மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)

manu-book-3

Written by London Swaminathan

 

Date: 26 October 2016

 

Time uploaded in London: 20-23

 

Post No.3292

 

Pictures are taken from various sources;thanks

 

மனு தர்ம சாத்திரத்தில் ஏராளமான சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

manu-book-1

முன்னொரு கட்டுரையில் மனிதனுக்கு கிருத யுகத்தில் 400 வயது, பெண்ணின் வாய் எப்போதுமே சுத்தமானது, பெரிய ரிஷிகளைப் பார்த்து ஒருவர் என்னருமை சின்னப் பையன்களா என்று சொன்னது சரிதான், 36 ஆண்டு, 18 ஆண்டு பிரம்மச்சர்யம், திதியில் மாமிசம் சேர்ப்பது, பெண்களை நன்றாகக் கவனிக்காவிடில் அந்தக் குடும்பம் வேருடன் அழியும் , கீழ்ஜாதிக்காரன் படித்திருந்தால் அவனிடம் கைகட்டி வாய்பொத்தி கல்வி கற்க வேண்டும், ஆயிரம் தந்தைக்கு ஒரு தாய் சமம் — முதலிய பல விஷயங்களைக் கொடுத்திருந்தேன். அவைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம். இப்போது வேறு சில சுவையான  விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

யார் யாருக்கு விலகி வழிவிட வேண்டும் என்று மனு சொல்லுகிறார்:-

 

ஒருவனுடன் 10 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

ஒரு கலைஞனுடன் 5 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

வேதம் அறிந்த ஒருவனுடன் 3 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

சொந்தக்காரர்களை சிறிது காலத்துக்குள்ளேயே நண்பனாகக் கருத வேண்டும்.

 

ஒருவனுக்கு மரியாதை கொடுக்க பின்வரும் விஷயங்களை கருத்திற்கொள்க:-பணமுள்ளவனுக்கு மரியாதை கொடு; அதைவிட நண்பனுக்கும்,அதைவிட வயதுக்கும், அதைவிட நல்ல பணிசெய்பவனுக்கும்,   அதைவிட கல்விகற்றவனுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

வேலைக்கரன் ஆனாலும் 90 வயதைக் கடந்து விட்டால் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

எதிரே வண்டியில் வருபவர்களுக்கும், 90 வயதைக் கடந்தவர்களுக்கும், நோயாளிக்கும், சுமை  தூக்குவோருக்கும், பெண்களுக்கும், வேத பண்டிதனுக்கும், மாப்பிள்ளைக்கும், அரசனுக்கும் விலகி நின்று வழிவிட வேண்டும். இவர்கள் எல்லோரும் வந்தால், அரசனுக்கும் வேத பண்டிதனுக்குமே முதல் மரியாதை.

 

அரசனும் வேத பண்டிதனும் ஒரே நேரத்தில் எதிரே வந்து விட்டால், வேத பண்டிதனுக்கே முதலில் வழிவிட வேண்டும்.

 

பெண்களுக்கும் வயதானோருக்கும் ஜாதி வேறு பாடின்றி மரியாதை கொடுக்கப்படுவது அந்தக்காலத்தில் பெண்களுக்கும் வயதுக்கும் இருந்த மரியாதையைக் காட்டுகிறது. மனு எவ்வளவு அளவு மனிதபிமானம் உடையவர், நல்ல சிந்தனை உடையவர் என்பதை இந்த இரண்டாம் அத்தியாய ஸ்லோகங்கள் (133- 139) காட்டுகின்றன.

manu-book-2

 

வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் வைஸ்யர்கள், சூத்திரகளாக இருந்தாலும் அவர்களை விருந்தினராக கருதி உணவளிக்க வேண்டும்

 

நண்பர்கள் வந்தால் மனையுடன் உட்கார்ந்து சாப்பிடலாம். விருந்தினர்கள் சாப்பிட்டவுடன் கர்ப்பிணிப் பெண்களையும், சிறு பெண்களையும் , புதுமணத் தம்பதிகளையும், நோயாளிகளையும் சாப்பிடச் சொல்ல வேண்டும்.

குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் சாப்பிட்ட பின்னரே கணவனும் மனைவியும் சாப்பிடலாம். (Manu 3- 111 to 118)

 

கர்ப்பிணிப் பெண்கள், கன்யாப் பெண்கள் மீது மனுவுக்கு எவ்வளவு மதிப்பு பாருங்கள்.

 

–Subham–

 

 

மனைவி பற்றி யஜூர் வேதம் (Post No3280)

bengali-blow

Written by London Swaminathan

 

Date: 23 October 2016

 

Time uploaded in London: 7-07 AM

 

Post No.3280

 

Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

This article is available in English as well

girls-i-daydr-sudha-galavagunta

மனைவி என்பவள் கணவனில் பாதி — என்று யஜூர் வேதம் சொல்கிறது.

அர்த்தோவா ஏஷ ஆத்மேனோய பத்னீ.

This article is available in English as well

இது பற்றி ப்ருஹஸ்பதி எழுதிய வியாக்கியானத்தில் (உரையில்) கூறுவார்:-

கணவனில் பாதி மனைவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் செய்யும் பாவ, புண்ணியங்களிலும் அவளுக்கு சரிபாதியைப் பங்கிட்டுக் கொள்வாள்.

