மன்னிக்க வேண்டுகிறேன் !

Written by london swaminathan

Dated 9th January 2013.

 

மனிதன் செய்த தவறுகளை கடவுள் மன்னிப்பாரா?

மன்னிப்பார் என்றே பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்று அதை விலைக்கு வாங்குவோர் பாவங்களைக் கழுவலாம் என்று சொன்னவுடன் பெரிய எதிர்ப்பு கிளம்பியது; கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது. ரோமன் கத்தோலிக்க தலைமைப் பீடத்துக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்க்கொடி தூக்கி ப்ராடெஸ்டன்ட் பிரிவைத் துவக்கி வைத்தார்.

Picture of confession box inside St Peter Basilica in Vatican. I took it when I went to Vatican in December 2012.

 

மற்ற மதங்களில் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுப் பெறும் வாய்ப்பு உண்டு என்றாலும் விலைக்கு “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்கும் அளவுக்குப் போகவில்லை. ஆனால் சோதிடர்களும் பூசாரிகளும் பரிகாரம் செய்வதாகச் சொல்லி பணம் வாங்கினர். நம்பிக்கை இருப்போர் அதைப் பயன்படுத்தினர். பலர் அதனால் மன நிம்மதி அடைந்தனர்.

 

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் ரோமன் கிறிஸ்தவ மதம் போல ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் பெட்டிக்குள் ஏறி ரகசியமாக பாதிரியாரிடம் பேசத் தேவை இல்லை. கடவுளிடம் கெஞ்சிக் கேட்டால் போதும். இன்னும் ஒரு சிறப்பு,  துதிப் பாடல்களிலும் பூஜைகளிலும் மன்னிப்புக் கேட்கும் பகுதிகளும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் இப்படி மந்திரம் இருக்கிறது. பூஜை மந்திரங்களிலும் இப்படி இருக்கிறது. பலர் புனித யாத்திரை, நேர்த்திக் கடன்கள் மூலமும் பாவங்களைத் தீர்ப்பதுண்டு. எல்லா குளங்கள், ஆறுகள், கடல்கள், குறிப்பாக கங்கை ஆறு முதலிய நீர் நிலைகளுக்கும் பாவம் தீர்க்கும் சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

யஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தில் ஒரு பகுதி வருகிறது. யக்ஞ சாலயில் ஸ்த்ரீகளை அழைக்கும்கால் நீ எவனுடன் சேர்ந்தாய் என்று கேட்பது வழக்கம் அப்படி செய்வது வர்ண (ஜாதி) குற்றமாகும். அப்படிச் செய்திருந்தால் மனத்தினால் யக்ஞத்துடன் சேராதே. நீ பாபத்தைச் சொல்லிவிட்டால் அது குறைவாகிவிடும் உண்மையைச் சொல்லவில்லையேல் குடும்பத்துக்கு ஹானியாகும் (ச.பி. இரண்டாவது காண்டம், ஐந்தாவது பிராமணம்)—ஆதாரம்: யஜூர்வேதக் கதைகள்—எம்.ஆர். ஜம்புநாதன், பக்கம் 11.

Picture: A Hindu going to Batu Caves in Malaysia

Every saint had a past; Every sinner has a future

இந்து மதத்தின் ஒரு சிறப்பு பூர்வ ஜன்மங்களில் செய்த பாபங்களையும் போக்க வழி செய்வதாகும். மேலும் பாவங்களை மஹா பாவம், உப/சிறிய பாவம் என்று வகைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மன்னிப்பு பெறுவதாகும். ஆண்டுதோறும் ஒரு முறையாவது இப்படி (பிராமணர்க்ள்) வேண்டுவது உண்டு பிராமணர் அல்லாதோருக்கும் பிராமண புரோகிதர்கள் யாகம், யக்ஞம், பூஜை முதலியன செய்யும்போது இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதோ அந்தப் பெரிய மந்திரம்:

மஹா சங்கல்பம்:

அனாத்யவித்யா வாசனயா……………… என்ற மந்திரத்தில்

அனாதியான அவித்யா வாசனையால் வளர்ந்துவரும் இந்தப் பெரிய சம்சார சக்கரத்தில் விசித்திரமான கர்மப் போகில்  பலவிதமான இடங்களில் பலவாறாய்ப் பிறந்து ஏதோ ஒரு புண்ணிய செயலின் நலத்தால் , இந்த மானிட ஜன்மத்தில் பிராமணத் தன்மை அடைந்த எனக்குப் பல பிறவித் தொடரில் பிறவிதோறும் இதுவரை பால்யத்திலும் கௌமாரத்திலும், யௌவனத்திலும் மூப்பிலும் ஜாக்ர சொப்ன சுஷூப்தி நிலைகளில் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் கர்மேந்திரிய ஞானேந்திரிய வியாபாரங்களால் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் விளைந்தனவாய்த் தெரிந்தும் தெரியாமலும் செய்துள்ள மகா பாதகங்கள் மகா பாதகங்களுக்கு உடந்தையாய் இருத்தல் சம பாதகங்கள், உப பாதகங்கள் மனத்தைக் கரைப்படுத்தும் வகையில் பொருளீட்டி வாழ்க்கை நடத்தியது, தகுதியற்ற இடத்தில் கொடுத்தல் வாங்கல், ஜாதியின் மேன்மையைக் குலைக்கும் செயல்கள், விஹித கர்மங்களைவிட்டது, இன்னும் இவை போன்று ஒரு முறையோ தெரியாமல் பல முறையோ செய்யப்பட்ட எல்லா பாவங்களும் இப்போதே நீங்குவதற்காக இந்த க்ஷேத்திரத்தில் சரீர சுத்தியின் பொருட்டு பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்கிறேன்.

