பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல் (Post No.3105)

southindiacitiesbig

Compiled by London Swaminathan

 

Date: 30 August 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3105

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

சிவனுடைய ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்று அழைக்கப்படும். அதாவது அங்கே சிவன் பஞ்ச பூதங்களின் வடிவாக இருக்கிறார். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூத தத்துவத்தை உலகிற்குக் கற்பித்தது பாரதம். பின்னர் இது கிரேக்க நாடு வழியாக பிற இடங்களுக்குப் பரவியது. இதற்கு என்ன சான்று?

 

வடக்கில் சம்ஸ்கிருதத்திலும், தமிழில் புறநானூற்றிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சபூதம் காணப்படுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரப்புடைய நாடு உலகில் எதுவும் இல்லை. அப்படியே அலெக்ஸாண்டர் போல ஒருவர் ஒரு பிரதேசத்தை உருவாக்கினாலும் அது ஒரே பண்பாடுடைய “தேசம்” இல்லை. ஆக இவ்வளவு பரந்த ஒரு நிலப்பரப்பில் ஒரே பண்பாடு நிலவியதே நாம்தான் இதை பரப்பினோம் என்பதைக் காட்டும்.

 

“தில்லைக் கலம்பகம்” என்னும் நூல் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டையர் என்று அழைக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டது. அதிலுள்ள ஒரு பாடல், அழகாக ஐந்து தலங்களையும் வரிசைப் படுத்துகிறது. இதோ அந்த பாடல்:-

 

 

கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்

காஞ்சிமா நகருறை லிங்கம்;

காவிரி வடபால் வருதிரு ஆனைக்

காவினில் அப்புலிங்  கமதாம்

வடதிசை அண்ணா   மலையினில் லிங்கம்

வன்னியின் வடிவு; காளத்தி

வாயுலிங்   கமதாம்; சிதம்பர லிங்கம்

மாசில்  காயலிங்   கமதாம்.

–தில்லைக் கலம்பகம்

 

காஞ்சீபுரம் – நிலம் (ப்ருத்வீ)

திருவானைக்கா – நீர் (அப்பு)

திருவண்ணாமலை – தீ (தேயு, வன்னி )

திருக்காளத்தி — காற்று (வாயு)

சிதம்பரம் – வானம் (ஆகாசம்)

 

–Subham-

 

 

மறைந்து போன வேதங்கள்! (Post No.3093)

vedas4

Compiled by London Swaminathan

 

Date: 26  August 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3093

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

rveda

உலகிலுள்ள பழையமொழிகள் ஒவ்வொன்றும் நிறைய நூல்களை இழந்துள்ளன. எந்த பழைய மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதமும் தமிழும் நிறைய நூல்களை இழந்துவிட்டன. சில நூல்களின் மேற்கோள்களைப் பல உரையாசிரியர்கள் கையாளும்போது அவர் காலத்தில் அந்த நூல்கள் இருந்தது நமக்குத் தெரிகிறது. இன்னும் சில நூற் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன. இன்னும் சில ஆசிரியர்கள் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன.

 

உலகில் மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம் ஆகும். அ தை ஒட்டி யஜூர், சாமம், அதர்வண வேதங்களை வியாசர் தொகுத்து வைத்தார். இந்துக்கள் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்ததாகக் கணக்கிடுகின்றனர்.

 

அவர் ஏன் 4 வேதங்களை த் தொகுத்தார்?

ஏனென்றால் அவர் காலத்திலேயே வேதம் என்பது கடல் போலப் பரந்த இலக்கியம் ஆனது. யார் ஒருவராலும் தனியாக அவ்வளவையும் மனப்பாடம் செய்ய இயலாது என்பது அவருக்கு விளங்கியது. உடனே நான்காகத் தொகுத்து நான்கு சீடர்களை அழைத்து ஒவ்வொருவரும் ஒரு வேதத்தைப் பரப்புங்கள் என்றார். அதிலும் கூட முழு வேதத்தையும் மனப்பாடம் செய்ய முடியாவிடில் ஒரு சாகையை (கிளை) மட்டும் படித்தால் போதும் என்றார். இப்படியெல்லாம் எளிமைப்படுத்தியும் இன்று வேதம் இருக்கும் நிலையை நாம் அறிவோம்.

 

பிற இலக்கியங்களிலிருன்த்து அழிந்து போன வேத நூல்கள் என்ன என்பதை அறிகிறோம்.

 

 

பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம்,  வேதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லும். அந்த நூல் குறைந்தது 2100 ஆண்டுகளுக்கு முந்தையது.

