மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-32 am

 

 

Post No. 4568

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

உணவு அருந்த போது மவுனமாக இருக்க வேண்டும் யார் சொன்னார்? உலக மஹா அறிவாளி சாணக்கியன்

 

இதன் தாத்பர்யம் நமக்கும் புரியும். உப்பு போடவில்லை அல்லது உப்பைக் கூடுதலாகப் போட்டுவிட்டாய்; ஒரே புளிப்பு, ஒரே உரைப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனைவியையோ அம்மாவையோ, ஹோட்டல் சர்வரையோ திட்டிக் கொண்டே சாப்பிடுபவர்களைக் கண்டுள்ளோம்.

 

இதில் இரண்டு ஆபத்துகள் உண்டு:

ஒன்று நம் கோபத்தால் உடலில் ஏற்படும் நாடித் தளர்ச்சி, AFRINALIN அற்றினலின் சுரப்பு ஆகியன உடல் நலத்தைப் ,,,,,,,,,,,,திக்கும்

இரண்டாவது ஆபத்து- உணவு பரிமாறுவோரின் உள்ளக் கிளர்ச்சியும் மன வருத்தமும் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.

 

இதனால் சாணக்கியன் சொல்கிறான்:–

 

யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி

யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே

சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9

 

பொருள்

எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இதன் உட்கருத்து மௌனமாக உண்க; மதிப்பு பெறுக – என்பதே.

 

பிராமணர்கள் தினமும் உணவை நீரினால் சுற்றி மந்திரம் சொல்லிச் சாப்பிடுவர். அதில் அந்த உணவை அமிர்தம் என்று போற்றுவர். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மந்திர சக்தியும் பெருகியது.  சாப்பிட்டு முடியைந்தவுடன் ‘’அன்னதாதா சுகி பவ’’ என்று ஆஸீர்வதிப்பர்; உண்டி கொடுத்தோர் நீடுழி வாழ்க என்பது இதன் பொருள்.

 

கிறிஸ்தவர்கள் உணவை உண்ணும் முன், அதை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடுவர்.

 

முன்னோர்களின் சடங்குக்ள் உளவியல் ரீதியில் நற்பலன்களை விளைவிக்கும்.

 

நமது காலத்தில் மவுனத்தின் மூலம் அருள் வழங்கிய ரமண மஹரிஷியை நாம் அனைவரும் அறிவோம்.

 

மௌனப் ப்ரார்த்தனையின் மஹிமை

இன்னொரு பாட்டில் மௌனப் பிராத்தனையின் மஹிமையைச் சொல்கிறார்:

உத்யோகே நாஸ்தி தாரித்யம் ஜபதோ நாஸ்தி பாதகம்

மௌனே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாகரிதே பயம்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 11

 

முயற்சி திருவினை ஆக்கும்; அங்கே வறுமை தலைக் காட்டாது.  மௌனப் பிரார்த்தனை செய்பவனுக்குப் பாபம் ஒட்டாது; மவுனமாக இருக்கும் இடத்தில் சண்டை சசச்சரவுகள் தோன்றாது; விழித்திருப்பவனுக்கு அச்சம் என்பதே கிடையாது.

நல்ல ஸ்லோகம். கோபத்தில் சுடு சொற்களைப் பொழிந்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! எவ்வளவு வருத்தப்படுகிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை? ஆட்சிகள் கவிழ்கின்றன; குடும்பங்கள் பிரிகின்றன. இதை எல்லாம் அறிந்தும் நாம் தவறிழைக்கிறோம்!

 

பிரார்த்தனையில் சிறந்தது மௌனப் பிரார்த்தனை. அதற்கு பன் மடங்கு சக்தி அதிகம். முதலில் உரத்த குரலில் சொல்லிப் பழகிவிட்டால் பின்னர் மௌனப் பிரார்த்தனை எளிதாகும்.ஜபம் என்பதே மௌனமாகப் பிரார்த்திப்பதே!

 

 

My old articles on Silence and Prayer.

 

ஜோதி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜோதி/

Translate this page

… மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று! யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனைபுரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் …

பிரார்த்தனை, செய்வது எப்படி? – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பிரார்த்தனை-செய்…

Translate this page

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்டபிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை …

Missing: மௌனப்

நீண்ட ஆயுளுக்கு வேதப் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

Translate this page

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206). Written by London Swaminathan. Date: 12 September 2017. Time uploaded in London- 17-35. Post No. 4206. Pictures are taken from various sources; thanks. வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு …

 

 

–SUBHAM–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11 (Post No.4563)

Date: 30  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-24 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4563

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11

 

ச.நாகராஜன்

 

19

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.

ஸ்வாமி விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தது பற்றியும், அவரைப் பற்றிய ஸ்வாமிஜியின் அபிப்ராயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதை வெவ்வேறு பகுதிகளிலிருந்து பார்ப்பதை விட அதிகாரபூர்வமான, அழகான, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களின் நூலிலிருந்து பார்ப்பதே சாலச் சிறந்ததாகும்.

இரு பாகங்கள் அடங்கிய இந்த நூல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை – 4 -இன் வெளியீடாகும்.

இதில் முதல் பாகத்தில் 723ஆம் பக்கம் தொடங்கி ஸ்வாமிஜி, மாக்ஸ்முல்லரைச் சந்தித்த விவரம் வருகிறது.

அதை அப்படியே கீழே தருகிறோம்.

20

இங்கிலாந்தில் சுவாமிஜி பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார் சுவாமிஜி. ‘தாம் வேதங்களுக்கு எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயணர் தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று தான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது. இந்த நாட்டில் (இந்தியாவில்) கூட, வேத வேதாந்தங்களில் அவரைப் போல் அவ்வளவு உறுதியான, அவ்வளவு ஊறிப்போன ஒருவரை நீ காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அவருக்கு எவ்வளவு ஆழம் காண முடியாத பக்தி தெரியுமா! ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதார புருஷர் என்பதை அவர் நம்புகிறார். நாம் அவரது விருந்தினராக இருந்த போது எவ்வளவு அற்புதமாக என்னை உபசரித்தார்! .. நான் பிரிந்து வரும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது என்று ஒரு முறை சுவாமிஜி தமது சீடரான சரத் சந்திரரிடம் கூறினார் (ஞானதீபம் 6-57-58)

 

அதற்கு சரத் சந்திரர், “சாயணரே மாக்ஸ்முல்லராக பிறந்தார் என்றால் அவர் புனிதமான இந்தப் பாரத நாட்டில் பிறக்காமல் மிலேச்ச நாட்டில் ஏன் பிறந்தார்?” என்று கேட்டார். உணர்ச்சிவசப் பட்டவராக சுவாமிஜி பதிலளித்தார்:

‘அறியாமை காரணமாகவே மனிதன், “நான் ஆரியன், மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்று வேறுபடுத்துகிறான். வேதங்களுக்கே உரை எழுதியவரான,ஞானத்தின் பேரொளிப் பிழம்பான அவரிடம் வருணாசிரமப் பிரிவுகளும், ஜாதிப் பிரிவுகளும் இருக்க முடியுமா?” அவருக்கு இவையெல்லாம் முற்றிலும் பொருளற்றவை. மனித குலத்தின் நன்மைக்காக, தாம் விரும்பும் இடத்தில் பிறக்க அவரால் இயலும். கல்வி, செல்வம் இரண்டுமே உள்ள நாட்டில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கான பொருள் எப்படிக் கிடைக்கும்! ரிக் வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது உனக்குத் தெரியாதா? அது கூடப் போதவில்லை. இந்த நாட்டில் அதற்காக நூற்றுக்கணக்கான அறிஞர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் அறிவுக்காக, ஞானத்திற்காக இந்தியாவில் யாராவது இவ்வளவு பணம் செலவழிப்பதைக் காண முடியுமா? கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்கவே இருபத்தைந்து வருடங்கள் ஆகியதாகத் தமது முன்னுரையில் மாக்ஸ்முல்லர் எழுதியுள்ளார். அச்சிடுவதற்கு, மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தன. தமது வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுக் காலத்தை, ஒரு நூலை வெளியிடுவதற்காகச் சாதாரண மனிதன் யாராவது கழிப்பானா? சற்று சிந்தித்துப் பார்! நான் அவரை சாயணர் என்று சொல்வது வெறும் கற்பனையா என்ன? (ஞானதீபம் 6-57-58)

