MUSLIM, CHRISTIAN SUPERSTITION ANECDOTES (Post No.4725)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-37 AM

 

Compiled by London swaminathan

 

Post No. 4725

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES SUCH AS FACEEBOOK, GOOGLE AND WEBSITES.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

Superstition Anecdotes 

Coleridge, when asked by a lady if he believed in ghosts, replied,

“No, madam, I have seen too many to believe in them”.

 

Xxx

How to serve Meals?

Carefully explaining the correct procedure in serving meals, the wealthy society lady ended her little lecture to the new maid by saying,

Now, Mary, don’t forget. You always serve from the left and take the plates from the right.

 

I won’t forget, Madam, answered the girl in a conciliating tone of voice, but what is the matter? Superstitious or something?

Xxx

Negros Superstition

 

Abraham Lincoln told this story

A balloon ascension occurred in New Orleans before the war, and after sailing in the air for several hours, the aeronaut who was arrayed in silks and spangles like a circus performer, descended in a cotton field where a gang of slaves were at work. The frightened negroes took to the woods ,all but one venerable darky, who was rheumatic and could not run, and who, as the resplendent aeronaut approached, having apparently just dropped from heaven, said,

Good morning. Massa Jesus; how is yo pa?

 

Xxx

Muslims object to Telephone

 

When the first line was put in for King Ibn Saud in Arabia, Moslem religious leaders protested against such innovations and works of the devil from the land of the Infidel. Ibn Saud listened to their complaint and gave judgement,

If the telephone is really the work of the Devil , the holy words of Koran will not pass over it,if the holy words do pass over it. It assuredly cannot be the work of the Devil. So we will appoint two mullahs, one to sit in the palace and one in the telephone exchange, and they are to take turns reading a passage from the Holy Book, and we will see. By this test the r religious leaders were convinced.

 

Xxxx

Key and Snake!

A snake having twined itself round a key, which was declared by the seers to be a portent, Leotychidas (Spartan Ruler 545 BCE) remarked

It would have been more of a portent if the key had twined itself round a snake.

Xxxx

No Boots!

General Emilio Mola, second in command with the Spanish fascists, was killed in an airplane crash. When the peasants picked him up they found he was in his stocking feet. A brother officer explained that a Gipsy had once told the General he would die with his boots on, and he therefore always took his shoes off when in an air plane.

 

Xxxx subham xxxxx

 

 

டெலிபோனுக்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு (Post No.4724)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-11 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4724

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.

 

சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.

 

அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!

 

மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.

சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?

 

நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!

ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.

 

XXXXX

பேய்கள் இருக்கிறதா?

ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).

 

அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.

“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”

 

காலரிட்ஜ் செப்பினார்_

“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு  பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”

 

xxxxxx

 

ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?

லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON)  சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!

 

பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.

 

 

லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?

 

லூயிஸ் சொன்னான்:

அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

 

வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!

 

XXXXX

 

நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.

 

‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.

 

‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.

 

 

(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)

 

(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)

 

-சுபம்–

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1 (Post No.4723)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-37 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4723

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு இதழான ஹெல்த்கேர், பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1

 

ச.நாகராஜன்

 

Kolkata Street from Deccan Herald

“நடைப் பயிற்சியே நல்ல மருந்து” – ஹிப்போக்ரேடஸ்!

 

 

1

ஓடலாமா?

குதித்துக் குதித்துப் போகலாமா?

தாவித் தாவிப் பார்க்கலாமா?

சைக்கிளை எடுத்து ஓட்டலாமா?

ஸ்கேடிங் செய்யலாமா?

ஆயிரம் யோசனைகள் -ஆரோக்கிய மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்று.

இவை அனைத்தையும் விட எளிமையான வழி ஒன்று உண்டு.

அது தான் நடைப் பயிற்சி.

மேலே கூறிய எதுவும் தராத அருமையான பலன்களைத் தருவது

நடைப் பயிற்சியே!

அப்படி நடந்தால் – நடைப் பயிற்சியை மேற்கொண்டால் – நாம் அடையும் நன்மைகள் என்னென்ன?

 

 

2

‘ஜாக்கிங்’ (Jogging) செய்வதன் மூலம் எவ்வளவு கலோரிகளை உடலிலிருந்து செலவழிக்க –  எரிக்க – முடிகிறதோ அவ்வளவு கலோரி எரிப்பை நடைப் பயிற்சியே தருகிறது.

முதுகு வலியைப் போக்குகிறது.

இடையளவைக் குறைக்கிறது. (பார்க்க அழகு தான்!)

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் வலுவையும், ஆற்றலையும் கூட்டுகிறது.

மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கிறது.

சிந்தனை ஆற்றலைக் கூட்டுகிறது.

தசைகளை மேம்படுத்துகிறது.

மூட்டுகளை வலுவாக்குகிறது.

