FOLLOWING TWO ANECDOTES ARE TAKEN FROM 1884 BOOK OF ANECDOTES. GUTENBERG REJECTED ANGEL’S COMMAND TO DESTROY THE PRINTING MACHINE. JUST TO CONVINCE THE ANGEL, HE PRINTED PART OF BIBLE.
LONELY CHILDREN BECOME MAD IN EUROPE; IN AMERICA, TOO MUCH STUDY MADE THEM MAD. IT IS ABOUT 19TH CENTURY WORLD.
ஏன் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள் அல்லது பருமனாக இருக்கிறீர்கள், காரணம் தெரியுமா?
உங்களின் ஜீரண மண்டல உள் குழாயில் (inner tube) ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது, அதனால் தான் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள், பருமனாக ஆகி விடுகிறீர்கள்!
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக் கூட நீங்கள் உணராமலேயே இருக்கலாம். ஆனால் உடல் பருமன் அல்லது சில ஆரோக்கியப் பிரச்சினைகள் என உங்களுக்கு ஏற்பட்டால் அது உங்கள் உள் குழாய் சரியில்லை, அதுவே அடிப்ப்டைக் காரணம் என்பதாக இருக்கலாம் அதாவது உங்கள் ஜீரண அமைப்பு சரியில்லை என்பதே காரணம். ஏதோ ஒரு ஜீரணக் கோளாறு – இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome), வயிற்று உப்புசம், மலச்சிக்கல், டயரியா, மார்பு எரிச்சல், வாயுக் கோளாறு, reflux எனப்படும் பின்னொழுக்கு, இன்னும் சொல்ல முடியாத சில பிரச்சினைகள் போன்றவற்றுள் ஒன்றால் நீங்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி பேர்கள் ஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் அதிக விற்பனையாகும் ‘டாப் டென்’ மருந்துகளில் இரண்டு ஜீரணக் கோளாறைப் போக்குவதற்கான மருந்துகளே ஆகும். பற்பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றை மக்கள் வாங்குகிறார்கள்! சுமார் 200 மருந்துகள் ஜீரணக் கோளாறைப் போக்க விற்பனையாகின்றன; ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவற்றில் பலவற்றைச் சாப்பிடுவதால் கோளாறு அதிகமாகிறதே தவிர நிவாரணம் கிடைப்பதில்லை! குடல் கோளாறுகளுக்காக மக்கள், மருத்துவர்களை நாடுவது மிகவும் அதிகமாகி வருகிறது.
ஜீரணக் கோளாறுகள் ஒவ்வாமையை உருவாக்குகிறது, மூட்டுவாதத்தை ஏற்படுத்துகிறது, auto immune disease எனப்படும் தன் எதிர்ப்பு நோயை உருவாக்குகிறது, நிலை தடுமாற்றம், கான்ஸர், தொடர்ந்து இருக்கும் சோர்வு, உடம்பில் தடிப்புகள், முகப்பருக்கள் என இப்படி உடலில் பல வியாதிகளை இது ஏற்படுத்துகிறது. ஆகவே ஜீரண அமைப்பானது உங்கள் உடலில் ஏற்படும் அனைத்துடனும் தொடர்பு கொண்ட ஒன்று.
இப்போது நாம் குடல் நாளத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை எப்படி அறிவது என்று பார்க்கலாம். நல்ல உடல் நலத்தை உறுதி செய்ய உள்ள முக்கியமான ஏழு காரணங்களில் ஜீரணம் என்பது நான்காவது முக்கியமான காரணம் ஆகும்.
Intestinal Health அல்லது குடல்நாள ஆரோக்யம் என்பது சீரான ஜீரணம், உட்கொள்ளுதல், தன்மயமாக்கல் என வரையறுக்கப்படுகிறது.
முதலாவதாக, மழைக்காடுகளில் உள்ளச் சுற்றுப்புறச் சூழலில் பல்வேறுபட்ட ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாக பல அமைப்புகள் உள்ளன. அதே போல குடல் நாளத்தில் 500 உயிரினங்களும் 3 பவுண்டு பாடீரியாவும் உள்ளன. குடல் நாளம் ஒரு பெரிய கெமிக்கல் ஃபாக்டரியாக இயங்கி நீங்கள் சாப்பிட்ட உணவுப் பொருள்களை ஜீரணிக்க வைத்து, ஹார்மோன்களைச் சீராக்கி, விஷப்பொருளளைப் பிரித்தெடுத்து, விடமின்களையும் இதர முக்கிய உடல்நலத்தைப் பேணிக்காக்கும் கூட்டுபொருள்களையும் உருவாக்கி உங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த நட்பான பாக்டீரியாக்கள் சீராக இருப்பது அவசியமாகிறது. ஒட்டுண்ணிகளும், நுரைமங்களும் (Parasites and yeasts) போன்ற தப்பான பாக்டீரியாக்கள் நல்லவை அல்ல.
ஒரு முக்கியமான விஷயம், குடல் நாள் ஆரோக்கியம் என்பது உடல் நல ஆரோக்கியம் என்பதாகும். எக்ஸிமா, சொரியாஸிஸ், மூட்டுவாதம் போன்றவைக்கும் ஜீரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அவை ஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகின்றன.
