சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!(Post No.2930)

Article written by S NAGARAJAN

Post No.2930

Date: 30 June 2016

 

பாக்யா 1-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை 

 

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

ச.நாகராஜன்

 

“நகைச்சுவை இல்லாதவர் ஒரு நல்ல விஞ்ஞானியாக இருக்க முடியாது”;

– ஆண்ட்ரீ ஜிம்

நோபல் பரிசு என்றால் தெரியும், அது என்ன இக்நோபல் பரிசு என்று சிலர் குழப்பம் அடையலாம். சில வித்தியாசமான சோதனைகளை மேற்கொண்டு வெற்றி பெறும் விஞ்ஞானிகளுக்கும் சில குறிப்பிட்ட  நபர்களுக்கும் தரப்படும் பரிசு தான் இக்நோபல் பரிசு!

Ignoble – இக்நோபிள் என்ற ஆங்கில வார்த்தைக்கு அகௌரவமான என்று அர்த்தம். இந்த வார்த்தையின் ஒலி அமைப்பை ஒத்திருக்கும் இக்நோபல் பரிசு  இந்தப் பொருளில்  வழங்கப்படவில்லை.

இது விஞ்ஞானிகளையோ அல்லது அவர்களை மதிப்பவர்களையோ கேலி செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்படவில்லை.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோதனைகளைச் செய்பவரை ஊக்குவிக்கவே இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு பத்து வித்தியாச்மான நபர்களுக்கு இது தரப்படுகிறது.

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத் துவக்கத்தில் நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழாவில் நோபல் பரிசு பெற்றோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பரிசு பெறத் தகுதியுள்ளவ்ர்களை ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது.

உங்களுக்குப் பரிசு பெறச் சம்மதமா என்று தேர்வு செய்யப்பட்டுள்ளவரின் சம்மதத்தையும்  முன்னதாகவே கேட்டுப் பெறப் படுகிறது. இந்தப் பரிசு வேண்டாம் என்று சொல்வோரின் பெயர்களைப் பெரும்பாலும் பட்டியலிலிருந்து நீக்கி விடுவர்.

இந்த இக்நோபல் பரிசு பெற்ற ஒரு இயற்பியல் விஞ்ஞானி நிஜ நோபல் பரிசையும் பெற்று விட்டார்.

அவர் பெயர் ஆண்ட்ரி ஜிம் (Andre Geim).

 

ரஷியாவிலே பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்ற அவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்.

தனது இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தவிர வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் சில விசித்திர ஆராய்ச்சிகளைப் பொழுதுபோக்காக அவர் செய்வது உண்டு. இந்த ஆராய்ச்சிகளை ஃப்ரைடே நைட் எக்ஸ்பெரிமெண்ட்ஸ் என்று அவர் விளையாட்டாகச் சொல்வது வழக்கம்.

அவருக்கு காந்த சக்தியின் மீது சற்று ஆர்வம் உண்டு. நெதர்லாந்தில் ராட்பௌட் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றுகையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு விலை உயர்ந்த இயந்திரம் ஒன்றில். எலக்ட்ரோ மாக்னடிக் சக்தியை முழு அளவில் வைத்தார். அதில் செங்குத்தாக இருந்த துளையில் தண்ணீரைக் கொட்டினார். என்ன ஆச்சரியம், நீர் உள்ளே செல்வது தடைப்பட்டதோடு அதிலிருந்து சில குமிழிகள் தோன்றின.

உடனே ஆண்ட்ரீக்கு தண்ணீருக்கு காந்த சக்தி பாதிப்பு சிறிதளவு உண்டோ என்று சந்தேகம் வந்தது..

 

இதை எப்படி நிரூபிப்பது. அந்த சிக்கலான இயந்திரத்தின் துளையில் நீரை விட்டு ஒரு தவளையைப் போட்டார். காந்த சகதியை முழு அளவுக்குக் கொண்டு வந்த போது அந்த தவளள  மேலே மிதக்க ஆரம்பித்தது.

உடனடியாக இந்தக் கண்டு பிடிப்பை 1997ஆம் ஆண்டு பிஸிக்ஸ் வோர்ல்ட் என்ற விஞ்ஞான இதழில் வெளியிட்டார். இது ஏப்ரல் மாதத்திய முட்டாள் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட கட்டுரை என்று பலரும் தமாஷாகச் சிரித்தனர். ஆனால் அவர் இது உண்மையான சோதனை தான் என்பதை விளக்கினார், இதற்காக   2000ஆம் ஆண்டு இக்நோப்ல பரிசு பெற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது தான் அனைவரும் சோதனையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டனர்.

 

அவரது வெள்ளிக்கிழமை இரவு சோதனைகளில் தவளை சோதனனயைத் தவிர இன்னும் இரு சோதனைகளும் அவருக்கு வெற்றியைத் தந்து புகழையும் தந்தன.

 

இதில்  மூன்றாவது சோதனை தான் க்ராபீன் (graphene)என்ற உலோகத்தைப் பற்றியது. இதை அவர் ஆய்வுப் பேப்பராக வெளியிடுகையில் நேச்சர் பத்திரிகை  இரு முறை நிராகரித்து விட்டது.

ஆனால் 2010ஆம் ஆண்டில் க்ராபீன் ஆராய்ச்சிக்காகத் தான் அவர் நோபல் பரிசையும் பெற்றார்.

இந்த இக்நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிச் சற்று தெரிந்து கொண்டால் பரிசு அளிப்பதன் நோக்கம் நன்கு விளங்கிவிடும்.

வேறு துறைகளில் இக்நோபல் பரிசு பெற்ற இன்னும் இருவரைப் ப்ற்றிப் பார்ப்போம்.

பெலாரஸ் நாட்டின் அதிபரும் சர்வாதிகாரியுமான அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோவிற்கு 2013 இல் அமைதிக்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அவர் பிறப்பித்த விசித்திரமான உத்தரவு தான் இதற்குக் காரணம். பொது இடங்களில் கை தட்டக் கூடாது என்று கைதட்டலுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தார் அவர்.

2012ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான இக்நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது தெரியுமா? அமெரிக்க அரசின் ஜெனரல் அக்கவுண்டபிலிடி அலுவலகத்திற்குத் தான். அந்த அலுவலகத்தின் இலக்கிய சாதனை என்ன? அது அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளுக்கான ஒரு அறிக்கையை பரிந்துரை செய்தது தான். அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளைப் பற்றி ஒரு அறிக்கை தயார் செய்யுமாறு அது உததரவிட்டதற்காக இந்த இலக்கிய இக்நோபல் பரிசு (The US Government General Accountability Office, for issuing a report about reports about reports that recommends the preparation of a report about the report about reports about reports.)