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

ஏரோபிக் (Aerobic capacity) திறனை அதிகப்படுத்துகிறது.

சிறிது சிறிதான அளவில், அவ்வப்பொழுது நேரம் கொடுத்து நமது சௌகரியத்திற்கேற்ப செய்ய முடியக்கூடியது.

Osteoporosis bone loss – எலும்பு மெலிதலால் ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்கிறது.

அவ்வப்பொழுது பயணம் மேற்கொள்வோராலும் கூட, எங்கிருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கிச் செய்ய முடிவது.

இவ்வளவு நன்மை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இருக்கிறது இன்னும் பல நன்மைகள்.

 

 

3

பாதுகாப்பானது!

நடைப் பயிற்சியைப் போல பாதுகாப்பானது எதுவுமே இல்லை.

இதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

பயிற்சியாளரின் உதவியும் தேவையில்லை.

இப்படிப்பட்ட உடல் தகுதிகள் தேவை என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

உடல் வலி மற்றும் இதர உபாதைகளோ அல்லது பக்க விளைவுகள் எதுவுமோ இல்லை.

எந்த சாதனத்தின் உதவியும் தேவை இல்லை.

செலவே இல்லை.

ஓடுவது, தாண்டுவது, குதிப்பது, புரள்வது போன்ற எந்த வித செய்கையையும் எடுத்துப் பார்த்தால் அதை விட மிக எளிதானது.

அதிர்ச்சி விளைவு எனப்படும் Shock Impact ஐ எடுத்துக் கொண்டு பார்த்தால் அது ஓடுகின்ற போது ஓடுபவரின் எடையை விட 3 அல்லது நான்கு மடங்கு கூட இருக்கிறது.

ஆனால் நடப்பவருக்கோ இந்த அதிர்ச்சி விளைவு ஒன்றரை மடங்கு மட்டுமே இருக்கிறது.

பேஸ்கட் பால் போன்ற இதர விளையாட்டுக்கள் உடல் எடையைப் போல ஏழு மடங்கு அதிகமாக இந்த ஷாக் இம்பேக்டைத் தருகிறது.

 

 

4

நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு உகந்தது. எளிமையானது.

ஓடினால் ஏற்படக்கூடிய அதே எடைக் குறைவை இதுவும் நல்குகிறது!

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து மைல் என்ற வேகத்தில் நீங்கள் ஓடுவதாக வைத்துக் கொண்டால், 30 நிமிடங்களில் நீங்கள் 285 கலோரிகளை எரிக்க முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் என்ற வேகத்தில் நீங்கள் நடப்பதாக வைத்துக் கொண்டால், அதே 30 நிமிடங்களில் நீங்கள் சமமான தரையில் (தளத்தில்) நடந்தால் 165 கலோரிகளை எரிக்க முடியும். சற்று சாய்வான தளத்தில் – அதாவது 5 % சாய்வில் – 225 கலோரிகளை எரிக்க முடியும்.

பத்து % சாய்வான தளத்தில் 360 கலோரிகளை எரிக்க முடியும்!

 

5

விலை உயர்ந்த வீடியோ சாதனங்களை வாங்க வேண்டாம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எதுவும் தேவையில்லை.

தனி இடம் தேவை இல்லை.

ஆப்ஸ் எதுவும் தேவை இல்லை.

வழிகாட்டி – கையேடு – எதுவும் தேவையில்லை.

இயற்கையாக நடக்கலாம்.

சந்தோஷத்துடன் நடக்கலாம்.

உங்கள் விருப்பப்படி நடக்கலாம்.

உங்களுக்கு உகந்த நேரத்தில் நடக்கலாம்.

நடைப் பயிற்சியில் உங்களுக்கு உதவ, நன்மைகளை அதிகம் அடைய சில எளிய – அனுபவக் குறிப்புகள் உள்ளன.

அவை யாவை? இதோ பார்ப்போம்.

 

6

நடைப் பயிற்சியின் முழுப் பலனையும் அடைய Posture எனப்படும் தோற்ற அமைவு மிக முக்கியமானது.

தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முதுகெலும்பை நேராக நிமிர்த்தி நடத்தல் வேண்டும்.

கைகளையும், தோளையும் சற்று தளர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நேராகப் பார்வையைச் செலுத்துங்கள்.

அதற்காக எங்காவது குழியில் விழுந்து விடாதீர்கள். நமது சாலைகளைப் பற்றியும் பிளாட்பாரங்களில் ஆங்காங்கே இருக்கும் குழிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பள்ளங்களில் மாட்டிக் கொண்டு மருத்துவ  மனைகளுக்குச் சென்று விடக் கூடாது.

ஆகவே அவ்வப்பொழுது சாலை அல்லது பிளாட்பாரத்தின் கோலத்தை அல்லது அலங்கோலத்தையும் மதிப்பீடு செய்யத் தவறாதீர்கள்.

