பாரதி தரிசனம் – Part 2

bharati new

ச.நாகராஜன்
Post No 743 dated 12th December 2013

வினா: புண்ணியன் யார்?
விடை: பக்கத்திலிருப்பவர் துன்பம் – தன்னைப்
பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி
வினா: எது சுகம்?
விடை: வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலை போம் – மேலறிவு
தன்னாலே தான் பெற்று, சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்

வினா: பூமியில் மனிதனின் கடமைகள் என்ன?
விடை: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல்
பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பலக் கூறி
அல்லா! யெஹோவா! எனத் தொழுதன்புறும்
தேவரும்தானாய், திருமகள், பாரதி,
உமை எனுந் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்

வினா: இதனால் விளையும் பயன்கள்?
விடை பயன் இதில் நான்காம்!
அறம், பொருள், இன்பம், வீடெனும் முறையே
வினா: (குழந்தையின் குரல்) வாழும் முறை எது?
விடை: உயிர்களிடத்தில் அன்பு வேணும்;
உண்மை என்றுதானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா.

வினா: தெய்வம் என்பது…?
விடை: உண்மையின் பேர் தெய்வம் என்போம்
வினா: தெய்வம் எப்போது எல்லோரையும் வாழ்த்தும்?
விடை: அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
வினா: பாரை உயர்த்திட வழி சொல்லுங்களேன்.
விடை: வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து — இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

வினா: கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, அரசனாக, சேவகனாக்க் கண்டீர்களே, அவனைப் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன்!
விடை: மழைக்குக் குடை; பசி நேரத்து உணவு;
என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்
வினா: கண்ணன் அருளிய கீதையின் சாரத்தை இரு வரிகளில் கூறுங்களேன்!
விடை: பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

வினா: ஆணும் பெண்ணும் நிகர் தானா?
விடை: ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!

வினா: நீங்கள் வேண்டுவது என்ன?
விடை: எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்

வினா: நீங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன?
விடை: இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி – முழு உலகின் முதற்பொருள் – அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
பொழுது வீணே கழிய இடம் கொடேன்.
லௌகிக கார்யங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.
மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வசக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகழச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மைம் இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, ந்டிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத் தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன்.இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்.

bharathy and Chelamma
Bharati with his beloved wife Chellamma

வினா: இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுங்களேன்.
விடை: அறமொன்றே தரும் மெய்யின்பம் என்ற
நல்லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்.
பிற விரும்பி உலகினில் யான் பட்ட
பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறனழிந்தென் மனம் உடைவெய்துமால்
தேசத்துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன்றே தரும் மெய்யின்பம்; ஆதலால்
அறனையே துணை என்று கொண்டு உய்திரால்

வினா: மஹாத்மா காந்தியைப் பற்றி….?
விடை: வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!!
வினா: உங்களுக்குப் பிடித்த உங்கள் பாட்டு ஒன்று கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: வந்தேமாதரம் என்போம்… எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்!

வினா: உங்கள் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றோம்; மகிழ்ச்சி; ஒரு தீர்க்க தரிசனம் சொல்லுங்களேன்!
விடை: எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமர நிலையை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க!
வந்தே மாதரம்; வந்தே மாதரம்; வந்தே மாதரம்!

முடிவுரை:
பாரதி தரிசனம் கேட்டீர்கள். மஹாகவி பாரதியாரின் கவிதை, கட்டுரைகளிலிருந்து எடுத்து இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு.

contact swami_48@yahoo.com
*******************************

Quotes from the Greatest Tamil Poet Bharati

bharathy 4

Compiled by Santanam Swaminathan; Post No 742 dated 11th December 2013.
11th December is Bharati’s Birth Day

Bharathiyar was born on 11 December 1882; Died on 11th September 1921.

Quotes about Bharati:

“Bharati kindled the souls of men by million to a more passionate love of freedom and a richer dedication to the service of the country”—Poet Sarojini Naidu

“Bharati is not only the poet of Tamil Nadu, he belongs also to the whole of India. His verses should be published in all the languages”—Jawaharlal Nehru, First Prime Minister of India.

Bharati’s vastitudes can be known only when the poems of the great one, are translated in to the languages of the world”- Poet Bharatidasan

“In the course of his evolution from Shellydasan as he used to describe himself earlier, to Saktidasan ( Devotee of Goddess Shakti), Bharati reflected the great change which transformed India, a British dependency into a self reliant power”- Prof. K.Swminathan

(Bharati was influenced by English poets Shelly and Byron. Later he changed his name from Shelly Dasan to Shaktidasan).

Bharati was the greatest of the modern Tamil poets. No one has surpassed him in the past 125 years. He was a great patriot, devoted Hindu and ardent supporter of Tamil Language. His poems touch all the subjects from Astronomy to Zoology. His poem on Halley’s Comet is beautiful. He has sung about all the domestic animals. He composed poems on world leaders like Mazini and Indian freedom fighters such as Gandhi, B.G.Tilak and Dadabai Nauroji. All Tamil poets and greatest Sanskrit poet Kalidasa– are all in his poems. His poems are vast. No one can translate his poems. The beauty of his pomes is lost in translation. But for Non Tamils it will give some idea about his poems. He was rightly called Amara Kavi ( Immortal Poet). He knew Tamil, English, French, Hindi and Sanskrit.

bharathy

Here are some samples from ‘Bharati Patalkal’ published by Tamil University, Thanjavur, Edited by Sekkizar Adippodi Dr T N Ramachandran. It contains English translations of Bharati poems by several eminent writers including Dr TNR.

Great Upanishads

Himachal is our mountain
The world hath not its fellow;
Ganga is our fountain
Pellucid, sweet and mellow.
Our Upanishads are twelve
Unknown to any other clime
Deep into our minds they delve,
And soar aloft sublime
Praise we Bharat, golden fair,
Our own land beyond compare! (Tanslated by TNR)
(In Tamil Mannum Imaya Malai engal Maliye——–)

On Liberty
1.Come, that we may sing
For Freedom’s bliss is ours;
Come, that we may dance
For Liberty is ours!

2.A Brahmin no more will be hailed
As “Lord, Lord” again
No more a white man in our land
As “Master” shall remain;
No more to those who receive
Of such their alms, we bow,
Or bend to those who us deceive
Never from Now!
(In Tamil aaduvome Pallup Paaduvome; Paarppaanai ayar endra kaalamum poche…………)

bharati

Our Mother
1.When was our mother born—
Who can hazard a guess?
Not even the learned that discern
What happened in the days of yore.

2.Though our Mother’s age
No one can compute,
Alone on earth does she shine
For ever in virgin bloom.

3.Three hundred million*
Her faces are;
But all, all of them
Throb with one vibrant life.