 

மஹாபாரதமும் மனைவி என்பவள் , கணவனில் சரிபாதி என்று சொல்லும் ஸ்லோகத்தை மோனியர் வில்லியம்ஸ் எடுத்துக்காட்டுகிறார்:-

 

 

மனைவி, மனிதனில் பாதி; கணவனின் உண்மை நண்பன்

அன்புள்ள மனைவி குணம், இன்பம், ப்செல்வம் – ஆகியவற்றின்

ஊற்று; விசுவாசமான மனைவிசொர்க லோகம் புகவும் துணை புரிவாள்

இனிமையாகப் பேசும் மனைவி தனிமைத் துயரைப் போக்குவாள்;

அறிவுரை வழங்குவதில் அவள் தந்தையைப் போன்றவள்

வாழ்க்கை என்னும் வறண்ட வழியில் அவள் ஒரு ஓய்வுவிடுதி!

 

பத்மபுராணம் சொல்லுகிறது:-

 

பதிரேவ ப்ரிய: ஸ்த்ரீணாம், ப்ரஹ்மாதிப்யோபி சர்வச:

ஆத்மானம் ச ஸ்வபர்தார மேக்வபிண்ட மனீஷயா

பர்துராக்ஞாம் வினா நைவ கிஞ்சித் தர்ம சமாசரேத்

 

பொருள்:-

மனைவியின் அன்புக்குப் பாத்திரமானவன் கணவன்

எல்லாக் கடவுளரையும் விட அவளே நெருக்கமனவள்

அவளும், அவள் கணவனும்

உடல் வேறு; உயிர் ஒன்றே!

கணவனின் அனுமதியின்றி

எந்த வழிபாட்டையும் அவள் செய்யக்கூடாது.

beauty-with-puukkuutai

தெய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லுவார்:-

தெய்வந்தொழாஅள் கொழுநந்தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை – குறள் 55

 

பொருள்:-

வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனையும் மட்டும் தொழுது, துயில் நீங்கி எழும் மனைவி, பெய் என்று சொன்னால் உடனே அவள் சொற்படி மழை கொட்டும்.

 

இந்துமதத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர தத்துவம் (சிவன் பாதி, உமா பாதி) ஆண்-பெண் சரி நிகர் தத்துவத்தை விளக்க வந்ததே.

 

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது– என்பதை அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லவேண்டும்.

 

இந்துமதச் சடங்குகளை மனைவி இல்லாதவர் செய்ய முடியாது. மேலும் கணவனுடன் மனைவியும் நிற்கவோ- உட்காரவோ வேண்டும் அல்லது சடங்குகள நிறைவு பெறாது.

 

பெரும்பாலான இந்துமதப் பெண்கள், குடும்பத்தின் நலன் கருதி ஏதேனும் ஒரு காரணத்துக்காக விரதம் இருக்கிறாள். உப்பில்லாமல், ஒரு நாள் முழுதும் உணவருந்துவாள். சிலசமயம் முழுச் ச்சாப்பாட்டையும் தவிர்ப்பாள்.  இன்னும் சிலர் வேறு சில நேர்த்திக் கடன்களை செலுத்துவர். பண்டிகைகளை முறைப்படி கடைப்பிடிக்க பெண் இனமே உதவுகிறது. குழந்தைகளை மதாசாரப்படி வளர்ப்பவளும் தாய்தான்.

india-anni-sarojini-6

காந்திஜியின் அன்னையும் சிவாஜியின் அன்னையும் சொன்ன கதைகள்ள்தான் அவர்களைப் பெருந்தலைவர்கள் ஆக்கியது.

 

உபநிஷத (கி.மு.850) காலப் பெண்கள், ஞான முதிர்ச்சியில் ஆண்களையும் மிதமிஞ்சினர். மைத்ரேயி, கார்கி வாசக்னவி, காத்யாயனி போன்ற பெண்கள், ஆன்மீக வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்டனர்.

 

mdu-girls

–subham–

31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)

tolkappian-katturai

Written by London swaminathan

Date: 27 September 2016

Time uploaded in London:8-17 AM

Post No.3194

Pictures are taken from various sources; thanks.

 

 

அக்டோபர் (துர்முகி வருஷம், புரட்டாசி/ஐப்பசி) 2016 காலண்டர்

திருவிழா நாட்கள்:-அக்1.-நவராத்திரி ஆரம்பம்;அக்.2-காந்தி ஜயந்தி

அக்.10-சரஸ்வதி பூஜை; அக்.11- விஜயதசமி, தசரா; அக்.29/30- தீபாவளி

அக்.31- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.

 

அமாவாசை- 30, பௌர்ணமி-15, ஏகாதசி-12,26, முகூர்த்த நாட்கள்-28

 

tolkappaima

அக்டோபர் 1 சனிக்கிழமை

Tamil alphabet

அகரம் முதல் ன கரம் இறுவாய்

முப்பஃது என்ப;

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே (1)

 

அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை

Special letter :three dots

அவைதாம்

குற்று இயல் இகரம் , குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன (2)

 

அக்டோபர் 3 திங்கட்கிழமை

Vaisya: Business community

வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை -1578

 

அக்டோபர் 4 செவ்வாய்க்கிழமை

Brahmins and Kshatriyas

அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு

ஒன்றிய வ ரூஉம் பொருளுமார் உளவே -1572

 

அக்டோபர் 5 புதன்கிழமை

What is mantra?