இக்நோபல் பரிசு பெற்றோரைப் பற்றியும் அதற்கான காரணங்களையும் பற்றிப் படித்தால் சிரிப்பு பொங்கி வரும். ஆனால் பின்னர் சிந்திக்கவும் செய்வோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

விஞ்ஞானிகளிலேயே சற்று குஷியான விஞ்ஞானி என்று சொல்லக் கூடியவர் நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான ஆர்தர் எல். ஷாலோ (Arthur L. Schawlow) என்பவர் தான்! (தோற்றம் 5-5-1921 மறைவு 29-4-1999)

தனது 78வது பிறந்தநாளுக்குச் சில நாட்களுக்கு முன்னர் மறைந்த அவர் தன்னைப் பற்றி “நீங்கள் சந்தித்தவர்களிலேயே போட்டியற்ற ஒரே மனிதர் நான் தான்!” என்று விளையாட்டாகக் கூறுவது வழக்கம். அனைவருடனும் மிகவும் இணக்கமாகச் செயல்படும் சந்தோஷமான மனிதர் அவர்.

அவருக்கு 1981ஆம் ஆண்டு நோபல் பரிசு  கிடைத்ததும் ஸ்வீடனுக்குப் பரிசைப் பெறச் சென்றார். சாதாரணமாக பரிசு பெறுவோர் ஸ்வீடன் மன்னரைப் பார்க்கும் போது அவருக்கு நினைவுப் பரிசாக ஏதேனும் ஒன்றை வழங்குவது மரியாதை நிமித்தமான ஒரு மரபாகும்.

மன்னருக்கு என்ன பரிசை  ஷாலோ வழங்கியிருப்பார்? வெள்ளித் தட்டா? தங்கக் கோப்பையா? எதுவுமில்லை.

60 வயது ஆன புரபஸர் ஷாலோ கலிபோர்னியாவிலிருந்து கொண்டு சென்று ஸ்வீடன் மன்னரான பதினாறாம் கார்ல் குஸ்டாஃபிற்கு கொடுத்தது ஒரு அளவு பார்க்கும் ஸ்கேல். அதாவது ஆங்கிலத்தில் ரூலர் என்று சொல்வோமே அது. ரூலருக்கு ஒரு ரூலர் என்றார் அவர். (A ruler for a ruler). ரூலர் என்றால் ஆட்சி புரிபவர் என்றும் அர்த்தம் உண்டல்லவா. ஆகவே ரூலருக்கு ஒரு ரூலர் என்று சொன்னதும் அனைவரும்  மகிழ்ந்தனர். மன்னரும் தான்!

அவரது கள்ளங்கபடில்லாத எளிய நகைச்சுவை உணர்வுடன் கூடிய படாடோபமற்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அனைவருமே ரசித்து வந்தனர்!

 

***********

 

 

மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை! (Post No.2924)

Stephen Hawking

rticle Written by S Nagarajan

Date 27th June 2016

Post No.2924

 

பாக்யா 24-6-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!
ச.நாகராஜன்

“30 நாட்களில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் உங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” – ஜீனியக்ஸ் மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனி

உலகின் புரட்சிகரமான மாத்திரை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. பெயர் ஜீனியக்ஸ் (Geniux) .இதைப் பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரப்ல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் கூறுகையில், “இது மனித குலத்தையே மாற்றப் போகிறது” (This pill will change humanity) என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 
ஸ்டீபங் ஹாகிங் நரம்பு மண்டலக் கோளாறினால் பேச முடியாமல் அவஸ்தைப் படும் நோயாளி என்பதை உலகமே நன்கு அறியும்.
மூளையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க விரும்பும் அவர் இப்படிப்பட்ட நற்சான்றிதழை ஒரு மாத்திரைக்குத் தந்துள்ளார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
தனது மூளை முன்பை விட கூர்மையாக செயல் பட ஜீனியக்ஸ் தான் காரணம் என்று கூறும் அவர், “மூளையானது ஒரு தசை போல. நீங்கள் அதை செயல்படுத்த சில துணைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்” என்கிறார். இந்த மாத்திரையை உட்கொண்ட டாம் பிராடி என்ற விளையாட்டு வீரரும் கன்யே வெஸ்ட் என்ற இசைக் கலைஞரும் இதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாத்திரையே தனது வணிகத்தில் தான் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
“இது ஒரு மாயாஜால மாத்திரை (This pill is the real magic) என்பது அவரது புகழுரை!
இதை உட்கொள்வது பாதுகாப்பானது தானா? இதற்கு பதிலை, ஏழு வருட கால ஆய்வுக்குப் பின்னர் இந்த மாத்திரையை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இது நுண்ணறிவைக் கூட்டுகிறது. “இதைச் சாப்பிட்டவுடன் வானத்தை மறைத்திருக்கும் மேகக் கூட்டம் விலகுவது போல இருக்கிறது; மூளை கூர்மையாகிறது” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் ரோஸன்ஹ்வுஸ் (Dr Rosenhouse), “இந்த மாத்திரையில் மூளைக்குத் தேவையான வைட்டமின்களும், இதர முக்கிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உடனடி நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல், பிரச்சினனகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட அனைத்து மூளை சக்தியையும் வழங்குகிறது” என்கிறார்.
பூமியில் மனித குலத்தை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் மாத்திரை இது என்கிறது ஆய்வுக்குழு.
இதைத் தயாரிக்கும் நிறுவனம் 5 பாட்டில்கள் மாத்திரைக்கு 100 டாலர் (சுமார் 6600 ரூபாய்) என விலையை அதிகமாக நிர்ணயம் செய்துள்ளது. என்றாலும் விற்பனை அமோகம் தான்! .
ஆய்வு மைய சோதனைகள் கீழ்க்கண்ட பலன்களை உறுதிப்படுத்தியுள்ளன :
கவனக்குவிப்பை 312 சதவிகிதம் அதிகரிக்கும்
படைப்பாற்றலை ஊக்குவிக்கும்
ஆற்றலை அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரித்து எதையும் உடனடியாக நினைவு கொள்ளும்படி செய்கிறது
நுண்ணறிவை 77 % அதிகரிக்கிறது.

