பாம்பும் வசம்பும் (Post No.6949)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-20 AM

Post No. 6949

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-

TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN

tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ

List of ‘Sexy’ Plants (Post No.6946)

Compiled  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 19-24

Post No. 6946

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

I have already given a list of 255 plants. Here is a list of sexy plants, I mean, listed in the book  about aphrodisiacs (drugs, herbs, chemicals stimulating sexual feelings).

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://tamilandvedas.com › 2015/02/23 › 255-indian-tr…

23 Feb 2015 – (Sapta parna, Ezilai Palai in Tamil). Compiled by London swaminathan. Post No.1670; Dated 23 February 2015. In the first part posted on 21st …

Trees | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › trees

  1.  
  2.  

If a Brahmin cuts the fruit treesshrubs, vines, , creepers or flowering plants , a … 255 Indian treesherbs and flowers mentioned in Brhat Samhita Part1, posted …

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://swamiindology.blogspot.com › 2015/02 › 255-indian-trees-herbs-and…

21 Feb 2015 – 255 Indian TreesHerbs and Shrubs mentioned in Brhat Samhita– Part-1 ….. ஜப்பானியர் அட்டூழியம்- part 1 (Post No.6723).

Plants in Mahavamsa | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2014/10/03 › plants-in-mahavamsa

  1.  

3 Oct 2014 – Studying about the plants mentioned in ancient literature helps us to … We have Pippaladan and other names in Upanishads meaning Mr Pipal …

Plants list 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › plants-list-2

  1.  

23 Feb 2015 – In the first part posted on 21st February I gave the names of 130 trees. Here is the second part: 131.Patra =Laurus cassia, Cinnamomum …

தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா 5800 கிலோ!! (Post No.6945)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6945

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Dasara Elephants

–subham–

இலங்கைக்கு இலவச சுற்றுலா!- பகுதி 2 (Post No.6921)

COMPILED BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 13-53

Post No. 6921

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

1951-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் விழா மலரில் இலங்கைத் தமிழர் பற்றி நல்ல, அருமையான கட்டுரைகள் உள்ளன. அதில் ஒன்று இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்கள் பற்றியதாகும். நாற்பதுக்கும் மேலான சுற்றுலாத் தலங்கள் வரிசைக் கிரமத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரையை எழுதியவர்-முதலியார், குல.சபாநாதன்

Xxx

அவர் குறிப்பிடும் 40+++ இடங்கள்:-

PART TWO (TODAY)

சிகிரியா குகை ஓவியம்

பொலன்னருவ

கல்விகாரை

மின்னேரி

ஸ்ரீபாதமலை 7353 அடி உயரம்- எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.

இரத்தினபுரி

கண்டி திருவிழா

தாலத மாளிகை/ புத்தர் பல்

மட்டக்களப்பு- பாடும் மீன்கள்

அமிர்தகழி

கொக்கட்டுச்சோலை

திருக்கோயில்

கல் ஓயா- கல் முனை

கண்ணகி வழிபாடு

திருகோணமலை

கன்னியாய் வெந்நீர் ஊற்று

யாழ்ப்பாணம்

சிங்கை நகர்

நல்லூர் கந்தசாமி கோயில்

புத்தூர்

வல்லிபுரம்

மாவிட்டபுரம்

வல்வெட்டித்துறை

நகுலேஸ்வரம்

கிழாலி

நயினா தீவு

கொழும்பு (தலைநகர்)

விபீஷணன் ஆலயம், களனி கங்கை

XXX

PART 1 (POSTED YESTER DAY)

கதிர்காம முருகன் கோவில்

தெய்வந்துறை

முன்னேஸ்வரம்

சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-

அசோகவனம்

நுவரெலியா மலைப் பிரதேசம்

ஹக்கல பூந்தோட்டம்

ராவணன் மனைவியின் ஊர் மாந்தை

திருக்கேதீஸ்வரம்

மருத மடு கத்தோலிக்க ஆலயம்

தலைவில்லு சந்தனமாதா கோவில்

இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்

மிஹிந்தலை

தம்புல்ல குகைக் கோயில்

—SUBHAM—

மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்! (Post No.6918)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6918

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்பட்டன. 10-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட பத்தாம் உரை இங்கு தரப்படுகிறது.

மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்!

ச.நாகராஜன்

மரங்களை நடுதல் ஒரு பெரிய அறமாக பாரதத்தில் கருதப்பட்டதோடு அந்த அறத்தை மாமன்னர்கள் தவறாது செய்தனர்; ஆயிரக்கணக்கான நிழல் தரு மரங்களை ஆங்காங்கே நட்டனர்.

ஒரு மரத்தை நடுவதால் ஏற்படும் பயன்கள் யாவை?

மரங்கள் உயிர் வாழத் தேவையான சுவாசிக்கும் காற்றைத் தருகிறது; ஆக்ஸிஜனைத் தருகிறது. வெள்ளப் பெருக்கெடுத்தோடும் போது வெள்ளப் பெருக்கை மரங்கள் தடுக்கின்றன. அதனால் நிலச்சரிவுகளும் மண் அரிப்பும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஏராளமான விலங்குகளும் பறவைகளும் மரங்களைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டு உயிர் வாழ்கின்றன. மரங்கள் கனிகளையும் காய்களையும் வழங்குகின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருளாகவும் இன்னும் இதர பல வித வழிகளிலும் மனித குலத்திற்கு உதவுகின்றன.

பூமியின் நுரையீரலே மரங்கள் எனலாம். அவைகள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர நச்சு வாயுக்களே பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணம்.ஆகவே பூமியை நிரந்தரமாக வாழ்விக்கும் அரிய செயலை மரங்கள் செய்கின்றன.

மண்வளத்தை உறுதி செய்வதும் மரங்களே.

மரங்களை நடும் அரிய பணியைச் செய்து மனித குலத்திற்கு அரிய முன்னுதாரணமாகப் பலரும் திகழ்கின்றனர். இரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.   

ஃபெலிக்ஸ் ஃபின்க்பெய்னர் (Felix Finkbeiner)  என்ற இளைஞர் இளம் வயதிலிருந்தே மரம் நடுவதில் ஆர்வம் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் பேசும் போது அவர்க்கு வயது ஒன்பது தான். ப்ளாண்ட் ஃபார் தி ப்ளானெட் (Plant for the Planet) என்ற மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து கோடிக் கணக்கில் மரங்களை நட்டார். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் 150 மரங்களை நடுவது என்ற கணக்கில் அவர் மரங்களை நட்டு வருகிறார். உலக மக்களுக்கு உத்வேகம் ஊட்டுகிறார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள உலகின் மிகப்பெரும் நதித் தீவான (River Island) மஜுலி தீவானது (Majuli Island) வறண்டு அழியும் நிலையில் இருப்பதைப் பார்த்தார் ஜாதவ் பயெங் (jadav Payeng) என்னும் இளைஞர். அதைச் சுற்றி ஓடும் பிரம்மபுத்திரா நதியானது தீவின் ஓரங்களை அரிப்பதைக் கண்ணுற்ற அவர் 1979இலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை அங்கு நட ஆரம்பித்தார். தீவில் மிகப் பெரும் காட்டை உருவாக்கிய அவர் 15000 மக்களை வாழ வைத்ததோடு யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கான ஒரு பூங்காவையும் அமைத்தார். உத்வேகமூட்டும் இவர்கள் வழியில் அனைவரும் சென்றால் பூமி பசுமை பூமியாக மாறும் இல்லையா?

***

இமய மலை ஏரி மர்மம்-உலகப் பத்திரிக்கைகள் அலசல் (Post No.6911)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-40 am

Post No. 6911

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

அதிசய எண் ஏழு; புனித எண் 7! (Post No.6900)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 19 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 8-04 am

Post No. 6900

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))



எண் ஏழு | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/எண்-ஏழு/

  1.  

ரிக் வேதத்திலும், சிந்து சமவெளி முத்திரைகளிலும் ஏழு என்ற எண் எப்படி முன்னிலையில் நிற்கிறது என்று ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி, …

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் …



https://tamilandvedas.com/…/ஏழு-எண்ணின்-…

  1.  