நிறைமொழி மாந்தர்  ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப – 1434

IMG_3212.JPG

 

அக்டோபர் 6 வியாழக்கிழமை

Brahmins can’t become kings

அந்தணர்க்கு அரசு வரைவு இன்றே -1574

 

அக்டோபர் 7  வெள்ளிக்கிழமை

Women’s Virtues

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய -1098

 

 

அக்டோபர் 8 சனிக்கிழமை

God

வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -1367

 

அக்டோபர்  9 ஞாயிற்றுக்கிழமை

Botanical Classification

புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப -1585

 

அக்டோபர் 10 திங்கட்கிழமை

Devaloka

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மையான -1194

 

dance-in-shade

அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை

8 feelings; not Navarasa!

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப –1197

 

அக்டோபர்  12 புதன்கிழமை

Bhagavad Gita:Paritranaya sadhunam vnasaya ca duskrtam

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் -1099

 

அக்டோபர் 13 வியாழக்கிழமை

Dharma, Artha, Kama: Hindu Concept

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே-1038

 

 

அக்டோபர் 14  வெள்ளிக்கிழமை

Sati : wife mounting funeral pyre of husband

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும் -1025

 

அக்டோபர் 15 சனிக்கிழமை

Look at Brahmin’s Vedas

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில்தப நாடி

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே

(102)

 

img_3224

அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை

Brahmins of Six tasks

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

…………….. 1021

அக்டோபர்  17 திங்கட்கிழமை

Literary and World approach

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர் – 999

 

அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை

Dhana/donation

கொடுப் போ ர் ஏத்திக் கொடா அர்ப்ப ழி த்தலும் -1036

 

அக்டோபர் 19 புதன்கிழமை

What is a Sutra/formula?

அவற்றுள்

சூத்திரந்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே-1425

 

அக்டோபர் 20 வியாழக்கிழமை

Women should not go abroad

முந்நீர் வழக்கம் மகடூஉ இல்லை -980

 

img_4925

அக்டோபர் 21  வெள்ளிக்கிழமை

Six Levels of living beings (Theory of Evolution)

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே-1527

அக்டோபர் 22 சனிக்கிழமை

Borrow from Sanskrit

வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே -884

 

அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை

சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார் – 885

 

அக்டோபர் 24 திங்கட்கிழமை

Upama from Sanskrit

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாதாகும் திணை  உணர் வகையே -992

 

அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

Indra and Varuna: Tamil Gods!

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’- 951

 

kuthu-vilakku

அக்டோபர் 26 புதன்கிழமை

12 places adjacent to Chaste Tamil Land

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி -883

 

 

அக்டோபர் 27 வியாழக்கிழமை

Thousand from Sanskrit Sahsram

அத்தொடு சிவணும்  ஆயிரத்து இறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை -317

 

அக்டோபர் 28  வெள்ளிக்கிழமை

Matra , winking, snapping

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே  (7)

 

அக்டோபர் 29 சனிக்கிழமை

Mysterious Kandazi!

கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- 1034

 

அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை

Deiva: God

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.-964 (பொருள் 1-18)

 

அக்டோபர் 31 திங்கட்கிழமை

Mantra again!

பெயர்நிலைக்கிளவியின் ஆஅகுநவும்

திசைநிலைக்கிளவியின் ஆஅகுநவும்

தொல்நெறி மொழிவயின் ஆஅகுநவும்

மெய்ந்நிலை மயக்கின்  ஆஅகுநவும்

மந்திரப் பொருள்வயின்  ஆஅகுநவும்

அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே -932

IMG_4930.JPG

–Subham—

 

தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141)

copper-_copper

Written by London Swaminathan

 

Date: 10 September 2016

 

Time uploaded in London: 21-45

 

 

Post No.3141

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பார்யா வியோக: சுஜனா அபவாத:

ருணஸ்ய சேஷம் குஜனஸ்ய சேவா

தாரித்ரய காலே ப்ரியதர்சனம் ச

வினாக்னினா பஞ்ச தஹந்தி காயம்

 

பொருள்:–

தீ இல்லாமலே உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்:–

மனைவியின் பிரிவு, நல்லவர்கள் செய்யும் தீய செயல், கடன் மிச்சம், கெட்டவர்களிடம் வேலை செய்தல், வறுமையில் வாடுகையில் விருந்தினர் வருகை ஆகிய ஐந்தும் உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்.

 

Xxxx

cloth

பங்கிடக்கூடாதவை

வஸ்த்ரம் பாத்ரம் அலங்காரம் க்ருதான்னம் உதகம் ஸ்த்ரிய:

யோகக்ஷேமம் ப்ரசாரம் ச ந விபாஜ்யம் பஞ்சக்ஷதே மனு 9- 219

 

சொற்ப விலையுள்ள துணி

செம்பு (தான் பயன்படுத்தும் பாத்ரம்)

அலங்காரப் பொருட்கள் (தான் உபயோகிப்பவை)

சமைத்த உணவு (சாப்பிடுகையில்)

கிணறு (தன் வீட்டு)

வேலைக்காரிகள்

மந்திரி

புரோகிதன்

தெருக்குறடு

வழிநடை (ரேழி)

 

இவை அனைத்தும் ஒருவருடைய உபயோகத்தில் இருக்கையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும்.

