கடவுளை வணங்க வேண்டிய நேரங்கள் (Post No.3107)

IMG_3203

Written by London Swaminathan

 

Date: 31 August 2016

 

Time uploaded in London: 10-59 AM

 

Post No.3107

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

 

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப்

பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின்பாதத்திலே

நண்ணும் கருத்துத் தமியேனுக்கென்றைக்கு நல்குவையோ

விண்ணும் புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே

— அபிராமி பட்டர்

 

பொருள்:-

தேவர்களும் போற்றும் திருக்கடவூரில் வாசம்புரியும் கள்ளப் பிள்ளையாரே! என்றைக்கு உண்ணும் பொழுதும், உறங்கும் போதும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் போதும், பேசுவதற்குத் தொடங்கும் போதும் உன் திருவடிகளை நினைக்கும் நல்ல பண்புகளை எனக்குத் தரப்போகிறாயோ — என்று அபிராமி பட்டர் துதிக்கிறார். ஆகையால் அவர் கருத்துப் படி எவ்வப்பொழுது கடவுளை வணங்க வேண்டும் என்று தெரிகிறது.

HY14-PUSHKAR_2472025g.jpg,hindu 2

காலையில் 12 மந்திரங்களைச் சொல்லி சூரியனை  வழிபடும் வழக்கமிருப்பதால் (சூர்ய நமஸ்காரம்) அதி காலையில் கடவுளை வணங்க வேண்டும் என்பதும் சொல்லாமலேயே விளங்கும்.

 

பிராமணர்களும் — பழங்காலத்தில் மூவர்ணத்தினரும் — “காணாமல் கோணாமல் கண்டு” கொடுத்தனர்.

 

அதாவது சூரியனைக் காணாமல் ( சூர்ய உதயத்துக்கு முன்), கோணாமல்,  சூரியன் உச்சியில் இருக்கையில் நிழல் விழாது/சாயாது, கண்டு, அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்று அறிந்தனர்.

 

தேவாரம் போன்ற துதிகளிலும் “முப்போதும் தீண்டுவார்” என்ற வரியில் இவ்வழக்கத்தைக் காணலாம்.

 

ஆக குறைந்தது முப்பொழுது, முதிர்ந்த நிலையியில் எப்பொழுதும், எதைச் செய்தாலும் இறைவனை நினைத்தல் அவசியம்.

 

 

காலை எழுந்தவுடன் சொல்லவேண்டிய துதி

 

கராக்ரே வசதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ

கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

 

பொருள்:-

வலது கையின் நுனியில்  லக்ஷ்மியும், நடுப்பகுதியில் சரஸ்வதியும், அடிப்பகுதியில் கோவிந்தனும் வசிக்கிறார்கள் காலியில் கரத்ர்சனம் செய்யவேண்டும்.

சிலர் கோவிந்த: என்ற இடத்தில் கௌரீ வாசம் செய்வதாகக் கொண்டு கௌரீஸ்யாத் என்றுமுரைப்பர்.

IMG_5160 (2)

இதிலிருந்து தூங்கி எழுந்தவுடன் வலது கையைப் பார்த்து கடவுளின் பெயரை உச்சரித்தல் ஆன்றோர் வகுத்த வழி என்பதும் தெரிகிறது. இதை ப்ராத ஸ்மரணம் என்பர்.

 

 

 

பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல் (Post No.3105)

southindiacitiesbig

Compiled by London Swaminathan

 

Date: 30 August 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3105

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

சிவனுடைய ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்று அழைக்கப்படும். அதாவது அங்கே சிவன் பஞ்ச பூதங்களின் வடிவாக இருக்கிறார். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூத தத்துவத்தை உலகிற்குக் கற்பித்தது பாரதம். பின்னர் இது கிரேக்க நாடு வழியாக பிற இடங்களுக்குப் பரவியது. இதற்கு என்ன சான்று?

 

வடக்கில் சம்ஸ்கிருதத்திலும், தமிழில் புறநானூற்றிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சபூதம் காணப்படுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரப்புடைய நாடு உலகில் எதுவும் இல்லை. அப்படியே அலெக்ஸாண்டர் போல ஒருவர் ஒரு பிரதேசத்தை உருவாக்கினாலும் அது ஒரே பண்பாடுடைய “தேசம்” இல்லை. ஆக இவ்வளவு பரந்த ஒரு நிலப்பரப்பில் ஒரே பண்பாடு நிலவியதே நாம்தான் இதை பரப்பினோம் என்பதைக் காட்டும்.

 

“தில்லைக் கலம்பகம்” என்னும் நூல் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டையர் என்று அழைக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டது. அதிலுள்ள ஒரு பாடல், அழகாக ஐந்து தலங்களையும் வரிசைப் படுத்துகிறது. இதோ அந்த பாடல்:-

 

 

கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்

காஞ்சிமா நகருறை லிங்கம்;

காவிரி வடபால் வருதிரு ஆனைக்

காவினில் அப்புலிங்  கமதாம்

வடதிசை அண்ணா   மலையினில் லிங்கம்

வன்னியின் வடிவு; காளத்தி

வாயுலிங்   கமதாம்; சிதம்பர லிங்கம்

மாசில்  காயலிங்   கமதாம்.

–தில்லைக் கலம்பகம்

 

காஞ்சீபுரம் – நிலம் (ப்ருத்வீ)

திருவானைக்கா – நீர் (அப்பு)

திருவண்ணாமலை – தீ (தேயு, வன்னி )

திருக்காளத்தி — காற்று (வாயு)

சிதம்பரம் – வானம் (ஆகாசம்)

 

–Subham-

 

 

விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்? (Post No.3096)

swaminatha
படம்:- லண்டன் துர்கை கோவிலில் திரு. சுவாமிநாத சிவாச்ச்சாரியார்

Compiled by London Swaminathan

 

Date: 27 August 2016

 

Time uploaded in London: 10-49 AM

 

Post No.3096

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

லண்டனுக்கு வருகை புரிந்த மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்களைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன் (வீடியோவை தனியாக வெளியிடுகிறேன்). பல புதிய விஷயங்களை அவர் கூறியது வியப்பளித்தது.

 

விடுமுறைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்துக்களே!

அதுவும் மாதத்துக்குக் குறைந்தது எட்டு நாள் விடுமுறையை அமல் படுத்தியதும் இந்துக்களே!!

