Scientific Proof for Indian Yogi’s Long Life!

bhagiratha

Bhagiratha’s penace on one leg in Mahabalipuram; some people think it is Arjuna’s penance for Pasupata Astra.

Written London Swaminathan
Post No. 1122; Dated 21st June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

London news papers have published a news item this morning (21/6/14) which throws more light on Hindu Yogic practices. They flashed the news item with the title: “WANT TO LIVE LONGER? STAND UP FOR THREE HOURS A DAY”. Indian saints, Yogis, ancient kings and even demons were doing penance for a long period in different postures. We see such Yogis even today during festivals like Kumbhamela. Hindu scriptures always attribute a longer life span for them.

We read about how Arjuna and Bagheeratha and others did penance standing on one foot. Arjuna did penance to get Pasupata Astra and Bhageeratha did penance for bringing down the River Ganges from the heaven. Goddess Parvati did penance to get Shiva as her husband. They stood on one leg and did penance for “thousands of years”. Since Hindus invented the decimal system, they used the phrase ‘60,000 years’ just to mean “for a long period”. In the same way Buddhist scriptures used No. 500 and Semitic scriptures used No 40. They were not taken literally.

Standing on one foot or sitting in a particular posture increases concentration. English phases such as ‘bent upon’, ‘bent on’, ‘inclined to’ may mean Yoga Asana postures. Now the scientific evidence has come in favour of ‘ STANDING’ and doing something which keeps you fit and healthy!

4. Arjuna's penance

“Simply standing up for three hours a day is as good for you as running ten marathons a year and could even extend life by two years, an expert has claimed”- reported London News Papers this morning.
Coupled with Pranayamam (Breath Control techniques) our Yogis lived for a very long period and achieved what they wanted to achieve.
Dr Mike Loosemore, lead consultant in exercise machine at the Institute of Sport, said even small amounts of exercise, such as standing, can have significant health benefits. ‘It is going to improve their health. It is going to reduce their risk of heart disease, diabetes and cancer, It is going to reduce their cholesterol and It is going to make them thinner’, he said.

“If you keep doing small gains, they will improve your health. It is easy to do and you make it part of your life style. If I stood up like this and worked standing up, which I do, three hours a day, five days a week, that would be the equivalent of ten Marathons a year”.

Dr Loosemore was the lead medic for the GB (UK) Boxing team at London 2012 Olympics. A Depart of Health (U.K)spokesman said: ‘Even making small changes are designed to be a manageable way in which people can make these changes’.

kamakshi 5 fire
Kamakshi or Uma on one foot.

An experiment was done with the help of University of Chester team in 2013 and the result they got was encouraging. Dr John Buckley of the team said,

“If you stand for three hours a day for five days that’s around 750 calories burnt. Over the course of a year it would add up to about 30,000 extra calories, or around 8lb of fat. Standing while you are working may seem rather odd, but it is a practice with a long tradition. Winston Churchill wrote while working at a special standing desk, as did Ernest Hemingway and Benjamin Franklin”.

Bus conductors are less prone to heart diseases than bus drivers, a study found out.

If we take into account the breath control (Pranayam) techniques of Hindu Yogis, “eating nothing but air” and with reduced metabolism, we will understand how they lived for longer years.

Let us follow Arjuna and Bhageeratha!

Laughter is the Best Medicine

Compiled someone who is intelligent!
Post No.1116; Dated 18th June 2014.

color siri 1

STUDENT WHO OBTAINED NIL MARK !!

I would have given him 100% for his wit!!!

Q1. In which battle did Napoleon die?
* his last battle

Q2. Where was the Declaration of Independence signed?
* at the bottom of the page

Q3. River Ravi flows in which state?
* liquid

Q4. What is the main reason for divorce?
* marriage

Q5. What is the main reason for failure?
* exams

color siri2

Q6. What can you never eat for breakfast?
* Lunch & dinner

Q7. What looks like half an apple?
* The other half

Q8. If you throw a red stone into the blue sea what it will become?
* It will simply become wet

Q9. How can a man go eight days without sleeping ?
* No problem, he sleeps at night.

Q10. How can you lift an elephant with one hand?
* You will never find an elephant that has only one hand..

laughter-1

Q11. If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in other hand, what would you have ?
* Very large hands

Q12. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
* No time at all, the wall is already built.

Q13. How can u drop a raw egg onto a concrete floor without cracking it?
*Any way you want, concretefloors are very hard to crack.

laugter2

Spread the laughter, share the cheer
Let’s be happy, while we’re here !!

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!!!

atom bomb queen

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1112 ; தேதி:– 17 ஜூன் 2014.

உணவை அளவோடு உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்; நல்லதைச் செய்யும் என்பது இதன் பொருள்.

அது என்ன? பெண்களுக்கு மட்டும் இந்த அறிவுரை? ஆண்கள் நிறைய சாப்பிட்டுவிட்டு தொந்தியும் தொப்பையுமாக ‘’டைனோசரஸ்’’ மிருகம் போல வலம் வரலாமா? ஏன் பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்?

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது, காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

மனைவியைத் தவிர வேறு பெண்களை நோட்டம் விடும் ஆண்களுக்கு நல்ல சாக்கு கிடைத்து விடும் அல்லவா? ஆண்களை ‘’மலர் மேயும் வண்டுகள்’’ – என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் திட்டுகின்றனர் ((இது பற்றி எனது தனிக் கட்டுரையைக் காண்க)).

big-bottom

மீதூண் விரும்பேல் – என்று ஆத்திச் சூடி கூறும்.
பொருள்:– அதிகமாகச் சாப்பிட்டால் தொந்தி விழும்! தொந்தி சரிந்தால் சர்க்கரை வியாதி வரும். பின்னர் அதன் சகோதரர்களான இரத்த அழுத்தமும், இருதய நோயும் வாடகை தராமலேயே நம் வீட்டில் குடிபுகுந்து விடுவார்கள்! ((காண்க:– எனது பழைய கட்டுரை; ‘’ஒருவேளை உண்பான் யோகி’’……கட்டுரை இட்ட தேதி நவம்பர் 15, 2012))

மருந்து – என்ற தலைப்பில் திருவள்ளுவன் நமக்கு பத்து அறிவுரைகள் தருகிறான். அதில் ஒன்று:–

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் – குறள் 946

பொருள்:– குறைவாக (இழிவு) உண்பவனுக்கு என்றும் இன்பம்; அதிகமாக உண்பவனுக்கு என்றும் நோய்!!

