சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசிய தொடர்பு

Sahasralinga in Kanataka

(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).

இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.

கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து  17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.

இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.

இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.

கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.

Kbal Spean in Cambodia

கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.

சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.

கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.

கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.

வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்

வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.

இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.

ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.

 

ஆயிரம் ஏன்?

யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.

************

 

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).

இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.

இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.

அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).

 

******************

 

Sanskrit Inscription and Magic Square on Tortoise!!

Picture taken by Dr C Alyilmaz in  Mongolia (Bugut Inscription)

Hindu Gods are associated with all the important birds and animals. They are associated with insects and reptiles as well. Take any animal whether it is elephant or rhino, snake or scorpion, fish or crocodile, eagle or crow, boar or tortoise —they are all associated with Hindu gods. We see it in the Vedas, in the Indus valley civilization and in the temple Vahanas. But when we read that even the Chinese, Mongolians and other cultures believed in such things we raise our brows. When we see Sanskrit inscription on a tortoise statue,that too in the remotest part of the world, we are wonder struck!!

Kurmavatar, the Tortoise incarnation of Vishnu is the oldest tortoise we know. But we have even Rishis (seers) in the name of frogm(manduka)owl (Uluka) and tortoise (Kasyapa)in Vedic literature. Kasyapa is one of the Vedic Rishis. Kasyapa means tortoise. Kashmir is named after Kasyapa Rishi. Kumaon hills in the Himalayas is named after Kurma Avatar. If you read the history of Kashmir and Kumaon in Uttaranchal state you will find more surprising things. We have Kurmavatar statues in Kahajuraho Lakshman temple (M.P) and Osiyan temple in Rajasthan. One exclusive temple for Kurmavatar is near Srikakulam in Andhra Pradesh .

Three thousand years ago a Chinese king found a turtle with a magic square on its back. The magic square will add up to number fifteen whichever way you add the numbers. From that day it was considered a lucky square and people believe that they will get money etc. It is called Lo Shu. Hindus also believe this as money making square and call it Kubera Kolam. Egyptians and Hindus used the magic squares. Even the Vedic mathematics has magic squares.

Tortoise statues with stone tablet son their backs is a common sight in South East Asian and the Far Eastern countries. Nowadays they are used in mausoleums as memorial stones. But in olden days they were used as inscription tablets. The oldest Tortoise tablet has a Sanskrit inscription on its back along with other languages. It is dated around 500 AD. It is a wonder that this Sanskrit inscription was found in the remotest part of the world. Mongolia is a land locked country and even during the modern era the country is difficult to access. This country was known to the only because of its ruler ruthless Genghis Khan( 1162-1227 AD).

The tortoise tablet with Sanskrit inscription is known as Bugut inscription. It is an old Turkic inscription. It is found in Bugut mountain in Mongolia. The tablet on the back of the tortoise has Sogdian letters on three sides and Sanskrit letters on the fourth side. It is in Brahmi characters. The text contains an order to build a monument for king Mahan Tigin. But the inscription did not stop there. It throws lot of light on the Turkic beliefs, values and relations with others. It was dated 572 -580 AD. It is two and a half meter tall and it is preserved in Cecerleg Museum in Mongolia.

Sanskrit inscriptions are available throughout Asia from the remotest Mongolian mountains to tropical forests of Borneo. We see thousands of inscriptions in high literary style from 150 AD. Thousands of them were written in verses. This strengthens the belief that they were writing Sanskrit even earlier but on palm leaves and birch leaves. Another fact is that it was understood by everyone from Mongolia to Indonesia.

The Bugut inscription has beliefs similar to India. It considers the king as a representative of God on earth. Kings are called savers of the world. Kings lay their faith in God and thank him for everything. This is typical Indian.

BIXI

Picture: Kurmavatar in Bangkok (Thailand ) airport

In South East Asia and China they call these tortoise stone tablets Bixi. The Chinese word means strong or capable of withstanding any weight. It is similar to Kurmavatar tortoise. When Devas and Asuras churned the ocean to get Amrita (ambrosia) they used Mandara Mountain as the churning rod and the snake Vasuki as rope. But the mountain was not stable and started going to the bottom of the sea. Then Vishnu incarnated himself as a tortoise and held the mountain stable. So the idea of tortoise as a strong stabilising or fixing factor went from India to different parts of the world. We can safely conclude that Kurmavatar (Tortoise Incarnation of Vishnu) is the basis for all tortoise stories in the world. The idea migrated to China and South East Asia through the Buddhist monks.