இது தவிர ஆங்காங்கே இருக்கும் சாலைத் தடைகள் – Road Blocks – பற்றியும் கவனம் கொள்ளுங்கள்.

*

ஆழ்ந்த மூச்சை சீரான இடைவெளியில் விடுங்கள்.

நடவுங்கள், ஓடாதீர்கள். அதாவது சுறுசுறுப்பான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவு தான்! வேகமான அடிகளை அல்ல!!

நீங்கள் தினமும் நடக்க ஆரம்பித்தவுடன் உங்களுக்கே நீங்கள் எப்படி நடக்கலாம் என்பது தெரிய வரும்.

மூச்சு விட சற்று சிரமமாக இருந்தால் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள்.

 

*

உங்கள் உடல் தரும் செய்தியைக் கேளுங்கள்.

அட, பிரமாதமாக இருக்கிறதே, நடைப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு புதிய தென்பு, உற்சாகம் வந்து விட்டதே என்று நீங்கள் நினைத்தால் அது தான் நல்ல நடை!

சற்று வலியோ அல்லது அசதியோ அல்லது வசதிக் குறைவோ, உற்சாகமின்மையோ தோன்றினால் உங்கள் நடைப் பயிற்சியைச் சற்று மாற்றி அமையுங்கள்.

நீங்களே உங்களுக்கு நீதிபதி. அவ்வளவு தான்!

*

எப்படிப்பட்ட அடிகளை எடுத்து வைக்க வேண்டும்? சீரான, நீளமான காலடிகளை எடுத்து வையுங்கள். உங்கள் நடை பிரயத்தனமின்றி இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்.

பகீரதப் பிரயத்னம் என்பது நடைப் பயிற்சியில் இல்லவே இல்லை.

கைகளை ஆட்டினால் அது உங்கள் உடல் பாலன்ஸை அனுசரித்து இருக்க வேண்டும்.

எதையும் வலியச் செய்ய வேண்டாம்.

 

அட, எளிய நடைப் பயிற்சியில் இவ்வளவு இருக்கிறதா, என்று நீங்கள் கேட்டால், இன்னும் நிறைய இருக்கிறது உபயோககரமான குறிப்புகள் என்ற பதில் தான் வரும்.

10000 காலடி நடைப் பயிற்சி என்று ஒன்று உண்டு.

பத்தாயிரம் காலடி நடைப் பயிற்சியா? அது என்ன?

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அது வரை, நடக்க ஆரம்பியுங்கள், குட் பை!

எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுரையின் ஆரம்ப வரி அற்புதமான ஒருவரின் அனுபவக் கூற்று.

ஆம், – ஹிப்போக்ரேடஸ் கூறியது அது: “நடைப் பயிற்சியே நல்ல மருந்து”

Rama walked for 14 years!

 

-தொடரும்

Address of Healthcare R.C.Raja, Editor  Healthcare, 10 Vaiyapuri nagar, Thirunelveli Town 627006 Yearly subscription Rs 120/

 

பாரதி போற்றி ஆயிரம் – 48 (Post No.4722)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-03 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4722

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 48

  பாடல்கள் 306 முதல் 317

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

புதுவை விட்டு நீங்கல் மற்றும் மீண்டும் சென்னை வாழ்வு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரண்டு பாடல்கள்

 

 

புதுவை விட்டு நீங்கல்

 

கண்டோம், கேட்டோம் பாரதியின் – சீர்த்தி

   காசினி எங்கும் பரவியதே!

புண்ணிய பாரத எல்லைக்குள் – பாரதி

   எப்பொழு துவருவார் என்றுநோக்கி

கொண்டனர் கோபம் ஆங்கிலேயர் – அதனால்

   காவல் பலமும் கூடியதே!

கொண்ட நாட்டுப் பற்றோங்க – பாரதி

   தமிழகம் செல்ல எண்ணினார்காண்!

 

எண்ணிய எண்ணம் மோலோங்க – பாரதி

   அன்பர் பலரிடம் கூறினார்காண்!

நண்பர் பலரும் பாரதியை – நெருங்கி

   தமிழகம் செல்லத் தடுத்தனர்காண்!

அண்டியே ஊழ்வினை துரத்திடவே – பாரதி

   அனைவ ரிடமும் விடைபெற்றார்!

கண்ணீர் சிந்தக் குடும்பமுடன் – பாரதி

   கன்னிப் பாரதம் நுழைந்தார்காண்!

 

நுழைந்த இடமே வில்லியனூர் – கோழிக்

   குஞ்சை நாடிய பருந்துபோல

விழைந்து வந்த காவலர்கள் – பாரதி

   குடும்பந் தன்னை சூழ்ந்தனரே!

குழைந்து வாடப் பாரதியைக் – காவலர்

   கைது செய்து ஏகினர்காண்!

