Date uploaded in Sydney, Australia – 1 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மேலும் இரண்டு பெரிய, அழகிய கோவில்களுக்கு எனது விஜயம்
ஆஸ்திரேலியாவில், குறிப்பாக சிட்னி நகரிலுள்ள, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன் . இதுவரை சிட்னி சிவன், முருகன், கணபதி, வெங்கடேஸ்வரா , துர்கா உள்பட ஐந்து கோவில்களுக்குக் சென்றுவிட்டேன் இன்னும் சில கோவில்கள் இருப்பதாகவும் இரண்டு கோவில்கள் அடுத்தடுத்து இருப்பதாகவும் என்னுடைய மகன் சொன்னவுடன் நேற்று ஜனவரி கடைசி நாளன்று (31-1-2026) காரில் விரைந்தோம்.
பெரிய கோவிலின் போர்டில் துர்கா தேவஸ்தானம் என்று எழுதியிருந்தது; அது தமிழ்த் தென்றலோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. காரை நிறுத்திவிட்டு கோவில் வளாகத்துக்குள் காலடி வைத்தோம்.
சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! Surprise ! Surprise !
திருவள்ளுவர் சிலை! அருகில் கலைவாணி (சரஸ்வதி) சிலை!! மிகவும் சந்தோசம் ஏற்பட்டது ; காமெரா ‘கிளிக்’ ‘கிளிக்’ என்றது .
சிறிது நகர்ந்தோம் ; மேலும் சர்ப்பிரைஸ்!
சமண மதத் துறவி கோலத்தில் இளங்கோ அடிகள் ! கீழே ஆங்கிலத்தில் விளக்கம்.
இதை அடுத்து இருப்பது ஷீரடி பாபா கோவில்.
இரண்டு கோவில்களும் பக்கா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கிறது . கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று என் மகன் முன்கூட்டியே சொல்லிவிட்டான்; எந்த இடத்தில் நூற்றுக் கணக்காண டிரக்குகளும், லாரிகளும், பளுதூக்கும் கிரேன்களும் தென்படுகிறதா அங்கேதான் இரண்டு கோவில்களும் உள்ளன என்றான்; ஆகையால் லாரிகளைப் பார்த்தவுடன் கோவிலைத் தேடினோம். சிறிய கோபுரம் எங்களை எட்டிப்பார்த்தது . ஆனால் இரண்டு கோவில்களும் பிரம்மாண்டமான அமைதி தவழும் அற்புதக் கோவில்கள்.
துர்கா கோவில் வளாகத்தில் கார்களை நிறுத்தலாம் . மலை போல படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பெரிய சந்நிதியில் துர்கா தேவி; இரு புறமும் கணபதியும் முருகனும் குடிகொண்டுள்ள சிறிய சந்நிதிகள். மூன்று நான்கு பட்டர்கள் பக்தர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர் உபயதாரர்களுக்கான பூஜையை ஒருவர் செய்துகொண்டிருந்தார் . மொத்தத்தில் சுமார் 25 பேர் இருந்தோம்; ஆகையால் நல்ல தரிசனம்
இந்தக் கோவிலின் சிறப்பு நவக்கிரகம், சிவன் போன்ற தெய்வங்களுடன் அஷ்ட லட்சுமியையும் அழகாக பெரிய சிலைகளாக வடித்துள்ளனர். கோவிலைச் சுற்றி பெரிய திறந்த வெளிப் பிரகாரம் தமிழ் நாட்டுக் கோவில்களை நினைவு படுத்தியது. கோவிலுக்குள் தெய்வீக சூழ்நிலையை, சாந்நியத்தை, உணர முடிந்தது.
சில சீன பக்தர்களும் வந்திருந்தனர் ஏனையோர் தமிழ் பக்தர்கள்தான் .