ஜீனியக்ஸின் சூடு பறக்கும் விற்பனைக்கு சில விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இதன் விலை மிகவும் அதிகம்
இதில் உள்ள 19 மூலப் பொருள்களில் ஒன்றை மட்டுமே நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற 18பொருள்கள் என்னென்ன? இவற்றில் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த மாத்திரைக்கு பதிலாக தினமும் எட்டு மணி நேர உறக்கம், ஆரோக்கியமான உணவு, அளவான தினசரி உடற்பயிற்சிகள் போதுமே. மூளை நன்கு செயல்படுமே!” என்று இதை எதிர்க்கும் விமரிசகர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

ஜீனியக்ஸை உட்கொண்ட ஒருவர் எனது வேலைத்திறன் மிக அதிகமானது உண்மை. ஆனால் தூக்கம் போச்சு என்று அலட்டிக் கொள்கிறார். ஒரு மாணவரோ, “ ஐந்து பக்க ஆய்வுக் கட்டுரையை மூன்றே மணி நேரத்தில் முடித்து விட்டேன். ஜீனியக்ஸின் சக்தி அபாரம்”, என்கிறார்.
இதைப் பயன்படுத்திய ஒருவர் “எந்த இலட்சிய இலக்கை நான் நிர்ணையித்தாலும் அதை உடனே முடித்து விடுகிறேன். இனி பெரிய லட்சியம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது தான்!” என அங்கலாய்க்கிறார்.
உச்ச பட்ச புகழ் மொழியாக இதை “மூளையின் வயாக்ரா” என்று சொல்லிப் புகழ்கின்றனர், இதனால் பயன் பெறுவோர்!

எது எப்படியென்றாலும் ‘ஸ்மார்ட் பில்’ என்று அறிமுகப்படுத்தப்படும் ஜீனியக்ஸின் வருகை எதிர்கால மனித உலகை மாற்றப்போகும் மருந்துகளுக்கு ஒரு முன்னோடி என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி ஃபெடொரோவிச் ஈகோரோவ் (Dimitri Fedorovich Egorov) பிரப்லமான கணித மேதை. (தோற்றம் 2-12-1869 மறைவு 10-9-1931)ரஷியாவில் கணித சங்கத்தின் தலைவராக இருந்த இவரை அனைவரும் பெரு மதிப்புடன் போற்றுவர். இவருக்கு கணித நூல்களின் மீது எவ்வளவு பற்றோ அவ்வளவு பற்று பைபிளின் மீதும் உண்டு. தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமாகப் பங்கேற்பார். ஆனால் ரஷிய புரட்சி தோன்றியவுடன் மார்க்ஸீய புரட்சிவாதிகள் இவருக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். கணித சங்கக் கூட்டத்தில் மதவாதிக்கும் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வியை எழுப்பினர். இதனால் பெரிதும் மனம் நொந்து போனார் அவர். தேவாலயங்கள் மாணவர்களின் உடற்பயிற்சிக்க் கூடங்களாக மாற்றப்பட்டன. வெவ்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்து விட்டார்.
மாஸ்கோவில் சிவில் எஞ்ஜினியரிங் இன்ஸ்டிடியூட்டில் கணிதம் கற்பித்து வந்த அவரை மார்க்ஸீயவாதியான எர்னஸ்ட் கோல்மேன் என்பவர் “மாணவர்களைக் கவரும் அபாயகரமான மதவாதி” என்று ஏசினார். இதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தப் பணிக்கு நிகொலாய் கிரிகோரிவிச் செபொடார்யோவ் (Nikolai Grigorievich Chebotaryov) என்னும் மேதை நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு எப்படி அந்தப் பணி கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்ட போது திடுக்கிட்டார். மாமேதையான ஈகோரோவுக்குப் பதிலாகத் தானா என்று திடுக்கிட்ட அவர் அந்தப் பணியை ஏற்க மறுத்து ராஜிநாமா செய்து விட்டார்.
அடுத்து 1930ஆம் ஆண்டு கணித சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். “பழ்மைவாதியான” அவரை புரட்சி அர்சாங்கம் சிறையில் அடைத்தது. சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மாமேதை. நாளடைவில் அவரது உட்ல் நலிந்தது. அங்கு சிறையில் டாக்டராக இருந்தவர் செபொடார்யோவின் மனைவி. மரியா.
அவர் மாபெரும் கணித மேதையைச் சிறையில் கண்டு திடுக்கிட்டதோடு அவர் இருந்த நிலையைப் பார்த்து வருந்தினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடையை மரியா மேதையின் சவத்தைத் தன் வீட்டிற்கே எடுத்துச் சென்று தன் கணவருடன் அவருக்கு ம்ரியாதை செலுத்தி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.
மாபெரும் மேதையான அவர் இன்றும் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
*********

 

இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917)

newscientist-30602015feb13

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2917

 

Time uploaded in London :– 8-33 AM

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

‘நியூ ஸயின்டிஸ்ட்’ NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் இந்த வாரம் ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ‘இறந்தபின்னும்” நம்முடைய ஜீன்கள், அதவது மரபணுக்கள் கொஞ்ச நேரத்துக்கு உயிர்வாழ்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

 

இதை நம்முடைய யோகிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, இந்துமதத்தின் அறிவியல் பின்னணியை நன்கு விளக்கும்.

 

இறந்து போன மீன்களின், சுண்டெலிகளின் ஜீன்களை ஆராய்ந்ததில் அவைகளின் மரபணுக்கள் இரண்டு நாட்களுக்கு உயிரோடிருந்தது தெரிய வந்தது.

 

ஒருவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் அறிவித்த பின்னரும் இப்படி ஜீன்கள்/ மரபணுக்கள் வாழ்வதால் அவர் ‘இறந்தது’ உண்மையா? சட்ட பூர்வமானதா? என்ற புதிய கேள்விகளை இது எழுப்பும். இறந்து போனவர்களின்  மாற்று உறுப்புக்ளை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் புதிய அணுகுமுறை வரும்.

 

சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் நோபிள்ஸ் நடத்திய ஆய்வில் மீன்களின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் 548 ஜீன்களும், எலிகளின் 515 ஜீன்களும் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னரும் உயிரோடிருந்ததைக் கண்டார். நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் , செத்துப் போன பின்னர் அவர்களின் உடலில் 12 மணி நேரத்துக்கு பல ஜீன்கள் சுறு சுறுப்புடன் செயல்பட்டதையும் கண்டார்.

