Interesting Story about an unknown Tamil King!

05FR_MURALS-TIRUVAR_742658g

Mucukundan in Tiruvarur Temple, Tamil Nadu

Research paper written by London Swaminathan
Post No.1194; Dated 25th July 2014.

Very interesting stories are woven around a Choza king who was not recorded or documented in history. The Choza king Mucukunda is in the Puranas and Tamil literature. But history does not know him. From Kandhapurana and Silappadikaram commentaries we know the following details about him:

1.He helped Indra in defeating a demon.
2.Indra gave him a goblin (Bhuta) to protect his city. Later Chera took it to Vanji.
3.Mucukunda ruled from Pumpukar, Choza port city or Tiruvarur.
4.Mucukunda was an ardent devotee of Shiva.
5.He received several statues from Indra and installed them in and around Tiruvarur.
6.His face looked like a monkey (Musu = Monkey).
7.Mucukunda celebrated Indra Festival. He was very much into it.
8. A lot of Sthalapuranas have recorded Mucukunda’s role in local temples. He is connected with Tiruvarur, Tirumaraikkadu, Nagappatinam, Tirunallaru, Tirukkarayal, Tiruvaymur and Tirukkuvalai.

Following are the references from the Puranas and Tamil Epic Silappadikaram.
Pumpukar was a port city in the Chola kingdom. The importance of Pukar was not long lived. Now part of it is under the sea– Bay of Bengal. Anticipating the forthcoming devastation of the city, ‘buta’ (goblin) at Butachahukkam, which was brought from Indra’s abode by Mucukunta, was removed to Vanji by the Chera king. Source : –Canto 28 commentary of Silappadikaram

mural tiruvarur

Tiruvarur Temple Murals

Tamil epic Silappadikaram while describing the Indra festival says that the dancers performed Tunankai dance to ward off the evil which might befall the victorious king Mucukuntan. Whole Canto Five of Silappadikaram is devoted to a detailed description of Indra festival. It was an annual festival lasting for 28 days. Lot of men and kings came from the northern parts of India came to watch the festival. It commenced on the full moon day in the month of Chitra and with the preliminary worship of the guardian deity who was sent by Indra to help an ancient king of the Pukar line, Mucukunta. Sanskrit literature has many references to Indra dwajam festival. (For details read my earlier post on Indra Festival)

In Canto Six of Silappadikaram, the story of Mucukundan is narrated through the mouth of a Vidyadara (celestial being). He says to his wife that was the flag hoisting day of Indra Festival in Caampapati (Pumpukar). He said to his wife, “We shall go and witness the place where the great Bhutam (goblin) eats the sacrifice offered to it having carried out Indra’s orders to ward off the evil effects of the arrows aimed by hosts of swift going Asuras against the terror stricken but best of men, the victorious king Mucukunda, while he was keeping watch, tiger like over Indra’s city.

To cut the story short, once Mucukunda helped Indra and he in turn sent his Bhuta to protect the city. He gave him another boon that whoever wakes him from his sleep will be burnt to ashes.

Tiruvarur_temple,_tank,_car
Tiruvarur Temple and Tank

Lord Krishna was chased by a Kala yavana and Krishna entered the cave where Mucukunda was sleeping. When Mucukunda became tired he got a boon from God to sleep undisturbed for a long time in a cave. Kalayavana also entered the cave and slapped on Mucukundan thinking that it was Krishna pretending to sleep. When Mucukunda opened his eyes, Kalayavana was burnt to ashes. Tricky Krishna came out of his hiding and blessed Mucukunda. He advised him to go to Badrinath.

Bhagavatha and Skanda Puranas give a different account about Mucukunta . He is one of the three sons of Mandhata and Bindumati. His brothers are Purukutsa and Ambarisa. Hearing that Kala Yavana was destroying Devas , Mucukunta entered the cave, the residence of the Yavana, and slew him, to the wonder of the Devas. Indra offered him a place of honour in heaven. But Mucukunta wanted to go on sleeping in that cave undisturbed for an unlimited period.

Choza history has not recorded him in the historical line of known Choza kings. So we don’t know when it all happened.

Origin of Cholzas is shrouded in mystery. Pura Nanuru of Sangam literature and Silappadikaram of Post Sangam period praised Sibi Chakravarthy in many places as the forefather of the Chozas. Sibi ruled North West of India, far away from the Choza territory of Tamil Nadu.

Story of Mucukundan is also shrouded in mystery. While story of Sibi happened in North West India, Mucukundan was linked with Tiruvarur and its surrounding temples in Tamil Nadu.

tirukkuvalai
Tirukkuvalai Temple.

Tamil Encyclopeadia Abidana Chintamani adds more interesting stories: Mucu means monkey and when he was born as a monkey in the Himalyas, he did offer Bilva leaves to Shiva. As a result of this Puja he was born as a son of Dilipa and Mangalvathy in the solar race found in Hindu Puranas. Then he married Vichitravathy and helped Indra in his fight against Vala. When Indra told him that he would give him a gift, Mucukundan wanted a particular Shiva idol from Indra. That was given to Indra by Vishnu. But Indra gave him a different idol. This happened six times and at last he got the idol he wanted. He installed all the idols in different temples in Thanjavur district. The main idol was installed in Tiruvarur.
Please read my earlier post

Sibi Story in Old Tamil Literature (Did Tamil Chozas come from the North?) posted on 15 July 2013.

vedaranyam
Tirumaraikkadu (Vedaranyam) Temple

contact swami_48@yahoo.com

Pictures are taken from various sites;thanks.

சேரன் செங்குட்டுவனுடன் சென்ற 102 நாட்டியப் பெண்கள் !!!

cheran senguttuvan

கண்ணகி சிலையுடன் செங்குட்டுவன் ஊர்வலம்

ஆய்வுக் கட்டுரை :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1193; தேதி:- 25 ஜூலை 2014.

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் ஆரம் படைத்த தமிழ்நாடு: — என்று சுவைபடப் பாடினான் பாரதி. உண்மயிலேயே சுவையான காவியம் மட்டும் அன்று; தமிழ் கலைக் களஞ்சியமும் கூட!

தமிழ் மன்னர்களில் இமயம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியோர் சிலரே; அத்தகைய மாவீரர்களில் ஒருவன் சேரன் செங்குட்டுவன். இவன் செய்த சாதனைகள் பற்பல:–

1.இமயம் வரை சென்று புண்ய இமய மாமலையில் கல் எடுத்து, அதைப் புனித கங்கையில் நீராட்டி, பத்தினித் தெய்வத்துக்கு – கண்ணகி தேவிக்கு சிலை எடுத்தான்.

2. தமிழர்களை இகழ்ந்த கனக விசயன் என்ற சின்ன அரசர்களை தலையில் கல் சுமக்க வைத்தான.

3.மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்த சாதவாஹன பிராமண மன்னர்களுடன் நட்பு பூண்டான். இமயம் வரை எளிதில் செல்ல இது உதவியது.

4.கடற்கொள்ளையர்களை ஒழித்துக் கட்டினான்.

5. செங்குட்டுவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனர்களைச் சிறைப்பிடித்து தலையை மொட்டை அடித்து தலையில் எண்ணையை ஊற்றி அவமானப்படுத்தினான். செங்குட்டுவன் காலத்தில் அவர்கள் அடங்கி ஒடுங்கி சேவகம் புரிந்தனர்.

