தண்ணீர் கொண்டு வா — நியாயம்!

supermoon-may5-2012-x

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. தண்ணீர் கொண்டு வா — நியாயம்!

 

Post No 1619; Dated 3rd Febraury 2015

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.

चन्द्रचन्द्रिकान्यायः

candracandrika nyayah

சந்திர சந்திரிகா நியாயம்

சந்திரனும் அதன் ஒளியும் பற்றிய நியாயம் இது. நிலவின் குளிர்ந்த ஒளியையும் நிலவையும் பிரிக்கவே முடியாது என்பதைச் சொல்லும் இந்த நியாயம் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்து இருக்கும் இரு பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.


water1

जलानयनन्यायः

jalanayana nyayah

ஜலாநயன நியாயம்

 

நீரைக் கொண்டு வருதல் பற்றிய நியாயம் இது.

 

குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்று ஒருவரிடம் சொன்னால் அதைக் கொண்டுவரும் போது அதை எடுத்து வருவதற்கான குவளையும் கொண்டு வா என்பதும் அதில் அடங்கும் அல்லவா! பிரிக்க முடியாத ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட இரு விஷயங்களைக் குறிப்பிட இந்த நியாயம் பயன்படுத்தப் படுகிறது.

pen painti1

Painting by S. Ilayaraja from Face Book

चित्रांगनान्यायः

citrangana nyayah

சித்ராங்கனா நியாயம்

ஓவியம் ஒன்றில் சித்தரிக்கப்படும் அணங்கு பற்றிய நியாயம் இது. எவ்வளவு தான் த்த்ரூபமாக ஒரு அழகியின் படத்தை வரைந்தாலும் கூட அந்த அழகி நேரில் இருப்பது போல ஆகுமா? ஆகாது. எவ்வளவு அரிய முயற்சி எடுத்து ஓவியத்தை வரைந்தாலும் கூட நிஜத்திற்கு அது நிகராகாது. அதே போல ஒருவன் எவ்வளவு தான் சித்தரித்தாலும் பேசினாலும் ஒரு விஷயத்தின் நிஜ ரூபம் காண்பிக்கப்படும் போது அதற்கு நிகராக எதுவும் ஆகாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

tortoise

कूर्माङ्गन्यायः

kurmanga nyayah.

கூர்மாங்க நியாயம்

கூர்மம் – ஆமை அங்கம் – உறுப்பு

ஆமையின் உறுப்புகள் பற்றிய நியாயம் இது. ஆமை தனது கழுத்து மற்றும் கால்களை தேவைப்படும்போது  மட்டுமே வெளியில் நீட்டும். தேவை இல்லாவிட்டாலோ அல்லது ஒரு ஆபத்து வந்தாலோ அது தன் கழுத்தையும் கால்களையும் இழுத்து தன் ஓட்டிற்குள் அடக்கிக்கொண்டு விடும். அதே போல விஷயம் தெரிந்த ஒருவன் தன் சக்தியை தேவைப்படும் போது மட்டுமே வெளியில் காட்டுவான். சரியான வாய்ப்பு வரும் போது தன் திறனைக் காட்டிப் பயன் பெறுவான். தேவையற்ற காலங்களில் அனாவசியமாக தன் திறமைகளைக் காட்டி சக்தியை விரயம் ஆக்க மாட்டான்; தம்ப்பட்டம் அடிக்க மாட்டான்.


Sugar cane-23

इक्षुविकारन्यायः

iksuvikara nyayah

இக்ஷுவிகார நியாயம்

 

கரும்பை எப்படியெல்லாம் மாற்றுகிறோம் என்பதைக் குறிக்கும் நியாயம் இது. கரும்பை வெட்டி எடுத்து அதை முதலில் நசுக்கி அதன் சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சூடாக்கப்பட்டுப் பின்னர்  மெதுவாக திட நிலைக்கு கொண்டு  வரப்படுகிறது. பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு அழகிய வெல்லக் கட்டிகளாக ஆக்கப்படுகிறது. படிப்படியாக ஒரு விஷயம் பக்குவப்படுத்தப்பட்டு இறுதியில் விரும்புகின்ற ஒரு வடிவமாக ஆவதைச் சுட்டிக்காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.

contact swami_48@yahoo.com
********

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 1

linga-movie-wallpapers

by ச.நாகராஜன்

Written by S Nagarajan

Post No. 1617;  Dated 2nd February 2015

 

உலகின் ஒப்பற்ற மொழி தமிழ்

தாய் மொழியின் மீது பற்று கொள்ளாதவனை மனிதனாகவே கருத முடியாது. அதே சமயம் இதர மொழிகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்பவனையும் மனிதனாகக் கருத முடியாது.

உலகின் ஒப்பற்ற தனி மொழியான தமிழின் பெருமையைச் சொல்ல வல்லவர்கள் பல மொழியையும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக சம்ஸ்கிருதத்தை அறிந்திருக்க வேண்டும்.

சம்ஸ்கிருதமும் அறிவோம்

பாரதப் பண்பாட்டின் ஆணி வேராக விளங்கும் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் ஏராளமான காவியங்கள், மற்றும் கலைகளை விளக்கும் நூல்கள் எனப் பல்லாயிரக்கணக்கில் சம்ஸ்கிருத அறிவுக் களஞ்சியம் விரிந்துள்ளது. ஆகவே காழ்ப்புணர்ச்சி அற்ற சமரஸ நோக்கில் எதையும் கற்று ஏற்றம் பெறுவதே சிறப்பு.

வெகுஜன கவர்ச்சியாக இன்றைய நாட்களில் விளங்கும் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம் நிறையவே இருக்கிறது. இதில் தப்பு ஏதும் இல்லை. காலம் காலமாக நாம் தமிழகத்தில் அன்றாடம் வழங்கி வரும் சில சொற்களின் ஆணி வேரை சம்ஸ்கிருத மூலத்தில் பார்க்க முடியும்.


lingaa-teaser

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம்

எடுத்துக் காட்டாக சடங்கு பற்றிய திரைப்படக் காட்சிகளை எடுத்துக் கொள்வோம். எத்தனை பாடல்கள் உள்ளன! இந்த சடங்கை எந்த ஜாதியினராவது விட்டு விடுவார்களா, இன்றும் கூட!

சடங்கு என்ற சொல் ஷட் +அங்கம் = ஷடங்கம் என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து எழுந்த ஒன்று.

 

திரைப்படங்களில் அபாரமாக நடிக்கும் நடிக நடிகையரைக் கூட திலகம் என்று தான் சொல்கிறோம். நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என நம் மனம் கவர்ந்த சிறப்பு நடிக நடிகையரை யாராலும் மறக்க முடியுமா, என்ன?

உச்ச கட்ட போற்றுதலாக நாம் கொடுக்கும் திலகம் ஒரு சம்ஸ்கிருதச் சொல் தான்!

தமிழ்க் கம்பன் சீதையை வனிதையர் திலகம் என்று தான் வர்ணிக்கிறான்!

சூப்பர்ஸ்டார் பாடும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

காட்சி அமைப்புகளையும் பாடல்களையும் எடுத்துக் கொள்வோம். இப்போது சமீபத்தில் வந்த சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தின் படமான லிங்காவில் சிவன் கோவில் திறப்பு என்னும் ஒரு அருமையான காட்சி வருகிறது. அதில் அவர் சிவனைத் துதிக்கும் தோத்திரப் பாடல் ராவணனால் செய்யப்பட்ட சிவ தாண்டவ ஸ்தோத்திரம். இது பல தெலுங்குப் படங்களில் இடம் பெற்ற ஒன்று. ஏராளமான பாடகர்களால் பாடப்பட்ட ஒன்று. அருமையான இசை அமைப்பாளர்கள் கம்பீரமான இந்த ஸ்தோத்திரத்திற்கு இசை அமைத்துள்ளனர்.


stotra best

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே

கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.

டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்

சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.

 

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ

விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.

தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே

கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.

என்று இப்படி ஆரம்பிக்கும் அற்புதமாக சிவ நடனத்தை விவரிக்கும் பாடலைக் கொண்டுள்ள காட்சி பொருத்தமான  இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது லிங்கா படத்தில்!

இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரம் நீளமான ஒன்று அர்த்தம் பொதிந்த ஒன்று. இது முழுவதுமாக படத்தில் இடம் பெறவில்லை.. ஆனால் ரங்காராவ் ராவணனாக நடித்து இந்த ஸ்தோத்திரத்தை கம்பீரமாகப் பாடும் காட்சி தெலுங்கு படத்தில் இடம் பெற்றுள்ளது.

துர்கா மற்றும் காயத்ரி மந்திரம்

தமிழ் படங்களில் வரும் கல்யாணக் காட்சிகளில் தவறாமல் இடம் பெறும் மந்திர ஸ்லோகம்

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

இது துர்கா ஸப்த சதியில் மையமாக உள்ள ஸ்லோகம். தாலி அணியும் போது சொல்லப்படும் இந்த ஸ்லோகத்தைப் பல்வேறு படங்களிலும் கேட்டிருக்கிறோம்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்


stotram 3

என்ற காயத்ரி மந்திரத்துடன் ஆரம்பிக்கும் படங்கள் ஏராளம். மிக முக்கியமான காட்சிகளில் பின்னணியாக (அர்த்தமுடன் பொருந்தி இருக்கிறதோ இல்லையோ, அந்தக் காட்சியின் ‘எபெக்டைக்’ கூட்ட) பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மந்திரம் அபாரமான சக்தி உடைய மந்திரம்!

லஜ்ஜாவதியே! அசத்துற ரதியே!

இன்னும் பாடல்களில் வரும் வரிகளைப் பார்ப்போம்:

“சிநேகிதனே ரகசிய சிநேகிதனே” (ஸ்நேஹிதன் – நண்பன்)

“லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே” (லஜ்ஜை – நாணம், வெட்கம்)

இப்படி எழுதிய கவிஞர்கள் தமிழ்ப் பற்று குறைந்த அல்லது இல்லாத கவிஞர்கள் என்று பட்டம் சூட்டி விடலாமா, என்ன? தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பொருத்தமான காட்சிகளுக்கென பாடல் வரிகளாக யாத்துள்ளனர், அவ்வளவு தான்!

ப்ரியா, ப்ரியமானவளே என்ற தலைப்பு போல எத்தனை தலைப்புகள்!

அன்புள்ளவளே என்று ஏன் தலைப்பு வைக்கவில்லை என்று சண்டை போடலாமா?

 

சர்வாதிகாரி என்ற வார்த்தையில் உள்ள ஆணவமும் கம்பீரமும் தக்க இடத்தில் திரைப்படத்தில் உபயோகப்படுத்துவதில் என்ன தவறு?

ஆழமுள்ள அர்த்தத்தைத் தரும் சில சொற்களை வசனகர்த்தாக்கள் (அடடா, இங்கு கர்த்தா வந்து விட்டது) பயன்படுத்துவது இயல்பு தான்!

 

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் வரும் சம்பந்தி, த்ரோஹம், விஸ்வாசம் போன்ற வார்த்தைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவு தான் ஏது?


krishnadevaraya

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

தமிழர்கள் இயல்பாகவே உள்ள அருமையான பண்பாட்டில் ஊறி வளர்ந்தவர்கள்; வளர்பவர்கள்; இனியும் வளரப் போகிறவர்கள்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என்ற அருமையான வைர வரிகளை உலகிற்கு அளித்த தமிழ்ப் புலவன் தமிழர் தம் பரந்த மனோபாவத்தை அல்லவா சுட்டிக் காட்டி இருக்கிறான்!

இந்த வழி நல்ல வழி’ நம் தமிழர் வழி. வளரட்டும் இது.

 

-தொடரும்

என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் !

You are what you think

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. இறுதியில் என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் !

 

Written by Santanam Nagarajan

Article No 1613; Dated 31 January 2015

 

ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.

अन्धस्यैवान्धलग्नस्य न्यायः

andhasyaivandha lagnasya nyayah

 

அந்தஸ்யைவாந்த லக்னஸ்ய நியாயம்

குருடனுடன் சேர்வது பற்றிய நியாயம் இது. குருடனுடன் சேர்வதால் ஒருவனுக்கு என்ன லாபம்? அதே போல குறைந்த அறிவு உடைய ஒருவனுடன் சேர்வதால் யாருக்கு என்ன பயன்? எப்போதுமே அறிவில் சிறந்த ஒருவருடன் தொடர்பு கொள்வது அவசியம். தன்னை விட மேம்பட்ட அறிவில் சிறந்த ஒழுக்கத்தில் மேன்மையான அரிய குணங்களுடைய ஞானம் பெற்ற ஒருவரின் பழக்கம் அல்லவா சிறந்தது. இதை எடுத்துக் கூற வந்த நியாயம் இது!

.

penny-wise-pound-foolish

अल्पस्यहेतोर्बहुहातुमिच्छिन्निति न्यायः

alpasya hetorbahuhatumicchanniti nyayah

அல்பஸ்ய ஹேதோர்பஹுஹாதுமிச்சந்நிதி நியாயம்

 

சிறிது லாபம் பெற ஒருவன் பெரிய தியாகம் செய்வதைக் குறிக்கும் நியாயம் இது.

எதை ஒன்றை யாராலும் அடைய முடியாதோ அதைப் பெற தியாகம் ஒன்றைச் செய்தால் அதில் அர்த்தம் உண்டு. பெறுதற்கரிய மெய்ஞானத்தைப் பெற புலன்களால் அனுபவிக்கும் உலகியல் இன்பங்களைத் துறக்கலாம். ஆனால் நீடித்து இருக்காத இன்பங்களுக்காக தன்னைத் தியாகம் செய்யலாகுமா? ஆங்கிலப் பழமொழியான ‘Penny-wise Pound foolsih’ என்ற பழமொழி இந்த நியாயத்துடன் ஒப்பு நோக்குதற்குரியது. இந்த அர்த்தத்திலும் உலகியல் வழக்கில் இதைப் பயன்படுத்துவர். ஒரு காசை சேமித்து ஒன்பது காசை கோட்டை விடுவான் என்பது உலகியல் வழக்கு!

fea2-chicken-and-egg1

अण्डकुक्कुटन्यायः

anda kukkutta nyayah

அண்ட குக்குட நியாயம்

 

கோழியும் முட்டையும் பற்றிய இந்த நியாயம் மிகவும் பிரபலமானது. இது பற்றிய கதை கிராமப்புறங்களிலிருந்து எல்லா இடங்களிலும் புழங்கி வரும் கதை. கோழி ஒன்று ஒரு நாளைக்கு ஒரு  முட்டை தான் இடும். அதன் சொந்தக்காரனோ ஒரு பெரிய பேராசைக்காரன். அது ‘வைத்திருக்கும்’ எல்லா முட்டைகளையும் உடனே பெற அவனுக்கு பேராசை! ஆகவே அதன் வயிற்றை அறுத்து உள்ளே பார்த்தான்! என்ன பரிதாபம், அங்கு அவன் எதிர்பார்த்த முட்டைகள் இல்லை.  பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழி உலகியலில் அன்றாடம் வழங்கும் பழமொழி. பொன் முட்டை இடும் வாத்து என்ற கதையும் இதே கருத்தை வலியுறுத்தும் ஒன்று!


horse servant

अश्वभृत्यन्यायः

asvabhrtya nyayah

அஸ்வப்ருத்ய நியாயம்

ஒரு குதிரையும் அதைப் பராமரிக்கும் விதண்டாவாதியான வேலைக்காரனையும் பற்றிய நியாயம் இது.