 

கணக்கிடு கருவி (கால்குலேட்டர்) இல்லாமலே எளிதில் 1000 வரை எண்ணும் முறையைக் கற்பித்ததும் இந்துக்களே.

 

படித்த பாடங்களை முறையாக ரிவிஷன் REVISION செய்ய கற்றுக் கொடுத்ததும் இந்துக்களே!

new-moon-january

படம்:– அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி நிலவு

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் “இந்துக்கள் சந்திரனை வழிபடுவது ஏன்? “ — என்று பிறை வழிபாடு பற்றி எழுதிய கட்டுரையில்

 

அஷ்டமி மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் பொங்குவது, நாள் தோறும் அலைகள் ஏறி, இறங்குவது பற்றிக் குறிப்பிட்டேன். அதில் பூமியைப் போலவே உடலிலும் 70 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால் இந்துக்கள் சில நாட்களை விடுமுறையாக அறிவித்ததைக் குறிப்பிட்டிருந்தேன் அது பற்றி சுவாமிநாத சிவாசாரியாரிடம் கேட்டேன்:–

 

 

இதோ அவரது கருத்துக்களின் சுருக்கம்.

 

“வெளிநாட்டினர்தான் நமக்கு வாராந்திர விடுமுறையைச் சொல்லிக் கொடுத்தனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது அது சரியல்ல. மாதத்துக்குக் குறைந்து எட்டு நாட்கள் விடுமுறை மிகப் பழங்காலத்திலிருந்தே வேத பாடசாலைகளில் பின்பற்றப்படுகிறது. அந்த நாட்களை “அனத்யயன” நாட்கள் என்பர். அதாவது அத்யயனம் (வேதக் கல்வி) செய்யக்கூடாத நாட்கள். அவையாவன:-

அஷ்டமி (எட்டாவது நாள்)

பிரதமை (முதல் நாள்)

சதுர்தசி (14 ஆவது நாள்)

பௌர்ணமி

அமாவாசை

hightides

இவைகளில் அஷ்டமி (எட்டாவது நாள்), பிரதமை (முதல் நாள்), சதுர்தசி (14 ஆவது நாள்) என்பன மாதம் இரு முறை வரும். அதாவது அமாவாசைக்குப் பின்னும் பௌர்ணமிக்குப் பின்னும் வரும்.

 

 

அது சரி விடுமுறை நாட்களில் வேத பாட சாலை மாணவர்கள் என்ன செய்வார்கள்? என்று கேட்டேன்.

 

சிவாசாரியார் சொன்னதாவது:–

 

“விடுமுறை என்றால் அவர்கள் சும்மா இருக்க முடியாது. வேத பாட சாலை என்பது அங்கேயே தங்கிப் படிக்கும் வசதியுடையது. ஆகையால துணி துவைத்தல், தங்கும் இடத்தை சுத்தம் செய்தல், வேத பாடசாலைக்கோ தனி உபயோகத்துக்கோ தேவையான பொருட்களை வாங்குதல், அம்மா, அப்பா , சகோதர சகோதரிகளைச் சந்தித்து அளவளாவுதல் முதலியன நடைபெறும்.

எல்லாவற்றிற்கும் மேலாக படித்த பாடத்தை சொல்லி நினைவு கூறுதல் நடக்கும். இந்தக் காலத்தில் ரிவிஷன் REVISION செய்வது என்று சொல்லுகிறோமே, அதை முறையாகச் செயல்படுத்தியது நாம்தான்.

 

இப்படி ரிவிஷன் செய்வதை திருவை சொல்லுதல் என்பர். மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்லுதலிலும் ஒரு முறை இருக்கிறது. பதம் பதமாக (சொற்களாக), இரண்டிரண்டாக, ஒரு ஐந்து வரிகளாக (பஞ்சாதி) என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதத்தை , புத்தகம் இல்லாமல், வாய்மொழியாகக் கற்பிப்பர். இதை அனத்யயன தினங்களில் சொல்லிப் பார்ப்பதும், அதை ஆச்சார்யார் (ஆசிரியர்) மேற்பார்வை செய்வதும் “விடுமுறை” நாட்களில் நடக்கும்.

 

ஒவ்வொரு முறை சொல்லும் போதும் பூணூலை ஒரு விரலில் சுற்றி இப்படி ஐந்து விரகளையும் பயன்படுத்தி ஐந்து முர்றையும், பின்னர் திரும்பிவருகையில் மேலும் ஒரு சுற்று வாரியாகச் சுற்றியும் பத்து எண்ணிக்கையை முடிப்பர். இது கால்குலேட்டர் CALCULATOR இல்லாமலே கணக்கிடும் முறையாகும்.

two_tidal_bulges_earth

எனது கருத்து:

 

 

(இது போல கைவிரல்களில் உள்ள கோடுகளைக் கொண்டு வலது கையில் 100 எண்ணிக்கை வரை எண்ண முடியும். இடது கையைப் பயன்படுத்தி ஒவ்வொரு விரல் கோடுக்கும் 100 வீதம் ஆயிரம் வரை எண்ண முடியும். மூன்று வருணத்தினரும் பூணுல் போட்ட பின்னர் தினமும் மூன்று முறை 1008 அல்லது 108 தடவை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டியிருப்பதால் இப்படி நூதன கணக்கிடும்  முறைகளை இந்துக்கள் பயன்படுத்தினர்.

 

உலகிற்கே இன்று நாம் பயன்படுத்தும் எண் முறையையும், தசாம்ச முறையையும் (டெசிமல் சிஸ்டம்) கற்றுக் கொடுத்தது இந்துக்கள் என்பதைப் பார்க்கையில் இந்த கணக்கிடும் முறை வியப்பளிக்காது.

 

கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்துவிட்டு ஏ ழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்ததால் ஞாயீற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவர்கள் பகர்வர்.

 

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்த்மனம் முதல் சனிக்கிழமை மூன்று நட்சத்திரங்கள் தெரியு ம் வரை ‘சப்பத்’ விடுமுறை என்று யூதர்கள் செப்புவர்.

பிரார்த்தனைக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை என்று முஸ்லீம்கள் புகல்வர். இவர்கள் எல்லோருக்கும் வாரத்துக்கு ஒரு நாள் வீதம், மாதத்துக்கு 4 நாட்கள்தான் விடுமுறை.