6. இவன் ஒரு தீவிர தமிழ் ஹிந்து; இமயம் ஏகுவதற்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலை வலம் வந்தான். சிவனின் திருப்பாதங்களைத் தலையில் சுமந்தான். அந்த நேரத்தில் பெருமாள் கோவில் பட்டர்கள் ஓடிவந்து கொடுத்த பிரசாதத்தை தோள் மேல் வைத்து வலம் வந்தான். தலையில் சிவன் பாதம், தோளில் விஷ்ணு பிரசாதம். “அரியும் சிவனும் ஒன்னு, அரியாதவன் வாயில் மண்ணு” என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினான்!! அசல் தமிழ் ஹிந்து!!!

“குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள் கென
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு, சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வங்கி, அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையின் செவ்வுழி”– கால்கோட்காதை

kannaki andkovalan

பூம்புகாரில் கண்ணகி, கோவலன் சிலைகள்

7.இமய மலை சென்றவுடன் அவன் போட்ட முதல் உத்தரவு:
“வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்
தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை,
காற்றூதாளரைப் போற்றிக் காமியென” (சிலப். கால்கோட்காதை)

பொருள்:– வடதிசையில் வேதங்களைக் காத்தும், ஹோம குண்டத்தில் எரியும் முத்தீயை அணைந்து போகாத வாறு வளர்த்தும், அருள் பொங்கும் வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இடையூறு ஏற்படாதபடி நடந்து கொள்ளுங்கள்— என்று படைகளுக்கு உத்தரவிட்டான்.

காற்றூதாளர்கள்= காற்றினும் விரைந்து செல்லும் தூதர்கள் மூலம் படைகளுக்கு இந்த உத்தரவு பறந்தது!!!

8.பிராமணனுக்கு 50 கிலோ+ தங்கம்: துலாபாரம்
“பெருமகன் மறையோர் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி,
தோடோர் போந்தை வேலோன், ‘தன்னிறை
மாடல மறையோன் கொள்க’ என்று அளித்து – ஆங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை,
சீர்கெழு நன்னாட்டுச் செல்க’ என்று ஏவி” (சிலப்ப. நீர்ப்படைக் காதை)

பொருள்:
மாடல மறையோனே! இவற்றை நீ கொள்க! என்று பனம்பூ மாலை ஏந்தியவனும், வேலை ஏந்தியவனுமான செங்குட்டுவன் தன்னுடைய எடைக்குச் சமமான 50 துலாம் தங்கத்தைக் கொடுத்தான். அங்கிருந்த பிராமண சாம்ராஜ்ய சாதவாஹனர்களை விடைகொடுத்து அனுப்பினான்.
ஆந்திரத்தில் இருந்துகொண்டு வட இந்தியாவை ஆண்ட நூற்றுவர்கன்னர் (சாதவாஹனர்) பிராமணர்கள்— உலகமே நடுங்கும் மகத்தான படை பலத்துடன் மாட்சிமை பொருந்திய ஆட்சி புரிந்தவர்கள்—- இவர்கள் ஆதரவுடன் தான் செங்குட்டுவன் வட இமயம் வரை சென்றான்— கடலுக்கு அப்பாலும் இவர்கள் ஆதிக்கம் பரவியதை இவர்களுடைய கப்பல் பொறித்த நாணயங்கள் மூலம் அறிய முடிகிறது!!

((ஒரு துலாம் என்பது ஆறு வீசை என்று வாய்ப்பாடு கூறும். செங்குட்டுவன் (50 x 6) 300 வீசை இருந்திருக்க முடியாது. ஒரு நூறு, நூறைம்பது கிலோ இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு.))

9. நாட்டிய மகளிர், இசைவாணர் கூட்டம்

செங்குட்டுவனுடன் போனோர் பட்டியல் இதோ:–
தேர்கள் 100
யானைகள் 500
குதிரைகள் 10,000
வண்டிகள் 20,000
கஞ்சுகர் 1000
நாட்டியப் பெண்கள் 102
இசைக் கலைஞர்கள் 208
விகடகவிக்கள் 100

:நாடக மகளிர் ஈரைம்திருவரும்
கூடிசைக்குயிலுவர் இருநூற்று எண்மரும்
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ்ஞூறும்
ஐ ஈ ராயிரம் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர் ஐஞ்ஞூற்றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே!
—(சிலப்பதிகாரம், கால்கோட்காதை)

((கஞ்சுகர்= போலீஸ், தூதர், அரசாங்க அதிகாரிகள், செக்யூரிட்டி கார்ட்ஸ்)

ஆதி காலத்தில் நாடகமும் நாட்டியமும் ஒன்றே. நாடக/ நாட்டிய வளர்ச்சிக்கு தமிழ் மன்னர்கள் ஆற்றிய அரும் பணி நாயக்கர் காலம் வரை நீடித்தது. சோழ மா மன்னன் ராஜ ராஜ சோழன் தஞ்சையில் 400 நாட்டிய மகளிர்க்கு வீடு கொடுத்து இருந்தான். ஒவ்வொருவர் வீட்டு எண் (டோர் நம்பர்) கொடுத்து அது யாருக்குச் சொந்தம் என்று கல்வெட்டு வெளியிட்டு இருக்கிறான். அந்தப் பெண்கள் அழகான தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் — (டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற நூலில் மேல் விவரம் பெறலாம்).

contact swami_48 @ yahoo.com
–சுபம்–

Tolkappian on Women in Business Trips!

tolkappian katturai

Written by London Swaminathan
Post no. 1192; Dated 24th July 2014.

Tolkappian was a great genius. Unlike other grammar works of the world, he added one more chapter to the usual grammar topics. The uniqueness of Tolkappiam lies in this last chapter called Porul Adikaram where he deals with the themes of literature. It gives lot of information about Tamil’s view of life, way of life, values in life and rules to write various themes in life. The most interesting point is his instructions about matters concerning sex.

Hindus have been following certain rules from the Vedic times. Though Sringara Rasa is dealt with in literature by poets like Kalidasa, explicit sex is not dealt with. Only in books like ‘Kamasutra’ of Vatsyayana we come across such things as explicit sex. It is not meant to be read by the common folks. It is probably meant for sexologists or psychologists who can advise youths in matters of sex. They can solve problems concerning sex.

Tolkappian , author of the oldest Tamil book Tolkappiam, advises people regarding topics on love.
Tamils have divided their literature into two parts Akam and Puram; Akam poems are about love and family life. Puram poems are about war, kings, death, values, poets’ lives, beliefs and generosity and philanthropy of kings and chieftains.

The first and foremost rule in Akam (love) poems is that you should never reveal the identity of the people involved. No name is found in Akam verses (Porul Adikaram Sutra-1000).

Tolkappiar says that wives are banned from foreign travel. When husbands go on travel for business, war or delivering messages, wives can’t accompany them.

Likewise when kings go on war expeditions, queen should not accompany the king (Porul Adikaram 1121). But musicians and dancers are allowed to travel with them. One of the powerful Tamil kings Senguttuvan took 102 dancing girls with him when he went to the Himalalayas to fetch a stone for Kannaki’s statue. But he left his wife at Vanji, the capital of Chera country (Kerala in South India).

cheran senguttuvan

Cheran Senguttuvan going in procession with Kannaki statue.

