துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061)

0c79b-ar2bkanda9.jpg

கவந்தன் படலம்

 

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3061

Time uploaded in London :– 12-47

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

கம்பன் காவியம் ஒரு கல்கண்டு! சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

 

 

ராமன் ஒரு அவதாரம்; ஆயினும் மனிதனாகத் தோன்றினால் மனிதன் போலவே நடந்தால்தான் அவனை நாம் பின்பற்றுவோம். ராமன் தனது வாழ்க்கை மூலம் பல அரிய பண்புகளை நமக்குக் கற்பிக்கவந்தவன். ஆகவே துணையின் பெருமை, நட்பின் பெருமை, உதவி பெறுவதன் பெருமை ஆகியவற்றையும் நமக்குக் காட்டுகிறான்.

 

பஞ்ச தந்திரங்களில் ஒன்று சரியான நட்பைப் பெறுதல்; துணை இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. ஏழு கோடி அவுணர்களை வீழ்த்திய ராமனும் கூட துணை இல்லாமல் ஒருவேலையைச் செய்ய இயலாது.

 

 

ராமன் உதவி பெறுவதைவிட, கம்பன் அதை நமக்குச் சொல்லும் அழகு தனியே!

 

சுக்ரீவனின் நட்பைப் பெறுக – என்று ராம பிரானுக்கு  கவந்தன் அறிவுரை அறிவுரை வழங்குகிறான்

 

கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்

இணை இலாதாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்

துணை இலாதவருக்கு இன்றால் பகைப் புலம் தொலைத்து நீக்கல்

 

–ஆரண்ய காண்டம், கவந்தன் படலம்

 

பொருள்:-

அம்புகளை வீசும் வில்லை உடைய (கணை உலாம் சிலை) உன்னைக் காப்பதற்கு பலம் உடையவர் யாருமில்லை.ஆயினும் ஒப்பில்லாத சீதையைத் தேடுவதற்கு (இண இலாள் தன்னை நாடற்கு), உதவி தேவை.

 

எதைப் போல என்றால்,

கப்பல் இல்லாமல் கடலைக் கடக்க முடியாது (புணை இலாதவற்கு வேலை/கடல் போக்கு அரிது)

 

அதேபோல

துணை இல்லாமல் பகைப் புலத்தை அழிக்க முடியாது.

kamban_stamp

நல்ல உவமை: இந்த உவமையை இந்துமத நூல்கள் முழுவதும் காணலாம். கடல் என்பது அவர்களுக்குத் தெப்பம் போல; உலகம் முழுதும் சென்று நாகரீகத்தைப் பரப்பியவர்கள் இந்துக்கள். அதனால் வேதம் முதல் நேற்றைய இலக்கியம் வரை கப்பல்-கடல் உவமை வரும்.

 

சம்சார சாகரம் = பிறவிப் பெருங்கடல் என்பதை கீதையிலும்  குற ளிலும் காணலாம். நிற்க.

 

திருவள்ளுவரும் இதை வலியுறுத்துவார்:-

 

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

–குறள் 677

ஒரு செயலைச் செய்பவன், ஏற்கனவே அந்தப் பணியைச் செய்து அறிவு பெற்றவனின் அனுபவத்தைப் பகிர்ந்து, அதைச் செய்வதே முறை.

MySt Kambar fdc

–Subham–

வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!! (Post No.3046)

galactic_black_hole

Research Article Written by london swaminathan

Date: 9th    August 2016

Post No. 3046

Time uploaded in London :– 6-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 2

 

விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் செய்திகள் தினமும் வருகின்றன. எங்கிருந்து? வானத்திலிருந்து!!

 

செவ்வாய், வியாழன் கிரகங்கள் பற்றியும் பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திர (சூரியனைப் போன்றவை) மண்டலங்களில் புதுப் புது கிரககங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் நாம் தினமும் செய்திகளைப் படித்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு கண்டு பிடிப்புதான் கறுப்புத் துளைகள் (BLACK HOLES) அல்லது குழிகள்.

black-holes

இதுபற்றி வானவியலார் கூறுவது என்ன?

வானத்தில் ஈர்ப்புவிசை மிகுந்த  — மிகப் பெரிய அளவிலுள்ள — சில பகுதிகள் இருப்பதாகவும் இவை அருகிலுள்ள நட்சத்திரங்களைக் கபளீகரம் செய்வதாகவும் அவர்கள் சொல்லுவர்.