 

இவ்வளவு தூரம் தாம் மதிப்பு வைத்திருந்த மாக்ஸ்முல்லரை சுவாமிஜி 1896 மே 28-இல் அவரது வீட்டில் சந்தித்தார். ‘என்ன அற்புதமான மனிதர் அவர்! சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஸ்ரீ ராமகிருஷ்ணரை நேசிக்கின்ற யாரையும் சென்று சந்திப்பதை ஒரு தீர்த்த யாத்திரையாகவே நான் கருதுகிறேன்’ என்று பிரம்மவாதின் பத்திரிகைக்கு எழுதினார் சுவாமிஜி.

 

சுவாமிஜி சந்தித்த போது மாக்ஸ்முல்லருக்கு 70 வயது ஆகியிருந்தது. அழகிய தோட்டத்தினுள் அமைந்திருந்தது அவரது சிறிய வீடு. சுற்றிலும் மரங்கள், செடிகொடிகள், பூக்கள் என்று அந்த இடம் எனக்கு பண்டைய முனிவர்களின் தபோவனமாகத் தோன்றியது. அவரும் அவரது மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து வருகின்றனர். பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும், மாபெரும் வானப்ரஸ்தர்களும் வாழ்ந்த வாழ்க்கையையே எனக்கு அவர்கள் நினைவூட்டினர்…. இந்தியாவின் மீதும் வேதாந்தத்திலும் அவர் வைத்துள்ள ஈடுபாட்டில் பாதியாவது எனக்கு இருக்காதா என்று தோன்றுகிறது’ என்று தமது சந்திப்பைப் பற்றிக் கூறினார் சுவாமிஜி.

 

மாக்ஸ்முல்லரிடமிருந்து விடை பெறும்போது சுவாமிஜி அவரிடம், ‘நீங்கள் எப்போது இந்தியாவிற்கு வரப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். முதியவரான அந்த முனிவரின் முகம் மலர்ந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது; மெதுவாகத் தலையை அசைத்தபடி அவர், ‘நான் இந்தியாவிற்கு வந்தால் என்னால் மீண்டும் இங்கே திரும்ப இயலாது. நீங்கள் என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் மாக்ஸ்முல்லர். அவரது வரலாற்றை எழுத வேண்டும், அதற்கு சுவாமிஜி உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிஜியும் ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதி, அவருக்குத் தேவையான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாக்ஸ்முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் மாக்ஸ்முல்லர் உட்பட மேலை நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும் அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில் இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களைக் கூறியிருந்தார். அதுபற்றி, ‘பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும் இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு கூற்றைச் சேர்த்து விடுகிறார் என்றாலும், நாளடைவில் முழு உண்மையையும் அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலின் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள்; அந்த நூலில் அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம் – மறு பிறவி, மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்கிறார் என்று எழுதிகிறார் அவர். (ஞான தீபம் 10-156)

 

மொழியியலின் துணையுடன் மேலை நாட்டு அறிஞர்கள் வேதங்களின் காலத்தைக் கணித்திருப்பதும் சரியல்ல என்பதும் சுவாமிஜிக்குப் புரிந்திருந்தது. ‘வேதங்களைப் பற்றி மேலை அறிஞர்கள் கூறுகின்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று இன்று கூறுகிறார்கள். நாளையே அதத் தவரென்று தள்ளிவிட்டு, ஓராயிரம் ஆண்டுகள் முன்னால் கொண்டு வருகிறார்கள் என்று எழுதுகிறார் அவர். (ஞான தீபம் 5-427)

கருத்து என்னவாக இருந்தாலும் சுவாமிஜி இறுதி வரை மாக்ஸ்முல்லரிடம் வைத்திருந்த மதிப்பு மாறவில்லை.

 

**

மேலே உள்ளவை சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சுவாமிஜியின் விரிவான வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எல்லா உண்மைகளும் நம்மிடம் இப்போது உள்ளன.

அவற்றை அலசி ஆராய்ந்து மாக்ஸ்முல்லர் மர்மத்தை விடுவிப்போம்.

அதற்கு முன்னர் சுவாமிஜி மாக்ஸ்முல்லரைப் பற்றிக் கூறியவற்றில் சில பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து விடலாம்.

****                                           தொடரும்

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power)- Post No.4551

Date: 27  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-39 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4551

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்!

ச.நாகராஜன்

 

1

கவியரசு கண்ணதாசனுக்கு ஈ.எஸ்.பி. பவரா? இது என்ன புது தகவல் என்று வியக்க வேண்டாம்.

அதீத உளவியல் ஆற்றல் என்பது சில மனங்களுக்குக் கை கூடும்.

அந்த ஆற்றல் இருப்பதும் கூட சிலருக்குத் தெரிய வரும்.

சரி, கண்ணதாசன் தன்னைப் பற்றி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

2

 

ஞான ஸ்நானம் என்ற கட்டுரையில் ஒரு ப்குதி!

 

கண்ணதாசன் சொற்களை அப்படியே கீழே தருகிறோம்:

 

தோன்றாமல் தோன்றும் சுடரொளி ஒன்று அடிக்கடி என்னைக் காப்பாற்றுகிறது. அமைதியைத் தருகிறது.

 

என்ன நடக்கப் போகிறது என்பது கனவிலே வருகிறது.

 

பத்து நாட்களுக்கு முன்பு பெங்களூர் மண்டிப்பேட்டையில் ஒரு ஹோட்டலைத் திறந்து வைக்கச் சென்றேன்.

 

விமானம் போய் இறங்கியபோது மாலை மணி நான்கு. படுத்துத தூங்கிவிட்டேன்.

ஒரு கனவு. அற்புதமான கனவு.

கண்ணன் என் கனவிலே வந்தான். ஒரு சிறு குடிசையில் அவனுக்கு நான் அமுது படைத்தேன். அவன் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். என்னென்னவோ அவனிடம் பேசினேன். அவன் சொன்னது  மட்டும் நினைவிருக்கிறது. “எல்லாம் சரியாக நடக்கும், கவலைப்படாதே.”

 

மறுநாளைக்கு மறுநாள் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு.

ஒரு பெருமாள் கோயில். ஒரு பட்டாச்சாரியார் எனக்குக் குங்குமம் வழங்குகிறார்.

இவை என்ன கனவுகள்?

நல்லவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே வரும் கனவுகள். எனக்கும் அவை ஏன் வந்தன? பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானம் பிறந்த கதை இது தான்.

சிறைச்சாலை தீயவர்களுக்கு மட்டுமே.அறச்சாலை நல்லவர்களுக்கு மட்டுமே.

பரம்பொருளைப் பற்றிய சிந்தனை வளர வளர, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறது..நல்லவனாக இருப்பது சுல்பமாகிறது.

 

இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அளக்க வேண்டிய நேரத்தில் அளக்கிறான். இந்து தர்மம் பொய்த்ததே இல்லை.

அது சொல்லும் ஒவ்வொன்றும் நூற்றுக்கு நூறு உண்மை.

நான் ஓர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

 

ஒரு நல்ல இந்து மற்றவர்களுக்குத் தீமை செய்ய மாட்டான்.

