சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – Part 2

kevin2
Kevin Richardson

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
கட்டுரை எண்- 1464; தேதி 7 டிசம்பர், 2014.

“ஹிந்து தத்துவம் ஐந்து அறிவுக்கும் மேற்பட்ட – அதீத பேரறிவு (super consciousness) என்னும் ஆறாவது அறிவு ஒன்று இருக்கிறது என்பதை விளக்குகிறது. அதன் மூலமே உத்வேகம் வருகிறது– – ஸ்வாமி விவேகானந்தர்

6. பல மொழி பேசும் ஹரால்ட் வில்லியம்ஸ்
உலகில் சாதாரணமான ஒரு நபர் 1.69 மொழிகளை மட்டுமே பேச முடியும் என்று அறிவியல் கூறுகிறது. ஹரால்ட் வில்லியம்ஸ் என்பவரோ 58 வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்!.
ஏழு வயது வரை சாதாரணமாகத் தான் ஹரால்ட் இருந்தார். திடீரென அவர் மூளையில் பெரிதாக ஒரு வெடிப்பு ஏற்பட்டது போல இருந்ததாம்! அதன் பின்னர் அவர் லத்தீன் மொழியைக் கற்க ஆரம்பித்தார். லத்தீன் பல மொழிகளுக்கும் ஆதாரமான ஒரு மொழி. அத்தோடு நிற்காமல் அவர் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து பல மொழிகளையும் கற்றார்.

7. கழுகுப் பார்வை கொண்ட வெரோனிகா செய்டர்
எந்தவிதமான தொழில்நுட்ப உதவியுமின்றி தனது சொந்தக் கண்களினாலேயே மிகச் சிறிய பொருளையும் பார்க்கும் வல்லமை படைத்தவர் வெரோனிகா செய்டர்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் பல்கலைக் கழகம் தன் பல்கலைக்கழக மாணவிகளுள் ஒருவரான வெரோனிகா செய்டர் மற்ற யாரையும் விட 20 மடங்கு கூரிய பார்வைத் திறனைக் கொண்டிருப்பவர் என்று அறிவிப்பு ஒன்றை 1972ஆம் ஆண்டு வெளியிட்டது. ஒரு மைலுக்கு அப்பால் வரும் ஒருவர் யார் என்று சொல்லும் திறனைக் கொண்டவராம் வெரோனிகா. அப்படி ஒரு கழுகுப் பார்வை!
இப்படி ஒரு மைலுக்கு அப்பால் வரும் ஒருவரைப் பார்க்க சாமானியர்களுள் ஒருவரான நாம் மிகவும் சக்தி வாய்ந்த, அதி நவீன பைனாகுலரை நாடினால் தான் வருவது யார் என்று சொல்ல முடியும்!

veronica seider
Veronica Seider

8.ஒலியின் மூலம் பார்வை கொண்ட பென் அண்டர்வுட்
பென் அண்டர்வுட் (Ben underwood) பார்வை இல்லாத ஒருவர். புற்று நோயினால் அவரது கண் பார்வை போயிற்று. ஆனால் மனிதன் செய்யும் ஒலிகளின் மூலம் (human etholocation) அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் திறன் படைத்தவராய் இருக்கிறார்.
இதனால் சாதாரண பார்வை உள்ள ஒருவரைப் போலவே அவரால் வாழ முடிகிறது. ஒலிப் பார்வை அவருக்கு எப்படி வந்தது என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவர் பற்றிய புகழ் பெற்ற வீடியோக்கள் நெட்டில் வலம் வந்து உலகை அசத்துகிறது.

Ben-Underwood
Ben Underwood

9. வலியைப் பொறுக்க வல்ல டிம் க்ரிட்லேண்ட்
சின்ன வலியைக் கூடப் பொறுக்க முடியாமல் ‘ஓ’வென்று கத்தும் நபர்களைத் தான் சாதாரணமாக நாம் பார்த்து வருகிறோம். பிரசவ வலியைக் கூட இப்போது யோகா மூலமாக பெண்மணிகள் பொறுத்துக் கொள்ளக் கற்று வருகிறார்கள். ஆனால் மிக அதிகமான வலியைக் கூடத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதைத் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் காண்பிக்கிறார் டிம் க்ரிட்லேண்ட்

“உடல்ரீதியாக அசாதாரணமான விசேஷமான சக்தி எதையும் நான் கொண்டிருக்கவில்லை. நான் செய்யும் ஒவ்வொன்றையும் மிகவும் பயிற்சி செய்த பின்னரே என்னால் செய்ய முடிந்தது.இப்படி அசாதாரணமாக பிரம்மாண்டமான வலிகளை நான் பொறுத்துக் கொள்வதை நீங்கள் கூட உங்கள் மனதையும் உடலையும் ஒருங்கிணைப்பதன் மூலம் செய்ய முடியும்! நான் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் உத்திகளை நீங்களும் கூடப் பயன்படுத்தி வலிகளைப் பொறுத்துக் கொள்ளலாம்!” என்று கூறுகிறார் டிம் க்ரிட்லேண்ட்!

அப்படி என்ன செய்கிறார் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! வலைத்தளத்தில் இவர் பற்றிய வீடியோக்களைப் பார்த்தால் கண்களில் ரத்தமே வந்து விடும். கூர்மையான ஒரு கம்பியை முழங்கைக்கு கீழாக ஒரு புறம் குத்தி மறுபுறம் எடுக்கிறார் மனிதர். இப்படிப் பல காட்சிகள்! நம்மாலும் எந்த வலியை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லும் இவரைப் பார்த்தாலே அதிசயமாகத் தான் இருக்கிறது! !(Tim Cridland என்று டைப் செய்து வலையில் பார்க்கவும்)

386100-the-lion-whisperer
Lion Man Kevin Richardson

10. மிருகங்களுடன் தகவல் தொடர்பு கொள்ள வல்ல கெவின் ரிச்சர்ட்ஸன்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கெவின் ரிச்சர்ட்ஸன். சிங்கங்களில் ஆரம்பித்து எந்த மிருகமாக இருந்தாலும் சரி, சுலபமாக அவைகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்! உலகில் அபாயகரமான மிருகங்களை அணுகுவதற்கு எத்தனை விதமான பாதுகாப்பு விதிகள் இருக்கிறதோ அத்தனையையும் உடைத்தெறிந்து விட்டு மிகச் சாதாரணமாக அபாய மிருகங்களுடன் பழகுகிறார் கெவின்! இது எப்படி சாத்தியம் என்றால், “என் உள்ளுணர்வினாலும் காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயமான முறை மூலமாகவும் தான் மிருகங்களுடன் என்னால் பேச முடிகிறது” என்கிறார் இவர்!
இன்னும் சில சூப்பர் மனிதர்களையும் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அறிவியல் சோதனைகளுள் பல விசித்திரமான சோதனைகள் உண்டு. மாதிரிக்கு ஒரு சோதனையைச் சொல்லலாம். வில்லியம் பீமாண்ட் (William Beaumont) ஆயிரத்து எண்ணூறுகளில் அமெரிக்க ராணுவத்தில் சர்ஜனாகப் பணியாற்றியவர். ஒரு நாள் அலெக்ஸிஸ் செயிண்ட் மார்டின் என்பவர் அவரிடம் சிகிச்சைக்கு வந்தார்.அவர் விலங்குகளின் மயிரைப் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த போது துப்பாக்கி ஒன்றால் சுடப்பட்டார். அவரது தோலைத் துளைத்துச் சென்ற குண்டு அவரது உறுப்புகளைச் சேதப்படுத்தவில்லை. நிச்சயம் குண்டினால் ஏற்பட்ட காயத்தினால் மார்டின் இறந்து விடுவார் என்று வில்லியம் நம்பினார். ஆனால் அதிசயமாக பெரிய துளை வயிற்றில் தெரிய மார்டின் பிழைத்து விட்டார். வயிற்றுத் துளை வழியே அவர் உடலில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் பார்க்க முடிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வில்லியம் வயிற்றில் ஜீரணம் ஆவது எப்படி என்ற சோதனையை அவர் மேல் தொடங்கினார். மார்டின் பழைய கம்பெனியில் வேலை பார்க்க முடியாத காரணத்தினால் சிறு வேலைகளைச் செய்வதற்காக அவரைத் தன்னிடமே பணியிலும் அமர்த்திக் கொண்டார். பல வருட காலம் ஜீரணம் சம்பந்தமான சோதனையை வில்லியம் தொடர்ந்தார். வயிற்றின் அசைவுகளினால் ஜீரணம் நடைபெறவில்லை என்றும் வயிற்றில் உருவாகும் அமிலங்களினால் தான் ஜீரணம் நடைபெறுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். சில சமயம் உணவுத் துணுக்குகளை அவர் வயிற்றில் ஒரு நூலில் கட்டித் தொங்கவிட்டு எப்படி ஜீரணம் நடைபெறுகிறது என்பதைக் கூட வில்லியம் செய்து பார்த்தார்.
ஆனால் தொடர்ந்த சோதனைகளினால் மார்டின் மிகவும் சோர்ந்து போனார். அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குச் சென்று விட்டார். ஆனால் 1826ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கே மீண்டும் திரும்பி வந்து வில்லியமிடமே வேலைக்குச் சேர்ந்தார். ஜீரணம் சம்பந்தமான எத்தனை சோதனை உண்டோ அத்தனையையும் அவர் மேல் நடத்தி அதை ஒரு புத்தகமாகவும் வில்லியம் எழுதி விட்டார்.
.உலகின் அதிசய சோதனைகளுள் இந்த ஜீரணச் சோதனையும் ஒன்று!