Please read my posts: 1. Old Sanskrit Inscriptions in Mosques and on Coins 2. Ancient Sanskrit Inscriptions in Strange Places 3. The Tortoise Mystery: Can we live for 300 years? (contact swami_48@yahoo.com)

Rs1000 Crore Indian Gem Wonder

A gem studded globe of an Indian king is in Iran. The National Museum in Tehran has many Indian gem wonders. One of them is The Peacock Throne. The other one is a globe made of diamonds, emeralds, rubies and sapphires. 51,000 gem stones, mostly emeralds, are on the globe. The diameter of the globe is 18 inches and it is 44 inches tall. 35 kilo gold was used to make it. Emeralds are used to show the seas and rubies and spinels were used to show the land areas.

When the National Geographic Magazine published an article with a picture of the globe in 1990s it was valued Rs. 300 crores. Now it is valued above Rs.1000 crores or Rs 10,000 million!!

Persian king Nader Shah invaded India in 1739 just for gold and gems like Alexander and Mohmed of Gazni. He took lot of invaluable jewellery items to Persia (modern Iran). But it is believed that the Peacock Throne of Mogul emperor Shahjahan was broken into parts and shared by the commanders of his army. But there are different thrones in Tehran (capital city of Iran) museum taken from India. These are displayed items and there are many more items not displayed. The King of Iran who ruled before Khomeini’s Islamic revolution took lot of items with him when he left the country.

Peacock throne of Shajahan

But the original peacock throne was more valuable than this. It was made up of over 1100 kilo gold and 250 kilo gem stones. But the Peacock Throne in Tehran Museum is not the original one. Even the famous Kohinoor diamond was part of the throne. Two Peacocks made up of gems decorated the top of the throne. French traveller Jean Baptist Taveriner was an expert in jewellery. He had given full details in his report.

Iranian Crown jewellery is the largest royal collection in the world. The most important items were from India. Several crowns, golden thrones and chains are in the vault of Central bank of Tehran.

Persian King Nadir Shah invaded when a weak Mogul king Mohamed Shah was ruling Delhi. A rumour was spread that Nadir Shah was killed in the battle. Enraged by this rumour Nadir Shah ransacked Delhi and his soldiers killed 30,000 people in one night. Mogul king begged to him to leave Delhi promising him all the treasures in the world. Nadir Shah took the most valuable jewellery including the globe and the Peacock Throne. But he was killed by the Kurdish while returning to Persia. Immediately his soldiers and Kurdish enemies divided most of the booty.

 

Tippu’s Tiger

Tippu Sultan was the son of Haider Ali, King of Mysore. Haider Ali fought with the British rulers in India and was defeated. His son Tippu Sultan was the de facto ruler. He was very fond of tigers and believed that he would win like a tiger. He gave his soldiers tiger striped uniforms. He had lot of tiger artefacts in his collection. He made a mechanical wooden tiger toy with some clever mechanical and sound actions. The British took it from him in 1799 and now it is kept in London Victoria and Albert museum. Anyone who walks in to the museum can easily see it in a glass window. It is a life size toy prowling on an English soldier. It was made by French engineers who hated the British as much as Tippu Sultan.

 

The toy has a pipe organ like mechanism with a handle. When the toy is operated it makes noise like the growl of a tiger. The European soldier also cries in fear. The hand will move as if it is going to tear him to pieces. Tiger will try to devour the prostate European. The noise also varies according the movement of tiger’s mechanical hand. This is one of the main attractions of V & A museum. Nowadays they don’t operate the toy. But it is still in working order. India can be proud of such attractions displayed around the world.

ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி உருண்டை !

இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி இந்தியாவே பணக்கார நாடு Indiahhhhh—-Richest country in the World  என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகளையும் படிக்கவும். அலெக்சாண்டரையும் கஜினி முகமதுவையும் மேலும் பல படை எடுப்பாளர்களையும் இந்தியாவுக்கு இழுத்தது இந்தச் செல்வம்தான். உலகில் முதல் முதலில் நல்ல வைரங்களைத் தோண்டி எடுத்து உலக நாடுகளுக்கு அனுப்பியதும் நாம்தான். வட மொழி, தமிழ் மொழி இலக்கியம் முழுதும் தங்கம், ரத்தினம், தந்தம், முத்து, பவளம் பற்றிப் பேசாத புத்தகமோ பாடலோ இல்லை.