குதிரை ஒன்றை பராமரித்து  வந்தான் விதண்டாவாதியான வேலைக்காரன் ஒருவன். அவனிடம் வந்த ஒருவன் குதிரையைக் காட்டி”இந்தக் குதிரை யாருடையது?” என்று கேட்டான்.

 

அதற்கு அந்த விதண்டாவாதி,” எவனுக்கு நான் வேலைக்காரனோ அவருக்கு சொந்தமானது இது” என்றான்.

 

“நீ யாரிடம் வேலை பார்க்கிறாய்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் வந்தவன்.

‘இந்த குதிரை யாருக்கு சொந்தமோ அவரிடம் தான் வேலை பார்க்கிறேன் நான்” என்றான் விதண்டாவாதி.

 

பயனற்ற விதத்தில் நேரடியாக பதில் சொல்லாமல் அனாவசியமாக விவாதித்துக் கொண்டே இருக்கும் வக்ரமான விதண்டாவாதம் பற்றிய நியாயம் இது!

மழுப்பலான பதில்களைச் சுட்டிக் காட்டுபவருக்கும் இந்த நியாயம் பொருந்தும்.


you are what

अन्ते या मति: सा गति:

ante ya mati sa gatih

 

அந்தே யா மதி ச கதி நியாயம் (கடைசியில் என்ன நினைக்கிறாயோ அதுவே கதி நியாயம்)

ஹிந்து மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாட்டை விளக்கும் நியாயம் இது. ஒருவன் இறக்கும் போது கடைசியில் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆவான் என்று இந்த நியாயம் விளக்குகிறது.

 

இதை விளக்க புராணங்களில் ஏராளமான கதைகள் உள்ளன என்றாலும் பாகவதத்தில் கூறப்படும் பரத மன்னனின் கதை மிகவும் பிரசித்தமானது. அவனிடம் மான் ஒன்று இருந்தது. அவன் எங்கு போனாலும் கூடவே அந்த மானும் போகும். அதை அவன் உயிருக்கு உயிராக நேசித்து வந்தான். அவன் மரணப்படுக்கையில் இறக்கும் போது அந்த மான் நினைவாகவே உயிரை விட்டான்.மறுபிறவியில் அவன் ஒரு மானாகப் பிறந்தான்.

பகவத்கீதையில் எட்டாம் அத்தியாயத்தில் வரும் கீழ்க்கண்ட 5 மற்றும் ஆறாம் ஸ்லோகங்கள் இந்த உண்மையைத் தெளிவாகக் கூறுவதைப் பார்க்கலாம்.

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

Anta-kale ca mam eva smaran muktva kalevaram  I

Yah prayaati sa mad-bhaavam yaati nasty atra-samsya: II

 

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

 

எவன் ஒருவன் , உடலைத் துறந்து இறக்கும் போது என்னை நினைக்கிறானோ அவன் என் இயல்பை அடைவான். இதில் சந்தேகமில்லை.

 

यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥८- ६॥

Yam Yam Va-api Smran Bhaavam Tyajathi-anthae Kalaevaram                                                                               Tam Tam-eva-aethi Kounthaeya Sadaa Tat-bhaava-bhavitha:

யம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||

 

குந்தியின் மகனே! ஒருவன் முடிவில் எந்தெந்த தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

Contact swami_48@yahoo.com

***********

அதிசய மன்னர்கள் எழுதிய அற்புத புத்தகங்கள்!

matta

 

Research Paper written by london swaminathan

 

Research article No 1612; Dated 30th january 2015

இந்தியா ஒரு அதிசய நாடு. பழங்கால இந்தியாவோ மிகமிக அதிசய நாடு! 15 லட்சம் சதுர மைல்கள் பரப்புடைய அகண்ட பாரதம். அத்தனைக்கும் ஒரே எழுத்து– பிராமி என்னும் லிபி. பிராமி என்றால் சரஸ்வதி என்று பொருள்! எவ்வளவு பொருத்தமான பெயர்!  வட மேற்கு மூலையில் இருக்கும் ஆப்கனிஸ்தான் முதல் (கரோஷ்டி லிபியும் உண்டு)  கர்னாடகா வரை பிராமி லிபியில் அசோகனின் கல்வெட்டுகள்! இலங்கையின் தென் கோடியிலும் பிராமி லிபி. இவ்வளவு அகண்ட பரப்பில் ஏன் இப்படி எழுதினர்? ஏன் எனில் இந்தியர்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்.

இதைவிட பெரிய அதிசயம்– பழனி அருகில் கிடைத்த 2500 ஆண்டுப் பழமையான பிராமி கல்வெட்டில் வைரம் (வயிர) என்ற சம்ஸ்க்ருதச் சொல்!! ஜ என்பதை ய என்று எழுதுவது மரபு- உலகம் முழுதுமுள்ள இலக்கண விதி! வஜ்ர என்ற வடமொழிச் சொல் வைர /வயிர என்று எழுதப்பட்டுள்ளது. (எ.கா. ஜாமம்=யாமம், ஜீஸஸ்= யேசு, அஜன்=அயன், ஜூ=யூத, ஜோஸப்= யூசுப் , ஜாத்ரா=யாத்ரா, ராஜா= ராயல்; இன்னும் நூற்றுக் கணக்கில் எழுதி வைத்துள்ளேன்).

இந்த எழுத்து பல்லவ கிரந்தமாக மாறி தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் இன்றும் புழங்குகின்றன.

 

உலகம் முழுதும் உள்ள ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான இலக்கியங்கள் உள. வால்மீகி, வியாசன், உலகப் புகழ் காளிதாசன், கம்பன், இளங்கோ, வள்ளுவன், ஹோமர், வர்ஜில், பிளாட்டோ,சாசர், ஷேக் ஸ் பியர் — என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் மன்னர்களே புத்தகங்கள் எழுதியது உண்டா? இந்தியாவில் மட்டும் உண்டு.

22OEB_AMUKTAMALYADA_131860e

மற்ற இடங்களில் இருந்தாலும் ஒன்றிரண்டு இருக்கலாம். இந்திய மக்களும் மன்னர்களும் அறிவாளிகளாக இருந்த காரணத்தால் இந்த நூல்கள் பெருகின. ஹோமரும் மோஸஸும் பிறப்பதற்கு முன்னரே இந்தியாவில் வேதங்களும் அது தொடர்பான இலக்கியங்களும் பெருகின. அளவே இட முடியாத அளவுக்கு!! உலகில் மிகச் சிறந்த அறிவாளிகள் இங்கு இருந்ததே இதற்குக் காரணம்.


ratnavali of harsa

இதோ இதற்கான சாட்சியங்கள்:

 

தமிழ் மன்னர்கள் இளம் பெருவழுதி, அறிவுடை நம்பி, நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், மாக்கோதை, கணைக்கால் இரும்பொறை, மஹாராணி பூதப் பாண்டியன்  பெருங் கோப்பெண்டு  முதலிய பலர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.

 

மன்னன் விச்வாமித்திரன் எழுதிய மந்திரங்கள் வேதத்தில் உள்ளன! அவர் பிராமணர் இல்லை. இருந்தபோதிலும் அவர் “எழுதிய” (காதில் கேட்ட) காயத்ரீ மந்திரத்தைத் தான் பார்ப்பனர்கள் முப்போதும் எப்போதும் ஓதுவர்.

 

யாதவ மன்னன் — இடைச் சாதி கண்ணன் – அருளிய பகவத் கீதை உலகப் பெரும் நூல்.