ஆனால் இந்துக்களோ மாதத்துக்குக் குறைந்தது  எட்டு நாட்கள் என்று எப்போதோ அறிவித்தனர். இன்று உலகம் முழுதும் எட்டு நாள் விடுமுறையைப் பின்பற்றுகிறது.

 

 

பெரியவர் கூறிய விஷயங்களைப் பார்க்கையில், உலகமே நம்முடைய விடுமுறையைப் பார்த்து சிறிது மாற்றி வைத்ததை அறிய முடிகிறது.

புத்த மதத்தினர் இந்துக்களின் முறைகளை மேலை உலகத்திற்குக் கொண்டு சென்றனர். அதை ரோமன் கதோலிக்கர்கள் கன்னி மடங்களில் பயன்படுத்தினர். அதை மற்றவர்கள் பின்பற்றினர். நாம் என்றோ பயன்படுத்திய மாதம் எட்டு நாள் விடுமுறையை உலகம் சமீப காலத்தில்தான் பின்பற்றத் துவங்கியுள்ளது.

moon-7day-1838

படம்:– அஷ்டமி சந்திரன்

இப்போது பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்படும் ரிவிஷன் முறையை நாம் முதலில் பின்பற்றி, உலகம் முழுதும் பரப்பியுள்ளோம்.

 

இந்துக்களின் மனன சக்தி MEMORY POWER அபாரமானது எதையும் நெட்டுருப்போட்டு அதை வாய் மொழியாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பரப்புரை செய்து வந்துள்ளனர்.

பூமியிலுள்ள கடல் மீதும்,  மனித உடல் மீதும் நிலவின் தாக்கத்தை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

 

–subham–

மறைந்து போன வேதங்கள்! (Post No.3093)

vedas4

Compiled by London Swaminathan

 

Date: 26  August 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3093

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

rveda

உலகிலுள்ள பழையமொழிகள் ஒவ்வொன்றும் நிறைய நூல்களை இழந்துள்ளன. எந்த பழைய மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதமும் தமிழும் நிறைய நூல்களை இழந்துவிட்டன. சில நூல்களின் மேற்கோள்களைப் பல உரையாசிரியர்கள் கையாளும்போது அவர் காலத்தில் அந்த நூல்கள் இருந்தது நமக்குத் தெரிகிறது. இன்னும் சில நூற் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன. இன்னும் சில ஆசிரியர்கள் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன.

 

உலகில் மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம் ஆகும். அ தை ஒட்டி யஜூர், சாமம், அதர்வண வேதங்களை வியாசர் தொகுத்து வைத்தார். இந்துக்கள் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்ததாகக் கணக்கிடுகின்றனர்.

 

அவர் ஏன் 4 வேதங்களை த் தொகுத்தார்?

ஏனென்றால் அவர் காலத்திலேயே வேதம் என்பது கடல் போலப் பரந்த இலக்கியம் ஆனது. யார் ஒருவராலும் தனியாக அவ்வளவையும் மனப்பாடம் செய்ய இயலாது என்பது அவருக்கு விளங்கியது. உடனே நான்காகத் தொகுத்து நான்கு சீடர்களை அழைத்து ஒவ்வொருவரும் ஒரு வேதத்தைப் பரப்புங்கள் என்றார். அதிலும் கூட முழு வேதத்தையும் மனப்பாடம் செய்ய முடியாவிடில் ஒரு சாகையை (கிளை) மட்டும் படித்தால் போதும் என்றார். இப்படியெல்லாம் எளிமைப்படுத்தியும் இன்று வேதம் இருக்கும் நிலையை நாம் அறிவோம்.

 

பிற இலக்கியங்களிலிருன்த்து அழிந்து போன வேத நூல்கள் என்ன என்பதை அறிகிறோம்.

 

 

பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம்,  வேதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லும். அந்த நூல் குறைந்தது 2100 ஆண்டுகளுக்கு முந்தையது.

 

ரிக் வேதத்தில் 21 சாகைகளும்,

யஜுர் வேதத்தில் 100 சாகைகளும்

சாம வேதத்தில் 1000 சாகைகளும்

அதர்வ வேதத்தில் 9 சாகைகளும்

இருந்ததாக பதஞ்சலி கூறுகிறார்.

 

முக்திகோபநிஷத், இந்த வேதங்களில் முறையே 21, 109, 1000, 50 சாகைகள் இருந்ததாகக் கூறுகிறது.

vedas-flow-chart

எல்லோரும் வேதம் அழிந்துவருவதைக் காட்டி இருக்கின்றனர். இருக்கும் வேதங்களையாவது காப்பாற்றுவது இந்துக்களின் தலையாய கடமை ஆகும்.

1130-க்கும் அதிகமான சாகைகள் இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது 11 சாகைகள்தான் இருக்கின்றன. மேலும் 4 சாகைகளின் சில பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதாக அறிஞர் பெருமக்கள் உரைப்பர்.

 

 

இப்போதுள்ள நான்கு வேதங்களிலும் 20,000 துதிகள் இருக்கின்றன. உலகில் மற்ற மதத்தினரும், மற்ற மொழியினரும் எழுதுவதற்கு முன்னரே வேதம் கடல் போலப் பரவிவிட்டது. இன்றுவரை, அது கோவில்களிலும், பூஜை, வழிபாடுகளிலும் பயன்படுகின்றன. திருமணச் சடங்குகளிலும் இறுதிச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் பயன்படுகின்றன்.

 

 

முதல் இலக்கண   நூல்

2700 க்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ — தான் உலகின் முதல் இலக்கண   நூல். அவர் தனக்கு முந்தைய இலக்கண ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லுகிறார். நமக்கோ ஒன்றும் கிடைத்தில.

 

மனு ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட தர்ம சாஸ்திரத்தை 1080 அத்தியாயங்களாகப் பிரித்து எழுதியதாக நாரத ஸ்ம்ருதி கூறுகிறது.

