Supernatural Powers in Purana! (Post No.6541)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  11–07 am

Post No. 6541

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

–subham–

MY VISIT TO GHOST BUSTER SAMADHI IN GODDESS TEMPLE (Post No.6268)

Pey Medai- Ghost busting stage in Mel Malayanur

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 15 April 2019


British Summer Time uploaded in London – 19-53

Post No. 6268

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

During my visit to India in March 2019, I visited Samadhis of four great people

1.Sannu Munivar Samadhi in Mel Malaiyanur Angala Parameswari  Amman Temple

2.Karuvur Siddhar Samadhi in Karur

3.Sadhasiva Brahmendral Samadhi in Nerur

4.Saangu Siddhalingar Samaadhi in Chennai.

I went to Siruvachur Mathura Kali Amman Temple with my brother. There was a big crowd and a long queue. But we were told that was a less crowded day and normally one will have to pay extra money to go through the special gate. It is near Perambalur in Trichy district.

The temple is open on Mondays and Fridays only. But during annual festival it is open continuously.Other days the goddess is said to reside in the nearby hill.

People offer Maa vilakku (Flour Lamp) prepared in the temple to the goddess. Maa Vilakku is Rice Flour Mixed with jaggery and in the middle they light the ghee lamp. It is done in front of the goddess shrine.

The temple is connected with Kannaki of Silappadikaram epic and Choza kings. Swami Brahmendra installed a Chakra (mysterious diagram drawn on a metal) here. The temple receives good income and it has got a golden chariot

Ghost busing slab

We went to Angala Parameswaari Temple in Mel Malaiyanur after visiting Chenji Fort. The goddess is in an ant hill. A long queue was there.

Just before the main shrine I saw a marble slab with a special design and a display board. That area was protected so that no one could step on it.

The message on the board runs like this-

A saint named Sannu Munivar lived here many centuries ago. He attained Jeeva Samadhi in the temple here and on his Samadhi is Pey Medai. i.e Ghost busting Slab. (Jeeva Samadhi means one will enter the grave while the person was alive. Even after a building was erected over thee Samadhi he is supposed to live there for ever. That means anyone visiting the place will get his blessings). If any one possessed by evil spirits sits on it the person will be cured. This belief continues until today”—says the display board in Tamil. On the fence leading to the shrine I saw bangles offered to god.

I was wondering about the design of the marble slab. later I saw it in another temple in Namakkal. A Facebook friend also featured some Kolam (Rangoli) in the same pattern.

In both the temples people offer clothes, bells, thread, swings etc to get issues. Young women pray to get married quickly. One can feel the good and positive vibrations in both the shrines. Villagers from the surrounding towns throng the place with great faith and devotion. Lemon garlands and flower garlands are sold outside the temples.

Sakti Kendras (Goddess Shrines) are situated throughout India from Kashmir to Kanyakumari. People believe goddess’ body parts fell in different places and they became Power (Sakti) Centres. Mel Malayanur is one such power centres according to local stories.

ADDRESS OF THE TEMPLE

The Executive Officer,
Sri Angala Parameshwari Temple,
Melmalaiyanoor,
Gingee Taluk,
Villupuram District,
Tamilnadu – 604204.
Phone Number : +91 4145 234291
Email : mail@angalammantemple

In both the temples animals and birds are offered to goddess.

Siruvachur Temple Pictures are given below

XXXXXXXX

subham

DANGEROUS ‘DHRUSHTI’- ‘EVIL EYE’ FROM EGYPT TO AUSTRALIA. (Post No.6252)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 11 April 2019


British Summer Time uploaded in London – 6-32 am

Post No. 6252

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Hindus use Dhrushti Ganapathy picture to ward off the evil eye.

Egyptians used Udjat to ward off evil eye.

–Subham–

Why did Napoleon get Scared? Singing Sand and Strange Noises (Post No.6164)

Colossi of Memnon

Written by London swaminathan
swami_48@yahoo.com


Date: 7 March 2019


GMT Time uploaded in London – 17-31


Post No. 6164

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Savoy- France road

தோபா சுவாமிகள் செய்த அற்புதங்கள் (Post No.6099)

Compiled by london swaminathan

W

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-50 am


Post No. 6099

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2 (Post No.5954)

Written by S Nagarajan


Date: 19 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-16 am


Post No. 5954

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அத்தியாயம் 409       

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஐந்தாம் கட்டுரை)

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

ச.நாகராஜன்

 புனர் ஜென்மம் எடுத்த ஒருவர் தனது இப்போதைய பிறப்பில் தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசுவது புரியாத புதிராக அமைகிறது. இதற்கு முன்னர் அந்த மொழியைப் பற்றி அறியாமலும், அதைப் பேசும் பகுதியில் வாழாமலும் அந்த மொழியைச் சரளமாகப் பேசும் போது மற்றவர்களுக்குத் திகைப்பு தான் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட இந்த நிகழ்வு ஜெனோக்ளாஸி (Xenoglossy) என அழைக்கப்படுகிறது. அப்படி ஒரு அன்னிய மொழியை அவரால் எழுதவும் முடிகிறது என்றால் அது ஜெனோகிராபி (Xenography) என கூறப்படுகிறது.

அந்த அன்னிய மொழியை அவரால் பேச மட்டும் முடிகிறது என்றால் அது Recitative Xenoglossy எனப்படும். அந்த மொழியை அவரால் நன்கு அறிந்து கொள்ளவும் முடிகிறது என்றால் அது Responsive Xenoglossy எனப்படும்.

     1982இல் ஆய்வு நடத்திய விஞ்ஞானியான் கட்ஸ் (Kautz 1982) என்பவர் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து போன எகிப்திய மொழியை ஒருவர் பேசிய போது திகைத்து பிரமித்துப் போனார்.

     ஸ்டீவன்ஸன் (1976இல்) ஒரு அமெரிக்கப் பாதிரியாரைச் சந்தித்த போது அவர் கூறியது:” ஹிப்னாடிஸம் கற்றுக் கொண்ட போது எனது ஹிப்நாடிஸத்தால் என் மனைவியைப் பேச வைத்தேன். அவள் சரளமாக ஜெர்மன் மொழியில் பேசிய போது நான் திகைத்துப் போனேன்”!

        இதைக் கேட்ட ஸ்டீவன்ஸன் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். பாதிரியாரின் மனைவிக்கு ஜெர்மானிய மொழி பேசும் யாரையேனும் தெரியுமா, அந்த மொழி பேசும் பகுதிகளுக்கு அவர் எப்போதாவது சென்றிருக்கிறாரா உள்ளிட்ட ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். நிச்சயமாக இல்லை என்று தெரிந்த போது அவர் வியப்பின் எல்லைக்கே சென்றார்.

இது போன்ற 3000 கேஸ்களை ஆராய்ந்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவரது  முடிந்த முடிபாகச் சொன்ன ‘புனர் ஜென்மம் உண்டு’ என்பதை உலகம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகப்பேர்வழிகள் அவரது ஆய்வைக் குறைக் கூறிக் கொண்டே இருந்தனர் என்பதும் உண்மை தான்!

