விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –27 (Post.13,524)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,524

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்தக் கட்டுரை வரிசையில் முன்னொரு கட்டுரையில் இந்துக்களுக்குத் தெரிந்த பெரிய சிறிய எண்களைக் கண்டோம். உலகமும் மனித இனமும் கி.மு.4000ல்- உருவானது என்று மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்டு வெல் கும்பலும் நம்பி வந்த காலத்தில் இந்துக் குழந்தைகள் இறைவனை சஹஸ்ரகோடி யுகத்தாரினே  நமஹ என்று தினமும் துதி பாடின.; சூர்யகோடி ஸமப்ரபா என்று பிள்ளையாரைப் புகழ்ந்தன

சஹஸ்ரகோடி= 10,000 மில்லியன் x 4,32,000 ஆண்டுகள்.

கடோபநிஷத்திலும்  எல்லா சம்ஸ்க்ருத தமிழ்ப் பாடல்களிலும் வரும் கீழ்கண்ட மேற்கோளை நாம்  அறிவோம்:

அணோரணீ யான் மஹதோ மஹீயான்

அதர்மஸ்ய ஐந்தோர் நிஹித குஹாயாம்

தம் அக்ரது பஸ்யதி வித சோகோ

தாது பிரசதான் மஹிமானாம் ஆத்மநஹ

இறைவன் அணுவுக்கும் சிறியவன் பெரிய பொருளுக்கும் மேல் பெரியவன் .

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்க வாசக சுவாமிகளும் கோடிக்கணக்கில் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பாடியுள்ளார் . அதை நமது காலத்தில் பாரதியாரும் எளிய தமிழில் நமக்குப் பாடித்தந்தார்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன– திருவாசகம்

கோமதி மகிமை

நக்க பிரானருளால் — இங்கு

   நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;

தொக்கன அண்டங்கள் — வளர்

   தொகைபல கோடிபல் கோடிகளாம்!

இக்கணக் கெவரறிவார்புவி

   எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரானறிவான்; — மற்று

    நானறி யேன்பிற நர றியார்;

தொக்க பேரண்டங்கள் — கொண்ட

     தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற

தக்கபல் சாத்திரங்கள்; — ஒளி

    தருகின்ற வானமொர் கடல்போலாம்;

அக்கட லதனுக்கே — எங்கும்

     அக்கரை இக்கரை யொன்றில்லையாம்

இக்கட லதனகத்தே — அங்கங்


     கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்

தொக்கன உலகங்கள்; — திசைத்

     தூவெளி யதனிடை விரைந்தோடும்;

மிக்கதொர் வியப்புடைத்தாம் — இந்த

    வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;

மெய்க்கலை முனிவர்களே! — இதன்

மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, — கண்டீர்.

எல்லையுண்டோ இலையோ – இங்கு

   யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?

சொல்லுமோர் வரம்பிட்டால் – அதை

பாரதியார் இயற்றிய முடிவு பெறாத பாடல்

XXXX

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 XXXX

இறைவனையும் மாணிக்கவாசகர்

 “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்று போற்றினார் .

xxxx

விஷ்ணு ச ஹஸ்ரநாமத்தில் (வி.ச ) அணு வரும் இடம்

அணுஹு — நாம எண் 835- –

மிகவும் சூட்சுமமாய் இருப்பவர் .

ஏஷோ ணு ராத்மா சேதஸா வேதி தவ்யஹ – முண்டகோபநிஷத் 3-1-9

மிகச் சிறியதான இருதய ஆகாசத்தில் அடங்கியவர் .

XXXX

இதற்கு அடுத்தநாமம் ப்ருஹத் – 836-

அதற்கு உரை எழுதிய சங்கரர் அணோரணீயான் — கடோபநிஷத் 2-20 வாக்கியங்களையே மேற்கோள் காட்டுகிறார்.

கீதையிலும் (11-20) வானுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள இந்தப் பெருவெளி எல்லாம்  ஒருவனாகிய உன்னாலேயே  நிறைந்திருக்கிறது – என்ற வரிகள் உள்ளன.

XXXX

சூக்ஷ்ம ஹ — நாம எண் 457-

மிகவும் சூட்சுமமாக இருப்பவர் -நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே  என்று திருவாசத்தில் மாணிக்கவாசக சுவாமிகளும் பாடுகிறார்

ஸர்வ கதம் ஸ ஸூக்ஷ்மம் – முண்டகோபநிஷத் 1-1-6.

