அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்!-2

 (Post No.14,843) – part 2

Swamiji Krishna of Ayakkudi

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,843

Date uploaded in London – 8 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 2 

ச. நாகராஜன்

ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி!

அதிசயங்களும்அற்புதங்களும்! 

Madurai V.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, , passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

This is part two.

ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியுடனான தொடர்பு  மிக நெருக்கமானது சந்தானம் குடும்பத்தினருக்கு.

இதனால் அடிக்கடி அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது.

சிலவற்றை இங்கு பார்ப்போம். நூற்றுக்கணக்கான சம்பவங்களில் எடுத்துக்காட்டுகளாக உள்ளவை இவை.

ஸ்வாமிஜி மதுரைக்கு விஜயம் செய்யும் போது அங்குள்ள பக்தர்களின் வீட்டில் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.

இந்த வகையில் எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடைபெற்றது.

ஸ்வாமிஜிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஹோம சமயத்தில் இருக்க வேண்டும் என்பது சங்கல்பம், ஆனால் ஒரு நண்பர் ஹோமம் நடப்பதை அறிந்து கொண்டு நிச்சயம் நான் வந்து விடுவேன் என்றார்.

ஹோம தினத்தன்று தீபாராதனை முடிந்தது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த நண்பர் அரக்க பரக்க ஓடி வந்தார். கார் மக்கர் செய்து விட்டது நான் என்ன செய்வேன் என்றார் அவர்.

சின்ன சின்ன விஷயங்களிலில் கூட ஸ்வாமிஜியின் வாக்கு எப்படி பலிக்கும் என்பதைப் பேசுவது எங்களது அன்றாட வாடிக்கை ஆனது.

மதுரை கோட்ஸில் உள்ள மிகப் பெரிய அதிகாரிகள் ஸ்வாமிஜியின் பக்தர்கள் திரு எம்.கே இதில் முக்கியமானவர். அடுத்து சத்தியமூர்த்தியும் மதுரை கோட்ஸ் பெரிய அதிகாரி. இவர்கள் வீட்டில் நடக்கும் கணபதி ஹோமங்களுக்கு தவறாமல் சென்று விடுவோம்.

அடுத்து மதுரை கோட்ஸில் டாக்டராக இருந்தவர் ராமாராவ். இவரது மனைவி சாவித்திரி. இவர் கேரளாவில் அப்போது லேபர் மினிஸ்டராக இருந்த செல்வாக்கு மிக்க வி.வி.கிரியின் புதல்வி.

இவர்கள் அனைவருடனும் நல்ல நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

சாவித்திரியின் தந்தையான வி.வி.கிரி ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தர்.

ஸ்வாமிஜி அவரிடம், “இதை விட பெரிய பதவி கிடைக்கும்” என்றார்.

இதைப் பற்றிய அன்றாட டிஸ்கஷனில் என்ன பதவியாக இருக்கும் என்று பேசுவது எங்களின் வழக்கம். அவர் கேரள கவர்னராக ஆனார்.

எங்கள் அனைவருக்கும் சந்தோஷம்.

“இல்லை, இன்னும் பெரிய பதவி கிடைக்கும்” என்றார் ஸ்வாமிஜி                                                                                            .V Santanam with Swamiji Krishna 

எங்களுக்கு ஆச்சரியம்! இதை விட பெரிய பதவி எதாக இருக்க முடியும் என்று.

அவர் ராஷ்டிரபதி ஆனார். அப்போது தான் எங்களுக்குப் புரிந்தது பெரிய பதவி எது என்று!

ஸ்வாமிஜியின் அனுக்ரஹம் ஒருவரை எவ்வளவு உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்பதற்கான சரியான உதாரணம் இது.

நாங்கள் அடிக்கடி ஆய்க்குடி கிராமத்திற்குச் செல்வது வழக்கமானது.

நயினாரகரம் ஸ்டேஷனில் இறங்கினால் மாட்டு வண்டி ரெடியாக இருக்கும். அதில் ஏறி ஆய்க்குடி செல்வோம்.

எனது தந்தையாருக்கு கணபதி மஹாமந்திர உபதேசம் ஆனது. அவர் கணபதி ஹோமம் செய்யலானார். எனக்கும் என் அண்ணன் திரு சீனிவாசனுக்கும் உபதேசம் ஆனது.

இதில் ஒரு முக்கிய அம்சம் எனது அண்ணனை வேறுபக்கம் டைவர்ட் செய்த பல நண்பர்கள் காணாமல் போயினர்.

பின்னர் என் அண்ணனுக்கும் கணபதி ஹோமம் செய்யச் சொல்லி ஸ்வாமிஜி உத்தரவிட்டார்.

அதனால் நாள் செல்லச் செல்ல ஒருவரின் முகம் பாரத்தவுடனேயே அவரைப் பற்றி அனைத்தையும் அறியும் ஆற்றலை என் அண்ணன் பெற்றார். வருங்காலத்தைப் பார்க்கும் அவரது ஆற்றலுக்காக அவர் வீட்டில் தினமும் பலரும் வருவதுண்டு.

ஆய்க்குடியில் ஒரு நாள் மாலை நேரத்தில் ஸ்வாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென்று அவர், “ராஜாராம் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். கார் ரிப்பேர். பசியோடு வருவார். அவரை சாப்பிடச் சொல். காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஸ்வாமிஜியின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டோம். எப்போது ராஜாராம் வரப் போகிறார் என்று ஆவலுடன் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாம். கடைசியில் இரவு கார் வந்தது. அதிலிருந்து மிகவும் சோர்வுடன் இறங்கிய ராஜாராமைப் பார்த்து நாங்கள் அனைவரும், “என்ன கார் ரிப்பேரா? மரத்தடியில் உட்கார்ந்திருந்தீர்களா? பசிக்கிறதா, வாருங்கள் சாப்பிடலாம். ஸ்வாமிஜியை காலையில் பார்க்கலாம்” என்றோம்.

உற்சாகமின்றி முக வாட்டத்துடன் இருந்த அவர் இதைக் கேட்டவுடன் துள்ளிக் குதித்தார். “ஸ்வாமிஜி சொல்லிட்டாரா? நடு வழியில் கார் பஞ்சர். யாருமே இல்லை. துணைக்கு ஆள் வந்து பஞ்சர் பார்க்கும் வரை மரத்தடியில் தாந்ன் உட்கார்ந்திருந்தேன்” என்றார் அவர்.

ஒரு கசப்பான அனுபவம் திடீரென்று இனிமையான ஒன்றாக மாறி விட்டது. அவரும் சாப்பிட்டார். மறு நாள் காலை கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமிஜியின் முழு அனுக்ரஹத்தைப் பெற்றார்.

இப்படி பற்பல அனுபவங்கள்!

V Santanam with Mr K Kamaraj and Mr Bhaktavatsalam
Santanam was in Vellore Jail with Kamaraj for six months during Freedom Struggle.

இவை எல்லாவற்றையும் எனது தந்தையார் நன்கு உணர்வார். ஸ்வாமிஜியைப் பற்றிய முக்கியமான செய்திகள் தினமணியில் அவ்வப்பொழுது வெளிவரச் செய்வார்.

***

Tags- அதிசய புருஷர் ,திரு வெ.சந்தானம்! , Part 2

Leave a comment

Leave a comment