 

நம் நாட்டின் கோஹினூர் வைரம் உள்பட பல வைரங்கள் லண்டன் டவர் மியுசியத்தில் இருப்பதை பலரும் அறிவர். கோஹினூர் வைரம் போலவே புகழ் பெற்ற ஹோப் வைரம் (கிருஷ்ண பரமாத்மாவின் சியமந்தக மணி) அமெரிக்காவில் வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது ( Is Krishna’s diamond in USA அல்லது கொலவெறி வைரம் கட்டுரையை படிக்கவும்)

இதை எல்லாம் விட உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக் குவியல் ஈரானில் இருக்கிறது. அந்நாட்டின் தலை நகரான டெஹ்ரான் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரத்தின சிம்மாசனங்களும், ரத்தின மணி மகுடங்களும், தங்க, ரத்தின ஆபரணங்களும் காண்போரை வியக்கச் செய்யும்.  பிரிட்டிஷ் ராஜ நகைகளை விட பன் மடங்கு மதிப்புடையன. இவைகளில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து சென்றவை !

 

உலகம் வியக்கக் கூடிய பூமி உருண்டை(குளோப்) டெஹ்ரான் மியூசியத்தில் உள்ளது. இதில் 51,000 ரத்தினக் கற்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை மரகதக் கற்கள். மரகதம் பற்றி 1990களில் நேஷனல் ஜியாக்ரபிக் மாகசின் ஒரு பெரிய கட்டுரை வெளியிட்டது. அப்போது இந்த ரத்தின பூமி உருண்டை படத்தை வெளியிட்டு அதன் மதிப்பை 300 கோடி ரூபாய் என்றது. இப்போது குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்திருக்கும். அதில் 35 கிலோ தங்கம் வேறு இருக்கிறது. அதன் உயரம் கிட்டத்தட்ட நாலு அடி, விட்டம் ஒன்றரை அடி.

மயில் ஆசனம்

இன்று உலகில் இருந்தால் மிகப்பெரிய அதிசயமாக இருந்திருக்கக் கூடியது மொகலாய மன்னன் ஷாஜஹான் செய்து வைத்திருந்த மயில் ஆசனம் ஆகும். அவன் செய்த போது அதில் 1100 கிலோ தங்கமும் 250 கிலோ ரத்தினக் கற்களும் இருந்தன. உலகிலேயே மிகப்பெரிய தங்கக் காசும் ஷாஜஹானுடையதே. அதை பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் ஏலம் விட்டார்கள். ஷாஜஹானுக்கு, தங்கம் என்பது தண்ணீர் பட்ட பாடு. கஜினி மொஹமது போன்றோர் கொள்ளை அடித்த பின்னரும் நம்மிடம் அவ்வளவு தங்கமும் வைரமும் இருந்தன.

 

சாஜஹான் மகனான அவுரங்கசீப்புக்குப் பின்னர் மொகலாய சாம்ராஜ்யம் பலவீனம் அடைந்தது. மொஹமது ஷா என்ற மன்னன் டில்லியை ஆண்டபோது பாரசீகத்திலிருந்து (தற்போது ஈரான் என்று பெயர) நாதிர் ஷா படை எடுத்து வந்தான். பெரிய கொடுங்கோலன். அவன் டில்லியில் இறந்துவிட்டான் என்று சிலர் வதந்தியைப் பரப்பியவுடன் அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. டில்லியை சூறையாடி ஒரே இரவில் 30,000 பேரைக் கொல்ல உத்தரவிட்டான். மன்னன் மகமது ஷா கொலை நடுங்கிப்போய் எல்லோரையும் உயிரோடு விட்டால் என்ன செல்வம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றான்.

 

நாதிர் ஷா மயில் ஆசனம், ரத்தின  பூமி உருண்டை உள்பட எல்லா செல்வங்கலையும் கொள்ளை அடித்து பாரசீகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். போகும் வழியில் குர்தீஷ் இன மக்களையும் ஒரு கை பார்க்கத் தீர்மானித்தான். ஆனால் அவர்கள் நாதிர்ஷாவை படுகொலை செய்தனர். அலெக்சாண்டருக்கு நேர்ந்ததுபோல இவனும் நாடு திரும்பாமல் பிணமானான். மயில் ஆசனத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி பங்கு போட்டுக் கொண்டார்கள் படைத் தலைவர்கள்!

இப்பொழுது டெஹ்ரானில் ஒரு மயில் ஆசனம் உள்ளது. அது உண்மையானது அல்ல என்றே கருதப்படுகிறது. ஆனாலும் உலகிலேயே அதிகமான ராஜ வம்ச பொக்கிஷங்கள் அங்கேதான் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எல்லாம் இந்தியப் புதையல்கள்!