இரண்டாவதாக குடல்நாளத்தில் நோய் எதிர்ப்பு (Gut immune system) அமைப்பு உள்ளது. உங்களின் முழு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் குடல் நாளத்தால் பாதுகாக்கப்படும் ஒன்றாகும். குடல் நாளத்தில் ஒரே ஒரு செல்லின் கனமே (One cell-thick layer) விஷப்பொருள்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இந்த எல்லை பாதிக்கப்பட்டால் சாதாரணமாக ஜீரணமாகும் பொருள்களே ஒவ்வாமைப் பொருள்களாக மாறி உங்களை நோய்வாய்ப்படுத்தும். கெட்ட மாலிக்யூல்களை அகற்றி நல்லனவற்றை வடிகட்டி எடுத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பது குடல் நாளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத ஒன்றாகும்.
மூன்றாவதாக இரண்டாவது மூளை எனப்படும் குடல் நாள நரம்பு மண்டல அமைப்பானது மூளையில் உள்ள ந்யூரோ டிரான்ஸ்மிட்டர்களை விட அதிகமான அளவு அதைக் கொண்டுள்ளது என்பது வியப்பூட்டும் ஒரு செய்தி. உண்மையில் குடல் நாளம் தனக்கெனவே ஒரு மூளையைக் கொண்டுள்ளது. அதை “enteric nervous system” என்று அழைக்கின்றனர். அது உடலியலில் மூளையுடன் நுண்ணியமான வழிகளில் தொடர்பைக் கொண்டுள்ள ஒரு அதி நவீன அமைப்பாகும்.
குடல் நாள மூளைக்கும் தலையில் உள்ள மூளைக்கும் தகவல்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டு வருகின்றன. அந்தத் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு நேரிடும்.
நான்காவதாக, வளர்சிதை மாற்றத்தினால் துணைப் பொருள்களாக உருவாக்கப்படும் விஷங்களை உங்கள் குடல் நாளம் அகற்ற வேண்டும். அவற்றை கல்லீரல் பித்தப்பையில் தள்ளுகிறது. மலச்சிக்கல் ஏற்படும் போது உங்கள் உடலில் விஷங்கள் பாதிப்பு ஏற்பட அதனால் நோய் உருவாகிறது.
இறுதியாக உங்கள் குடல் நாளமானது நீங்கள் உட்கொண்ட உணவை சிறு துகள்களாக ஆக்கி அதில் உள்ள விடமின்கள், தாதுப் பொருள்கள் ஆகியவற்றை ஒரு திசு கனமுள்ள அடுக்கில் அனுப்பி, அதை இரத்த ஓட்டத்தில் சேர்த்து உங்கள் உடலையும் மூளையையும் சத்துள்ளதாக ஆக்க வேண்டும்.
உங்கள் குடல் நாளம் நிறைய விஷயங்களை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கச்சிதமான உலகில் கூட அனைத்தையும் சீராக வைப்பது என்பது கடினமான காரியமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த அதி நவீன உலகில் ஜீரண அமைப்பை சீராக வைத்துக் கொள்வது என்பது இன்னும் அதிக கஷ்டமான காரியம். ஏனெனில் ஜீரண அமைப்பை அதல பாதாளத்தில் தள்ளி விடும் அளவில் ஏராளமான சிக்கல்களை நவீன உலகம் ஏற்படுத்துகிறது!
உங்கள் குடல் நாளம் சீராக இல்லை என்பதை எப்படி உணர்வது?
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர். அதில் ஏப்ரல் 19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!
ச.நாகராஜன்
நாள் ஒன்றுக்கு மூன்றே மூன்று பேரீச்சம்பழங்கள்
ஒரு நாளைக்கு மூன்று பேரீச்சம்பழங்கள் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்பட்டு விடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறது!
ஜீரண அமைப்பில் நாம் சாப்பிடும் உணவு சரியாகச் செல்வதை உறுதி செய்வதோடு பேரீச்சம்பழங்கள் குடல்நாளம் (Gut) நன்கு இயங்குவதையும் உறுதி செய்கிறது. அத்துடன் அவை சரியாக இயங்குவதால் பெருங்குடலில் (colon) கேன்ஸர் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
அமெரிக்க உணவு மற்றும் சத்துணவு விஞ்ஞானப் பிரிவு (Department of Food and Nutritional Sciences)சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவோரின் குடல் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுவதைத் தெரிவித்துள்ளது. பெருங்குடலில் கேன்ஸர் வருவதற்கான திசுக்களை உருவாகவிடாமல் செய்ய நல்ல பாக்டீரியாக்கள் அங்கு சேர்கின்றன.