 

இதுவரை பிரபஞ்சத்தில் அதிக வேக வேகத்தில் செல்லக் கூடியது ஒளி-தான் என்றும் அது வினாடிக்கு 1,86,000 மைல்கள் செல்லும் என்றும் இந்த வேகத்தை அடையவே முடியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் செப்புவர். எவரேனும் ஒருவர் இந்த வேகத்தில் சென்றால் அவர் எப்போதும் மார்க்கண்டேயர் போல வாழலாம் என்றும், வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் காலத்தில் முன்னோக்கிப் பயணம் செய்யலாம் என்றும் பகர்வர். அப்பேற்பட்ட ஒளியைக் கூட வெளியே விடாத அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டவை Black கருந்துளைகள். நட்சத்திரங்கள் சுருங்கிப் போய் இதை உருவாக்குகின்றன

 

அது மட்டுமல்ல; இதற்குள் நுழையும் விண்வெளிப் பொருட்கள் பிரம்மாண்ட வெப்பத்தை உண்டாக்குவதால் இங்கிருந்து எக்ஸ்ரே கதிர்கள் வெளிப்படும். இதை வைத்தே கருந்துளைகள் எங்கே இருக்கின்றன என்பதை அறிஞர் பெருமக்கள் அறிவர்.

முதல் முதலில் அணுகுண்டு வெடித்த காட்சியைக் கண்ட ‘அணு குண்டின் தந்தை’ ராபர்ட் ஓப்பனஹைமர் (J Robert Oppenheimer, American Theoretical Physicist, Father of Atomic Bomb), ஆச்சர்யத்தில் மூழ்கி “திவிசூர்ய சஹஸ்ரஸ்ய” (கீதை 11-12) என்ற ஸ்லோகத்தை உச்சரித்தார். பல்லாயிரம் கோடி சூரியன்கள் ஒருங்கே உதித்தாற் போல இருந்ததாம் கிருஷ்ணனின் விஸ்வ ரூப தரிசனம்! இதே போலத்தான் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியபோது வானத்தில் பல்லாயிரம் கோடி சூரியன் உத்தித காட்சியைக் கண்டார் ஓப்னஹைமர். இது பற்றி முன்னரே விரிவாக எழுதி இருக்கிறேன்.

 

இப்போது கருந்துளைகளுக்கு வருவோம். இந்தக் காட்சியும் பகவத் கீதையிலும் , மனு ஸ்மிருதியிலும் உள்ளது. அங்கே “கடவுள்”, “விஷ்ணு” என்பனவற்றை மறந்து விட்டுப் பார்த்தாலோ அந்தச் சொற்களை நீக்கிவிட்டுப் படித்தாலோ ஒரு விஞ்ஞானக் கட்டுரையைப் படிப்பது போலத் தோன்றும்.

 

இதோ அந்த   வரிகள்!

உலகங்களும், மன்னர்களும் உன் வாய்க்குள் புகுவதைக் காண்கிறேன் (கீதை 11-26)

 

எவ்வாறு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதிகள் அனைத்தும் கடலை நோக்கி விரைகின்றனவோ அவ்வாறே இந்த மானிட உலக வீரர்கள் எப்புறமும் கனல் வீசும் உன்வாய்களில் புகுவதைக் காண்கிறேன் (11-28)

 

எவ்வாறு விட்டிற்பூச்சிகள் அதிபயங்கர வேகத்துடன் நாசமடைவதற்காக, தீக்குள் புகுகின்றனவோ அவ்வண்ணம் உலகத்து உயிர்களும் நாசமடைவதற்காகவே உன் வாய்க்குள் நுழைகின்றன. 11-29

 

கனல் வீசும் வாய்கள் உலக ங்களை விழுங்குவதைக் காண்கிறேன். உன் நாக்குகள் அவைகளை நக்கி விழுங்குகின்றன. உன்னுடைய வெப்பம் மிக்க கிரணங்கள் உலகங்களை எரிப்பதையும் பார்க்கிறேன் 11-30

 

என்று அர்ஜுனன் இயம்புவதை படித்துவிட்டு கருந்துளைகள் பற்றி பார்த்தாலோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னது அப்படியே இருப்பதைக் கண்டு வியப்போம்.

 

பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகத்தில் 5000 ஆண்டு களுக்கு முன் வியாசர் என்ன எழுதினாரோ அதை அப்படியே இன்று கருந்துளைகளின் காட்சியாக வருணிப்பர் வானைனியல் வல்லுநர்கள்!

krishna

(முதல் ஏழு அதிசயங்கள் மனு பற்றிய முதல் பகுதியில் உள்ளன)


அதிசயம்
 8

மனு இதற்கும் மேலாக ஒருபடி சென்று ஆதியில் இருந்த கருந்துளைகள் பற்றி கறுப்பு (BLACK) என்றே சொல்லுகிறார்!

 

“கேள்! ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது (கறுப்பு). எது என்ன என்பதைக் காண இயலாதவாறு கும்மிருட்டு!!

அது என்ன என்றே யாருக்கும் புரியாது. எல்லாம் நெடுந் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.

