பிராமணர் கள் சாப்பிடும் இடம்!!

toddy_parlour

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1252; தேதி:— 26-8-2014

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி வேலை பார்த்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். எனக்கு வி.ஜி. சீனிவாசன் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அல்லும் பகலும் அனவரதமும் பாரதியின் புகழ் பாடுவார். சொல்லும் செயலும் சிந்தனையும் பாரதி பற்றியே இருக்கும். மதுரை சேதுபதி பள்ளியில் பாரதி சிலை வைக்க மூல காரணமும் முதற்காரணமும் அவரே. கி.வா.ஜகந்நாதன், நா.பார்த்த சாரதி போன்ற தமிழ் சான்றோர்களை வடக்கு மாசிவீதியில் நாங்கள் வசித்த வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து எனது தந்தை தினமணி பொறுப்பாசிரியர் வேங்கடராமன் சந்தானத்துடன் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார். எனது அம்மா ராஜலெட்சுமி சந்தானத்தின் காப்பி, உலகப் பிரசித்தம்! அதைச் சாப்பிடவே ஒரு கூட்டம் வரும்!

வி.ஜி.சீனிவாசன் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர். நகைச் சுவை ததும்பப் பேசுபவர். ஒரு முறை அவருடன் கூத்தனூர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகளை அழைத்துக் கொண்டு ஒரு தலத்துக்குச் சென்று வந்தோம். ஜீப் காரின் பின்புறத்தில் அமர்ந்தவுடன் ரிக் வேதத்தில் கரை கண்டு காஞ்சி மஹா சுவாமிகளிடம் சால்வை, தங்கக் காசு, வீடு, பசுமாடு ஆகியவற்றைப் பரிசாகப் பெற்ற உத்தமோத்தமர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகளை அறிமுகப் படுத்தி வைத்தேன்:–

இவர் பெரிய வேத வித்து! வேத விற்பன்னர்!! — என்று!!!

அவர் இதைக் கேட்டவுடன் வெடிச் சிரிப்பு சிரித்தார். முதலில் எனக்கும் சகோதரர்களுக்கும் ஏன் சிரிக்கிறார் என்று புரியவில்லை. வேத வித்து! வேத விற்பன்னர்! என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தவுடன் காரணம் புரிந்தது! நாங்களும் சிரித்தோம். பசுவும் பசுமாடு போன்ற குணம் உடைய பிராமணர்களும் என்று புறநானூறு பிராமணர்களைப் போற்றுகிறது. அப்படிப்பட்ட பசு உள்ளம் கொண்ட சாஸ்திரிகளுக்கு ‘ஜோக்’ புரியவில்லை. அதை விளக்கும் நிலையில் நாங்களும் இல்லை!!

வேதத்தை வித்துப் பிழைப்பவர் = வேத வித்து
வேத விற்பன்னர் = வேதத்தை விற்பனை செய்பவர் என்று வி.ஜி சீனிவாசன் பொருள் கொண்டதே சிரிப்பொலிக்குக் காரணம்.

seschool

நான் கண்ட மிகப் பெரிய வேத விற்பன்னர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்றபோதும் அந்த சூழ்நிலையில் வி.ஜி.எஸ். அடித்த ‘ஜோக்’ பொருத்தமானதே. ஏனெனில் சாஸ்திரிகளை நாங்கள் காரில் அழைத்துச் சென்ற காரணமே ஒரு ஊரில் உபந்யாசம் செய்யத்தான்—அதாவது வேத அடிப்படையில் உபந்யாசம் செய்து தட்சிணை பெறத்தான்!

iyer mess sign-board

பிராமணர் —கள்— சாப்பிடும் இடம்!!

ஒரு நாள் முதல் அறையில் உட்கார்ந்து கொண்டு வி.ஜி.எஸ். அவர்கள் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எந்த ஓட்டலில், ‘கிளப்’பில், காப்பி நன்றாக இருக்கும் என்று பேச்சு திசை திரும்பியது. அப்போது ஒரு பொருத்தமான ஜோக் அடித்தார்:

“ இந்த ஓட்டல்காரர்கள் எல்லோரும் பிராமண விரோதிகளா?

பிராமணாள் ஓட்டல் ( பிராமணர்களை விரட்டு= ஓட்டு)
ஐயர் கிளப் ( ஐயரை கிளப்பு )
பிராமணர் கள் சாப்பிடும் இடம்
என்றெல்லாம் எழுதிப் போடுகிறார்களே!”

( பிராமணர்கள் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பிராமணர் ‘கள்’ குடிக்கும் என்று அர்த்தம்—அனர்த்தம் ஆகிவிடும்! )

அறை முழுதும் வெடிச் சிரிப்பு. சிரிப்பொலி அடங்க கொஞ்ச நேரம் ஆயிற்று. வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டு முதல் அறைக்கு பகுத்தறிவுப் பாசறை என்று பெயர். எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

bangalore102brahmins

ஐந்து வீட்டுக்கு அப்பால் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஆர்.கே.யும் (டாக்டர் எஸ்.ராம்கிருஷ்ணன்) அவ்வப்போது வாக்குவாதத்தில் இறங்கி எங்களுடன் மோதுவார். அவர் “கம்பனும் மில்டனும்” என்ற ஆய்வுக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கியபோது அவருக்கு பாராட்டு விழா நடத்துவதிலும் எனது தந்தை மூலம் தினமணியில் செய்தி வெளியிடுவதிலும் நான் முக்கியப் பொறுப்பு வகித்தேன். காரணம் அவரிடம் ஆங்கிலம் பயின்றது. அவர் எழுதிய அருமையான ஆராய்ச்சி நூல்களை இன்றும் லண்டனில் திரும்பப் படிக்கிறேன்!

kandy brahmins hotel

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. வடக்கு மாசிவீதியில் ஒரு ஐயர் கிளப்பில் இங்கே ஜலத்தை அண்ணாந்து (உயர்த்தி) குடிக்கவேண்டும் என்று எழுதிப் போட்டிருப்பார்கள். பிராமணர்கள் அல்லது அவர்களைப் போன்ற பழக்கம் உடையவர்கள் மட்டூமே அனுமதிக்கப்படுவர் என்பதை இப்படி எழுதுவதன் மூலம் சொல்லாமல் சொல்லுவர். ஏனெனில் பிராமணர்கள் தண்ணீரை எச்சில்படுத்தி சாப்பிட மாட்டார்கள். இங்கு லண்டன் வந்தவுடன் நாங்கள் எல்லோரும் அப்ராமணர்கள் ஆகிவிட்டோம்!!