Written by my brother for a Tamil Magazine:swami

*********************

கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள்

Waitomo-glow-worm-New-Zealand
Glow worms in New Zealand Waitomo Caves

தமிழ் இலக்கியம், காளிதாசனில் மின்மினிப் பூச்சி

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1110; தேதி 16 ஜூன் 2014.

கம்பனும் காளிதாசனும் புகழ் பெற்ற கவிஞர்கள். வடமொழியில் ஏழு நூல்கள் எழுதிய காளிதாசனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. எப்படி சங்கத் தமிழ் நூல்களைக் கல்லாதோருக்கு, இந்திய கலாசாரம் பற்றிப் பேச அருகதை இல்லையோ அப்படிக் காளிதாசனைக் கல்லாதோரும் இந்தியப் பண்பாடு பற்றிப் பேச அருகதை இல்லாதோர் ஆகிவிடுகின்றனர். ஆயிரம் உவமைகளுக்கு மேலாக அள்ளித் தெளித்து அறுசுவை உண்டி – செவிக்கு உணவு—படைத்திருக்கிறார் காளிதாசர்!!

கம்பன் புகழைப் பாரதியார் பல இடங்களில் பாடிப் பரவியதில் இருந்து அவனுடைய மேன்மையை நாம் உணரலாம். கம்பனும் காளிதாசனும் ‘’மின்மினிப் பூச்சி’’ பற்றி சில அதிசயச் செய்திகளைக் கூறுகின்றனர். இது தவிர அகநானூற்றுப் புலவர்களும் நற்றிணைப் புலவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சில பாடல்கள் காளிதாசன் சொல்லும் ரகசியப் புதிரை விடுவிக்கிறது. இயற்கை வரலாற்று நிபுணரும், பி பி சி டெலிவிஷன் படத் தயாரிப்பாளருமான டேவிட் அட்டன்பரோ காட்டிய சில காட்சிகளைப் பார்த்தோருக்கு காளிதாசன் சொன்னது இதுதானோ என்று வியக்கவும் செய்வர்.

Fairies-nagoya city
Fireflies in Nagya City, Japan.

கம்பன் சொன்ன செய்தி
இந்திய கிராமப் புறங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பர். இந்த மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் பிடித்துச் சென்று தனது கூடுகளில் வைத்து மகிழும். கூடுகளுக்கு மின்சார விளக்குப்போடுவது போல இவைகள் வெளிச்சம் தருவதால் அவைகள் இப்படிச் செய்கின்றன போலும். இந்தக் காட்சியை கம்பன் பால காண்டத்தில் வருணிக்கிறான்:–

அயோத்தி மாநகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறதாம். அங்கே கோழிகள் குப்பையைக் கிளறினால் கூட ரத்தினக் கற்கள்தான் வருமாம். அவை களைக் கண்ட குருவிகள் , மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணி அவை களைக் கூடுகளில் கொண்டு வைக்குமாம். இதோ அந்தப் பாடல்:–

சூட்டுடைத் தலைத் தூநிற வாரணம்
தாள் தனைக் குடைய தகைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ
(கம்ப ராமாயணம், பால காண்டம், பாடல் 59)

பொருள்: வாரணம்=கோழி, மணி= ரத்தினக் கற்கள், குரீஇ=குருவி.

_mycena_chlorophanos_33 species

Fungi with luminescence. 35 Fungal speecies emit light

காளிதாசன் சொன்ன செய்தி
காளிதாசன் அவனது பாடல்களில் ( குமார சம்பவம் 1-30; ரகு வம்சம் 9-70 ) பல இடங்களில் ஒளிவீசும் தாவரங்கள் (ஜோதிர்லதா) பற்றிப் பகருவான்.
தசரதர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது காட்டில் தனியே தங்க நேரிட்டது என்றும் அப்பொழுது ஒளிவீசும் தாவரங்களே அவருக்கு விளக்குகளாக இருந்து உதவின என்றும் காளிதாசன் கூறுகிறான். (ரகு வம்சம் 9-70).

உமை அம்மை பற்றி வருணிக்கும் இடத்தில் குமார சம்பவத்தில் (1-30) மூலிகைகள் இரவு நேரத்தில் ஒளிவிடும் என்றும் சொல்கிறான்.

மேகதூத காவியத்தில் (பாடல் 80) மேகத்துக்கு வழங்கும் அறிவுரையில், “நீ மலைச் சிகரத்தில் குட்டி யானை அளவுக்கு உன் வடிவத்தைச் சுருக்கிக் கொள். மின்மினிப் பூச்சிகள் எந்த அளவுக்கு ஒளி சிந்துமோ அந்த அளவுக்கு ஒளி வீசி வீட்டிற்குள் எட்டிப் பார்” என்கிறான்.
கம்பனும் கூட “உம்பர் வானத்து நின்ற ஒளிவளர் தருவின்” – என்று தேவலோக ஒளி உமிழும் கற்பக தரு பற்றிப் பாடுகிறான் (பால காண்டம் 793)

glowing_plant_genetically engineered
Light emitting tobacco plant.

விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி:-
சில வகை மீன்கள், பூச்சிகள், கடல் வாழ் ஜெல்லி மீன்கள், தாவரங்களில் காளான் வகைகள் ஆகியன மட்டுமே ஒளி வீசக்கூடியவை. பெரிய மரங்களோ, செடி கொடிகளோ ஒளி வீசக்கூடியவை அல்ல. தற்காலத்தில் செயற்கை முறையில் புகையிலைத் தாவரத்துக்கு ஒளி ஊட்டி செயற்கையாக ஒளிரச் செய்துள்ளனர். ஆனால் இயற்கையில் உள்ள சில அதிசயங்கள் டெலிவிஷன் மூலம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன. நியூசிலாந்தில் ஒரு குகை முழுதும் மின்மினிப் பூச்சி வகைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் அந்தக் குகை ஜெகஜ் ஜோதியாகச் ஜொலிக்கிறது. விழா நாட்களில் கட்டிடங்களில் அலங்கார விளக்கு போடுவது போல அவை அணைந்தும் ஒளிவீசியும் ஜாலவித்தைகள் செய்கின்றன. பி.பி.சி போன்ற சில இயற்கை பற்றி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோருக்கு இது தெரியும்.

காளிதாசன் கம்பன், சொல்லும் ஒளிவிடும் தாவரங்கள், இது போல மின்மினிப் பூச்சிகளால் சூழப்பட்ட மரங்களாக இருக்கக்கூடும் அல்லது இபோது நாம் காணும் ஒளிவிடும் மீன்கள் போல அந்தக் காலத்தில் ஒளிவிடும் தாவரங்களும் இருந்திருக்கலாம்.
சங்கப் புலவர்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் (அகம். 67-16, 72-3, 202-7, 291-8; நற் 44-10)) வரும் சில பாடல்கள் மூலம் பலா மரம் முழுதும் மின்மினிப் பூச்சிகள் இருந்ததையும் குறவர்கள் இரவு நேரத்தில் மேகங்களைப் பார்க்க மின்மினிப் பூச்சிகள் விளக்காக இருந்து உதவி செய்வதையும் பாடிவைத்துள்ளனர்.

பாலை நில பருக்கைக் கற்கள், மின்மினிப் பூச்சிகள் போல இருப்பதாக நோய்பாடியார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம்.67)

எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடிய பாடலில் ஒரு அரிய உவமை தருகிறார். இரவு நேரத்தில் காட்டில், கரடிகள் பாம்புப் புற்றில் கையை விட்டுக் கறையான்களைப் பிடிக்கப் போகும்போது மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி கொல்லன் பட்டறையில் பறக்கும் தீப்பொறிகள் போல இருக்கும் என்கிறார். கரடியை இரும்புவேலை செய்யும் கொல்லனுக்கும் கறையான் புற்றுகளை பட்டறைக்கும் ஒப்பிட்டது ஒரு நல்ல உவமை. (அகம்.72)

ஆவூர்க் கிழார் மகனார் கண்ணகனார் பாடிய பாடலிலும் இதே கொல்லன் உலைக்கள உவமையைத் தருகிறார்.
நற்றிணைப் பாடல் (44) ஒன்றில் பெருங் கௌசிகனார் வேறு ஒரு காட்சியை வருணிக்கிறார்: குறவர்கள் இரவு நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் மேகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பர் என்கிறார்.

குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து….

தமிழ் நிகண்டுகளில் மின்மினிப் பூச்சிக்குப் பல பெயர்கள் உள்ளன அவை:–நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி.

இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், மின்மினிப் பூச்சி மூலம் வழங்கும் செய்திகள்தாம் எத்தனை எத்தனை !!
–சுபம் —

இயற்கையில் கணித இரகசியம்! –3

monalisa fibonacci
Post No 1029: Dated 8th May 2014
By ச.நாகராஜன் (Part-3)

“எல்லாமே எண்கள் தான்!”
-பிதகோரஸ்

இயற்கையில் உள்ள கணித ரகசியங்களையும் வடிவமைப்பு ரகசியங்களையும் கண்டுபிடிக்க விஞ்ஞானியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க ஒளியின் மீது ஏறிச் செல்வது போலக் கற்பனை செய்து அதைக் கண்டு பிடித்தார். ஆனால் சாமானியராக இருந்த பலரும் கணித ரகசியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக ‘குட் வில் ஹண்டிங்’ (Good Will Hunting) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் கதாநாயகனான வில் ஹண்டிங் என்ற இருபது வயது இளைஞனைக் கூறலாம். இந்த ஆங்கிலப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த ஹண்டிங் மிகப் பெரும் மேதைகளாக இருந்த கணிதப் பேராசிரியர்களால் தீர்க்க முடியாத கணிதப் பிரச்சினைகளை அனாயாசமாக தீர்த்து விடுவான்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்காவில் சாண்டியாகோவில் வாழ்ந்தவர் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாரான பெண்மணி மர்ஜோரி ரைஸ். அவர் கணிதப் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்த ஜாமெட்ரி வடிவங்களை இல்லத்தில் இருந்தபடியே கண்டுபிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். 1976இல் அவர் இப்படி 58 விசேஷ வடிவங்களை அமைத்துக் காட்டினார்.

