கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983)

sarojini

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2983

Time uploaded in London :– 14-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sarojini book

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-

 

அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-

 

“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை;  மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.

 

இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது  இது  முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.

 

ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர்.  பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும்  ஒரு எழுத்தாளர்.

 

உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.

 

 

ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

 

sarojini 3

நான் காற்று வாங்கப் போனேன்

 

“நான் காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்  — என்று பாடினார் கண்ணதாசன்.

 

தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,

 

நான் கணக்குப்போடப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்;

 

அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்

ஒரு கவிஞனாகி விட்டேன்.

 

என்று பாடியிருப்பார்.

 

–SUBHAM–

 

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979)

padi

Compiled by London swaminathan

Date:17 July 2016

Post No. 2979

Time uploaded in London :– 9-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

reading-jug-large

நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

 

யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.

 

இதோ அந்தப் பாடல்:-

 

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற

அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

பொருள்:–

எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!

 

நாலடியாரில் இன்னொரு பாட்டில்,

 

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

 

பொருள்:-

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

 

 

ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

 

 

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

(திருக்குறள் 336)

 

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

 

 

முந்தைய கட்டுரைகள்

 

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016

 

–Subham–

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969)

stony-beach-resized

Written by London swaminathan

Date:14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழில் ஒரு அருமையான பழமொழி இருக்கிறது. கடல் ஓய்ந்த பின்னர் சமுத்திரக்குளியலா? என்று.

 

நம்மில் பலரும் “திரு நாளைப்ப் போவார்” போல வாழ்கிறோம். நல்ல செயல்களை எல்லாம் ஒத்திப் போடுகிறோம். நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம். நாளை நம்முடைய முறையோ நமனுடைய (யமனுடைய) முறையோ என்பதை நாம் அறியோம்.

 

நாலடியார் என்னும் புத்தகம் பதினெண் கீழ்க்கணக்கு (18) நூல்களில் ஒன்று. அதில் ஒரு பாடல் இதோ:–

 

பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்த பின் ஆடுதும் என்றாற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு  – நாலடியார்

 

இல் செய் குறவினை நீக்கி – குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்துவிட்டு,

 

மற்று அறவினை அறிவாம் என்றிருப்பார் மாண்பு – பின்னர் தர்ம காரியங்களைச் செய்வோம் என்று இருப்போரின் தன்மை,

 

பெருங்கடல் ஆடிய சென்றார்- கடலில் குளிக்கப்போனவன்

ஓசை ஒருங்கு உடன்  அவிந்த பின் ஆடுதும்  என்று அற்று – இந்தக் கடல் அலை ஓசை எல்லாம் நின்றபின் ஆடுவோம் என்று காதிருப்பவனைப் போன்றது..

 

ஒன்றே செய்க, அதுவும் இன்றே செய்க! , அதுவும் நன்றே செய்க!

bengali-blow

முந்தைய கட்டுரை:–

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com

குருவைப் போற்றினால், தூற்றினால் என்ன கிடைக்கும்? (Post No.2964)

vyasa-2

Picture of Veda Vyasa, Guru of the Gurus

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2964

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

குரூன் அப்யர்ச்ய வர்தந்தே ஆயுஷா யசஸா ஸ்ரீயா

ப்ராணினோ ய: அவமன்யன்தே பவந்தி இஹ ச ராக்ஷசா:

–சல்ய பர்வம், மஹா பாரதம்

 

குருவிற்கு பணிவிடை செய்பவனுக்கு ஆயுள், புகழ், செல்வம் ஆகியன வளரும். அவரை மதிக்காத ஜீவன்கள், ராட்சசர் ஆகிறார்கள்.

 

Xxxxx

 

கௌரவிக்கத்தக்கவை எவை?

