பிராமணர்களுக்கு தமிழர்கள் வாரி வழங்கியது ஏன்? (Post No.10,481)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,481

Date uploaded in London – –   24 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-2

உலகம் முழுதுமுள்ள மாணவர்களுக்கு அதர்வண வேத பூமி சூக்த துதியை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் ; இதில் மதத்தை விட பொதுவான (More secular than religious) இயற்கை விஷயங்களே அதிகம் உள்ளன. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் இந்த பூமி பற்றி எவ்வளவு சிந்தித்துள்ளனர் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது !

இதோ இரண்டாவது மந்திரம்

அஸம்பாதம்  பத்யதோ மானவானாம்   யஸ்யா உத்வதஹ  பிரவதஹ ஸமம் பஹு

நானாவீர்யா  ஓஷதீர்யா பிபர்த்திம் ப்ருதிவீ நஹ  ப்ரததாம் ராத்யதாம்  நஹ

பொருள்

மலை உச்சியும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இந்த பூமி; மக்களை ஒன்றிணைக்கும் சமவெளிகளை உடையது. பல்வேறு குணப்படுத்தும் மூலிகைகளை உடையது இந்த பூமி. அவள் நமக்காக பல்கிப் பெருகி விசாலம் அடைவாளாக

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்களுக்கு என்ற சொல்லாகும். வேத மந்திரங்கள் பெரும்பாலும் கூட்டுப் பிரார்த்தனை மந்திரங்கள். உலகப் புகழ் பெற்ற, நாலு வேதங்களிலும் உள்ள, காயத்ரீ மந்திரம் கூட எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்றே வேண்டுகிறது . இதனால்தான் இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்களும் பிரபுக்களும் பிராமணர்களுக்கு வாரி வழங்கினார்கள் .

மங்கலம் என்ற பெயரில் பல தமிழ்நாட்டு ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் பிரம்மதேயம்; அதாவது பிராமணர்களுக்கு மன்னர்கள் அளித்த ஊர்கள். இதுதவிர வேள்விக்குடி போன்ற பெயர்களிலும் யக்ஞ பூமி என்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் தண்டச் சோறு தின்னவில்லை. எப்போது பார்த்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களைப் positive thoughts  பரப்பி ‘எல்லோரும் வாழ்க’ என்று பிரார்த்தித்தனர். இந்த பூமி சூக்தமும் எல்லோருக்கும் வேண்டுவதை 63 மந்திரங்களிலும் காணலாம்.

ந: (நஹ )= எங்களுக்கு என்பது காயத்ரீ மந்திரம் மற்றும் இந்த இராண்டாவது மந்திரத்தில் வருவதைக் காண்க

மற்றொரு சொல் மனு; மனுவின் வழி  வந்தவர்கள் மானவர்கள் . இன்றும் நாம் மனிதன் என்கிறோம் (மனுஷ= மனித; ஷ =த MAN )

மனுவின் பெயர் ரிக் வேதத்திலும் வருவதால் பிரளயம் ஏற்பட்ட காலம் அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும் . ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் மேன் MAN  என்று மனுவை தினமும் நினைவு கூறுகிறார்கள். இதனால் ஒன்று தெளிவாகியறது . வேத கால சொற்களை இன்று வரை புழங்குகிறோம். நாகரீகம் உடைய எவரும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் பேச முடியாது; தமிழர்களும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாது.

ஸம்ஸ்க்ருதச் சொற்களை நீக்கினால் திருக்குறள் செத்துவிடும்; மூன்றில் ஒரு திருக்குறள் அவுட்!

