இந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –  15-11 (British Summer Time)

 

Post No. 5146

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

இந்தியாவின் வரலாற்றை அழகாக தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளார்  ஆசிரியர்—ஜார்ஜ் பௌர்ஸ்டேய்ன். இந்த ஆசிரியர் 14 வயதான போது ஒருவர் பால் ப்ரண்டன்  (A Search in Secret India by Paul Brunton) எழுதிய ‘மர்ம இந்தியாவில் ஒரு தேடுதல்’ என்ற புஸ்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அது முதல் ரமண மஹரிஷி போன்ற இந்தியப் பெரியோர்களின் ஆன்ம தேடுதல் பணியில் நாட்டம் கொண்டு யோகம் பயின்றார். அமெரிக்காவில் இவரது யோகா ஆராய்ச்சிக் கழகம் உளது. பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் புராதன வரலாறு குறித்து கிடைத்துள்ள பல புதிய தகவல்களைச் சேகரித்து நமது பழமை கி.மு 8000 என்று நிரூபித்துள்ளார்.

கி.மு 250,000 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய மனிதர் தடயங்கள்

 

40,000- மத்திய இந்தியாவில் பிம்பெட்கா முதலிய இடங்களில் மக்கள் வரைந்த ஓவியங்கள்

 

கி.மு. 8000 – 5000 ஸரஸ்வதி- சிந்து நதி தீர நாகரீக இடங்கள் கார்பன் கணக்கீடுகள் கி.மு 8000 என்று காட்டுகின்றன. ஆப்கனிஸ்தான் மெகர்காரில் தெளிவான தடயங்கள் உள.

கி.மு 3000 பாலகோர், ஹக்ரா, அம்ரி முதலிய இடங்களில் ஹரப்பா நகர நாகரீகத்துக்கு முந்திய கிராமங்கள்.

 

 

கி.மு 4000- 2000 – ரிக் வேதம், பின்னர் மற்ற மூன்று வேதங்கள், அதையடுத்து புராணங்களின் தோற்றம்.

 

ரிக் வேத தேதியைக் கணக்கிட அதிலுள்ள வானியல் குறிப்புகள் உதவுகின்றன.

மநு வைவஸ்வதர் (கி.மு.3100) எனப்படும் முதல் மநு, சப்த ரிஷிகள், சூர்ய வம்ச- இக்ஷ்வாகு அரசாட்சி துவக்கம்.

 

 

கி.மு-3210 வேனன் என்னும் கொடுங்கோலனை மந்திரங்கள் மூலம் ரிஷிகள் கொன்ற ஆண்டு; முதல் மன்னன் பிருது ( பிருத்வீ= பூமியின் பெயர்க் காரணம்)

 

பிப்ரவரி 18, 3102 கலியுகம் துவக்கம்

.

கி.மு 3000 ஸரஸ்வதி- சிந்து நதி நகரங்கள் உருவாதல்- மொஹஞ்சதாரோ, ஹரப்பா

 

2950– எகிப்தில் முதல் மன்னர் ஆட்சி துவக்கம்

 

 

2600-1900 சிந்துவெளி நகரங்களின் ஆட்சி

 

2600- 1400 யாக யக்ஞங்கள் பற்றிப் பேசும் பிராஹ்மண இலக்கியம் உருவாதல்.

 

2510- சகர மன்னர்- கபில முனி காலம் ரிக் வேதம் சொல்லும் பிரதர்தனன், திவோதஸன் காலம்

 

2450- பரத மன்னன் (பாரதம் எனப் பெயர் காரணம்) ஆண்ட காலம்

 

2371- 2316 பாபிலோனியாவை ஆண்ட ஸர்கோன், இந்திய சகர மன்னன் என்று வாடல் (Waddel)  கூறுகிறார். (Sargon of Babylonia= Sagaera of India)

2050– தஸரதன் ஆட்சி, ராமர் காலம், இலங்கையில் ராவணன் ஆட்சி

1970– சுதாஸ் எனப்படும் ரிக் வேத மன்னன் காலம்

 

 

1900- ஸரஸ்வதி நதி வறண்ட காலம்; ரிக்வேத மன்னன் துர கவசேயன் காலம்

 

1550– ரிக் வேத மன்னன் தேவாபி காலம்- இதுதான் ரிக்வேதத்தின் கடைசி துதி

1500 –பாரத யுத்தம்- மஹா பாரத யுத்த காலம்

 

கி.மு.570 பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் கடைசி ஆசிரியர் பௌதிமசிபுத்ர. அவருக்கு முன்னர் 50 ஆசிரியர்கள் 1000 ஆண்டுகளுக்கு  உபநிஷத்தைப் பரப்பினர்.

 

563-483 கௌதம புத்தர்- புத்த மத ஸ்தாபனம்

 

550 ஆஜீவக மதப் பிரிவு- ஸ்தாபகர் கோசால மாஸ்கரிபுத்ர + பாணினி+ கானட முதலியோர் காலம்

 

கி.மு 500-400 பகவத் கீதையின் புது வடிவம்

அலெக்ஸாண்டருக்கு முன்னதாக இந்தியாவில் 138 அரசர்கள் ஆண்டதாக கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

 

–SUBHAM–

 

புராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145)

Written by S NAGARAJAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –   8-29 AM (British Summer Time)

 

Post No. 5145

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

 

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 2

 

ச.நாகராஜன்

மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.

ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:

1) தத்வ தர்மப்ரகரணம்

2) தர்மாபேத அப்ஹேதௌ

3) சேஷாசேஷீபாவ

4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ

5) கர்மா

6) அதிகாரிநிரூபணம்

7) சமன்யாதிதேச

8) விசேஹதிதேச

9) ஊஹா

10) பாதா

11) தந்த்ரம்

12) ப்ரசங்கம்

இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.

ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.

சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.

கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.

இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.

 

புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.

 

சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.

 

சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.

 

மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள்  போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.

 

ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் :  வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.

 

இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.

நம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.

விளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.

***

 

நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா? (Post No.5144)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  17-09 (British Summer Time)

 

Post No. 5144

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெரியது கேட்கின் வரிவடி வேலோய்

பெரிது பெரிது மூக்கு பெரிது;

அதனினும் பெரிது நாக்கு;

நாக்கினும் பெரிது தவறான வாக்கு!