1998ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான ரோலண்ட் க்ளார்க்ஸன் என்பவர் மிகப் பெரும் பிரைம் எண்ணை – பகா எண்ணைக் கண்டு பிடித்தார். (பகா எண் என்பது ஒன்றாலும் அதே எண்ணினாலும் மட்டுமே வகுக்கக் கூடிய ஒரு எண். உதாரணமாக 11 என்ற எண்ணை ஒன்றாலும் அதே பதினொன்றாலும் மட்டுமே வகுக்க முடியும்) இப்போது புதுப் புது பிரைம் நம்பர்களைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே கண்டுபிடிக்கின்றனர்!

கயாஸ் (CHAOS) எனப்படும் குழப்பம் அல்லது சீரற்ற தன்மை பற்றிய கயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த குழப்பத்திலும் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதை இப்போது கண்டு பிடித்துள்ளனர்.

வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவத்திலும் அளவுகளிலும் சீரற்ற தன்மையில் இருப்பது போல நம் கண்களுக்குத் தோன்றினாலும் அதை உயர்த்திலிருந்து பார்க்கும் போது அதிலும் ஒரு ஒழுங்கு, லயம் இருப்பதைப் பார்த்து விஞ்ஞானிகள் பிரமிக்கின்றனர்.

இப்படி கணித மர்மங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். முதலாவதாக பிரபஞ்சத்தில் உள்ள புதிர்கள் அனைத்திற்கும் விடைகளை கணித எண்களே தருகின்றன! பிரபஞ்சத்தில் உள்ள மர்மங்களைக் கண்டுபிடித்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற கணிப்பைச் சரியாகச் செய்ய முடியும். ஒரு விண்கல் நம் பூமியின் மீது மோத வருகிறது என்றால் அதைத் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையிலும் ஈடுபட முடியும்.

அத்தோடு இந்த இயற்கை கணித ரகசியங்களைக் கண்டுபிடித்து விட்டால் மிக உயரிய நாகரிகத்தை அடைந்து வளமுடன் அனைவரும் வாழும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.

sri_yantra

இந்துமத ரகசியங்கள்

நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக் கண்டு பிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர்.ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக்கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை இதுவரை!

பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள ‘கடபயாதி சங்க்யா’ என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கி விடும் ஒரு வழி முறையாகத் தொன்று தொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை – பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!

எடுத்துக்காட்டாக ஆதி சங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமைகின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன் படி இந்த எண்கள் 2-1-5 என்ற வரிசையில் மாற்றி அமைத்துப் பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்லபட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன் மூலம் அறிய முடிகிறது.

மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்த நூலில் பதினெட்டு என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன்னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கிராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த்தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!

taj-mahal-golden-ratio

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

பிரபல கணித மேதையான நேபியரைப் பற்றி சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஆன்மீகத்திலும் கணிதத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டவர் நேபியர். அவர் ஒரு பிரபலமான மாஜிக் நிபுணரும் கூட! ரஸவாதத்திலும் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதிலும் கூட அவருக்கு ஆர்வம் அதிகம். சின்ன பெட்டி ஒன்றில் ஒரு சிலந்தியையும் கூடவே எடுத்துக் கொண்டு எங்கும் போவது அவரது வழக்கம். அவருடன் இருக்கும் கறுப்புச் சேவல் தான் அவருக்குக் குறி சொல்லும் பரிச்சயமான ஆவி!

இந்தச் சேவலை வைத்துக் கொண்டு தான் தன்னுடைய பணியாளர்களில் யார் தன் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு போகிறார் என்பதை திருட்டு நடக்கும் போது அவர் கண்டுபிடிப்பார். தன்னுடைய பணியாளர்களை ஒவ்வொருவராக வரச் சொல்லி ஒரு அறையில் பூட்டுவது அவர் வழக்கம். தன்னுடைய சேவலைத் தடவுமாறு அவர்களிடம் கூறுவார். பின்னர் சேவல் யார் திருடன் என்பதை அவரிடம் கூறும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவெனில் கறுப்பு வண்ணச் சேவலின் மீது கறுப்புப் பொடியை அவர் தடவி விடுவார்..பணியாளர் ஒவ்வொருவராக சேவலைத் தொட்டுத் தடவ வேண்டும். குற்றம் இழைக்காதவர்கள் கள்ளம் கபடமின்றிச் சேவலை நன்கு தடவுவார்கள். உண்மையான குற்றவாளியோ அதைத் தடவுவது போலப் பாசாங்கு செய்வார். நேபியர் ஒவ்வொருவரின் கையையும் சோதிக்கும் போது எவர் கை மிகவும் சுத்தமாக இருக்கிறதோ அவர் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்து விடுவார்.

‘ மதி ‘ பாதி, ‘மாஜிக்’ பாதி!! எப்படி கணித மேதையின் தந்திரம்!

Contact swami_48@yahoo.com
*****************

இயற்கையில் கணித இரகசியம்! – 1

By S Nagarajan
Post No.1024 ; dated 6th May 2014

This series is written by my brother S Nagarajan for the Bhagya Tamil Magazine

பாக்யா இதழில் வெளிவரும் அறிவியல் துளிகள் தொடரில் 11-4-14,18-4-14 மற்றும் 25-4-14 இதழ்களில் வெளியான 3 அத்தியாயங்கள்

அறிவியல் துளிகள் 163

இயற்கையில் கணித இரகசியம் ! – 1

(பிபனோசி (Fibonacci) தொடரும் தங்க விகிதமும்)
ச.நாகராஜன்

female-face-for-golden-ratio

“நல்லது எப்போதும் அழகாகத் தான் இருக்கும். அழகானதோ ஒரு போதும் விகிதத்தில் குறைவு படாது”
ப்ளேடோ

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஒரு கணித நியதிக்கு உட்பட்டிருக்கிறது. இதை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர்; வியக்கின்றனர். மெய்ஞானிகள் பிரபஞ்ச லயத்தை கடவுளின் அருள் என்று போற்றும் போது விஞ்ஞானிகளோ அதை இயற்கையின் அதிசயம் என்று வியக்கின்றனர்.

கணிதத்தில் அமைந்துள்ள ஒரு அதிசயத்தை இத்தாலியைச் சேர்ந்த பிபனோசி (Fibonacci) என்ற கணித நிபுணர் கண்டுபிடித்தார். ரோமானிய எண்களை விட ஹிந்து-அராபிய எண்கள் மிக எளிமையாகவும் அபூர்வமாகவும், ஆற்றல் வாய்ந்ததாகவும், பல அதிசயங்களைக் கொண்டுள்ளதாகவும் இருப்பதை அவர் ஆராய்ந்து கண்டார். அவரது தந்தை அடிக்கடி பயணப்பட்டுக் கொண்டே இருந்ததால் அவருக்கு உதவும் வகையில் பிபனோசியும் வெளி நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். உலகின் பிரபலமான கணித மேதைகளைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. கணிதத்தில் பல விந்தைகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். அவற்றை மேலும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவர் சுட்டிக் காட்டிய விந்தைகளின் பிரதிபலிப்பு அப்படியே இயற்கைப் படைப்பில் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர்.
Fibonacci
Learnado Fobonacci

ஒரு எண்ணின் முந்தைய இரண்டு எண்களைக் கூட்டி வரும் எண்களால் அமைந்த ஒரு தொடர் பிபனோசி தொடர் என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

0,1,1,2,3,5,8,13,21,34,55 என இப்படி வரு எண் தொடர் பிபனோசி தொடர் ஆகும்.

ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் வருவது ஐந்து. மூன்றையும் ஐந்தையும் கூட்டினால் வருவது எட்டு. இப்படியே இந்தத் தொடரை அமைத்துக் கொண்டே போகலாம்.

இதில் இன்னொரு அதிசயம் – எட்டை ஐந்தால் வகுத்தால் வருவது 1.6. இது தங்க விகித எண் என்று அழைக்கப்படுகிறது.

இயற்கைப் படைப்பில் உள்ள மலர்களை எடுத்துக் கொள்வோம்.
சூரிய காந்தி மலரில் உள்ள இதழ்கள் இடது பக்க சுழற்சி உடையதாகவும் வலது பக்க சுழற்சி உடையதாகவும் அமைந்தி ருப்பதைப் பார்க்கலாம். (இது வரை இப்படி ஒரு விந்தை மலர்களில் இருப்பதைப் பார்க்காதவர்கள் இனியேனும் பார்த்து மகிழலாம்).

fibonacci (1)
சூரிய காந்தி மலரில் இடது பக்க சுழற்சி உள்ள இதழ்கள் 34 என்ற எண்ணிக்கையில் இருந்தால் வலது பக்க சுழற்சி உள்ள் இதழ்கள் 55 என்று அமைந்திருக்கிறது. லில்லி மலரின் இதழ்கள் 3, டெய்ஸி மலரின் இதழ்கள் 21 என அமைந்திருப்பதை எண்ணிப் பார்த்து (எண்ணியும் பார்த்து) வியக்கலாம்.