4. Eighteen are the languages
That she speaks
But animating them all
Is only one thought.

(First 4 stanzas of 12 stanzas translated by S Ramakrishnan ( SRK)
*When Bharati composed this poem the population of India was 300 million.
(In Tamil Thondru Nikaznthathu anaiththum Arinthitum…….)

On Halley’s Comet
1.Like a palm tree set on a millet plant,
With a growing tail on a little star,
You blaze forth in kinship with eastern moon
Oh, lustrous comet! I bid you welcome

2.You range over countless crores of Yojanas
They say your endless tail wrought of gas
The softness of which is indeed peerless

3. They say that yourtail touches the earth too
An you fare forth with no harm to the poor;
The wise talk of your myriad marvels.
( I have given only 3 stanzas from 7 stanzas of translation by Dr T N Ramachandran)
bharati color

In Praise of Saraswati
She dwells in the white lotus
And the sound the Vina makes;
In the poet’s heart whose song
Our inmost being takes;
She is the light at the end
Of the tunnels the Vedas explore;
And of the frank and compassionate words
Of sages, the essence and core.
(First stanza of the 10 Stanza poem translated by Prof.P S Sundaram)
(In Tamil Vellai Thaamarai Puuvinil IruppaL……….)

Advice to Children
Fear not at all my little child
When you meet with evil doers;
Smite them and kick them, oh my child!
And lo, at their face you shall spit.

When thronging sorrows assail us
We should drop not, my little child;
God is there full of compassion
To quell all troubles oh my child!
(Tanslation by Dr TNR; 14 stanza poem)

( In Tamil Paathakam Seyvoraik Kandaal Bayam Kollalaakaathu paappaa………Odi Vilaiyaatu Paappaa)

His poems Panchali Sabhadam (Panchali’s Vow from Maha Bharata), Kannan songs (about Lord Krishna) and Koel Paatu ( Blackbird’s Song) are all great additions to Tamil literature. His songs have been used in lot of Tamil feature films. His name is a house hold name in Tamil Nadu. He simplified the language and style and gave a new direction to Tamil. His name will live as long as the Tamil language exists. In Sanskrit they used to say ‘his name will be on earth as long as the sun and moon shines’. Let Bharati’s name shine as long as the sun and moon shine.)

392223_211304678950415_100002126524506_465523_1961550213_n

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
(11). வாழ்க்கையில் வெற்றிபெற பாரதி அட்வைஸ்

Contact swami_48@yahoo.com

வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’

bharati color

Post No. 741dated 10th December 2013 (11th December is Bharati’s Birth Day)

டிசம்பர் 11 தேசிய கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்; அவனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

லண்டன் சுவாமிநாதன்

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை கூடுவோம்”– பாரதி

நான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மாணவன். எங்கள் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், மஹா கவி பாரதியின் பரம பக்தர். பாரதியாரும் எங்கள் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்ததால், முன்னனியில் நின்று பாரதியின் சிலையையும் நிறுவினார் விஜி.எஸ். “பாரதியின் சிலையைச் சுற்றுங்கள் நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆவீர்கள், பாரதி பாடல்களைப் படியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று வகுப்புக்கு வகுப்பு புலம்பித் தீர்ப்பார்.

மாணவர்களாகிய நாங்கள் எல்லாம் பின் ‘பெஞ்ச்’சில் உட்கார்ந்துகொண்டு , வாத்தியாருக்கு பாரதி பைத்தியம் முத்திவிட்டது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ‘காமென் ட்’ அடிப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் அவர் மீது அளவுகடந்த மரியாதையும் உண்டு. இப்போது பாரதி பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெளிவாகிறது.

வேத மந்திரங்கங்களைப் போலவே பாரதி பாட்டிலும் சோகச் சுவை என்பதே இருக்காது. எல்லாம் ‘பாசிட்டிவ் திங்கிங்’– POSITIVE THINKING– பாடல்களாகவே இருக்கும். பாரதியும் தமிழை எத்தனை புகழ்ந்தானோ அத்தனை வேதங்களையும் புகழ்ந்திருக்கிறான். வேதத்தைச் சொன்னாலும் கேட்டாலும் எத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும். பாரதி ஒரு பெரும் தமிழ்க் கடல். அவனை ஆழம் காணும் அறிவோ சக்தியோ எனக்கில்லை. இதோ சில பாடல்களைப் படித்தால் நீங்களே அவன் பெருமையை எடை போடலாம்.

வெற்றி முழக்கம்

(இன் டெர்வியூ முதலிய போட்டிகளுக்குச் செல்லுகையில் இதைச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்):
“ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வமதேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறுமாறே

நல்ல சிந்தனை

(கீழ்கண்ட இந்தப் பாடலை தினமும் காலையில் சொல்லுங்கள்; நல்ல எண்ணங்கள் பெருகும்):
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

ஒளிபடைத்த கண்கள்
(கண்ணாடிக்கு முன் உங்கள் உருவத்தைப் பார்த்வாறே சொல்ல வேண்டிய பாடல்):

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

சிறுவர்களுக்கு சொல்லித் தரவேண்டியது
துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும்போக்கிவிடும் பாப்பா!

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

மனக் கஷ்டம் நீங்க
(மனதில் கஷடம் ஏற்பட்டால் படிக்க வேண்டிய பாரதி பாடல்)
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

இறைவா ! எனக்கு நீ தர வேண்டியது
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்கவேண்டும்
துணை என்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நன்றே!

அச்சமில்லை

(பயம் நீங்க பின்வரும் பாடலைப் படியுங்கள்)
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று இடி முழக்கம் செய்தார் அப்பர் பெருமான். ‘நாள் என் செய்யும் வினை தான்’ என் செய்யும் என்று முழங்கினார் அருணகிரிநாதர். ‘ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன் வியாழன்,வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’ என்று கோளறு பதிகம் பாடினார் சம்பந்தர்.
பாரதி சொல்கிறான்:

அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்”

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமுண்டோடா? – மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”

பாரதி வாழ்க ! தமிழ் வெல்க !!

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com

பாரதி தரிசனம்

Post No 740 dated 19th December 2013 (11th December is Bharati’s Birth Day)

By ச.நாகராஜன்

உரைச் சித்திரம்

முன்னுரை

கம்பீரமான ஆண்குரல் : மஹாகவி பாரதியின் தரிசனம்
நவயுகத்து நாயகனின் மேலாம் எண்ணங்களை அவரது கவிதைகள், கட்டுரைகளிலிருந்தே எடுத்துக் கோர்க்கப்பட்ட ஒரு மணியாரம். வினாக்களை நாம் கேட்க விடைகளை பாரதியார் அளிக்கிறார்.
வினா: மஹாகவி பாரதியாரே, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவே, காலத்தை வென்ற கவிக் குயிலே, புது யுகத்தின் எழுச்சியே, புதிய அறம் பாட வந்த அறிஞனே, உம்மைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

உம்மை அறிமுகப்படுத்திக் கொள்வீர்களா?