 

வித்தம் பந்து: வய: கர்ம வித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மான்யஸ்தானானி கரீயோ யத் யத் உத்தரம்

வித்தம்- பணம், பந்து:- உறவு, வய: – வயது, கர்ம: – நல்ல செயல், வித்யா – கல்வி; இந்த ஐந்தும் கௌரவிக்கத்தக்கவை. ஒவ்வொன்றும் ஒன்றைவிட ஒன்று மதிப்புமிக்கவை. அதாவது கல்விக்கே அதிக மதிப்பு.

 

Xxx

Planets2013.svg

தசா புத்தி ஆண்டு விவரம் (க்ரஹ தசா காலக்ரமங்கள்)

 

சூர்ய: ஷட் அப்த: சோமஸ்து தசவர்ஷ உதாஹ்ருத:

குஜஸ்து சப்தவர்ஷாணி ராஹுரஷ்டதச ஸ்ம்ருதா:

 

குரு: சோடஷ வர்ஷாணி சனிரேகோனவிம்சதி:

புதஸ்சப்தா தச அப்தானி கேதுஸ்சப்தாப்தக: ஸ்ம்ருத:

சுக்ரோ விம்சதி வர்ஷாணி தசவர்ஷா: ப்ரகீர்த்திதா:

 

சூரியன் – 6 ஆண்டுகள், சந்திரன் – 10, செவ்வாய் – 7, ராஹு- 18, குரு – 16, சனி -19, புதன் -17, கேது– 7, சுக்ரன் – 20  ஆண்டுகள் என்று அறிக.

 

மொத்தம் கூட்டினால் 120 ஆண்டுகள் வரும். இதுதான் மனிதனின் உமுழு ஆயுள். ஆனால் வேதங்களில் நூறு ஆண்டுகள் என்று சொல்லுவர். இந்துக்கள்தான் உலகிற்கு டெசிமல் சிஸ்டத்தைக் கற்பித்தார்கள். ஆகவே 100, 1000, லட்சம் என்று முழு நம்பராக (ரவுண்ட் நம்பர் ) சொல்லுவது வழக்கம். சஹஸ்ர நாமம் என்போம். ஆனால் உண்மையில் அஷ்ட உத்தர சஹஸ்ர நாமம் (8+1000), அஷ்ட உத்தர சத (8+100) 108 ஆகும்.

 

Xxxx Subham xxxx

 

 

புஸ்தகம், வனிதா, வித்தம் -கதம்!கதம்!! (Post No.2961)

klai add2

Article Written by London swaminathan
Date: 11 July 2016
Post No. 2961
Time uploaded in London :– 8-40 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு அருமையான சம்ஸ்கிருத பாடல்/ஸ்லோகம்
கொடுக்கக்கூடாதவை
புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்த கதம் கதம்
அதவா புனராகச்ச ஜீர்ணம் ப்ரஷ்டா ச கண்டச:
புஸ்தகம் -நூல்
வனிதா –பெண்மணி
வித்தம் –பணம்
பரஹஸ்த –பிறர்கைக்கு
கதம் கதம் போனால் போனதுதான்!
அதவா புனராகச்ச -அல்லது திரும்பி வந்தால்
ஜீர்ணம் – திரும்பி வந்தால்
ப்ரஷ்டா ச கண்டச: — விலக்கப்படவேண்டியது, துண்டாக்கப்பட்டது (நன்கு பயன்படுத்தப்பட்டது)
இந்தப் பாடலுக்கு விளக்கமும் வேண்டுமோ!!
xxx

 

flame-of-the-forest-palasa

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத்தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

இஹ்தே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:
வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxx

field green,fb

எதைக் கைவிடலாம்?
இந்தப் பாடலை முன்னரே கொடுத்துள்ளேன்:-
தன்னுடைய குலத்துக்காக ஒருவரை தியாகம் செய்யலாம்; (த்யஜேத் – விட்டுவிடு)

ஒரு கிராமத்தையே காப்பாற்ற ஒரு குலத்தையே விட்டுவிடலாம்

ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தையே விடலாம்;
தன்னைக் காப்பாற்ற உலகையே விடலாம் (தனது ஆன்மீக முன்னேற்றத்துக்காக உலகத்தையே துறக்கலாம்).