 

இது அவ்வையாரின் பாட்டைக் கிண்டல் செய்ய எழுந்த பாட்டு அல்ல.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த பாட்டு.

 

ட்வைட் மாரோ(Mrs Dwight Morrow) என்பவர் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் சீனியர் ஜே.பி.மார்கனை (Senior J P Morgan) தேநீர் விருந்துக்கு (Tea Party) அழைத்தார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பணக்காரர். அவருடைய பெரிய மூக்கு புகழ்பெற்ற மூக்கு. தை பற்றிப் பேசாதோர் (பரிகசிக்காதோர்) யாரும் இல்லை.ட்வைட் மாரோவுக்கு ஒரு கவலை. அவருடைய இரண்டு பெண்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் ஒருவள் ஆன் )Anne). புகழ்பெற்ற வாயாடி. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விடுவாள். ஜே.பி.மார்கன் மூக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டாள். எப்படியும் பகடி செய்து விடுவாள்.

 

ஆகவே இரண்டு மகள்களையும் அழைத்து பெரியோரிடம் மரியாதைக் காட்டுவது எப்படி என்று உபந்யாசம் செய்தாள்; ஆன் என்ற மகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி, மகளே அவர் மூக்கைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்; ஆனால் வெளியே மட்டும் வாய் திறந்து பேசிவிடாதே என்றாள்.

மகளும் அப்படியே செய்வேன் என்று தலை அசைத்தாள்.

ஜே.பி மார்கனும் வந்தார். பெண்களை அவசரம் அவசரமாக அறிமுகப் படுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டார்.

ஒரு அச்மபாவிதமும் நடக்க வில்லை.

ஆனால் ட்வைட் அம்மணியார் சதா சர்வகாலமும் மூக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் வாய் தவறி,

 

மிஸ்டர் மார்கன், உங்களுக்கு தேநீரில் லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக

 

உங்கள் நோஸில் (Nose) லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா?

என்று கேட்டு விட்டார்.

நாக்கில் உள்ளது வாக்கில் வந்து விட்டது!!

 

xxxxxxx

ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

 

நீதிபதி: அப்படியனால் நீ உன் மனைவியை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தள்ளிவிட்டது உண்மையா?

 

குற்றவாளி: ஆமாம் கனம் நீதிபதி அவர்களே!

 

நீதிபதி: ஏன் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தள்ளிவிட்டாய்?

என்ன காரணம்?

 

குற்றவாளி: நாங்கள் முதலில் கீழே (கிரவுண்ட் ப்ளோர் Ground Floor) குடியிருந்தோம்.

சமீபத்தில்தான் இரண்டாவது மாடிக்குக் குடிபுகுந்தோம்.

வீடு மாறியதே மறந்து விட்டது, ஐயா!!!

 

xxxxx

ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

ஒரு பேராசிரியருக்கு அதி பயங்கர ஞாபக மறதி.

 

வீட்டுக்குள் விறு விறு என்று நுழைந்து கொண்டிருந்தார்.

 

மனைவி: பார்த்தீர்களா? நீங்கள் இறந்து போய்விட்டதாகப்

பத்திரிகையில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

 

அப்படியா, மறந்து விடாதே. எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி.

ஞாபகமாக ஒரு மலர் வளையத்துக்கு ‘ஆர்டர்’ கொடு.

 

நானும் நீயும் மறக்காமல் போக வேண்டும்

 

மனைவி தலையில்…………………

xxxxxxxxxxx

வேகமாகப் போ! ம்ம்… இன்னும் வேகம்!

ஒரு பேராசிரியருக்கு என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடும் அளவுக்கு ஞாபக மறதி!! ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.

சொற்பொழிவின் நேரம் மட்டும் ஞாபகம் இருந்தது.

ஆனால் வீட்டைவிட்டு தாமதமாகப் புறப்பட்டு அடுத்த ஊரில் போய் இறங்கி டாக்ஸியில் ஏறினார்.

 

ஏய், வண்டியை வேகமாக விடப்பா! கூட்டம் துவங்க பத்து நிமிடம்தான் இருக்கு!

 

அதுக்கென்ன ஸார், இதோ பாருங்கள் ! வண்டி சிட்டாய்ப் பறக்கும் என்று ஆக்ஸிலேட்டரை அமுக்கினான்.

 

ஏய், இன்னும் வேகமாகப் போ என்றார்.

அதற்கென்ன என்று சொல்லி 70 மைல் ஸ்பீடை 90 மைல் ஸ்பீட் ஆக்கினான்.

 

ஏய் நிறுத்து, நிறுத்து! எங்கே போகிறாய்?

இடம் தெரியுமா?

தெரியாதே ஸார்; நீங்கள் சொல்லுங்கள் என்றான் டாக்ஸி ட்ரைவர்!

அடக் கடவுளே! எனக்கு நேரம் மட்டுமே நினைவு இருக்கிறது- என்று சொல்லி டாக்ஸியில் இருந்து இறங்கினார்.

 

XXXXXX

 

கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

 

ஒரு சரக்குக் கப்பலின் கேப்டன்

 

மிகவும் கறாரான, கணக்கான பேர்வழி. அவருக்குக் கீழே வேலையில் இருந்தவன் குடித்துவிட்டு வேலைக்கு வந்தான். கேப்டனின் கடமை:– எல்லோர் பற்றியும் லாக் புஸ்தகத்தில் எழுத வேண்டும்

 

குடித்த ஆளின் பெயரை லாக் புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இதைப் பார்த்த அந்த ஆள் கேப்டனிடம் கெஞ்சாய்க் கெஞ்சினார். தயவு செய்து என் பெயரை அடித்து விடுங்கள்; நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்; உங்களுக்கே தெரியும் ;நான் இதுவரை இப்படி செய்ததில்லை என்று.

 

இப்படியெல்லாம் கெஞ்சியும் சமாதானம் சொல்லியும் கப்பலின் கேப்டன் மசியவில்லை.

 

“இதோ பார், நீ குடித்தது உண்மை; அதைத்தானே எழுதினேன். நான் உண்மையை  எப்படி மறைக்க முடியும்? போ!” என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்போதும் சரியானதை எழுதுவதில் தவறே இல்லை என்றார்.