விடை: கவிராஜ சி.சுப்பிரமணிய பாரதி
சக்திதாசன் எனப் புகழ் வளரும் சுப்ரமண்ய பாரதி

வினா: உமக்குத் தொழில் யாது?
விடை: நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

வினா: தவறாக எண்ணாதீர்கள், உங்கள் கவிதையின் பெருமையை உங்கள் வாயாலேயே கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத கவிதை” என்று நன்கு, பிரான்ஸென்னும் சிறந்த புகழ் நாட்டிலுயர் புலவோரும், பிறரு மாங்கே விராவு புகழாங்கிலத் தீங்கவியரசர் தாமு மிகவியந்து கூறிப் பராவி யென்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்.

வினா: கவிப் பெருக்கினால் பயன் என்னவோ?
விடை: உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்

வினா: நாட்டிற்கு உழைத்தல் என்றீர்களே, நம் நாட்டைப் பற்றிக் கூறுங்களேன்.
விடை : “ஞானத்திலே பர மோனத்திலே உயர்
மானத்திலே அன்ன தானத்தி;லே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு”
“ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாடு”
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு!

வினா: நாட்டிற்கு உழைக்கும் விதம்?
விடை: இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே!
வினா: உங்களுக்குக் காளி மேல் பக்தி அதிகமா? பாரத தேவி மேல் பக்தி அதிகமா?
விடை: “காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும் ஒன்று”
வினா: உங்கள் வாழ்வை யாருக்கு அர்ப்பணம் செய்வீர்கள்?
விடை: தேவி நம் பாரத பூமி – எங்கள்
தீமைகள் யாவும் தீர்த்தருள் செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும் – அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி
வந்தே மாதரம் என்போம்

வினா: பாரத்த் தாயைப் பற்றி அற்புதமாகக் கவிதை படைத்துள்ளீர்களே இவை உருவாகக் காரணம் என்ன?

விடை: “இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மனகோசரமாகிய ஸௌந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதூஹலமடைகிறது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருத மட்டுமேயன்றி அசேதன பிரகிருதியும், புதிய ஜீவனையும், உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை ஒப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம் – ஓர் கிளர்ச்சி ஓர் தர்மம், ஓர் மார்க்கம், தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன.சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய ‘”தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெலாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சில கவிதை மலர் புனைந்து பாரத மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்.”

வினா: சொல் எப்படி இருக்க வேண்டும்?
விடை: மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!
வினா: சொல்லில் சிறந்த சொல்?
விடை: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

வினா: ஆங்கிலம், வடமொழி,ஹிந்தி, உருது, பிரெஞ்சு,லத்தீன், ஜெர்மன், வங்காளம், தெலுங்கு, அரபி, தமிழ் இப்படிப் பல மொழிகள் அறிந்திருக்கின்றீர்கள்.உங்களைக் கவர்ந்த இனிய மொழி எது?
விடை: யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்
வினா: தமிழனுக்கு உங்கள் அறிவுரை என்ன?
விடை: ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்;
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்!

வினா: (ஒரு குழந்தையின் குரல்) சாதிகள் உண்டா?
விடை: சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

வினா: நிற வேற்றுமை இருக்கிறதே
விடை : வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை; -அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரே தரமன்றோ!
இந்த நிறம் சிறிதென்றும் – இஃது
ஏற்றமென்றும் சொல்ல்லாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமையில்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!

வினா: எதைப் போற்ற வேண்டும்?
விடை: கைத் தொழில் போற்று
வினா: எதை எதிர்க்க வேண்டும்?
விடை: கொடுமையை எதிர்த்து நில்!
வினா: மேலோர் யார்?
விடை: வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக் கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்வோ
பூமியில் எங்கணும் மேலோர்

வினா: வேலை செய்ய வேண்டிய நேரம்
விடை: நாளெலாம் வினை செய்!
வினா: செய்தால்…?
விடை: நினைப்பது முடியும்!
வினா: (பெண் குரல்) நரகம் எது?
விடை: கவலைப் படுதலே கரு நரகம்மா!

வினா: சொர்க்கம்?
விடை: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே!
வினா: யோகம் எது?
விடை: ஊருக்கு உழைத்திடல் யோகம்

வினா: யாகம்?
விடை: நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
வினா: மெய் ஞானம்?
விடை: போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய் ஞானம்
– தொடரும்

Articles on Bharati by London Swaminathan posted earlier in this blog:

1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com

Tamil Story:As you sow, so shall you reap

tamil veeran

Post No 739 Dated 9th December 2013

Brahmin and the Princess

There was a Brahmin teacher who was teaching a princess in a kingdom. The princess was beautiful. The Brahmin teacher was planning to marry her by hook or crook. He was waiting for the right time to execute his evil plans.

As the years passed, one day she came of age. The king consulted the Brahmin teacher about auspicious time for the girl’s puberty ceremony. Scheming Brahmin told the king that her time of puberty was very bad and so it was not good for the king to keep her in the palace. If she is banished it would benefit both the king and the princess. He advised the king to put her in a basket and float her in the river so that she would find a safe place depending upon her luck. The king who believed the Brahmin completely did what he was told to do.

floating-box

The Brahmin went far way down stream and waited for the basket on the banks of the river. In the meantime a king from a neighbouring country came to the forest on the banks of the river for hunting. It was his lucky day that he caught a tiger quickly. He wanted to take it to his palace. As he felt very thirsty he went to the river to drink some water. When he saw a floating basket, he caught it and opened it with caution. To his surprise he found a beautiful girl, our princess! He wanted to marry her. She told him the full story.

The king wanted to revenge upon the man who did wrong to her. So he put the roaring tiger inside the basket and floated it in the river. At a distance, the Brahmin was eagerly waiting for the basket. When he saw it, he took it to a lonely place and opened it. The tiger sprang upon him and tore him to pieces.
This is a story from the Tamil work Viveka Chintamani. It is a book of verses with moral themes by an anonymous author. The moral of this story is ‘As you sow, so shall you reap’.

princess

Translated by London Swaminathan

Contact swami_48@yahoo.com

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது

princess

by london swaminathan

Post No738 Dated 9th December 2013

ஒரு பிராமணன் ஒரு ராஜாவின் பெண்ணுக்கு கல்வி கற்பித்துவந்தான். காலப்போக்கில் அவள் மீது காதல் கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று திட்டம் போட்டான். அது அந்த அப்பாவிப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் பூப்படைந்த காலத்தில் அவள் எதிர்காலம் பற்றி அந்தப் பிராமணன் இடத்தில், ராஜா ஜோதிடம் கேட்டான். தருணம் பாத்திருந்த அந்த பிராமணன், ராஜ குமாரத்தி பூப்படைந்த காலம் மிகவும் தோஷம் உடையது என்றும் ஆகையால் அவள் உயிரையும் நாட்டையும் காப்பதற்காக அவளை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுவதே பரிகாரம் என்றும் சொன்னான்.