       ஸ்டீவன்ஸன் 2007 முடிய தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியைச் செய்து வந்தார்; அவர் வழியில் இப்போது இதைத் தொடர்ந்து செய்து வருபவர் அமெரிக்க உளவியலாளரான ஜிம் பி. டக்கர் (Jim B.Tucker).இவர் இப்போது யுனிவர்ஸிடி ஆஃப் வர்ஜீனியா ஸ்கூல் ஆஃப் மெடிசினில் சைக்கியாட்ரி துறையில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவை மட்டுமே தன் ஆய்வுக் களமாகக் கொண்டுள்ள இவர் ‘லைஃப் பிஃபோர் லைஃப் : எ ஸயின்டிபிக் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் சில்டர்ன்ஸ் மெமரீஸ் ஆஃப் ப்ரீவியஸ் லைவ்ஸ்’ (Life Before Life : A Scientific Investigation of Children’s Memories of Previous Lives) என்ற நூலை எழுதியுள்ளார். ஊடகங்களில் தன் ஆய்வு பற்றி இவர் விரிவாக விளக்கியும் வருகிறார்.

     இவர் கூறும் சுவையான சம்பவம் ஒன்று 4 வயது சிறுவனைப் பற்றியது. ரையான் ஹாமன்ஸ் என்ற அந்தச் சிறுவன் அடிக்கடி சினிமா படங்களை எடுப்பது போல ‘ஆக்‌ஷன்’, ‘கட்’ என்று சொல்லி வந்தான். இது அவனது பெற்றோர்களுக்கு மிக்க கவலையைத் தந்தது. ஹாலிவுட்டில் இருந்த போது ஒரு நாள் நள்ளிரவில் அவன் தனது மார்பை பிடித்துக் கொண்டு அது வெடிக்கப் போவதாகக் கனவு கண்டு அலறினான். ஒரு நாள் தாயார் சிண்டியின் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா! நான் வேறொரு ஆளாக இருந்ததை உணர்கிறேன்” என்றான். பெரிய வெள்ளை வீட்டில் ஒரு நீச்சல் குளத்தில் தான் இருந்ததாகவும் தனக்கு மூன்று மகன்கள் உண்டு என்றும் அது ஹாலிவுட்டில் இருக்கிறது என்றும் அவன் கூறினான்.

சிண்டி ஒரு நாள் ஹாலிவுட் சம்பந்தமான ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் போது அதில் ‘நைட் ஆஃபர் நைட் ‘என்ற 1930ஆம் வருடத்திய திரைப்படத்தைப் பற்றிய விவரம் இருந்தது. அதில்  இருந்த ஒரு புகைப்படத்தில் இருவர் ஒருவரை ஒருவர் முறைக்க இன்னும் நான்கு பேர் அவர்களைச் சுற்றி இருந்தனர். அதில் ஒருவரைச் சுட்டிக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா, அது ஜார்ஜ். நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் அந்தப் படத்தை எடுத்தோம்” என்றான். அருகில் இருந்த இன்னொருவரைக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா! அது நான் தான்!!” என்றான்.

டக்கர் இதை ஆராய்ந்த போது வியந்து போனார். இப்படிப்பட்ட மறுக்க முடியாத புனர்ஜென்மம் பற்றிய ஆய்வு முடிவுகள் நாம் பிரக்ஞையைப் பற்றி இதுவரை அறியாத ஒரு உண்மையைக் காட்டுகின்றன. க்வாண்டம் பிஸிக்ஸ் கூறும் இன்னொரு பிரக்ஞை மட்டத்தை வைத்து இது உண்மை எனக் கூற முடியும் என்று அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

அவர் கூறும் ஒரு எளிய உதாரணம் இது:

 எலக்ட்ரான்கள் மற்றும் ப்ரோடான்கள் போன்றவை அவற்றை உற்றுக் கவனிக்கும் போது தான் அவைகள் நிகழ்வுகளை நிகழ்த்துவதை அறிய முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் உணர்கின்றனர்.

ஒரு லைட்டை எடுத்துக் கொண்டு ஒரு திரையை இரண்டு இடங்களில் வெட்டி அதன் மீது ஒளி படும் படி பாய்ச்சுங்கள். திரைக்குப் பின்னால் ஒரு போட்டோகிராபிக் தகடை வையுங்கள். அது ஒளியைப் பதிவு செய்வதாக ஆக்குங்கள். ஒளியை உற்றுக் கவனிக்காமல் இருக்கும் போது அந்த ஒளியானது திரையில் உள்ள இரண்டு வெட்டுகளின் ஊடேயும் போவது போல இருக்கிறது. ஆனால் அந்த ஒளியை உற்றுக் கவனிக்கும் போது என்ன பார்க்கிறோம்? ஒளித் துகள்கள் ஒரு வெட்டின் வழியே மட்டும் செல்வதைப் பார்க்கிறோம்.

  ஒளியின் நடத்தை மாறுவது தெரிவது எப்போது? – அதை உற்றுக் கவனிக்கும் போது தான்! இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்று இன்று வரை விஞ்ஞானிகள் விவாதித்து விவாதித்துக் களைத்து விட்டனர். க்வாண்டம் பிஸிக்ஸின் தந்தையான மாக்ஸ் ப்ளாங்க், ‘நாம் வாழும் இந்த பௌதிக உலகானது, பிரக்ஞை சம்பந்தப்பட்ட இன்னொரு உலகுடன் தொடர்பு கொள்வதால் அதனால் பாதிக்கப்படுகிறது’என்கிறார்.

இந்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை புனர்ஜென்மத்துடன் பொருத்திப் பார்க்கையில் அனைத்து உண்மையும் விளங்கும்.  பிரக்ஞை என்பது 1200 முதல் 1400 கிராம் வரை எடை உள்ள மூளைக்குள் அடங்காத ஒன்று. அந்த மூளை செயலற்றுப் போனாலும் அதையும் தாண்டி பிரக்ஞை இருக்கும்’ என்று  அவர் கூறுகிறார்.

இது பொருள் பொதிந்த ஒரு உண்மை அல்லவா என்கிறார் டக்கர்!

15 வருடங்களாக புனர்ஜென்ம ஆய்வைத் தொடர்ந்து செய்து வரும் டக்கரின் அலுவலகத்தில் 2500 ஆய்வு கேஸ்கள் உள்ளன.