ஆங்கில உலகில் இயற்கையை முன்வைத்துப் பாடிய வோர்ட்ஸ்வொர்த்தும் William Wordsworth மலை பள்ளத்தாக்குகளுடன் தன்  டாபோடில்ஸ் Daffodils கவிதையைத் துவக்குகிறார்

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills

ஆயுர்வேதத்தின் துவக்கம்,  உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் உள்ளதை பல துதிகளில் காண முடிகிறது. ஆயுர்வேத மூலிகைகளை பகிரங்கமாகப் பயன்படுத்தியதை அனுமன் சஞ்சீவி பர்வத சம்பவத்தில் காண முடிகிறது. இங்கும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை வளரும் பூமி என்று முனிவர்- புலவர் புகழ்கிறார்

HANUMAN FLYING WITH SANJEEVINI PARVATHA  IN YAGA FIRE

ஓஷதி என்ற சொல்லைக் கவனிக்கவும் ; அதிலிருந்து வருவதே நம் தமிழ் நூல்களிலும் காணும் அவுடதம்= ஒளஷதம் (ஷ=  ட )

Xxx

இதோ மூன்றாவது மந்திரம்

யஸ்யாம் ஸமுத்ர உத ஸிந்துராபோ  யஸ்யாமன்னம்  க்ருஷ்டயஹ  ஸம்ப பூவுஹு 

யஸ்யாமிதம் ஜின்வதி ப்ராண தேஜத்  ஸா நோ பூமிஹி பூர்வபேயே ததாது

பொருள்

“ஆழி  சூழ்  உலகமும்  நதிகளும் நீர்நிலைகளும் நிறைந்த பூமி,

எவளிடத்தில்   உணவும் தானிய நிலங்களும்    உள்ளதோ

எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ

அவள் எங்களுக்கு விளைச்சளைப் பெருகி விசாலம் ஆகட்டும்”

இதிலுள்ள ‘அன்னம்’, ‘பூமி’= புவி (ம=வ), ப்ராண (பிராணன் உள்ளது பிராணி) போன்றசொற்களை நம் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.

நகர கூடிய, சுவாசிக்கக்கூடிய என்ற அ ழகான சொற்களால் எல்லா உயிரினங்களையும் முனிவர் குறிப்பிடுகிறார். சென்ற மந்திரத்தில் நகராத தாவரங்களை மட்டும் கண்டோம். இந்த மந்திரத்தில் ஒரு நாட்டின் செல்வமான தாவரங்களும் பிராணிகளும் வந்துவிடுகின்றன. வேத கால இந்துக்கள் நாடோடிகள் அல்ல; விவசாயிகள்; தா னிய உழவு நிலங்களைக் குறிப்பிட்டு அமோக அறுவடைக்கும் வேண்டுவதால் பக்கா விவசாயிகள் என்பதும் தெளிவாகிறது

இதை எழுதும் போது பாரதியார் சொன்ன கடல், மலை, ஜீவராசிகள் அனைத்தும் நினைவுக்கு வரும்:-

காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும்  மலையும் எங்கள் கூட்டம் —

இந்த அருமையான கருத்தை 3-ஆவது மந்திரத்தில் காணலாம்.

–தொடரும்

TAGS– பூமி சூக்த ஆராய்ச்சி-2, மலை, கடல், ஓஷதி , பிராமணர்கள்

கடல் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8548

Date uploaded in London – 21 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BLACK VOLCANIC SAND IN SANTORINI, GREECE; ON THE SHORE OF AGEAN SEA

கடல் என்ற சொல் பல பழமொழிகளில் வந்தாலும் கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்.

நீங்களாகச் சேர்த்துப் பொருள் காண வேண்டும் . விடை கீழே உளது

.

LONDON SWAMINATHAN IN SANTORINI ISLAND, GREECE

1.கடல் கொதித்தால் விளாவ  நீர் ஏது ?

2.கடலில் கரைத்த பெருங்காயம் போல

3.கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட காலில்லை

4.கடலுக்குக் கரை போடுவார் உண்டா ?

5.கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

6.கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது

SUN SET IN AGEAN SEA.

TAGS – கடல்,பழமொழி

–subham–

தனிமையில் கடல் தாண்டிய வீராங்கனை (Post No.7280)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 8-46 am

Post No. 7280

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

அட்லாண்டிக் கடல் கடந்த வீராங்கனையின் சுவையான அனுபவம் பற்றி 1992-ம் ஆண்டில்  எழுதிய  கட்டுரை இது

‘கடலைப் பார்த்துக் கற்றுக் கொள்’ -பர்த்ருஹரி அறிவுரை (Post No.6581)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 21 June 2019


British Summer Time uploaded in London –  8- 35 am

Post No. 6581

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பரணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பரணர்/

1.      