 

நாரதர் அதை 12,000 ஸ்லோகங்களாகவும், மார்க்கண்டேயர் அதை 8000  ஸ்லோகங்களாகவும், பிருகுவின் மகன் சுமதி அதை 4000  ஸ்லோகங்களாகவும் குறைத்ததாகக் கூறும். ஆனால் இப்பொழுதுள்ள மனு ஸ்மிருதி 12 அத்தியாயங்களில் 2685 ஸ்லோகங்கள் மட்டுமே இருக்கின்றன.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

IMG_5597

Picture of Hindu Yogi/ Saint/ ascetic

கிருத யுகத்தில் எல்லோரும் நல்லவர்கள். அவர்கள் 400 ஆண்டுகள் வாழ்ந்த தாக மனு சொல்லுவார். ஆனால் கலியுகத்தில் இராட்சத புத்தியுள்ளவர்கள் அதிகம். ஆகையால் எல்லாவற்றையும் குறைத்துக் குறைத்து சிறிதாக்கி விட்டனர். திருவள்ளுவரும் கூட ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்பார். ஏதாவது உங்கள் காதில் நல்லது விழட்டும் என்பார். ஆகவே இருப்பதைக் காப்பாற்றிப் போற்றுவது நம் கடமை. யாருக்கு விஷயம் தெரியுமோ அவர்களை ஆதரிப்பதும் நமது கடமை.

 

மேலும் வெளிநாட்டுக்காரர்கள் நமது சாத்திரங்களுக்குத் தேதி குறிப்பதும் தவறு என்று தெரிகிறது. அவர்கள் குப்தர் காலத்திலும், அதற்கு முந்தைய பிராமண சுங்க வம்ச ஆட்சிக்காலத்திலும் எழுதப்பட்ட புத்தகங்களையும் அதிலுள்ள ஓரிரு குறிப்புகளையும் வைத்து தவறாகக் காலம் கணிப்பர். அதை ஒதுக்கி விடுதல் நன்று.

 

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – மஹாகவி பாரதியார்.

 

-சுபம்-

 

தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089)

kartikai annamali

Written by London Swaminathan

 

Date: 24  August 2016

 

Time uploaded in London: 19-50

 

Post No.3089

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று நடைபெறும் கார்த்திகைத் திருநாள் கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களுக்கு ஜாதி, இன வேறு பாடின்றி அனைவர் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தி, கோலமிட்டு, அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே விளக்கொளிதான்!

 

கோவில்களிலும் இது போலவே ஆயிரக் கணக் கான விளக்குகள் ஒளிரும். இதற்காகவே அன்று இலுப்பை எண்ணை   கொண்டு விளக்கு ஏற்றுவர்.

அதைப் பார்த்தவுடன் தீப மங்கள ஜோதி நமோ நம: — என்னும் அருணகிரியின் திருவாக்கு நினைவுக்கு வரும் ( நாதவிந்துகலாதீ நமோ நம: என்ற திருப்புகழ் ).

 

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபம் என்பன மிகவும் பிரசித்தமானவை. லட்சக் கணக்காணோரைக் கவர்ந்திழுக்கும் திருவிழாவாகும்.

karthikai deepam

தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்துல் நிகழ்ச்சியும் அன்று இரவில் நடைபெறும். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால் இப்படிச் சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும். வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

 

கார்த்திகை பற்றி சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்ற குறிப்புகளைப் பலரும் அறிவர். ஆனால் தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திராது.

 

தொல்காப்பியத்தில்

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்–

தொல்.பொருள்.புறத்திணை இயல்-35

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

kartik deep

தொல் காப்பியத்தில் வரும் இந்திரன், வருணன், அக்னி, துர்கை முதலிய குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் தொல்காப்பிய உரை சரியே என்று தெளிவுபெறலாம்.

அகநானூறு,  நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட  கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் புகழைக் காட்டும்.

 

தீபாவளிக்கு இப்பொழுது  எப்படி எல்லோரும் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விடுகிறார்களோ, அது போல அந்தக் காலத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர்.

 

தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)

 

இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.

 

சிலர் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் ஆறு கோடுகள் எல்லாம் முருகனை வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்கள் என்றும் நம்புவர்.

 

வேதத்திலும், குமார சம்பவம் முதலிய நூல்களிலும் கார்த்திகைப் பெண்களும், அவர்களைக் குறிக்கும் விண்மீன்களும் இடம் பெற்றிருகின்றன. ஆக வேத காலக் கார்த்திகை இன்று வரை வழிபடப் படுகிறது.

 

கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த ஆறு நட்சத்திரங்களும் நிலவுடன் நெருங்கி நிற்கும்.

 

வானவியல் கணக்குப்படி கார்த்திகை நட்சத்திரங்கள் ஏழு ஆகும். நாமும் அதை முருகன்+ ஆறு கார்த்திகைப் பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை.

KARTIKAI DINDIGUL

முத்தொள்ளாயிரம் என்னும் நூலில்.

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்

புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்

ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்

நாடறி கௌவை தரும்

 

 

என்றும்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்

 

“குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன”

என்றும்

 

பொய்கையார், கார் நாற்பதில்

“கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே”

என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர்.

 

kartikai1

தொல்காப்பியம்  தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—

 

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24-12-2014

தொல்காப்பிய அதிசயங்கள், 14-11-2014

தொல்காப்பியர் காலம் தவறு-1, 9 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2, தேதி-10 செப்டம்பர் 2012

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு, 13 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3, 12 செப்டம்பர் 2012

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!, 31 மார்ச் 2014

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!, 9 ஏப்ரல் 2015

தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)

தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013

தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013

மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826), 20-5-2016

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம! , 10 நவம்பர், 2015

kartikai, sai babu.jpg

No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)

Tolkappian- A Genius ( posted on 12/9/2012)

Indra in the Oldest Tamil Book

Varuna In the Oldest Tamil Book

Did TOLKAPPIYAR copy from Sanskrit Books?, 10-9-2012

WHO WAS TOLKAPPIYAR?,9-9-2012

 

–Subham–

 

 

சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)

IMG_5583

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  21-18

 

Post No.3083

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் என்ற பெரிய வேள்வியைச் செய்ததை புறநானூறு மூலம் நாம் அறிகிறோம் அவனைக் குறித்து நான்கு பாடல்கள் 16, 125, 367, 377) உள்ளன. அவற்றை முறையே பாண்டரங் கண்ணனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஔவையார், உலோச்சனார் ஆகியோர் பாடினர்.

 

இராஜசூய வேள்விக்கு சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒருங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஔவையாருக்கு பெரிய மகிழ்ச்சி. நீங்கள் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களைவிட, மழைத் துளிகளைவிட அதிக நாட்கள் வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

IMG_5584

ராஜசூய யக்ஞம் என்றால் என்ன?

