நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடகக் கம்பெனிகளும், தமிழ் நாடகங்களும் (Post.15,838)

Written by London Swaminathan

Post No. 15,838

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சென்னை வி ஏ தியாகராஜ செட்டியார் அவர்கள் எழுதிய சாகுந்தலம் நாடகத்தின் புஸ்தகத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் படித்துவிட்டு 7, 8  பக்கங்களை பேஸ்புக்கில் போட்டேன் ; இன்று பேஸ்புக் அவைகளை வெளியிட்டு எனக்கு நினைவுபடுத்தியது ; அது மட்டுமல்ல; மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றி நீங்கள் எழுதியதைக் கண்டேன் ; மேற்கொண்டு விவரங்களைத் தரமுடியுமா என்று சென்னை அன்பர் ஒருவர் சென்ற மாதம் எனக்கு E மெயில் அனுப்பியிருந்தார். அதனால் இதையும் எழுத்தில் வடிக்கலாமே என்று துவங்கினேன்.

சென்னை தியாகராஜ செட்டியார் தன்னை ம. ப. க . அழகர்சாமி பாவலர்  மாணவன் என்றும் நாடக ஆசிரியர் என்றும் அறிமுகப்படுத்திக்  கொள்கிறார் .

முதல் பக்கத்தில் அவர் தன்னுடைய நாடகங்களை யார், யார் பயன்படுத்துகிறார்கள் என்று நன்றிப் பெருக்குடன் பட்டியல் போட்டுள்ளார்; அதைப் பார்க்கும்போது அக்காலத்தில்– 1930 களில்– எவ்வளவு பேர் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்ற விவரம் கிடைக்கிறது ; இதோ அந்த நடிகர்களின் பெயர்கள்:

S G கிட்டப்பா, K B  சுந்தராம்பாள், S V   சுப்பையா பாகவதர், P S வேலுநாயர், P S கோவிந்தன், T S பரமேஸ்வரய்யர், K S செல்லப்பய்யர் K S அனந்த நாராயணய்யர்,  ஆலந்தூர் ஒரிஜினல் இந்து ட்ரம்மடிக் கம்பெனியார், ஸ்ரீ வித்வ இரத்தின வினோத ரஞ்சித பால்ய சபையார் , மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் இன்னும் பல நாடக கம்பெனியார்களும் நடத்திவரும்

சம்பூர்ண

சகுந்தலா சரித்திரம்

நாடகாசிரியர்

சென்னை முத்தியாலுப்பேட்டை

பால சந்தச் சரபக்  கவி

V A தியாகராஜ செட்டியாரவர்களால்

இயற்றப்பெற்று

மேற்படி

V A தியாகராஜ செட்டியாரவர்களால்

சென்னை ஆர் ஜி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது

காப்பிரைட்  1935          விலை அணா 4

இதைவிட சுவையான விஷயம், அவர் 1935 ஆம் ஆண்டுக்குள் எழுதிய நீண்ட நாடகங்களின், சரித்திரங்களின் பட்டியல் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது ; அவையாவன ( எல்லாம் நான்கு அணா விலையில் விற்கப்பட்டுள்ளது) :

1.வள்ளித் திருமணம்,

2.லவகுச சரித்திரம்,

3.அல்லி அர்ஜுனா,

4.சம்பூர்ண அரிச்சசந்திரா ,

5.சாவித்திரி,

6.கோவலன் சரித்திரம் ,

7.ஞான சவுந்தரி டிராமா ,

8.கபீர்தாஸ் சரித்திரம் ,

9.ராமதாஸ் சரித்திரம் ,

10.மார்க்கண்டேயர் சரித்திரம் ,

11.நந்தனார் சரித்திர டிராமா,

12.நல்லதங்காள் டிராமா,

13.சக்குபாய் சரித்திரம்,

14.சிறுத்தொண்ட பத்தன் சரித்திரம் ,

15.பாரிஜாத புஷ்பஹரணம்,

16.பவளக்கொடி டிராமா,

17.பக்த பிரஹலாதா ,

18.தூக்குத் தூக்கி டிராமா,

19.சாரங்கதரன் ,

20.டம்பாச்சாரி

21.குலேபகாவலி

22.பாதுகா பட்டாபிஷேகம்

23.துளசிதாஸ் சரித்திரம்

இன்னும் அநேக சரித்திரங்களை அச்சிட்டு வருகிறேன்.

***

அந்தக்காலத்தில் நாடகம் என்பது குறைவான வசனங்களுடனும் அதிகப் பாடல்களுடனும் இருந்தன ; மக்கள் இசைப்  பிரியர்களாக இருந்தனர் .

இவ்வளவு அரிய படைப்புகளை அக்காலத்திலேயே எழுத்து வடிவில் வெளியிட்டு நாடக மேடைகளில் ஏற்றிய தியாகராஜ செட்டியாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்; அவர் எழுதியதில் சில நாடகங்களைத் தவிர பெரும்பாலும் புராண, இதிஹாஸக் கதைகளாவும் சாதுக்களின் சரித்திரமாகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது . தியாக ராஜ செட்டியார் முழு சாகுந்தல நாடகத்தையும் கவிகள் வடிவில் நூதன மெட்டுகளுடன் ஆக்கியதாகவும் முன்னுரையில் எழுதியுள்ளார்.

–SUBHAM—

TAGS– சென்னை V A தியாகராஜ செட்டியார், நூறு ஆண்டுகளுக்கு முன், நாடகக் கம்பெனிகள் , தமிழ் நாடகங்கள்

Leave a comment

Leave a comment