 

சங்கரர் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்த்லும் பாவ மன்னிப்பு பகுதி உண்டு.

Christian confession and blessing

இதோ மேலும் சில மன்னிப்புக் கேட்கும் துதிகளும் மந்திரங்களும்:

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பகவத் கீதை 18-66:

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

பொருள்: எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன்.கவலை வேண்டாம்.

 

****

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

Picture of Fire Walking for atonement

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

பூஜை முடிவில்:

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச

தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே என்று சொல்லி தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்வார்கள்.

பொருள்: பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் வலம் வருவதன் மூலம் நசித்துவிடும்

***

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர:

யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே

பொருள்: மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும்

***

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப க்ஷயகரம் விநாயக பாதோதகம் சுபம்

அகாலத்தில் மரணம் அடைவதையும், வியாதிகளையும் பாவங்களையும் தடுத்து சுகம் அளிப்பது விநாயகரின் தீர்த்தமாகும்.

When I went to Venice last month I took this photo in St Marco Basilica

இப்படி எல்லாம் பாவ மன்னிப்பு பெறுவது மீண்டும் பாவம் செய்வதற்காக அல்ல. ஒரு முறை தெரியாமல் செய்த பாவத்தை மறுமுறை செய்யமாட்டேன் என்று உறுதி எடுக்கவே இந்த மந்திரங்கள் உதவும்.

1.சூர்யச்ச மா மன்யுச்ச………………………என்ற சந்தியாவந்தன மந்திரத்தில்

அனைத்தையும் இயக்குவிக்கும் சூரியனும் , அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று என்னைக் காப்பாற்றட்டும். இரவில் மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும், ஆண்குறியாலும் எந்த பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் எந்த பாவம் உண்டோ அனைத்தையும் ராத்திரியின் அதிதேவதை நீக்கியருளவேண்டும். இங்கனம் பாவம் நீங்கிய என்னை  மோட்சத்திற்குக் காரணமாகிய சூர்ய வடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளாலும் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்கும் அருமையான மந்திரம் இது.

வேங்கடேஸ்வர சுப்ரபாதம்: க்ஷமஸ்த்வம் க்ஷமஸ்த்வம் சேஷ சைல சிகாமினே என்று பிழை பொறுக்க வேண்டுகிறோம். சுந்தரர் பாடிய தேவாரத்திலும் சிவனின் பெருமைகளக் கூறுகையில் கல்லால் அடித்தது, எச்சிலால் அபிஷேகம் செய்தது முதலிய எல்லாவற்றையும் பொறுத்தாயே, உன்னுடைய இந்தக் கொள்கைதான் என்னை உன்பால் ஈர்த்தது என்கிறார்.

இப்படி மனமுருகிப் பிரார்த்தித்து எளிய வழியில் பாவச் சுமைகளை இறக்கிவிடலாமே!

****

 

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

(English version of this article is published separately:- swaminathan)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும்—இவள்

என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய் —-(பாரதத் தாய் பற்றி பாரதி பாடியது)

 

இந்தியாவில் மனித இனம் தோன்றியதாக நமது புராண இதிஹாசங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இதை இது நாள் வரை மறுத்துவந்த வெளி நாட்டினர் இப்போது அவர்களின் தவற்றை உணரத் துவங்கிவிட்டனர்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று தமிழர்கள் சொன்னது உண்மையாகி வருகிறது.

“நியூ சைன்டிஸ்ட்” என்ற பிரபல வாரப் பத்திரிக்கை 2013ல் வரப்போகும் 10 வியத்தகு திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. நவம்பர் மாதம் வரப்போகும் அதிகப் பிரகாச வால் நட்சத்திரம் அதில் ஒன்று. அது பற்றி விவரமாக தனியே எழுதிவிட்டேன். அதைவிட முக்கியமான செய்தி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா அல்ல. ஆசிய நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுவும் இந்தியாவுக்குப் பக்கத்தில்!

மனித குலம் ஆப்பிரிக்காவில், குரங்கிலிருந்து படிப் படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் ஆனதாகவும் 60,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, முதலிய இடங்களுக்குச் சென்றதாகவும் இதுவரை கூறிவந்தனர். இப்போது அது தவறு, ஆசியாவில்தான் அவன் தோன்றினான் என்றும் இதற்கான சான்றுகள் பர்மா, சீனா, சைபீரியாவில் கிடைத்துள்ளன என்றும் “நியூ சைன்டிஸ்ட்” கூறுகிறது.

பர்மாவில் (மியன்மார்) 37 மில்லியன் ஆண்டு பழமையான மனித படிம அச்சுகள் (fஆஸ்ஸில்) கிடைத்துள்ளன. ஏற்கனவே போன வருஷம் சீனாவில் 15,000 ஆண்டுப் பழமையான சிவப்பு மான் குகை மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மனித இனம் வேறு எங்கும் காணாமல் மறைந்தது மர்மமாக இருக்கிறது.

3.2 million year old skeleton of Lucy (first woman) in Ethiopia

இவ்வாறு விட்டுப்போன தொடர்ச்சி (மிஸ்ஸிங் லிங்க்) இந்தோநேஷியாவில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் முதல் தடவையாக சைபீரியா ( ரஷ்யா ) குகையில் மனிதனின் மூதாதையரின் 50,000 ஆண்டுப் பழமையான எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் இருந்து டி என் ஏ எடுத்துப் பார்த்ததில் அதே டி என் ஏ தற்கால இந்தோநேசியர் ரத்தத்திலும் இருக்கிறது என்று தெரிந்தது. இவர்களை ஆராய்ச்சியாளர்கள் டெனிசோவன்ஸ் என்று அழைப்பர். இப்போதுள்ள பெரிய புதிர் சைபீரியா முதல் இந்தொநேசியா வரை மிகப்பெரிய பகுதியில் டெனிசோவன்ஸ் எப்படிப் பரவினர் என்பதாகும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பர்மாவில் 3.7 கோடி ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க மனிதத் தோற்றக் கொள்கை பொடித்து விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

ஆசியாவில் அதிக மக்கட்தொகை ஏற்பட்டு பல தடயங்கள் அழிக்கப்பட்டதாலும் முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படாததாலும் உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன. அடுத்த திடுக்கிடும் செய்தி இந்தியாவில்தான் மனித இனம் தோன்றியது என்று வெளி நாட்டினரே அறிவிக்கும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி: கி.மு 1320,

2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை,

3.HOW OLD IS INDIAN CIVILIZATION?