இது குறித்து லாத்யாயன ஸ்ரௌதசூத்ரம் சொல்கிறது. அரசர்கள் ஜாதியான க்ஷத்ரியர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ராஜ சூய என்றால் அரசனை ‘உற்பத்தி செய்தல்’, ‘கடைந்தெடுத்தல்’ என்று பொருள். அதாவது ஒரு மாமன்னனை உருவாக்குதல்.

 

இந்த வேள்வியைச் செய்த, பெருநற்கிள்ளி தன்னுடைய பெயருக்கு முன்பாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பட்டம் வைத்துக் கொண்டதிலிருந்தே இதன் பெருமையும் மகிமையும் விளங்கும்.

 

இதைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை!

பங்குனி மாத சுக்லபட்ச முதல்நாளில்  தீட்சை எடுத்துக்கொள்வர்.

முதலில் சோமரசம் தொடர்பான சடங்குகள் ஐந்து நாட்களுக்கு நடக்கும். பின்னர் ஓராண்டுக்கு சிறிய யாகங்கள் நடக்கும்.

 

அதன் பிறகு 12 நாட்களுக்கு நீடிக்கும் சடங்குகள் நடைபெறும்.

 

அரசனுக்கு அபிஷேகம் செய்து முடிசூட்டுதலே முக்கியமான — முத்தாய்ப்பான — நிகழ்ச்சி. பல புண்ய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை மந்திரம் சொல்லி அரசனின் தலையில் ஊற்றுவர் பிராமணர்கள். அபோழுது பிராமணர்களுக்கு நிறைய தானங்கள் வழங்கப்படும்

 

இதை ஔவையார் பாராட்டுகிறார்:-

வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை — என்பார்.

 

ஒருவர் செய்த நல்வினைதான் அவர் இறந்த பின்னர் அவருக்கு துணையாக வரும் – என்பதே இதன் பொருள்.

 

ஆகையால் பிராமணர்களுக்கு கைநிறைய தங்கக் காசுகள கொடு என்கிறரர்.

 

ஏற்ற பார்ப்பர்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

 

வாழ வேண்டும் என்று அறிவுரை பகர்கிறார். (Puram.367)

 

இதற்குப் பிறகு தேரோட்டும் பந்தயம் (ரேஸ்) நடக்கும்

அதைத் தொடர்ந்து ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் நடக்கும்.

இதில் சுமார் 100 பசுக்கள் இருக்கும்

 

(தமிழ் நாகரீகம், பண்பாடு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆநிரை மீட்டல், கவர்தல் ஆகியன மஹா பாரதத்திலும் உண்டு. சங்க இலக்கியத்திலும் உண்டு. பிராந்தியத்துக்கு பிராந்தியம் உலகம் முழுதும் சில விநோத வழக்குகள், இசை நடனம் முதலியன இருக்கும் அது போல இந்தியாவிலும் 25 மாநிலங்களில் 25 விதமான பழக்க வழக்கங்கள் , நடை உடை பாவனைகள் இருக்கும்.)

IMG_5585

மன்னன் , தேரிலிருந்து இறங்கிய பின்னர் முடி சூட்டு வைபவம் நடக்கும்.

 

இறுதியாக சொக்கட்டான் ஆட்டம் நடைபெறும். இதில் மன்னர்தான் வெற்றி  பெ றுவார்.  சொக்கட்டான் ஆட்டம் புற நானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளதே.

 

இதற்குப் பிறகு சுனஸ்சேபன் கதை உபந்யாசம் நடக்கும்.

அடுத்த பத்து நாட்களுக்கு சிறிய யாகங்கள் நடத்தப்படும். இதற்குப் பின் மன்னன், ஓராண்டு காலத்துக்கு சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

இவ்வளவையும் சோழ மன்னன் பெருநற்கிள்ளி செய்தது ம் அதை மற்ற புலவர்களும், புரவலர்களும் போற்றியது ம் எதைக் காட்டுகிறது?

 

தமிழ் மன்னர்களுக்கு யாக யக்ஞங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பார்ப்பனர் பற்றியும், வேள்வி பற்றியும், நான்மறைகள் குறித்தும், யூப நெடுந்தூண்கள் (வேள்வித் தூண்) பற்றியும் சங்க இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

 

32,000 பசு, 16000 பசு 8000 பசு தானம்!

 

ராஜ சூய வேள்வியை செய்வதற்கு 4 புரோகிதர்கள் தேவை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் 32,000 பசுக்கள் தட்சிணை!

இரண்டாம் நிலையிலுள்ள 4 ஐயர்களுக்கு தலா 16,000 பசுக்கள் தட்சிணை.

 

மூன்றாம் நிலையிலுள்ளோருக்கு தலா 8000, அதற்கடுத்த நிலையிலுள்ளோருக்கு தலா 4000 பசுக்கள் தட்சிணை என்று சாத்திரங்கள் செப்புகின்றன.

ஆச்வலாயன, பாரத்வாஜ, ஆபஸ்தம்ப, காத்யாயன ச்ரௌத சூத்ரங்களில் இதன் விவரங்களைக் காணலாம்.

 

சிந்து சமவெளி நாகரீகம்

 

சிந்து சமவெளி நாகரீகத்திலும் எடைக்கற்கள் இதே வீதத்தி ல்தான் இருக்கின்றன.4, 8, 16, 32, 64 ….

 

வேத கால தட்சிணையும் இதே வீதாசாரத்தில்தான் இருக்கும். ஆக வேத கால நாகரீகமும் சிந்து சம்வெளி நாகரீகமும் ஒன்றே.

 

இப்போதுள்ள ரூபாய்க்கு முன் இந்தியாவில் தம்பிடி, அணா, ரூபாய் என்ற முரை இருந்தது மூன்று தம்பிடி= காலணா, நான்கு காலணா = ஒரு அணா, 16 அணா = ஒரு ரூபாய் (அதாவது 64 காலணா அல்லது 192 தம்பிடி). இதுவும் சிந்து சம்வெளி விகிதாசாரமே!

 

–subham–

நான் பெருந்தமிழன்: பூதத்தாழ்வார் பெருமிதம்!! (Post No.3080)

IMG_5568

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 20-06

Post No.3080

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

பன்னிரு ஆழ்வார்கள் பாடியது நாலாயிர திவ்யப்பிரபந்தம். 12 ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதல் மூவர் ஆவர். காலத்தாலும் மூத்தவர்கள். முதல் மூவரும் அந்தாதிகளாகப் பாடியுள்ளனர்.