நான் யாருக்கும் தீங்கிழைத்ததில்லை.

ஒவ்வொரு நாளும் எனக்குத் தீங்கிழைத்த பாவிகளை என் கண்ணா, நீ மன்னித்து விடு.

*

 

1975ஆம் ஆண்டு கல்கி வார இதழில் கடைசிப் பக்கம் என்ற ஒரு தொடரை கண்ணதாசன் வழங்கி வந்தார்.

அருமையான தொடர் இது. இதில் தான் மேற்கண்டவாறு என்ன நடக்கப் போகிறது என்பது என் கனவிலே வருகிற்து என்று அவரே சொல்லியுள்ளார். (துரதிர்ஷ்டவசமாக் எந்த தேதியிட்ட இதழ் என்பதை நான் எனது தொகுப்பில் குறித்து வைக்க மறந்து விட்டேன்.)

 

விவரங்களை முழுதுமாக அவர் தரவில்லை. அது ஏன் என்பதும் புரிகிறது. பாவிகள் ஒவ்வொரு நாளும் இழைக்கும் தீங்குகளைப்  பட்டியல் இட முடியுமா? அதைச் சுட்டிக்காட்டும் இறைவனின் கருணையையும் தான் எழுதிக் கொண்டே இருக்க முடியுமா?

நமக்குப் புரிவது கண்ணதாசனுக்கு அபூர்வமான ஈ.எஸ்.பி. பவர் இருந்தது என்பதைத் தான்.

ஈ.எஸ்.பி பவர் என்றால் என்ன?

Extra Sensroy perception  என்பதன் சுருக்கமே  E.S.P. அதாவது புலன் கடந்த அறிவு. அதீத உளவியல் ஆற்றல் என்று இதைச் சொல்கிறோம்.

*

3

இனி இளையராஜா கூறும் ஒரு சம்பவத்தை அவர் சொற்களில் அப்படியே தருகிறேன்.

‘கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்’ என்ற கட்டுரையில் ஒரு பாரா இது:

கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை. அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்!’ என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர். ராமசாமி அந்த்ப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.

**

4

கவிஞருடன் கூடவே இருந்த இராம. முத்தையா ‘தெய்வத்தை ந்ம்பி ‘ என்ற கட்டுரையில் கூறும் ஒரு வரி இது”

அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது- “எனக்குள் ஏதோ ஒரு சக்தி  இருக்கிறது. அந்த சக்தியால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது!” என்று.

**

5

மேலே கூறியவற்றால், கவிஞருக்கு நடக்கப் போகும் பல நிகழ்ச்சிகள் பூடகமாகத் தெரிந்தன் என்றும். ஒரு அளப்பரிய சக்தி உதவியுடன் அவர் இயங்கினார் என்றும், அவரது கவிதா வாக்கு பொய்க்காமல் இருந்தது என்றும் அறிய முடிகிறது.

இன்னும் சில நிகழ்ச்சிகள் உள்ளன. அவை கவிஞரின் கவிதா சக்தியின் மேன்மையையும், அவரது அதீத உளவிய்ல் ஆற்றலையும் விளக்குபவை.

அவற்றை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

****

 

 

ஜனவரி  2018 காலண்டர், சதபதப் பிராமணப் பொன்மொழிகள் (Post No.4544)

Nataraja Picture posted by Veda

 

முக்கியப் பண்டிகைகள்: ஜனவரி 1- புத்தாண்டு தினம், 2-ஆருத்ரா தரிஸனம்,  13- போகிப் பண்டிகை, 14- மகர ஸங்கராந்தி, பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 24-ரத ஸப்தமி 26- குடியரசு தினம், 30- காந்திஜி நினைவு நாள், 31-தைப்பூஸம்

 

அமாவாசை- 16

பௌர்ணமி- 2, 31 சந்திர கிரஹணம்,

ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள்- 12, 27/28


Compiled by London Swaminathan 

 

Date: 25 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-04 am

 

 

Post No. 4544

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

2018 ஜனவரி  நற்சிந்தனைக் (ஹே விளம்பி மார்கழி/தை) காலண்டர்

ஜனவரி 1 திங்கட் கிழமை

திவம் எனப்படும் ஆகாயத்திலே நுழையும்  பொழுது

சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கே தேவர்களெனப்  பெயர் 11-1-6-7

 

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

சுவாசத்தை மித்திரன் என்பார்கள்; ஏனெனில் அவன் எல்லாருடைய நண்பனாகும் (நண்பன்= மித்திரன்)- சதபத பிராமணம் -4

 

ஜனவரி 3 புதன் கிழமை

வருஷத்திற்கு துரிதம் என்று பெயர்; ஏனெனனில் அவனே அனைத்தையும் துரிதமாக்குவான் 8-4-1-4  துரிதம்= சீக்கிரம்

 

ஜனவரி 4 வியாழக் கிழமை

தேவர்கள் சிருஷ்டிக் காலத்தில் பகல் ஒளி போல் மின்னியபடியால் அவ்வொளிக்கே தேவர்கள் எனப் பெயர்- 10-1-1-67

 

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

சந்திரனிடமிருந்து அவன் ஒளியை எடுத்துக்கொண்டபடியால் (ஆ-தா) சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர் (திதிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது)

ஜனவரி 6 சனிக் கிழமை

எது உலகத்தை எல்லாம் சுற்றி வளைத்திருக்கிறதோ (ஆப்த) அதற்கு ஆபம் அல்லது ஜலம் எனப் பெயர் 2-1-1-4

 

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

சிக்கிமுக்கி அடிக்கட்டை மேல் கட்டைக்கே ஊர்வசி- புரூருவன் எனப்பெயர். நெய்ப் பாண்டமே ஆயு என்னும் அவர்கள் பிள்ளையாகும்-3-4-1-22

ஜனவரி 8 திங்கட் கிழமை

புவியிலுள்ள எல்லா பொருள்களிலும் வீசி அவைகளை எல்லாம் எதையும் செய்யச் செய்வதால் வாயுவிற்கு விசுவ கர்மன் எனப் பெயர் -8-1-17

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

செவி எல்லாப் புறமும் செவியுறுவதால் அதற்கு எல்லாத் திசையின் சிநேகிதன் (மித்திரன்) எனப் பெயர்; இதனால் செவியை விசுவாமித்ரன் என்பர் 8-1-2-6

ஜனவரி 10 புதன் கிழமை

தேவர்களுக்கு மர்மமாய் மொழிவதிலேயே பிரியமுண்டு -6

ஜனவரி 11 வியாழக் கிழமை

ஒருவன் விரதமுடன், பட்டினி கிடந்தால   அ க்கினி முதலிய தேவர்கள் அவன் மனத்தால் அனைத்தையும் பார்த்து அங்கு வசிப்பதால் அப்படி இருப்பதற்கு உப வாசம் எனப் பெயர் 1- 1- 1 -7

 

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

அசுரர்கள் ரோஹிணி என்னும் நெருப்பால் சுவர்க்கம் செல்லலாம் என நினைத்தார்கள். இந்த ரோஹிணி நெருப்பிற்கே ரோஹிணி நட்சத்திரம்  என ஜனங்கள் சொல்லுவார்கள். அற்புதமாயுள்ள நெருப்பிற்கே கிருத்திகை எனப் பெயர் 2-1-2-16

 

 

ஜனவரி 13 சனிக் கிழமை

சிரஸ் என்பது சிறந்ததைக் காண்பிப்பதாகும். தலையே சிறந்தது. ஆதலால் அதையும் குறிக்கும். இதனாலேயே சமூகத்தில் சிறந்தவனாய் உள்ளவனையும் சிரேஷ்டன் என அழைப்பது 1-4-5-5

 

