சுகமான கல்யாணி- ராகங்களின் ராணி (Post No.2993)

IMG_4431

Article Written S NAGARAJAN

Date: 22 July 2016

Post No. 2993

Time uploaded in London :– 5-58 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

சுகமான கல்யாணி ராகங்களின் ராணி!
ச.நாகராஜன்
மனம் எரிச்சலாக இருக்கிறது. அனைவரின் மீதும் இனம் தெரியாத ஒரு கோபம். இது ஒரு வகை.
மனம் மிகவும் அல்பமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையான கம்பீர மனோபாவம் இல்லை. இது இன்னொரு ரகம்.
உற்சாகமே இல்லை; ஏனோ தானோவென்று எதையும் செய்யும் ஒரு மனோபாவமான நிலை! இப்படி ஒரு ரகம்.

IMG_4434
ஆன்ந்த நிலையையே அறிய முடியவில்லை. மனம் இனம் தெரியாத ஒரு சோகமான மனநிலையில் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருக்கும் இயற்கை அனுபவத்தை அனுபவிக்க்க் கொடுத்து வைக்கவில்லை. இப்படி இன்னொரு ரகம்.
இந்த அனைத்து ரக மனிதர்களும் அதிகம் செலவில்லாமல் குணமடையக் கூடிய ஒரு வழி உண்டு.
கல்யாணி ராகத்தில் உள்ள பாடல்களைக் கேட்க வேண்டியது தான்!
யூ டியூபில் சென்றால் இசை ராணி எம்.எஸ். சுப்புலெட்சுமி, மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா என்று எத்தனை அருமையான பாட்கர்களின் கல்யாணி ராகப் பாடல்களைக் கேட்க முடியும்!
கௌசிகி சக்ரவ்ர்த்தியின் கல்யாணி ராக பஜனைப் பாடல் வேறு இருக்கிறதே!!
இரவில் எதைக் கேட்டாலும் மறு நாள் காலை எழுந்திருக்கும் போது உலகமே ஒரே ஆனந்தம்.
பழைய மோசமான மனம் எங்கே போயிற்று. பெருந்தனமை, கம்பீரம், உற்சாகம், பக்தி, அன்பு அனைத்தையும் மனம் எப்படி ஒரே சமயத்தில் கொண்டது?
கல்யாணி ராகத்தின் மஹிமையே மஹிமை!
சுகமான கல்யாணி, ராகங்களின் ராணி!
65வது மேளகர்த்தா ராகம் இது.
ஏழு ஸ்வரங்களும் முறைப்படி கொண்ட ராகம். ஆகவே இது ஒரு சம்பூர்ண ராகம்!
காதல், பக்தி போன்ற நுட்பமான உணர்வுகளை முழு வீச்சில் காண்பிக்க வல்ல அற்புதமான ராகம் இது.
தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் இந்த ராகத்தில் பல அமைந்துள்ளன.

 
நிதி சால சுகமா? – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
அம்மா ராவம்மா! – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
ஹிமாத்ரி சுதே – ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள்
கமலாம்பா பஜரே – ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
உன்னை அல்லால் – பாபநாசம் சிவன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீளும்.
தமிழ் திரைப்படப் பாடல்களில் இதை எடுத்து இசையமைக்காத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம்.

 

IMG_4437
சில பாடல்கள் :
ஜனனீ ஜனனீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா
சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
மன்னவன் வந்தானடி தோழி – திருவருட்செலவர்
வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
இப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதன் இந்தி வடிவத்தில் அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளன.
இவற்றை நெட்டிலும் பிடிக்கலாம்; இசை வடிவங்களிலும் வாங்கலாம்.
செலவு சிறிது; பயனோ பெரிது!
ராகங்களின் ராணிக்கு இன்னும் ஏராளமான பெருமைகள் உண்டு.
பல புத்தகங்களே வந்து விட்டன!
கல்யாணி என்றால் அனைத்து நலன்களையும் அளிப்பவள் என்று பொருள்!
உண்மை தான்!!
***********

 

பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991)

new currency Re1

Written by London swaminathan

Date:21 July 2016

Post No. 2991

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பவிஷ்ய புராணம் என்றவுடன் , எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அதில் கூறப்பட்ட செய்திகளே நம் மனக்கண்ணுக்கு முன் வரும். ஆனால்ல் அதில் வேறு பல சுவையான விஷயங்களும் உள.

 

அதில் ஒன்று பணம் பற்றிய ஸ்லோகம்:-

 

அர்த்தானாமார்ஜனே துக்கம் ஆர்ஜிதானாம் து ரக்ஷணே

நாஸேதுக்கம் வ்யயே துக்கம் கிமர்த்தம் துக்கபாஜனம்

 

பணத்தினால் எல்லா வகையிலும், எப்போதும் துக்கம்தான்;

பணத்தைச் சம்பாதிக்கும்போதும் துக்கம்;

காப்பாற்றுவதிலும் துக்கம்:

அதைச் செலவழித்தாலும் துக்கம்:

 

துக்கத்துக்கெல்லாம் உறைவிடம் பணம்தான்

 

(அர்த்த= செல்வம், பணம்)

 

எவ்வளவு அருமையான பாடல்; மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; நகை, ஷேர் (பங்கு மார்க்கெட்), ரொக்கம் — எது இருந்தாலும் அதை ரக்ஷிப்பது அதைவிட துன்பம்;

 

லாக்கரில் நகைகளை வைத்தால் வைக்கப்போகும்போதும் எடுக்கப்போகும்போதும் திருடர் பயம்;

லாக்கர் வைத்திருப்பவனே ஓடிவிடுவானோ என்றபயம் (வெளிநாட்டில் பிரைவேட் லாக்கர்கள் உண்டு); சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அரசாங்கம் மாறும் போது எல்லாம் பயம்; பங்கு மார்க்கெட்டில் போட்டவர்களுக்கு பங்கு மார்க்கெட் சரியும் போது பயம்; இவை அனைத்தும் துக்கத்தில் முடிகிறது. வெளி நாடுகளில் அண்மைக்கலத்தில் இரண்டு மூன்று வங்கிகள் திவால் ஆனபோது, பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பலர் சேமிப்பை இழந்தனர். துக்கம் அடைந்தனர்.