 

பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியில் ஒரு நல்ல பாசுரம். அதில் அவர் தன்னை “பெருந்தமிழன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இதோ பாருங்கள் பாடலை:–

 

யானே தவம் செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்

யானே தவம் உடையேன்; எம் பெருமான்! யானே

இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன்

பெருந்தமிழன் நல்லேன், பெருகு.

 

பாடலின் பொருள்:–

என் தலைவனே! எல்லாப் பிறவிகளிலும் தவம் புரிந்தவன் நான். அந்தத் தவத்தின் பயனைப் பெற்றவனும் நானே. சிறந்த தமிழ் மொழியால் சொல் மாலைகளை உன் திருவடிகளில் சூட்டினேன்; கலைகள் வல்ல பெருந்தமிழனும் அடியேனே.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தாங்கள் செய்த பணிகளையெல்லம் தமிழின் பெயரால் செய்ததாகவே சொல்லுவர். அது மட்டுமல்ல. தமிழி ல் பாடியதைப் பெருமையாகச் சொல்லுவர். ஆண்டாள் “சங்கத் தமிழ் மாலை” முப்பதும் செப்பியவர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன்” என்று மற்ற அடியார்கள் அவரைப் போற்றுவர். சுருக்கமாகச் சொன்னால் தமிழும் தெய்வீகமும் ஒன்று.

IMG_5567

திருக்குறளும் பூதத்தாழ்வாரும்

திருக்குறளில் காணப்படும் ஒரு கருத்தும் பூதத்தாழ்வார் பாடலில் காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் பார்த்து எழுதினார் என்றோ பாடினார் என்றோ கருதத் தேவை இல்லை. இது குமரி முதல் இமயம் வரை உள்ள கருத்து.

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு — குறள் 247

 

“பொருள் இல்லாதவர்கு இவ்வுலத்தில் இன்பம் கிடைக்காதது போல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதோருக்கு சுவர்க்க லோகம் கிடைக்காது” –என்பான் வள்ளுவன்.

 

இதோ பூதத்தாழ்வார் பாடல்:-

பொருளால் அமர் உலகம் புக்கு இயல் ஆகாது;

அருளால் அறம் அருளும் அன்றே; அருளாலே

மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே

நீ மறவேல் நெஞ்சே நினை

–இரண்டாம் திருவந்தாதி

IMG_5391

பொருள்:-

செல்வத்தால் சுவர்க்கம் செல்ல முடியாது; எம்பெருமான் அருளால், அறம் பொருள் இன்பம் கிடைக்கச் செய்வான். தனது அருளாலேயே வேதம் வல்லார்களுக்குத் தன்னைக் கொடுக்கும் நீலமணிவண்ணன் திருவடிகளை, நெஞ்சமே! நீ மறவாதே நினைத்துக் கொண்டிரு.

–subham–

 

 

 

 

அஷ்ட லெட்சுமி கதை: ஒன்று வாங்கினால் ஏழு இலவசம்! (Post No.3075)

ashta lakshmi

Written by london swaminathan

Date: 20th    August 2016

Post No. 3075

Time uploaded in London :– 6-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் சிறப்பாக ஆண்ட பெருமையுடையவன் போஜன். ஆனால் போஜன் என்ற பெயரில் பல மன்னர்கள் ஆண்டதால் எந்த போஜ ராஜனைப் பற்றியது அஷ்ட லெட்சுமி கதை என்று சொல்வதற்கிலை.

 

துணிவே துணை!

 

கடவுள் ஆறு இடங்களில் இருக்கிறார் என்று

சம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான ஸ்லோகம்/பாடல் இருக்கிறது.

 

உத்சாஹ: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம:

ஷடேதே யத்ர திஷ்டந்தி தத்ர தேவோபி திஷ்டதி

 

பொருள்:–

 

உற்சாகம் (ஊக்கம்/ஆவல்), சாஹசம் (துணிகரச் செய்ல்), தைர்யம் (துணிவு),

புத்தி: (மூளை/அறிவு), சக்தி: (உடல் வலிமை), பராக்ரம: (வீரம்)

–ஆகிய ஆறும் எங்கே இருக்கின்றனவோ அங்கே இறைவன் உறைவான்.

 

ashtalakshmi,chennai

வான் புகழ் வள்ளுவனும் தேன் தமிழில் செப்புகிறான்:-

 

விழுப்புண் படாத நாள் எல்லாம்  வழுக்கினுள்

வைக்கும் தன் நாளை எடுத்து

 

பொருள்:- வீரன் ஒருவன், தன் வாழ்நாளில் போரில் காயங்கள் ஏற்படாத நாட்களை எல்லாம், வீணாகிவிட்ட நாட்கள் என்று கணக்கிடுவான்.

 

ஆக துணிவு, வீரம் என்பன போற்றப்படும் பண்புகள். போரில் இறந்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்று பகவத் கீதையும் புறநானூறும் பகரும். (முன்னொரு கட்டுரையில் இது பற்றி விரிவாக கொடுத்துள்ளேன்)

 

சுவையான கதை

 

தைர்யத்தின் மதிப்பை விளக்க ஒரு சுவையான கதை உளது.

 

போஜராஜன் அரசாட்சியில் எட்டு லட்சுமிகளின் அருள் இருந்ததால் பயமோ, பஞ்சமோ இன்றி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் போஜன் ஒரு தவறு செய்துவிட்டதால் எட்டு லெட்சுமி களுக்கும் கோபம் வந்துவிட்டது.

 

போஜ ராஜனே! உன் பிழை கண்டு வருந்துகிறோம்; நாங்கள் போய் வருகிறோம் என்று தன, தான்ய, தைர்ய, வீர, விஜய, வித்யா, கஜ, சந்தான லெட்சுமிகள் அறிவித்தனர்.

 

போஜனோ

“சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே — என்பது ஆன்றோர் வாக்கு ஆயிற்றே.

“எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்” – என்று சான்றோர் பாடுகின்றனரே. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று முறையிட்டான்.

 

உடனே எட்டு லெட்சுமிமார்களும் “ஒரு வரம் தந்தனம். எங்களில் ஒருவரை மட்டும் கொள்க” என்றனர்.