 

ரிக் வேதத்தில் 21 சாகைகளும்,

யஜுர் வேதத்தில் 100 சாகைகளும்

சாம வேதத்தில் 1000 சாகைகளும்

அதர்வ வேதத்தில் 9 சாகைகளும்

இருந்ததாக பதஞ்சலி கூறுகிறார்.

 

முக்திகோபநிஷத், இந்த வேதங்களில் முறையே 21, 109, 1000, 50 சாகைகள் இருந்ததாகக் கூறுகிறது.

vedas-flow-chart

எல்லோரும் வேதம் அழிந்துவருவதைக் காட்டி இருக்கின்றனர். இருக்கும் வேதங்களையாவது காப்பாற்றுவது இந்துக்களின் தலையாய கடமை ஆகும்.

1130-க்கும் அதிகமான சாகைகள் இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது 11 சாகைகள்தான் இருக்கின்றன. மேலும் 4 சாகைகளின் சில பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதாக அறிஞர் பெருமக்கள் உரைப்பர்.

 

 

இப்போதுள்ள நான்கு வேதங்களிலும் 20,000 துதிகள் இருக்கின்றன. உலகில் மற்ற மதத்தினரும், மற்ற மொழியினரும் எழுதுவதற்கு முன்னரே வேதம் கடல் போலப் பரவிவிட்டது. இன்றுவரை, அது கோவில்களிலும், பூஜை, வழிபாடுகளிலும் பயன்படுகின்றன. திருமணச் சடங்குகளிலும் இறுதிச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் பயன்படுகின்றன்.

 

 

முதல் இலக்கண   நூல்

2700 க்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ — தான் உலகின் முதல் இலக்கண   நூல். அவர் தனக்கு முந்தைய இலக்கண ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லுகிறார். நமக்கோ ஒன்றும் கிடைத்தில.

 

மனு ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட தர்ம சாஸ்திரத்தை 1080 அத்தியாயங்களாகப் பிரித்து எழுதியதாக நாரத ஸ்ம்ருதி கூறுகிறது.

 

நாரதர் அதை 12,000 ஸ்லோகங்களாகவும், மார்க்கண்டேயர் அதை 8000  ஸ்லோகங்களாகவும், பிருகுவின் மகன் சுமதி அதை 4000  ஸ்லோகங்களாகவும் குறைத்ததாகக் கூறும். ஆனால் இப்பொழுதுள்ள மனு ஸ்மிருதி 12 அத்தியாயங்களில் 2685 ஸ்லோகங்கள் மட்டுமே இருக்கின்றன.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

IMG_5597

Picture of Hindu Yogi/ Saint/ ascetic

கிருத யுகத்தில் எல்லோரும் நல்லவர்கள். அவர்கள் 400 ஆண்டுகள் வாழ்ந்த தாக மனு சொல்லுவார். ஆனால் கலியுகத்தில் இராட்சத புத்தியுள்ளவர்கள் அதிகம். ஆகையால் எல்லாவற்றையும் குறைத்துக் குறைத்து சிறிதாக்கி விட்டனர். திருவள்ளுவரும் கூட ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்பார். ஏதாவது உங்கள் காதில் நல்லது விழட்டும் என்பார். ஆகவே இருப்பதைக் காப்பாற்றிப் போற்றுவது நம் கடமை. யாருக்கு விஷயம் தெரியுமோ அவர்களை ஆதரிப்பதும் நமது கடமை.

 

மேலும் வெளிநாட்டுக்காரர்கள் நமது சாத்திரங்களுக்குத் தேதி குறிப்பதும் தவறு என்று தெரிகிறது. அவர்கள் குப்தர் காலத்திலும், அதற்கு முந்தைய பிராமண சுங்க வம்ச ஆட்சிக்காலத்திலும் எழுதப்பட்ட புத்தகங்களையும் அதிலுள்ள ஓரிரு குறிப்புகளையும் வைத்து தவறாகக் காலம் கணிப்பர். அதை ஒதுக்கி விடுதல் நன்று.

 

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – மஹாகவி பாரதியார்.

 

-சுபம்-

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10 (Post No.3022)

nps2000buddha_colored

Article Written S NAGARAJAN

Date: 31 July 2016

Post No. 3022

Time uploaded in London :– 5-38 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10

ச.நாகராஜன்

 

coin buddha

ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதற்காக பல காத தூரம் நடந்து ஹேமு மரம் என்ற இடத்தை ஸு யுன் அடைந்தார்.

அங்கு செல்லும் சாலை மிகவும் கரடு  முரடாக இருந்தது. ஒரே வளைவுகள். பல வருடங்களாக அது கேட்பாரற்று கவனிப்பாரற்று இருந்திருக்கிறது போலும்!