த்யஜேத் குலார்த்தே புருஷம் க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹ்யாத்மனார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்
-ஸபா பர்வம், மஹாபாரதம்

–SUBHAM–

தமிழா! மரம் நடு! குளம் தொடு!! (Post No.2955)

tree planting, fb

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2955

Time uploaded in London :– 10-00 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இன்று மரம் நடுதல், நீர்நிலைகளை உருவாக்கல் (ஏரி தூறு எடுத்தல், கிணறு வெட்டுதல்) முதலியவற்றைப் பெரும் விளம்பரத்தோடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த புறச் சூழல் விழிப்புணர்வும் இயற்கைப் பாதுகாப்பும் நம் நாட்டில் இருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் இது பற்றிப் பாடி வைத்துள்ளனர். அதற்கு முன்னர் உலக மஹா கவிஞன்  காளிதாசனும் இதைப் பாடிவைத்துள்ளான்.

 

காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்

கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம்

ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்;

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்

 

என்று காடு வளர்ப்பு பற்றி பாரதி பாடும் முன்னரே, வேறு பல கவிஞர்களும் பாடிவைத்தனர்.

tree planting 2

குளம்தொட்டுக் கோடுபதித்து வழிசீது

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி — வளம்தொட்டுப்

பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது.

 

–சிறுபஞ்சமூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்

 

1)நீர்நிலைகலை உருவாக்கி,

2)அவைகளைச் சுற்றி மரக்கிளைகளை நட்டு,

3)மக்கள நடக்கும் வழியை உண்டாக்கி,

4)தரிசான நிலத்தில் உள்ள இடத்தைச் செம்மைப் படுத்தி வயலாக ஆக்கி  வளப்படுத்தி,

5)சுற்றுப்சுறுபுறத்தில் சுவர்களுடன் கிணற்றைத் தோண்டி உதவுபவன் — இந்த ஐந்தையும் செய்பவன் — சுவர்க்க லோகம் புகுவான்.

 

இன்னும் ஒரு பாடல்

 

நீரறம் நன்று நிழல் நன்று தன்னில்லுள்

பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் — பேரறம்

நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்

ஒன்றுமாம் சாலவுடன்.

tree planting

நீர் அளிக்கும் அறம் நன்று (அப்பூதி அடிகள், 1400 ஆண்டுகளுக்கு முன்அ, ப்பர் பெயரில் தண்ணீர்ப்பந்தல் வைத்தது போல)

 

தன் வீட்டில் மற்றவர் தங்க இடம் கொடுத்து உதவும் தர்மமும் நல்லது;

மற்ற உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்பானால் அதுவும் நன்று (பஞ்ச யக்ஞம்– ஐவேள்வி — என்பது, இந்துக்கள் தினமும் செய்வது, காண்க குறள் -43);

 

கோயிலுடன், மரங்கள் அர்டர்ந்த சாலையை அழியாதபடி நிலைபெறச் செய்வது மிக நல்ல தர்மம்;

 

இந்த ஐந்தையும் செய்தால் பேரின்பம் ஏற்படும் (பேரின்பம் = பிரம்மானந்தம்).

 

காளிதாசன் சொன்னது:–

திலீபன் என்னும் மன்னன் கிராமப்புறம் வழியாகப் பயணம் செய்தான்; அரசன் வருவதை அறிந்த வயதான இடைக்குலப் பெரியோர்கள், அரசனை வெறும் கையோடு பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்லுவதால், புத்துருக்கு நெய்யோடு (புதிதாகக் காய்ச்சி உருக்கப்பட்ட நெய்) அவனைச் சந்தித்தார்கள். அரசனோ மஹா அறிவாளி. இடைச் சேரிக்கிழவர்களுடன் என்ன பேசுவது? அவர்களோடு பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா? ஆகையால் மரங்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தானாம். —காளிதாசனின் ரகுவம்சம் 1-45

 

(என்னைவிட உங்களுக்கு இதில் அறிவு அதிகம் என்று மன்னனே ஒத்துக்கொண்டதால் இடையர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பர். மன்னனுக்கு மரங்கள் பற்றிக்கூட அறிந்துகொள்ளும் வழக்கம் அக்கலத்தில் இருந்தது).