 

புத்தியுள்ள போஜன் சொன்னான்: எனக்குத் துணிவு இருந்தால் உலகத்தையே வென்றுவிடுவேன். ஆகையால் தைர்ய லெட்சுமி என்னிடம் இருக்கட்டும் என்றான்.

 

அவர்களும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று இயம்பினர்.

மறுநாள் காலையில் போஜ ராஜனுக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.

lakshmi parade

தைர்ய லெட்சுமி இருந்த இடத்தில் வீர, விஜய, வித்யா லெட்சுமிகள் நுழைந்தனர். எங்கே துணிவு இருக்கிறதோ அங்கே தான் நாங்கள் இருப்போம் என்றனர். அதையடுத்து தன, தான்ய, சந்தான, கஜ லெட்சுமிகளும் உள்ளே வந்தனர். எங்கே கல்வியும் (வித்யா) தைர்யமும், வெற்றியும், வீரமும் இருக்கிறதோ அங்கே தான் தன, தான்யம், பிள்ளைப்பேறு (சந்தானம்), கஜலெட்சுமி (அதிர்ஷ்டம்/ லாபம்) இருப்போம் என்று ஓதினர்.

 

போஜனுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர்களைப் போற்றித் துதிபாடினான்.

 

இன்று கல்வியிலோ, தொழிலிலோ, அரசாட்சியிலோ , அலுவலகத்திலோ, குடும்பப் பொறுப்பிலோ உள்ளோருக்கு இந்தக் கதை தரும் அறிவுரை ஆயிரம் புத்தகங்களிலும் காணக்கிடைக்காத அற்புத அறிவுரை ஆகும்.

 

பாரதி பாடுகிறான்:–

குடுகுடு  குடுகுடு  குடுகுடு  குடுகுடு

சாமி மார்க்கெல்லாம் தைரியம் வளருது

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது

எட்டு லச்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது

சொல்லடி சக்தி, மலையாள பகவதி

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

 

அஷ்ட லக்ஷ்மி நமோ நம:

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!!

 

 

 

 

எதிரியைக் கொல்லும் தமிழ் மொழி!(Post No.3074)

nanneri-muzhamum-uraiyum-26608

Written by London swaminathan

Date: 19th August 2016

Time uploaded in London: 18-34

Post No.3074

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து தோன்றிய சம்ஸ்கிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் எதிரிகளையும் கொல்லும் சக்தி உண்டு. உலகில் எத்தனையோ வகையான ஆயுதங்கள் உண்டு. ஆனால் மொழி ஆயுதம் என்பதை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.

 

உண்மைக் கவிஞர்கள் கோபப்பட்டால் தங்கள் எதிரிகள் மீது சரம கவி பாடுவர். இதைப் பாடிய மாத்திரத்தில் எதிரி சுருண்டு விழுந்து இறந்து விடுவார். சிலர், பரிதாபப்பட்டு மீண்டும் அவரை உயிர்த்தெழவும் கவிதை பாடுவர். உடனே அவர் உயிர் பெற்று எழுவார். இது சாபங்கள் என்ற வகையில் வராது.

 

சாபங்களில் கவிதை பாடும் பணி இல்லை. சொற்களோ வாக்கியங்களோதான் இருக்கும்.சாபங்களில் இருந்து விமோசனம் பெற  நீண்ட காலம் ஆகும். ஆனால் சரம கவிகளிலிருந்து விடுதலை பெறுவது உடனே நடக்கும்.

இந்தியாவில் சரம கவி சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.

காளிதாசன் — போஜராஜன் மோதல், நக்கீரர் — குயக்கோடன் மோதல், நந்திவர்மன் சம்பவம் எனப் பல உண்டு

 

சிவப் பிரகாச சுவாமிகள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காண்போம்.

IMG_5308

சிவப் பிரகாசர் ஒருநாள் மணிமுத்தா நதியில் குளித்துவிட்டு வருகையில் மாஞ்சோலை வழியாக வந்தார். சோலைக்கு வெளியே இருந்த ஒரு மாமபழத்தைப் பார்த்தவுடன் இதை சிவ பெருமானுக்கு நைவேத்யம் செய்வோம் என்று எடுத்தார். அதைப் பார்த்த காவற்காரன், இவர் மாம்பழத்தைத் திருடுபவர் என்று நினைத்து அவர் ஆடையைப் பிடித்து இழுத்து வந்தான். மனம் வருந்திய சிவப் பிரகாசர் அவனைத் தண்டிக்க எண்ணி,

அடுத்து வரும் தொண் டனுக்கா வந்தகனைத் தாளா

லடர்த்ததுவுஞ் சத்தியமேயானால் – லெடுத்ததொரு

மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி

சாங்கனிக்கா தித்தன் வரத்தான்

என்னும் வெண்பாவைப் பாடிச் சூரியன் உதித்தவுடன் உயிர் துறக்கும்படி செய்தார்.

பொருள்:

ஒரு தொண்டனுக்காக, சிவ பெருமான், யமனைக் காலால் உதைத்த து உண்மையானால், சிவத் தொண்டனாகிய என் ஆடையை பிடித்திழுத்து வருந்தச் செய்த இந்த மஹா பாவி,  ஆதித்தன் உதித்த மாத்திரத்தில் இறந்தொழியட்டும்.”

 

அவன் நற்கதி அடையட்டும் என்பதுவே அவருடைய உள்நோக்கம் ஆகும்.

சிவப் பிரகாசர் ஒருநாள், தன்னுடைய ஞானகுருவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்தில் சந்திரன் உதித்தது. அதன் அழகைக்கண்டு களித்து கவி மழை பொழிந்தார்:–

 

கடன் முரச மார்பக் கதிர் கயிற்றாலேறி

யடைமதி விண்கழை நின்றாடக் – கொடை மருவு

மெங்கள் சிவஞான வேந்த லிறைத்தமணி

தங்கியவே டாரகை கடாம்

 

இவர் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது கவி பாடத்தோன்றியது. அவர் அப்பொழுது பாடிய 40 பாடல்களும்  நன்னெறி என்னும் நூலில் உள்ளன.

இவர் பாடிய நூல்களுள் மிகவும் சிறப்பானது நன்னெறி ஆகும். அதன் அழகை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.

சிவப் பிரகாசர் 35 நூல்களைப் பாடியுள்ளார்.