 

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரெஞ்சுகாரரான ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் ஒரு ரத்தின பரிசோதகர். அவர் மயில் ஆசனம் முதலியவற்றை மதிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யத்தின் ரத்தினக் குவியலை மதிப்பிடும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் எழுதிவைத்தார். மாலிக்காபூர் போன்ற படைத் தலைவர்கள் தென்னிந்தியாவை சூறையாடிய பின்னரும் அங்கே அத்தனை செல்வம். இப்போதும் திருப்பதி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமி கோவில் செல்வங்களைக் கணக்கில் கொண்டால் இந்தியாவைச் செல்வச் செழிப்பில் மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. இவைகளைக் கண் போலக் காப்பது நமது கடமை.

 

லண்டனில் திப்புவின் புலி

லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் இன்னொரு அற்புதம் திப்புவின் புலி பொம்மை! ஒரு மியூசியத்தில் கோஹினூர் வைரம், இன்னொரு மியூசியத்தில் திப்பு சுல்தானின் புலி ! நமக்கு பாதுகாக்க வக்கு இல்லை, எல்லாம் வெளி நாட்டுக்கு ஓடிப் போயின. இப்பொதுழும் வாரம் தவறாமல் இந்தியச் செல்வங்கள் லண்டன், நியூயார்க் ஏல நிறுவனக்களில் ஏலம் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

திப்புவின் புலி பிரெஞ்சுக்காரர்களால் செய்யப் பட்டது. திப்பு சுல்தானைப் போலவே பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர் என்றால் வெறுப்புதான். இந்தப் புலி பொம்மை உண்மையான புலி அளவுக்குச் செய்யப்பட்டது. ஒரு ஆங்கிலேயனை கடித்துக் குதற வருவதுபோல வடிவமைக்கப் பட்டது. அதற்குள் ஒரு பைப் ஆர்கன் இசைக்கருவி போன்ற இயந்திர உறுப்புகள் இருக்கின்றன. வெளியே தெரியும் கைப்பிடியால் இந்த மரத்தால் ஆன பொம்மையை இயக்கலாம். அதன் ஒரு கை, கீழே விழுந்திருக்கும் ஆங்கிலேயனைக் கிழிக்கப் போவது போல நகரும். அப்போது புலியின் உறுமல் சத்தமும் கீழேயுள்ளவனின் அவலக் குரலும் கேட்கும். புலி அவனை விழுங்கிச் சாப்பிடத் தயாராக இருக்கும். இந்த பொம்மையை வெள்ளைக்காரர்கள் பத்திரமாக லண்டனுக்குக் கொண்டுவந்து கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஏராளமானோர் இதைக் கண்டு அதிசயிக்கின்றனர்.

 

இதுதவிர மீனாட்சி கோவில் திரைச் சீலை போன்ற அயிட்டங்களும் உண்டு. ( The Wonder That is Madurai Meenakshi Temple கட்டுரையில் மேலும் பல அதிசயச் செய்திகளைப் படியுங்கள்)

**********************

அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

( This is translation of “India needs an Indiana Jones” already posted here)

இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. ஆனால் பல புதையல், பொக்கிஷங்களை, நல்ல வேளையாக, நமது நாட்டின் பெயர் போட்டே வெளிநாட்டு மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள்.

இந்திய வைரத்தை வைத்து ஹாலிவுட்காரகள் இந்தியானா ஜோன்ஸ் பாணி (Indiana Jones and Temple of Doom)  படங்களைக் கூட எடுத்து, அதிலும் மில்லியன் கணக்கில் காசு பண்ணிவிட்டார்கள். கிரேக்க நாட்டு மற்றும் பைபிளில் வரும் “ஹோலி க்ரெயில்” (Holy Grail) போன்றவை குறித்து ஏராளமான நாவல்கள், சினிமாக்கள் வந்துவிட்டன. ஆனால் நாமோ நமது செல்வம் பற்றியே ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.

 

வாரம் தவறாமல் லண்டன், நியூயார்க் நகரங்களில் நம் நாட்டு தொல் பொருட் செல்வங்கள் பகிரங்கமாகவே ஏலத்துக்கு விடப் படுகின்றன. ஆக நமது நாட்டிலும் ஒரு இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டை நடத்த புறப்படவேண்டும். நமது செல்வங்கள் குறித்து கதைகளும் சினிமாக்களும் வெளிவரவேண்டும்.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலில் உலகிலேயே மிகப் பெரிய புதையல் கிடைத்துள்ளது. அதை எல்லாம் அழகாக பாதுகாப்பாக மியூசியத்தில் வைக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி வரவேண்டும். ஏன் வெளிநாட்டுக்காரர்கள் இதில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

நம்முடைய உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இன்று லண்டன் டவர் மியூசியத்தில் (Tower Museum, London)  உள்ளது. பிரிட்டிஷ் மஹாராணியின் முடியை (Crown Jewels)  அலங்கரிக்கும் வைரங்களில் அதுவும் ஒன்று.