நுழைத்து கடலூர் சிறைதனிலே – அடைத்து

   நலியச் செய்து வருத்தினர்காண்!

                                                                               

வருதிச் சிறையில் அடைபட்டார் – செய்தி

   த்வியாபித் தெங்கும் பரவியதே!

உருக்கிய ஈயம் வார்த்தகாது – அதுபோல்

   இன்னல் ஏற்றனர் நண்பர்கள்!

வெருவியே தூத்துக் குடிநண்பர் – நாவலர்

   சோம சுந்தர பாரதியார்

வருந்தி விரைந்து சென்னைவந்தார் – பாரதி

   விடுதலை வேண்டிச் செயல்பட்டார்.

 

செயல்படு சுதேச மித்திரனின் – உரிமை

  அரங்க சாமி ஐயங்கார்

அயரா துழைத்தார்! இருவருடன் – காவல்

   அதிகா ரிதுரை கானிங்டன்

தயவும் கூடிட அரும்பணியால் – பாரதி

   தன்னிகர் விடுதலை தானேற்றார்!

துயருடன் இருபத் துநான்கு நாட்கள் – பாரதி

   சிறையில் காலம் கழித்தாரே!

 

கழித்தார் பதினோ ராண்டுகாலம் – புதுவை

   கொடுத்தது அடைக்கலம் பாரதிக்கு!

அழியாப் பொக்கிசம் கட்டுரைகள் – கவிதை

   உணர்ச்சிக் காவியப் படைப்புகள்

எழிலுறு பக்தி கீதங்கள் – விழிப்பினை

   யூட்டும் எழுச்சிப் பாடல்கள்

தொழிலே படைப்பாய் கொண்டவராம் – பாரதி

   தேச விடுதலை வேண்டினாரே!

 

 

 

மீண்டும் சென்னை வாழ்வு

 

வேண்டியே துணைவி விருப்பத்தால் – பாரதி

  ஊராம் கடையம் சென்றாரே!

தீண்டிய வறுமை போக்குதற்கு – எட்டய

   தலமே உகந்தது என்றெண்ணித்

தூண்டிய குடும்பத் துடன்சென்று – தங்கி

   தொண்டினைத் தொடர்ந்தார் பாரதியார்

மாண்புடன் சுதேசமித் திரனுக்கு – கவிதை

   மீண்டும் அனுப்பி தொண்டேற்றார்.

 

தொண்டால் உயர்ந்த காந்தியண்ணல் – ஒத்துழை

   யாமை இயக்கம் நடத்திவந்தார்!

கொண்டார் பயணம் சென்னைக்கு – அங்கு

   கண்டிட விரைந்தார் பாரதியும்!

அண்ணலும் கவிஞரும் சந்தித்து – அறிமுகம்

   ஏற்றனர் இராசா சிஇல்லத்தில்!

பண்ணிசை சுதந்திர கீதத்தை – பாரதி

   பாடக் கேட்டார் காந்தியண்ணல்.

 

காந்தி யடிகளைக் கண்டபின்னே – பாரதி

   சென்றார் எட்டய புரத்திற்கு!

ஏந்திய செய்தி அழைப்புகண்டார் – மீண்டும்

   சுதேச மித்திரன் நாளிதழ்க்கு!

“தேர்ந்த உதவி ஆசிரியர் – பதவி

   துரிதமாய் ஏற்க விரைந்துவாரீர்”

தாந்திற மறிந்து கிடைத்தபணி – பாரதி

   தொழிற்பணி ஏற்க சென்னைசென்றார்!

 

சென்னை சென்று பணியேற்றார் – குடும்ப

   சீல உறவு நன்றேற்றார்!

இன்னிசை திருவல் லிக்கேணி – பகுதியில்

   உற்ற வாழ்விடம் ஏற்றார்காண்

முன்னைய நண்பர் பலருமங்கு – அவர்க்கு

   உறுதுணை புரிந்து வந்தார்காண்

பொன்னிற குவளைக் கண்ணனென்பார் – அவரே

   பாரதி பணியை ஊக்குவித்தார்.

 

ஊக்க மேற்ற பாரதியார் – முன்னை

   உரைகள், கவிகள், ஒருங்குவித்து

ஆக்கம் பெற்றிடத் தொகுத்தளித்தார் – ஆன்ற

   பத்திரி கைப்பணி நன்றேற்றார்!

காக்கும் பார்த்த சாரதியை – வணங்கி

   கவிதைத் தேரில் உலவிவந்தார்!

சாக்தம் சக்தி அருளினாலே – வெற்றிச்

   செயலில் ஏற்போம்! முரசொலித்தார்!

 

முரசு கொட்டி சுதந்திரத்தை – வேண்டி

   முழக்க மிட்டார் பாரதியார்!

அரசு ஆங்கில ஆட்சிக்கு – அன்றே

   எதிர்த்து விடுதலை பாடிவிட்டார்!