இன்னும் ஒரு உரையில் வரும் விளக்கம்,

தியானத்தினால் மட்டும்  புலப்படக்கூடிய நுண்ணிய ஸ்வரூபம் உடையவர்

காண்பதற்கரியதும் அனைத்திலும் ஊடுருவி  உள்ளுறையும் மறைபொருளும் புத்தி குகையில் நிலை பெற்றதும் உடல்தோறும் வியாபித்து நிற்பதும்பழமையான பொருளும் ஆகிய அந்த திவ்ய தேஜோ மயத்தை அத்தியாத்ம யோகத்தால் உணர்ந்து  தீரனானவன் இன்ப துன்பக் கிளர்ச்சிகளை விட்டவன் ஆகின்றான் – கடோபநிஷத் – 2-12

அறிவியல் பாடத்தில் அணு மற்றும் அணுகுண்டு பற்றிப் படித்த மக்களுக்கு இங்கே ஒரு சந்தேகம் வரும். இப்போது நாம் படிக்கும் அணு என்ற சொல்லுக்குள்ள பொருள் அப்போது இருந்ததா ? அதை அறிந்துதான் அந்தச் சொல்லினை அவர்கள் பயன்படுத்தினார்களா ? ‘ஆமாம்’ என்று சொல்லலாம்

எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் அணு வைப் பிளப்பது பற்றிப்பாடுகிறார்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் .


“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”

-திருமந்திரம்`

XXXX

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணு அற நின்ற கலப்பது உணரார்

இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித்

தணிவு அற நின்றான் சராசரம் தானே.

இவ்வளவுக்கும் திருமூலர் அணுசக்தி பற்றி நூல் எழுதாமல்,  போகிற போக்கில் இறைவனின் பெருமை கூறுமிடத்து,  இதைச் சொல்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

திருமூலரும் மாணிக்கவாசகரும் சொல்லும் விஷயங்கள் அனைத்தையும்  அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உபநிஷத் கால ரிஷிகள் சொன்னார்கள் என்பதை சம்ஸ்க்ருதம் அறிந்தோர் மட்டுமே அறிவார்கள்.

இதை எப்படி உறுதிப்படுத்தலாம் ?

அவர்கள் சகட்டு மேனிக்குப் பயன்படுஸ்த்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மூலம் உறுதிப்படுத்தலாம்.

XXXX

ஒளவையார்

55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

  குறுகத் தறித்த குறள். திருவள்ளுவமாலை

XXXX

இடைக்காடர்

54.கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

   குறுகத் தறுத்த குறள்.- திருவள்ளுவ மாலை

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

அணு = ஒரு தேர்த்துகள்
தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8
பஞ்சிழை = ஒரு மயிர்
மயிர் = ஒரு மணல்
மணல் = ஒரு கடுகு
கடுகு = ஒரு நெல்,
நெல் = ஒரு விரல்
12 
விரல் = ஒரு சாண்
சாண் = ஒரு முழம்
முழம் = ஒரு கோல்
500 
கோல் = ஒரு கூப்பீடு
4
கூப்பீடு = ஒரு காதம்

அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
– 
செந்தமிழ் தொகுதி 12 P127

XXXX

அப்ரமேயஹ – நாம எண் 46-

பிரமாணங்களுக்கு  எட்டாதவர் .

யன் மனசா ந மனுதே கேனோபநிஷத் 15

நம்முடைய அறிவால் அளக்க முடியாதவர்

என் கருத்து

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை பொருத்தமானது. உப்பு பொம்மை ஒன்று கடலில் ஆழத்தை அளக்க வேண்டும் என்று குதித்தது ; அடுத்த சில அடிகள் போவதற்குள் கரைந்து போனது .

விவேகானந்தர்  சொன்ன தவளை கதையும் பொருத்தமானது;

கடல் தவளை  ஒன்று ஒரு நாள் கிணற்றுக்குள் குதித்தது ; கிணற்றுத்தவளைக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் கடலின் அளவு புரியவில்லை

XXXX

த்வஷ்டா  நாம எண் 52—

உலகத்தை அழிக்கும் காலத்தில் எல்லாவற்றையும் சுருங்கவைப்பவர்; Big Crunch theory  என்னும் விஞ்ஞானக் கொள்கையை நினைவுபடுத்துகிறது .

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் .

தனூ கரணத்தவாத் த்வஷ்டாத்வக்ஷதேஸ் தனூ கரணத்தவார் த்தே

xxxx

மஹாத்யுதிஹி – நாம எண் 176-

மிக்க ஒளி பொருந்தியவர் ;

ஜ்யோதிஷாமபி தஜ் ஜ்யோதிஸ் தமஸஹ பரமுச்யதே- பகவத் கீதை 13-17.

பிருஹத் ஆரண்யக உபநிஷத் 4-5-9சொல்வதாவது,

ஸ்வயம் ஜோதிஹி  = தாமாகவே ஒளிவிடுபவர்

ஜ்யோதிஷாம் ஜ்யோ திஹி = ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர்

—- subham—-

Tags- விஷ்ணு ஸஹஸ்ர நா மம் Aஅணு, திருமூலர், ,  பகுதி 26 அணோரணீ யான் மஹதோ மஹீயான்

Leave a comment

Leave a comment