 

எப்போதுமுள்ள இறைவன், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். தனது சக்தியை எல்லாம் பயன்படுத்தி காணும்படி செய்தான். இருளை விரட்டி அடித்தான்” – மனு ஸ்ம்ருதி — 1–5/6

 

மாபெரும் வெடிப்பு (BIG BANG பிக் பேங்) கருந்துளைகள் (BLACK HOLE)  ஆகியன இதில் அடக்கம்!

 

அறிவியல் செய்திகளை மக்களுக்கு இதைவிட எளிய சொற்களில் விளக்க முடியாது.

 

எதையேனும் ஒன்றை அறிவியலாளர் கண்டுபிடித்த பின்னர் எங்கள் சாத்திரங்கள் அதை முன்னரே சொல்லிவிட்டன என்று சொல்லுவது அறிவுடைமை அல்ல; முன் கூட்டியே வரப்போவதை உரைப்பவனே சிறந்தவன். இவ்வகையில் எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று இந்து மதம் சொன்னதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

black-hole-art

மீண்டும் சுருக்கமாக (In short):

1.ஒளியைவிட வேகத்தில் – மனோ (Mind) வேகத்தில் பயணம் செய்யும் வழி உண்டு விண்ணூலக வாசிகள் அதைப் பயன்படுத்தி பூலோகத்துக்கு மனோ வேகத்தில் வந்தனர். ஒளியைவிட வேகத்தில் செல்லுவது மனது. அதை ஓடம் போலப் பயன்படுத்தி எங்கும் செல்லும் ஆற்ற்றல் உண்டு.

 

காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் இந்து மத நூல்களில் இருக்கின்றன (எனது கட்டுரைகளில் காண்க)

 

மேலுலகவாசிகள் எப்படி இருப்பர் என்பதையும் எழுதியுள்ளேன்.

 

காலம் என்பது வட்டப் பாதையில் (Cyclical) செல்லும்; மேல் நாட்டினர் கூறுவது போல ஒரே நேர் கோட்டில் (Linear) செல்லுவது அல்ல.

 

பல்லாயிரம் கோடி உலகங்கள் உண்டு. பூமியிலிருந்து பார்ப்பவர்களு அந்தக் காலம் பிரம்மாண்டதாகத் தோன்றும். ஒரே நாள் மட்டும் வாழும் ஈ-க்கு (fly) 100 ஆண்டுகள் வாழும் மனிதன் எப்படியோ அப்படியே நமக்கு அவர்களுடைய ஆயுள். (இதுபற்றியும் தனிக் கட்டுரை எழுதியுள்ளேன்)

 

–சுபம்–

 

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 1 (Post No.3042)

manusmriti

Written by london swaminathan

Date: 7th    August 2016

Post No. 3042

Time uploaded in London :– 9-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!

9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!

 

 

அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!

பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை,  பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5-130)

 

அதிசயம் 2 Men lived for 400 years!

கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1-83)

வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.

 

திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.

 

 

அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!

ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11-78)

 

ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!

 

அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும்  நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.

 

ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.

மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.

 

சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.

 

இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும் சிந்து  சமவெளி நாகரீக காலத்தவை அல்லது அதற்கும் முந்தியவை.

 

அதிசயம் 4 (Sumukan Mystery)

சுமுகன் என்றொரு மன்னனி பெயரை மனு (7-41) குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியங்களில் இவர் பெயர் இல்லை. ஆனால் சுமேரியாவில் இவர் பெயர் இருக்கிறது. இது குறித்து முன்னரே விரிவாவக ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். வேறு எந்த இலக்கியமும் செப்பாத ஒரு விஷயத்தை மனு இயம்புவதிலிரந்தே அவரின் பழமை வெளிப்படும்.

manu2

அதிசயம் 5 (Soma Herb)

சோம யாகம் பற்றி மனு பல இடங்களில் பேசுகிறார். சோமலதை எனப்படும் மூலிகையின் விற்பனை, அதற்குள்ள தடைக ளையும் அவர் சொல்லுகிறார். சோம யாகத்துக்கான சோமக் கொடி வேத காலத்திலேயே அருகிவிட்டது. வேத கால இறுதியிலேயே இதற்கான மாற்றுத் தாவரங்களைக் கதைகத் துவங்கிவிட்டனர். ஆகவே வேத காலத்தின் ஆரம்பத்திலேயே மனு தர்ம சாத்திரம் தோன்றியிருத்தல் வேண்டும்.

3-87, 211, 257

4-26, 52

9-129, 11-7 to 12, 255

Sale of Soma – 3-158, 180, 10-80

 

 

அதிசயம் 6 No Interpolation!!!