Translate this page

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும்இரட்டைப் புலவர்கள் … Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர்கண்டுபிடித்த …

வேதத்தில் கடல் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/வேதத்தில்-கடல்/

1.      

Translate this page

அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, உப்பு … சங்க இலக்கியத்தில் பரணரும் அதைப் பாடியுள்ளார் (RV 5-16-7).

கடலில் தோன்றும் மர்மத் தீ-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/கடலில்-தோன்றும்-…

1.      

Translate this page

20 Sep 2012 – விஜயவாடா, நவ.29:- ஆந்திரப்பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். … அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்! … https://tamilandvedas.com/2012/09/20/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9 .

சேர மன்னர்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சேர-மன்னர்கள்/

1.      

2.      

Translate this page

ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, … இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் … ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் … https://tamilandvedas.com/2014/11/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af …

கடல் பற்றிய 31 பொன்மொழிகள் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/கடல்-பற்றிய-31-பொன்…

1.      

Translate this page

26 Jul 2017 – கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115). ஆகஸ்ட் 2017 … கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல. ஆகஸ்ட் 9 புதன் கிழமை.

Missing: பரணர் ‎| ‎Must include: ‎பரணர்

கபிலர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கபிலர்/

1.      

2.      

Translate this page

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! …. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் …

3 தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா …



https://tamilandvedas.com/…/3-தமிழ்-சங்கங்கள்-கட…

1.      

2.      

Translate this page

25 Feb 2012 – இந்த சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரை… … கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் தேறியதாக திருவிளையடல் புராணம் கூறும். … கண்டம் போன்ற விஷயங்களை “சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி ) … https://tamilandvedas.com/2012/02/25/3-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a% …

ஏழு கடல்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/ஏழு-கடல்கள்/

1.      

Translate this page

பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல்தாண்டி, ஏழு மலை … மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால் கம்பன் இது பற்றி ஒரு …

Missing: பரணர் ‎| ‎Must include: ‎பரணர்

கடலிடம் கற்போம்! (Post No4587)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-35 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4587

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை

கடலிடம் கற்போம்!

ச.நாகராஜன்

 

“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்

2017ஆம் ஆண்டு  முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த  நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி;  ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.

இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!

அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ்  (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன.  பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!

அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது.  நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை  மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.

அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).

போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

london swaminathan in Greece

கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.

2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள்  தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு  பிடித்துள்ளனர்.

கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!

கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.

சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம் என்றார்.

க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து  கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.

மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.

 

****

 

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி  கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 12 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-43 am

 

 

Post No. 4484

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.

 

யுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

பூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

ராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.

கம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.

 

முதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:

 

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்

ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில

நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன  பதைக்கும் மெய்யன்

 

பொருள்:

பெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.

 

இன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு  அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும்  அக்காலத்தில் இருந்தது.

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்

செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

 

பொருள்:

 

என் தந்தை போன்றவனே! வற்றாமல் நீர் இறுகிக்   கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.

 

 

இதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது

நன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்

இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்

குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்

சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்

–யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருள்:

இராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால்  மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்களும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.

 

நானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.

 

இதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல்  இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature)  நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும்  அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.

இதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.

 

கில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:

 

நிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்

துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து

திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் சிதறி

பொருள்:

செஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தன.

TAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்

 

–சுபம்–

கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)

ஆகஸ்ட் 2017 காலண்டர்

 

Compiled by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-6-32 am
Post No. 4115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விழா நாட்கள்:- – ஆடிப் பெருக்கு -August 3; வரலெட்சுமி விரதம்—August 4; ரக்ஷாபந்தன்—7; காயத்ரி ஜபம்—8; ஜன்மாஷ்டமி/ கிருஷ்ணன் பிறப்பு—14 & 15;  சுதந்திர தினம்-15; விநாயக சதுர்த்தி—25

 

முகூர்த்த நாள்:- August 31

ஏகாதசி:-  3, 18

பௌர்ணமி- August 7

அமாவாசை- August 21

 