 

ஜனக மன்னர் விவாதித்த உபநிஷத்துகளும் மன்னர் கொடுத்தவை.

 

யவனர் ,சகரர் இன மக்களை பாரத மண்ணில் இருந்து  ஓட ஓட விரட்டிய விக்ரமாதித்தன், காளிதாசனை ஆதரித்ததோடு வேதாளக் கதைகள் தோன்றவும் காரணம் ஆனான்.

 

காஷ்மீரைச் சேர்ந்த புலவன் மாத்ருகுப்தன் மன்னர் பதவி வகித்தான்.  பல நூல்களை எழுதினான்.

 

காளிதாசனுடன் தொடர்புடைய மற்றொரு மன்னன் போஜன். இது விக்ரமாதித்தனின் வேறு ஒரு பெயராகவோ அல்லது அவனுக்கு அடுத்து வந்தவனாகவோ இருக்கலாம். தமிழில் கூட கபிலர், பரணர் போன்ற புலவர்கள் பல மன்னர்களைப் பாடினர். அதைப் போல காளிதாசனும் பல மன்னர்கள் ஆட்சிக் காலம்  வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

bhoja

போஜன் என்றாலே அறிவாளி என்னும் பொருள் இருந்ததால், எல்லா புத்திசாலி மன்னர்களும் தன்னை போஜன் என்று அழைத்துக் கொண்டனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நூலில் மூன்று போஜ மன்னர்களைக் குறிப்பிடுகிறார். வேதகால இலக்கியமான ஐதரேய பிராமணத்தில் போஜ மன்னன் பெயர் வருகிறது. ஆக பல போஜர்கள் இந்தியாவை ஆண்டார்கள்.

ஆயினும் வலரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பத்தாம் நூற்றாண்டு போஜ மன்னர் 84 நூல்களை எழுதி உலகப் புகழ் பெற்றுவிட்டார். இவர் இத்தாலிய அறிஞர் லியார்னோடா டா வின்ஸியைவிட அதிக விஷயங்களை எழுதிவிட்டார். குதிரை சாத்திரம் முதல் விமான சாஸ்திரம் வரை எல்லாம் இவருக்கு அத்துபடி. இவர் வாழ்ந்த தாரா என்னும் மத்தியப் பிரதேச நகரில் இவரது ஸம்ஸ்கிருத இலக்கண சித்திரக் கவி ஒன்று,  ஒரு மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் 1932ஆம் ஆண்டு மயிலாப்பூர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விவரங்களை எனது ஆங்கிலக் கட்டுரையிலும் காண்க:

 

Old Sanskrit Inscriptions in Mosques and on Coins

https://tamilandvedas.com/2012/03/17/old-sanskrit-inscriptions-in-mosques-and-on-coins/


amukta

பல்லவ மன்னனின் காமெடி நாடகம்

 

அப்பர் என்னும் திரு நாவுக்கரசரை படாத பாடு படுத்தியவன் மாமன்னன் மகேந்திர பல்லவன் (கி.பி.600-630). அவனே பின்னர் சைவ சமயத்துக்குத் திரும்பினான். அவன் காபாலிகர், புத்த, சமண சன்யாசிகளில் இருந்த கபட வேட தாரிகளைக் கிண்டல் செய்து மத்த விலாசப் பிரஹசனம் என்ற சம்ஸ்கிருத  நகைச்சுவை  நாடகத்தை எழுதினான்.

இதே காலத்தில் வாழ்ந்த ஹர்ஷ வர்தனன் என்னும் மன்னன் மூன்று வடமொழி நாடகங்களை எழுதினான்.  நாகா நந்தம், பிரியத்ர்சிகா, ரத்னாவளி என்ற மூன்றில் நாகனந்தம் மட்டும் ஜீமூடவாகனன், நாகர்கள் பற்றியது மற்ற இரண்டும் காதல் கதைகள்! உதயணன்- வாசவதத்தா காதல் விடயத்தை அடிப்படையாக உடையவை.

maduravijayam

கங்கா தேவியின் மதுரா விஜயம்

 

மதுரை மீனாட்சி கோவில்—  துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே  சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை.

ராஜபுத்திர இளவரசி மீராபாய் பாடிய 1300 பஜனைப் பாடல்களை யார் மறக்க முடியும்?

விஜய நகர மன்னர்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் ஸ்ரீரங்க நாதர்  மேல் ஆண்டாள் கொண்ட பக்தியை மெச்சி தெலுங்கில் ஆமுக்தமால்யதா என்னும் காவியத்தைப் படைத்தார்- வாழ்னாள் முழுதும் போர்கள் செய்து வெற்றி வாகை சூடிய ராயருக்கு புத்தகம் எழுதவும் நேரம் கிடைத்தது இந்திய மண்ணின் மகிமை.


vikram

உலகில் பல மொழிகளில் புகழ் மிகு இலக்கியங்கள் உண்டு என்று கண்டோம். ஆயினும் பழங்காலத்தில் இப்படி இல்லை. எகிப்தில்,  பாரசீகத்தில், சுமேரியாவிலும்  நூல்கள் இருந்தன. ஆனால் அவைகளை இலக்கியங்கள் என்று சொல்ல முடியாது சுமேரியாவில் இரண்டு கிளை மொழிகளில் தலா 60,000 வரிகள் வீதம் எழுதி வைத்துள்ளனர். ஆயினும்  இவை எல்லாம் நூல்கள் ஆகா.

மனு என்பவர் வேத காலம் முதல் பெயர் பெற்ற மன்னர் ஆவார். இவர்தான் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதியவர். இவருக்கு முன் பாபிலோனிய ஹமுராபி (கி.மு 1750) வாழ்ந்தார் என்று சொல்வோரும் கூட, ஹமுராபியின் சட்டதிட்டம் புத்தக வடிவில் இல்லை என்பதை அறிவர். மனுவின் பெயர் வேதத்தில் உள்ளது. வேதத்தின் காலம் கி.மு 4000 என்கபார் ஜெர்மன் அறிஞர் ஜாகோபி.

வேறு சில அரச எழுத்தாளர்களின் பெயர்கள்:

 

யசோவர்மன் – கி.பி.735

 

காலசூரி மயூர ராஜா–கி.பி.800

 

விக்ரஹ ராஜ தேவ – கி.பி. 1153

 

நேபாள மன்னன் அமோக வர்ஷன் – எட்டாம் நூற்றாண்டு.

Statue_of_Raja_Bhoja_02

Bhoja statue in Bhopal, M.P. India

இந்தியமன்னர்கள் அருமையான நூல்களை எதற்காக எழுதினார்கள்? நாம் படித்துப் பயன் பெற வேண்டும், எழுதியவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தானே! போஜன் எழுதிய 84 நூல்களையும் படிப்போம்; நாகானந்தம், ரத்னாவளி,ஆமுக்த மால்யதாவைப் படித்து ரசிப்போம். மத்தவிலாசப் பிரஹசனத்தைப் படித்துச் சிரித்து மகிழ்வோம்.

contact swami_48@yahoo.com

–சுபம்–

ratnavali-CZ56_l

Books written by Wise Kings of India!