4.Double Headed Eagle: The Sumerian Indian Connection,

5.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu,

6.Naming a Country after a Man,

7.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvahu Dynasty,

8.Pandya King Who Ruled Vietnam

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com

விநாயகரின் ரசாயன யுத்தம்

 

ரசாயனப் போர் முறை (Chemical warfare) மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட போர் முறை. ஆனால் எதிரிகள் முதலில் அதைப் ப்ரயோகித்தால் தற்காப்புக்காக அதைச் செய்வதில் தவறில்லை. இதைத் தான நாம் கும்பிடும் பிள்ளையாரும் செய்தார்.

 

விநாயகரின் 16 முக்கிய நாமாக்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: 1.வால் நட்சத்திரம், 2.விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் (தூமகேது) ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை ( Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைக் கேள்வி கேட்கவே அவன் பிள்ளையார் மீதும் புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். அவரோவெனில் அத்தனை புகையையும் உள்ளுக்கு இழுத்தார். தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே அவருக்கு தூம கேது என்று பெயர்.

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

Comet Hale Bopp

2013ஆம் ஆண்டில் பெரிய செய்தியாக அடிபடப் போவது ஒரு புதிய வால் நட்சத்திரம் ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை சூப்பர் காமெட் (super comet) என்று அவர்கள் அழைக்கின்றனர். காரணம் என்னவென்றால் இது பௌர்ணமி நிலவை விட அதிகம் வெளிச்சம் உடையதாக இருக்கும். பகல் நேரத்தில் கூட இது நிலவை விடப் ப்ரகாசமாகத் தெரியும்.

இது பூமிக்கு மிக அருகில் நவம்பர் 28ஆம் தேதி வரும். ஒரு மாத காலத்துக்கு வான வேடிக்கைகளை நடத்திவிட்டு சூரிய மண்டலத்திலிருந்து கண் காணாத தொலைவுக்குச் சென்றுவிடும். இதன் பெயர் சி/2012எஸ்1 (C/2012S1). இதைக் கண்டுபிடித்த அமைப்பின் பெயரில் இதை இசான்(ISON) அல்லது ஐசான் என்றும் அழைப்பர். இதைப் போன வருஷம்தான் முதலில் பார்த்தனர். அது முதல் இதைக் கண்காணித்து வருகின்றனர்.

ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும். ஆனால் இது அப்படிப்பட்ட பாதையில் செல்லாமல் சுற்றி வராத பாதையில் செல்கிறது. இது ஊர்ட்(Oort Clouds) மேகப் பகுதியில் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 1997ஆம் ஆண்டில் வந்த  ஹேல் பாப் (Hale Bop) வால் நட்சத்திரமும் பெரிய வாலுடன் பூமியிலுள்ளோருக்குத் தெரிந்தது. புதிய வால் நட்சத்திரமோவெனில் நிலவைப் போல பன்மடங்கு ஒளிவீசும்.

Halley’s Comet

ஆபத்து வருமா?

வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.

இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:

பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென்  திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.

புறநானுற்றில கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229ல்:

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்

முடப்பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய

பங்குனி உயர் அழுவத்துத்

தலை நாள்மீன் திரிய…………..

கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)

 

அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.

Comet Hale Bopp

பாரதியாரின் வால் நட்சத்திரப் பாடல்

சாதாரண வருஷத்து தூமகேது (1910) என்ற பெயரில் பாரதியார் வால் நட்சத்திரப் பாட்டு இருக்கிறது.இது ஹாலியின் வால் நட்சத்திரம் வந்தபோது எழுதிய பாடல்:

தினையின் மீது பனை நின்றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்

கீழ்த்திசை வெள்ளியை கேண்மை கொண்டிலங்கும்

தூமகேதுச் சுடரே வாராய்!

எண்ணில் பல் கோடி யோசனை எல்லை

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்

புணைந்த நின்னொடு வால் போவது என்கின்றார்

மண்  அகத்தினையும் வால் கொடு தீண்டி

ஏழையர்க்கு ஏதும் இடர் செய்யாதே நீ

போதி என்கின்றார்; புதுமைகள் ஆயிரம்

நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்து பன் நூறாண்டாயின!

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய் சுடரே! வார்த்தை சில கேட்பேன்;

தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத்

தொல் புவியதனை துயர்க்கடலில் ஆழ்த்தி நீ

போவை என்கின்றார்; பொய்யோ, மெய்யோ?

ஆதித் தலைவி ஆணையின்படி நீ

சலித்திடும் தன்மையால், தண்டம் நீ செய்வது

புவியினைப் புனிதமாய்ப் புனைதற்கே என

விளம்புகின்றனர், அது மெய்யோ பொய்யோ?

ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை

மண்ணை நீ அணுகும் வழக்கினை யாயினும்

இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்

விளையும் என்கின்றார்; மெய்யோ பொய்யோ?

 

சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்

மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்

புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?