திப்பு சுல்தானின் இயந்திரப் புலி (Tippu’s Tiger)  பொம்மை லண்டன் விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்தில் உள்ளது. இந்தோநேஷியாவின் இந்துக் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அகத்தியர் சிலையும் அங்கேதான் உள்ளது.

நாமோ மீனாட்சி கோவில், திருப்பதி கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்க நகைகளின் மகிமை பற்றி அறியாதவராக உள்ளோம். அரசியல்வாதிகள், பல அற்புதமான ரத்தினக் கற்களை மாற்றிவிட்டு, போலி கற்களை வைத்துவிட்டதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

 

ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்கள் கொடுத்த பெரிய பெரிய தங்க நகைகள், ரத்தினக் கற்கள், பாத்திரங்கள் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. அவைகள் எங்கே என்று யாருக்கும் தெரியாது.

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய மாபெரும் தங்க சிம்மாசனம் மைசூர் அரணமனையில் இருக்கிறது. நளன் போன்றோர் கொடுத்த அற்புதமான ரத்தினக் கற்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

தி ஒண்டர் தட் இஸ் மீனாட்சி டெம்பிள் (The Wonder That is Madurai Meenakshi Temple) மற்றும் கொலவெறி வைரம் (Is Krishna’s Diamond in USA?) (கிருஷ்ணரின் சியமந்தகம் அமெரிக்காவில் உள்ளது ) என்ற எனது கட்டுரையில் பல புதிய தகவல்களைப் படிக்கலாம்.

ஆயிரக் கணக்காணோருக்கு உணவு வழங்க திரவுபதி பயன்படுத்திய அக்ஷய பாத்திரம் எங்கே?

பசிப்பிணி என்னும் பாவியை ஒழித்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுகொடுக்க மணிமேகலை பயன்படுத்திய அமுத சுரபி எங்கே?

 

திருவள்ளுவரை மற்றும் ஏற அனுமதித்து போலிப் புலவர்களைக் கீழே தள்ளிய சங்கப் பலகை எங்கே?

பாண்டிய நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்க்க சிவபெருமான் அனுப்பிய உலவாக் கிழியும் உலவாக் கோட்டையும் எங்கே?

வசிட்ட மாமுனிவர் வளர்த்த காமதேனு எங்கே? இது உயிருள்ள பசு என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலத்தில் ஆயிரம் சப்பாத்தி ஆயிரம் (Instant Chapathi/Idli Oven) இட்லி தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் இருப்பது போல ஒரு எந்திரத்தின் பெயர் காமதேனு என்று கருதலாம் அல்லவா?

நினைத்ததை எல்லாம் வழங்கும் கற்பக விருட்சம் எங்கே? இவைகளை கற்பனை என்று நினைத்தால் கதை எழுதவும் சினிமா எடுக்கவும் இந்த விஷயங்களைப் பயன்படுதலாமே !!

 

உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்(Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இருக்கிறது என்று இன்னொரு பேச்சு. இப்போது டெஹ்ரான (ஈரான்)(National Museum, Tehran, Iran) மியூசியத்தில் இந்தியாவின் அற்புதமான ரத்தினநகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதிலும் ஒரு சிறிய மயில் ஆசனம் உண்டு. (இது அற்றி எனது தனி கட்டுரை உள்ளது)

முட்டாள்களையும் புத்திசாலியாகும் 32 பதுமைகள் பதித்த விக்ரமாதித்தன் சிம்மாசனம் எங்கே?

மதுரை மீனாட்சி கோவிலில் ஒரு கடம்ப மரத்தை வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள். இதை “கார்பன் டேட்டிங்” முறையில் ஆராய்ந்து இதன் காலத்தைக் கண்டு பிடிக்கலாம். இது போன்ற ஆய்வுகள் இந்து மதத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும். எந்த வகையிலும் குறைவு உண்டாக்காது. ஏசு கிறிஸ்து மீது போர்த்திய சால்வை என்று டூரினில் வைத்துள்ள துணியை ஆராய்ந்தார்கள். இது போல எவ்வளவோ ஆய்வுகளை நடத்தினால் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

 

இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்முடைய செல்வங்களை பட்டியலிட்டு, அவை எங்கே இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். கோவிலின் அற்புத செல்வங்களை கண்ணிரண்டையும் இமைகள் காப்பது போலக் காக்கவேண்டும். இந்திய செல்வங்களை வெளிநாடுகளில் ஏலம் போகாமல் காக்கவேண்டும்.