VLUU L100, M100  / Samsung L100, M100

பாலோடாயினும் காலம் அறிந்து உண் – என்று கொன்றை வேந்தன் சொல்லுகிறது.
பொருள்: பாலும் தேனும் கிடைத்தாலும்கூட அதற்கு உரிய காலத்தில்தான் சாப்பிட வேண்டும். அந்தக் காலத்திலேயே ‘’கொலஸ்ட்ரால்’’ (கொழுப்புச் சத்து) பற்றிய மருத்துவ அறிவு இருந்திருக்கிறது!!

((எங்கள் லண்டனில் பால் பாட்டில்களில் நீல நிற மூடி, பச்சை நிற மூடி, சிவப்பு நிற மூடி என்று பல வகை பால்-கள் விற்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை யாம் அறியோம் பராபரமே!! டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி வந்தாலேயே டாக்டர்கள் பச்சை மூடி அல்லது சிவப்பு நிற மூடிக்கு மாறிவிடுங்கள் என்று எச்சரிப்பர். காரணம்? அவருடைய சகோதர வியாதிகள்— பிளட் பிரஸ்ஸர், ஹார்ட் ப்ராப்லம்ஸ்!!!))

மருந்தேயாயினும் விருந்தோடு உண் –என்று தமிழ் பழமொழி செப்புகிறது.
பொருள்: அமிர்தமே கிடைத்தாலும் அதை விருந்தினருடன் பகுத்து உண்ணுங்கள். அதிகம் உண்டால் அமிர்தம் கூட விஷம் ஆகி விடும். மற்றொரு பொருள்:- சில வகை மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் சாப்பாட்டுடன் சாப்பிடுங்கள்.

சுட்ட எண்ணையை தொடாதே, வறுத்த பருப்பை விடாதே –என்று சித்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

manuel-uribe-fattest-man-diet

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதில் தீய ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகம் இருக்கும் (கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் வகையும் இருக்கிறது). இதே போல உருக்கிய வெண்ணெயைவிட (அதாவது நெய்), வெண்ணை நல்லது. அதை உருக்க உருக்க, உங்கள் உடலையும் உருக்கிவிடும்!

வறுத்த பருப்பு = நல்ல புரோட்டீன்= அதாவது உடலுக்குத் தேவையான புரதச் சத்து!

இறுதியாக
மூலம் சேர் கறி நுகரோம், மூத்த தயிர் உண்போம்
முன்னை நாள் செய்த கறி அமுதெனினும் அருந்தோம்
ஞாலம்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கேதுகவை நாம் இருக்கும் இடத்தே
–தேரையார் வாகடம்
பொருள்:– ஞாலம்= உலகமே கிடைத்தாலும், நமன்= யமன்.

Do-You-Know-Your-BMI-This-Might-Help

எனது முந்தைய கட்டுரையில் (நவம்பர் 15, 2012) சொன்ன பாடலினையும் மீண்டும் ஒருமுறை பயிலுவது நலம் பயக்கும்:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே
இருபோது போகியே என்ப – திரி போது
ரோகியே நான்கு போது உண்பான் உடல் விட்டுப்
போகியே என்று புகல் (நீதி வெண்பா)

bmi-chart

BMI Chart: If you dont understand this chart, please ask your doctor.

—சுபம்—

வாழைப்பழம் வாழ்க !

banana(1)green

வாழையின் மருத்துவ குணங்கள் என்ன?
கட்டுரை எண் 932 தேதி மார்ச் 26, ஆண்டு 2014.

எப்போதோ ‘மூலிகை மணி’ என்ற பத்திரிகையில் இருந்து எடுத்துவைத்த பேப்பர் கட்டிங்-ஐ மீண்டும் படித்தேன். பழுப்பு நிறக் காகிதம் கிழிந்துவிடும் போல இருந்தது. தூக்கிப் போட மனசில்லை. வாசகர்களுடன் பகிர்ந்தால் எழுதிய ஆசிரியரும் மனம் குளிர்வார் அல்லவா?

வாழ வைக்கும் வாழை
எழுதியவர்: மருத்துவப் புலவர் டாக்டர் ச. ஆறுமுகநாதன்

இலையின் குணம்
வாழை மரம் பார்த்திருப்பாய் தம்பி – அது
வழங்கும் நலம் சொல்லுகிறேன் கேள் தம்பி!
வாழை இலை போட்டு உண்ணு தம்பி — அது
வாதபித்தம் போக்குமடா தம்பி

banana_leaf

பூவின் குணம்
வாழைப் பூ இரத்த மூலம் போக்கும் – மேக
வெட்டை கைகால் எரிச்சல்களை நீக்கும்
கோழையோடு வயிற்றுக் கடுப்போட்டும்
மற்றும் குணபேதம் நீக்கி தாது ஊக்கும்

vazaipu

பிஞ்சின் குணம்
வாழைப் பிஞ்சு இரத்தக் கடுப்போட்டும்
வந்த மூலம் நீரிழிவை மாற்றும்
பாழாகா வயிற்றுப் புண்ணை யாற்றும் மூத்திரம்
பக்குவமாய் மிகப்படாமல் போக்கும்

banana benefits

காயின் குணம்
வாழைக்காயால் பித்த வாந்தி போகும், பைத்தியம்
வயிற்றளைச்சல் இருமல் சூடு நீங்கும்
சூழும் இரத்தம் அதிகரிக்கும் வாயில் – சும்மா
சுரந்திடும் நீர் நிற்கும் பசி தூண்டும்

பழத்தின் குணம்
வாழைப்பழம் பித்தப் பிணி ஓட்டும் – உடல்
வரட்சியாலே வெளுப்பதினை மாற்றும்
தாழச் செய்யும் கொழுப்பு மூர்ச்சை போக்கும், மேனி
தளராத வடிவத்தினைச் சேர்க்கும்
OLYMPUS DIGITAL CAMERA