 

செலவழித்தால், பிற்காலத்தைப் பற்றி பயம்; அதிகம் செலவழிதால் கடன் வாங்கும் துன்பம்; ஆக பணமே துன்பத்தின் உறைவிடம்!

 

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்)

 

இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்)

 

உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

 

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

 

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

KATTU KATTU CURRENCY

கவிஞர் ஹேமாத்ரி சொன்னது:–

ந்யாயார்ஜிதஸ்ய வித்தஸ்ய த்வ வனார்த்தௌ ப்ரகீர்த்திதௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரேர்தாபதிபாதனம்

 

பணம் என்பது தகுதியற்றவர்களுக்கே கிடைக்கும்; தகுதியுடையோருக்கு கிடைப்பதில்லை

 

பணமிருந்தால் குணமிருக்காது

குணம் இருந்தால் பணம் இருக்காது – என்ற தமிழ் வசனமும்

 

லெட்சுமி இருக்குமிடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள் என்ற பழமொழியும் இதனுடன் ஒட்டிவருவதைக் காண்க.

 

–Subham–

 

 

பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்….. ( Post No.2981)

akhand bharat

Article Written S NAGARAJAN

Date: 18 July 2016

Post No. 2981

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விப்போம்!
ச.நாகராஜன்

 

ilove my india

 

உலகத்தின் தலையாய பீடத்தில் பாரதம் இருந்தது என்பதைப் பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே அவற்றை மீண்டும் இங்கு கூற வேண்டிய அவசியமில்லை. ‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விக்க மஹாத்மாவை பாரதி போற்றினான்.

 
ஒளி இழந்த நாட்டிலே ஒளி கொடுக்க வா வா வா என்று அனைவரையும் அழைத்தான். வலிமையற்ற போகின்ற பாரதத்தைப் போ போ போ என்று அவன் துரத்தினான்.
அவனே கூறிய படி, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மஹிமை இல்லை!

 

 
இன்றைய பாரதத்தின் நிலை என்ன?
அறிக்கை வந்து விட்டது! பார்ப்போம்!!
உலகின் மிகச் சிறந்த நாடாக ஸ்வீடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்! ஸ்வீட் ஸ்வீடன்!! வாழ்த்துக்கள்!!!

 
மக்களின் நலனைக் காப்பதில் முதலிடம் பெற்றுள்ளது ஸ்வீடன்.
உலகில் உள்ள மனித குலத்தின் பொது நன்மையை உறுதி செய்து அதைக் காக்கப் பாடுபடுவதிலும் அது முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா???

 

 
163 நாடுகள் கணிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா 70வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்குப் பின்னே 93 நாடுகள் உள்ளன என்று ‘பெருமை’ப்படுவதா (இன்றைய தரித்திர புத்தி அப்படித் தான் நினைக்க வைக்கும்!)

 
அல்லது நம்மை விட் 69 பேர் முந்தைய இடத்தில் இருக்கிறார்களே முய்னறு முன்னேற வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா! ஒளி படைத்த பாரதன் அப்படித் தான் நினைப்பான்!

 
‘தி குட் கண்ட்ரி இண்டெக்ஸ் – 2015’ (The Good Country Index – 2015) என்பது உலக நன்மைக்காக ஒரு நாடு எவ்வளவு தூரம் உழைத்து நல்லதைச் செய்கிறது, என்பதைக் காக்கும் குறியீட்டெண் ஆகும்.

 

 

விஞ்ஞானம், பண்பாடு, அமைதி, பாதுகாப்பு, காலநிலை மாறுபாடு, ஆரோக்கியம்., சமத்துவம் உள்ளிட்ட 35 குறியீடுகளைக் கொண்டு அளக்கப்பட்டு உல்கிற்கு ஒரு நாட்டின் பங்களிப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்த்து ஒரு நாட்டின் தர வரிசை இதில் நிர்ணயிக்கப்படுகிறது.

 
ஸ்வீடன் 163 நாடுகளில் முதல் இடத்தைல் பிடிக்க லிபியா கடைசியில் நிற்கிறது.
உலக அமைதிக்கான பங்களிப்பில் சீனாவிற்குக் (27) கீழே மூன்று இடங்கள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சமத்துவம் கடைப்பிடிப்பதில் ஒரே அவலம். 124ஆம் இடத்திற்குத் தள்ளபபட்டுள்ளது.