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை

கடலிலே ஏற்றம் போட்ட கதை

 

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

கடலிலே துரும்பு கிடந்தாலும்,  மன திலே ஒரு சொல் கிடவாது

ஆகஸ்ட் 3 வியாழக் கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

 

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

 

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை

கடலிலிட்ட புளி போல

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 

ஆகஸ்ட் 7  திங்கட் கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

 

ஆகஸ்ட் 8 செவ்வாய்க்கிழமை

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளச்சி தாலி வற்றாது

ஆகஸ்ட் 10 வியாழக் கிழமை

கடல் திடலாகும், திடல் கடலாகும்

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

ஆகஸ்ட் 14  திங்கட் கிழமை

கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

 

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை

கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

கடலில் கரைத்த பெருங்காயம் போல

ஆகஸ்ட் 17 வியாழக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

கடலுக்கு கரை போடுவார் உண்டா?

ஆகஸ்ட் 19 சனிக்கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

 

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

ஆகஸ்ட் 24 வியாழக் கிழமை

கடலாற்றாக் காம நோய், குறள் 1175

 

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

பிறவிப் பெருங்கடல், குறள் 10

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – குறள் 17

 

ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடாநிலத்து –குறள் 496

 

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

கடலன்ன காமம் – குறள் 1137

ஆகஸ்ட் 29 செவ்வாய்க்கிழமை

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

ஆகஸ்ட் 30 புதன் கிழமை

கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல

 

ஆகஸ்ட் 31 வியாழக் கிழமை

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

 

–Subham–

 

தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்! (Post No.3357)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 November 2016

 

Time uploaded in London:13-57

 

Post No.3357

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

 

கடல்.

அதைப் பார்த்து வியக்காத மனிதர் உண்டா, என்ன?

அதைப் பாடாத கவிஞர் உண்டா என்ன?

ஒவ்வொரு கவிஞரும் கடலை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும் விதமே சுவையானது.

 

 

திருவள்ளுவர், வால்மீகி, கம்பன், திருத்தக்க தேவர், சிறுவெண்தேரையார், பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நம் நாட்டுக் கவிஞர்களும் மேலை நாட்டுக் கவிஞர்களும் கடலை பல்வேறு பார்வைகளில் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

அனைத்துமே அருமை தான்!

இரு பாடல்களை இங்கு பார்ப்போம்.

சிறுவெண்தேரையார் என்ற சங்க காலப் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் 362ஆம் பாடலாக மலர்கிறது.

 

 

ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சான் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

 

    பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். பலி பெற்ற முரசுகள் போர்க்களப் பாசறையில் முழங்குகின்றன. விஜய வெண்கொடியை ஏந்தி பெரும் செயலைச் செய்யும் வீரர்கள் நாடெங்கும் பரந்துள்ளனர். அவர்களைப் பார்க்கவே கூற்றுவன் போல உள்ளது.

 

 

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத (மெடீரியலிஸம் குறித்த) ஒன்று. மருளும் தீர்ந்தது. மயக்கமும் ஒழிந்தது.

தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப

 

 

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அவன் வளம் கொழிக்கும் நிலங்களைக் கொடுத்தான். சோறு கொடுத்தான். விலையே மதிக்க முடியாத நல் பரிசுகளை அளித்தான். வெள்ளை எலும்புகள் சிதறிக் கிடக்க, வன் வாய் உள்ள காக்கை மற்றும் ஆந்தைகள் ஆகியவை இருக்கும் பகலிலும் நிரம்பியுள்ள காட்டில் உள்ள அவனது வீடு பேச்சுச் சத்தம் நிறைந்த சுற்றத்தாரால் நிரம்பி உள்ளது. ஆகவே இடம் சிறிது தான் இருக்கிறது என்று பயந்து அங்கிருந்து தன் உடலுடன் கிளம்பி பெரும் வீரர்கள் உள்ள நாட்டை நோக்கிச் சண்டையிட அவன் விரும்பிக் கிளம்புகிறான்.