— தேசிய கவி சுப்பிரமணிய பாரதி

 

Comet Mc Naught

பி.பி.சி.( BBC Tamil Service) தமிழோசையில் சுவாமிநாதன் பதில்கள்

பி.பி.சி. தமிழோசை ப்ரொட்யூசராக (Producer) நான் வேலை பார்த்த காலத்தில் வினவுங்கள் விடைதருவோம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினேன். அந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் வினவுங்கள் விடைதருவோம் என்ற அதே பெயரில் புத்தகமாக வந்தது. அதில் வால் நட்சத்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில் இருந்து சில பகுதிகள்:

1.வால் நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தைச் (Solar System) சேர்ந்தவைதான். ஆனால் இவைகள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

2.இதற்கு தலை, தலையின் நடுவே உட்கரு, வால் (Head, Nucleus and Tail) என்ற மூன்று பகுதிகள் உண்டு. சூரிய மண்டலம் உருவான காலத்தில் கிரகங்களாக உருவாகாமல் எஞ்சிய விண்துகள்களே இப்படி தூமகேது ஆயின.

3.உட்கரு என்பது தூசியாலும் பனிக்கட்டியாலும் ஆனது. அதைச் சுற்றி வாயுக்கள் இருக்கும்

4.சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும்போது உட்கரு மட்டுமே இருக்கும். சூரியனை நெருங்கியவுடன் அது ஆவி ஆகி வாயுக்களும் வாலும் தோன்றும்

5.சூரியனை நெருங்கும்போது வால் பிரகாசமாகத் தெரியும், தொலைவில் செல்லுகையில் மங்கி மறைந்துவிடும்

6.எட்மண்ட் ஹாலி (Edmund Halley) என்பவர் கண்டு பிடித்த ஒரு தூமகேதுவுக்கு அவர் பெயர் சூட்டபட்டது. அது 76 ஆண்டுக்கு ஒரு முறை நமக்குத் தோன்றும்.

7.பூமியில் உயிரினங்கள் தோன்றவும் நோய்க்கிருமிகள் பரவவும் வால் நட்சத்திரங்கள் காரணமாக இருக்கலாம் என்று   சிலர் கருதுகின்றனர்.

8.மூன்றேகால் ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் என்கே (Encke)யும் இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் டெலாவ(Delavan)னும் ஆச்சரியம் நிறைந்தவை.

9.சில தூமகேதுக்கள் கிரகங்களின் ஈர்ப்புவிசையால் பிளவுபடும்

10.லட்சக் கணக்கில் இவை இருந்தாலும் அத்தனையும் பூமிக்கு அருகில் வாரா.

11.இவற்றின் தலை, வால் ஆகியன பல கோடி மைல் அகலம், நீளம் உடையவை.

12.இவற்றை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்களின் பெயரே சூட்டப்படும். ஒரே வால் நட்சத்திரத்தை மூன்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துச் சொன்னதால் அதற்கு டாகோ—சாடோ—கொசாகா (Tago—Sat0—Kosaka) என்று பெயர் சூட்டினர்.

13.சேகி (Seki) என்ற ஜப்பானியர் இரண்டு வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடித்துச் சொன்னதால் இரண்டுக்கும் அவருடைய பெயரையே சூட்டினர்.

வால் நட்சத்திரம் தோன்றினால் அரசர்க்கோ நாட்டிற்கோ தீங்கு நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.. நவம்பர் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஜோதிடர்களுக்கும் ஆரூடக்கார்களுக்கும் நல்ல ‘பிசினஸ்’ நடக்கும்!

For further detail contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

அபிநவ வராஹமிகிரர் பி.வி. ராமன்

B V Raman 1912- 1998

 

 

சாமா பி வி ராமன் (click here for the Tamil article)

 

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

madurai pillayar

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

உங்களுக்குப் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்குமா என்பதற்கு இதோ ஒரு சோதனை. ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள். இருபது கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அருள் உண்டு. குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தால் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் பல துதிகளை ஆழமாகப் படியுங்கள். அருள் சுரக்கும்.

1.பால்,தேன்,பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?

2.சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?

3.”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”—- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?

4.பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?

5.”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”—- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?

6.பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?

7.”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யா?

8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?

9.”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?

10.”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?

sangu pillayar

11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?

12.விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?

13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் அவ்வையார் கைலாசம் சென்றது எப்படி?

14.மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?

15.வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?

16.”.திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?

17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?

18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?

19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?

20.நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?

ganesh and vyasa

விடைகள்: 1.அவ்வையார் 2.விநாயகர் அகவல் 3.அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 4.வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம் 5.அருணகிரிநாதர் 6. திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி 7.முத்து சுவாமி தீட்சிதர் 8.பாரதியார் 9.கணேச பஞ்ச ரத்னம் 10.ரிக் வேதம் 11.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம் 12. சுமுகன், ஏகதந்தன், கபிலன்,கஜகர்ணன்,லம்போதரன்,விகடன்,விக்னராஜன், விநாயகன்,தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன்,ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன் 13.பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார் 14.இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில்,சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில்,தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில்,லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்,ஓஜார் விக்னேஸ்வரர் கோவில்,ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில் 15. சிறுத்தொண்ட நாயனார் 16.கந்தபுராணன் 17.திரு ஞான சம்பந்தர் 18.சித்தி, புத்தி தேவியர் 19. எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்) 20.திருமூலர்

8-ashtavinayak-temples-ganesha

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).ராமாயண வினா விடை (க்விஸ்) (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil சைவம் க்விஸ் (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

 

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் சூர்யநாராயண ராவ்

astro mag 2

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி           ஸ்ரீ சூர்யநாராயண ராவ் 

ச.நாகராஜன்

 

ஷிமோகாவுக்கு சென்ற போது அபூர்வ சந்திப்பு

 

1885ம் ஆண்டு ஒரு நாள். தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த பி.எல் படிக்கும் இளைஞர் ஒருவர் குப்பி ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கினார்.பங்களூர்  சென்ட்ரல் காலேஜில் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் படிப்பில் முதல் குழுவில் முன்னணி மாணவராக இருந்தார் அவர். ஆங்கிலப் படிப்பினால் ஹிந்து சாஸ்திரங்களில்  பகுத்தறிவுக்கு ஒத்த பௌதிக விஞ்ஞானத்திற்கு இடமே இல்லை என்று அவர் முடிந்த முடிவுக்கு வந்திருந்தார்.

