
Post No. 8301
Date uploaded in London – – –7 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தையிலேயே பதில் வேண்டும் – சம்ஸ்கிருத புதிர் கவிதை!
ச.நாகராஜன்
ஒரு சம்ஸ்கிருத புதிர் கவிதை. இரு கேள்விகள், ஆனால் விடை ஒன்றாகத் தான் இருக்க வேண்டும், இரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்.
கேள்விகள் இதோ:
உலகைக் காப்பது எது?
யாரால் பார்க்க முடியாது?
இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.
அடுத்த இரு கேள்விகள்:
யார் கடவுளரை வெறுக்கின்றனர்?
தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது எது?
இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.
அடுத்த இரு கேள்விகள் ;
வயிறு இல்லாதவன் யார்?
கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது எது?
இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.
அடுத்த இரு கேள்விகள்:

வானில் விளையாடுவது எது?
அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது எது?
இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.
இப்படிக் கேள்விகளைக் கேட்ட கவிஞர் கூறுகிறார்;
“ஓ, நுட்பமான புத்தியை உடையவனே, நீ உன் மனதை நன்கு கவனப்படுத்தி ஒவ்வொரு இரு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல், பார்ப்போம்!
கவிதை இது தான்:
கிம் த்ராணம் ஜகதாம் ந பஷ்யதி ச க: கே தேவதா வித்திஷ:
கிம் தாது: கரபூஷணம் நிருதர: க: கிம் பிதானம் தூஷாம் |
கே கே கேலனமாசரந்தி சுத்ருஷாம் கிம் சாருதாபூஷணம்
புத்தயா ப்ரூஹி விசார்ய சூக்ஷ்மமதிமம்ஸ்த்வேகம் த்ரயோருத்தரம் ||
இப்போது பதில்களைப் பார்ப்போம்:
உலகைக் காப்பது அந்தா: அதாவது உணவு.
பார்க்க முடியாதவன் அந்தா: அதாவது அதாவது குருடன்.
இரு கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் விடை.
அடுத்து, கடவுளரை வெறுப்பவர் தானவா: அதாவது அசுரர்.
தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது தானவா: அதாவது தானத்தைக் கொடுக்கும் போது சொரியும் நீர்!
அடுத்து, வயிறு இல்லாதவன் தம: அதாவது ராகு.
கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது தம: அதாவது இருட்டு!
அடுத்து, வானில் விளையாடுவது வய: அதாவது பறவைகள்.
அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது வய: இளமைப் பருவ வயது!
ஆக இப்படி இரு பொருள் தரும் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கேள்விகளைத் தொடுத்து விட்டார் சாமர்த்தியமான கவிஞர்.
இது போன்ற புதிர்க் கவிதைகள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன!
இந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இதோ:

What protects the world (people)?
(andha – food)
Who does not see?
(Andha – blindman)
Who hate the Gods?
(Dhanavah – Demons)
What adorns the hand of donor?
(Danavaj – water offered at the time of giving gifts)
Who is without belly?
(tamah – Ragu)
What screens the eyes?
(tamah – darkness)
Who sport in the sky?
(vayah – birds)
What is the ornament that beautifies charming girls?
(vayah – youthful age)
Applying your mind tell the answers, O man of subtle intelligence, noting that the answer is the same for two questions each.
(Translation by A.A.R)
***
tags – இரு கேள்வி, ஒரு வார்த்தை பதில், சம்ஸ்கிருத புதிர்,