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அங்கு ஒரு துறவி இருக்கிறார் என்றும் தனியாக தான் ஒருவராகவே அந்த சாலையை அவர் சீர் படுத்தி வருகிறார் என்றும் ஸு யுன்னிடம் கூறினர்.

அவர் எந்த ஒரு நன்கொடையையும் கேட்பதில்லை என்றும் தான் உயிர் வாழத் தேவையான குறைந்த ப்ட்ச உணவை  மட்டும் அவர்களிடமிருந்து பெற்று வருகிறார் என்பதையும் ஸு யுன் அறிந்தார். பல பத்து ஆண்டுகளாக அந்த நீண்ட நெடுஞ்சாலையை அவர் சீர் படுத்தி வருகிறாராம்!

இப்போது 90 சதவிகிதம் அந்தப் பணி முடிந்து விட்டதாம்!

அங்குள்ள ஆலயத்தை உள்ளூர்வாசிகள் புனருத்தாரணம் செய்வதாகச் சொன்ன போதும் அவர் தன் வேலையான சாலைப் பணியில் ம்ட்டுமே ஈடுபட்டு வந்தாராம்.

அவரைப் பார்க்க ஸு யுன் விரைந்தார்.

ஒரு மண்வெட்டி கூடையுடன் அந்தத் துறவி சாலையில் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கூப்பிய கரங்களுடன் ஸு யுன் அவரிடம் விரைந்து சென்றார். நமஸ்கரித்தார்.

அவர் ஸு யுன்னைக் கண்டு கொள்ளவே இல்லை.. ஸு யுன்னைப் பார்த்த அவர், எதுவும் பேசாமல் தனது தங்குமிடமான ஆலயம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.

ஆலயத்தில் தன் கருவிகளை வைத்த அவர் அமர்ந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் எதிரேயே ஸு யுன்னும் அமர்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அரிசியைக் களைந்து உலையில் போட்ட போது ஸு யுன் அடுப்பை மூட்டினார்.

சாப்பிடும் போது அவர் ஸு யுன்னை அழைக்கவில்லை. ஸு யுன்னோ தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு உண்டார்.

மண்வெட்டியை  எடுத்துக் கொண்டு அவர் சாலையை நோக்கி விரைய ஸு யுன்னும் கூடையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் போனார்.

சாலையில் பள்ளங்கள் சீராக்கப்பட்டன. வேலை தொடர்ந்தது.

 

இப்படியாக 10 நாட்கள் கழிந்தன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஒரு நாள் மாலை ஆலயத்திற்கு வெளியே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்த ஸு யுன் தியானம் செய்ய அமர்ந்தார்.நேரம் கழிந்தது.

ஆனால் ஸு யுன் உள்ளே செல்லவில்லை. வயதான அந்த துறவி பின்னால் வந்து கூப்பிட்டார்: “அங்கே நீங்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறீர்கள்?”

கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்த ஸு யுன் பதில் கூறினார் இப்படி:-“ நான் சந்திரனைப் பார்க்க விரும்பி இங்கு அமர்ந்திருக்கிறேன்.”

 

“சந்திரன் எங்கே இருக்கிறது?”

“அற்புதமான ரோஜா வண்ண ஒளியாக இருக்கிறது!”

அவர் கூறினார்: “பொய்மைக்கு இடையில் மெய்யை அரிதாகவே தான் காண முடியும்!  வானவில்லைப் பார்த்து பிரகாசமான ஒளி என்று தவறாக நினைத்து விடக் கூடாது!”

ஸு யுன் பதில் கூறினார்:” என்னைத் தழுவும் ஒளி இறந்த காலமும் அல்ல; நிகழ்காலமும் அல்ல, இடையறாமல் வரும் அது எதிர்மறையானதும் அல்ல; உடன்மறையானதும் அல்ல!”

 

அதைக் கேட்ட அவர் கலகலவென்று சிரித்தார்.

ஸு யுன்னின் கரங்களைப் பற்றினார். “மிகுந்த நேரம் ஆகி விட்டது. ஆலயத்தினுள் செல்ல்லாம்” என்றார் அவர்.

மறு நாள் உற்சாகமாக அவர் பேசத் தொடங்கினார்.

அவர் பெயர் சான் ஸியூ.24 வயதிலேயே அவர் உலகைத் துறந்து விட்டார்.  ஜின் சான் மடாலயத்தில் சேர்ந்த அவர் தன் அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்தினார்.

பின்னர் சீனாவில் உள்ள புனித மலைத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

திபெத்திற்குச் சென்ற அவர் பர்மா வழியே மீண்டும் சீனா திரும்பினார்.

 

இங்குள்ள சாலை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த அவர் அங்குள்ள மக்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டார். தரணிம்தார போதிசத்துவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சாலையை சீர்திருத்த கங்கணம் பூண்டார்.