 

akhand baharat 2
இந்தியாவின் இடம் : ஆரோக்கியத்தில் 37வது இடம், விஞ்ஞானத்தில் 62வது இடம், பண்பாட்டில் 119வது இடம், காலநிலை காப்பதில் 106வது இடம், உலக ஒழுங்கில் 100வது இடம்.
முற்பட்ட இடங்களில் இருப்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வேளையில் இதர துறைகளில் மேம்பட வேண்டும் என ஒவ்வொரு பாரதீயனும் உறுதி எடுத்தால் முதல் இடத்தைப் பிடிக்க மாட்டோமா என்ன!
புகழோங்கிய பண்டைய நாளை அடைவோம்.
பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!
வாழ்க பாரதம்!
**********

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் (Post No.2974)

tribe 11

 

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 2  

Research Article written by London swaminathan

 

Date: 15 July 2016

 

Post No. 2974

 

Time uploaded in London :– 17-59

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Please read the first part published yesterday, where there is a detailed introduction

(( முதல் படம் “போர் அபோர்” இன மக்கள், பெண்ணின் படம். வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் இனம். தலைமுடியை, ஆண்கள் கிராப் வெட்டுவது போல வெட்டிக்கொள்வர். ஏராளமான பாசிமணி, விலை மதிப்பு குறைந்த நீலக்கற்கள், பச்சைக்கற்கள் உடைய நகைகளை அணிவர்.))

 

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் –

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 கட்டுரையைப் படித்துவிட்டு இந்த இரண்டாவது கட்டுரையைப் படிக்கவும்.

 

உலகம் முழுதும் பழங்குடி மக்கள் மரபு அல்லது ஜாதி அல்லது குலச் சின்னங்களை (TOTEM SYMBOLS) வைத்திருக்கின்றனர். இந்த சின்னங்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே இருக்கிறது. ஆனால் நாகரீக முன்னேற்றம் காரணமாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதாவது அப்பொழுதே இந்திய சமுதாயம் அவ்வளவு முன்னேறிவிட்டது.

 

ஆனால் இன்று பழங்குடி மக்கள், நாகரீக சமுதாயத்துக்கு இடையே எப்படி வாழ்கின்றனரோ, அப்படி இதிஹாச காலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். ராமாயண கலத்தில், கு ரங்கைச் சின்னமாகக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அவர்களின் மன்னரே வாலி, சுக்ரீவன். அதே காலத்தில் கரடிச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவனே ஜாம்பவான். அதே காலத்தில் கழுகுச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவரே ஜடாயு. இவை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததால், நமது புராண, இதிஹாச எழுத்தர்கள் அவர்களைக் குரங்கு, கரடி, கழுகு என்று சித்தரித்துவிட்டனர்.

 

இதற்குப் பின்னர், மஹாபாரத காலத்தில், கிருஷ்ணனும் அர்ஜுனனும், நாகர்கள் வாழ்ந்த காண்டவ வனத்தை எரித்தபோது,  நாகர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல தலைமுறைகளுக்கு நீடித்து, ஜனமேஜயன் காலத்தில் சர்ப்ப யாகம் நடந்து, பின்னர் ஆஸ்தீகர் என்பவர் மூலம் சமரச ஒப்பந்தம் நடந்தது. இதை இன்றும் பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லி நாகர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். இந்த நாகர் இன மக்களை, பாம்பு என்று நமது புராணிகர்கள் முத்திரை குத்திவிட்டனர். நாகர்கள் பின்னர் அமெரிக்கா சென்று மாயா, ஆஸ்டெக் நாகரீகத்தை நிறுவினர். இது பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். காண்டவ வனம் என்பதை, அர்த்தமே புரியாமல், வெளிநாட்டினர், கோண்ட்வானா (காண்டவ + வன) என்று சொல்லி வருகின்றனர்.

 

 

மஹாபாரதத்தில் அயு என்ற மன்னனுக்கும் தவளை இனத்துக்கும் நடந்த சண்டை பற்றி கதை உள்ளது. உண்மையில் அது தவளைகள் அல்ல; தவளையை மரபுச் சின்னமாகக் கொண்ட மக்களே!

 

எங்கெங்கெல்லாம் பறவைகள், மிருகங்கள் பற்றிய கதைகள் வருகின்றனவோ அங்கெங்கெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அந்த பிராணிகளின் சின்னங்களை, மரபுச் சின்னங்களாகக் கொண்டவர்களையே.

tribe 14

((இரண்டாவது படம் சுலிகாடா மிஷ்மி ஆண் படம்))

மிகப் பழைய காலத்தில் இவை நடந்ததால் நாம் அதை மிருகங்கள் என்று நம்பத் துவங்கிவிட்டோம். ஆனால் வால்மீகி ராமாயணம் போன்றவற்றில் , அனுமன், நவ வியாகரணத்தில் வல்லவன்,  சொல்லின் செல்வன் என்றெல்லாம் வருணிகப்படும் போதே அவன் குரங்கு அல்ல, குரங்கைச் சின்னமாக உடைய வானர இனத்தில் பிறந்தவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜடாயு என்ற கழுகு இன மன்னன், தசரதனைத் தன்னுடைய தந்தை போன்றவன் என்று வருணிப்பதிலிருந்தே  ஜடாயும் மனிதன் என்றும், கழுகைச் சின்னமாகக் கொண்டவன் என்றும் புரியும்.

வேதத்தில் சான்று!

மண்டூக மகரிஷி என்றால் தவளை முனிவர் என்று பொருள். ஒரு காலத்தில் அவரது முன்னோர்கள் தவளையை சின்னமாக கொண்ட மக்கள என்பது தெரிகிறது.