இந்த ஆய்வுகள் புனர் ஜென்மம் உண்மையே என்பதைச் சொல்லும் போது உலகம் வியக்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிஸ்ஸா (Pizza) சாப்பிடப் பிடிக்காதவர் யார் தான் உலகில் உண்டு? இத்தாலிய விண்வெளி வீரரான பாலோ நெஸ்போலிக்கு (Paolo Nespoli) வயது 60. விண்வெளியில் சென்ற அவருக்கு பிஸ்ஸா ஆசை விடவில்லை. விண்வெளியில் தனக்கு பிஸ்ஸா கிடைக்கவில்லையே என்று அவர் வருத்தப்பட நாஸா அதை கனிவுடன் கூர்ந்து கவனித்து பரிசீலித்தது. பூமியிலிருந்து பிஸ்ஸா தயாரிப்பதற்கான சீஸ், சாஸ் உள்ளிட்ட அனைத்தையும் அங்கு அனுப்பியது. எக்ஸ்பெடிஷன் 53 என்ற குழுவில் இருந்த விண்வெளி வீரர்கள் ஆறு பேருக்கும் ஒரே உற்சாகம். அவர்கள் தாங்களே புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பிஸ்ஸா தயாரிக்க ஆரம்பித்தனர். பிஸ்ஸா பறக்க அதை அவர்கள் பிடிக்க ஒரே கும்மாளம் தான். பிஸ்ஸா துண்டு ஒன்று பறக்க அதற்கு எதிராகத் தன் திறந்த வாயைக் காண்பிக்க பிஸ்ஸா துண்டு தானாக வாய்க்குள் விழுந்த போது விண்வெளி வீரர் ஒருவருக்கு ஒரே ஆனந்தம்! ஒருவர் ஒரு பிஸ்ஸாவை இன்னொருவருக்குத் தூக்கி எறிய பிஸ்ஸாவின் மேல் தூவப்பட்டிருக்கும் எதையும் கீழே விழுந்து விடாமல் அதை கேட்ச் செய்து இன்னொரு வீரர் பிடித்துச் சாப்பிடுகிறார். காணொளியாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சி 2017இல் டிசம்பர் 4ஆம் தேதி பூமியில் காண்பிக்கப்பட உலகினர் அனைவரும் கண்டு களித்தனர். பறக்கும் பிஸ்ஸாவைப் பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. (இன்றும் இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்து மகிழலாம்)!

***

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1 (Post No.5910)

Written by S Nagarajan


Date: 10 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-09 am


Post No. 5910

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி நான்காம் கட்டுரை) அத்தியாயம் 408

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

ச.நாகராஜன்

மரணமடைந்த பின்னர் மீண்டும் ஒரு ஆத்மா மறு பிறவி எடுக்கிறதா? அறிவியல் விஞ்ஞானிகளில் ஏராளமானோர் இது பற்றிய ஆய்வில் கடந்த நூறு ஆண்டுகளாகத் தீவிரமாக இறங்கி ஆராய்ந்துள்ளனர்.

இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அமெரிக்க உளவியலாளரான யன் ஸ்டீவன்ஸன்.(Ian Pretyman Stevenson பிறப்பு : 31-10-1918 மறைவு 8-2-2007) தன் நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய இவர் புனர் ஜென்மம் பற்றிய மலைக்க வைக்கும் எண்ணிக்கையான 3000 கேஸ்களை ஆராய்ந்தார். புனர் ஜென்மம் உண்டு என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்தார். இவரது புத்தகங்கள் பிரபலமானவை.

ந்தியா, ஸ்ரீ லங்கா, பர்மா, தாய்லாந்து,துருக்கி, லெபனான், சிரியா, வடமேற்கு பசிபிக்கில் உள்ள அமெரிக்க பூர்வகுடிகளின் வசிப்பிடம் உள்ளிட்டவை இவர் ஆய்வு நடத்திய நாடுகளாகும்.

இது தவிர பார்கர்ரும் பஸ்ரிசாவும் (Barker and Pasricha 1979) இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் 91 பேரின் புனர்ஜென்மம் பற்றி ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆய்வாகும்.

இந்த ஆய்வில் பெரும்பாலானோர் குழந்தைகளே! அவர்கள் ஒன்றுமறியா இளம் வயதில் தங்கள் பூர்வ ஜென்ம விவரங்களைக் குறிப்பிட்டது மாபெரும் அதிசயமே.

ஆனால் மேலை நாடுகளில் பல இடங்களில் இப்படிக் குழந்தைகள் தங்கள் முன் ஜென்ம விவரங்களைச் சொன்னபோது அவர்களின் பெற்றோர்கள் பயந்து போனார்கள். அவர்களைப் பேச விடாமல் தடுத்து விட்டனர்.

1956இல் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானி க்ளைன் (Kline 1956) இள வயதுக் குழந்தை அந்தப் பகுதியிலேயே யாருக்கும் புரியாத மொழியைப் பேசியதைக் குறிப்பிடுகிறார்.இது க்ரிப்டோம்னீஷியா (Cryptmnesia) என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.மேற்கு இத்தாலியில் லத்தீன் மொழி புழக்கத்திலிருந்து அகன்ற பின்னர் புழக்கத்திற்கு வந்த ஆஸ்கன் என்ற மொழியை ஒரு குழந்தை பேசிய போது அனைவரும் அயர்ந்து போனார்கள்.

இதே போல கம்ப்மேன் மற்றும் ஹிர்வெனோஜா (Kampman and Hirvenoja 1978) நடத்திய ஆய்வு ஒன்றில் 12 வயதான பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுமி ஹிப்நாடிஸம் செய்யப்பட்ட போது தனது முந்தைய எட்டுப் பிறவிகள் பற்றிக் கடகடவென்று கூறிக் கொண்டே போனாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் டோராதி என்ற பெயருடன் பிறந்திருந்ததாகக் கூறிய அவள் மிடில் ஏஜஸ் எனக் கூறப்படும் இடைக்காலத்தில் இருந்து வந்த ஒரு பாட்டையும் பாடி அனைவரையும் அயர வைத்தாள்.

பார்கர் (1979) தனது ஆய்வில் ஸ்டீவன்ஸன் சேகரித்த 113 கேஸ்களை மறு ஆய்வு செய்ததில் மூன்று வயதே ஆன இந்தியக் குழந்தைகள் துல்லியமான விவரங்களைக் கூறியதைக் கண்டார்.

நைஜீரியா துருக்கி ஆகிய நாடுகளில் இப்படி மறு ஜென்மம் பற்றிக் கூறியவர்கள் பலர். துருக்கியில் முந்தைய ஜென்மத்தில் வன்முறையாக மரணத்தை எய்தியோர் அந்த வன்முறைக்கான அடையாளத்தோடு மறு ஜென்மத்தில் உடலை அடைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.முந்தைய ஜென்மத்தில் காயப்பட்டு இறந்து போன அதே இடத்தில் மறு ஜென்மத்தில் ஒரு மச்சமோ வடுவோ இருந்ததைக் கண்ட ஸ்டீவன்ஸன் குழந்தையின் பெற்றோரைக் கேட்ட போது அது இந்த ஜென்மத்தில் ஏற்பட்டதில்லை என உறுதி படக் கூறினர்!

ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த 3000 கேஸ்களையும் பார்க்க இங்கு இட்டமில்லாவிட்டாலும் இரண்டு சுவையான அவரது அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1972ஆம் ஆண்டு பர்மாவில் மா டின் அங் ம்யோ என்ற 19 வயது இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.அவளைக் கர்ப்பத்தில் சுமந்த போது அவளது அம்மா ஒரு ஜப்பானிய போர்வீரனை அடிக்கடித் தன் கனவில் கண்டு வந்தார். மா டின் வளர்ந்து வந்த போது தான் ஒரு ஜப்பானிய போர் வீரன் என்றும் விமானத் தாக்குதலில் இன்னொரு விமானத்தால் தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி வந்தார். ஜப்பானின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த தனக்கு மணம் ஆகி குழந்தைகளும் இருந்ததாக அவள் கூறியதோடு விமானம் பறப்பதைக் கண்டாலே அஞ்சி அழ ஆரம்பிப்பாள். மேகமூட்டத்தைக் கண்டாலும் அவள் பயப்படுவாள். பர்மிய சீதோஷ்ண நிலை அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆண்கள் அணியும் உடையைத் தான் அவள் அணிவாள்.அவள் இந்த ஜென்மத்தில் தன்னால் ஒரு ஆணை மணம் புரிய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.

ஸ்டீவன்ஸனுக்கு அவள் கூறிய ஆதாரங்களை ஜப்பானுக்குச் சென்று எங்கு சரி பார்ப்பது என்பது புலப்படவில்லை. தான் சந்தித்த கேஸ்களில் புரியாத புதிராக இருந்த கேஸ்களில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ லங்காவில் 1988இல் அவர் ஆராய்ந்த 3 கேஸ்கள் அவருக்கு பிரமிப்பை ஊட்டின. அவற்றில் ஒன்று இரங்கா என்ற பெண்மணி பற்றியது. அவள் 15 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தான் முந்தைய ஜென்மத்தில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டாள். அவள் கூறிய நுணுக்கமான 43 விஷயங்களை ஸ்டீவன்ஸன் தானே அவள் வாழ்ந்த முந்தைய ஜென்ம இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அவற்றில் 38 விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன!

விஞ்ஞானிகள் தான் இப்படி பல சுவையான உண்மைச் சம்பவங்களைக் கூறி இருக்கிறார்கள் என்பதில்லை; பிரபல ஹாலிவுட் நடிகையான ஷர்லி மக்லீன் (பிறப்பு 24-4-1934 இப்போது வயது 84) தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி ஐ ஆம் ஓவர் ஆல் தட்  (I’m Over All That) என்ற நூலில் எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் புத்தகத்தில் அவர் மறுஜென்மம் உண்டு என்பதையும் தனது  முந்தைய ஜென்மங்களைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். பேரழகியும் பெரும் நடிகையுமான அவர், “இந்தியாவிற்கு நான் சென்ற போது பல கோவில்களை நான் முன்னரே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்படக் காரணம் என்ன, பிரேஜிலுக்கு நான் சென்ற போது போர்த்துக்கீசிய மொழியில் என்னால் எப்படிப்பேச முடிந்தது? என்று அவர் கேட்ட போது உலகமே வியந்தது.

84 வயதான அவர் 15க்கும் மேற்பட்ட சுவையான நூல்களை எழுதியுள்ளார். பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்ட நூல்கள் இவை!

எட்கர் கேஸ் ஆயிரக்கணக்கான கேஸ்களை ஆராய்ந்தவர்; நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது முந்தைய ஜென்மம் பற்றிக் கூறியவர். அவை வெவ்வேறு நாடுகளில் சரி பார்க்கப்பட்டவை. அவர் பற்றி ஏற்கனவே  பாக்யாவில் விந்தை மனிதர்கள் தொடரில் எழுதி இருப்பதால் அதை இங்கு திருப்பிக் கூறவில்லை.

இன்னும் சில விஷயங்களை அடுத்துப் பார்ப்போம்  

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷாரின் இன பேதக் கொள்கையால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி. கல்கத்தாவில் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்த போது மற்ற ஆங்கிலேயருக்கு இணையான சம்பளம் அவருக்குத் தரப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் கல்வி சம்பந்தமான அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு இனபேதக் கொள்கையால் அவரை மட்டம் தட்டவே முயற்சித்தது. அவரது ஆய்வுப் பேப்பர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்யப்பட்டது. 24 சதுர அடி கொண்ட ஒரு மிகச் சிறிய அறையே அவரது லாபரட்டரி! அதில் அவரது சாதனங்களை வைக்கவே அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதையும் மீறி ரேடியோ விஞ்ஞானத்தில் அவர் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடைந்தார். மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்கு முன்னரே அவர் அதைக் கண்டு பிடித்து விட்டாலும் தாவரம் பற்றிய ஆய்வையே அவர் முக்கியமானதாக எடுத்துக் கொண்டார். பின்னாளில் அவர் மார்கோனியை நேரில் சந்தித்தும் இருக்கிறார். வயர்லெஸ் தொடர்பில் ஆரம்ப காலக் கண்டுபிடிப்புகளையும் அவரே கண்டுபிடித்தார்.

1997இல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் எஞ்சினியர்ஸ் அவரை ரேடியோ ஸயின்ஸின் தந்தை என்று அறிவித்தது.

அவரைக் கௌரவிக்கும் விதமாக சந்திரனில் உள்ள பெரும் பள்ளம் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாபா பள்ளத்திற்கும் அட்லர் பள்ளத்திற்கும் அருகில் உள்ள போஸ் பள்ளத்தின் குறுக்களவு 91 கிலோமீட்டர். வயர்லெஸ் டெலிகம்யூனிகேஷனில் அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளே சாடலைட் தகவல் தொடர்புக்கு வழி வகுத்தது என்பதால் இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் ஜகதீஷ் சந்திர போஸ்!

****

புதிய சேனல் AsacredSecret :-

ariviyal aringar vazhvil ep 41

மதுவைத் தொடாத மாபெரும் விஞ்ஞானி

ஸ்டாக்ஹோம் சென்ற சர் சி.வி. ராமனுக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது.அவர் மதுவைத் தொடவில்லை. அவர் காலையில் ஆல்கஹாலை வைத்து ஒரு சோதனையைக் காண்பித்திருந்தார். அதை வைத்து ஒருவர் ஜோக் அடித்தார். அது என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 18 விநாடிகள்

***

மரணமடைந்த பின் மீண்டவர்கள்-2(Post No.5875)

Written by S Nagarajan


Date: 3 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-23 am


Post No. 5875

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாக்யா வார இதழில் வாரந்தோறும் இடம் பெறும் அறிவியல் துளிகள் தொடரில் அத்தியாயம் 407

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி மூன்றாம் கட்டுரை)

மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

ச.நாகராஜன்

மரணமடைந்த பின்னர் மீண்டும் உயிருடன் திரும்பியோர் பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில், அவர்கள் தாம் வாழ்ந்த கலாசாரத்திற்குத் தக்கபடி தங்கள் அனுபவங்களைக் கூறுகின்றனர் என்பது தான் அது.

அமெரிக்காவில் இப்படிப்பட்ட அனுபவங்களை விவரிப்போர், “பிரக்ஞை இன்றி, நான் இறந்தவுடன்  ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கு வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகளும் பெரியவர்களும் இருந்தனர். அவர்கள் எந்த இனத்தவர் என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் பாடியதை நிறுத்தி விட்டு, ‘உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லையே’ என்றனர். உடனே நான் வேகமாகத் திரும்பி விட்டேன்.” இது மோர்ஸ் (Morse-1992) தனது ஆய்வில் தரும் தகவல்.