 

 

அப்போது தான் எஸ்.எம்.ரயில்வே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே ஷிமோகாவுக்கு மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும்!ஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேர! ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்கு போக வேண்டும்”, என்று கேட்டார் அந்த இளைஞர்.

 

 

“எனது பெயர் சுப்பராய சாஸ்திரி. நான் ஷிமோகா செல்ல வேண்டும்.அங்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன்” என்றார் அவர்.

 

அடுத்த எட்டு நாட்களில் சூர்யநாராயணராவ் என்ற அந்த விஞ்ஞான மனப்பான்மை படைத்த இளைஞரின் வாழ்க்கைப் போக்கே மாறி விட்டது சுப்பராய சாஸ்திரி என்ற அந்த அற்புதமான மனிதரால்! உலகில் உள்ள எல்லா பௌதிக விஞ்ஞானத்துறைகளும் ஓர் உருவம் எடுத்து நடை பயில்வது போல இருந்த அவர் சூர்யநாராயணராவின் கண்களைத் திறந்தார்.

 

“அடுத்த 25 ஆண்டுகள் அவருடன் பழகினேன். எனது நீண்ட வாழ்வில் அவரைப் போல ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை. முதல் சில நாட்கள் அவருடன் உரையாடியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று பின்னாளில் பெரும் புகழ் படைத்த ஜோதிடரான பின்பு கூறினார் சூரியநாராயண ராவ்.

 

 

ஜோதிடக் கலையைத் தானே கற்றவர்

பங்களூர் சூரியநாராயணராவ் (1856-1937) மிகவும் புகழ் வாய்ந்த ஜோதிடராக சென்ற நூற்றாண்டில் விளங்கியவர். ஜோதிட சாஸ்திரத்தை யாரிடமும் பயிலாமல் தானே கற்றுக் கொண்டவர். பல்வேறு பழைய நூல்களைப் படித்து ஜோதிட நுட்பங்களில் அவர் நன்கு தேர்ந்து, ஜோதிடத்திற்கு தேசீய அளவில் ஒரு புது மதிப்பை ஏற்படுத்தியவர். வரலாறு, வாழ்வியல், இலக்கியம், சாஸ்திரம் என பல துறைகளிலும் மேதை. எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எல்லாவற்றிற்கும் மேலாக புகழ் வாய்ந்த ஜோதிட மேதை பி.வி.ராமனை உருவாக்கியவர். ஸ்ரீ பி.வி.ராமனுடைய பாட்டனார் தான் சூரிய நாராயண ராவ்.

 

1895 முதல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து  ஜோதிட சம்பந்தமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவர் உலக அறிஞர்களை வேத ஜோதிடத்தின் பால் பார்வையைப் பதிக்க வைத்தார்,சுப்பராய சாஸ்திரிகளின் நூல்களை அவர் வெளியிட்டார். 1914 மார்ச் மாதமே முதல் உலகப் போர் வரப்போவதை அவர் முன் கூட்டியே அறிவித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பல்வேறு ராஜாக்களும், மந்திரிகளும்,  வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். தன் வாழ் நாள் முழுவதும் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்த அவர் ப்ருஹத் ஜாதகம்,ஜைமினி சூத்திரங்கள் உள்ளிட்ட பழம் பெரும் முக்கிய நூல்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.

 

Astro mag 1

புகழ்பெற்ற நூல்களில் சில

 

அவரது நூல்களில் மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்:

ஸ்திரீ ஜாதகம்:பாரத நாகரிகத்தின் ஹிந்து வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமாக விளங்குபவள் பெண். பல்வேறு நூல்களிலிருந்து அற்புதமான தகவல்களைச் சேகரித்து அபூர்வமான இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். ஆண், பெண் ஜனனம், ஆண் பெண்ணாக மாறுவது, அர்தவ லக்னம், பெண்களின் குணாதிசயங்கள்,வாழ்க்கையில் துணையாக இருக்கும் மனைவி லட்சணம், புத்ரபாக்கியம், கல்யாணமாகாமல் இருக்கும் பெண்கள்,பெண்களின் ஆன்மீக சிந்தனை, பழக்க வழக்கங்கள், கிரக தசா புக்தி பலன்கள், சந்திர, சூர்ய, செவ்வாய், குரு, சுக்ர, சனியின் பாவ பலன்கள், ராஜயோகம் உள்ளிட்ட நல்ல யோகங்களின் விவரணம் ஆகியவை கொண்ட இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்டது.

 

 

ஸ்ரீ சர்வார்த்த சிந்தாமணி :இரண்டு தொகுதிகள். முதல் பாகம் 1899ம் ஆண்டும் இரண்டு மூன்றாம் பாகங்கள் 1920ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. வெங்கடேச தைவக்ஞர் இயற்றிய அற்புதமான இந்த நூலை சூரியநாராயண ராவ் மொழிபெயர்த்தார். திருமணம், யோகங்கள், தசா புக்தி பலன்கள், பாவங்களைப் பற்றிய பகுப்பாய்வு உள்ளிட்ட அரிய நூல் இது.