22 Nov 2014 – சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை! கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்– …

ஏழு மலை | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/ஏழு-மலை/

  1.  

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! … ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், …

கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655 …



https://tamilandvedas.com/…/கம்பன்-பாட்டி…

  1.  

13 Nov 2018 – பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு குகை தாண்டி’ என்றெல்லாம் எழுதினர். நாம் …

பாபிலோனிய பூதம் 7 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பாபிலோனிய-ப…

  1.  

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! … இது தவிர சப்தபதி, ஏழு கடல்ஏழு மலைஏழு நதி, ஏழு புனித நகரங்கள், ஏழுத்வீபங்கள் …

காளிதாசனில் ஏழு | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/காளிதாசனில்…

  1.  

ரிக் வேதத்திலும், சிந்து சமவெளி முத்திரைகளிலும் ஏழு என்ற எண் எப்படி … ஆழ்வார்தரும் அதிசயத் தகவல்: 7 மலை, 7 கடல், 7 முகில் என்று …

ஏழு நகரம், ஏழு நதி பெயர் தெரியுமா? (Post No …



https://tamilandvedas.com/…/ஏழு-நகரம்-ஏழு-…

15 Nov 2018 – அயோத்யா புரி, மதுராமாயா, காசி, காஞ்சி,. அவந்திகா, துவாரகா புரி. ரேவா= நர்மதா. மாயா= ஹரித்வார். அவந்திகா= உஜ்ஜயினி.

Mystic No.7 in Music !! | Tamil and Vedas



https://tamilandvedas.com/2014/…/mystic-no-7-in-music…

13 Apr 2014 – It is no wonder 7 was considered a mystic number by our ancients. … Anandakalippu tune ‘ Nandavanathil Or Andi’ (all Tamil songs) are in this …

SACRED NUMBER SEVEN (Post No.6893) | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/sacred-number-seven-post-…

2 days ago – Mystic No.7 in Music! (posted on 13th April 2013) Numbers in the Rig Veda (posted on 3rd September2014) Hindus’ Magic Numbers 18,108 …

Sapta matas | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/sapta-matas/

  1.  
  2.  

Before going any further let me list my earlier posts on Numbers: Mystic No.7 in Music! (posted on 13th April 2013) Numbers in the Rig Veda (posted on 3rd …

Seven in Vedas | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/seven-in-vedas/

  1.  

Before going any further let me list my earlier posts on Numbers: Mystic No.7 in Music! (posted on 13th April 2013) Numbers in the Rig Veda (posted on 3rd …

Number Seven in Kalidasa and Kamba Ramayana! – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/number-seven-in-kalidasa-…

  1.  

7 Feb 2017 – I have already explained the significance of Number 7 in my two articles as given in the … Mystic No.7 in Music!! posted on 13th April 2014. 2).

7 demons | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/7-demons/

  1.  
  2.  

Some people see Seven Matas (seven mothers) as in Hindu scriptures and others see Seven Demons as described in Babylonian clay tablets. But Hindus have …


CAN YOU FIND THE 7 HOLY RIVERS AND 7 HOLY CITIES IN INDIA …

https://tamilandvedas.com/…/can-you-fined-the-7-holy-r…

13 Nov 2018 – Post No5658. Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a …

–subham–

தில்லை சிதம்பரத்தில் 75 மரம் செடி கொடிகள்! (Post No.6897)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 18 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 18-21

Post No. 6897

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சைவர்கள் கோயில் என்று போற்றும் தில்லைச் சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் குலத்தில் அவதரித்த பெரியார் உமாபதி சிவாச்சார்யார். அவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை சைவ சித்தாந்தத்தின் தூண்களாக விளங்க்குகின்றன. தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை இருந்ததால் அவர் இரு மொழியிலும் புஸ்தகங்கள் இயற்றினார். அவற்றுள் ஒன்று நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம். அதில் தில்லையைச் சுற்றி வளரும் 75 தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். கோவில் அருகில் இத்தனை மரம் செடி கொடிகள் பாதுகாக்கப்பட்டது இந்துக்களுக்கு இயற்கை மீது எவ்வளவு அன்பு இருந்தது என்பதைக் காட்டுகிறது

தாவர இயல் அறிவும் பரிவும் அந்த அளவுக்குப் பரவி இருந்தது.