 

இதே போல, காச்யப மகரிஷி என்றால் ஆமை என்றும் ,கௌசிக மகரிஷி என்றால் ஆந்தை என்றும் அ ர்த்தம். உண்மையில் இவர்கள் எல்லாம் அந்தந்த சின்னம் உடைய பழங்குடிகளில் பிறந்தவ ர் கள். சாண்டில்ய -பறவை (வேத கால ரிஷி)

 

 

கருடன் சின்னத்தை உபயோ கித்தவர்கள், எப்பொழுதுமே நாகர்களுக்கு எதிராக இருந்தனர். உலகம் முழுதும் மெக்ஸிகோ நாட்டு கொடி முதல் பல சின்னங்களில் இதை இன்றும் காணலாம்.

 

மஹாபாரத, ராமா யண காலத்திலேயே தேர்களில் கொடிகளுடன் சென்ற இந்துக்கள்தான் உலகில் சின்னங்கள், கொடிகள்  முதலியவற்றைத்  தோற்றுவித்தவர்கள். இது பற்றியும் முன்னரே ஒரு ஆராய்ச்சி க் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

 

இப்போது பழங்குடி இனமக்களிடையே புழங்கும் ஜாதி/மரபுச் TOTEM SYMBOLS சின்னங்களைக் காண்போம்:–

 

ஒராவன் இன மக்கள்

டிர்கி- இளம் சுண்டெலி

எக்கா- ஆமை

கிஸ்போட்டா – பன்றி

லக்னா – கழுதைப் புலி

பாக் – புலி (மூலம் :- வ்யாக்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்)

குஜ்ரார்வ்யா- எண்ணை

ஜெடி-வாத்து

கொய்பா- காட்டு/ மரநாய்

மீஞ்சி – விலாங்கு மீன் ( மூலம் – மீனம்)

சிர்ரா- அணில்

 

ஒரு பழங்குடி இனத்திலேயே எத்தனை பிரிவுகள், எத்தனை சின்னங்கள் பாருங்கள்!

 

யாருக்கு எது சின்னமோ அதை அவர்கள் புனிதமாகக் கருதுவர்; அதை சாப்பிடவும் மாட்டார்கள்!

tribe 17

 

((இந்தப்படம் நாகா இன மக்க்ள் படம்; மணிப்புரி, குல்கி இன மக்கள் பேசும் மொழியுடன் தொடர்புடைய மொழி பேசுவர்.))

 

சாந்தல்  இன மக்கள்

எர்கோ – எலி

முர்மு – மான்

ஹம்ஸ்டா – குள்ள வாத்து (ஹம்சம் – அன்னம்_

மாவ்டி – புல்

பெஸ்ரா – கழுகு

ஹெம்ரோன் – வெற்றிலை

சாரென் – கார்த்திகை நட்சத்திரம் (மூலம்- சரவண)

சங்க – சங்கு ( சம்ஸ்கிருதம்)

குவா – பாக்கு

கரா – எருமை

 

இதில் பல சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் பல சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

 

இந்தியாவில் ஒரே மொழிக்குடும்பம்தான், அதிலிருந்தே சம்ஸ்கிருதமும், பின்னர் தமிழும் வந்தன என்பதும், உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் இவ்விரு மொழிகளே தாய்-தந்தை என்பதையும் என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மெய்ப்பித்துள்ளேன்.

 

 

பூம்ஜி இன மக்கள்

 

சால்ரிசி- சால் வகை மீன்

ஹன்ஸ்டா – வாத்து (க்ஹம்ச)

லெங் – காளான்

சாண்டில்ய -ப்றவை (வேத கால ரிஷி)

ஹொம்ரோன் – வெற்றிலை

துமரங் – பூசனி

நாக் – பாம்பு (நாக)

 

மஹிலி இனம்

துங்ரி – அத்திப் பழம்

டுரு – டுரு புல்

காந்தி – பிராணியின் காது

ஹம்ஸ்டா – வாத்து

முர்மு – மான்

 

இந்த இனத்தின் பிராணிகளின், தாவரங்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத் தொடர்புடையவை.

 

கோரா இன மக்கள்

காஸ்யப் – ஆமை (காஸ்யப ரிஷியின் பெயர்)

சௌலா – சால் மீன்

கசிபக் – கொக்கு

ஹம்ஸ்டா – ஹம்ச

புட்கு – பன்றி

சாம்பு – காளை

 

கூர்மி இன மக்கள்

கேசரியா – கேசரி புல்

டரார் – எருமை

டுமுரியா- அத்தி

சஞ்ச்முகுரார் – சிலந்தி

ஹஸ்டோவர்- ஆமை

ஜல்பனுவார் – வலை

சங்கோவர் – சங்கு

கதியார்- பட்டுத்துணி

பாக்பௌவார்- புலி

 

இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல குழுக்கள்; அவர்களுக்கு பல பிராணிகள், தாவரங்கள் மரபுச் சின்னங்கள். அவர்களுடைய பெயர்களில் பல சம்ஸ்கிருத மூலச் சொற்களின் திரிபு!

 

ஏன் இவ்வளவு இனம்? ஏன் இவ்வளவு உட்பிரிவு? இதற்கெல்லாம் வெளிநாட்டுக் காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் பல சம்ஸ்க்ருதப் பெயர்கள்?  ஒருவேளை உள்நாட்டு மக்களுடன் தொடர்பு ஏற்பட்டு மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சப்பைக் கட்டு கட்டுவர் வெளிநாட்டார். அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை — என்ற கதைதான்.