 

 

புகழ்பெற்றவரின் ஜாதகங்கள் : ஸ்ரீ ராமர், ஹரிச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர்,ஆதி சங்கரரிலிருந்து ஆரம்பித்து தற்கால மஹாராஜாக்கள் வரை உள்ள ஏராளமானோரின் ஜாதங்களைத் தொகுத்து வழங்கும் நூல்.1921ல் வெளிவந்தது.

 

ஜோதிடத்திற்கு புத்துயிரூட்டிய மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்.

ஜோதிட ஆர்வலர்கள் அவரது நூல்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வரியே விளக்கி விடும்.

*********

 

 

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

Shocked back to life: The theory holds that when patients have a near death experience their quantum soul is released from the body and re-enters the cosmos, before returning when they are revived

ஞான ஆலயம்

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! 

By ச.நாகராஜன்

      “மனிதனின் பிரக்ஞை அவன் மறையும் போது அழிவதில்லை; அது பிரபஞ்ச பிரக்ஞையில் சேர்கிறது; உடல் எடுக்கும்போது அது வந்து இணகிறது” என்று க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ் என்ற  புதிய அறிவியல் கொள்கையைக் கண்டுள்ள உலகின் பிரபல விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஹாமராஃபை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு கொண்டோம். ஞான ஆலயம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது அற்புதக் கொள்கையை விளக்கும் நமது கட்டுரை பற்றி மகிழ்ந்ததோடு அடுத்த மாதம் (மார்ச் 2013இல்) இந்தியாவில் ஆக்ராவுக்கு வரும் தனது விஜயம் பற்றியும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து ஹிந்து தத்துவத்தோடு ஒத்திருக்கும் அவரது அபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்தக் கட்டுரையில் தருகிறோம்.

 

பிரக்ஞை உடலில் எங்கு உள்ளது

கடவுளின் படைப்பில் கோடிக் கணக்கில் ஆச்சரியகரமான விஷயங்கள் உள்ளன.அவற்றில் மனிதனின் பிரக்ஞையும் ஒன்று.

பிரக்ஞை மனிதனின் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா, அல்லது வேறு இடத்திலா?

மூளையைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் போன பல நிகழ்வுகளில் அதைத் தாங்கி மனிதனின் மூளை பிரக்ஞையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தலை ஒரு சாதாரண மோதலுக்கு உள்ளாகி அதனால் பல நிமிடங்கள் அல்லது பல நாட்கள் கூட பிரக்ஞை இழந்த ஏராளமான சம்பவங்களையும் பார்க்கிறோம். உணர்வு திரும்பாமல் பல மாதங்கள் கோமாவில் இருக்கும் ஒருவரின் உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் பிரக்ஞை இல்லை!பிரக்ஞை இருந்து ஆனால் உடல் அங்கங்கள் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் இயக்கம் இன்றி இருக்கும் அனேகரையும் பார்க்க முடிகிறது.இந்த பிரக்ஞை தான் எவ்வளவு விசித்திரம்! இதை ஆராயும் இன்றைய முன்னணி விஞ்ஞானிகளுள் ஒருவர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்

Dr Stuart Hameroff of University of Arizona

ஸ்டூவர்ட் ஹாமராஃப்

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உணர்வகற்றலியல் எனப்படும்

அனஸ்தீசியாலஜியிலும் உளவியலிலும் பேராசிரியராக இருபத்தைந்து

வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் அங்கேயே சிறப்புப்

பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். 1996ஆம் ஆண்டிலிருந்து அரிசோனா

பல்கலைக்கழகத்தின் பிரக்ஞை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ்

ஆன்மா இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று அவர் கூறியது அறிவியல் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்

மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.

உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது.

அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும்

மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

கீதையில் (இரண்டாம் அத்தியாயம் இருபதாம் ஸ்லோகம்) வரும் அற்புதமான ஸ்லோகம் இது தான்:

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்

நாயம் பூத்வா பவிதா வா ந பூயா I

அதோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ

ந ஹந்யதே  ஹந்யமாநே சரீரே II

இதன் பொருள் : இந்த ஆத்மா எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை.ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது. என்றுமுள்ளது. நிலையானது.பழமையானது.சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி) நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:) தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ) காற்று உலர்த்துவதும் இல்லை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்)

Picture: Role of Quantum Physics in the navigation of birds

“ இதயம் துடிப்பதை நிறுத்தட்டும்; ரத்தம் ஓடுவதை நிறுத்தட்டும்; அப்போது மைக்ரோட்யூபூல் தனது க்வாண்டம் தன்மையை இழக்கிறது. ஆனால் மைக்ரோட்யூபூலின் உள்ளுக்குள் இருக்கும் க்வாண்டம் தகவலானது அழிவதில்லை” என்று அவர் தனது கொள்கையை அமெரிக்க ஸயின்ஸ் சேனலில் த்ரூ தி வோர்ம்ஹோல் (Through the wormhole) என்ற டாகுமெண்டரி மூலமாக விளக்கி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

 

யோக வாசிஷ்டம் கூறும் உண்மை

ப்ரக்ஞை பற்றிய ரகசியத்தையும் ஆன்மா அழியாது என்ற உண்மையையும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ள இவரை பிரபல ஆன்மீகவாதியான தீபக் சோப்ரா நேரடி பேட்டி கண்டார். அந்த ஒளிபரப்பு அனைவரையும் கவர்ந்தது.