Contact swami_48@yahoo.com

கேட்பது பெண்கள் குணம்; வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை!!!

queen

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:–லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1245; தேதி 23 ஆகஸ்ட் 2014

மனு ஸ்மிருதி எழுதிய மனு கொஞ்சம் ஓரச் சார்புடையவர் போலத் தோன்றுகிறது!! பெண்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்!! அவை என்ன என்ன என்பதில் நகைகளையும், துணிமணிகளையும் சேர்த்துவிட்டார் மனு! இந்த சுவையான விஷயத்தை சிறிது ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்

என்று உலகநாதர் உலகநீதியில் சொன்னால் அது சரி என்று படுகிறது. ஏனெனில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதமே போற்றுகிறது. ஆனால் சகோதரியும், மனைவியும் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று மனு தர்மம் கூறுகிறது. இது எந்த வகையில் நியாயம்?

ஒரு நாள் வைர நெக்லஸ், மறு நாள் டிசைனர் ஷூ, டிரஸ், குக்ஸி பை என்று விலை மதிப்பு மிக்க பொருட்களைக் கேட்டால்……………………………………………

இதோ மனு தர்ம சாஸ்திரம் எழுதிய மனு சொல்கிறார்:
யத்ர நார்யாத் பூஜ்யந்தே தத்ர ரமதே தேவதா
யத்ரைதஸ்து ந பூஜ்யந்தே சர்வதத்ரத் அபலா க்ரியா (மனு 3—56)

இதே ஸ்லோகம் மஹாபாரதத்திலும் உளது!

பொருள்: எங்கே பெண்கள் துதிக்கப் படுகிறார்களோ (வாழ்த்தப் படுகிறார்களோ) அங்கே இறைவன் மகிழ்கிறான். எங்கே பெண்கள் போற்றப் படவில்லையோ அங்கே புண்ய காரியங்கள் பலனளிக்காமல் போய்விடும்.

இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் மனு மேலும் சொல்கிறார்:

எங்கே பெண்கள் துன்பப் படுகிறார்களோ அந்தக் குடும்பம் நாசமடையும்–(மனு 3—56)

அப்பாமார்கள், அண்ணன்மார்கள், கணவன்மார்கள், மைத்துனர்கள் ஆகியோருக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் வீட்டுப் பெண்களை மதிக்க வேண்டும், போற்றவேண்டும்—-(மனு 3—55)

பெண்கள் சாபம் விழுந்த வீடுகள் அடியோடு அழியும் —-(மனு 3—58)

ஆகையால் ஆண்கள் நல்லபடி வாழ வேண்டுமானால் விழாக்காலத்திலும் வீட்டு விஷேச காலங்களிலும் எப்போதும் பெண்களை நகைகள், துணிமணிகள், உணவு வகைகள் மூலம் மகிழ்விக்கவேண்டும்—-(மனு 3—59)

ஒரு ஆசார்யார் (குரு), பத்து உபாத்யர்களுக்கு மேல்;
ஒரு தந்தை 100 ஆசார்யார்களுக்கு மேல் பெருமை உடையவர்;
ஒரு தாயோ ஆயிரம் தந்தைகளை விடப் பெருமை வாய்ந்தவள் —–மனு 2-145

love letter

பேரழகி ராஜகுமாரி லோபாமுத்திரை

இதற்கெல்லாம் மூல காரணம் உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் உளது. அகஸ்தியர் என்பவர் மிகவும் குள்ளம். அவருக்கு விதர்ப்ப நாட்டு பேரழகி, இளவரசி லோபா முத்ராவின் மீது கொள்ளை ஆசை! கல்யாணத்துக்கு மனுப் போட்டார். அவளோ ராஜகுமாரி. ஐயன்மீர்! ராஜா போல உடை உடுத்திக் கொண்டு வாரும், அத்தோடு ஒரு ராஜகுமாரியை மகிழ்விக்கும் அளவுக்கு நகை நட்டுக்களையும் கொண்டுவாரும் என்று சொல்லிவிட்டாள். அகஸ்தியர் அரண்மனை தோறும் ஏறிஏறிப் பார்த்தார்; பலன் இல்லை. இல்வலன் என்ற அசுரனிடம் கேட்டார். அவன் தம்பி வாதாபியை “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சாப்பிட்டு ஏப்பம் விட்டதால் அவன் பயந்து கொண்டே பணத்தைக் கொடுத்து, ஐயா, இங்கே இருந்து போய் விடுங்கள் என்று அனுப்பிவைத்தான். அகஸ்தியர் ராஜா போல படுக்கை அறையுள் நுழைந்தார். லோபாமுத்திரை, அகஸ்தியர் மூலம் ததாஸ்யு என்ற பெறும் கவிஞரைப் பெற்றுக் கொடுத்தாள். இது மஹாபாரத வனபர்வத்தில் உள்ள கதை.

லோபாமுத்ராவின் மீது அகஸ்தியர் கண் ஏன் விழுந்தது? அது ஒரு தனிக் கதை. அகஸ்தியரின் முன்னோரின் ஆவிகள் ஒரு பாழுங் கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு புத்திரனைப் பெற்றால்தான் அவர்கள் கடைத்தேறுவார்கள் என்பதை அறிந்த அகஸ்தியர் உலகிலுள்ள எல்லா அழகிகளின் அம்சங்களை ஒன்று சேர்த்து விதர்ப்ப நாட்டு மஹாராணியின் குழந்தையாக ((லோபாமுத்ரா))) கருவுற, தனது தவ வலிமையால் வழிவகுத்தார்.

ஆண் குழந்தையைப் பெற்று அவர்கள் மூலம் பிதிர் காரியங்களைச் செய்யவேண்டும் என்பது (பிதிர் கார்யம்= நீத்தாருக்கு செலுத்தப்படும் நீர்க்கடன்) தொன்று தொட்டு நிலவும் நம்பிக்கை. ஐயன் வள்ளுவனும் இதற்குச் சான்று பகர்வான். சங்கதமிழ் புலவர்களும் இதை ஆதரித்துப் பாடி இருக்கிறார்கள் (காண்க புறம் 222, புறம் 9 பாடல்கள்).

parijatha,V&A,By T Suba
Krishna bringing Parijatha, Statue from Indonesia at V & A MUseum, London;photo by T Subashini

சத்யபாமா, கைகேயி, சீதை

பாரிஜாத மலர் வேண்டும் என்று கேட்ட உடனே கிருஷ்ணர், சுவர்க்கலோகம் சென்று இந்திரனுடன் சண்டை போட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வந்ததும் பெண்களை மகிழ்விக்கவே!!
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– பாரிஜாத மரம்!!

கைகேயி சொன்னவுடன், ராம பிரான் காடேகியதும் பெண்ணின் வேண்டுகோள் அன்றோ! பொன் மானைப் பிடித்துக் கொண்டு வா என்று ராமனிடம் அடம்பிடித்த சீதையை மகிழ்விக்க ராமனும் ஓடவில்லையா?
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– சிவனுறை கயிலாயத்தையே பெயர்க்க முயன்ற அசுரன் ராவணன் வீழ்ந்துபட்டான்.