 

–Subham–

 

கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)

girls school

Written by London Swaminathan

 

Date: 28 August 2016

 

Time uploaded in London: 7-09 AM

 

Post No.3098

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

children 1

லண்டனுக்கு வருகை தந்துள்ள மாயூரம் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரை 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன்; இந்துக்களின் விடுமுறை பற்றி அவர் சொன்னதை நேற்று வெளியிட்டேன்; இன்று கல்வி என்பது பற்றி இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர் கூறியதைப் பார்ப்போம்.

 

நீங்கள் நடத்தும் வேத பாடசாலையில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கிறீர்கள், எத்தனை ஆண்டுகள் என்று கேட்டேன்?

வேதத்தில் தேவையான சில பகுதிகளும் ஆகமங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் பின்னர் ஒரு சான்றிதழ் வழங்குகிறோம். அது தமிழ்நாடு அரசு அங்கீக ரம் பெற்ற தகுதி. கோவில்களில் அர்ச்சகராகப் பணி செய்ய அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றார்.

 

நீங்கள் ஆங்கிலம் முதலிய விஷயங்களை ப் பள்ளிக் கல்வி போல கூடவே சேர்த்துக் கற்றுத் தரலாமே; அவர்களின் பிற்காலத்துக்கு உதவுமே என்றேன்.

 

ஆஸ்திரேலியாவில் வசித்த சங்கரன் என்ற நல்ல உள்ளம் படைத்த ஒருவர், வேத பாடசாலைகளுக்குச் சென்று, பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து வருகிறார். அவர் கிராமங்களுக்கும் சென்று எல்லா வகுப்பினருக்கும் இப்படி ஆங்கிலம் கற்பிக்கிறார். தனது சொந்தக் காசை செலவழித்து அரிய பணியைச் செய்கிறார். அவர் எங்களுடைய வேத பாட சாலைக்கும் வந்து அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தருகிறார். எனக்கும் இதன் தேவை புரிகிறது. இன்று உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள்  தேவைப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் பொது அறிவும் தேவைப்படுகிறது ; அதையும் நாங்கள் சொல்லித் தருகிறோம் என்றார்.

children 2

எனக்கு அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. நல்ல கல்வித் தகுதி இல்லாவிடில் அவர்கள் வருங்கால உலகில் வாழ்வது கடினமே; எப்படி முழு அறிவு பெற முடியும்? என்றேன்.

 

“வேதக் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்குள், கற்றுத தந்த விஷயங்களை விவாதிக்கும் வகுப்பும் உண்டு” என்றார்.

(அதாவது லண்டனில் எனது பிள்ளைகள் பள்ளி வகுப்பில் நடந்தது போல அந்தக் காலத்தில் இருந்தே, இந்துக்கள் கல்வி கற்கும் இடங்களில் ரிவிஷன், விவாதம், கலந்துரையாடல் இருப்பது எனக்கு புதிய, மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது).

அவர் மேலும் சொன்னார்:

கல்வி என்பது ஆசிரியர் மட்டும் கற்றுத் தருவது அல்ல;

 

 

आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया ।
सब्रह्मचारिभ्यः पादं पादं कालक्रमेण च ॥

 

 

ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா

சப்ரம்மசாரிப்ய: பாதம் பாதம் காலக்ரமேன ச

என்று அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பொருள்:

 

ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது கால்வாசி (25 சதவிகிதம்) ; மாணவன் சுயபுத்தியால் கற்றுக்கொள்வது இன்னொரு கால் வாசி; சக மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது கால் வாசி; காலம் செல்லச் செல்ல கற்றுக் கொள்வது இன்னொரு கால் பகுதி.

 

என்று  சுவாமிநாத சிவாச்சாரியார்  சொன்னார்.

என்ன அற்புதமான ஸ்லோகம் என்று சொல்லி வியந்தேன்.

boys play 1

என் கருத்து:

 

நேற்று, மனனம் செய்தல் (Memory Techniques), அதைத் திருப்பிச் சொல்லி நினைவுகூறுதல் (Revision), மாதத்துக்கு குறைந்த எட்டு நாள் விடுமுறை விடுதல் (8 Days Holiday a month) ஆகியன பற்றி எழுதினேன். இன்று இந்த ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள். என்ன அற்புதமான ஒரு கல்விக் கொள்கை (Concept of Teaching)  நம் முன் னோர்களிடம் இருந்தது என்பதை அறிய முடியும்.