விரவிய இந்திய சமுதாயம் – விடுதலை

   வேட்கைப் பயனை நன்றிசைத்தார்!

பரவலித் துகண்ணனை வணங்கியபின் – உடைத்த

   தேங்காய் பழமுடன் தினம்வருவார்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

 

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

காதல் நோய்க்கு களிம்பு! அவுரங்கசீப் மகிழ்ச்சி! (Post No..4721)

Date: 9 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-53

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4721

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் உள்ள பல சுவையான படங்களில்

மேலும் மூன்று படங்களைக் காண்போம். ஒரு படம் அவுரங்கசீப்பின் மகனின் காதல் பைத்தியத்தைத் தீர்க்க ஆலோசனை செய்யும் படமாகும். மொகலாயப் பேரரசின் அஸ்திவாரத்தை தன் மதவெறியால் பெயர்த்தெடுத்த அவுரங்கசீப்புக்கு புதிய பிரச்சனை ஒன்று தோன்றியது. அவரது மகன் பேரழகி, இளவரசி மல்லிகே மல்க் மீது காதல் கொண்டான். இந்தக் காதல் பைத்தியம் அளவுக்குப் போனவுடன், அவுரங்கசீப், யுனானி வைத்தியரை (ஹகீம்) அழைத்தார். அவர் (படத்தில் சிவப்பு வண்ண உடை) ஒரு யுனானி களிம்பை சிபாரிசு செய்தார். இந்தப் படம் பாரசீக எழுத்துக்களுடன் உள்ளது. அவுரங்கசீப் கவலையில் ஆழ்ந்திருக்க ஹகீம் களிம்பு பற்றிச் சொன்னவுடன் அவருக்கு கொஞ்சம் திருப்தி!

 

யுனானி மருத்துவம் என்ற சொல் கிரேக்க சொல்லான ஐயோனிய, யவன என்ற சொல்லில் இருந்து வருகிறது. கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்ரடீஸ், காலன் (HIPPOCRATES AND GALEN) ஆகியோரின் சிகிச்சை முறைகளை அராபிரய அறிஞர்கள் இஸ்லாமிய முறைகளுடன் கலந்து தெற்காசிய, மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் பரப்பினார்கள். மொகலாயப் பேரரசில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

 

முதல் பெண் டாக்டர்

கண்காட்சியில் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மா பாயின் படமும் உள்ளது. இவர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியில் படித்தபின்னர் பல நாடுகளுக்குச் சென்று பயின்றார். பின்னர் பம்பாய்க்குத் திரும்பி வந்து டாக்டராகப் பணி புரிந்தார். அவ்வகையில் இந்தியாவில் பணி யாற்றிய முதல் இந்தியப் பெண் டாக்டர் இவர்தான். ஆனால் இவருடைய திருமண வாழ்வு, சர்ச்சைக்குள்ளாகி, பின்னர் முறிந்தது. இவர் 11 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பருவம் அடைந்தவுடன் சாந்தி முகூர்த்தத்துக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவரது கணவர் கோர்ட்டை அணுகி வெற்றியும் கண்டார். கோர்ட் அவரை, கணவருடன் வாழ உத்தரவிட்டது. அவர் மறுத்தார். பால கங்காதர திலகர் போன்றோர் கணவர் சொல்வதே இந்து தர்ம விதிகள் என்றனர். கோர்ட்டும் அதையே சொன்னது. ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார். இறுதியில் ருக்மா பாய், விக்டோரியா மஹாராணியை அணுகி கோர்ட் உத்தரவை ரத்து செய்தார். அந்தக் காலத்தில் மஹாராஷ்டிரத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட விஷயம் ஆகவிருந்தது.

 

யோகிகளும் அபினியும்

இந்து யோகிகள், குறிப்பாக இமயமலைப் பகுதியில் வசிக்கும் யோகிகள், அபினி (கஞ்சா) சாப்பிடுவதாகச் சொல்லுவர். யோகிகள் அபினி தயாரிக்கும் ஒரு படம் வெல்கம் சென்டர் ஆயுர்வேதக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்ட விஷயமானது:

“தெற்காசிய மருத்துவ சிக்கிச்சையில் அபினி என்பது ஒரு விஷப் பொருள் அல்ல; அதை மருந்தாகவே கருதுகின்றனர். இது பழங்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் இல்லை என்றும் இஸ்லாமிய தொடர்பு மூலம் வந்தது என்றும் கருதப்படுகிறது. இது மிகவும் கெட்ட பெயர் எடுத்த போதைப் பொருள் என்றாலும், மேலை நாட்டு, கீழை நாட்டு மருத்துவத்தில், மலேரியா, காலரா, வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது

 

 

எனது கருத்து:

