இளங்கோ அடிகள் சமணரா? பிராமணரா?

ilango adigal

ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1199; தேதி 28 ஜூலை 2014.

எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை மறுதலித்து காரசாரமான விவாதத்தைத் தோற்றுவிப்பதோ, இதன் மூலம் பிஎச்.டி பட்டம் பெறுவதோ என் நோக்கம் அல்ல. சிலப்பதிகாரம் என்னும் இளங்கோ அடிகளின் அற்புதமான காவியத்தை சிறு வயது முதலே படித்து ரசிப்பவன் நான். இப்போது திடீரென ஒரு உண்மை புலப்பட்டது. ஏராளமான இடங்களில் பிராமண கதா பாத்திரங்களை நுழைத்தும், அவர்களை வானளாவப் புகழ்வதும் எனக்கு பெரு வியப்பை ஏற்படுத்தியது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பற்றி அறையலுற்றேன்

எல்லோரும் நம்பும் கொள்கைகள்

1.சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோ. அவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர். அவர் சமண மதத்தைத் தழுவினார்.
2.சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காவியம்.

நான் இதை மறுப்பதற்கான காரணங்கள்:
1.இளங்கோ என்பவர் இதனுடைய கருப்பொருளைக் கொடுத்திருக்கலாம். ஆயினும் காவியம் எழுந்தது இரண்டாம் நூற்றாண்டில் அல்ல. நிகழ்ச்சி நடந்தது இரண்டாம் நூற்றாண்டில்தான் என்பது மறுக்க முடியாத விஷயம். ஆனால் மொழி நடையும் காவியத்தில் காணப்படும் விஷயங்களும் சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்டது. ‘அதிகாரம்’ — என்னும் சம்ஸ்கிருதச் சொல் வரும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. வேத, உபநிஷத நூல்களுக்கு மாக்ஸ்முல்லர் கையாண்ட உத்தியை நாம் இதற்கும் பின்பற்றலாம். மொழி மாற்றத்துக்கு அவர் 200 ஆண்டுகள் ஒதுக்கி வேதத்தின் காலத்தை கி.மு 1200 க்கு முந்தியது என்று சொன்னார்.

2. சிலப்பதிகாரம் இந்துமதக் கலைக் களஞ்சியம். ஒரு வேளை நாளைக்கே சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா நூல்களும் மறைந்து போனாலும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் இந்து மதத்தைக் காப்பாற்றும் அளவுக்கு அவற்றில் விஷயங்கள் உள்ளன.

3. சிலப்பதிகாரம் 95% இந்துமதமும், 4% சமண மதமும் 1% புத்த மதமும் உள்ள காவியம். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகும். காவியத்துக்குள் எங்குமே இளங்கோவின் சமயம் எது என்பது பிரஸ்தாபிக்கப் படவில்லை. சில உரை அசிரியர்கள் செவிவழிச் செய்தியை எழுதியதில் இப்படி ஒரு விஷயம் வந்தது. உரைகாரர்கள் சொன்ன எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஆகையால் ஒதுக்கும் உரிமை எமக்குளது.

4.சமண மதத்தினரும் புத்த மதத்தினரும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவற்றைத் தோற்றுவித்தவர்கள் தெய்வங்களைக் கும்பிடு என்றோ, வேதங்களை ஆதரி என்றோ எழுத மாட்டார்கள். ஆனால் இளங்கோவோ வரந்தரு காதையில் தன் கருத்துக்களை முன் வைக்கையில் தெய்வத்தைக் கும்பிடுங்கள் என்கிறார். (காண்க எனது சிலப்பதிகாரப் பொன்மொழிகள்). யாக யக்ஞங்களைப் போற்றுகிறார்.

5. சமண நாமாவளி, புத்த விஹாரம், சமணர் பள்ளிகளை இளங்கோ விதந்து ஓதி இருப்பதை மறுக்க முடியாது. இது அக்காலத்தில் பூம்புகாரில் நிலவிய உண்மை நிலையை உணர்த்த எழுதி இருக்கலாம். காவியத்தில் வரும் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி உண்மையிலேயே கோவலன், கண்ணகிக்கு உதவி செய்ததாலும் இப்படி எழுதி இருக்கலாம்.கதைப் போக்கை மாற்ற யாருக்கும் உரிமை இல்லையே!!

6. இனி இளங்கோ அடிகள் நுழைத்த பத்துப் பதினைந்து பிராமண கதா பாத்திரங்களையும் மதுரையை எரிக்கும்போது பிராமண ஜாதியினரை மட்டும் எரிக்காதே என்று அக்னி தேவனுக்கு கண்ணகி உத்தரவு போட்டதையும், இமயமலைக்குப் போனவுடன் செங்குட்டுவன், பிராமணர்களுடைய யாகங்களுக்கு எந்த ஊறும் செய்யக்கூடாது என்று படைகளுக்கு உத்தரவு போட்டதையும் ஒவ்வொன்றாகக் காண்போம். இவர் மட்டும் சமணராக இருந்திருந்தால் பிராமண என்னும் இடத்தில் எல்லாம் ஸ்ரமண (சமண) என்று நுழைத்திருப்பார்.

kannagi

7. சிலப்பதிகாரத்தில் வரும் பிராமணர்கள்:
1)மா முதுபார்ப்பான் மறைவழி காட்டிட கண்ணகி கல்யாணம்
2)தெய்வ மால்வரைத் திருமுனி அருள (அகத்தியர், பிராமணர்)
3)தூய மறையோன் பாசண்டச் சாத்தன்
4)தேவந்தி என்னும் பார்ப்பனி
5)வழிகாட்டும் மாமுது மறையோன் (காடுகாண் காதை)
6)கோசிகன் (கௌசிகன்) தூது
7)நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன்
8) வளைந்த யாக்கை மறையோன் தன்னை- யானையிடமிந்து கோவலன் காப்பாற்றிய பிராமணன்
9) கீரிப்பிள்ளை- பார்ப்பனி கதை/ கோவலன் சம்ஸ்கிருதக் கடிதத்தைப் படித்து உதவி
10) பார்ப்பன கோலத்தில் அக்னி பகவான்
11)பிராமணர்களை எரிக்காதே: கண்ணகி உத்தரவு
12)மறை நாஓசை அல்லது மணி நா ஓசை கேளா பாண்டியன்
13)பார்ப்பன கீரந்தை மனைவிக்கு பொற்கைப் பாண்டியன் உதவி
14)வலவைப் பார்ர்பான் பராசரன் வைத்த போட்டி
15)வார்த்திகன்/கார்த்திகை/தட்சிணாமூர்த்தி கதை
16)மாடனுக்கு துலாபாரம்: எடைக்கு எடை தங்கம்!!!
17)வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்…போற்றிக்காமின்
18)சாக்கையர் (பிராமண நடனக் குழு) நடனம்
19)மாடலன் சொற்படி மாபெரும் வேள்வி
பிராமணர்களின் புகழும் சோழ நாட்டின் புகழும் சிலப்பதிகார காவியத்தில் தூக்கலாக இருகிறது. இளங்கோ பெயரில் எழுதியது சோழிய பிராமணனா?

((கட்டுரையின் இரண்டாம் பகுதியில் மேற்கண்ட 19 விஷயங்களையும் சுருக்கமாக வரைவேன்)

contact swami_48@yahoo.com
தொடர்பு முகவரி: சுவாமி_48 @ யாஹூ.காம்

“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள்

The Caste System During Vedic Civilisation

ஆய்வுக் காட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1149; தேதி 5 ஜூலை 2014.

“கேட்டியோ வாழி பாண பாசரைப்
பூக்கோள் இன்றென்றறையும்
மடிவாய்த் தண்ணூமை இழிசினன் குரலே – புறம்.289

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி – புறம் 170

துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின – புறம் 287

புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு – புறம் 360

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் ‘புறநானூறு’ – என்னும் நூல் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆகையால் அப்புத்தகத்தில் இருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தந்தேன்.

இவற்றின் ஒட்டுமொத்த பொருள்: புலையன் ஜாதி, பிறப்பால் அமைந்தது. புலையர்கள் சுடுகாட்டு வேலைகளைச் செய்வர். அவர்கள் பறை கொட்டுவது —(பறையர் என்பது இந்த வாத்தியத்தில் இருந்து பிறந்த சொல்) — முதலிய தொழில்களைச் செய்வர். அவர்கள் கீழ்ஜாதி மக்கள். “கட்டில் நிணக்கும் இழிசினன் (புறம் 82) என்றும் பேசப்படுகிறான் (கட்டில் செய்ய தோல் வாரில் வேகமாக ஊசியைச் செலுத்தும் புலைமகன் என்பது பழைய உரை)

‘’துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.335 (மாங்குடிக் கிழார்)

– என்று நான்கு குடிகளை ஒருச்சேரப்படுவதில் இருந்து இந்த நாலு குடிகளும் கீழ்மட்டத்தில் இருந்த குடிகள் என்பதும் தெரிகிறது.

சங்க கால ஜாதிப் பிரிவுகள் பற்றி ஏராளமான பாடல்களில் குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அன்றாட நடைமுறைகளைப் பாதித்ததாகவோ மோதல்களை உண்டாக்கியதவோ சான்று எதுவும் இல்லை. பாடல்களை இயற்றியோரிலும் பல வகுப்பினர் இருந்தனர். ஆனால் ஜாதிச் சண்டை இல்லை. சங்க காலத்துக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தேவார, திவ்யப் பிரபந்த காலத்தில் சிவ, விஷ்ணு பக்தர்கள் இடையே எவ்வளவு சமரசம் நிலவியது என்பதை பெரிய புராணத்தில் இருந்தும் ஆழ்வார் சரிதங்களில் இருந்தும் அறிகிறோம்.
caste-system-in-hinduism

ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் — என்று அப்பர் பாடுகிறார். மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திரு நாளோ—என்று நந்தனார் நாடகத்தில் கேட்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து தோன்றிய ஜாதிப் பகுப்பு.

நாநிலப் பிரிவுகளில் என்ன என்ன சிறிய ஜாதிகள் இருந்தன என்பதும் தெரிகிறது. சில சொற்கள் சங்க இலக்கியத்திலேயே பயிலப்படாததால் அவைகளின் பொருள் கூட இன்று தெரியவில்லை.

வெளிநாட்டு இந்து அல்லாத “அறிஞர்கள்” (?!?!) எழுதிய புத்தகங்களில் இந்தப் பட்டியலை வெளியிடாமல் மறைத்திருப்பதைக் காணலாம். தமிழர்கள் இடையே “நல்ல பிள்ளை” பட்டம் வாங்கி உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்திக் கொள்ள இப்படி ஒரு வேஷம்!!! பழங்காலத்தில் மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், கேளிர் பிரித்து பகச் சொல்லி பகைமை வளர்கவும் இருந்த ஒரு கூட்டமும் இப்படி மறைத்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க யாரே வல்லார்? பழந்தமிழ் நூல்கள், உரைகள் எல்லாவற்றிலும் உண்மை மறைக்கப்படவில்லை.