 

இந்தப் படத்தில் காட்டிய ஒவ்வொரு பழங்குடி இன மக்களுக்கும் ஒரு சிறப்பியல்பு, பழக்க வழக்கம் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் எப்படி வந்தன? எல்லா வற்றிலும் ஆரிய- திராவிட இனவெறியைப் புகுத்தும் வெளிநாட்டினர், இந்த விஷயத்தில் பேந்தப் பேந்த முழிக்கின்றனர்.

 

–தொடரும்

 

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969)

stony-beach-resized

Written by London swaminathan

Date:14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழில் ஒரு அருமையான பழமொழி இருக்கிறது. கடல் ஓய்ந்த பின்னர் சமுத்திரக்குளியலா? என்று.

 

நம்மில் பலரும் “திரு நாளைப்ப் போவார்” போல வாழ்கிறோம். நல்ல செயல்களை எல்லாம் ஒத்திப் போடுகிறோம். நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம். நாளை நம்முடைய முறையோ நமனுடைய (யமனுடைய) முறையோ என்பதை நாம் அறியோம்.

 

நாலடியார் என்னும் புத்தகம் பதினெண் கீழ்க்கணக்கு (18) நூல்களில் ஒன்று. அதில் ஒரு பாடல் இதோ:–

 

பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்த பின் ஆடுதும் என்றாற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு  – நாலடியார்

 

இல் செய் குறவினை நீக்கி – குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்துவிட்டு,

 

மற்று அறவினை அறிவாம் என்றிருப்பார் மாண்பு – பின்னர் தர்ம காரியங்களைச் செய்வோம் என்று இருப்போரின் தன்மை,

 

பெருங்கடல் ஆடிய சென்றார்- கடலில் குளிக்கப்போனவன்

ஓசை ஒருங்கு உடன்  அவிந்த பின் ஆடுதும்  என்று அற்று – இந்தக் கடல் அலை ஓசை எல்லாம் நின்றபின் ஆடுவோம் என்று காதிருப்பவனைப் போன்றது..

 

ஒன்றே செய்க, அதுவும் இன்றே செய்க! , அதுவும் நன்றே செய்க!

bengali-blow

முந்தைய கட்டுரை:–

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com

கர்ம பலன்கள்: சித்திரகுப்தன் கணக்கு (Post No.2963)

laew of karma 2

 

Article Written S NAGARAJAN

Date: 12 July 2016

Post No. 2963

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!

ச,நாகராஜன்
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யா பெரும் காயத்ரி உபாசகர். அவர் ஏராளமான அற்புத நூல்களை எழுதியுள்ளார். அனைத்தும் பொக்கிஷம். அவற்றைப் படித்தவர்கள் பாக்கியவான்கள்.
இயற்கை மர்மத்தை ஹிந்து மதம் விளக்குவதை அவர் நூல்கள் தெளிவுற இன்றைய உலகிற்கு ஏற்றாற் போல விளக்கும்.
கர்ம பலன்களை எப்படி சித்திரகுப்தன் செயல்படுத்துகிறான் என்பதை அவர் விளக்கும் விதமே அலாதி!
ஒரு சிறிய விளக்கத்தைப் பார்ப்போம்.
மனித மனம் அக மனம் புற மனம் என இரு வகையாகச் செயல் படுகின்றன. புற மனம் புற உலகிற்கு ஏற்றாற் போல பகுத்தறிந்து செயல் படுகிறது. உள் மனமோ சின்னக் குழந்தை போல. கள்ளம் கபடம் அறியாதது. அது இறைத்தன்மையோடு இருப்பது. என்ன தான் சமாதானம் கூறிப் பல்வேறு செய்கைகளை ஒருவர் செய்தாலும் அது கண்டு கொள்ளாது. அதன் விதிகள் தனி. இறை விதிகள் அவை.
அந்த அக மனத்தின் கணக்கு அவ்வப்பொழுது எழுதி விடப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கணக்கு!
நல்லவை, அல்லாதவை அனைத்தும் அங்கே துல்லியமாக எழுதப் படுகின்றன.
இந்த மறைமுகக் கணக்கிற்கு – இரகசிய கணக்கிற்கு – குப்த கணக்கிற்கு – சித்திரகுப்தன் என்ற தெய்வம் அதிபதி.
சித்திரகுப்தனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் கிடையாது.
பாரபட்சமற்ற கணக்கன்!
உதாரணத்திற்கு இக உலக செயல்பாட்டிற்கு வருவோம்.
ஒருவன் குற்றம் இழைக்கிறான். அதை போலீஸ் – காவல் துறை கண்காணித்துக் கண்டு பிடித்து அவன் செய்த குற்றம், அதற்கான சாட்சியங்கள் ஆகியவற்றைத் தொகுத்து நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்கிறது. அங்கே நீதிபதி அனைத்தையும் பரிசீலித்து வாத பிரதிவாதங்களைக் கேட்டு முடிவை எடுக்கிறார்.
உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
மூன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர் தீவிரமாக விசாரிக்கிறார். மூன்று பேர்களும் ஒருவரைக் கொலை செய்தவர்கள் தான்!
முதல்வரை அவர் விடுதலை செய்து விடுகிறார்.அடுத்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறார். மூன்றாமவருக்கோ தூக்கு தண்டனை விதிக்கிறார்.
இவர்களது செயல்களால் தனித் தனியே ஒருவர் உயிர் இழந்திருக்கிறார்.
ஆனால் தண்டனை இப்படி பாரபட்சமாக இருக்கலாமா?
அவர் ஏன் அப்படித் தண்டனை கொடுத்தார்.
ஆராயலாம்.
முதலாமவர் ஒரு கட்டிட கொத்தனார். ஒரு பெரிய அடுக்கு மாடி வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த போது அகஸ்மாத்தாக ஒரு செங்கல்லை அவர் தவற விடுகிறார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒருவரின் தலை மீது விழ ஆள் காலி.
நடந்த விபத்தே அப்புறம் தான் கொத்தனாருக்குத் தெரியும். அவரும் சேர்ந்து இறந்தவருக்காகத் துக்கப்படுகிறார்.
தெரியாமல் செய்த குற்றம். அவரை நீதிபதி விடுதலை செய்கிறார்.
அடுத்தவர் ஒரு விவசாயி. கஷ்டப்பட்டு விதை விதைத்து, நீர் பாய்ச்சி, காவல் காத்து நெற்பயிரை வளர்த்து அறுவடை செய்யும் நாள் வரப் போகிறது. முதல் நாள் இரவு காவலுக்கென தன் நிலத்தில் படுத்திருக்கிறார். திடீரென சப்தம் கேட்டு எழுந்த அவர் பார்த்த காட்சி. திருவன் ஒருவன் பாடுபட்டு அவர் வளர்த்த பயிரை அறுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறார். அடங்காத கோபம் வருகிறது. அவனை விரட்டிச் சென்று அரிவாளால் ஒரு போடு போடுகிறார். திருடன் காலி.
நீதிபதி இனி இப்படி அதிகமாகக் கோபம் கொள்ளக் கூடாது என்று அவரை எச்சரித்து ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கிறார்.
திருடன் செய்தது குற்றம் தான் என்றாலும் அது அவன் உயிரைப் பறிக்கக் கூடிய அளவு கொடிதானதல்ல. ஆகவே விவசாயிக்கு சிறை தண்டனை.
மூன்றாமவர் ஒரு பக்காத் திருடன். வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கொலை செய்து அவர் வைத்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றிருக்கிறான் அவன்.
திட்டமிட்டு ஒன்றும் அறியாத ஒரு அப்பாவியைக் கொலை செய்த அவனுக்கு தூக்குத் தண்டனையை விதிக்கிறார் நீதிபதி.
செய்தது கொலை’ ஒருவர் உயிர் நீக்கப்பட்டது. என்றாலும் அதற்கான நோக்கம், குற்றம் நடந்த விதம் அனைத்தையும் ஆராய்ந்து தண்டனையைத் தருகிறார் நீதிபதி.
இனி சித்திரகுப்தன் செயலுக்கு வருவோம்.