பஸ்ரிசா மற்றும் ஸ்டீவன்ஸன் (Pasricha and Stevenson – 1986) மரணத்திலிருந்து மீண்ட 16 இந்தியர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுவது பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது. “நான்கு கறுப்பு நிறத் தூதர்கள் என்னை வந்து பிடித்துக் கொண்டனர். என்னை எங்கே கொண்டு போகிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் என்னை ஒரு தேவதையிடம் அழைத்துச் சென்றனர். எனது உடல் மிகவும் சுருங்கி இருந்தது.அந்த தேவதைக்கு முன்னர் பெரிய புத்தகங்கள் இருந்தன.அவர் கையில் ஒரு பேனா இருந்தது. அவர் அருகில் பல உதவியாளர்கள் இருந்தனர். அந்த தேவதை, ‘சாஜூ பனியா(வணிகர்) நமக்குத் தேவையில்லை. நாம் கேட்டது சாஜு கும்ஹாரைத் தான் (குயவர்). இவரை அனுப்பி விடுங்கள். அந்த இன்னொருவரைக் கொண்டு வாருங்கள்’ என்றது.

       

நான் பூமிக்குத் திரும்பி வர விரும்பவில்லை. அந்த உதவியாளர்களிடம் ஏதேனும் ஒரு வேலை தருமாறு வேண்டினேன்.என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றேன். உயர்ந்த ஆசனத்தில் வெள்ளை தாடியுடன் மஞ்சள் உடையுடன் அங்கே அமர்ந்திருந்த யமராஜர், ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று என்னைக் கேட்டார். நான் அங்கேயே தங்க வேண்டும் என்றேன். அவர் என் கையை நீட்டச் சொன்னார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் இருந்த இடத்திற்கு வந்து உயிர் பிழைத்து விட்டேன்”

இந்தியர்களின் அனுபவம் அமெரிக்கர்களின் அனுபவத்தை ஒத்ததாக உள்ளது. அதில் மதம் அதிகப் பங்கு வகிக்கிறது.

16 பேர்களை ஆய்வு செய்ததில் 13 இந்தியர்கள் இதே அனுபவத்தைக் கூறினர்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பற்றிய ஆய்வை மர்பி (2001இல்) நடத்தினார். அதில் அவர் யமராஜனைப் பார்த்ததாகவும் ஒரு பெரிய ஹாலுக்குள் அவர் யமதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். ‘யமராஜன் என்னைப் பார்த்து இவர் தவறாக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று சொல்லி திருப்பி அனுப்பும் படி சொல்லவே நான் மீண்டு வந்தேன்’ என்றார் அவர்!

க்ரிசென் (Greyson -1983) தனது ஆய்வில் இப்படி சாவிலிருந்து மீண்டவர்களில் பலர் சைக்கிக் எனப்படும் அமானுஷ்ய சக்தியைப் பெறுகின்றனர் என்கிறார். ஆவிகளைக் காண்பது, மனிதர்களைச் சுற்றியுள்ள அவுரா (Aura) எனப்படும் ஒளிவட்டத்தைக் காண்பது, ஆவிகளுடன் பேசுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மோர்ஸ் (1992) தனது ஆய்வில் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வந்தவுடன் இவர்களில் பலருக்கு மின்சாரம் மற்றும் காந்த சக்தி ஆகியவற்றில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார். அவர்கள் கையில் கட்டியிருக்கும் கடிகாரங்கள் வேலை செய்வதில்லை. மின் பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் பல அவர்களுக்கு வேலை செய்வதில்லை!

இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படுவதற்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் உண்டா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வுக்குள் கொண்டு வந்தனர். போதை மருந்துகள், வலிப்பு,ஆக்ஸிஜன் பற்றாக்குறை, புலன் உணர்வு குறைதல், தோற்ற மயக்கம் (hallucination) ஆகிய இவற்றால் அப்படி ஒரு அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்களோ என்ற விவாதமும் நடைபெறுகிறது.

ரிங் (1980) தனது ஆய்வில், ‘இறந்தவுடன் இறந்தவரின் பிரக்ஞை அடுத்த ஒரு மேலான மட்டத்திற்குச் செல்கிறது. இதை நான் நான்காவது பரிமாணம் என்கிறேன். இறந்தவர் தனது இன்னொரு ‘உயரிய நபரைப்’ பார்க்கிறார். அந்த இன்னொருவர் தான் அவருக்கு ‘ஒளி உருவமாகத்’ தெரிகிறார்” என்கிறார்.

     குக் (1998) எனும் விஞ்ஞானி தனது ஆய்வில் மனம் பற்றியும் இதில் ஆராய வேண்டும் என்கிறார். ‘இறந்தவரின் மனம் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இயங்குகிறதோ, அதனால் தான் அவரால் இப்படி ஒரு அனுபவத்தைச் சொல்கிறாரோ எனப் பார்க்க வேண்டும்’ என்பது அவரது முடிவு.

விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் பல நாடுகளிலும் உள்ள பலரும் இப்படிச் சொல்வது அதிசய ஒற்றுமை அல்லவா, ஆகவே இதில் உண்மை இருக்கிறது என்கின்றனர்.

இன்னும் சிலரோ போதுமான சான்றுகள் பெரிய எண்ணிக்கையில் கிடைக்கவில்லை; என்றாலும் கூட இது ஆராயப்பட வெண்டிய மர்மமான ஒரு விஷயம் தான் என்கின்றனர்.

இது பற்றி சுமார் 450 பெரிய புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் என்பதிலிருந்தே இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆயிரக்கணக்கான கேஸ்கள்! பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லாத பலரும் இதைச் சொல்கின்றனர்.

ஆகவே மரணத்திற்குப் பின் மறுவாழ்வு உண்டா?

மரணமடைந்து மீளாதவர்களும் சொல்ல முடியாது; உயிரோடிருப்பவர்களும் சொல்ல முடியாது. மரணமடைந்து மீண்டவர்கள் மட்டுமே இதைச் சொல்லமுடியும்.

நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம் என்பது தான் இன்றைய அறிவியல் நிலை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபலமான இந்திய விஞ்ஞானிகளில் ஒருவரான சர் ஜகதீஷ் சந்திர போஸ் (பிறப்பு 30-11-1858 மறைவு 23-11-1937) பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தவர். அவரது அபாரமான கண்டுபிடிப்புகள் லேசில் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் தனது ஆய்வுக் கட்டுரையை இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பிய போது அது நிராகரிக்கப்பட்டது.

பின்னால் அவர் இங்கிலாந்து சென்று தனக்கென ஒரு சிறிய லாபரட்டரியை அமைத்த போது ராயல் சொஸைடியின் உறுப்பினர் ஒருவர் அங்கு வந்து அதைப் பார்த்தார். போஸின் ஆராய்ச்சியைக் கண்டு வியந்து போன அவர் போஸிடம்,


“ உங்களது கட்டுரை ஒரு வோட்டால் நிராகரிக்கப்பட்டது. அந்த ஒரு வோட்டைப் போட்டவன் நான் தான்” என்று மிக வருத்தப்பட்டுக் கூறினார்.