பல பத்து வருடங்கள் ஓடி விட்டன. சாலை சீரடையும் பணி முடியும் தருவாய் வந்து விட்டது. இப்போது அவருக்கு வயது 83!

 

எந்த ஒரு நல்ல நண்பரையும் அவர் இதுவரை காணவில்லை.

நல்ல கர்ம பலன்களைக் கொண்ட ஸு யுன்னை இப்போது அவர் கண்டு விட்டார்.

ஆகவே மனம் திறந்து தன்னைப் பற்றி இது வரை யாரிடமும் கூறாத விஷயங்களை ஸு யுன்னிடம் அவர் கூறினார்.

ஸு யுன்னும் மகிழ்ந்து தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார்.

மறு நாள் காலை. பொழுது புலர்ந்தது. காலை உணவை அருந்தி விட்டு ஸு யுன் விடை பெற்றார். இருவரும் கலகலவெனச் சிரித்தனர். சிரித்தவாறே ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

-தொடரும்

பழைய கால நூல் தற்காலத்துக்குப் பொருந்துமா? (Post No.2960)

YogaVasishta_front_cover

Article Written S NAGARAJAN

Date: 11 July 2016

Post No. 2960

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5

பழைய கால நூல் தற்காலத்திற்குப் பொருந்துமா?

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டம் என்னும் நூலோ பழைய காலத்தில் இயற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் வசிஷ்ட முனிவர் பழைய யுகம் ஒன்றில் ராமருக்கு உபதேசித்த நூல் அது.
இன்றைய நவீன இண்டர்நெட் யுகத்திற்கு அது பொருந்துமா?
எத்தனை தொழில்நுட்பங்கள்! எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள்!!
இந்தக் காலத்திற்கு அந்த நூல் பத்தாம்பசலித்தனமான நூல் அல்லவா? பகுத்தறிவுக்கு ஒத்த நூலாகுமா?
இப்படி கேள்விகளைப் பகுத்தறிவாளர்கள் கிளப்பினால் சாதாரண மனங்களே குழம்பி விடும்! விடையைப் பார்க்கலாம்.
முதலில் விஞ்ஞான முன்னேற்றம் புறவுலகை அளப்பதில் தான் இருக்கிறது. விண்வெளியில் விண்கலங்கள் சுழல்கின்றன. நெட் உலகில் தகவல் பரிமாற்றம் நன்கு நடைபெறுகிறது. உண்மை தான்!
ஆனால் அகவுலகைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் திகைக்கவே செய்கிறது! உயிர் என்பது என்ன? அது எப்படி கருவில் எப்போது வந்து சேர்கிறது? உடலை விட்டு உயிர் எப்போது எப்படி நீங்குகிறது? மனம் என்பது என்ன? பிரக்ஞை என்பது என்ன” – என்றெல்லாம் கேட்கப் போனால் விஞ்ஞானம் விலகி ஓடுகிறது.

YogaVasishta_large
ஆகவே விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாமல் திகைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே நூல் யோக வாசிஷ்டம் தான்! ஒருவேளை விஞ்ஞானமும் மனம், பிரக்ஞை, உயிர் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருந்தால் அப்போது மட்டுமே நாம் ‘பகுத்தறிவாளர் நம்மைக் குழப்புகின்ற’ மேலே கூறியுள்ள கேள்விகளைக் கேட்கலாம்.
அப்படி விஞ்ஞானம் விளக்காத நிலையில் அப்படிப்பட்ட கேள்விகளே தவறு என்று சொல்லி விடலாம்.
சரி, இன்றைய யுகத்திற்கு யோக வாசிஷ்டம் பொருந்துவது எப்படி என்பதற்குப் பதில் உண்டா?
உண்டு!
உண்மையில் யோக வாசிஷ்டம் தான் அறிவியல் ரீதியிலான நூல். எதையும் ஆராய்ந்து பார் என்று அது கூறுகிறது. விசாரம் என்ற சம்ஸ்கிருத பதம் இதற்காக உபயோகப்படுத்தப் படுகிறது.
ஸந்தோஷம், ஸத் ஸங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்ற நான்கு வழிகளே மனிதனின் இக வுலக மற்றும் மறு உலக வெற்றிக்கான வழிகள். (விசாரத்துடன் ஒரு ஸத் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணம் நான்கு ‘ஸ’காரங்களை சுலபமாக நினைவில் இருத்திக் கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவே!)