வெளி நாட்டுக்காரர்கள் இந்திய இலக்கியங்களை மட்டம் தட்டுவதில் மன்னர்கள். இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இடைச் செருகல் உண்டு என்று சொல்லி இந்துக்கள் மனதில்,  ஐயப்பாட்டைக் கிளப்பி இந்து  மத தையே ஆட்டம் காணச் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆங்கிலம் படித்த நம்மூர் அசட்டுப் பிச்சுகளும் அதை அப்படியே நம்பி மேலும் உளறுவதைக் காணலாம்; வாழ்நாளில் 700 கீதை ஸ்லோககளை ஒரு முறை கூடப் படிக்காமல், கீதை பற்றி கேள்வி மட்டும் கேட்பர்! விநோதப் பிறவிகள்!!

 

இப்படிப்பட்ட வெளிநாட்டினர், மனு தர்ம சாத்திரத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிக் கதைப்பதே இல்லை. ரிக்வேதத்தில் கிலம் (பிற்சேர்க்கை), தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பிற்சேர்க்கை, சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் எல்லாம் பிற்சேர்க்கை என்று கதைக்கும் மாக்கள், மனு தர்ம சாத்திரம் பற்றி வாயே திறக்கா!. இதை அப்படியே எடுத்துக் கொண்டால்தான் சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை எடுத்துக்காட்டி இந்து மதத்தை அழிக்கலாம் என்று நம்பினர் அந்தப் பேதைகள்.

 

உண்மையில்; சூத்திரருக்கு எதிரான பகுதிகள் சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் இடை யில் செருகப்பட்டவை.

 

இதற்கு என்ன ஆதாரம்?

 

கீழ்ஜாதிப் பெண்ணான, வசிட்டரின் மனிவியான அருந்ததியைப் புகழும் மனு, எல்லா ஜாதிகளிலும் உள்ள ரத்தினம் போன்ற பெண்களைக் கல்யாணம் செய்யலாம் என்பார். அது மட்டுமல்ல கீழ் ஜாதியில் படித்தவன் இருந்தால் அவனிடம் போய்க் கற்று அவனுக்கு குருவுக்குரிய மரியாதை செய்க என்கிறார்.

 

உலகில் பெண்களை மனு புகழ்ந்த மாதிரி எந்த நாட்டு இலக்கியத்திலும் பெண்கள் புகழப்பட்டதை இன்று வரை காண முடியாது! ஆனால் பெண்களுக்கு எதிரான சில ஸ்லோகங்கள் இடைச் செருகலாக சொருகப்பட்டுள்ளன. இத்தகைய முரண்பாடுகளே மனு தர்ம சாத்திரத்தில் இடைச் செருகல் உண்டு எனக்காட்டி நிற்கின்றன. ஆனால் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’ மனுதர்மத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிப் பேசவே இல்லை. இது உலக மஹா அதிசயம்! ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் கூட இடைச் செருகல் உண்டு என்று சொல்லும் இந்த “யோக்கியர்கள்” மனுவில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு தாக்குவர்.

திராவிடக் கோமளிகள் திருக்குறளையே முழுதும் படிப்பதில்லை. மனுவையா படிக்கும்?

 

அதிசயம் 7 (Water Origin of Life on earth)

 

கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர்,  தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுவார். ( 1- 8 முதல் 10 வரை).

 

உலகில் தண்ணீர் தோன்றிய பின்னரே உயிரினம் தோன்றின என்ற விஞ்ஞான உண்மையும், தண்ணீரில் முதல் உயிர் தோன்றியது என்ற விஞ்ஞான உண்மையும், உலகம் முழுதும் கோள வடிவமானது (முட்டை) என்ற விஞ்ஞான உண்மையும் மனுவின் ஸ்லோகங்களில் பொதிந்து கிடப்பதை சொல்லத் தேவை இல்லை.

 

தொடரும்……………

 

Please read my earlier posts:–

Mystery of Manu: Rig Veda Mystery No.8, posted on 19 January 2015

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshvaku Dynasty, posted on 19 November 2011

 

Sanskrit words in Sumerian Culture: Sumukan Mystery, posted on 12 May 2014)

 

–சுபம்–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11 (Post No.3039)

buddha museum

Article Written S NAGARAJAN

Date: 6th  August 2016

Post No. 3039

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11

ச.நாகராஜன்

 

சிரித்தவாறே விடை பெற்ற ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்து டெங்சாங் என்ற இடத்தை அடைந்தார். அது பர்மாவின் எல்லையில் உள்ள நகரம். அங்கு தனது ஆலயத்திற்காக நிதி திரட்ட முனைந்தார் ஸு யுன்.

 

ஹுனான் கில்ட் ஹால் என்ற இடத்தில் தன் பைகளை அவர் வைக்கும் முன்னரே சிலர் அவரிடம் வந்து அவரை வணங்கினர்.