SOCIAL Chinese 165281A Chinese New Year

திரௌபதி கோரிக்கை

சௌகந்திக மலர் எனக்கு உடனே வேண்டும் என்று திரவுபதி ஒரு அன்புக் கட்டளை இட்டாள். ஓடினான், ஓடினான், பீமன்- காட்டின் ஓரத்திற்கே ஓடினான். வழியில் அவனுடைய அண்ணன் அனுமன் சண்டைக்கு அழைக்கவே அனுமன் பெருமை தெரிந்தது. மாபாரதப் போரில் கொடியில் உட்கார்ந்து கொண்டு உனக்கு வெற்றி தேடித் தருவேன் என்று அனுமன் வாக்குறுதி கொடுத்தான்.

சௌகந்திக மலர்ப்பொய்கையில், அதைக் காத்து நிற்கும் யக்ஷர்களைக் கொன்று குவித்து மலர் பறித்தான் பீமன். குபேரனுக்கு கொள்ளை மகிழ்ச்சி! ஏன்? யக்ஷர்கள் மீது அகஸ்தியர் இட்ட சாபம் அன்றோடு முடிந்தது

இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– மாபாரதப் போரில் தர்மம் வென்றது. யக்ஷர்கள் மீதான சாபம் நீங்கியது.

மற்றொரு சமயம் தண்ணீர் வேண்டும் என்று திரவுபதி கேட்கவே, காட்டுக்குள் போன நான்கு சகோதர்களையும் ஏரிக்கரை பூதம் (யக்ஷன்) நாலு பேரையும் விழுத்தாட்டியது. இறுதியில் தர்மன் சென்று ஏரிக்கரைப் பேயின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி நான்கு சகோதர்களையும் உயிர்ப்பித்து மீட்டு வந்தான்.

இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: யக்ஷப் பிரஸ்னம் என்னும் பேயின் கேள்வி—பதில் தொகுப்பு. (இதுபற்றி ஏற்கனவே விரிவான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். படித்து மகிழ்க)

hindu girl, bali
Picture of Hindu Girl in Bali, Indonesia

மைத்ரேயி- காத்யாயனி கோரிக்கை
இரண்டு பெண்டாட்டிக்கார ரிஷி யாக்ஞவல்கியர், “பெண்களே, சொத்து சுகங்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு காடேகப் போகிறேன். உங்களுக்கு யாது வேண்டும்?” — என்று கேட்க, மைத்ரேயி தத்துவ உபதேச விஷயங்களே தேவை என கோரிக்கை விடுத்தாள். காத்யாயனி செல்வம் முழுதும் பெற்றாள்.
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: தத்துவ உபதேசம் (காண்க: பிருஹத் ஆரண்யக உபநிஷதம்)

பெண்கள் கோரிக்கை இத்தோடு நிற்கவில்லை: க்ஷத்ரிய குலப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக, வில்லை முறித்தான் ராமன். வில்வித்தையில் வென்றான் அர்ஜுனன். ஆக பெண்கள் என்றால்= கோரிக்கைகள்!!!!

radha or queen

ஆனால் பெண்கள் போட்ட அததனை கோரிக்கை மனுக்களும் மனித குலத்துக்கு நன்மையே செய்ததால், மனு சொல்கிறான். அவர்கள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுங்கள் என்று!!

மனு வாழ்க!! மனுதர்மம் போற்றும் பெண்கள் வாழ்க, வாழ்க!!!

woman

Pictures are taken from various websites;thanks.
this article has been published in English by me.
contact swami_48@yahoo.com

சதுரங்க பந்தம் -4

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் -4
By ச.நாகராஜன்

Post No.1243; Dated 22nd August 2014.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் பாடல் இருந்தது.

நேம னதிவித காம னனைவர்க்கு நேயகம சேம சகாயன் சிதபுஞ்சன் சீர் சின வாவிசய தாமன் மனதிற் சலிக்கா னருட்கல்வி சால்பினொடு மாமணி நேர வளர்மானு வேல்கன வாசகனே

அத்துடன் “சில அரிய பெரிய சித்திர கவிகளுக்கு இலக்கணம் – சதுரங்க பந்தம்” என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்யுள் தரப்பட்டிருந்தது:

அறுபத்து நாலறுபத் திரண்டைம்பா னாற்பானான்
எடுத்த முப்பத் தாறிருபத் தாறிருபத் திரண்டு
பெறுமக்க ரங்களொன்று முதலேழு வரைநிகர்ப்ப
பின்னுமைம்பத் தேழைம்பான் மூன்றொடுநாற் பான்முன்
றுறுமுப்பத் தைந்திருபத் தொன்பதுபன் னேழ்பதினைந்
துளவெழுபத் திரண்டுமுத லெழுபத்தெட் டீறா
மறுவற்று வரப்பாடுங் கவிதைசது ரங்கபந்தம்
வழுத்தியவஃ தெழுபத்தெட் டெழுத்தின்முடி குவதே
துருவக் குறிப்பு

{ 1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}

மொத்த எழுத்துக்கள் 78.
இந்தப் பாடலையும் துருவக் குறிப்பையும் வைத்து சதுரங்க பந்தப் பாடலை ஆராய்ந்ததில் திடீரென்று கீழ்க்கண்ட உண்மை பளிச்சென விளங்கியது:

பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் நே
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ம
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ன
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் தி
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் வி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் த
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் கா
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் நே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் க
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் ச
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் வா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் ன
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் க
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ல்

bandham 4

ஆக சதுரங்க பந்தம் அமைக்கும் விதிகளாக
1) 78 எழுத்துக்கள் உள்ள பாடல் சொற்சுவை, பொருட்சுவையுடன் இலக்கண விதிகளுடன் இயற்றப்படல் வேண்டும்,
2) அதில் மேலே உள்ள படி ஒரே எழுத்துக்கள் குறிப்பிட்ட இடத்தில் வருமாறு அமைக்கப்படல் வேண்டும்..(துருவக் குறிப்பு என இந்த அமைப்பு தரப்பட்டிருக்கிறது.)

இந்த முறையில் இனி சதுரங்க பந்த பாடல்களைச் சரி பார்த்தால் கவிதையை ரசிப்பதோடு இந்த அமைப்பு முறையையும் ரசித்து வியக்கலாம்!

contact swami_48@yahoo.com
**************************

தமிழ் நாட்டில் கேட்ட ஒலிகள்! இளங்கோ ‘’சர்வே’’!!

veena
Mr Abdul Kalam on Veena, Former President of India

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1240; தேதி:-18 August 2014

தமிழ் கூறு நல்லுலகை நன்கு சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் இளங்கோ அடிகளும் கவிச் சக்கரவர்த்தி கம்பனும் அங்கே கண்ட காட்சிகளை அற்புதமாக வருணித்துப் பாடியுள்ளனர். அவர்கள் கண்களை ஈர்த்த கவின்மிகு காட்சிகளை விட, காதுகளை ஈர்த்த இசைமிகு ஒலிகள் சிறப்புடைத்தாம். ஒன்று, இரண்டு கவிதைகளோடு நில்லாமல் பத்துப் பதினைந்து என்று பாட்டியற்றி மகிழ்ந்தனர் இருவரும் —- கம்பரைப் பொறுத்த மட்டில் கோசல நாடு பற்றி அவர் பாடியது, தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். இளங்கோ அடிகள் தமிழ் நாடு பற்றியே இதைக் கூறியுள்ளார்.