 

ஒரு நாள் ‘லாக் புஸ்தகம்’ வேலை இந்த பாதிக்கப்பட்ட ஆளுக்கு வந்தது. பழி வாங்க துடியாய்த் துடித்தவருக்கு அருமையான வாய்ப்பு இது. ஆனால் பொய்யும் எழுத முடியாது. எடுத்தார் பேனாவை! தொடுத்தார் சொற்களை!

 

“இன்று கேப்டன் மிகவும் நிதானமாக (நிதானத்தில்) இருந்தார்” என்று கொட்டை எழுத்தில் எழுதினார்.

உண்மைதானே (ஆனால் எப்படியும் பொருள் கொள்ள முடியும்)

 

–subham–

Accuracy and Absent Mindedness Anecdotes (Post No.5143)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  9-17 am  (British Summer Time)

 

Post No. 5143

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

More Absent mindedness anecdotes

 

Nose, Big Nose!!
When her daughters were very small girls, Mrs Dwight Morrow gave a high tea at which one of the guests was to be the senior JP Morgan.
The girls were to be brought in, introduced and ushered out. Mrs Morrow’s great fear was the possibility that Anne, the most outspoken of them, might comment audibly upon Mr Morgan’s celebrated and conspicuous nose. She therefore took pains to explain to Anne that personal observations were impolite and and to caution her especially against making any comment upon Mr Morgan’s nose, no matter what she thinks of it.
When the moment came and the children were brought in, Mrs Morrow held her breath as she saw Anne’s gaze unfalteringly fix upon this objective and remain there.

Nonetheless, the introduction was made, the little girls curtsied and were sent on their way. With a sigh of relief Mrs Morrow turned back to her duties as hostess and said to her chief guest, “And now, Mr Morgan, will you have cream or lemon in your nose?”

Xxxx

Lungs!
That absent minded professor Schmaltz has left his umbrella again. He would leave his head if it were loose, observed the waiter.
That is true, said the manager, I just heard him say he was going to Switzerland for his lungs.
Xxx

 

Send a wreath for Your Own Death!

The professor was very absent minded;

Did you see this?, his wife asked as he came in.
There is a report in the paper of your death.
“Dear me, said the professor, we must remember to send a wreath”.
Xxx


Forgotten Floor!
You mean to say, asked the judge of the defendant, that you threw your wife out of the second story window through forgetfulness ?
Yes sir, replied the defendant
We used to live on the ground floor and I plumb forgot we moved.
Xxxx

Top Speed! To Unknown Destination!

Thomas Henry Huxley once arrived late in a town in which he was to deliver an important lecture.
Jumping into a cab, he cried to the driver ,”Top speed!”

In a hurry the cabby whipped his horse into action and the vehicle went bumping along the streets at a wild clip. The lack of dignity and organisation in the proceedings then dawned upon Huxley, and above the clatter of the wheels he shouted to the driver,
“Here,here, do you know where I want to go?”
“No, Your Honour, called the cabby, cracking his whip the while, but I am driving as fast as I can.”

Xxxxx

Accuracy anecdotes
Cordell Hull is an extremely cautious speaker, striving always for scientific accuracy. One day on a train, a friend pointed to a fine flock of sheep grazing in a field. Look, those sheep have just been sheared, he said.
Hull studied the flock. Sheared on this side any way, he admitted.

Xxx

Tit for Tat

The captain of a certain freighter was martinet who, although technically just, was noted far and wide, for the strictness of his interpretation of the facts.

On a certain voyage he had a new first mate, an able and conscientious man. Following an of shipboard revelry, the captain entered in the log the note, ‘The first mate was drunk last night’.
Seeing this the mate was greatly distressed and pled with the captain to strike it off the record. He had never been drunk before, he insisted, would not be drunk again; was conscientious in the performance of his duties and had been off duty at the time of the offence anyway.
He begged for leniency, pointing out what an unduly detrimental effect on his record such an entry on the log might have.

 

The captain remained adamant, “you were drunk last night and I cant change the fact. The record will stand’.

 

Much wounded by this the first mate resumed his duties. That night it fell to his lot to make the next entry in the log for a period of his watch. This he did, with what may be called a malicious scrupulousness of accuracy. Accordingly the captain next day found on the log that innocently damning statement, “The captain was sober last night”.
 

–Subham–

விமான சாஸ்திரம்- சுப்பராய சாஸ்திரி – 1 (Post No.5142)

Written by S NAGARAJAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5142

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 1

 

ச.நாகராஜன்

 

சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.

 

புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.

விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

 

சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.

 

இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.

வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.

 

ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

 

அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை.பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.

நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.

அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.

 

வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ  முனிவரால் இயற்றப்பட்டது.

 

இவை அனைத்தையும் நன்கு  கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.

 

அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.

மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.

இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.

 

இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.

சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.

 

சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.

அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.

அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.

 

இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா,ஜாமெட்ரி, மற்றும் இதர  கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.

லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.

கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.

 

ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.

நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

 

 

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.

பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

 

ப்ரபாகர சாஸ்திரம்:  மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும்  கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.

 

வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.

சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

 

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

WRITTEN by LONDON SWAMINATHAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  18-27  (British Summer Time)

 

Post No. 5141

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆரிய-திராவிட வாதம் தவிடு பொடி!

மநு நீதி நூல்- Part 21

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி…………………………..

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

3-83 ஐம்பெரும் வேள்விகளின் பகுதியாக, ஒரு பிராமணனுக்காவது அன்னமிட்டு முன்னோர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஆனால் விஸ்வே தேவர்களுக்கான சடங்குடன் இதைத் தொடர்பு படுத்தாதே.

 

3-84 தினமும் சாஸ்திரப்படி செய்த நைவேத்தியத்தை விஸ்வேதேவர்களுக்கு வீட்டிலுள்ள அக்னியில் பிராஹ்மணன் போடவேண்டும்.

 

3-85 முதலில் அக்னி, பின்னர் ஸோமன், பின்னர் இரு தேவதைகளுக்கும் சேர்த்து, கடைசியில் தன்வந்திரிக்கு அளிக்கவும்

 

3-86 பின்னர் அமாவாஸைத் தெய்வமான குஹு, பௌர்ணமி தெய்வமான அனுமதி பிரஜாபதி, பூமி, ஆகாஸம், கடைசியாக அக்னி ‘ஸ்விஸ்தக்ரது’ ஆகியோருக்கு அளிக்க வேண்டும்.

