காடுகள் பற்றி இந்துமதம்—-கேள்வி&பதில்

tapovan3

Tapovan area

Post No. 732 by London swaminathan

1.அர்ஜுனனும் கண்ணனும் அழித்த வனத்தின் பெயர் என்ன?
2.சீதையை ராவணன் சிறைவைத்த வனத்தின் பெயர் என்ன? அது எங்கே இருக்கிறது?
3. பிருந்தாவனத்துடன் தொடர்புடைய கடவுள் யார்?
4.முனிவர்கள் சுகப்பிரம்மத்திடம் புராணம் கேட்ட காடு எது? அது எங்கே உள்ளது?
5. எந்தக்காட்டுக்கு அப்பரும் சம்பந்தரும் சென்றனர்?

6. ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் காட்டின் பெயராலுள்ள பிரிவுகளின் பெயர் என்ன என்ன?
7.தண்டகாரண்யத்துக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு?
8.மனித வாழ்வின் நான்கு கட்டங்களில் வனத்துக்குச் செல்லும் கட்டத்துக்கு என்ன பெயர்?
9. காட்டின் பெயர் உடைய பெரிய உபநிஷத் எது?
10. புத்தர் முதல் பிரசங்கத்தை எங்கே நடத்தினார்?

gangotri glacier2

11. தமிழில் நாநிலப் பாகுபாட்டில் காடு, காட்டை சேர்ந்த இடத்துக்கு என்ன பெயர்?
12. தாருகாவனத்தில் என்ன நடந்தது?
13. ஸ்வேதாரண்யம் எங்குள்ளது?
14. பதரிவனத்தில் யாருடைய கோவில் இருக்கிறது?
15. வேதத்தில் காட்டிற்கு அதிதேவதை யார் என்று கூறப்பட்டுள்ளது?

16. காட்டில் உருவாக்கப்பட்ட வேதத்தின் பகுதிகளுக்கு என்ன பெயர்?
17. தபோவனம் எங்கே இருக்கிறது?
18. கோவில்களுக்காகப் பூச் செடிகளை வளர்க்கும் இடத்துக்கு என்ன பெயர்?

dandakaranya
Dandakaranya

ANSWERS:

1.காண்டவ வனம்
2.அசோக வனம்; இலங்கையில் இருக்கிறது
3. கிருஷ்ணன்
4. நைமிசாரண்யம். அது தற்போதைய டில்லியைச் சுற்றியுள்ள பகுதி. இதே பெயரில் ஒரு புனிதத் தலம் இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது.
5. வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு. இதைச் சுற்றியுள்ள காடுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது ஒர் ஊரின் பெயராக இருக்கிறது.

6. ராமாயணத்தில் ஆரண்ய காண்டம், மஹா பாரதத்தில் ஆரண்ய / வன பர்வம்
7.தண்டகாரண்யத்தில்தான் அரக்கர்களை வதம் செய்தான் ராமன். கர தூசணர்களை வதைத்தான்; சூர்ப்பநகையை அவமானப்படுத்தினான்.
8. வானப்ரஸ்தம் என்பது வனத்துக்குச் செல்லும் நிலை. அதற்கு முன் பிரம்மசர்யம், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலைகளும் வானப்பிரஸ்தத்திற்கு அடுத்தபடியாக சந்யாசம் என்ற துறவு நிலையும் உண்டு.
9. பிருஹத் ஆரண்யக உபநிஷத் (ஆரண்யம், வனம் என்றால் காடு என்று பொருள்)
10. மான்கள் பூங்காவில் (ம்ருக வனம்) நடத்தினார்
naimisaranya-pKS-543020

Naimisaranya

11. முல்லை என்பது காடும் காட்டைச் சேர்ந்த பகுதியும் ஆகும்; குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சேர்ந்த பகுதியும் ஆகும்
12. தாருகாவனத்தில் செருக்குற்ற முனிவர்களை இறைவன் அடக்கினான். சிவன் பிட்சாடனராகவும் விஷ்ணு மோகினி உருவத்திலும் சென்று அவர்களுடைய பலவீனத்தை உணரச் செய்தனர்.
13. ஸ்வேதாரண்யம் என்பதன் தமிழ்ப் பெயர் திருவெண்காடு. இது மயிலாடுதுறை- பூம்புஹார் இடையே இருக்கிறது
14. இமய மலையில் பதரிவனத்தில் பத்ரி நாராயணர் ( நர நாராயணர் ) கோவில் இருக்கிறது. பத்ரிவனம் என்றால் இலந்தைமரக் காடு என்று பொருள். வியாசர் வசித்த இடம்
15. வேதக் கடவுள் அரண்யானி

16. ஆரண்யகம் (சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கும் வேதத்தின் பகுதிகள்)
17. தபோவனம் என்பது தவம் செய்யக்கூடிய எந்தக் காட்டையும் குறித்தாலும் புகழ்பெற்ற தபோவனம் இமயமலையில் கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி பனிக்குகைக்கு மேலாக இருக்கிறது. இதன் அருகில் நந்தவனம் என்ற பகுதியும் இருக்கிறது.
18. நந்தவனம். இது இந்திரன் தோட்டத்துக்கும் பெயர் ஆகும்.