Mullaippattu and Nedunal vadai, two Sangam books, have vivid scenes of the camps in the battlefields. There we see women with swords guarding the camps, but not the queens or the wives of the army commanders. Some women were used to maintain the camps. Karpiyal section of Tolkappiyam has the rules for women in the camps.

Whenever some Tamil novels or films with explicit sex come out, big controversies erupt. People who oppose them quote ethics. People who justify them say that they are showing the real world. But yet whether it is real or artificial, fiction or fact, there are some norms to follow (Porul: 999):

Nataka vazakkinum ulakiyal vazakkinum
Patal Sandra pulaneri vazakkam (999)

In this sutra ‘pulaneri vazakkam’ is explained as only that is good, self controlled and cultured can be reported in writing.

Tolkaapiyar , in another sutra (couplet), talks about women’s virtues:
For the modesty and the simplicity in the act of love belong to the feminine nature, her amorousness will be known only by gesture and environment in accordance with the code of love.
Kamam thinaiyir kannindru varuum
Nanum madanum penmaiya (Porul -1054)
Even in the modern Western world, it is men who propose to women and not vice verse.

Please read my earlier posts on Tolkappiyam:—

Tolkappian – A Genius — posted by me on 12 September 2012
Did Tolkappian copy from Sanskrit Books? – posted by me on 10 September 2012
Who was Tolkappiar? posted by me on 9 September 2012
Agni in Tolkappiam – posted on 31 March 2014.
Indra in the Oldest tamil Book — posted on 14th June 2013
Vedic God Varuna in Oldest Tamil Book — posted on July 8, 2013
Four Tamil articles on the Age of Tolkappiam are posted in the blog.

contact swami_48@yahoo.com

தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு!!

purnakumba

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1189; தேதி 23 ஜூலை, 2014.

இந்து சமயத்தைப் பின்பற்றுவோருக்கு அந்தக் காலத்தில் எல்லாக் கலைகளும் தெரிந்திருந்தன. வானத்தில் உள்ள எல்லா கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் தெரியும். சாப்பாட்டு அறைக்கு வரும் 10, 15 கீரை வகைகள் தெரியும். துவையலுக்குப் பயன்படும் பல மூலிகைகள் தெரியும். இதெல்லாம் மருத்துவம் உணவு சம்பந்தப்பட்ட தாவரங்கள். ஆனால் இந்து மதம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு உலக அதிசயம் காத்திருக்கிறது!

இந்து மதத்தில் பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன! விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. உலகில் இந்த அளவுக்கு இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழ் இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்தக் கட்டுரை, சமயத்தில் பயன்படும் தாவரங்களைப் பற்றியது. சித்த, ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தும் தாவரங்களைச் சேர்த்தால் ஆயிரக் கணக்கில் வந்து விடும்!!!

homa dravyas

கபிலர் அறிவுரை
குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலை 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிராமணப் புலவன் கபிலன் 99 பூக்களின் பெயரை ஒரே மூச்சில் பாட்டில் எழுதி சாதனைப் புத்தகத்தில் — தமிழரின் சாதனைப் புத்தகத்தில் — இடம்பெற்றான். அதே புலவன் புற நானூற்றில் ஒரு பகவத் கீதை ஸ்லோகத்தை மொழி பெயர்த்து புதுமையும் செய்தான்:

எனக்கு பக்தியுடன் கொடுக்கும் பச்சிலை, பூ, தண்ணீர், பழம் எதுவானாலும் — (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) —- அதை நான் உண்கிறேன் (பகவத் கீதை 9-26) என்று கண்ண பிரான் கூறுவான். இதையே கபிலர் பாடுகிறார் (புறம்—106):–

“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”

பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்.
ஆக தமிழன் 2000 ஆண்டுகளாக எருக்கம் பூ, இலையைப் போட்டு பூஜை செய்வதைக் கபிலர் சொல்லிவிட்டார்.

homadravyas5

துளசி, வில்வம்
துளசி இலை இல்லாத பெருமாள் கோவில் இல்லை; வில்வம் இல்லாத சிவன் கோவில் இல்லை.

கோவிலைச் சுற்றி விற்கப்படும் பூக்கள் — பிரதேசத்துக்கு பிரதேசம், பருவத்துக்கு பருவம் — மாறு படும். இவ்வகையில் தாமரை முதல் அரளி வரை நூற்றுக் கணக்கான பூக்கள் வந்து விடும்.
கழுத்தில் போடும் ருத்ராக்ஷம், துளசிமணி, தாமரை மணி மாலை வரை எல்லாம் தாவர வகைகளே!

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

pavitra
pavita made up of Dharba grass

21 இலைகள் (பத்ரம்):
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:–
இதோ 21 இலைகள் (பத்ரம்):
மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம்.

spoons
yaga utensils made up of palasa wood

பூஜைக்கு உதவும் 27 இலைகள்
வில்வம், துளசி, மருக்கொழுந்து, நாயுருவி, பூளை, நொச்சி, கரந்தை, செங்கீரை, மாசிப்பச்சை, மலைப் பச்சை, திருநீற்றுப் பச்சை, எலுமிச்சம் பச்சை, சமுத்திரப் பச்சை, கதிர்ப் பச்சை, கொண்டை, குடத்தன் குதம்பை, வன்னி, கிளுவை, மாவிலங்கை, விளா, மா, எலுமிச்சை, நாரத்தை, நாவல், மருது, நெல்லி, இலந்தை.

பழங்கள்
மா, பலா, வாழை என்னும் முக்கனிகளை தென்னிந்தியர்கள் கடவுளுக்குப் படைக்கிறார்கள். மஞ்சள் அட்சதை, வாழை இலை, மாவிலை, தேங்காய் வெற்றிலை, பாக்கு இல்லாத பூஜைகள் கிடையாது. தென்னை, வாழை ஆகிய மரங்களின் எல்லா பகுதிகளையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறோம். வாழை இலையில் தொன்னை செய்தும், தென்னை ஓலையில் விசிறி செய்தும் கோவில்கள், பூகைகளில் பயன்படுத்துவர்.

Arani Mantha
Arani wood made up of Peepal and Sami tree to kindle fire.

பூர்ண கும்ப தாவரங்கள்
பூர்ண கும்ப கலசங்களுக்குள் கிராம்பு, ஏலக்காய், குங்குமப் பூ முதலியனவும் மேலே மாவிலை, தேங்காய் எனவும் உபயோகிக்கிறோம். நைவேத்யத்துக்கு பல வகையான பழங்களையும், காலத்திற்கேற்ப பயன் படுத்துவர். பிள்ளையார் சதுர்த்தி என்றால் விளாம்பழம், நாவல் பழம் என்பது போல.

உலகிலேயே தாவரத்தின் பெயரில் உள்ள ஒரு நாடு இந்தியாதான். ஜம்புத்வீபம், நாவலந்தீவு என்பது இந்தியாவின் பெயர். கோவில்களிலும், பிராமணர் இல்லங்களிலும் அன்றாடம் ‘’சங்கல்ப’’த்தின் போது ஜம்புத்வீபம் என்பது ஒலிக்கும். ஏழு த்வீபங்களுக்கும் ஏழு தாவரப் பெயர்கள் வைக்கப்பாட்டாலும் இந்தியாவின் பெயர் மட்டுமே அன்றாடப் புழக்கத்தில் இருக்கிறது. இதைப் பார்த்து தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்து தாவரங்களைக் கொண்டு நிலப் பெயர் அமைத்தனர்.

