பைத்தியத்துக்கு வைத்தியம்: சுவையான சம்பவங்கள் (Post No.2866)

grimadi

Translated by London swaminathan

 

Date: 4 June 2016

 

Post No. 2866

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:

நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.

டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:

“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.

நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”

(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)

Xxx

(மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்; இந்த சம்பவங்கள் ஏற்கனவே என்னால் இங்கே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன)

mozart notes

சங்கீதம் – நல்ல மருந்து!

ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.

 

மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” — என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.

 

உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?

மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.

பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.

உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.

மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.

Xxx

dollars

காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!

டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.

 

டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.

அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.

 

வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.

(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)

–சுபம்–

 

குருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865)

dollars

Translated by London swaminathan

 

Date: 3 June 2016

 

Post No. 2865

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

1830-Jewish-beggar

ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.

 

அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.

கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.

குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.

கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.

பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.

இது என்ன?

கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.

இதில் என்ன தெரிகிறது?

கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.

ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?

கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.

உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.

கஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது!

 

Xxx

edison

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்!

தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்! உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.

சின்னச் சின்ன ஆசை!!

Xxxx

பணக்காரர்களுக்கு அதிக மூளையா?

ஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

 

ஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்? என்றார்.

ஓ, அதுவா? ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்!!!! என்றார்.

Xxx

lincoln dollar

ஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை!

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.

உடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:

“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம்! எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.

கொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் சொன்னார்: “சீ, சீ! நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்!”

(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும்! பணம் ஒரு பேய்!!)

xxxசுபம்xxx

 

மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!(Post No.2862)

rathi.meenakshi13

Research Article written by London swaminathan

 

Date: 2 June 2016

 

Post No. 2862

 

Time uploaded in London :–  6-33 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

(English version of this article was published here yesterday)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை ஒரே பண்பாடு நிலவிவந்தது. தொல்காப்பியத்திலேயே வேதத்தில் போற்றப்படும் இந்திரன், வருணன், துர்கை ஆகியோரை தமிழர் தெய்வங்களாகப் போற்றுவதையும், தொல்காப்பியரும் மனுதர்ம சாத்திரத்திலுள்ள எண்வகை மணத்தைப் போற்றுவதையும் அவரும் தர்மார்த்த காம மோக்ஷம் ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பெரும் பண்புகளாகப் (அறம் பொருள் இன்பத்தைப்) போற்றுவதையும் சில கட்டுரைகளில் தந்தேன். மன்மதன் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறே இருந்துள்ளது!

 

மன்மதனுடைய கொடி மகரக் கொடி. மகரம் என்னும்  சொல் மீன், டால்பின் மற்றும் முதலையைக் குறிக்கப் பயன்பட்ட சொல். மன்மதனின் மகரக் கொடி பற்றிய குறிப்பு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அக நானூற்றிலேயே வந்துவிடுகிறது. மேலும் இதைப் பாடிய பார்ப்பனப் புலவன் பரணன், அதே பாட்டில் மன்மதனை எரித்த சிவபெருமானையும் பாடியிருக்கிறார். பட்டினப்பாலையில் மன்மதன் கோவில் குறிப்பிடப்படுகிறது.

 

காளிதாசனின் காலம் பல சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறியது போல கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டு என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சங்க இலக்கியம் வாயிலாக நிரூபித்தேன். மன்மதன் பற்றி காளிதாசன் சொன்னதை நம்மவர்களும் சொல்வதிலிருந்து எனது வாதம் மேலும் உறுதிப்படுகிறது.

 

rathi 1

1.அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்

கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகரநெற்றி வாந்தோய் புரிசைச்

சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்

பொருள்:-

பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்…..

 

காமன் விழா நடபெறுகையில் கட்டப்படும் மகர தோரணத்தை இது குறிக்கும் என்று  பழைய உரைகள் விளக்கும்.

இந்தக் காமன் பண்டிகை குறித்து வடமொழி பிருஹத் கதாவிலும், அதன் மொழிபெயர்ப்பான பெருங்கதையிலும் உண்டு.

நாடு முழுதும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டதை இது உறுதி செய்யும்.

 

2.கலித்தொகை, பரிபாடல்

மன்மதன், மகரக் கொடி ஆகியன பற்றி கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு சங்க இலக்கியங்களிலும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு சில குறிப்புகளைக் காண்போம்:-

காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு (கலி. 92-67/68)

 

கலித்தொகையில் வரும் மற்ற குறிப்புகள்: கலி. 108-4; 109-19/20; 147-59/60; பரிபாடல்11-123

மேற்கூறிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதச் சொல்லான காமன் வருகிறது. கலி.94-33ல் காமர் என்று இருக்கிறது.

காமவேள்- கலி.27-24, பரி.18-28

மன்மதனின் மற்றொரு சம்ஸ்கிருதப் பெயர் மாரன். இச்சொல் பரிபாடலில் (8-119) கையாளப்படுகிறது.

rathi3

3.ரதியும் காமனும்

உலகிலேயே மிகவும் அழகான பெண் ரதி. அவள் மன்மதனின் மனைவி. இரதிகாமன் என்ற சொல் பரிபாடலில் 19-48/49) பயன்படுத்தப்படுகிறது.

மன்மதன் என்பவன் விஷ்ணுவின் மனதில் பிறந்தவன் என்று சம்ஸ்கிருத புராணங்கள் கூறும். இதை நெடியோன் மகன் என்று கலித்தொகை இயம்பும் (140-89)

 

4.ஐந்து மலர் அம்பு

மன்மதனின் கரும்புவில்லிலிருந்து மலர் அம்புகளை விடுவான் என்று காளிதாசனும் பிற கவிஞர்களும் பாடுவர். இதை ‘அரிபடு ஐவிரை என்றும் (பரி.10-97), விரைமலர் அம்பினோன்’ என்றும் (பரி.22-26) பரிபாடலில் காணலாம்.

காமனின் அம்புப் புட்டில் பரி.18-30ல் வருகிறது.

ஓவியக்கூடம் காமனின் சிலம்பக்கூடம் போன்றது என்ற உவமை ‘எழுது எழில் அம்பலம் காமவேள் தொழில் வீற்றிருந்த நகர்’- என்ற வரிகளில் பளிச்சிடும் (பரி 18-27)

ஐந்து மலர்கள்:

மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.

 

5.மீன்கொடி

உலகில் கொடிகளையும், வாகனங்களையும்,சின்னங்களையும் பயன்படுத்திய முதல் நாடு பாரதம் என்று கொடிகள், வாகனங்கள் பற்றிய கட்டுரைகளில் சொன்னேன். இங்கே மீன் கொடி பற்றி கலித்தொகை புலவர்கள், மீனேற்றுக் கொடியோன் (கலி.26-3), காமன் கொடியெழுதி (கலி.84-24) என்ற வரிகளில் விளக்குவர்.

 

6.காமனின் தம்பி சாமன்

காமனின் தம்பி சாமன் பற்றி சம்ஸ்கிருதத்தில் பல குறிப்புகள் உண்டு. அதையும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடத் தவறவில்லை( கலி. 26-4; 94-33/34)

இதுதவிர இன்னும் சில குறிப்புகளும் உண்டு.

 

தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் மன்மதன் வருணனையை, சிங்காரவேலு முதலியார் தந்துள்ளார்.

(சில புத்தகங்களில் கலித்தொகை பாடல் எண்களில் சிறிய மாற்றம் இருக்கும் ஆகையால் சங்கம் வோர்ட் இண்டெக்ஸ் புத்தகத்திலுள்ள வரிகளையும் தருகிறேன்:- மாரன் பரி. 8-119, காம வேள் கலி.27-24, பரி.18-28;காமற்கு கலி.92-67; காமன் கலி 84-24, 108-4, 109-19, 147-59, பரி. 11-123, 19-48; காமனது கலி.139-22;)

rthi2

7.திருக்குறளில்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197)

பொருள்:-

காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!

 

8.மன்மதனுக்கு 19 பெயர்கள்!!!

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமர கோசத்தில், மன்மதனின் 19 சம்ஸ்கிருதப் பெயர்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவையாவன:-

மதன:, மன்மத: (மனதைக் கடைபவன்), மாரன், ப்ரத்யும்னன், மீனகேதன: (மீன் கொடியோன்), கந்தர்ப:, தர்பகன், அனங்க: (உடல் அற்றவன்), காமன், பஞ்சசர: (ஐந்து அம்புடையோன்), ஸ்மர:, சம்பராரி: (அலிகளுக்கு எதிரி), மனசிஜ: (மனதில் பிறந்தோன்), குசுமேஷு (மலர் அம்பன்), அனன்யஜ:, புஷ்ப தன்வா (மலர் வில்லன்), ரதிபதி (ரதியின் கணவன்), மகரத்வஜ; (மீன் கொடியோன்), ஆத்மபூ: (மனதில் தோற்றுவிக்கப்பட்டவன்).

சம்ஸ்கிருத நூல்களில் காமனுக்குப் பல அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன (எனது ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பெயர்கள் கொடுத்துள்ளேன்; இங்கே அந்தப் பட்டியலை எழுதினால் காமதேவன் அஷ்டோத்திரம் போல ஆகிவிடும்!)

 

  1. கற்பனைக் கதா பாத்திரம்

அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள்; சிவன் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் முயன்றபோது அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி ரதி தேவி அழுது புலம்பவே உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான் என்று சிவன் வரம் கொடுத்ததாக வரலாறு. இது ஒரு தத்துவார்த்த கதை. உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் முகநக நட்பு போய், மனைவியரிடதே அகநக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம்; சுருக்கமாக சிவன் எரித்தது காம வெறியைத் தான். உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று.

இதே போல திருமாலின் மனதில் பிறந்தவன் என்ற பெயரும் அடையாள பூர்வ கதையே; எல்லோருக்கும் மனதில் பிறக்கும் காதலே/ காமமே கல்யாணத்திலும், இனப் பெருக்கத்திலும் முடிகிறது.

மன்மதன்= மனதைக் கடைபவன் என்பதும் காரணப் பெயரே. ஒருவருக்கு காதல் வியாதி வந்துவிட்டால், அதௌ மனதைக் கடைந்து படாதபாடு படுத்தும்!

மொத்தத்தில் மன்மதன் என்பது ஒரு எண்ணத்துக்கு (அப்ஸ்ட்ராக்ட் ஐடியா), ஒரு உருவம் கொடுத்த (கான்க்ரீட் ஷேப்) கற்பனைக் கதையே.

rati or who

10.காளிதாசனில்

காளிதாசன் காவியங்களில் வரும் மன்மதன் பற்றிய குறிப்புகள்:–

சாகுந்தலம்:– காமன் வழிபாடு(6-3), மதன பாண/அம்பு (3), மகரகேது/மீன் கொடி (3-5).

இது தவிர குசுமாயுத (பூ ஆயுதம்), குசுமாஸ்திர (பூ ஆயுதம்).

விக்ரமோர்வசீயம்:–மகர கேது 2-2;

குமாரசம்பவம்:– 1-41 மகர கேது

ரகுவம்சம்:– மகர கேது 9-39

ஐந்து மலர் அம்பு பற்றிய குறிப்புகள்:– குமாரசம்பவம் 7-92; விக்ரம 2-6,11; மாளவிகாக்னிமித்ரம் 4-12 (பஞ்சசார);

குசுமசர, குசுமாயுத என்ற மலர் அம்பு பற்றிய சொற்கள் காளிதாசனின் எல்லா நூல்களிலும் (மேகதூதம் 104, ரகு 9-39, 11-45, குமார சம்பவம் 3-10, 4-40, 45) முதலிய இடங்களில் வருகின்றன.

 

காளிதாசன் நூல்களில் வரும் உவமைகள் சங்க இலக்கியத்தில் 200க்கும் மேலான இடங்களில் வருவதால், சங்ககாலத்தின் அவன் நூல்கள் கற்ற புலவரிடத்தே பரவியிருந்ததை அறியமுடிகிறது. ரெவரெண்ட் ஜி.யூ.போப்பும் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

11.வேதங்களில்

மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது. அதன் பிறகு அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது. அறிவியலோ மாபெரும் வெடிப்பு – BIG BANG பிக் பாங்- ஏற்பட்டு பிரபஞ்சம் தோன்றியது என்று விளம்பும். ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது, ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை. பிரஜாபதி பரமேஷ்டின் என்ற ரிஷி உலகின் முதல் விஞ்ஞானி ஆவார். அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு ரிஷி பாடியது உலகின் முதல் நாகரீகம், பாரதத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.

 

“ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது

மனதின் மூல வித்து அதுவே;

ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,

இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்”

–ரிக் வேதம் 10-129

 

Haridass_1944_film_2

12.திரைப்படத்தில்

12.இறுதியாக முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்:–

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

 

தற்காலத்தில் வந்த மன்மத லீலை என்ற திரைப்படத்தை அனைவரும் அறிவர்.

 

–சுபம்–

 

 

 

 

அதிசய மலர் மருந்துகள்! (Post No.2861)

flower medicine 3

Article written by S.NAGARAJAN

 

Date: 2 June 2016

 

Post No. 2861

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 flower medicine1

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 3-6-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ‘பாட்ச்’ மலர் மருந்துகள்!

ச.நாகராஜன்

 

மலர்கள் எப்போதும் மனிதர்களைச் சிறந்தவர்களாகவும் சந்தோஷமுடையவர்களாகவும் மற்றவருக்கு உதவி புரிவபவராகவும் ஆக்குகின்றன. அவை ஒளி பொருந்தியவை. அவை உணவாக இருக்கின்றன; அவை ஆன்மாவிற்கான மருந்தாகவும் அமைகின்றன” – லூதர் பர்பேங்க்          

 

உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்குவதில் மலர் மருந்துகள் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.

இந்த மலர் மருந்துகளைக் கண்டு பிடித்தவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.

டாக்டர் பாட்ச் (தோற்றம் 24, செப்டம்பர்1886 ;  மறைவு 27, நவம்பர் 1936) ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணர். பாக்டீரியா இயல் நிபுணரும் கூட.

ஒவ்வொரு மனிதரின் வியாதிக்கும் காரணம் உடல் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல; ஆத்மாவுடனும் சம்பந்தப்பட்டது என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி பிரபஞ்சம் முழுவதும அதிர்வுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் அறிந்து அதற்கேற்ப  மருந்து கொடுத்தால் அது பலன் அளிக்கும் என்றும் அவர்  நம்பினார்.

இயற்கை தந்துள்ள அரிய பல  மலர்களை அவர் ஆராய ஆரம்பித்தார். புலர் காலைப் பொழுதில் மலர்களின் பனித்துளிகளில் இருக்கும் மலரின் சக்தி வாய்ந்த சாரத்தை எடுத்து அவர் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் விளைவாக 38 வித  மலர் மருந்துகளை உள்ளுணர்வினால்  கண்டு பிடித்து அவர் தயார் செய்தார். மலர்களின்  சாரமான துளிகளை அதற்குச் சம்மான அளவு பிராந்தியுடன் கலந்து தன் கலவையை அவர்  முதலில் உருவாக்கினார். பின்னர் அதை  மேம்படுத்தி தன்  மலர் மருந்தைப் பக்குவப்படுத்தி பூரணமான மருந்தாக்கினார்.

இதில் குறிப்பான ஒரு மருந்தாக ரெஸ்க்யூ ரெமடி என்று ஒரு வகை உருவானது.

திடீரென எதிர்பாராத ஆபத்தில் சிக்கிய ஒருவரின் அதிர்ச்சியுற்ற நிலையை இந்த ரெஸ்க்யூ ரெமடி உடனடியாகப் போக்கும்.

இன்று வரை இது தனது அபூர்வமான் ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் ரீதியாக இந்த மலர் மருந்துகளின் சக்தியை ஆய்வு செய்த டாக்டர் எர்னஸ்ட் என்பவர் தனக்குக் கிடைத்த முடிவுகளின் படி அப்படி ஒன்றும் இவை சக்தி கொண்டவை அல்ல என்று கூறினார்.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மலர் மருந்துகளுக்கு சக்தி உண்டு என்று கூறுகின்றன.

குறிப்பாக உணர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன என்பது ஒரு சுவையான செய்தி.

‘ஃப்ளவர் எஸன்ஸ் சொஸைடி’ நடத்திய ஒரு ஆய்வில் ஆய்வு முடிவுகள் இவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைத் தெரிவிக்கின்றன! டாக்டர் ஜெஃப்ரி க்ராம் (Dr Jeffrey Cram) என்பவர் நுட்பமான ஆற்றல்களை இந்த மலர் மருந்துகள் உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.

நீருக்கு தகவல்களை ஏந்திச் செல்லும் அரிய தன்மை உண்டு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நீருடன் சக்தி வாய்ந்த மலரின் சாரமும் சேர்ந்து வியாதிகளைக் குணமாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த மலர்  மருந்துகள் முப்பத்தெட்டின் விலையும் அதிகம் இல்லை.

இவை ஏழை முதல் பணக்காரர் வரை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வாங்கிப் பயனடைய முடியும். அத்தோடு இந்த மலர் மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதலான செய்தி!

 

flower medicine2

மலர் மருந்துகளைத் தரும் ஒரு வைத்தியரிடம் ஒருவர் சென்றவுடன் அவரிடம் அவருக்குள்ள தொந்தரவு என்ன என்பதை அவர் வாய் மொழி மூலமாகக் கேட்டறியப்படுகிறது. அவரிடமிருந்து வெளி வரும் சொற்களை வைத்து அவரது மனநிலை நன்கு அறியப்பட்டு அதற்குத் தக மலர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து அக்ரிமனி என்பதாகும்.

பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு மலர் மருத்துவர் உடனடியாகத் தருவது ராக் ரோஸ் என்னும் ம்லர் மருந்து.

தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது செர்ரி ப்ளம்.

காதலில் தோல்வி என்றால் சிக்கரி.

அகம்பாவம், மண்டைக்கனம் போக வைன்.

இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் மிமுலஸ்

போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு வால்நட். தன்னம்பிக்கை  கூடுவதற்கு லார்ச். செல்வம் சேர கார்ஸ்.

ஒரு நோயாளிக்குத் தேவையானப்டி மலர் மருந்துகளில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ மருத்துவர் தேர்ந்தெடுத்துத் தருவதும் நடைமுறைப் பழக்கமாக இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.

கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஒய்ட்செஸ்நட் ம்ற்றும் க்ளிமாடிஸ்.

 

இப்படி மன நிலைகளுக்குத் தகுந்தபடி மருந்துகள் இதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

பத்தியம் இல்லாத விலை குறைவான மருந்து என்பதால் இதை பரீட்சித்துப் பார்ப்போரின் தொகை இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் மலர் மருந்துக் கடைகள் அதிகமாகி வருகின்றன; மலர் மருத்துவ நிபுணர்களும் பெருகி வருகின்றனர்.

மல்ர் மருந்துகள் இன்றைய உலகில் ஒரு அரிய வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல!

cycle

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1896ஆம் ஆண்டு ஐயோவாவைச் சேர்ந்த ஒருவரால் இசை சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இசைப் பெட்டி முன் சக்கர போர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க அது சுற்றும் போது ஒரு பல்சக்கரம் இசைப் பெட்டியை இயக்க வெவ்வேறு விதமான இசை ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் இதை வியந்து பார்த்தனர்.

இதற்கு  வெகு காலம் முன்பே 1824 ஆம் ஆண்டு வின்கெல் (M. Winkel) என்பவர் மெக்கானிகல் இசைப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அனைவரையும் அசத்தினார். அது தானாகவே இசையை அமைக்கும் என்ற அவர் பத்திரிகையாளர்களையும் விஞ்ஞானிகளையும் அழைத்துப் பரிசோதித்து மதிப்புரை எழுதச் சொன்னார்.  பிரெஞ்சு அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1824 பிப்ரவரி 2ஆம் தேதி  வந்து ஆராய்ந்து பார்த்து மெக்கானிகல் இசைப்பெட்டியின் உள்ளே ஒன்றும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வெவ்வேறு வித இசை அமைப்புகள் தானாக கம்போஸ் செய்யப்படுகின்றன என்றும் மதிப்புரை தந்தனர். பத்திரிகைகளும் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி எழுதின! இந்த இசைப் பெட்டியின் பெயர் கம்போனியம் (Componium)

அன்றே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பது சுவையான ஒரு செய்தி!

************

 

 

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856)

papanasam sivan 1

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2856

 

Time uploaded in London :– 8-25 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட்ட மொழி; சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்; 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியால் இலக்கணம் பெற்ற மொழி. அவருக்கு முன்னால் இருந்த இலக்கண கர்த்தாக்களின் நீண்ட பட்டியலும் உள்ளது. அப்படியானால் எவ்வளவு பழமை என்று தெரிந்து கொள்ளலாம்.அதற்கும் முன்பாக இருந்த பழைய மொழி வேத கால சம்ஸ்கிருதம்.

இன்று சங்க காலத் தமிழ் மொழியை நாம் புரிந்துகொள்ள உரைகாரர்களின் உரை தேவைப்படுகிறது. 2000 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி மாற்றம் அடைந்தது போல, பாணினி காலத்துக்குள் வேதகால சம்ஸ்கிருதம் புத்துருப் பெற்றுவிட்டது.

 

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. அழகான மொழியும் கூட. சொல்லாக்க முறையைத் தெரிந்துகொண்டு விட்டால் புதிய சொற்களை நாமே உருவாக்கலாம். வேர்ச் சொல்லின் பொருளும் வினைச் சொற்களின் வடிவமும் தெரிந்துவிட்டால், அகராதி தேவையே இல்லை. பொருளை நாமே கண்டுபிடித்து விடலாம்.

p sivan 2

தமிழ் இசை மன்னன் பாபநாசம் சிவன் அவர்கள் வடமொழிச் சொற்கடல் என்ற ஒரு நூலில் சம்ஸ்கிருதச் சொற்களை புதிய முறையில் அழகு படத் தொகுத்துள்ளார். அந்த மொழியின் அழகை விளக்க சில சொற்களை மட்டும் காண்போம்:–

கரம் என்றால் கை; கையால் செய்யப்படுவது காரியம். கர என்ற விகுதியைக் கொண்டு முடியும் சொற்களின் அழகைப் பாருங்கள்:–

சுககர:= இன்புறச் செய்பவன்

ருசிகர:= இனிமை அளிப்பது

சுசிகர:= சுத்தம் செய்பவன்

கஜகர:= துதிக்கை, விக்னேச்வரன்

கடகர:= குயவன் (கடம்/பானை செய்பவன்)

ஹிதகர: = நன்மைசெய்பவன்

ரதிகர: = பிரியத்தை அளிப்பவன்

ரதகர: = தேர் செய்பவன் (ரதகாரன்)

மதுகர: = தேனீ (மதுவைச் செய்வது)

தினகர:= சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

அனுகர: = உதவி செய்பவன்

லிபிகர:= கணக்குப் பிள்ளை

சுபகர:= க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

ஹிமகர: = சந்திரன் (குளிர்ச்சி தருபவன்)

பரிகர:= பரிவாரம், கட்டில், கூட்டம்

அவகர: = குப்பை

சவிகர: = சோபை/அழகு தருவது

சசிகர:= சந்திர கிரணம்

அஸிகர: = வாள் பிடித்தவன்

ரவிகர: = சூரிய கிரணம் (ரவி= சூரியன்)

வசிகர= ஆகர்ஷண சக்தி (வசீகரம்)

நிசிகர:= நிலவு

அசுகர: = செயற்கரிய செயல்

பசுகர:= செல்வம் தருவது

பஹுகர:= பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

அஜகர: = பெரிய பாம்பு

 

 

ஜலதர, ஹலதர, சசிதர, விஷதர

இதே போல ‘தர’ என்பது தரிப்பவன், தாங்குபவன் எனப்பொருள்படும்:-

நகதர:= கண்ணன்; ம்ருகதர:= சந்திரன் ( மானைத் தாங்குபவன்); ஜலதர: = மேகம் (நீரைத் தாங்குபவன்); ஹலதர:= பலராமன் (கலப்பையைத் தாங்குபவன்); சசதர: = சந்திரன் (முயல் தாங்கி); சசிதர: = சிவன் (பிறை அணிந்தவன்); விஷதர: = பாம்பு (விஷம் தாங்கி); மஹிதர: = மலை.

 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

மடாதிபதி, ஜனாதிபதி போன்ற சொற்களை நாம் தமிழிலும் பயன்படுத்துகிறோம். அதிபர், அதிப என்பதெல்லாம் தலைவன் என்ற பொருளில் வரும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

அகாதிப:, நகாதிப:= இமயமலை; ககாதிப: = கருடன்; ம்ருகாதிப: = சிங்கம்; மடாதிப: = மடாதிபதி; கணாதிப: = கணபதி (கணங்களின் தலைவன்); மதாதிப: = மதத்தின் தலவன்; ஜனாதிப: = அரசன்; தினாதிப: = சூரியன்; தனாதிப:= குபேரன் (தனத்திற்கு அதிபதி);தராதிப:, நராதிப: = ராஜா (நரர்களுக்குத் தலைவன்); சுராதிப:= சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்); தசாதிப:=ஒன்பது கிரகங்கள்; திசாதிப; = திக்குகளின் தலைவன்; நிசாதிப: = நிசி/ ரவின் தலைவன்/சந்திரன்.

ஆதாரம்:- வடமொழிச் சொற்கடல், தொகுத்தவர்- பிரும்ம ஸ்ரீ பாபநாசம் சிவன், வெளியீடு—டாக்டர் ருக்மிணி ரமணி, 30, கிருபா சங்கரி தெரு, சென்னை- 600 033, விலை ரூ 150; வருடம்- 2000 (முதல் பதிப்பு 1954)

(வடமொழி பயில விரும்புவோர் வாங்க வேண்டிய நூல்)

 

எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? (ஜூலை 4, 2015)

பாணினி மாஜிக்!! Panini Magic!! ( 7-4-2015)

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி! (19-2-2015)

கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13 நவம்பர் 2014)

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! (20-12-2014)

 

p sivan 3

–சுபம்—

 

 

 

தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (Post No.2855)

thirumazhapadi

Article written by S.NAGARAJAN

 

Date: 31 May 2016

 

Post No. 2855

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

அரிய ஆன்மீகக் கட்டுரைகளைக் கொண்டு  மாதந்தோறும் சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக இதழ் ஞான ஆலயம். இதன் ஆசிரியை திருமதி மஞ்சுளா ரமேஷை தமிழ் மக்கள் நன்கு அறிவர். சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் :  editorial @aalayam.co.in

 

ஞான ஆலயம் ஜூன் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!

 

ச.நாகராஜன்

 

பாரதமெங்கும் மஹாபாரதத் தலங்கள்

 

பரந்த பாரதமெங்கும் மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஏராளமான தலங்கள் உள்ளன. பெரும் வீரர்களாக இருந்ததினால் மட்டும் பாண்டவர்களை அனைவரும்  கொண்டாடவில்லை, அந்த வீரர்கள் தர்மத்தின் பக்கம் சார்ந்து இருந்து இறைவனின் உற்ற அருளுக்குப் பாத்திரர்களாக விளங்கினர் என்பதனாலேயே அவர்களுக்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் உள்ளன.அவர்களை இன்றும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

இந்த தலங்களுள் பாண்டவர்களுடன் தொடர்புள்ள தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவை மிக  முக்கியமானவையும் கூட. சிலவற்றை இங்கு பார்க்கலாம்:

 

 

திருவேட்களம்:

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

சிவபிரான் வேட ரூபம் கொண்டு அர்ஜுனனோடு போர் புரிந்த இடம். வேடன் களம் என்பது வேட்களமாக ஆகி விட்டது.

இங்குள்ள தல விருட்சம் : புன்கு

தீர்த்தம்: ஞான தீர்த்தம் அல்லது ஞான கங்கை

சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம்.

thiruvettakudy

திருவேட்டகுடி:

திருமேனியழகர் ; சுந்தரேஸ்வரர்

அம்பிகை: ஸௌந்தரநாயகி

தல விருட்சம் : புன்னை

சந்நிதிக்கு எதிரில் உள்ள தீர்த்தம் ருத்திர புஷ்கரணியாகும்.

அர்ஜுனனோடு சிவபெருமான் போர் செய்கையில் வேட வடிவம் எடுத்ததால் வேட்ட குடி. அக்காலத்தில் காவலாக இருந்தவர் சாஸ்தா. இவர் பெயர் பிரமனார்.

இந்த ஊருக்கு மேற்கே ஒரு மைலில் இப்போது வரிச்சாகுடியாக உள்ள ஊரின் பழைய பெயர் வஸிட்டா குடி.

 

பாண்டவர் பூஜித்த் சில தலங்கள்

பஞ்சபாண்டவர் பூஜித்த தலங்களில் சில: கோடம்பூர், தலையாலங்காடு, பெரும்பன்றியூர் முதலியன.

 

 

மண்ணிப்படிக்கரை

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம். .

இந்த தலத்தில் ஐந்து சிவ சந்நிதிகள் உண்டு. நீலகண்டேசுவரர் பிரதானமான வாயிலை சந்நிதியாகப் பெற்றுள்ளார். இவரை தருமபுத்திரர் பூஜித்தார். அம்பிகையின் நாமம் அமிருதகரவல்லி.

அடுத்து படிக்கரை நாதேசுவரரை அர்ஜுனன் பூஜித்தான். அம்பிகை மங்களநாயகி. இந்தக் கோவில் வடக்கே உள்ளது.

அடுத்து தெற்கேயுள்ள மூர்த்தி மகதீசர். இவரை பீமசேனன் பூஜித்தான்.

தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள பரமேசுவரரை நகுலன் பூஜித்தான்.

 

 

:இங்குள்ள முத்தீசுவரரை சகாதேவன் பூஜித்தான்.

இந்த தலத்திற்கு சுந்தரரின் பதிகம் ஒன்று உண்டு.

இந்த தலத்திற்கு திரிசிரபுரம் ம்கா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஒரு புராணம் இயற்றியுள்ளார்.

 

tirumazapadi

திரு மழபாடி

 

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

இங்குள்ள லிங்கத்தில் வைரம் இருக்கிறது. புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,

 

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..

 

சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு  பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது.  உடனே  பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.

 

 

சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.

 

சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர். இந்த புருஷாமிருகத்தைத் தனது யாகத்திற்கு அழைத்து வருமாறு தர்மபுத்திரர் பீமனைப் பணித்தார். ஜெயித்து அழைத்து வருதலே மரபாதலால, பீமன் இங்கு வந்து புருஷாமிருகத்தைப் போருக்கு அழைத்தான்

 

மழபாடியில் புருஷாமிருகத்தைக் காணாத பீமன்  கீலமலையில் புருஷாமிருகத்தைக் கண்டு யுத்தத்திற்கு அழைக்க அந்த மிருகம் பீமனை நோக்கி, “நீ ஆயுதத்துடன் இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இல்லை.” என்றது. உடனே பீமன் தன் கதாயுதத்தை புருஷாமிருகத்திடம் அளித்தான்.

purushamirugam,Silver-vahanam-kapali-temple-300x200

 

இப்போது புருஷாமிருகம்,” நீ இப்போது ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இருக்கிறது. ஆகவே உன்னிடம் யுத்தம் செய்வது தரமம் அல்ல” என்றது.

பீமன் யுத்தம் செய்யவே விரும்புகிறான் என்பதை நன்கு அறிந்த மிருகம், “ நான் மழபாடியை நோக்கி ஓடுவேன். என்னைப் பிடிப்பதற்குத் துரத்தி வர வேண்டும். நான் மழபாடியின் எல்லையைத் தாண்டுவதற்குள் என்னைப் பிடித்து விட்டால்  நீ என்னை வென்றவன் ஆவாய்” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கியது.

பீமனும் துரத்தினான். ஆனால் அவன் புருஷாமிருகத்தைப் பிடித்த போது பீமனின் ஒரு கால் மழபாடி எல்லையிலும் இன்னொரு கால் எல்லைக்கு அப்பாலும் இருந்தது.

 

பீமன் தான் வென்றதாகக் கூற புருஷாமிருகமோ அதை மறுத்தது. வழக்கைத் தீர்த்து வைக்க தர்மபுத்திரரே உகந்தவர் என்று இருவரும் கருதி தர்மரிடம் வந்தனர்.

 

அனைத்தையும் கேட்ட தர்மபுத்திரர்,” புறவெல்லையில் காலை வைத்த பீமனின் ஒருகாலை நீ வெட்டி எடுத்துக் கொள்ளலாம்” என்று புருஷாமிருகத்திடம் கூறித் தீர்ப்பை அளித்தார்.

தர்மரின் நடுவுநிலைமையைக் கண்டு வியந்த புருஷாமிருகம் பீமனை வெட்டாமல் விட்டது.அனைவரும்  ம்கிழ்ந்தனர்.

இந்த வரலாறு திருமழபாடி புராணத்தில் ஸ்தல சருக்கத்தில் விவரமாக உள்ளது.

 

 

இது மட்டுமின்றி திருவாழ்கொளிபுத்தூர், திருவிசயமங்கை, பிரபலமாக உலகுக்குத் தெரியாத இப்போது திண்டுக்கல் மலை என்று அழைக்கப்படும் பத்மகிரி உள்ளிட்ட ஏராளமான தலங்கள் பஞ்சபாண்டவருடன் தொடர்பு கொண்ட தலங்களாகும்.

ஒவ்வொன்றும் ஒரு சுவையான மகாபாரத வீரர்களின் வரலாற்றைத் தருவதாகும்!

**********

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட! (Post No 2853)

 

 

books picture

Article written by london swaminathan

 

Date: 30 May 2016

 

Post No. 2853

 

Time uploaded in London :– 8-41 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

 

Devi_Bhagavata_S_4f3ca6ead5de8

மதுரையை விட்டு லண்டனுக்கு வந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் மதுரை நினைவுகள் மறைவதில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் வரும் பழைய நினைவுகள் திடீரென்று சிரிப்பை உண்டாக்கும். என் மனைவி , ஏதோ அவளைப் பார்த்துதான் சிரிக்கிறேன் என்று நினைத்து என்ன சிரிப்பு? என்பாள். ஒன்றுமல்ல 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்ததை எண்ணி சிரிக்கிறேன் என்பேன். உங்களுக்கு என்ன பைத்தியமா? என்பாள்.

இதோ ஒரு பழைய, சுவையான சம்பவம்:–

 

எனது தந்தை வெ. சந்தானம் மதுரை தினமணிப் பதிப்பு துவங்கிய காலத்திலிருந்து மதுரை தினமணிப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி; காமரஜருடன் சிறையிலிருந்தவர். ஆகையால் அந்தக் கால மனிதரைப் போலவே கதர் ஜிப்பா அணிவார். பணம், புகழ் முதலிய ஆசைகள் கிடையாது. அவருக்குப் பொழுது போக்கு புத்தகம் சேகரித்தல், படித்தல், உரையாற்றுதல்; குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.

 

வீட்டிற்கு நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஏ.கே. செட்டியார், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்றோர், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள் எனப் பலரும் வருவர். அவர்கள் அமரும் முதல் அறையில் இரண்டு ‘காத்ரேஜ்’ பீரோக்கள் உண்டு. பேச்சு வாக்கில் ஏதேனும் புத்தகத்தை எடுக்க அந்த இரும்பு/எஃகு பீரோவைத் திறப்பார். அதில் பழுப்பேறிய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வந்தவர்கள் ‘கொல்.லென்று சிரித்து விடுவர்!

 

“என்ன சார்! இது? அவனவன் காத்ரேஜ் பீரோவுக்குள் தங்க நகை, பணப்பெட்டி, பட்டுப்புடவை என்று வைத்திருப்பான். நீங்கள் பழுப்பேறிய புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள்? என்பார்கள். என் தந்தையோ பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். அவர் விட்டுச் சென்ற 6000 புத்தகங்களை, நாங்கள் சகோதர்கள் பிரித்தெடுத்துக் கொண்டு இன்றும் அனுபவித்து வருகிறோம்.

 

ஒரு நாள், என் தந்தையின் சகா (தினமணி உதவி ஆசிரியர்) ஒருவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல இலக்கிய, தெய்வீக, தேசீய தலைப்புகளில் சம்பாஷணை நீடித்தது. தேவி பாகவதம் பற்றிப் பேச்சு வந்தவுடன் வந்தவர் சொன்னார், “எனக்கும் படிக்க ஆசை. நல்ல புத்தகம் எங்கே கிடைக்கும் “ என்றார்.

 

உடனே பீரோவைத் திறந்து, இது நல்ல பதிப்பு. இதைப் படி” என்று சொல்லிக் கொடுத்துவிட்டார். அவர் நல்ல மனிதர். ஒரு சத்திய சந்தர். ஆனால் அவரது சகோதரர் அப்படியில்லை. “கெட்ட மனிதர்”; அதாவது சிகரெட் குடிப்பார். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொண்டாலோ, சிகரெட் குடித்தாலோ, பெண் கூட கொடுக்க மாட்டார்கள்!!!!!

 

தேவி பாகவதம் இரவல் கொடுத்து பல மாதங்கள் கழிந்தன. நாங்கள் எங்கள் தந்தையுடன் வழக்கம்போல ‘புத்தக வேட்டை’யாட பழைய புத்தகக்கடைக்குச் என்றோம். மதுரை தெற்குச் சித்திரை வீதியில் அக்காலத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளில் என் தந்தைக்கு தனி மதிப்பு. என் தந்தை வரும் நாட்களில் அவர்களுக்கு நல்ல வரும்படி உண்டு. ஒரு ரிக்க்ஷா வண்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். பழைய புத்தகக் கடைக்குள் நுழைய எங்களுக்கு முழு அனுமதி உண்டு. நாங்களும் நேரத்தை வீணடிக்காமல், அங்கே படியில் அமர்ந்து, அம்புலி மாமா பிரதிகளை எடுத்துக் கொண்டு, மூன்று மந்திரவாதிகள், டனால் கோட்டை, வால் நட்சத்திரம் முதலிய தொடர்கதைகளைப் படிப்போம்.

இவ்வாறு புத்தகங்களைப் புரட்டும்போது திடீரெனக் கண்ணில்பட்டது தேவி பாகவதம். அது என் தந்தை கையெழுத்துடன், அவர் ரப்பர் ஸ்டாம்புடன் இருந்தது. பழைய புத்தகக்கடைக்காரரிடம் இது என்ன விலை? என்று சிரித்துக் கொண்டே விலையைக் கேட்டார். அவன் சொன்ன விலையைக் கொடுத்து அதை வீட்டுக்கும் கொண்டுவந்தார். பழைய புத்தகக் கடைக்காரருக்குத் தெரியாது எங்கள் வீட்டுப் புத்தகம்தான் இரவல் கொடுக்கப்பட்டு, வட துருவம், தென் துருவம் எல்லாம் பயணம் செய்து, பின்னர் அங்கே விற்கப்பட்டது என்பது.

 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? யார் இரவல் வாங்கினாரோ அவரது ‘கெட்ட’ சகோதரர், சிகரெட்டுக்கு காசு வேண்டி அந்தப் புத்தகத்தை அங்கே விற்றிருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று சொல்லுவதைவிட,

“போன புத்தகம் திரும்பி வந்தது புது மணத்தோட” என்று சொல்லுவது சாலப் பொருந்தும்.

–சுபம்–

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்! (Post No 2852)

coins gold

Article written by S.NAGARAJAN

 

Date: 30 May 2016

 

Post No. 2852

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 babay, mother

வாழ்க்கையில் எதிர்ப்படும் பல்வேறு இன்னல்களை எப்படிக் கடப்பது?

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அருமருந்து!

 

என்றாலும் கூட மகான்களிடம் அணுகி ஆசி பெறுவோர் பல் வேறு இடர்களையும் கடப்பது உறுதி.

 

ஜோதிட ரீதியாக ஜோதிட வல்லுநர்களை அணுகினால் அவர்கள் பரிஹார யந்திரங்களை வைத்துக் கொள்ளுமாறு கூறுவர்.

காலம் காலமாக பலன் அளித்து வரும் சில பரிஹார யந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

 

உரிய பிரச்சினைக்குத் தகுந்தவாறு இவற்றைத் தாமிரத் தகட்டில் எழுதி (பொறித்து) வைத்துக் கொண்டால் பிரச்சினைகள் தீரும்.

 

சத்ரு நாசனம்

 

15 22 2 7
6 3 19 18
21 16 8 1
4 5 17 20

 

 

பரீட்சையில் தேறுதல்

 

23 30 2 7
6 3 27 26
29 24 8 1
4 5 25 29

 

 

ரோக நாசனம் (வியாதிகள் தீர)

 

 

13 20 2 7
6 3 17 16
19 14 8 1
4 5 15 18

 

 

தன லாபம்

 

 

44 51 2 7
6 3 48 47
50 45 8 1
4 5 46 49

 

புத்ர ஜனனம்

 

 

42 49 2 7
6 3 46 44
48 43 8 1
4 5 44 7

 

 

திருஷ்டி, செய்வினை தோஷம் விலக

 

 

3 10 2 7
4 3 7 6
9 4 8 1
4 5 5 8

 

பிரயத்தின காரிய ஜயம்

 

 

24 31 2 7
6 3 28 27
30 25 8 1
4 5 26 29

 

 

–Subham-

**********

 

பாரதத்தின் பெருமை! (Post No.2849)

IMG_3442

Article written by S.NAGARAJAN

 

Date: 29 May 2016

 

Post No. 2849

 

Time uploaded in London :–  5-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

பாரதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

 

பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும்.

 

ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்!

 

எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் உள்ளிட்ட பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான்!

 

பாரத தேசத்தின் பெருமையை விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது:

 

1947_India_Flag_3½_annas

காயந்தி தேவா: கில கீதகானி

      தன்யாத் து தே பாரதபூமிபாகே

ஸ்வர்கார்பவர்காஸ்பதமார்கபூதே

      பவந்தி பூய: புருஷா: சுரத்வாத்

 

தேவர்களாயிருந்தும் கூட மனிதர்களாக பாரதவர்ஷத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களே! ஏனெனில் கடவுளரும் அவ்ர்களது கீதத்தை இசைக்கின்றார்கள். ஏனெனில் அதுவே சொர்க்க இன்பங்களுக்கான நுழைவாயில் அல்லது முக்திக்கான பெரிய இன்ப வழியாகும்

தேவர்களும் கூட பாரதத்தில் பிறப்பு எடுக்க ஏங்குகின்றனராம்!

 

இதை ஹெச் ஹெச் வில்ஸன் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்த்துள்ளார்:

 

 

Happy are those who are born, even from the conditions of gods as men in Bharatvarsha as the gods sings their songs and as that is the way to the pleasures of the paradise, or the greater blessing of final liberation . (H.H. Wilson)

 

பரம பூஜனீய குருஜி ஸ்ரீ எம். எஸ். கோல்வால்கர் தனது பஞ்ச் ஆஃப் தாட்ஸ்(Bunch of thoughts) என்ற நூலில் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியதோடு பாரதத்தின் அருமை  பெருமையை மிக நன்றாக  விளக்கியுள்ளார்.

 

 

ஸ்வாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி தாயகம் வருகையில் 15-1-1897 அன்று கொழும்பில் அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அதில் பாரதத்தின் பெருமையைக் கூறும் போது,

 

 

 

“If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for Karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality — it is India. “

என்று உரைத்தார்.

 

பாரதத்தின் பெருமை உரைக்க ஒண்ணா ஒன்று. தேவர்களும் பிறக்க விரும்பும் புண்ணிய பூமி பாரதம்!

********

 

 

 

 

 

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே! (Post No.2847)

lord-yama-1

Research Article written by london swaminathan

 

Date: 28 May 2016

 

Post No. 2847

 

Time uploaded in London :– 9-48 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact ; swami_48@yahoo.com

 

யமனுக்கு 14 பெயர்கள்! தர்மராஜன் என்று ஏன் பெயர்?

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் (21 நவம்பர் 2014ல் நான் எழுதிய கட்டுரையில் விவரம் காண்க) கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

 

 

சிவனுக்கு 52 பெயர்களும்

விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்

பலராமனுக்கு 17 பெயர்களும்

அம்பாளுக்கு 21 பெயர்களும்

லெட்சுமிக்கு 14 பெயர்களும்

கணபதிக்கு 8 பெயர்களும்

முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்

இந்திரனுக்கு 35 பெயர்களும்

அக்னிக்கு 34 பெயர்களும்

யமனுக்கு 14 பெயர்களும்

வருணனுக்கு 5 பெயர்களும்

வாயுவுக்கு 20 பெயர்களும்

குபேரனுக்கு 17 பெயர்களும்

சூரியனுக்கு 37 பெயர்களும்

மன்மதனுக்கு 19 பெயர்களும்

ஜினதேவனுக்கு 18 பெயர்களும்

புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”. (இவர்களில் இந்திரன், அக்னி, குபேரன், வாயு, பிரம்மா பற்றிய பெயர்ப் பட்டியலையும் அதன் விளக்கங்களையும் இங்கே எழுதிவிட்டேன்)

The_deity_Yama_with_fangs_and_holding_a_daṇḍa_(a_rod).jpgB MUSEUM

 

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே

Song: samarasasm ulavum – பாடல்: சமரசம் உலாவும் இடமே
Movie: Rambaiyin kaathal – திரைப்படம்: ரம்பையின் காதல்
Singers: Sirkazhi Govindarajan – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Marudhakasi – இயற்றியவர்: மருதகாசி
Music: T.R.Pappa – இசை: டி.ஆர். பாப்பா
Year: – ஆண்டு: 1956
((நன்றி;—Read more at http://www.thamizhisai.com))

thajavur big temple yama

Thanjavur Big Temple painting of Yama, Markandeya and Lord Shiva

 

இந்துக்கள் ஏன் தினமும் மரணதேவனை (யமனை) வழிபடுகிறார்கள் என்ற எனது கட்டுரையில் (Why do Hindus worship God of Death (my research article posted on 29 July 2013) பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் தெற்கு திசையை நோக்கி நின்று கொண்டு யமதர்மராஜாவை வணங்குவதையும் அதில் யமனைப் போற்றி கீழ்கண்ட பெயர்களை சொல்லுவதையும் எழுதியுள்ளேன்:–

யமாய, தர்மராஜாய, ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்வதாய, காலாய, சர்வபூதக்ஷயகராய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

இப்பொழுது அமரகோஷத்தில் உள்ள 14 பெயர்களைக் காண்போம்:–

தர்மராஜ:=அறத்தில் வழுவாதவன்; யார், யார் என்னென்ன செய்தார்களோ அதற்கேற்ப பலன் தருபவன்

பித்ருபதி:= இறந்தவர்களை பித்ருக்கள், என்றும் நீத்தார் என்றும் அழைப்போம்; அவர்களுக்குத் தலைவன்

சமவர்த்தி= சமமாகப் பார்ப்பவன் (ஆண்டியும் ஒன்றே; அரசனும் ஒன்றே; சமரசம் உலாவும் இடம் சுடுகாடு.)

“முடி சார்ந்த மன்னரும் பிடிசாம்பராய்ப் போவர்.”

பரேதராட் = பர லோக ராஜா

க்ருதாந்த: = முடிவை உண்டாக்குபவன் (க்ருத+ அந்த)

யமுனாப்ராதா = யமுனையின் சகோதரன் (சூரியனுடைய புத்ரி, புத்ரர்கள் யமுனா, சனி, யமன்)

சமன: = கட்டுப்படுத்துபவன்

யமராட்= கட்டுப்படுத்துவதில் மன்னன்/ ராஜா

யம: = கட்டுப்படுத்துபவன் யம, நியமம் முதலிய சம்ஸ்க்ருத சொற்கள் கட்டுப்பாடு, ஒழுங்கு முதலிய பொருட்களில் கையாளப்படுகின்றன.

 

கால: = காலத்தைக் கணக்கிடுபவன்

தண்டதர: = யமனின் கையிலுள்ள ஆயுதம் தண்டம்; அதால் தண்டிப்பவன்

ஸ்ராத்ததேவ:= சிராத்தத்தின் (திதி) தலைவன்

வைவஸ்வத: = விவஸ்வான் (சூரியன்) புத்ரன்

அந்தக: = வாழ்க்கையை முடித்து வைப்பவன்

Yama and Markandeya, Siva

இவைகளில் தர்மராஜன், சமவர்த்தி என்ற இரண்டு பெயர்களும் அழகான பெயர்கள். மரணத்தில் யாருக்கும் சலுகை காட்டாதவன். அதே நேரத்தில் அவரவர் பாபபுண்யங்களை கணக்கிட்டு நீதி தவறாமல் தீர்ப்பு வழங்குபவன்.

சித்ர (வரைபடம்), சித்ரகுப்த (மறைவான படம்):– இவ்விரு பெயரும் யமனின் கணக்குப்பிள்ளைகள்; ஒருவர் இறந்தவுடன் பாப, புண்ணிய பதிவேட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவர் என்று சொல்லுவர். உண்மையில் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு உருவத்தை உண்டாக்குகிறது. அதுதான் சித்ரம், சித்ர குப்தம். மனதினால் தீங்கு செய்தாலும் அது சித்திரமாக உருவாகி கணக்குப் புத்தகத்தில் பதிவாகி, இறுதித் தீர்ப்பன்று தக்க தண்டனைகளைப் பெற்றுத் தரும். அதே போல நல்ல எண்ணங்கள் நற்பலனைத் தரும். இந்துக்கள் எந்த தத்துவத்தையும் கதை ரூபத்தில், உவமை ரூபத்தில் சொல்லுவதில் வல்லவர்கள்!

 

இந்துக்கள் யமனை தினமும் வணங்குவதால் மரண பயம் நீங்கி விடுகிறது. பிறந்தோர் எல்லாம், இறப்பது இயற்கை என்ற நியதியையும் நினைவுபடுத்துகிறது யம வந்தனம்.

 

–சுபம்–