இவற்றில் எந்த ஒன்றைப் பயின்றாலும் மற்ற மூன்றையும் எய்தி வெற்றியைப் பெறலாம் என்கிறது யோக வாசிஷ்டம்.
ஸத் விசாரம் என்பது நல்லதைப் பற்றிய ஆராய்ச்சி. இதை ஆங்கிலத்தில் Rational investigation என்று கூறலாம்,
உலக வாழ்க்கையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள். சோதனைகள் ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான ஒரே மருந்து விசாரம் தான் என்று வசிஷ்டர் அறிவுறுத்துகிறார்.
ஆசைகள் மற்றும் விருப்பங்களினாலேயே வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், ஏற்படுகின்றன.
ஆகவே பகுத்தறிவு ஆய்வு மற்றும் அமைதியான சிந்தனை ஆகியவற்றின் மூலமாகவே துன்பங்களை வெல்ல முடியும்.
நமது திறமைகள் ஒரு பக்கம். சமுதாய சூழ்நிலை ஒரு பக்கம் நம்முடைய உடல் தகுதி இன்னொரு பக்கம் இப்படி மூன்றினுக்கும் இடையே அகப்பட்டுள்ள நாம் இவற்றிற்கு உட்பட்டுத் தான் நமது ஆசைகளை நிறைவேற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. நமது ஆசைகள் இவற்றிற்கு இசைய அமைந்தால் அப்போது நமது முயற்சிகள் பலனை அளிக்கின்றன.
இல்லையேல் வலியும் ஏமாற்றமுமே மிஞ்சும்.
இவற்றிற்கெல்லாம் மேலே மோகம் என்னும் மாயை இருக்கிறது.
இந்த மாயைக்கு நாம் வசப்பட்டு நமது திறமைகளை அதிகமாக மதிப்பீடு செய்து கொள்கிறோம். நமது ஆசைகள் நமது திறமைகளை தகுதிக்கு அதிகமாக எண்ண வைத்து பிரத்யட்ச நிலை பற்றித் தெரியாமல் நம்மை குருடாக ஆக்கி விடுகிறது.

Yoga-Vasishta-Maha-Ramayana-free-pdf-ebook-185x300

Free e book
ஆகவே நமக்குத் தேவையானது விசாரமும் விவேகமும் தான்.
இதற்கு வசிஷ்டர் வெளிச்சத்தை உதாரணமாகத் தருகிறார்.

இருட்டில் இருக்கும் ஒருவன் பயப்படுகிறான்.அவனால் நகரக் கூட முடியவில்லை. ஒரு விளக்கு ஏற்றப்பட்டு வெளிச்சம் வந்து விட்டால். எல்லாமே தெளிவாக ஆகி விடுகிறது.
அது போல துன்பம் வரும் போது கோபமோ அல்லது பயத்தையோ அடையாமல் விசாரம் செய்ய ஆரம்பித்தால் தெளிவு பிறக்கும். விசாரம் என்ற வெளிச்சம் துன்பம் என்ற இருளை நீக்கும்.
இதுவே உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற வழி!
******

 

 

கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது……….. (Post No. 2949)

pegnant

Article Written by London swaminathan

Date: 7 July 2016

Post No. 2949

Time uploaded in London :– 9-45 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

oldman

யார் யாரைப் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையோடு போகக்கூடாது என்று ஒரு பாடல் இருக்கிறது:–

 

கர்ப்பிணிகள்

குழந்தைகள்

குரு (சந்யாசிகள்)

முதியோர்

கோவில்

அரசர்கள் (பிரதமர், முதலமைச்சர், ராஷ்டிரபதி)

அக்னிஹோத்ரம் செய்பவர்கள் வசிக்கும் இடங்கள்.

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீம் வ்ருத்த பாலகௌ

ரிக்த ஹஸ்தேன ந உபேயாத் ராஜானம் தைவதம் குரும்

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் = தினமும் அக்னிஹோத்ரம்

செய்யும் பிராமணர்களின் வீடுகள்

கர்பிணீம், வ்ருத்த, பாலக: = கர்ப்பிணிகள், முதியோர், சிறுவர்/சிறுமியர்

 

ராஜானம், தைவதம், குரும் = அரசர்கள், தெய்வம், குரு ஆகியோரின் இருப்பிடம்

 

ரிக்த  ஹஸ்தேன = வெறும் கையோடு

ந உபேயாத் = நெருங்கக்கூடாது (செல்லக்கூடாது)

 

children

குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட், மிட்டாய் அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்றால் தாய், தந்தையர் மிகவும் மகிழ்ச்சி அடைவர். நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளின் வயது, விருப்பங்களை அறிந்து வைத்திருக்கிறார்களே என்று வியப்படைவர். உங்களுக்கு வடை, பயசத்துடன் சாப்பாடும் போடுவார்கள்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கையும், பல விருப்பங்களும் இருக்கும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, அதற்குத்தக சமைத்துக்கொண்டுபோய் கொடுக்க வேண்டும். பெண்ணின் அம்மாவோ, மாமியோரோ உங்களை வாழ்த்துவர். உங்கள் வீட்டில் அத்தகைய சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஓடிவந்து உதவி செய்வர்.