அந்தக் காலத்தில் ராஜா மகன் ராஜாதான், குயவன் மகன் குயவன் தான். ராமாயண, மஹாபாரத காலம் போலவே சில விதி விலக்குகளும் உண்டு. இது உலகம் முழுதும் இன்றும் இருக்கிறது. அரசியல்வாதிகள் மகன்கள், அரசியலில் பெரிய பதவிகளைப் பிடிப்பது போல, செல்வாக்கு உடையவர்கள் மகன்கள் டெலிவிசன் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பெரிய நிலைக்கு உயர்வது போல இது — இங்கு லண்டனிலும் கூட இதைக் காண்கிறோம்.

இதோ நாநிலப் பகுப்பில் (பாலை நிலத்தையும் சேர்த்து 5 நிலங்கள்) குறிப்பிடப்படும் உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள்:

குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்

முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(உதவிய நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).

அந்தணர்கள் (பிராமணர்கள்) பற்றிய குறிப்புகள்தான் அதிகம். இதற்குக் காரணம் அந்தணர் பாடிய பாடல்கள்தான் சங்க இலக்கியத்தில் அதிகம். கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார் ஆகிய பிராமண புலவர்கள் கொடிகட்டிப் பரந்தனர்.

egyptian-social-structure
Caste System in Ancient Egypt.

காஞ்சி சுவாமிகள் உரை
ஜாதி, வர்ணாஸ்ரமம், பிராமணர், வேதம் என்பதெல்லாம் “ வட நாட்டு இறக்குமதிச் சரக்கு”, “ஆரிய மாயை” — என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவோருக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாகப் பதில் கொடுத்துள்ளார். வேள்வி, மறை (யாகம், வேதம்) என்பதெலால்ம் பழந்தமிழ் சொற்கள் மட்டுமல்ல, அவை எல்லாம் தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பிறந்தவை, மொழி பெயர்ப்பு அல்ல என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சுட்டிக்காட்டினார்.

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதைய்யர், ஆரிய-திராவிட இனவெறி மாயையில் சிக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்றார். பாரதி “ஆரிய” என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பாடிப் புகழ்ந்து, போற்றி, பாராட்டி ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை நிராகரித்தார். (ஆரிய= பண்பாடு உடையோன்; இனவெறிப் பொருளைக் கொடுத்தவர்கள் கால்டுவெல் முதலிய வெளி நாட்டுச் சழக்கர்கள்).

ரிக் வேதத்தில் உள்ள புருஷசூக்தத்தில் இறைவனுடைய நாலு அங்கங்கள் நாலு ஜாதிகள் என்று கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலும் (3-70) நான்கு ஜாதிகளை ஆரியர்களின் 4 பிரிவுகள் என்றே எழுதியுள்ளார். ஆனால் வெளிநாட்டு, ‘இந்து’வல்லாத “ அறிஞர்கள்” (?!?!?) சூத்திரர்கள் என்பவர்கள் ஆரியர் அல்லாதோர் என்று புரளி கிளப்பி யுள்ளனர்.

வேத காலம் போலவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வருணப் பகுப்பு இருந்தது — குடி என்ற சொல் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

முதல் முதலாக ‘சாதி’, ‘வருணம்’ என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில்தான் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரக் கதை இரண்டாம் நூற்றாண்டில் நடந்தபோதும், காவியம் உருவானது ஐந்தாம் நூற்றாண்டு என்பதை மொழி நடையே காட்டிவிடுகிறது. நால்வேறு மக்கள் அவரவர்களுக்கான தெருக்களில் வசித்ததை மதுரைக் காஞ்சி (522) காட்டுகிறது.

சிலப். 6-164, 14-183, 8-41, 14-212, 22-10; 8-41

மிலேச்சன் போன்ற தீண்டத்தகாத யவனர்களையும் மஹாபாரதம் முதல் முல்லைப் பாட்டுவரை காண்கிறோம் — (முல்லை 65-66).

Maya-society-Castes-as-in India
Caste System in Ancient Mayan Civilization, South America.

மனுநீதியும் புறநானூறும்

மனுஸ்மிருதியில் மனு என்ன சொன்னாரோ அதை அப்படியே புறநானூற்றுப் (1,2,3 ஆம் நூற்றாண்டு) புலவரும் திருவள்ளுவரும் (ஐந்தாம் நூற்றாண்டு) சொல்லி இருக்கிறார்கள்:

புறம் 183 (ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

கீழ்ஜாதியில் ஒருவன் கற்றுத் தேர்ந்தான் ஆனால் அவனை மேல்ஜாதிக்காரர்களும் வாழ்த்தி வணங்குவர்.

வள்ளுவனும் இதையே சொன்னான்:

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

பொருள்:- உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்காவிட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்றவரை விட ஒருபடி தாழ்வே.

மனுவும் இதையே கூறியிருக்கிறார்:–

மேலான அறிவை நாலாம் வருணத்தினிடம் இருந்தும் கொள்ளலாம் ( மனு 2-238)
அறம், ஒழுக்கம், நன்மொழி, பற்பல கலைகள் முதலியவற்றை எவ்விடத்தில் இருந்தும் அறியலாம் ( மனு 2-240)

வேற்று இனத்தாரிடமும் வேதம் கற்கலாம். அப்படிக் கற்கும் காலையில் அவரை குருவாக மதித்து கைகட்டி வாய் புதைத்து அவர் பின்னே செல்ல வேண்டும் என்றும் மனு பகர்வார் (2-242).

மஹாபாரதத்தில் இதற்குக் கசாப்புக்கடை தர்ம வியாதன் முதல் வியாசர் வரை பல கதைகள் கிடைக்கும். வேடனாக இருந்து ரிஷியாக மாறிய வால்மீகி இன்னும் ஒரு எடுத்துக் காட்டு. வேத கலத்தில் கவச ஐலுசர் போன்ற அறிஞர்களும் இவ்வகையினரே.

Pyramid_of_Caste_system_in_India

ஜாதிகள் ஒழிக!

ஜாதிப் பிரிவினைகளை ஆதரிக்கும் கட்டுரை அல்ல இது. ஆனால் சங்க காலத்தில் ஜாதிகள் உண்டு, பழந் தமிழினத்திலும் பிரிவினைகள் உண்டு. அவை தொழில் முறையில் மட்டும் அமைந்தது அல்ல, பிறப்பினாலும் அமைந்தவை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆனால் உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைத்தன. புலவர்கள, பாணர்கள் முதலியோர் வறுமையில் வாடினாலும் அதற்கு அவர்களின் ஜாதி காரணம் அல்ல. மொத்தத்தில் மக்கள் அவரவர் உறைவிடங்களில், வரையறுக் கப்பட்ட பகுதிகளில் இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.

தேர்தலில் ஜாதி, கல்வி நிறுவன அனுமதியில் ஜாதி, வேலை ஒதுக்கீட்டில் ஜாதி – இப்படி எல்லாவற்றிலும் ஜாதியை வேண்டும் தமிழர்கள் — அம்பேத்கர் என்னும் பெருமகன் சொன்ன 25 ஆண்டு எல்லைக்குப் பின்னரும் ஜாதிச் சலுகைகளை விரும்பும் தமிழர்கள் — ஜாதிச் சமரசம் பற்றிப் பேச அருகதை அற்றவர்களே!! அப்படிப் பேசினால் அவர்களது மனச் சாட்சியே அவர்களைப் பார்த்து நகைக்கும்!!!!

அகநானூற்றில் வரும் ஜாதிகள்/தொழில் முறைப் பிரிவுகள்:–
அகநானூற்றில் உள்ள சாதிகள்: அண்டர்/ இடையர், அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பானர், யானைப்பாகர், வேளாப் பார்ப்பார்,

குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.

–சுபம்–

Caste Divisions in Ancient Tamil Nadu

Pyramid_of_Caste_system_in_India

Research article written by London Swaminathan
Post No. 1148; 4th July 2014.

Caste divisions existed in ancient Tamil Nadu like other parts of India. Tamils were divided on the basis of four castes and on the basis of work they did. There were references about ‘high born’ and ‘low born’ in the Sangam Tamil Literature.

There were mentions about four types of soldiers: Chariot, Elephant Brigade, Cavalry and Foot soldiers (Ratha,Gaja,Thuraga,Pathathi) as well. When we look at the whole picture with such divisions of castes, soldiers, Eight Types of Marriages, Nava Rasa, Six Seasons and so on in the Sangam literature, we have to accept that there was no difference between Tamils and other communities 2000 years ago.

There was a mischievous propaganda by people with vested interests that all these divisions were “imported” from the “Aryan North” into Tamil Nadu. But great saints like Kanchi Paramacharya, Aurobindo and great Tamil scholars like U V Saminathaiyer have pointed out that pure Tamil words coined from Tamil roots were used for Yaga, Veda and Castes from the days of the oldest Tamil book Tolkappaiam. It shows that they were part and parcel of Tamil society and nothing was brought into Tamil Nadu from outside.

The surprising thing about the ancient Tamil community of Sangam period is each of the five landscape divisions had Upper Castes and Lower castes. Even the poets of Sangam and Post Sangam period did not hesitate to call them “Hey, Ye Low Born!”

Following are the five landscape divisions according to ancient commentators:

1.Kurinchi (Mountainous Areas)
Higher castes: Poruppan, Verpan, Silamban, Kodichy
Lower castes: Kuravar, Kurathiyar, Kanavar

2.Mullai (Forest regions)
Higher castes: Nadan, Thonral, Manaivi, Kizathi
Lower castes: Idaiyar, Idaichiyar, Ayar, Aychiyar

3.Marutam (Countryside
Higher castes:Uran, Makiznan, Manaivi, Kizathi
Lower castes: uzavar, Uzaththiyar, Kadaiyar, Kadaichiyar
4.Neytal (Seashore)
Higher castes:Serppan, Thuraivan, Pulamban, Parathi, Nulaichi
Lower castes: Nulaiyar, Nulaichiyar, Parathar, Parathiar, Alavar, Alathiyar

5.Palai (Wasteland/arid lands)
Higher castes:Vidalai, Igulai, Meeli, Eyitri
Lower castes:Maravar, Eyinar, Eyitriar, Marathiyar

Nobody now knows what these caste names meant. We have explanations for some words.