Statue_of_Raja_Bhoja_02

Bhoja statue in Bhopal: Bhoja wrote 84 books on all subjects beating Leonardo da Vinci

Research Paper written by london swaminathan

 

Research article No 1611; Dated 30th january 2015

 

King Viswamitra “composed” Vedic Hymns

King Manu wrote Manu Smrti

King Krishna gave Bhagavad Gita

King Harsha (590-647) wrote Nagananda, Ratnavali and Priyadarsika

Emperor Mahendra Pallava (600-630 CE) wrote a comedy “Matta vilasa Prahasam”

Queen Ganga Devi(1357-1374 CE) wrote Madura Vijayam

King Krishna Deva Raya(1510-1529 CE) wrote Amuktamalyata in Telugu

King Bhoja (Tenth Century CE) wrote many poems and 84 books

Kashmir King Poet Matrugupta wrote Hayagrivavadha, commentary on Natyasastra (100 CE) etc.

vikram

Emperor Vikramaditya (1st Century BCE) ‘wrote’ Vikram and Vetal

King Janaka (8th Century BCE)gave several passages in the Upanishads

Tamil Kings (1st to 3rd Century CE) composed several Tamil Sangam Poems

Asoka (Third Century BCE)made edicts with Buddha’s teachings

 

Other  Royal Authors who wrote books were:

 

Yasovarman 735 CE

Kalachuri Mayuraraja 800 CE

Vigraharajadeva 1153

Nepalese king Amogavarsa, 8th century

Mihir_Bhoja_the_Great_Coin

Every language in the world boasts of excellent books written by excellent writers. We read about Vyasa, Valmiki, Kalidasa, Homer, Virgil, Plato, Shakespeare, Ilango, Kamban and hundreds of other great authors. But we dont hear about many books written by kings. Why?

 

Because they spent most of the time in administration or wars or fun and festivals. But the picture is very different in ancient India.In spite of their hectic routine, the kings found time to write immortal works. This shows the high literacy amongst the Indian kings and the general public. India must have been the most literate country in the ancient world! Before Moses and Homer were born, India was the only one country in the world with a huge volume of literature. Sumer, Babylonia and Egypt  had written materials, not literature. (Sumer has 60,000 lines in Emegir dialect alone; scholars think that another dialect emesal may have another 60,000 lines! Egypt had huge volumes written in hieroglyphs). The Vedic literature was there well before other countries put something in writing. Hindus believe that it happened at least 6000 years ago. Westerners give them different dates between 4000 BCE (Jacobi) and 1500 BCE (Max Muller).

If Emperor Asoka writes big things on huge rocks in hundreds of places, it means the common man is literate and he can read every bit of it. If no one can read such things, Asoka would not have written it from the northern most point of Afghanistan to southern most Karnataka (unfortunately his edics at Kanchipuram in Tamil Nadu were destroyed in invasions). Brahmi script is found even in southern Sri Lanka. Probably India was the only country in the world with a common script that spread over 1.5 million square miles. I mean the ancient Akand Bharat (now the area is 1.22 million square miles).

 

Sanskrit and its spoken  form Prakrit were used throughout Indian sub continent. An incredibly vast geographical area! There is no comparison in the world.

amukta

The Sanskrit dramas of Bhasa,Kalidasa, Shudraka, Visaka datta, Harshavardhana, Mahendrapallava and others show that people were eager to watch and read. A South Indian can easily understand Sanskrit is proved by Pallva’s drama and Kovaln reading the Sanskrit letter in the streets of Pumpuhar (Vide.Silappadikaram). In those days India was the largest country in the world. The amazing thing about that vast land was all can read Brahmi script! It is found even in Tamil Nadu 2300 years ago! Brahmi means Sarasvati — Goddess of Knowledge!

 

Recently they have discovered a fifth century BCE Brahmi inscription with the Sanskrit word Vairam (diamond). According to Tamil Grammar rules, Vajra is written as Vaira (E.g.Jamam=Yamam, Jesus= Yesu, Jew=Yuudha, Jatra=Yatra etc).

 

Asoka just copied Buddha’s teachings. So it is not litearture. But Bhoja and Manu were ancient writers. Manu is mentioned in the Rig Veda, the oldest religious book in the world. King Bhoja was mentioned in the Vedic literature Aitareya Brahmana (VIII.8-12.14). A prince by name Bhoja was also mentioned in several places. We know from the Rig Veda that several Manus were there.

 

Bhoja was a popular name that every intelligent king in India chose as his own. Indian history has recorded many kings with Bhoja’s name. The greatest Indian poet and palywright Kalidasa was in the court of Emperor Vikramaditya of first century BCE. But Kalidasa’s name is associated with another king Bhoja. It may be another name of Vikramaditya or successor of Vikramaditya. In India we see the same poets singing about five or six kings. In Sangam Tamil litearture we come accross great poets Kabila and Parana singing about five or six kings. Poets outlive kings.

 

Bhoja of Dhara was a polymath and his knowledge is exhbited in a large variety of works including Ramayana campu,SARASVATI KHANDABHARANA, Yuktikalpataru, Calihotra, Canakyaniti etc. He wrote 84 books on several technical matters. He beat Learnado da Vinci!!

 

I have already written about the Sanskrit inscription of Bhoja found inside a mosque in Dhara, Madhya Pradesh. Please read the follwing link for further details:

bhoja

Old Sanskrit Inscriptions in Mosques and on Coins

Old Sanskrit Inscriptions in Mosques and on Coins

 

Harshavardhana who lived in the seventh century wrote three beautiful Sanskrti plays Nagananda, Ratnavali and Priyadarsika. He wrote many Buddhist works as well. Ratnavalai and Priyadarsika are love stories. Naganada was about the Jimutavahana and the Nagas. Though Harsa dealt with the same old Udayana-Vasavadatta love story he introduced some new elements. Moreover when people of the country come to know that its their own king who wrote the drama, they would gather in huge numbers to watch his dramas.

Mahendravaraman, Pallava king, wrote Mattavilasaprahasanam ( A Farce of Drunken Sport) , a satire on hypocritical saints. It pokes fun at Kapalikas, Buddhist and Jain saints.

 

Krisnadeva Raya’s (1510-1529) Amuktamalyada in Telugu describes the divine love of Andal towards the God of Sri Rangam.

ratnavali of harsa

Ganga Devi, the queen who accompanied her husnand Kumara Kampanna, described the condition of Madurai under Muslim rule in 14th century and her husband’s victory over them. This is the first live commenatry of a war time ‘correspondent’!

 

Kalhana in his Rajatarangini refers to Bhoja, King of Malawa,

Bhoja, son of Harsa and Bhoja son of Salhana.

 

First king Manu wrote Manu Smrti, the first law book in the world.Even if some argue that Hammurabi’s (1792 to 1750 BCE) laws were there before Manu, we know that it was not a “book”.

No where in the world we see so many kings composing poems, writing dramas and kavyas. This is uniqe to India.

 

Poems composed by Sangam age Pandya, Choza and Cera kings

are incorporated into sangam literature. They were great poets of 400+ poets and they themselves composed poems.

maduravijayam

Kings of India wrote those books in good faith that it would be read by generations to come. It is our duty to read and appreciate them.

 

Long live the Indian Kings and their immortal Kavyas!!

 

contact swami_48@yahoo.com

matta

Are you a Square or a Zero ?

geometric_shapes

Are you a Square (Esquire) or a Zero (Pujya Sri)?

 

Written by london swaminathan

Research Article No.1604; Dated 26th January 2015

 

Hindu concept of geometrical shapes is unique. It has contributed several words to civilization.

 

Serekh in Egypt (rectangle shape)

Esquire in English etc. (square shape)

Chathurya  in Sanskrit (square shape)

Pujya Sri in Sanskrit (Round shape)

Encyclopedias will give you a different story for the origin of these words. But the truth is they are used in India with the same meaning in most of  the Indian languages for thousands of years.

 

Under rebus principle a picture is used to express a word or part of the word. In the olden days square was used for perfection and round for fulness. Temples were built in square or rectangular shapes.

geometrical-models

Square shape stands for perfection and cleverness.Sanskrit word Chathurya (clever) comes from Square ( Chathura) shape.

 

Round shape denotes fulness and and eternity. Sanskrit word Pujya sri, Pujya come from this round (Pujyam) shape.