 

கோவில்களுக்குச் செல்லுகையில் கட்டாயம் பூவும், பழமும் கொண்டு செல்ல வேண்டும். தேவைப்படும் இடங்களில் பிரசாதம் செய்துகொண்டுபோய் கொடுக்கவேண்டும். ஒன்றும் செய்ய அவகாசமில்லாவிட்டால் உண்டியலிலும், ஐயர் (பட்டர், குருகள்) தட்டுகளிலும் காசுபோட வேண்டும். காரணம் என்ன வென்றால் கோவில்களிலிருந்து ஒரு துரும்பு கூட எடுத்துவரக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்லும். சிவன் சொத்து குல நாசம். ஆனால் நாமோ அங்கிருந்து விபூதி, குங்குமம், பூ, பழம், துளசி முதலியவற்றை அன்புடன் வாங்கி வருவோம். இதற்கு உடனே காசு போட்டுவிடவேண்டும்.

கோவிலுக்குச் செல்

பெரியோர்கள், சாது சந்யாசிகள்  முதலியோரைப் பார்க்கச்செல்லுகையில் பூ, பழம், தேங்காய் அல்லது குறைந்தது ஒரு எலுமிச்சம்பழமாவது வாங்கிச் செல்லவேண்டும். குரு, தெய்வம், சாதுக்களின் பரிபூரண ஆசி கிட்டும்.

 

வயதானவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் செல்லுகையில் பழங்கள், இ னிப்புகள், காரங்கள், புத்தகங்கள் (books), கடிகாரம், வாக்கிங் ஸ்டிக் (Walking Stick) , பிளாஸ்க் (Flask), காலணி (Shoes) போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

–Subham–

 

 

பிராமணர்களில் குருடன் யார்? (Post No.2947)

brahmin4

Written by London swaminathan

Date: 6 July 2016

Post No. 2947

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அந்தணர்களாகப் பிறந்து சாஸ்திர அறிவில்லாதவனை, கண்ணிருந்தும் குருடன் என்று கருதுவர் சான்றோர். இதை அழகாகச் சொல்லும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

 

 

ஸ்ருதிஸ்ம்ருதீ து விப்ராணாம் சக்ஷுஷீ த்வே வினிர்மிதே

கானஸ்தத்ரைகயாஹீனோ த்வாப்யாம் அந்த: ப்ரகீர்தித:

 

அந்தணர்களின் இரண்டு கண்கள் வேதமும் தர்ம சாஸ்திரங்களும் (சுருதி, ஸ்ம்ருதி) ஆகும்.

 

இதில் ஒன்று தெரியாதவன் ஒற்றைக் கண்ணுடையோன்.

இரண்டும் தெரியாதவன் குருடன் என்று அறியப்படும்.

 

திருவள்ளுவர் இதையே வேறுவிதமாகச்   சொல்லுவார்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (திருக்குறள் 393)

 

நல்ல நூல்களைக் கற்று, ஞானத்தைப் பெற்றவர்களையே கண்கள் உடையவர் என்று சொல்லுவார்கள்; கல்வி அறிவு பெறாதவர்களை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்று இகழ்வார்கள்.

brahmin3

xxxxx

 

 

கர்ம சண்டாளர்கள் யார்?

 

பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.

தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–

 

தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:

சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:

 

பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)

 

சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்

 

பேராசைக்காரன்

 

நீண்ட காலத்துக்கு கோபத்தைத்  தக்கவைப்பவன்

 

ஆகிய நால்வரும் செய்ய்யும் தொழிலால்ல் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.

 

 

///////////////// SUBHAM////////////////////

 

அருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944)

thiruvilayadal006

Written by London swaminathan

 

Date: 5 July 2016

Post No. 2944

Time uploaded in London :– 8-12 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

thiruvilayadal_torment

திருவிளையாடல் புராணத்திலுள்ள தருமி என்ற பிராமணப் புலவன் கதையும் நக்கீரன் என்ற சங்கப் புலவர் சிவனுடன் மோதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. தருமி என்ற புலவனுக்கு சிவபெருமானே பாட்டு எழுதிக் கொடுத்தார். அதில் நக்கீரர் பிழை கண்டார். சிவனே அவர் முன் தோன்றி என்ன பிழை? என்று கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நக்கீரனோ நெற்றிக்க ண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சாடவே, நக்கீரன் உடல் எரிந்து நோய் ஏற்பட்டது.

