her elder sister. She asked why she was cooking in a pitch-dark place and why she cook for ten to twelve people. Her elder sister answered her saying that she had no money to buy oil and more over she was eating two measures of rice every day and she did not know why.

Then her younger sister insisted she must go and get some oil for the lamp, otherwise she could not stay there for night. At last she went out and got some oil for half a measure of rice and lighted the lamp and finished the cooking. When both of them felt contented after eating they saw three fourth of their rice was still in the cooking pot. While both of them were wondering how was it that after eating little they felt full in stomach.

At that time they heard a loud noise. One voice asked the other voice, ‘Oh Sokka, do we get food or not tonight?’ The other voice replied ‘Oh, No, Sozian came and spoiled it’. Both the sisters were puzzled by that noise because no one else was in that house. When they gathered enough courage, they asked who they were. One voice replied that he was a ghost and came to this house every day to take the food because it was dark. Today the Sozian made her to light the lamp and so they were running away from the place. Now the younger one reasoned out that was why her elder sister consumed two measures of rice every day. When the ghosts went out of the house the eldest daughter returned to her normal eating schedule.

Picture by Karthik Raghavan sent from Kaladi in Kerala

 

A crocodile story

There was a Brahmin youth in a village. He got married to a woman in a village nearby. After the traditional four day marriage, the first night was arranged. The newly married Brahmin youth went to the nearby tank (pond) for evening prayers and water ablution. The tank had several man eating crocodiles. No one warned the bridegroom. Suddenly a crocodile pulled him into water.

 

The bridegroom had the shock of his life. But in a moment, he managed to say a few words. ‘Oh Crocodile Unlce! leave me alone for this night. I am newly married and my wife is waiting for the first night meeting. Let us have our honey moon tonight and I will definitely come tomorrow morning and then you may eat me. If you swallow me  now, my wife and her aged father would die of sorrow and you would incur the sin of killing three Brahmins.”

 

The crocodile said to him, “Ok, you may go now and return tomorrow. Because you are a Brahmin who never go back on his words, I trust you”.

The young Brahmin returned home and went to bed with his wife. In the middle of night he explained everything that happened on that day. His wife told him, “Oh, My Darling! Don’t wait till tomorrow morning; others may not allow you to go to die; So go to the tank now!”

 

He was shocked to hear such horrible words from his new wife. He thought women must be devils; so, it is better to die in the pond by the crocodiles instead of living with this cruel woman. He came back to the tank and called the crocodile. The crocodile sprang upon him. At that moment, a sudden flash of light appeared in the place and disappeared. The crocodile said to him, Oh No, I can’t eat you. The light has gone out. No living being eats if the lights go out. Sorry, You may go home”.

 

When he turned back he saw his wife coming running with tears of joy in her eyes. She said to him,

“Oh My Darling I prayed to all the Gods in the world that my plan should work. I lighted a lamp in a pan ad covered it. When the crocodile sprang upon you I showed it to him and put it off. You know what happened then”

Then he hugged his wife and said to her, “Darling You are the most beautiful woman in the world. You are the most intelligent woman in the world;  all the people in the world would come to know the significance of lighting a lamp in the house through you”. From that day onwards village folk lighted lamps inside the house and put one lamp in the niche on the outside wall.

 

Both these stories are in wide circulation among villagers in South India.

 

–Subham–