மன்னனும் தன் உயிர், நாட்டின் எதிர்காலம், மகளின் நலன் எல்லாவற்றையும் மனதிற் கொண்டு அப்படியே செய்தான். அந்த பிராமணனோ ரகசியமாக ஆற்றில் மிதந்து வரும் பெட்டியைக் கவர தொலை தூரத்தில் ஆற்றின் கரையில் காத்திருந்தான். இதற்குள் வேறு ஒரு நாட்டின் அரசன் ஆற்றின் கரையில் இருக்கும் காட்டில் வேட்டை ஆடி ஒரு புலியை உயிருடன் பிடித்தான். ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கண்டு அதைத் திறந்து பார்த்தான். அழகான ராஜ குமாரத்தியைக் கண்டு ஆனந்தப்பட்டு அவளை மணம் புரிய எண்ணி தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அவள் எல்லா விசயங்கலையும் சொல்லி ஆற்றுக்குள் மிதந்தது எப்படி என்று விவரித்தாள். அதைக் கேட்ட ராஜா, அவளை அழைத்துப் போவதற்கு முன்னால், அந்தப் பெட்டிக்குள் தான் பிடித்த புலியை அடைத்து மீண்டும் ஆற்றில் மிதக்கவிட்டான்.

tamil veeran

தொலை தூரத்தில் ஆற்றங் கரையில் ஆசையுடன் காத்திருந்த பிராமணன், பெட்டியை மீட்டு, யாருக்கும் தெரியாத இடத்துக்குக் கொண்டுபோய் ஆவலுடன் பெட்டியைத் திறந்தான். புலி அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று தின்றது.

“மதியிலா மறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம் தன்னில் தோஷம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அருநரகடைந்தான் மாதே!”
(விவேக சிந்தாமணி)

விவேக சிந்தாமணியில் இது போன்ற பழங்காலக் கதைகள் அடங்கிய பாடல்கள் உள்ளன. இந்த நூலை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது!
தினை விதைதவன் தினை அறுப்பான்; வினை விதைதவன் வினை அறுப்பான்!!

Contact: Swami_48@yahoo.com

floating-box

இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!

baba stamps

ச.நாகராஜன்

இண்டியாவின் பாஸ்போர்ட்

அது 1969ஆம் ஆண்டு. “ஃப்ளவர் சைல்ட் ஜெனரேஷன்’ Flower Child Generation என்று அழைக்கப்பட்ட இளைஞர் குழுவினருள் பன்னிரெண்டு பேர் இறைவனைத் தேடி ஆன்மீக தாகம் கொண்டு அலைந்தனர். அவர்களுள் ஒருவரான ஹோவர்ட், பாபாவைக் காண புட்டபர்த்தி வந்தார். அவருடன் கூட வந்தவர் இண்டியா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்மணி. தூய்மையான மனம் படைத்த அவர் சேவை புரிவதிலேயே வாழ்க்கையைக் கழிப்பவர். அனைவருக்கும் சமைப்பது, மற்றவர்கள் ஆடைகளைச் சுத்தம் செய்வது, இருப்பிடத்தைப் பராமரிப்பது என்று சேவையிலேயே ஆனந்தமாக வாழ்க்கையைக் கழிக்கும் பண்பு அவரிடம் வேரூன்றி இருந்தது. குழுவில் இருந்த இன்னொருவர் ஜில். அமெரிக்கரான ஜில்லுக்கு எப்போதும் தியானம் செய்வதில் ஆனந்தம். கொசுவலையைக் கட்டிக் கொண்டு தனக்கென ஒரு குட்டி வீடாக தியான இடத்தைப் பாவித்து தியானம் செய்யும் அவரை யாரேனும் தொந்தரவு படுத்தி அழைத்தால் கொசு வலையிலிருந்து – தவறு, அவரது தியான கூடத்திலிருந்து வெகுண்டு வெளியே வருவார்.

பர்த்தியில் நாட்களைக் கழித்த அவர்களில் பலருக்கு விசா காலம் முடிந்து விட்டது.

ஒரு நாள் ஸ்வாமி அவர்கள் அனைவரையும் அழைத்தார் – யார் யாருக்கெல்லாம் விசா முடிந்து விட்டது என்று தெரிந்து கொள்ள! ஒன்பது பேர்கள் கையைத் தூக்கினர்- விசா இல்லை என்று அறிவித்து! இண்டியா கம்மிய குரலில், “ஸ்வாமி எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை” என்றார்.
ஸ்வாமி,” என்ன? பாஸ்போர்ட் இல்லையா? போலீஸ் வந்து உன்னை அரெஸ்ட் arrest செய்து விடும் தெரியுமா?”என்றார்.

“நான் உலகத்தைத் துறந்த அன்றே அதையும் துறந்து விட்டேன்!” என்றார் இண்டியா. வெகுளியான அந்தப் பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது! ஸ்வாமி புன்முறுவலுடன்.”பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் இல்லை! பைத்தியம் தான்! உடனே போய் அதற்கு ஏற்பாடு செய்!” என்றார்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று குழந்தைத்தனமாகக் கேட்டார் இண்டியா. ஸ்வாமி சிந்தனையில் ஆழ்ந்தார்.”உன்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்று போலீஸிடம் சொன்னால் அவர்கள் உன்னை அரெஸ்ட் செய்து விடுவார்கள்!” என்று ஸ்வாமி கூறியதைக் கேட்டதும் இண்டியா அழ ஆரம்பித்தார்.
“அழாதே! கவலைப்படாதே” என்றார் ஸ்வாமி தன் குழந்தைத்தனமான பக்தை அழ ஆரம்பிப்பதைப் பார்த்து.

“எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல். நான் தியானத்தில் இருந்தேன். என்ன நடந்த்தென்றே தெரியவில்லை என்று சொல்” இதைக் கூறி விட்டு ஸ்வாமி இண்டியா அனுப்புவதற்கான ஒரு கடிதத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜில்லுக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
postal-stamp-baba

ஸ்வாமி! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்

“ஸ்வாமி! அது பொய்! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!! நீங்களே எப்படிப் பொய் சொல்ல்லாம்!!!
சத்திய சாயியாக அவதரித்து சத்தியத்தின் திருவுருவமாகத் திகழும் அவர் பொய் சொல்லலாமா! ஜில் அழ ஆரம்பித்தார். அழுதவாறே அவர் சொன்னார்:”ஸ்வாமி! இண்டியா ஒரு நாளும் தியானம் செய்ததில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!”
இதற்கு ஸ்வாமி அளித்த உடனடி பதில் மனித குலம் அனைத்திற்கும் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய பதில்!