கிழங்கு நீர் குணம்
வாழைக் கிழங்கில் ஊறும் நீரு — தட்பம்
வாய்ந்ததிது குளிர்ச்சி தரும் தம்பி
கோழையுடன் எலும்புருக்கி பாண்டு – மற்றும்
கொடிய வெப்ப நோயகற்றும் தம்பி

தண்டின் குணம்
வாழைத் தண்டு குடலில் சேர்ந்த கல்லை – வெளி
வரவழைக்கும் வேலை செய்யும் தம்பி
வாழைத் தண்டு சாற்றினாலே தம்பி – சிறுநீர்
வாதையெல்லாம் போகுமடா தம்பி
stem

கூட்டுப் பொரியல்
வாழைப் பூ, பிஞ்சு காய்கள் தண்டு – தினம்
வருவல் கூட்டுச் செய்து உண்ணு தம்பி
வாழவைக்கும், நோய்கள் பல நீக்கும் – இந்த
வகை தெரியார் உணரச் சொல்லு தம்பி

14 வகைகள்
வாழை வகை பதினான்கு உண்டும் – அதில்
வரும் செவ்வை, இரசுத்தாளி, வெள்ளை மொந்தை
வாழ்வளிக்கும் வகைகள்; கரு வாழை மேன்மை
வாய்ந்ததென்று சொல்லிடுவார் தம்பி

red-banana

உணவுக்குப் பின் பழம்
உணவுக்குப் பின் வாழைப்பழம் உண்ணுட மலம்
உடந்திளகிப் போகச் செய்யும் கண்ணு
குணத்தை நல்கி பலமளிக்கும் என்று, முன்னோர்
கூறியதை யானும் சொன்னேன் கண்ணு

red-banana-500x500

நன்றி: ஆறுமுக நாதனுக்கு !!

என்னுடைய முந்தைய மருத்துவக் கட்டுரைகள்:–

தென்னையின் பெருமை, தக்காளி ரசத்தின் மகிமை, நோய் நீக்கும் தாமிரம்
இளநீர் மகிமை, இந்திய அதிசயம் ஆலமரம், சிந்துவெளியில் அரச மரம்
வாழை மரம், ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே, உடம்பைக் கடம்பால் அடி, மரத் தமிழர் வாழ்க!, யானைக் காப்பி, ஒருவேளை உண்பான் யோகி, மருத்துவப் பழமொழிகள், பொற்கை பாண்டியன் கை சர்ஜரி, ஆமையைப் போல 300 ஆண்டு வாழமுடியுமா?, இசை தரும் நோயற்ற வாழ்வு, நோய் நீக்க ராகங்கள், அருகம்புல் ரகசியங்கள், மருத்துவப் பழமொழிகள், கண்ணப்பர்-விஷ்ணு–சிபி கண் தானம்/ சர்ஜரி, தமிழர்களின் அபார மருத்துவ அறிவு —- முதலிய இருபதுக்கும் மேலான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் இந்த பிளாக்—கில் உள்ளன. படித்து மகிழ்க!

contact swami_48@yahoo.com

நூறு ஆண்டு வாழ சரகர் கூறும் விதிகள்

100 years life

Post 757 dated 24th December 2013.
ஹித ஹாரி, மித ஹாரி, ருது ஹாரி, சதா நிரோகி!

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – பகுதி 3
(Please read first two parts posted earlier)
By ச.நாகராஜன்

.
சின்ன உண்மை
வியாதி இல்லாமல் வாழ ஒரு ரகசிய சூத்திரத்தை சரகர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:- ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி! அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்!

அல்பெரூனியின் வியப்பு

இந்தியாவிற்கு வந்து அதிசயங்களின் நாடாக இதைக் கண்ட அல்பெரூனி,” அவர்கள் (ஹிந்துக்கள்) சரகர் என்பவர் எழுதிய நூலைக் கொண்டுள்ளனர். அதுவே அவர்களின் இலக்கியங்களில் வைத்தியத்தில் மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. த்வாபர யுகத்தில் அக்னிவேசர் என்ற பெயருடன் வாழ்ந்த ரிஷியே அவர் என்று அவர்கள் நம்புகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரக சம்ஹிதை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

hundred-birthday-cake-007

சரக சம்ஹிதைக்கு விளக்கவுரைகள்

பின்னால் தோன்றிய பெரும் ஆயுர்வேத நிபுணர்கள் சரகருக்கு முதலில் தங்கள் வணக்கத்தைச் செலுத்துவது மரபானது. சஹாசங்கா என்ற மன்னனின் (கி.பி.375-413) அரண்மனை வைத்தியரான பட்டர ஹரிசந்திரா என்பவர் ‘சரக வ்யாக்யா’ என்ற தனது நூலையும், வாக்பட்டரின் மாணவரான ஜேஜிதா என்பவர் ‘சரக ந்யாஸா’ என்ற தனது நூலையும் சரகரைப் போற்றும் வகையில் சரகர் பெயரைத் தமது நூலுக்குச் சூட்டினர்.

ஜேஜிதா ‘நிரந்தர பாத வ்யாக்யா’ என்று சரகரின் நூலுக்கு ஒரு விளக்கவுரை நூலையும் எழுதினார். பட்டர ஹரிசந்திரா எழுதிய நூலின் ஒரு பகுதி மட்டும் இன்று கிடைத்துள்ளது.

ஸ்வாமி குமாரா என்பவர் பஞ்ஜிகா என்று ஒரு விளக்கவுரையை எழுதியுள்ளார். இதிலும் ஒரு பகுதியே இன்று நமக்க்குக் கிடைத்துள்ளது.

ஜயந்த பட்டர் என்பவர் தனது நியாய மஞ்சரியில் இதுவரை தோன்றியவர்களுள் எல்லாம் அறிந்த அறிவாளி சரகரே என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏனெனில் சரகர் தனது சம்ஹிதையில் புகழ்பெற்ற 60 பேரை சுட்டிக் காட்டி மேற்கோளாக அவர்கள் கூறியதை எடுத்தாள்கிறார். வசிஷ்டர், ஜமதக்னி,பிருகு,வாமதேவர், ஆங்கீரஸர் போன்ற பெரும் மஹரிஷிகள் இந்த அறுபது பேரில் அடங்குவர்.