ஜனவரி 14 ஞாயிற்றுக் கிழமை

விருத்திரன் கொல்லப்பட்டவுடன் துர்க்கந்தம் வீசி சலத்தில் நுழைந்தான். சலத்திற்கு இது பிடிக்கவில்லை; அதனால் விருத்திரன் எழுச்சியாகி புதரானபடியால் இதுவே தர்ப்பை என்னும் புல்லாயிற்று 7-2-3-2

 

ஜனவரி 15 திங்கட் கிழமை

நேர்வழியை சுவர்கம் என்று சொல்லுவார்கள் 13-12-15

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

பக்தி என்றால் தியாகத்திற்குப் பெயர் 7-2-2-4

 

ஜனவரி 17 புதன் கிழமை

புளித்த தயிரும் தேனும் சிறந்த உணவாகும் 5

 

ஜனவரி 18 வியாழக் கிழமை

சத்தியக்ஞர் சொல்லுவதாவது இப்புவி முழுவதும் எந்த இடமும் தெய்வீகமாகும் 3-1-1-4

 

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

சுவர்க்கம் என்பது பூமியின் பொய் வடிவமாகும்

 

ஜனவரி 20 சனிக் கிழமை

தேசத்திலே தலைமைப் பதவி ஒருவனுக்கே அளிக்க வேண்டும் 8-3-2-7

ஜனவரி 21  ஞாயிற்றுக் கிழமை

சோமபான ரசம் பிழிவதென்பது அசுரர்களை அறைத்துக் கொல்லுவதாகும் 3-9-4-2

 

ஜனவரி 22 திங்கட் கிழமை

தாமரை இலை ஜலத்தில் மிதப்பது போல பூமி ஜலத்திலே மிதக்கின்றது

 

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

தேகத்திற்கு அவசியமான உணவு திருப்தியை அளிக்கும்; அதிகமான உணவு தீமையை அளிக்கும் 10-4-1-4

 

ஜனவரி 24 புதன் கிழமை

வெண்மை ஆகாச வடிவம்; கருப்பு பூமி வடிவம்; சிவப்பு வான வடிவம் 3-2-1-3

ஜனவரி 25 வியாழக் கிழமை

 

ஆதியிலே எத்தனை தேவர்கள் உண்டோ அத்தனை தேவர்கள் இப்பொழுதும் உண்டு 8-7-1-9

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேகத்திலுள்ள அழுக்கே பொய் எனப்படும் 3-1-2-10

ஜனவரி 27 சனிக் கிழமை

அக்கினி பிராமணன் ஆகையால் அவனுக்கு பிராமணன் என்று பெயர்.அவன் பிராணன் ஆகிப் பிரஜகளைப் பாது காப்பதால் அவனுக்கு பரதன் எனப் பெயர். அவனுக்கே ஆதி புரோஹிதன் ஹோத்திரம் எனப் பெயர். அவன் ரதத்தைப்போல்   எதையும் எடுத்துச் செல்வதால் அவனூக்கு ரதி என்றும் பெயர் 1-4-2

 

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

ஆட்சி புரிவது புகழாகும்- 6-7-3-7

 

ஜனவரி 29 திங்கட் கிழமை

சூரியன் என்னும் கொக்கியில் ஜகமெல்லாம் தொங்கும்

 

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

நிலத்தில் உழத் தெரிந்தவனே அறிஞனாகும்  7-2-2-9

ஜனவரி 31 புதன் கிழமை

ஸ்திரீ ஒருவருக்கும் தீங்குமை புரிவதில்லை 6-1-3-2

xxxxxx

உதவிய நூல்: யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004

 

–subham–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10 (Post No.4538)

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4538

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10

 

ச.நாகராஜன்

18

மாக்ஸ் முல்லர் இந்தியா பற்றிய தனது பிரமாதமான புகழுரைகளை “India : What it Can Teach Us” நூலில் தெரிவித்துள்ளார்.

மிக அருமையான மேற்கோளான “If I were asked under what sky” என்று ஆரம்பிக்கும் மேற்கோளை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.ஆகவே அதை இங்கு மீண்டும் தரவில்லை.

இது தவிர குறிப்பிடத்தகுந்ததாக இலங்கும் மூன்று  மேற்கோள்கள் கீழே தரப்படுகின்றன:

“The true history of the world must always be the history of the few; and as we measure the Himalaya by the height of Mount Everest, we must take the true measure of India from the poets of the Veda, the sages of the Upanishads, the founders of the Vedanta and Sankhya philosophies, and the authors of the oldest law-books, and not from the millions who are born and die in their villages, and who have never for one moment been roused out of their drowsy dream of life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

*

“Whatever sphere of the human mind you may select for your special study, whether it be language, or religion, or mythology, or philosophy, whether it be laws or customs, primitive art or primitive science, everywhere, you have to go to India, whether you like it or not, because some of the most valuable and most instructive materials in the history of man are treasured up in India, and in India only.”
― Friedrich Max MüllerIndia: What Can it Teach Us? A Course of Lectures Delivered before the University of Cambridge

*

“Now let us look to the ancient inhabitants of India. With them, first of all, religion was not only one interest by the side of many. It was the all-absorbing interest; it embraced not only worship and prayer, but what we call philosophy, morality, law, and government, —all was pervaded by religion. Their whole life was to them a religion—everything else was, as it were, a mere concession made to the ephemeral requirements of this life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

 

*

சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகின் வரலாறையே வேதத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் மாக்ஸ்முல்லர்.

எதை எடுத்துக் கொண்டாலும் சரி, மதம், மொழி, பழைய வரலாறைச் சொல்லும் புராணம், தத்துவம், பழக்க வழக்கங்கள், சட்டம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் இந்தியாவிற்குத் தான் போக வேண்டும். ஏனெனில் இந்தியாவில், இந்தியாவில் மட்டும் தான் அந்த அறிவு பொக்கிஷமாகக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் மதம் என்பது ஒரு அம்சம் மட்டும் என்பதல்ல; அது வழிபாடு, பிரார்த்தனை என்பது மட்டுமல்ல; தத்துவம், நீதி, சட்டம், அரசு ஆகிய அனைத்தும் மதத்தில் பரவி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மதம் தான்.

 

இப்படி இந்தியாவை ஓங்கிப் புகழ்ந்து ஹிந்து மதத்திற்குப் புகழாரம் சூட்டி விட்டார் மாக்ஸ்முல்லர்.

*

அறுபதாவது வயதில் இப்படி இந்தியாவை மாக்ஸ்முல்லர் புகழ்ந்த போது விவேகானந்தருக்கு வயது 20.

அவர் நரேந்திரன் என்ற பழைய பெயரிலிருந்து விவேகானந்தராக மாறி சிகாகோ கலைக் கழகத்தில்  சர்வ மத மகாசபையில் உலகம் வியக்கும் சொற்பொழிவை ஆற்றிய ஆண்டு 1893.

அப்போது விவேகானந்தரின் வயது 30.

மூன்று வருடங்கள் கழித்து 1896ஆம் ஆண்டில் 28-5-1896 அன்று விவேகானந்தரை மாக்ஸ்முல்லர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றியும் மாக்ஸ்முல்லர் பற்றியும் விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்தால் மாக்ஸ்முல்லர் மர்மம் விடுபடும், இல்லையா?!

****               தொடரும்

 

 

 

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்! (4526)

Written by London Swaminathan 

 

Date: 21 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4526

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மநு நீதி நூல்-9 (Post No.4526)

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்– 

  1. லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)

 

133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.

134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.

  1. எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)

முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.

 

136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

 

Geography in Manu Smrti

 

138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 

140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)

 

 

141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)

 

Antelope Black buck picture from Wikipedia.

Zoology in Manusmrti

142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)

 

143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.

144.இதுவரையில்  உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக்  காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)

145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.