 

3-87 இவ்வாறு செய்த பின்னர் திக் தேவதைகளுக்கு பிரதக்ஷிணமாக இந்திரன் (கிழக்கு), அந்தகன் (தெற்கு), ஆ பதி/ வருணன் (மேற்கு) இந்துவுக்கும் (சந்திரன்/ ஸோமன் வடக்கு) தரவேண்டும்.

3-88 வாசலில் மருத் (காற்று) தேவதைகளுக்கும், ஜலத்தில் தண்ணீர் தேவதைக்கும், உரல் உலக்கைக்கும் படைக்கவேண்டும். தண்ணீரில் அளிக்கையில் மரங்களின் தேவதைகளுக்கு என்று சொல்லி அளிக்கவும்.

(மரங்களுக்கும் உரல் உலக்கைக்கும் தருவது புறச்சூழலின் மேலுள்ள மரியாதையை   காட்டுகிறது)

 

3-89 தலையில் செல்வ தேவதை ஸ்ரீக்கும், காலில் பத்ரகாளிக்கும், வீட்டின் நடுவில் வாஸ்தோஸ்பதிக்கும் அளிக்கவும். (வீட்டின் தலை , கால் என்பது திருமணப் படுக்கையின் தலை, கால் பகுதி என்று வியாக்கியானம் செய்கின்றனர்)

 

3-90 காற்றில் விஸ்வே தேவர்களுக்கும் இரவிலும் பகலிலும் திரியும் பேய்களுக்கும் பலி தரவேண்டும்

 

3-91 வீட்டின் மேல் பகுதியில் சர்வ உணவு தேவதைக்கும் (ஸர்வான்னபூதி) மிகுதியை தென் திசையில் உள்ள முன்னோர்களுக்கும் அளிக்க வேண்டும்

 

(பஞ்ச யக்ஞமும், தென் திசை முன்னோர் குறிப்பும் திருக்குறளில் உளதால் இந்துக்களின் வேதமே திருக்குறள் என்பது தெளிவாகிறது. ஆரிய- திராவிடம் பேசும் பேயர்களுக்கு அடிமேல் அடி கொடுக்கும் பகுதி இது. ஏனெனில் இங்கே குறிப்பிடும் சடங்குகள் தமிழிலும் ஸ்ம்க்ருதத்திலும் மட்டுமே உளது. பிற்கால நூல்களான சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவற்றிலும்    உறுதிப்படுத்தப்படுகிறது.)

 

3-92 நாய்களுக்கும், புலையர்களுக்கும், பறவைகளுக்கும், புழுக்களுக்குமான உணவை தூவ வேண்டும்

 

(பறவைகள், நாய்கள், புழுப்பூச்சிகளுக்கும் தினமும் உணவு தரவேண்டும் என்பது உலகில் எங்கும் காணாத அற்புத பண்பாடு. “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாரதியைப் பாட வைத்த பாட்டு)

 

3-93 இவ்வாறு  பித்ரு தேவதைகளுக்கும் பூதங்களுக்கும் பலி கொடுக்கும் பிராஹ்மணன் மஹத்தான சக்தி பெற்று நேரடியாக மேல்நிலையை அடைவான்.

3-94 இவ்வாறு தேவதைகள் பூதங்களுக்குப் பலி கொடுத்த பின்னர் அவன் முதலில் விருந்தினருக்குச் சோறு படைக்க வேண்டும்; பின்னர் பிச்சை எடுப்போருக்கும், வேதம் படிக்கும் ஒரு பிரம்மச்சாரிக்கும் அன்னம் இட வேண்டும்

3-95 இவ்வாறு செய்யும் ஒரு கிரஹஸ்தன் (இல்வாழ்வான்) குருவுக்கு கோ (பசு மாடு) தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

 

(ஆரிய திராவிடம் பேசும் அயோக்கியர்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தப் பாடல்.  உலகில் இப்படி பலி கொடுக்கும் வழக்கமோ அல்லது தானம் செய்யும் பண்பாடோ எங்குமிலை. அது மட்டுமல்ல; வேதங்கள் கோ தானம் பற்றி இந்துக்கள் பேசுகையில் ஏனையோர் பசுக்கொலை செய்து அதை நாள்தோறும் உண்ணுகின்றனர்)

 

3-96 வேதத்தை நன்கு கற்ற ஒருவருக்கு   தட்சிணையோ அல்லது மந்திரம் ஜபிக்கப்பட்ட ஒரு சொம்பு தண்ணீரையோ தர வேண்டும்

 

3-97 வேதம் படிக்காதவர்களுக்கு அளிக்கும் தானம் வீண்; வேதம் படிக்காதவர் செய்யும் கருமங்களும் வீண்.

3-98 படித்த, தவம் இயற்றிய பிராஹ்மணனாகிய அக்னியில் இடப்படும் ஆகுதி ஒருவனை கெட்ட தலை விதியிலிருந்தும், பெரும்  பாபங்களிலிருந்தும் விடுவிக்கும்.

விருந்தோம்பல்

3-99 தானாக வந்த ஒரு விருந்தாளிக்கு முதலில் ஆசனம், தண்ணீர் தந்து நன்கு, திறமைக்குத் தக,  சமைக்கப்பட்ட உணவு பரிமாறவும்

 

3-100 ஒரு விருந்தாளியைக் கவனிக்காவிடில், அவர் அந்த வீட்டிலுள்ள எல்லாப் புண்ணியங்களையும் எடுத்துச் சென்று விடுவார்.

அன்பான வார்த்தைகள்!!!

3-101 வந்த விருந்தாளிக்கு பாய், தங்கும் இடம், தண்ணீர், அன்பான வார்த்தைகள் — ஆகிய நான்கும் அளிக்கப்படும் இடம் நல்லவரின் வீடு ஆகும்

3-102 ஒரு நாள் தங்குபவரே விருந்தாளி; அதனால்தான் அவரை அதிதி என்று அழைக்கிறோம் அநித்ய ஸ்தித ( நிலையாகத் தங்காதவர்) என்பதே அ+திதி= அதிதி ஆகியது.

3-103 ஒரே கிராமத்தில் வசிப்பவன் இல்லறத்தான் வீட்டுக்கு வந்தால் அவன் விருந்தாளி அல்ல.

