“ அ” க்கு அடுத்து “ஆ” வருவதேன்??? நவீன ஞான மொழிகள் – 13 (Post.9062)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9062

Date uploaded in London – – 22 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 13

Kattukutty

எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!!!

என் எந்தத் தவறும் எனக்கு தெரியாமல் செய்யப்பட்டதல்ல!!!

ஆசையைக் கட்டுப்படுத்த புத்தனாக பிறக்க வேண்டியதில்லை,

நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறந்தாலே போதும்.

சீதையின் தீக்குளிப்பில் நிருபிக்கப்பட்டது ராவணனின் கற்பு!!!

xxx

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும்,

ஞாயிறு இரவு பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன…….

வாழ்ந்து முடிந்த கோழியும், வாழ வேண்டிய முட்டையும் ஒரே

தட்டில் இறந்து கிடப்பதையே “பிரியாணி” என்கிறோம்!!!

xxx

ஒருநாளைக்கு ஐந்து டிரஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக

இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக் குழந்தையாக

இருந்தாலே போதும்!!!.,

உயிர் தான் இந்த உலகின் சிறந்த வாசனைப் பொருள்…..

அது மட்டும் இல்லையென்றால் உடல் நாற்றமெடுக்கும்!!!!

xxxx

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை, அதில் என்ன புதுமை

வரப்போகிறது என்ற ஆவல்தான் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது!!!

உலகத்தின் குறைகளெல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன்

குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர்தான்

“சுய நலம்” !!!

xxxx

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை

மூன்றாம் மனிதர்களின் வாயால் கேட்கையில் அவமானப்படுகிறது

நம் நம்பிக்கை…….

கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித்

தொலைக்கிறோம்……

xxxx

தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட உறவோ, நட்போ இல்லாத

தனிமையைதான் ஆங்கிலேயர்கள் “SELFIE “ என்றழைத்தனர்…….

xxxx

தவறு செய்யும் மனிதரைப் பார்த்து தவறாகப் பேசாதீர்கள்…….

உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை………

மனைவியை நேசித்தால் மாரடைப்பிலிருந்து 50% தப்பலாம்,

ஆய்வின் முடிவு . ஆனா அது உங்க சொந்த மனைவியா இருக்கணும்!!!

அனேக உண்மைகள் வேடிக்கைப் பேச்சில் தான் வெளியாகிறது!!!

xxx

பாக்கெட்டில் உள்ள கடைசி 100 ரூபாயும் காலியான பிறகு தான்

வாழ்க்கை மீதான பயம் அதிகரிக்கின்றது……..

பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம்.

உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்

ஏனெனில் இரண்டுமே உங்கள் நிம்மதியைக கெடுக்கும்.

xxx

எழுந்து நடந்தால் இமயமும் நமக்கு வழி கொடுக்கும்.

உறங்கிக் கிடந்தால், சிலந்தியும் நம்மைச் சிறை பிடிக்கும்!!!

xxxx

அ” க்கு அடுத்து “ஆ” வருவதேன்???

அரசனும் ஆண்டியாவான் எனபதை அறிவிக்க

“இ” க்கு அடுத்து “ ஈ “வருவதேன்???

இருப்பவன் ஈய வேண்டும் என்பதற்காக

உ க்கு அடுத்து ஊ வருவதேன்???

உழைப்பே ஊக்கம் என்று உணர்த்திட.

“எ “க்கு அடுத்து “ஏ “வருவதேன்???

எதையும் ஏனென்று சிந்திப்பதற்கு

“ஐ” மட்டும் சேராமல் தனித்திருப்பதேன்???

அதற்கு “நான்” என்ற அகம்பாவம் இருப்பதால்

தனிமைப் படுத்தப்படுகிறது.

“ஒ”க்கு அடுத்து “ஓ “வருவதேன்???

ஒற்றுமையே ஓங்கும் என உணர்த்திட!!!

xxxx

கொரோனாகாதல்

E பாஸ் இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே !

N -95 அணிந்தும் என் இதயத்தில் நுழைந்தவளே!

கடைசியில் என்னை “சானிடைசர்” போட்டு கழுவி விட்டாயே???

xxxx

பாண்டங்கள் வெவ்வேறானாலும் மண் ஒன்றே,

நகைகள் வெவ்வேறானாலும் பொன் ஒன்றே,

பசுக்கள் பல ஆனாலும் பால் ஒன்றே,

அது போல உடல்கள் வெவ்வேறானலும்,

பரமாத்மா ஒருவனே்!!!

Xxxx

tags- நவீன ஞான மொழிகள் – 13

Leave a comment

Leave a comment