தீபக் சோப்ரா தனது பேட்டியில் ஹாமராஃபை நோக்கி, “ யோக வாசிஷ்டம் என்ற முக்கியமான பழம்பெரும் வேதாந்த நூல்  ஒன்று இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ராமர் தனது குருவான வசிஷ்டரின் காலை பாரதத்தின் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயப்படி தொட்டு வணங்குகிறார். வசிஷ்டரோ.” நில். அப்படிச் செய்யாதே. நீ கடவுள். இப்படி ஏன் செய்கிறாய்! என்கிறார். அதற்கு ராமர்.” நான் மறந்து விட்டேன். நீங்கள் தான் நான் கடவுள் என்பதை எனக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” என்று பதில் கூறுகிறார். பின்னர் தனது முதல் பாடத்தை ராமருக்கு வசிஷ்டர் இப்படிப் போதிக்கிறார்: “உலகத்தில் நீ இல்லை; உலகம் உன்னுள் இருக்கிறது. நீ உடலில் இல்லை. உடல் தான் உன்னுள் இருக்கிறது. நீ மனத்தில் கூட இல்லை மனம் தான் உன்னுள் இருக்கிறது. நீ உன் பிரக்ஞையுள் நுழைகையில்  மனம், உடல் மற்றும் உலகத்தை நீ உருவாக்குகிறாய்” என்று கூறி விட்டு ஹாம்ராஃபை நோக்கி தீபக் சோப்ரா, “ நீங்கள் கூறும் கொள்கை இதையொட்டி இருக்கிறதே!” என்றார்.

அதற்கு ஹாமராஃப், “ ஆஹா! அது மிக அருமை, அற்புதமான வரிகள். பீட்டில்ஸ் “யுவர் இன்சைட் இஸ் அவுட் அண்ட் யுவர் அவுட்சைட் இஸ் இன்’ (உனது அகம் வெளியில் உள்ளது; உனது புறம் அகத்தில் உள்ளது)என்று கூறுவது போல உள்ளது” என்று பதில் கூறினார்.

“பிரக்ஞையைப் பற்றி நான் கூறி இருப்பது ஐஸ்பெர்க்கின் ஒரு முனை தான்; அதாவது பிரம்மாண்டமான கடலில் ஒரு துளி தான்”, என்று கூறியுள்ள ஹாமராஃப் இது பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்தால் இன்னும் ஏராளமான உண்மகைகளை அறிய முடியும் என்கிறார்.

பிரக்ஞை பற்றிய தத்துவத்திற்கும் ஆன்மாவுக்கும் அறிவியல் அளிக்கும் அங்கீகாரம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பெரும் சந்தோஷத்தை உலகெங்கும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,!

contact: swami_48@yahoo.com

**************

மாதத்துக்கு மூன்று மழை ஏன்?

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

பாரத நாடு முழுதும் மழை பற்றி ஒரே கருத்து நிலவுகிறது. ஒரு மாதத்தில் மூன்று தடவை மழை பொழிய வேண்டும். இக்கருத்து வேத, புராண, இதிஹாசங்களில் ஏராளமான இடங்களில் வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வரும் சில குறிப்புகளை மட்டும் காண்போம்.

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெண் (கல்லூரி மாணவி வயது—டீன் ஏஜ் கேர்ல்) இருந்தாள். அவள் பெயர் ஆண்டாள். அற்புதமாகக் கவி பாடிய அழகிய நங்கை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. வாரணம் ஆயிரம் உள்ளடக்கிய நாச்சியார் திருமொழியையும் திருப்பாவை முப்பதையும் செப்பிய பருவமங்கை. திருப்பாவையில் தெய்வீக கருத்துக்களை விட்டுவிட்டு ஆராய்ந்தால் வரலாறு, பூகோளம், தமிழ்ச் சங்கம், மழை, பாவை நோன்பு, தை நீராடல் என்று தமிழ் கலாசாரம் பற்றி நிறைய விஷயங்களை ஆண்டாள் அள்ளித்தெளித்திருப்பதைக் காணலாம்.

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று திருப்பாவை பாடினார்

ஆண்டாளுக்குத் தெரிந்தது இன்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. மாதத்துக்கு முன்று மழை ஏன்? அதிகம் பெய்தாலும் அவலம், குறைத்துப் பெய்தாலோ வறட்சி. இதைத் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் பத்துக் குறட் பாக்களில் பெய்துவிட்டார். கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்று பிட்டுப் பிட்டுவைத்து விட்டார்.

மூன்று மழை பெய்யக் காரணம் என்ன?

விவேக சிந்தாமணி இதை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

இப்போதெல்லாம் இப்படிப் பெய்வதில்லையே, ஏன்? என்று அந்தக் கவிஞரைக் கேட்ட போது,

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே! என்றார்

நல்லாட்சி, நல்ல மதம், நல்ல பெண்கள் இருந்த போது மாதத்துக்கு மூன்று மழை. கெட்ட ஆட்சி, கெட்ட பெண்கள் ( நிமிடத்துக்கு நூறு டைவர்ஸ் செய்யும் பெண்கள்) அறத்தை மறந்த அந்தணர் இருந்தால் வருடத்துக்கு மூன்று மழை என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார்.

வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= பத்தினிப் பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டார்.(இதைப் படித்துப் படித்துப் பெண்கள் சிரிப்பது அவர் காதில் விழுகிறது. ஆகையால் காவிரி நீர் மேட்டுர் அணைக்குள் வராதபடி தடுத்துவிட்டார்!!)