341+177+64 = 582

தாவர வகையிலான 341 மருந்துகளையும், மிருக வகையிலான 177 மருந்துகளையும் உலோகம் மற்றும் கனிமங்களின் அடிப்படையிலான 64 மருந்துகளையும் அவர் குறிப்பிடுகிறார். பாதரஸத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டாலும் அதன் மருத்துவப் பயன்பாட்டினை அவர் குறிப்பிடவில்லை.

100th-bday-5
அமெரிக்க நிபுணரின் புகழாரம்

அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவ நிபுணரான ஜார்ஜ் க்ளர்க் என்ற அறிஞர் சரகரின் நூலை வரி வரியாகப் படித்து இப்படிக் கூறுகிறார்: “அவரது நூலைப் படித்து விட்டு இதை மட்டுமே நான் கூற முடியும்.
இன்றைய நவீன மருத்துவர்கள் தங்களது பார்மஸியிலிருந்து அனைத்து மருந்துகளையும் எறிந்து விட்டு சரகர் கூறிய முறைப்படி தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்குவார்களானால் கல்லறையில் சவப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு மிகக் குறைந்த வேலையே இருக்கும். அத்துடன் ஊனமுற்றவர்களாக உலகில் மிகச் சிலரே இருப்பர்”

(If the physician of the present day world drop from the pharma copoeia all the modern drugs and treat their patients according to the method of Charaka there would be the least work for the undertakers and fewer chronic invalid to the world – Ceorge Clark)

100th-birthday-cake-007
நூறு ஆண்டுகள் வாழ விதிமுறைகள்

சூத்ர ஸ்தானத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான விதி முறைகளை சரகர் மிக விளக்கமாக்க் குறிப்பிடுகிறார்.

மிக நீண்ட விளக்கமாக அமையும் இந்தப் பகுதியில் சில விதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். முழுக் குறிப்புகளையும் மூல நூலில் படித்து அவற்றைப் பின்பற்றலாம்.

பின்பற்றினால் இக உலகில் நூறு ஆண்டுகள் வாழ்வதோடு மறு உலகில் மேலான நல்ல ஆத்மாக்களுக்கான உலகை அடைவதும் நிச்சயம் என்று உறுதி படக் கூறுகிறார் சரகர்:
நூறு ஆண்டு வாழ்வதற்கான வழிகளில் சில முக்கியமானவை மட்டும்:-

1) தெய்வங்கள், ;பசுக்கள், அந்தணர்கள்,குருமார்கள்,வயதிலே பெரியோர்,ஆன்ம ஞானம் அடைந்த ஞானிகள், பாடம் கற்பித்த உபாத்தியாயர் ஆகியோருக்கு மரியாதை தந்து வணங்க வேண்டும்.
2) அக்னிக்கு ஆகுதி தர வேண்டும்.
3) நல்ல மூலிகைகளை அணிய வேண்டும்.
4) கால்களையும், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களையும் அவ்வப்பொழுது சுத்தம் செய்தல் வேண்டும்.
5) உடலைச் சமச்சீரற்ற நிலையில் அங்கங்களை வளைத்து இருத்தல் கூடாது
6) ‘ஹம்’ என்ற ஒலியை எழுப்பக் கூடாது
7) தேவையற்ற சாகஸ செயல்களைச் செய்யக் கூடாது
இப்படி அறநெறிகளைக் கூறும் பட்டியல் போல நூற்றுக்கும் மேற்பட்ட நெறிகள் அடங்கிய பெரிய பட்டியலை சரகர் அளிக்கிறார்.

ஆயுள் என்பதன் விளக்கம்

ஆயுள் என்பதை விளக்கும் போது அவர் கூறுவது இது தான்:
சரீரேந்த்ரிய சத்வாத்ம சம்யோகம் தாரி ஜீவிதம் I
நித்யகச்சானுபந்தஸ்ச பர்யாயைராயுருச்யதே II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- ஆயுள் என்பது உடல்,இந்திரியங்கள்,மனம், ஆத்மா ஆகிய அனைத்தின் சேர்க்கையைக் குறிப்பதாகும். அதை தாரி (உடலானது அழிவதைத் தடுப்பதாகும்) என்றும், ஜீவிதா (உயிருடன் இருக்கச் செய்வது) என்றும், நித்யக (உயிர் இருப்பதற்கான ஆதாரம்) என்றும், அனுபந்த (உயிர் உடலை விட்டு மறு உடலுக்கு அல்லது ஒரு பிறப்பு விட்டு மறு பிறப்புக்குச் செல்வது) என்றும் கூறலாம்.

மகிழ்ச்சியுடன் நீண்ட நாள் வாழ்வதே மனித வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே சரக சம்ஹிதையின் சாரமாகும்!
நீண்ட ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ சரகரை வணங்கி அவர் காட்டிய வழியில் நடக்க வேண்டியது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

**************** முற்றும்

contact swami_48@yahoo.com
Pictures are used from different sites;thanks.

மனிதர்களே, உங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ளுங்கள்!

Caraka samhita

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2
ச.நாகராஜன்

மூன்று மூன்றாகக் கூறப்படும் ஏழு முக்கிய விஷயங்கள்
“ப்ராணைஷணா,தனைஷணா,பரலோகைஷணேதி” என்று மனிதர்களின் மூன்று ஆசைகளை நிர்ணயிக்கும் சரகர் ஏழு விஷயங்களை மூன்று மூன்றாக அழகாகத் தொகுத்துக் கூறுகிறார்.