தாவரத்திற்கும் வலி தெரியும் என்று போஸ் கூறியதில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையே இல்லை. ஆகவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு 1901ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி ராயல் சொஸைடியின் பிரதான ஹாலில் தன் சோதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். ஹால் முழுவதும் விஞ்ஞானிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

போஸ் மிகுந்த கவனத்துடன் ஒரு செடியின் வேர் பாகத்தை அதன் தண்டுடன் சேர்த்து, தான் தயாரித்து வைத்திருந்த ப்ரோமைட் கரைசலில் அமிழ்த்தினார். உடன் என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் திரையில் அதன் அசைவுகளை அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். கரைசலில் அமிழ்த்தப்பட்ட செடியின் பாகம் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து ஆட ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே அது வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. பின்னர் உயிர்த்துடிப்பு நின்றது போல நின்றது. விஷம் கொடுக்கப்பட்ட எலி எப்படித் துடிதுடித்துச் சாகுமோ அது போல அந்த நிகழ்வும் இருந்ததை அனைத்து விஞ்ஞானிகளும் பார்த்துப் பிரமித்தனர். அவர்களின் கரகோஷம் ஹாலையே பிளந்தது.

ப்ரோமைட் விஷத்தின் பாதிப்பால் செடி துடிதுடித்து இறந்ததை உலகம் அறிந்த போது தான் போஸின் அறிவியல் ஆய்வின் திறன் தெரிய வந்தது. 1917இல் அவருக்கு க்னைட் பட்டம் தரப்பட்டது. 1920இல் அவர் ராயல் சொஸைடியின் ஃபெலோ என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

***

மரணமடைந்த பின் மீண்டவர்கள்-Part 1 (Post No.5865)

Written by S Nagarajan


Date: 1 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-43 am


Post No. 5865

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிவியல் துளிகள் அத்தியாயம் 406

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி இரண்டாம் கட்டுரை)

மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1 (Post No.5865)

ச.நாகராஜன்

அறிவியல் துலக்கத் துடிக்கும் வாழ்வியல் மர்மங்கள் பல.

கருவில் உயிர் எப்போது எப்படி சேர்கிறது, கரு ஆணாவது எப்படி அல்லது பெண்ணாவது எப்படி, பிரக்ஞையும் மனமும் உயிரில் எப்போது எப்படி சேர்கிறது, உயிர் உடலிலிருந்து எப்படி பிரிகிறது போன்றவை பற்றி அறிவியல் விளக்கத் துடித்தாலும் போதுமான விவரங்கள் தான் இல்லை. ஆகவே ஏராளமான விஞ்ஞானிகள் பல கோணங்களில் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவற்றில் முக்கியமான ஆய்வான மரணத்தின் பின் என்ன ஆகிறது என்பதைக் கடந்த பல வருடங்களாகவே பல பிரபல விஞ்ஞானிகள் ஆய்ந்து வந்தனர். மரணம் அடைந்து அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிருடன் எழுவது ஒரு அதிசயம்.

ஆனால் இந்த அதிசயம் உலகெங்கும் ஆங்காங்கே பல நாடுகளிலும் நடைபெற்று வரும் ஒன்று.

மர்மமான இந்த விஷயத்தைப் பற்றி விஞ்ஞானிகள் ரேமாண்ட் மூடி, ரிங்,கிப்ஸ்,காலப்,ப்ரொக்டர்,லுந்தால், நொப்ளாச், சபாம், ஷ்னேபர், பனிட்ஸ்,க்ரேஸன்,அல்வாராடோ, ஜிங்க்ரோன், க்ரோஸோ, ஐயான் ஸ்டீவன்ஸன் (Raymond Moody, Ring,Gibbs,Gallup,Proctor,

Lundahl,Knoblauch,Sabom,Schnaper,Panitz,Greyson,Grosso,Alvarado, Zingrone, Ian Stevenson) உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முதலில் மரணத்திற்குப் பிறகு இன்னொரு வாழ்க்கை உண்டா என்பதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிய பல்வேறு நாடுகளில் உள்ள ஏராளமானோரிடம் அறிவியல் கணிப்பு முறைப்படி ஆய்வு செய்த போது நாடு பேதமின்றி 90 சதவிகித மக்கள் அப்படி ஒரு வாழ்க்கை உண்டு என்பதைப் பற்றிய தங்களின் உறுதியான நம்பிக்கையைப் பதிவு செய்தனர்.

அடுத்து மரணம் அடைந்த பின்  உயிருடன் மீண்டவருள் குழந்தைகள் முதல் வயதானவர் வரை உலகெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பொதுவான அம்சங்கள் பல இருப்பதை ரேமாண்ட் மூடி சுட்டிக் காட்டினார்.

அவையாவன:

1. அந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

2. இறந்த பின்னர் அருகிலிருக்கும் டாக்டர் அல்லது உறவினர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்வதை இறந்தவர் கேட்கிறார்.

3. ஒரு அமைதியும் மகிழ்ச்சியும் உடனே கிடைக்கிறது.

4. சகிக்க முடியாத படி ஓசை கேட்கிறது. டர் என்றோ மணி அடிப்பது போலவோ ஒரு ஓசை!

5. ஒரு இருண்ட குகையில் நுழைவது போல இருக்கிறது.

6. மனமானது வெளியே சென்று உடலுக்கு மேலே மிதந்தவாறே உடலைப் பார்க்கிறது.

7. இறந்தவரைப் பலரும் எதிர்கொண்டு எப்படி ‘இந்த மாற்றத்தை எதிர்கொள்வது’ என்று சொல்கின்றனர், அல்லது உடனடியாக உடலுக்குத் திரும்புமாறும் சொல்கின்றனர்.

8. உயிருள்ள ஒரு ஒளியை – பிரகாசத்தைப் பார்க்கின்றனர்.

9. வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஒரு மதிப்பீடாக ஓடி வருகின்றன.

10. உயிர் வாழ்வது மற்றும் இறப்பது ஆகிய இந்தப் பிரிவின் எல்லையாக ஒரு நீர்ப்பரப்பையோ,ஒரு பனிப்படலத்தையோ,ஒரு கதவையோ அல்லது ஒரு வேலியையோ பார்க்கின்றனர்.

11. உடலுக்குத் திரும்பி வருவதை உணர்கின்றனர்.

12. உடலுக்குத் திரும்பி வந்தவுடன் அருகிலிருந்தவர்களிடம் தாங்கள் உயிர் பிழைத்தது பற்றிச் சொல்ல ஒரே தயக்கமாக இருக்கிறது.

13. இறந்த பின் மீண்டும் பிழைத்த அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பாஸிடிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

14. இறப்பைப் பற்றிய பயமே போய், மரணம் பற்றி ஒரு புதிய அணுகு முறை உண்டாகிறது.