பக்தர்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்

“இதோ பார்! உனக்கு பொறாமை வந்து விட்டது! இந்தப் பெண்ணைக் காப்பது எனது கடமை, நீ உன் கொசுவலைக்குள் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் தியானம் செய்கிறாய். பிறகு கொசுவலையிலிருந்து கோபத்துடன் வெளியே வருகிறாய். உனது வெடுவெடுப்பான மூஞ்சியைப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் களைத்துப் போய்விட்டது! நீ தியானம் செய்யும் போது இண்டியா சமைக்கிறாள். உணவின்றி உன்னால் தியானம் செய்ய முடியுமா? உயிருக்கு ஆதாரமே உணவு தான்! எப்போதுமே அவள் சாதனை செய்கிறாள் – சேவை செய்து கொண்டே! அவள் உணவை எல்லோருக்கும் தயாரிக்கிறாள் இது தியானத்தை விட முக்கியமானது. என்னைச் சரணடைந்தவர்கள் அனைவரையும் காக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. இந்த அறையில் இருக்கும் மூன்று பேருக்கு மட்டும் தான் அவள் பாஸ்போர்ட்டை அவள் இழந்த போது அவளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். ஜில், இதை ஆராய்வது உங்கள் பிஸினஸ் இல்லை, சார்! அவள் தங்கமான மனம் படைத்தவள். அவளைக் காப்பது ஸ்வாமியின் கடமை! இது எனது தர்மம்! எனது கடமை! எனது பக்தர்களுக்காக என் அங்கங்களைத் தியாகம் செய்ய நான் தயார்! தேவையானால் என் கையைக் கூட வெட்டுவேன்,, எனது இரத்தத்தைக் கொடுப்பேன். ஏன், என் பக்தர்களுக்காக என் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பேன்!”

ஸ்வாமி பிரவாகமாகக் கொட்டிய பதிலுக்குப் பின்னர் அந்த அறையில் அமைதி நிலவியது. அனைவரும் பிரமித்து நின்றனர். ஜில் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

பக்தர்களுக்காக இறைவன் உருகி உயிரைக் கொடுக்கத் தயார் என்று அறிவித்த பிரகடனத்தை நேரில் கேட்ட அந்த மூவரும் எவ்வளவு பாக்கியசாலிகள்! ஹோவர்ட்டும், இண்டியாவும் மெய் சிலிர்த்து பகவானை வணங்கினர்.

ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு மனிதரையோ பற்றிய மனிதர்களின் மதிப்பீடு வேறு, இறைவனின் மதிப்பீடு வேறு என்பதை இந்தச் சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியது.

லெவின் ஹோவர்ட் எழுதிய ‘குட் சான்ஸ்ஸ்’ (Howard Levin, Good Chances) என்ற புத்தகத்தில் ஹோவர்ட் பதிவு செய்துள்ள இந்த சம்பவம் பகவானின் அவதார லீலைக் கடலில் ஒரு சிறிய துளி!

FDC baba

சூப்பர் ஸ்பெஷாலிடி லீலைகள்

கலி யுகத்தின் வாழ்க்கை முறைகளால் உணவில் கோளாறு,மன அழுத்தம் மற்றும் இதர காரணங்களினால் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஏராளமானோருக்கு தன் அவதார பணியாக மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஸ்வாமி அமைத்த மருத்துவ மனை தான் சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் Super Specialty Hospital.

உலகத் தரத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இறைவன் கரத்தின் அருள் தொடுதலுடன் மூன்று லட்சம் சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ மனையைப் பற்றி சித்தூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸில்க்கு குடியேறி அங்கிருந்து பர்த்திக்கு சேவை புரிய வரும் டாக்டர் சௌதரி ஒலெட்டி பிரமித்து உளமுருக எழுதுகிறார் தன் அனுபவங்களைத் தொகுத்து தனது “மை ஹோலிமேன் இஸ் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா” என்ற புத்தகத்தில்! (My Holyman is Avatar Bhagavan Sri Sathya Sai Baba). 17 ஆர்க்கிடெக்ட்டுகள் தினம் 15 மணி நேரம் பணி புரிந்து ஐந்து மாதங்கள் இதன் டிவைன் ஜாமெட்ரி டிசைனை – தெய்வீக வடிவ இயல் அடிப்படையிலான வடிவமைப்பை – முடிக்க அடுத்த ஏழே மாதங்களில் உருவான கட்டிட அற்புதம் இது!

சாயிக்னோஸிஸ்

25 ஆண்டுகள் அமெரிக்காவில் பிரபல இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக அறுவைச் சிகிச்சைகளைச் செய்து வந்த அவர் புட்டபர்த்தியில் இரு வார சேவைக்காகப் பலமுறை வந்து கடினமான அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஒரு முறை பாபா ஒருவரை அட்மிட் செய்து அவரை செக் செய்யுமாறு கூறினார்.சோதனையில் அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சௌதரி முடிவு செய்தார்.

ஆனால் மறுநாள் சௌதரியை நோக்கிய பாபா,” அவரை டிஸ்சார்ஜ் செய்து விடு! அவருக்கு ஒன்றுமில்லை” என்றார்.திகைத்துப் போன சௌதரி பகவானின் சொல்லை மீற முடியாமல் ஆனால் தன் மெடிகல் அனுபவத்தையும் நம்ப மறுக்காமல் அவரை மீண்டும் பரிசோதித்தார். என்ன ஆச்சரியம்! முதல் நாள் செய்த சோதனைகளின் அறிகுறிகளே அங்கு இல்லை.அவர் பூரண நலத்துடன் “பெர்பெக்டாக” இருந்தார். சௌதரி தனது ‘டயாக்னோஸிஸ்’ வேறு சாயியின் ‘சாயிக்னோஸிஸ் வேறு என்பதை உணர்ந்து அவரை அடி பணிந்து வணங்கினார். இன்னொரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சையை உடனடியாகச் செய்யுமாறு பகவான் அறிவுரை –அல்ல, அருளுரை – பகர்ந்தார். சௌதரியோ திகைத்துப் போனார். ஏனெனில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியாத உடல் நிலையில் அவர் இருந்தார். நிச்சயம் அவரின் உயிருக்கு ஆபத்து நேரிடும்!