நவதானிய படம்1
ஸ்தல மரங்கள்

பூஜையில் வாசனைக்காகப் பயன்படுத்தும் அகில், சந்தனம், சாம்பிராணி, சூடம், ஊதுவத்திக் குச்சி முதலியனவும் தாவரங்களே.

நீண்ட பட்டியலைத் தருவதற்குப் பதிலாக ஒரு மாதிரி சர்வே மட்டுமே கொடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தலமரங்களின் பட்டியலைத் தனியே தருவேன்!

தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய – திராவிட வாதத்துக்கு அடி!!

6 season

ஆராய்ச்சிக் கட்டுரை : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:—-1187; தேதி 22 ஜூலை 2014.

வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?

1.காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.

2.இது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாததால் ஆரியக் குடியேற்றவாதம் பொய். இந்துப் பண்பாடு — அதாவது இந்தியப் பண்பாடு — இந்திய மண்ணிலேயே இயற்கையாக உருவானது.

ஆரிய- திராவிட இனவாதக் கொள்கைக்கு சங்கத் தமிழ் இலக்கியம் அடிமேல் அடி கொடுக்கிறது. இந்து மதம் தவிர உலகில் உள்ள எல்லா மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே சம்ஸ்கிருதமும் தமிழும் இருந்தன!!

ஆரியர்கள் என்போர் மத்திய ஆசியாவில் இருந்தோ ஐரோப்பாவில் இருந்தோ குடியேறினால் இப்படிப் பருவங்களைப் பிரித்திருக்க முடியாது. அப்படிப் பிரித்திருந்தால் அதன் எச்சங்கள் பழங்கால கிரேக்க நாகரீகத்தில் இருந்திருக்க வேண்டும்!!

ரோமாபுரி கலாசாரத்தில் இன்று ஆங்கிலேயர்கள் பின்பற்றும் வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர் காலம் என்ற நால்வகைப் பிரிவே உள்ளது. கிரேக்க கலாசாரத்தில் நிறைய பிரிவுகள் உண்டு.

இன்னும் ஒரு அதிசய விஷயம்! உலகிலேயே ஆறு பருவங்களுக்கு என்று நூல் எழுதியவன் உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் ஒருவனே. காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற்கை இன்பம் கிட்டும். உலகில் இந்தியர்கள் போல இயற்கையில் ஊறித் திளைத்தவர்கள் வேறு எவரும் இல்லை. அந்தணப் புலவன் கபிலன் சங்கத் தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில் ஒரே மூச்சில் 99 தாவரங்களை அடுக்கிப் பாடியதும் உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை!
A-Death-of-Seasons

சங்கத் தமிழ் புலவர்கள், காளிதாசனின் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில், சுமார் 200 உவமைகளைக் கையாளுவதால் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட விக்ரமாதித்தன் காலத்தவனே என்று இதுவரை ஆறு, ஏழு கட்டுரைகளை எழுதினேன். காளிதாசனின் ஆறு பருவங்கள் தமிழில் அப்படியே இருப்பது இன்னும் ஒரு சான்று என்று கொள்ளலாம்.

காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.
பெரும் பொழுதுகள் ஆறு:—-

ritu

இளவேனில்: சித்திரை, வைகாசி= வசந்த ருது
முது வேனில்: ஆனி, ஆடி = க்ரீஷ்ம ருது
கார் காலம்: ஆவணி, புரட்டாசி = வர்ஷ ருது
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை = ஷரத் ருது
முன் பனி: மார்கழி, தை = ஹேமந்த ருது
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி = சிசிர ருது.

ஆறு சிறு பொழுதுகள்:——
வைகறை, காலை, நண்பகல், மாலை, யாமம், ஏற்பாடு.

குறிஞ்சிப் பாட்டில் ஐந்து சிறு பொழுதுகளை ஒரே பாட்டில் காணலாம்:
காலையும், பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப்
பொழுது………………. (குறுந்தொகை 32)

சங்கத் தமிழ் நூல்களில் ஆறு பருவங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் வருகின்றன. தேவாரத்தில் ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ போன்ற பாடல்களில் ஒவ்வொரு பொழுதும் வருணிக்கப் படுவதைக் காணலாம்.

khotanese

ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த ருது வருணனையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வசந்த காலம், கார் காலம் பற்றிய வருணனைகளும் வருகின்றன.
மனுதர்ம சாஸ்திரமும் பல இடங்களில் ருதுக்களைக் குறிப்பிடுகின்றன.

தைத்திரீய சம்ஹிதை வசந்த ருதுவை முதலாவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் காளிதாசன் தனது ருதுசம்ஹார காவியத்தை கோடையில் துவங்கி எல்லோரும் விரும்பும் வசந்தத்தில் முடிக்கிறான். கண்ண பிரானும் பகவத் கீதையில் (10-35) காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்பான்.

காளிதாசனின் ருதுசம்ஹார காவியத்தில் 144 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். காளிதாசன் பற்றி அரவிந்தர் எழுதிய நூலில் பாதிக்கும் மேலான பகுதியை ருதுசம்ஹாரத்துக்கு ஒதுக்கி இருக்கிறார். ருது சம்ஹாரம் காளிதாசன் எழுதியது என்பதற்கு இதிலுள்ள உவமைகளே சான்று; இதில் காளிதாசனின் முத்திரையைக் காணலாம் என்று கூறி இருக்கிறார்.

seasons-uu1tu1-trunc

வாழ்க காளிதாசன் புகழ்! ஓங்குக சங்க இலக்கியப் புகழ்!!

தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

planets3

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1179; தேதி:–18th July 2014.

இந்துக்களுக்கு வான சாஸ்திரம் எனப்படும் வானவியல் தெரியுமா?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.
தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

distance

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.
பொன் = வியாழன்
வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்
செவ்வாய் = செந்நிறக் கோள்
பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.
ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

obliquity

ஆறு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

Planets_event_61433

இவைகளின் பொருள் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

Planets-lots-of-info-Chart1

என்னுடைய கருத்து:
இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.
வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!!!

—சுபம்–

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

akaththi

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1177; தேதி:- 17 ஜூலை 2014.

தமிழ் தலைவன் யார் என்று தமிழ் கூறு நல்லுலகில் ஒரு ‘சர்வே’ நடத்தினால், சிறை சென்ற தியாகிகள் பட்டியல், மறியல் போராட்ட தியாகிகள் பட்டியல், அரசியல் தலைவர்கள் பட்டியல், ஏ.கே. 47 துப்பாக்கி சுழற்றியோர் பட்டியல், ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் செய்தோர் பட்டியல் என்று ஆயிரம் ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் வந்து நம்மைத் திக்கு முக்காடச் செய்து விடும்!

கம்பனிடம் போய் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். அவர் நாலே வரிகளில் தெளிவான பதில் கொடுத்து நம் குழப்பத்தை எல்லாம் போக்கிவிட்டார்.

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயனம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

Agasthiar
அகத்தியர் என்ன செய்தார்?