 

ஒரே ஆசிரியர் ஒரே மாதிரி எல்லோருக்கும் கற்று த் தருகிறார். அதில் ஒருவர்தான் தலை சிறந்த கல்விமானாகவோ, விஞ்ஞானியாகவோ, நாட்டின் தலைவராகவோ வருகிறார். ஏன்? ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது 25 சதவிகிதமே; மாணவன் சுய புத்தியைப் பயன்படுத்தி அதைத் துருவித் துருவி ஆரா ய்ந்து மேலும் கற்க வேண்டும்; தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் மனக் கோட்டை கட்டாமல் மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடி, மாற்றுக் கருத்துகளைக் கிரஹிக்க வேண்டும். இறுதியில் மூளை வளர்ச்சியினாலும், அனுபவ அறிவாலும் கடைசி 25 சதம் அறிவு வந்து 100 சதவிகித அறிவு பெற்றவனாக திகழ முடியும்.

 

உலகில் பெண் கல்விக்கே முதலில் சிலபஸ் (Syllabus) போட்டுக் கொடுத்தது இந்துக்கள்தான் என்று 64 கலைகள் பற்றிய கட்டுரையில் காட்டினேன். அது வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திரத்தில் உள்ள பட்டியல். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் 64 கலைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நாடு இது.!!

children 3

வளர்க கல்வி: மிளிர்க பாரத மணித் திரு நாடு!!

 

 

தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089)

kartikai annamali

Written by London Swaminathan

 

Date: 24  August 2016

 

Time uploaded in London: 19-50

 

Post No.3089

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று நடைபெறும் கார்த்திகைத் திருநாள் கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களுக்கு ஜாதி, இன வேறு பாடின்றி அனைவர் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தி, கோலமிட்டு, அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே விளக்கொளிதான்!

 

கோவில்களிலும் இது போலவே ஆயிரக் கணக் கான விளக்குகள் ஒளிரும். இதற்காகவே அன்று இலுப்பை எண்ணை   கொண்டு விளக்கு ஏற்றுவர்.

அதைப் பார்த்தவுடன் தீப மங்கள ஜோதி நமோ நம: — என்னும் அருணகிரியின் திருவாக்கு நினைவுக்கு வரும் ( நாதவிந்துகலாதீ நமோ நம: என்ற திருப்புகழ் ).

 

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபம் என்பன மிகவும் பிரசித்தமானவை. லட்சக் கணக்காணோரைக் கவர்ந்திழுக்கும் திருவிழாவாகும்.

karthikai deepam

தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்துல் நிகழ்ச்சியும் அன்று இரவில் நடைபெறும். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால் இப்படிச் சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும். வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

 

கார்த்திகை பற்றி சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்ற குறிப்புகளைப் பலரும் அறிவர். ஆனால் தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திராது.

 

தொல்காப்பியத்தில்

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்–

தொல்.பொருள்.புறத்திணை இயல்-35

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

kartik deep

தொல் காப்பியத்தில் வரும் இந்திரன், வருணன், அக்னி, துர்கை முதலிய குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் தொல்காப்பிய உரை சரியே என்று தெளிவுபெறலாம்.

அகநானூறு,  நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட  கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் புகழைக் காட்டும்.

 

தீபாவளிக்கு இப்பொழுது  எப்படி எல்லோரும் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விடுகிறார்களோ, அது போல அந்தக் காலத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர்.

 

தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)

 

இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.

 

சிலர் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் ஆறு கோடுகள் எல்லாம் முருகனை வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்கள் என்றும் நம்புவர்.

 

வேதத்திலும், குமார சம்பவம் முதலிய நூல்களிலும் கார்த்திகைப் பெண்களும், அவர்களைக் குறிக்கும் விண்மீன்களும் இடம் பெற்றிருகின்றன. ஆக வேத காலக் கார்த்திகை இன்று வரை வழிபடப் படுகிறது.

 

கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த ஆறு நட்சத்திரங்களும் நிலவுடன் நெருங்கி நிற்கும்.

 

வானவியல் கணக்குப்படி கார்த்திகை நட்சத்திரங்கள் ஏழு ஆகும். நாமும் அதை முருகன்+ ஆறு கார்த்திகைப் பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை.

KARTIKAI DINDIGUL

முத்தொள்ளாயிரம் என்னும் நூலில்.

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்

புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்

ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்

நாடறி கௌவை தரும்

 

 

என்றும்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்

 

“குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன”

என்றும்

 

பொய்கையார், கார் நாற்பதில்

“கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே”

என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர்.

 

kartikai1

தொல்காப்பியம்  தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—

 

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24-12-2014

தொல்காப்பிய அதிசயங்கள், 14-11-2014

தொல்காப்பியர் காலம் தவறு-1, 9 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2, தேதி-10 செப்டம்பர் 2012

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு, 13 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3, 12 செப்டம்பர் 2012

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!, 31 மார்ச் 2014

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!, 9 ஏப்ரல் 2015

தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)

தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013

தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013

மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826), 20-5-2016

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம! , 10 நவம்பர், 2015

kartikai, sai babu.jpg

No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)

Tolkappian- A Genius ( posted on 12/9/2012)

Indra in the Oldest Tamil Book

Varuna In the Oldest Tamil Book

Did TOLKAPPIYAR copy from Sanskrit Books?, 10-9-2012

WHO WAS TOLKAPPIYAR?,9-9-2012

 

–Subham–

 

 

மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077)

IMG_4925.JPG

Compiled by London swaminathan

Date: 20th August 2016

Time uploaded in London:  14-23

Post No.3077

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

மஹா பாரதத்தில் 18 பர்வங்கள் உண்டு. அதில் மூன்றாவதாக அமைந்த வனபர்வத்தின் மற்றொரு பெயர் ஆரண்ய பர்வம். இதை வால்மீகி ராமாயணத்திலுள்ள ஆரண்ய காண்டத்துடன் குழம்பிக்கொள்ளக்கூடாது.