ஆனால் பகவானின் மேல் பாரத்தைப் போட்டு அறுவைச் சிகிச்சையை செய்து முடித்தார். அவரே ஆச்சரியப்படும் படி அந்த இதய நோயாளி பூரண நலத்துடன் வீடு திரும்பினார். இது தனது அறுவை சிகிச்சையினால் அல்ல, பாபாவின் அருள் சிகிச்சையினாலேயே என்று உளம் நெகிழ உணர்ந்து அதிசயித்தார் உலகின் மிகச் சிறந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான சௌதரி ஒலெட்டி!

stamp baba project

பலவான் அனுமனுக்கே பலம்

65 அடி உயரமுள்ள அனுமனின் சிலையை பர்த்தியில் நிறுவ பாபா இந்தியாவின் தலை சிறந்த கட்டுமானக் கம்பெனிக்கு ஆணையிட்டார்.

அந்த நிறுவன எஞ்சினியர்கள் முறைப்படி மண் பரிசோதனையை மேற்கொண்டனர். ஆனால் மணலோ தொள தொள என்று (புதை குழி மண் போல என்று சொல்லும் அளவில்) கெட்டிப் படாமல் இருந்தது. பிரம்மாண்டமான சிலையின் எடை என்ன! அதை எங்காவது இப்படிப்பட்ட மண்ணில் நிறுவ முடியுமா! எஞ்சினியர்கள் மறுத்து தங்கள் ரிபோர்ட்டை பாபாவிடம் சமர்ப்பித்தனர். பாபா சொன்ன இடம் சரிப்படாது என்ற அவர்களின் நிலைப்பாட்டைக் கேட்ட பாபா அந்த இடத்திற்கு வந்தார். தன் காலால் அந்த இடத்தில் இரண்டு தட்டு தட்டினார். “ஊம்! இப்போது சரியாகி விட்டது. சிலையை நிறுவலாம்!” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். எஞ்சினியர்கள் திகைத்துப் போய் மீண்டும் மண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். என்ன, ஆச்சரியம்! முன்னர் பரிசோதனை செய்த அதே இடம் தான்.’! ஆனால் இப்போது பாறாங்க;ல் போல வலுவுடன் இருந்தது. ப;லவானான அனுமனுக்கே பலம் தந்த பாபாவின் அதிசயச் செயலை அருள் அற்புதமாக அனைவரும் உணர்ந்து பரவசப்பட்டனர்.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

ஒவ்வொரு கணத்தையும் ஒரு லீலையாக பக்தர்களுக்கு உணர்த்தி அதில் ஒரு அற்புத செய்தியையும் அவ்வப்பொழுது பொதிந்து வைத்தவர் பகவான்! அவரது லீலைகளை அனுபவித்து மகிழ்ந்த பக்தர்கள் அப்பரின் தேவாரப் பாடலையே நினைவில் கொள்வர்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும் இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!

என்று தில்லை நடராஜரின் ஆனந்தத் திரு நடனத்தைப் பார்க்க முடியுமென்றால் இன்னொரு மனிதப் பிறவியும் நிச்சயம் வேண்டும் என்றார் அற்புதர் அப்பர்.

பகவான் பாபாவின் லீலைகள் அடுத்த அவதாரமான பிரேம சாயி அவதாரத்திலும் தொடரும் என்பதால் அவர் வாழும் அந்த காலத்தில் அவருடன் வாழ வேண்டும் என்பதே பகவானின் அணுக்க பக்தர்களின் ஆசை. முத்தியைச் சற்று ஒத்தி வைத்து அவர்கள் ஒரு முகமாக ஆசைக் குரலில் கூவிக் கூறுவது இன்னொரு “ மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”!

சின்ன உண்மை
நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனியை நிறுவிய அதன் சேர்மன் ஏ,வி,எஸ் ராஜு மிகப் பெரிய வாழ்க்கை வரலாறாக பாபாவின் வரலாற்றை எழுதியுள்ளார். 1996-லிருந்து 2007- வரை எழுதப்பட்ட 32 தொகுதிகளைக் கொண்ட ஆனால் ஒரே பைண்டிங்கில் உள்ள இந்த நூலே உலகின் மிகப் பெரிய நூல் என்று கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனைப் பட்டியலில் இதை அறிவித்துள்ளது!

Contact swami_48@yaho.com

Sand Storms destroyed Two Tamil Towns!

sandstorm05 (1)Arizona

Sand storm in Arizona, USA

London Swaminathan
Post No. 735 by London Swaminathan dated 6th December 2013

I have already written several posts about the power of curses and boons. I wrote about the fire and rain created by Kannaki, Paattinathadikal, Adi Shankara, Tansen and Muthuswami Dikshitar. I have also explained in one of the posts about spontaneous combustion in which Thiru Gnana Sambandhar, Tiruppanalvar, Nandhanar, Ramalinga Swamikal, Andal and other Hindu saints disappeared without any trace. Now I give two stories about sand storms destroying two ancient Tamil towns by the curses of poets and saints.

Uraiyur, now part of Trichy in Tamil Nadu, was the ancient capital of early Chozas. They ruled from Uraiyur 2000 years ago. We have very clear references in Sangam Tamil literature. This city was famous for its court of justice. I have explained in one of my posts, why even today British judiciary wearing white wigs following the great Tamil Choza king Karikalan. Uraiyur became more famous because of this ‘white wig’ incident.

Uraiyur also became famous because of a cock attacking the Royal elephant. The king felt that this soil must have some magical qualities to give such courage to a cock to attack the elephant. He created a city in that place and made it his capital and named it Koziyur meaning the city of cock. This incident also was referred to in Tamil epics and later literature.

sandstorm07 (1)Texas
Sand storm in Texas, USA

Sand Storm in Uraiyur

Once upon a time a Choza king named Parantakan was ruling from Uraiyur. At that time a saint known as Sarama Munivar had a beautiful garden with chrysanthemum flowers. He used to offer it to Lord Shiva every day. A servant named Mavalan stole the flowers every day and gave them to the king. The king never stopped him stealing, even though he knew it was stolen goods.

When Sarama munivar came to know this theft, he was furious. His anger brought a big sand storm to the town and destroyed it with the king. The king and the town got buried under the sand. This legend was spread by word of mouth.

Since Parantakan is a general Sanskrit title which several kings bore, we never knew the period of his rule. Though archaeological excavations were done, we did not have any clear proof for this incident. Hindus believe that saints anger can bring down kingdoms. Tamil Veda Tirukkural also (264, 269,894,898,899) stresses this.

sandstorm10 (1)OZ
Sand storm in Australia

Poet’s Anger destroyed a town

Poet Kalamegam was famous for his poems with pun and irony. He lived in the fifteenth century. When he went to Thirumalairayan Pattinam, local poets clashed with him. They challenged him on various counts but he answered all their questions. But the local king was partial and gave all the credits to local poets. Kalamegam was very angry. He composed two songs in which he prayed for the destruction of evil people. As soon as he recited both the verses a big sand storm struck at the town and engulfed it in the sand.
Tamils believe that a certain genre of poems can kill people. They believed in word power. Like the Sanskrit mantras, Tamil poems also produced several miracles. Particularly the life history of Nayanmars and Alvars (Tamil Saivite and Vaishnavite saints) are full of anecdotes where even Gods obey the words of their devotees.

I have given the full Tamil verses in my Tamil post.

Contact swami_48@yahoo.com

sandstorm11 (1)sudan

Sand Storm in Sudan, Africa.

மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்

sandstorm11 (1)sudan

Picture of sand storm in Sudan

லண்டன் சுவாமிநாதன்

முனிவர்களோ புலவரோ சீறினால் சாம்ராஜ்யங்கள் சரிந்துவிடும். நகரங்கள் தீக்கிரையாகும். வெள்ளத்தில் தீயோர் அடித்துச் செல்லப்படுவர். திருவள்ளுவரும் இதைத்தெளிவாகவே கூறுகிறார் (894, 898, 899). பெரியாரைப் பகைப்பது எமதர்ம ராஜனை, “வாடா சண்டைக்கு என்று கை தட்டிக் கூப்பிடுவதற்குச் சமம்”– என்று அழகாக உவமிக்கிறார்.

ஒரு முனிவரின் கோபத்தால் உறையூர் அழிந்தது. ஒரு புலவர் கோபத்தால் திருமலைராயன் பட்டிணம் அழிந்தது. இதற்கு முன் நான் எழுதிய கட்டுரைகளில் ஆண்டாள், சம்பந்தர், வள்ளலார், திருப்பாண் ஆழ்வார், நந்தனார் முதலிய பல இந்து சாது, சன்யாசிகள் ஜோதியில் மாயமாய் மறைந்தது எப்படி? என்று விவரித்தேன். உளம் கடந்த செயல்கள் துறை விஞ்ஞானமும் இது முடியும் என்று ஒப்புக்கொள்கிறது. கண்ணகி மதுரையை அழித்ததையும், ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் அற்புதமாக அன்னையரின் சிதைக்குத் தீ மூட்டியதையும், தான்சேன் தீயை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும், முத்துசுவாமி தீட்சிதர் மழையை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும் தனித் தனி கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

sandstorm10 (1)OZ
Picture of a sand storm in Australia

இதோ மணல் புயல் உண்டாக்கிய இரண்டு சம்பவங்கள்:

உறையூர் என்பது தற்கால திருச்சியின் பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் முதலிய சக்தி வாய்ந்த சோழ மன்னர்களின் தலைநகரம். அங்கிருந்த நீதி மன்றத்தால் ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப் புகழ் பெற்றது. கரிகால வளவனைப் பின் பற்றி பிரிட்டிஷ் நீதிபதிகள் இன்றும் வெள்ளை முடி அணிந்து தீர்ப்புக் கூறுவதை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன். இந்த உறையூர் பற்றி சிலப்பதிகாரமும் சங்கத் தமிழ் நூல்களும் வேறு ஒரு அதிசயத் தகவலையும் தருகின்றன.

ஒரு சோழ மன்னன் யானையில் வருகையில் பட்டத்து யானையை ஒரு சேவற் கோழி யானையின் கண்களில் கொத்தி அதை அடித்து விரட்டியதையும் அதனால் இந்த ஊருக்கு கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதையும் அவை எடுத்துக் காட்டுகின்றன. அதன் பின்னர் அந்த வீர மண்ணில் ஒரு நகரம் உதயமாகி சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகர் என்னும் சிறப்பை அடைந்தது.
இப்படிப் புகழ் வாய்ந்த உறையூரில் பராந்தகன் என்னும் சோழன் ஆளுகையில் சாரமா முனிவர் என்பவர் ஒரு நந்தவனத்தை உருவாக்கி சிவபெருமானுக்காக செவ்வந்தி மலர்ச் செடிககளை வளர்த்து வந்தார். மிக அழகான அந்த செவ்வந்தி மலர்களை ஒரு ராஜாங்க ஊழியன் திருடிக் கொண்டுபோய் அரசனுக்குத் தந்தான். அவனும் அதை விரும்பவே இந்தத் திருட்டு, வாடிக்கையாக நடக்கத் துவங்கியது.

திருட்டுப் பொருள் என்று தெரிந்துமே அரசன் இப்படி வாங்கியது முனிவருக்குப் பெருங்கோபத்தை உண்டாகியது. பெரியார் சீறினால் சிறியார் பிழைப்பரோ? பெரும் மணல் புயல் உண்டாகி உறையூரை மணலுக்குள் மன்னனோடு புதைத்தது என்பது செவி வழிக் கதையாகும்.
sandstorm07 (1)Texas
Picture of a sand storm in Texas,USA

தற்காலத்தில் உறையூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோதும் இந்த சம்பவத்துக்கான தெளிவான சான்று கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘பராந்தகன்’ என்ற சம்ஸ்கிருத விருதைப் பல மன்னர்களும் சூடி இருப்பதால் எந்த பராந்தகன் என்பதும் தெரியவில்லை. எது எப்படியாகிலும் தீ இல்லாமல் புகையுமா? ஒரு காரணம் இருப்பதால்தானே இந்தக் கதைகள் இன்றுவரை உலவுகின்றன.

காளமேகம் அழித்த பட்டினம்

கவி காளமேகத்தை அறியாதோர் இல்லை. சிலேடைக் கவி சக்ரவர்த்தி; ஆசு கவி மன்னன். மழை போல் கவி பொழிபவன்; ஒரு முறை திருமலைராயன் பட்டினம் சென்றபோது அரசவையில் கவிபாடினார். பொறாமை கொண்ட ஆஸ்தான கவிஞர்கள் பல தடைகளை எழுப்பவே இவர் அத்தனைக்கும் விடை பகன்றார். ஆயினும் மன்னர் ஓரச் சார்பாக நடந்துகொண்டு தனது அவைக்கள புலவர்களே வென்றதாகக் கூறினான். அவமானம் தாளாத ஆசுகவி காளமேகம் அறம் பாடினார்.

வடமொழியில் மந்திரங்கள் உள்ளது போலவே தமிழிலும் ‘அறம் பாடுதல்’ என்ற வழக்கம் உண்டு. உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் உத்தம புலவர்களுக்கும் சாது சன்யாசிகளுக்கும் இந்த அபூர்வ சக்தி கிடைக்கும். அவர்கள் கரு நாக்கில் விழுந்தவர்கள் பிழைக்க முடியாது. கருப்பு நிற ராஜ நாகத்தைவிடக் கொடியது அவர்களின் சொல்லாற்றல்.

காளமேகம் பாடி முடித்தவுடன் மணல் புயல் வீசி ஊரையே அழித்தது!

இதோ அவர் பாடிய பாடல்கள்:

“செய்யாத செய்த திருமலை ராயன் வரையில்
அய்யா அரனே அரை நொடியில்—வெய்ய தழற்
கண்மாரியால் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரியால் அழியவாட்டு”

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்ற ஊர்
களைகளாய் நின்று கதறும் ஊர்— நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்”

sandstorm05 (1)Arizona

Picture os a sand storm in Arizona, USA
காளமேகம் ஆகட்டும், கண்ணகி ஆகட்டும் தீயோரை மட்டுமே அழிக்கும்படி பாடியது குறிப்பிடத்தக்கது. சாபங்களும் வரங்களும் என்ற எனது ஆங்கிலக் கட்டுரையிலும் பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள் என்ற தமிழ்க் கட்டுரையிலும் மேலும் பல அதிசய விசயங்களை எழுதியுள்ளேன்.
கல்மாரி, மண்மாரி கதைகள் இன்னும் பல உள்ளன. மீண்டும் எழுதுவேன். எகிப்திய பாரோவுக்கு எதிராக மோசஸ் செய்த அற்புதங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அற்புதங்கள் என்பவை எல்லா மதங்களுக்கும் பொதுவானவை.
contact swami_48@yahoo.com

காடுகள் பற்றி இந்துமதம்—-கேள்வி&பதில்

tapovan3

Tapovan area

Post No. 732 by London swaminathan

1.அர்ஜுனனும் கண்ணனும் அழித்த வனத்தின் பெயர் என்ன?
2.சீதையை ராவணன் சிறைவைத்த வனத்தின் பெயர் என்ன? அது எங்கே இருக்கிறது?
3. பிருந்தாவனத்துடன் தொடர்புடைய கடவுள் யார்?
4.முனிவர்கள் சுகப்பிரம்மத்திடம் புராணம் கேட்ட காடு எது? அது எங்கே உள்ளது?
5. எந்தக்காட்டுக்கு அப்பரும் சம்பந்தரும் சென்றனர்?

6. ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் காட்டின் பெயராலுள்ள பிரிவுகளின் பெயர் என்ன என்ன?
7.தண்டகாரண்யத்துக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு?
8.மனித வாழ்வின் நான்கு கட்டங்களில் வனத்துக்குச் செல்லும் கட்டத்துக்கு என்ன பெயர்?
9. காட்டின் பெயர் உடைய பெரிய உபநிஷத் எது?
10. புத்தர் முதல் பிரசங்கத்தை எங்கே நடத்தினார்?

gangotri glacier2

11. தமிழில் நாநிலப் பாகுபாட்டில் காடு, காட்டை சேர்ந்த இடத்துக்கு என்ன பெயர்?
12. தாருகாவனத்தில் என்ன நடந்தது?
13. ஸ்வேதாரண்யம் எங்குள்ளது?
14. பதரிவனத்தில் யாருடைய கோவில் இருக்கிறது?
15. வேதத்தில் காட்டிற்கு அதிதேவதை யார் என்று கூறப்பட்டுள்ளது?

16. காட்டில் உருவாக்கப்பட்ட வேதத்தின் பகுதிகளுக்கு என்ன பெயர்?
17. தபோவனம் எங்கே இருக்கிறது?
18. கோவில்களுக்காகப் பூச் செடிகளை வளர்க்கும் இடத்துக்கு என்ன பெயர்?

dandakaranya
Dandakaranya

ANSWERS:

1.காண்டவ வனம்
2.அசோக வனம்; இலங்கையில் இருக்கிறது
3. கிருஷ்ணன்
4. நைமிசாரண்யம். அது தற்போதைய டில்லியைச் சுற்றியுள்ள பகுதி. இதே பெயரில் ஒரு புனிதத் தலம் இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது.
5. வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு. இதைச் சுற்றியுள்ள காடுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது ஒர் ஊரின் பெயராக இருக்கிறது.

6. ராமாயணத்தில் ஆரண்ய காண்டம், மஹா பாரதத்தில் ஆரண்ய / வன பர்வம்
7.தண்டகாரண்யத்தில்தான் அரக்கர்களை வதம் செய்தான் ராமன். கர தூசணர்களை வதைத்தான்; சூர்ப்பநகையை அவமானப்படுத்தினான்.
8. வானப்ரஸ்தம் என்பது வனத்துக்குச் செல்லும் நிலை. அதற்கு முன் பிரம்மசர்யம், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலைகளும் வானப்பிரஸ்தத்திற்கு அடுத்தபடியாக சந்யாசம் என்ற துறவு நிலையும் உண்டு.
9. பிருஹத் ஆரண்யக உபநிஷத் (ஆரண்யம், வனம் என்றால் காடு என்று பொருள்)
10. மான்கள் பூங்காவில் (ம்ருக வனம்) நடத்தினார்
naimisaranya-pKS-543020

Naimisaranya

11. முல்லை என்பது காடும் காட்டைச் சேர்ந்த பகுதியும் ஆகும்; குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சேர்ந்த பகுதியும் ஆகும்
12. தாருகாவனத்தில் செருக்குற்ற முனிவர்களை இறைவன் அடக்கினான். சிவன் பிட்சாடனராகவும் விஷ்ணு மோகினி உருவத்திலும் சென்று அவர்களுடைய பலவீனத்தை உணரச் செய்தனர்.
13. ஸ்வேதாரண்யம் என்பதன் தமிழ்ப் பெயர் திருவெண்காடு. இது மயிலாடுதுறை- பூம்புஹார் இடையே இருக்கிறது
14. இமய மலையில் பதரிவனத்தில் பத்ரி நாராயணர் ( நர நாராயணர் ) கோவில் இருக்கிறது. பத்ரிவனம் என்றால் இலந்தைமரக் காடு என்று பொருள். வியாசர் வசித்த இடம்
15. வேதக் கடவுள் அரண்யானி

16. ஆரண்யகம் (சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கும் வேதத்தின் பகுதிகள்)
17. தபோவனம் என்பது தவம் செய்யக்கூடிய எந்தக் காட்டையும் குறித்தாலும் புகழ்பெற்ற தபோவனம் இமயமலையில் கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி பனிக்குகைக்கு மேலாக இருக்கிறது. இதன் அருகில் நந்தவனம் என்ற பகுதியும் இருக்கிறது.
18. நந்தவனம். இது இந்திரன் தோட்டத்துக்கும் பெயர் ஆகும்.

Earlier Quiz posted by me:

27 Star Quiz (In English and Tamil)
Hindu Picture Quiz-1 (In English and Tamil)
தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Hindu Tamil Quiz (in Tamil)
Hindu Tamil Quiz (in Tamil)-2
Hindu Tamil Quiz (in Tamil)-3
Hindu Tamil Quiz (in Tamil)-4
Hindu Quiz–1
Hindu Quiz–2
Hindu Quiz–3
Hindu Quiz–4

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com