 

இன்னும் ஒரு பாடல்

 

மரத்தை மகன் போல வளர்த்த குறிப்பு மேகதூதத்தில் வருகிறது. மரத்தை சகோதரி போல நினைப்பது தமிழில் நற்றிணையில் வருகிறது.

well pazum kinaru, kodunkaal

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் சகுந்தலை சாப்பிட மாட்டாள் என்று சாகுந்தலம் செப்பும்.

 

முல்லைக் கொடியில் எவனாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற உவமையை காளிதாசன் சாகுந்தலத்தில்கு பயன்படுத்துவான்.

விஷமரத்தையும் கூட வெட்டக்கூடாது என்று குமார சம்பவத்தில் பாடுகிறான்.

மரங்களை வெட்டாதே என்று காரிக்கண்ணனார் பாடுகிறார் (புறநானூறு 57)

 

–சுபம்–

 

 

 

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!!

rubiks-cube-world-record

Picture of Rubik’s Cube

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2954

Time uploaded in London :– 8-06 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு செயலைச் செவ்வனே முடிக்க பல வழிகள் உள்ளன. சிறிது சிந்தித்துச் செயல்பட்டால் எதையும் எளிதில் முடிக்கலாம்.

 

 

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். துன்பம் என்று எதுவுமே இல்லை. ஏனெனில் உலகில் எல்லாவகைத் துயரங்களுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன என்று தெளிதல் வேண்டும்.

கடவுள் யாருக்கும் துன்பம் தருவது இல்லை!

 

சின்னக் குழந்தைகள்  ரூபிக் கியூப் (RUBIK CUBE)  போல பல புதிர் விளையாட்டுகள் விளையாடும். ஒருமுறை அதற்கு விடை கண்டுவிட்டால் பின்னர் எளிதில் அதைத் தீர்த்துவிடலாம். முதல் முறை மட்டும் கொஞ்சம் கடினமாகத் தோன்றும். ஆனால் ,ஒவ்வொரு புதிருக்கும் ஒரு விடை உண்டு.

 

இது போலவே கடவுள் சில கஷ்டங்களைத் தரும்போது அதற்கான தீர்வையும் தருவான். அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு வேண்டும். அது இல்லை என்றால் இது போன்ற கட்டுரைகளைப் படித்து அறிய வேண்டும். பெரியோர்களிடமும் அறிவுறை கேட்கலாம்.

 

இதற்கு ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூற்றுக் கணக்கான Self Improvement சுய முன்னேற்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதில்லை. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு முதலிய நூல்களைக் கற்று சுய முன்னேற்றம் தொடர்பான விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டால் போதும். அதை அடிக்கடி “பாராயணம்” செய்தால் போதும்.

caged birds

 

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி!

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

முள்ளை முள்ளால் எடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

வைரத்தை வைரத்தால் அறு சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.

 

நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடி என்பதை அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்ற பிராமணனும், பின்னர் திருவள்ளுவரும் “யானையால் யானை யாத்தற்று” – என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

வினையால் வினையாக்கிக்கோடல் நனைகவுள்

யானையால் யானை யாத்தற்று (குறள் 678)

பொருள்: ஒரு செயலைச் செய்ய இன்னொரு செயலைப் பயன்படுத்தலாம்; நனைந்த மத நீரையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போல.

(நனை கவுள் = மத நீரினால் நனைந்த கபோலத்தை உடைய)

 

இதே உவமையை வால்மீகி ராமாயணத்திலும் காணலாம் (3-56-31)

(6-16-16)

 

பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் 276-லும் காண்க:-

தாரும் தானையும் பற்றி, ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல

 

(பிடி = பெண் யானை, களிறு = ஆண் யானை)

 

வடக்கில் , குறிப்பாக இமய மலையில், சம்ஸ்கிருத மொழியைப் பயன்படுத்தும் ரிஷி முனிவர்களையும் கற்றோரையும் “ஆரியர்” என்ற சொல்லால் சங்க இலக்கியம் அழைக்கும். இங்கே பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிக்கும் உவமையை பரணர் கையாளுகிறார்.