 

வனபர்வம் எனப்படும் ஆரண்ய பர்வம் பஞ்சபாண்டவர்களி ன் 12 ஆண் டு கானுறை வாழ்வைச் சித்தரிக்கும் பர்வம். அதற்குள் 21 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் மனைவி பற்றிய ஒரு பாடல் (ஸ்லோகம்) மனைவியை “சர்வ துக்க நிவாரணி” என்கிறது.

IMG_4919

நாம் சர்வ ரோக நிவாரணி – என்று மருந்துகளுக்குக் கொடுக்கும் விளம்பர  ங்களைப் படித்திருக்கிறோம். சர்வ துக்க நிவாரணி என்பதை பொதுவாக கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் மஹா பாரதமோ மனைவியை கைகண்ட மருந்து என்றும், எல்லா துக்கங்களையும் போக்குபவள் என்றும் சித்தரிக்கிறது.

 

இதோ அந்த ஸ்லோகம்:–

 

ந ச பார்யா சமம்  கிஞ்சித் வித்யதே பிஷஜாம் மதம்

ஔஷதம் சர்வ துக்கேஷு சத்யமேதத் ப்ரவீமி தே

–ஆரண்ய பர்வம்

 

பொருள்:-

“மனைவிக்குச் சமமான ஒன்றுமே இல்லை; எல்லா துக்கங்களுக்கும் மருந்தாக இருப்பவள் மனைவி என்பவளே. உண்மையைச் சொல்லுகிறேன்.”

 

 

இன்னொரு பாடல் அம்மாதான் நன்கு சாப்பாடு போடுபவள், மனைவிதான் நன்கு சந்தோஷப்படுத்துபவள் என்று பாராட்டுகிறது.

 

உடலைப் போஷிக்கும் விஷயங்கள்

IMG_4927

மாத்ரா சமோ நாஸ்தி சரீர போஷணே

பார்யா சமோ நாஸ்தி சரீர தோஷணே

வித்யா சமோ நாஸ்தி சரீர பூஷணே

சிந்தா சமோ நாஸ்தி சரீர சோஷணே

 

உடலை வளர்க்க உதவுவதில் அம்மாவுக்குச் சமமானவள் யாரும் இல்லை;

நம்மை மகிழ்விப்பதில் (சந்தோஷப்படுத்துவதில்) மனைவிக்குச் சமமானவள் எவரும் இல்லை;

ஒருவரை அலங்கரிக்கச் செய்யும் விஷயத்தில் கல்விக்குச் சமமான எதுவும் இல்லை

உடலை வாடச் செய்யும் விஷயத்தில் துக்கத்துக்குச் சமமான எதுவும்  இல்லை

IMG_3212

–Subham–

 

 

உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை! (Post No.3070)

saltpans

Written by London swaminathan

Date: 18th August 2016

Time uploaded in London: 5-14 AM

Post No.3070

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியில் பிறந்தார். தந்தை குமார சுவாமி தேசிகர் இறந்த பிறகு, சகோதரர்கள் வேலாயுதம், கருணைப் பிரகாசம் ஆகியோருடன் திருவண்ணாமலைக்குச் சென்று கல்வி பயின்றார். அருணாசல மலையை வலம் வருகையில் அண்ணாமலையான் அருளால் அருட் கவிகள் இயற்றினார். 100 செய்யுட்களால் “சோண சைல மாலை” என்ற நூலை இயற்றினார்.

 

பின்னர் இலக்கணம் கற்பதற்காக தென் திசையை நோக்கிப் பயணம் செய்கையில் திருச்சிக்கு அருகிலுள்ள துறை மங்கலத்தில் ஒரு தோட்டத்தில் சிவ பூஜை செய்துகொண்டிருந்தார். அவருடைய வருகையை அறிந்த கிராமாதிபதி அண்ணாமலை ரெட்டியார் அவரை அங்கேயே தங்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ தாமிரபரணி தீரம் வரை சென்று வெள்ளியம்பலவாண சுவாமிகளிடம் இலக்கணம் கற்க விரும்புவதாகச் சொன்னார். உடனே அண்ணாமலை ரெட்டியார் 400 பொற்காசுகள் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

 

கு-வில் துவங்கி கு-வில் முடியும் கவிதை!

 

வெள்ளியம்பல வாண சுவாமிகளிடம் சென்றவுடன் அவர் ஒரு தேர்வு வைத்தார். “எங்கே பார்ப்போம். கு – என்னும் எழுத்தில் துவங்கி அதே எழுத்தில் முடிவடையும் ஒரு வெண்பா இயற்று. இடையில் ஊருடையான் என்ற சொல் இருக்க வேண்டும் என்றார்.