 

“பூஜ்யரே! எங்களுக்கு சூத்ரங்களைக் கேட்க ஆவலாக உள்ளது” என்றனர்.

 

“இங்கு சூத்திரங்களைச் சொல்வதற்காக நான் வரவில்லை” என்றார் ஸு யுன்.

“உங்களைப் போன்ற துறவிகள் சூத்திரங்களைச் சொல்வது வழக்கம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார் அவர்களில் ஒருவர்.

 

“இந்தப் பகுதியில் உள்ள துறவிகளின் பழக்கம் பற்றி நான் ஒன்றுமே அறியேன்” என்றார் ஸு யுன்.

 

உடனே கில்ட் ஹாலின் தலைவர் இடைமறித்துக் கூறினார்”

“அன்புள்ள ஐயா! நீங்கள் இவர்களுக்காக சூத்திரங்களை நிச்சயம் சொல்ல வேண்டும். இவர்கள் புனிதர் என்று அழைக்கப்படும் ‘வூ’ வின் வம்சாவளியினர். அவர் 80 வயது வரை வாழ்ந்தவர். பல டஜன் குழந்தைகளைப் பெற்றவர்.  அவ்ர்களில் பல பண்டிதர்கள் உண்டு. அந்தப் பெரியவர் சில நாட்களுக்கு முன்னர் தான் காலமானார். இறப்பதற்கு முன்னால் தான் முன் பிறப்பில் ஒரு துறவியாக இருந்ததாகவும், தான் இறந்த பின் துறவிக்குரிய ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள யாரும் அழக்கூடாது என்றும் எந்த ஒரு மிருகத்தையும் இறந்ததையொட்டி விருந்திற்காகக் கொல்லக் கூடாது என்றும், அங்கிருக்கும் டாயோயிஸ்ட் பண்டிதர்கள் யாரையும் ஈமச் சடங்கிற்காக அழைக்கக் கூடாது என்றும் கூறினார்.

 

 

ஒரு பெரிய துறவி இங்கு வருவார் என்றும் அவர் தன்னை  முக்தி பெறச் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டவுடன் மறைந்த அந்தப் புனிதரின் இல்லத்திற்கு வர சம்மதித்து ஸு யுன் அங்கு சென்று அவரின் ஆன்மா சாந்தியடையவும் பசியோடிருக்கும் ஆவிகளின் பசிக்கு உணவாகவும் சூத்திரங்களை ஓதினார்.

gautam-buddha-PZ98_l

அந்த மாவட்ட அதிகாரிகள் அனைவரும் ஒருங்கு திரண்டு வந்து ஸு யுன்னிடம் அவர் அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினர்.

ஆனால் ஸு யுன் தான் காக் ஃபுட்டில் உள்ள ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிதி திரட்டவே அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

 

இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள் கணிசமான நிதியைத் திரட்டி அவரிடம் கொடுத்தனர்.

 

ஸு யுன் தனது மலைக்குத் திரும்பினார். அங்கு ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தார். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி வழங்கினார். அவர்களுக்குத் தியானப் பயிற்சியை அளித்து ஒழுக்க முறைகளைக் கற்பித்தார்.

 

புத்தமத நெறிகளை போதித்தார்.

 

அந்த வருடம் ஆண் பெண் என இருபாலார் மற்றும் துறவிகள் என்று எண்ணிக்கை எழு நூறைத் தாண்டியது.

இந்த ஆலயத்தின் நெறிகளையும் செயல்பாட்டையும் பார்த்த ஏனைய மலையில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் இதே நெறிகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தொடங்கின.

 

 

துற்வற ஆடைகளை முறைப்படி அங்குள்ள துறவிகள் அணிய ஆரம்பித்தனர்.

 

அனைவரும் ஸு யுன்னிடம் வந்து அவரது ஆலயத்தில் தங்கி அவரது போதனைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

 

ஸு யுன்னுக்கு 65 வயது நிறைவடைந்தது.

***********.

 

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

av3

Article Written S NAGARAJAN

Date: 3rd  August 2016

Post No. 3030

Time uploaded in London :– 8-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

வேத நெறி

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

ச.நாகராஜன்

rigveda_front

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் அன்புக் கட்டளை!

 

மனதால் சந்தோஷம்

வாக்கால் சந்தோஷம்

சரீரத்தால் சந்தோஷம்

 

 

இந்த மூன்று வகை சந்தோஷங்களையும் அடைந்து விடு என்று அறைகூவுகிறது வேதம்.

இப்படி ‘சந்தோஷ அறைகூவலை’ உலகில் வேறு எந்த ஒரு நூலுமே ஆதி காலத்திலேயே விடுத்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை.