********************

Strange Facts about V.I.P Deaths

(Picture shows Gandhiji and Netaji Subash Chandra Bose)

(A summary of this article has already been posted in Tamil)

Hindu saints never fear death. They believe that the soul is eternal. Hindu holy book Bhagavad Gita says “Just as man casts off worn out clothes and puts on new ones, so also the soul casts off worn out bodies and enters others that are new”. The goal of every Hindu is to get out of the birth and death cycle and liberate oneself. Let us look at how great people died in India.

Tamil poet Bharati sings about how the greats met their death:

“——————-it cannot do good

To pierce a painful sore; the great Buddha

Died of illness; Sankara the Brahmin-sage

Also died; so too Ramnuja great.

The Christ died crucified; Kannan

Was by an arrow killed; Rama by many praised,

Had a watery grave; in this world “ I ”

Will thrive deathless, for sure………..” (Translated by Dr T N Ramachandran)

 

The Hindu Book of Fables “Panchatantra” has a similar verse on the death of great names of ancient India:

A lion took the life of Panini

Grammar’s most famous name;

A tusker madly crushed sage Jaimini

Of metaphysic fame;

And Pingal, metric’s boast, was slaughtered by

A sea side crocodile;

What sense for scholarly attainments high

Have beasts besotted vile?

(Panchatantra ,translated by Arthur W Ryder)

 

 

1.Gautama Buddha died at the age of 80 of acute dysentery after eating at a disciple’s house. But there is another version about his death: When he was fed with pork it blocked the way and he stopped breathing.

2. Advaita philosopher Adi Shankara died at the age of 32. It is said that he disappeared after entering the Himalayan caves. Another version is that he attained Samadhi (died)  in Kancheepuram near Chennai.

3. Proponent of Vishistadwaita ,Sri Ramanuja  is believed to have lived for 120 years.

4.Another great philosopher  Madhwa  lived for 79 years.

5. Saivaite saint Thirugnana sambandhar- 16 years- walked in to a celestial light with his bride and wedding guests at  Thirunallur immediately after the wedding.

6. Another great Saivaite Appar died at the age of 81. He remained a bachelor and died at Thiruppugalur.

7. One of the 12 Tamil Vaishnavaite saints Nammalvar died at the age of 35 years while he was meditating under a tree.

8. Another Vaishnavaite saint Andal entered sanctum sanctorum at Srirangam temple and the physical form dissolved.

9. Gurugovind sing was stabbed by Muslim servants and he, after a few days, entered a tent and sat in meditation. The tent went in flames.

10. Manikkavasagar merged with the divine light after many of his devotees did so.

11. Tiruppanalvar one of the 12 saints, also went in to flames and people believe he merged into divine light.

12. Great devotee of Lord Krishna ,Mira died at the age of 67. She survived all the persecutions.

13. Sri Ramana Maharishi (1879-1950) of Tiruvannamalai died of cancer.

14.  Swami Vivekananda  attained Samadhi at the age of 39.

15. Sri Ramakrishna Paramahamsa (1836-1886) died of throat cancer at the age of 50.His wife Sarada Devi died at the age of 67.

16. The greatest of the modern Tamil poets Subramanya Bharati (1882-1921) died at the age of 39 years after stomach infection and dysentery. A few months before this sickness, he was attacked by an elephant at a Chennai temple.

17. Tamil saint Nandanar, one of the 63 Shiva devotees known as Nayanamars, also went in flames.

18. Tamil saint Ramalinga Swamikal (1823-1874) known as Vallalar entered a room an disappeared. He was said to have merged into Light/jothy.

19. Tirumalai Naicker , the greatest of the Madurai Nayak Kings, went in to a tunnel and disappeared. Historians believe he was murdered.

20. Bogar ,one of the 18 Tamil Siddhas, went in to a cave at Palani and disappeared

21. Tamil saint Manikkavasagar’s disciples merged in to divine light/ jothy at Thirupperundurai

22. Tirumular, Tamil mystic and Siddha, had several magical powers. One of the eight great magical powers is to enter another one’s discarded body and live as long as one wants to live.He was believed to have done this and lived for 3000 years.

23. Trilinga swamikal of Kasi (also known as Benares and Varanasi) lived for 500 years – says Tamil saint Swami Chidbavanandar.

24. Mahatma Gandhi, Indira Gandhi  and her son Rajeev Gandhi were all  assassinated.

25. Among the foreign leaders Abraham Lincoln, John F. Kennedy and Martin Luther King were all shot dead in the USA.

26. Sri Sathya Saibaba (1926-2011), who had millions of followers around the world, had died of sickness on 24th April 2011.