கோவிலுக்கு வெளியே வந்தோம் பெரிய கான்டீன் மண்டபம் தென்பட்டது. சூடான இட்லி, வடைகளை விலைக்கு வாங்கிச் சாப்பிட்டோம் . மசாலா டீயும் கிடைத்தது
ஷீரடி சாய் பாபா கோவில்
ஆனால் அதற்கு முன்னால் அடுத்த கோவிலுக்கும் சென்று ஷீரடி பாபாவை வழிபட்டோம். மீண்டும் படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பிரம்மாண்டமான மண்டபத்தின் முக்கிய சந்நிதியில் ஷீரடி பாபா சிலை ; இனிமையான வேற்று மொழிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது; நல்லDivine Atmosphere தெய்வீக அட்மாஸ்பியர்! ஒரு வடக்கத்திய அர்ச்சகர் இருந்தார். ஒரு பத்து பேர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
கணபதி, அனுமார், சிவன் மூர்த்திகளும் இருந்தன. கோவிலின் சிறப்பு சிவலிங்கத்துக்கு நாமே ஜலத்தினால் அபிஷேகம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது; நாங்களும் ஓம் நமசிவாய மற்றும் திரயம்பக (மிருத்யுஞ்சய) மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்தோம்.
இங்கும் வெளியே கான்டீன் உள்ளது மெனு மட்டும் பார்த்துவிட்டு இட்லி வடை சாப்பிட தமிழ்க் கோவிலுக்குத் திரும்பிவந்தோம்.
இரண்டு கோவில்களும் பார்க்க வேண்டிய கோவில்கள். பூஜைகள், தியானம் செய்ய உகந்த கோவில்கள். கூட்டம் இல்லை என்பதும் மிக உயர்ந்த பிரம்மாண்டமான மண்டபங்கள் என்பதும் இரண்டு கோவில்களுக்கும் உள்ள சிறப்பு .
பல முத்து உதிர் செய்ப் பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
பெருமாளே. … பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின்
உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே.
*(மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இடையே போட்டியும் பொறாமையும் வெடித்தது . ஒவ்வொரு புரும் தன்னுடைய கவிதையே சிறந்தது என்று சொன்னபோது விவாதம் ஏற்பட்டது , அப்போது சிவபெருமான் சொன்னபடி, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது பாடலையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் பாடல்களைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் கவிதையே சிறந்தவை என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.- திருவிளையாடல் புராணம்.)
***
ரஷ்ய விண்வெளி வீரர் யுரி ககாரினை விட வேகமாக முதன் முதலில் பூமியைச் சுற்றியது முருகன்தான் !
கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு
நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,
விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*
நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு
இளையவனே,
வடவரையின் முகடு அதிர … வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா … ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,
***
சுக்ரீவன் 11 ருத்திரர்கள் பற்றி
இரவி குலத்தி ராசத மருவி … சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு
எதிர்த்து வீழ்கடு ரணமுக … (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,
சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு … சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,
நீண்முடி அரசது பெற்று வாழ்வுற … அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு
இதமொடளித்த ராகவன் மருகோனே … அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை …
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்
பரிவொடு நிற்கும் ஈசுர … அன்போடு எழுந்தருளியிருக்கும்
தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே.
***
சமணர்கள் பற்றி
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த
பெருமாளே. … தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய
சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து,
பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(சம்பந்தர், அப்பர் , அருணகிரிநாதர் பாடல்களில் குண்டர்களென்று வசைபாடப்படும் ஜைனர்கள் , அரசியலில் ஈடு பட்ட சமணர்கள் ஆவர். சமண மத்திலுள்ள பாமரர்கள் உலக மஹா சாதுக்கள் )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-2-2026 தைப்பூச நன்னாள் – சிறப்புக் கட்டுரை!
புண்ணியம், பாவம் என்பவை எவை? வள்ளலார் பிரான் அருளுரை!
ச. நாகராஜன்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் தோற்றம் 5-10-1823 ஜோதியுடன் கலந்த நாள் 30-1-1874
சமீப காலத்தில் வாழ்ந்து சன்மார்க்கத்தை நிறுவி ஏராளமான ரகசியங்களை உலகிற்கு அளித்தவர் வடலூர் ராமலிங்க அடிகளார் ஆவார்.
வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இவர் ஶ்ரீ முக வருடம் தை மாதம் 19ம் நாள் (31-1-1874) வெள்ளிக்கிழமை அன்று தன் அறையில் சென்று இறைவனுடன் ஜோதி மயமாகக் கலந்தார்.
அவரது பாடல்களையும் நூல்களையும் ஒவ்வொரு தமிழரும் படித்தல் வேண்டும்.
இங்கு அவரது உரைகளில் புண்ணியம் பாவம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
அருளை நாம் எப்படிப் பெறுவது?
புத்தி தத்துவத்தால் நன்மை, தீமையை விசாரிக்க வேண்டும்.