Earlier Quiz posted by me:

27 Star Quiz (In English and Tamil)
Hindu Picture Quiz-1 (In English and Tamil)
தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Hindu Tamil Quiz (in Tamil)
Hindu Tamil Quiz (in Tamil)-2
Hindu Tamil Quiz (in Tamil)-3
Hindu Tamil Quiz (in Tamil)-4
Hindu Quiz–1
Hindu Quiz–2
Hindu Quiz–3
Hindu Quiz–4

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

madurai pillayar

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

உங்களுக்குப் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்குமா என்பதற்கு இதோ ஒரு சோதனை. ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள். இருபது கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அருள் உண்டு. குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தால் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் பல துதிகளை ஆழமாகப் படியுங்கள். அருள் சுரக்கும்.

1.பால்,தேன்,பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?

2.சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?

3.”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”—- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?

4.பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?

5.”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”—- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?

6.பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?

7.”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யா?

8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?

9.”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?

10.”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?

sangu pillayar

11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?

12.விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?

13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் அவ்வையார் கைலாசம் சென்றது எப்படி?

14.மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?

15.வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?

16.”.திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?

17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?

18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?

19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?

20.நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?

ganesh and vyasa

விடைகள்: 1.அவ்வையார் 2.விநாயகர் அகவல் 3.அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 4.வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம் 5.அருணகிரிநாதர் 6. திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி 7.முத்து சுவாமி தீட்சிதர் 8.பாரதியார் 9.கணேச பஞ்ச ரத்னம் 10.ரிக் வேதம் 11.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம் 12. சுமுகன், ஏகதந்தன், கபிலன்,கஜகர்ணன்,லம்போதரன்,விகடன்,விக்னராஜன், விநாயகன்,தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன்,ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன் 13.பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார் 14.இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில்,சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில்,தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில்,லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்,ஓஜார் விக்னேஸ்வரர் கோவில்,ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில் 15. சிறுத்தொண்ட நாயனார் 16.கந்தபுராணன் 17.திரு ஞான சம்பந்தர் 18.சித்தி, புத்தி தேவியர் 19. எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்) 20.திருமூலர்

8-ashtavinayak-temples-ganesha

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).ராமாயண வினா விடை (க்விஸ்) (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil சைவம் க்விஸ் (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

 

ராமாயண வினா—விடை (க்விஸ்)

Ramayana Quiz in Tamil

இந்துக்களின் இரண்டு இதிஹாசங்கள் ராமயணமும் மஹா பாரதமும் ஆகும். ராமாயணத்தை ஆதிகாவியம் என்பர். வடமொழியில் இதை வால்மீகி எழுதினார். தமிழில் கம்பர் எழுதினார். உலகில் சுமார் 300 வெவ்வேறு ராமாயணங்கள் இருக்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளில் ராமனின் செல்வாக்கு அபாரமானது.

“ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ” என்று வள்ளுவர் கூறுவது ராம பிரானை மனதில் வைத்துத்தான் என்றே நான் கருதுகிறேன். மனிதர்களில் ‘சூப்பர்மேன்’ ராமன். கெட்டுப்போகவும் வழிதவறிப் போகவும் வாய்ப்பு கிடைத்தும்,அவன் கெட்ட வழியில் செல்லவில்லை. மாபெரும் பேரரசனின் மகனாகப் பிறந்தும் பாமர மனிதன் படும் துன்பம் எல்லாம் பட்டதோடு தன் மனைவியையும் படவைத்தான். அவனது இரண்டு தம்பிகளான பரதனும் லெட்சுமணனும் ராமனைவிட குணத்தில் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டனர் உங்களுக்கு எந்த அளவுக்கு ராமாயண விஷயங்கள் நினைவில் நின்றன என்பதைச் சோதித்துப் பாருங்களேன்:

30 க்கு 30=நீங்கள் ராமாயணப் புலி; 30 க்கு 20= ராமாயணப் பசு! 30க்கு 10= நீங்கள் ராமாயணப் பூனை! 30க்கு 5 மதிப்பெண்கள்= நீங்கள் ராமாயணப் “புளி”!!—இடித்த புளி!

1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?

2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?

3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?

4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?

5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?

6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?

7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?

8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?

9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?

10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?

11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?

13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?

14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?

15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?

16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?

17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?

தமிழ்பிராமின்.காம் திரு. சமரபுங்கவன் தொகுத்த மேலும் சில கேள்விகள் இதோ:-

18.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?

19.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?

20.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

Paruthiyur Sri Rama Lakshmana Idols

21.அனுமனின் தந்தை யார்?

22.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?

23. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?

24.கைகேயியின் தந்தை யார்?