25KI-ELEPHANT_1155726f

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து!

 

நன்னெறி என்னும் நூலில் ஒரு நல்ல பாடலும் இதே கருத்தை வலியுறுத்தும்.

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்

தங்கட் குரியவரால் தாங்கொள்க – தங்கநெடுங்

குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் ஆவின்பால்

கன்றினாற் கொள்ப கறந்து.

 

பொருள்:–

தங்கநெடுங்குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் – நெடிய பொன் மலையால் செய்தது போன்ற அழகிய கொம்பு போன்ற பெண்ணே (அட! என் தங்கக் கட்டியே!)

 

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து- மாட்டுப் பாலை அதன் கன்றினாற் கறந்து கொள்வார்கள் (கன்று பக்கத்தில் இருந்தால் மாடு தானே பால் சுரக்கும். மற்றொரு பொருள்- கன்று இல்லாவிடினும் இறந்து போன கன்றின் தோலுக்குள் வைக்கலை அடைத்து கன்று போல பொம்மை செய்து , பசு மாட்டின் பக்கத்தில் வைத்துப்   பால் கறப்பது)

 

(அதுபோல)

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளின் – தங்களுக்கு உதவி செய்யாத ஒருவரிடமிருந்து உதவி பெற வேண்டுமானால்,

 

தங்கட் குரியவரால் தாங்கொள்க- அவருக்கு யார் நண்பர் என்று அறிந்து அவரை அணுகுக; அல்லது உங்கள் நண்பர்களில் யார், அவருக்கு நெருக்கமோ அவர் மூலம் அணுகி உதவி பெறுக.

 

எவ்வளவு அருமையான, எளிமையான விஷயம் பாருங்கள்.

 

2670_bessie_cow_calf_

 

நாட்டுப் பிரச்சினையானாலும், வீட்டுப் பிரச்சினையானாலும், குடும்பப் பிரச்சினையானாலும் திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்காதீர்கள்; முக்காடு போட்டுக் கொண்டு அழாதீர்கள்.

 

கஷ்டங்களைக் கொடுப்பவன் இறைவனே யானாலும், அதற்குத் தீர்வும் உண்டு!

 

முடியாதது என்ற சொல்லை என் அகராதியில் காண முடியாது என்று சொன்னான் நெப்போலியன். அதற்கு முன்னரே நாம் (தமிழர்கள்) சொல்லிவிட்டோம்.

 

–Subham–

 

யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953)

pararajasekara

Compiled by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2953

Time uploaded in London :– 17-11

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

“பரராஜ சேகரன் ஆண்ட காலத்தில் சுபதிருஷ்ட முனிவர் என்பவர் அவன் சபைக்கு வந்தார். மன்னன் எழுந்து நின்று அவரை உபசரித்து,  தனது எதிர்காலம் பற்றிக் கூறுமாறு வேண்டினான். முனிவர் சொன்னார்:-

நீ புண்ணியவான். உனது ஆட்சி குறைவின்றி நடக்கும். அதற்குப்பின் உன் மூத்த புதல்வனை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். இரண்டாவது மகனை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

 

இரண்டாம் பத்தினியின் வயிற்றில் பிறந்த சங்கிலி அரசோச்சுவான். அவனது கொடுங்கோலாட்சியில் பறங்கியர் வசம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.  பறங்கியர் சிவாலயங்களை அழித்து தமது சமயத்தைப் பரப்பி நாற்பது வருஷம் கொடுங்கோலாட்சி புரிவர். அவர்களை ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு) வென்று  அவரைப்போல் கொடியராக 120 ஆண்டுகள் ஆள்வர். அதற்குப்பின் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர்- ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதியாக அரசு செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்தும் மீள்வதில்லை” என்றார்.