2kanchi on mat

எனது கருத்து:-

நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் விஷயத்திலேயே 12 மணி நேரத்துக்கு மரபு அணுக்கள் உயிரோடிருக்குமானால், வாழ்நாள் முழுதும் யோகம், ஆசனம் செய்தவர்களின் உடலில் இறந்த பின்னரும் ஜீன்கள், சுறுசுறுப்புடன் செயல்படுவதில் வியப்பில்லை.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற முஸ்லீம் பெரியவரின் வாழ்க்கையில் , அவர் புதைக்கப்பட்ட பின்னரும் , தானம் வாங்க வந்த புலவருக்கு, அவர் கை நீட்டி மோதிரத்தைக் கொடுத்ததாக அறிகிறோம். இதுபற்றி முன்னரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். மஹாபாரத அதிசயங்கள் பற்றிய கட்டுரையில் இறந்தவர்களின் உடலிலிருந்து, உயிர்கள் உண்டாக்கப்படதை எழுதிவிட்டேன்.

ஒரு யோகியின் சுய சரிதை என்ற புத்தகத்தில் பராஹம்ச யோகானந்தா(1893-1952) பற்றிய அதிசய செய்தி உள்ளது. அவர் இறந்து போய் இருபது நாட்களுக்குப் பின்னரும் அவர் உடல் அழுகவில்லை; அத்தோடு ஒளிவீசிக்கொண்டு திவ்ய தேஜசுடன் விளங்கியது என்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் மார்ச்சுவரி/ சவக் கிடங்கு டைரக்டர் ஹாரி டி.ரோவ் எழுதியுள்ளார்.

 

திருக்கோவிலுர் சுவாமி ஞானானந்தா சமாதி அடைந்த போது, அவர்களுடைய சிஷயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது; சுவாமிகள் அடிக்கடி சமாதி நிலைக்குச் சென்று 150 ஆண்டுகளாகியும் இறக்காததால், இந்த முறையும் இப்படி அதிசயம் நடக்குமோ என்று காத்திருந்தனர். ஆனாலப்படி சமிக்ஞைகள் ஏதும் வராததால், காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் (1894-1994) சென்று கேட்டனர். அவரும் சில நாட்கள் பொறுத்திருந்து அடக்கம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.

 

அதர்வவேத, ரிக் வேத மந்திரங்களில் மரணம் பற்றிய மந்திரங்களில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் உண்மை யென்று நிரூபிக்கப்படும். இவை எகிப்திய மரணப் புத்தகத்தில் (THE BOOK OF DEAD தி புக் ஆப் டெட்) உள்ளதைப் போல இருப்பதையும் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

 

ஒருவன் மரணம் அடைந்தவுடன் அவன் ஆவி உடலில் இருப்பதாகவும், சிதைத்தீ உடலில் பட்ட பின்னரே ஆவி வெளியேறும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

மேலும் 12 நாட்களுக்குப் பின்னரே அது பூமியைவிட்டு மேலுலகம் செல்லும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதனால்தான் உலகம் முழுதும் 13 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

 

உடலில் இருந்து வெளியேறும் ஆவிக்கு, இருளில் எங்கு செல்வது என்று தெரியாதாகையால், ஒருவர் இறந்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பதும் இந்துக்களின் வழக்கம். இதை மற்ற மதங்களும் பின்பற்றி மெழுகு வர்த்தி ஏற்றிவைக்கின்றனர். ஒருவர் இறந்த இடத்தில், இந்துக்கள் 12 நாட்களுக்கு விளக்கு ஏற்றிவைப்பதும் இதனால்தான். 13ஆவது நாளன்று ஆவி, இறந்த இடத்திலிருந்து மேலுலகத்துக்குப் பறந்துவிடும். கருடபுராணம் மற்றும் புரோகிதம் செய்துவைக்கும் பிராமணர்களின் செவிவழிச் செய்திகள் இதுபற்றி நிறைய தகவல்கலைத் தருவர். எதிர்காலத்தில் இவை அனைத்தும் விஞ்ஞான உண்மைகளாகி விடும்.

நியூ ஸைன்டிஸ்ட் – பத்திரிக்கையில் இப்போது வந்துள்ள செய்தி அதில் முதல் படி என்றால் மிகை இல்லை.

–சுபம்–

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

 

அதிசய மலர் மருந்துகள்! (Post No.2861)

flower medicine 3

Article written by S.NAGARAJAN

 

Date: 2 June 2016

 

Post No. 2861

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 flower medicine1

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 3-6-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ‘பாட்ச்’ மலர் மருந்துகள்!

ச.நாகராஜன்

 

மலர்கள் எப்போதும் மனிதர்களைச் சிறந்தவர்களாகவும் சந்தோஷமுடையவர்களாகவும் மற்றவருக்கு உதவி புரிவபவராகவும் ஆக்குகின்றன. அவை ஒளி பொருந்தியவை. அவை உணவாக இருக்கின்றன; அவை ஆன்மாவிற்கான மருந்தாகவும் அமைகின்றன” – லூதர் பர்பேங்க்          

 

உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்குவதில் மலர் மருந்துகள் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.

இந்த மலர் மருந்துகளைக் கண்டு பிடித்தவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.

டாக்டர் பாட்ச் (தோற்றம் 24, செப்டம்பர்1886 ;  மறைவு 27, நவம்பர் 1936) ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணர். பாக்டீரியா இயல் நிபுணரும் கூட.

ஒவ்வொரு மனிதரின் வியாதிக்கும் காரணம் உடல் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல; ஆத்மாவுடனும் சம்பந்தப்பட்டது என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி பிரபஞ்சம் முழுவதும அதிர்வுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் அறிந்து அதற்கேற்ப  மருந்து கொடுத்தால் அது பலன் அளிக்கும் என்றும் அவர்  நம்பினார்.

இயற்கை தந்துள்ள அரிய பல  மலர்களை அவர் ஆராய ஆரம்பித்தார். புலர் காலைப் பொழுதில் மலர்களின் பனித்துளிகளில் இருக்கும் மலரின் சக்தி வாய்ந்த சாரத்தை எடுத்து அவர் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் விளைவாக 38 வித  மலர் மருந்துகளை உள்ளுணர்வினால்  கண்டு பிடித்து அவர் தயார் செய்தார். மலர்களின்  சாரமான துளிகளை அதற்குச் சம்மான அளவு பிராந்தியுடன் கலந்து தன் கலவையை அவர்  முதலில் உருவாக்கினார். பின்னர் அதை  மேம்படுத்தி தன்  மலர் மருந்தைப் பக்குவப்படுத்தி பூரணமான மருந்தாக்கினார்.

இதில் குறிப்பான ஒரு மருந்தாக ரெஸ்க்யூ ரெமடி என்று ஒரு வகை உருவானது.