வாழ்வின் மூன்று ஆதாரங்கள்:- உணவை உட்கொள்ளல், தூக்கம், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல்

மூன்று பலங்கள் :- உடலமைப்பு ரீதியிலான பலம், (பிறப்பிலிருந்தே இருக்கும் உடல் அமைப்பு மன அமைப்பு) தற்காலிகமான பலம். (ஆறு பருவங்களை ஒட்டியும் வயதுக்கேற்பவும் அமைவது), முயன்று ஏற்படுத்திக் கொள்ளும் பலம் (உணவு மற்றும் இதர அம்சங்களான ஓய்வு,உடல் பயிற்சி ஆகியவற்றால் பெறப்படுவது)

வியாதிக்கான மூன்று காரணங்கள்:- இந்திரியங்களை அதிகமாகப் பயன்படுத்தல் (உதாரணமாக கண் என்ற் இந்திரியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம் – ஒளியை அதிக நேரம் உற்றுப் பார்த்தல் போன்றவை), பயன்படுத்தாமலேயே இருத்தல் (எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண் படைத்த பயனை அடையாமல் இருத்தல் போன்றவை), தவறாகப் பயன்படுத்தல் (பயமுறுத்தும், ஆச்சரியமூட்டும், வெறுப்பைத் தரும், உருக்குலைக்கப்பட்டிருக்கும், எச்சரிக்கையைத் தரும் ஒன்றை மிக அருகிலோ அல்லது தூரத்திலிருந்தோ பார்த்தல் போன்றவை)

வியாதி வரும் மூன்று பாதைகள் :- ஷாகா ( வெளி அமைப்பினால் வருவது – தோல், இரத்தம் போன்றவற்றின் மூலம் வருவது) மர்மஸ்திசந்தயஹ ( பிரதான உறுப்புகள், மூட்டுகள், எலும்புகள் மூலம் வருவது – சிறு நீரகம், இதயம், தலை போன்றவை பிரதான உறுப்புகள்), கோஷ்தா (மைய மண்டலம் மூலம் வருவது – மஹாஸ்ரோதா எனப்படும் பெரும் வழி, சரீர மத்யா எனப்படும் உடலின் மையப் பகுதி, ஆமபக்வாஸய எனப்படும் வயிறு மற்றும் குடல் பகுதி)

மூன்று விதமான வைத்தியர்கள் : – போலி வைத்தியர்கள் (வைத்திய பெட்டி, மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் வைத்தியம் பற்றிய அறிவே இல்லாதவர்கள்), வைத்தியர் அல்லாதவர்கள் ((செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களின் தோழமையைக் கொண்டு வைத்தியர் போல நடிப்பவர்கள்), உண்மையான வைத்தியர்கள் ( நல்ல ஆழ்ந்த வைத்திய ஞானம் பெற்றவர்கள்)

மூன்று விதமான நிர்வாகங்கள் :- ஆன்மீக ரீதியிலான சிகிச்சை, (மந்திரங்களை ஜபிப்பது, ரத்தினக் கற்களை அணிவது, யந்திரங்கள் தாயத்துக்களைப் பயன்படுத்துவது, விரதங்களை அனுஷ்டிப்பது, தானம் செய்வது, உபவாசம், சாஸ்திரங்கள் கூறியவற்றின் படி நடப்பது போன்றவை ) உடலியலை ஆராய்ந்து தர்க்க ரீதியிலான சிகிச்சை (மருந்துகளை உட்கொள்வது போன்றவை), உளவியல் ரீதியிலான சிகிச்சை(மனதை பாதிக்கும் எதிலிருந்தும் மனதை விலக்கி ஆரோக்கியமாக இருப்பது)

மூன்று விதமான சிகிச்சை முறைகள் :- உடல் ரீதியிலான தோஷங்களுக்கு உள்ளுக்குள் மருந்து சாப்பிடுவது, உடலின் வெளிப் பாகங்களில் மருந்தைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சை
ஆக இப்படி சரகரின் விளக்கத்தைப் பார்த்தால் அவர் தொடாத துறைகளே ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இல்லை என்று ஆகிறது!

எட்டுப் பகுதிகளைக் கொண்ட சரக சம்ஹிதா
சரகரின் ‘சரக சம்ஹிதா’ எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) சூத்ர ஸ்தானம்: ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு வியாதிகள் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் இந்தப் பகுதியில் 30 அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது/
2) நிதான ஸ்தானம் : வியாதிகளைக் கண்டறியும் விதத்தை விளக்கும் இது எட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
3) விமான ஸ்தானம் : வியாதிகளை ஏற்படுத்தும் உடல் ரீதியிலான காரணங்களை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
4) சரீர ஸ்தானம் : உயிர் வாழும் அனைத்தின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
5) இந்த்ரிய ஸ்தானம் : நோய் தீர்வதற்கான முன்கணிப்பை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
6) சிகித்ஸா ஸ்தானம் : நோய்களுக்கான சிகிச்சைகளை விளக்கும் இது முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
7) கல்ப ஸ்தானம் : வாந்தி, பேதி, உள்ளிழுத்தல் சிகிச்சை ஆகியவற்றை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
8) சித்தி ஸ்தானம் : ஒவ்வாமை சிகிச்சைகளை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இந்த எட்டுப் பகுதிகளும் ஆயுர் வேதம் கூறும் எட்டு கிளைகளை நன்கு விளக்குகின்றன.
சரக சம்ஹிதாவில் சுமார் 8419 செய்யுள்களும் 1111 உரைநடைப் பகுதிகளும் அமைந்துள்ளன.

caraka books-003

மணி,மந்திர ஔஷதம்!
மருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக மந்திரங்களும் கூட கூறப்படுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியவற்றோடு நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க மந்திரம் சுகமான பிரசவத்திற்கு மந்திரம் என மந்திரங்களும் கூட நூலில் இடம் பெறுகின்றன.

சரகர் ஆங்காங்கு பயணப்பட்டுக் கொண்டே இருந்தவர் என்பதை விளக்கும் விதமாக நூலில் யவனம், சாகம், பாஞ்சாலம், அவந்தி,மலாயா ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
ஆரோக்கியம் மேம்படுவதற்கான அனைத்தையும் அதன் காரணங்களுடன் மிக விளக்கமாக எடுத்துக்கூறுவது சரகரின் தனிச் சிறப்பு.