27. Netaji Subash Chandra Bose (1897-1945?) was said to have died in a plane accident in Taipei. But his followers believed he survived the plane accident and disappeared later.

Please read my article “Mysterious disappearance of Hindu Saints” to understand Spontaneous Human Combustion/ becoming light and merge with God)

*********************

 

கொலவெறி வைரம்!!!!!

Picture shows Hope Diamond

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

 

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது.

 

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

 

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

 

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

 

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

 

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

 

ஹோப் வைரம்

 

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

 

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

 

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

 

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

 

சில வைரங்கள் அதிக யோகத்தைக் கொண்டு வரும். இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த கோஹினூர் வைரம் சென்ற இடம் எல்லாம் சிறப்பை ஈட்டித் தரும். அது இப்போது இலண்டன் டவர் மியூசியத்தில் உள்ளது. அது இருப்பதால் எலிசபெத் மஹாராணியார் கொடிகட்டிப் பறக்கிறார். அவருடைய 60ஆவது வருட பதவி ஏற்பு நிறைவு வைபவம் லண்டனில் ஜூன் மாதம் நடைபெறப் போகிறது. கோஹினூர் அவர் கையில் இருக்கும் வரை அவரை யாரும் அசைக்க முடியாது.

Mysterious Tamil Bird Man

Mysterious Tamil Bird Man

Indian literature is full of stories about birds. The fables of Panchatantra and Hitopadesha are famous and translated into many languages. The seed for all such stories is in the Upanishads, Mahabharata and Ramayana. But certain stories are embedded so deep in Sanskrit and Tamil books that miss our attention. Tamil Bird Man story found in 2000 year old Sangam literature is one of them. Famous Tamil poet Paranar sang about him in five poems. The verses about the mysterious bird man Ay Eyinan are found in Akananuru (verses 148,181,208 etc). To be praised by Paranar, one must be as great as an emperor. Later poet Avvaiyar praised Athiyaman Neduman Anji just for getting a verse on him from Paranar (Puram 99).  He was paired with another great poet Kapilar.(For more details about Paranar, please read my article No Brahimns, No Tamil).

Ay Eyinan was a friend of a chieftain called Nannan. Nannan was attacked by a king from a neighbouring country. He was so worried about leaving his town unprotected. Ay Eyinan came to his help and protected his town. When Njimili attacked that town, Ay Eyinan was killed in the battle. Immediately a large flock of birds came to protect his body from scorching sun light. When his body was taken, the birds moved with it and sheltered him like an umbrella. He was a friend of birds, probably like our great emperor Vikramadiya who even knew the language of the birds!

Bird Girl

Sakuntala, heroine of the world famous drama Shakuntalm by Kalidasa, was named a bird girl. Sakunta means bird in Sanskrit. Abandoned at birth by her parents Visvamitra and Menaka, Sakuntala was looked after by birds. They encircled her protectively so that she remained unharmed until sage Kanva finds her. Kanva gave her the name Sakuntala, because she was first adopted in a sense by the birds who cared for her (More bird stories are in my article Animal Einsteins Part 1 and Part 2)

Sage who called hundreds of birds

Tiruvannamalai near Chennai is famous for its Shiva temple and sages who lived there. Among the famous poets and sages of Tiruvannamalai are Arunagirinathar, Ramana Maharishi and Seshadri Swagal (1870-1929). Seshadri Swamigal performed a number of miracles and one of them was about birds. Venkatachala Mudaliyar and his wife Subbalakshmi Ammal were his great disciples. One day Swamigal visited them and asked Subbalakshmi whether she would like to watch some fun. When she said yes, he just waved his hands looking at the sky. Hundreds of birds came within minutes and occupied the trees and terrace of nearby houses. All kinds of Indian birds were there. It was 4 pm in the evening. When Subbalakshmi Ammal sympathized with the bird lings in the nests and asked him to send the birds to their nests he just pulled a thread from his towel and blew it in the air. All the birds flew away in a few minutes.

Those who have watched Alfred Hitchcock’s film The Bird may be familiar with such scenes.

********************

 

அதிசயப் பறவைத் தமிழன்!!!

தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு அதிசயப் பறவை மனிதன் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். பரணர் என்ற ஒரு பெரிய கவிஞர் மட்டும் இந்த விஷயத்தை விடாமல் நாலைந்து பாடல்களில் பாடிவிட்டார். பரணர் வாயால் ஒருவர் பாராட்டப்பட வேண்டும் என்றால் அவருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டப் போன போது “பரணன் படினன் கொல்” என்று வியப்படைகிறார் அவ்வையார். நீ பரணனால் பாராட்டப் பட்டவன் ஆயிற்றே (புறம் 99) என்று.