 

சிவப்பிரகாச சுவாமிகள் உடனே

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்

முடக்கோடு முன்ன மணிவாற்கு – வடக்கோடு

தேருடையான றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள

லூருடையா நென்னு முலகு

என்று பாடி முடித்தார்.

 

அம்பலவாணர், அந்தக் கவிதையைக் கேட்டு வியந்து, அவரைப் பாராட்டி சகோதரர் இருவருக்கும் இலக்கண பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார். அண்ணாமலை ரெட்டியார் தமக்களித்த பணத்தை  — 400 பொன்னை — குருதட்சிணையாக தட்டில் வைத்து வணங்கினார் சிவப்பிரகாசர்.

 

“அப்பனே, எமக்கு இந்த தட்சிணை வேண்டாம். திருச்செந்தூரில் உள்ள ஒரு தமிழ் புலவன் என்மீது வசை பாடுதலையே தொழிலாகக் கொண்டுள்ளான். அவனை வென்று என்னிடம் கொணர்க. அதுதான் குருதட்சிணை என்றார்.

 

உடனே சிவப்பிரகாசரும் திருச்செந்தூர் சென்று, அப்புலவரை வாதுக்கு அழைத்தார். இருவரும் சபதம் செய்து, முருகன் மீது நீரோட்டக யமக அந்தாதி பாடத் துவங்கினர் (உதடு ஒட்டாத எழுத்துகளை அமைத்து அந்தாதி பாடுவது). சிவப் பிரகாசர் 30 பாடல்களை ப் பாடி முடித்தபோதும், அந்தப் புலவர் ஒரு நீரோட்டகப் பாடல் கூடப் பாட முடியவில்லை.

salt1

அந்தப் புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவரை இட்டுக்கொண்டு போய் அம்பலவாணர் காலடியில் வணங்கி விழச் செய்தார். குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர் சிவப் பிரகாசருக்கு, சிதம்பரத்திற்குச் சென்று மேலும் பயில அனுமதி கொடுத்தார்.

 

போகும் வழியில் துறை மங்கலத்துக்குச் சென்று அண்ணாமலை ரெட்டியாரை சந்தித்து, திருவெங்கை நகரத்தில், அவர் கட்டிய மடத்தில் சில காலம் தங் கி பல நூல்கள் இயற்றினார். பின்னர் தல யாத்திரை செய்துகொண்டு, திருக்காட்டுப் பள்ளியை அடைந்தார்.

 

ஒரு நாள் அவ்வூர் வீதியில் கல்வியிற் சிறந்த ஒரு பெண் உப்பு வியாபாரம் செய்வதைக் கண்டார். அவருக்கு நயன தீட்சை கொடுத்தார். பலருக்கும் அப்பெண்மணியின்  புலமையைக் காட்டுவதற்காக

 

நிறைய வுளதோ வெளிதோ கொளுவேம்

பிறையை முடிக்கணிந்த பெம்மா – நுறையுந்

திருக்காட்டுப்பள்ளி திரி பாவாய் நீயிங்

கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு

 

என்ற வெண்பாவைப் பாடினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அப்பெண்,

 

தென்னோங்கு தில்லைச் சிவப் பிரகாசப் பெருமான்

பொன்னோங்கு சேவடியைப் போற்றினோ – மன்னோன்

றிருக்கூட்ட மத்தனைக்குந் தெண்டனிட்டோம் தீராக்

கருக்கூட்டம் போக்கினோங் காண்

 

— என்னும் வெண்பாவைப் பாடிக்கொண்டு வந்து நமஸ்கரித்து கைகூப்பி நின்றார். அப்பெண்ணுக்கு அன்று முதல் மெய்ஞ்ஞானம் ஏற்பட்டது. சிவப் பிரகாசர் அருளினால் ஆன்மீக பாதையில் நடக்கத் தொடங்கினார்.

–சுபம்–

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 1 (Post No.3042)

manusmriti

Written by london swaminathan

Date: 7th    August 2016

Post No. 3042

Time uploaded in London :– 9-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!

9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!

 

 

அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!

பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை,  பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5-130)

 

அதிசயம் 2 Men lived for 400 years!

கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1-83)

வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.

 

திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.

 

 

அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!

ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11-78)

 

ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!

 

அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும்  நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.

 

ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.

மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.

 

சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.

 

இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும் சிந்து  சமவெளி நாகரீக காலத்தவை அல்லது அதற்கும் முந்தியவை.

 

அதிசயம் 4 (Sumukan Mystery)

சுமுகன் என்றொரு மன்னனி பெயரை மனு (7-41) குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியங்களில் இவர் பெயர் இல்லை. ஆனால் சுமேரியாவில் இவர் பெயர் இருக்கிறது. இது குறித்து முன்னரே விரிவாவக ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். வேறு எந்த இலக்கியமும் செப்பாத ஒரு விஷயத்தை மனு இயம்புவதிலிரந்தே அவரின் பழமை வெளிப்படும்.

manu2

அதிசயம் 5 (Soma Herb)

சோம யாகம் பற்றி மனு பல இடங்களில் பேசுகிறார். சோமலதை எனப்படும் மூலிகையின் விற்பனை, அதற்குள்ள தடைக ளையும் அவர் சொல்லுகிறார். சோம யாகத்துக்கான சோமக் கொடி வேத காலத்திலேயே அருகிவிட்டது. வேத கால இறுதியிலேயே இதற்கான மாற்றுத் தாவரங்களைக் கதைகத் துவங்கிவிட்டனர். ஆகவே வேத காலத்தின் ஆரம்பத்திலேயே மனு தர்ம சாத்திரம் தோன்றியிருத்தல் வேண்டும்.