திடீரென எதிர்பாராத ஆபத்தில் சிக்கிய ஒருவரின் அதிர்ச்சியுற்ற நிலையை இந்த ரெஸ்க்யூ ரெமடி உடனடியாகப் போக்கும்.

இன்று வரை இது தனது அபூர்வமான் ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் ரீதியாக இந்த மலர் மருந்துகளின் சக்தியை ஆய்வு செய்த டாக்டர் எர்னஸ்ட் என்பவர் தனக்குக் கிடைத்த முடிவுகளின் படி அப்படி ஒன்றும் இவை சக்தி கொண்டவை அல்ல என்று கூறினார்.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மலர் மருந்துகளுக்கு சக்தி உண்டு என்று கூறுகின்றன.

குறிப்பாக உணர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன என்பது ஒரு சுவையான செய்தி.

‘ஃப்ளவர் எஸன்ஸ் சொஸைடி’ நடத்திய ஒரு ஆய்வில் ஆய்வு முடிவுகள் இவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைத் தெரிவிக்கின்றன! டாக்டர் ஜெஃப்ரி க்ராம் (Dr Jeffrey Cram) என்பவர் நுட்பமான ஆற்றல்களை இந்த மலர் மருந்துகள் உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.

நீருக்கு தகவல்களை ஏந்திச் செல்லும் அரிய தன்மை உண்டு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நீருடன் சக்தி வாய்ந்த மலரின் சாரமும் சேர்ந்து வியாதிகளைக் குணமாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த மலர்  மருந்துகள் முப்பத்தெட்டின் விலையும் அதிகம் இல்லை.

இவை ஏழை முதல் பணக்காரர் வரை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வாங்கிப் பயனடைய முடியும். அத்தோடு இந்த மலர் மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதலான செய்தி!

 

flower medicine2

மலர் மருந்துகளைத் தரும் ஒரு வைத்தியரிடம் ஒருவர் சென்றவுடன் அவரிடம் அவருக்குள்ள தொந்தரவு என்ன என்பதை அவர் வாய் மொழி மூலமாகக் கேட்டறியப்படுகிறது. அவரிடமிருந்து வெளி வரும் சொற்களை வைத்து அவரது மனநிலை நன்கு அறியப்பட்டு அதற்குத் தக மலர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து அக்ரிமனி என்பதாகும்.

பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு மலர் மருத்துவர் உடனடியாகத் தருவது ராக் ரோஸ் என்னும் ம்லர் மருந்து.

தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது செர்ரி ப்ளம்.

காதலில் தோல்வி என்றால் சிக்கரி.

அகம்பாவம், மண்டைக்கனம் போக வைன்.

இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் மிமுலஸ்

போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு வால்நட். தன்னம்பிக்கை  கூடுவதற்கு லார்ச். செல்வம் சேர கார்ஸ்.

ஒரு நோயாளிக்குத் தேவையானப்டி மலர் மருந்துகளில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ மருத்துவர் தேர்ந்தெடுத்துத் தருவதும் நடைமுறைப் பழக்கமாக இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.

கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஒய்ட்செஸ்நட் ம்ற்றும் க்ளிமாடிஸ்.

 

இப்படி மன நிலைகளுக்குத் தகுந்தபடி மருந்துகள் இதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

பத்தியம் இல்லாத விலை குறைவான மருந்து என்பதால் இதை பரீட்சித்துப் பார்ப்போரின் தொகை இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் மலர் மருந்துக் கடைகள் அதிகமாகி வருகின்றன; மலர் மருத்துவ நிபுணர்களும் பெருகி வருகின்றனர்.

மல்ர் மருந்துகள் இன்றைய உலகில் ஒரு அரிய வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல!

cycle

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1896ஆம் ஆண்டு ஐயோவாவைச் சேர்ந்த ஒருவரால் இசை சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இசைப் பெட்டி முன் சக்கர போர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க அது சுற்றும் போது ஒரு பல்சக்கரம் இசைப் பெட்டியை இயக்க வெவ்வேறு விதமான இசை ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் இதை வியந்து பார்த்தனர்.

இதற்கு  வெகு காலம் முன்பே 1824 ஆம் ஆண்டு வின்கெல் (M. Winkel) என்பவர் மெக்கானிகல் இசைப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அனைவரையும் அசத்தினார். அது தானாகவே இசையை அமைக்கும் என்ற அவர் பத்திரிகையாளர்களையும் விஞ்ஞானிகளையும் அழைத்துப் பரிசோதித்து மதிப்புரை எழுதச் சொன்னார்.  பிரெஞ்சு அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1824 பிப்ரவரி 2ஆம் தேதி  வந்து ஆராய்ந்து பார்த்து மெக்கானிகல் இசைப்பெட்டியின் உள்ளே ஒன்றும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வெவ்வேறு வித இசை அமைப்புகள் தானாக கம்போஸ் செய்யப்படுகின்றன என்றும் மதிப்புரை தந்தனர். பத்திரிகைகளும் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி எழுதின! இந்த இசைப் பெட்டியின் பெயர் கம்போனியம் (Componium)

அன்றே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பது சுவையான ஒரு செய்தி!

************

 

 

கடலுக்கடியில் சக்ரவாள மலை:கம்பன் தரும் தகவல் (Post No. 2830)

submarine mountains 1

Article written by London swaminathan

 

Date: 22 May 2016

 

Post No. 2830

 

Time uploaded in London :–   6-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sea-mounts

கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத் தொடர் பற்றி இந்திய இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழ், சம்ஸ்கிருத நூல்கள் இதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கடலுக்கடியில் வட்டமாக பூமியைச் சுற்றி இம்மலை இருப்பதாக மக்கள் நம்பினர். இதனால் இதை, புலவர் பெருமக்கள் உவமையாகக் கூட பயன்படுத்தினர்.

 

இப்பொழுது கடலடி மலைகளையும், கடற் படுகைகளையும் ஆராயும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாகிவிட்டதால் எளிதில் ஆராய முடிகிறது. கடலுக்கடியில் மிக உயரமான மலைகள் இருப்பதை கடலியல் ஆராய்ச்சியளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் நமது இலக்கியங்கள் வருணிப்பது போல இது வட்டமாகத் தொடர்ந்து இல்லாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு மலைத் தொடர்களாக இருக்கின்றன. இதைத் தான் நமது இலக்கியங்கள் சக்கரவாளம் என்று வருணிக்கிறது என்று சொல்லலாம்.