25.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?

26.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?

27.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?

28.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?

29.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?

30.வாலியின் மகன் பெயர் என்ன?

விடைகள்:

1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் 18. சாந்தி 19.சுதர்சனன் 20.சம்பாதி 21.கேசரி 22.புலஸ்த்ய ரிஷி 23.மதங்க முனிவர் 24. அஸ்வபதி 25.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர் 26.சுயஜ்னன் 27.நந்திக்ராமம் 28.சூடாமணி 29.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன் 30.அங்கதன்

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).Lord Sri Rama- World’s Best PR Man (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

Pictures are taken from Facebook and other websites. Thanks.

Quiz on Saivaite Saints சைவம் க்விஸ்

Quiz on Saivaite Saints சைவம் க்விஸ்

by london swaminathan

 

1)கண்களைக் கடவுளுக்கே அர்ப்பணம் செய்த நாயன்மார் யார்?

2)யானை மாலை போட்டு அரசன் ஆக்கிய நாயனார் யார்?

3)தண்ணீர் பந்தல் வைத்து அதற்கு திருநாவுக்கரசர் என்று யார் பெயர் சூட்டினார்?

4)தனது மகளின் கருங் கூந்தலை ஈசனுக்கு ஈந்தவர் யார்?

5)கழுத்தை அரிவாளால் அரிந்த அன்பர் யார்?

6)நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுடன் வாதாடிய சங்கப் புலவன் யார்?

7)தனது இல்லக் கிழத்தியை மனமுவந்து சிவனுக்கு அளித்தவர் யார்?

8)கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்று பாடியவர் யார்?

9)புராணங்களின்படி காவிரி நதி உற்பத்தியாகக் காரணமான பறவை எது?

10)தன் தவப் புதல்வனைக் கொன்று கறி சமைத்தவர் யார்?

11)மலரை நுகர்ந்ததற்குத் தண்டணையாக அந்த மூக்கினைக் கொய்தவர் யார்?

12)மதுரையில் எந்தப் புலவனுக்கு சிவன் கவிதை எழுதிக் கொடுத்தார்?

13)ஆண்டவனுக்கு விளக்கேற்ற கையில் காசு இல்லாததால் முடியையே விளக்குத் திரியாக திரித்தவர் யார்?

14)கண்ணப நாயனாரின் இயற்பெயர் என்ன? 15)விதைத்த நெல் முளைகளைக் கொண்டுவந்து விருந்து வைத்தவர் யார்?

16)தன் எடைக்கு நிகராகப் பொன் கொடுத்தவர் யார்?

17)தந்தையின் கால்களைத் துண்டித்த சிவத் தொண்டர் யார்?

18)உத்தரகோச மங்கை என்னும் தலத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய சிவனடியார் யார்?

19)பெண் இன்பத்தைத் துறந்தவர் யார்?

20)தன் தோழருக்காக தன் துணைவியரின் கையை வெட்டியவர் யார்?

21)நடுக் கடலில் அரிதாக கிடைத்த மீனையும் ஆண்டவனுக்குரியது என்று கைவிட்டவர் யார்?

22)தன் குற்றத்திற்காக தலையை முட்டிக் கொண்டு உடைத்துக் கொண்டவர் யார்?

23)பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு புட்டு விற்ற கிழவியின் பெயர் என்ன?

24)குற்றம் செய்த சுற்றத்தாரை அழித்த வீரன் யார்?

25)பக்தி இலக்கியத்தில் அடிபடும் பெண்மணிகள் திலகவதி, புனிதவதி யார்?

26)சைவ சமயத்தில் நால்வர் என்பது எந்த 4 பெரியார்களைக் குறிக்கும்?

27)திருப்புகழ் பாடியவர் யார்

 

ANSWERS : 1. கண்ணப்ப நாயனார் 2. மூர்த்தி நாயனார் 3.அப்பூதி அடிகள் 4.மானக் கஞ்சாற நாயனார் 5. அரிவாட்ட நாயனார் 6. நக்கீரன் 7. இயற்பகை நாயனார் 8. அப்பர் 9. காகம் 10. சிறுத்தொண்ட நாயனார் 11. செருந்துணை நாயனார் 12. தருமி 13. கனம்புல்ல நாயனார் 14. தின்னன் 15. இளயான்குடி மாற நாயனார் 16. அமர்நீதி நாயனர் 17. சண்டேச நாயனார் 18. மாணிக்கவாசகர் 19. திருநீலகண்ட நாயனார் 20. கலிகம்ப நாயனார் 21. அதிபத்த நாயனார் 22. திருக்குறிப்பு நாயனார் 23. வந்தி 24. கோட்புலி நாயனார் 25. திலகவதி அப்பர் பெருமானின் சகோதரி; புனிதவதி, பிற்காலத்தில் காரைக்கால் அமையார் என்று அழைக்கப் பட்ட சிவனடியார் 26. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் 27.  அருணகிரிநாதர்

contact swami_48@yahoo.com

 

 

 

Quiz on Hymns in English and Tamil

By London Swaminathan

You are a Master of Stotra Literature if you answer at least 14 questions correctly

 

1.Who composed 272 Slokas or Hymns including the famous Bhaja Govindam and Ganesa Pancharatnam in Sanskrit?