 

இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பர், தனது தேவார பதிகத்தில் பாடிவைத்துள்ளார்.

 

 

இதற்குப்பின் என்ன நடந்தது?

 

அந்தக் கதையை அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் சொல்கிறார்:-

 

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி

அபயமிட  அஞ்சலென் றங்கீரனுக் குதவி

–பூத-வேதாள வகுப்பு

 

பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இக்கதை மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.

 

நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.

 

நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள  பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப்  பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப்  பூதம் சொன்னது என்றும் கூறினர்.

 

உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.

nakkirar 1

இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.

 

இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பறங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.

 

–சுபம்–

 

 

எந்த நிழலில் நிற்கலாம்? எந்த நிழலில் நிற்கக்கூடாது? (Post No.2927)

shadow

Compiled by london swaminathan

Date: 29 June 2016

Post No. 2927

Time uploaded in London :– 8-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தீபச் சாயா நரச் சாயா ஹந்தி புண்யம் புராதனம்
சாச்சேத்வேதவிச் சாயா ஹந்தி பாபம் புராதனம்

விளக்கின் நிழலும், மனிதர்களின் நிழலும் யார் மீது விழுகிறதோ
அவர்கள் சேர்த்து வைத்த பழயை புண்யம் கூட அழிந்து விடும்.

 

 

வேதம் ஓதுபவரின் நிழல் நம் மீது பட்டால் முன் செய்த பாவங்களும் அழிந்து விடும்.

 

Lighting-a-lamp

Picture from wikipedia

Xxx

நடக்க முடியாத விஷயங்கள்

கானல் நீரில் மூழ்கி,  முயல் கொம்பினால் ஆன வில்லை ஏந்தி, ஆகாயப் பூவாலான
மாலையை அணிந்து கொண்டு மலடியின் மகன் போகிறான்

ம்ருக த்ருஷ்னாம்பசி ஸ்நாத:சசச்ருங்க தணுர்தர:
ஏஷ வந்த்யா சுத: யாதி கபுஷ்ப க்ருத சகேர:

 

xxxx

 

 

யாருக்கு எது முக்கியம்  ?
அலங்காரத்துக்கு ஆடை முக்கியம்

உணவுக்கு அன்பு முக்கியம்

பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியம்

அந்தணணுக்கு கல்வி முக்கியம்

 

வத்ஸ்த்ர முக்யஸ்த்வலங்கார: ப்ரிய முக்யந்து போஜனம்

குணமுக்யா பவேன்னாரி வித்யா முக்யஸ்து ப்ராஹ்மண:

Xxx

 

 

அமிர்தம் எது?

மனு கூறுகிறார்:

விகசாசி பவேன்னித்யம் நித்யன்னாம்ருத போஜன:

விகசோ புக்த சேஷந்து யக்ஞசேஷம் ததா அம்ருதம்

…மனு 3-285

 

திதி செய்த பின்னுள்ள மிச்சத்தை சாப்பிட வேண்டும்.

யக்ஞம் செய்த பின் மிஞ்சுவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்.

இவைகளை ஒருவன் தினமும் புசிக்க வேண்டும்.

இது தினமும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞம்

தொடர்பாக சொல்லப்பட்டவை.

 

Xxxx SUBHAM xxxx

 

 

 

 

இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917)

newscientist-30602015feb13

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2917

 

Time uploaded in London :– 8-33 AM

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

‘நியூ ஸயின்டிஸ்ட்’ NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் இந்த வாரம் ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ‘இறந்தபின்னும்” நம்முடைய ஜீன்கள், அதவது மரபணுக்கள் கொஞ்ச நேரத்துக்கு உயிர்வாழ்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

 

இதை நம்முடைய யோகிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, இந்துமதத்தின் அறிவியல் பின்னணியை நன்கு விளக்கும்.

 

இறந்து போன மீன்களின், சுண்டெலிகளின் ஜீன்களை ஆராய்ந்ததில் அவைகளின் மரபணுக்கள் இரண்டு நாட்களுக்கு உயிரோடிருந்தது தெரிய வந்தது.

 

ஒருவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் அறிவித்த பின்னரும் இப்படி ஜீன்கள்/ மரபணுக்கள் வாழ்வதால் அவர் ‘இறந்தது’ உண்மையா? சட்ட பூர்வமானதா? என்ற புதிய கேள்விகளை இது எழுப்பும். இறந்து போனவர்களின்  மாற்று உறுப்புக்ளை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் புதிய அணுகுமுறை வரும்.