 

law-of-karma
சித்திரகுப்தனுக்கு போலீஸ், நீதிபதி ஆகிய துறைகள் கிடையாது. எல்லாவற்றையும் அவர் ஒருவரே பார்த்துக் கொள்வார். என்ன நோக்கம் ஏன் செய்யப்பட்டது என்பதை அவரது ரிகார்டுகள் துல்லியமாகக் காட்டும். இக உலகில் ஒரு வேளை நீதிபதி தவறான தண்டனையைக் கொடுத்து விடலாம்.
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் மதிப்பீடு செய்பவர் அந்தச் செயலைச் செய்தவரின் அக மனமே. அது அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அது தன் கணக்கையும் முடிவையும் எழுதி வைத்துக் கொள்கிறது.
செயலைச் செய்தவனே ‘ப்ளாக் பாக்ஸ்’ போல நடந்ததைக் காட்டும் அதிசயமே சித்திரகுப்தன் கணக்கு.
எப்படி, சுவாரசியமாக இருக்கிறது இல்லையா, விளக்கம்!
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யரின் ‘ தி அப்ஸொல்யூட் லா ஆஃப் கர்மா’ (The Absolute Law of Karma) என்ற நூலில் மேற் கண்ட விளக்கம் அற்புதமாகத் தரப்படுகிறது.
இந்த நூலை நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

*********

புஸ்தகம், வனிதா, வித்தம் -கதம்!கதம்!! (Post No.2961)

klai add2

Article Written by London swaminathan
Date: 11 July 2016
Post No. 2961
Time uploaded in London :– 8-40 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு அருமையான சம்ஸ்கிருத பாடல்/ஸ்லோகம்
கொடுக்கக்கூடாதவை
புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்த கதம் கதம்
அதவா புனராகச்ச ஜீர்ணம் ப்ரஷ்டா ச கண்டச:
புஸ்தகம் -நூல்
வனிதா –பெண்மணி
வித்தம் –பணம்
பரஹஸ்த –பிறர்கைக்கு
கதம் கதம் போனால் போனதுதான்!
அதவா புனராகச்ச -அல்லது திரும்பி வந்தால்
ஜீர்ணம் – திரும்பி வந்தால்
ப்ரஷ்டா ச கண்டச: — விலக்கப்படவேண்டியது, துண்டாக்கப்பட்டது (நன்கு பயன்படுத்தப்பட்டது)
இந்தப் பாடலுக்கு விளக்கமும் வேண்டுமோ!!
xxx

 

flame-of-the-forest-palasa

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத்தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

இஹ்தே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:
வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxx

field green,fb

எதைக் கைவிடலாம்?
இந்தப் பாடலை முன்னரே கொடுத்துள்ளேன்:-
தன்னுடைய குலத்துக்காக ஒருவரை தியாகம் செய்யலாம்; (த்யஜேத் – விட்டுவிடு)

ஒரு கிராமத்தையே காப்பாற்ற ஒரு குலத்தையே விட்டுவிடலாம்

ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தையே விடலாம்;
தன்னைக் காப்பாற்ற உலகையே விடலாம் (தனது ஆன்மீக முன்னேற்றத்துக்காக உலகத்தையே துறக்கலாம்).