இந்த 200 ஆண்டுக்கு முந்தைய ஓவிய படத்தின் தலைப்பு சந்யாசிகள் அபினி தயரிப்பதாக சொல்கிறது. இது யோகிகளுக்குக் கடவுள் வைக்கும் ஒரு பரீட்சை. இங்கு லண்டனில் பெரிய இன்வெஸ்ட்மென்ட் வங்கியில்(Investment Bank) வேலை வேண்டுமானால், பல இன்டெர்வியூக்கள் இருக்கும்; பல்வேறு குழுக்கள் பல கோணங்களில் ஒரே ஆளை கேள்வி கேட்பர்; அத்தனை இன்டெரியூக்களிலும் பாஸ் செய்பவரே/ தேறுபவரே வேலையில் அமர்த்தப்படுவர். இதே போல விஸ்வாமித்ரர் கதையிலும் பல சோதனைகளில் அவர் தோற்று கடைசீயில் வெற்றி பெற்று வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அந்த வகையில் இந்த ஓபியம் Opium எனப்படும் அபினி/ கஞ்சாவும் கடவுள வைக்கும் ஒரு சோதனை. சமாதி நிலை அல்லது தியானத்துக்கு உதவும் அபினி என்று சில யோகிகள் எடுக்கத் தொடங்குவர். பெரும்பாலோர் அந்த நிலயில் இருந்து மீண்டு அபினி இல்லாமலேயே தியானம் செய்யப் போய்விடுவர்; சிலர் மட்டும் சேற்றில் அழுந்திய பன்றிகள் போல போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிடுவர். ஆகவே அபினி என்பது கடவுள் வைக்கும் சோதனை; யோகிகள் எவரும் அபினி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை; எழுதியதுமில்லை. ஆகவே அபினியுடன் யோகிகளை இணைத்துக் காண்பது அறியாமையே.

–சுபம்–

If You are in Love and Sick, there is an Ointment! (Post No.4720)

Date: 9 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-23 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4720

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

First Female Doctor in India Rukma Bhai!

‘Ayurvedic Man Exhibition’ in London Wellcome Centre has got pictures of first female doctor of India, Opium making Hindus Yogis, Cow’s Urine as Medicine, Indian Wrestler Picture, Sri Lankan Enema Syringe, Kamadhenu etc with interesting details.

Dr Rukma Bhai (1864-1955) originally from Bombay studied medicine at London School of Medicine for Women and then in a string of other medical colleges in Europe in 1894.As soon as she qualified, she returned to Bombay (Mumbai) and became the first practising female doctor in India. Married at the age of 11, she had lot of problems in her domestic life regarding the consummation right. Though the court ordered her to live with her husband, she refused and got it annulled by the order of Queen Victoria. Her case in the court raised lot of debates in Maharashtra. B G Tilak opposed her saying that it was against Hinduism but Max Muller supported her.

 

Another interesting picture is the recommendation of an ointment to cure love sickness of Aurangzeb’s son. Moghul emperor Aurangzeb ruled India between 1658 and 1707.

 

The Persian inscription in the marbled border says: The Prince is sick in love with Mallikeh Mulk, which is making the king reflective.

“This painting depicts an episode from a romance set in the Moghul court. Emperor Aurangzeb , a Hakim (Unani physician) is at his shoulder with his chief minister. He is worried about his son (in red),who is lovesick for Mallikeh Mulk, a fair princess. The hakim on the lower left recommends an ointment.

Unani (Unani Tibb) is the term for Greco- Arabic traditional medicine as practised in Moghul India and Islamic cultures of South Asia and Central Asia. Its name is derived from the Arabic Yuanaanii meaning Ionian or Greek. Unani is based on the teachings of Greek physicians Hippocrates and Galen as they were islamicised on contact with Muslim scholars and sophisticated centres of learning in the medieval Islamic world.” (from welcome centre).

 

Opium Making Hindu Yogis!

One must be careful with this opium message. If you are applying for a job in any field, there will be an interview for all the applicants. For a post in a prestigious investment bank there are different interviews at different stages by different teams for the same candidate. If you pass in all those interviews you get the job. In the same way God tests Hindu applicants for spiritually higher posts with opium test. It is believed that opium helps you to get in trance in the beginning.  Hindu yogis take it in the beginning and then drop the habit. But if one gets addicted to opium and forgets God, he laughs at you for failing in the first interview itself! So, please be aware that opium is not recommended by Hindu Yogis to spiritual aspirants.

Here is the picture:

 

–Subham–

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை! (Post No.4719)

DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-49 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4719

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இது தான் இந்தியா!

 

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!

ச.நாகராஜன்

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

1

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குத் திரும்புவதும் வழக்கம்.

 

அந்தக் காலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது!

சம்பவத்தைப் பார்ப்போம்.