2.What Stotra or hymn did Agastya teach Ram to win the war against Ravana?

3.What did Adi Sankara recite that brought a shower of gold coins to cure the poverty of a poor woman?

4.What is the name of a long hymn with 1008 names that attracted a commentary from Adi Sankara?

5.What is the hymn that recited every morning to wake up Lord Venkateswara? Who was the author of the hymn?

6.What is the name of the Hymn with 100 stanzas that beautifully sings the glory and beauty of the goddess composed by Adi Sankara?

7.What is he meaning of the following words: Ashtakam, Ashtotram, Pancharatnam and Dasakam?

8.What is the word for a hymn with 100 stanzas?

9.In a Sahasranama how many names of the Lord you will find?

10.What is the most famous Vedic Mantra given by Vishvamitra?

11.What is the mantra that cures one the fear of death?

12.What hymn is used during bathing Shivalinga in the temples?

13.What is the name of the hymn composed by Jayadeva that is sung in the Sampradaya/traditional Bhajans?

14.What are the two leaves that have got hymns in their names?

15.What is the Sanskrit hymn that reverberated from the halls of the United nations General Assembly?

16.Who composed Thotakashtakam?

17.Who was the author of the famous Shyamala Thandakam?

18.What is the name of the sloka composed by Ravana on Lord Shiva?

 

ANSWERS: 1. Adi Sankara 2. Aditya Hrudayam in Sanskrit 3. Kanakadhara Stotra 4. Vishnu Sahasranama 5. Venkateswara Suprabatham by Prativati Bhayangara Annangaracharya also known as Anatacharyar 6. Soundarya Lahari of Adi Sankara. It is believed half of the hymn was composed by Sankara 7. Ashtakam: hymn with 8 stanzas, Ashtotram: 108 names of God, Pancharatnam: hymn with 5 stanzas and Dasakam: hymn with 10 stanzas. Normally one or two extra stanzas will give the benefits of reciting it.8.Satakam e.g Surya Satakam of Mayura, Kumaresa satakam, Bhartruhari’s Neeti Satakam 9. 1008 10. Gayatri Mantra 11. Mrutyunjaya Mantra 12. Rudram and Chamakam 13. Ashtapathi from Gita Govindam 14. Bilva and Tulsi- used for Puja of Shiva and Vishnu respectively 15.Maithreem Bhajatha composed by Kanchi Shankaracharya in Sanskrit and sung by M S Subbulakshmi 16.Totakacharya in Totaka metre 17. Kalidas 18. Shiva Thandava Stotra

For more of the same: contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

 

தமிழில் ஸ்தோத்திர க்விஸ்

By London Swaminathan இருபது கேள்விகளுக்கு மேல் சரியான பதில் கொடுத்தால் நீங்கள் தோத்திர மன்னன் என்ற பட்டத்துக்குத் தகுதி பெறுவீர்கள்.

 

1.அம்பாளின் அழகை வருணிக்கும் 100 அற்புதமான கவிகள் அடங்கிய துதி எது?

2.ஷியாமளா தண்டகத்தை எழுதியவர் யார்?

3.சரஸ்வதி மீது சகல கலா வல்லி மாலையைப் பாடியவர் யார்?

4. எட்டு பாடல்கள், ஐந்து பாடல்கள் , பத்து பாடல்கள் உடைய ஸ்தோத்திரங்களுக்கு என்ன பெயர்?

5.ஒரு பாடல் முடியும் எழுத்தில் அல்லது சொல்லில் அடுத்த பாடல் துவங்கும் தொகுப்புக்கு என்ன பெயர்?

6.ஐ.நா.சபையிலிருந்து உலகம் முழுதும் ஒலித்த சம்ஸ்கிருத பாடல் என்ன? அதை இயற்றியவர் யார்?

7.தேவராய சுவாமிகள் பாடிய பிரபல துதி எது?

8.நமச்சிவாய வாழ்க என்று துவங்கும் மாணிக்கவாசகரின் துதி என்ன?

9.பஜகோவிந்தம் உள்பட 272 துதிகளை இயற்றியவர் யார்?

10.மழை பெய்வதற்காக சொல்லப்படும் துதியின் பெயர் என்ன?

11.முடி முதல் அடிவரை இருக்கும் உடல் உறுப்புகளைப் பாதுகாக்க சொல்லப்படும் துதியை என சொல்லால் குறிப்பார்கள்?

12. நூறு பாடல்கள் உடைய நீண்ட துதியை என்ன சொல்லால் அழைப்பர்?

13.பலஸ்ருதி என்றால் என்ன?

14. அஷ்டோத்தரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் கடவுளின் எத்தனை பெயர்கள் இருக்கும்?

15.கேசாதி பாத ஸ்தோத்திரம் என்றால் என்ன?.

16.பதிகம் என்றால் என்ன?

17.ராவணனை வெல்ல ராமருக்கு அகத்தியர் கற்பித்த ஸ்லோகம் எது?

18.சிவ பெருமான் மீது ராவணன் பாடிய துதி என்ன?

19.ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்க ஆதிசங்கரர் பாடிய தங்க நெல்லிக்காய் பாடலின் பெயர் என்ன?

20.ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய சஹஸ்ரநாமம் எது?

21.வேங்கட மலை இறைவனை எழுப்ப காலையில் பாடும் பாடலின் பெயர் என்ன? அதை எழுதியவர் யார்?

22.இறைவனை எழுப்ப காலையில் பாடும் துதியின் தமிழ்ப் பெயர் என்ன?

23.பாவை நோன்பு கடைப்பிடிக்கும் தமிழ்ப் பெண்கள் பாடும் இரண்டு பாடல் தொகுப்புகளின் பெயர் என்ன?

24.அமாவாசையைப் பவுர்ணமியாக்க அம்மனின் பக்தர் பாடிய பிரபல துதி எது?

25.முத்துசுவாமி தீட்சிதர் ஒன்பது கிரகங்களின் பீடைகள் நீங்கப் பாடிய பாடல் என்ன?

26.பாண்டிய நாடு போக வேண்டாம் என்று அப்பர் அறிவுரை கூறியவுடன் சம்பந்தர் பாடிய பதிகம் என்ன?

27.சிவன் கோவில்களில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது இசைக்கப்படும் வேதத்திலுள்ள துதி?

28.விசுவாமித்திர மஹரிஷி நமக்களித்த பெரிய மந்திரம் எது?

29.சைவ நிகழ்ச்சிகளில் இறுதியில் பாடப்படும் பஞ்ச புராணத்தில் என்ன என்ன பாடல்கள் இருக்கும்?

30.சம்ப்ரதாய பஜனைகளில் பாடப்படும் ஜெயதேவரின் பாடலின் பெயர்?

 

ANSWERS FOR TAMIL QUIZ ON HYMNS/STOTRAS விடைகள்:

1. சவுந்தர்ய லஹரி ( இதில் பாதியை ஆதி சங்கரர் இயற்றியதாகக் கூறுவர்) 2. கவி காளிதாஸ் 3. குமர குருபர சுவாமிகள் 4. ஐந்து பாடல்கள்: பஞ்சரத்னம், எட்டு பாடல்கள்: அஷ்டகம், பத்து பாடல்கள்; பதிகம் அல்லது தசகம் 5. அந்தாதி எ.கா. அபிராமி அந்தாதி 6. மைத்ரீம் பஜத என்னும் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பாடல், எம்.எஸ். இதைப் பாடினார். 7. கந்த சஷ்டி கவசம் 8. சிவபுராணம் 9. ஆதி சங்கரர் 10. வருண ஜபம் 11. கவசம், எ.கா. விநாயக கவசம், கந்தசஷ்டி கவசம் 12. சதகம் 13. ஒரு துதிப் பாடலைப் படிப்பதால் ஏற்படும் பலன்களை எடுத்துச் சொல்லும் கடைசி பாடல் 14. அஷ்டோத்தரம் 108, சஹஸ்ரநாமம் 1008 15. இறைவனின் அழகை கேசத்திலிருந்து (முடி) துவக்கி பாதம் வரை வருணித்துப் பாடுவதாகும் 16. பத்து பாடல் உடைய துதி. 11ஆவது பாடல் பலன்களைச் சொல்லும். 17. ஆதித்ய ஹ்ருதயம் 18. சிவ தாண்டவ ஸ்தோத்திரம் 19. கனகதாரா ஸ்தோத்திரம் 20. விஷ்ணு சஹஸ்ரநாமம் 21. வேங்கடேச சுப்ரபாதம், எழுதியவர்-பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராசார்யார் 22. சுப்ரபாதத்தின் தமிழ்ப் பெயர் திருப்பள்ளி எழுச்சி 23. திருப்பாவை, திருவெம்பாவை 24.அபிராமிபட்டர் பாடிய அபிராமி அந்தாதி 25. நவாவரண கீர்த்தனைகள் 26. கோளறு திருப்பதிகம் 27. ருத்ரம் சமகம் 28. காயத்ரி மந்திரம் 29. பஞ்ச புராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,பெரிய புராணம்,  30.கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்டபதி

For more of the same: contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

 

 

27 STAR QUIZ (English & Tamil)

By London Swaminathan

If you answer 10 out of 14 correctly, you are a STAR!

 

1. Who is the husband of 27 Stars?

2. How many zodiac signs are there in the Zodiac?

3. What is the first and last star in the current list of 27 stars?

4. The star Vishaka is associated with two festivals in Tamil Nadu and Sri Lanka? Who are those two great people or god?

5. The great Chola King Raja Raja organised a big festival on his birthday 1000  years ago. What was his birth star?

6.  Keralites (Malayalees) celebrate their biggest annual festival on a famous star day. What is it?

7. Which Indian God was born under star Rohini?

8. What was the name of Balarama’s wife, a star name?

9. Who brought up Lord Skanda, the stars you can see them in the sky?

10. What star is associated with Lord Shiva?

11. A star is the symbol of chastity according to Sangam Tamil Literature and Hindu scriptures. What is the name of that star?

12. Name the star in the Southern Skies that bears the name of a great Rig Vedic Rishi?

13. According to Hindu scriptures, a small boy attained star hood and shines in the Northern Skies. Who was that boy?

13. What was Rama’s birth star according to Valmiki?

14. Give the Hindu name for Ursa Major or Dipper or The Great Bear constellation.

********

 

ANSWERS: 1) In Tamil and Sanskrit literature husband of stars is Moon. It is a simile used hundreds of times in Indian literature 2) Twelve: 27 stars are divided in to 12 signs 3) The current Hindu star list begins with Aswini and ends with Revathi 4) Vishaka: Lord Skanda and The Buddha 5) Sathayam (Sathabishak) 6) Onam 7) Krishna 8) Revathi 9) Krithika: six stars according to Hindus, seven sisters according to Greeks 10) Arudra 11)Arunthathy: a double star system in the Great Bear constellation 12) Agastya (Canopus) 13) Dhruva , Westerners call it Pole Star 14) Sapta Rishi Mandalam.

 

TAMIL QUESTIONS: 27 நட்சத்திர கேள்வி-பதில்

If you answer 14 out of 21 correctly, you are a STAR!

1)27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எது? கடைசி நட்சத்திரம் எது?

2)சிவனுக்குகந்த நட்சத்திரம் எது?

3)நிலவின் முகம் தேய்ந்து பிறையாகக் காரணம் சந்திரன், 27 பெண்களில் ஒருத்திக்கு சாதகமாக நடந்துகொண்டான். அந்த ஒருத்தி பெயர் என்ன?

4)வைகாசி விசாக நட்சத்திரம் வரும் பவுர்ணமியில் எந்த இருவருக்கு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன?

5)மலையாளிகள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை எந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது?

6)ராஜ ராஜ சோழன் தன் பிறந்த நட்சத்திரத்தன்று பெரியவிழா கொண்டாடினான். அந்த நட்சத்திரம் எது?

7)தவிட்டுப்பானை எல்லாம் தங்கம் தரும் நட்சத்திரம் எது?

8)அரசாளும்  நட்சத்திரம் எது?

9)முருகனை வளர்த்த 6 பெண்களின் பெயருடைய நட்சத்திரம் எது?

10)ரோஹினி நட்சத்திரத்தில் பிறந்த இந்துக் கடவுள் யார்?

11)ராமர் பிறந்த நட்சத்திரம் எது?

12)மான்  தலை என்று பெயர் உடைய நட்சத்திரம் எது?

13)பலராமனின் மனைவி பெயர் உடைய நட்சத்திரம் எது?

14)எந்த நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் மதுரையில் பெரிய திருவிழா நடைபெறும்?

15)எந்த நட்சத்திர நாளில் பெய்யும் மழை சிப்பியின் வாயில் விழுந்து முத்து ஆகும்?

16)ஜெமினி எனப்படும் நட்சத்திரத் தொகுப்பிலுள்ள இரண்டு நட்சத்திரங்களின் பெயர் என்ன?

17)தென் வானத்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு எந்தப் பிரபல முனிவரின் பெயர் சூட்டப்பட்டது?

18)கற்புக்கு அணிகலனாகத் திகழும் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

19)புகழ்பெற்ற ஒரு சிறுவனின் பெயரையுடைய நட்சத்திரத்தின் பெயர் என்ன?

20. பெருங் கரடிக் கூட்டம் என்று மேலை நாட்டார் அழைக்கும் நட்சத்திரத் தொகுப்புக்கு இந்துக்கள் கொடுத்த பெயர் என்ன?

21. எந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் “திரு” அடைமொழி உடையன?

*********

 

விடைகள்: 1)முதல் நட்சத்திரம்-அஸ்வினி, கடைசி நட்சத்திரம்- ரேவதி 2)ஆருத்ரா/ திருவாதிரை 3) ரோஹிணி 4) முருகப் பெருமான், புத்தர் பெருமான் 5) திரு ஓணம் 6) சதயம் (சதய விழா) 7) தமிழ் பழமொழிகள்: அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை எல்லாம் தங்கம் 8) ஆண்மூலம் அரசாளும் 9) கார்த்திகை 10) கிருஷ்ணன் 11)புனர் பூசம் 12) மிருகசீர்ஷம் 13) ரேவதி 14)சித்திரா நட்சத்திர பவுர்ணமி 15) சுவாதி நட்சத்திரம் 16) பூசம், புனர்பூசம் 17) அகஸ்திய நட்சத்திரம் 18)அருந்ததி 19) துருவன் 20) சப்த ரிஷி மண்டலம் 21) திரு ஓணம் (விஷ்ணு), திரு ஆதிரை (சிவன்)

 

 

Answers for INTERSTING LOGO QUIZ

Answers:

1.Audi 2. Blockbusters 3.Renault 4.chiquita 5.TGI Fridays 6.KFC 7.Shell

8.AOL 9. Vodafone  10. Kodak  11.Nike 12.Tetleys 13.Citron 14.Mc Donald’s

15.Post Office 16.British Airways 17. Apple  18.Walkers  19. Microsoft Windows

20.Texaco

 

Yesterday’s Post (with 2 pages of pictures):

By London Swaminathan

Are you a good observer? Can you guess who these Logos belong to? You may see them every day. But remembering them at one go is a problem. If you are good at companies and cars, you will name them easily. Answers will be published tomorrow. But I am pretty sure if each one of you names a few, you will complete it. To enlarge the picture, please zoom in or click on the picture. All the logos are numbered. There are two pages with a total of 20 logos.

For more of the same, contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

INTERSTING LOGO QUIZ

Page 1

 

Page 2

By London Swaminathan

Are you a good observer? Can you guess who these Logos belong to? You may see them every day. But remembering them at one go is a problem. If you are good at companies and cars, you will name them easily. Answers will be published tomorrow. But I am pretty sure if each one of you name a few, you will complete it. To enlarge the picture, please zoom in or click on the picture. All the logos are numbered. There are two pages with a total of 20 logos.

For more of the same, contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?

Do You Know Tamil?

Score level:

25 –30 You are a Tamil Scholar!

15-25 Well Done! You are good at Tamil.

10-15 Not good at Tamil.

Under Ten- Are you a Tamil?

By London Swaminathan

 

 

61.தொல்காப்பியரின் கூற்றுப்படி மனிதனுக்கு எத்தனை அறிவு?

62.பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி –என்று பாடியவர் யார்?

63.எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்– என்று பாடியவர் யார்?

64.எல்லவுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்—யார் கூறியது இது?

65.கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ—யாருடைய வாசகம் இது?

66.பத்துப்பாட்டு நூல்களில் மிக நீண்ட நூல் எது?எத்தனை வரிகள்?

67.நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்—என்று திருமூலர் எந்த நூலில் கூறுகிறார்?

68.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சொன்னவர் யார்?

69.எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறு ஒன்றும் அறியோம் பராபரமே என்று சொன்னவர் யார்?

70.நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் இன்பத்தில் வாழ்க—என்று வாழ்த்துபவர் யார்?

71. இன்பம் இடையறாது ஈண்டும், மன்னுயிர்க்கெல்லாம் இனிது—என்றி இன்பத்தில் திலைப்பவர் யார்?

72. காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே—என்று வேண்டுபவர் யார்?

73.காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கிறேன் என்று வீர முழக்கம் செய்தவர் யார்?

74.நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்று கர்ஜித்தவர் யார்?

75.அம்பலத்தேனே அரு மருந்தே ஆனந்தத்தேனே அருள் விருந்தே—என்று சிவனை சுவைபடப் பாடுபவர் யார்?

76. தமிழில் முக்கனிகள் எவை?

77. முத்தமிழ் யாவை?

78.மூவேந்தரின் கொடிகள் யாவை?

79. மூவேந்தரின் மாலைகள் என்ன?

80.சடையப்ப வள்ளல் யார்?

81.பிரபுட தேவ மகாரஜன் யார்?

82.முத்துக் குளிக்க பெயர்பெற்ற பாண்டிய நாட்டுத் துறைமுகம் எது?

83. அறங்கூறு அவையம் சோழ நாட்டில் எந்தவூரில் இருந்தது?

84.திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்பவை என்ன?

85.புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?

86.சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கண நூலின் பெயர் என்ன?

87.திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்—என்ற வாழ்த்துடன் துவங்கும் நூல் எது?

88. விவேக சிந்தாமணி என்ற தமிழ் நூலை எழுதியவர் யார்?

89.மாதவியின் மகள் பெயர் என்ன, தாய் பெயர் என்ன?

90.மதுரை நகரை கண்ணகி எரித்த நாள் எது?