 

   இந்தப் பாடலில் கடலை உவமையாகச் சொல்ல வருகிறார் கவிஞர். தலைவன் கையினால் நீர் சொரிந்து தானம் வழங்க அந்த நீர் கடல் எனப் பெருகிற்றாம்!

 

கடலைத் தானத்தால் கொடுத்த நீர் பெருக்கிற்கு சங்கப் புலவர் இப்படி ஒப்பிட்டார் என்றால் இன்னொரு புலவர் துக்கத்தால் பெருகிய நீருக்கு கடலை ஒப்பிடுகிறார்.

 

இரு வேறு பார்வைகள்; ஆனால் கடல் ஒன்று தான்!

 

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக் சிந்தாமணியில் வரும் பாடலைப் பார்ப்போம். பதுமையார் இலம்பகத்தில் அழகியான பதுமைக்கு அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது:

 

“பிரிந்தவர்க்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடுகடல் வெள்ளம் ஆற்றா

முரிந்த நல் பிறவி மேனாள் முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்து அழுவதற்குப் பாவாய் அடியிட்டவாறு கண்டாய்!

                          (சீவக சிந்தாமணி பாடல் எண் 1391)

 

 

பேதுற்று – வருத்தமடைந்து

தொடுகடல் – தோண்டப்பட்ட கடல்

ஆற்றா – அள்விடமுடியாது

முரிந்த –  கெட்ட

 

பாடலின் பொருள் :

 

பிரிந்து சென்ற கணவர்களை நினைத்து வருந்தி அழுதவர்கள் விட்ட கண்ணீரைக் கணக்கெடுத்துப் பார்த்தால் விண்ணைத் தொடவிருந்த கடல் நீரும் அதற்கு உவமை சொல்லப் பொருந்தாது. இழைமணி அணிந்தவளே! இன்னும் கேட்பாய்! முற்பிறவியில் அப்படி நாம் அழுது சிந்திய கண்ணீர்ரே, இப்பிறவியில் நாம் அப்படி வருந்தி அழுவதற்கு அடிக்கல் இட்டது போல அமைகிறது என்பதை அறிவாயாக!

 

   ஒவ்வொரு பிறவியிலும் பிரிந்த கணவனை எண்ணி அழுத கண்ணீர் வெள்ளம் கடலை விடப் பெரியது எனச் சொல்லி திருத்தக்க தேவர் கடல் நீரை கண்ணீர் வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார்.

 

   அத்தனை பிறவிகள்! அத்தனை கணவர்கள்! அத்தனை பிரிவுகள்! அத்தனை ஆற்ற ஓண்ணா அழுகை ஓலம்!

 

    கடலைக் கண்டவுடன் பிறவிகளின் எண்ண முடியாத் தொடர்ச்சியும் அதில் பிரிவின் வேதனையும் அதனால் விளைந்த கண்ணீரும் கவிஞருக்கு நினைவில் வருகிறது; கவிதை மலர்கிறது.

 

பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவரும்.

பிற ஆழி நீந்தல் அரிது என்ற அவர் யாருக்குப் பிற ஆழி நீந்த முடியாத ஒன்று என்பதையும் விளக்கமுறச் சொல்கிறார்.

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தாருக்கு அல்லால் — பிற ஆழி நீந்தல் அரிது.

 

 

அற ஆழி என்பதை தர்ம சக்கரம் என்று விளக்குகிறார் பரிமேலழகர்.

தர்ம சக்கரம் ஏந்திய அறமுடைய இறைவனின் அடி சேர்ந்தவர்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் முடியாது..

 

கடலை மட்டும் எடுத்துக் கொண்டு உலக இலக்கியங்களை அலச ஆரம்பித்தால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான சுவையான பாடல்கள் உள்ளன.

********

 

 

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551)

IMG_1927

Translated  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2551

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

IMG_1928

ஆறு சொன்னது:

“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.

 

இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:

“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.

 

அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

IMG_1926

–சுபம்-

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!

06TH_WEATHER2_1937233g
Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.

காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.

கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

barcelona mediterranean sea

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:

வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!

ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.

ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.

kadal-B_Id_428828_cyclone

புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.

கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.

எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்).

மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.

kadal blue

ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!

உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!

–சுபம்–