 

2

(பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில்) இந்திய அரசின் உயர் அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ரைட்டர்ஸ் பில்டிங்(Writers’ Building) சென்று தனது பணி ஒய்வு சம்பந்தமான பேப்பர்களைத் தருவதற்காக சாரட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

பௌ பஜார் (கல்கத்தாவில் உள்ளது) ஒரே டிராபிக். வண்டி நின்றது.

என்ன செய்வது? காத்திருக்கத் தான் வேண்டும், வண்டியை டிரைவர் நகர்த்தும் வரை.

 

சிகார் ஒன்றைப் பற்ற வைத்தார் அவர்.

 

திடீரென்று கோச்சின் வலது பக்கக் கதவு திறந்தது. ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் எட்டிப் பார்த்தார்.

சாதாரண ஆளாக இருந்திருந்தால் பயந்து திகைத்துப் போயிருப்பார்.

 

ஆனால் அவரோ போலீஸ் ஆபீஸர் ஆயிற்றே! இதற்கெல்லாம் பயப்படுவாரா என்ன? 25 ஆண்டுகளில் இது போல எத்தனை

பேரைப் பார்த்திருப்பார்!

 

“ஹுசூர், இவ்வளவு காலம் அரிய சேவை செய்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விஷயமாகத் தான் இருக்கும்! ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்று தானே! வயது வரம்பும் எல்லோருக்கும் ஒன்று தானே”

சர்வ சகஜமாகப் பேச ஆரம்பித்த அந்த ஜடாமுடி சாது இப்படிக் கூறினார் ஆபீஸரிடம்.

 

அவர் அயர்ந்து போனார்.

 

அந்த சாதுவை நோக்கினார்: “ ஓ, சாது ஜி, நான் ரிடயர் ஆகப் போகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அவர் பதில் கூறினார்: “இப்படிப்பட்ட  விஷயங்கள் ஜன சந்தடி உள்ள இந்த இடத்தில் விவரிக்கத் தக்கதல்ல! உங்களை இந்தக் கூட்டத்தில் கண்டுபிடித்து விட்டேன்.அது போதும். சாதுக்களே பெறும் அரிய சித்தியான ஞானத்தின் மூலம் நீங்கள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் எனக்குத் தெரியும். என்ன பிரமிக்கிறீர்களா? பிரமிக்க வேண்டாம்! நீங்கள் உங்கள் கீழே பணி புரிந்த பலருக்கும் நல்லதைச் செய்திருக்கிறீர்கள். அத்துடன் மட்டுமின்றி கத்தியுடன் கூடிய காளியும் சிவனும் குடி கொண்ட பல தலங்களுக்கு நல்லதைச் செய்துள்ளீர்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே இந்த ராஜ்யத்தில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். அந்தக் கத்திகள் வெறும் இரும்பு அல்ல; உண்மையான உயர் ரக  எஃகால் செய்யப்பட்டவை. இன்னும் நீங்கள் செய்துள்ள பல காரியங்களும் புண்ய கர்மங்கள்! ஆகவே வெகு விரைவில் நீங்கள் அளப்பரிய செல்வத்தை அடையப் போகிறீர்கள்! அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இதோ இந்த ருத்ராக்ஷ மாலையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரிகி ராமனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோ வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டன. சாஹப், நான் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்”

 

சாது போய் விட்டார். வண்டிகள் நகரத் தொடங்கின.

தன் வலது கரத்தில் இருந்த ஏழு முகமுள்ள ருத்ராக்ஷங்கள் கொண்ட மாலையை போலீஸ் அதிகாரி வியப்புடன் பார்த்தார்.அந்த வகை ருத்ராக்ஷம் அடர்ந்த ஹிமாலய  மலையின் உட்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை ருத்ராக்ஷங்கள்!

 

“என்ன ஆச்சரியம்” என்று கூவினார் போலீஸ் அதிகாரி.

விஷயத்தை அத்துடன் அவர் மறந்து விட்டார்.

 

பணி ஓய்வு பெற்ற அவர் இங்கிலாந்தின் தென் பக்கம் உள்ள ஒரு ஊரில் குடியேறி விட்டார்.

 

பிரச்சினை ஏதும் இல்லாத வசதியான வாழ்க்கை.

ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் நிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிகார் பிடிக்கும் வேளையில் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

கையெழுத்திட்டு அதை வாங்கிய அவர் தந்தியைப் பிரித்தார்.

அவரது ஒரே சகோதரன் இறந்து விட்டார். அவரோ கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

 

அவரது திரண்ட செல்வம் எல்லாம் சகோதரரான அவருக்கு வந்து சேர்ந்தது.

 

அமைதியாக அவர் உட்கார்ந்து விட்டார்.

அப்போது ஒரே ஒரு க்ஷண நேரத்தில் அவர் முன் ரிக்கி ராமன் தோன்றினார். பின்பு  மறைந்து விட்டார்.

உட்கார்ந்திருந்த அதிகாரி பரபரப்பாக எழுந்து வீட்டினுள் ஓடினார்.