 

146.கர்ப்பாதான  மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),

ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு)  நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்)  சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)

 

 

147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத   விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப்  ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)

Ayurveda in Manu smrti

 

148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.

எனது கருத்து: Geography in Manu

மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.

 

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி,  த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக்  வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும்  வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.

இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–

ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள்  அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர்   பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.

 

பிராணி இயல் தகவல் (zoology in Manu)

 

எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.

 

கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

 

கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!

TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்

 

to be continued………………………………

–SUBHAM–

 

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின்…………….(Post No.4515)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4515

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அனுபவத்தின் மதிப்பு!

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

 

.நாகராஜன்

 

1

அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.

நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.

காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.

அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.

கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.

திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.

அவர் பிறந்த தேதி : 24-6-1927.

மறைந்த  தேதி : 17-10-1981

ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!

திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.

1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:

50

இறந்த நாள் அனைத்தும் எண்ணி

இனிவரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம்

பிழை இலை: ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்

தேர்ந்து கொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனிவ ராது

பாக்கி நாள் நன்னா ளாக!

 

50

ஐம்புலன் ரசித்த வாழ்வு

    அறம்மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு

     ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது

     அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண

      பரமனே அருள்வா னாக!

50

ஆண்டுகள் ஐம்ப தாகும்

     ஆரம்பம் திருநா ளாகும்

ஆண்டுகள் அறுபதா னால்

      அந்தியில் நன்னா ளாகும்

ஈண்டுயான் ஐம்ப தாண்டை

      இனிதுற வரவேற் கின்றேன்

நீண்டநாள் வாழ ஆசை

   நிமலன் என் நினைக்கின் றானோ!

 

நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!

பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:

சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்

     சேர்ந்தேன் அந்த நாளே

செறிவான புத்தியை தவறான பாதையில்

      செலுத்தினேன் அந்த நாளே

பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது

     பார்த்தனைக் காத்த நாதா

பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்

      பார்த்தருள் கிருஷ்ண காந்தா!

கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!

என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.

ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி,  காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!

2

வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.

சும்மா இரு சொல் அற என்றவுடன்அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.

முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.

ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.

வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.

குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.

நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:

கொள்ளை யாசைக் காரிகள் பாதக

     வல்ல மாயக் காரிகள் சூறைகள்

     கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்   விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்

      வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்

      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்

       அல்லை நேரொப் பாமன தோஷிகள்

       உள்வி ரோதக்காரிகள் மாயையி     லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு

       கையு நீபத் தார் முக மாறுமுன்

       உள்ள ஞானப் போதமு நீதர        வருவாயே

             (சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)

மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்

    மருளப் பட்டாடைக் காரிகளழகாக

   மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்

    வகைமுத்துச் சாரச் சூடிகள்               விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்

     குசலைக்கொட் சூலைக் காலிகள்     மயல்மேலாய்க்

    கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை

     குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!

        (சீர்காழியில் அருளிய பாடல் இது)

இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி உய்யவே அருள் தாராய் என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.

திருப்புகழ் தரும் செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

 

இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.

3

 

சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே

என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே என்று மனம் வருந்திப் பாடுகிறார்.

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்

என்றும்,

 

மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்

  மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்

சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

   மெய் என்று கருதாதே போத நெஞ்சே

என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்

  சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு

என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை

   ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப்

    பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என் ஆகத்து இருத்தாதே ஏதன்

 போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

என்று வருந்துகின்றவர்

சிவபெருமானின் அருளைப் பெற

வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.

தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.

 

4

 

இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.

கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.

தமிழா, ஜாக்கிரதை மோசம் போய் விடுவாய்; அவர்களை கனவிலும் நினைக்காதே என்று நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.

அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.

கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.

அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.

அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.

அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.

அவரது அறைகூவல் அர்த்தமுள்ள சிவன்கூவலாக மிளிர்கிறது.

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.

அதைப் பற்றி, காஞ்சிப் பெரியவர் கூறியது சத்திய வாக்கு.

     சாதாரணமாக சாசுவத உண்மைகளை எவ்வளவு பெரியவர் கூறினாலும், அதற்கான மதிப்பை விட, அதை அனுபவப்பட்டோர் தம் அனுபவத்துடன் குழைத்துக் கொடுத்தால் அதன் மதிப்பே தனி தான்.

இது தான் உண்மை. அன்றும் என்றும்.

அப்பரின் காலமானாலும் சரி, அருணகிரிநாதரின் காலமானாலும் சரி, கவியரசு கண்ணதாசனின் காலமானாலும் சரி அதுவே உண்மை!

அவர்களின் அனுபவத்தால் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம், இல்லையா!

****

 

 

 

 

 

ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன? (Post No.4511)

Date: 18  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4511

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 5

முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

 

 

ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன?

 

ச.நாகராஜன்

 

அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி ஒரு ஜீவனுக்கு மூன்று தேகங்களினால் என்ன பயன் என்பதைப் பார்ப்போம். அத்துடன் இலக்ஷணா விருத்தி பற்றியும் தெரிந்து கொள்வோம்.

 

அத்வைத சாரத்தில் வரும் பதங்களை மாற்றாமல் அப்படியே கொடுத்துள்ளோம்.

 

இதைப் பற்றித் தீமாக அறிய விரும்புவோர் ப்ரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை, ஞான வாசிட்டம், கைவல்யம், விவேக சூடாமணி, சீதாராமாஞ்சனேய சம்வாதம், ராமஸ்தவ ராஜ்யம், வேதாந்த சாரசங்ரஹம், நிஷ்டானுபூதி ஆகிய நூல்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது கூடவே அவற்றையும் பயில வேண்டும்.

இனி தொடர்வோம்.

*

பரமாத்மாவுக்கு மூன்று சரீர உபாதியினால் ஈஸ்வரத்துவம் சித்தியான விவரத்தைச் சொன்னீர்கள். இனி, பரமாத்மாவுக்கு  வியஷ்டியாகிற மூன்று சரீரத்தினால் ஜீவத்துவம் சித்தியாவது எப்படி?

 

வியஷ்டி காரண சரீரத்துடன் கலந்திருக்கும் பரமாத்மா, பிராக்ஞன் – பராமார்த்திகன் – வித்தியவசின்னர் – என்றும் ,

வியஷ்டி சூக்ஷ்ம சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, தைஜஸன் –

ஸ்வப்ன கற்பிதன் – பிராதிபாஸிகன் என்றும்,

வியஷ்டி ஸ்தூல சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, விசுவன் –

வியவகாரிகன் – சிதாபாசன் என்றும் சொல்லப்படும்.

 

இந்த ஜீவனுக்கு இந்த மூன்று தேகங்களால் என்ன பிரயோஜனம்?

அந்தக்கரண பிரதிபிம்பன் ஜீவன்;

 

ஆகவே ஜீவனுக்கு சூக்ஷ்ம சரீரம் அவசியம்.

 

பிறகு கர்மம் செய்ய ஸ்தூல சரீரம் அவசியம்.

இக்காரிய காரணங்களுக்கு காரண சரீரமும் அவசியம்.

 

இப்படி மூன்று சரீரமுடைய ஜீவனுக்கு அபிமானம் உண்டோ?

உண்டு. அபிமானம் இல்லாவிட்டால் கர்மம், கருத்திருத்துவம் ஆகியவை பொருந்தாது.

ஆத்மாவுக்கே அவித்தை, மாயா உபாதிகளினால் ஜீவேஸ்வரத்துவம் விளங்குவதற்கு ஏதாவது உதாரணம் உண்டா?