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” — என்பர் ஆன்றோர். இதோ அவ்வழியில் சில கவிதைகளை மட்டும் கேட்டு ரசிப்போம்! சுவைப்போம்!!

இளங்கோவின் சிலப்பதிக்காரக் காட்சிகள்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக் குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
பலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்
பயம்பிழ் வீழ் யானைப் பாகர் ஓதையும்
இயங்குபடை அரவமொடு, யாங்கணும் ஒலிப்ப
— காட்சிக் காதை, சிலப்பதிகாரம்

sikkil mala chandrasekar
Sikkil Mala Chandrasekar on Flute

பொருள்:
குன்றுகளில் குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள் பாடிய குரவைப் பாட்டு
கொடிச்சியர் பாட்டு
வேலன் வெறியாடும் பாட்டு
உரலில் தினை மாவு இடிப்போர் பாடும் வள்ளைப் பாட்டு
வயல்களில் சாப்பிட வரும் பறவைகளை விரட்டும் பாட்டு
தேன் கூட்டினை உடைத்தவுடன் குறவர் எழுப்பும் ஆராவார ஒலியும்
பறை முழக்குவதுபோல அருவிகள் எழுப்பும் ஓசையும்
புலியுடன் பொருதும் ஆண் யானையின் பிளிற்று ஒலியும்
பரண் உச்சியில் இருப்போர் விலங்குகளை விரட்டும் ஒலியும்
குழியில் விழுந்த யானைகளை பிடிப்போர் ஆரவாரமும்
சேர மன்னனின் படைகள் எழுப்பும் ஓசையும்
எனப் பல்வேறு ஒலிகள் ஒலித்தன என்பார் இளங்கோ.

வேறு ஒரு இடத்தில் பாண்டிய மன்னன் காதில் பார்ப்பனர் ஓதும் வேதமுழக்கமே கேட்கும், புகார் செய்வதற்கான ஆராய்ச்சி மணி ஒலி கேட்டதே இலை என்கிறார் இளங்கோ:

மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே
–கட்டுரைக் காதை

யானை பிடிக்கும் போது வேடுவர் எழுப்பும் ஆரவாரத்தை கம்பரும் இளங்கோவும் குறிப்பிடத் தவறவில்லை.

பாட்டு என்பதற்கு ஓதை (ஓசை), பாணி, பாடல் என்பனவற்றையும், சப்தம் என்பதற்கு ஒலி, விளி என்பனவற்றையும் இளங்கோ பயன்படுத்துகிறார்.

chenda mela,thrissur
Chenda Mela in Thrissur

கம்ப ராமாயணக் கவிதைகள்

வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல் இயம் துவைக்கும் கம்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே (பால காண்டம் 154)

பொருள்:– கடல் ஒலியைத் தோற்கடிக்கும் அளவுக்கு அயோத்தியில் கேட்ட ஒலிகள்: சங்கு, ஊது கொம்பு, மகர வீணை, மத்தளம் கின்னரம் என்னும் இசைக் கருவி, புல்லாங்குழல் ஆகியவற்றின் ஒலிகளாம்.

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, – கண்ணுளர் ஆடல்தோறும் –
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே.

(வரைக் காட்சிப் படலம் 44)

dusserah festival in Gulbarga
Dusserah Festival in Gulbarga

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை.

(வரைக் காட்சிப் படலம் 46)

((ஓதை= பாட்டு, ஒலி, முழவு= தோல்கருவி, நரம்பு= யாழ், வீணை, வேய்= புல்லாங்குழல், வேழம்=யானை, மது=கள், மேகலை=ஒட்டியாணம்))

இது தவிர பல இடங்களில் உழவர்கள் மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி, வீரர் கால்களில் இருந்து ஒலிக்கும் கழல் ஒலி, மகளிர் கால்களில் இருந்து ஒலிக்கும் சிலம்பு ஒலி, குயில் ஒலி, கிளி மொழி என்று ஏராளமான இடங்களில் ஒலிகளை வருணிக்கிறான் கம்பன்.
gopalakrishna bagavathar
Sri Gopalakrishna Bagavathar on tambura

contact swami_48@yahoo.com

ஏலேல சிங்கன் கதை!

maritime trade

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

“ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான ஒரு கதை உண்டு.

தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர் ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக் குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார். திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான சிந்தாமணி’ தருகிறது.

திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல் வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப் போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா? என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும், அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும் தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம் கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.

indian ship

ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும் உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில் சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச் சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர் பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசார்’’ என்று கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!!

திரும்பி வந்த தங்கம்

ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில் செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும் போகாது!!
இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:

Vashishtiputra_Shri_Pulumavi
Satavahana coin with Indian ship

அழக்கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)

பிறர் கண்ணீர் சிந்துமாறு அழ, அழ பொருட்களைச் சேர்த்தால் அவர்களுடைய பொருட்கள் எல்லாம் அவர்களை அழ, அழ வைத்துவிட்டு ஓடிப் போகும். ஆனால் தூய்மையான வழியில் வந்த பொருட்களை, ஒருவர் இழந்தாலும், பின்னர் நல்லபடியாகவே முடியும் (குறள் 659)

இலங்கையில் ஏலேரா என்றொரு தமிழ் மன்னன் நீதியும் நேர்மையுமிக்க சீர் மிகு ஆட்சி நடாத்தினான். அவனை மனுநீதிச் சோழன் என்பாரும், ஏலேலா (காண்க: கல்கியின் பொன்னியின் செல்வன்) என்பாரும் உளர். ஆயினும் ஒரே பெயரில் பலர் இருந்ததால் இந்திய சரித்திரத்தில் இன்று வரை குழப்பம் நீடித்து வருவதை நாம் அறிவோம்.

sailing ship pics 1600X1200

வள்ளுவர் இறந்த பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தது ஏலேலன் என்றும் அவருக்கு மயிலையில் கோயில் எழுப்பித்தவன் ஏலேலன் என்றும் செவிவழிச் செய்திகள் கூறும்.

–சுபம்–

On Sugarcane Morals

Sugarcane-

Compiled by London Swaminathan
Post No. 1237; Dated:16th August 2014.

“On umbrella morals” was an English essay written by A G Gardiner. The contents and the style were very good. It was part of my graduate studies thirty years back. When I remembered it, I thought of writing (actually compiling) “On Sugarcane Morals” from Indian literature.

Sugarcane is used by Indian poets to teach several morals. Naaladiyar and Tirukkural are Tamil books of ethical teaching. In the Naladiyar we have 400 verses composed by various poets.