உண்மையான சந்தோஷத்தை அடையும் விதத்தையும் அது விளக்குகிறது.

சந்தோஷம் என்ற பதத்தை அப்படியே வேதம் கூறவில்லை.

ஆனால்

 

 

தோஷமானா:  (யஜுர் வேதம்)

துஷயந்தி      (ரிக் வேதம்)

தோஷதமா:    (ரிக் வேதம்)

என்று இப்படி பல விதங்களில் கூறுகிறது.

தர்மார்த்த காம எனப்படும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று வித  புருஷார்த்தங்களால் நியாயமான வழியில் பொருளைத் தேடு என்கிறது அது.

 

 

அதிக பணம் வந்தாலும் சரி, குறைவாகப் பணம் வந்தாலும் சரி,  அதிக மகிழ்ச்சியையோ அல்லது  அதிக துக்கத்தையோ அடையாதே என்று அது கூறுகிறது.

உழுது பிழை; உழைத்துப் பிழை என்பது யஜுர் வேதம் கூறும் அறிவுரை!

 

பதஞ்சலி முனிவரும் வேத வழியில் நின்று வாழும் சந்தோஷத்தின் பலன் உத்தமமான சுகத்தை அடைவதே என்கிறார்,

 

சந்தோஷத்தை மூன்று வகையாக விள்க்குகிறது வேதங்கள்.

மானஸிக சந்தோஷம் – மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

வாஸிக சந்தோஷம் – வாக்கினால் ஏற்படும் சந்தோஷம்

சாரீரிக சந்தோஷம் – உடலால் ஏற்படும் சந்தோஷம்

ஆக இப்படி சந்தோஷத்தை ஒவ்வொருவரும் மூன்று வகையாக அடைய முடியும்!

 

the vedas

 

மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

‘சூதாடி வரும் பணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அது பாவம்’ என்று நண்பனுக்குக் கூறும் அறிவுரையாக வேதம் கூறுகிறது.

 

தியாகம் செய்வதன் மூலமாக சுகம் பெறலாம் என்ற ரகசியத்தை அது விளக்குகிறது.

(தேன த்யக்தேன புஞ்ஜீயா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்!)

சோம்பேறியாக இருக்காதே; அதிர்ஷ்டத்தினால் உன்னிடம் இருக்கும் பணத்தால் ஆனந்தப்படாதே, உழைப்பினால் வருவதே செல்வம் என்றும் அது விளக்குகிறது.

 

 

வேத சம்ஹிதைகள் போலி சந்தோஷத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் இப்படி இனம் பிரித்து நன்கு காட்டுகின்றன!

உண்மையாக பணம் சம்பாதிக்கும் போது மனதில் உண்மை சந்தோஷம் ஏற்படுகிறது; அது நிலைக்கிறது.

 

 

வாக்கால் ஏற்படும் சந்தோஷம்

 

அடுக்குமொழி வசனங்க்ளை அள்ளி வீசுவதை வேதம் ஆதரிக்கவில்லை.

 

அனுத்வேககரம் வாக்யம் சத்யம் பிரியம் ஹிதம் (கீதை)

அடுத்தவருக்கு ஆத்திரம் ஊட்டாத வார்த்தைகள்

உண்மையான வார்த்தைகள்;

 

அடுத்தவருக்கு பிரியமான வார்த்தைகள் (உண்மையாக இருந்தாலும் அடுத்தவரைப் புண்படுத்தினால் அதைப் பேசாதே) அடுத்தவருக்கு ஹிதமான வார்த்தைகள்

இவற்றையே பேச வேண்டும்.

 

வாசம் வததி சாந்திவாம் – அதர்வண வேதம்

வாசம் வதத் பத்ரயா  – அதர்வண வேதம்

 

ம்ங்களம் பொருந்திய மதுரமான வாணி, சாந்திமயமான வார்த்தைகள் இவ்ற்றையே அதர்வண வேதம் வலியுறுத்துகிறது.

 

 rig

சரீரத்தால் ஏற்படு சந்தோஷம்

 

காம குரோதங்களால் ஏற்படும் திருட்டு, ஹிம்சை, விபசாரம் இவற்றை விட்டு விடுக.

அடுத்தவருக்கு சேவை செய்க

நல்ல கர்மங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருக (நடைமுறைப்படுத்துக) என்கிறது வேதம்.

 

 

சந்தோஷம் பரமாஸ்வாய சுகார்த்தீம் ச்மயதோ பவேத்

ச்ந்தோஷமூலம் ஹி சுகம் துக்கமூலம் விபர்யய: (மனு 4 -12)

வெறுப்பு, ஆசை, பொறாமை ஆகியவற்றை விடுத்து சந்தோஷத்துடன் உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை மூலம்; மாறாக இவற்றை விட்டு விட்டு வாழ முற்படுவதே துக்கத்தின் மூலம் என்கிறார் மனு.