ஒரே அக்கினியானது பெரிய பந்தத்திலிருந்து கொண்டு விஸ்தாரமான இடங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதும்,

அதுவே அற்பமான ஒரு திரியிலிருந்து கொண்டு ஒரு வீட்டுக்கு மட்டும் வெளிச்சத்தைத் தருவதும் போல

ஆத்மாவுக்கு மாயோபாதியாகிய பெரிய காரணத்தினால் சர்வக்ஞத்துவமும்,

 

அவித்தையாகிய அற்ப காரியோபாதியினால் கிஞ்சிக்ஞத்துவமும் வந்தன.

 

இதனால், சர்வக்ஞாத்மா, கிஞ்சிக்ஞாத்மா என இரண்டு ஆத்மா இல்லை.

 

இதைப் பற்றி வேதாந்தங்கள் என்ன போதிக்கின்றன?

தத் பதத்திற்கும், த்வம் பதத்திற்கும் சம்பந்த திரயத்தினால் அகண்ட  தத்துவத்தைப் போதிக்கிறது.

 

 

சம்பந்த திரயமா? அப்படி என்றால் என்ன?

அதாவது இது மூன்று வகைப்படும்.

இரண்டு வாக்கியங்களுக்கு ஸாமனாதி கரண்ணிய சம்பந்தம்

இரண்டு பதார்த்தங்களுக்கு விசேஷண விசேஷிய பாவ சம்பந்தம்,

இரண்டு பதங்களுடனாவது பதார்த்தங்களுடனாவது பிரதி ஏகாத்மாவுக்கு

லக்ஷிய  லக்ஷண சம்பந்தம் என இப்படி மூன்று விதம் உண்டு.

 

 

இவைகளைச் சற்று திருஷ்டாந்தங்களுடன் விளக்கிச் சொல்லுங்களேன்.

‘அந்த’, ‘இந்த’ தேவதத்தன் என்றால், அந்த, இந்த ஆகிய பதங்களுக்கு தேவதத்தன்

பிண்டமே ஸமானாதி கரணம்.

அதாவது அந்த தேவதத்தன் தான் இவன் என்று சொன்னதாக ஆயிற்று.

 

 

இந்த தேவதத்தன் இருக்கும் தேசம், காலத்தை அனுசரித்து  விசேஷன விசேஷிய  பாவ சம்பந்தமாகிறது.

அன்றியும், அவன், இவன் என்ற பதங்களுக்காவது, அவைகளின் அர்த்தங்களுக்காவது அகண்டார்த்தமாகிய  தேவதத்த பிண்ட மாத்திரத்தை எடுத்துக் கொள்வதால் விரோதாம்ஸ்தத்தைத் தள்ளி – அதாவது விரோதமில்லாத தேவதத்தன் என்பது மாத்திரம் லக்ஷியத்தினாலே , லக்ஷிய லக்ஷணா பாவ

சம்பந்தமிருக்கிறது.

 

இந்த லக்ஷணம் எத்தனை வகைப்படும்?

பாக தியாக லக்ஷ்ணம் என்றும்  ஜகத் ஜக லக்ஷணமென்றும்  இரு வகைப்படும்.

 

 

அதெப்படி?

சாஸ்திரங்களில் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை கிரஹிக்கும் விஷயத்தில்  முக்ய விருத்தி, குண விருத்தி , லக்ஷணா விருத்தி  என மூவகை உண்டு.

 

இந்த முக்கிய விருத்தி, குண விருத்தி ஆகியவற்றை  உதாரணங்களுடன் விளக்க முடியுமா?

இரத, கஜ, துரக, பதாதிகள் போவதைப் பார்த்து , இதோ ராஜா போகிறார்  என்று சொல்கிறோம் அல்லவா, அது முக்கிய விருத்தி.

நீலோத்பலம் என்றால் நீல புஷ்பம்  என்பது குணவிருத்தி ஆகும்.

 

ஆஹா, இனி லக்ஷணா விருத்தி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்ந்து கேட்கலாமா?

கேளுங்கள், சொல்கிறேன்.

****            தொடரும்

 

 

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா! மஹாராணியின் கேள்வி! (Post No.4506)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-40 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4506

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

1

மாமன்னன் வரதுங்க பாண்டியன் மஹா சிவ பக்தன். மஹாராணியும் சிறந்த சிவ பக்தை. இருவருமே தமிழில் அருமையாகக் கவிதை புனையும் ஆற்றல் படைத்தவர்கள். சிவ மணமும் தமிழ் மணமும் கமழ பாண்டிய தேசம் சுபிட்சமாக இருந்தது.

 

நாட்கள், மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் உருண்டோடின.

 

மன்னன் வாழ்நாளின் இறுதியை அடைந்தான்.

மரணப்படுக்கையில் வரதுங்க பாண்டியர் படுத்திருக்க, மஹாராணி அருகில் அமர்ந்திருந்தாள்.

மன்னன் முகத்தில் சிந்தனை ஓங்கியிருந்தது. யாரையோ அவன் நினைத்துக் கொண்டிருந்தான் போலும்!

 

மன்னனைப் பார்த்த மஹாராணி மெதுவாகக் கேட்டாள்: “மன்னரே, மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”

பாண்டியன் சிரித்தான். “எனக்கா, மரணத்தைக் கண்டா, பயமா. ஹஹ்ஹஹ்ஹா”

 

மன்னனின் சிரிப்பைத் தொடர்ந்து பாடல் ஒன்று பிறந்தது. தமிழில் சிவம் கலந்த பாடல் அது.

 

2

பாண்டியனின் பாடலையும், மஹாராணியின் பாடலையும் கால வெள்ளம் அழித்து விடவில்லை. இன்றும் அவை நம் முன்னே இருக்கின்றன.

பாடல்களைப் பார்ப்போமா?

 

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்

அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்

கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்

கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்

நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்

நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்

பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்

பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!

 

 

பால் வண்ணர் என் உள்ளத்தில் முழுக் கோலத்துடன் இருக்கையில் பயமா, எனக்கா என்றான் பாண்டியன்.

பாடலின் முழுப் பொருள் :

 

அஞ்சல் என்ற கரதலமும் – அஞ்சாதே என்று அபயம் கொடுக்கும் கையும்

கணபண கங்கணமும் – வட்டமாகிய படங்களையுடைய பாம்பாகிய கங்கணமும்

அரைக்கு இசைந்த புலி உடையும் – இடுப்பிற்கேற்ற புலித்தோலால் ஆன ஆடையும்

அம்புவி செஞ்சடையும் – சந்திரனை அணிந்த சிவந்த சடையும்

கஞ்சமலர் சேவடியும் – தாமரை மலரைப் போன்ற சிவந்த திருவடியும்

கனைகழலும் சிலம்பும் – ஒலிக்கின்ற வீரக்கழலும் சிலம்பும்

கருணைபொழி திருமுகம் – அருள் மழையைப் பொழிகின்ற திருமுகமும்

 

கண்கள்  மூன்றும் – ஒப்பற்ற மூன்று கண்களும்

நஞ்சையுண்ட மணிமிடறும் – விஷத்தை உண்ட நீலமணி போலும் கழுத்தும்

முந்நூலும் மார்பும் – மூன்று இழைகளைக் கொண்ட பூணூலும் மார்பும்

 

நலம் திகழ் வெண்ணீற்று ஒளியும் – அழகு விளங்க நிற்கும் திருவெண்ணீற்றின் ஒளியும்

மறிமானும் – மான் கன்றும்

மழுவும் – மழு ஆயுதமும்

 

பஞ்சு அடி சிற்றிடை உமையாள் – பஞ்சு போன்ற பாதத்தையும் சிற்றிடையையும் கொண்ட உமாதேவி

ஒப்பனை பாகமும் ஆய்  – ஒப்பனையம்மை பாகமும் ஆகி

பால்வண்ணன் உள்ளத்து இருக்க – பால்வண்ண நாதர் எம்முளத்தில் இருக்கும் போது

எனக்குப் பயமும் உண்டோ – எனக்குப் பயமும் உண்டோ?