சூரிய காந்தி மலரின் நடுவில் உள்ள விதைகள் நிரப்பப்படுவது கூட ஒரு அற்புதமான கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 137.5 டிகிரியில் இந்த மலரின் அமைப்பு முழுவதும் இருப்பதைப் பார்த்தால் தங்க விகிதமும் தங்க கோணமும் இயற்கை அமைப்பில் இருப்பதை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மனித உடலில் கூட இந்த அமைப்பு இருப்பது கண்கூடு. கண்ணாடி முன்னால் ஒருவர் நின்றாலேயே போதும், அற்புதமான இந்த அமைப்பை அவர் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்று, இரண்டு, மூன்று ஐந்து என இப்படி பிபனோசி தொடரில் உள்ள கணித எண்கள் நம் உடலில் விளையாடுகின்றன. ஒரு மூக்கு, இரண்டு கண்கள், மூன்று பகுதிகளாக உள்ள அங்கங்கள், ஐந்து விரல்கள் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

sunflower fibonacci
டி என் ஏ (DNA) எனப்படும் மரபணுவை ஆராயும் போது திக்கித் திணறிய விஞ்ஞானிகள் பிபனொசி தொடரையும் தங்க விகிதத்தையும் டி.என்.ஏ. அமைப்பில் கண்டு அதிசயித்தனர். டி என் ஏயில் உள்ள டபிள் ஹெலிக்ஸ் அமைப்பில் ஒரு பக்கம் 34 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) நீளமும் அடுத்த பக்கம் 21 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) அகலமும் இருக்கின்றன. (அங்ஸ்ட்ராம் என்பது நீளத்தை அளக்கும் மிகச் சிறிய ஒரு அலகு.ஒரு அங்ஸ்ட்ராம் என்பது டென் டு தி பவர் ஆஃப் மைனஸ் டென் எனக் கூறப்படும். அதாவது ஒரு மீட்டரை எடுத்துக் கொண்டால் பத்து நூறு கோடியில் ஒரு பங்கு தான் அங்ஸ்ட்ராம்!)

இயற்கை பரிணாம வளர்ச்சியில் இந்த எண்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பதை அறிந்த விஞ்ஞானிகள் ஏன் அந்த அமைப்பை இயற்கை தேர்ந்தெடுத்தது என பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். மலர்களில் இந்த அமைப்புக்கான ஒரு காரணம் அதன் வளர்ச்சிக்கான காரணம் தான்! சூரிய ஒளிக்காக ஏங்கும் மலர்கள் அதிகமான விதைகளைப் பெற வேண்டுமானால் இப்படிப்பட்ட கோணத்திலும் விகிதத்திலும் அமைந்தால் தான் அவற்றை அதிகமாகப் பெற முடியும் என்பது தெரிய வருகிறது!

அழகி என்று நாம் கருதும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டால் அவர்களின் அங்க அமைப்பு அகலத்திலும் உயரத்திலும் 1.6 என்ற தங்க விகிதத்தையே கொண்டுள்ளது.

கையில் விரல்களின் நீளம், கையின் கணுப் பகுதி வரை உள்ள நீளம், முழங்கை வரை உள்ள நீளம் இவற்றை அளந்து பார்த்தால் அளவுகள் பிபனாசி தொடர் எண்கள் அமைப்பில் இருப்பதைப் பார்த்து மகிழலாம்.
(கணித இரகசியம் தொடரும்)
coneflower

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ரொனால்ட் ஏ பிஷர் (Ronal A Fisher) ஒரு பிரபலமான கணித மேதை. புள்ளிவிவர இயலில் பெரும் புகழ் பெற்றவர். (தோற்றம் 17-2-1890 மறைவு: 29-7-1962)
(இவரைப் பற்றிய சுவையான சம்பவம் ஒன்றை ஏற்கனவே அத்தியாயம் 105இல் பார்த்தோம்!)

இவரது தாயார் கேதி ஹீத் ஒரு வழக்கறிஞரின் மகள். தந்தையார் ஜார்ஜ் பிஷர் லண்டனில் கிங்ஸ் வீதியில் இருந்த ஒரு ஏலக் கம்பெனியின் உரிமையாளர். இந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. நான்கு பையன்கள் மூன்று பெண்கள். 1876இல் ஜெப்ரி (Geoffrey) என்ற பையனும் 1877இல் ஈவிலின் (Evelyn) என்ற பெண்ணும் பிறந்த பின்னர் மூன்றாவதாக பிற்ந்த குழந்தைக்கு ஆலன் என்று பெயரிட்டனர். ஆனால் ஆலன் மிகவும் குறைந்த வயதிலேயே இறந்து விட்டதால் கேதி மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார்.

ஆலன் என்ற பெயரில் ஆங்கில எழுத்தான ‘Y’
வரவில்லை, அதனால் தான் அவன் இறந்து விட்டான் என்று கேதி எண்ணினார். இந்த விசித்திர நம்பிக்கையில் நன்கு ஊறி இருந்ததால் அடுத்து பிறந்த எல்லா குழந்தைகள் பெயரிலும் ‘Y’ என்ற எழுத்து வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் தான் கணித மேதைக்கு ரொனால்ட் அயில்மர் பிஷர் (Ronald Aylmer Fisher) என்று ‘Y’ வருமாறு பெயர் வைக்கப்பட்டது. அவரும் கேம்பிரிட்ஜில் நன்கு படித்து பிரபலமான கணித மேதையானார்.

விஞ்ஞானிகள் குடும்பத்திலும் விசித்திரமான நம்பிக்கைகள் ஏராளம் உண்டு!

To be continued……………….

Contact swami_48@yahoo.com
^^^^^^^^^^^

What India could teach NASA Scientists?

nadi 4

By London Swaminathan
Post No. 1022; Date 5th May 2014.

Our body is the microcosm and the earth is the macrocosm. Whatever we find on the earth we can see in our body. Blood vessels are like the rivers running on earth. Body hair can be compared to the vegetation on earth. There is a proverb in Tamil and other Indian languages saying what you see in Andam is found on Pindam. Andam (egg) is a globular thing meaning earth, universe etc. Pindam is our body. Both are Sanskrit words. Hindus know that the earth is globular in shape from time immemorial.

Hindus know a secret which no Western scientists knew. Your birth chart is in your hand is known to Hindus. If an astrologer who has specialised Nadi Jothidam, looks at your hand he can tell you the planetary positions at the time of your birth. No scientists can explain it scientifically. By looking at your palm he tells where the planets were in the sky the day you were born. This is not astrology but astronomy. The other thing about what is going to happen in future is astrology. I am not writing about astrology. The reason being no one can give you an accurate prediction.

Both my brothers went to see a Nadi Jothida astrologer in Kavalur near Madurai thirty years ago. The astrologer predicted the planetary positions accurately in my brothers’ horoscopes. When they came back home they checked the birth chart which was written by our family astrologer. It was exactly the same. The astrologer even predicted my brother’s would be wife’s name and it came true. How is it possible?
But I must admit that other predictions about future did not come true.

nadi book

(Birth Chart: Every orthodox Hindu family casts a horoscope/ birth chart as soon as their children celebrate their first birth anniversary.

Nadi Jothidam astrologer: They have lot of palm leaf manuscripts where in our future predictions are already written by the ancient sages. But there are more frauds than genuine people in this filed. So one must be careful in approaching any so called Nadi Jothidar)

Your palm shows which planets are stronger in your birth chart. It comes under palmistry as well. Again it is not science. But predicting the exact positions of planets in the sky has got more scientific implications. If the astronomers learn this from the Hindus, they can understand the mysteries of universe better and may even unravel several more mysteries. Before the genuine Nadi Jothidas disappear it is the duty of the scientists to study this ‘science’.

palm 1

Picture from your Finger prints?

There is another mystery in Indian literature. But I don’t think anyone can do it today. This art has disappeared long ago. The Brhatkatha translated into Tamil as Perunkatai has an anecdote. A person tells the features of a beautiful woman from her finger prints. Finger prints are used now in forensic investigation. Ancient Indians used it to identify people, draw pictures etc. if it is revived the criminal investigation will be much more easier. Following anecdote is in Perunkatai, Tamil adaptation of Bruhat Katha:–

A beautiful lady by name Madana Manjika was playing ball game on the terrace of her highly raised building. The ball jumped out and fell on Naravanan who was riding an elephant at that time. Naravanan looked at the girl and the ball and fell in love with her. Madana also looked at Naravanan and fell in love with him. But she did not collect he ball. Naravanan called his friend Gomukhan and asked him to find the owner of the ball.

nadi 3

Gomukhan simply looked at the ball and found out her finger prints in the sandal paste on the ball. He started giving the description of every part of her body . Then told him it must be Madana manjika. It may sound like fiction today. But in those days there were people who could draw the picture of a person by simply looking at the hand or the finger prints.

Even the finger print technology used in the modern criminal investigation had its beginning in India.

nadi2
Please read my Earlier Posts:

Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2
Prayers Good for Your Heart, says Scientists (posted on 10July 2013)

Contact swami_48@yahoo.com

வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்!

shisya

உபநிஷத அற்புதங்கள்– Part 4; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1003; தேதி:– 26th April 2014.

32. “உபநிஷத் காலத்தில் புவியியல் அறிவு” என்று பூகோள விஷயங்கள் பற்றி B G தமஸ்கர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் 250 உபநிஷத்துகள் இருப்பதாகவும் தான் 134 புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை நடத்தியிருப்பதாகவும் சொல்லி 134 உபநிஷத்துகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

33.பூமியின் இரண்டு பகுதிகளும் ரிஷிகளுக்குத் தெரியும் என்பதை சாந்தோக்கிய உபநிஷத் (2-2-3) மூலம் காட்டுகிறார். பிரபஞ்சம் தோன்றியதும் அதே உபநிஷத்தில் இருக்கிறது (5-6-1; 6-8-7)

34. நிலம், நீர் ஆகியன எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பிருஹத் ஆரண்யக உபநிஷத் (3-3-2) சொல்கிறது.