அவ்வப்போது இது போன்ற அதிசயச் செய்திகளை என்னுடன் பகிர்ந்து மகிழும் லண்டன் வாழ் திருச்சி கல்யாண சுந்தர சிவாச்சாரியார் அனுப்பிய பக்கத்தில் 75 தாவரங்களின் பெயர்கள் உள்ளன. படித்தும் அவைகளை வளர்த்தும் மகிழ்வோமாக:-

நூல் – நடேஸ்வர தண்டகம்

வானை எட்டுகின்ற கிளைகளில் எப்போதும்உறைகின்ற மேகக் கூட்டங்களின் உரசலால் விழுகின்றநீர்த்தாரைகளால் எப்போதும் பூத்துக்காய்த்துக்குலுங்குபவையும் எல்லா ருதுக்களிலும் பூத்துக் காய்த்துஅழகியவையுமான ஆல், முரள், வேழல், வெப்பாலை, அரசு,விளா, சம்பகம், பனை, பச்சிலைமரம், ஈந்தல், பனை, பைன்,ஒட்டுமா, நருவிளி, மலையகத்தி, வாகை, இலந்தை,அழிஞ்சில், பாதிரி, காட்டுப்பிச்சில், குங்கில்யம், மகிழம்,நீர்கடம்பு, கொன்னை , ஸரளதேவதாரு, அரேணுகம்,இலுப்பை, நீரிலுப்பை, நீர்க்கடம்பு, செஞ்சந்தனம், கல்லால்,ஏழிலம்பாலை, கோர்க்கப்புளி, கருகு, மா, நொச்சி,தென்னை, கருங்காலி, வெண்காலி, பேரீச்சை, சிறுகொன்னை, சிறுநாகம், புன்னாகம், நார்த்தை, நாகலிங்கம்,எலுமிச்சை, வேங்கை, மருது, கருமுருங்கை, வாகை, கடம்பு,வேம்பு, புளி, பாக்கு, லவங்கம், வாழை, மருதோன்றி,முல்லை , ரஸாளுமா, மந்தாரம், பாரிஜாதம், வெண்காலி,மஞ்சள் சந்தனம், அமுக்கரா, தேவதாரு, பில்வம், தில்லை ,ஜாதி முதலிய மரங்கள் அடர்ந்த மனத்தைக் கவர்-தோட்டங்களாலும் ஏலம், வெற்றிலை, மல்லி, திப்பிலிபிச்சகமல்லி, கணிகாரி, மயிர் மாணிக்கம் கற்பகம் முதலியபல கொடிகள் கற்றிய பல தோட்டங்களாலும் விளங்குவதும்.(9)

சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் எனும் பிராமாணப்புலவர் ஒரே மூச்சில் 99 தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த சாதனை உமாபதி சிவாச்சார்யாரததான் இருக்க வேண்டும்.

Following is taken by Project Madurai; thanks.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 மலர்கள், செடி கொடிகள்

யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் 
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா …. 70

விரிமல ராவிரை வேரல் சூரல் 
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த 
றாழை தளவ முட்டாட் டாமரை …. 80

ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி …. 90

நந்தி நறவ நறும்புன் னாகம் 
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் 
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் 
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் …. 100

–subham—

அரிய உயிரினம் காப்போம்

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 12 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-27 am

Post No. 6764

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

stranded whales
crocodiles killed by villagers, Indonesia

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   7-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஏழாம் உரை இங்கு தரப்படுகிறது.

அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!

ச.நாகராஜன்

இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பே பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடாகும்.