இந்த பதினான்கு அம்சங்களில் உடலை விட்டு வெளியே சென்றவுடன் ஏற்படும் ஆனந்தமான ஒரு உணர்வை அனைவரும் சொல்கின்றனர். மேலிருந்து தன் உடலையும் சுற்றி இருப்போரையும் பார்ப்பதில் தெளிவான பார்வை உள்ளது, வண்ணங்களும் தெரிகின்றன என்று மரணத்திலிருந்து மீண்டு வந்தவர்கள் கூறினர்.

விஞ்ஞானிகள் ஹோல்டனும் ஜோஸ்டனும் (Holden and Joesten – 1990) ஒரு சிறிய சோதனையை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரி படுக்கையின் மேலே ஆவிகள் மட்டுமே பார்க்கும்படியான அடையாளக் குறியீடுகளை தக்க இடத்தில் வைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் ஆறு மாதங்கள் மரணமடையவில்லை ஆனால்  ரிங் மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் இது போன்றதொரு சோதனையை (1993இல்) மேற்கொண்ட போது இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்தபின்னர் அதன் பிடியிலிருந்து மீண்டு வந்தவர்கள் தாங்கள் மேலே மிதந்த போது ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள பொருள்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். படுக்கையில் இருந்து பார்க்க முடியாத பொருள்கள் அவை. இதனால் உத்வேகம் பெற்ற விஞ்ஞானிகள் இதை இன்னும் நன்கு ஆராய வேண்டும் என்று சகாக்களை வேண்டிக் கொண்டனர்.

விஞ்ஞானிகள் மோரிஸ் மற்றும் க்னாஃப் (Morris and Knafl)இது போலவே சோதனையைச் செய்தனர் (2003இல்).இறந்து மீண்ட ஒரு நோயாளி ஆஸ்பத்திரியின் மேல் புறத்தில் இருந்த காபினெட்டின் மேலே ஒரு பென்னி நாணயம் இருப்பதைப் பார்த்ததாகச் சொன்னார். அவசரம் அவசரமாக அந்த கேபினெட்டின் மேற்புறத்தை ஆராய்ந்த போது அங்கு ஒரு பென்னி நாணயம் இருப்பதைக் கண்டனர். யாராலும் எளிதில் பார்க்க முடியாத அந்தச் சின்ன நாணயத்தை இறந்து மீண்டவர் கண்டதாகச் சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து  தொடர்வோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் மிக முக்கியமானவர் டாக்டர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (Dr. Benjamin Franklin : பிறப்பு 17-1-1706 மறைவு 17-4-1790). இவர் ஒரு விஞ்ஞானி. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்.எழுத்தாளர். அச்சக நிபுணர். அரசியல் கொள்கை வகுப்பாளர். அரசியல்வாதி.ராஜ தந்திரி. போஸ்ட்மாஸ்டர்.நகைச்சுவையாளர். பொதுநலத்தில் ஊக்கமுடையவர்.

இத்துணை பெருமையும் படைத்த இவர் தான் அமெரிக்காவின் முதல் பொது நூலகம் திறப்பதற்கும் காரணமானவர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரான எக்ஸிடர் (Exeter) என்பதன் பெயரை ஃப்ராங்க்ளினைக் கௌரவிக்கும் விதமாக ‘Franklin’ என மாற்ற அனைவரும் முடிவு செய்தனர்.

இந்த கௌரவத்திற்கு பதிலாக அவரிடம் ஊரார் அந்த ஊர் சர்ச்சுக்கு ஒரு கண்டாமணியைத் தருமாறு கேட்டனர். ஆனால் ஃப்ராங்க்ளினோ ஒலிக்கு பதிலாக அறிவை முன்னிலைப் படுத்த எண்ணினார். (Sense preferable to Sound). ஆகவே ஊர் மக்கள் படிப்பதற்காக 116 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.

புத்தகங்கள் வந்து சேர்ந்தவுடன் ஒரு பெரிய விவாதம் தொடங்கியது. அந்தப் புத்தகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் தான் அது. ஊர் மக்கள் ஒரு கூட்டம் கூட்டினர். 1790, நவம்பர், 20ஆம் தேதிய அந்தக் கூட்டத்தில் ஒருமித்த முடிவாக ஊரார் இலவசமாக அந்த நூல்களை அனைவருக்கும் படிக்கக் கொடுக்க வேண்டும் என்று ஓட்டுப் போட்டனர். அது ஒரு பொது நூலகமாக ஆனது. இது தான் அமெரிக்காவின் முதல் பொது நூலகம் பிறந்த கதை. 1904இல் நூலகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் உருவானது. ஃப்ராங்க்ளின் அன்று கொடுத்த நூல்கள் அனைத்தும் இன்றும் கூட ஒரு அலமாரியில் அந்த நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

tags- மரணமடைந்த பின் மீண்டவர்கள்

***

அமேஸிங் க்ரெஸ்கின்! (Post No.5840)

Written by S Nagarajan

Date: 27 DECEMBER 2018


GMT Time uploaded in London – 5-40 am


Post No. 5840

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியிடப்பட்டுள்ள 405வது அத்தியாயம் (எட்டாவது ஆண்டு 41வது கட்டுரை)

அமேஸிங் க்ரெஸ்கின்!

ச.நாகராஜன்

மனமறியும் வித்தை எனப்படும் மெண்டலிஸம் (Mentalism) இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. எண்ணத் தூண்டுதலால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு கருத்து என் எல் பி எனப்படும் நியூரோ லிங்க்விஸ்டிக் ப்ரொக்ராம் என்ற உத்தியினால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பிறர் மனதைத் தூண்டி அவரை தனது வசத்திற்கு உள்ளாக்குவது சாத்தியம் தானா? விஞ்ஞானிகள் பலர் இந்த்த் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் இந்த நாளில், இது சாத்தியம் தான் என்று இதைச் செய்து காட்டி அசத்துபவர் க்ரெஸ்கின்.

தி அமேஸிங் க்ரெஸ்கின் என்ற பெயரால் இன்று உலகெங்கும் பிரபலமாக அறியப்படும் இந்த மாயாஜால நிபுணரின் இயற் பெயர் ஜார்ஜ் ஜோஸப் க்ரெஸ்ஜி. (George Joseph Kresge; பிறப்பு 21-1-1935; வயது 84). அமெரிக்கரன இவர் லீ ஃபாக்கின் மாண்ட் ரக், தி மாஜிஷியன் என்ற காமிக் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்டு மாஜிக் கலையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் அமேஸிங் க்ரெஸ்கின் என்ற தொடரால் பிரபலமானார். ஐந்து வருடங்கள் இந்தத் தொடர் சக்கை போடு போட்டது.இதை அனைவரும் விரும்பவே மீண்டும் தி நியூ க்ரெஸ்கின் ஷோ என்று புதிய தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

புகழ் பெற்ற இவரது மாஜிக் வித்தைகளில் அனைவரையும் மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் தலையாய வித்தை, நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தினுள் இவருக்குத் தரப்பட வேண்டிய ஒளித்து வ்வைக்கப்பட்டிருக்கும் செக்கைக் கண்டுபிடிப்பது தான்.