பெரியாரைத் துணை கொண்டு அவர் சொல்லும் திருப்பணியை இடையறாது செய்ய வேண்டும்.
நன்மை, தீமை என்பவை யாவை?
நன்மை தீமை என்பவை புண்ணிய பாவம் ஆகும்.
புண்ணியம் என்பது என்ன?
ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். இது புண்ணியம்.
பாவம் என்பது என்ன?
ஆரம்பத்தில் சுகமாயும் பின்னர் துக்கமாயும் இருக்கும். இது பாவம்.
புண்ணிய பாவங்கள் எப்படி நம்மை வந்து அடைகின்றன?
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இவை அடைகின்றன.
மேலும் மனத்தினிடத்தில் நால் வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும் ஆக பன்னிரண்டு வகையாக இவை நம்மை வந்து அடையும்.
அவை யாவை?
அவையாவன:
மனத்தினால் – 1. பரதார கமனம் பண்ண நினைத்தல் 2. அன்னியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல் 3. அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தல் 4. முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமைப் படுதல்.
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
வாக்கினால்:- 1.பொய் சொல்லல் 2. கோள் சொல்லுதல் 3. புறம் கூறல் 4. வீணுக்கு அழுதல் இவை நான்கும் வாக்கினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
தேகத்தினால் :- 1. பிறர் மனைவியைத் தழுவுதல் 2. புசிக்கத் தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல் 3. அன்னியர்களை இம்சை செய்தல் 4.தீங்கு செய்வோரைத் தடுக்காமல் அவர்களுக்கு உதவி செய்தல்.
இவை நான்கும் தேகத்தினால் உண்டாகும் பாவங்கள் ஆகும்.
இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
திருவாசகம், திருமந்திரம் பற்றி வள்ளலார்
திருவாசகம் என்பது மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
சாத்திரங்களில் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இது மொத்தம் எண்ணாயிரம்.
தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம்.
இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
இது போன்ற அபூர்வமான ஆயிரக்கணக்கான தெய்வீக விஷயங்களை
வள்ளலார் பாடல்களிலும் நூல்களிலும் பார்க்கலாம்.
இவற்றை இணையதளத்தில் பெறலாம்.
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்
வடலூர்
607303 என்ற விலாசத்திலிருந்து நூல்கள் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
Date uploaded in Sydney, Australia – 31 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals -Feb.1- Thai Pooasm festival in temples; 15- Maha Sivaratri.
Largest Sahasra Linga in Bihar
Full Moon/Purnima-1, ;New Moon/Amavasya-17;
Hindu Fasting Days/Ekadasi- 13, 27;
Hindu Auspicious Days/Muhurtha- 6, 8, 15, 16, 20 of February 2026.
Yaksha Prasna is a dialogue between Pandava king Yudhishthira and Lord of Dharma who appeared as a yaksha. It is found in the Vana Parva of Mahabharata . There are 124 questions answered by Yudhishthira . Here is the first batch.
***
February 1 Sunday
Question: What is more important than the earth itself?
Yudhishthira: One’s mother.
***
February 2 Monday
Question: What is higher than heaven?
Yudhishthira: One’s father.
***
February 3 Tuesday
Question: What is swifter than the wind?
Yudhishthira: The mind.
***
February 4 Wednesday
Question: More numerous than the blades of grass?
Yudhishthira: The thoughts in the mind.
***
February 5 Thursday
Question: What is the highest sanctuary of dharma?
Yudhishthira: Liberality.
***
February 6 Friday
Question: What is the highest sanctuary of fame?
Yudhishthira: A gift.
***
February 7 Saturday
Question: Of heaven?
Yudhishthira: The truth.
***
February 8 Sunday
Question: What is the most praiseworthy thing of all?
Yudhishthira: Skill.
***
February 9 Monday
Question: The most valuable possession?
Yudhishthira: Knowledge.
***
February 10 Tuesday
Question: The greatest treasure?
Yudhishthira: Health.
***
February 11 Wednesday
Question: The greatest happiness?
Yudhishthira: Contentment.
***
February 12 Thursday
What is the greatest wonder in the world? Every day, creatures die, yet those who remain live as if they are immortal.
***
February 13 Friday
Who is truly happy? He who lives within his means, is not in debt, and stays at home.
***
February 14 Saturday
What is the best way to cross the world? Knowledge.