The Caste System During Vedic Civilisation

Foreign “scholars” have mischievously deleted them from the table of Five Landscapes in English books. They have mentioned only such things that suited their wishful thinking. But the ancient list is still available in all the old Tamil commentaries. Old Tamil commentators have clearly mentioned them as “low and high” castes and explained them in their commentaries.

There are many more names like Kuyavar,Kollan, Thachan, Kuthan,Vanikan which are based on the work they did. But Tamils did not hesitate to use Sanskrit words such as Thachan, Vanikan etc.

The word for Brahmin occurs in hundreds of places with different epithets. Brahmins had the highest number of references. Too many to list here! (I have given in my post “No Brahmin! No Tamil!!” all the contributions made by great Brahmin poets like Kabilar, Paranar, Nakkirar and Mamulanar.

Maya-society-Castes-as-in India
Caste System in the Mayan Civilization of South America.

Manu Sloka in Purananauru!!

Pandya King Nedunchezian has composed a beautiful (Purananuru 183) verse about the value of education 2000 years ago. He says even if a person of the lowest caste among the four castes is educated, the high caste person would salute (pay respects to) him. Even a mother would show more affection towards the educated son than the illiterate one.

Manu said the same in the Manu Smriti:–

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

“Ambrosia may be extracted even from poison,
And good advice even from a child,
Good behaviour even from enemy
And gold even from something impure “– 2-240

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – 2-241

“In extremity, it is permissible to learn Veda from someone who is not a priest and to walk behind him and obey him like a Guru as long as the instruction lasts”- 2-242

Tiruvalluvar also said the same in Tamil Veda Tirukkural (409)
“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Kural 409.
During Krita Yuga (Golden Age), there was only one caste i.e. Brahmins, according to Santi Parva chapter 186 of Mahabharata.

Non Hindu foreign “scholars” deliberately spread a lie that Shudras are non-Aryans. But Vedas clearly say that they are part of the same Mahapurusha in the Purushasuktam of Rig Veda.

Chanakya of Arthashastra (3rd century BCE) treats all the four Varna as Aryans (not a word with racial meaning as foreigners used, but meaning ‘cultured’).

Those who read Rig Veda, Manu and Arthashastra would know that all the four castes were part of one community. Untouchability and modern caste differences were unknown in the Vedic period.

egyptian-social-structure

Caste System in Egyptian Civilization.

Hey! Ye Low Born! In Purananuru

Tudiyan caste is addressed as low born (Izisina in Tamil) in the verses 82 and 287 of Purananuru by poet Sathanthaiyar.

Poet Damodaran of verse 170 and Kazathalaiyar of verse 289 also used this word “low born” (Izisina).
Mangudi Kizar of verse 335 mentioned all the four lower castes :Tudiyam Panan, Paraiyan and Kadampan.
Lowest caste Pulaiyas did all the works at crematorium, according to verse 360.
Since Purananuru is considered the oldest section in the Sangam literature, I have quoted above verses from the same. Other sections of Sangam literature have a lot of references. Silappadikarm, Tamil epic of fifth century CE, mentioned the caste system and in which part of the city each and every caste lived etc.
In short it was the same caste system throughout India. But no one was discriminated against on the basis of caste in Tamil Nadu. In a vast geographical region each and every community lived in their own sphere happily with all the basic needs like food, shelter and clothing. If at all there was poverty, it had nothing to do with the caste system.

Oldest Tamil book Tolkappaiam also refer to the caste system in several places.
The word “Four Varna” is used in Tamil epic Silappadikaram: 6-164, 14-183, 14-212, 22-10; Manimekalai 6-56.

caste-system-in-hinduism

Silappadikaram 8-41 used the word “Jathi” (Saathi).
Words Varna and Jathi are used in Silappadikaram for the first time.

Maduraikanchi of Sangam Literature mentioned the “four different streets” for four different castes.
Brahmin streets known as Agraharam existed till 75 years ago in Tamil Nadu. Brahmins only lived in that area. Whole villages given to Brahmins by the kings were mentioned in thousands of Tamil inscriptions.
Some people who study the constructions and structures in the Indus Valley Cities believe that the caste system originated there. It is debatable.

Contact swami_48@yahoo.com

Interesting Brahmin Story in Tamil Epic

kannaki-cooking
Kannaki cooking for Kovalan

Written by London Swaminathan
Post No.1140; Dated 30th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

Silappadikaram (also written as Cilappadikaram) is one of the five Tamil epics. Silappadikaram and Manimekalai are called Twin Epics. These two epucs are based on purely Tamil stories. But those who read them in full will find out the culture is same as in the Northern parts of India. Silappadikaram is a Tamil encyclopaedia covering all subjects including music, dance, history, art, architecture and culture. This is the most popular epic. There are several stories concerning Brahmins including a Panchatantra story:The Brahmin and the Mongoose’ and the Golden Hand Pandya and Keeranthai.

tamil-penkal
Tamil women in ancient Tamil Nadu

Here is one of the Brahmin stories from the most famous Tamil epic:–
Source: Katturai Katai, Silappadikaram

Parasara was a Brahmin who lived in Pumpukar of Choza territory. He heard about the valour and philanthropy of the Cera King and decided to see him. He passed through jungles and several cities and reached Malaya hills. He was a great scholar well versed in Vedas and defeated scholars of different sects on his way. He got lot of gifts and returning home with the gifts. He reached a place called Tankal (identified with Tirutankal near Sivakasi). He took rest under a Bodhi tree with his water bowl, staff and white umbrella (only Brahmins who did great Yagas and kings are allowed to take white umbrellas in ancient India).

tamil culture

Some Brahmin children with coral lips, black tufts, curly hair and some with lisping mouths were playing there. Parasara called them and challenged them to recite Vedas after him. He promised them to give some valuable jewels. At once a boy called Alamarselvan (One who is under the banyan tree =
Dakshinamurthy), son of famous Brahmin Vartika of the town, recited the Vedas with perfect pronunciation and intonation. He was a little boy still retaining the fragrance of his mother’s milk. Parasara was wonderstruck with his knowledge and gave him a big present.

Some jealous people told the royal servants that the Brahmin got a treasure trove which naturally should go to the king. The royal servants threw him into prison without any proper enquiry. His wife Kartika became furious at the injustice. She wept and threw herself to the ground rolling and fulminating. Seeing this goddess Durga refused to open her door for the regular Pujas (daily offerings). The Pandya King was wondering whether there was any injustice done to anyone in his territory. Then the king was informed by some messengers of the injustice done to Vartikan.

The king then begged to the Brahmin to forgive him. As a compensation for the false imprisonment, the king gave him the Tankal and Vayalur villages with all the paddy fields as a gift. Then the goddess who rode the stag (Durga’s Vahana is Stag) opened her temple doors. The big noise that was produced when the goddess opened the doors, was heard throughout the broad streets of mountain like mansions of that ancient city, says the author of the epic Ilango Adikal.

silambu book

At that time, the triumphant king issued the following proclamation by beating a drum placed upon the back of an elephant which was sent though out the city, “Release all prisoners from the prison. Remit all those taxes from those who owe them. Let all who find unclaimed things and discover treasure trove enjoy them.”

“Listen how even such a king committed this act of injustice. There was a prediction that, in the month of Adi, on the Tithi of Ashtami, in the dark fortnight (Krishna Paksha), on a Friday, with Kartikai and Barani in the ascendant, a great fire would envelop renowned Madurai to the ruin of its king”, says Ilango Adikal.
(Part of Madurai was burnt down by the heroine Kannaki. Goddess of the city Madurapati narrated the above story, according to Ilango Adikal.)

20120502-Student_learning_Veda_132
Brahmin child learning Veda.

பிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன்?

Indra (1)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இந்திரனின் சாகச் செயல்கள்தான் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாலில் ஒரு பகுதி துதிகள் இந்திரனைப் (250 துதிகள்) பற்றியதே. தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனை , தமிழர் கடவுளாகப் போற்றுகிறது. கரிகால் சோழன் நடத்திய பெரிய விழா இந்திர விழா! ஆனால் சங்க இலக்கிய த்தின் 18 நூல்களில்– 27,000 வரிகளில்— இல்லாத ஒரு அபாண்டப் பொய்யை வெள்ளைக்காரகள் சொன்னதை இன்றுவரை பல தமிழக அறிவிலிகள் பரப்பி வருகின்னர்.

இந்திரன் என்பவன் ஆரிய இனத் தலைவன் என்றும் அவன் தஸ்யூக்கள் என்னும் கருப்பர்களைக் கொன்றதாகவும் வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ எழுதிவருகின்றனர். உலகிலேயே அதிகமான பழைய நூல்களைக் கொண்டது சம்ஸ்கிருத மொழி. தமிழைப் போல பன்மடங்கு இலக்கியம் உடைய, சம்ஸ்கிருத மொழியில் ஒரு நூலிலும் ஆரிய ,திராவிட இனவாதக் கொள்கை இல்லை.தமிழிலும் இல்லை.

வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதற்கு நேர் மாறான விஷயங்கள்தான் நம் இலக்கியத்தில் இருக்கின்றன.
1.அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் பிராமணர்களாகிய பிருஹஸ்பதியும் சுக்ராசார்யாரும்தான் ஆசிரியர்கள். இதை சங்க இலக்கியப் பாடல்களும் உறுதி செய்வதை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.

2.அசுரர், தேவர், நாகர் முதலிய யாவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்.
3.தஸ்யூகளைக் கொன்ற இந்திரன் பிராமணர்களையும் கொன்றான். அவன் இப்படிப் பிராமணர்களைக் கொன்றதை, இந்தியா முழுதும் உள்ள ஸ்தல புராணங்களும் ,ராமாயண மஹாபாரத, புராணங்களும் பக்கம் பக்கமாக எழுதி இருக்கின்றன. முப்பதுக்கும் மேலான அசுரர்களைக் கொன்ற இந்திரனின் மிகப் பெரிய வெற்றி– விருத்திராசுரனைக் கொன்றதுதான். அவன் ஒரு பிராமணன். அவனது அண்ணன் திரிசிரஸ் இந்திரனால் கொல்லப்பட்டான். அவனும் ஒரு பிராமணன்.

4.இந்திரனால் மானபங்கப்படுத்தப்பட்ட அஹல்யையும் பாப்பாத்தி.! இந்திரனால் எத்தி உதயப்பட்ட முனிவன் அகத்தியனும் பார்ப்பனன். இந்திரனைப் பிடித்துக்கொண்ட மிகப்பெரிய பாவம்—பிரம்மஹத்தி. அதாவது பிராமணனைக் கொன்றால் வரும் பாபம். இதற்காக அவன் இந்தியா முழுதும் சென்ற கோவில் குளம், ஆறு, மலை, ஏரி பற்றி உள்ள ஸ்தல புராணங்கள் ஆயிரம் ஆயிரம்!!