இவர் அரங்கத்தின் வெளியே சென்ற பின் அங்குள்ளோர் ஏதாவது ஒரு இடத்தில் செக்கை ஒளித்து வைத்து விடுவார்கள். வரலாம் என்று சொன்னவுடன் அரங்கத்தில் நுழைந்து நேராக செக் இருக்கும் இடத்திற்குச் சென்று அதை எடுத்துக் கொள்வார். கரகோஷம் வானைப் பிளக்கும்.

செக் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தனக்கு அன்றைய ஷோவுக்காகத் தரப்படவேண்டிய தொகையை வாங்க மாட்டேன் என்பது இவரது உறுதி மொழி.

சுமார் 6000 ஷோக்களில் 11 முறை மட்டுமே இவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்!

சமீபத்தில் 2018, ஏப்ரல் 14ஆம் தேதி நியூயார்க் லயன் தியேட்டரில் இவரது இரண்டு மணி நேர நிகழ்ச்ச்சி நடந்தது. ஆடியன்ஸில் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரிடம் வழக்கம் போல் இவர் ஒப்பந்தத்தை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்த ஒப்பந்தப் பெப்பரைக் கண்டுபிடிக்கவில்லை எனில் பணம் வாங்க மாட்டேன் என்ற அவரது உறுதி மொழி அந்தப் பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

வெளியில் சென்றவர், அழைக்கப்பட்டவுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். ஆனால் உடனே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும் செல்வது போல இந்த முறை அவரால் செல்ல முடியவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத் திருப்பித் திருப்பிச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த பேப்பர் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்ட அவர் அன்று டிக்கட் மூலம் வசூலான அனைத்துப் பணமும் விலங்குகளின் நலனுக்காக அவைகள் பராமரிக்கப்படும் ஒதுங்கிடங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் அந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், முதலில் குழுவினர் ஒரு இடத்தில் அந்தப் பேப்பரை ஒளித்து வைத்தனர். அவரை வருமாறு கூறிவிட்டு அவர் வருவற்குள் இன்னொரு இடத்திற்கு அதை மாற்றி ஒளித்து வைத்தனர்.க்ரெஸ்கினோ முதலில் ஒளித்து வைக்கப்பட்ட இடத்திற்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டிருந்தார். இது குழுவின் ஏமாற்று வேலை என அவரது ரசிகர்கள் கோபத்துடன் கூறினர்.

மாயாஜால நிபுணரான க்ரெஸ்கின் மாஜிக்கை ஒரு பொழுது போக்குக் கலையாகவே கருதுகிறார். பிறர் மனதை அறியும் சக்தி எதையும் கொண்டிருப்பதாக அவர் கூறியதே இல்லை.

ஆனால் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை அவர் வெளியிடுவது வழக்கம்.

2002ஆம் ஆண்டில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி லாஸ் வேகாஸில் மாலை 6 மணியிலிருந்து 9.45க்குள் வானில் ஒரு பறக்கும் தட்டு தென்படும் என்றும் அதி ஆயிரக்கணக்கானோர் பார்ப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் இருந்தது. அப்படி ஒருவேளை யாரும் அதைப் பார்க்கவில்லையெனில் 50000 டாலர் நன்கொடையாக அளிப்பதாகக் கூறினார். ஆனால் அப்படி ஒரு வானியல் நிகழ்வு நிகழவில்லை. க்ரெஸ்கினை இது பற்றிக் கேட்ட போது பல பச்சை வண்ணப் பொருளை வானில் பார்த்ததாகக் கூறி இருப்பதால் 50000 டாலரை நன்கொடையாகத் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார். ஹிப்நாடிஸத்தில் நிபுணரான அவர் 200 பேரை மனோவசியம் செய்து பறக்கும் தட்டைப் பார்க்க வைக்க முடியும் என்றார்.

ஹிட்லர் கூட மனோவசியத்தினாலேயே கூட்டத்தினரை ‘கட்டி’ வைத்தார் என்பது அவரது எண்ணம்.

.அவரிடம் மானேஜராக வேலை பார்த்த சீன் மக்ஜின்லி 2008ஆம் ஆண்டு அவருடனான தனது அனுபவங்களை வைத்து ‘தி க்ரேட் பக் ஹோவர்ட்’ (The Great Buck Howard ) என்ற படத்தை எடுத்தார்.

உலகம் கண்ட மனோவசிய நிபுணர்களில் க்ரெஸ்கின் தனிப்பெருமை கொண்டவர். முப்பது வருட வாழ்க்கையில் பதினோரு தரம் மட்டுமே செக்கைக் காணாமல் தோல்வியை ஒப்புக் கொண்ட அவரது நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ரால்ப் வில்லியம் ப்ரான் (Ralph William Braun பிறப்பு :18-12-1940 மறைவு: 8-2-2013) அமெரிக்காவில் இண்டியானாவில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயதாகும் போது அவரால் நடக்க முடியவில்லை. முதுகுத்தண்டு வடத்தில் ஏற்பட்ட கோளாறு அவரை ஊனமுற்றவராக ஆக்கியது. ஆனால் மனம் தளராதா ப்ரான் சக்கர நாற்காலியில் செல்ல ஆரம்பித்தார். இண்டியானா பல்கலைக் கழக வளாகம் மிக அகன்ற ஒன்றாக இருக்கவே அவரால் அதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியவில்லை. அதிலிருந்து விலகி சுலபமாக ஓடும் நாற்காலி ஒன்றைச் செய்தால் என்ன என்று யோசித்தார். விளைவு, கடுமையான உழைப்பின் மூலமாக எலக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை வடிவமைத்தார்.

அத்துடன் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்றையும் வடிவமைத்தார். இதைப் பார்த்து வியந்த பலர் ஊனமுற்ற தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் அதே போலச் செய்து தருமாறு வேண்டினர். உற்சாகத்துடன் ஒரு தொழிலகத்தைத் தொடங்கிய அவர் எலக்ட்ரிக் வீல் சேர்களைத் தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் ஒரு தீ விபத்து ஏற்பட அது கருகிச் சாம்பலானது. ஆனால் அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் ஒன்றாக இணைந்து ப்ரானுக்கு உதவி தொழிற்சாலையை மீண்டும் துவங்க உதவினர். 700 தொழிலாளர்கள் பணியாற்றும் மூன்று தொழிற்சாலைகளை அவர் உருவாக்கினார். ஒவ்வொரு மாகாணமாகச் சென்று தன் தயாரிப்புகளுக்கு விற்பனை பிரதிநிதிகளை நியமித்து தனது நிறுவனத்தைப் பெரியதொரு நிறுவனமாக ஆக்கினார் அவர். இன்று 20 கோடி டாலர் நிறுவனமாக அது திகழ்கிறது. அவரது ஊக்கமூட்டும் இந்த மேற்கோளை உலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது :

மேலே உயருங்கள், எனது நண்பர்களே! பின்னர் மற்றவர்களை வாழ்க்கை ஏணியில் ஏற உதவுங்கள்!

(Rise above, my friends, and reach back to help others climb the ladder of life!)

***