3-104 யாராவது ஒருவன் முறை தவறி விருந்து உண்டால், அந்த முட்டாள் அடுத்த ஜன்மத்தில் விருந்து கொடுத்தவன் வீட்டில் மாடாகப் பிறப்பான்.

3-105 மாலையில் வந்த ஒரு விருந்தாளியை திருப்பி அனுப்பக்கூடாது. அந்த நேரத்தில் வந்தான், இந்த நேரத்தில் வந்தான் என்று சாக்குப் போக்குச் சொல்லாமல் வீட்டில் தங்க வைத்து சோறு போட வேண்டும்

3-106 விருந்தாளிக்குப் போடுவதையே அவனும் உண்ணவேண்டும். யார் ஒருவன் விருந்தினரைக் கவனிக்கிறானோ அவன் புகழ், செல்வம்,  நீண்ட ஆயுள், சொர்க்கத்தில் இடம் ஆகியன பெறுகிறான்.

 

3-107 விருந்தினரின் தகுதிக்கு ஏற்ப உயர்ந்த, நடுத்தரமான, கடைத்தர வசதிகளை அளிக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஆசனம், நல்ல படுக்கை, நல்ல அறை, நல்ல பிரிவுபசாரம் ஆகியன கொடுத்தேயாக வேண்டும்

3-108 விஸ்வே தேவர்களுக்கு அளித்தபின்னர் வேறு ஒரு விருந்தாளி வந்தால் அவரையும் உபசரிக்க வேண்டும்.

 

3-109 குலம், கோத்திரம் சொல்லி உணவு பெறுதல் கூடாது; அப்படிச் சொல்லி பெறும் உணவானது வாந்தி எடுத்த உணவை சாப்பிடுவதற்கு சமமாகும்.

3-110  ஒரு அரசன், பிராஹ்மணன் வீட்டுக்கு வந்தால், அது விருந்தினர் வந்ததாகப் பொருள் கொள்ளலாகாது. அதே போலத்தான், குரு, வைஸ்யன், சூத்திரன், உறவினர், நண்பர் வருகையும்.

 

3-111 ஒரு க்ஷத்ரியன் வந்தால், அவன் சாப்பிட விரும்பினால், பிராஹ்மண போஜனம் முடிந்தவுடன் விருந்து படைக்கலாம்.

3-112 அதே போல வைஸ்யர்களோ சூத்திரர்களோ வந்தால் வீட்டிலுள்ள மற்றவர்களோடு அவர்களுக்கும் கருணையின் அடிப்படையில் விருந்து தரலாம்.

3-113 நண்பர்கள் வந்தால் அவர்களுக்கும் நல்லெண்ண அடிப்படையில் உணவு பரிமாறலாம்.

3-114 விருந்தினருக்கும் முன்னதாக, புதுமணத் தம்பதிகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும், சின்னப் பெண்களுக்கும், நோயளிகளுக்கும் விருந்து அளிக்கலாம்.

3-116 பிராஹ்மண விருந்தினர், குடும்பத்தினர், குடும்பத்தைச் சேர்ந்தார் எல்லோரும் சாப்பிட்ட பின்னர்தான் இல்லறத்தானும் மனைவியும் சாப்பிடலாம்.

 

3-117 தேவர்கள், ரிஷி முனிவர்கள், மனிதர்கள், முன்னோர்கள், வீட்டிலுள்ள (இல்லுறை) தெய்வங்கள் ஆகியோருக்கு விருந்து கொடுத்த பின்னர் மிச்சம் மீதியை இல்லறத்தான் சாப்பிடலாம்.

3-118  தனக்கு மட்டுமே சமைப்பவன், தவற்றைப், பிழையை உண்பவன் ஆவான்.  வேள்விக்குப் பின்னர் மிஞ்சிய உணவே நல்ல மனிதர்களின் உணவு.

 

(இந்தக் கருத்து பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது.)

 

3-119 ஓராண்டுக்குப் பின்னர் வரும் அரசன், புரோகிதன், குரு, நெருங்கிய நண்பன், வேதம் படித்தவன், தாய் மாமன், மாமனார் ஆகியோருக்கு மதுபர்க்கம் (தேன்+ பால்) கொடுத்து மரியாதை செய்க.

3-120 யாகம் செய்யும்போது அரசனோ வேதம் அறிந்த புரோகிதனோ வந்தால் அவருக்கும் மதுபர்க்கம் கொடுக்கவும்.

 

எனது கருத்து

விருந்தாளி யார்?

ஒரு நாளைக்கு மேல் தங்குபவன் விருந்தாளி அல்ல. ஒரே கிராமத்தைச் சேர்ந்தவனோ விருந்தாளி அல்ல; பலனை எதிர்பார்த்துக் கொடுத்தால் அதைச் சாப்பிடவனும் விருந்தாளி அல்ல;  நான்கு ஜாதிக் காரர்களும் விருந்தாளியாக வரலாம் – இப்படிப்   புரட்சிகரமான கருத்துக்களை வீசி ஆரிய-திராவிடப் பேய்மானிகளின் கன்னத்தில் அறை மேல் அறை , வைக்கிறான் புரட்சி வீரன் மநு. உலகம் கானாத புதுமை இது; வெளி நாட்டார் அறியாத போற்றாத பண்பு இது. பாரத மண்ணில் தோன்றி பாரத மண்ணில் வளர்ந்த சமதர்மக் கருத்து இது!

 

மநு சொல்லும் மேற்கூறிய முறைகள் எங்கும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக அவன் ரிக் வேத காலத்தவன் என்பது இதனாலும் சரஸ்வதி நதிக் குறிப்புகளினாலும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை மநு சொல்லாததாலும் வெள்ளிடை மலை என விளங்கும்; இதனால்தான் இவனை ஹமுராபிக்கும் (கி.மு.)2600 முந்தியவன் என்று யான் செப்புகிறேன்.

 

வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் மார்கஸீயப் பிதற்றல் பேர்வழிகளும் ஆரியப் பூச்சாண்டியைக் கிளப்பி, வேத கால ஹிந்துக்கள் வெளிலியிலிருந்து வந்ததாக விளம்புவர். அப்படிப்பட்ட பேர்வழிகள் இது போன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களுக்கு ஒரு ஆதாரத்தையும் இந்தியாவுக்கு வெளியில் காட்டவும் முடியவில்லை. மேலும் பல நூறு விஷயங்கள் தமிழ் வேதமான திருக்குறளிலும், பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் காணப்படுவதால் கயவர்களின் வாதம்– பிடிவாதம்– தூள் தூளாகப் போகின்றது.