நிச்சயமாக இல்லை

Picture posted by Lalgudi Veda

இதைக் கேட்டு மனம் உருகிய பாண்டிமாதேவி பாடினாள் இப்படி:

யாக்கையெனும்  புழுக்குரம்பை யணைந்தனையாப் பொருளை

அருளொளியைப் பராபரத்துக் கப்புறவா மறிவை

நீக்கமற மயிர்முனைக்கு மிடமறவெங் கெங்கும்

நிறைந்து நின்ற முழுமுதலை நினவிலெழுஞ் சுடரைப்

பாக்கியங்கள் செய்தனந்தத் தவக்குறைகண் முடிக்கும்

பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க்கற் பகத்தை

வாக்குமன விகற்பாத்தா லளவுபடா வொன்றை

மாசற்ற வெறுவெளியை மனவெளியி லடைப்பாம்

 

 

இதன் பொருள் ;

ஆக்கை என்னும் புழுக்குரம்பை அணைந்து அணையா பொருளை – உடம்பென்கிற புழுக்கூட்டைச் சேர்ந்தும் சேராத பரம்பொருளை

 

அருள் ஒளியை – அருள் பிரகாசத்தை

பராபரத்துக்கு அப்புறம் ஆம் அறிவை –  பரம், அபரம் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட அறிவை (பரம் – ஆதி; அபரம் – அந்தம்)

நீக்கம் அற –  நீங்குதலின்றி

மயிர் முனைக்கும் இடம் அற – மயிர் முனையை ஊன்றுதற்கும் இடமில்லாமல்

 

எங்கெங்கும் நிறைந்து நின்ற முழுமுதலை –  எவ்விடத்தும் நிறைந்து நிற்கின்ற முதற்பொருளை

நினைவில் எழும் சுடரை – நினைப்பில் உண்டாகின்ற ஒளியை

பாக்கியங்கள் செய்து – அதிர்ஷ்டங்களைச் செய்து

அநந்தம் தவக்குறைகள் முடிக்கும் – அளவற்ற தவக்குறைகளை நிறையச் செய்கின்ற

பழ அடியார் தமக்கு உதவும் – பழ அடியார்க்கு வேண்டும் பொருளைக் கொடுக்கின்ற

 

பசுதுணர் கற்பகத்தை – பசுமையாகிய பூங்கொத்துகளை உடைய கற்பக விருட்சத்தை

வாக்குமன விகற்பத்தால் – வாக்கு மனங்களின் வேறுபாட்டால்

அளவுபடா ஒன்றை – அளவிடப்படாத ஒரு பொருளை

மாசு அற்ற வெறுவெளியை – களங்கமற்ற வெட்ட வெளியை

மனவெளியில் அடைப்பாம் – மனமாகிய ஆகாயத்தில் அடைத்து வைப்போம்

Picture posted by Lalgudi Veda

மஹாராணி, “பாண்டியரே! ஆம்! எங்கும் நிறைகின்ற பொருளை நம் மனதில் எப்போதும் வைத்திருப்போம்!” என்று நெஞ்சுருகச் சொன்னாள்.

 

வரதுங்க பாண்டியர் சிவபதத்தைச் சேர்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!

 

3

 

மன்னரானாலும் சரி, மஹாராணியானாலும் சரி, யோகியானாலும் சரி, சாமானிய மனிதன் என்றாலும் சரி, பண்டைய நாட்களில் தம் தம் வாழ்வை நெறியுடன் நடத்தி மனமகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ்ந்தனர்.

உரிய காலம் முடியும் போது சிவ சிவ என்றோ அல்லது ராம ராம என்றோ தமக்குப் பிடித்த இறைவனின் நாமத்தைக் கூறி அமைதியாக உயிரை விட்டனர்.

 

வரலாறை எடுத்துப் பார்க்கும் போது தமிழகத்தின் பெரிய மனிதர்களின் இறுதிக் கணங்களில், அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின்,  திருவாசகத்தை ஓதச் செய்து கேட்பது மரபாக, பழக்கமாகவே இருந்திருக்கிறது.

அற்புதமான ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை அறியும் போது உளம் நெகிழ்கிறது, இல்லையா!

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

****

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9 (Post No.4501)

 

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-34 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4501

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9

 

ச.நாகராஜன்

15

மாக்ஸ்முல்லர் காலத்தில் அவருக்குச் சாதகமாக இந்தியாவில் நடந்த  ஒரு நிகழ்ச்சி பிரம்ம சமாஜத்தின் தோற்றம்.

இதைத் தோற்றுவித்தவர் ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர். (தோற்றம் 22-5-1771 மறைவு 27-9-1833) பிரம்ம சமாஜத்தை அவர் 20-8-1828 அன்று தோற்றுவித்தார்.

அதனுடைய பிரதான கொள்கைகள்:

எந்த ஒரு புனித நூல் அல்லது சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

அவதாரங்களில் நம்பிக்கை இல்லை.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

ஜாதி பேதத்தில் நம்பிக்கை இல்லை

கர்ம பலன் மற்றும் புனர் ஜென்மத்தை நம்புவோர் நம்பட்டும்; நம்பாதவர் நம்ப வேண்டாம்.

ஏறத்தாழ கிறிஸ்தவ மாதத்தை பாலிஷ் போட்டு பளபளப்பாக்கி இந்தியாவுக்கு அன்பளிப்பாகத் தருவது போல இருக்கிறதல்லவா இது!

இதைத் தான் ராம் மோகனராய் உருவாக்கினார்.

ஆனால் கால வெள்ளத்தில் அது அடிபட்டுப் போயிற்று என்பது வேறு விஷயம்!

அவர் கிறிஸ்தவ மதத்திற்குத் துணை போனது  மாக்ஸ்முல்லருக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று.

ஏற்கனவே நல்ல விதமாக மேலை நாட்டு கல்வி முறையை (கிறிஸ்தவ மத பிரச்சாரக் கல்வி என்று அர்த்தம் கொள்க) இந்தியாவில் புகுத்தினால் கிறிஸ்தவத்திற்கு ஈடான ஒன்று இந்தியாவில் பிறந்து இந்து மதம் ஒழியும் என்று மனப்பால் குடித்தார் அவர்.

அதற்காக சௌகரியமான வழியாக பிரம்ம சமாஜம் இருக்கவே அதை நாடினார்; அத்துடன் தொடர்பு கொண்டார்.

ராம் மோகன ராய் இரண்டாம் அக்பரின் அரசவையில் இடம் பெற்றார். அக்பருக்கு ஒரு பிரச்சினை. அவருக்கு பிரிட்டிஷாரின் கருணைத் தொகை (மானியம்) போதவில்லை.

ஆகவே ராம் மோகன ராயைத் தன் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அவருக்கு 30000 பவுண்டு அளவில் அதை ராம் மோகனராய் பேச்சு வார்த்தை நடத்தி உயர்த்தினார்.

அவருக்கு  இரண்டாம் அக்பர் ராஜா என்ற பட்டத்தையும் அளித்தார்.

ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர் இப்போது ராஜா ராம் மோகன ராய் ஆனார்.

இங்கிலாந்து சென்ற அவர் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் ‘எழுத்துச் சேவை’ பணி புரிய முன் வந்தார்.