 

கடலடி ஆராய்ச்சிக் கருவிகள் இல்லாமலேயே, பூமி முழுவதும் எல்லா இடங்களிலும், கடலுக்கடியில் இப்படி ஒரு மலைத் தொடர் இருப்பதைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவை எண்ணி வியக்கலாம். கடற்பயணம் செய்த நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்திருக்கலாம்.

 

இதோ கம்பன் சொல்லும் உவமை:

தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து

ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்

நேமி மால் வரைநெருக்குகின்றதே

ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்

-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

 

கவந்தனின் கைகள் வளைத்ததை, சக்கரவாக மலை நெருக்கியதற்குக் கம்பன் ஒப்பிடுகிறார். மக்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தால்தான் புலவர்கள் அதை உவமையாகப் பயன்படுத்துவர். ஆகவே மக்களுக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருந்தது என்றே சொல்லல்லாம்.

submarine2

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-

 

கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்று நீராழி வரையகத் தீண்டிய

கற்றேயும்; தேயாது சொல்

-பழமொழி

 

பொருள்:-  பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.

 

–சுபம்–

 

சந்திரனில் ஒரு கிராமம்!(Post No 2812)

moon value

Written  BY S NAGARAJAN

Date: 15 May 2016

 

Post No. 2812

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

 

சந்திரனில் ஒரு கிராமம்!

ச.நாகராஜன்

 

 

“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”

டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்

 

 

உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல்  மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.

 

 

நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.

 

 

ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.

இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப்  தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.

 

 

ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.

ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.

 

 

இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.

 

நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல  முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில்  இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.

 

 

சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.

 

 

இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.

ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏராளமான காரணங்கள் உள்ளன.

 

முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.

 

 

 

1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.

 

ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.

 

 

யூரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸியின் டைரக்டராக 2015இல் பொறுப்பெற்றவுடன் ஜோஹன் டயட்ரிச் வோர்னர்  இதை வலியுறுத்தினார்.

 

சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள்  மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,

 

ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.

 

 

விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

 

விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.

 

einstein

 

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:

 

1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.

 

 

காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர்  மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற  இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.

 

இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி  அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.

 

 

 

இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.

 

இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.

 

 

ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.

 

“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.

 

இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில்  வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

**********

 

விமானத்தில் பறக்கும்போது நோபல் பரிசு கிடைத்தது!(Post No.2797)

live science

Written  BY S NAGARAJAN
Date: 10 May 2016

 

Post No. 2797

 

 

Time uploaded in London :–  6-42 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 6-5-2016 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியான  கட்டுரை

பிரபல டைரக்டர் கே.பாக்யாராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரந்தோறும் வெளி வரும் சிறந்த பத்திரிகை பாக்யா.

சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி bhagyaweek@gmail.com

 

 

மன்னிக்க வேண்டுகிறேன்!

.நாகராஜன்

 

 sarh miller1

“வாழ்க்கையில் பிளவு பட்ட எதையும் ஒட்டிவிடும் சூப்பர் கோந்து மன்னிப்பு தான்! அது எதையும் ரிப்பேர் செய்து விடும்!” –லின் ஜான்ஸ்டன்

 

உலகின் பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் (Live Science) உலகிலுள்ள அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் முத்திரைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய ஏப்ரல் 2016, இரண்டாவது வார இதழில் அது வெளியிட்டுள்ள கட்டுரை ‘சாரி ஸயின்ஸ்’ (Sorry Science) பற்றியது. அதாவது மன்னிப்பு பற்றிய அறிவியல் நோக்கிலான கட்டுரை தான் சாரி ஸயின்ஸ் கட்டுரை!. சாரா மில்லர் என்பவர் இதை எழுதியுள்ளார்.

 

 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த மன்னிப்பில் ஆறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்கிறது அறிவியல் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள ஓஹையோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் லெவிகி (Roy Lewicki),” மன்னிப்பு நிச்சயம் வேலை செய்யும் – அதில் ஆறு அம்சங்கள் இருந்தால்” என்கிறார். அவர் தான் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர்.

 

 

மன்னிப்பு கேட்பதில் முதலாவது அம்சம் தவறுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகும். “நான் தான் தவறு செய்தேன்.,” என்று ஒத்துக் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் மேம்படுகிறது; ஆறுதல் அடைகிறது.

அடுத்ததாக தவறினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முன்வருவது. ’ஏற்பட்ட ‘டாமேஜை’ சரி செய்கிறேன் என்று சொல்லும் போது எதிராளியின் மனம் மிகவும் சமாதானப்பட்டு விடும்.

 

 

மன்னிப்பு கேட்கும் போது கேட்பவருக்குப் புரியும் அதே மொழியில் கேட்க வேண்டும். உலகில் எந்த  மொழியினராக இருந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள், “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சொல்வது தான்!

மன்னிப்பை முன் வைக்கும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பை நீங்கள் பாதிக்கப்பட்டவருடன் கொள்ள வேண்டும். உங்களின் தவறினால் அவருக்கு எப்படிப்பட்ட வலி அல்லது வேதனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் வேதனைப்படுவதை அவர் உணர வேண்டும்,

 

 

அடுத்து பாதிக்கப்பட்டவர் சொல்வதை முழுதுமாக அமைதியாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

கடைசியான அம்சம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்பது தான்!

இந்த ஆய்வில் 755 பேர் பங்கேற்றனர்.

முதலாவது சோதனையில் 333 பேர்கள் பங்கேற்றனர். மன்னிப்பின் ஆறு அம்சங்களோ அல்லது அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுக்கப்பட்டு அதை எப்படி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

இரண்டாவது சோதனையில் 422 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்று முதல் ஆறு வரையிலான மன்னிப்பு அம்சங்களை படிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு எப்படி அதை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

முதல் சோதனையில் மன்னிப்பின் எத்தனை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று முன்னமேயே சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் சோதனையில் எத்தனை அம்சங்கள் மன்னிப்பு கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படவில்லை.

ஆறு அம்சங்களையும் கொண்ட மன்னிப்பே சிறந்த மன்னிப்பாக அனைவராலும் கருதப்பட்டதை சோதனை முடிவு தெரிவித்தது.

 

மன்னிக்க வேண்டுகிறேன் என்பதைச் சொல்லும் போது ஆறு அம்சங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன் என்று கூறிய ஆய்வின் தலைவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த ஆய்வின் குறையாக ஒன்றையும் இது பற்றி சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சோதனையில் மன்னிப்பு என்பது எழுதிய வாசகங்களைப் படிப்பதாக மட்டும் அமைந்துள்ளது. நேரடியாக மன்னிப்பு கேட்பது போல அமையவில்லை.