 

Root ‘Puj’ means ‘to honour, to worship’ in Sanskrit

Pujyam means Zero as well.

If you reach that Pujyam (fulness), you become worshipful. i.e Pujya Sri or Parama Pujaniya

 

In Tamil there is no word for Zero. All the Tamil dictionaries give Pujyam or Sunyam for zero (both Sanskrit!)

 

Purnam and Pujyam stand for spiritual perfection and fulness.

“From Zero to Hero” — is the head lines we read in news papers nowadays for people who have gone from rags to riches. But it is otherway round in Hinduism. We go from something to Zero. When you have reached that stage people worship you as Mr Zero i.e Pujya Sri.

Famous Upanishad Mantra says

 

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते

पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

 

Om Purnam adah purnam idam purnath purnam udachyate

Purnasya purnma adaya purnam eva vashishyate.

Om Peace, Peace, Peace!

 

That is full; this is full; from fulness comes fullness

Taking fullness from from fulness,fulness indeed remains.

 

You can substitute Purnam with zero and it works out the same.

Look at B that has got square letters as initial letters (Indus seals are Read from right to left)

serekh

Egyptian Serekh

Esquire in English

 

Encyclopedias will give you the meaning as a gentleman, a noble man, a rank next to that of knight or knight’s eldest son for the word esquire. It must have come from Sanskrit Chathura=square= esquire= chathurya=clever

 

In the same way the circle or shape of zero is Pujya or Pujya Sri.

 

Triangle is also used in Mantra, Tantra and Yantra in Hinduism. In fact all the shapes like square, rectangle, circle, traingle are used in Yantras for magical effect.

In ancient Egypt, the writers used Serek for Kings’ names. The king’s name  in hieroglyphs are enclosed in a rectangular architectural abstraction. It is called serekh. A majestic falcon perches upon it . That is protective as well as proclamatory.

indus1

Square in Indus Valley and Egypt

 

In Indus valley seals we see square within a square as an initial letter. It may mean King or Palace or the Capital City such as Mohanja daro or Harappa. The square shape of the letter only leads me to this conjecture.

 

The legendary “squaring of the circle” (i.e.constructing a square equal in area to a given circle, using only geometrical means) symbolizes the wish to bring the heavenly and terrestrial elements into an ideal harmony (Latin: coincidentia oppositorum).

 

In the circle, the viewer encounters the line with eternal recurrence, neither beginning nor ending, and going round an invisible  but very precise centre. This compares with the idea of the course of time, which comes from nowhere and has no end. For primitive humans, the circle was certainly of strong symbolic importance due to its association with sun, moon and stars.

 

If any one calls you a Zero, dont be angry!

 

contact swami_48@@yahoo.com

திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

Tirumular+Tirumantiram2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

 

Compiled by S Nagarajan

Post No: 1596: Dated 23 January 2015

 

by

ச.நாகராஜன்

 

நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:

दग्धदहन न्यायः

Dagdha dahana nyayah

தக்த தஹன நியாயம்

தக்த – எரிபட்டதை; தஹன – எரிப்பது

எரித்ததை எரிப்பது என்னும் இந்த நியாயம் தீயில் எரிபட்டுப் போன ஒரு பொருளை தீ மீண்டும் எரிக்காது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. முடியாத ஒரு காரியத்தையோ அல்லது பயனற்ற ஒரு காரியத்தையோ வீணாக ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


Blind Faith- Blind leading Blind

अन्धपरम्परान्यायः

andha parampara nyayah

அந்த பரம்பர நியாயம்

அந்த(கன்) – குருடன்

குருடனைக் குருடன் பின்பற்றும் இந்த நியாயம் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒன்று. குருட்டுத்தனமாக, அறிவற்று, சுய சிந்தனையற்று ஒருவனைப் பின்பற்றும்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

ஒரு குருடனை வழிகாட்டியாகக் கொண்டு ஒருவன் சென்றால் அவன் விழுவதோடு அடுத்தவனையும் கிணற்றில் தள்ளி விடுவான்.

 

நல்ல குருவினைப் பின்பற்றாமல் தீய ஒருவனைக் குருவாகப் பாவித்து ஒருவன் பின்பற்றுவது குருடனைக் குருடன் பின்பற்றியது போல ஆகும் என்பது அற நூல்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக திருமுலரின் திருமந்திரத்தில் வரும் இந்தப் பாடலைக் கூறலாம்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்  

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்                          

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்                                  

குருடும் குருடும் குழி விழுமாறே —- (திருமந்திரம் பாடல் எண் 1680)

 

‘Blind leading the blind’ என்ற இதே கருத்து கதோபநிஷத்திலும் காணப்படுகிறது.

பைபிளிலும் இந்தக் கருத்தை மாத்யூ 15:13-14 மற்றும் ல்யூக் 6:39-40லும் காணலாம். புத்தமத த் தின் முக்கிய நூலான சாங்கி சூத்திரத்திலும் இது கையாளப்படுகிறது. அருளாளர்கள் எழுதிய பாஷ்யங்களிலும் இந்த நியாயம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

 

உலகளாவிய விதத்தில் பேசப்படும் இந்த நியாயம் மிகச் சில சொற்களில் அரிய கருத்தை விளக்கும் ஒன்றாகும்.

Blind-leading-the-blind

अश्मलोष्टन्यायः

ashma loshta Nyayah

அஷ்ம லோஷ்ட நியாயம்

அஷ்ம- கல்; லோஷ்ட – மண்ணாங்கட்டி,

கல்லும் மண்ணாங்கட்டியும் என்னும் நியாயம் இது. மண்ணாங்கட்டி ஒன்று பஞ்சை விடக் கெட்டியானது தான்; ஆனால் அதைக் கல்லுடன் ஒப்பிட்டால் அது மிகவும் மிருதுவானது தானே! உடைத்து உதிரக் கூடிய ஒன்று அது! அது போலவே ஒரு மனிதன் அவனது கீழ் வேலை பார்ப்போரை ஒப்பிட்டால் மிகவும் முக்கியமானவன் தான்! ஆனால் அதே சமயம் அவனை விட மேல் நிலையில் உள்ளோரை ஒப்பிடுகையில் அவன் சிறிய நிலையில் உள்ளவன் தான்! ஒரு விஷயத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் எதை எத்துடன் ஒப்பிடுகிறோம் என்பதில் ஏற்படும் முக்கியத்துவத்தை இந்த நியாயம் விளக்குகிறது.


Clay-Lumps-1964438

अहि-निर्ल्वयनीन्यायः

ahi nir-lvayani nyayah

அஹி நிர்-ல்வயனி நியாயம்

பாம்பு தன் சட்டையை உரித்து விடுவது பற்றிய நியாயம் இது.

 

எப்படி ஒரு பாம்பானது தன் சட்டையை உரித்து விட்டவுடன், அதை இனிமேல் தன் உடலில் ஒரு பகுதியாக்க் கருதுவதில்லையோ அதே போல ஒருவன் உண்மையான வித்யாவை ( மெய் கல்வி) அடைந்தவுடன் – தன்னை ஆன்மா என்று அறிந்தவுடன் -உடலை இனியும் தனதாக எண்ண மாட்டான்.

உயர்ந்த ஆன்மீகக் கருத்தைச் சொல்லும் நியாயம் இது.

shed-snake-skin2

अहिकुंडलन्यायः

ahi kundala nyayah

அஹி குண்டல நியாயம்

பாம்பு சுருண்டு படுத்திருக்கும்போது அதன் சுருள்களைச் சொல்லும் நியாயம் இது.