உதாரணமாக பசும்பாலைப் பற்றி அவர் விவரிக்கையில் மன வளத்திற்கும் ஆற்றலுக்கும் பசும்பால் அதன் ஓஜஸ் சக்தியினால் மிகவும் பயனைத் தருகிறது என்று கூறுகிறார்.
பழங்கள், வேர்கள், மூலிகைகள் என அவர் தரும் பட்டியலும் காரணங்களோடு கூடிய விளக்கங்களும் அனைவரையும் பிரமிக்க வைப்பவை.
.
சின்ன உண்மை
உலகம் தற்செயலாகத் தோன்றவில்லை என்று அறுதி படக் கூறும் சரகர் மனிதர்களின் மூன்று ஆசைகளில் முக்கியமான ஆசையாக அவன் நீடித்த ஆயுளை அடைய வேண்டியது முக்கியம் (ப்ராணைஷனா) என வலியுறுத்துகிறார். கஸ்மாத்? ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால்!” என்று பதிலும் அளிக்கிறார்!

Contact:- swami_48@yahoo.com -தொடரும்

Part Two of Charaka Article.

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

Charak

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1

By ச.நாகராஜன்

ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர்

பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வரலாற்றைக் கொண்டவர் ஆயுர்வேத ஆசார்யர் சரகர். இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 என்பது சரகரின் தீர்மானமான எண்ணம். ஆகவே தான் 120 அத்தியாயங்களில் 120 வயது வரை எப்படி வாழலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதே போல பேலர், கஸ்யபர் சுஸ்ருதர் ஆகிய ஆயுர்வேத ஆசார்யர்களும் தங்கள் நூல்களை 120 அத்தியாயங்களாகப் பகுத்துள்ளதும் பாரதத்தின் புராதன மஹரிஷிகள் மனிதனுக்கு பூரண ஆயுர்தயா (பூரண ஆயுள்) 120 வருடங்கள் என நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

சரகரின் ‘சரக சம்ஹிதா’ முழு நூலாக இன்று நம்மிடையே கிடைத்துள்ளது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். அத்ரி மஹரிஷியின் மகனான புனர்வசு ஆத்ரேயரின் சிஷ்யராக சரகர் இருந்தார் என்பதும் ஆத்ரேயர் தனது சிஷ்யர்களான பேலர் அக்னிவேசர் ஜாதுகர்ணர் பராசர்ர், ஹரிதர் காஷிரபாணி ஆகியோருக்கு ஆயுர்வேதத்தைப் பயில்வித்தார் என்பதும் செவி வழிச் செய்திகள். இந்த சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைப் படைத்தனர். அவற்றுள் அக்னி வேசர் எழுதிய நூலே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லவே அதுவே பிரசித்தி பெற்ற நூலானது. இதை சரகர் செம்மைப் படுத்தினார். ஆகவே சரக சம்ஹிதை என்ற பெயரைப் பெற்றது.

சரகர் கனிஷ்கர் காலத்தவரா?

சரகரின் காலம் சரியாக நிர்ணயிக்கப்பட முடியவில்லை. ஆனால் புராதன சீன ஏடுகளின் மூலம் சரகர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு புத்த துறவிகள் கி.பி. 472இல் ஒரு சம்ஸ்கிருத நூலை மொழிபெயர்த்தனர்.அதன் பெயர் சம்யுக்த ரத்ன பீடக சூத்ரா. சம்ஸ்கிருத மூலச் சுவடிகள் தொலைந்து போயின. ஆனால் மொழிபெயர்ப்பு நூல் மட்டும் கிடைத்துள்ளது. புத்தமத சரித்திரத்தைச் சொல்லும் இந்த நூலில் உள்ள கதைகளில் 16வது கதையில் ஏழாவது அத்தியாயத்தில் பிரசித்தி பெற்ற அரசனான தேவபுத்ர கனிஷ்கரின் பெயர் இடம் பெறுகிறது.கனிஷ்கரின் மிக நெருங்கிய நண்பர்கள் மூவர். அஸ்வகோஷர் போதிசத்வர்,பிரதம மந்திரி மாதரர் மற்றும் சரகர். இவர்கள் மூவரும் இணைபிரியாமல் மன்னருடனேயே இருப்பார்கள். ஆக கனிஷ்கர் காலத்தில் சரகர் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

சரகர் என்றால் சுற்றுபவர் என்று பொருள்

சரகர் என்றால் சுற்றிக் கொண்டிருப்பவர் என்று பொருள். ஆகவே இவர் இடம் விட்டு இடம் பயணப்பட்டுக் கொண்டே இருந்து பரந்த அனுபவத்தைப் பெற்றவர் என்றாகிறது.

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும், நீடித்த பூரண ஆயுளுக்கு ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும், எது பூரண உணவு, பஞ்ச மஹா பூதங்களும் அதனால் நமக்கு ஏற்படும் பலாபலன்களும் என்னென்ன,மூன்று தோஷங்களான வாத, கப, பித்தம் என்றால் என்ன, மூலிகைகள் யாவை அதனால் ஏற்படும் பயன்கள் யாவை, மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும், ஒரு வியாதியை எப்படி குணமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களையும் மனித உடல் பற்றிய அரிய ரகசியங்களையும் சரக சம்ஹிதை நன்கு விளக்குகிறது.

சரகரின் மூன்று ஆசைகள்

சரகர் மூன்று ஆசைகளை வெளியிடுகிறார் : 1) வாழ்வதற்கான உறுதி, 2) வளம் பெறுவதற்கான ஊக்கம், 3) இந்த உலகை விட மேம்பட்ட ஒன்று ஆகியவற்றை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே அவரது ஆசை.

எதையும் மூன்று மூன்றாகச் சொல்வது அவர் பாணி. நன்கு எளிதாக நினைவில் இருத்திக் கொள்வதற்காக இந்த மூன்று மூன்றாகச் சொல்லும் சூத்திர பாணியை அவர் கையாண்டாரோ என்று எண்ணம் சரக சம்ஹிதையைப் படிக்கும் அனைவருக்கும் தோன்றும்.

சின்ன உண்மை
கருவிலிருக்கும் ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் துல்லியமாக நிர்ணயிக்கும் விதத்தை சரகர் தெளிவாக விளக்கியுள்ளார்!
-தொடரும்
Published in September 2013 issue of Healthcare monthly (Tamil magazine).