ஓராண்டுக்குப் பின்னர் வருவோருக்கே சிறப்பு மரியாதை, தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்ற கருத்து ஆகியன புரட்சிவீரன் என்ற பட்டத்தை மநுவுக்கு அளிக்கும்.

( விருந்தோம்பல் என்னும் பண்பைப் போற்றாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் இல்லை. இதனால் புண்ணியம் கிடைக்கும் என்பதையும் இரு மொழியும் இயம்பும். இப்படிப்பட்ட ஒரு பண்பு வேறு எந்த மத நூலிலும் கிடையாது இந்தியாபில் இந்துக்களாகப் பிறந்து புதிதாகக் கிளைவிட்ட சமண, பௌத்த, சீக்கிய மதங்களில் மட்டுமே இருக்கும். வெளிநாட்டில் இந்தப் பண்பு போற்றப்படாததால் ஆரிய- திராவிட போலி வாதம் மூச்சுத்திணறி சாகும். மநு ஸ்ம்ருதியில் இடைச் சொருகலாக வந்த 40 ஸ்லோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சல் போடும் மார்கஸீயங்களும், திராவிடங்களும், மதப் பிரசாரகர்களும் விருந்தோம்பல் பண்பு வேறெங்கும் இல்லாதது கண்டு திணறிப் போகிறார்கள். சீதையும் கண்ணகியும் வந்த விருந்தினரைக் கவனிக்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்துவதை வால்மீகி ராமாயணமும் சிலப்பதிகாரமும் செப்பும்.

 

மஹா பாரதத்தின் அடிப்படையே விருந்தோம்பல்தான்; விருந்தோம்பல் மூலம் கிடைத்த வரங்களால், குந்தி,  பஞ்ச பாண்டவரைப் பெற்றாள். புராணங்களிலும் அதையடுத்து வந்த கதைகளும் அன்ன தானச் சிறப்பை விதந்து ஓதும்.

வெளிநாட்டுப் பிடாரிகளுக்கு அடிமேல் அடி கொடுத்து ஆரிய-திராவிட வாதக் கயவர்களைக் குழி தோண்டிப் புதைக்கிறது மநு தர்ம சாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயம்!!

தொடரும்…………….

Gambling Anecdotes (Post No.5140)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  11-57 am  (British Summer Time)

 

Post No. 5140

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Picture by Lalgudi Veda

At a large party, Mrs Henry Clay, chaperoning a young lady, passed through a room where gentlemen we’re playing cards, Mr Clay among them.
“Is this a common practice?, inquired the young lady.
“Yes, said Mrs Clay, they always play when they get together.”
“Doesn’t it distress you to have Mr Clay gamble?”
“No, my dear, said the old lady composedly , he most always wins.”
Xxxxx

BOOK MAKER APPROACH!

An ailing book maker sent his son to summon the doctor. Instead of the expected man, a stranger arrived. Later the book maker asked for an explanation.
“Well,said the boy ,there were a lot of brass plates on the doors, and when I got to the one you told me to go to, it said,
Consultations 11 to 12.
The one next to it said, 10 to 1.
And I knew you would like the one who gave the best odds
Xxx

Comedian Win

The British comedian, Beatrice Lillie, once won a hundred and fifty thousand franks at Chemin de fer through having the hiccoughs. Her repeated convulsions and noises were interpreted by the croupier as cries of Banquo.

BANQUO: Character in Macbeth, Gambling, Bank.

Xxxx
Anti Poker Grandma was cheated!


A Grandmother was bitterly opposed to gambling games, especially poker, but gave her sanctions to the playing of authors. So the grandchildren engaged her interests in the game of her choice. Her enthusiasm increased as the game progressed, and while she knew that the cards used were a deck of authors ,she didn’t know that the game she was playing was poker , and that grand mother was enthusiastically playing Whittier’s wild (Poems)

Xxx

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்! (Post No.5139)

Written by S NAGARAJAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5139

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கர்ம பலன் அதிசயம்

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!

 

ச.நாகராஜன்

 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்.

ஹிந்து மதம் கூறும் கர்ம பல சித்தாந்தத்தின் படி இது சத்தியம்.

சில உண்மை சம்பவங்களைப் பார்ப்போம்.

1

டைட்டானிக் கப்பல் விபத்தைப் பற்றி அனைவரும் அறிவோம்.

அதன் முதல் பயணத்திலேயே அது விபத்திற்குள்ளானது.

அதில் பயணம் செய்தவர்களுள் ஜேம்ஸ் க்ரக் (James Kruck) என்பவரும் ஒருவர். சிகாகோவைச் சேர்ந்தவர் அவர். மூழ்க முடியாத கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் மூழ்கவே அதில் பல நூறு பேர் உயிரிழந்தனர். (2222 பேர்கள் கப்பலில் இருந்தனர்; 1517 பேர்கள் உயிரிழந்தனர்)

ஆனால் அதில் ஜேம்ஸ் க்ரக் உயிர் பிழைத்தார்.

பின்னர் அடுத்து டார்பிடோவிற்கு இலக்கான லூஸிடானியா(Lusitania) வில் அவர் பயணித்தார்.

அதிலும் அவர் உயிர் பிழைத்தார்.

பின்னர் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதின.

 

அதில் ஒன்றில் பயணம் செய்தவர் நமது ஜேம்ஸ் க்ரக்.

அந்த விபத்திலும் கூட ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.

 

அவருக்கு 68 வயதான போது மூன்றாம் மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார். காயங்கள் ஏற்பட்டாலும் உயிர் பிழைத்தார்.

மரணத்தை வென்ற மாவீரனாக அவர் காணப்பட்டார்.

ஆனால் என்ன அதிசயம்!

 

ஒரு அடி ஆழம் கூட இல்லாத ஒரு சிற்றோடையை ஒரு நாள் அவர் கடக்க நேரிட்டது. அப்போது மாரடைப்பு ஏற்பட அந்த நீரோடையில் அவர் விழுந்தார். உயிர் துறந்தார்.

காலனை விரட்டி விரட்டி அடித்த அவ்ர் காலம் வந்தவுடன் அவன் வசமானார்.