18 Banteay Srei Indra on Airavata, photograph by Anandajoti Bhikkhu
Indra in Cambodia

இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் வெள்ளைக்கார, வெளிநாட்டுக்கார ‘’அறிஞர்கள்’’ எப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார்கள்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். இந்து மத நூல்கள் கடல் போலப் பெருகியவை. மற்ற மத நூல்களையோ ஒரே மூச்சில் சில மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவை எல்லாம் நேற்று வந்தவை. ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் இந்து மதத்திற்கோ பல்லாயிரம் நூல்கள். ஆங்கிலம் படித்த ‘அரைவேக்காடு’கள், இந்துமத ராமாயணத்தையோ, மஹாபாரதத்தையோ ‘’ஒரிஜினலில் ‘’முழுக்க படித்ததே இல்லை. அவர்கள் படிப்பதெல்லாம் ஆங்கிலத்தில் எதிர்மறையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது வெற்று வேட்டுப் பட்டிமன்றங்கள்தான். மாதா, பிதா, குரு ஆகியவர்களை விட அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரை யாளர்களே என்பது அந்த அறிவிலிகளின் ஏகோபித்த முடிவு.

இந்த பலவீனங்களை அறிந்த வேற்று மத, வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ இந்து மதத்தில் எந்தப் புத்தகத்தில் எந்த வரியை வேண்டுமானலும் எடுத்து எப்படி வேண்ண்டுமானாலும் ஒட்டுப்போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதி நம்மிடமே பி.எச்டி. பட்டம் வாங்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். பிரபல வெளிநாட்டுப் புத்தக பதிப்பாளர்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் பெற முடியும் என்றும் தெரியும். அவர்கள் வேற்று மதங்களைப் பற்றி இப்படிப் புத்தகம் எழுதுவதும் இல்லை. எழுதினாலும் விற்காது. இந்து ஒருவன் தான் ஏமாந்த சோணகிரி! ஊருக்கு இளத்தவ பிள்ளையார் கோவில் ஆண்டி!!

நம்முடைய இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியவர்களுக்கு அவர்களே பொய்மையான ஒரு காலத்தையும் எழுதி– ‘இது முதல், அது பின்னது’– என்று சொல்லவும் கற்றனர். நமது சங்கத் தமிழ் இலக்கியத்தையோ, தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களையோ வாழ்நாளில் தொட்டுப் பார்க்காத தமிழ் அஞ்ஞானிகள், கேள்விகளை மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டார்கள். இதனால் இந்திரன், பிராமணர்களைக் கொன்றதையோ, இராம பிரான் ராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதையோ பெரிது படுத்தாமல், இதற்கு எதிர்மறையான கருத்துக்களை மட்டும் பிரபலப்படுத்தினர்.

Bangkok_Indra_Erawan
Indra in Thailand

திரிசிரஸ், விருத்திரன் கொலை
த்வஷ்டா என்ற முனிவருக்கு திரிசிரஸ் என்ற மூன்று தலை உடைய முனிவர் பிறந்தார். அவர் ஒரு தவ சீலர், மகா முனிவர். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சிய இந்திரன் அவரைக் கொன்றான். அவன் தந்தை கோபம் அடைந்து, விருத்திரன் என்பவனை யாகத்தீயில் உண்டாக்கினான். அவனைக் ‘’கடல் நுரை’’ மூலம் இந்திரன் கொன்றான். இதுதான் சுருக்கமான கதை. இருவரும் பிராமணர்கள். அவனைப் ப்ரம்மஹத்தி பற்றிக்கொண்டது.

வேதங்களில் பல விஷயங்கள் ரகசிய, சங்கேத மொழியில் சொல்லப்பட்டிருப்பதால் தமிழர்கள் வேதங்களுக்கு ‘’மறை’’ என்று அழகான பெயர் வைத்தனர். இங்கே விருத்திரன் என்பது மனிதனா, இயற்கை நிகழ்ச்சியா (வறட்சி) என்று பல அறிஞர்களுக்குக் குழப்பம். வேத, இதிஹாசபுராணம் முழுதும் வரும் இந்திரன் ஒருவரா? பலரா? என்பதிலும் எல்லோருக்கும் குழப்பம்.

இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல, அது ஒரு ‘’டைட்டில்’’—அதாவது பிரதமர், ஜனாதிபதி, சக்ரவர்த்தி, மன்னர், தலாய் லாமா, சங்கராச்சார்யார், போப்பாண்டவர் என்பது போல அவ்வப்போது பதவிக்கு வருவோர் பெறும் பட்டமா என்பதும் விளக்கப்படவில்லை. மேலும் வேதம் முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்கள் அவன் எப்போது வாழ்ந்தான் என்பதிலும் குழப்பம் அடைந்ததால் பேசாமல் இருந்து விட்டனர். அப்படி ஒரே இந்திரன் தான் என்று யாராவது நினைத்தால் உலகிலேயே அதிகமாக இலக்கியத்தில் அடிபட்ட பெருமை இந்திரன் ஒருவனுக்கே கிட்டும்!!

ஒரே இந்திரன் இவ்வளவு பாடல்களுக்கு முதற்பொருளாக அமைந்திருக்க முடியாது. இந்திரன் என்பது பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் அல்லது இந்திரன் என்பது மன்னன் போன்ற ஒரு பட்டம். ஆகையால் யார் அந்தப் பதவிக்கு வருகிறார்களோ அவர் இந்திரன் என்றும் கொள்ளலாம்.

மூன்றுதலை திரிசிரஸ் என்பதெல்லாம் சில தத்துவங்களை விளக்கும் சொற்களாக இருக்கலாம். உண்மையில் இப்படிப்பட்ட விளக்கங்களை சாயனர், சங்கராசார்யார், பட்டபாஸ்கரர், அண்மைக் காலத்தில் ஆரிய சமாஜ ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி ஆகியோர் கொடுத்துள்ளனர். வேதம் முழுதும் உள்ள விஷயங்களைக் கூறவே தேவாரமும் திருவாசகமும், திவ்வியப் பிரபந்தமும் பாடப்பட்டதாக அவற்றை யாத்தவர்களே திருவாய் மலர்ந்திருக்கின்றனர்.. இதற்குப் பின்னரும் வீம்பு பிடித்து நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான், நான் ஆரிய திராவிடச் சகதியில்— பன்றியைப் போல தொடர்ந்து உழல்வேன்— என்பவரை இறைவனே வந்தாலும் கரையேற்ற முடியாது!!
indra_td58
Indra in painting

Also read my other posts:-
Brahmins deserve an entry into Guinness Book of Records (Jan.26, 2012)

No Brahmins, No Tamil!! (Jan. 14, 2012)
Foreign Travel Banned for Brahmins! (26 Nov.2013)
Fall of Brahmin Kingdoms in Pakistan & Afghanistan (23 Mar.2014)
Indus valley –Brahmins connection (10th May 2014 ,Post No.1034)

Why did Indra kill Brahmins? (25th May 2014,Post No.1064)

உலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம்? 4-3-2014 (885)
சிந்துசமவெளி—பிராமணர் தொடர்பு 10-5-14 ( 1033)
1500 ஆண்டு பிராமணர் ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
பிராமணர்களை இந்திரன் கொன்றது ஏன்? 29-5-14 (1071)

Why did Indra kill Brahmins?

Indra (1)

Written by London Swaminathan
Post No. 1064 ; Dated 25th May 2014.

“Foreign Scholars never tell LIES; they always tell you HALF TRUTHS. Half truths are more dangerous than lies”.

A half truth is the most cowardly of lies – Mark Twain

A half truth is a whole lie- Yiddish Proverb

The biggest problem for the supporters of Aryan Dravidian Divisive Racist Theory is Indra’s killing of Brahmins. So instead of discussing it openly they simply hid the facts. So is Ravana’s death in the hands of Rama. Ravana was a Brahmin! They also concealed the fact that both Asuras and Devas had Brahmins Brihaspati and Sukracharya as their Gurus! They also hid that fact that Asuras and Devas were born to the same parents. Whenever such facts come, they will hide them or make a passing reference to them as if they are not important. The simple reason for their strange and cunning behaviour is these facts are against their fanciful and concocted theories.

Bangkok_Indra_Erawan
Indra in Thailand

Foreigners have never highlighted these facts or discussed them in their research papers. Their tactic is to tell half truths and confuse the general public. They know that Hindu scriptures are so vast that they can quote from anywhere the facts which are convenient for them. They will set their own chronology for Hindu scriptures or Hindu saints and write “scholarly” articles. They know that the English educated Hindus never read their scriptures in original in full, but only read the English write ups. With other religions, their books can be read in a few hours time and so the “scholars” cannot bluff. But even with very minimal writing, other religions have one thousand questions raised by the Doubting Thomasses.
Indra’s greatest and most celebrated heroic act was the killing of Vritra. Though Indra killed over thirty demons, Vritra’s killing was the one that was found in innumerable places in the oldest scripture Rig Veda and the post Vedic scriptures.

indra_td58

Foreigners were confused about the number of Indras that existed. Did one and the same Indra kill all the demons and involve himself in the Ahalya episode? The Vedas mentioned Indra more than anyone else. One fourth of the Rig Vedic hymns are addressed to Indra. Are all these about one and only person? Or is it like a title such as Prime Minister, President, Pope, Dalai Lama, Shankaracharya, Emperor, King? Are they talking about all the episodes that happened in one man’s life time or many Indras spanning over hundreds of years? Why did he kick the Brahmin saint Agastya? Why did he kill Brahmin saint Trisiras? Why did he Kill Brahmin Vritra? Was he an anti Brahmin or Anti Dasyus ? Because foreigners did not have answer for all these questions, they confused Hindus hoping that they would confuse their English educated colleagues. And Lord Mecaulay predicted that India and Hinduism would be finished with the spread of English education. But God was merciful. He sent a few saints like Swami Vivekanada to deal with the English educated ignorant lot.

If you open any foreign encyclopaedia, they will project Indra as the warrior of ‘’Aryan race’’ which is not found in ancient Sanskrit or Tamil literature. Oldest Tamil book Tolkappiam claimed Indra as their own God! The Choza king celebrated Indra festival on a grand scale! Buddha mentioned him in Dhammapada and other Buddhist scriptures with reverence! Some encyclopaedias described him as ‘anti Varuna, anti Krishna’ quoting one or two incidents as proof. But no where he was described as anti Brahmin by a foreigner! With more incidents like Anti Ahalya, Anti Agastya, Anti Trisiras and Anti Vritra, they should have projected him as Anti Brahmin. They dare not do it, because it would go against their own Aryan-Dravidian racist theory! You will have a good number of jokes under INDRA in every English encyclopaedia!
Who was Vritra?
18 Banteay Srei Indra on Airavata, photograph by Anandajoti Bhikkhu
Indra in Cambodia

Describing Vritra was difficult for foreigners. In some places they described him as natural force and in other places as a demon! Whenever and wherever they want they will take some reference from later literature, in other places they will say they are later additions. In short, they can’t hold for long in discussions with a well educated Vedic Pundit.