One poet used the sugarcane as a simile to stress the importance of virtues. He says, “having obtained a human body so difficult to attain, act so as to procure great merit by it; for in the next birth, charity will greatly help you just as the juice of sugarcane, while your body will decay like the refuse of that cane.”

sugar-cane-plantation
Picture of sugar cane plantation

When another poet heard it, he immediately composed another verse using the same sugarcane analogy, “those who have pressed the sugarcane and extracted the jiggery (coarse brown sugar) from it in time will not repent when the refuse rises in burning flames; so will those, who have with much exertion secured the benefits of the body not grieve at the approach of death”.

Under the chapter on Education, another poet used sugarcane to illustrate the benefit of having educated friends: “ The friendship of the learned is like eating the sugarcane from the top (downwards) and the attachment of those who are devoid of any good qualities is like eating it from the root (upwards)”.

sugarcane machine1
Picture of Sugar cane Juice Machine

Sugarcane is compared with the good people undergoing great difficulties. When one bites a sugar cane or otherwise extracts its juice by pressing or beating it so as to break its joints, it will be still sweet to the taste. In like manner though people should abuse harmfully, the high born will never speak anything that will affect the guilty person.

To illustrate perseverance is good, one of the poets of Naladiyar says, “the hair like flower of the sugarcane is devoid of any fragrance; even so, what will be the good of being born in a highly and lofty family, if there be not that perseverance which can carve out a name for its possessor.

In the chapter on Choice of Friendship
A poet says, “Friendship with the wise whose intelligence divines our thoughts, is like eating the sugarcane from the top; but connection with people devoid of good disposition is like eating it from the opposite end, the root.

A Chinese proverb says, “You can’t expect both ends of a sugarcane are as sweet”.

vellam
Jaggery (coarse sugar) shop

Tiruvalluvar’s use of sugarcane simile

Unlike the poets of Naladiyar, Valluvar used the sugarcane with a negative connotation. He says, “At a mere word the good will melt; but the mean, like the sugarcane, yield only under pressure (Kural 1078)

Iksu, the generic name for sugarcane, is first found in the Atharvaveda 1-34-5 and the later Samhitas. Ikshvaku occurs in the Rig Veda 10-60-4

sugarcane-juice1
Extracting sugar cane juice

((I have already written a research paper on Sugarcane Dynasty (Ikshvaku Vamsa) of ancient India. I have mentioned there that Indians invented the method of making sugar. Sugar was also found in Indus valley civilization. A Tamil poetess praised a Tamil king for introducing sugarcane. Probably he also belonged to the Ikshvaku vamsa or he introduced it to Tamils. Please read the full details in my article)).

Contact swami_48@yahoo.com

jaggery
Jaggery blocks

பூ………., இவ்வளவுதானா?

daisy-italy
National flower of Italy

மலர் – பூ – க்விஸ் (கேள்வி-பதில்)

தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1234; தேதி: 15 ஆகஸ்ட் 2014

பூ…… இவ்வளவுதானா? என்று சொல்லி ‘’பூ’’–வை அவமதிக்கிறோம்! எங்கே இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுங்கள், பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் சரியான விடை சொன்னால் என்னைப் பார்த்து, பூ….. இவ்வளவுதானா? என்று சொல்ல உங்களுக்கு மீண்டும் ஒரு ‘சான்ஸ்’ தருகிறேன்:–

iris-croatia
National flower of Croatia

1.இந்தியாவின் தேசிய மலர் எது?

2.பீம சேனனிடம் திரௌபதி கேட்ட மலரின் பெயர் என்ன?

3.பிள்ளையார் சதுர்த்தி அன்று அவருக்கு தமிழர்கள் சாத்தும் பூ, என்ன பூ?

4.சரஸ்வதியும், லெட்சுமியும் அமர்ந்திருக்கும் மலர்கள் யாவை?

5.எந்தப் பூவை பானையில் போட்டால், தண்ணீர் வாசனை பெறும் என்று நாலடியார் செய்யுள் சொல்கிறது?

bunga-raya-malaysia
National flower of Malysia

6.எந்தக் கட்சிக்கு தாமரை தேர்தல் சின்னம்?

7.திருவள்ளுவர் நான்கு குறட் பாக்களில் பயன்படுத்தும் மலர் எது?

8.கடலைக் கடைந்த போது வெளியான மலர் (மரம்) எது?

9.’ஜபாகுசும’ சம்காசம் என்று துவங்கும் நவக்ரஹ ஸ்தோத்திரத்தில் வரும் பூ என்ன?

10.சூரியனைக் கண்டால் மலரும் தாமரை, நிலவைக் கண்டால் மலரும் மலர் என்ன?

shapla-bangladesh
National flower of Bangladesh

11.சிவன் அணியும் மலர் எது என்று நால்வர் பாடுகின்றனர்?

12.சத்யபாமா கேட்ட மலர் எது?

13.போருக்குச் செல்லும்போது தமிழர்கள் அணியும் பூக்கள் எவை?

14. எந்தப் பூ 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்? அந்தப் பூ முருகனுக்கும் பிடித்தது.

15.நவக்ரஹ ஸ்தோத்திரத்தில் கேது கிரஹத்தை வர்ணிக்கும் பூ எது?

red-rose-iraq
National flower of Iraq

16.செவ்வாய்க் கிழமைதோறும் அரளி மாலை பெறும் தேவி யார்?

17.அபிராமி பட்டர் …………………. பூ நிறத்தாளை என்று தேவியை வழிபடுகிறார். கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்

18. சிவ பெருமானுடைய அடி முடி தேடிய கதையில், பொய்ச் சாட்சி சொல்லிய பூ எது?

19. கைலாஷ் மானசரோவர் ஏரியில் பூக்கும் தெய்வீக மலரின் பெயர் என்ன?

20.எந்தப் பூங்கொடிக்கு பாரி மன்னன் தேர் ஈந்தான்?

jasmine-indonesia
National flower of Indonesia

விடைகள்:
1.தாமரை 2.சௌகந்திக மலர் 3. எருக்கம் பூ 4.சரஸ்வதி=வெண்தாமரை, லக்ஷ்மி=செந்தாமரை 5. பாதிரிப் பூ 6. பாரதீய ஜனதா கட்சி 7. அனிச்சம் 8 பாரிஜாத மரம்/மலர் 9.ஜபா குசும= செம்பருத்தி 10. குமுதம், அல்லி 11. கொன்றை (அணிந்தவனே) 12. பாரிஜாத மலர் 13.வெட்சி, கரந்தை, காஞ்சி, வஞ்சி,உழிஞை, நொச்சி, தும்பை, வாகை 14. குறிஞ்சி/ குறிஞ்சி ஆண்டவர் 15.பலாச புஷ்பம் 16.துர்கை 17.மாதுளம் பூ நிறத்தாளை 18. தாழம்பூ 19. பிரம்ம கமலம் 20. முல்லைக் கொடி

magnolia-north-korea
National flower of North Korea

தமிழிலும் ஆங்கிலத்திலும் மேலும் 25 கேள்வி பதில் பதிவுகள் இங்கே உள்ளன. படித்துப் பயன் அடைக!! பதில் கண்டுபிடித்து இன்புறுக!!

நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!

War formation in MBh

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1231; தேதி 13 ஆகஸ்ட் 2014.

ஆறு பருவங்கள் — நவ ரசம் — நால் வேதம் — எண்வகைத் திருமணம் — நால் ஜாதி — சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் — தென்புல வாழ்நர் (இறந்தோர்)—வேத கால இந்திரன், வருணன் — அறம் பொருள் இன்பம் — முதலிய பல்வேறு இந்து மதக் கொள்கைகளைத் தொல்காப்பியரும் சங்க கலப் புலவர்களும் விதந்து ஓதி இருப்பது குறித்து 1000 கட்டுரைகளில் கண்டோம். இதோ இன்னும் ஒரு கட்டுரை.

இதில் மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால் வகைப் படைகளைக் காளிதாசனும், அர்த்தசாஸ்திரம் எழுதிய பிராமணன் சாணக்கியனும், வியாசரும், கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச்சும் எப்படி எழுதினரோ அதே போல சங்க காலக் கவிஞர் பெருமக்களும் போற்றிப் பாடி இருப்பதைக் காணலாம்.

இந்தியர்களை 1)ஆரியர்கள், 2)திராவிடர்கள், 3)முண்டா இன மக்கள், 4)சுருட்டை முடி—கரியவிழி—போண்டா மூக்கு ஆதித் திராவிட மலை ஜாதியினர் எனப் பிரித்து இனவெறிக் கொள்கை புகுத்தி, விஷ விதைகளைத் தூவியவர்களைப் புற நானூற்றுப் புலவர்கள் புரட்டிப் புரட்டி அடிப்பதைக் காணலாம். மஹாபாரதத்தில் உள்ள தேர், யானை, குதிரை, காலாட் படைகளை காளிதாசன் பாராட்டிய மாதிரியில் அப்படியே சங்க காலப் புலவர்களும் போற்றுவதில் இருந்து தெரிவது என்ன?

Back to Godhead - Volume 12, Number 05 - 1977

இது ஏக பாரதம்; இங்கு வடக்கு தெற்கு என்னும் வேறு பாடு கிடையா; அங்கு என்ன இருந்ததோ அதேதான் இங்கும் பின்பற்றப்படும்; தமிழ் கலாசாரம், வடக்கத்திய பண்பாடு என்று வேறு பாடு எதுவும் இல்லை; சிறிய வேறு பாடுகள் உண்டு. மணப்பாறையில் முறுக்கு நன்றாக இருந்தால், திருநெல்வேலியில் பெட்டி வெல்லம் நன்றாக இருக்கும்; பம்பாயில் ஹல்வா ருசியாகக் கிடைத்தால் கல்கத்தாவில் ரஸகுல்லாவும் டில்லியில் பூசனிக்காய் அல்வாவும் ருசியாகக் கிடைக்கும். இவ்வளவுதான்! இதெல்லாம் மேம்போக்கான சிறிய வேறு பாடுகள்! ஏனெனில் எல்லாம் சர்க்கரை-வெல்லம்-மாவின் கலப்புதான்!

அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த இந்தியப் படை: புளுடார்ச் சொன்னது
அலெக்ஸாண்டரை எதிர்த்து தோல்வி அடைந்த இந்திய மன்னன் புருஷோத்தமன் (போரஸ்) ஒரு சின்ன அரசன். அவனை வெல்வதற்கே அலெக்ஸாண்டர் படாத பாடு பட்டார். மகத சம்ராJயத்தின் மாபெரும் படை பலம் உலகியே நடுநடுங்க வைக்கும் அளவு கடலினும் பெரிது. இதைக் கேட்டவுடன் அலெக்ஸாண்டரின் படைத் தளபதிகள் முனுமுனுக்கத் துவங்கினர். மேலும் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு வந்தது நாடு பிடிப்பதற்கு இல்லை. இந்து மத சாமியார்களைச் சந்தித்துப் பேசி அவர்களை கிரேக்க நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவன் லட்சியம் ( காண்க எனது பழைய கட்டுரை:– நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் ).

மகத சாம்ராஜ்யப் படைகள் எண்ணிக்கை பற்றி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச் தரும் தகவல்:

(ரத) தேர் — 7000
(கஜ) யானை — 8000
(துரக) குதிரை – 80,000
(பதாதி) காலாட்படை வீரர்கள்—2,00,000

அந்தக் காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன. இதில் 16 நாடுகள் மஹா சாம்ராஜ்யங்கள். இதில் இரண்டு மூன்று நாடுகள் சேர்ந்தால் போதும். அலெக்ஸாண்டரைக் கதறக் கதற அடித்திருக்கலாம்! கிரேக்கர், சகரர் படைகளை விக்ரமாதித்தனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அடித்து விரட்டியதை நாம் அறிவோம்.

Battle_at_Lanka,_Ramayana,_Udaipur,_1649-53

சம பல தர்ம யுத்தம் : காளிதாசன் சொன்னது

பத்தி பதாதிதம் ரதினம் ரதேசஸ் துரங்கசாதீதகாசிரூடம்
யந்தா கஜஸ்யாப்யபத கஜஸ்தம் துல்ய ப்ரதித்வந்த்வீ பபூவ யுத்தம்
—ரகுவம்சம் 7—37

காலாட்படை வீரன், மற்றொரு காலாட்படை வீரனையே எதிர்த்தான். தேர்வீரன் தேர்வீரனையும், குதிரை வீரன் இன்னொரு குதிரை வீரனையுமே எதிர்த்தான். யானையை அடக்குபவன் யானை வீரனையே எதிர்த்தான். இவ்வாறு யுத்தம் சமமான பகைவனை உடையதாக இருந்தது (ரகு 7—37). அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடத்தினார்கள். பொதுமக்களைத் தாக்க மாட்டார்கள். புறமுதுகு காட்டி ஓடுவனைக் கொல்ல மாட்டார்கள். சம பலம் உடையவர்கள் சண்டையில் மோதுவார்கள். காளிதாசனும் பல இடங்களில் நால்வகைப் படைகளைப் பகர்வான்

good picture

சங்கப் புலவர்கள் சொன்னது

சங்க இலக்கியத்தில் மஹா பாரத கால நால்வகைப் படை முறையே பின்பற்றப்பட்டது. இது சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. மஹாபாரதத்தில் வரும் ‘’ஆநிறை கவர்தல்’’ தமிழிலும் உண்டு. இதோ நால்வகைப் படை பற்றி வரும் குறிப்புகள்:–

கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும்
—-மதுரை மருதன் இளநாகன், புறம் 55

நெடுநல் யானையும், தேரும், மாவும்
படை அமை மறவரும், உடைய யாம் என்று
—நெடுஞ்செழியன், புற நானூற்றுப் பாடல் 72

வளிநடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனா அ
கடல் கண்டன்ன ஒண்படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
–மாடலன் மதுரைக் குமரனார், புற நானூற்றுப் பாடல் 197

பாடல் 239 பேரெயின் முறுவலார், 345 அடைநெடுங் கல்வியார், 351 மதுரைப் படைமங்க மன்னியார், 368 கழாத்தலையார், 377 உலோச்சனார் ஆகியோரும் நால்வகைப் படைகளைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் மிகப் பழைய பகுதி என்பதால் புறநானூற்றில் இருந்து மட்டும் எடுத்துக் காட்டினேன். தமிழ் இலக்கியம் முழுதும் உள்ள நால்வகைப் படைகளைக் குறிக்க வேண்டுமானால் தனி நூலே எழுத வேண்டியிருக்கும். மாபாரத கால வழக்கத்தை தமிழர்கள் — அதற்கு 3000 ஆண்டுகளுக்குப் பின் —அப்படியே பயன்படுத்தினர்.