 

சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் நோபிள்ஸ் நடத்திய ஆய்வில் மீன்களின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் 548 ஜீன்களும், எலிகளின் 515 ஜீன்களும் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னரும் உயிரோடிருந்ததைக் கண்டார். நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் , செத்துப் போன பின்னர் அவர்களின் உடலில் 12 மணி நேரத்துக்கு பல ஜீன்கள் சுறு சுறுப்புடன் செயல்பட்டதையும் கண்டார்.

2kanchi on mat

எனது கருத்து:-

நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் விஷயத்திலேயே 12 மணி நேரத்துக்கு மரபு அணுக்கள் உயிரோடிருக்குமானால், வாழ்நாள் முழுதும் யோகம், ஆசனம் செய்தவர்களின் உடலில் இறந்த பின்னரும் ஜீன்கள், சுறுசுறுப்புடன் செயல்படுவதில் வியப்பில்லை.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற முஸ்லீம் பெரியவரின் வாழ்க்கையில் , அவர் புதைக்கப்பட்ட பின்னரும் , தானம் வாங்க வந்த புலவருக்கு, அவர் கை நீட்டி மோதிரத்தைக் கொடுத்ததாக அறிகிறோம். இதுபற்றி முன்னரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். மஹாபாரத அதிசயங்கள் பற்றிய கட்டுரையில் இறந்தவர்களின் உடலிலிருந்து, உயிர்கள் உண்டாக்கப்படதை எழுதிவிட்டேன்.

ஒரு யோகியின் சுய சரிதை என்ற புத்தகத்தில் பராஹம்ச யோகானந்தா(1893-1952) பற்றிய அதிசய செய்தி உள்ளது. அவர் இறந்து போய் இருபது நாட்களுக்குப் பின்னரும் அவர் உடல் அழுகவில்லை; அத்தோடு ஒளிவீசிக்கொண்டு திவ்ய தேஜசுடன் விளங்கியது என்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் மார்ச்சுவரி/ சவக் கிடங்கு டைரக்டர் ஹாரி டி.ரோவ் எழுதியுள்ளார்.

 

திருக்கோவிலுர் சுவாமி ஞானானந்தா சமாதி அடைந்த போது, அவர்களுடைய சிஷயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது; சுவாமிகள் அடிக்கடி சமாதி நிலைக்குச் சென்று 150 ஆண்டுகளாகியும் இறக்காததால், இந்த முறையும் இப்படி அதிசயம் நடக்குமோ என்று காத்திருந்தனர். ஆனாலப்படி சமிக்ஞைகள் ஏதும் வராததால், காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் (1894-1994) சென்று கேட்டனர். அவரும் சில நாட்கள் பொறுத்திருந்து அடக்கம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.

 

அதர்வவேத, ரிக் வேத மந்திரங்களில் மரணம் பற்றிய மந்திரங்களில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் உண்மை யென்று நிரூபிக்கப்படும். இவை எகிப்திய மரணப் புத்தகத்தில் (THE BOOK OF DEAD தி புக் ஆப் டெட்) உள்ளதைப் போல இருப்பதையும் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

 

ஒருவன் மரணம் அடைந்தவுடன் அவன் ஆவி உடலில் இருப்பதாகவும், சிதைத்தீ உடலில் பட்ட பின்னரே ஆவி வெளியேறும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

மேலும் 12 நாட்களுக்குப் பின்னரே அது பூமியைவிட்டு மேலுலகம் செல்லும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதனால்தான் உலகம் முழுதும் 13 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

 

உடலில் இருந்து வெளியேறும் ஆவிக்கு, இருளில் எங்கு செல்வது என்று தெரியாதாகையால், ஒருவர் இறந்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பதும் இந்துக்களின் வழக்கம். இதை மற்ற மதங்களும் பின்பற்றி மெழுகு வர்த்தி ஏற்றிவைக்கின்றனர். ஒருவர் இறந்த இடத்தில், இந்துக்கள் 12 நாட்களுக்கு விளக்கு ஏற்றிவைப்பதும் இதனால்தான். 13ஆவது நாளன்று ஆவி, இறந்த இடத்திலிருந்து மேலுலகத்துக்குப் பறந்துவிடும். கருடபுராணம் மற்றும் புரோகிதம் செய்துவைக்கும் பிராமணர்களின் செவிவழிச் செய்திகள் இதுபற்றி நிறைய தகவல்கலைத் தருவர். எதிர்காலத்தில் இவை அனைத்தும் விஞ்ஞான உண்மைகளாகி விடும்.

நியூ ஸைன்டிஸ்ட் – பத்திரிக்கையில் இப்போது வந்துள்ள செய்தி அதில் முதல் படி என்றால் மிகை இல்லை.

–சுபம்–

 

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.