 

இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணமலைத் தம்பத்திலுமுள்ளது

அது மிகவும் பழமையானது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வதன்று:-

 

முன்னாட்குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப்

பின்னாட்பறங்கி பிடிப்பானே — பொன்னாரும்

பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற

மானேவடுகாய்விடும்.

 

இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர்.

வையாபுரி பாடல் பொய்யாதென்பது பழமொழி. வையாபுரி ஐயர் என்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சந்யாசி. அவர் சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

 

சித்தையர் இருந்து தவம் செய்த இடம் சித்தன்கேணியென்று வழங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும் வரையில்  விஷப் பாம்புகள் செல்வதும், விஷம் தீண்டி இறப்பதும் இல்லையாம். வையாபுரி ஐயர் சீடர் கோவியத் திருமேனியுடைய கொற்றனார்.

 

ஐயருக்கு 12 மனைவிகள்!

 

அவர் சீடர் பெரியதம்பி ஐயர். அவர் கொற்றனார் கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை மூப்பு இன்றி 120 வயசில் இளமையோடிறந்தவர். அவருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வேளாளப் பெண்களும், நான்கு கோவியப் பெண்களுமாக பன்னிருவர் பத்தினிமார் ஏக காலத்தில் இருந்தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கியே “பெரிய தம்பி ஐயர் வாலிபத்திலே” என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன் கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியாருமங்கேயிருக்கின்றார்கள்”.

 

–ஆதாரம்: யாழ்ப்பாண சரித்திரம், ஏ.முத்து தம்பி பிள்ளை

 

கோபக்காரர்கள் நான்கு வகை! (Post No.2951)

angry-status

Article Written by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2951

Time uploaded in London :– 8-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

fight-scenes-290x300

நான்கு வகையான கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.

 

பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையான மொழி எதுவுமே இல்லை. கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரூ), சீனம், லத்தின், தமிழ் ஆகிய எல்லா மொழி வரலாறுகளையும் படித்த என் போன்றோருக்கு இது உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரியும். செக்ஸ், மருத்துவம், நாட்டியம், இசை, இலக்கணம், சட்டம், நாடகம், காப்பியம்,சமய இலக்கியம், தத்துவம், மொழி இயல், அகராதி இயல், இதிஹாச, புராணம் ஆகிய எல்லாவற்றிலும் உலக மொழிகளில் முதலிடம் வகிப்பது சம்ஸ்கிருதம். இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வருவது கிரேக்க மொழி மட்டுமே. ஆனல் அதில் கி.மு 800-க்கு முன் எதுவுமே கிடையாது. அதற்குப்பின்னர் ஓரளவு எல்லா விஷயங்களும் உள்ள மொழி. அதிலும் கூட பாணிணீய இலக்கணம், காமசூத்திரம், மனுதர்ம சாத்திரம், பரதம் போன்ற நூல்கள் இல்லை.

 

தமிழ் மொழியில் கி.மு. 300க்கு முன் எதுவும் இல்லை. அப்படிக்கிடைத்த விஷயங்களிலும் சம்ஸ்கிருதம் கலந்து இருக்கிறது.தமிழ்க் கல்வெட்டுகளும் இந்தக்காலத்துக்குப் பிந்தியவையே. ஆனால் சம்ஸ்கிருதச் சொற்களுடன் உள்ள கல்வெட்டுகள் கி.மு. 1400 லிருந்து நிறைய கிடைக்கின்றன.

young-angry-man-52068682

கோபக்கரரர்கள் நான்கு வகை

 

உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்

அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:

 

கடிகா என்றால் 24 நிமிடங்கள்

க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி

 

முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். இதை வள்ளுவனும்

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29

 

நொடி= க்ஷணம்= கணம்

 

குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.

 

இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.

 

கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.

 

ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.

 

இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.

 

முனிவு என்றாலும் கோபம். அந்த முனிவை வென்றவரே முனிவர் என்றும் ஒரு விளக்கம் உளது.