அகத்தியர் கடலைக் குடித்தார்: அதாவது வங்கக் கடல் வழியாக பாண்டியனின் படைகளை வழி நடத்திச் சென்று வியட் நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துப் பண்பாட்டைப் பரப்பினார். இதைக் “கடலைக் குடித்தார்” என்று அழகாகாகச் சொல்லுவர். அகத்தியர் கடலைக் குடித்தாரா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும், பிரம்மாஸ்திரா—ஒரு அணுசக்தி ஆயுதமா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

அகத்தியர் பூமியை சமநிலைப்படுத்தினார்: இது திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதை. மக்கட் தொகைப் பெருக்கம் காரணமாக அகத்தியன் தலைமையில் 18 குடிகளை சிவ பெருமான் தெற்கே அனுப்பிவைத்தார். “உலகின் முதல் மக்கட் தொகைப் பெருக்கப் பிரச்னை”– என்ற ஆங்கிலக் கட்டுரையில் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

விந்திய மலையை மட்டம் தட்டினார்:- அகத்தியர் தென்னாட்டிற்கு வருவதற்கு முன், மக்கள் அனைவரும் கடலோரமாக நடந்தோ, படகுகளிலோ தென்னாட்டு நகரங்களுக்கு வந்து சென்றனர். காரணம் இல்வலன், வாதாபி போன்ற, நர மாமிசம் சாப்பிடும் பயங்கரக் காட்டுவாசிகளும் காட்டு மிருகங்களும் மக்களை அச்சுறுத்தி வந்தன. அகத்தியர் தவ வலிமை பெற்றதால் தைரியமாக 18 குடி மக்களை, துவாரகை நகரில் இருந்து, விந்திய மலையின் நடுவிலுள்ள அடர்ந்த காடுகள் வழியே அழைத்து வந்தார். அன்றுமுதல் இன்று வரை நாம் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இதையே “மண் உற அழுத்தலால்” என்று குறிப்பிடுகிறார். புராணங்கள் கத்தியர் விந்திய மலையின் கர்வத்தைப் பங்கம் செய்தார் என்று அழகாகக் கூறுகின்றன. “பழங்கால இந்தியாவின் புகழ்மிகு எஞ்சினீயர்கள்”– என்ற கட்டுரையில் இது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன்.
Agathiyar_hemanth thiru

இத்தகைய அரிய பெரிய செயல்களைச் செய்து இந்திய பூகோள புத்தகத்தில் அழியா இடம் பெற்ற அகத்தியனை, தமிழ்த் தலைவன் என்று கம்பன் அழைத்ததை எல்லோரும் ஏற்பர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ?

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

இனி தமிழ்த் தலைவன் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்!!
529_Kambar
contact swami_48@yahoo.com

BASIC QUESTIONS ABOUT TAMILS & HINDUISM

vivek image

Questions in the letter are answered by London swaminathan

Post No.1173; Dated-15th July 2014.

I received the following message by email:-

Letter from PJ

Hi sir,

I am 17 year old kid from a Tamil family,
I was born in ‘K’near Nagapattinam, I moved to France when I was 13.
I was brought up in a typical Tamil-Hindu family, but I was never taught any religious books.

I love Hinduism so I wanted to learn more about it.

So I did some research in the web and I ended up getting confused.
I came across your blogs and read some of your blogs and biography. I don’t know why, I got a feeling that you would answer all my doubts.

In the web I came across those so called Aryan migration theory and out of India theory and I don’t believe Aryan migration and for me out the India theory make more sense.

My questions are:

book

Q1).Are Tamil people really Hindus ?

My answer: In today’s world 80 to 90 % of Tamils are Hindus. They live traditionally in Tamil Nadu (India), Sri Lanka, Malaysia, Singapore, South Africa, Mauritius, Seychelles, Fiji, Guyana and for the past thirty years in almost all the countries from North Pole (Norway, Sweden) to South Pole (New Zealand and Australia) because of Sri Lankan ethnic conflict. France has a good population of Tamils from the French ruled territories of Tamil Nadu and from Sri Lanka.
Ancient Tamils were Hindus. Sangam Tamil literature has innumerable references to Hindu Gods, Yaga, Yajna (Fire sacrifices), Vedas, Karma theory, Rebirth, Cremation, Beliefs about 40 Samskaras of the Hindus, Yama and Death, Brahmins, Caste System, Wedding ceremonies and Astrology. I have published over 1000 posts in these blogs in Tamil and English quoting references from the Tamil and Sanskrit literature.

If anyone visits Tamil Nadu and see all the 38,000 temples under the HRCE Department OR read the 27,000+ lines of the Sangam Tamil Literature or the 18,000 Saivite Poems of the Nayanmars and 4000 Vaishnavite poems of the Alvars, their doubts will be cleared.

Sage Agastya is associated with Tamil or Tamil country in ancient Tamil literature and Kalidasa’s works.

vivek works

Q2). Why are Vedas and Bhagavad-Gita written in Sanskrit ?

Jesus spoke in Hebrew, Mohammed spoke in Arabic, Krishna spoke in Sanskrit, Sambandar spoke in Tamil and Zoroaster spoke in Persian; but the message they delivered is universal love and faith in God. Tomorrow one more saint may come to spread the same message in Esperanto or a language newly developed. What difference a language can make? Tongues may be different but the hearts are one.

God understands all the languages and even the sign language of the deaf and dumb. Lord Shiva invented a new language called SILENCE. He did preach for the four great saints through silence in his Dakshinamurthy form under the Banyan tree. In our own times Ramana Maharishi did this. If you read “The Search in Secret India” by Paul Brunton, you will understand it.

Aanmiga-Vinaa-Vidai-Vol3-Tamil-S

Q3). What is the link between Tamil and Sanskrit ?

Foreign “Scholars” spread a theory about two different language groups -Dravidian and Aryan- which is not correct. It is true that both the languages are different. But Sanskrit is the closest language to Tamil. No other language in the world can come closer to Tamil than Sanskrit. It is not because of geographical proximity. I mean structurally they are closer than other languages. It is a big topic and only linguists can understand. An old poem of Paranjothy Munivar says that Shiva was the one who taught both the languages. Hindus believe that all the languages in India came from Lord Shiva. Both the Tamil and Sanskrit commentators have written so.

Now and then I read that ‘Tamil is closer to Sumerian’, ‘Tamil is connected to Finnish’, ‘Tamil has link with Japanese’ and I used to laugh at the ignorance of those “scholars”. The latest language theory is that you can find similar words between any two languages in the world. When I was working for the BBC WORLD SERVICE between 1987 and 1992, I interviewed Mr.Sathur Sekaran who wrote 140 books connecting Tamil language with all the languages in the world. When I interviewed him on behalf of the BBC Tamil Service (Tamilosai), I politely pointed out the fallacies in his argument. In short I can show similarities, at least superficial/morphological, between any two languages in the world. This is because we all lived under one roof at one time. The tower of Babel story in the Bible is partly true. We have similar stories in the Hindu scriptures in the Yajur Veda.