எப்படி சுருண்டு படுப்பது பாம்பின் இயற்கையோ (அதன் சுருள்கள் அதன் இயற்கையோ) அதே போல கெட்டவன் ஒருவனின் வழிகளும் அவனுடன் இயற்கையாக  இருக்கும் ஒன்றே! இயல்பாகத் தீயவரிடம் அமைந்திருக்கும் கெட்ட செயல்களையும் தீய எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

இப்படி எத்தனை எத்தனை நியாயங்கள்! ஒவ்வொன்றையும் படிக்கவும் கேட்கவும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவும் சுவையான ஒன்றாக அமைகிறது இல்லையா!

best coiled

contact swami_48@yahoo.com

***************

மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

tree 2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

 

Compiled by S Nagarajan

Post No: 1594: Dated 22 January 2015

by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் சுமார் 900 நியாயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றையாவது தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

विषवृक्षन्यायः

vishavrksa nyayah

விஷ வ்ருக்ஷ நியாயம்

 

ஒருவன் ஒரு விஷ மரத்தை நட்டு வளர்க்கிறான். அது விஷ மரம் தான் என்றாலும் கூட, மரத்தை நட்டு வளர்த்தவனாலேயே அது வெட்டப்படக் கூடாது. அதே போல ஒரு விஷயம் தீமை தருவதாக இருந்தாலும், குறும்புத்தனமாக இருந்தாலும் அதைச் செய்தவனாலேயே அது அழிக்கப்படக் கூடாது என்கிற நியாயம் இது.

tree

वृक्षप्रकंपनन्यायः

vrksaprakampana nyayah

வ்ருக்ஷ ப்ரகம்பன நியாயம்

 

மரத்தை அசைக்கும் நியாயம் இது. ஒரு மரம் அசைக்கப்படும் போது அதன் கிளைகளும் இதர பாகங்களும் சேர்ந்து அசைக்கப்படுகின்றன. ஆடுகின்றன. இந்த நியாயம் ஒரு விஷயத்தில் ஆணிவேரே அசைக்கப்படும் போது அதைச் சார்ந்த இதர விஷயங்களும் அசைக்கப்படும் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது

இந்த நியாயம் இன்னொரு விதமாகவும் விளக்கப்படுகிறது. ஒரு மனிதன் மரத்தின் மீது ஏறினான். அவனது நண்பர்கள் கீழே நின்று கொண்டிருந்தனர். ஒருவன் ஒரு கிளையை அசைக்கச் சொன்னான். இன்னொருவனோ இன்னொரு கிளையை அசைக்கச் சொன்னான். இன்னொருவன் இன்னொரு கிளையை… மரத்தில் ஏறியவன் மரத்தையே அசைத்தான். ஆகவே அனைத்துக் கிளைகளும் அசைந்தன! ஒரே ஒரு முயற்சியால் அனைவருமே திருப்திப் பட்டனர். ஒரே முயற்சியில் அனைவரையும் திருப்திப்பட வைப்பதை இது குறிக்கிறது.


morning-sickness1

वाताकदन्यायः

Vatadi nyayah

வாதாதி நியாயம்

வாதம், பித்தம், ச்லேஷ்மம் ஆகியவை உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

 

வாதம், பித்தம், ச்லேஷ்மம் அதாவது வாயு,பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தாலும் கூட உடலில் சமச் சீராக இருந்து உடலை நன்கு இயக்க வைத்து உடலின் ஆரோக்கியத்தைக் காக்கின்றன. இதே போல வெவ்வேறு இயற்கைச் சுபாவம் கொண்டவர்கள், வெவ்வேறு திறமைகள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து சரியாக ஒரு காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். இதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

लोहचुम्बकन्यायः

lohacumbaka nyayah

லோஹ சும்பக நியாயம்


magnet

லோஹம் – இரும்பு; சும்பகம் – காந்தம்

இரும்பும் காந்தமும் பற்றிய நியாயம் இது.

இரும்பைக் காந்தத்தின் அருகில் வைத்தால் அது தானாக ஈர்க்கப்பட்டு ஒட்டிக் கொள்ளும். இதே போல மிகவும்ந நெருக்கமான இரண்டு வஸ்துக்கள் இயல்பாக பரஸ்பரம் ஒன்றினால் இன்னொன்று ஈர்க்கப்படுவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. தூரத்தில் இருந்தாலும் கூட பரஸ்பரம் இரும்பு காந்தம் போல ஒன்றையொன்று ஈர்க்கப்படுவதை இது விளக்குகிறது.

சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி இந்த நியாயத்தைக் கையாள முடியும்.

रोगीन्यायः

 

rogi nyayah

ரோகி நியாயம்

ரோகி – நோயாளி

 

ஒரு நோயாளி நீண்டநாட்பட்ட நோயினால் தனது உணவைப் பற்றி அக்கறை காட்டாமல் இருக்க ஆரம்பிக்கிறான். அதே போல கெட்டவற்றில் நாட்டம் கொண்ட ஒருவன் எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியை இழந்து விடுகிறான். நோயாளி போல அவனது தீர்மானிக்கும் சக்தியும் கெட்டுப் போகும் போது இந்த நியாயம் உபயோகப்படுத்தப்படுகிறது.

patient

உலகியல் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நியாயங்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணரும் போது சுருங்கச் சொல்லி விளக்க வைக்கும் நியாயங்களின் மதிப்பை நன்கு உணரமுடிகிறதல்லவா!

contact swami _48@yahoo.com

*****************

வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

lamp1

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

Article No.1588; Date: 19th January, 2015

Part 4 of Nyayas in Tamil written by S Nagarajan


by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

देहलीदीपन्यायः

dehalidipa nyayah

 

தேஹலி தீப நியாயம்

 

வீட்டு வாயிற்படியில் வைக்கும் தீப நியாயம் காலம் காலமாக வழங்கி வரப்படும் ஒரு நியாயம். வீட்டு வாயிற்படியில் வைக்கும் விளக்கானது வீட்டிற்கு உள்ளேயும் வெளிச்சம் தரும். வீட்டை நோக்கி வருவோருக்கும் வெளியே வெளிச்சம் தரும். அதனால் ஒரே சமயத்தில் இரு நன்மைகள்!

 

ஒரே சமயத்தில் இரு நன்மைகளைத் தரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூற இந்த நியாயம் பயன்படுகிறது.

 

இதை அற்புதமாக துளசிதாஸர் பயன்படுத்தி ராம நாம மஹிமையை விளக்குகிறார். ஹிந்தியில் இரண்டு அடிப் பாடல்கள் தோஹா என்று வழங்கப்படுகிறது.

துளஸிதாஸரின் தோஹாவைப் பார்ப்போம்:-

 

ramnam mani dipa dharu, jiha dehari dvara
tulasi bhitara baherihi, jau cahasi ujiyara

 

ராமநாம மணி தீப தரு, ஜிஹ தேஹரி த்வாரா I

துளஸி பிடாரா பஹேரிஹி ஜா சாஹஸி உஜியாரா II

lamp use it

வீட்டு வாயிலில் வைக்கப்படும் விளக்கு போல நாக்கில் வைக்கப்படும் ராம நாமம் உள்ளேயும் வெளியேயும் நலம் தரும். ஆத்மாவுக்கும் நலம். வெளி உலகிலும் நலம் தரும்.

இந்த நியாயமே இன்னும் இரு நியாயங்களாகப் பெயரிடப்பட்டு இப்படிப் பரிமளிக்கிறது.

 

அந்தர்தீபிகா நியாயம்

மத்யதீப நியாயம்

பல்வேறு சூத்திரங்களிலும் இந்த நியாயம் கையாளப்படுகிறது.

अन्धगोलाङ्गूलन्यायः

andha go langula nyayah

 

Two blind men_0

அந்த கோ லாங்கூல நியாயம்

 

அந்த: – குருடன்’; கோ-காளை; லாங்கூலம் – வால்

 

ஒரு குருடன் பார்த்த காளையின் வால் என்ற நியாயம் இது.

இது எப்படி எழுந்த து என்பதை விளக்கும் கதை இது.முன்னொரு காலத்தில் ஒரு குருடன் தனது கிராமத்திலிருந்து கிளம்பி அருகில் உள்ள ஒரு நகருக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மற்றவர்கள் படும் கஷ்ட்த்தைக் கண்டு மகிழும் ஒரு கொடூரமான ஆசாமியைச் சந்தித்தான். அந்த ஆசாமி குருடன் அடுத்துள்ள நகருக்குச் சென்று நிறைய தானம் பெறலாம் என்ற அவனுடைய எண்ணத்தை அறிகிறான். உடனே அவனது சுபாவப்படி அவனிடம் அவனுக்கு தகுந்த ஒரு வழிகாட்டியைக் காண்பிப்பதாக க் கூறுகிறான். அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு காளையின் வாலை அவன் கையில் தந்து, “இதோ பார்! இதைப் பிடித்துக் கொண்டு செல்! நகரம் வந்து சேரும் என்கிறான். குருடனும் அவன் சொற்களை நம்பி காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை யாரும் விளக்கவே வேண்டாம்! வெகுண்ட காளை அவனை முட்புதருக்குள் தள்ளி விட்டது!

 

நம்பக்கூடாத ஒருவனை நம்பிக் கெடுவதை இந்த நியாயம் விளக்குகிறது.

இதை ஆதி சங்கரர் வேதாந்த சூத்திரத்தில் போலி குருவை அண்டி சரியான வழிகாட்டுதலின்றிக் கெடும் சீடனைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்துகிறார்.


two_frogs

कूपमण्डूकन्यायः

kupamanduka nyayah

கூப மண்டூக நியாயம்

கூபம் – கிணறு மண்டூகம் – தவளை

கிணற்றுத் தவளை நியாயம் என்று அழைக்கப்படும் இது பெரும்பாலும் உலக வழக்கில் அன்றாடம் வழங்கப்பட்டு வரும் ஒரு நியாயம்.

 

இது எப்படி வந்த து என்பதை விளக்க ஒரு கதை உண்டு. கடலிலிருந்து ஒரு தவளை கிணற்றுக்கு வந்து சேர்ந்தது.அதைப் பார்த்த கிணற்றுத் தவளை நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்க அது நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது.

 

“கடல் என்றால்.. அது எவ்வளவு பெரியது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.

“மிகவும் பெரியது”

“இந்தக் கிணறு அளவு இருக்குமா?”

“இன்னும் பெரியது”

“இதைப் போல இன்னும் ஒரு மடங்கு இருக்குமா?”

 

“அதற்கு எல்லையே இல்லை. மிக மிகப் பெரிய் ய்ய் யது..”

 

இதைக் கேட்ட கிணற்றுத் தவளை சிரித்தது. “நீ சொல்வது பொய்”, என்றது. ‘கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது’, என்றது அது.

 

சிறிதே படித்து கொஞ்சம் அனுபவமே கொண்டிருக்கும் ஒருவன் பரந்த உலக அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் பற்றித் தெரிந்திருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது. அவன் வெறும் கிணற்றுத் தவளை என்பது உலக வழக்கு!

froguseful

contact swami_48@yahoo.com

***************

நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

necklace

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

by ச.நாகராஜன்

Post No 1585; Dated 18th January 2015.

Compiled by S Nagarajan

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

कण्ठचामीकरन्यायः

kanthacamikara nyayah

கண்டசாமீகர நியாயம்

கண்டசாமீகரம் – கழுத்தில் அணியும் நெக்லஸ்

கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் தேடிய கதை என்று சொல்லப்படும் நியாயம் இது.

ஒரு பெண்மணி தன் கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் தன் நெக்லஸைக் காணோம் என்று தேட ஆரம்பித்தாள். இன்னொருத்தியிடம் அவள் என் நெக்லஸ் எங்கே என்று கேட்ட போது அந்தப் பெண்மணி, உங்கள் கழுத்திலேயே அதை அணிந்திருக்கிறீர்களே, கழுத்திலே பாருங்கள் என்று பதில் சொன்ன போது அவள் நாணினாள்.

இந்த நியாயம் வேறு எங்கேயோ ஒன்றைத் தேடப் போகும் ஒருவன் அது தன்னிடமே இருப்பதை அறியாமல் இருக்கும் போது சுட்டிக் காட்டப்படும் நியாயம். பரவலாக உலக வாழ்க்கையில் வழங்கப்படும் நியாயங்களுள் இதுவும் ஒன்று!


fruit-in-hand

करिवन्यस्तिबर्लवन्यायः

karavinyastabilva nyayah

கரவிந்யஸ்த பில்வ நியாயம்

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்று அறியப்படும் நியாயம் இது. கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என என்று வழங்கப்படுகிறது.

 

கையில் இருக்கும் வில்வப்பழம் போல வெளிப்படையாக எந்த வித விளக்கமும் தேவையின்றி இருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் வழங்கப்படுகிறது. நேரடியாக பார்க்க இருக்கும் வில்வக்கனிக்கு விளக்கம் வேறு தேவையா? நன்கு அறிய முடியும் ஒரு விஷயத்திற்கு விளக்கம் எதற்கு வேண்டும்!

kumba yaya

कुम्भधान्यन्यायः

kumbhadhanya nyayah

கும்ப தான்ய நியாயம்

தானியம் நிரம்பி உள்ள ஜாடி எனப்படும் நியாயம் இது. ஒரு பெரிய குதிர் முழுவதும் தானியம் வைத்திருக்கும் ஒருவனுக்கு தானியம் வழங்கி என்ன பயன்? தானம் செய்வதை அது தேவையாய் உள்ள ஏழைகளுக்குச் செய்ய வேண்டும். பணக்காரனுக்கு தானம் செய்து பயன் என்ன?

ஆங்கிலத்தில் TO SEND COAL TO NEW CASTLE  என்று வழங்கப்படுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

vaikkal

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

வைக்கோல்போரைப் பிடித்த நியாயம்.

ஒரு கப்பல் உடைந்து விடவே அதில் மூழ்க ஆரம்பித்த போது அதில் இருக்கும் ஒருவன் தன் உயிரைக் காக்க எதையேனும் பிடிக்க முயல்கிறான். அவன் கையில் ஒரு சிறு வைக்கோல்போரின் பகுதி தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதைப் பிடித்துக் கொள்கிறான். எப்படியேனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே அப்போதைய முனைப்பாக இருக்கும் அல்லவா! அது பயனற்ற வீணான முயற்சி என்றாலும் கூட அதைச் செய்கிறான் அவன். அது போல பயனற்ற முயற்சி என்று தெரிந்தும் கூட ஒரு விவாதத்தில் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு தனது தரப்பு வாத த் தை முன் வைக்க முயலும் ஒருவனைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது. இது நகைப்புக்கே இடமாகும்.

villagewell

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கிணறு வெட்டும் நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது முதலில் வெட்டுபவனுடைய உடலில் சேறு, சகதி ஆகியவை படியும். ஆனால் நேரம் செல்லச் செல்ல தண்ணீர் பீறிட்டு எழும் போது அந்த சேறும் சகதியும் அதிலிருந்து வரும் தண்ணீராலேயே கழுவப்பட்டு அவன் சுத்தமாவது போல ஒருவன் முதலில் செய்யும் பாவங்கள் எல்லாம் பின்னால் அவன் செய்யும் புண்ய காரியங்கள் மூலம் கழுவப்பட்டு அவன் பாவமற்றவனாகிறான்.

இதுவே கிணறு வெட்டிச் சுத்தமாகின்றவனது நியாயம் ஆகும்.

well

contact swami_48@yahoo.com

****************