Tvashtri was a powerful Brahmin. He was doing a penance and a three headed son (Tri Siras) was born to him. He became a pious and humble ascetic. Indra was scared that he would be replaced by him. So he went and killed him. Even after death his head was radiating glorious light. Then Tvashtri created another son from Yagna fire and named him Vritra. He defeated Indra in the battles. But he was killed by ‘’foam’’ as Vritra had a boon not to be killed by any weapon. By killing him Indra carried the burden of a great sin Brahmahatti, which comes to anyone who kills a Brahmin.

vrtrasura
Indra killing Vritra

Indra visited numerous shrines, lakes, rivers, hills in India to relieve him from Braahmahatti.
Foreigners have conveniently forgotten to discuss these things in their ‘’research papers’’, but never forgot to depict Lord Krishna as Anti Indra. This is what they did to Vedic Shiva too. Because he destroyed the forts (Purandhara), they divided Shiva in to Aryan Shiva and Dravidian Shiva!! Anyone who reads the Tamil hymns Thevaram and Tiruvasagam would laugh at Aryan -Dravidian essays. There is no Aryan or Dravidian Shiva! Only one undivided Shiva in Tamil literature From Sangam period!

indra

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு!

tigersrampant

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1033 ; தேதி:- 10 மே 2014

சுமேரிய நாகரீகத்தில் துவக்க காலம் முதலே இரு மொழி பேசுவோர் வசித்தனர். இதே போல சிந்து சமவெளியிலும் பல மொழி பேசுவோர், பல தெய்வங்களை வழிபடுவோர் இருந்திருக்கலாம். எழுத்து ஒன்றாக இருந்தாலும் மொழி வேறுபட முடியும். இனம் ஒன்றாக இருந்தாலும் மதம் (வழிபாடு) வேறுபட முடியும். இன்றைய இந்தியா எப்படி இருக்கிறதோ அதே போல இருந்திருக்க வாய்ப்பு உண்டு. சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம்.

சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அதனுடைய எழுத்துக்களும் இன்று வரை எல்லோரும் ஏற்கும் முறையில் படித்தறியப்படவில்லை. ஐம்பதுக்கும் மேலான வகையில் படித்துக் காட்டி இருக்கிறர்கள். ஆனால்– ‘’சாண் ஏறினால் முழம் சறுக்கி விழுந்த’’– கதையாக எல்லோரும் மண்னைக் கவ்விவிட்டார்கள்.

ஆரம்பத்தில் இரண்டு தவறுகள் நடந்ததால் இதை ஆராய்வோர் மூளை எல்லாம் மழுங்கிவிட்டது. ஹரப்பாவைத் தோண்டுவதற்கு நூற்றாண்டுக்கு முன்னரே இருந்து வந்த ‘ஆரிய- திராவிட’ வாதத்தை இதில் புகுத்தியதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போனது. எல்லோரும் சேணம் கட்டிய குதிரை போல பார்வை குறைந்து போனார்கள். ஆனால் இவை எல்லாம் இப்போது “பொய்யாய் பழங்கதையாய்” போய்விட்டன. புதுப் புது தடயங்களும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சரஸ்வதி நதி தீரப் படங்களும் பழைய வாதங்களை தவிடுபொடி ஆக்கிவிட்டன.

இரண்டாவது தவறு சில சோவியத்-பின்னிஷ் “ஆராய்ச்சியாளர்கள்” அறிக்கை வெளியிட்டு இது ‘திராவிட மொழி அமைப்பு போல’ இருக்கிறது என்று கூறினார்கள். இது நடந்து அறுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதில் எள்ளளவாவது உண்மை இருந்திருந்தால் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைக் கொண்டு மகத்தான முன்னேற்றம் கண்டிருப்பார்கள். ஆனால் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆக அதுவும் “பொய்யாய் பழங்கதையாய்” போய்விட்டது!

நாற்பது ஆண்டுகளாக இது பற்றி ஏறத்தாழ முப்பது புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்த பின்னர் என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன்:
industablet2

பிராமண நாகரீகமா?
பிராமணர்களுக்கும் இந்த நாகரீகத்துக்கும் தொடர்பு அதிகம் இருப்பது போலத் தோன்றுகிறது. எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதினால் நான் எழுதுவதை படிப்பதையே நிறுத்திவிடுவார்கள் என்பது தெரியும். ஆகவே நான் சேகரித்த ஆதாரங்களைக் கொடுக்கிறேன்:

1.மனுஸ்ருதி எனப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில் “இரண்டு தெய்வீக நதிகளான சரஸ்வதிக்கும் திரிஷத்வதிக்கும் இடைப்பட்ட இடம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்றும் இதற்கு பிரம்மாவர்த்தம் என்று பெயர் என்றும் கூறுகிறார்.(மனு 2-17) இது சிந்து/சரஸ்வதி நதி தீரப் பிரதேசம். ஆக சிந்து சமவெளி நாகரீகம் தெய்வ பூமியில் உருவான நாகரீகம். ஆகையாலதான் ஏராளமான முத்திரைகளில் இதுவரை இனம் காணப்படாத ஒரு வடிகட்டி காணப்படுகிறது. இது சோம ரசத்தை வடிகட்டின சின்னமாக இருக்கலாம்.

2.சூதாட்டம் என்பது இந்தியா முழுதும் இருந்ததை ரிக் வேதமும் , மஹாபாரதமும் சங்க இலக்கியமும் (புறம் 43 காண்க), திருக்குறளும் (சூது என்னும் அதிகாரம் காண்க) உறுதி செய்கின்றன. இதை பிராமணர்களும் ஆடியது சங்க இலக்கியம், வேதம் வாயிலாகத் தெரிகிறது. சிந்து சமவெளியில் சூதாட்டக் காய்கள் கிடைத்திருக்கின்றன. சாருதத்தன் என்ற பிராமணன் சூதாட்டத்துக்கு அடிமையானதை வடமொழி நாடகங்கள் கூறுகின்றன.

3.உலகின் மிகப் பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடல் அம்பரீஷன் மகனான சிந்துத்வீபனால் பாடப்பட்டது. (எழுதப்பட்டது அல்ல) அது முழுக்க முழுக்க நீரின் சிறப்பைப் பாடுவது. இதை தினமும் பிராமணர்கள் மூன்று வேளைகளிலும் சொல்லி தலையில் நீரைப் ப்ரோக்ஷணம் (ஆபோஹிஷ்டா மயோ புவ:) செய்து கொள்கிறார்கள். ஆக சிந்துவெளியில் ஒரு வேதகால ரிஷி இருந்ததும் அவருடைய மந்திரம் இன்றுவரை பிராமணர் வீடுகளில் பயன்படுத்தப்படுதுவதும் தெரிகிறது.

4.சிந்து சமவெளியில் கிடைத்த எள் மர்மம் பற்றி தனிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். எள்+நெய் (எண்ணை) என்பதை உலகமே பயன்படுத்தலாம். ஆனால் அந்த எள்ளை பிராமணர்கள் மட்டுமே நீத்தார் நினைவாக இன்றுவரை பயன் படுத்துகின்றனர். இதன் மூலமாக சிந்து வெளி—எள்—பிராமணர் தொடர்பு தெரிகிறது.

tigerladyK50a

5. இதே போல சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சர்க்கரை பெயரில் (இக்ஷ்வாகு= கரும்பு வம்சம்) ஒரு வம்சமே இருப்பதையும் எழுதி இருக்கிறேன்.
( சிந்துவெளி நாகரீகம் பற்றி நான் இதுவரை எழுதிய எல்லா கட்டுரைத் தலைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)

6.அரசமரம் (போதி) புத்தர் மூலமாகப் பிரபலமானது. ஆயினும் அவர் அந்த மரத்துக்கு அடியில் போய் உட்காரக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதே. புத்தருக்கும் முன்னதாக பிப்பலாடன் (அரசமரத்தான்) என்ற பெயரில் ரிஷிகள் இருந்தனர். பிராமணர்கள் பூணூல் போட்டவுடன் இளம் வயதில் இருந்தே அரசங் குச்சிகளைப் பயன் படுத்தியே ஹோமம் (சமிதாதானம்) முதலான காரியங்களை செய்கின்றனர்.

7. நதிக் கரைகளில்தான் முக்கால் வாசி நாகரீகங்கள் உருவாயின. ஆயினும் பிராமணர்கள் நீரைப் பயன்படுத்தும் அளவுக்கு வேறு யாரும் சமயச் சடங்குகளில் பயன்படுத்துவது இல்லை. சிந்துவெளியில் பெரிய குளம் அதனருகில் குளியல் அறைகள் இருப்பது சமயச் சடங்குகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.

8.சிந்து சமவெளி குரு: பிராமணர்கள் இடது தோளில் பூணூல் அணிந்திருப்பர். வேத பாடசாலைகளிலும், யாக சாலைகளிலும் அவர்கள் துண்டு அணிவதும் இதே போல இடது தோளிலேயே இருக்கும். சிந்து சமவெளி குருவின் முத்திரையும் ஒரு வேத கால ரிஷியை நினைவுபடுத்துகிறது. மெக்காவில் காபாவைச் சுற்றும் முஸ்லீம்களும் பிராமணர் போல வெள்ளை வேஷ்டி அணிந்து இடது தோளில் துண்டு போட்டு சுற்றுவதை இன்றும் காணலாம். ஆனால் அவர்கள் வலமாகச் சுற்றுவதில்லை. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே மெக்கா வழிபாட்டுத் தலமாக இருப்பதால் பழைய வழ்க்கத்தை அந்த மத ஸ்தாபகர் அப்படியே பின்பற்றி இருக்கக்கூடும்.

9 சிந்து சமவெளி முத்திரைகளில் இனம் தெரியாத ஒரு சின்னம் இருக்கிறது. இது சோம யாகத்தில் சோம ரசம் வடிக்கப் பயன்பட்ட வடிகட்டியாக இருக்கக்கூடும்.

calendar symbol 3

10. சிந்து சமவெளி வீடுகளில் அக்னி வைக்கப்பட்ட இடங்கள் என்று சில இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். சில ஆய்வாளர்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

11.பிராமணர்கள் தெய்வமாக வணங்கிய பசுமாட்டின் முத்திரை எங்குமே இல்லை. ஆனால் காளைமாடு மட்டும் முத்திரைகளில் உள்ளன. 4000–க்கும் மேலான முத்திரைகளில் பசுக்களே இல்லை என்பது மிக மிக அதிசயமான ஒரு விஷயம். பசுவை தெய்வமாகப் போற்றியதால் இப்படிச் செய்தார்களோ என்று எண்ண வைக்கிறது.