த்யஜேத் குலார்த்தே புருஷம் க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹ்யாத்மனார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்
-ஸபா பர்வம், மஹாபாரதம்

–SUBHAM–

பிராமணர்களில் குருடன் யார்? (Post No.2947)

brahmin4

Written by London swaminathan

Date: 6 July 2016

Post No. 2947

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அந்தணர்களாகப் பிறந்து சாஸ்திர அறிவில்லாதவனை, கண்ணிருந்தும் குருடன் என்று கருதுவர் சான்றோர். இதை அழகாகச் சொல்லும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

 

 

ஸ்ருதிஸ்ம்ருதீ து விப்ராணாம் சக்ஷுஷீ த்வே வினிர்மிதே

கானஸ்தத்ரைகயாஹீனோ த்வாப்யாம் அந்த: ப்ரகீர்தித:

 

அந்தணர்களின் இரண்டு கண்கள் வேதமும் தர்ம சாஸ்திரங்களும் (சுருதி, ஸ்ம்ருதி) ஆகும்.

 

இதில் ஒன்று தெரியாதவன் ஒற்றைக் கண்ணுடையோன்.

இரண்டும் தெரியாதவன் குருடன் என்று அறியப்படும்.

 

திருவள்ளுவர் இதையே வேறுவிதமாகச்   சொல்லுவார்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (திருக்குறள் 393)

 

நல்ல நூல்களைக் கற்று, ஞானத்தைப் பெற்றவர்களையே கண்கள் உடையவர் என்று சொல்லுவார்கள்; கல்வி அறிவு பெறாதவர்களை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்று இகழ்வார்கள்.

brahmin3

xxxxx

 

 

கர்ம சண்டாளர்கள் யார்?

 

பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.

தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–

 

தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:

சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:

 

பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)

 

சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்

 

பேராசைக்காரன்

 

நீண்ட காலத்துக்கு கோபத்தைத்  தக்கவைப்பவன்

 

ஆகிய நால்வரும் செய்ய்யும் தொழிலால்ல் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.

 

 

///////////////// SUBHAM////////////////////

 

மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)

anthaka kavi 1

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2943

Time uploaded in London :– 16-34

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய  சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.

 

 

கதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்கிறது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.

 

இது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

anthakakavi 2

anthaka kavi 4

 

anthaka kavi5

 

anthaka kavi 6

–subham–

 

மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை! (Post No.2924)

Stephen Hawking

rticle Written by S Nagarajan

Date 27th June 2016

Post No.2924

 

பாக்யா 24-6-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!
ச.நாகராஜன்

“30 நாட்களில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் உங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” – ஜீனியக்ஸ் மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனி

உலகின் புரட்சிகரமான மாத்திரை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. பெயர் ஜீனியக்ஸ் (Geniux) .இதைப் பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரப்ல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் கூறுகையில், “இது மனித குலத்தையே மாற்றப் போகிறது” (This pill will change humanity) என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 
ஸ்டீபங் ஹாகிங் நரம்பு மண்டலக் கோளாறினால் பேச முடியாமல் அவஸ்தைப் படும் நோயாளி என்பதை உலகமே நன்கு அறியும்.
மூளையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க விரும்பும் அவர் இப்படிப்பட்ட நற்சான்றிதழை ஒரு மாத்திரைக்குத் தந்துள்ளார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
தனது மூளை முன்பை விட கூர்மையாக செயல் பட ஜீனியக்ஸ் தான் காரணம் என்று கூறும் அவர், “மூளையானது ஒரு தசை போல. நீங்கள் அதை செயல்படுத்த சில துணைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்” என்கிறார். இந்த மாத்திரையை உட்கொண்ட டாம் பிராடி என்ற விளையாட்டு வீரரும் கன்யே வெஸ்ட் என்ற இசைக் கலைஞரும் இதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாத்திரையே தனது வணிகத்தில் தான் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
“இது ஒரு மாயாஜால மாத்திரை (This pill is the real magic) என்பது அவரது புகழுரை!
இதை உட்கொள்வது பாதுகாப்பானது தானா? இதற்கு பதிலை, ஏழு வருட கால ஆய்வுக்குப் பின்னர் இந்த மாத்திரையை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இது நுண்ணறிவைக் கூட்டுகிறது. “இதைச் சாப்பிட்டவுடன் வானத்தை மறைத்திருக்கும் மேகக் கூட்டம் விலகுவது போல இருக்கிறது; மூளை கூர்மையாகிறது” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் ரோஸன்ஹ்வுஸ் (Dr Rosenhouse), “இந்த மாத்திரையில் மூளைக்குத் தேவையான வைட்டமின்களும், இதர முக்கிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உடனடி நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல், பிரச்சினனகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட அனைத்து மூளை சக்தியையும் வழங்குகிறது” என்கிறார்.
பூமியில் மனித குலத்தை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் மாத்திரை இது என்கிறது ஆய்வுக்குழு.
இதைத் தயாரிக்கும் நிறுவனம் 5 பாட்டில்கள் மாத்திரைக்கு 100 டாலர் (சுமார் 6600 ரூபாய்) என விலையை அதிகமாக நிர்ணயம் செய்துள்ளது. என்றாலும் விற்பனை அமோகம் தான்! .
ஆய்வு மைய சோதனைகள் கீழ்க்கண்ட பலன்களை உறுதிப்படுத்தியுள்ளன :
கவனக்குவிப்பை 312 சதவிகிதம் அதிகரிக்கும்
படைப்பாற்றலை ஊக்குவிக்கும்
ஆற்றலை அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரித்து எதையும் உடனடியாக நினைவு கொள்ளும்படி செய்கிறது
நுண்ணறிவை 77 % அதிகரிக்கிறது.