அதிசயம், ஆனால் உண்மை!

 

2

 

கல்கத்தா செய்தித்தாளான அம்ருத பஜார் பத்ரிகா தனது 23-6-1974 தேதியிட்ட இதழில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பிரசுரித்தது.

திருமதி கான்சிலேரியா வில்லானுவேவா (Mrs Cancilaria Villanueva) தென் பிலிப்பைன்ஸில் (Southern Philippines) ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 52.

தீவுகளுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த அலோஹா (Aloha) என்ற அந்தக் கப்பல் திடீரென்று தீ விபத்தால் பற்றி எரிந்து உடைந்தது. ஜாம்போங்கா டெல் -நார்ட் (Zamboanga Del –Norte) என்ற மாகாணத்தின் அருகில் அது ஜூன் 2ஆம் தேதி மூழ்கியது. அதில் பயணித்த 271 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அதிலிருந்து விழுந்த கான்சிலேரியா ஒரு கடல் ஆமையின் முதுகில் ஏறினார். அந்த ஆமை அவரை இரண்டு நாள் பாதுகாப்புடன் சுமந்தது. 48 மணி நேரம் கழித்து அவர் ஒரு கப்பலைப் பார்த்தார். உதவி கோரிக் கத்தினார். கப்பலில் வந்த மாலுமி அவர் ஒரு பெரிய எண்ணெய் டிரமில் ஏறி வந்து கொண்டிருந்ததாக நினைத்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் அது ஒரு கடல் ஆமை. யாராலும் இதை நம்ப முடியவில்லை.

அவரைப் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றினர் மாலுமிகள்.

என்றாலும் கூட ஆமை அங்கிருந்து போகவில்லை. இரண்டு முறை கப்பலை சுற்றி விட்டு, தனது ‘பயணி’ பாதுகாப்பாக இருபப்தை உறுதி செய்தவிட்ட பின்னர், மெதுவாக அது அங்கிருந்து நகர்ந்தது.

 

இந்த அதிசயச் செய்தியை Bulletine Today என்ற பத்திரிகை வெளியிட்டது. அது உலகச் செய்தி ஆனது.

காலம் வரவில்லை அந்தப் பெண்மணிக்கு; ஆகவே காலனும் அவரிடம் வரவில்லை.

 

 

3

சவாய் மதோபூரில் ஜக்கர்பந்த் அருகே படகு ஒன்று விபத்திற்குள்ளானது. தாயும் தந்தையும் நதியில் மூழ்கி இறந்தனர்.

 

அவர்களது ஒரு வயது மகன் ஒரு புல் கட்டில் விழ அந்தக் குழந்தை உயிர் பிழைத்தது.

இதை PTI பெரிதாக வெளியிட்டது.

4

இன்னொரு  PTI செய்தி. நியூயார்க்கிலிருந்து வந்த செய்தியை அது 26-2-1952 அன்று வெளியிட்டது.

 

பல மாடி அடுக்குக் கட்டிடம். அதில் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து ஒரு மூன்று வயதுக் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. டெலிவிஷன் ஏரியலில் தடுக்கிக் கீழே வந்து விழுந்த குழந்தை அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே சாதாரணமாக எழுந்து நடந்தது!

 

5

ஈரானில் ஒரு பூகம்பம். இடிபாடுகளுக்கு இடையே ஏழு நாட்கள் கழித்து இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இது போன்ற பூகம்ப மீட்புச் செய்திகள் ஏராளம் உண்டு.

 

6

‘ஈஸ்வரஸ்ய வஷே சர்வம் சராசரமிதம் ஜகத்’

 

இந்த சராசரம் ஈஸ்வரனின் வசம் உள்ளது.

உண்மை; அனைத்தையும் நமது கர்மமே நிர்ணயிக்கிறது.

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

சம்பவங்கள் ஆயிரம் ; உள்ளே உறைந்திருக்கும் சத்தியம் ஒன்றே தான்!

***

 

 

 

Proverbs on God (Post No.5138)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  18-51  (British Summer Time)

 

Post No. 5138

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

1.Man proposes, God disposes
The greatness of the Almighty is beyond the ken of one’s comprehension

acintaniiyo mahimaa paresithuh- Kahaavatratnaakar (Sanskrit).

 

Who can comprehend the ways of God?- viramaorvasiiya of Kalidas

ko devata rahasyaani tarkayisyati

 

Tamil also has this proverb—Thaan ondru ninaikka Deivam ondru ninaikkum

2.God helps them that help themselves

 

God is the right hand of the diligent.

 

nityam prayatammaanaanaam sahaayah paraleswarah

3.God hath leaden feet but iron hands

Tamil- Arasan Andre Kolvaan, Deivam nindru kollum

God pays back the dimwit in his own coin

devopi mandaaya dadaati mandam

4.God provides for him that trusteth

 

Those devoted to Narayana know no fear

naraayanaparaah sarve no kutacana bibhyati -Bhagavata Purana

 

Never does anyone who does good, tread the path of woe- Bhagavad Gita 6-40

 

na hi kalyaanakrt kascid durgatim taata gachchati – BG 6-40

My devotee perishes neve- Bhagavad Gita 9-31

na me bhakta pranasyati -9-31

5.God shapes the back for the burden

 

What is impossible for the Creator?

Dhaaruh kim naama durghatam- Brhat kathaa Manjari

6.God tempers the wind to the shorn lamb

 

Nectar turns into poison and poison turns into nectar, if the Lord so chooses- Raguvamsa of Kalidasa

 

visamapyammrtam kvacidbhavedamrtam vaa visamiisvarecchayaa

7.Gods mill grind s slow but sure
Tamil- Arasan Andre Kolvaan, Deivam Nindru Kollum
Lord Krishna gave 99 chances to criticise him. When he did it for 100th time he was done away with.