 

ரிஷி, முனிவர்களின் கோபம் பற்றி காளிதாசன் ரகுவம்சத்தில் (5-54) மிக அழகாகச் சொல்லுகிறான்:

 

” நான் அவர் (மதங்க முனிவர்)  பாதத்தில் வணங்கி அவருடைய கோபத்தை நீக்கினேன். அவர் சாந்த சுபாவத்தை அடைந்தார். நீரின் இயற்கைக் குணம் குளிர்ச்சியாகும்.  நெருப்பு, வெய்யில் இவைகளால்தான் அது சூடாகிறது. அது போல மஹரிஷிகளின் இயற்கைக் குணம் குளிர்ச்சிதான் (சாந்தம்). ஏதேனும் ஒரு தக்க காரணதால்தான் அது கோபம் அடையும்” (ரகு வம்சம் 5-54).

 

 

இதைத்தான் வள்ளுவனும் சொன்னான். வள்ளுவன் பயன்படுத்தும் கணம், குணம் முதலியன சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

மனு சொல்லுகிறார்; கோபத்தால் எட்டு தீய குணங்கள் வரும் என்று (7-48)

angry-woman

கோபத்தால் வருபவை எட்டு

 

பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்

வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:

மனு 7-48

 

கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.

வள்ளுவன் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் கோபம் பற்றி பத்து குறள்கள் பாடியிருப்பதை இவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்

 

 

கோபம் பற்றிய முந்தைய கட்டுரைகள்:–

தன்னையே அழிக்கும் கோபம் , சம்ஸ்கிருத செல்வம் , கட்டுரை 20, (எழுதியவர் நாகராஜன்), தேதி 28-1-2014

கோபக்காரர்களை வெல்வது எப்படி? (Article: Written by London swaminathan

Date: 14th September 2015)

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

Date: 19 December 2015

 

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568)

Compiled  by London Swaminathan, Date: 23 February 2016

 

When angry, count a hundred! (Post No 2565), Date: 22 February 2016

 

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839)

Date: 25 May 2016

Sringeri Acharya’s Advice on Anger Management! Compiled  by London Swaminathan,  Date: 22 September 2015

–Subham–

 

 

 

பிராமணர்களில் குருடன் யார்? (Post No.2947)

brahmin4

Written by London swaminathan

Date: 6 July 2016

Post No. 2947

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அந்தணர்களாகப் பிறந்து சாஸ்திர அறிவில்லாதவனை, கண்ணிருந்தும் குருடன் என்று கருதுவர் சான்றோர். இதை அழகாகச் சொல்லும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

 

 

ஸ்ருதிஸ்ம்ருதீ து விப்ராணாம் சக்ஷுஷீ த்வே வினிர்மிதே

கானஸ்தத்ரைகயாஹீனோ த்வாப்யாம் அந்த: ப்ரகீர்தித:

 

அந்தணர்களின் இரண்டு கண்கள் வேதமும் தர்ம சாஸ்திரங்களும் (சுருதி, ஸ்ம்ருதி) ஆகும்.

 

இதில் ஒன்று தெரியாதவன் ஒற்றைக் கண்ணுடையோன்.

இரண்டும் தெரியாதவன் குருடன் என்று அறியப்படும்.

 

திருவள்ளுவர் இதையே வேறுவிதமாகச்   சொல்லுவார்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (திருக்குறள் 393)

 

நல்ல நூல்களைக் கற்று, ஞானத்தைப் பெற்றவர்களையே கண்கள் உடையவர் என்று சொல்லுவார்கள்; கல்வி அறிவு பெறாதவர்களை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்று இகழ்வார்கள்.

brahmin3

xxxxx

 

 

கர்ம சண்டாளர்கள் யார்?

 

பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.

தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–

 

தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:

சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:

 

பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)

 

சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்

 

பேராசைக்காரன்

 

நீண்ட காலத்துக்கு கோபத்தைத்  தக்கவைப்பவன்

 

ஆகிய நால்வரும் செய்ய்யும் தொழிலால்ல் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.

 

 

///////////////// SUBHAM////////////////////