தமிழ் இலக்கணப் படி “கொழுநன் தொழுது எழுவாள்” என்பதை இப்படியும் அர்த்தம் செய்ய முடியும்= கணவர் ‘பெட் காப்பி’யுடன் வந்து மனைவியை தாயே எழுந்திரு, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும், நான் ஆபீசுக்குப் போகவேண்டும் என்று சொல்லும் காட்சி! (குறள் 55, அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்)

வறட்சி பற்றிய கருத்தும் ஒன்றே

வறட்சி பற்றியும் பாரத நாடு முழுதும் ஒரே கருத்து நிலவுகிறது. 12 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வறட்சி பற்றி ரிக் வேதம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திரு விளையாடல் புராணம் வரை எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. சூரியனில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கும் இந்த வறட்சிக்கும் தொடர்பு உண்டு. சரஸ்வதி நதி வற்றிப் போனதால் வறட்சியால் சிந்துவெளி நகரங்கள் மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் சுடுகாடாக மாறியது இப்போதைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

அந்தக் காலத்தில் அரசர்களைச் சந்த்தித்த ரிஷி முனிவர்கள் கேட்ட முதல் கேள்வி, “மன்னவனே உனது நாட்டில் மாதம் மும்மாரி ( மூன்று மழை) பொழிகிறதா?” என்ற கேள்விதான். மழை பொழியாவிடில் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் அழைத்தாலேயே போதும், அவர்கள் வரும் போதே மழை பொழியும். இந்தக் கருத்தையும் ரிஷ்ய ஸ்ருங்கர் கதை முதல் முத்துசாமி தீட்சிதரின் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல் வரையும் காணலாம். யாக, யக்ஞங்களால் மழை பொழியும் ( காளிதாசனின் ரகு வம்சம் 1-62) போன்ற கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையைக் கட்டுப் படுத்துவது தனி மனிதனின் ஒழுக்கமே என்று இந்துக்கள் நம்பினார்கள். ஒழுக்கம் தவறத் தவற இயற்கை உத்பாதங்கள் அதிகரிக்கும் என்பது கவிஞர்களின் ஏகோபித்த கருத்து.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக”

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)

தங்கம் விலை உயரும்

2013ஆம் ஆண்டில் தங்கம் விலை உயரும்

தங்கம் விலை உயரும் என்று ஒரு கட்டுரையைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக செட்டியார் சமூகத்தினர் இதை அறிந்து தங்கத்திலும் வீட்டு மனையிலும் மட்டுமே காசை முதலீடு செய்வார்கள். வீட்டு விலையும் தங்கம் விலையும் உயராத காலமே இல்லை. தங்கத்தில் உள்ள ஒரே சிக்கல் அதைத் திருடர்களிடமிருந்தும் பேராசைக்கரர்களிடமிருந்தும் காப்பாற்றுவதுதான். பல குடும்பங்கள் தங்க நகைகளுக்காக சண்டை போட்ட கதைகளை நாம் அறிவோம்.

இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொக்கத் தங்கத்தின் விலை பத்து கிராம் 31,200 ரூபாயில் நிற்கிறது. இது 2013 ஆம் அண்டில் 37,000 ரூபாயாக அதிகரிக்கும். இது 24 காரட் தங்கம்.

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் /சவரன் 23,000 ரூபாயாக இருக்கிறது. இது 27000 வரை உயரக்கூடும்.

2012 தங்க அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பல சுவையான விஷயங்கள் இருக்கின்றன.:

தங்கத்தின் விலை 2009 ஆம் ஆண்டிலிருந்து 60 சதவிகிதம் உயர்ந்து விட்டது. தங்கம் வாங்கும் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் இதில் பத்தில் அல்லது எட்டில் ஒரு பகுதிதான் கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 2500 டன் தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. இதில் 80 சதவிகிதம் நகை செய்யப் பயன்படுகிறது. ஏனைய 20 சதவிகிதம் மின் அணுக் கருவிகளிலும் மருத்துவத் துறையிலும் பயன்படுகிறது. பெரும்பாலான மின்னணுக் கருவிகளில் (எலெக்ட்ரானிக்) கொஞ்சம் தங்கம் இருக்கும். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், கார் பிரேக் சிஸ்டம்,  மொபைல் போன்களிலும் தங்கம் உண்டு.

மருத்துவத்தில் பல் கட்டும் பிரிவு, புற்று நோய் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வுகள், சூரிய செல்கள் ஆரய்ச்சி ஆகியவற்றில் தங்கம் பயன்படுகிறது. நமது உடலிலும் கடல் தண்ணீரிலும் தங்கம் உண்டு.

எகிப்து, இந்தியா, கிரீஸ், மாயா போன்ற பழைய நாகரீகங்கள் அனைத்தும் தங்கத்தைப் பயன்படுத்தின. கி.மு 2600 முதல் பழங்கால தங்க நகைகள் கிடைக்கின்றன.

சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பெரு, கனடா, கானா, இந்தோநேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் தங்க உற்பத்தியில் முதலிடம் வகித்தன.

உலகில் அதிக அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை வகித்து வருகிறது. 2011ல் 911 டன்னும், 2012ல் 800 டன்னும் இறக்குமதி செய்தது. அடுத்த ஆண்டு இது 600 டன்களாக குறையும் என்று உலோகத்துறை நிபுணர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

Gold coins issued by Raja Raja choza and Kumara Gupta

உலக மார்க்கெட்டில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நாலு சவரன். இது சொக்கத் தங்கம்=24 காரட் தங்கம். இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1666 டாலர். இது 2000 டாலராக உயரும் என்று எதிர்பார்த்தனர். 2012ல் அப்படி உயர்வில்லை. ஆனால் 2013ல் கட்டாயம் 2000 டாலர் ஒரு அவுன்ஸ் என்ற நிலை வரும் என்பது அவர்கள் கருத்து. இதற்குக் காரணம் ஆட்டம் காணும் மேலை நாட்டுப் பொருளாதாரமாகும். பங்கு மார்க்கெட், பாங்குகள் எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றன. ஆகையால் புத்திசாலி முதலீட்டாளர்கள் எல்லோரும் தங்கமே தங்கம் என்று புகழ்பாடத் துவங்கிவிட்டனர். பெரும்பாலான பாங்குகளும் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன.