விவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்

gita2

லண்டன் சுவாமிநாதன்;
கட்டுரை எண் 831 தேதி 10-02-2014

“உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு ஸ்லோகத்தில் கீதையின் ரஹஸ்யம் ஆழ்ந்து உறைகின்றது.” —- சுவாமி விவேகாநந்தர்

“க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய்யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்ப்பல்யந் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப:”
–பகவத் கீதை 2-3

பொருள்:- எதிரிகளை எரிப்பவனாகிய பார்த்தா ! பேடித்தனத்தை அடையாதே. இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது. அற்பமான மனத் தளர்ச்சியை ஒழித்து விடு. எழுந்திரு !

இதையே ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (குறள் 1075) – என்று வள்ளுவன் இடித்துரைக்கிறான்.

ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
பாரதியோ பொங்கு தமிழில் முழங்குகிறான்:

“உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
பெண்மை கொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் — இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்,
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
— பாரதியார் பாடல்

இன்னொரு பாடலில் பாரதி சொல்வான்:
வில்லினை எடடா! – கையில்
வில்லினை எடடா! – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!
வாடி நில்லாதே; — மனம்
வாடி நில்லாதே; — வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.
— பாரதியார் பாடல்

ஆன்மா அழியாதது என்ற உபதேசமும் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில்தான் வருகிறது. அதையும் பாரதி விட்டுவிடவில்லை:-

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சம் உண்டோடா? –மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா— பாரதியார் பாடல்

“ஆத்மா பலவீனம் உடையவனால் அடையமுடியாதது” (ந அயம் ஆத்மா பலஹீனேன லப்யதே) என்று உபநிஷதமும் கூறுகிறது.

ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீ அண்ணா அவர்கள் கீழ்கண்ட மேற்கோள்களைத் தருகிறார்:
உத்திஷ்ட – இது துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் மந்திரம்

உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதத = எழுந்திரு! விழித்துக் கொள்! குறிக்கோளை அடையும் வரை ஓயாது செல்! (கடோபநிஷத்)

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் – ஆண்டாள் திருப்பாவை

Contact swami_48@yahoo.com

Please read my earlier posts:
On Gita: 1.One Minute Bhagavad Gita 2. Bhagavad Gita through a Story
3.Bhagavad Gita in Tabular Columns 4. 45 commentaries on Bhagavad Gita 5. G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6.A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2) 7. Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwik Food Sold! 8. Krishna’s List of 26 Divine Qualities! (post 721 Dt.24/11/13) 9. கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள் (Post 727, Nov.30, 2013)

On Bharati: 1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! 2.பாரதியின் பேராசை 3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி 4.பயமே இல்லாத பாரதி 5.பாரதி பாட்டில் பகவத் கீதை 6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள் 8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (10) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி! சேதி தெரியுமா? (11) வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’ (741 posted Dec.10) 12) பாரதி தரிசனம்.

ராம ராஜ்யம்

sri rama

Post No 825 Date 7th February 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 15
By ச.நாகராஜன்

ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் 76 ஸ்லோகங்கள் உள்ளன. அற்புதமான இந்த ஸ்லோகங்களில் ஸ்ரீராமர் தனது தம்பி பரதனைக் குசலம் விசாரித்து கேட்கும் போது கேட்கப்பட்ட கேள்விகளைக் காணலாம். ராம ராஜ்யம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ராமரது உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்கும் ஸ்லோகங்களாக இவை அமைந்துள்ளன.

பரதனை நோக்கி ராமர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது:-
கச்சித் அஷ்டாதசான்யேஷு ஸ்வபக்ஷே தச பஞ்ச ச I
த்ரிபித்ரிபிரவிஞாதை வேத்ஸி தீர்த்தானி சாரகை: II
– நூறாவது ஸர்க்கம், 36வது ஸ்லோகம்.

அன்யேஷு – பிறர்களிடத்தில் அஷ்ட தச – பதினெட்டும் ஸ்வபக்ஷே – தன் பக்கத்தில் தச பஞ்ச ச – பதினைந்தும் (அதாவது மேற்சொன்ன பதினெட்டில் மந்திரி, புரோஹிதர், இளவரசு தவிர்த்து) உள்ள தீர்த்தானி – ராஜ்யாதிகாரிகளை அவிஞாதை: – ஒருவரை ஒருவர் அறியாதபடி த்ரிபி: த்ரிபி: – ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்றாக சாரகை: – வேவுகாரர்களைக் கொண்டு வேத்ஸி கச்சித் – அறிந்து வருகின்றாயா?