 

 

நேருக்கு நேர் கண்ணொடு கண் பேசும் மொழி இதில் இல்லை. அந்த உணர்வு பூர்வமான வெளிப்பாடு மன்னிப்பு கேட்பதில் தலையாய அம்சமாகும் என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்பதைப் பற்றி ஆய்வு நடத்திய இன்னொரு உளவியல் நிபுணரான ஃபெர் (Fehr) இது பற்றி ஏராளமான ஆய்வுப் பேப்பர்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர், “மன்னிப்பு என்பது ஒருவரின் செயலையும் அந்த நபரையும் இரண்டாக பிரிவு படுத்திக் காட்டும் ஒன்று” என்கிறார்.

“நான் செய்த செயல் மோசம் தான். ஆனால் நான் கெட்ட ஆள் இல்லை. இதை உளமாரச் சொல்கிறேன்.” என்று ஒருவர் சொல்லும் போது பாதிக்கப்பட்டவரின் மனம் சமனம் அடைந்து மன்னிப்பை நல்கும் மனப்பான்மையை அடைகிறது என்கிறார் அவர்.

 

 

மன்னிப்பைக் கேட்கும் சமயமும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆக மன்னிப்பு கேட்பதைக் கூட அறிவியல் ரீதியாகக் கேட்கலாம். மற்றவர்களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தலாம்!

200px-Jerome_Karle,_2009

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரசாயனத்தில் 1985ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் கார்லே (Dr Jerome Karle- தோற்றம் 18-6-1918 மறைவு 6-6-2013)

அவர் இஸபெல்லா லுகோஸ்கி என்ற இளம் பெண்ணை இரசாயன சோதனைக்கூடத்தில் 1940 ஆண்டு சந்தித்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக 1942இல் அவர் இஸபெல்லாவை மணந்தார். எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி துறையில் இருவரும் இரு வேறு ஆராய்ச்சிகளைச் செய்தனர்.

 

 

நோபல் பரிசு பெற்ற போது அதில் தன் மனைவிக்கு உரிய கௌரவம் தரப்படவில்லையே என்று வருத்தமுற்றார் அவர்.

நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்கு ஒரு பெரும் ஆச்சரியமூட்டும் செய்தியாகவே அமைந்தது.

அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்த போது அவர் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

 

திடீரென்று விமான பைலட் ஒரு செய்தியை மைக்கில் அறிவித்தார்.

“நாம் இந்த தருணத்தில் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளோம். நம்முடன் இப்போது தான் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்முடன் இதோ இந்த விமானத்தில் இருக்கிறார். அவருக்கே தனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பது இதுவரை தெரியாது”

விமானிக்குக் கிடைத்த செய்தியை அவர் சுடச்சுடச் சொல்ல அனைவரும் பரபரப்புடன் ஆரவாரித்தனர்.

 

 

விமானி தொடர்ந்தார்: “உண்மையில் இந்த நோபல் பரிசு 29-சி சீட்டில் அமர்ந்திருக்கும் டாக்டர் ஜெரோம் கார்லேக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தியை அவர் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர் மூனிச்சிலிருந்து இன்று காலை  கிளம்பி விட்டார். ஆகவே இப்போது இந்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

 

 

பயணிகள் எல்லோரும் குதூகலப்பட ஜெரோமுக்கு விமானி சாம்பெய்ன் கொடுத்து விசேஷமாக கௌரவித்தார்.
உயரத்தில் பறந்தவருக்கு உயரிய விருது கிடைத்த செய்தியை உரிய விதத்தில் அளித்தார் விமானி!

*************

 

 

 

அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்! (Post No.2765)

வீர சிவன்

Written  BY S NAGARAJAN

Date: 29 April 2016

 

Post No. 2765

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா  29-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

 

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்!

ச.நாகராஜன்

 

 

“விஞ்ஞானிகளே! பிரதிநிதிகளே. இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எங்களது நம்பிக்கை நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்தே வருகிறது –பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசும் போது கூறியது

 

கோலாகலமாக 103வது  இந்திய ஸயின்ஸ் காங்கிரஸ் (இந்திய அறிவியல் மாநாடு) மைசூரில் 2016 ஜனவரி மூன்றாம் தேதி துவங்கி 7ஆம் தேதி முடிய நடந்தது.

 

வழக்கம் போல இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வந்தனர்.

 

ஆனால் இதில் சர்ச்சை எப்போது துவங்கியது என்றால் பேச அழைக்கப்பட்டவர்களுள் ஒருவரான அகிலேஷ் கே.பாண்டே  சிவ பெருமானை ஒரு பெரும் சுற்றுப்புறச்சூழலாளராக அவைக்கு முன் வைத்த போது தான்! (ஒரு சிறிய விபத்து நேர்ந்ததால் இவர் தன் உரையைப் படிக்கவில்லை. சுற்றுக்கு இவரது உரை வந்தது)

இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இரு நிமிடங்கள் இடைவிடாது சங்கொலியை முழக்கி அவையைத் திகைப்படையச் செய்தார். இந்த ஒலி சங்கின் அற்புதமான ஒலி இது மனித குலத்தை இன்று பிடித்திருக்கும் பீடைகளை அகற்றும் என்றார் அவர்!

 

 

சில விஞ்ஞானிகள் திகைத்தனர். 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணனோ நொந்து போனார்.இது அறிவியல் மாநாடு இல்லை, இது ஒரு சர்கஸ் என்று விமரிசனமே செய்து விட்டார்.

 

 

சிவபிரானின் பக்தர்களுக்கே இது பிடிக்கவில்லை. ஏனெனில் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன், கோடானுகோடி அண்டங்களைக் காக்கும் அவனுக்கு சாதாரண சுற்றுப்புறச  சூழலாளர் அந்தஸ்தைத் தந்து அவரைக் கீழே இறக்கலாமா என்பது அவர்கள் வாதம்!

 

அண்ட பிரபஞ்சத்தின் அணுத்துகள் நடனத்தை அறிய வேண்டுமானால் சிதம்பரம் நடராஜரின் பிரபஞ்ச நடனத்தைப் பாருங்கள் என்று பிரிட்ஜாப் காப்ரா உள்ளிட்ட விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு பேசும் போது அவரைச் சுற்றுப்புறச்சூழலின் காவலராகச் சித்தரிப்பது அவசியமா?