உடனடி சக்தி சேரும் அது நீடித்தும் இருக்கும்
அடுத்து பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்புச் சத்து, குளுகோஸ், ப்ரக்டோஸ், சக்ரோஸ் (Sugars, Glucose, Fructose and Surcose) ஆகியவை உடனடியாக சக்தியைத் தருகிறது. அத்துடன் சக்தியைத் தருவதாக விளம்பரங்கள் கூறும் குளிர்பானங்கள் அல்லது எனர்ஜி பார் போலல்லாமல் பேரீச்சம்பழங்களில் உள்ள பைபர் சத்து, பொட்டாசியம், மக்னீஷியம் விடமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளிட்டவை உங்கள் சக்தியை அப்படியே நீடித்து நிலை நிறுத்துவதோடு, ஏனையவை போல் திடீரெனக் குறைந்து உங்களைச் சோர்வடையச் செய்யாது.
மலச்சிக்கல் பிரச்சினை தீரும்
உங்கள் ஜீரண அமைப்பில் சாப்பிட்ட உணவுகள் மெதுவாக அழகாக சீராகச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை அடைய பேரீச்சம்பழங்கள் உதவும். ஒரு கப் பேரீச்சம்பழங்களில் 12 கிராம் பைபர் உள்ளது. இது நீங்கள் அன்றாடம் எடுக்க வேண்டிய பைபரில் 48 சதவிகிதம் ஆகும்.
சரியான பைபரை சரியானபடி சாப்பிட்டாலேயே மலச்சிக்கல் வராது; சரியானபடி மலம் வெளியே போக உதவும் இயக்கங்கள் சீராகும். இதைச் செய்ய உதவுவது பேரீச்சம்பழங்களே. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பிரசுரித்துள்ள ஆய்வறிக்கை ஒன்று ஒரு நாளைக்கு 7 பேரீச்சம்பழங்கள் வீதம் 21 நாட்கள் யார் ஒருவர் சாப்பிடுகிறரோ அவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவதே இல்லை என்றும் மலம் போவது சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
மூளை செயல்திறன் கூடும்; மனச்சோர்வு ஏற்படாது!
பேரீச்சம்பழங்களில் விடமின் பி6 (Vitamin B6) இருப்பதால் செரொடோனின் மற்றும் நோரிபினப்ரைன் (erotonin and norepinephrine) ஆகியவை உடலில் உருவாகி மூளையின் செயல்திறன் கூடுகிறது. செரோடோனின் மூட் எனப்படும் மனநிலையைச் சீராக வைக்கிறது. நோரிபினப்ரைன் மன அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஆய்வுகள் விடமின் பி 6 குறைவாக இருந்தாலோ மனச்சோர்வு ஏற்படும் என்று தெரிவிக்கின்றன. ஆகவே உங்கள் மன அழுத்தம் சீராக இருந்து உங்கள் ‘மூடும்’ சரியாக இருக்கும் போது மூளை கூர்மையாக இயங்குகிறது. தகவல்களை நன்கு உள்வாங்கிச் சேர்த்து வைத்துக் கொள்கிறது.
ஆசனவாய் வீக்கம் வராது
ஹெமொராய்ட்ஸ் (Hemorrhoids) என்பவை ஆசனவாயிலும் குதத்திலும் உள்ள நரம்புகளாகும். மலச்சிக்கலால் இவை வீக்கமடைந்து வீங்கி இருக்கும். மலச்சிக்கல் இங்கு அழுத்தத்தைத் தர ஜீரண மண்டலத்தின் கோடியில் உள்ள பகுதியில் கூட இந்த அழுத்தம் ஏற்படும். இது வலியைத் தரும் ஒரு நிலை. இதை நல்ல உணவுப் பழக்கத்தால் மாற்றி மலச்சிக்கல் ஏற்படுவதையே தடுத்து விடலாம்.
பல டாக்டர்களும் பைபர் அதிகம் இருக்கும்படியான உணவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம்பழங்கள் உங்கள் ஹெமொராய்ட்ஸ் வீக்கத்தை ( அது இருப்பின்) சரி செய்து விடும்.
மனம் உடைந்து விட்ட நிலையில் அதைப் போக்கும்; உற்சாகம் தரும்!
மனம் உடைந்து விட்ட நிலையில் உதவிக்கு வருவது பேரீச்சம்பழங்கள் தாம்.ஆம், இது உண்மை! இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குருதிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. வயதான பெண்மணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக பொட்டாசியமானது ஸ்ட்ரோக்கைக் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூளை நரம்புகள் சுருங்குவதால் ஏற்படும் ischemic Stroke ஐயும் தடுக்கிறது.
நலம் தரும் பேரீச்சம்ழங்களை உண்ணுங்கள்!
ஆகவே அதிகம் விலை இல்லாத, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய நல்ல பேரீச்சம்பழங்களை வாங்கி உண்ணுங்கள். அபாயகரமான வியாதிகள் வருவதைத் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
24 Apr 2019 – மருத்துவத்தில் எண் மூன்று
(Post No.6303). Written by London swaminathan swami_48@yahoo. … This is
a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …
2 days ago – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)In “அறிவியல்”. தமிழ் …
கடுக்காய்
சாப்பிடு; மோர்
குடி–மருத்துவத்தில்எண் 4- Part 1(Post No.6377). Written by
London swaminathan. swami_48@yahoo.com. Date: 12 May 2019. British Summer Time
uploaded in London …