 

–Subham–

 

தீர்த்த யாத்திரை அவசியமா? (Post No.3072)

b_id_406817_kawadiyan

Written by London swaminathan

Date: 19th August 2016

Time uploaded in London: 5-40 AM

Post No.3072

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் சென்று நீரில் மூழ்கினால் பெரும் பயன் கிட்டும்; பாவங்கள் தொலையும் என்பது நல்ல நம்பிக்கைதான். ஆனால் அதைவிட சுலபமான, செலவில்லாத, ஒரு எளிய தீர்த்த யாத்திரை பற்றிக் கூறுகிறது ஒரு அழகான சம்ஸ்கிருத ஸ்லோகம்:-

 

க்ஷமா தீர்த்தம் தபஸ்தீர்த்தம் தீர்த்தம் இந்த்ரிய நிக்ரஹ:

சர்வ பூத தயா தீர்த்தம் த்யானம் தீர்த்தம் அனுத்தமம்

 

பொறுமை என்ற தீர்த்தம்

 

தவம் என்ற தீர்த்தம்

 

புலனடக்கம் என்ற தீர்த்தம்

 

எல்லா உயிரிடத்திலும் அன்பு என்ற தீர்த்தம்

 

தியானம் என்ற தீர்த்தம்

 

சத்ய/ உண்மை தீர்த்தம்

 

ஏதானி பஞ்சதீர்த்தானி சத்யதீர்தம் ச சர்வதம்

தேஷு திஷ்டந்தி சர்வஸ்ய தேஷு ஸ்நானம் சமாசரேத்

ஐந்து தீர்த்தங்களோடு சத்ய தீர்த்தத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; உடலிலேயே இருக்கும் அதில் எப்போதும் குளியுங்கள்

இவ்வைகளுக்கு மேலான தீர்த்தம் எதுவுமில்லை!

இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட தீர்த்த யாத்திரைக்கும் மேலான பலன் கிடைத்துவிடும்!

 

   கழுதைக்கு கங்கா ஜலம்

 

இதை விளக்க ஏகநாத் வாழ்வில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தைக் கூறலாம்:

 

மஹாராஷ்டிர மாநிலமும் தமிழகத்தைப் போலவே ஏராளமான அடியார்கள் வாழ்ந்த பூமி; அங்கும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல பலர் வாழ்ந்தனர். அவர்கள் பல்வேறு தொழில்களைச் செய்தவர்கள்; சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்; எப்படி தமிழ்நாட்டில் நந்தனார், கண்ணப்பர் போன்றோர் போற்றப்பட்டனரோ அப்படி கீழ்மட்டத்தில் இருந்தோரும் புனிதராக வழிபடப்படும் பூமி மஹாராஷ்டிரம்.

 

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான முக்தாபாய் ஏக கநாத், நாமதேவ் , துக்காராம், சமர்த்த ராமதாஸ் போன்றோர் தினசரி பஜனைகளில் பாடப்படும் பேறு பெற்றவர்கள்.

 

ஒரு முறை ஏகநாத், பல அடியார்கள் புடை சூழ காசிக்குச் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு இரண்டு பானைகளில் கங்கை ஜலத்தை எடுத்துக் கொண்டு நடந்தார். தோளில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு அதன் இரு புறங்களிலும் கங்கை ஜல குடங்களை தொங்க விட்டுக் கொண்டு ராமேஸ்வரம் வரை வருவர். அங்குள்ள சிவலிங்கத்துக்கு அந்த கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். அப்பொழுதுதான் யாத்திரை நிறைவு பெறும் என்பது ஐதீகம்.

 

ஏக நாதரும் கங்கை நீரைச் சுமந்து கொண்டு ராமேஸ்வரத்தை நோக்கி நடந்துவந்தார். அடியார்கள் கோஷ்டி பின்னால் நடந்து வந்தது. அப்பொழுது கடுமையான கோடை காலம்,வெய்யில் எல்லோரையும் வாட்டி வதைத்தது. மக்கள் ஆங்காங்கே நின்று தாக சாந்தி செய்து வந்தனர்.

donkey-1

ஒரு பொட்டல் காட்டில் ஒரு கழுதை வாடி வதங்கி சோர்ந்து நிற்பதை ஏகநாதர் கண்டார். அது தாகத்தினால் தவிப்பதை உணர்ந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் என்பதே இல்லாத வறண்ட பூமி அது. உடனே இரண்டு பானைகளிலும் இருந்த கங்கை நீரை கழுதைக்கு வார்த்தார். அதைக் குடித்தவுடன் கழுதைக்கு உயிர் வந்ததது. அது ‘காழ் காழ்’ என்று கத்திக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடியது.

 

சிறிது நேரம் கழித்து,  அடியார்கள் கோஷ்டியும் அவ்விடம் வந்து சேர்ந்தது. ஏகநாதரின் காவடியின் இரு புறப் பானைகளும் காலியாக இருப்பதைக் கண்டு என்ன ஆயிற்று என்று வினவினர். அவர் கழுதைக்கு கங்கா ஜலம் கொடுத்து காப்பாற்றியதை பெருமிதத்துடன் பகர்ந்தார்.

அதைக்கேட்ட பல பக்தர்கள் பொங்கி எழுந்தனர். என்ன அபவாதம் செய்துவிட்டீர்! கங்கை நீரைக் கழுதைக்குக் கொடுத்து பாவத்தை கட்டிக்கொண்டீர்களே. இப்பொழுது ராமேஸ்வரம் சென்றால் எதை வைத்து அபிஷேகம் செய்யப்போகிறீர்? என்று கேள்விக்  கணைகளை த் தொடுத்தனர்.

 

ஏகநாதர் அமைதியாகச் சொன்னார்:

“என்னுடைய அன்பு சிவ பெருமானுக்குத் தெரியும்; அது போதும். அவர் என்னை மன்னித்து விடுவார்.”

 

ஆக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது தீர்த்த யாத்திரைக்குச் சமம் என்பதை ஒரு பெரிய மகான் நமக்குக் கற்பித்துவிட்டார்.

 

அதனால்தான் இன்றும் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.

 

நீதி, உயர்ந்த மதி, கல்வி — அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர்களிடத்தில் அன்பு வேணும்; — தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேண்டும்.

–மஹா கவி பாரதி.

 

–subham–