3-87, 211, 257

4-26, 52

9-129, 11-7 to 12, 255

Sale of Soma – 3-158, 180, 10-80

 

 

அதிசயம் 6 No Interpolation!!!

வெளி நாட்டுக்காரர்கள் இந்திய இலக்கியங்களை மட்டம் தட்டுவதில் மன்னர்கள். இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இடைச் செருகல் உண்டு என்று சொல்லி இந்துக்கள் மனதில்,  ஐயப்பாட்டைக் கிளப்பி இந்து  மத தையே ஆட்டம் காணச் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆங்கிலம் படித்த நம்மூர் அசட்டுப் பிச்சுகளும் அதை அப்படியே நம்பி மேலும் உளறுவதைக் காணலாம்; வாழ்நாளில் 700 கீதை ஸ்லோககளை ஒரு முறை கூடப் படிக்காமல், கீதை பற்றி கேள்வி மட்டும் கேட்பர்! விநோதப் பிறவிகள்!!

 

இப்படிப்பட்ட வெளிநாட்டினர், மனு தர்ம சாத்திரத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிக் கதைப்பதே இல்லை. ரிக்வேதத்தில் கிலம் (பிற்சேர்க்கை), தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பிற்சேர்க்கை, சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் எல்லாம் பிற்சேர்க்கை என்று கதைக்கும் மாக்கள், மனு தர்ம சாத்திரம் பற்றி வாயே திறக்கா!. இதை அப்படியே எடுத்துக் கொண்டால்தான் சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை எடுத்துக்காட்டி இந்து மதத்தை அழிக்கலாம் என்று நம்பினர் அந்தப் பேதைகள்.

 

உண்மையில்; சூத்திரருக்கு எதிரான பகுதிகள் சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் இடை யில் செருகப்பட்டவை.

 

இதற்கு என்ன ஆதாரம்?

 

கீழ்ஜாதிப் பெண்ணான, வசிட்டரின் மனிவியான அருந்ததியைப் புகழும் மனு, எல்லா ஜாதிகளிலும் உள்ள ரத்தினம் போன்ற பெண்களைக் கல்யாணம் செய்யலாம் என்பார். அது மட்டுமல்ல கீழ் ஜாதியில் படித்தவன் இருந்தால் அவனிடம் போய்க் கற்று அவனுக்கு குருவுக்குரிய மரியாதை செய்க என்கிறார்.

 

உலகில் பெண்களை மனு புகழ்ந்த மாதிரி எந்த நாட்டு இலக்கியத்திலும் பெண்கள் புகழப்பட்டதை இன்று வரை காண முடியாது! ஆனால் பெண்களுக்கு எதிரான சில ஸ்லோகங்கள் இடைச் செருகலாக சொருகப்பட்டுள்ளன. இத்தகைய முரண்பாடுகளே மனு தர்ம சாத்திரத்தில் இடைச் செருகல் உண்டு எனக்காட்டி நிற்கின்றன. ஆனால் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’ மனுதர்மத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிப் பேசவே இல்லை. இது உலக மஹா அதிசயம்! ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் கூட இடைச் செருகல் உண்டு என்று சொல்லும் இந்த “யோக்கியர்கள்” மனுவில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு தாக்குவர்.

திராவிடக் கோமளிகள் திருக்குறளையே முழுதும் படிப்பதில்லை. மனுவையா படிக்கும்?

 

அதிசயம் 7 (Water Origin of Life on earth)

 

கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர்,  தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுவார். ( 1- 8 முதல் 10 வரை).

 

உலகில் தண்ணீர் தோன்றிய பின்னரே உயிரினம் தோன்றின என்ற விஞ்ஞான உண்மையும், தண்ணீரில் முதல் உயிர் தோன்றியது என்ற விஞ்ஞான உண்மையும், உலகம் முழுதும் கோள வடிவமானது (முட்டை) என்ற விஞ்ஞான உண்மையும் மனுவின் ஸ்லோகங்களில் பொதிந்து கிடப்பதை சொல்லத் தேவை இல்லை.

 

தொடரும்……………

 

Please read my earlier posts:–

Mystery of Manu: Rig Veda Mystery No.8, posted on 19 January 2015

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshvaku Dynasty, posted on 19 November 2011

 

Sanskrit words in Sumerian Culture: Sumukan Mystery, posted on 12 May 2014)

 

–சுபம்–

 

உருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்! (POST No.3016)

baby kiran

Written  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  17-30

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.

 

லண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.

joe and baby

“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.

அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்தது. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.

 

அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.

 

பெற்ற மனம் சும்மா இருக்குமா? அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.

 

குழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.

 

குழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள்.  ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.

joe

கடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு  அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.

 

திடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்த்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

kiran

கீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..

 

ஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.

 

 

(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)

 

Xxx  SUBHAM XX