 

***************

விடைகள்:61. ஆறு அறிவு 62. மாணிக்கவாசகர் 63. தேவராய சுவாமிகள் (கந்தசஷ்டி கவசம்) 64. தொல்காப்பியர் 65. நம்மாழ்வார் தி.பி. 3298, 66.மதுரைக் காஞ்சி, 782 வரிகள்,67. திருமந்திரம் 68. திருஞான சம்பந்தர் 69. தாயுமான சுவாமிகள்,70. பாரதியார் (பாஞ்சாலி சபதம்), 71. வள்ளுவர் (குறள் 369, 68), 72. (அருணகிரிநாதர், திருப்புகழ்) 73. பாரதி 74.அப்பர் 75.ராமலிங்க சுவாமிகள் 76. மாம்பழம், பலாப் பழம், வாழைப்பழம் 77. இயல் இசை, நாடகத் தமிழ், 78.சேரன்-வில், சோழன்-புலி, பாண்டியன் மீன் கொடிகள் 79.சேரன்- பனை, சோழன்- ஆத்தி,  பாண்டியன்- வேம்பு 80.கம்பனை ஆதரித்த வள்ளல். கம்ப ராமயணத்தில் பாடப்பட்டவர்..81. அருணகிரி நாதரை ஆதரித்த குறுநில மன்னன். திருப்புகழில் பாடப்பட்டவர். 82. கொற்கைத் துறைமுகம், 83 உறையூர்.84. தமிழ் நிகண்டுகளின் பெயர்கள், 85.ஐயனாரிதனார் 86. இலக்கணக் கொத்து 87. சிலப்பதிகாரம், 88.பெயர் தெரியாத புலவர். 89.மகள்—மணிமேகலை, தாய்—சித்திராபதி 90. ஆடி மாதம் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம், வெள்ளிக்கிழமை

Contact for more Quiz on Hinduism,Tamil Culture & India: swami_48@yahoo.com

 

 

தமிழ் தெரியுமா? Tamil Quiz -2

 

Do You Know Tamil?

Score level:

25 –30 You are a Tamil Scholar!

15-25 Well Done! You are good at Tamil.

10-15 Not good at Tamil.

Under Ten- Are you a Tamil?

 

By London Swaminathan

இந்த சங்க கால மன்னர்களைக் கண்டு பிடிக்க முடியுமா?

31)காழசோகல்ரின்

32)இபெழுதிருளம்வ

33.பெருழகோசோப்ஞ்ன்

34)முபெருதுழுதிமிப்வகுடு

35)தஞ்சேலாநெடுரன்

36)நெசெயன்டுஞ்ழி

37)அஅஞ்தியடுமான்மான்சிநெ

38)கரும்இணைக்பொகால்றை

39)நறன்மான்

40)கிநெள்ளிடுங்

 

 

கீழ்கண்ட நூல்களை எழுதியவர் யார்?

41)மணிமேகலை

42)சிலப்பதிகாரம்

43)பெரியபுராணம்

44)திரு அருட்பா

45)கண்டதும் கேட்டதும்

46)பாஞ்சாலி சபதம்

47)மனோன்மணீயம்

48)மதுரைக் காஞ்சி

49)திருமுருகாற்றுப்படை

50)திரிகடுகம்

 

 

51)மணிக்கொடி காலம் என்ற நூலை எழுதியவர் யார்?

52)கடலோடி என்ற நூலை யார் எழுதினார் ?

53)பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப- என்று கூறியது யார்?

54) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பொன் மொழி யாருடையது?

55)நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை—யாருடைய வாசகம் இது?

56)கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் என்று யார் பாடினார்?

57)சரஸ்வதி/ கலைமகள் மீது சகல கலா வல்லி மாலை பாடியவர் யார்?

58)தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றன? அவை யாவை?

59)பெருந்திணை, கைக்கிளை என்றால் என்ன?

60).பத்துப் பாட்டில் நக்கீரர் எழுதிய இரண்டு நூல்கள் எவை?

 

(Pictures of these Tamil flags are imaginary. We don’t know how they looked like 2000 years ago)

ANSWERS, விடைகள்:

31)கரிகால்சோழன் 32)இளம்பெருவழுதி 33)கோப்பெருஞ் சோழன் 34) முதுகுடுமிப் பெருவழுதி 35)நெடுஞ்சேரலாதன் 36)நெடுஞ்செழியன்

37)அதியமான் நெடுமான் அஞ்சி 38)கணைக்கால்இரும்பொறை 39)நன்மாறன் 40) நெடுங்கிள்ளி 41)சீத்தலைச் சாத்தனார் 42)இளங்கோ அடிகள் 43) சேக்கிழார் 44)ராமலிங்க சுவாமிகள் 45)உ.வே.சுவாமிநாதய்யர் 46)பாரதியார் 47)சுந்தரம் பிள்ளை 48)மாங்குடி மருதன் 49)நக்கீரன் 50)நல்லாதனார் 51) பி.எஸ்.ராமையா 52)நரசையா 53)தொல்காப்பியர் 54)திருமூலர் 55) அவ்வையார் 56)அப்பர் 57)குமர குருபர சுவாமிகள் 58)மூன்று அதிகாரங்கள். அவை எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள் 59) பெருந்திணை= பொருந்தாக் காமம் (நோ எண்ட்ரீ), கைக்கிளை= ஒரு தலைக் காமம்/காதல் (ஒன் வே ட்ராFபிக்) 60)திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை.

 

For more, contact swami_48@yahoo.com