( களிறு=யானை; மா, இவுளி, பரி= குதிரை, மறவர்= காலாட்படை)

Krishna_Narakasura

வியாசன் சொன்னது

மாபாரத யுத்தத்தில் பாண்டவர் தரப்பில் ஏழு அக்க்ஷௌகினி (பட்டாளம்) சேனையும் கௌரவர் தரப்பில் 11 அக்க்ஷௌகினி (பட்டாளம்) சேனையும் மோதின. ஒரு அக்க்ஷௌகினி (பட்டாளம்) என்பதில்

தேர் (ரத) – 21,870
யானை (கஜ) – 21,870
குதிரை (துரக) – 65,610
காலாட்படை (பதாதி) வீரர்கள் – 109,350

இருப்பார்கள். இதை பதினெட்டு என்னும் எண்ணால் பெருக்கினால் வரும் தொகையே மாபாரத யுத்தத்தில் போரிட்டோர் எண்ணிக்கை ஆகும்!!! இவ்வளவு பெரிய எண்ணிக்கை நம்பாதவர்களும் நால் வகைப் படைகள் இருந்ததை மறுப்பதற்கில்லை. இதை மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட நந்த வம்சம் பற்றி ப்லூடார்ச் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையே என்று தோன்றும். ஏனெனில் பாரத நாடு முழுதும் உள்ள சேனைகள் போரில் பொருதின.

elephant attack

சாணக்கியன் சொன்னது

சாணக்கியன் என்னும் பிராமண அறிஞன் உலகின் முதலாவது பொருளாதார நூலை எழுதிய மாபெரும் அறிஞன். அவன் எழுதாத ராஜாங்க விஷயமே இல்லை. இன்று பல நாடுகள் பின்பற்றும் தூதர், உளவு பார்க்கும் முறை, நட்புறவு, சாம–தான–பேத–தண்டம் என்னும் சதுர்வித உபாயங்கள் முதலிய அத்தனை பற்றியும் அர்த்த சாஸ்திரம் என்னும் நூலில் அற்புதமாக — மிக அற்புதமாக – எழுதிவிட்டான். நால் வகைப் படை அமைப்பு பற்றி எழுதிய அவன் ஒவ்வொரு பதவியில் உள்ளவர்களுக்கும் என்ன சம்பளம் என்றும் எழுதி இருக்கிறான்!!!

சதுரங்கம் என்னும் விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. இதற்கு இந்த நால்வகைப் படைகளே காரணம். மேலும் நான்கு என்ற எண் இந்துக்களுக்கு மிகவும் பிடித்த எண். —- ‘’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’’ —- என்பது தமிழ் பழமொழி ( நாலு=வெண்பா, இரண்டு=குறட்பா ). நாலு என்பது உறுதியைக் குறிப்பதால், யுகம், ஜாதி, வேதம், பிரம்மாவின் மானச புத்ரர்,, நால்வர் (சைவப் பெரியார்), படைகள், உபாயங்கள் என்று நூற்றுக் கணக்கான விஷயங்களை இந்துக்கள் நான்காகப் பிரித்தனர் (காண்க: எனது பழைய கேள்வி-பதில் ‘’நீங்கள் நாலும் தெரிந்தவரா?’’)

வாழ்க தமிழ்; வளர்க ஒருமைப் பாடு!!

Four Wings of Hindu Army: Blow to Aryan- Dravidian Theory!

War formation in MBh

Research Paper written by London Swaminathan
Post No.1230 ; Dated 13th August 2014.

The Four Limbs of Army, ‘Chatur Anga’ in Sanskrit , is a Hindu concept found in ancient Tamil and Sanskrit literature. It is in the 2000 year old Sangam Tamil literature and earlier Sanskrit literature including that of the greatest Indian poet Kalidasa (1st century BCE or earlier) and world’s first economist and political scientist Chanakya (3rd Century BCE). This is a severe blow to the supporters of ‘racist theory’ which divide Indians into Aryans, Dravidians ,Mundas and aborigines.

The most famous board game Chess (Chaturanga) was invented in India is a fact acknowledged by everyone. This is based on the four wings of army Ratha, Gaja, Thuraga, Pathadi (Chariot, Elephant, Horse, Foot soldier) that we see in all the Indian wars from the days of Mahabharata, probably earlier.

From the ancient times Hindus from the Himalayas to the land’s end Kanyakumari had the same thought process. Foreign “scholars” who wanted to sow the seeds of division invented (concocted) a theory of dividing Indians which has no basis in Tamil or Sanskrit literature.

Back to Godhead - Volume 12, Number 05 - 1977

Hindus are fascinated with number FOUR for various reasons. Number four is considered strong, long lasting, enduring. They divided the eras (yugas), Vedas, four stages of life (Purushartha), army divisions, castes, four methods of ( Chaturvitha Upaya) winning an enemy etc.

Hindu army was also divided in to four wings of
Ratha= chariots
Gaja= elephants
Thuraga= horses
Patha athi= infantry.

Battle_at_Lanka,_Ramayana,_Udaipur,_1649-53

Powerful Nanda Army!

According to the Greek historian Plutarch (45 CE to 120 CE), Alexander the Great was afraid of the mighty Indian army. Plutarch wrote that Nanda dynasty had 200,000 soldiers, 80,000 cavalry, 8000 chariots and 7000 elephants. Nanda dynasty ruled India in the fourth century BCE.

Kautilya alias Chanakaya gives lot of information about the four wings of army in his Arthashastra (Chapter 10). He even gives the salary for each post. An amazing planning is seen there.

During Mahabahara war 11 divisions of Kauravas and 7 divisions of Pandavas fought in Kurukshetra. One division in Sanskrit is called Akshouhini, which consists of

21,870 chariots
21,870 elephants
65,610 horses
109,350 foot soldiers.

We have to multiply this number by 18 (11+7) divisions!! A huge number indeed! Whether we believe it or not at least we know for sure the four wings of army existed at that time. The war was fought around 3100 BCE!