With regard to Tamil, no one in the present world can speak pure Tamil without Sanskrit. If you ask the names of one’s father, mother, native place, Deities, everything will be in Sanskrit. Even the people who spearheaded Dravidian movements had only Sanskrit names! I have pointed out Tamils have no words for some common words like ‘heart’ and ‘Face’. I have also pointed out that if anyone dares to remove the poems written by Brahmins or references to Brahmins, and all that is Hindu, there wouldn’t be anything left in Sangam Tamil literature. A lot of Sangam Tamil poets have Sanskrit names such as Kesavan, Damodaran, Valmiki, Brahma, Kapila, Parana,Kamakshi, Vishnu Dasan, Kanna dasan. Please read my article “No Brahmins! No Tamil!!” posted in this blog.

Srimad_Bhagavad__4bfd17abd98d4

Q4). When I was small I thought Tamil was derived from Sanskrit but now they say both are different?

A)I have answered this question already. Please see above.
In an island like New Guiea we have over 750 languages. How and Why? If it can happen in an island, in a vast country like India with different climatic conditions, flora and fauna and 4000 year long history, naturally languages will branch out forming new dialects, leading to newer languages. During Sangam period there was no Malayalam in Kerala. Telugu and Kannada had more Tamilized forms at that time. Now we can’t understand one another; why? The natural law is “Change is inevitable. Everything must change”. Tamil won’t be the same after two hundred years. Tamil that which my great grandfather used is not the language I use today.

Q5). I can understand that India is a land of diversity. I keep wondering why some are really white, we should all be brown due to our climate? ( I am brown and I’m proud to be one)

A)This colour of the skin is the one which foreign scholars used to deceive the native people. People who lived in the north had fairer colours because of the cold climate. I also used to wonder how come we changed to brown colour from the African black and how come the white people became white from the African black. The scientific theory is that we all evolved from the Monkeys/Apes in Africa. Scientists say that Mankind originated in Africa. We were only black at that stage. How come one section became white and another remained black. How long would it take for a black race to become white race? How come there are still black and brown animals and birds even in the cold countries where as the people are all white?

One person told me it was albinos that produced the white race. I expect a better answer from the scientists/biologists.

BRUNTON

Regarding the racist theory:

My theory is that Indians went to different parts of the world taking their culture. Foreign “scholars” arbitrarily fixed the meaning of words (e.g ayas=iron), dates for iron and horse, language groups according to their whims and fancies, interpretations as per their imagination etc. Everything can be changed topsy-turvy (ulta) and can be proved right. The Word ‘Dravidian’ did not exist during Vedic period. The world ‘Aryan’ was used with the meaning of ‘cultured, civilized’ and not with any racial connotation. Foreigners deliberately used it with a racial meaning to confuse the Hindus and destroy their identity.

Q6). I can also understand that Hinduism has more holy books, unlike other religions, but is there any holy book of the Tamil s?

A)Holy Books for the Tamils are Thevaram/Tiruvasagam and Divya Prabandham. Even the authors who composed over 14,000 poems said that they are giving the Vedas in Tamil!!!

Even the atheists accept Tirukkural written by Tiruvalluvar. There can’t be a purer Hindu than Tiruvalluvar. Please read two volumes of English commentary of Tirukkural by Dr S M Diaz, I.P.S.,Ph.D

ramki book

7. Why is the Five great epics of Sangam period written by the Jains and Buddhists ?

A)Five Tamil Epics do not belong to Sangam Period; they belong to post Sangam period, may be from 5th century CE to 10th Century CE. We did not get two of the five epics in full. Of the five Tamil epics, Manimegalai is purely Buddhist and Seevaka Chintamani is of the Jains. Silappadikaram, the most popular of the five, is like a Hindu Encyclopaedia. It praised Hindu Gods more than anything else. It is true Jainism is praised by the author. If I have only Tamil books, I will teach Hinduism through this epic than any other book. No rationalist or atheist will touch this book because it is full of “Superstitious Hindu Beliefs”!!!

Q8). Who is Thiruvalluvar ?
I have written under the topic “Who was Tiruvalluvar?” in this blog on24 July 2013. Please read it.

In short, the greatest Tamil Hindu that post Sangam period (fifth century CE) produced was Tiruvalluvar. Even if all the Vedas, Bhagavad Gita, Ramayana and Mahabharata disappear tomorrow, TIRUKKURAL is enough to teach Hinduism. Hindus only can follow the vegetarianism, penance (Tavam=Tapas), Pancha Yajna etc preached in this book. No Muslim, No Christian will be able to follow this. The very structure of the book is Dharma, Artha, Kama and Moksha (Arathu pal, Porutpal and Inpathu Pal; Moksha is discussed in chapters like Tavam etc.in the Arathu Pal)

hinduism spread

Q9). To make it more confusing THE CASTE SYSTEM: why was that created? I mean “we all are equal”.

A)In ancient India, it started as ‘division of labour’. Slowly it changed into ‘castes by birth’ system. It divided and sub divided in to hundreds and thousands of castes. Who made it? It is not in any Hindu scripture ( I mean the sub sub sub sub castes). Unless every one touches his heart and say that I would not follow it, it won’t go away. There are two movements in India, RSS and Communist party, where it is practised less.

The equality can be brought only by great people who preach religion. When people aim for higher things in life these petty differences will melt away. We saw it happening in big movements like Satya Sai Baba and Sri Ramakrishna missions.

In no part of the world at any one point of time in History, everyone was treated equal. This has been only in letters, not in spirit. People are talking about an idealistic society where they expected no discrimination against anyone. In the United States, different states have different laws!! If it can happen in one country in our own time, imagine what could have happened in Greece and Rome, Egypt and Babylonia two thousand years ago. Being a Gay or a Lesbian was immoral and illegal in all parts of the world. Now a man can marry a man in some parts of the world and can have all family benefits!! MPs and Prime Ministers, Presidents and Queens (like British queen) are not like you and me!! Some are more equal than others!

I have an MA in history. All the ancient societies had big, big discriminations. I am not justifying caste discriminations. But no politician in India will do away with the caste system. No backward caste or scheduled caste will relinquish their status for the next 100 years! They thrive on this. Go to a backward class man or a scheduled caste woman and preach your equality theory. They will look at you as if you have landed from planet Mars!!

bhagvad-gita

Q10). And finally, is it true that Vedas permit eating meat and it only based on nature.

Yes. It is true. They ate meat on certain occasions. If you believe that part of the Vedas and that part of the Puranas, you must believe in everything that they say. They narrate thousands of miracles and you must believe them. Just because some non Hindus or atheists do some propaganda you don’t need to deny or accept it. Take it (the scriptures) as a whole and weigh it. Read more speeches by Swami Vivekananda or Sayings of Sri Ramakrishna or Bhagavad Gita Tamil commentary or Tiruvasagam commentary by Swami Chidbhavannabda. You would not even have asked these questions.

Poor and ignorant Hindus never read anything that is Hindu, but trained only to ask questions. I don’t blame you. This is the trend with the Hindus. It is true we have hundreds of holy books unlike other religions. But read at least ONE BOOK in full and stick to it. Even if you read only Tirukkural and follow it you will be the greatest Hindu.

hinduism2

Q). I like Vallalar and Bharathiar a lot and what they say about Hinduism (Santana dharma); why is Murugan and many gods worshiped only by us?

A)If you read Vallalar that is more than enough; He has given the essence of Hinduism. I have already given all the important poems by Vallalar.
If you read Bharatiyar, that is more than enough. He has given the Vedic thoughts in beautiful Tamil poems. Ilango, Vallalar, Valluvar and Bharatiyar are True Tamil Hindus.