அங்கு ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த ஏழு முக ருத்ராக்ஷ மாலையைப் பார்த்தார்.

 

மிகுந்த சோகம் ததும்பிய குரலில்,” ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகி விட்டதே! சாது ஜீ! அதற்கு இப்படி ஒரு விலையா?” என்று கூவினார்!

 

***

1935ஆம் ஆண்டு வெளியான TRUTH ஆங்கில வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. மீண்டும் 3-11-2000 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : ட்ரூத்

ஆங்கிலத்திலிருந்து தமிழ் வடிவம்: ச.நாகராஜன்

 

ஒளி மாசின் பாதிப்பு (Post No.4718)

DATE – 9 FEBRUARY 2018

Time uploaded in London- 7-15 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4718

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஐந்தாவது உரை

 

  1. ஒளி மாசின் பாதிப்பு ச.நாகராஜன்

 

உலகில் ஒளி மாசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான  மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!

சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுடன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.

இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.

உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!

ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!

உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில்  ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும்  இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!

 தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம்  கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

 

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால்மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும். ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் இதில் வெற்றி அடைய இன்றியமையாததாகும்.

முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!

***


 

செப்பியது யாரோ? தப்பாமல் சொல்!QUIZ (Post No.4717)

Date: 8 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4717

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

கீழ்க்கண்ட பாடல்களைப் பாடியது யாரோ? அவர் யாரோ?

  1. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

 

  1. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
    எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய்

 

  1. “உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
    பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
    தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

 

  1. இந்திரன் முதலா எண்திசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக
    வாசவன் மருகா வருக வருக

 

  1. தேனே யமுதே சிந்தைக்கரியாய்

சிறியேன் பிழை பொறுக்குங்

கோனே சிறிதே கொடுமை பகர்ந்தேன்

 

  1. பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்!

 

  1. உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே

 

  1. ஒரு காலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்

 

  1. உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

 

 

  1. மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசு அறு விரையே! கரும்பே, தேனே!

 

 

  1. ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்

ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே

 

  1. தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்ததெவர் கவிதை? — அயன்

செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை

 

  1. அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்

 

  1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க

 

  1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுடுமோ?

ANSWERS

  1. தற்கால அவ்வையார்
  2. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை
  3. பட்டினத்தார் பாடல்
  4. தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்
  5. மாணிக்கவாசகர், திருவாசகம்
  6. காளமேகம், தனிப்பாடல்கள்
  7. சங்க கால அவ்வையார் , புறநானூறு
  8. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம்
  9. கம்பன், கம்ப ராமாயணம்
  10. இளங்கோ, சிலப்பதிகாரம்
  11. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
  12. பாரதி, பாரதியார் பாடல்கள்
  13. திருமூலர் எழுதிய திருமந்திரம்
  14. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
  15. பாரதிதாசன் பாடல்கள்

 

–subham–

 

 

IF YOU DON’T FIND GOD, YOU MUST LEAVE THE COLLEGE! (Post No.4716)

Date: 8 FEBRUARY 2018

 

Time uploaded in London- 19-54

 

Compiled by London swaminathan

 

Post No. 4716

 

PICTURES ARE TAKEN from various sources; may be subject to copy right laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Agnostic and Atheist Anecdotes!

The late Dr Jowett, the famous master of Balliol College, Oxford, was met one day in the “quad” by an undergraduate who informed him that he, for his part, could find no positive evidence of the existence of God.

Well, Mr B, said Dr Jowett tartly,

“If you don’t find a god by five o clock this afternoon, you will leave this college!”

 

Xxx

 

Voltaire’s Fear

One day. When D’Alambert and Condorcet were dining with Voltaire, they proposed to converse of atheism, but Voltaire stopped them at once.

Wait, said he, till my servants have withdrawn. I do not wish to have my throat cut tonight.

 

Xxx

 

No Religion

During the riots of 1780 most persons in London, in order to save their houses from being burnt or pulled down, wrote on their doors,

No Popery!

Old Grimaldi, to avoid all mistakes, wrote on his,

‘No religion ‘

(The Gordon Riots of 1780 began as an anti-Catholic protest in London against the Papists Act of 1778, which was intended to reduce official discrimination against British Catholics. The protest evolved into riots and looting.)

Xxx

Is Christ All Powerful?

The Little Louise Napoleon did not respond with particular susceptibility to his religious education. In the course of it, he stumbled upon one of the puzzling problems which is remarked upon by many young theological students.

His instructor had portrayed with great melodrama the anguish and suffering of Christ. Louise manifested little reaction

“Aren’t you grieved ?” demanded his teacher, “to think how these wicked men behaved to our Lord.”

“Well”, objected, Louise

“If he was all powerful, why did he let them?”

Xxxx Subham xxxx