35.வலம் வருதல் பற்றியும் பி.ஆ.உ.-வில்(4-2-4) வருகிறது கடிகார முள் சுற்றுவதில் இருந்து கோவில் சுற்றுவது வரை எல்லாம் வலமாகவே இருக்கும். இது இந்துக்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்க வேண்டும். கண்ணகி சிலையை பிரதிஷ்டை செய்த செங்குட்டுவன் அச்சிலையை மும்முறை வலம் வந்து வணங்கியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

36.வடமொழியிலும் தமிழிலும் பருவத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம். இது வேத காலத்தில் துவங்கியது தைத்ரீய சம்ஹிதையில் இதை முதல் முதலில் (4-3-2; 5-6-3; 7-6-19) படிக்கிறோம். பாரதம் முழுதும் ஒரே நாகரீகம், பண்பாடு இருந்ததற்கு இதுவும் ஒரு சான்று. மஹாகவி காளிதாசன் ஆறு பருவங்கள் பற்றி ருது சம்ஹாரம் என்ற ஒரு கவிதை நூலே எழுதிவிட்டார்.

தமிழர்கள் கண்டுபிடிப்பு

37. புற நானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றி நிறைய பாடல்கள் இருக்கின்றன. இன்னும் விஞ்ஞானிகள் இதுபற்றி எதுவும் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன என்ன கண்டுபிடிப்புகள் வரும் என்று நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதில் வெள்ளி கிரகம்—மழை பற்றிய கண்டுபிடிப்பும் ஒன்று. தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் உள்ள இந்தக் கருத்து மைத்ரீ உபநிஷத்தில் இருக்கிறது (7-4)

sondara_gurukula

38.ஆதி காலத்தில் மார்கழி மாதத்தில் ஆண்டு துவங்கியது. இதனால்தான் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான். பகவத் கீதையில் கிருஷ்ணன் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தான் என்ன என்னவாக இருக்கிறேன் என்று கூறுவதை வைத்து கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலே எழுதிவிட்டார்:- “காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம்”– என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் நிற்க.

ஆண்டு துவக்கம், பிற்காலத்தில் வசந்த கலத்துக்கு மாற்றப்பட்டது.. அதாவது மார்ச் மாதம்தான் முதல் மாதம். ஜனவரி அல்ல. இதனால்தான் செப்டம்பர் (சப்த=ஏழு), அஷ்டோபர் (அஷ்ட=எட்டு), நவம்பர் (நவ=ஒன்பது), தசம்பர் (தச= பத்து) என்று ஆங்கில மாதங்களுக்கு சம்ஸ்கிருத எண்களை பயன்படுதுகிறோம். மார்ச் முதல் மாதம் என்றால்தான் இது சரியாக, 7, 8, 9, 10 ஆவது மாதங்களாக வரும்.

தைத்ரீய பிராமணத்தில் (1-12; 6-7; 3-10-4-1; 6-5-3) வசந்த காலம்தான் முதல் மாதம் என்று இருக்கிறது. வேதங்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இருப்பதால் ஒரு காலத்தில் மார்கழி முதலாவது இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து சுதந்திரப் போராட்ட வீரரும் பேரறிஞருமான பால கங்காதர திலகர் விரிவான நூல் எழுதி இருக்கிறார்.

39. எங்கெங்கோ தோன்றும் நதிகள் எல்லாம் இறுதியில் கடலில் சங்கமித்து தன் நாமத்தை இழந்து கடல் நீர் என்று பெயர் பெறும் உவமை= ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்= நிறைய வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. பிராமணர்கள் ஒரு நாளில் மூன்று பொழுதுகளில் செய்யும் சந்தியாவந்தனத்திலும் இதைக் கூறுவர். இது முண்டகோபநிஷத் (3-2-8) என்னும் பழைய உபநிஷத்திலேயே வருகிறது. இந்துக்களுக்கு கடலும் நதியும் “தண்ணீர் பட்டபாடு: என்று சொல்ல முடியும். கடல்கடந்து வணிகம் செய்த மக்கள் இந்த உவமையைப் பயன்படுத்துவதில் வியப்பே இல்லை. மதத்திலும் கூட புவியியல் உண்மைகளைப் புகுத்தும் மதிநுட்பம் உயையோர் பாரத நாட்டு மக்கள்.!!
40.தாமரை: உபநிஷத்தில் தாமரைக்கு எட்டு பெயர்கள் வருகின்றன. பிற்கால நிகண்டுகளில் இன்னும் அதிகமான சொற்கள் வருகின்றன. இது தெரிந்துதான் பாரதீய ஜனதா கட்சி இதை சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ!

siddha2

41. தானிய வகைகளில் எள், அரிசி, பார்லி, கடுகு முதலியன மிகவும் பழைய , பெரிய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக. உபநிஷத்திலேயே வருகிறது. ஏற்கனவே சிந்து சமவெளி அகழ்வாரய்சியில் வெட்டி எடுக்கப்பட்ட எள் வேதங்களிலும் பிராமணர்களின் சடங்குகளிலும் (திவசம், தர்ப்பணம்) பயன்படுத்தப்படுவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன்.

42. இன்னொரு விநோதம் என்னவென்றால் மூன்று உபநிஷத்துகள் பறவைகளின் பெயரில் இருப்பதாகும்: கருட உ., ஹம்ச உ., சுகரஹஸ்ய உ., ஆகியன கழுகு, அன்னம், கிளி ஆகியவற்றின் பெயரில் உள்ளன. உலகில் முதல் முதலில் மேகத்தை தூது விட்டு புத்தகம் (மேகதூதம்) எழுதியவன் காளிதாசன். உலகில் முதல் முதலில் காலங்களின் பிரிவுகளை (அறுபொழுது) வைத்து நூல் எழுதியவன் (ருதுசம்ஹாரம்) காளிதாசன். இதற்கெல்லாம் அவனுக்கு உதவியது உபநிஷத்துகள்தான்!! பறவைகளையும், காற்றையும் தூதுவிடுவது வேத,உபநிஷத ,இதிஹாசங்களிலேயே வந்துவிட்டது.

43. உபநிஷத்துகள் என்பவை தத்துவம், இறையுணர்வு பற்றிய நூல்கள். ஆனால் அதில் கூட தங்கம் (சாந்தோக்யம் 3-19; 5-10-9; 8-3-2; 6-24-1) பற்றியும், வெள்ளி (சாந்தோ. 3-19-1) பற்றியும் இரும்பு, காரீயம், வெள்ளீயம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன.

guru

44. வெளிநாட்டு “அறிஞர்கள்” (? ! ? ! ? ! ) சங்க இலக்கிய நூல்களிலும் சம்ஸ்கிருத வேத இதிஹாச, புராணங்களிலும் இல்லாத ஆரிய—திராவிட இனவெறியைப் புகுத்தி இந்திய வரலாற்றில் விஷம் கலந்ததை மகாத்மா காந்தி, ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மகரிஷி அரவிந்தர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரின் கண்டனம் செய்தது பற்றி ஆறு, ஏழு கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.

அப்படியானால் நம்மவர்கள் எல்லோரையும் எப்படிப் பிரித்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? புற நானூற்றின் முதல் பாடலிலேயே 18 கணம் பற்றிய செய்தி வருகிறது. பாரியின் மகள்களை கபிலன் என்ற பிராமணப் புலவன் ஒவ்வொரு மன்னனிடமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் புற நானூற்றுப்பாடல்களில் ஒரு பாட்டின் உரையில் 18 கணத்தினரை அகத்தியர் அழைத்துவந்த செய்தியும் வருகிறது.

மைத்ரீ உபநிஷத் இந்த 18 கணங்களீல் அசுர, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷச, பூத பிசாச வர்க்கத்தினரைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் தத்துவ நூல்கள் என்பதால் இதற்கு மேல் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. இதில் என்ன பெரிய அதிசயம் என்றால் இவர்கள் எல்லோரையும் ஒரு தாய் வயிற்று புதல்வர்கள் என்றே புராண, இதிஹாசக் கதைகள் கூறுகின்றன. வெள்ளைக்காரன் பிரித்தது போல போண்டா மூக்கு- கருப்புத் தோல் திராவிடன் மத்தியதரைக் கடல் வாசி, என்றும் கூரிய மூக்கு- வெள்ளைத் தோல் ஆரியன் மத்திய ஆசியப் பேர்வழி என்றெல்லாமும் உபநிஷத்துகள் பேசவில்லை! கிருஷ்ணன் கருப்பன், அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளையன்!! திரவுபதி கருப்பாயி, அவள் புருஷன் அர்ஜுனன் ஒரு வெள்ளையத் தேவன்!!

45. ரிக்வேதத்தில் புருஷசூக்தத்தில் முதல் முதலாக வரும் நான்கு ஜாதிகள், சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு இடத்தில் (5-10-7) வருகிறது

தொடரும்……………………………………. (பகுதி–5-ல் மிகுதியைக் காண்க)

Please read Part 1, 2, 3 of this article posted in the past few days.

contact swami_48 @ Yahoo.com

நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு

supermoon-may-2012-tim-mccord

 

ச. சுவாமிநாதன்

This article is already posted in English: swami

நிலவு பற்றி ஒவ்வொரு நாட்டிலும் பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஆரிய திராவிட வாதத்தில் அமுங்கித் திணறும் ‘’அறிஞர்களுக்கு’’ இந்த நம்பிக்கைகள் அடி மேல் அடி கொடுக்கும்.

1.கிரகணம் பற்றிய நம்பிக்கை நாடு முழுதும் ஒன்றே. வட மொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் ஒன்றே கூறும். பூமியின் நிழல்தான் கிரகணத்துக்குக் காரணம் என்பதை அவர்கள் நன்கு அறிந்ததால்தான் சரியாக பஞ்சாங்கம் கணக்கிட முடிந்தது. இருந்தபோதிலும் பாமர மக்களுக்காக சுவையாக ராகு என்னும் ராக்ஷசன் முழுங்கியதாவும் அவன் தலை பாம்பு வடிவினது என்றும் கூறுவர். இதையே பாம்பு சந்திரனை விழுங்கியதாகவும் கூறுவர்.

 

2.கிரீஸ் அல்லது பாபிலோனியா போன்ற வேறு எந்த நட்டையும் ‘காப்பி’ அடித்து இவர்கள் சோதிடம் பயிலவில்லை என்பதற்கு நிலவு பற்றிய நம்பிக்கைகளே சான்று பகரும். நமது கலாசாரத்தில் நிலவு என்பது ஆண், நட்சத்திரங்கள் என்பவை பெண்கள். இது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. 27 விண்மீன்களையும் தட்சனின் 27 பெண்களாக புராணங்கள் வருணிக்கின்றன. இந்த நம்பிக்கை வேதம், பிராமணங்கள் ஆகியவற்றிலும் உண்டு.

 

3.வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சூரியனைக் கண்களுடனும் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது: சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத. மேலை நாட்டிலும் முழு நிலவு அன்று பைத்தியங்கள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள். கண்கள் ஒளிபெற சூரிய நமஸ்காரம் செய்வதும் இந்த மந்திரத்தின் அடிப்படையில்தான்.

 

4.‘’நிலவு’’ என்று சந்திரனுக்கு தமிழன் பெயர் வைத்தது தன்னிச்சையாக நிகழ்ந்ததா அல்லது அறிவியல் அடிப்படையில் நடந்ததா என்பதே வியப்பான விஷயம். ஏனெனில் நிலவு எப்படி தோன்றியது என்ற பலவிதமான கொள்கைகளில் ஒன்று: ஒரு காலத்தில் பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டு போன துண்டுதான் நிலவு என்று ஒரு கொள்கை உண்டு. பசிபிக் சமுத்திரத்தில் நிலவை அடக்கிவிடலாம் என்பர். இதை அறிந்து தான் தமிழன் நில உலகிலிருந்த பிரிவு= நிலவு என்று வைத்தானோ என்று நான் வியப்பதுண்டு.

 

5.தமிழர்களுக்கு ஜாதகத்திலும் சோதிடத்திலும் அபார நம்பிக்கை இருந்ததை அக நானூற்றின் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் காணலாம். தீய கோள்கள் (பார்வை) இல்லாத நாளில் பவுர்ணமி- ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில் தமிழர்கள் விளக்கு ஏற்றி ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாட்டோடு மணல் தரையில் திருமணம் செய்ததை அப்பாடல்கள் விளக்குகின்றன. அப்போது சுமங்கலிகள் (திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்கள்) புது மணத் தம்பதிகளை ‘’தீர்க்க சுமங்கலி பவ:’’ என்று வாழ்த்தியதையும் அவை காட்டுகின்றன.

இந்து மத புராணங்கள் முழுதும் சந்திரன் -ரோஹிணீ காதல் கதை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே ரோகிணி நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைத்தனர் சங்க காலத் தமிழர்கள். ரோகிணி நட்சத்திரதன்று விதை விதைக்க நன்மை என்று பஞ்சாங்கம் சொல்லுவதும் குறிப்பிடத்தக்கது.

 

6.சந்திரனைப் பற்றிய பல நம்பிக்கைகளில் ஒன்று சந்திரனை தெய்வமாக வழிபடுவதாகும். பெரிய கோவில்களில் சுற்றுப் பிரகாரத்தில் சந்திரன் சூரியனுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். உலகில் இப்படி இன்றுவரை சந்திர வழிபாடு எங்கும் இல்லை. குறுந்தொகையில் மூன்றாம் நாள் பிறை வழிபாடு (பாடல் 170) போற்றப்படுகிறது

 

முஸ்லீம்கள் கூட சந்திரனை நாளும் நேரமும் அறியவே பயன்படுத்துவர், வழிபட அல்ல. அவர்கள் அல்லாவைத் தவிர வழிபட அனுமதிக்கப்பட்ட ஒரே உருவம் காபாவில் உள்ள கல் மட்டுமே.

stars and moon

7.நிலவு பற்றி இந்துக்கள் நம்பும் ஒரு முக்கிய விஷயத்தை இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை. தாவரங்களுக்கு சக்தி கொடுப்பது சந்திரனே என்று வட மொழி நூல்கள் பகரும். சோம ரசம் என்பது சந்திர ஒளியையும் குறிக்கும், சோமலதையில் இருந்து கிடைக்கும் சோம ரசத்தையும் குறிக்கும் . நவக் கிரஹங்களில் சந்திரனுக்கு சோம என்றே பெயர். திங்கட்கிழமையை சோம வாரம் என்றே குறிப்பிடுவர்.

 

8.பன்னிரெண்டு ராசிகளின் படங்கள் ,ஓவியங்கள் தமிழ் அரண்மனைகளில் இருந்ததை முல்லைப்பாட்டில் காணலாம்.

 

9.இந்துக்களின் ஜாதகத்தில்  சந்திரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு விளங்கும்.

 

10.சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல உவமைகள் வருகின்றன. இவைகளும் சம்ஸ்கிருத தமிழ் ஒற்றுமைக்குச் சான்று பகரும் ஏன் எனில் இந்திய இலக்கியங்கள் முழுதும் இவற்றைக் காணலாம். நிலவு என்னும் காதலன் 27 காதலிகளுடன் (நட்சத்திரங்கள்) இருப்பது போல என்ற உவமை, நிலவைப் பார்த்த கடல் பொங்கியது போல என்ற உவமை, நிலவு போன்ற குளிர்ச்சி தருபவன் என்ற உவமை எனப் பல உண்டு.

 

11. சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் ‘’திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்’’ என்று கடவுள் வாழ்த்தாகவே சூரியன் சந்திரனைச் சேர்த்திருப்பதும் நோக்கத்தக்கது.

 

12.பிராமணர்கள் சில நாட்களில் வேத வகுப்புக்குப் போக மாட்டார்கள். அன்று விடுமுறை. அமாவாசை, பவுர்ணமி, அதற்கு முந்திய, பிந்திய நாட்கள் (சதுர்தசி, பிரதமை) மற்றும அஷ்டமி ஆகிய ஆறு நாட்கள் உதவா. இந்த நாட்களில் கடல் அலைகளின் மாற்றமும் சீற்றமும் உலகறிந்த உண்மைகள்.

 

13. இதேபோல இலங்கையில் பவுத்தர்களும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் உபவாசம் இருப்பர் (உபோசத் தினங்கள்)

 

14. இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகைகள் ஒவ்வொரு மாத பவுர்ணமியிலேயே வரும். இதற்கு வேண்டுமானால் ‘பிராக்டிகல்’ காரணங்களைச் சொல்ல முடியும். மின்சார விளக்கு இல்லாத காலங்களில் லட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து திருவிழவுக்கு வர இவை உதவின எனலாம்.

NY moon

15. நிலவில் முயல் (நற்றிணை 375) இருப்பதாகக் கூறுவதிலும் சம்ஸ்கிருத தமிழ் மொழி நூல்களில் ஒற்றுமையைக் காணலாம். சில கலாசாரங்களில் இதை மான் என்றும் கிழவி என்றும் சொல்லுவர்.

 

16. சங்கட ஹர சதுர்த்தி: சதுர்த்தி (நாலாம் நாள்) க்கும் பிள்ளையாருக்கும் நெருக்கம் மிகவும் அதிகம். கஷ்டங்களைப் போக்கும் சங்கட ஹர விரதம் (உண்ணாநோன்பு) பவுர்ணமிக்கு நாலாம் நாள் அனுஷ்டிக்கப்படும். அன்று மாலை பிறையைப் பார்த்த பின்னரே விரதிகள் சாப்பிடுவர். முஸ்லீம்களும் பிறை பார்த்துச் சாப்பிடும் வழக்கத்தை நம்மிடம்தான் கற்றனரோ!!

 

அமாவாசைக்கு நாலாம் நாள் வரும் சதுர்த்தியன்று பிறை பளிச்செனக் கண்ணில் தெரியும் ஆனால் இதைப் பார்க்ககூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. நாலாம் பிறை பார்த்தவர் நாயாய் பிறப்பார்கள் என்று ஒரு தமிழ்ப் பழமொழி இருக்கிறது ஆயினும் பெரிய பிள்ளையார் சதுர்த்தி அமாவாசைக்கு அடுத்த நாலாம் நாளே வரும். இந்த கணேஷ் சதுர்த்தியை நாடே கொண்டாடும்.

17.இந்து மதத்தில் பிறைச் சந்திரனுக்கு முக்கியத்துவம் அதிகம். பெரிய கடவுளர்களின் தலையில் பிறைச் சந்திரன் இருப்பதை காணலாம். ‘’பித்தா பிறை சூடி’’ என்று அடியார்கள் சிவ பெருமானை போற்றி வழிபடுவர்.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

அடுத்த கட்டுரை— சந்திரன் பற்றிய வியப்பான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்— நம்முடைய மதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதைக் காட்டும். இவை அனைத்தும் ‘’லேடெஸ்ட்’’ கண்டுபிடிப்புகள். இரண்டாவது பகுதியைப் படிக்கத் தவறாதீர்கள்.

 

தொடர்பு கொள்ள —  swami_48@yahoo.com

படங்கள் பல்வேறு வெப்சைட்டில் இருந்து எடுக்கப்பட்டன; நன்றி.

Spectacular Comet Show in November

Spectacular Comet Show in November

(This article has been already posted in Tamil: swaminathan)

Picture of Halley’s Comet

What are comets?

Comets are small icy bodies orbiting the sun usually on a highly elliptical path. A comet consists of a central nucleus a few kilometres across, and has been likened to a dirty snow ball because it consists mostly of ice mixed with dust. As a comet approaches the sun its nucleus heats up releasing gas and dust which form a tenuous coma up to 60,000 miles wide around the nucleus. Gas and dust stream away from the coma to form one or more tails which may extend to millions of miles. Comet Encke is with the shortest period of orbit and returns every 3.3 years. Comets are named after their discoverers.

 

New Comet sighted

New Scientist magazine has listed ten great discoveries or inventions that would hit the headlines in newspapers in 2013. One of the ten sensational events is the sighting of a comet that is heading towards earth. Astronomers expect a spectacular show on the sky in November 2013.They expect at its peak this comet known as C/2012/S1 will outshine full moon in brightness. It will be visible even during day time.

It was spotted in September last year by Russian astronomers of the International Scientific Optical Network (ISON) and so it is also known as ISON. Coming from the Oort cloud this dirty snowball will evaporate as it approaches sun. The gas surrounding the comet will shine as a tail brightly in November. As it goes away from sun it will disappear in the vast space. Comets contain three parts Head, Nucleus and Tail. The nucleus will extend as head and tail as it approaches the sun.

ISON may even be visible from October 2013 to January 2014. There is a big superstition surrounding the comets. In some cultures they believe they bring changes for good. But Hindus believed that it portends a danger to the rulers and the country. We see this reference from Mahabharata to Puranas and from Sanskrit literature to Tamil Literature.

Picture of Comet Hale Bopp

Lord Ganesh’s Chemical Warfare

Bhargava Purana has an interesting story:

Dhumaketu in Sanskrit means Lord Ganesh and the comet. Lord Ganesh conducted a ‘chemical warfare’ with Dhumasuran and killed him. Hence Ganesh was called Dhumaketu. Dhumasuran was born as a King known as Vikuthi in his previous birth. When he desired for Indra’s post, he was cursed to be born as demon Dhumasuran. Vinayaka appeared as a child to the couple Sumuthai and Madhavarajan and killed Dhumasuran. Dhumasura wellversed in chemical warfare used weapons of mass destruction by blowing poisonous gases on good people. Lord Ganesh (Vinayaka) swallowed the poisonous gas and threw it back on Dumasuran, says the Puranas. Dhumasuranwas killed by the smoke (smoke is Dhumam in Sanskrit)

In Tamil and Sanskrit literature, the poets compare evil persons with comets. Actual appearance of comets provokes wars such as Mahabharata war. Sangam Tamil literature which is 2000 year old has a few interesting references to comets.

Picture of Comet Mc Naught

Hindu Beliefs

Kudalur Kizar, a poet, sings an elegy to the Chera king (Yanaikat Chey) Mantaram Cheral Irumporai, in which he says that the sighting of a comet seven days earlier portended his death. What he feared seven days ago came true today. In short the king died after the appearance of a comet. It may be Halley’s comet ( Purananauru verse 229)

In another verse Kapilan, the most famous Brahmin poet, who composed the highest number of poems in Sangam period says that even if a comet appeared Pari’s land will get good rains and good harvest because he was such a just and generous king (Puram verse 117). He used the Sanskrit word Dhumam for a comet.

Among the modern greats, Bharathiyar, the most famous Tamil poet composed a poem on Halley’s comet during its 1910 visit. The poem was titled Sadharana Varusha Dhumaketu. He also echoed the ancient beliefs on comets, but questioned them whether they are true or false:

Bharathiyar’s Tamil poem as translated by Dr T N Ramachandran:

1.Like a palm tree set on a millet plant

With a growing tail on a little star

You blaze forth in kinship with eastern moon,

Oh illustrious comet! Sid you welcome.

2.You range over countless crores of Yojanas;

They say your endless tail is wrought of gas

The softness of which is indeed peerless.

3.They aver that your tail touches the earth too

And you fare forth with no harm to the poor;

The wise talk of your myriad marvels

4.We that are over Bharath spread, have forgot

Long long ago the lore of works; we learnt

Of your nature true from aliens only;

None amongst us is with clarity blessed

5.Come, Oh flame! I will put you some questions.

They say, you will cause harm to the evil.

And will immerse in a sea of misery

The ancient world. Is this true or untrue?

6.”By Her mandate great—the Primal Goddess,

You fare forth executing punishment

Purging the world of its impurities

And making it pure” they say. True or false?

7.”It is a rule with you to appear once

In a cycle of seventy five years;

This time you will cause many marvels” say they.

I ask of you, if this be true or false?

(Poem by Bharathiar, Translated by TNR)

 

When I worked as the Producer of the BBC Tamil Service in the Bush House, London, comets evoked great interest among Tamil listeners and they asked several questions about it in the Questions and Answers programme. I answered their questions giving the above details.

 

 

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

Comet Hale Bopp

2013ஆம் ஆண்டில் பெரிய செய்தியாக அடிபடப் போவது ஒரு புதிய வால் நட்சத்திரம் ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை சூப்பர் காமெட் (super comet) என்று அவர்கள் அழைக்கின்றனர். காரணம் என்னவென்றால் இது பௌர்ணமி நிலவை விட அதிகம் வெளிச்சம் உடையதாக இருக்கும். பகல் நேரத்தில் கூட இது நிலவை விடப் ப்ரகாசமாகத் தெரியும்.

இது பூமிக்கு மிக அருகில் நவம்பர் 28ஆம் தேதி வரும். ஒரு மாத காலத்துக்கு வான வேடிக்கைகளை நடத்திவிட்டு சூரிய மண்டலத்திலிருந்து கண் காணாத தொலைவுக்குச் சென்றுவிடும். இதன் பெயர் சி/2012எஸ்1 (C/2012S1). இதைக் கண்டுபிடித்த அமைப்பின் பெயரில் இதை இசான்(ISON) அல்லது ஐசான் என்றும் அழைப்பர். இதைப் போன வருஷம்தான் முதலில் பார்த்தனர். அது முதல் இதைக் கண்காணித்து வருகின்றனர்.

ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும். ஆனால் இது அப்படிப்பட்ட பாதையில் செல்லாமல் சுற்றி வராத பாதையில் செல்கிறது. இது ஊர்ட்(Oort Clouds) மேகப் பகுதியில் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 1997ஆம் ஆண்டில் வந்த  ஹேல் பாப் (Hale Bop) வால் நட்சத்திரமும் பெரிய வாலுடன் பூமியிலுள்ளோருக்குத் தெரிந்தது. புதிய வால் நட்சத்திரமோவெனில் நிலவைப் போல பன்மடங்கு ஒளிவீசும்.

Halley’s Comet

ஆபத்து வருமா?

வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.

இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:

பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென்  திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.

புறநானுற்றில கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229ல்:

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்

முடப்பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய

பங்குனி உயர் அழுவத்துத்

தலை நாள்மீன் திரிய…………..

கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)

 

அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.

Comet Hale Bopp

பாரதியாரின் வால் நட்சத்திரப் பாடல்

சாதாரண வருஷத்து தூமகேது (1910) என்ற பெயரில் பாரதியார் வால் நட்சத்திரப் பாட்டு இருக்கிறது.இது ஹாலியின் வால் நட்சத்திரம் வந்தபோது எழுதிய பாடல்:

தினையின் மீது பனை நின்றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்

கீழ்த்திசை வெள்ளியை கேண்மை கொண்டிலங்கும்

தூமகேதுச் சுடரே வாராய்!

எண்ணில் பல் கோடி யோசனை எல்லை

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்

புணைந்த நின்னொடு வால் போவது என்கின்றார்

மண்  அகத்தினையும் வால் கொடு தீண்டி

ஏழையர்க்கு ஏதும் இடர் செய்யாதே நீ

போதி என்கின்றார்; புதுமைகள் ஆயிரம்

நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்து பன் நூறாண்டாயின!

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய் சுடரே! வார்த்தை சில கேட்பேன்;

தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத்

தொல் புவியதனை துயர்க்கடலில் ஆழ்த்தி நீ

போவை என்கின்றார்; பொய்யோ, மெய்யோ?

ஆதித் தலைவி ஆணையின்படி நீ

சலித்திடும் தன்மையால், தண்டம் நீ செய்வது

புவியினைப் புனிதமாய்ப் புனைதற்கே என

விளம்புகின்றனர், அது மெய்யோ பொய்யோ?

ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை

மண்ணை நீ அணுகும் வழக்கினை யாயினும்

இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்

விளையும் என்கின்றார்; மெய்யோ பொய்யோ?

 

சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்

மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்

புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?

— தேசிய கவி சுப்பிரமணிய பாரதி

 

Comet Mc Naught

பி.பி.சி.( BBC Tamil Service) தமிழோசையில் சுவாமிநாதன் பதில்கள்

பி.பி.சி. தமிழோசை ப்ரொட்யூசராக (Producer) நான் வேலை பார்த்த காலத்தில் வினவுங்கள் விடைதருவோம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினேன். அந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் வினவுங்கள் விடைதருவோம் என்ற அதே பெயரில் புத்தகமாக வந்தது. அதில் வால் நட்சத்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில் இருந்து சில பகுதிகள்:

1.வால் நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தைச் (Solar System) சேர்ந்தவைதான். ஆனால் இவைகள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

2.இதற்கு தலை, தலையின் நடுவே உட்கரு, வால் (Head, Nucleus and Tail) என்ற மூன்று பகுதிகள் உண்டு. சூரிய மண்டலம் உருவான காலத்தில் கிரகங்களாக உருவாகாமல் எஞ்சிய விண்துகள்களே இப்படி தூமகேது ஆயின.

3.உட்கரு என்பது தூசியாலும் பனிக்கட்டியாலும் ஆனது. அதைச் சுற்றி வாயுக்கள் இருக்கும்

4.சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும்போது உட்கரு மட்டுமே இருக்கும். சூரியனை நெருங்கியவுடன் அது ஆவி ஆகி வாயுக்களும் வாலும் தோன்றும்

5.சூரியனை நெருங்கும்போது வால் பிரகாசமாகத் தெரியும், தொலைவில் செல்லுகையில் மங்கி மறைந்துவிடும்

6.எட்மண்ட் ஹாலி (Edmund Halley) என்பவர் கண்டு பிடித்த ஒரு தூமகேதுவுக்கு அவர் பெயர் சூட்டபட்டது. அது 76 ஆண்டுக்கு ஒரு முறை நமக்குத் தோன்றும்.

7.பூமியில் உயிரினங்கள் தோன்றவும் நோய்க்கிருமிகள் பரவவும் வால் நட்சத்திரங்கள் காரணமாக இருக்கலாம் என்று   சிலர் கருதுகின்றனர்.

8.மூன்றேகால் ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் என்கே (Encke)யும் இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் டெலாவ(Delavan)னும் ஆச்சரியம் நிறைந்தவை.

9.சில தூமகேதுக்கள் கிரகங்களின் ஈர்ப்புவிசையால் பிளவுபடும்

10.லட்சக் கணக்கில் இவை இருந்தாலும் அத்தனையும் பூமிக்கு அருகில் வாரா.

11.இவற்றின் தலை, வால் ஆகியன பல கோடி மைல் அகலம், நீளம் உடையவை.

12.இவற்றை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்களின் பெயரே சூட்டப்படும். ஒரே வால் நட்சத்திரத்தை மூன்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துச் சொன்னதால் அதற்கு டாகோ—சாடோ—கொசாகா (Tago—Sat0—Kosaka) என்று பெயர் சூட்டினர்.

13.சேகி (Seki) என்ற ஜப்பானியர் இரண்டு வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடித்துச் சொன்னதால் இரண்டுக்கும் அவருடைய பெயரையே சூட்டினர்.

வால் நட்சத்திரம் தோன்றினால் அரசர்க்கோ நாட்டிற்கோ தீங்கு நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.. நவம்பர் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஜோதிடர்களுக்கும் ஆரூடக்கார்களுக்கும் நல்ல ‘பிசினஸ்’ நடக்கும்!

For further detail contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

வீட்டுக்கு வந்த அன்னியன்!

பார்த்ததில்ரசித்தது! படித்ததில்பிடித்தது!!

வீட்டுக்கு வந்த அன்னியன்!

.நாகராஜன்

‘வேதாந்த கேசரி’ (Vedanta Kesari) என்ற ஆன்மீகப் பத்திரிக்கையை ராமகிருஷ்ண மடம் பல காலமாக வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவோம். அதில் 2012 செப்டம்பர் இதழில் வெளிவந்துள்ள வீட்டுக்கு வந்த அன்னியனைப் படித்தவர் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதன் தமிழாக்கச் சுருக்கம் தான் இது!

நான் பிறந்த சில வருடங்களுக்குப் பிறகு எனது தந்தை ஒரு அன்னியனைச் சந்தித்தார். எங்கள் ஊரோ சின்ன ஊர்.அதில் அவனை அதுவரை யாரும் அங்கு பார்த்ததில்லை!

அவனைப் பார்த்த மாத்திரத்தில் என் தந்தையாருக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது! அப்படி ஒரு மாய ஜாலக்காரன் அவன்! வீட்டிற்கு அழைத்தார். அவனும் உடனே வந்து விட்டான். வந்தவன் போகவே இல்லை!

நான் வளர வளர எங்கள் வீட்டில் அவன் இருப்பதைப் பற்றி கேள்வி எதையும் நான் எழுப்பவில்லை. எனது இளம் வயதில் தனியொரு இடத்தை அவன் பிடித்து விட்டான்! எனது தந்தையும் தாயும் எனக்கு அவ்வப்பொழுது நல்லது கெட்டதை இனம் காணச் சொல்லித் தருவார்கள். அம்மா இது நல்லது இது கெட்டது என்று சுட்டிக் காட்டிச் சொல்லித் தருவாள்.தந்தையோ கீழ்ப்படிவது எப்படி என்பதைச் சொல்லித் தருவார்! ஆனால் அன்னியனோ! அவன் தான் எனக்கு எல்லாக் கதைகளையும் சொல்வான். மணிக்கணக்காக அவன் கூறும் காமடி சம்பவங்கள், மர்மக் கதைகள், சாகஸக் கதைகள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தும்; மெய் சிலிர்க்க வைக்கும். ஆவென்று வாய் பிளந்தவாறே அவற்றைக் கேட்டு ஆனந்திப்பேன். அரசியல் நிகழ்வுகளா, வரலாறா, விஞ்ஞானமா எது வேண்டுமானாலும் கேட்கலாம்.அவனுக்கு எல்லாவற்றிற்கும் விடை தெரியும்.அவனுக்கு இறந்தகாலம் அத்துபடி. நிகழ்காலமோ கேட்கவே வேண்டாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூட அவன் கணித்துச் சொல்வதுண்டு!

அவன் எங்களை ஒரு சமயம் புட்பால் (Foot Ball Finals) விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றான். ஒரு சமயம் அழுதேன் ஒரு சமயம் சிரித்தேன். எப்படிப்பட்ட விளையாட்டு அது! விளையாட்டு முழுவதும் ஒரே சத்தம் தான்! என் தந்தை கூட அந்தச் சத்தத்தை ரசித்தார். கண்டிக்கவே இல்லை என்னை!

ஆனால் சில சமயம் என் அம்மா மட்டும் அவன் எங்களுடன்  பேசிக்கொண்டிருக்கும் போது சமையலறைக்குள் தஞ்சம் புகுந்து விடுவாள். ஒரு வேளை அமைதி அவளுக்கு அங்கு தான் கிட்டியதோ என்னவோ! இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த அந்நியனை எப்படி விரட்டுவது என்று சமையல் அறைக்குள் அவள் யோசித்திருப்பாளோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

எனது தந்தை கட்டுப்பாடானவர். அறநெறிகளில் எதையும் யாரும் எப்போதும் மீறக் கூடாது. ஆனால் அந்த அந்நியன் மட்டும் இதைக் கேட்க மாட்டான்.அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவனுக்கு மட்டும் கிடையாது.ஆபாசமாகப் பேசுவது என்பது என் வீட்டில் முற்றிலுமாகத் தடுக்கப்பட்ட விஷயம். வெளியிலிருந்து வந்தவர்கள் கூட என் வீட்டில் கண்ணியமாகத் தான் பேச வேண்டும். ஆனால் அந்நியனோ சில சமயம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி விடுவான். என் தந்தைக்கோ முகம் சிவக்கும். என் அம்மாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்னும், என்றாலும் அந்நியனை அவர்கள் திட்டியதே இல்லை! மது பானத்தைப் பற்றியும் சிகரெட் பற்றியும் அவன் சொல்வதுண்டு! செக்ஸைப் பற்றியும் விலாவாரியாக அவன் சொல்வான்! சில சமயம் அப்பட்டமாக அவன் விஷயங்களைக் கூறி விடுவான். சில சமயம் பூடகமாக விளக்குவான். சில சமயம் அவன் சொல்வதைக் கேட்டால் மிகவும் தர்மசங்கடமாக இருக்கும்!

 

இப்போது தான் எனக்குப் புரிகிறது. எனது ஆரம்ப காலத்தில் அவனது செல்வாக்கு என் மீது அதிகப்படியாகவே இருந்திருக்கிறது என்று! காலம் செல்லச் செல்ல எனது பெற்றோர் எதையெல்லாம் நல்லவை என்று கருதினார்களோ அவற்றிற்கு எதிரான கருத்துக்களை அவன் முன் வைத்தான். ஆனாலும் கூட என் பெற்றோர் அவனை வெளியில் போ என்று சொல்ல முன்வரவில்லை!

 

என் வீட்டிற்குள் அந்நியன் வந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. எங்களில் ஒருவனாக அவன் கலந்து விட்டான் என்றாலும் கூட முன்பிருந்த கவர்ச்சி அவனிடம் இப்போது இல்லை. என் வயதான பெற்றோர் ஒடுங்கிக் கிடக்கும் அறையில் ஒரு மூலையில் இப்போதும் கூட அவனுக்கு இடம் உண்டு. அவன்பேசுவதை இப்போது கூடக் கேட்க ஆட்கள் உண்டு.

 

 

அவன் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா?

அவனை நாங்கள் டிவி (Television) என்று அழைக்கிறோம்!

அவனுக்கு இப்போது ஒரு மனைவி வேறு வந்து விட்டாள்!

அவளை நாங்கள் கணினி (Computer)  என்று அழைக்கிறோம்!

அவர்களுக்குக் குழந்தைகள் வேறு பிறந்து விட்டன.

முதல் குழந்தையின் பெயர் செல் போன் (Cell Phone)!

இரண்டாவது குழந்தையின் பெயர் ஐ பாட் (I Pod)!

மூன்றாவது குழந்தையின் பெயர் இண்டர் நெட் (Internet)!

 

படித்தது பிடித்திருந்தால் நன்றி வேதாந்த கேசரிக்கு.தமிழில் குறையிருந்தால் அது என்னுடையது (By S Nagarajan! )

*********************