CONTACT:- swami_48@yahoo.com

Look 15 years Younger through Face Yoga!

face yoga2

Face yoga is becoming popular in the western world. It will remove the wrinkles in our face.
Our face has 57 muscles. If you exercise properly, you will look 15 years younger, say Yoga specialists.
First Prime Minister of India Jawaharlal Nehru woke up at 4 AM every day and did Siras Asanam (standing upside down). He looked very young even when he was 70 years old.

How to do Face Yoga?

In simple words, it is pulling funny faces!

British Yoga instructor Danielle Collins has mastered it. Whoever exercises regularly will get a glow in their faces and look younger, she says.

These are exercise for neck and face muscles. It will remove toxins, puffiness and dark circles from face and neck.

Blowing loud kisses looking at the ceiling, massaging, making Owl with fingers and eyes, pressing certain points, pulling cheek muscles etc are part of the exercise. Famous stars have joined this face yoga course. A DVD is also sold for home use in Britain.
****
New Face Yoga

In Tamil

இளமை, இளமை, இதோ! முகத்தில் முகம் பார்க்கலாம்!

மேலை நாடுகளில் முக வசீகர யோகா பிரபலமாகிவருகிறது. இதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றன. 15 வருஷம் இளமையாகத் தோன்றலாம்!! நமது முகத்தில் 57 தசைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் கழுத்துக்கும் முறையான பயிற்சி கொடுத்தால் இளமை திரும்பிவிடும்.
பாரத நாட்டின் முதல் பிரமர் ஜவஹர்லால் நேரு தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து சிரசாசனம் செய்ததை நாம் எல்லோரும் அறிவோம். இது அவருக்கு 70 வயதிலும் இளமைப் பொலிவைக் கொடுத்தது.

முகத்தால், கேலி செய்ய வலிப்பது போல, பல வேடிக்கைகளைச் செய்யவேண்டும் .ஆனால் அதை முறையாகச் செய்யவேண்டும். இதற்கு டேனியல் காலின்ஸ் என்ற பிரிட்டிஷ் யோகா ஆசிரியை ஒரு முறையை வகுத்துள்ளார். முகத்தை மசாஜ் செய்தல், கன்னத்தின் சதைகளை இழுத்தல், அனுமார் மாதிரி வாயை வைத்துக் கொள்ளல், வானத்தை நோக்கி முத்தம் கொடுத்தல், ஆந்தை போல கண்களை வைத்துக் கொண்டு கை விரல்களால் கண் காட்டுதல், முகத்தில் சில இடங்களை அமுக்குதல்—இப்படிப் பல ‘போஸ்’கள் உண்டு.
face yoga3

பிரிட்டனில் உள்ள பிரபல நடிகர், நடிகைகள், முக்கியப் புள்ளீகளீன் மனைவிமார்கள் ஆகியோர் இந்த முக யோகா செய்து இளமையை மீண்டும் பெறும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நாமும் நலம் தரும் ஆசனங்களைச் செய்யலாமே.

டானியல் வெளியிட்ட ‘டிவிடி’-யும் விற்பனை ஆகிறது. இந்தியாவில் கற்ற யோகா, ஆசனங்களை அவர்கள் புதிய முறையில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த முறையான பயிற்சியினால் கழுத்தில் உள்ள வலையங்கள் மறையும், முகத்திலுள்ள சுருக்கங்கள் பறந்துவிடும்,. தொய்ந்து போன சதைகள் பொலிவு பெறும் ,முகத்தில் தேஜஸ் பெருகும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது!!

Compiled from London Newsppaers by London Swaminathan; contact swami_48@yahoo.com

face yoga1

Yoga Teacher Eating Vegetables for 7 years!

usan-Reynolds
Where? Edinburg, Scotland, United Kingdom.

Who? Susan Reynolds, age 29 years.

What? Eating only raw (uncooked) vegetables, drinking cold vegetable juice for 7 years!

Why? I went to India when I was 21. After seeing India everything changed.

How? Yoga teacher Susan eats uncooked fruits, vegetables, grains, seeds, nuts, beans and cold soup made from spinach, herbs and an entire lettuce.

When? October 2013 Press News

(Hindu Yogis (ascetics) survived on such foods for scores of years. Ancient Sanskrit and Tamil literature describes the food taken by Hindu Sanyasins. They ate only vegetables, fruits, honey, milk, grains flours, herbs and nuts. Now a white woman shows us the way!)
Compiled by London Swaminathan

susan 2

Now in Tamil……………………………..

இந்தியா வந்த வெள்ளைக்காரியின் மனமாற்றம்!

எங்கே? எடின்பர்க்,ஸ்காட்லாண்ட், கிரேட் பிரிட்டன்.

யார்? சூசன் ரேனால்ட்ஸ், வயது 29.

என்ன? ஏழு ஆண்டுகளாக வெறும் காய்கறி உணவு; அதுவும் சமைக்காத உணவு.

ஏன்? 21 வயதானபோது இந்தியாவுக்குப் போனேன். அங்கே இருந்தவற்றைப் பார்த்தவுடன் மனம் மாறி யோகா, சைவ உணவில் இறங்கிவிட்டேன் என்கிறார் Susan Reynolds!.

எப்படி? தினமும் பச்சைக் காய்கறிகள், கிழங்கு, கனி வகைகள், பருப்பு, கீரைச் ச்சாறு, மூலிகைகள் இதுதான் அவரது உணவு!

எப்பொழுது? அக்டோபர் 2013 பத்திரிகைச் செய்தி.

susan 3

“கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்ற சினிமாப் பாட்டுதான் நினைவுக்கு வரும். கல்யாண சமையல் சாதம் என்பதை மட்டும் “கல்யாண கனிவகை ரசங்கள், காய்கறிகளும் பிரமாதம்” என்று மாற்றிக்கொள்ள வேண்டும். பூர்வ ஜன்மத்தில் இந்து யோகியாகப் பிறந்த “விட்ட குறை தொட்ட குறை” என்றே சொல்லத் தோன்றுகிறது. பழந் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் யோகிகளின் உணவில், தேன், தினை மாவு, கனி வகைகள், கிழங்கு, மூலிகைகள், பால் முதலிய உணவுப் பட்டியல் என்றே வருகின்றது!!!
contact swami_48@yahoo.com for 660 research articles.