பின்னர் வில்லியம் கேரி என்பவரிடம் பணி புரிந்தார். இவர் பணி புரிந்த இடமெல்லாம் மத பிரசாரம் (கிறிஸ்தவத்தைப் பரப்புவது; இந்து மதத்தை ஒழிப்பது) அரசியல் ( இந்தியாவை நிரந்தரமாக பிரிட்டிஷாரின் கொள்ளை அடிக்கும் சொர்க்க பூமியாக வைத்திருப்பது) ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

இறுதியில் அவர் கேரியையே தாக்க ஆரம்பித்தார். கடும் மிஷனரியான கேரிக்கு கோபம் வந்தது நியாயமே.

ராஜா ராம் மோகன ராயே பின்னால் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்துச் செல்லும் தொகை வருஷத்திற்கு 30 லட்சம் பவுண்டுகள் என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார்.

“அவர் சதியை ஒழித்தார்; பெண்ணுக்கு உரிமை கோரினார்.” ஆகிய இவை அவரது சாதனைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.

அவரது வரலாறை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல என்பதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம்.

அவர் பற்றிய விக்கிபீடியா தரும் செய்தியின் ஒரு பகுதி இது: விளக்கம் வேண்டுவோர் முழுமையாக அங்கு படிக்கலாம்.

 

From 1803 till 1815, Ram Mohan served the East India Company’s “Writing Service”, commencing as private clerk “munshi” to Thomas Woodroffe, Registrar of the Appellate Court at Murshidabad[  (whose distant nephew, John Woodroffe — also a Magistrate — and later lived off the Maha Nirvana Tantra under the pseudonym Arthur Avalon). Roy resigned from Woodroffe’s service and later secured employment with John Digby, a Company collector, and Ram Mohan spent many years at Rangpur and elsewhere with Digby, where he renewed his contacts with Hariharananda. William Carey had by this time settled at Serampore and the old trio renewed their profitable association. William Carey was also aligned now with the English Company, then head-quartered at Fort William, and his religious and political ambitions were increasingly intertwined.

The East India Company was draining money from India at a rate of three million pounds a year in 1838. Ram Mohan Roy was one of the first to try to estimate how much money was being driven out of India and to where it was disappearing. He estimated that around one-half of all total revenue collected in India was sent out to England, leaving India, with a considerably larger population, to use the remaining money to maintain social well-being. Ram Mohan Roy saw this and believed that the unrestricted settlement of Europeans in India governing under free trade would help ease the economic drain crisis.

During the next two decades, Ram Mohan launched his attack against the bastions of Hinduism of Bengal, namely his own Kulin Brahmin priestly clan (then in control of the many temples of Bengal) and their priestly excesses.[The Kulin excesses targeted include sati (the co-cremation of widows), polygamy, idolatry, child marriage and dowry.

From 1819, Rammohun’s battery increasingly turned against William Carey, a Baptist Missionary settled in Serampore, and the Serampore missionaries. With Dwarkanath’s munificence he launched a series of attacks against Baptist “Trinitarian” Christianity and was now considerably assisted in his theological debates by the Unitarian faction of Christianity.”

 

 

ஆக மாக்ஸ்முல்லர் பயன்படுத்த நினைத்த பிரம்ம சமாஜம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான உருவ வழிபாட்டை எதிர்த்தல், பல் தெய்வ வழிபாட்டை ஒழித்தல் போன்றவற்றை ஆதரித்தாலும் மறுஜென்மக் கொள்கை பற்றிய வழவழா என்ற கொள்கையைக் கொண்டிருந்தது, ராம் மோகன் ராய் கிறிஸ்தவ மிஷனரிகளைத் தாக்கி பேச ஆரம்பித்தது ஆகியவற்றால் கலகலத்துப் போனது.

 

ராஜா ராம் மோகன ராய் பிரிஸ்டலில் இறந்தார்.

பிரம்மசமாஜத்தைப் பயன்படுத்தும் மாக்ஸ்முல்லரின் நோக்கம் வெற்றி பெற வில்லை. பிரம்ம சமாஜமே இல்லாமல் போயிற்று. 2001இல் இந்தியாவில் எடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் 177 பேரே பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பது தெரிகிறது.

முப்பது கோடி ஹிந்துக்களை உருத்தெரியாமல் ஆக்கவும் உருவவழிபாட்டை ஒழிக்கவும் ஆரம்பித்த ஒரு  “சீர்திருத்த” சமாஜம் 177இல் முடிந்தது. கிறிஸ்தவம் எடுத்த ஏராளமான உத்திகளில் ஒன்றான கைக்கூலியை ஆதரித்தல் என்ற உத்தி இன்னொரு முறை தோற்றது; இந்து மதம் நிலைத்தது. (இந்த பிரம்ம சமாஜ கூட்டங்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தர் போய் வந்தார் என்பது ஒரு சுவையான செய்தி)

 

மாக்ஸ்முல்லரின் மீது கிறிஸ்தவ மிஷனரிகளின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

 

16

இந்த நிலையில் இதன் வெளிப்பாடாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

1860ஆம் ஆண்டு போடன் சம்ஸ்கிருத பேராசிரியர் பணிக்கான தேர்தலில்  நின்ற மாக்ஸ்முல்லர் தோற்றுப் போனார். இந்தப் பணிக்கு அவர் தகுதி படைத்தவர் தான். ஆனால் அவரை விட குறைந்த தகுதி பெற்றவரான மோனியர் வில்லியம்ஸுக்கு அது தரப்பட்டது.

மிகவும் வருத்தமடைந்தார் மாக்ஸ்முல்லர். அவருக்குப் பெருத்த ஏமாற்றம் இது. தேர்தல் முடிந்தது. அவர் தோற்றார். மோனியர் வில்லியம்ஸ் வென்றார். உடனே அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் , “எல்லா சிறந்த மனிதர்களும் எனக்கு வோட்டுப் போட்டனர்.புரபஸர்களில் ஏறத்தாழ அனைவருமே எனக்குத் தான்  வோட்டுப் போட்டனர். ஆனால் பொதுவில் இருந்த கூட்டம் தான் மெஜாரிட்டியை நிர்ணயம் செய்தது.”

இப்படியாக கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிரான போக்கு, அவரது ஜெர்மன் பிறப்பு உள்ளிட்ட பல காரணங்கள் அவரது தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காரணம், அவர் இந்தியாவையே பார்த்ததில்லை என்பது. மோனியர் வில்லியம்ஸ் இந்தியாவில் இருந்திருக்கிறார்.

விக்கி பீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

 

He was defeated in the 1860 election for the Boden Professor of Sanskrit, which was a “keen disappointment” to him.[6] Müller was far better qualified for the post than the other candidate (Monier Monier-Williams), but his broad theological views, his Lutheranism, his German birth and lack of practical first-hand knowledge of India told against him. After the election he wrote to his mother, “all the best people voted for me, the Professors almost unanimously, but the vulgus profanum made the majority”.

17

பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாக்ஸ்முல்லருக்கு, 1868ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் ஒப்பீட்டு மொழியியல் அறிவில் பேராசிரியர் பணி தரப்பட்டது. அப்போது அவருக்கு வயது 45. (1875இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும் கூட, அதை அவர் இறுதி வரை (1900ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் மரணமடைந்தார்) வகித்தார்.

(விக்கிபீடியாவின் வரி இது:

Later in 1868, Müller became Oxford’s first Professor of Comparative Philology, a position founded on his behalf. He held this chair until his death, although he retired from its active duties in 1875.)

மாக்ஸ்முல்லரின் நிதானமான மனமும் அறிவும் இந்தியாவின் புகழோங்கிய வரலாறைப் பற்றிப் புகழ ஆரம்பித்தது.

ஈஸ்ட் இந்தியா கம்பெனியும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நொந்து போக உலகம் வியந்தது – இந்தப் புகழுரைகளால்.

அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!

நன்றி: விக்கிபீடியா (ஆதாரபூர்வ தகவல்களுக்காக விக்கி மேற்கோள்கள் தரப்பட்டன)

-தொடரும்

****