8.When need is highest, God’s help is nighest

Draupadi was helped by Lord Krishna;

 

Elephant Gajendra was helped by Lord Vishnu;

 

Prahlada was helped by Narasimha;

 

With the Lord’s grace, the negative traits convert into positives -Subhasita Ratnabhandaagaara

 

9.Whom god would ruin, he first deprives of reason
Vinasa kale Vipareeta Buddhi

Samsayaatmaa vinasyati – BG 4-40

Doubting Thomasses perish

10.Every man for himself, and god for us all 
Tamil- Dikkatravarkku Deivamee Thunai

 

What is impossible with the unfailing benediction of the gods?- Kathaa sarit saagara

 

Four kinds of people worship me: the distressed, seeker of wealth, the wise and the seeker of knowledge; the wise is dear to me.- BG 7-16

11.There is no going to heaven in a sedan
God’s will is formidable- Mahabharata
12.Ye cannot serve god and mammon

 

No ills of life ever touch those that alone cling to the feet of Him who is beyond the world of likes and dislikes

13.Short prayers rise up to heaven

 

The power of God is so great that it opens doors everywhere- Ramayana manjari

14.Bells call other’s but themselves enter not into the church

 

Not the fishes in holy Ganges go to heaven- Ramakrishna Paramahamdsa
15.The nearer the church the farther from the God

 

The head which bows not at the feet of God of eight attributes is as worthless as organs which do not perform their proper functions -Tirukkural -9

16.Like priest like people

Lord Krishna says that people follow good people in the Bhagavad Gita

Whatever action a great man performs common man follows- BG 3-21

17.He that would learn to pray let him go to sea.
Deeds, good or evil, that spring from darkness shall not affect those who gloriously sing the praise of theLord – Tiruvalluvar, Kural 5

 

Lord Krishna also say that those who are in trouble pray to him in Bhagavad Gita (Sea Travel is such a difficult one)

 

18.Faith can remove mountains 

 

Padmapada walked on water when his Guru Adi Shankara called him from the other side of the Ganges

Dumb becomes eloquent and lame cross the mountains with the grace of God- Muka Kavi

 

Muukam Karoti vaachaalam, Pankum langrte Girim

 

19.The just shall live by faith

Truth is dear to God

 

Isvarah satyavaak praiyah- Kahaavatratnaakar

-subham-

 

விஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-34 AM  (British Summer Time)

 

Post No. 5137

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாலி மொழி நூல்களில் புத்த மத விஷயங்களுக்கு இடையில் பல மருத்துவக் குரிப்புகளும் உள. சில விஷயங்கள் மிகவும் விநோதமனவை.

 

 

சூள வம்ஸம் என்னும் இலங்கை வரலாற்று நூல் விளம்புவதாவது:- கித்திஸிரிராஜஸீஹ,

(கீர்த்தி ஸ்ரீ இராஜ சிம்ஹன்) பௌத்த பிஷுக்களுக்காக இரண்டு டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமித்தான். அரசாங்க கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் மருத்துவச் செலவை நல்கினான்.

 

 

உபாலி என்ற பௌத்த மத குருவுக்கு மூக்கில் வியாதி வந்தபோது நல்ல மருத்துவ வசதி அளித்தான்.

 

முதலாவது பராக்ரமபாஹு ஒரு பெரிய மண்டபம் கட்டி அங்கு நோயாளிகளைத் தங்கச் செய்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேச வேலைக்காரன், ஒரு வேலைக்காரியை அமர்த்தி இரவும் பகலும் உணவும் மருத்தும் அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் சூளவம்ஸம் எனும் சரித்திர நூல் பகரும்.

 

பராக்ரமபாஹு பல்வேறு மூலிகை மருந்துகளைச் சேகரித்து அவைகளை மாட்டு கொம்புக்குள் பாது காத்து வைத்தான். விஷ அம்புகளை எடுப்பதற்காக விஷேச சாமணங்களைச் செய்தான். விஷ அம்புகளை எடுத்து காயங்களுக்கு மருந்திட திறமையான டாக்டர்களை நியமித்தான்.

பாம்புக்கடிக்கோ அல்லது விஷத்தை இறக்கவோ சாணி சாம்பல், மூத்திரம், களிமண், கஷாயம் பயன்படுத்தப்பட்டன. ஒருவருடைய எல்லா உறுப்புகளிலும் விஷம் பாய்ந்து நீலம் ஏறிய பின்னரும் அவனைக் காப்பாற்றிய அதிசயச் செய்திகளை புத்தமத நூல்கள் நுவலும்.

 

அவர்கள் கருகிய அரிசியினால் ஆன கஷாயத்தைக் கொடுத்து விஷத்தை இறக்கிய செய்திகளும் சொல்லப்படுகின்றன.

 

 

மருந்துகளைப் பொறுத்த மட்டில் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே உள்ளன. ஆனால் கரடி மாமிசம், முதலை மாமிசம், மீன் முதலியவும் உள்ளன.

வியாதிகளின் பட்டியல் பின்வருமாறு:

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசு மூத்திரம் கலந்த கஷயம் கொடுக்கப்பட்டது.

தோல் நோய்களுக்கு மூலிகை எண்ணை பயன்படுத்தப் பட்டது.

 

சமிதிகுத்த என்ற பிராஹ்மணனுக்கு குஷ்ட நோய் வந்து உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்தன.

மொக்கராஜ (மஹாராஜ) என்ற பிராஹ்மணனுக்கு  உடல் முழுதும் பருக்கள் வந்தன. வீட்டில் நோய்க் கிருமிகள் இருப்பதை அறிந்து குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது வயலில் வசித்தான்

 

ராஜ க்ருஹத்தில் இரண்டு பாங்கு அதிகாரிகள் வீட்டில் பிளேக் நோய் ஏற்பட்டது. முதலில் ஈ போன்ற பூச்சிகளும் பின்னர் பசு போன்ற மிருகங்களும் பின்னர் வேலைக்காரர்களும் பின்னர் வீட்டு எஜமானர்களும் நோயில் விழுந்தனர்.

 

நோய்களின் பட்டியலில் நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கண், காது, வாய், வயிறு, குடல் நோய்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பு வாரியாக நோய்கள் பட்டியலிடப்பட்டது விஞ்ஞான அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

 

Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble.குடல் நோய்
Muchchaa = hysteria உணர்ச்சிக் கொந்தளிப்பு
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera வாந்திபேதி
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy வலிப்பு
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes சர்க்கரை வியாதி
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula இரத்தக்குழாய், குடல் போன்ற உறுப்புகளின் இணைப்பில் கோளாறு
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

சித்த, ஆயுர்வேத முறை  போலவே வாத, பித்த, கப  சமத்தன்மை இழப்பதால் நோய்கள் வருவதாக நம்பினர்.

 

–SUBHAM—