ஆனால் அற்புதமான இந்த அமைப்பு மனிதர்களால் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

 மிக அதிகமாக உலகெங்கும் பெருகி வரும் ஜனத்தொகை, உலகப் பொருளாதாரம், மக்களின் நுகர்வு ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் உயிர்க்கூறான அமைப்பு சிதைந்து வருகிறது.

ஒருபுறம் மக்களின் ஆயுட்காலம் பழைய காலத்தை விட அதிகமாகி இருக்கிறது என்பதும், மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை நிலை சிறப்பாக மேம்பட்டு வருகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்த போதிலும் இவை உயிரினவகை வேறுபாட்டுக்கு ஊறு செய்தே அடையப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1970ஆம் ஆண்டிலிருந்தே உயிரின வகை வேறுபாடு கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவாகும். இதை அவர்கள் Great Acceleration – க்ரேட் ஆக்ஸிலரேஷன் – பெரும் முடுக்கம் என்று வர்ணிக்கின்றனர்.

பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

விலங்குகள் இயற்கையாக உயிர் வாழும் இடம் குறைந்து கொண்டே வருவது, உயிரினங்களை வேட்டையாடுவது ஆகியவையே இந்த எண்ணிக்கை குறைபாட்டிற்கான பிரதான காரணங்களாகும்.

பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி.

750 கோடி ஜனத்தொகையைக் கொண்டுள்ள உலகம் 980 கோடி என்ற அளவில் ஜனத்தொகைப் பெருக்கத்தை 2050ஆம் ஆண்டு வாக்கில் எட்டி விடும் என்கிறது அறிவியல் ஆய்வு.

பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. பூமியின் ஜனத்தொகைப் பெருக்கத்தினால் 2000ஆம் ஆண்டு முதல் 2010க்குள் 40 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவை பல்வேறு வகை உயிரினங்களே!

ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது. இதைக் கருத்திக் கொண்டு பயோ டைவர்ஸிடி எனப்படும் உயிரின வகை வேறுபாட்டை இயற்கை அமைத்தபடியே அப்படியே காக்க உறுதி பூணுவோம். –subham–

சூரியன் அஸ்தமிக்காத நாடு ! (Post No.6750)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London –8-33 AM

Post No. 6750

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கோகுலம் கதிர் மாத இதழில் ஆகஸ்ட் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை.

உலக உலா

உலக உலாவில் இடம் பெறும் இரண்டாம் நாடு இங்கிலாந்து!

சூரியன் அஸ்தமிக்காத நாடு !

ச.நாகராஜன்

Narendra Modi in London

சூரியன் அஸ்தமிக்காத நாடு!

சூரியன் அஸ்தமிக்காத நாடு என்ற புகழ் பெற்ற ஒரே நாடு உலகில் இங்கிலாந்து தான். அதற்கு உரிமையாக 14 நிலப் பகுதிகள்  இருப்பதால் ஏதோ ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டே இருப்பான். ஆகவே தான்

“Rule, Britannia! Britannia, rule the waves!

Britons never, never,never shall be slaves.

 (பிரிட்டனே! உலகை ஆள்வாயாக! அலைகடலை ஆட்சி செய்! பிரிட்டானியர்கள் ஒரு போதும் அடிமையாக ஆக மாட்டார்கள்) என்ற பிரசித்தி பெற்ற பாடல் எழுந்தது.

ஜான் வில்ஸன் என்பவர் “ஒருபோதும் சூரியன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அஸ்தமிப்பதில்லை” (The Sun never sets on the British Empire) என்று எழுதினார். இது பிரபலமான வாக்கியமாக ஆகி விட்டது!

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமானது உலகின் கால் பகுதியை ஆண்டது!

கையளவே உள்ள ஒரு சிறிய நாடு முப்பது கோடி மக்களை உடைய இந்தியாவை அடக்கி ஆண்டது என்றால் அதன் அதிகார ஆணவத்தையும் பலத்தையும் புரிந்து கொள்ளலாம். பல தியாகங்களைச் செய்து இடைவிடாத சுதந்திரப் போரால் நாம் சுதந்திரம் பெற்றோம்.