ஜீனியக்ஸின் சூடு பறக்கும் விற்பனைக்கு சில விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இதன் விலை மிகவும் அதிகம்
இதில் உள்ள 19 மூலப் பொருள்களில் ஒன்றை மட்டுமே நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற 18பொருள்கள் என்னென்ன? இவற்றில் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த மாத்திரைக்கு பதிலாக தினமும் எட்டு மணி நேர உறக்கம், ஆரோக்கியமான உணவு, அளவான தினசரி உடற்பயிற்சிகள் போதுமே. மூளை நன்கு செயல்படுமே!” என்று இதை எதிர்க்கும் விமரிசகர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

ஜீனியக்ஸை உட்கொண்ட ஒருவர் எனது வேலைத்திறன் மிக அதிகமானது உண்மை. ஆனால் தூக்கம் போச்சு என்று அலட்டிக் கொள்கிறார். ஒரு மாணவரோ, “ ஐந்து பக்க ஆய்வுக் கட்டுரையை மூன்றே மணி நேரத்தில் முடித்து விட்டேன். ஜீனியக்ஸின் சக்தி அபாரம்”, என்கிறார்.
இதைப் பயன்படுத்திய ஒருவர் “எந்த இலட்சிய இலக்கை நான் நிர்ணையித்தாலும் அதை உடனே முடித்து விடுகிறேன். இனி பெரிய லட்சியம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது தான்!” என அங்கலாய்க்கிறார்.
உச்ச பட்ச புகழ் மொழியாக இதை “மூளையின் வயாக்ரா” என்று சொல்லிப் புகழ்கின்றனர், இதனால் பயன் பெறுவோர்!

எது எப்படியென்றாலும் ‘ஸ்மார்ட் பில்’ என்று அறிமுகப்படுத்தப்படும் ஜீனியக்ஸின் வருகை எதிர்கால மனித உலகை மாற்றப்போகும் மருந்துகளுக்கு ஒரு முன்னோடி என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி ஃபெடொரோவிச் ஈகோரோவ் (Dimitri Fedorovich Egorov) பிரப்லமான கணித மேதை. (தோற்றம் 2-12-1869 மறைவு 10-9-1931)ரஷியாவில் கணித சங்கத்தின் தலைவராக இருந்த இவரை அனைவரும் பெரு மதிப்புடன் போற்றுவர். இவருக்கு கணித நூல்களின் மீது எவ்வளவு பற்றோ அவ்வளவு பற்று பைபிளின் மீதும் உண்டு. தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமாகப் பங்கேற்பார். ஆனால் ரஷிய புரட்சி தோன்றியவுடன் மார்க்ஸீய புரட்சிவாதிகள் இவருக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். கணித சங்கக் கூட்டத்தில் மதவாதிக்கும் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வியை எழுப்பினர். இதனால் பெரிதும் மனம் நொந்து போனார் அவர். தேவாலயங்கள் மாணவர்களின் உடற்பயிற்சிக்க் கூடங்களாக மாற்றப்பட்டன. வெவ்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்து விட்டார்.
மாஸ்கோவில் சிவில் எஞ்ஜினியரிங் இன்ஸ்டிடியூட்டில் கணிதம் கற்பித்து வந்த அவரை மார்க்ஸீயவாதியான எர்னஸ்ட் கோல்மேன் என்பவர் “மாணவர்களைக் கவரும் அபாயகரமான மதவாதி” என்று ஏசினார். இதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தப் பணிக்கு நிகொலாய் கிரிகோரிவிச் செபொடார்யோவ் (Nikolai Grigorievich Chebotaryov) என்னும் மேதை நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு எப்படி அந்தப் பணி கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்ட போது திடுக்கிட்டார். மாமேதையான ஈகோரோவுக்குப் பதிலாகத் தானா என்று திடுக்கிட்ட அவர் அந்தப் பணியை ஏற்க மறுத்து ராஜிநாமா செய்து விட்டார்.
அடுத்து 1930ஆம் ஆண்டு கணித சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். “பழ்மைவாதியான” அவரை புரட்சி அர்சாங்கம் சிறையில் அடைத்தது. சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மாமேதை. நாளடைவில் அவரது உட்ல் நலிந்தது. அங்கு சிறையில் டாக்டராக இருந்தவர் செபொடார்யோவின் மனைவி. மரியா.
அவர் மாபெரும் கணித மேதையைச் சிறையில் கண்டு திடுக்கிட்டதோடு அவர் இருந்த நிலையைப் பார்த்து வருந்தினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடையை மரியா மேதையின் சவத்தைத் தன் வீட்டிற்கே எடுத்துச் சென்று தன் கணவருடன் அவருக்கு ம்ரியாதை செலுத்தி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.
மாபெரும் மேதையான அவர் இன்றும் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
*********