 

இன்னும் இராமாயணம் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் வேத வழியை விரிவாகக் கூறி சந்தோஷம் பெறும் வழியைக் சுட்டிக் காட்டுகின்றன.

 

ஹிந்து மதம் காட்டும் வாழ்க்கை நெறியே அலாதியானது. அநாதி காலம் தொட்டு இருந்து வருவதும் கூட!

**********

 

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Hermann's tortoise shutterstock_78129739

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3028

Time uploaded in London :–  6-26 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை  (தித்தியம் ஆமை )  பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

yaha kunda

 

“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”

பாடல் வரி கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!

 

நான் கண்ட புதுப் பொருள்:-

யாக குண்டம் கட்ட  செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில்   எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.

 

யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.

தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை.  மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள  மற்றொருவிதமாகவும் இருக்கும்..

 

நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.

கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.

ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.

ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

tortoise

அகநானூற்றுப் பாடலின் பொருள்

இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.

இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!

சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட  யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!

ஆமை ரகசியம் அம்பலமானது!

buildings

சிந்து சமவெளி செங்கற்கள்!

சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில்  காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.

மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.

முந்தைய கட்டுரை/ Previous Article

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan

Date: 7 March, 2016

–subham–

 

 

 

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–

கீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்!(Post No.3025)

34thjagadguru

Article Written S NAGARAJAN

Date: 1st August 2016

Post No. 3025

Time uploaded in London :– 5-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை

முன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று!

 

கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

 

ச.நாகராஜன்

 

அறிஞர்கள் போற்றும் கீதை

கீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.

மஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்”  (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.

 

 

கீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.

 

ஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.

 

தினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.

sringeri 14a

sringeri Sharda Peetham temple to the right and the vidyashankara temple in sringeri. credit T. NARAYAN

 

ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்

 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.

 

 

34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று!

சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.

 

 

அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.

 

 

சிறந்த உளவியல் நிபுணரான அவர்  ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன  முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு  முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.

 

அவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே!” என்றார்.

 

 

திகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.

“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா?” என்று ஆசார்யாள் வினவினார்.

 

 

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

 

 

கண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.

 

sathyamurthy

சத்தியமூர்த்தியின் சந்தேகங்கள்

 

மைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று  மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.

 

 

இதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.

 

அவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய

ஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.

பின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று!

 

சத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பாஷணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,

 

 

ஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.

 

 

இதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.

 

 

சத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:

 

  • அர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே

 

பதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.

  • கர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே

 

பதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.

  • முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே!

 

பதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை  முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.

 

 

கேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா? அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா?

பதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.

 

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.

 

 

காலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்!

*************

 

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா?- 2 (Post No.3013)

Bishop-offers-cake

Article Written S NAGARAJAN
Date: 28 July 2016
Post No. 3013
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(First Part was published on 26th July 2016)

செகுலரிஸம் சரியா? -2
ச.நாகராஜன்
இந்திய சரித்திரத்தைச் சற்று ஆழ்ந்து படித்தால் ஒன்று தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
ஒரு நாளும் ஹிந்துக்கள் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.
எந்த ஒரு தனி நபரையும் வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாற்றியதில்லை.
எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு ஸ்தலத்தையும் இடித்ததில்லை.
அடுத்த மதத்தினரின் இடங்களைப் பிடுங்கியதில்லை
அழித்ததில்லை. அதில் ஹிந்து கோவில்களைக் கட்டியதில்லை.

 
‘உங்கள் மதம் எதுவானாலும் அதை அப்படியே கடைப் பிடியுங்கள்’ என்பது தான் எந்த ஒரு ஹிந்து ஆசார்யரின் அன்புரையாக இருந்திருக்கிறது.
ஆனால் மாறாக வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாரையோ அல்லது மதத்தைப் பரப்ப வந்த கிறிஸ்தவ பாதிரிகளையோ எடுத்துக் கொண்டால் கடைசியாக நமது சரித்திரம் இனம் காட்டும் அன்னை தெரஸா உட்பட அனைவருமே முதலில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பதை அறிய முடியும்.