இத்தனைக்கும் அதன் நிலப்பரப்பு 93,600 சதுர மைல்கள் தான்! அதன் எந்தப் நிலப்பகுதியிலிருந்தும் கடல் 70 மைல் தூரத்தில் தான் உள்ளது!

அதிசயமான இந்த நாட்டில் அரசிக்குப் பெரும் மரியாதை உண்டு. அதன் தேசிய கீதமே கடவுள் அரசியைக் காப்பாராக (God Save the Queen) என்பது தான்! அரசர் ஆண்டால் கடவுள் மன்னரைக் காப்பாராக (God Save the King) என தேசீய கீதம் மாறும்.

க்வீன் எலிஸபத் 116 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் விஜயம் செய்திருக்கிறார். ஏனெனில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகார உரிமை பெற்றவர் அவர் தானே! அவர் தனது அடையாளத்தை உலகில் யாருக்கும் காண்பிக்கத் தேவை இல்லை அல்லவா!

ஜனநாயகம் கண்ட நாடு

இங்கிலாந்தின் புகழுக்குக் காரணங்கள் பல!

உலகிலேயே முதன் முதலில் பாராளுமன்ற நடைமுறை பிரிட்டனில் தான் 1707இல் ஆரம்பித்தது. பின்னர் தான் ஸ்வீடனில் 1721இல் தோன்றியது. ஆக ஜனநாயக நடைமுறையின் தாயகமாக பிரிட்டன் விளங்குகிறது. 650 பாராளுமன்றத் தொகுதிகள் பிரிட்டனில் உள்ளன!

ஆங்கிலம் உலகின் பொதுமொழியாக விளங்குகிறது. உலக ஜனத்தொகையான 750 கோடிப் பேரில் 150 கோடிப் பேர் ஆங்கிலம் பேசுகின்றனர்! 36 கோடி பேர் இதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

ஷேக்ஸ்பியரின் நாடு

ஆங்கிலத்தின் இலக்கிய வளம் அகன்றது. ஷேக்ஸ்பியரை அறியாதோர் இருக்க முடியாது. அவர் தன் வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997! குறைந்த சொற்களாக 14701 சொற்களைக் கொண்டு அவர் எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகச் சொற்களாக 8,35,997 சொற்களைக் கொண்டு அவர் படைத்த படைப்பு புகழ்பெற்ற Hamlet! அவர் தன் படைப்புகளில் தொடாத துறைகளே இல்லை. இது தவிர வோர்ட்ஸ்வொர்த், மில்டன், ஷெல்லி, ஜான் கீட்ஸ், பைரன்,டென்னிஸன் என ஆங்கிலக் கவிஞர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உலகை மாற்றிய விஞ்ஞான நாடு

உலகிற்கு விஞ்ஞானத் துறையில் இங்கிலாந்தின் பங்களிப்பு மிகப் பெரியது. குறைந்த பட்சம், உலகின் போக்கை மாற்றிய பெரிய 50 கண்டுபிடிப்புகளை உடனே சொல்லி விடலாம்.நியூட்டனின் விதிகள் பற்றித் தெரியாதவரே இருக்க முடியாது. டெலஸ்கோப்பை 1668இல் நியூட்டன் கண்டுபிடித்தார். ஏன் டூத் பிரஷ் கூட இங்கிலாந்தின் கண்டு பிடிப்பு தான். 1770இல் வில்லியம் அடிஸ் என்பவர் டூத் பிரஷை அறிமுகப்படுத்தினார்.

உலகில் ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான். 1698இல் தாமஸ் சேவரி ஸ்டீம் எஞ்ஜினைக் கண்டுபிடித்தார். பின்னர் ஜேம்ஸ் வாட் அதை நன்கு அபிவிருத்தி செய்து நடைமுறைக்கு உகந்ததாக மாற்றினார். தந்தி அனுப்பும் முறையை (1837இல்) உருவாக்கியதும் பிரிட்டனே. சிமெண்ட், டின் கேன்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ஹோவர் கிராப்ட், யுத்தத்தில் பயன்படுத்தும் டேங்க் என இப்படிப் பல கண்டுபிடிப்புகளும் பிரிட்டனில் உருவானவையே!