Krishna_Narakasura

Kalidasa on Equal Fight

The beauty of this fourfold division is that it is found in Sangam Tamil literature as well. They copied it simply from the North. Kalidasa who lived in the first century BCE or earlier says about it in several places including
Raghu Vamsa 7-37:-

Paththi padanim rathinam rathesasthurangasadhi thuragathirudam
Yantha gajasyabhya pathangajastham thulya parathi dwanthvi bhabuva yudhdham
———(Raghu 7-37)

It was a dharma yudhha (war based on rules of equal strength). Infantry fought with infantry only. A charioteer fought with another charioteer only and so do the elephant man and horse man fought with each other. The war was fought between the equals (7-37).

good picture
Tamil Poets on Fourfold Army

Maruthan Ilanagan, a Tamil poet, says it in Purananuru verse 55. It is repeated by Pandya King Neduncheziyan (Puram 72), Adai nedum Kalviyar (Puram 345),Madalan Madurai Kumaranar (Puram 197), Pereyin Muruvalar (Puram 239), Madurai Padai Manga Manniyar (Puram 351),Ulochanar (Puram 377) and Kazaththalaiyar (Puram 368).

There are innumerable references in the Tamil literature. Since Purananuru verses are considered very old poems in the Sangam corpus, I quoted only from the Purananuru. All the above poets lived in the first few centuries of our era.

Sangam Tamil poets shattered the Aryan- Dravidian ‘Racist theory’ with countless references like this. Whatever we find in the North we find in the South of India. There is no difference between the south and the north in the culture or beliefs. People who did not know both Tamil and Sanskrit wrote lot of rubbish in the past. It will take years to clear that Himalayan quantity of Aryan – Dravidian rubbish!!
elephant attack

God Bless India, that is Bharat!

கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

mahabharata-game-of-dice

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1229 ; தேதி 12 ஆகஸ்ட் 2014.

1500 அண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரறிஞன் திருவள்ளுவன் தமிழர்களைக் கடுமையாக எச்சரிக்கிறார்:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலைப் புகின் (குறள் 937)

கழகத்தில் காலத்தைக் கழித்தால் பரம்பரையாக அவனுக்குக் கிடைத்த செல்வமும் தொலையும். அவனிடமுள்ள எல்லா நல்ல குணங்களும் அழிந்து போகும்!
கழகம்= சூதடும் இடம்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் ( குறள் 935)

கழகத்தை நம்பி பொருள் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர் பலர் உண்டு! காரணம்? சூதாடும் இடம் (கழகம்), சூதாடும் கருவி, தனது சூதாட்டத் திறமை —- இவற்றை எல்லாம் நம்பி, ‘’இல்லாமல்’’ போனவர்கள் பலர்!

சுருக்கமாகச் சொன்னால் கழகத்தில் சேராதே, கழகத்துக்குப் போகாதே, போனால் நீ அழிந்து போவாய்!
வாழ்க வள்ளுவன்! வளர்க அவன் அறிவுரை!!

இதற்கு முன்னும் பின்னும் உள்ள எட்டு குறள்களில் முத்து முத்தாய் உதிர்க்கிறான் வள்ளுவன்:

sokkattan

புல்லட் பாயிண்ட் 1:
மீனைப் பார்த்தாயா? தூண்டிலைப் பார்த்தாயா? என்ன தெரிந்தது. உன் கதியும் அதே கதிதான் (குறள் 931)

புல்லட் பாயிண்ட் 2
நேற்று லட்டரியில் பத்து ரூபாய் விழுந்ததா? இனிமேல் உனக்கு நூறு முறை தோல்விதான், நீ ஒரு ஏமாளி (குறள் 932)

புல்லட் பாயிண்ட் 3
காயை உருட்டினால் பொருள் கிடைக்கும் என்று சொன்னாயா? உன் கிட்ட நல்ல வழியில் வந்த பொருளும் உருளப் போகுது! (குறள் 933)

புல்லட் பாயிண்ட் 4
டேய்! மண்டு! ‘பெட்’ கட்டினாயா? ரேசுக்குப் போனாயா? லாட்டரி சீட்டாய் வாங்கிக் குவிக்கிறாயா? இனிமேல் உனக்கு வறுமை, சிறுமை ஒன்றுக்கும் குறைவே இல்லை, போ! (குறள் 934)

புல்லட் பாயிண்ட் 5
சூதாட்டத்துக்கு இன்னொரு பெயர் முகடி (மூதேவி). அவள் உன்னை விழுங்கினால் சோற்றுக்கே லாட்டரிதான் (குறள் 936)

புல்லட் பாயிண்ட் 6
சூதாடினாயா? இனிமேல் உன் வாயில் பொய் நிறையவே வரும், அருள் எல்லாம் ஓடிப்போகும் (குறள் 938)

புல்லட் பாயிண்ட் 7
உனக்கு இனிமேல் —- “ரோடி, கப்டா அவ்ர் மகான்” — கிடைக்காது. அதாவது உணவு, புகழ், கல்வி, உடை, செல்வம் ஆகிய ஐந்தும் ‘அவுட்’! (குறள் 939)

புல்லட் பாயிண்ட் 8
நோய் வந்தவுடன் உடம்பின் மேலே கூடுதல் காதல் வருது இல்ல! அதே போல சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மேல உனக்கு “லவ்” அதிகரிக்கும், ஜாக்கிரதை! (குறள் 940)

banu karnan 2

ரிக்வேதம் என்ன சொல்கிறது?

சூதாடாதே, நிலத்துக்குப் போய் சோளம் விதை!
கொஞ்சம் ஜெயித்தவுடன் அதைப் பற்றி உயர்வாக எண்ணி விடாதே!
உன்னுடைய ஆடு மாடுகளை எண்ணிப் பார், உனக்கு மனைவியும் உண்டு!
இதுதான் சாவித்ரியே என் கிட்ட சொன்னாள்!
(மண்டலம் 10-34-13)

உலகின் மிகப் பழைய சமய நூல் கூறிய அறிவுரை இது!
கவச ஐலூசர் என்ற முனிவர் காதில் ஒலித்த மந்திரம் இது. வேத மந்திரங்களை சங்க காலப் புலவர்கள் ‘’கேள்வி’’ (காதில் விழுந்தது) என்றும் ‘’மறை’’ (ரகசியம்) பாடுகின்றனர்.

கம்பன் என்ன சொன்னான்?

வள்ளுவனுக்கு சளைத்தவனா கம்பன்? அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்?

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த! நினக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவையென ஓர்தியே (கம்ப ராமாயணம், மந்தரை-2)
ஒப்பிடுக : குறள் 934

banu karnan

அறநெறிச்சாரம் (147) என்ன சொல்கிறது?

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை
ஒப்பிடுக: குறள் 939.

பாரதி என்ன சொன்னான்?

“கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்பான் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் — சீச்சீ! சிறியர் செய்த செய்கை செய்தான்”
என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடல் சூதாடிய தர்மபுத்திரனைச் சாடுகிறது!

வள்ளுவன் வாழ்க ! (சூதாட்டக்) கழகங்கள் அழிக !!