 

vijyakanth_0
ஹிந்து பழக்க வழக்கங்களை ஒழித்தல், ஹிந்து ஆலயங்களை அழித்தல், ஒவ்வாத இதர மேலை நாட்டு பழக்க வழக்கங்களை வலுக் கட்டாயமாகத் திணித்தல் ஆகியவையே அவர்களின் வழி முறையாக இருந்தது.
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் தைரியமாக ‘வருகின்ற ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் நல்ல அறுவடை செய்யலாம் செய்யுங்கள்’ என்று சொல்லக் கூடிய அளவு ஹிந்துக்கள் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள் கூடவே வலி குன்றியும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்.
முகமதிய கலாசாரத்தை எடுத்துக் கொண்டு இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சமே பிளந்து விடும்.
எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன.
எத்தனை விக்கிரஹங்கள் நொறுக்கப்பட்டன.
வாள் முனையில் மதமாற்றம்.
ஹிந்துவாக இருந்தால் ஜஸியா வரி
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 
ஆக இந்தப் பின்னணியில் நமது அரசியல் சட்டம் செகுலரிஸம் பேசாமல் சமத்துவம் என்ற கொள்கையை ஏன் முன் வைக்கவில்லை?
அனைவருக்கும் ஒரே சட்டம்! ஒரே இந்தியா! சமூகச் சட்டம் ஒன்றாக இருக்கட்டும்.
மதங்களின் வழிபாட்டு முறைகள் தனிப்பட்டவரின் விருப்பப்படி இருக்கட்டும்!
இது இல்லையே!
கிறிஸ்தவர்களுக்கு தனி போர்டு
முஸ்லீம்களுக்கு தனி போர்டு.
அவர்களின் நிலங்களை சொத்துக்களை அவர்களே தனிப்பட்ட முறையில் பராமரிக்க, செலவழிக்க, வசூல் செய்ய உரிமை.
ஆனால் ஹிந்து ஆலயங்கள் என்றாலோ அரசியல் வாதிகள் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிடியில்!

 
ஆலயங்களில் வரக்கூடிய பக்தர்களின் காணிக்கையை ஆலய பூஜைக்கன்றி இதர் ஆயிரம் வழிகளில் செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆலயங்களின் நிலங்கள் இடங்கள் மூலமாக பல லட்சம் வருமானம் வர வேண்டிய இடத்தில் ஒரு பைசாவும் வருவதில்லை அதை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து தங்கள் விருப்பப்படி ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்கிறோம்!

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் விருப்பப்படி தங்கள் வழிபாட்டு ஸ்தலத்தைப் பராமரிக்க உரிமை கொடுக்கும் சட்டம் ஹிந்து கோவில்களில் அதிக வருமானம் உள்ள கோவிலகளின் பணத்தை அந்தக் கோவில்களின் பராமரிப்புக்கும் சரியாகச் செலவழிப்பதில்லை; சற்று வருமானம் குறைந்த கோவில்களின் பூஜைகளுக்கு ஆகம விதிகளின் படி செய்வதற்கான பணத்தையும் தருவதில்லை.
ஆன்மீகக் கோவில்களின் பணம் அரசியல்வாதிகளின் மனம் போன படி செலவழிக்க அனுமதி!

 
திராவிட தீய சக்திகள் இதைத் தானே விரும்புகின்றன. என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு – சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கத் துடிக்கும் ‘கண்மணிகள்’ அல்லவா அவர்கள்!
ஆக இந்த குறைபாடுகள் ஏன்?
ஒரே வரியில் சொல்லி விடலாம் – பிளவுபட்டுள்ளது ஹிந்து சமுதாயம் என்று!
இந்தப் பிளவு பட்ட சமுதாயத்தை ஒன்றாக்கி ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைக்கப்படும் போது இந்தியாவில் அரசியல்வாதிகளின் சதிராட்டங்கள் முடிந்து போகும்.

Christians
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்வர், ஒரு சட்டத்திற்குட்பட்டு!
ஹிந்துக்களின் ஆலயங்களும் சொத்துக்களும் அதற்கான வழியில் முறைப்படி கண்காணிப்புடன் பராமரிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே அரசியல் சாஸன சட்டம் அமையும்!
வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தில் ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் அறவே நீக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த ஹிந்துக்களை ஓரிழையில் இணைக்கும் பணியை யார் செய்வது?
அதற்கான அற்புதமான இயக்கமாக நமக்குத் தெரியும் ஒரே இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமே
இப்படி ஹிந்துக்களை இணைக்க, ‘ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்’ விடுவார்களா?
தடைகள், தடைகள், தடைகள்.
என்றாலும் இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்தே தீரும்.
சங்கம் வெற்றி பெற்றே தீரும்!
அப்போது அரசியல் சாஸனத்தின் செகுலரிஸம் உண்மையான சமத்துவத்தைக் கொண்டுள்ள வகையில் இருக்கும்!
இப்படி நம்பலாம்.
அதற்காக நம்மளவில் நாமும் ‘அணில் சேவை’ செய்வது போல சேவையைச் செய்யலாம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுப் பெறுவது ஒன்றே நாட்டின் சகல பீடைகளையும் ஒழிக்கும் ஒரே வழியாகும்!
********** முற்றும்