Murugan and other Hindu gods are different aspects of ONE GOD. Sri Ramakrishna Paramahamsa says, ‘same gold is used to make different ornaments’ (Every time my wife enters a jewellery shop she admires the beauty of each and everything and urges me to buy one for her! Even if I buy the whole shop she wouldn’t be satisfied! In the same way Hindus have found out that they can enjoy more and more by having varieties).

Sri Ramkrishna says that ‘same sugar and flour are used to make different sweets’ ( Every time I go to India, I ask someone to buy halwa from Madurai Nagapattinam Ney Mittay shop or Tirunelveli Lala Halwa shop and I beg someone to buy Panneer Jhangry. Same flour, same sugar! Why do I long for such petty things? It is the sheer variety. Kalisada says ‘variety is the spice of life!’ Hindus have found out that people at different levels of spiritual progress can be slowly elevated to higher and higher state by various forms of deities, various rituals, festivals, foods and dress codes.)

hinduism

Q)Sir,I love our religion I just want to know if we and our ancestors are really part of it or we got converted into it.

A)Kanchi Paramacharaya says that Hindusism is the only religion that has no founder, that has no name (word Hinduism is not in our scriptures). He says that it is the eternal religion (Sanatana Dharma). Its vestiges are found in all parts of the world.

Others were converted to newly founded religions such as Islam and Christianity. What happened to the grandfathers of Buddha, Jesus and Mohammed? Did they go to hell because the new religions were not there? Those who follow the oldest religion in the world still remain as Hindus. Santana Dharma is the oldest religion according to all the famous encyclopaedias.

I hope you will answer me and I will be grateful to you.

A)I have answered most of your questions.

Q)Pls take a look at my source and tell me if they are true I need you help sir.

A)I had a look at some of the You tube videos. I support ‘out of India theory’. Dr BR Ambedkar, Swami Vivekananda, Mahatma Gandhi, Aurobindo, Kanchi Paramacharya, great Tamil scholars U V Samynatahiyer and Bharathi did NOT support Aryan Migration Theory.

Contact swami_48@yahoo.com

அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் !!

800px-Mute_swan_Vrhnika

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?

பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?

அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?

பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?

அதிசயச் செய்தி ஒன்று

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)

பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
Whooper_Swan

அதிசயச் செய்தி இரண்டு

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–

ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்

–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.

swans

அதிசயச் செய்தி மூன்று

இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–
அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.

அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.

வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.

ramakrishna
Sri Ramakrishna Paramahamsar

வேதத்தில் அன்னப் பறவைகள்

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–

ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.

இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).

சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)

“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!

அதிசயச் செய்தி நான்கு

மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.
அன்னச் சேவல் அன்னச் சேவல்

……………………
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)

நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)

காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.

yogananda
Sri Paramahamsa Yogananda.

அதிசயச் செய்தி ஐந்து
ராமாயணத்தில் ஒரு கதை

ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?

ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–

வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:
பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29

ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:
பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31

இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.

ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!!

-சுபம்-

“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள்

The Caste System During Vedic Civilisation

ஆய்வுக் காட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1149; தேதி 5 ஜூலை 2014.

“கேட்டியோ வாழி பாண பாசரைப்
பூக்கோள் இன்றென்றறையும்
மடிவாய்த் தண்ணூமை இழிசினன் குரலே – புறம்.289

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி – புறம் 170

துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின – புறம் 287

புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு – புறம் 360

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் ‘புறநானூறு’ – என்னும் நூல் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆகையால் அப்புத்தகத்தில் இருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தந்தேன்.

இவற்றின் ஒட்டுமொத்த பொருள்: புலையன் ஜாதி, பிறப்பால் அமைந்தது. புலையர்கள் சுடுகாட்டு வேலைகளைச் செய்வர். அவர்கள் பறை கொட்டுவது —(பறையர் என்பது இந்த வாத்தியத்தில் இருந்து பிறந்த சொல்) — முதலிய தொழில்களைச் செய்வர். அவர்கள் கீழ்ஜாதி மக்கள். “கட்டில் நிணக்கும் இழிசினன் (புறம் 82) என்றும் பேசப்படுகிறான் (கட்டில் செய்ய தோல் வாரில் வேகமாக ஊசியைச் செலுத்தும் புலைமகன் என்பது பழைய உரை)

‘’துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.335 (மாங்குடிக் கிழார்)

– என்று நான்கு குடிகளை ஒருச்சேரப்படுவதில் இருந்து இந்த நாலு குடிகளும் கீழ்மட்டத்தில் இருந்த குடிகள் என்பதும் தெரிகிறது.

சங்க கால ஜாதிப் பிரிவுகள் பற்றி ஏராளமான பாடல்களில் குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அன்றாட நடைமுறைகளைப் பாதித்ததாகவோ மோதல்களை உண்டாக்கியதவோ சான்று எதுவும் இல்லை. பாடல்களை இயற்றியோரிலும் பல வகுப்பினர் இருந்தனர். ஆனால் ஜாதிச் சண்டை இல்லை. சங்க காலத்துக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தேவார, திவ்யப் பிரபந்த காலத்தில் சிவ, விஷ்ணு பக்தர்கள் இடையே எவ்வளவு சமரசம் நிலவியது என்பதை பெரிய புராணத்தில் இருந்தும் ஆழ்வார் சரிதங்களில் இருந்தும் அறிகிறோம்.
caste-system-in-hinduism

ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் — என்று அப்பர் பாடுகிறார். மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திரு நாளோ—என்று நந்தனார் நாடகத்தில் கேட்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து தோன்றிய ஜாதிப் பகுப்பு.

நாநிலப் பிரிவுகளில் என்ன என்ன சிறிய ஜாதிகள் இருந்தன என்பதும் தெரிகிறது. சில சொற்கள் சங்க இலக்கியத்திலேயே பயிலப்படாததால் அவைகளின் பொருள் கூட இன்று தெரியவில்லை.

வெளிநாட்டு இந்து அல்லாத “அறிஞர்கள்” (?!?!) எழுதிய புத்தகங்களில் இந்தப் பட்டியலை வெளியிடாமல் மறைத்திருப்பதைக் காணலாம். தமிழர்கள் இடையே “நல்ல பிள்ளை” பட்டம் வாங்கி உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்திக் கொள்ள இப்படி ஒரு வேஷம்!!! பழங்காலத்தில் மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், கேளிர் பிரித்து பகச் சொல்லி பகைமை வளர்கவும் இருந்த ஒரு கூட்டமும் இப்படி மறைத்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க யாரே வல்லார்? பழந்தமிழ் நூல்கள், உரைகள் எல்லாவற்றிலும் உண்மை மறைக்கப்படவில்லை.

அந்தக் காலத்தில் ராஜா மகன் ராஜாதான், குயவன் மகன் குயவன் தான். ராமாயண, மஹாபாரத காலம் போலவே சில விதி விலக்குகளும் உண்டு. இது உலகம் முழுதும் இன்றும் இருக்கிறது. அரசியல்வாதிகள் மகன்கள், அரசியலில் பெரிய பதவிகளைப் பிடிப்பது போல, செல்வாக்கு உடையவர்கள் மகன்கள் டெலிவிசன் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பெரிய நிலைக்கு உயர்வது போல இது — இங்கு லண்டனிலும் கூட இதைக் காண்கிறோம்.