இங்கு ராமர் குறிப்பிடும் பதினெட்டு பேர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்:

1) மந்திரி 2) குலகுரு 3) இளவரசு 4) சேனாதிபதி 5) வாயில்காப்போன் 6) அந்தப்புர காரிய நிர்வாஹம் செய்பவன் 7) சிறைச்சாலையின் அதிகாரி 8) பணத்திற்கு அதிகாரி 9) அரசனின் ஆக்கினையை வெளியிடுவோன் 10) வியவகாரத்தைக் கேட்போன் 11) சேனைகளுக்குச் சம்பளம் முதலியவைகளைக் கொடுப்பவன் 12) நகரத்தைச் சோதித்தல், நகர பிராகாரத்தைக் காத்தல் முதலிய தொழில்களைப் புரிபவன் 13) சேனை தவிர மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதைத் தனித் தனியே பிரித்துக் கொடுப்போன் 14) அரசன், மந்திரி முதலியவர்களுக்குத் தக்க ஆசனம் அளித்தல், சபாசதர்களை வரவேற்றல், சபைக்கு வர அதிகாரமற்றவர்களைத் தடுத்தல், சபையைச் சத்தமில்லாமல் செய்தல், சபையைக் காத்தல் முதலியவற்றைப் புரிபவர்களின் தலைவன் 15) தாயாதிகளின் பாக விஷயத்தில் நேரும் வழக்கைத் தர்ம சாஸ்திரப்படி தீர்ப்பவன் 16) அரசனின் ஆணைப்படி தண்டனைகளை ஏவுபவன் 17)மலையரண், நீரரண், காட்டரண் முதலியவைகளைக் காப்பவன் 18) ராஜ்யத்தின் எல்லையைக் காப்பவன்

மிகுந்த ஆச்சரியத்திற்குரிய இந்த நிர்வாக அமைப்பு (administration set up) இன்றைய நவீன காலத்திற்கும் பொருந்துகிறது அல்லவா?

Cabinet Ministers, advisor, Minister of State, Commander, treasury, Defence, Security Judicial Officer, Prison Warder என்று இப்படி சரிக்குச் சரியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தால் இன்று நாம் காணும் அரசியல் நடைமுறையும், சமூக நடைமுறையும் ஒரு லட்சிய நாட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக அமைகிறதல்லவா?

நிர்வாகம் செம்மையுற நடை பெறுகிறதா, லஞ்ச லாவண்யம் இல்லாமல் நடை பெறுகிறதா என்பதைச் சரிபார்க்க மூன்று மூன்று பேரை வைத்து உளவு பார்க்கும் முறையும் சொல்லப்பட்டு இருப்பதை நோக்கும் போது லஞ்சமில்லா நாடு என்ற லட்சிய நாட்டையே நாம் பார்க்க முடிகிறது.

இது ராமராஜ்யத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் ஒரே ஒரு ஸ்லோகம் தான்!

Contct swami_48@yahoo.com

*****

Why did Bhishma cry?

Please click here:
Why did Bhishma cry

Mahabharata-Bhishma-Pitamah

Image of Bhishma on a bed of arrows. Arjuna creates an artesian well to provide water for Bhishma.

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம்,முக்தி தரும்!

Please click here for the article
சம்ஸ்கிருத செல்வம்

krishna from gopalji

1 Muslim Karna and 4 Hindu Karnas

Please click below for the article:

1 Muslim Karna and 4 Hindu Karnas

450px-Sukarno_with_children_and_Nehru

Sukarno and Nehru with their daughters

karna_

Karna: Tamil Feature Film scene

Nepalese burn Ghanta karna

Nepalese burning Ghantakarnan effigy.

1 முஸ்லீம் கர்ணன்+ 4 இந்து கர்ணன்கள்

karna_

Please click below for the article

கர்ணன் pdf

Nepalese burn Ghanta karna

Picture of Nepalese burning Ghantakarnan effigy.

450px-Sukarno_with_children_and_Nehru

Picture of Sukarno with Nehru

கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள்

hiding krishna

Post No 727; Dated 30th November,2013

by london swaminathan

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் (16– ஸ்லோகம் 1 முதல் 3) கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். இந்த உரை கல்லில் அந்த சாமியார்களை உரசிப் பாருங்கள். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!!

இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்:

1.அச்சமின்மை (அபயம்)
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)
3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)
4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி)
5.ஐம்புலனடக்கம் (தம:)
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்)
7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)
8.தவம் (தப:)
9.நேர்மை (ஆர்ஜவம்)
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)
11.உண்மை (சத்யம்)
12.சினமின்மை (அக்ரோத:)
13.துறவு (த்யாகம்)
14.அமைதி (சாந்தி)
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்)
18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்)
20.மன உறுதி (அசாபலம்)
21.தைரியம், துணிவு (தேஜ:)
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
24.சுத்தம் (சௌசம்)
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )

flute krishna

இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்:

அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி:
தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம் (16-1)

அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம்
தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம் (16-2)

தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா
பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத (16-3)

எனது முந்தைய கீதைக் கட்டுரைகள்:
Read also my earlier posts:

1).One Minute Bhagavad Gita
2). Bhagavad Gita through a Story
3).Bhagavad Gita in Tabular Columns
4). 45 commentaries on Bhagavad Gita
5). G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6).A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2)

Krishna’s List of 26 Divine Qualities!

Geethopadesam.245173453_large
Post No. 721 dated 24th November 2013

Who is god? RK Paramahamsa and Tamil Saint

1. That man whose hair stands on end at the mere mention of the name of God, and from whose eyes flow tears of love—he had indeed reached his last birth —-Ramakrishna Paramahamsa

2. Sugar and sand may be mixed together, but the ant rejects the sand and carries away the grain of sugar. So the holy Paramahamsas and pious men successfully sift the good from the bad —R.K Paramahamsa

3. The truly religious man is who he does not commit any sin even when he is alone, and when no man observes him , because he feels that God sees him even then—R.K Paramahamsa

Tamil Saint Valluvar (in Tirukkural)
4. Regard him DIVINE, who divines without a doubt what is passing in another’s mind (Tirukkural 702 in Tamil)

5. A man leading his life as he ought to will be regarded as one of the DEITIES in the heaven (Tirukkural 50)

(Eg. Lord Rama, Lord Krishna, Buddha)

6. Persons who have listened and internalised from instructions of the learned,
Will be like GODS on earth, flourishing on oblational offerings (Kural 413)
Eg. Shankaracharyas and other saints

RK P

7. The king who protects his people rendering justice, according to the laws of the land
Will be hailed s the DIVINE LORD, by his subjects (Kural 388).
Eg. Dharma (Yudhitra)

8. Those who refrain from killing animals, and abstain from eating its flesh
Will receive WORSHIP with folded hands from all creatures of this world. (Kural 260)
Eg. Mahavira

9. He who has controlled his ego and mastered him self
By doing penance, will be the object of universal WORSHIP (Kural 268)

Eg. Adi Shankara, Buddha

10. If he lives true to his inner mind
He lives in the hearts of all mankind (Kural 294)

Eg. Harichandra

readings_from_thirukkural_idh158
Lord Krishna’s List (Bhagavad Gita 16- slokas 1 to 3)

11. Krishna gives a long list of qualities of people born with Divine Nature:
1.Feralessness (Abhayam)
2.Purity of mind (satvasamsuddhi:)
3.Wise apportionment of knowledge & concentration(Jana yoga vyavastithi)
4.Charity (Dhanam)
5.Self control (Dama:)
6.Sacrifice (Yajna:)
7.Study of the scriptures (Svadhyaya:)
8.Austerity (Tapa:)
9.Uprightness (Arjavam)
10.Non violence (Ahimsa)
11.Truth (Satyam)
12.Freedom from anger (Akrodha:)
13.Renunciation (Thyaga:)
14.Tranquillity(Santi:)
15.Aversion to fault finding (Apaisnam)
16.Compassion to living beings(Buteshu Daya)
17.Freedom from covetousness (aloluptvam)
18.Gentleness (Mardavam)
19.Modesty (Hri:)
20.Steadiness (absence of fickleness/Acapalam)
21.Vigour(Teja:)
22.Forgivness (Ksama)
23.Fortitude (Druti:)
24.Purity (Saucam)
25.Freedom from malice (Adroha:)
26. Absence of excessive pride (Na Atimanita)

—these, O Pandava (Arjuna) are the endowments of him who is born with the DIVINE nature (Daivim Sampadam).

gitopasesa
Read also my earlier posts:

1.One Minute Bhagavad Gita
2. Bhagavad Gita through a Story
3.Bhagavad Gita in Tabular Columns
4. 45 commentaries on Bhagavad Gita
5. G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6.A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2)
7. Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwik Food Sold!

Contact swami_48@yahoo.com

வள்ளுவன் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள்

vivekananda rock and valluvar

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

இதைப் படிப்பதற்கு முன் எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கும்படி வேண்டுகிறேன்: 1. வள்ளுவர் சொன்ன சுவையான கதைகள் 2.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 3. வள்ளுவனும் வன்முறையும் 4.Who was Tiruvalluvar?

 

புராண, இதிஹாசக் கதைகள்

 

குறள் 495-ல் மறைமுகமாக கஜேந்திர மோட்சக் கதையைச் சொல்கிறார்:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

 

பொருள்:ஆழமான நீர் நிலையில் இருந்தால் முதலை வெற்றிபெறும். அதே முதலை வெளியே வந்தாலோ மற்ற உயிரினங்கள், அதை எளிதில் வென்றுவிடும்.

 

முதலை வாயில் சிக்கிய கஜேந்திரனை காப்பாற்ற விஷ்ணுவே வரவேண்டி இருந்தது.

 

கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முழுதும் –271 முதல் 280 வரை– ஒவ்வொரு குறளும் ஒரு புராண, இதிஹாசக் கதையை மனதில் வைத்தே எழுதியது போல இருக்கிறது.

 

புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்த பசுவின் கதை ((273), மகாபலிபுரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ருத்திராட்சப் பூனை கதை (please read my earlier post THE STORY OF HYPOCRITICAL CAT) ஆகியனவற்றுக்குப் பொருத்தமான குறள்கள் இவை.

 

 

பசு-புலித்தோல் கதை ஈசாப் முதல் பல நாட்டுக் கதைகளில் வருகின்றன. ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்றும், சிங்கத் தோல் போர்த்திய கழுதை என்றும் பல கதைகள் உண்டு.

குறள் 269—ல் மார்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி கதையைக் கூறுகிறார்:

 

’கூற்றம் குதித்தலும் கைகூடும்’’ (எமனையும் வெல்ல முடியும்) என்பார் வள்ளுவர்

பிறனில்விழையாமை என்னும் அதிகாரத்தில் (141—150), ராவணன், இந்திரன் கதைளைச் சொல்கிறார்.

 

ததீசி முனிவரின் தியாகம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

 

பொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை ஆக்கிக் கொள்வர். ஆனால் அன்புடையாரோ, தனது எலும்பையும் கூடப் பிறர்க்கு அளிப்பர் (72).

 

ததீசி என்னும் முனிவர் தனது முதுகு எலும்பையே இந்திரனுக்குக் கொடுத்தார். அசுரர்களைக் கொல்வதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது எலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதமே அசுரர்களைக் கொல்ல வல்லது என்று அறிந்தான். உடனே ததீசி முனிவரை அணுகினான். மனித குலத்தைக் காக்க தனது முதுகு எலும்பையே கொடுத்தார் ததீசி. அதையே வள்ளுவன் ‘’என்பும் உரியர் பிறர்க்கு’’ என்பான்.

 

‘’அடி அளந்தான்’’ என்ற சொற்றொடர் மூலம் (610) வாமனாவதாரக் கதையையும், ‘’இந்திரனே சாலுங்கரி’’ என்ற சொற்றொடர் மூலம் இந்திரன்—அகல்யா, இந்திரன்-நகுஷன் போன்ற கதைகளையும் படிக்கலாம்.

 

குறள் 801ல் கண்ணப்ப நாயனார் கதை, சபரி-ராமன் கதை, சாக்ரடீஸ்-சிவபெருமான் விஷம் அருந்திய கதை ஆகியவற்றைக் காணலாம்.

பழமை எனப்படுவது யாதெனின் யாதும்

 

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)

பொருள்: பழகிய நண்பர் உரிமையால் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 Sunrise in Kanyakumari (Thiruvallur statue and Vivekananda rock)

கபில முனிவரின் கோபம்

‘’குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது’’ (குறள் 29)

 

நல்ல குணவான்கள் சிறு பிழைகளையும் பொறுக்கமாட்டார்கள். இதற்கு முனிவர்களின் கோபம் பற்றிய கதைகள் புராணத்தில் நிறைய இருக்கின்றன. அவைகளில் மிகவும் முக்கியமானது சகரர்கள்—கபில முனிவர் கதையாகும். சகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்த போது அவனுடைய குதிரை சென்ற இடமெல்லாம் அவனது புதல்வர்கள் 60,000 பேரும் அதைத் தொடர்ந்து சென்றனர். கபிலனின் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், அவருக்குக் கெட்ட பெயர் உண்டாக்குவதற்காக சகரனின் குதிரையைத் திருடி கபில முனிவருக்குப் பின்னால் கட்டிவிட்டனன். சகரனின் பிள்ளைகள் கபிலரைத் திருடன் என்று எண்ணி துன்புறுத்தவே அவர் தனது கோபக் கனலால் அந்தப் பிள்ளைகளை எரித்து விடுகிறார். பின்னர் பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொணர்கிறார். குணம் என்னும் குன்று ஏறி நின்றாரைப் பகைக்கக் கூடாது.

bangalore valluvar

தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

கணவனையே கண்கண்ட தெய்வமாகப் போற்றிய வள்ளுவனின் மனைவி வாசுகி செய்த அற்புதங்கள், கற்புக்கரசிகளின் மாண்பைக் காட்டும். அரைக் கிணற்றில் தண்ணீர் வாளி நின்றதும், ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’ என்று முனிவரையே சாடியதும், சாவித்திரி எமனுடன் போராடி கணவன் உயிரை மீட்டதும், கண்ணகி மதுரை மாநகரையே எரித்ததும் இதற்குச் சில உதாரணங்கள்.

வேனன், நகுஷன் போன்ற கொடுங்கோலர் அழிந்த கதையை ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் காணலாம்

 

சந்யாசிகள் நினைத்தால் ஒரு பேரரசையே உருவாக்கலாம், அழிக்கலாம் என்பதை தவம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார்:

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

மொகலாயர்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்த சிவாஜிக்கு அருள்புரிந்த சமர்த்த ராமதாசரும், அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைக்க ஹரிஹரன், புக்கன் என்ற ஆட்டிடையர்களுக்கு அருள்புரிந்த வித்யாரண்யரும், ராமராஜ்யம் நிறுவ சபதம் பூண்ட மஹாத்மா காந்திக்கு உதவிய புராணக் கதைகளும் இதற்கு உதாரணங்கள்.

ஒவ்வொரு குறளுக்கும் உதாரணமான கதை நமது தமிழ்மொழி, வட மொழி நூல்களில் உள்ளன. விரிவஞ்சி இத்தோடு நிறுத்துகிறேன்.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:

‘’Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar’’– posted in this blog September 18, 2011.

 valluvar_statue_kanyakumari

Bhagavad Gita through a Story

 

Bhagavad Gita through a Story

“ There is a story about the building of the great Brihadeeshvara temple thousand years ago by Raja Raja Choza in Thanjavur, probably the most beautiful temple in India The king one day decided to go and inspect the work, so he drove to the temple site, got out of his chariot and walked towards where the temple was being built. He came across a man who was cutting stone and he asked him,

 

“What are you doing?”

The man said, “I am cutting stone”.

He went a little further, and there was another man who was doing the same thing. He asked,

“What are you doing?”

The man answered, “I am earning a living”.

He went little further and came to a third person who was doing exactly the same thing. He asked,

“What are you doing?”

He said, “Sir, I am building a great temple”.

Now you will see the difference of attitude. They were doing exactly the same thing,they were getting the same wages. But the first man was simply mechanically performing a task. The second one had a slightly broader vision, he had the problem of his family and was earning for them. The third one was earning for his family certainly, but he had the broad vision that he was building a great temple for Lord Shiva.

 

This illustrates the theory of correct action. Whatever you may be doing, it does not really matter s long as you are doing it with inner dedication and devotion, and as long as you are using action itself as a powerful means for spiritual development. This is the first major teaching of Gita, the theory of correct action.

 

The theory of correct action in the Gita revolves around a single concept: that action should NOT be purely for selfish purposes, although the self is obviously involved. Action must be positive, joyous, affirmative action; it must be an offering to the divine.

From the book ‘The Gita in World Literature’

 

Earlier articles on Krishna posted by me:

1.ONE MINUTE BHAGHAVAD GITA

2.Krishna’s Diamond in USA?

3.Atom bomb to Zoo of Bhagavad Gita

4.Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwic Food Sold

5.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி (Tamil))

6.கண்ணன் வழி….தனீ…..வழி!(Tamil)

7.கொலவெறி வைரம்

8. 45 Commentaries on Bhagavad Gita

(Pictures are taken from other websites.Thanks)