***
Mrutyunjaya Mantra from the Yajur Veda
February 15 Sunday
By what does one become learned? By Srutis/ Vedas (that scriptures which are heard)
***
February 16 Monday
How one acquires something very great? By ascetics’ austerities (tapas)
***
February 17 Tuesday
How can one acquire intelligence? By serving the old
Brahmins (learned/saints)
***
February 18 Wednesday
What constituents the divinity of Brahmanas?
Study of Vedas (scriptures)
***
February 19 Thursday
What sleeps but does not close its eyes? Fish
***
February 20 Friday
What does not move after birth? Egg
***
February 21 Saturday
What which is without a heart? Stone
***
February 22 Sunday
Who is friend of the exile? Companion.
***
February 23 Monday
Who is friend of the householder? Wife
***
February 24 Tuesday
Who is friend of the sick? Physician
***
February 25 Wednesday
Who is friend of one who is about to die? Charity
Duty, guest, amrita, universe
***
February 26 Thursday
What is Amrita? Milk of cow is Amrita
***
February 27 Friday
What is highest shelter of happiness? Good behavior is the highest guard of happiness
அஞ்ச லெனவலிய மயில்மேல் நீ அந்த மறலியொடு உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய வருவாயே
XXX
பிப்ரவரி 25 புதன் கிழமை
(தேவர்கள் தொழும் உன் பாதங்களை தொழ அருள் புரி)
உம்பர் தொழும்பத கஞ்சம் தம் தஞ்ச மெனும்படி
என்றென்றுந் தொண்டு செயும்படிஅருள்வாயே .
***
பிப்ரவரி 26 வியாழக் கிழமை
இனிமையில் ஒன்றாய்ச் சென்று உட்படும் மனம் உன் தாட்கு
அன்பு உற்று இயல் இசை கொண்டு ஏத்து என்று உள்
தருவாயே … இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக.
***
பிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை
யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுக உயிர் மங்கு பொழுது
பூளைச் செடியின் பூ (Aerva lanata) சிறியது, வெள்ளையாக, தேங்காய் பூ போன்ற அமைப்பைக் கொண்டது, எனவே இது தேங்காய்ப்பூக் கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பொங்கல் திருவிழாவின் போது காப்புக் கட்டவும், தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதன் பூக்கள், இலைகள் மருத்துவ குணம் கொண்டவை, இலைகள் ரசம் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூளைப்பூவின் வேறு பெயர்கள்: பொங்கப்பூ, சிறுபீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை.
***
ராவணன் ஒரு முட்டாள் !
ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள்
அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே தொட்ட கொண்டல்
உருவு ஆகி … குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும்,
சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத்
திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய
மருமகன் ஆகி … மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர்
மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,
–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை
***
மலையான் மகளஞ்சவ் வரை எடுத்தவ் வலியரக்கன்
றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்
–திருவேணுபுரம்
***
இசைகயிலை யையெழுதரு வகையிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி
இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்.
–திருச் சிவபுரம்
***
திரி நயனி, திரி புவனி !
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி … மாசு
இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச
எழுந்தருளும் குமரி,
கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி … கெளரி, காளி,
பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி,
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை
அருள்பாலா … நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,
***
காசுக்காக கற்பகமே என்று பாடும் கவிகள் !
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே
ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி … தாராள மனத்துடன்
ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி,
நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே
ஆன பாழ் உடலை நம்பி … தினமும் (இங்ஙனம் பிச்சை எடுக்கும் காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி,
உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே
போக மீளவும் உழன்று திரிவேனோ … உயிரைப் பயனிலதாக
நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ?
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன
வேளே … திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே,
மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.
எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
***
தயிர்த் திருடனும் தனுஷ்கோடியும்
தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ
வனிதையர்கள் தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே …
தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே,
தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்
தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே … (சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி,திருவிடை மருதூர், வேதாரண்யம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே,
****
மனிதர்கள் பற்றி பாரதியாரும், அருணகிரியாரும் போட்ட கணக்கு!
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத …… பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல …… மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத …… மருள்வாயே
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் … ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய
மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் … மத
ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி … இந்த
உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து,
உற நமன் நரகில் வீழ்வர் … இறுதியாக அனைவரும் யமனுடைய
நரகத்தில் சென்று வீழ்வர்.
அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி … அந்த நிலை
முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,
இருவினை கடலுள் ஆடி மறைவர் … நல்வினை, தீவினை என்ற
இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.
இனனைய கோலம் அதுவாக … இத்தகைய மனிதர்களின் கோலம்
அவ்வாறாக, மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு … (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து,
வடிவுற அருளி பாதம் அருள்வாயே … நல்ல நிலையை நான்
அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
***
பாரதியாரும் காளி தேவியிடம் சொல்கிறார் !
வேடிக்கை மனிதன் போல் வீழ்வே னென்று நினைத் தாயோ?-
தேடிச் சோறுநிதந் தின்று –
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி –
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப் போலே –
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?– பாரதியார் பாடல்
—subham—
Tags- பழனி ,திருப்புகழில், அரிய செய்திகள், பாரதியார் , அருணகிரிநாதர் , வேடிக்கை மனிதர் , பூளைப்பூ , முட்டாள் இராவணன், சொல் அழகும், பொருள் வளமும்- Part 6
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குரு பூர்ணிமா அன்று ஷீர்டி சாயி பாபா கொடுத்த கட்டளை!
ச. நாகராஜன்
1909ம் ஆண்டு பாபாவின் நித்ய பூஜையும் ஆரத்தியும் ஆரம்பமானது.
ஆனால் குரு பூர்ணிமா அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
அந்த வருடம் குரு பூர்ணிமா வந்தது. பாபா அணுக்கத் தொண்டரான தாதா கேல்கரை தன்னிடம் வரச் சொன்னார். அவரும் வந்தார்.
அவரிடம் பாபா, “இன்று குரு பூர்ணிமா தினம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன? உனது பூஜை சாமான்களை எல்லாம் கொண்டு வந்து குருவுக்கு பூஜை செய்” என்றார்
அவ்வளவு தான், ஓடோடிச் சென்ற கேல்கர் பூஜா திரவியங்களைக் கொண்டு வந்து வெகு விமரிசையாக குரு பூஜையைச் செய்தார்.
அன்று ஆரம்பித்த குரு பூர்ணிமா தினத்தன்று செய்யும் குரு பூஜை இன்று வரை தொடர்கிறது.
ஆனால் ஹெச். வி. சாதே என்ற பக்தர் சிவராத்திரி தினத்தன்று நள்ளிரவில் வழிபட வந்த போது பாபா வேண்டாம் என்று கூறி அதை மறுத்து விட்டார்.
ஒரு முறை பாபா கூறினார் இப்படி:
“இந்த உலகம் வேடிக்கையானது. எல்லோரும் எனக்கு வேண்டியவர்களே. எல்லோரையும் சமமாக நோக்கி நான் சமமாக பாவிக்கிறேன். ஆனால் சிலரோ திருடர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும்? மரண வாயிலில் இருக்கும் அவர்கள் மற்றவர்களைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்! அவர்கள் எனக்கு மிகுந்த வேதனை தருகிறார்கள். நான் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறேன். கடவுள் மிகப் பெரியவர். அவர் மிகவும் சக்தி வாய்ந்த தனது அதிகாரிகளை எங்கும் கொண்டிருக்கிறார். அவர்களிடம் அனைவரும் திருப்தியுடன் இருக்க வேண்டும்.
நான் மிகவும் சக்தி வாய்ந்தவன். நான் இங்கு எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறேன்.
பாபா இப்படி தன்னைப் பற்றி அபூர்வமாகக் கூறிய தருணம் இது.
அவர் ஹிந்துக்களையும், இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் சமமாகவே பாவித்தார். அருள் புரிந்தார்.
இதை விளக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
29-8-1835 அன்று அவதாரமெடுத்த ஷீர்டி சாயிபாபா 15-10-1918 அன்று சமாதி எய்தினார்.
அதுவரை அவரது வாழ்வில் ஏராளமான அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.
படிக்கப் படிக்கத் திகட்டாத பல ஆன்மீக ரகசியங்களை விளக்குபவை அவை என்பது மட்டும் திண்ணம்!
Date uploaded in Sydney, Australia – 30 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In the Tiruppugaz composed by 15th century Tamil poet cum saint Arunagirinathar, we come across interesting detail about the structure of an atom.
All of us know the first reference to an atom comes in 2300 Ganada’s Vaishesika sastram. Later we come across the famous quote from the Katopanishad and other scriptures
“Anor aneeyaam mahatho maheeyaam” (अणोरणीयान् महतो महीयान्) is a profound Sanskrit phrase from the Vedic tradition, most famously found in the Katha Upanishad (1.2.20). It translates to: “Smaller than the smallest, greater than the greatest.” It occurs in other Upanishads as well.
This is translated and used in Tamil hymns as well.
But Arunagirinathar’s statement is different from this अणोरणीयान्महतोमहीयान्. He says
“aNuvil aNu ena niRainthittu ninRathu oru samprathAyam uthayam ezha iruLvi dinthu: and an atom within an atom” Only two hundred years ago the western scientists discovered the structure of an atom. Arunagiri said it five hundred years ago. His statement an atom within atom means Hindus know what is inside an atom. I am not making a sweeping statement without any proof.
Before Arunagirinathar’s time, three poets have sung about splitting an atom and the energy it produces. Avvaiyar and Idaikadar, two earlier poets said when atom is split seven oceans can be punt into it. They stated it when they praised the book Tirukkural.
Splitting an Atom
Another poet Tirumular of ninth century CE gives more details in the following poem:
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
He tried to explain the size of an atom to a layman.
***
Following Tiruppugaz has other details about 14 worlds and 96 Tatvas
athalam vithalam muthal anthath thalangaL ena: All the seven lower worlds* including athalam, vithalam and others,
avani ena amarar aNdaththu akaNdam ena: this earth, all the seven upper worlds* of the celestials,
akila salathi ena eN thikku uL viNdu ena: all the oceans, all the mountains in the eight cardinal directions,
angi pAnu amutha kathirkaL ena anthiththa manthram ena: the Fire God, the Sun and the Moon with cool radiation (the Three Effulgences), the ManthrAs that mutually intermingle,
aRaiyum maRai ena arum thaththuvangaL ena: the VEdAs that are chanted impressively, the rare tenets** (96 ThathvAs)
aNuvil aNu ena niRainthittu ninRathu oru samprathAyam uthayam ezha iruLvi dinthu: and an atom within an atom; – likewise, It is something omnipresent; in order that such a Principle of Truth emerges in my heart, destroying the darkness of ignorance,
akkaNam thanil iruthaya kamalam mukizham kattu avizhnthu uNarvil uNarum anupavam manam petRidumpadiyai: and at that very moment, for the lotus bud of my heart to blossom, and to enable me to attain enlightenment that can be experienced only inwardly,
vanthu nee mun uthava: You have to manifest before me graciously to help so that
iyalin iyal sem sol prapantham ena: a work of art is composed with sweet words of love,
mathura kavikaLil manam patRirunthu pukazh uriya: rendered in the form of musical poems, with utmost devotion, in lilting meters, to be known as Thiruppugazh (Glory of the Lord); having obtained Your blessings for such a great honour,
adimai unai anRip prapancham athai nampuvEnO: will this servant of Yours ever trust in any other aspect of this world excepting You?
thakaka thakathakaka thanthaththa thanthakaka enRuthALam: To (this) meter,
pathalai thimilai thudi thampattamum peruka: various drums such as pathalai, thimilai, hand-drum and thampattam were beaten making a lot of noise;
akila nisisarar nadungak kodum kazhuku pariya kudar pazhu elumpaip pidunga: the demons who were scattered everywhere began to shake with fear; wild eagles plucked with their beaks fat tissues of intestines and rib bones (of the corpses);
raNa thunga kALi pavuri ida nari pulampa parunthu iRaku kavari ida: KALi, the triumphant deity of the battlefield, danced ecstatically; the jackals yelled; and the vultures blew their feathers as if they were gently swaying the royal hand-fans;
ikalai venRu sikaNdi thanil pazhani malaiyin misai vanthu utRa inthirarkaL thambirAnE.: when You won the war and mounted the peacock heading towards Pazhani, where You are seated as the Lord of the celestials, Oh Great One!
***
* The lower seven worlds are:
athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam.
** The upper seven worlds are:
bUlOgam, bhuvalOgam, suvalOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam.
ஆரத்தினை … வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள்,
இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. … (ஞான சம்பந்தராகத்
தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே.
இதில் ஆறு சமயம் என்பன
சாங்கியம்
யோகம்
வைசேஷிகம்
நியாயம்
பூர்வமீமாம்சம்
வேதாந்தம்
அல்லது
காணாபத்தியம்
சைவம்
வைணவம்
சாக்தம்
கௌமாரம்
சௌரம் என்பன ஆகும்
மூன்று வினைகள் என்பன -ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம்
நக்கீரர் திருமுருகாற்றுப்படை:
குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்– முதலிய செய்திகளையும் அருணகிரி விளம்புகிறார்.
ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும்,
96 தத்துவங்கள் பின்வருமாறு:
36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து – 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
***
அணு விஞ்ஞானம் Nuclear Science
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் … அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை,
முதல் விளக்கம்
“Anor aneeyaam mahatho maheeyaam” (अणोरणीयान् महतो महीयान्) is a profound Sanskrit phrase from the Vedic tradition, most famously found in the Katha Upanishad (1.2.20). It translates to: “Smaller than the smallest, greater than the greatest.”
கடோபநிஷத் , ச்வேதாச்வரோபநிஷத்தில் உள்ள வாக்கியம் “அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் “
“அணுவுக்கும் சிறியதாய் பெரியதற்கும் பெரியதாய்”
இதை அவ்வையார், திருமூலர், இடைக்காடர் முதலியோர் செப்பியுள்ளனர்
திருவள்ளுவரின் திருக்குறளின் பெருமையை விளக்குகையில் திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் பாடலில் ,அவர் “கடுகை துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்” என்கிறார். அவ்வையார் புகழ்ந்த பாடலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் என்கிறார். ஆனால் திருமூலர் ஒரு பாடலில் வேறுவகையான விளக்குகிறார்
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கணாதர் வைசேஷிக சாஸ்திரத்தில் அணு விஞ்ஞானம் பற்றி விளக்கியுள்ளார்
2600 ஆண்டுகளுக்கு முன்னர் கணாதர் என்பவர் எழுதிய வைசேஷிக சூத்திரத்தில் कणाद वैशेषिकसूत्र அணு என்பதுதான் மிகச்சிறிய , பிரிக்க முடியாத பொருள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் இதே கருத்தைத்தான் 2000 ஆண்டுகளாகக் கூறி வந்தனர். அப்படிப் பிரித்தால் பிரம்மாண்டமான சக்தி கிடைக்கும் என்பதை இரண்டாவது உலக யுத்த (1939-1945) காலத்தில் கண்டறிந்தனர் . அமரிக்கா 1945-ம் ஆண்டு அப்பாவி புத்த மத , ஷிண்டோயிச மத மக்களின் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை ஒரு சில வினாடியில் கொன்று குவித்தது. இது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களில் நடந்ததை நாம் அறிவோம்.
எனது இரண்டாவது விளக்கம்
வேறு யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை அருணகிரிநாதர் சொல்கிறார் ; அது என்ன?
அணுவில் அணு (அணுவுக்குள் அணு)!
அணு பற்றிய அறிவியல் வளர்ந்தவுடன் அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்தனர் ; இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது . ஆனால் அருணகிரிநாதரோ 500 ஆண்டுகளுக்கு முன்னரே அணுவுக்குள் அணு இருப்பதாகப் பகர்ந்தார் . அது என்ன ?
அணுவின் அமைப்பு
புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களால் ஆனவை அணுக்கள்.
அணுவின் நடுவில் நேர்மின்னூட்டம் கொண்ட அணுக்கரு (புரோட்டான் + நியூட்ரான்) மற்றும் அதைச் சுற்றி வரும் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் உள்ளன. அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது. அதை வைத்துதான் நாம் தங்கம்,வெள்ளி இரும்பு, செப்பு என்ற மூலகங்களைப் பெறுகிறோம்.
ஞான திருஷ்டி மூலம் கண்டு அணுவில் அணு (அணுவுக்குள் அணு) என்று அருணகிரி சொல்லியிருக்கலாம் அல்லது அழிந்து போன இந்துமத அறிவியல் நூல்களில் இந்த உண்மையை கணாதரின் சீடர்கள் சொல்லியிருக்கலாம் . ஆகவே எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள் நியுட்ரான்கள் பற்றி முதலில் சொன்னவர் அருணகிரிநாதர் தான் !
—subham—
Tags- அருணகிரிநாதர், அணு விஞ்ஞானம், திருப்புகழில் சொல் அழகும், பொருள் வளமும்- Part 5, ‘அரிய தகவல்கள், அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம்