‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’

indra_main_2754_1_1

திராவிடர் கொலை வழக்கு

18. இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்ளுங்கள்!

joshu

18 swarnalokam

‘Dravidians are Invaders’

dravidian girl
dravidian2
dravidian3

Pictures of women with Dravidian physical features (images are taken from other sites;thanks)

3_veddahs
veddah2
veddahs-by-messrs-awaplate-co

Veddahs of Sri Lanka

Dravidians are invders

பார்ஸீ மத- இந்து மத ஒற்றுமைகள்

Fire Temple,UDVADA 3Gujarat

Fire Temple at Udvada,Gujarat.

பார்ஸீ மத

ஜொராஸ்த்ரர் யார்? காஞ்சி சுவாமிகள் உரை

ஜொராஸ்த்ரர் யார்

நூறு ஆண்டு வாழ சரகர் கூறும் விதிகள்

100 years life

Post 757 dated 24th December 2013.
ஹித ஹாரி, மித ஹாரி, ருது ஹாரி, சதா நிரோகி!

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – பகுதி 3
(Please read first two parts posted earlier)
By ச.நாகராஜன்

.
சின்ன உண்மை
வியாதி இல்லாமல் வாழ ஒரு ரகசிய சூத்திரத்தை சரகர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:- ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி! அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்!

அல்பெரூனியின் வியப்பு

இந்தியாவிற்கு வந்து அதிசயங்களின் நாடாக இதைக் கண்ட அல்பெரூனி,” அவர்கள் (ஹிந்துக்கள்) சரகர் என்பவர் எழுதிய நூலைக் கொண்டுள்ளனர். அதுவே அவர்களின் இலக்கியங்களில் வைத்தியத்தில் மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. த்வாபர யுகத்தில் அக்னிவேசர் என்ற பெயருடன் வாழ்ந்த ரிஷியே அவர் என்று அவர்கள் நம்புகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரக சம்ஹிதை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

hundred-birthday-cake-007

சரக சம்ஹிதைக்கு விளக்கவுரைகள்

பின்னால் தோன்றிய பெரும் ஆயுர்வேத நிபுணர்கள் சரகருக்கு முதலில் தங்கள் வணக்கத்தைச் செலுத்துவது மரபானது. சஹாசங்கா என்ற மன்னனின் (கி.பி.375-413) அரண்மனை வைத்தியரான பட்டர ஹரிசந்திரா என்பவர் ‘சரக வ்யாக்யா’ என்ற தனது நூலையும், வாக்பட்டரின் மாணவரான ஜேஜிதா என்பவர் ‘சரக ந்யாஸா’ என்ற தனது நூலையும் சரகரைப் போற்றும் வகையில் சரகர் பெயரைத் தமது நூலுக்குச் சூட்டினர்.

ஜேஜிதா ‘நிரந்தர பாத வ்யாக்யா’ என்று சரகரின் நூலுக்கு ஒரு விளக்கவுரை நூலையும் எழுதினார். பட்டர ஹரிசந்திரா எழுதிய நூலின் ஒரு பகுதி மட்டும் இன்று கிடைத்துள்ளது.

ஸ்வாமி குமாரா என்பவர் பஞ்ஜிகா என்று ஒரு விளக்கவுரையை எழுதியுள்ளார். இதிலும் ஒரு பகுதியே இன்று நமக்க்குக் கிடைத்துள்ளது.

ஜயந்த பட்டர் என்பவர் தனது நியாய மஞ்சரியில் இதுவரை தோன்றியவர்களுள் எல்லாம் அறிந்த அறிவாளி சரகரே என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏனெனில் சரகர் தனது சம்ஹிதையில் புகழ்பெற்ற 60 பேரை சுட்டிக் காட்டி மேற்கோளாக அவர்கள் கூறியதை எடுத்தாள்கிறார். வசிஷ்டர், ஜமதக்னி,பிருகு,வாமதேவர், ஆங்கீரஸர் போன்ற பெரும் மஹரிஷிகள் இந்த அறுபது பேரில் அடங்குவர்.

341+177+64 = 582

தாவர வகையிலான 341 மருந்துகளையும், மிருக வகையிலான 177 மருந்துகளையும் உலோகம் மற்றும் கனிமங்களின் அடிப்படையிலான 64 மருந்துகளையும் அவர் குறிப்பிடுகிறார். பாதரஸத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டாலும் அதன் மருத்துவப் பயன்பாட்டினை அவர் குறிப்பிடவில்லை.

100th-bday-5
அமெரிக்க நிபுணரின் புகழாரம்

அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவ நிபுணரான ஜார்ஜ் க்ளர்க் என்ற அறிஞர் சரகரின் நூலை வரி வரியாகப் படித்து இப்படிக் கூறுகிறார்: “அவரது நூலைப் படித்து விட்டு இதை மட்டுமே நான் கூற முடியும்.
இன்றைய நவீன மருத்துவர்கள் தங்களது பார்மஸியிலிருந்து அனைத்து மருந்துகளையும் எறிந்து விட்டு சரகர் கூறிய முறைப்படி தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்குவார்களானால் கல்லறையில் சவப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு மிகக் குறைந்த வேலையே இருக்கும். அத்துடன் ஊனமுற்றவர்களாக உலகில் மிகச் சிலரே இருப்பர்”

(If the physician of the present day world drop from the pharma copoeia all the modern drugs and treat their patients according to the method of Charaka there would be the least work for the undertakers and fewer chronic invalid to the world – Ceorge Clark)

100th-birthday-cake-007
நூறு ஆண்டுகள் வாழ விதிமுறைகள்

சூத்ர ஸ்தானத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான விதி முறைகளை சரகர் மிக விளக்கமாக்க் குறிப்பிடுகிறார்.

மிக நீண்ட விளக்கமாக அமையும் இந்தப் பகுதியில் சில விதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். முழுக் குறிப்புகளையும் மூல நூலில் படித்து அவற்றைப் பின்பற்றலாம்.

பின்பற்றினால் இக உலகில் நூறு ஆண்டுகள் வாழ்வதோடு மறு உலகில் மேலான நல்ல ஆத்மாக்களுக்கான உலகை அடைவதும் நிச்சயம் என்று உறுதி படக் கூறுகிறார் சரகர்:
நூறு ஆண்டு வாழ்வதற்கான வழிகளில் சில முக்கியமானவை மட்டும்:-

1) தெய்வங்கள், ;பசுக்கள், அந்தணர்கள்,குருமார்கள்,வயதிலே பெரியோர்,ஆன்ம ஞானம் அடைந்த ஞானிகள், பாடம் கற்பித்த உபாத்தியாயர் ஆகியோருக்கு மரியாதை தந்து வணங்க வேண்டும்.
2) அக்னிக்கு ஆகுதி தர வேண்டும்.
3) நல்ல மூலிகைகளை அணிய வேண்டும்.
4) கால்களையும், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களையும் அவ்வப்பொழுது சுத்தம் செய்தல் வேண்டும்.
5) உடலைச் சமச்சீரற்ற நிலையில் அங்கங்களை வளைத்து இருத்தல் கூடாது
6) ‘ஹம்’ என்ற ஒலியை எழுப்பக் கூடாது
7) தேவையற்ற சாகஸ செயல்களைச் செய்யக் கூடாது
இப்படி அறநெறிகளைக் கூறும் பட்டியல் போல நூற்றுக்கும் மேற்பட்ட நெறிகள் அடங்கிய பெரிய பட்டியலை சரகர் அளிக்கிறார்.

ஆயுள் என்பதன் விளக்கம்

ஆயுள் என்பதை விளக்கும் போது அவர் கூறுவது இது தான்:
சரீரேந்த்ரிய சத்வாத்ம சம்யோகம் தாரி ஜீவிதம் I
நித்யகச்சானுபந்தஸ்ச பர்யாயைராயுருச்யதே II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- ஆயுள் என்பது உடல்,இந்திரியங்கள்,மனம், ஆத்மா ஆகிய அனைத்தின் சேர்க்கையைக் குறிப்பதாகும். அதை தாரி (உடலானது அழிவதைத் தடுப்பதாகும்) என்றும், ஜீவிதா (உயிருடன் இருக்கச் செய்வது) என்றும், நித்யக (உயிர் இருப்பதற்கான ஆதாரம்) என்றும், அனுபந்த (உயிர் உடலை விட்டு மறு உடலுக்கு அல்லது ஒரு பிறப்பு விட்டு மறு பிறப்புக்குச் செல்வது) என்றும் கூறலாம்.

மகிழ்ச்சியுடன் நீண்ட நாள் வாழ்வதே மனித வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே சரக சம்ஹிதையின் சாரமாகும்!
நீண்ட ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ சரகரை வணங்கி அவர் காட்டிய வழியில் நடக்க வேண்டியது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

**************** முற்றும்

contact swami_48@yahoo.com
Pictures are used from different sites;thanks.

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!

avvaiyum muruganum

By London Swaminathan; post No. 753 dated 21st December 2013.

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இந்த அவ்வையாருக்கு முன் வாழ்ந்த, பாரதத்தின் மிகப் பெரிய தத்துவ ஞானி ஆதி சங்கரர், அவருடைய ‘பஜ கோவிந்தம்’ என்னும் பாடல் நூலில் கூறுகிறார்:
சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)

பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.

மேற்கூறிய நிலைக்கு எடுத்துக்காட்டாக, நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைக் கூறலாம்.
பகவான் ரமணர் எழுதிய ‘உள்ளது நாற்பது’ நூலின் அனுபந்தத்தில் ஆதி சங்கரரின் மேற்கூறிய ஸ்லோகத்தைத் தமிழில் தந்துள்ளார்.

கண்ண பிரானும், பகவத் கீதையில், சொல்லுவார்:
பார்த்தா! எப்பொழுது மனத்தில் உள்ள ஆசைகள் அனைத்தையும் தூரத் தள்ளுகிறானோ, ஆத்மாவிடத்தில் ஆத்மாவினாலேயே அடைந்த மகிழ்ச்சி நிறைந்த அவன் அப்போது ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் (கீதை 2—55)

ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நிலையை இன்னும் அழகாக விளக்குவார்: “நுனியில் பிளவு உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போல ஆசைகள் அற்பம் இருந்தாலும் ஒருவன் ஈசுவர சந்நிதானத்தை அடையமாட்டான்”.

upadesh

வள்ளுவர் அறிவுரை:

தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:
“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)
ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !

அறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (குறள் 441)

உற்ற துன்பத்தை முதலில் நீக்கி, மீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (442)

கதாசரித் சாகரம் என்ற உலகிலேயே மிகப் பெரிய கதை நூலிலும் அழகான மேற்கோள்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பெயர் தெரியாத ஒரு புலவர் எழுதிய விவேக சிந்தாமணி நூலில் அதற்கு இணையான மேறோள்கள் இருப்பதால் அந்தப் பாடல்களைத் தருகிறேன். எளிய தமிழ் என்பதால் பொழிப்புரையே தேவை இல்லை:

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

Natha-Swamis-2008

அறிவுள்ளோர் தமக்கு நாளும்
அரசரும் தொழுது தாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர்
நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுள்ளோர் தமக்கும் யாதோர்
அசடது வருமே யாகில்
வெறியர் என்று இகழார் என்றும்
மேதினி உள்ளோர் தாமே!
அறிவுள்ளோருக்கு அரசரும் பணிவர் என்பது சொல்லாமலே விளங்கும் !

அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.
சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!

நாமும் ஞானிகளின் சந்நிதியில் நலம் பெறுவோம்!
சத் சங்க பஜனைகளில் பங்கு கொள்ளுவோம்!!

contact swami_48@yahoo.com

ஔவையாரை மிரட்டிய பேய் !

ghost4

By London Swaminathan; Post No. 751 dated 19th December 2013.

தமிழ் உலகம் அறிந்த மூதாட்டி ஔவை. சங்க காலம் முதல் 16, 17 ஆம் நூற்றாண்டு வரை பல ஔவையார்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தது அவர்களின் மொழி நடையிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் பாட்டி சமீப காலத்தில் வாழ்ந்த புலவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. ஒருவேளை அவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பிற்காலப் புலவர்கள் ஔவையாரின் பெயரில் எழுதியிருந்தாலும் வியப்பதற்கில்லை.

எது எவ்வாறாகிலும் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’, ஏதோ ஒரு ஔவையார் பேயைக் கண்டதால்தான் இந்தக் கதை இன்றுவரை நீடிக்கிறது. மேலும் ஔவை என்று சொன்னவுடன் தமிழ் மொழிப்பற்றும், தெய்வ பக்தியும் பளிச்சென மின்னுவதையும் காண்கிறோம். ஏற்கனவே சிந்து சமவெளியில் சில முத்திரைகளில் பேய் இருப்பதையும், நீலி என்ற பெண்பேய் 72 தமிழர்களைக் கொன்றதையும், விவேகானந்தர், பேய்கள் பற்றி சொன்னதையும் தனித் தனியே எழுதிவிட்டேன். இதே பிளாக்—கில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இதோ மற்றும் ஒரு சுவையான உண்மைக் கதை:

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளையோ மஹா மூடன். எவ்வளவோ வாத்தியார்கள் வந்தும் அவனுக்கு அரிச்சுவடி கூட கற்பிக்க முடியவில்லை ஆனால் உடல்வாகில் ஆண் அழகன். மனம் உடைந்த ராஜா, இவனிடம் அரசாட்சி போய்விடக்கூடாது என்று கருதி அவனை நாடு கடத்தினார்.

பக்கத்து நாட்டுக்குப் போன ராஜ குமாரன், தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நாட்டு இளவரசி ‘தமிழறியும் பெருமாள் ஏலவார்குழலி’ உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்தபோது இந்த இளவரசன்- ஆண் அழகனைக் கண்டு காதல் வசப்பட்டாள். ஒரு ஓலையில் காதல் கடிதம் எழுதி அதை அவனிடம் சேர்ப்பிக்க தோழியை அனுப்பினாள். கடிதம் மூலம் இரவில் ஊரின் வடக்குப் புற சத்திரத்துக்கு வரும்படி அழைத்தாள்.

ghost-3

எழுதறிவில்லாத அந்த இளவரசன் ரோட்டில் பிச்சை எடுதுக் கொண்டிருந்த குஷ்டரோஹி ஒருவனிடம் ஓலையைக் காண்பித்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரியான ஏமாளி என்பதை உணர்ந்து, அந்தக் கடித வாசகத்தை மாற்றிச் சொன்னான். அந்த இளவரசன் ஒரு குற்றவாளி என்று ராஜா கருதுவதால் அவன் உயிர்பிழைக்க உடனே தலைநகரை விட்டு வேறிடத்துக்குப் போகவேண்டும் என்று கடித ஓலையில் இருப்பதாகப் பொய் சொன்னான்.

இளவரசன் ஓலையை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குஷ்டரோஹி அன்று இரவில் சத்திரத்துக்குச் சென்று இருட்டில் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தவுடன் அவளுடன் காதல் மொழி பேசிக் கட்டித் தழுவி இரவைக் கழித்தான். பொழுது புலர்ந்தது. உண்மையை அறிந்த ராஜகுமாரி மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள்.

இதற்குள் ராஜகுமாரன், வேறு ஒருவனிடம் ஓலையைக் காண்பிக்க, அவன உண்மையைக் கூறினான். இளவரசன் ஓடோடி சத்திரத்துக்கு வந்தான். ராஜகுமாரி சடலத்தைக் கண்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான். இருவரும் இளமையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பேயாகி சத்திரத்தில் அலைந்தார்கள். வருவோர் போவோருக்கு எல்லாம் தொல்லையும் கொடுத்தார்கள்.

ஒருநாள் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தப் பக்கம் வந்து சத்திரத்தில் இரவில் ஓய்வெடுக்கப் போனார். அதைப் பார்த்த பொது மக்கள் அங்கே அலையும் பேய்களின் சேட்டைகளை எடுத்துரைத்தனர். அவரோ ‘என்னை ஒரு பேயும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று துணிச்சலாக பாயை விரித்துப் படுத்தார்.

முதல் ஜாம முடிவில் ஒரு பெண் பேய் அலறிக்கொண்டு வந்தது. ஔவையாரை ‘எற்று எற்று’ என்று சொல்லிக்கொண்டு எற்ற வந்தது. ஔவையார் ஒரு வெண்பாப் பாடலைப் பாடியவுடன் அது ஓட்டம் பிடித்தது.
Ghosts-spirits2

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்—பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை என்பது முதல் பாட்டின் பொருள்.

மீண்டும் இரண்டாம் ஜாம முடிவில் இதே போல நடந்தது. ஔவையார் மீண்டும் ஒரு வெண்பா ஆயுதத்தைப் பிரயோகித்தார். பெண் பேய் ஒட்டம் பிடித்தது.

கருங்குளவி சூளுரைத்து ஈச்சங்கனி போல்
வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

விஷக் குளவி வசிக்கும் ஈச்ச மரம் யார்க்கும் உதவாதது போல, வருந்தியவர்களுக்கு தானம் செய்யாதவன் வைத்திருக்கும் பொருள், இறுதியில் சுற்றத்தார்க்குப் போய்ச் சேரும். அத்தகைய கருமிகளை எட்டி உதை என்பது இரண்டாம் பாட்டின் பொருள்.

மூன்றாம் ஜாம முடிவிலும் இதே கதை. மேலும் ஒரு வெண்பா குண்டு!! பேய் ஓட்டம்!!

வானம் உளதால் மழையுளதால் மண்ணூலகில்
தானம் உளதால் தயை உளதால்—ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோம் என்றே ஏமாந்திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வானமும் தானமும், மழையும் இவ்வுலகில் உண்டு. இதனை எண்ணி சோம்பித் திரிவாரை எத்தி உதை என்பது மூன்றாம் பாட்டின் பொருள்.

நான்காம் ஜாம முடிவிலும் மேலும் ஒரு வெண்பாவை வீசவே பேய் அவர் காலில் விழுந்து விமோசனம் வேண்டவே, அடுத்த ஜன்மத்தில் நீ புலவனாகப் போவாய் என்று வாழ்த்தினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவாள்
பொற்றொடி மாதர் புணர்முலை மேல் சேராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

எட்டாயிரம் ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டிமரம் போல சிலர் உள்ளனர். மாதர் இன்பம் என்பதையே அனுபவியாத அத்தகைய மரக்கட்டை போன்றோரை போய் எத்தி உதை என்று சொல்லவே, பேய் ஔவையார் காலில் விழுந்தது.
ghost 1

பேய்கள் எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
2.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
3.வள்ளுவன் சொன்ன பேய்க்கதை
4.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

எனது பிளாக்—கில் ஆங்கிலத்திலும் இக்கட்டுரைகள் கிடைக்கும்.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com

17. மூ!

Zhaozhou

Post No.750 posted on 18th December 2013.
Part 17 of History of Zen Buddhism in Tamil written by Santanam Nagarajan of Bangalore.

17. மூ!

ச.நாகராஜன்

ஜென் பிரிவில் உதித்த பெரும் மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் Zhàozhōu Cōngshěn (778-897).ஜப்பானைச் சேர்ந்த இவரை ஜோஷு Jōshū Jūshin என்ற பிரபலமான பெயரால் அனைவரும் அறிவர்.
‘மூ’ (Wu) என்ற பிரபலமான ஒரு கோயனால் உலகில் இன்றளவும் அவர் போற்றப்படுகிறார்.

பெரும் ஞான நிலையை எய்திய இவர் நான் – சூவான் என்ற ஆசார்யரிடம் சிஷ்யராக இருந்தார் (748-835) ஆசார்யர் மஹாநிர்வாணம் அடைந்த பின்னர் சீனாவில் நாடெங்கும் சுற்றி வரலானார் தனது வாழ்நாளில் கடைசி நாற்பது ஆண்டுகளில் வட சீனாவில் ஒரு சிறிய ஆலயத்தில் தங்கி இருந்து தன் சிஷ்யர்களுக்குப் போதித்து வந்தார். சில வார்த்தைகளிலேயே பெரும் உபதேசத்தை அருளும் அரிய பாணியை இவர் கைக்கொண்டிருந்தார்.

ஒரு துறவி அவரிடம்,” ஒரு நாய்க்கு புத்தத் தன்மை இருக்கிறதா?” என்று கேட்டார்.

மஹாயான புத்தமத தத்துவத்தின் படி புத்தத் தன்மை என்பது அனைத்து உயிரினங்களிடமும் இருக்கும் ஒரு அடிப்படைத் தன்மையாகும். எல்லா உயிரினங்களிடமும் என்று சொல்லும் போது அது ஒருஅலங்காரச் சொற்றொடர் இல்லை. மனிதர்களை மட்டும் அல்ல, நிஜமாகவே எல்லா உயிரினங்களையும் அது குறிக்கும்.ஆகவே அதில் நாயும் அடங்கும்! அதுவும் உயிரினத்தில் ஒன்று தானே!! ஆகவே துறவி கேட்ட கேள்விக்கான சரியான பதில் ஆம் என்பதே!

ஆனால் சாவோ சௌ சங்-ஷென் “மூ” என்று பதில் அளித்தார்.இதை உச்சரிக்கும் போது ஒரு மிருகத்தின் தீனமான குரலைப் போல அல்லது முனகலைப் போல உச்சரிக்க வேண்டும். “மூ,,ஊ.ஊ” என்று!
“மூ! இல்லை! இங்கே என்ன நடக்கிறது?” என்றார் சாவோ சௌ சங்-ஷென்.

இந்த கோயனில் உள்ள கேள்வியானது “இருக்கையின் இயற்கை” (exixtence nature) பற்றியது! துறவியின் கேள்வி ‘இருக்கை’ பற்றிய ஒரு பக்கமான – சிதைந்த -பார்வையினால் கேட்கப்பட்ட ஒன்று. சாவோ சௌ சங்-ஷென் துறவியின் சிதைந்த சிந்தனைக்கு ஒரு அடி கொடுத்து அவரது சம்பிரதாயமான சிந்தனையை உடைத்தார்.

இந்த கோயன் “சாவோ சௌ சங்-ஷென்னின் நாய்”என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமானது.
கடந்த 12 நூற்றாண்டுகளாக ஜென் புத்த மதத்தினர் இந்த கோயன் பற்றி ஆழ்ந்து தியானிக்கின்றனர்.
Joshu 1

“மூ” என்பது சீனாவில் வூமென் ஹூகை (1183-1260) என்பவரால் தொகுக்கப்பட்ட கதவில்லாத கதவு (Gateless Gate) என்ற 48 கோயன்கள் அடங்கிய தொகுப்பில் முக்கியமான கோயன் ஆகும். ஜென் மாஸ்டர்களுக்கும் சீடர்களுக்கும் இடையே பல ஆண்டுகளில் நடந்த உரையாடல்,கேள்விகளில் மிக முக்கியமானவை மட்டும் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டது.ஒவ்வொரு கோயனும் தர்மம் பற்றிய ஒரு விளக்கமாக அமைகிறது.

‘மூ’ என்ற கோயன் நம்மிடையே நிலவும் மாயத்திரையை அறுத்து எறிய வல்ல ஒரு முக்கியமான கோயன். அது கென்ஷோ எனப்படும் ஞானோதய அனுபவத்தைத் தர வல்லதாக கருதப்படுகிறது. மூடி இருக்கும் அறைக் கதவை உடைத்துத் திறப்பது போல அல்லது மேகமூட்டத்தின் இடையே மறைந்திருக்கும் சந்திரனைச் சிறிது பார்ப்பது போல இந்த அனுபவத்தைக் கூறலாம்.

‘மூ’ என்பதை ஆம் என்றோ இல்லை என்றோ அர்த்தமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒன்றுமில்லை அதாவது சூன்யம் என்பதை விளக்க மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் குறிப்பாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் பலர் வியாக்யானம் செய்கின்றனர்.

ஆகவே ‘மூ’ என்ற எழுத்தை அது பற்றி எங்கெல்லாம் விளக்கப் படுகிறதோ அங்கெல்லாம் காட்சிப் பொருளாக மாட்டி வைப்பது இன்றைய மரபாக ஆகி விட்டது.

மூவில் மூன்று கோடுகள் உள்ளன.

முதலில் கிடைமட்டமான கோடு அடுத்து மேலிருந்து கீழாக வரும் கோடு ஒரு க்ளாக்வைஸ் சுழலைக் கொண்டு பின்னர் கீழிறங்கும்..அடுத்து கீழிறங்கிய கோடு வலது பக்கமாகச் செல்லும்.

மாஸ்டர் வூமென் ஹூகை ஆறு வருட காலம் சிரமப்பட்டு ‘மூ’ என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டார்! இதைப் பற்றிய வியாக்யானத்தில் அவர் குறிப்பிடுவது இது: “உனது மொத்த உடலையும் அதில் உள்ள 360 எலும்புகளையும் 84000 மயிர் அடிப் பைகளையும் சந்தேகமாக ஆக்கிக் கொண்டு இந்த ஒரே ஒரு வார்த்தையான ‘மூ’ என்பது பற்றித் தியானம் செய்! இரவு பகலாக நன்கு ஆழத் தோண்டிக் கொண்டே இரு! இருக்கிறது என்றோ அல்லது இல்லை என்றோ நினைக்காதே! அதை ஒன்றுமில்லை என்றும் யோசிக்காதே. பழுக்கக் காய்ச்சிய சிவப்பான இரும்புக் குண்டை முழுங்குவது போல அது இருக்கும். அதை வாந்தி எடுக்க முயன்றாலும் உன்னால் முடியாது!

நம் முன்னே இருக்கும் காலை நேரப் பனியை விலக்குவது போல ‘மூ’ பற்றிய அர்த்தத்தை உணர்வது ஆகும்.

இதைப் போன்ற கோயனை ஒரு குரு உச்சரிக்கும் போது சிஷ்யரான ஒருவர் “ இதன் அர்த்தம் என்னவென்று நான் நினைக்க்றேன் என்றால்” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே மாஸ்டர் குறுக்கிட்டு “ நீ நினைப்பது ஏற்கனவே தப்பாக ஆகி விட்டது!” என்பார்.

சுலபத்தில் விளக்க முடியாதது – மூ! அனுபவத்தில் உணர வேண்டியது ‘மூ’

தர்க்கரீதியாக உணர முடியாத ஒன்று மூ! தர்க்கரீதியாக ஒருவர் இது பற்றி அறிய விரும்புவது இரும்புச் சுவரில் முஷ்டியால் குத்திக் கொள்வது போல என்று ஜென் மாஸ்டர்கள் கூறுகின்றனர்!
Mu cone1

சின்ன உண்மை
‘மூ’ எங்கிருந்து பிறந்தது என்று ஆராயப் போனால் அது போதிதர்மரைச் சுட்டிக் காட்டுகிறது. போதிதர்மரின் சமாதி இருக்கும் இடம் சீனாவில் உள்ள ஷான்ஸி மாகாணத்தில் “பேர் இயர் மவுண்டன்” (Bear Ear Mountain) என்னும் இடமாகும். அங்குள்ள ஒரு கல்வெட்டில் ‘மூ’ செதுக்கப்பட்டிருக்கிறது, இதை சக்கரவர்த்தி வூ செதுக்கியதாக வரலாறு சொல்கிறது. பின்னால் வந்த ஆசாரியர் மூ என்ற பிரபல கோயனை உருவாக்கினார். contact swami_48@yahoo.com

******************** தொடரும்
Please read the 16 parts posted earlier in this blog.

மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

_Akshayapatra, sun god

Picture of Sun God giving Akshaya Patra to Yudhistra.

மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

By Santanam Swaminathan

Post Number 746 dated 15th December 2013

சாது சந்யாசிகளுக்கும் ,ஏழை எளியவர்களுக்கும் தெய்வீக சக்தியால் விருந்து கொடுத்த சம்பவங்கள் எல்லா மத நூல்களிலும் இருக்கின்றன. இதோ எட்டு சுவையான சம்பவங்கள்:

தெய்வீக விருந்து 1
பஞ்ச பாண்டவர்களும் திரவுபதியும் 12 ஆண்டுகளுக்கு காட்டில் வசிக்க நேரிட்டது. அப்போது பல முனிவர்கள், யாத்ரீகர்கள் முதலியோர் அவர்களைக் காண வந்தனர். வீட்டுக்கு வந்தோரை ‘சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று சொல்லுவது பாரதப் பண்பாடு அல்லவா? காட்டில் ஏது உணவு? யுதிஷ்டிரருக்கு தர்ம சங்கடமாகப் போனது. தௌம்யர் என்பவர் சூரிய பகவானைப் பிரார்த்திக்கும்படி சொன்னார். அவ்வாறே தர்மரும் (யுதிஷ்டிரர்) செய்தார். சூரிய பகவான் வந்து அக்ஷய பாத்திரத்தை அளித்தார். திரவுபதி அதைக் கொண்டு குறைவில்லாத விருந்து படைத்தார். அக்ஷய என்றால் ‘அழிவில்லாத’, குறைவில்லாத’ என்று பொருள்.(ஆதாரம்: மஹாபாரதம்)

தெய்வீக விருந்து 2
ஏசு பிரான் கலீலி கடலைத் தாண்டி வறண்ட பகுதிக்குச் சென்றார். அவர் செய்த அற்புதச் செயல்களால் ஈர்க்கப்பட்ட 5000 மக்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர் சென்ற இடமோ வறண்ட பிரதேசம். அவருக்கு நெருக்கமான சீடர்கள் அவரிடம் வந்து 5000 பேரையும் அவரவர் ஊருக்குப் போகும்படி சொல்லுங்கள், நம்மிடம் உணவு இல்லை என்றனர். ஏசுவோ, எவ்வளவு உணவு இருக்கிறது ? என்று கேட்டார். இரண்டு மீன்களும் ஐந்து ரொட்டிகளும் தான் உள்ளன என்றனர். அதைக் கொண்டுவர கட்டளையிட்ட ஏசு, எல்லோருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார். எல்லோருக்கும் வயிறு நிறைந்தது. சீடர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது 12 கூடை மீன்களும் ரொட்டியும் மீதம் இருந்தன!!(ஆதாரம்: பைபிள் புதிய ஏற்பாடு)
feeding5000coloring

Jesus feeding 5000.

தெய்வீக விருந்து 3
மகரிஷி வசிஷ்டருக்கும், மாமன்னன் விஸ்வாமித்ரருக்கும் எப்போதும் மோதல்தான். ஒருமுறை காட்டில் இருந்த வசிட்டரைக் காண விஸ்வாமித்ரர் வந்தார். மாமன்னன் வந்தால் உபசரிக்க வேண்டுவது கடமை அல்லவா? வசிட்டரும் அன்போடு உபசரித்து, மன்னனின் படை முழுதுக்கும் அறுசுவை உணவு படைத்தார். விசுவாமித்திரருக்கு வியப்பு தாங்கவில்லை. நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற தெய்வீகப் பசுதான் வசிட்டருக்கு உதவியது என்பதைக் கேட்டு, அதைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டார்.

வசிட்டர் அதற்கு மறுக்கவே, பலவந்தமாக காமதேனுவைக் கைப்பற்றினார். வசிட்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காமதேனுவின் உடலில் இருந்து நூற்றுக கணக்கான வீரர்கள் வெளியே வந்து விசுவாமித்திரரின் படைகளைத் துவம்சம் செய்துவிட்டனர்(ஆதாரம்: ராமாயணம்)

தெய்வீக விருந்து 4
இஸ்ரேலியர்களை மோசஸ் அழைத்துச் சென்ற பாலைவனப் பகுதியில், ‘மன்னா’ என்ற உணவு வானத்தில் இருந்து கிடைத்ததாக பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. நாற்பது ஆண்டுக் காலத்துக்கு இந்த உணவின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்தனர். ‘மன்னா’ என்பது எகிப்திய ‘மென்னு’ ( உணவு) என்ற சொல்லுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆனால் ‘அன்னம்; என்பதே ‘மன்ன’ என்று திரிபடைந்ததாக நான் ஏற்கனவே “பைபிளில் சம்ஸ்கிருதம்” என்ற எனது ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். !!(ஆதாரம்: பைபிள் பழைய ஏற்பாடு)

moses

தெய்வீக விருந்து 5
ராமனைக் காண காட்டிற்கு வந்த பரதன், பரத்வாஜர் என்னும் முனிவரைத் தரிசிக்க அவரது ஆஸ்ரமத்துக்கு வந்தான். எல்லோரும் எங்கே? என்று முனிவர் கேட்டார். நான் பெரும் படையுடன் வந்து இருக்கிறேன். படைகளை அழைத்துவந்தால் செடி, கொடிகளூக்குச் சேதம் வருமே என்று கருதி தொலைவில் நிறுத்தினேன் என்றார். அவருக்கு முனிவர் அறுசுவை விருந்து படடைத்தார். புறச்சசூழல் பாதுகாப்பின் முன்னோடி பரதன்! ராமன் இலங்கையில் இருந்து திரும்பிப் போகையில், பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர் தனது மந்திர சக்தியால் அங்கிந்திருந்த அனைவருக்கும் உணவு கொடுத்தார்.!(ஆதாரம் வால்மீகி ராமாயணம்)

தெய்வீக விருந்து 6
மணிமேகலை என்பவர் மாதவியின் மகள். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்தப் பெண்ணிடம் அமுத சுரபி என்னும் மந்திரக் கலயம் கிடைத்தது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பதை அறிந்த மணிமேகலை, அமுத சுரபி மூலம் சிறைச் சாலை கைதிகளுக்கு உணவு படைத்தார். (ஆதாரம்:மணிமேகலை)

தெய்வீக விருந்து 7
திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்ச்சி இது. வேளாளக் குடியில் பிறந்த தரும சீலை என்பவர் மதுரையில் இருந்து எல்லோருக்கும் உணவு வழங்கி வந்தார். அவருடைய பெருமையை பாண்டிய நாடு முழுதும் அறியவேண்டி சிவபெருமான் ஒரு லீலை செய்தார். அவர்கள் நிலத்தில் விளைச்சலைக் குறைத்தார். அப்படியும் அந்த தம்பதிகள், கடன் வாங்கி தருமச் சாப்பாடு போட்டனர். கடன்காரர்கள் வந்து மொய்க்கவே சிவன் கோவிலுக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அங்கே அவர் முன் தோன்றிய ஆலவாய் அண்ணல் சிவபெருமான், ‘வீட்டுக்குப் போய் பரண் முழுதும் இருக்கும் நெல்லை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்யுங்கள்’ என்றார். அது எடுக்க எடுக்க வளரும் ‘உலவாக் கோட்டை’ என்றும் சிவன் அருளினார்.( ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

kamadhenu

Picture of Divine Cow Kamadhenu

தெய்வீக விருந்து 8
மதுரையின் மஹாராணி மீனாட்சிக்கும் சிவனின் அவதாரமான சுந்தரபாண்டியனுக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டனர். ஆனால் இன்னும் ஆயிரக கணக்கான மக்களுக்கான உணவு அப்படியே மிஞ்சி இருந்தது. சமையல்காரகளுக்கு மனக் கஷ்டம். அன்னை மீனாட்சியிடம் முறை இட்டனர். அவளோ அன்புக் கணவர் சுந்தரேஸ்வரிடம் முறையிட்டாள். ஒரு புன்சிரிப்பு முகத்தில் தவழ்ந்தது. பக்கத்தில் இருக்கும் குண்டோதரனை அழைத்து ‘போய், சாப்பீட்டு வா’ என்றார். அவன் சமையல் அறையில் நுழைந்த அடுத்த நிமிடம் அறையே காலி!!
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாடிய வண்ணம், அவன் மேலும் உணவு கேட்டான்! மலைத்துப் போய்விட்டனர் அரண்மனை சமையல்காரர்கள். மீண்டும் மீனாட்சியிடம் உதவியை நாடி ஓட, அவர் மீண்டும் சிவனிடம் ஓடினார். அவர் அன்னபூரணியை மனதில் நினைத்த அடுத்த நிமிடம் பூமியில் இருந்து சாப்பாடு வந்தது. இப்போது அவனுக்கு தாகம் வரட்டியது. ‘தண்ணீர் தண்ணீர்’ என்று அலறவே அங்கிருந்த நீர் எல்லாம் போதவில்லை. குண்டோதரனை அழைத்த சிவ பெருமான், ‘வை’ ‘கை’ என்று சொல்லி அவன் கைகளைக் கீழே வைக்கச் சொன்னார். அதில் இருந்து ‘வைகை’ நதி பீறிட்டெழுந்தது. அவனும் தாக சாந்தி செய்துகொண்டான். அவன் சாப்பிட்ட அன்னக் குழி மண்டபம் இன்றுவரை மதுரை கோவில் அருகே உள்ளது.(ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

Contact swami_48@yahoo.com