கபிலர்-பரணர் என்று இரண்டு புலவர்களை இணத்தே பேசுவார்கள். சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனோவெனில் தனது மகனையே பரணரிடம் ஒப்படைத்து நீயே கல்வி கற்பி என்று குருகுல வாசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ்வளவு பெருமை உடைய ஒருவர் வாயால் பாராட்டப்பட்ட  அதிசயப் பறவை மனிதன் யார் தெரியுமா? அவன் பெயர் ஆய் எயினன். அவன் மிஞிலி என்பவனுடன் போரிட்டு உயிர் துறந்தான். அவன் உடல் மீது சூரிய ஒளி பட்டால் உடல் வாடுமே என்று அவன் மீது பறவைகள் ஒன்றுகூடி ப் பறந்து நிழல் செய்தன. இது சங்க காலத்தில் பெரும் அதிசயமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் பரணர் போன்ற ஒரு பெரும் புலவர் இப்படி பல பாடல்கள் பாடமாட்டார்.

ஆய் எயினன் கதை ஒரு சுவையான, ஆனால் சோகமான கதை. அவன் நன்னன் என்பவனின் ஆருயிர் நண்பன். நன்னனை வேறு ஒருவன் எதிர்த்தபோது அவனுடைய ஊரை பாதுகாக்க எயினன் சென்றான். அப்போதுதான் மிஞிலியுடன் போரிட்டு உயிரிழக்க நேரிட்டது. நண்பனுக்கு உதவப் போய் இந்த கதி. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனுக்கு உதவியதால்தான் பறவைகளும் அனுதாபம் தெரிவித்தன போலும். எயினனின் மனைவியர் துயறுற்று அழுதபோது அகுதை என்பவன் மட்டும் வந்து மிஞிலியை தோற்கடித்து அவர்களுக்கு உதவினான்.

அகநானூற்றின் பாடல்களில் மேல் விவரங்களைக் காணலாம்:அகம். 148,181, 208, 396 புறம் 351

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம்பட்டென

காணிய செல்லாக் கூகை நாணிக்

கடும் பகல் வழங்கா தாஅங்கு……. (அகம்.148,பரணர்)

பொருள்: எயினனுக்கு நிழல் குடை பிடிக்க எல்லா பறவைகளும் போயின. ஆனால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் அந்தப் பறவை மட்டும் போக முடியவில்லை. அதற்காக அது வெட்கப்பட்டது.

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்தூடன் (அகம்.181,பரணர்)

பொருள்: ஆய் எயினன் முருகப் பெருமானைப் போன்ற ஆற்றலுடன் நின்று மிஞிலியுடன் போரிட்டான்.இறுதியில் விழுப்புண்பட்டு வீழ்ந்தனன். கதிரவனின்  ஒளிய கதிர்கள் அந்த ஆயின் மேல் படாதவாறு மறையும்படிப் புதிய பறவைகள் வானத்தில் ஒன்றாகக் கூடின. வானத்தில் வட்டமிட்டன.

அதிசயப் பறவைப் பெண்

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கவிஞன் காளிதாசனின் மிக உன்னத படைப்பு சாகுந்தலம் என்னும் நாடகமாகும். அதில் உள்ள கதா நாயகி சகுந்தலா அதிசயப் பறவைப் பெண்ணாவாள். விசுவாமித்திரரும் மேனகையும் பிறந்த குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். கண்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்த போது பறவைகளே உணவு ஊட்டி வளர்த்த பச்சிளம் குழந்தையைக் கண்டு வளர்ப்பு மகளாக வளர்த்தார். அந்தப் பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு பறவைப் பெண்=சகுந்தலா என்ற பெயரே பொருத்தமாகப் பட்டது. உன்னைப் பறவைகளே ஊட்டி வளர்த்ததால் உனக்கு இப்படி பெயர் வைக்கிறேன் என்று அவரே சொல்லுகிறார்.( ஆலமரப் பறவைகளின் ஒலியை ஸ்ரீ ராமர் அடக்கியது உள்பட ஏனைய பறவைச் செய்திகளை அனிமல் ஐன்ஸ்டைன் Animal Einsteins Part 1 and Part 2 என்ற ஆங்கிலக் கட்டுரையின் இரண்டு பகுதிகளில் காண்க)

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த பறவை அதிசயம்

திருவண்ணாமலை சாது சந்யாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாத துளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார்  4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா, ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேtடுகொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடk கூப்பிட பறவைகளின்  எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்திதன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்!!

ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் என்ன என்பது எளிதில் விளங்கும்.

*****************