இரண்டாம்  உலகப் போர் பிரிட்டன் கண்ட பிரம்மாண்டமான போர். ஹிட்லரை வீழ்த்த பிரிட்டானியர்கள் ஓரிழையில் ஒருங்கு திரண்டனர். இங்கிலாந்தின் முப்படை வீரர்களும் ஆற்றிய சாகஸங்களைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை!

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள்

ஏஜண்ட் 007 – ஜேம்ஸ் பாண்டை அறியாத திரைப்பட ரசிகரே உலகில் இருக்க முடியாது. ஐயான் ப்ளெமிங்கால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ‘டாக்டர் நோ’வில் ஆரம்பித்து இதுவரை 25 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் வசூலோ பிரம்மாண்டம்! ஸ்கை ஃபால் என்ற ஒரு படம் மட்டுமே உலகெங்குமாக 111 கோடி டாலர்களைச் சம்பாதித்து ரிகார்டை ஏற்படுத்தியது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 69 ரூபாய்கள்)

பிரிட்டன் இன்றுடன் புகழுடன் விளங்கக் காரணங்கள் பல என்றாலும் கூட அங்கு இருப்போரின் அழகும், பொறுமைக் குணமும் ஒரு முக்கியமான காரணம்! சிவந்த மேனியையும் மினுமினுப்பான அழகையும் கொண்ட பிரிட்டிஷ் அழகிகள் உலகெங்கும் மதிக்கப்படுகின்றனர்! எம்மா வாட்ஸன், செரில் கோல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகைகள் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

Awesome நாடு

பிரிட்டனில் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. சேரிங் க்ராஸ் லண்டனில் ஆறு சாலைகளின் பிரபல சந்திப்பாக விளங்குகிறது. லண்டனில் பாண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்யாத பிரபலங்களே உலகில் இல்லை!ஸ்டான்லி கிப்பன் தபால் தலை சேகரிப்போர் செல்லும் பிரபல ஷாப்!

பிரிட்டனில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே ஆகிய இரு தீவுகளுக்கு இடையே செல்லும் விமானப் பயணம் தான் உலகின் மிகக் குறுகிய விமானப் பயணம். இந்தப் பயணத்திற்காக ஆகும் நேரம் இரண்டு நிமிடங்கள் தான்!

உலகில் அதிகமாக இந்திய உணவு விடுதிகளைக் கொண்ட ஒரே நாடு இங்கிலாந்து தான்!

தேம்ஸ் நதி உள்ளிட்ட அனைத்து லண்டனின் முக்கிய இடங்களையும் காண்பிக்கும் டூரிஸ்ட் பஸ்களின் திறந்த அமைப்பு கொண்ட மேல் தளத்தில் உட்கார்ந்து லண்டனைப் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.

தனி மனித சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படும் முதல் நாடு பிரிட்டனே. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறப்பாக விளங்குவதும் பிரிட்டனே. ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட இடங்களை உலகெங்குமுள்ள கல்வி ஆர்வலர்கள் நாடுவது இதனால் தான்!

விளையாட்டிலோ என்றால் கிரிக்கெட், ஃபுட் பால், ஹாக்கி, பேட்மிண்டன் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதே இங்கிலாந்து தான். விம்பிள்டன் டென்னிஸ் என்றால் தொலைக்காட்சி முன்னால் அமர்பவர்கள் கோடானு கோடி பேர்கள்.

ஆனால் அப்படிப்பட்ட நாட்டையே தனது மென் சிரிப்பாலும் இடையில்  கட்டிய அரைத் துண்டாலும் , அஹிம்சை வழி முறையாலும் வென்றவர் நமது மகாத்மா காந்திஜி என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம்!

ஒரு வார்த்தையில் பிரிட்டனைப் பற்றிச் சொல்லுங்கள் என சமூக ஊடகங்கள் விடுத்த அழைப்பில் வந்த வாக்கியங்களில் சில : Awesome! Breathtaking! Beauty! Inspiring!, Colourful! Contentment!

இதற்கு மேல் இந்த நாட்டைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

****