 

 

வெங்கட் ராமகிருஷ்ணன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐஎஸ் ஆர் ஓவில் சோதனை ராக்கட்டுகள் விண்ணில் ஏவப்படும் போதெல்லாம் பூஜைகள் போடப்படுகின்றன. நான் மட்டும் அதன் தலைவராக இருந்தால் அந்த சோதனைகளிலிருந்து விலகியே இருப்பேன்” என்றார்.

 

 

 

ஆனால் ஐ எஸ் ஆர் ஓவின் தலைவராக 2003இலிருந்து 2009 முடிய இருந்த  பத்ம விபூஷன் பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய விஞ்ஞானி ஜி மாதவன் நாயரோ வேதங்கள் பற்றிய மாநாடு ஒன்றில் பேசுகையில்  வேதங்களில் உள்ள ஸ்லோகங்கள் இன்றும் பொருந்துகின்றன. சந்திரனில் நீர் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. சந்த்ராயன் திட்டத்திலேயே ஆர்யபட்டரின் சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டன” என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

 

 

வேதங்களில் உள்ள பிரம்மாண்டமான விஷயங்கள் சூத்திர வடிவில் உள்ளன.அதனால் தான் அதை நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில் சிரமப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

கிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகள் வரை விஞ்ஞானத்தில் செழித்திருந்த நாம், பல்வேறு படைஎடுப்புகள் மற்றும் ஆதிக்கத்தின் காரணமாக்ச் செயலிழந்திருந்தோம் இப்போது பழையபடி வளர்ச்சி அடையத் துவங்கி விட்டோம். அணு விஞ்ஞானத்தை நாம் அமைதிக்குப் பயன்படுத்துகிறோம்” என்றார் அவர்.

 

 

ஒரு வழியாக மாநாட்டில் விஞ்ஞானிகள் சமாதானம் அடைய வெங்கட் ராமகிருஷ்ணனின் அற்புதமான பேச்சு உதவியது.

அவர் ஆயுர்வேதத்தில் உள்ள உண்மைகளை விளக்கி வெகுவாக அதைப் புகழ்ந்தார்.

 

 

ஆயுர்வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் உகந்த மருத்துவ முறையைத் தருகிறது. மரபணுவைப் பற்றிய வரைபடத்தை நாம் பூர்த்தி செய்து விட்டால் ஒவ்வொருவருக்குரிய தனிப்பட்டதான மருத்துவ முறையை நாம் கையாள முடியும் என்றார் அவர்.

IMG_4972

சங்கு ஒலி மூலம் தைராய்ட் நோய்ச் சிகிச்சை!

 

சங்கொலியின் மகத்துவத்தைப் பற்றிக் கூறிய ஐ ஏ எஸ் அதிகாரி ராஜீவ் சர்மா தனது கூற்றில் விஞ்ஞானம் அல்லாத எதுவும் கூறப்படவில்லை என்றும்  உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் ஏற்பட்டுள்ள பல வியாதிகளை சங்கின் ஒலி நீக்கும். இதை இரண்டரை ஆண்டு காலம் நான் பரிசோதித்துப் பார்த்துள்ளேன்.

 

 

சுமார் 40 பேருக்கு இந்த சங்கொலி சிகிச்சையைத் தந்து தைராய்ட் மற்றும் கழுத்தில் ஏற்படும் ஸ்பாண்டிலிடிஸ் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்தியுள்ளேன். இது விஞ்ஞான்ம் இல்லை என்றால் எது தான் விஞ்ஞானம்?” என்று கேள்வியை எழுப்பினார்.

 

 

 

மாநாட்டில் ஆறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த அறிவியல் மாநாட்டில் பங்கேற்று உத்வேகம் பெற்றனர்.

 

 

சூடாகவும் சுவையாகவும் இருந்த மாநாடு எதிர்கால அறிவியல் இந்தியா பற்றிய நம்பிக்கையைத் தருகிறது.

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஆலன் டூரிங் (தோற்றம் 23-6-1912 மறைவு 7-6-1954) ஒரு இளவயது மேதை.

 

 

மூன்றே வாரங்களில் அவர் படிக்கத் தெரிந்து கொண்டாராம். நம்பர்களில் அவருக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருந்ததால் ஒவ்வொரு தெரு விளக்கு அருகிலும் நின்று அதன் தொடர் எண்ணைக் கவனிப்பாராம்!

 

 

ஏழு வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள உல்லாபூல் என்ற இடத்திற்கு குடும்பத்தினர் உல்லாசப் பயணமாகச் சென்றனர். அங்கு தேனீக்கள் பறக்கும் விதத்தை நன்கு கவனித்த டூரிங் அவற்றின் பயணப்பாதையை வைத்து அவைகள் அனைத்தும் எங்கு ஒன்று கூடுகின்றன என்ற இணையும் புள்ளியைக் கணக்கிட்டு அங்கு சென்றார். அவர் கணித்த படியே அங்கு தேன்கூடு இருந்தது. அதிலிருந்து தேனை எடுத்த அவர் குடும்பத்தினருக்கு வழங்க அவர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாயினர்.

 

 alan-turing-970-80

ALAN TURING

அவர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவம் இது:

டூரிங்கிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அதில் கியரிலிருந்து செயின் அடிக்கடி நழுவி விடவே சைக்கிளிலிருந்து கீழிறங்கி அதை மாட்டுவது அவருக்குப் பழக்கமானது. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போகவே சக்கரம் எத்தனை முறை சுற்றினால் கியரிலிருந்து செயின் கழறுகிறது என்று கணக்கிட்டு சரியாக அந்தச் சுழற்சி வரும் போது சைக்கிளை நிறுத்தி செயினை அவர் அட்ஜஸ்ட் செய்ய ஆரம்பித்தார். ஆனால் இதுவும் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கவே அவர் ஒரு விசேஷ கருவியைச் செய்து அதைச் சைக்கிளில் பொருத்தினார். சரியான நேரத்தில் அது கியரில் செயினை மாட்டி விடும். ஆனால் இப்படிப்பட்ட மேதைக்கு ஒரு புது செயினை மாட்டி விட்டால் இந்த பிரச்சினை நிரந்தரமாகத் தீர்ந்து விடும் என்று தோன்றவில்லை.

கணித சவாலாக அதை எடுத்துக் கொண்டு மாற்றி யோசித்து தீர்வைக் காண்பதையே அவர் விரும்பினார் போலும்.

அது தான் ஆலன் டூரிங்!

 

*********