12. சிந்து பகுதியில் மிகப் பழைய நகரமான ஒரு நகரத்துக்கு பிராமணாபாத் என்று பெயர். இந்தியாவில் (இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது) ஜாதிப் பெயரில் இருந்த ஒரே நகரம் இதுவாகத்தான் இருக்கும்! சிந்துவெளியில் இது இருப்பதும், அந்தப் பகுதியில் பிராமண ஜனபதம் (நாடு) இருந்ததும் வியப்பான விஷயமே. ஏனெனில் பிராமணர்கள் நாடாளுவது பற்றிய விதிகள் எந்த ஸ்மிருதியிலும் (சட்டப் புத்தகம்) இல்லை.

13. பிராமணர்களுக்குரிய மலர் தாமரை என்றும் மிருகம் யானை என்றும் பிற்கால சம்ஸ்கிருத நூல்கள் கூறுகின்றன. இவை இரண்டும் சிந்து வெளியில் உள்ளன.

narrativeseal

14.வேதத்தில் வேறு எல்லா நதிகளையும் விட அதிகமாகப் போற்றப்படுவது சரஸ்வதி நதியாகும். அந்த நதியின் பெயரில் ‘சாரஸ்வத்’ பிராமணர்கள் என்ற ஒரு பிரிவே உண்டு. அவர்கள் இன்று நாடு முழுதும் உள்ளனர். சிந்துவெளிக்கும் (சரஸ்வதி சமவெளி) பிராமணர்களுக்கும் உள்ள தொடர்பை இதுவும் பறை சாற்றுகிறது.

15. பிராமணர்கள் சுப காரியங்களிலும் அசுப காரியங்களிலும் பயன்படுத்துவது பருத்தியால் ஆன வேஷ்டிகளே. சிந்து சமவெளியிலும் பருத்தி கிடைத்திருக்கிறது. இது சமயப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது.

16.அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அந்தணர் இருவர்தான் குல குருக்கள். இதை சங்கத் தமிழ் இலக்கியமும் புராணங்களும் உறுதி செய்கின்றன. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு இந்த சங்க காலச் செய்யுட்கள் செமை அடி கொடுக்கின்றன. வெளி நாட்டு அறிஞர்கள் அசுரர்ககளையும், ராக்ஷசர்களையும் திராவிடர்கள் என்று கூறுவர். ஆனால் தமிழ் இலக்கியமோ பஞ்ச திராவிடர்களை பிராமணர்கள் ( ஐந்து தேச பிராமணர்கள்) என்றும் அசுரர்களுக்கு, பிராமணனாகிய சுக்ரனே குரு என்றும் சொல்லுகின்றன.

இதற்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் என்ன தொடர்பு என்று சிலர் எண்ணலாம். தேவர்களுக்கு குருவான வியாழன் (குரு கிரகம்) சிந்து தேச அதிபதி என்று நவக் கிரக துதிகள் பாடுகின்றண. அசுரர் குருவான சுக்ராச்சாரியார் காப்பியக் குடியின் தலைவர். அதாவது தொல்காப்பியரின் குடி. சிந்துவெளியில் சுக்கிரனும் குறிக்கப் படுவதாக பின்னிஷ் ஆய்வாளர் கூறுகின்றனர். ஆக அந்தணர் இருவர்தான் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அசுரர், தேவர்களுக்கு ‘குரு’க்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

‘’நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்’’–(கலித்தொகை 99-1/2)

Indus priest

திருமுருகாற்றுப்படையிலும் ‘’இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி’’ (178) என்ற வரி வருகிறது. ஆனால் இங்கே தொல்குடி என்பதை தொல்காப்பியக் குடி என்று சிலரும் அகத்தியர் வசிட்டர் வழியில் தோன்றிய குடிகள் என்றும் தாய், தந்தையர் என்றும் பல விளக்கங்கள் கூறுவர்.

மணிமேகலையில் ‘’அந்தணர் இருவர்’’ என்ற வரி வருகிறது. ஆனால் அங்கே பிரம்மாவின் புத்திரர்கள் என்ற விளக்கமும் பாடலில் வருவதால் அது வசிட்டர், அகத்தியர் வழிவந்த பிராமணர்களைக் குறிக்கும் என்று உரைகரர்கள் கூறுவர். ஆகையால் அதை இப்பொழுது சிந்து சமவெளியுடன் தொடர்புபடுத்த முடியாது.

17. சிந்துவெளி முத்திரைகளில் பல கொம்புகளுடன் உடைய உருவங்கள் கிடைக்கின்றன. இப்படிக் கொம்பன் பற்றிப் பேசும் ஒரே இலக்கியம் வேத இதிஹசங்கள்தான். சத்வாரி சிருங்கா: என்று அக்னியையும் விஷ்ணுவையும் போற்றும் மந்திரங்கள் இருக்கின்றன. இதே போல ஏக ஸ்ருங்கி என்பதும் வடமொழியில் உண்டு. சிந்து முத்திரையில் ஒற்றைக் கொம்பு (ஏகஸ்ருங்கி) நிறைய உண்டு. பிராமணர்கள் தினமும் வழிபடும் அக்னி, ரிக்வேதத்தின் முதல் மந்திரத்திலும் கடைசி மந்திரத்திலும் இருப்பதே இதன் முக்கியத்தைக் காட்டும்.

IthyphallicProtoSiva

18. சிந்து சமவெளியில் இறை வழிபாடு இருந்தது. ஆனால் கோவில் இல்லை. இது போலவே வேத காலத்திலும் வழிபாடு உண்டு. ஆனால் இன்று நாம் காண்பது போல உயர்ந்த கோவில்கள் இல்லை. மற்ற நதிக்கரை நாகரீகங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பெரிய வேறுபாடு இது.

சிந்து சமவெளியும் கந்தர்வர்களும்

19. நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். புத்தர் காலத்திலும் கூட இப்படி பல பிரிவினர் இருந்ததை நாம் அறிவோம். ஆக ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது. சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது. பிராமனர்கள் நாகரீகமாக இருந்தபோதிலும் கந்தர்வர் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

scorpion 4

தமிழர்களுக்கு தொடர்பு உண்டா?

இந்த நாகரீகத்துக்கும் தமிழர்களுக்கும் “ஸ்நானப் பிராப்தி” கூட கிடையாது. சங்க இலக்கியத்தின் 27,000 வரிகளில் சிந்து நதி பற்றிய பேச்சே இல்லை. வடமேற்கு இந்தியா பற்றிய பிரஸ்தாபமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் புனித கங்கை நதியும் இமய மலையும் தான். பஞ்சாப் பகுதியில் இருந்து வந்த யவனத் தச்சரைப் பற்றிய குறிப்புகள் உரைகளில் காணப்பாட்டாலும் யவன, தச்சர் என்ற இரண்டுமே வடமொழிச் சொற்கள் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.

சிந்து சமவெளியில் காணப்படும் புலிப் பெண், பேய் முத்திரை, பசுபதி முத்திரை, சப்த மாதா முத்திரை, வடிகட்டிச் சின்னம், நர பலி இவைகளுக்குச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் விளக்கம் கிடையாது. மேலும் பசுபதி முத்திரை சிந்து சமவெளிக்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுதும் கிடைத்துள்ளது. இதே போல, காளை பிடித்தலும் (மஞ்சு விரட்டு) கண்ணபிரானின் யாதவ குல விளையாட்டு. கலித் தொகையிலும் அவ்வாறே சித்தரிக்கப் பட்டுள்ளது. இது தவிர, ஆரியர்கள் இவர்களை ஓட ஓட விரட்டி இருந்தால் இலக்கியத்தில் எங்காவது ஒரு இடத்திலாவது குமுறி இருப்பார்கள்—குதறி இருப்பார்கள் அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ செங்கல் என்பதும், தமிழர்கள் பயன்படுத்தியதற்கான பழம் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆக தமிழர்களுக்கும் இந்த நாகரீகத்துக்கும் தொடர்பு ஒரு கேள்விக் குறியாகவே தொக்கி நிற்கிறது

dilmun seal pasupati

(Seal from Bahrain surrounded by animals(Pasupati)

INDUS VALLEY CIVILIZATION
என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!

சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Roman_Orpheus_Taming_Wild_Animals
Picture of Roman Orpheus surrounded by animal (Pasupati)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

cult2
Picture of mysterious symbol (Somarasa Filter?)

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

contact :– swami_48@yahoo.com

OLYMPUS DIGITAL CAMERA

ராமாயணத்தில் அந்தணர்கள்

21-gurukulam-tv-serial-2-600

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1005 தேதி—-27th April 2014.

கம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்?

வசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்

அயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்

பாடல் 99
என்று பின்னும் இராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்

பொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்
ஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்

பாடல் 100
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரைமேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்

அந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா? அவர்கள்
பிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.

பாடல் 101
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ

மகனே! அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா?

GURUKULAM Water color 10x13in

பாடல் 102
அனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

மகனே! அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா? கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.

பாடல் 103
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவநிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே

ஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா? எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.

இதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா? அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.

பிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.
பாலகாண்டத்தில்

“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.

மற்றொரு பாடலில்
மாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்
ஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;
மூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)

மா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.

ஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.

contact swami_48@yahoo.com

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

brahmanabad.

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 927 தேதி 24 மார்ச் 2014

இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது பாகிஸ்தானிலும் ஆப்கனிஸ்தானிலும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது முஸ்லீம் நாடுகளாக ஆகிவிட்டன. முஸ்லீம் நாடுகள் அவர்களுடைய பழைய வரலாற்றைப் பாராட்ட முடியாது. அது மத விரோதச் செயல் ஆகிவிடும். இரண்டாவது காரணம் பிராமணர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லுவதால் அவர்களும் பெருமை பாராட்ட முடியாது. சங்கத் தமிழ் நூல்களும் அதற்குப் பின்வந்த திருக்குறள் முதலிய அற நூட்களும் பிராமணர்களை ‘அறு தொழிலோர்’ என்றே அழைக்கின்றன. இந்த 6 தொழில்களில் ஆளும் தொழில் கிடையாது.