லண்டன் பத்திரிகைச் செய்தியை மொழிபெயர்த்தவர்: லண்டன் சாமிநாதன்

Hydro Therapy in Hindu Scriptures

B_Id_406814_kawadiyan-walking

Picture of devotees collecting Ganga water at Haridwar.

*Learning music standing in neck deep water
*Reciting Rudram standing in waist deep water
*Water Hymns in Vedas (Atharva Veda)
*Homeopathy principle (Likeness cures likes)
*Water Fall Bath (bathing in waterfalls helps mental patients)
*Tank Bath ( Temple tanks are attributed with medicinal properties)
*Ganges water (medicinal properties of Ganges water)
*Tulsi water from copper pot (Copper kills bacteria)
*Water for cursing (water becomes magical weapons during cursing)
*Water for wedding ( a girl is donated to a boy with water=Kanya Dhanam)
*Water for donating ( Kings and Lords used water to donate countries, lands and gold with water)
*Brahmins do Sandhya Vandhanam three times day with water.
*Indra Festival was celebrated as Water Festival.
*Over 250 words for water in Sanskrit
*Ancient Engineers Bhageeratha and Agastya channelized Ganga and Kaveri through new routes.

“May the deity of water purify the earth which is its foundation and that purified earth may purify me and the preceptor who is the channel for Vedas. May that Veda sanctify me. May the deity of water purify me of sins committed by me…………” ( From daily prayer of the Brahmins)

Hydro therapy is water therapy, that is, using water as medicine. Since religion plays a major part in Hindu’s life even the medicines are attributed with divine powers. Going to different water sources such as rivers, sea shores, tanks, lakes and waterfalls is part of Hindu pilgrimage. The largest festival on earth – Kumbha Mela – is held in Prayag or Triveni Sangam (also known as Allahabad). This shows the significance of water, particularly Ganges water, in Hinduism. In Sangam three rivers Ganga, Yamiuna and legendary Sarasvati merge. Hindus believe water can wash away all their sins. Water used in different ways cures diseases. Merit of pilgrimage is in the oldest Hindu epics Ramayana and Mahabharata. Vedas, particularly, Atharva Veda has Hymns on water. Vedic seers praise water sky high. Tamil poet Tiruvalluvar has a chapter on water.

Hindu ceremonies, from birth to death, use water. I have written elsewhere that this is the biggest proof for Indians migrating to different parts of the world and not vice verse. No other culture in the world use water like Hindus. That shows that they have not come from colder areas like Cenrtral Asia or Siberia. Religious Hindus cannot live without water.

Water is sued for cursing. I have written about it in my article on curses and boons. Water becomes atomic weapons with the incantation of mantras. Whether it is giving a girl to a boy in a wedding ceremony or giving land donations to Brahmins, it is done with water. Without water nothing can be consecrated. Sangam Tamil Literature praises a donor for donating a lot of things and says water ran like river from his place.
I have already explained in my article ‘copper kills bacteria’ that the reason for giving water from the copper vessel in the temples. They give water with Tulsi from copper vessels. British hospitals used copper handles in doors and proved that copper killed bacteria (Please read my earlier post).

sandhya

avani avittam,youth

Picture of Brahmins doing Sandhyavandhanam

I have also shown in my post ‘Why Hindus practise Homeopathy’, the significance of Achamanam and Prokshnam. Wherever Hindus go on pilgrimage they would not step in to a tank or river or a well without sipping water in small quantities three times (Achamanam). Then they will sprinkle water on their head (Prokshanam). Afterwards they will use the water for bathing, drinking and cooking. This gives them immunity from that particular water source. This is the principle behind Homeopathy. Likeness cures like (Similia similibus curentur- likes are cured by likes). If you take anything in small quantity, even the germs that normally affect oneself, won’t do any harm to one.

I have already shown the medicinal properties of Ganges water in three or four articles. Now I can add more from the Vedic practices. Rudram is part of Yajur Veda. Vedic scholars are asked to recite it standing in the water, half submerged.

Musicians are asked to learn music standing in river water. They have to stand in neck deep water and practise to get good voice.

Mentally sick patients are taken to waterfalls and asked to bathe under the falls. Water pressure from the falls increases blood circulation. Medicinal herbs in the waters also help anyone to get good health through the mineral water.

Water is given to devotees at the end of each Puja as Prasad.

rain at CBE, fb

Picture of Rain

Hymns in the Vedas

nadhikarai dhyanam

Picture Shankaracharyas meditation on the banks of a river.

Prayer for purging snake poison (Atharva Veda ,Kanda 6)
“ I sprinkle you with waters of rivers and mountains. I sprinkle you with waters of rivers Parushni and Shipala. May peace descend on your face. May peace descend on your heart”.

From Atharva Veda, Kanda 19
“May the water that flows down from the snow clad mountains bring you happiness. May the water that flows in the rivers bring you happiness. May the swift flowing streams bring you happiness. May the water of the monsoon bring you happiness.

“ There are those who know how to use water in the treatment of ailments. Such people are learned and to them water is a source of power.

(Those who read Hindu scriptures know the significance of these words. Millions will wait to get the sprinkled water on their heads in Temple consecration ceremonies. All the stories of curses and boons explain the usage of water from the pots of seers)

“ Water is the object that guarantees our welfare. Water banishes all our ailments. Water increases our happiness. May water cure all your diseases. Acknowledge the power of water”
There are more hymns in the Vedas glorifying the waters and rivers. We need to do more research in to these hymns.

Please read my earlier posts:

1)Indra Festival in the Vedas and Tamil epics 2)280 Sanskrit Words for Water 3)Do Words have Power? A Study of Boons and Curses 4) Why do Hindus practise Homeopathy? 5)Rain Miracles: Rain by Fire and Music 6) Ganges in Kalidas and Sangam Tamil Works 7) Hindu Wisdom: Copper kills Bacteria 8)G for Ganga, Gayatri, Gita ,Govinda 9) Hindu Runners 10) Great Engineers of Ancient India

Contact swami_48@yahoo.com