இதோ நாநிலப் பகுப்பில் (பாலை நிலத்தையும் சேர்த்து 5 நிலங்கள்) குறிப்பிடப்படும் உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள்:

குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்

முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(உதவிய நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).

அந்தணர்கள் (பிராமணர்கள்) பற்றிய குறிப்புகள்தான் அதிகம். இதற்குக் காரணம் அந்தணர் பாடிய பாடல்கள்தான் சங்க இலக்கியத்தில் அதிகம். கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார் ஆகிய பிராமண புலவர்கள் கொடிகட்டிப் பரந்தனர்.

egyptian-social-structure
Caste System in Ancient Egypt.

காஞ்சி சுவாமிகள் உரை
ஜாதி, வர்ணாஸ்ரமம், பிராமணர், வேதம் என்பதெல்லாம் “ வட நாட்டு இறக்குமதிச் சரக்கு”, “ஆரிய மாயை” — என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவோருக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாகப் பதில் கொடுத்துள்ளார். வேள்வி, மறை (யாகம், வேதம்) என்பதெலால்ம் பழந்தமிழ் சொற்கள் மட்டுமல்ல, அவை எல்லாம் தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பிறந்தவை, மொழி பெயர்ப்பு அல்ல என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சுட்டிக்காட்டினார்.

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதைய்யர், ஆரிய-திராவிட இனவெறி மாயையில் சிக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்றார். பாரதி “ஆரிய” என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பாடிப் புகழ்ந்து, போற்றி, பாராட்டி ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை நிராகரித்தார். (ஆரிய= பண்பாடு உடையோன்; இனவெறிப் பொருளைக் கொடுத்தவர்கள் கால்டுவெல் முதலிய வெளி நாட்டுச் சழக்கர்கள்).

ரிக் வேதத்தில் உள்ள புருஷசூக்தத்தில் இறைவனுடைய நாலு அங்கங்கள் நாலு ஜாதிகள் என்று கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலும் (3-70) நான்கு ஜாதிகளை ஆரியர்களின் 4 பிரிவுகள் என்றே எழுதியுள்ளார். ஆனால் வெளிநாட்டு, ‘இந்து’வல்லாத “ அறிஞர்கள்” (?!?!?) சூத்திரர்கள் என்பவர்கள் ஆரியர் அல்லாதோர் என்று புரளி கிளப்பி யுள்ளனர்.

வேத காலம் போலவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வருணப் பகுப்பு இருந்தது — குடி என்ற சொல் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

முதல் முதலாக ‘சாதி’, ‘வருணம்’ என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில்தான் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரக் கதை இரண்டாம் நூற்றாண்டில் நடந்தபோதும், காவியம் உருவானது ஐந்தாம் நூற்றாண்டு என்பதை மொழி நடையே காட்டிவிடுகிறது. நால்வேறு மக்கள் அவரவர்களுக்கான தெருக்களில் வசித்ததை மதுரைக் காஞ்சி (522) காட்டுகிறது.

சிலப். 6-164, 14-183, 8-41, 14-212, 22-10; 8-41

மிலேச்சன் போன்ற தீண்டத்தகாத யவனர்களையும் மஹாபாரதம் முதல் முல்லைப் பாட்டுவரை காண்கிறோம் — (முல்லை 65-66).

Maya-society-Castes-as-in India
Caste System in Ancient Mayan Civilization, South America.

மனுநீதியும் புறநானூறும்

மனுஸ்மிருதியில் மனு என்ன சொன்னாரோ அதை அப்படியே புறநானூற்றுப் (1,2,3 ஆம் நூற்றாண்டு) புலவரும் திருவள்ளுவரும் (ஐந்தாம் நூற்றாண்டு) சொல்லி இருக்கிறார்கள்:

புறம் 183 (ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

கீழ்ஜாதியில் ஒருவன் கற்றுத் தேர்ந்தான் ஆனால் அவனை மேல்ஜாதிக்காரர்களும் வாழ்த்தி வணங்குவர்.

வள்ளுவனும் இதையே சொன்னான்:

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

பொருள்:- உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்காவிட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்றவரை விட ஒருபடி தாழ்வே.

மனுவும் இதையே கூறியிருக்கிறார்:–

மேலான அறிவை நாலாம் வருணத்தினிடம் இருந்தும் கொள்ளலாம் ( மனு 2-238)
அறம், ஒழுக்கம், நன்மொழி, பற்பல கலைகள் முதலியவற்றை எவ்விடத்தில் இருந்தும் அறியலாம் ( மனு 2-240)

வேற்று இனத்தாரிடமும் வேதம் கற்கலாம். அப்படிக் கற்கும் காலையில் அவரை குருவாக மதித்து கைகட்டி வாய் புதைத்து அவர் பின்னே செல்ல வேண்டும் என்றும் மனு பகர்வார் (2-242).

மஹாபாரதத்தில் இதற்குக் கசாப்புக்கடை தர்ம வியாதன் முதல் வியாசர் வரை பல கதைகள் கிடைக்கும். வேடனாக இருந்து ரிஷியாக மாறிய வால்மீகி இன்னும் ஒரு எடுத்துக் காட்டு. வேத கலத்தில் கவச ஐலுசர் போன்ற அறிஞர்களும் இவ்வகையினரே.

Pyramid_of_Caste_system_in_India

ஜாதிகள் ஒழிக!

ஜாதிப் பிரிவினைகளை ஆதரிக்கும் கட்டுரை அல்ல இது. ஆனால் சங்க காலத்தில் ஜாதிகள் உண்டு, பழந் தமிழினத்திலும் பிரிவினைகள் உண்டு. அவை தொழில் முறையில் மட்டும் அமைந்தது அல்ல, பிறப்பினாலும் அமைந்தவை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆனால் உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைத்தன. புலவர்கள, பாணர்கள் முதலியோர் வறுமையில் வாடினாலும் அதற்கு அவர்களின் ஜாதி காரணம் அல்ல. மொத்தத்தில் மக்கள் அவரவர் உறைவிடங்களில், வரையறுக் கப்பட்ட பகுதிகளில் இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.

தேர்தலில் ஜாதி, கல்வி நிறுவன அனுமதியில் ஜாதி, வேலை ஒதுக்கீட்டில் ஜாதி – இப்படி எல்லாவற்றிலும் ஜாதியை வேண்டும் தமிழர்கள் — அம்பேத்கர் என்னும் பெருமகன் சொன்ன 25 ஆண்டு எல்லைக்குப் பின்னரும் ஜாதிச் சலுகைகளை விரும்பும் தமிழர்கள் — ஜாதிச் சமரசம் பற்றிப் பேச அருகதை அற்றவர்களே!! அப்படிப் பேசினால் அவர்களது மனச் சாட்சியே அவர்களைப் பார்த்து நகைக்கும்!!!!

அகநானூற்றில் வரும் ஜாதிகள்/தொழில் முறைப் பிரிவுகள்:–
அகநானூற்றில் உள்ள சாதிகள்: அண்டர்/ இடையர், அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பானர், யானைப்பாகர், வேளாப் பார்ப்பார்,

குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.

–சுபம்–