சாஸ்திரம் ஒருபுறம் இருக்க, பிராமணர்கள் ஆட்சி புரிந்த செய்தியை கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களும், 2700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண வித்தகரான பாணினியும் எழுதி வைத்துள்ளனர். இது தவிர பாகிஸ்தானையும் ஆப்கனிஸ்தானத்தையும் ஆண்ட பிராமண அரசர்கள் பற்றி அராபிய யாத்ரீகர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். கி. மு. 700 க்கு முன் துவங்கிய பிராமணர் ஆட்சி, கி.பி.712ல் சிந்து மாகாணத்தில் அராபிய படைத்தளபதி முகமது பின் காசிம் நுழைந்தது வரை நீடித்தது. அதற்குப் பின் 1000 ஆண்டுகளுக்கு “அன்பிலா அந்நியர் ஆட்சி” (பாரதி பாடல் வரிகள்) இந்தியாவில் நடந்ததை நாம் அறிவோம். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியை 1200 முதல் 1600 வரை ஆரிய சக்ரவர்த்திகள் என்னும் பிராமணர்கள் ஆண்டனர். இவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழ் பிராமணர்கள்.

ராமாயண காலத்தில் ராவணன் என்னும் பிராமணன் இலங்கையை ஆண்டான். ஆனால் அவன் 100 விழுக்காடு பிராமணன் இல்லை. தந்தை பிராமணன், தாய் ராக்ஷச வம்சம். தாய்க்கு யக்ஷர்களுடனும் தொடர்பு உண்டு. ஆக ராவணன் பாதிப் பிராமணன், பாதி ராக்ஷசன். ராமாயணத்தில் ஸ்ரீ இராம பிரானே, ஓரிடத்தில், ராவணனை, ஏ, மஹா பிராமணனே! என்று அழைப்பதாக வால்மீகி முனிவர் எழுதியுள்ளார். இப்படி அசுரக் கலப்புடன் பிறந்தவர்களை பிரம்ம-ராக்ஷச வம்சம் என்பர்.

Rajaraja Chola I Chola Ruler
Statue of Hindu King Raja Raja Choza

ராமனுக்குப் பிறகு கிருஷ்ணர் வந்தார். அவரது காலத்தில் துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற வல்லமை வாய்ந்த பிராமண வீரர்கள் போரில் ஈடுபட்டதையும் ஆயுதப் பயிற்சி கொடுத்ததையும் அறிகிறோம். ஆயினும் அவர்கள் அரசு கட்டிலில் அமரவில்லை. போரில் முரசு கொட்டியதோடு நின்றுவிட்டனர்.

ஆயுதப் பயிற்சி பெற்றவுடன, கற்ற கல்விக்கு எவ்வளவு ‘பீஸ்’ (குரு தட்சிணை) என்று பாண்டவர்கள் கேட்டனர். துரோணர் சொன்னார்: “ எனக்கு பணம் எதுவும் வேண்டாம். என்னை சிறு வயதில் அவமானப் படுத்திய பஞ்சாப் (பாஞ்சால) மன்னன் துருபதனைக் கட்டி இழுத்துவா”. உலகப் புகழ்பெற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு இது கொசுவைப் பிடித்து வா என்று சொல்வது போல. ‘சென்றான், வென்றான்’, துருபதனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டி இழுத்துவந்தான். அப்போது துரோணர் பஞ்சாப் பகுதியில் பாதியை எடுத்துக் கொண்டு மீதியை துருபதனிடமே கொடுத்து விரட்டிவிட்டார். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட ராஜ்யத்தை அவர் ஆண்டதாகத் தெரியவில்லை.

பரசுராமர் (கோடாலி ராமன்) என்ற பிராமணருக்கு க்ஷத்ரியர்கள் மீது கோபம். ஆகையால் 21 க்ஷத்ரிய மன்னர்களை வெட்டி வீழ்த்தினார். ஆனால் அவரும் ஆண்டதாக நமது இதிஹாச புராணங்கள் சொல்லவில்லை. வடமேற்கு இந்தியாவில் மட்டும் ஆட்சி செய்தது புரியாத புதிராக இருக்கிறது!

சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பிராமணர் படைகளை விட மற்ற மூன்று வர்னத்தினர் கொண்ட படைகளைத்தான் அரசன் அமைக்கவேண்டும் என்பார். காரணம், எதிரிகள் தங்கள் காலில் விழுந்தால் உடனே பார்ப்பனர்கள் மன்னித்துவிடுவர்.. ஆகையால் அவர்கள் படைகளுக்கு லாயக்கு இல்லை (அர்த்த சாஸ்திரம் 9-2-21/24) என்பார்.

King Karikala

Statue of Hindu King Karikala

இது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் பிராமண அக்ரஹாரங்களும், பிராமண கிராமங்களும்தான் முதலில் முஸ்லீம் மயமாகின. மற்ற ஜாதியினர் அவர்களை உள்ளே விடமாட்டார்கள்.. மார்க்கோபோலோ என்ற இதாலிய யாத்ரீகனும் பிராமண ஜாதியை மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். எல்லோரும் சத்தியத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த பிராமணர்களை நடுவர்களாக வைத்துகொண்டு வியாபாரம் செய்தனர் என்று!! ( இது 800 வருஷத்துக்கு முந்திய பார்ப்பனர்களின் கதை!!! இப்போது யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்!!!)

இதற்குப் பின் வரலாற்று காலத்தில் இந்தியாவை ஆண்ட பிராமணர்கள் பற்றி நமக்கு ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன. சுங்க வம்சம், கண்வ வம்சம் சாதவாகனர்கள், கங்க வம்சம், வாகடர்கள் ஆகியோர் பிராமணர்கள். பல்லவர்கள், மற்றும் ‘தத்தா’ என்ற பெயர் உடைய பல அரசர்கள், பஞ்சாபின் மொஹியால்கள், வங்காள அரசர்கள் பலரும் பிராமணர்கள் தான். இவர்களை பிரம்ம கஷத்ரியர்கள் என்பர். அதாவது 50% பிராமணர், 50% க்ஷத்ரியர்!!

நமது காலத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பம் முதல் தேசாய், வாஜ்பாயீ, நரசிம்மராவ் வரை பல பிரதமர்களும் ஐந்து ஜனாதிபதிகளும் பிராமணர்கள்தான். ஆனால் நான் சொல்ல வந்த பிராமண ஆட்சி —வரலாறு அறியாத கால— பிராமணர் ஆட்சி!

அலெக்சாண்டர் வென்ற பிராமணன்

அலெக்ஸாண்டர் படை எடுத்த கி. மு. நான்காம் நூற்றாண்டில் பிராமண ராஜ்யத்தை அவர் வெற்றி கொண்டதாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் கூறுவர். சிந்து மாகாணத்தை சம்பூ என்ற பிராமணன் ஆண்டதாக சிந்தி வரலாறு கூறுகிறது. பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ ( எட்டு அத்தியாயம்) என்ற சம்ஸ்க்ருத நூலில் ‘’பிராமணக’’ என்ற நாட்டைக் குறிப்பிடுகிறார். பிராமண சாம்ராஜ்யங்கள் வெளியிட்ட நாணயங்களும் இப்போது கிடைக்கின்றன. பிராமணர்களை பிராக்மேன், பிரஹ்மன், பாஹ்மன் என்று பாரசீக ,கிரேக்க நூல்கள் குறிப்பிடும். யாராவது ஒருவர் இந்தத்துறையில் ஆய்வு செய்தால் சிந்து சமவெளியை ஆண்ட அரசர்கள் வரை கண்டுபிடித்து விடலாம்!!
shivaji_19178

Picture of great Hindu king Veera Shivaji

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக ஆர்.ஜி.பண்டார்கர், கோல்டுஸ்டக்கர் போன்ற அறிஞர்கள் கூறுவர். கௌடில்யர் என்ற பிராமணர் எழுதிய உலகின் முதல் பொருளியல் நூலான அர்த்த சாஸ்திரத்தில் அப்போது இருந்த நாடுகளின் பெயர்கள் வருகின்றன. அவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை எல்லோரும் ஒப்புகொள்வர். அவர் குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பாணினி குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதால், பாணினிக்கு கி.மு.700 என்ற தேதியே சரி என்பது புலனாகும்.

சிந்து மாகாணத்தின் சோகக் கதை

சிந்து மாகாணத்தை ஆண்ட கடைசி இந்து மன்னன் ராஜா தகிர். அவர் ஒரு பிராமணர். மஹா வீரன். அராபிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களும் அவர் இறுதி வரை போரிட்டதைப் புகழ்ந்துள்ளனர். ஆனால் பெண்களிடத்தில் பலவீனம் உடையவர். அவருக்கு முன்னால் அந்த இடத்தை 140 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த பௌத்தர்களையும் , ரஜபுதன வீரர்களையும் மட்டமாக நடத்தினார். எல்லா அடிப்படை உரிமைகளையும் பறித்தார். இதனால், முகமது பின் காசிம் ஆறு மாத காலம் முற்றுகையிட்டுத் திணறிய காலத்தில், கோட்டைக்குள்ளிருந்து ரகசிய தகவல்களை முஸ்லீம் படைகளுக்கு எழுதி அனுப்பினர். ராஜா தகிருக்கு உதவவும் மறுத்தனர். அதற்குப் பின் வெற்றி கண்ட இராக்கிய அராபிய தளபதி முகமது பின் காசிம் ஆயிரக் கணக்கான வீரர்களைப் பிடித்து தலைகளைச் சீவினார். ‘டன்’ கணக்கில் தங்கத்தை மூல்டான் (மூலஸ்தானம் சூரியன் கோவில்) கோவிலில் இருந்தும் அரண்மனையில் இருந்தும் இராக் நாட்டிற்கு அனுப்பிவைத்தார். ராஜா தகீரின் மகன் ஜசியாவும் மஹா வீரன். ஆனால் அவன் உதவி கேட்டு பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.

brahminabad3

பிராமணாபாத் நகர இடிபாடுகள்

சிந்து மாகாணத்தில் இப்போது பிராமணாபாத் என்ற ஒரு ஊர் உண்டு இடிபாடுகள் நிறந்த ஊர். ஒரு காலத்தில் சிந்து மாகாண அரசர்களின் கோடைகாலத் தலைநகராகக் கொடி கட்டிப் பறந்த நகரம். பிரம்மண்டமான கோட்டை கொத்தளம் நிறைந்த இடம். அராபியர்கள் இதை தரை மட்டம் ஆக்கியதால் பின்னர் இந்நகரம் எழுந்திருக்கவே இல்லை! பக்கத்தில் அல் மன்சுரா என்ற இடத்தை பின்னர் உருவாக்கினர். ஆனால் மக்களுக்கு பிராமணாபாத் நினைவு நீங்கவே இல்லை. அதையும் பிராமணாபாத் என்று அழைக்கத்துவங்கிவிட்டனர். இந்த ஊரில் இருந்த அத்தனை செல்வத்தையும் அராபியப் படைகள் இராக் நாட்டிற்குக் கடத்திவிட்டதால் யாருக்கும் இதைப் பற்றி ஆர்வமே இல்லாமல் இன்னும் இடிபாடுகளுடன் காட்சி தருகிறது. சிந்து சம்வெளியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதிய ஒரு வங்காளி அறிஞர் சிந்து சமவெளி நாகரீகமே இதைச் சேர்ந்ததுதான் என்று எழுதினார். மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரங்கள் மிகவும் அதிக தொலைவு இல்லை. இப்பொழுதைய பாகிஸ்தானிய ஹைதராபாத் அருகில் பிராமணாபாத் இருக்கிறது.

(ஆகமதாபாத், அல்லாஹாபாத் என்று முடியும் நகரங்களில் உள்ள ‘பாத்’ என்பது பாரசீகச் சொல் என்று சொல்வர். அது பிழையே. ஜனபத என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து இது வந்தது என்பதை வடமொழி வல்லுனர்கள் அறிவர்).

பிராமணர்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் 140 ஆண்டுகளுக்கு புத்தமத ஆட்சி நடந்ததும் ஒரு புதிர்தான். அங்கு சித்தூர் (ராஜஸ்தான்) மன்னன் உதவியுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் எழுதியப் பயணக் குறிப்புகளில், நாட்டின் வளத்தைப் புகழ்ந்துள்ளார். ஆனால் புத்தமதப் பிட்சுக்கள் பேராசைக் காரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் இருப்பதாக இகழ்ந்துள்ளார்.

சிந்து மாகணத்தில் எப்போது இப்படி பிராமண ஆட்சி துவங்கியது என்று தெரியவில்லை பாணினியின் எழுத்தைக் கொண்டு பார்கையில் கி.மு 700 வாக்கில் ‘’பிராமணக’’ தேசம் இருந்தது தெரிகிறது. புராண காலத்தில் சிந்துத்வீப அம்பரிஷனும், மஹா பாரத காலத்தில் ஜயத்ரதனும் சிந்து சமவெளியை ஆண்டது நமது நூலகளில் உள்ளது. ஒருவேளை சிந்து சமவெளி நாகரீகமே பிராமண-ஷத்ரிய நாகரீகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அங்கே யாக குண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டதையும், முத்திரைகளில் காணப்படும் வடிகட்டி, சோம பானம் செய்யும் வடிகட்டிப் பாத்திரம்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் இனம் காணத் துவங்கிவிட்டனர். அது மட்டுமல்ல. அங்கே கிடைத்த யோகி முத்திரை பிராமண வேத விற்பன்னர்கள் அணியும் பூப்போட்ட சால்வையை அணிந்திருப்பதும் அவர் இடது தோளில் அதைப் போட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இன்றும் வேதம் சொல்லும் பார்ப்பனர்களும் யாகம் செய்யும் பார்ப்பனர்களும் இதே மாதிரியில்தான் சால்வை அணிவர்.

Moovendar

Picture of three great Tamil kings. They were present together at the Rajasuuya Yagna performed by the Choza king. Avvaiyar praised their unity.

முகமது நபி இஸ்லாம் மதத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பே காபா கோவில் மெக்காவில் இருந்ததை உலகமே அறியும். அங்கு காபா கோவிலைச் சுற்றும் முஸ்லீம்களும் இப்படி வேத விற்பன்னர்கள் போல இடது தோளில் வெள்ளை வேஷ்டி, துண்டு அணிந்து சுற்றுவதையும் படத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரே வித்தியாசம். அவர்கள் வலமாகச் சுற்றுவதில்லை.

பணம் இருந்தால் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சியில் செலவிட எனக்கும் ஆசைதான்!

Please read the following posts:
1.How Old is Indian Civilisation posted on 8th November 2011
2.BIGGEST BRAINWASH IN THE WORLD posted 13th September 2012
3.Megasthenes did not know Buddha 16 June 2013
4.Sanskrit Words in the Bible 14 July 2012 & August 2012
5. Elephants Lost, Cats Won: A sad story from Indian History 12/03/2014

இந்த ஆங்கிலக் கட்டுரைகள் தமிழிலும் உள்ளன

Contact swami_48@yahoo.com

Fall of Brahmin Kingdoms in Pakistan & Afghanistan

brahmanabad.

By London swaminathan
Post No 926 Date:- 23rd March 2014

An amazing chapter in the history of India has gone unnoticed for long. The reason being it happened in Pakistan and Afghanistan which are ruled by non –Hindus now. They did not want to glorify anything that is not Muslim. The second reason is that it was Brahmins who are not supposed to rule! But the fact of the matter is Brahmins ruled North Western Parts of India for nearly 1500 years! Brahmins are not supposed to rule. They can only teach archery. But we have read in the Mahabharata how Drona and his son Aswaththama fought in the war. Drona was a fearsome Brahmana warrior. He and his son with another Brahmin Kripa fought the war on the side of Kauravas under Duryodhana.

Drona’s favourite student was Arjuna. When Arjuna was graduated and wanted to settle his tuition fees, he asked Drona what would be the final fees. Drona asked Arjuna to give him in kind instead of gold coins. Drona wanted to exact a revenge on Drupada, King of Punjab, because Drupada insulted him once. When Drupada was brought before Drona by Arjuna, he took half of his kingdom. But we did not know whether Drona actually ruled or merged it in to Duryaodhan’s kingdom.

We did not see anything like this in the Vedic literature. Seers like Vashista created weapons and army to defeat arrogant and greedy kings like Viswamitra. Parasurama only took revenge on the Kshatriyas, but never ruled any part of India. Before Drona, Ravana , a Brahmin ruled Sri Lanka. But he was projected as a half Yaksha, half Rakshasa and a Brahmana which shows that he was not a 100 percent Brahmin.

Moovendar

Pictures of Three Great Tamil Kings

History shows us that as the morality of the Brahmins declined the country also went down. Later in the historical period, we see great Brahmin rulers of the Sunga Vamsa Kanwa Vamsa, Ganga Vamsa, Satavahanas, Vakatakas and Kadambas. We see this trend up to the Arya Chakravarthis of Sri Lanka who ruled Jaffna between 1200 and 1600. They were Tamil Brahmins from Rameswaram.

Mohiyals or Mujhaals of Punjab were Brahmin rulers of North West India which are under Pakistan and Afghanistan now. They are Saraswat Brahmins, meaning they are from the River Saraswati , Vedic River. The rulers with the suffix Datta called themselves the descendants of Dronacharya. Pallavas and Kings of Vietnam (Champa) called themselves Brahma-kshatriyas.

Rulers of modern India, Jawaharlal Nehru, Indira Gandhi, Rajiv Gandhi, Lal Bhadur Sastry, Morarji Desai, P V Narasima Rao and Atal Behari Vajapayee were also partly or fully Brahmins. Five Presidents of India were Brahmins. But I am writing about a Brahmin rule that existed 2500 years ago.

Kautilya’s Arthasastra says Brahmins were unfit to rule. An enemy may win over Brahmin troops by prostrating himself before them! Kautilya says an army composed of other three castes is better (Arthashastra: 9-2-21/24).

brahminabad3

When the Arab army under Muhammad ibn al-Qasim invaded Punjab-Sind area in 712 AD , a Brahmin king by name Raja Dahir was ruling Sind. Since he denied freedom to Rajputs and Buddhists, they did not support Raja Dahir fully. Some people from inside the fort supplied vital information to the enemy force. Ultimately Muhammad won the war which established foreign rule in India for another 1000 years. Raja Dahir was the third ruler of the Brahmin dynasty. His father Chach founded the dynasty in Sind/Punjab region. The Persian chronicle ‘Chachnamah’ and other historical accounts of the Arabs give the historical chronology of North West India. Since it is all about Hindu rule in the present Muslim Afghanistan & Pakistan nobody bothered to study them. If someone does proper research we may even be able to trace the kings up to the rulers of Indus valley civilisation.

Brahmin City in Pakistan!

Brahmanabad, now a ruined city in Pakistan, was once a flourishing city. It was the summer capital of Sind Kingdom. After Raja Dahir’s defeat, his son Jasiya withdrew to Brahmanabad fort and wrote letters to his relatives for help who were ruling different areas in the region. None of them came to his help.

King Karikala
Hindu King Karikala who did Yaga in Eagle Shaoed Yaga Kunda.
Brahmanabad had a big fort. According to Ain-i -Akbari of Abu al Fadl, there were 1400 bastions each of which was situated at some distance from the other. When the Arab army from Iraq took control of the area, thousands of soldiers were put to death by sword. The town was called al- Mansurah later. The town was destroyed by the Arabs in such a manner that it never rose again.

Before the Chach dynasty, Sind and Punjab were ruled by the Buddhists. It was a big mystery how Buddhists seized power. Dewaji who was a kinsman of Ruler of Chitor established Buddhist rule. It shows that he came to rule with the help of Hindu rulers of Chitor. The Buddhists ruled Sind for over a century. Chinese pilgrim Hiouen Thsang wrote that Dewaji was a Sudra ruler. Though he spoke of the general prosperity of the country he was very critical of the Buddhist monks. They were described as greedy persons and debauchees.

When Alexander invaded India, Shambu, a Brahmin king was ruling the Sind region. Kashmir was also a land of Brahmins. Greek accounts said that Alexander invaded a country of Brachmans. They misspelt Brahmins as Brachmans. Iranians/Persians misspelt it as Bahman. Coin catalogues describe many coins of Brahmin kingdoms of Punjab and Sind. Panini, the greatest grammarian the world has ever produced, lived in 7th Century BC according to great Sanskrit scholars R G Bandarkar and Goldstucker. We can rely on these dates because there is a wide difference in the geography of India as described by Panini and Kautilya. We knew that Kautilya’s date was definitely 3rd century BC. More over we find many Sanskrit words in the Bible which are exported items from India (Please read my two part article Sanskrit in the Bible posted here.) Panini located the Brahmanaka country in the Sind area. So we can boldly say that Brahmins were ruling that area from 800 BC till the Arab army dislodged the last Brahmin ruler Raja Dahir in 712 AD.
A lot of materials are available in the Greek, Persian and Arab accounts. Someone has to put them together in chronological order.
Rajaraja Chola I Chola Ruler

Great Tamil Hindu King Raja Raja who built Thanjavur Big Temple

I have already explained Panini’s tremendous knowledge about ancient India in my post “How Old is Indian Civilisation?”

Please read the following posts:
1.How Old is Indian Civilisation posted on 8th November 2011
2.BIGGEST BRAINWASH IN THE WORLD posted 13th September 2012
3.Megasthenes did not know Buddha 16 June 2013
4.Sanskrit Words in the Bible 14 July 2012 & August 2012
5. Elephants Lost, Cats Won: A sad story from Indian History 12/03/2014

Contact swami_48@yahoo.com

shivaji_19178

King Veera Shivaji who established a Hindu empire.